Tag Archives: இளையராஜா

Om Siva Om – Vijay Prakash: நான் கடவுள் – இளையராஜா

நன்றி: The Hub :: View topic – Bala’s Naan Kadavul & Pulikesi’s Weblog

விளக்கம், பொருள், மொழிபெயர்ப்பு, தமிழாக்கம்: அண்டை அயல்: நான் கடவுள்; ருத்ரம்

முந்தைய பதிவு: Naan Kadavul – Music « இசை விமர்சனம்

ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர மஹாதேவ்

ஓம் பைரருத்ராய மஹாருத்ராய காலருத்ராய கல்பாந்தருத்ராய
வீரருத்ராய ருத்ரருத்ராய கோரருத்ராய அகோரருத்ராய
மார்தாண்டருத்ராய அண்டருத்ராய ப்ரமாண்டருத்ராய
சண்டருத்ராய பிரசண்டருத்ராய தண்டருத்ராய
சூரருத்ராய வீரருத்ராய பவருத்ராய பீமருத்ராய
அதலருத்ராய விதலருத்ராய சுதலருத்ராய மஹாதலருத்ராய
தசாதலருத்ராய தலாதலருத்ராய பாதாளருத்ராய
நமோ நமஹ:

ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ரநாமம் பஜே ஹம்
ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ரநாமம் பஜே ஹம்
வீரபத்ராய அக்னிநேத்ராய கோரஸௌஹாரஹா
சகலலோகாய சர்வபூதாய சத்யசாக்ஷாத்கரா
சம்போ சம்போ ஷங்கரா
அ…ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ரநாமம் பஜே ஹம்
பஜே ஹம்

ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர மஹாதேவ்

ஓம் நமஸ்வாமாயச ருத்ராய ஜநமஸ்தமரயச ருடாய
ஜனமஷரிங்காயதபஸ்துபதஜே ஜநமஹுக்ராயச பீமாய
ஜனமோ ஹக்ரே வதாய சதுரே வதாய
ஜனமோ ஹந்த்ரே ஸஹமியதெ தனமோ வ்ருக்ஷே
ப்யோஹரிகேஷே ப்யோநமஸ்தராய நமஸ்ஷம்பவே
தம யோபவேச்ச நமஷங்கராய தபயஷ்கராய
தனமஷிவாய தஷிமதவாதச்சா….

அண்டப்ரமாண்ட கோட்டி அகிலபரிபாலனா
பூரணா ஜகத்காரனா சத்யதேவ தேவப்ரியா
வேத வேதார்த்த சாரா யக்ஞ யக்ஞொமயா
நிஷ்சலா துஷ்ட நிக்ரஹா சப்தலோக சௌரக்ஷனா
சோம சூர்ய அக்னி லோச்சனா ஷ்வேதரிஷப வாஹணா
சூலபாணி புஜங்க பூஷணா திரிபுர நாச நர்த்தனா
ப்யோமகேஷ மஹாஸேன ஜனகா
பஞ்சவர்த்த பரஸுஹஸ்த நமஹ:
ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ரநாமம் பஜே ஹம்
பஜே ஹம்
ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ரநாமம் பஜே ஹம்
பஜே ஹம்

கால த்ரிகால நேத்ர த்ரிநேத்ர சூழ திரிசூல காத்ரம்
சத்யப்ரபாவ திவ்யப்ரகாஷ மந்த்ர ஸ்வரூப மாத்ரம்
நிஷ்ப்ரபஞ்சாதி நிஷகலந்கோஹம் நிஜபூர்ன போதஹம்நம்
நத்யகாத்மஹம் நித்யப்ரமோஹம் ஸ்வப்னகஸோகம்ஹம்நம்
சட்சித்ப்ரமானம் ஓம் ஓம்
மூலப்ரமேயம் ஓம் ஓம்
அயம் ப்ரம்மாஸ்மி ஓம் ஓம்
அஹம் ப்ரம்மாஸ்மி ஓம் ஓம்
கன கன கன கன கன கன கன கன
ஸஹஸ கண்ட சப்தவிஹரதி
டம டம டம டம டுப டுப டுப டுப
சிவடபருத நாதவிஹரதி

ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ரநாமம் பஜே ஹம்
பஜே ஹம்
ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ரநாமம் பஜே ஹம்
பஜே ஹம்
வீரபத்ராய அக்னிநேத்ராய கோரஸௌஹாரஹா
சகலலோகாய சர்வபூதாய சத்யசாக்ஷாத்கரா
சம்போ சம்போ ஷங்கரா
அ…ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ரநாமம் பஜே ஹம்
பஜே ஹம்

ஆர்யா – குமுதம்

‘நான் கடவுள்’ பற்றி…

காசியில ருத்ரதாண்டவம் ஆடிய நான் எப்படியோ பழநிக்கு வந்தேன். அங்கேயுள்ள மக்களால என்னைத் தாங்க முடிஞ்சுதா? இல்ல என்னால அந்த மக்களோடு செட்டாக முடிஞ்சுதா?!

பாலா முதல்ல சந்திக்கும் போதே சிரசாசனம், பத்மாசனம் பண்ற படத்தைக் காட்டி இதே மாதிரி பண்ணணும். ஒரு `மாசத்துல தயாராக இருங்க’ன்னு கிளம்பிட்டார். அந்த ஆசனங்களைப் பத்தி யோகா மாஸ்டர்கிட்ட கத்துக்கிடலாம்னு போனால், `தம்பி இதுதான் யோகாவுல கடைசி ஆசனம். குறைந்த பட்சம் ஒரு வருஷமாவது ஆகும்’னு சொன்னார். அப்புறம் நானாகவே வீட்டுல தினமும் மூணு மணிநேரம் பெட்ரூம்ல சுவத்துல தலைகீழாக சாய்ஞ்சபடி ப்ராக்டீஸ் பண்ணினேன்.

`நான் கடவுள்’ படத்துக்குப் பிறகு விஷ்ணு வர்தனுடன் சேர்ந்து பண்ற `சர்வம்‘ வந்துடும். அதனால நான் விட்ட இடைவெளியை நிச்சயம் நிரப்பிடுவேன்.”

நான் கடவுளில் பல பிரச்னைகளால் உங்களுக்கு ஜோடியாக ஹீரோயின்கள் மாறிக் கொண்டே இருந்தார்களே… அந்தக் கொடுமையான அனுபவம் எப்படியிருந்தது?

“அது கொடுமையில்ல. ஹீரோயின்கள் மாறியதால காமெடியான அனுபவம்தான் இருந்துச்சு. முதல்ல ஹீரோயினோடு எடுத்த காட்சிகளை, திரும்பத் திரும்ப மத்த ஹீரோயின்களோடு எடுக்க வேண்டியிருந்துச்சு. ஒரே காட்சியை நான்கு ஹீரோயின்களோடும் நடிச்சேன்.

நான் கடவுள் – அஹம்ப்ரம்மாஸ்மி

11. ட்விட்டரில் வந்த சுறுக் + நறுக் கருத்துக் கோர்வை

10. Movie Reviews in English: Naan Kadawul Cinema Viewers Takeaways

9. சுடச்சுட விமர்சனங்கள், பார்வைகள்ஸ்பாய்லர்கள் இருக்கலாம்

8. ‘Nenu Devudni’ – அஜீத் & பாலா சண்டை; வதந்தி, கிசுகிசு

7. கதை: சென்சார் விமர்சனம்முன்னோட்டம், விமர்சனம், தணிக்கை குழு கருத்து

6. Naan Kadavul – Music: விமர்சனம், மதிப்பீடு, பேட்டி

5. வசனகர்த்தா ஜெயமோகன் பேட்டிவீடியோ

4. நான் கடவுள் குறித்து அவரின் பதிவுகளில் எழுத்தாளர் ஜெயமோகன்வலைப்பதிவு, அனுபவக் குறிப்பு

3. Om Siva Om – Vijay Prakash: பாடல் வரிகள் & இளையராஜா: அர்த்தம், ருத்ரம்

2. “பிச்சைப் பாத்திரம்” – நான் கடவுள்: பாடல் வரிகள்

1. ஒரு காற்றில் அலையும் சிறகு & கண்ணில் பார்வை போன போதும்Lyrics


naan-kadavul-bala-cinema-posters

இளையராஜா பாடி இசையமைத்ததில் பிடித்தவை

ட்விட்டரில் ரோசா சொன்னதில் இருந்து:

1. உனக்கெனத்தானே இன்னேரமா
2. மெட்டி ஒலி காற்றோடு
3. தென்றல் வந்து தீண்டும் போது
4. எங்கே செல்லும் இந்த பாதை
5. தாழம்பூ தலையோடு (படம்:ஆல்பம்)

ட்விட்டரில் உ.வெங்காயம் சொன்னதில் இருந்து:

6. நிலா அது வானத்து மேல
7. காட்டுவழி போற புள்ள
8. ஜனனி, ஜனனி
9. சாமக்கேழி ஏ கூவுதம்மா
10. தரிசனம் கிடைக்காதா

ட்விட்டரில் ரோசா சொன்னதில் இருந்து:

11. உதய கீதம் பாடுவேன்
12. நான் தேடும் செவ்வந்தி பூ
13. உன் குத்தமா என் குத்தமா
14. நம்ம காட்டுல
15. பறவையே எங்கு இருக்கிறாய்.

16. ஒரு ஜீவன்
17. அறியாத வயசு
18. நிலா அது வானத்து மேலே (ரிப்பீட்டு)
19. நல்லதோர் வீணை
20. சந்தரரும் சூரியரும்

21. காதலென்பது பொதுவுடம
22. குண்டுமணி குலுங்குதடி
23. தோள்மேல தோள்மேல
24. பூ மாலையே
25. இந்தப் பூங்காற்று தாலாட்ட

26. ஒரு மஞ்சக் குருவி
27. அம்மன் கொயில் கிழக்காலே
28. என்ன பாட்டு பாட
29. கண்ணியிலே சிக்காதடி
30 கண்ணம்மா காதலெனும்

31. எங்கஊரூ பாட்டுகாரன்
32. காடெல்லாம் பிச்சிப்பூ
33. கண்மலர்களின் அழைப்பிதழ்
34. பொன்னோவியம் கண்டேனம்மா..
35. நில்..நில்..நில்.. பதில் சொல்..சொல்..சொல்.. எனை வாட்டாதே!

36. போடய்யா ஒரு கடிதாசு
37. வீட்டுக்கு வீடு வாசப்படி
38. ஆத்தாடி பாவாடை காத்தாட
39. நின்னை சரணடைந்தேன்
40. உன் குத்தமா என் குத்தமா

ட்விட்டரில் உ.வெங்காயம் சொன்னதில் இருந்து:

41. எடுத்து நான் விடவா (எஸ்.பி.பியுடன்)
42 தென்னமரத்துல தென்றலடிக்குது
43. தரிசனம் கிடைக்காதா (ரிப்பீட்டு)
44. ஆறு அது ஆழமில்ல
45. சந்தத்தில் பாடாத கவிதை

ட்விட்டரில் ரோசா சொன்னதில் இருந்து:

46. ஊரோரமா ஆத்துப்பக்கம்
47. காதல் ஓவியம்
48. அடி ஆத்தாடி
49. நேத்து ஒருத்தர ஒருத்தர பாத்தோம்
50. அந்த நிலாவத்தான்

ட்விட்டரில் உ.வெங்காயம் சொன்னதில் இருந்து:

51. செவ்வரளி தோட்டத்துல
52. புன்னகையில் மின்சாரம்
53. வெளக்கு வச்ச நேரத்துல
54. நான் தேடும் செவ்வந்திப்பூவிது (ரிப்பீட்டு)
55. தாஸ் தாஸ் சின்னப்ப

ட்விட்டரில் ரோசா சொன்னதில் இருந்து:

56. வாட வாட்டுது (சக்களத்தி)
57. சிறு பொன்மணி
58. துள்ளி எழுந்தது காற்று
59. சொர்கமே என்றாலும்
60. யாரோ யாரோ (உல்லாசம்)

61. ரசிகனே என் அருகில் வா
62. வீட்டுக்கு ஒரு மகனை
63. மலரே பேசு
64. திண்டாடுதே ரெண்டு கிளியே
65. வீணைக்கு வீணை

66. சோளம் விதைக்கையிலே
67. அம்மா எனும் வார்த்தைதான்
68. மருதாணி அரைச்சேனே
69. ஆலமரத்துக் குயிலே
70. தோட்டம் கொண்ட ராசாவே

71. தாலாட்டு மாறிப்போனதோ
72. ஒரு கணம் ஒரு யுகமாக
73. ஏப்ரல் மேயில
74. எம்பாட்டு எம்பாட்டு.(பூமணி)
75. தென்பாண்டி சீமையிலே

76. மைனா மைனா மாமன் புடிச்ச
77. இந்த மான் உன் சொந்த
78. சின்னமணிக்காக சேத்துவச்சேன் பாரு
79. அரிதாரத்தை பூசிக்
80.அப்பனென்றும் அம்மையென்றும் (குணா)

81. மச்சி மன்னாரு
82. திண்டாடுதே (ஆனந்தகும்மி)
83. கலயா நிஜமா (கூலி#1)
84. காதல் கசக்குதையா
85.உன்னோட உலகம் வேறு

86. என்ன பாடுவது .. பாட்டெல்லாம் எனக்கு படத்தெரியாது
87. காட்டு வழி கால் நடையா போற..(அது ஒரு கனா காலம்)
88. என்ன மறந்தாலும் (காதல் சாதி )
89. பாட்டாலே புத்தி சொன்னார்
90. தேவதை படத்தில் கவிதா கி.மூர்த்தியுடன் பாடியது

91. தென்ன மரத்துல தென்றல் அடிக்குது
92. காதல் கசக்குதய்யா
93. இந்திரன் வந்ததும்
94. கத கேளு (மை.ம.கா.ரா)

95.காட்டு வழி போற(ம.மம்ப)
96. கத போலத் தோணும், இது கதையும் இல்ல
97. சோழர் குல குந்தவை போல் – உடன்பிறப்பு
98. பாளையம் பண்ணப்புர சின்னத்தாயி பெத்த மகன் எரிய வராண்டா… ஓரம்போ, ஓரம்போ
99. கண்ணே என் கார்முகிலே

101. பொன்ன போல ஆத்தா என்னை பெத்து பொட்டா
102. ராஜா..ராஜாதி
103. எங்க ஊரு காதலை பத்தி – புதுப்பாட்டு
104. உள்ளங்கள் இன்பத்தில் ஆடட்டும் – கவரிமான்
105. அய்யா வூடு தொறந்துதான் கிடக்கு

106. மரத்த வச்சவன்
107. ஊரு உறங்கும் நேரத்தில் (கண்ணா உனை தேடுகிறேன்)
108. அந்த காண்டாமணி
109. வழி விடு வழி விடு என் தேவி வருகிறாள்


கொசுறு:

icarusprakash

  1. தாலாட்டு மாறிப்போனதே – உன்னை நான் சந்தித்தேன்
  2. ஒரு கணம் ஒரு யுகமாக – நாடோடித் தென்றல்
  3. உள்ளங்கள் இன்பத்தில் ஆடட்டும் – கவரிமான்
  4. சிறு பொன்மணி – கல்லுக்குள் ஈரம்
  5. கண்ணே என் கார்முகிலே -வா :: தங்கமான ராசா.
  6. மெட்டி மெட்டி இராகம் எங்கேயோ – மெட்டி
  7. துப்பாக்கி கையிலெடுத்து, ரெண்டு தோட்டாவு பையிலெடுத்து
  8. பொன்னோவியம், சங்கீதமாம் எங்கெங்கும் – கழுகு

kabishraj

  1. திண்டாடுதே ரெண்டு கிளியே – ஆனந்தக் கும்மி
  2. வீணைக்கு வீணை – வீரத்தாலாட்டு
  3. அம்மா என்னும் வார்த்தைதான் – தாலாட்டு கேட்குதம்மா
  4. மருதாணி அரச்சேனே – ராஜா கைய வச்சா
  5. வாடி என் கப்பக்கிழங்கே

Aravindank

  1. பொன்ன போல ஆத்தா என்னை பெத்து பொட்டா.. :: தேடி வந்த ராசா

nchokkan

  1. கத போலத் தோணும், இது கதையும் இல்ல … (வீரத் தாலாட்டு)
  2. ‘இந்திரன் வந்ததும் சந்திரன் வந்ததும் இந்த சினிமாதான்’

India Films to Indie Movies – Meme

முதலில் நாகார்ஜுனன் பதிவு. அதன் தொடர்ச்சியாக பிரகாஷ் மீம் வித்திட்டிருக்கிறார்.

1 – அ. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்?

ஐந்து வயதில் இருந்து ஓரளவு நினைவில் உள்ளது.

1 – ஆ, நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா?

ப்ரியா.

1 – இ. என்ன உணர்ந்தீர்கள்?

  • பெண்கள் சினிமாவில் நுழைந்தால் ஆபத்து பின்தொடரும்.
  • ஸ்ரீதேவி நீச்சலுடை.
  • எவராவது கடத்தி சென்றுவிட்டால் குடும்பப் பாட்டு கற்றுவைத்துக் கொள்ளவேண்டும்.

2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?

தமிழ்: தசாவதாரம் (ஆங்கிலம்; வால் – ஈ)

3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?

கடைசியாக முழுமையாகப் பார்த்த படம் ட்யூப் தமிழ் வலையகத்தில் – அஞ்சாதே.

ஆனால், மிக சமீபத்தில், பாதி பார்த்த நிலையில் விட்ட படங்கள் தாக்கத்தை நிறையவே கொடுத்தது.

  • அறை எண் 305இல் கடவுள் – மகாமக கொடுமையான நாடகத்தனம்
  • அன்பைத் தேடி – எத்தனையோ பழைய படங்களை புத்துருவாக்கம் செய்யும் நிலையில் இந்த premise நன்றாக இருந்தது. ஏதாவது கற்பனையில் சஞ்சரித்து நிஜத்தைக் கோட்டை விடும் நாயகன் சிவாஜி. (குழந்தை நடிகை) இந்திரா (காந்தி) & நாயகன் (ம.கோ.) ராமுவையும் கோர்த்து அரசியல் கிண்டல் செய்யும் சோ.
  • எவனோ ஒருவன் – சுவாரசியமான அறச்சீற்றம்

4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா

எல்லோரும் ‘அவள் அப்படித்தான்‘ என்கிறார்கள். ஆனால், என் வாழ்வை திசை திருப்பக் கூடிய சம்பவத்தை ‘அவள் அப்படித்தான்’ நிகழ்த்தியது.

குழந்தையாக இருந்தபோதே ‘எது கலைப்படமோ அதைச் சொல்லி ஒப்பேத்தலாம்’ என்னும் சுபாவம் innate ஆக அமைந்திருக்க வேண்டும். 1979ஆம் ஆண்டு குழந்தைகளின் ஆண்டாக கொன்டாட்டப்பட்டது. என்.எஃப்.டி.சி ஆதரவில் படம் எடுக்க, சென்னை தூர்தர்ஷனில் audition வைத்தார்கள். நானும் சென்றிருந்தேன்.

குடிகாரனாக, பிச்சைக்காரனாக, ஊமையாக எல்லாம் சிவாஜித்தனமான செயற்கையில், அங்கு வந்திருந்த பிற சிறுவர்களைப் போலவே நானும் ஓவர் – ஆக்டிங்கில் மின்னினேன்.

லன்ச்-ப்ரேக்.

பிற்காலத்தில் ரகுவரனை நாயகனாகக் கொண்ட ‘ஏழாவது மனிதன்‘ உட்பட பல படங்களை இயக்கிய ஹரிஹரனின் குழுவோடு உணவருந்தும்போது எல்லோரிடமும் சும்மா கேள்வி கேட்டுக்கொன்டிருந்தார்கள்.

‘உனக்கு என்ன படம் இப்ப பார்க்கணும்? எது பிடிச்ச படம்?’

அன்னை ஓர் ஆலயம், ஆறிலிருந்து அறுபது வரை மாதிரி அப்போதைய படங்கள் அனைத்தையும் வெள்ளித்திரையில் பார்த்த வெறித்தனமான ரஜினி ரசிகன். அம்மாவின் ஒப்புதல் கிடைக்காதது அந்தப் படத்திற்கு மட்டும்தான். இத்தனைக்கும் முதல் எதிரி கமல் வேறு நடித்திருக்கும் படம். தயங்கவே இல்லை.

பட்டென்று சொன்னேன்: ‘அவள் அபப்டித்தான்’

குழுவினர் திகைத்துப் போனார்கள். அவர்கள் டீம் உழைத்த படம் அது. அங்கிருந்த பலரின் செல்லப்பிள்ளை அது. உடனடியாக எனக்கு சான்ஸ் கொடுத்தார்கள் என்பதை சொல்லவும் வேண்டுமோ?!

5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா – அரசியல் சம்பவம்?

பெங்களூரில் உடனடியாக வருமா? கன்னடர்கள் கல்லெறிவார்களா?

5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா – தொழில்நுட்ப சம்பவம்?

இரத்தத்தையும் வன்முறையையும் வலிக்க வலிக்க காட்டுவது.

சாதாரண மனிதனின் ‘சத்ரியன்‘ ஆகட்டும்; விபத்தின் பின்விளைவுகளையும் அடிபட்டவர்களாக எண்ணிக்கையில் 167ஓடு 168ஆக கூடிப் போகும் ‘அன்பே சிவம்‘ ஆகட்டும்; ஏழையாக இருந்தால் என்னவெல்லாம் அமுக்கப்படும் என்று கோடிட்ட ‘கண் சிவந்தால் மண் சிவக்கும்‘ ஆகட்டும்.

6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

சிவகுமார் சுயசரிதை, தினத்தந்தி வரலாறு, தி ஹிந்து விமர்சனம், வலைப்பதிவு அசைபோடல், கனவுத் தொழிற்சாலை குறித்து வண்ணத்திரை முதல் வெகுசன ஊடகங்களில் வரும் கருத்து/கட்டுரை.

7. தமிழ்ச்சினிமா இசை?

  • திருப்புகழ் கூட டி.எம்.எஸ் பாடிய சினிமாப் பாட்டு – ஆன்மிகம்
  • எஸ்.பி.பி பாடிய பாடல் என்பதால் சங்கராபரணம் – கர்நாடக/சாஸ்திரீய சங்கீதம்
  • வேப்பமரத்து உச்சி பேய் முதல் கல்லை மட்டும் கண்டால் – சமூகம்
  • மன்றம் வந்த தென்றலுக்கு என்பதும் கல்யாண மாலை கொண்டாடுவதும் – வாழ்க்கை

என்று எல்லாவற்றுக்கும் இசையை நம்பியிருப்பதால், தனித்தீவுக்கு போக விதிக்கப்பட்டாலும் 80 ஜிபி ஐ-பாட் இல்லாமல் செல்லமாட்டேன்.

8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் நிறைய. சில ஸ்பானிஷ்.

  • When Harry met Sally – ஆங்கிலம்
  • City of God – வேற்றுமொழி (துணையெழுத்து உபயம்)
  • Mississippi Masala (தேசி – NRI)
  • Raju Ban Gaya Gentleman – இந்தி

9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

நேரடியாக நடித்த படம் – வாண்டட் தங்கராஜ்.

பிடித்ததா? படத்தில் நடித்த அனுபவம் மிகவும் பிடித்திருந்தது.

வேண்டும்போது கிடைக்கும் ஐஸ்-க்ரீம். சொகுசான படுக்கையறையும் விநோதமான விளக்குகளும் கொன்ட உல்லாச அறை வாசம். பழனி கோவிலுக்கு சென்றால் கூட மூலஸ்தானத்தில் இருந்து மூலவரின் சிறுதுளியே பெயர்த்துக் கொடுக்கும் ராஜ மரியாதை.

என்ன செய்தீர்கள்? ஆறு வயதுச் சிறுவன் தங்கராஜ் பழனிக் கூட்டத்தில் தொலைந்து போகிறான். கூத்தில் அனுமனாக வேடந்தரிக்கும் ‘வள்ளி’ நட்ராஜ், வில்லர்கள் கூட்டத்தை Home Aloneஆக ஏய்ப்பது, கடிந்து கொள்ளும் பெற்றோரின் அன்பைப் புரிந்து கொள்ளும் குழந்தை வேடம்.

சினிமா மேம்பட உதவுமா? வெகு இயல்பாக இருந்தது. பாடல் கிடையாது. மூன்று நாளின் சம்பவங்களை 90 நிமிடங்களில் பரபரவென்று தென் தமிழகமெங்கும் சுழன்று விரியும் படம். அலங்காரில் வெளியாகி இருந்தால் மேம்பட உதவி இருக்கும்.

10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

  • அருண் வைத்யநாதன் போன்ற தமிழ் சினிமாவின் நாகேஷ் குகூனூர்கள்
  • தொலைக்காட்சி, இணையம், செல்பேசித்திரை என்று விரியும் வழிகள்
  • குறைந்த பொருட்செலவும் பத்து நிமிடத்தில் உலகத்தின் கவனத்தை ஈர்க்கவைக்கும் நேர விரயமாகாத நுட்பங்களின் அணுக்கம்

11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

ஒரு வாரத்தில், ஒரு நாளில் எத்தனை நேரம் கேளிக்கைகாக ஒதுக்குகிறோம்? அதில் எவ்வளவு மணி நேரம் சினிமா ஆக்கிரமிக்கிறது?

காலையில் அலுவல் கிளம்பும் அவசரம்; செய்தித்தாள் வாசிப்பு. அதன் பின் பயணத்தில் பழைய ராஜா இசையுடன் மோனம். அலுவலில் பதிவுகள் கவனச்சிதறல்; இரவு உணவுக்குப் பின் ஒரு மணி நேர தொலைக்காட்சி. இதில் சினிமா எங்கே இருக்கிறது?

நண்பனின் கார் சாவி தூரத்தில் இருந்தே திறக்கும் வசதி கொண்டது. ஒரு நாள் என்னை அழைத்தான்.

“டேய், கார் ரிமோட் கீ வேலை செய்ய மாட்டேங்குதுடா! எப்படிடா இப்ப காரைத் திறப்பேன்?”

“நேராக காருக்கும் அருகில் செல். உன்னிடம் இருக்கும் சாவியை துவாரத்தில் இட்டு திறக்கலாம்.”

பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் என்னும் பேட்டரி தீர்ந்து போகலாம். சினிமா என்னும் மகிழுந்தைத் திறக்க கற்பனை என்னும் சாவி, ‘விழிகள் மேடையாம்; இமைகள் திரை’யாகுமா?’

இவர்கள் தொடரவேண்டும் என்று நினைக்கிறேன்.

வழிகாட்டலுக்கு மட்டுமாக சில விதிகள்:

  1. இசை, சினிமாப்படங்கள் போன்ற புள்ளிக்கு மூன்றுக்கு மேல் பட்டியல் போடுவதை தவிர்க்கலாம்
  2. புள்ளிவிவர ஆட்டத்தைத் தொடர ஐந்து பேருக்கு அழைப்பு விடுக்கவும்
  3. இந்த வழிகாட்டல்களை முற்றுமாக நிராகரிக்கலாம்; ஆனால், டக்குன்னு பதிவிடணும் 🙂

முனியாண்டி, விலங்கியல் மூன்றாமாண்டு: பாடல் வரிகள்

இசை: வித்யாசாகர்

பாடலாசிரியர்: வைரமுத்து

இயக்கம்: திருமுருகன்

ஆண்:
கட்டிப்பிடிக்கும் கரடிய நம்புங்க
எட்டிமிதிக்கும் யானைய நம்புங்க

ஸ்டிக்கர் பொட்டுக்காரிகள நம்பாதீங்க
அப்புறம் சீரழிஞ்சு பிஞ்சிலேயே வெம்பாதீங்க

கண்ணால காதல் கொடுப்பா
ஒரு நேரம் வந்தா காதலுக்கே கடுக்கா கொடுப்பா

முந்தான தந்தியடிப்பா
நீ கிட்ட வந்தா மூஞ்சியிலே எட்டியுதைப்பா

பெண்:
ஒட்டிக் கெடக்கும் செங்கல நம்புங்க
…???… கூரைய நம்புங்க

கட்சி மாறும் ஆம்புளைய நம்பாதீங்க
பிறகு கத்திரியில் …???… வெம்பாதீங்க

சீனி முட்டா வாங்கிக் கொடுப்பான்
அத முடிச்சதுமே சீமத்தண்ணி ஊத்தியடிப்பான்

ராமனப் போல் நல்லா நடிப்பான்
உன்ன ஒறங்கவிட்டு காமனுக்கு தந்தியடிப்பான்

ஆண்:
கொளத்துல மீனிருந்தா
கொத்தவரும் கொக்கு வரும்

வெக்கயில தண்ணி கொறஞ்சா
கொளத்த மாத்தி றெக்கையடிக்கும்

பொம்பளையும் கொக்கு
இதப் புரிஞ்சுக்காதவன் மக்கு

பெண்:
பொட்டிபணம் உள்ளவரைக்கும்
பொம்பளயக் காலப்பிடிப்பான்

ரொக்கமுள்ள முண்டச்சி கண்டா
வெக்கம் விட்டு சீலத் துவைப்பான்

ஆம்பளதான் பொறுக்கி
இத அறியாதவ சிறுக்கி

ஆண்:
சத்தியமும் செஞ்சு கொடுப்பா
சமயம் பாத்து சாமத்துல கழுத்த அறுப்பா

சட்டிப்பானை எல்லாம் மறைப்பா
ஒன்ன உறங்கவிட்டு தாந்தின்னியா தின்னு தீர்ப்பா

பெண்:
தாலி தந்த பொம்பளையோட
தலகாணியில் ஒட்டிக் கெடப்பான்

கோழி கூவும் சாமத்துல
கொழுந்தியாளக் கட்டிப் பிடிப்பான்

கொரங்கு மனசுக்காரன்
அவன் குடிகெடுப்பதில் சூரன்

ஆண்:
கடலெல்லாம் பொங்கி வரட்டும்
காதல் மட்டும் மூழ்காதப்பா

பெத்தவுங்க கண்ணீர் சொட்டில்
மொத்தத்தையும் மூழ்கடிப்பா

பெரிய நடிப்புக்காரி
அவ பேச்சில்லாத லாரி

பெண்:
ஆம்பளைக்கு வருத்தமெல்லாம் …???…
பொம்பளைக்கு வருத்தமெல்லாம் இந்த மண்ணவிட்டு போகுற காலம்வரைக்கும்

பாடலைக் கேட்க: Kattipidikkum Karadiya :: Muniyandi Vilangiyal Moondramandu

ஒத்த முந்தைய பாடல்: மண்வாசனை :: பாட்டுக்கு பாட்டெடுத்தேன்

தொடர்புள்ள எசப்பாட்டு இடுகை: வே.சபாநாயகம் :: புதுமைப்பித்தன், ஒட்டக்கூத்தர், கம்பர், ஔவை

ஆணுக்கு (மட்டும்) பிடித்த பாடல்கள்

ஆணுக்கு மட்டுமே பிடித்த பாடல்கள் என்று ஏதாவது இருக்கிறதா? குத்துப்பாடல்களும் குலுக்கல்களும் பெண்களுக்கும் ரசிக்கிறதா? மெட்டு ரசிக்கப்படுகிறதா? காட்சியாக்கமா? மூன்று மணிக்கு ஃபோன் சிணுங்குவதை நிறுத்துபவர்கள் இருக்கட்டும்; சிற்றஞ்சிறுகாலே மூன்று மணி தாகசந்திக்கு யாரைக் கேட்க விருப்பம்?

ஆணுக்கு (மட்டும்) பிடித்த பாடல்கள்

1. ‘அபிஷேக நேரத்தில் அம்பாளை தரிசிக்க’ – அழகே உன்னை ஆராதிக்கிறேன்

2. ‘செவ்வந்தி பூமுடிச்ச சின்னக்கா’ கேட்க விரும்பினால் இன்னும் ரொமான்ஸ் மூடு போகவில்லை என்று அர்த்தம். அல்லது நண்பர் குழாம் தூங்கிப் போனதும் காரணமாக இருக்கலாம். இரண்டையும் சரி செய்தால் ‘ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்’

3. ‘வஜ்ஜிரம் வவ்வாலு மீனுதானா!’ – செம்பருத்தி

4. ‘போட்டு வைத்த காதல் திட்டம் ஒகே கண்மணி’ – சிங்காரவேலன்

5. ‘கூடையில கருவாடு; கூந்தலிலே பூக்காடு’: ஒரு தலை ராகம்; ஒரிஜினல் டி ஆர் சிச்சுவேசனுக்கு ஏற்ப ‘அட பொன்னான மனசே பூவான மனசே’ என்று உருமாற்றலுக்கும் ஏற்றவர்.

6. ‘எம்மாடி ஆத்தாடீ! உன்ன எனக்கு தரியாடீ?’ – எம்மா எம்மா எம்மம்மாஆ; தற்போதைய காளை ‘குட்டிப் பிசாசே’வும் சரியான ஆம்பிளையின் தேர்வு.

7. ‘தண்ணிதொட்டி தேடிவந்த கன்னுக்குட்டி நான்’ – சிந்துபைரவி

8. ‘காதல் என்பது பொதுவுடைமை; கஷ்டம் மட்டுந்தானே தனியுடைம’ – பாலைவன ரோஜாக்கள்

9. ‘ஆசை நூறு வகை’ (அசல்): அடுத்த வாரிசு

10. ‘கண்ணத் தொறக்கணும் சாமீ; கையப் புடிக்கணும் சாமீ!’ – முந்தானை முடிச்சு

தொடர்புள்ள பதிவுகளில் சில:

பெண்ணின் ஸ்டீரியோடைப் மனதைத் தொட்டுச் செல்லும் பாடல்களை guess செய்தால்…

1. ‘கவிதைகள் சொல்லவா? உன் பெயர் சொல்லவா? இரண்டுமே ஒன்றுதான்!’ – உள்ளம் கொள்ளை போகுதே

2. ‘தைப்பொங்கலும் வந்தது, பாலும் பொங்குது’ – மகாநதி

3. ‘காதலின் தீபமொன்று ஏற்றினாளே என் நெஞ்சில்’ – தம்பிக்கு எந்த ஊரு

4. ‘மன்றம் வந்த தென்றலுக்கு’ – மௌன ராகம்

5. ‘கொஞ்ச நாள் பொறு தலைவா’ – ஆசை

6. ‘வசீகரா’ – மின்னலே

7. ‘பச்சை நிறமே’ – அலைபாயுதே

8. ‘பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன்… ஒற்றை நாணயம்’ – ஆனந்தம்

9. ‘மொட்டுகளே மொட்டுகளே மூச்சுவிடா மொட்டுகளே’ – ரோஜாக்கூட்டம்

10. ‘குறுக்கு சிறுத்தவளே’ – முதல்வன்

சிறப்பு கொசுறு: ‘ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே’ – ஆட்டோகிராப்

Nandha – Engengo Kaalkal Sellum Paathayil

எங்கெங்கோ கால்கள் செல்லும் பாதையில் போகின்றாய்..
ஏதேதோ நாளை என்ற ஆசையில் வாழ்கின்றாய்..
உன் சொந்தம் இங்கு யார் யாரோ?
நீ சொல்லிக்கொள்ள யார் யாரோ?
நீ வாழும் வாழ்வில் அர்த்தம் என்ன என்றே நீ சொல்லு?

காதில்லா ஊசியுமே கடைசி வரைக்கும் வராதே..
பட்டினத்தார் சொன்னானே பாட்டு ஒன்றில் அப்போதே..
எதனைக்கொண்டு நாம் வந்தோம்..?
எதனைக் கொண்டு போகின்றோம்..?
ஓடும் பொன்னும் ஒன்றாய் எண்ணும் இதயம் வேண்டுமே..

காற்றுக்கு யார் இங்கே பாட்டுச் சொல்லித் தந்தாரோ?
ஆற்றுக்கு யார் இங்கே பாதை போட்டுத் தந்தாரோ?
வாழ்க்கை எங்கு போய்ச் சேரும்?
காலம் செய்யும் தீர்மானம்…
என்னை உன்னை கேட்டா வாழ்க்கை பயணம் போகுது?