Tag Archives: இலக்கியம்

பதின்ம வயதினரின் போதை மருந்துகளும் வாஷிங்டனின் வீடற்றவர்களும்

Three-Minute Fiction : NPR

1. மூன்று நிமிடக் கதைகள்:

அவசர உலகம். பாத்ரூம் போகிற அவசரத்தில் செல்பேசியில் இலக்கியம் படிக்கும் தலைமுறை. மூணே மூணு நிமிஷத்துக்குள் கதை சொல்லுங்க பார்ப்போம்னு போட்டி வைத்திருக்கிறார்கள்.


MTV’s ‘Skins’ Shows A Bit More Than Some Might Like : NPR

2. எம்டிவி-யின் ‘ஸ்கின்ஸ்’: மேற்கத்திய இளைய தலைமுறையினரின் இன்றைய பழக்கவழக்கங்கள் என்ன?

பாத்ரூமுக்குப் போய்விட்டு துர்நாற்றமடிக்கிறதே என்று அங்கலாப்பதையொத்து அமெரிக்காவில் கல்லூரி மாணாக்கர்கள் லூட்டி அடிக்கிறார்களே என்று பயமுறுவது. இது தொலைக்காட்சித் தொடர்.

போதை மருந்து சகஜமாகப் புழங்குவதையும் கூட்டணியாக உடலுறவு வைத்துக் கொள்வதையும் தற்பால் விழைவை புகட்டுவதையும் பதின்ம வயதினரின் போட்டா போட்டி குடியையும் காட்சியாக்கி இருக்கிறது.

எம்.டி.வி. எப்பொழுதுமே அடுத்த கட்டம். மடோனாவின் வெளிப்படையான ஆடை; வீடியோவில் பலான உறவு; ரியாலிடி நாடகங்களில் வன்முறை; என்று தொடர்ச்சியாக அமெரிக்காவை துகிலுரித்து காண்பிப்பதன் அடுத்த கட்டம் இந்த டீனேஜ் சீரியல்.


Meet John and Julie: Holograms Beamed Into The Manchester Airport : The Two-Way

3. விமானப் பணியில் ஹோலோகிராம் அறிவிப்பாளர்கள்

ஏற்கனவே வேலையில்லாத் திண்டாட்டத்தில் தவிக்கும் மேற்கத்திய உலகிற்கு இன்னொரு தலைவலி. நிஜ மனிதர்களை நீக்கிவிட்டு ஹாலாகிராம் உருவங்கள் அவர்களின் இடத்தைப் பிடிக்க ஆரபித்திருக்கின்றன.

24 மணி நேரம் ஆனாலும்… சொன்னதையே சொல்கிறது. எவ்வளவு தடவை கிளிப்பிள்ளை மாதிரி ரிபீட் செய்தாலும், முகஞ்சுளிக்காமல் ஃப்ரெஷ்ஷாக இருக்கிறது. உள்ளே கூட நுழைந்து வரலாம்.


Super Bowl ad considered offensive | Groupon’s ‘Tibet’ Super Bowl Ad: Harmless Fun Or Offensive? : The Two-Way

4. திபெத் விடுதலைப் போராட்டம் சீனாவின் உலகளாவிய அடக்குமுறையும்

புனிதப் பசு என்று ஏதாவது உண்டா? ஜெயமோகனோ சுந்தர ராமசாமியோ ஜாதியைக் குறித்து எழுதினால் பொங்கி எழுவது போல் திபெத் போராட்டத்தை இழிவு செய்கிறார்கள் என்று போர்க்கொடி தூக்கி இருக்கிறார்கள்.




Homeless Camp Puts Down Roots With Seattle’s OK

5. எட்டு மில்லியன் பேர் வேலைநீக்கம் ஆகியுள்ள அமெரிக்காவின் இருப்பிடமற்றோர் நிலை

மிகையும் துரத்த, வெம்பிணியும் துரத்த, வெகுளி ஆனதும் துரத்த,
மிடியும் துரத்த, நரை திரையும் துரத்த, மிகு வேதனைகளும் துரத்தப்,
பகையும் துரத்த, வஞ்சனையும் துரத்தப், பசி என்பதும் துரத்தப்,
பாவம் துரத்தப், பதி மோகம்துரத்தப், பல காரியமும் துரத்த,
நகையும் துரத்த, ஊழ் வினையும் துரத்த, என் நாளும் துரத்த, வெகுவாய்
நா வறண்டு ஓடிக், கால் தளர்ந்திடும் என்றனை நமனும் துரத்துவானோ?
அகில உலகங்கட்கும் ஆதார தெய்வமே! ஆதி கடவூரின் வாழ்வே!
அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி! அருள் வாமி! அபிராமியே!

அங்காடித் தெரு: இலக்கியம், குறியீடு, அரசியல் – Extrapolation

திரைப்படத்தை நாம் என்றுமே, திரைப்படமாக மட்டும் பார்ப்பதில்லை. எழுதவேண்டிய ஆக்கம் என்றால், மூர்மார்க்கெட்டில் இருந்து கோயம்பேடுக்கு ரோடு போடுவோம். உள்நோக்கம், குறியீடு, படைப்பு அரசியல் என்று விரிய வைக்கலாம்.

அப்படி சமகோட்டுப் பார்வையில் ஜெயமோகன் வசனம் எழுதிய ‘அங்காடி தெரு‘ சினிமாவிற்கான சித்திரம் இது.

உண்மையில் இதைத்தான் சொல்ல வந்தாரோ, இவரைத்தான் குறிப்பிடுகிறாரோ, இந்த சண்டையைத்தான் இவ்வாறு முடிச்சுப் போடுகிறாரோ என்று எண்ண வைக்கும் கதாபாத்திர ஒப்பீட்டு பத்து.

  1. சேர்மக் கனியாக வரும் அஞ்சலி: ஜெயமோகன்
  2. (நாயகன்) ஜோதிலிங்கம்: தமிழ் சினிமாவுலகம்
  3. ஜவுளிக் கடை முதலாளி அண்ணாச்சி: சுந்தர ராமசாமி
  4. ஊழியர்களின் கண்காணிப்பாளர் – கருங்காலி: ‘காலச்சுவடு’ கண்ணன்
  5. ஹீரோவின் தோழர் மாரிமுத்து: வசந்தகுமார்
  6. நகராட்சி கழிவறையை உபயோகித்து சம்பாதிக்கும் வழிப்போகன்: சாரு நிவேதிதா
  7. பாலியல் தொழிலாளியை மணந்து கொள்ளும் உயரம் குறைவானவர்: சுஜாதா
  8. பிளாட்பாரத்தில் கைக்குட்டை விற்கும் இசுலாமியப் பெரியவர்: ‘உயிர்மை’ மனுஷ்யபுத்திரன்
  9. மகளை ஆஸ்பத்திரியில் அம்போவென்று விட்டுச்செல்லும் தந்தை: ஜாலியாக லிங்க் போடும் இடத்தில், சீரியஸாக நிஜ வாழ்க்கைக்கு தொடுப்புக் கொடுக்கலாமா!
  10. நடிகை சினேகா: வேற யாருங்க… இதில் கூடவா குறி வைக்க முடியும்?

உதவிய பதிவுகள்:

வாசகர் சந்திப்பு

இந்த ஜூலை மாதம் 4-ஆம் தேதி சிகாகோவில் உள்ள அரோரா கோவில் கார் நிறுத்தகத்தில் மாலை ஏழு மணியிலிருந்து மறுநாள் காலை பத்து மணி வரை வாசக நண்பர்களை சந்திக்கலாம் என்று இருக்கிறேன். இரண்டு கார்களை வாடகைக்கு எடுத்திருக்கிறேன். பத்து பதினைந்து நண்பர்களை சந்திக்கலாம். அதற்கு மேல் போனால் அவரவர் பொறுப்பில்தான் மகிழுந்துகளை வாடகைக்கு எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும். அது ஒரு ஞாயிற்றுக்கிழமை என்பதால் மாமிகள் மற்றும் மணமாகாதவர்களின் கூட்டம் அதிகம் இருக்கும். இப்போதே முன்பதிவு செய்யாவிட்டால் கார் பார்க்கிங் கிடைக்காது.

டெக்ஸ்ட் உதவி: சாரி

Ravanan movie with Kamba Ramayanam

கம்பராமாயணம் என்பதற்கு பதிலாக கம்பராவணாயணம் என்பதே பொருத்தமோ என்பது போல், கம்பன், வில்லனைப் புகழ்ந்து தள்ளியிருக்கிறார். எனவே, மணி ரத்னத்திற்கும் ஆர் எஸ் மனோகருக்கும் இன்ஸ்பிரேசன் கம்பர் (அல்லது வான்மீகி?)

ராவணனின் வீரத்தைப் புகழும் கம்பர்:

காளி போன்றனன் இராவணன்; வெள்ளிடைக் கலந்த
பூளை போன்றதப் பொருசினத் தரிகள்தம் புணரி

மலர் மென்மையானது. [ஐஸ்வர்யா ராயை சொல்லவில்லை]. பூளைப்பூ காற்றால் சிதறியோடுவதை, வீரர் முன் வீரமிலாப் படை சிதறியோடுவதற்கு உவமையாக்குகிறார் கம்பர்.

இராமனை இகழும் இராவணன்:

தேறுதி; நாளையேயல் விருபது திண்டோள் வாடை
வீறிய பொழுது, பூளை வீயென வீவன்.

கரன் [கனகவேல் காக்க அல்ல] போன்ற தளபதிகள் இறந்தார்கள் என்னும் சூர்ப்பனகையின் சொல்லைக் கேட்டவுடன் கிளர்ந்தெழுந்த சினத்தன்மை:

ஆழித்தீயில் நெய் ஊற்ற ஆழித்தீ கனல்தலென இராவணன் சினந்தான்

மலையில் தோன்றிப் பாய்ந்த நீர், ஆறாக ஓடிக் கடலோடு கலந்தது. – ப்ருதிவிராஜில் தொடங்கும் காதல், விக்ரமில் சங்கமம் ஆகிறது.

தொடக்கத்தில் ஒரே இடத்தில் தோன்றிப் பல இடங்களில், பல்வேறு விதமான அளவுகளிலும் வடிவத்திலும் பாய்ந்து, வழிநெடுகிலும் வெவ்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டு, இறுதியில் கடலில் கலந்து, வேறுபாடின்றிக் கலக்கும் உயிர்களின் தன்மைக்கு விளக்கமாக இரு தரப்பினரும் உரைப்பதை ஒத்து இருந்தது.

கல்லிடைப் பிறந்து, போந்து, கடலிடைக் கலந்த நீத்தம்,
எல்லை இல் மறைகளாலும் இயம்ப அரும் பொருள் ஈது’ என்னத்
தொல்லையில் ஒன்றே ஆகி, துறைதொறும், பரந்த சூழ்ச்சிப்
பல் பெருஞ் சமயம் சொல்லும் பொருளும்போல், பரந்தது அன்றே.

ராமன் உலாவரும் காட்சியைக் கண்ட மிதிலைப் பெண்களின் நிலையைக் கூறுமிடத்தில், இராமனையே முழுமையாகப் பார்க்காதவர்கள் என்னும் நையாண்டி:

தோள்கண்டார் தோளேகண்டார் தொடுகழற் கமலமன்ன
தாள்கண்டார் தாளே கண்டார் தடக்கைக்க ண்டாரும் அஃதே
வாள் கொண்ட கண்ணார் யாரே வடிவினை முடியக் கண்டார்
ஊழ்கண்ட சமயத்து அன்னார் உருவு கண்டாரை ஒத்தார்

சீதையைப் பற்றி கம்பர் எப்படி வர்ணிக்கிறார்?

  • மாதரார் வடிவு கொண்ட, நஞ்சு தோய் அமுதம்
  • சீதை என்று ஒரு கொடுங் கூற்றம்
  • சனகி எனும் பெரு நஞ்சு உன்னைக் கண்ணாலே நோக்கவே, போக்கியதே உயிர்;

போர்க்களத்தில் சமையல் நடக்கும் பாடலில், யானைகளின் மேலிடும் தவிசும், அம்பும், தேரும், வில் முதலிய படைகளும் — கொடிய விறகுகளாய் அமைய, இறந்த வீரர்களுடைய சினமிக்க கண்களாகிய தீயில் பிணங்கள் வெந்து அவை பேய்கட்கு உணவாகின்றன:

சிந்துரங்களின் பருமமும், பகழியும், தேரும்,
குந்து வல் நெடுஞ் சிலை முதல் படைகளும், கொடியும்,
இந்தனங்களாய், இறந்தவர் விழிக் கனல் இலங்க,
வெந்த வெம் பிணம் விழுங்கின, கழுதுகள் விரும்பி

வீராவின் [படத்தில் விக்ரம்] மற்றொரு பாதி அவனின் தங்கை. அவளுக்கு நடந்த வன்முறை பிறரால் அன்று. இராவணனாலேயே நிகழ்ந்தது. தோன்றாதவை, அல்லது தோன்றியவை அவனைத் தவிர வேறொன்றும் இல்லை. அவன் கொலை செய்கிறான்; அல்லது வாழவைக்கிறான். பற்பலவற்றைப் படைத்த பிறகும் அவன் மட்டுமே எச்சம். ஊரார் எல்லாம் அவனின் தோற்றங்களே. பல்வேறு வகைப்பட்ட இவற்றின் அழிவிற்குப் பிறகும், அவனே இருப்பான்:

வில்லும் வேலும்வெங் குந்தமும் முதலின விறகாய்
எல்லு டைச்சுட ரெனப்புக ரெஃகெலா முருகத்,
தொல்லை நன்னிலை தொடந்துபே ருணர்வன்ன தொழிலச்
சில்லி யுண்டையிற் றிரண்டன படைக்கலச் சாலை

எம்.ஃபில்லோ, முனைவரோ ஆகுமளவு மணி ரத்தினமும் கம்ப ராமாயணத்தை அடியொற்றியே ‘இராவணன்’ அமைந்திருக்கிறார்.

நாயகனின் ‘அந்தி மழை மேகம்’ உங்களுக்குப் பிடிக்குமா? கிழவிகள் கொட்டமடிக்கும் ‘ருக்குமணி ருக்குமணி’ ரீங்காரமிடுகிறதா? ‘திருடா திருடா’வின் லாஜிக்கின்மை கவருகிறதா? உங்களுக்கு இந்தப் படம் பிடித்துப் போகும் வாய்ப்பிருக்கிறது.

ப்ரியாமணியுடையது, பருத்தி வீரனில் ஏற்கனவே செய்யப்பட்ட கதாபாத்திரம்! பிருத்விராஜைப் பார்த்தால் ‘டூயட்’ ரமேஷ் அர்விந்த் மாதிரி ஐஸ்வர்யாவோடு பொருந்தாமை!! வீரப்பன், நக்சல்பாரி, விடுதலைப் புலிகளின் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன், ‘பேராண்மை‘ என்றெல்லாம் +2 படிக்கும் மாணக்கனாக பக்கம் பக்கமாக பதிபவரா நீங்கள்? உங்களுக்கு இந்தப் படம் நிறையவே பின்னூட்ட வருகை பிராப்திரஸ்து ஆசீர்வதிக்கும்.

அவ்தார் போன்ற கொடுமையை மெச்சும் ஹாலிவுட் அர்ச்சகரா? ‘ஆயிரத்தில் ஒருவன்’ என்று பச் பச்சென்று பறித்த சாலட் கொறிப்பாளரா? உயிர்மை போன்ற நவீன குமுதங்களில் இடம்பிடிக்க விழைபவரா? உங்களுக்கும் உள்ளேன் அய்யா போட்டுக் கொள்ளலாம்.

அங்காடித் தெரு’ போன்று கருப்பு வெள்ளையாக எல்லா கதாபாத்திரமும் உங்களுக்கு உலா வர வேண்டுமா? ‘மெகாதீரா‘ போன்று அல்டாப்பு நிறைந்த மாய்மால ரசிகரா? ‘Shutter Island‘ போன்று குப்பாச்சு, குழப்பாச்சு மூக்குச்சுற்றி மூச்சுத்திணறல்களின் விரும்பியா? ஐ எம் வெரி சாரி மேடம். வெயிட் ஃபார் ‘யாவரும் கேளிர்’.

அமெரிக்காவில் ஜெயமோகன்

எழுத்தாளர் ஜெயமோகன் அமெரிக்கா வர திட்டமிட்டிருக்கிறார். அதன் விவரங்கள் இங்கே கிடைக்கும்: http://jeyamohan.in/?p=3304

அமெரிக்காவின் வட கிழக்கு மாநிலங்களில் ஆறு சந்திப்புகளுக்கு திட்டமிடப்பட்டிருக்கிறது.

1. பாஸ்டன் / New England – ஜூலை/12/ஞாயிறு – மாலை 6 PM
2. Albany / Upstate New York- ஜூலை/17/வெள்ளி – மாலை 6 PM
3. Niagara Falls/Buffalo – ஜூலை/18/சனி – நண்பகல் 12
4. CT / கனெக்டிகட் – ஜூலை/19/ஞாயிறு – மாலை 2 PM
5. நியூ ஜெர்சி / NJ – ஜூலை/23/வியாழன் – மாலை 6 PM
6. வாஷிங்டன் DC / பால்டிமோர் – ஜூலை/25/சனி – மாலை 6 PM

சந்திப்பு குறித்து மேலும் தகவல் அறிய மறுமொழியிலோ, மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள்.

அவருடன் ஏற்பட்ட அனுபவங்களை எம் கே குமார் விவரித்த விதம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அந்தப் பதிவு இங்கே: நெஞ்சின் அலைகள்: ஒரு நதியின் கரையில் – எழுத்தாளர் ஜெயமோகனுடன்!

சிறு சரித்திரக்குறிப்புகள்: சிறுபத்திரிகை மகாத்மியம்

Kaalam-Canada-Sitrithazh-Small-Magz-Tamil-Lit-Coversமுந்தைய பதிவு

  1. தமிழ் சிற்றிதழ்கள்
  2. என்னைக் கவர்ந்த தலை 10 தமிழ் சிறுபத்திரிகைகள்

இணையமெங்கும் சிறுபத்திரிகைகளின் துவக்கம், பல புத்தகங்களில் தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சி, ஆங்காங்கே வணிகப் பத்திரிகைகளில் வெளிவந்த பதிவாக்கப்பட்ட கவனிக்கத்தக்க மாற்றம், சரித்திரம், வரலாறு என்று பல இடங்களில் கண்டைதையும், படித்ததையும் தொகுக்கும் முயற்சி. அவ்வப்போது சேர்க்கப்படும்.

மேற்கோள் முத்து

1. சு.ரா.: சிறுபத்திரிகைக்காரங்க – இப்படி ஒண்ணு நடந்ததாவே அவங்களுக்குத் தெரியாது. அவங்களுக்குனு சொந்தமா ஒரு உலகம் இருக்கு. சின்ன குட்டி உலகம். ஒரு டாய்லெட் அளவு இருக்கும். அந்த உலகத்துக்குள்ளே அவன் சின்ன சின்ன சண்டைகள் போட்டுக் கொண்டிருப்பானே ஒழிய – இந்த டாய்லெட்டைவிட – ஒரு பெரிய உலகம் இருக்கு. அங்க பல காரியங்கள் நடக்குது. அந்தக் காரியங்கள் நம்ம வாழ்க்கையைப் பாதிக்குது – நீங்க டாய்லெட்ல போய் ஒளிஞ்சிண்டாலும் உங்க வாழ்க்கையை அது பாதிக்காம இருக்காது. So, அப்படிங்கற ஒரு consciousness நம்ம சிறுபத்திரிகைக்காரங்களுக்கு என்னிக்குமே இருந்ததில்லை.

Kalai-Images-Pictures-Thamil-Magazine-Covers-Little-Mag2. புதுமைப்பித்தன்: “நான் ஒரு சிற்றிதழ் ஆரம்பித்தால் அதற்கு சோதனை என்று பெயர் வைப்பேன் … சோதனை என்றால் சோதித்துப் பார்த்தல் என்று பொருள், தொல்லை என்ற பொருளும் அதற்கு உண்டு.”

3. க.நா.சு.: ‘ஒரு பத்திரிகை தொடர்ந்து இயங்கினால், அது சிறு பத்திரிகையே இல்லை.’

தகவல், பின்னணி, வரலாறு

எழுத்து சிற்றிதழ் சி.சு செல்லப்பா அவர்களை ஆசிரியராகக் கொண்டு , ஜனவரி 1959 முதல், புதுமை இலக்கிய மாத ஏடு என்ற அறிவிப்புடன் 50 பைசா விலையில் வெளிவரத் தொடங்கியது.

க.நா.சு நடத்தி வந்த சூறாவளி , சந்திரோதயம் பத்திரிகைகளில் துணையாசிரியராகப் பணிபுரிந்த அனுபவம் சி.சு செல்லப்பாவுக்கு உண்டு.

சுதேசமித்திரன் இதழ் செல்லப்பா எழுதிய கட்டுரை ஒன்றை வெளியட மறுத்த பொழுது எழுந்த கோபத்தில் எழுத்து இதழைத் தொடங்கினார் .

KPR-Keppiyaar-Kumari-District-Alternate-Journals-Issues-Articles-Opinionsந.பிச்சமூர்த்தி எழுத்து இதழின் வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இருந்தார் .

எழுத்து நின்றவுடன் சிறிது காலத்திற்குப் பிறகு சுவை என்ற மாத இதழை செல்லப்பா தொடங்கினார் , அதுவும் முதல் இதழோடு நின்று விட்டது.

க.நா.சு இலக்கிய வட்டம் ( நவம்பர் 1963 ) என்ற சிற்றிதழைத் தொடங்கினார்.

பெயர்கள், பட்டியல்

  • நிழல் – ஜூலை 05 « சினிமா, திரைப்பட அலசலுக்கான சஞ்சிகை
  • ஏப்ரல் 2008: வார்த்தை – எனி இந்தியன் இதழ்
  • ஏப்ரல் 2004: பாடலாசிரியர் யுகபாரதி படித்துறை’ என்ற பெயரில் தனியே ஒரு சிற்றிதழ் தொடங்கினார்.
  • மே 2004: தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திலிருந்து ‘கூட்டாஞ்சோறு’ என்ற இலக்கிய இதழ் ஆரம்பம்.
  • ஜூன் 2004: பெண்களுக்கான சினிமா பற்றி பேசும் ‘கண்ணாடி’ என்ற சிற்றிதழ் கொண்டுவருகிறார் குட்டிரேவதி.
  • கலைஞன் Oppuravu-Literary-Adventures-New-Obsolete-Images-Cover-Photos-artsபதிப்பகம் தொகுத்துள்ள சிற்றிதழ்கள்:
  1. கசடதபற
  2. கணையாழி
  3. மனிதன்
  4. சுபமங்களா
  5. சரஸ்வதி
  6. மணிக்கொடி
  7. சக்தி
  • சாந்தி (தொ.மு.சி ரகுநாதன்)
  • தாமரை(ப.ஜீவானந்தம்)
  • சரஸ்வதி (விஜயபாஸ்கரன்)

கருத்து, வம்பு, கிசுகிசு

உசாத்துணை, இணையத்துக் கட்டுரைகள்

1. Tamil-Neyam-EVR-Periyar-Left-Rational-Thinkers-Contents-Researchமரவண்டின் ரீங்காரம்: எழுத்து சிற்றிதழ்

2. ஆனந்த விகடன் தீபாவளி மலரில்(2004 ) விருட்சம் சிற்றிதழின் ஆசிரியரான அழகிய சிங்கர் அவர்கள் “எழுத்திலிருந்து மணல் புத்தகம் வரை” என்ற கட்டுரையில் சிற்றிதழ்களைப் பற்றி எழுதியிருக்கிறார்.

3. ஆறாம் திணைஇலக்கியம் :: சிற்றிதழ் வரிசை

தொடர்புள்ள புத்தகங்கள்

1. தமிழில் சிறுபத்திரிகைகள் – வல்லிக்கண்ணன்

2. புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் – வல்லிக்கண்ணன்

3. புதுக்கவிதை முற்போக்கும் பிற்போக்கும் – ந. வானமாமலை

4. புதுக்கவிதை வரலாறு – ராஜமார்த்தாண்டன்

Puthu-Ezhuthu-Manonmani-Preface-Table-of-contents-Index-Search-Fiction-Story5. சிறுகதைப் படைப்பின் உள்விவகாரம் -மேலாண்மை பொன்னுச்சாமி

6. இலக்கிய முன்னோடி வரிசை – ஜெயமோகன்

7. இந்திய இலக்கிய சிற்பிகள் (க.நா.சு) – அசோகமித்திரன்

8. இந்திய இலக்கியம் – க.நா.சு.

9. பிரம்மாண்டமும் ஒச்சமும் (சி.சு செல்லப்பாவின் படைப்புலகம்) – பெருமாள்முருகன்

குத்திக்கல் தெரு – அறிமுகம்

இதற்கு முன்பு தமிழோவியத்தில் இரு குறுநாவல் வெளியாகியுள்ளது. அவை:
1. கங்கை இல்லாத காசி
2. சுய சாசனம்

இப்பொழுது ‘குத்திக்கல் தெரு‘:

அ) நாவல் – பாகம் 1

ஆ) இரண்டாம் பகுதி

நாவலின் முதல் பகுதிகளுக்கு உங்கள் விமர்சனம் என்ன?

ஆர். வெங்கடேஷ் – மூன்று கதை

ஆர். வெங்கடேஷ் சமீபத்தில் எழுதிய கதைகள் கிடைத்தது. வாய்ப்பைத் தவறவிடாமல் விமர்சனம்.

இலகுவான வாசிப்புக்கு ஏற்றவை. வாசகனுக்கு சிரமம் தராத நடை. தற்கால இடங்களும் நகரத்தின் விரிவாக்கங்களும் பின்னணியாக உள்ளது. பதைபதைக்கும் விறுவிறுப்பு கிடைக்காது. சுவாரசியத்திற்கும் பஞ்சமில்லை.

~oOo~

temple-elephant-sundar-venkatesh-story-heroஅழகான பெண் வேண்டும்!

‘நான் விசுவலாகத்தான் இதை விளக்க முடியும்’ என்று மார்க்கரும் போர்டுமாக அலைபவரா நீங்க?

அப்படியானால் சுந்தர் நம்மவன். அசகாயமாக செய்து முடிப்பதை பேச்சில் சூரத்தனம் இல்லாமல் கருமமே தொடர்ச்சியாக காலங்காலமாக நடத்த விதிக்கப்பட்டவன்.

அமெரிக்காவின் திருப்பதியாம் நயாகரா நீர்வீழ்ச்சிப் பயணத்தை நினைவூட்டுகிறார். விச்ராந்தியாக உடற்பயிற்சிக்குப் பின்னுள்ள களைப்புற்று உட்காரும்போது தெய்வம் பிரசன்னமாகி அருள்பாலிக்கிறார்.

~oOo~

காதலென்பது…

lovers-lane-together-college-bikes-hold-hands-valentine‘இதயமே! இதயமே! உன் மௌனம் என்னைக் கொல்லுதே!’ என்று முகாரி தலை ராகம் பாடும் இளசு.

இப்பொழுதைய தலைமுறை ‘அதிரடி’ என்பது அதீதமான கற்பனை. இன்று தாடி வளர்க்காமல், தம்/தண்ணி அடித்து பூச்சி மருந்து அருந்தாமல் மருகும் கல்லூரி மாணவனின் களம்.

தெரிந்த முடிவை நோக்கிய பயணம்: கதையிலும் கதைநாயகனிலும்.

~oOo~

தொடரும்…

lonely-top-busy-lazy-rest-actress-story-flickrஅது யாரு சிம்ரனா? மீனா? மாதுரி தீக்சிட்?

முன்னாள் நடிகை நாடகம் பார்க்கும் கதை. அழுத்தம் குறைவு. சம்பவங்களினால் கோர்க்காமல் விவரிப்பில் வளர்வதால் மனதில் எதுவும் வெண்பஞ்சு snowஆக உரசாமல் பனிக்கட்டியாக இடறுகிறது.

மூன்று கதைகளில் இது கொஞ்சம் ஏமாற்றம் தரும் ஆக்கம்.

~oOo~

வெங்கடேஷ் சிறுகதைத் தொகுப்பு வெளியாகி உள்ளதா? அடுத்த கலெக்சன் ரெடி என்று பட்சி சொல்லுகிறது.

என்னைப் போன்ற புதிய எழுத்தாளர்கள, எழுத முயல்பவர்கள் கற்றுக் கொள்ள இந்தக் கதைகளை மனனப் பகுதியாக ஈராறு முறை படிப்பது நலம்.

எவ்வாறு காட்டாறாக துவங்குவது, ஆரம்பித்த வேகத்தை சீராக்குவது, பின்னோக்கி ஃப்ளாஷ்பேக் சொல்லிவிட்டு, அடுத்த காட்சிக்கு கதாசிரியர் சென்றுவிட்டதை எங்ஙனம் உணர்த்துவது, சொற் சிக்கனம், வடிவ நேர்த்தி, என்று சிறுகதையின் சூத்திரங்களைத் தெளிய உதவலாம். இதெல்லாம் சித்திக்காவிட்டாலும் நல்ல கதை படித்த திருப்தி கிட்டும் என்பதற்கு நான் கியாரண்டி.

2008 – Tamil Books

சென்ற முறை இந்தியா போனபோது எனி இந்தியனில் வாங்கிய புத்தகப் பட்டியல். பரிந்துரைத்த எனி இந்தியன் தேவராஜனுக்கும் நிழல்கள் பிரசன்னாவுக்கும் நன்றி. கிழக்குப் பதிப்பகத்தில் வாங்கியது தனிப் பட்டியல்.

படித்ததும் பிடித்தவை நீலவண்ணத்திலும், கவராதவை சிவப்பு வண்ணத்திலும், படிக்க எடுக்காதவை கறுப்பு நிறத்திலும் உள்ளது.

வெங்கட்டின் இவ்வருடத் தொகுப்பு :: சென்னை புத்தகக் கண்காட்சி 2009

‘நுனிப்புல்’ உஷா: 2009ன் புத்தக சந்தையும் நான் வாங்கியவைகளும்

தொடர்புள்ள சில:

1. இரண்டாம் ஜாமங்களின் கதை: சல்மா – காலச்சுவடு
2. நாஞ்சில் நாடன் கதைகள் – தமிழினி
3. கானல் நதி: யுவன் சந்திரசேகர் – உயிர்மை
4. கணையாழி கடைசிப் பக்கங்கள் – சுஜாதா
5. சிலுவைராஜ் சரித்திரம்ராஜ் கௌதமன் – தமிழினி
6. ஆழிசூழ் உலகு: ஜோ டி குருஸ் – தமிழினி
7. கன்னி: ஜெ.பிரான்சிஸ் கிருபா – தமிழினி
8. யாமம்: எஸ்.ராமகிருஷ்ணன் – உயிர்மை
9. மணல் கடிகை: சூத்ரதாரி – தமிழினி
10. சாருநிவேதிதா ராஸ லீலா – உயிர்மை
11. சிலிர்ப்பு: தி. ஜானகிராமனின் தேர்ந்தெடுத்த சிறுகதை தொகுப்பு
12. வெள்ளாவி: விமல் குழந்தைவேல் – உயிர்மை
13. கமண்டல நதி – நாஞ்சில் நாடனின் புனைவுலகு: ஜெயமோகன் – தமிழினி
14. குள்ளச்சித்தன் சரித்திரம்: யுவன் சந்திரசேகர் – தமிழினி
15. நான் சரவணன் வித்யா: லிவிங் ஸ்மைல் வித்யா – கிழக்கு
16. நளினி ஜமீலா – ஒரு பாலியல் தொழிலாளியின் சுய சரிதை: தமிழில்: குளச்சல் மு. யூசுப் – காலச்சுவடு
17. கண்ணீரைப் பின் தொடர்தல்: ஜெயமோகன் – உயிர்மை
18. நிழல் முற்றம்: பெருமாள் முருகன்
19. மகாராஜாவின் ரயில்வண்டி: அ. முத்துலிங்கம்
20. வாஸவேச்வரம்: கிருத்திகா
21. சூடிய பூ சூடற்க: நாஞ்சில் நாடன்
22. கோவில் – நிலம் – சாதி: பொ. வேல்சாமி – காலச்சுவடு
23. பூமியின் பாதி வயது: அ. முத்துலிங்கம்
24. பெர்லின் இரவுகள்: பொ கருணாகரமூர்த்தி – உயிர்மை
25. ஆழ்நதியைத் தேடி: ஜெயமோகன் – உயிர்மை
26. ஆஸ்பத்திரி: சுதேசமித்திரன் – உயிர்மை
27. நிழல்வெளிக்கதைகள்: ஜெயமோகன்
28. நித்தியக்கன்னி: எம். வி. வெங்கட்ராம்
29. நவீனன் டைரி: நகுலன்
30. நினைவுப் பாதை: நகுலன்
31. இவர்கள்: நகுலன்
32. வாக்குமூலம்: நகுலன்
33. கூகை: சோ தர்மன்
34. தூர்வை: சோ தர்மன்
35. விசும்பு: ஜெயமோகன் – எனிஇந்தியன்
36. உயிர்த்தலம்: ஆபிதீன் – எனிஇந்தியன்
37. நவீனத் தமிழிலக்கிய அறிமுகம்: ஜெயமோகன் – உயிர்மை
38. நதியின் கரையில்: பாவண்ணன் – எனிஇந்தியன்
39. துங்கபத்திரை: பாவண்ணன் – எனிஇந்தியன்
40. ஸீரோ டிகிரி: சாரு நிவேதிதா – உயிர்மை
41. என் இலக்கிய நண்பர்கள்: ந.முருகேச பாண்டியன் – உயிர்மை
42. ஒற்றன்: அசோகமித்திரன்

சமீபத்தில் கவர்ந்த ட்விட்கள்

வை. கபிலன்

nchokkan 60களில்தான் கம்ப்யூட்டர் மவுஸ் கண்டறியப்பட்டதாம், ஆனால் நீயோ 60 வருடமாக மவுஸோடு இருக்கும் கம்ப்யூட்டர் … யார் யாரைப் புகழ்ந்தது, guess 😉
writerpara இன்னும் கொஞ்சம் இம்சை: நீ ஒரு கணினி, இலக்கியம் உன் மென்பொருள், அரசியல் உன் வன்பொருள். [அதே வை.கபிலன்]
nchokkan வை. கபிலன்(?) எழுதிய இன்னொண்ணு – கலைஞர் கல் எடுத்துக் கொடுத்தது டைடல் பூங்கா, சொல் எடுத்துக் கொடுத்தது தொல்காப்பியப் பூங்கா
writerpara ஸ்டாலினுக்கு: த்ரிஷா காணும் தமிழரிடையே மிசா கண்ட நாயகனே!

nchokkan கனிமொழி: சேலை கட்டிய இலக்கியமே, டெல்லி சென்ற தமிழகமே … ஓகேயா?

writerpara கனிமொழிக்கு: கவிதை உனக்குக் கைக்குட்டை. சிந்தித்தாலும் அழகு. சிந்தினாலும் அழகு.
nchokkan விஜய்காந்துக்கோ, நாளை விஜய் அரசியலுக்கு வந்தால் அவருக்கோ பொருத்தமாக ஒரு டூஇன்ஒன் கவிதை – புள்ளிவிவரப் புலி நீ, சொல்லி அடிக்கும் கில்லி நீ
writerpara கனிமொழிக்கு: கவிதை உனக்குக் கைக்குட்டை. சிந்தித்தாலும் அழகு. சிந்தினாலும் அழகு.
nchokkan உதயநிதி ஸ்டாலின்: காக்கா பிடிக்கும் தமிழர் மத்தியில், குருவி பிடித்த குணக் குன்றே, தாத்தாவின் பெயர் காக்கும் தமிழ்க் கன்றே … 😉
writerpara வடிவேலு: அடிமகனே!நல்ல தமிழ்க் குடிமகனே! தமிழுக்கு விடிவெள்ளியாய் முளைத்த கடிமகனே, விஜயகாந்துக்கு வெடி வைக்கும் திருமகனே வாழி.
writerpara @nchokkan வைரமுத்துவின் மகன் கலைஞரைப் பற்றி;-)
nchokkan கரெக்ட், அப்பாவுக்குத் தப்பாத மகன்

பொய் சொல்லப் போறோம்

vickydotin நான் சொன்னது ஒரே பொய்தான். அது தாய் பொய். மத்ததெல்லாம் அது போட்ட குட்டிப்பொய். அண்ணன் தம்பிங்க மாதிரி !!

KishoreK சிலம்பாட்டம் பட ட்ரெய்லர், ம்யூட் செய்து பார்க்கும்போது ஜிம்னாஸ்டிக்ஸ் போல தெரிகின்றது


writerpara காலை 8.45க்கு வெங்கட்ரமணா போளி ஸ்டாலில் அதிரசம் வாங்கி, நின்றபடியே சாப்பிட்டுக்கொண்டிருப்போருக்கு எவ்வளவு ஷுகர் இருக்கும்?
writerpara 83 வயது ரெஹ்மான் ரஹி என்கிற காஷ்மீரக் கவிஞர் ஞானபீட விருது பெற்றிருக்கிறார். பீடம் ஏறும் முதல் காஷ்மீரி இவரே. கேள்விப்பட்டிருக்கிறோமா?
writerpara ஜிக்மே நம்கியல் வேங்க்சுக் என்கிற 28 வயதுப் பையன் பூடானின் மன்னராகியிருக்கிறான். ட்விட்டருக்கு இது தெரியுமா?
writerpara யுவராஜ் சிங் என்பவர் மன்மோகன் சிங்குக்கு உறவா?
writerpara அலுவலகம் முழுதும் க்ரிகின்ஃபோ தளத்து ஸ்கோர் போர்டிலேயே வசிக்கிறது. எரிச்சலாக இருக்கிறது. கிரிக்கெட்டை ஒழிக்க என்ன செய்யலாம்?
penathal அது கோல் இல்லைங்க.. செட், கேம்னு சொல்லுவாங்க. இங்கிலாந்து 10 செட்லே 240 கேம்!
elavasam தேன்மொழி இதைச் செஞ்ச பொழுது அதில் அவ முடி இருந்திச்சாம். அப்போ யாரோ என்னதுன்னு கேட்க நம்ம ஆளு தேன்குழல்ன்னு சொல்லி இருக்கான். ok?


ஹிட்டாகுமா?

hotdogsladies The new frontier in web metrics will involve quantifying how often we check stats.

அஞ்சலி இடுகை

anbudan_BALA சாதனையாளர்கள் ஒவ்வொருவராக நம்மை விட்டு பிரியும் காலமிது-ஜெமினி,சுஜாதா,பூர்ணம்,குன்னக்குடி,ஸ்ரீதர், Kசங்கர்,நம்பியார். இது தான் இயற்கை நியதி


சட்டம் என் கையில்

srikan2 சட்டக்கல்லூரி மாணவர்கள் வன்முறையில் ஈடுபட்டார்கள் என்பதன் அதிர்ச்சியை விட, போலீசார் செயலிழந்து பார்த்துக்கொண்டிருந்தனர்..என்பதன் அதிர்ச்சி மிகப் பெரிதாக இருப்பதாக (anecdotally) நினைக்கிறேன். இதற்கு எந்த சாதி/சாதியற்ற பார்வையும் தேவையில்லை. contd

உங்கள் பொன்னான வாக்கை ரகசியமாகப் போடுங்க

mohandoss அன்புள்ள ஐயா அம்மாக்களே உங்கள் விமர்சனங்களை மீறியும் படம் பார்ப்பவர்கள் இருப்பார்கள், உங்கள் விமர்சனங்களை தனியாகப் போட்டுத் தொலைக்கலாமே! டிவிட்டரில் தேவையில்லாமல் கண்ணில் படுகிறதே! விமர்சனம்னு போட்டு பதிவில் போட்டிக்கிட்டு லிங்க் அடிக்கலாம் தேவையில்லாதவர்கள் படிக்க மாட்டார்கள்


ajinomotto RP ராஜநாயஹம் என்ன தொழில் தான் பண்றார்? சினிமா, சாராயக்கடை, எழுத்தாளர், வாத்தியார்? பலபேரோட வாழ்க்கைய தெரிஞ்ச ஏகம்பரமா எழுதுறார் அதான் கே …
ilavanji ப்ரட் ஆம்லெட்டுக்கு அப்பறம் காபி குடிச்சா ஏங்க கொமட்டிக்கிட்டே இருக்கு!? 😦


ஈழம்

suratha முதன் முதலாக தமிழ் ப்ளொக்கர் ஒருவர் கைது செய்யபபட்டுள்ளார்.என்ன பண்ணலாம்.ஒண்ணும் பண்ணமுடியாது.
suratha புலிகள் உண்மையில் தோற்கிறார்களா அல்லது தோற்பது போல் நடிக்கிறார்களா? மில்லியன் டாலர் கேள்வி
suratha பிரபாகரன், அமெரிக்க, இந்திய அரசு மாற்றங்களை எதிர்பார்த்து காத்திருக்கின்றார். -அனிதா பிரதாப் – ஞாபகத்திற்கு வந்த பழைய செய்தி ஒன்று
rozavasanth கலைஞர், ஜெ, ராமதாஸ், சோனியா, லாலு, மாயாவதிகளை விட பிரபாகரன் பலமடங்கு சுயநலமில்லாத மனிதர் என்பதில் எனக்குத் துளியும் சந்தேகமில்லை -ஞாநி
rozavasanth ஒரு அதிர்ச்சிக்காவாவது ராமேஸ்வர மீன்வர் சமூகங்கள் இந்தியாவில் இருந்து பிரிந்து குடியரசாவதாக அறிவிக்க வேண்டும்.
solitaryreaper 1.Attacks on The Hindu 2.Rajiv Gandhi statue Damaged 3.Srilankan Mission stoned 4. Swamy office vandalized 5.Two Rail Bogies set on fire ..


இலக்கணம் மாறுதோ?

SridharNarayana >இல் பொருள் உவமையணி< in short டுபாக்கூர் அணி :))

nchokkan //Laptop bag compatible with PC & Mac// ’இங்கு எல்லா மொழிகளிலும் ஃபேக்ஸ் அனுப்பப்படும்’ன்னு ஒருத்தன் எழுதிவெச்சதா சுஜாதா சொன்னாரே

nchokkan தோனி இன்னிக்கு பேட் செய்யப் போகும்போது பாக்கெட்லயே D-L Calculation Sheet வெச்சிருந்தாராம், Impressive


bseshadri International investors have already pulled out 1,00,000 crore Rs. in the last year out of Indian stock market. Which is the main reason behind 1 USD = 50+ INR

rarunach Stephen Colbert:”Arguing that regulation is not required because banks have self-interest is like arguing traffic signals are not required.”

rselvaraj I was NOT worried until the banks+401Ks started sending mail not to worry!

nchokkan ஒரு டிஷர்ட்டில் பார்த்தது: Prove Me That Money Doesn’t Bring Happiness


ajinomotto நான் எழுதிய warehouse job ஓடியது ஓடியது செர்வரின் எல்லைக்கே ஓடியது.ஓடுவதை பார்த்த எல்லோரும் என்னை கும்மி எடுக்கின்றனர்.

ajinomotto டெவலப்மெண்ட்ல நீ எவ்ளோ பெரிய smart ass -ஆ இருந்தாலும் UAT -ல உனக்கு ஆப்பு நிச்சயம்.

ajinomotto ஆத்து நிறைய தண்ணி போனாலும் நாய் நக்கி தான் குடிக்கும். செர்வர் நிறைய CPU இருந்தாலும் பழைய ப்ரோகிராம் ஒரு CPU-ல தான் ஓடும்


anathai Icon_red_lock What is right? – Dogmatic, preserve status co, exclusive, less govt, for corporate, believe birth, survival of fittest, believe subjucation
anathai Icon_red_lock what is left? – Free, equaletarian, liberal, progressive, inclusive, for govt , anti corporate, green, believe nurture, support powerless

vikrambkumar I met an african-american who voted for McCain yesterday and a Microsoft corp strategist using gmail/ipod today. Will I see an elf 2mro?

தலித் அரசியல்

rozavasanth அவர்களை துப்புரவு தொழிலாளர்களாக நிரந்தரப்படுத்துவதை சாதனை பட்டியலில் மாயவதி அடுக்குவது தலித் அரசியலுக்கான மிக பெரிய துரோகம்.(என் கருத்து)

தமிழக அரசியல்

nchokkan இன்று அண்ணாவின் 100வது பிறந்தநாள், தினசரி காலண்டரில் அவருடைய ஓவியம் பார்த்தேன், அவர் முதுகில் குத்தி மார்பு வழியே ஓர் ஆணி வெளிவந்திருந்தது

சினிமா அரசியல்

mohandoss “மதுர எரியுது அணைங்கடா” – நாக்க முக்க பாட்டு வரிகள் தான் மாறன் ‘காதலில் விழுந்தேன்’ படத்தை வாங்க காரணமா?

இலக்கிய அரசியல்

marudhan ராஜம் கிருஷ்ணன் இடது சாரி சிந்தனையாளர்னு இப்போதான் தெரிஞ்சுது

நிதி அரசியல்

nchokkan நண்பர் சொன்ன ஜோக்(?): ஃபயர் அலார்ம் வாங்க வசதியில்லாதவன், விட்டத்தில் ஒரு ரெடிமேட் பாப்கார்ன் பொட்டலத்தைக் கட்டித் தொங்கவிட்டானாம் 😉


அறிவியல் ஆராய்ச்சி கண்டுபிடிப்பு

Aravindank தமிழக டிவிட்டர்கள் ஆங்கிலத்திலும் அமெரிக்க டிவிட்டர்கள் தமிழிலும் டிவிட்டுவது அதிகரித்துள்ளதே…என்ன காரணம்..?

ajinomotto DB Psychlgy:லைஃபில் கமிட்மெண்ட் இல்லாதவன் SQL ஓட்டிய பிறகு கமிட் செய்வதே இல்லை.Auto Commit-ஐ நம்பி வாழ்க்கையை ஓட்டுபவன் நிறைய கஷ்டப்படுவான்


elavasam அங்க துகிலுரிந்ததால் கண்ணன் மும்மலம் துடைத்தான். நீர் உம்மலம் துடைச்சீரு!! 🙂 in reply to snapjudge
elavasam வித்தாரம் – விக்காட்டி ஜின்?
ev Email: “Your domain name (twitter.com) has been found online. Please let us know your price.” (And people say we can’t make money!)
ev Dear coffee shops of America: Let’s just assume no one needs a receipt, unless we’re told otherwise.


நகைச்சுவை

gchandra A Tamilian call up sardar and asks ” tamil therima??” Sardar got mad, angrily replied…. “Hindi tera baap!!!”

கவிதை

arunsundar It rains & my friend asks an old lady if she needs an umbrella. She smiles & replies “Thanks honey, I can walk between the rain drops!”
neotamizhan பெட்ரோமாக்ஸ் லைட் கொளுத்து ஃபங்ஷன் மூடு கெடைக்குண்டா… மெழுகுவத்திய ஏத்தி வையி பர்த்டே போல இருக்குண்டா! ஜுவியில் ”பவர் கட்” கவிதை. 🙂
solitaryreaper I reiterate that Chess Positions are like poetry. When u understand them, you get the same ecstacy as understanding the sub-text of a poetry


பயணங்கள் முடிவதில்லை

rozavasanth முன்பு பெங்களூரில் இறங்கி குளிர்காற்றில் நடப்பது பிரிந்த காதலியை அணைப்பது போல்;இன்று ஆட்டோ புகை, ட்ராஃபிக் ஜாம் வெப்பத்தில் நகர்ந்தது நரகம்.

மடப்பள்ளி

nithyas Falling in love with Brazilian coffee and drinking several cups every dayy.
nithyas I got a recommendation for a brand called Cafe du Pont to buy.


சொந்தக் கதை

solitaryreaper As soon as I returned from gym,I sat on the couch&requested my wife 2 bring dinner&water saying I cant walk.Consequence of exercising:-))
chenthil Play school fees – Rs. 7500.00 admission fee and Rs. 5500.00 term fees for a 9.00 AM-12.00 PM Montessory school. Need a loan for school fees


கிசுகிசு

gchandra Vettaiyadu Kamal peyar konda ‘theevira’ vaatha ezhuthalar, sontha kathai adikadi ezhudhararae.. ‘kanaga vel’ avarai ‘kakka’ varaliya. ippadi