Tag Archives: ஆக்கம்

குத்திக்கல் தெரு – அறிமுகம்

இதற்கு முன்பு தமிழோவியத்தில் இரு குறுநாவல் வெளியாகியுள்ளது. அவை:
1. கங்கை இல்லாத காசி
2. சுய சாசனம்

இப்பொழுது ‘குத்திக்கல் தெரு‘:

அ) நாவல் – பாகம் 1

ஆ) இரண்டாம் பகுதி

நாவலின் முதல் பகுதிகளுக்கு உங்கள் விமர்சனம் என்ன?

ஆர். வெங்கடேஷ் – மூன்று கதை

ஆர். வெங்கடேஷ் சமீபத்தில் எழுதிய கதைகள் கிடைத்தது. வாய்ப்பைத் தவறவிடாமல் விமர்சனம்.

இலகுவான வாசிப்புக்கு ஏற்றவை. வாசகனுக்கு சிரமம் தராத நடை. தற்கால இடங்களும் நகரத்தின் விரிவாக்கங்களும் பின்னணியாக உள்ளது. பதைபதைக்கும் விறுவிறுப்பு கிடைக்காது. சுவாரசியத்திற்கும் பஞ்சமில்லை.

~oOo~

temple-elephant-sundar-venkatesh-story-heroஅழகான பெண் வேண்டும்!

‘நான் விசுவலாகத்தான் இதை விளக்க முடியும்’ என்று மார்க்கரும் போர்டுமாக அலைபவரா நீங்க?

அப்படியானால் சுந்தர் நம்மவன். அசகாயமாக செய்து முடிப்பதை பேச்சில் சூரத்தனம் இல்லாமல் கருமமே தொடர்ச்சியாக காலங்காலமாக நடத்த விதிக்கப்பட்டவன்.

அமெரிக்காவின் திருப்பதியாம் நயாகரா நீர்வீழ்ச்சிப் பயணத்தை நினைவூட்டுகிறார். விச்ராந்தியாக உடற்பயிற்சிக்குப் பின்னுள்ள களைப்புற்று உட்காரும்போது தெய்வம் பிரசன்னமாகி அருள்பாலிக்கிறார்.

~oOo~

காதலென்பது…

lovers-lane-together-college-bikes-hold-hands-valentine‘இதயமே! இதயமே! உன் மௌனம் என்னைக் கொல்லுதே!’ என்று முகாரி தலை ராகம் பாடும் இளசு.

இப்பொழுதைய தலைமுறை ‘அதிரடி’ என்பது அதீதமான கற்பனை. இன்று தாடி வளர்க்காமல், தம்/தண்ணி அடித்து பூச்சி மருந்து அருந்தாமல் மருகும் கல்லூரி மாணவனின் களம்.

தெரிந்த முடிவை நோக்கிய பயணம்: கதையிலும் கதைநாயகனிலும்.

~oOo~

தொடரும்…

lonely-top-busy-lazy-rest-actress-story-flickrஅது யாரு சிம்ரனா? மீனா? மாதுரி தீக்சிட்?

முன்னாள் நடிகை நாடகம் பார்க்கும் கதை. அழுத்தம் குறைவு. சம்பவங்களினால் கோர்க்காமல் விவரிப்பில் வளர்வதால் மனதில் எதுவும் வெண்பஞ்சு snowஆக உரசாமல் பனிக்கட்டியாக இடறுகிறது.

மூன்று கதைகளில் இது கொஞ்சம் ஏமாற்றம் தரும் ஆக்கம்.

~oOo~

வெங்கடேஷ் சிறுகதைத் தொகுப்பு வெளியாகி உள்ளதா? அடுத்த கலெக்சன் ரெடி என்று பட்சி சொல்லுகிறது.

என்னைப் போன்ற புதிய எழுத்தாளர்கள, எழுத முயல்பவர்கள் கற்றுக் கொள்ள இந்தக் கதைகளை மனனப் பகுதியாக ஈராறு முறை படிப்பது நலம்.

எவ்வாறு காட்டாறாக துவங்குவது, ஆரம்பித்த வேகத்தை சீராக்குவது, பின்னோக்கி ஃப்ளாஷ்பேக் சொல்லிவிட்டு, அடுத்த காட்சிக்கு கதாசிரியர் சென்றுவிட்டதை எங்ஙனம் உணர்த்துவது, சொற் சிக்கனம், வடிவ நேர்த்தி, என்று சிறுகதையின் சூத்திரங்களைத் தெளிய உதவலாம். இதெல்லாம் சித்திக்காவிட்டாலும் நல்ல கதை படித்த திருப்தி கிட்டும் என்பதற்கு நான் கியாரண்டி.

கிருஷ்ணா! கிருஷ்ணா!

மலந்துடைக்க தாள்களை கடகடவென பறித்த சமயம் திரௌபதியை துச்சாதனன் துகிலுரிந்தது நினைவுக்கு வருகிறது.
10:33 AM Nov 20th

அதே போன்ற இன்னொரு மலங்கழிக்கும் இடம். ஆத்மார்த்தமாக தியானித்து நச்சுகளை வெளியேற்றுகையில் கிருஷ்ணனே வந்துசேர்ந்தார்.

‘என்னடா! நீ ‘ஒன்லி விமல்’ சூட்டிங், ஷர்ட்டிங் பார்த்தது இல்லையாடா?’

‘ஏஞ்சாமி?’

‘அங்கே கூட இப்படி துணிக்கட்டுகளை பண்டில் பண்டிலாக அடுக்கி வைத்திருப்பார்கள். எண்பதுகளின் தமிழ்நாட்டு கோ ஆப்டெக்ஸில் இதைப் பார்த்தவன் நீ. இருந்தும் ஏன்டா என்னோட இன்சிடென்ட்டை வம்புக்கு இழுத்தாய்?’

‘உங்கள எங்க சாமி உள்ளே இழுத்தேன்? நான் துச்சாதனன். வெள்ளைப் புடைவையாக பேப்பர். கொடுத்தது காஸ்ட்கோ; வாங்கி வைத்தது நான்; தயாரித்தது ஸ்காட் கம்பெனியாம்’.

த்வைதம் பேசுகிறாயா? டாய்லெட் பேப்பருக்காக மரத்தை வெட்டியது தவறு என்பாய். அங்கு மீண்டும் பச்சை தழைக்காவிட்டால் க்ரீன்பீஸ் கொண்டு போராட்டம் நடத்துவாய். தண்ணீரைக் கொட்டி ஃப்ளஷ் செய்யாதே என்றும், அதை அப்படியே வைத்திருந்து உரமாக்கலாம் என்றும் பேதம் பாராட்டுவாய்!’

‘சாமீ! ரொம்ப விக்கிப்பீடியா பக்கம் போகாதீங்க. அப்படியே டெமொக்ரசி நௌ எல்லாம் வேணாம்.’

‘அது இருக்கட்டும். மீண்டும் கேட்கிறேன். அள்ள அள்ளக் கொடுத்தவன் கிருஷ்ணன். பத்து தடவை பீ பெய்தால் தீர்ந்து போகும் உருளையோடு ஒப்பிடலாமா?’

‘முதல்ல இதுக்கு பதில் சொல்லுங்க சாமீயோவ். கிறித்துவம், இஸ்லாம் போன்ற மதங்கள் த்வைதத்தின் அடிப்படையிலும் புத்தம், ஜெயினம் எல்லாம் கடவுள் அபவாதம் என்னும் அத்வைதம் போதிக்குதா?’

‘முதலில் பிரபத்தியை அணுகு மகனே. சர்வமும் சித்திக்கும்’

‘யூ மீன் பாப்பாத்தி?’

‘பிரபத்தி என்றால் பரிபூரண சரணாகதி அப்பா’.

‘எது எப்படியோ. பிரபத்தி பேர் நல்லாருக்கு. அடுத்த தமிழ் ஹீரோயினுக்கு வெச்சுக்கலாம். அதற்கப்புறம் அவளை சரணாகதி அடைஞ்சா மோட்சம் வருமே.’

‘எனக்கு மீராபாய்தான் சரி. நான் ஜூட்.’

சுட்ட மொழி – இகாரஸ் பிரகாஷ் on சுஜாதா

சுஜாதா மீது விமர்சனம் வைக்ககூடாது என்பதில்லை. அவருடைய தனிமனித பலவீனங்கள் சார்புகள் அவருடைய எழுத்தில் பிரதிபலித்தது என்பது உண்மைதான். சுற்றி இருக்கிறவர்கள் ரத்தம் சிந்திக்கொண்டிருந்த போது, அவர் தன் மூட்டு வலியைப் பற்றி லட்சக்கணக்கான வாசகர்களிடம் பிரஸ்தாபம் செய்து கொண்டிருந்தார் என்பது உண்மைதான். ஆனால், அந்த பலவீனங்கள் அவருடைய சில பல அச்சீவ்மெண்ட்டுகளை நிராகரிக்கக் கூடிய அளவுக்கு முக்கியமான காரணியாக இருந்ததா என்பது, ஆராயச்சிக்குரிய விஷயம்.
ஐகாரஸ் பிரகாஷ்

I met a seducer – Grace Paley

One day a seducer met a seducer
now said one                           what do we do
fly into each other's arms said
the other                           ugh said one                           they turned
stood back to back                           one
looked over one's shoulder                           smiled
shyly                           other turned seconds
too late                           made a lovelier
shy smile                           oh my dear said other
my own dear                           said one