பதித்தல்

சு.ரா.வுடனான முதல் கலந்துரையாடல் – III

அண்ணாமலை: கலைஞருக்கு மட்டும் இல்லை. பொதுவாகவே தமிழ்நாட்டுல our public posture is different from our private choice. (சு.ரா. சிரிக்கிறார்.) இப்போ private choice-னு வரும்போது கல்யாணமோ, ஜாதியோ எதுனாலும், public-ல ஜாதி வேணாம்னு எல்லாரும் பேசுவாங்க. ஆனா, private life-க்கு வரும்போது வேற மாதிரி. அதே மாதிரி நாங்க சர்வே எத்தனையோ பண்ணியிருக்கோம். அந்த சர்வேல தமிழ் மீடியம் வேணும்னுதான் மெஜாரிட்டி சொல்வாங்க. ஆனால், குறிப்பா உங்க பிள்ளையை எங்கே அனுப்புவீங்கன்னா, வேற மாதிரி பதில் வரும். பொதுவா – தமிழ் மீடியம் வேணுமான்னா, வேணும், வேணும், வேணும். Symbolic-ஆ சொல்லும்போது எல்லாம் ஒத்துக்குவாங்க. ஆனால், private action-னு வரும்போது we behave differently.

சு.ரா.: கருணாநிதியின் நெகட்டிவ் சைட்ஸ் ஒண்ணுமே நான் மறுக்கலை. ஆனா – அவருக்குப் பாசிட்டிவ் சைட்ஸ் நிறைய உண்டு. இந்த அம்மாவுக்கு ஒண்ணுமே கிடையாது.

அண்ணாமலை: DMK has become a party of upper-caste non-brahmins. So for the lower caste they were looking for a political platform and MGR provided it.


IV

சு.ரா.: சிறுபத்திரிகைக்காரங்க – இப்படி ஒண்ணு நடந்ததாவே அவங்களுக்குத் தெரியாது. அவங்களுக்குனு சொந்தமா ஒரு உலகம் இருக்கு. சின்ன குட்டி உலகம். ஒரு டாய்லெட் அளவு இருக்கும். அந்த உலகத்துக்குள்ளே அவன் சின்ன சின்ன சண்டைகள் போட்டுக் கொண்டிருப்பானே ஒழிய – இந்த டாய்லெட்டைவிட – ஒரு பெரிய உலகம் இருக்கு. அங்க பல காரியங்கள் நடக்குது. அந்தக் காரியங்கள் நம்ம வாழ்க்கையைப் பாதிக்குது – நீங்க டாய்லெட்ல போய் ஒளிஞ்சிண்டாலும் உங்க வாழ்க்கையை அது பாதிக்காம இருக்காது. So, அப்படிங்கற ஒரு consciousness நம்ம சிறுபத்திரிகைக்காரங்களுக்கு என்னிக்குமே இருந்ததில்லை.

சாமிநாதன்: ஜெமினி ஸ்டுடியோவைப் பத்தி எழுதியதால்தான் அசோகமித்ரனுக்கு வந்து ஆனந்தவிகடன்லே சான்ஸே கிடைக்காது.

சாமிநாதன்: ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்போது – நிறைய பேரு தீக்குளிச்சாங்க இல்லையா? தீக்குளிச்ச ஒரு family மட்டும் trace பண்றோம்னு வச்சிக்குங்க. இந்த மாதிரி bread winner செத்ததால, அவங்க என்னென்ன கஷ்டப்பட்டாங்க – இன்னைக்கு என்ன நிலையிலே இருக்காங்க என்பதை trace பண்ணி, அவர்கள் நன்றாக இல்லையென்றால் – அதைக் கதையாகவோ படமாகவோ எடுக்கிறோம் என்றால் – அதை திராவிட இயக்கம் விடுவாங்களா?

சு.ரா.: ரொம்ப opinionated அவர் (ஜெயகாந்தன்). அவருக்கு வந்து – ஒரு சுதந்தரமான சஞ்சாரமே கிடையாது. கிரியேட்டிங் என்கிற ப்ராஸஸை வந்து – நீங்க ஒரு சுதந்தரமான சஞ்சாரத்துக்காக – அதுக்காக நீங்க எல்லாமே சுதந்தரமா போய்விடலாம் என்ற அர்த்தம் இல்லே – but நீங்க உங்களை டிஸ்கவர் பண்றீங்க. உங்களோட உண்மையான அபிப்ராயம் என்ன என்று நீங்க டிஸ்கவர் பண்றீங்க. அதற்கான ஒரு ப்ராஸஸை மேற்கொள்றீங்க. இந்த விஷயமே அவர்கிட்டே கிடையாது. அவர் வந்து – ஏற்கனவே society-ல இருக்கக் கூடிய பலவகையான அபிப்ராயங்களை – பல முக்கியமான ஆட்களோட அபிப்ராயங்களைக் கதையா – ஐடியாஸை கதையா transform பண்ணறது என்கிறது எனக்கு ஒத்துக்கறது இல்லே. எனக்கு எக்ஸ்பீரியன்ஸ், இமேஜினேஷன் எல்லாம் எனக்கு முக்கியமான விஷயம். அதன்மூலம் அவன் அடையக்கூடிய – அவனுக்கே தெரியாமல் அவன் அடையக்கூடிய – அவனுக்கே தெரியாமல் அவன் அடையக்கூடிய விஷயங்கள் இருக்கே – அதெல்லாம் ரொம்ப முக்கியமான விஷயம். அதுதான் கிரியேட்டிவ் ரைட்டருடைய முக்கியமான குவாலிட்டி. அந்தக் குவாலிட்டி அவர்கிட்ட இல்லை. social-ஆ அவர் ரொம்ப நல்லா function பண்றார். அதைப் பத்தி நான் question பண்ணல. அவருடைய ஐடியாஸ் எல்லாம் question பண்ண முடியாது.


| |

காலவரிசை

தமிழ் வலைப்பதிவுகள் & தமிழ்மணம் – காலவரிசை

2003

Tamil Bloggers List | Valaippoo


2004

வலைப்பூ

குடில் – சுரதா

வலைப்பதிவு தொடர்கள்

‘வலைப்பூ’ ஆசிரியர்கள்

யாஹு க்ரூப்ஸ்


தமிழ்மணம்

ஆக. 23, 2004 01:02:37
வலைப்பதிவுகளுக்காக ஒரு மேடைத்தளம் – காசி

ஆக. 23, 2004 21:49:30
தமிழ்மணம்.காம் – ஒரு விளக்கம் – காசி

ஆக. 24, 2004 11:57:49
இலகுவான திரட்டுப் பட்டியல் – காசி

ஆக. 24, 2004 11:51:00
விருப்பப் பட்டியல் – ‘தமிழ் வலைப்பதிவுகள் அரங்கம்’ – பாலாஜி

ஆக. 28, 2004 09:54:10
தமிழ்மணம் தளத்துக்கு தொடுப்புக் கொடுங்கள்

செப். 12, 2004 22:55:40
தமிழ்மணம் தளத்தில் சில மாறுதல்கள் – காசி

நவ. 11, 2004 21:23:53
தமிழ்மணத்தின் முதல் 100 நாட்கள் – காசி


2005

மார். 03, 2005 11:02
புதிய மாற்றங்கள் – சில விளக்கங்கள் – காசி

மார். 08, 2005 11:33
தொட்டால் பூ மலரும் – காசி

மார். 08, 2005 15:34
*The* List – காசி

மார். 18, 2005 15:05
போலீஸ் வேலை – காசி

ஏப். 01, 2005 10:10
நினைவூட்டல் – காசி

ஜூலை 16, 2005 06:01
நடப்பிலில்லாத பதிவுகள் விலக்கம் – காசி

ஆக. 23, 2005 03:54:42
தமிழ்மணம் – 365 – காசி


அக்டோபர் 2005
அக். 14, 2005 01:51:26
தமிழ்மணம் தள நடவடிக்கைகள் பற்றி சில அறிவிப்புகள். – காசி

அக். 14, 2005 23:01:26
குடியரசுத்தலைவருக்கு அனுப்பிய கடிதம் – காசி

அக். 16, 2005 17:34
குசும்புதலைவருக்கு அனுப்பிய மடல் – குசும்பன்


அக். 18, 2005 12:19
நன்றி பொறுக்குதிலையே – குசும்பன்

அக். 18, 2005 19:37
மன்றம் முகமூடி

அக். 18, 2005 20:40:52
ஒரு அறிவிப்பு – காசி

அக். 18, 2005
ஓர் அறிவிப்பு – பிகே சிவகுமார்

அக். 18, 2005 23:42
அந்தக் காலத்தில் RSS இல்லை – பாலாஜி

அக். 19, 2005 09:28
ஏன்? ஏன் ?? – News From Shallow End of Gene Pool

அக். 19, 2005
தமிழ்மணமும், தணிக்கையும்! – அருண்

அக். 19, 2005 10:27
காசி,வணக்கம்! – ப.வி.ஸ்ரீரங்கன்

அக். 19, 2005 13:51:06
தமிழ்மணம் திரட்டும் பட்டியலில் உள்ள/இல்லாத பதிவுகள் – காசி

அக். 19, 2005 17:22
தமிழ்மணம் அறிவிப்பு – இட்லி வடை

அக். 19, 2005 17:54
“ஒரு” தமிழ் மணத்தின் உதிர்வு. – மயூரன்

அக். 19, 2005 18:17
தணிக்கைகளற்ற ஓர் திரட்டி அமைப்பு – வாய்ஸ் ஆன் விங்ஸ்

அக். 19, 2005 18:53
தமிழ்மணம் குறித்து – சன்னாசி

அக். 20, 2005 09:05
கட்டுப்பாடும் சில கருத்துக்களும் – சின்னவன்

அக். 20, 2005
சில விளக்கங்கள்! – அருண்

அக். 20, 2005
பெட்டிக்கடை – சுரேஷ்

அக். 20, 2005 14:57
தமிழ்மண தணிக்கையும் வலைப்பதிவர் பிணக்கங்களும் – அனுராக்

அக். 21, 2005
தமிழ்மணத்திற்கு நன்றி – முகமூடி

அக். 21, 2005 01:40
காசியின் தமிழ்மண அறிவிப்பு பற்றி – கல்வெட்டு

அக். 21, 2005 04:00
வலைப் பூக்களில் என்ன எழுதலாம், என்ன எழுதக்கூடாது! – டி.பி.ஆர். ஜோசஃப்

அக். 21, 2005 17:14
தமிழ்மணத்திற்கு விழும் அடி – செல்வராஜ்

அக். 21, 2005 16:27
தமிழ்மணம் டாப் 10 – இட்லி வடை

அக். 23, 2005 06:27
தமிழ்மணம் சிந்தனைகள் தொடர்ச்சி – செல்வராஜ்

அக். 23, 2005 22:03:58
சில எண்ணங்கள் – காசி


| |

தமிழோசையில் திருமா

திருமாவளவன் செவ்வி

கேள்விகள் சில:

  • ஒரு காலத்திலே, இலங்கைத் தமிழர் பிரச்சினையில் தமிழகத்திலே மிகப் பெரிய விழிப்புணர்வு, ஒரு வேகம், உணர்வுபூர்வமான ஆதரவு இருந்தது. ஆனால், கடந்த கால சம்பவங்களுக்குப் பிறகு தமிழகத்திலே இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு என்ன மாதிரியான அணுகுமுறை இருக்கிறது? மக்களிடையே என்ன மாதிரியான உணர்வுகள் இருக்கின்றன? அரசியல் கட்சிகளிடையே என்ன மாதிரியான நிலைப்பாடு இருக்கிறது?
  • எந்த காரணத்தினால் விடுதலைப் புலிகளுக்கு, இந்தியாவில் தடைசெய்யப்பட்ட இயக்கத்திற்கு, வெளிப்படையாக ஆதரவு தரவேண்டிய நிலை ஏன்?
  • பொடா சட்டம் மட்டுமே தமிழக மக்களை (விடுதலைப் புலிகளை விட்டு) விலக்கி வைப்பதாக நினைக்கிறீர்களா? அது தவிர கடந்த பதினைந்து ஆண்டுகளாக நிகழ்ந்த சில நிகழ்வுகள் கூட பொதுமக்களை விலகிச் செல்ல வைக்க கூடும் என்று கருதலாம் அல்லவா?
  • வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் உங்களின் அரசியல் நிலைப்பாடு என்ன?
  • கடந்த ஐம்பது, அறுபது ஆண்டுகளாக தமிழ் தேசியம் என்பது திராவிடக் கட்சிகளின் போராட்டமாக இருக்கிறது. தமிழ் தேசியத்துக்குள் தலித் மக்களைக் கொண்டு வந்தார்களா என்ற கேள்வி இருக்கிறது. தமிழ் தேசியம் என்பது தலித் மக்களுக்கு உண்மையான முன்னேற்றத்தைக் கொண்டு வருகிறதா? விடுதலை சிறுத்தைகள் தமிழ் தேசியம் பேசுவதன் அர்த்தம் என்ன?
  • 2001 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் பா.ஜ.க. என்னும் ஹிந்து வலதுசாரி கட்சியுடன் அரசியல்ரீதியாக தொடர்பு வைத்துக் கொள்வது உங்களுக்குப் பிரச்சினையாகத் தோன்றவில்லை. சித்தாந்தரீதியில் கடுமையான நிலைப்பாட்டை எடுக்கக் கூடிய ஆர்.எஸ்.எஸின் அரசியல் அங்கமாகக் கருதப்படும் பாரதீய ஜனதா கட்சியுடன், உங்களைப் போன்ற கட்சிகள் ஒரே அணியில் எப்படி இருக்க முடியும்?

    திருமாவளவனின் பதில்கள்


    | |

  • சனி #8

    #1: மறுப்புக்கூற்று(கள்): இந்தப் பதிவை படிப்பதால் கூட்டல் கழித்தல் மேலான நம்பிக்கைகள் மூடமாகலாம். உங்கள் உடைந்த ஸ்கேலைக் கொண்டு ரிச்டர், சனியை சுற்றியிருக்கும் தூசு வட்டம் ஆகியவற்றை அடிக்க நேரிடலாம்.

    #2.

    Yarl.com :: எண் சோதிடம்: இந்திய எண் சோதிடர்கள் ஒவ்வொரு எண்ணுக்கும் ஒவ்வொரு கோளை ஒதுக்கி பலன் சொல்கிறார்கள்.

    1 – ஞாயிறு,
    2 – கேது,
    3 – குரு,
    4 – இராகு,
    5 – புதன்,
    6 – சுக்கிரன் (வெள்ளி )
    7 – சந்திரன்,
    8 – சனி,
    9 – செவ்வாய்

    #3.

    #4.

    திருப்பாவை: சில விளக்கங்கள் – ஹரி கிருஷ்ணன் – (maraththadi.com): “பேர்த்து என்ற சொல்லுக்கு ‘மறுபடியும்’ என்று ஒரு பொருள் வரும். பேர்த்தும். ‘பின்னைப் பழம்பொருட்கும் பேர்த்துமப் பெற்றியனே’ என்று திருவாசகம் சொல்லும். இங்கே இருக்கும் ‘பேர்த்து’ வேறு. பெயர்த்து என்பதன் வழக்கு வடிவம். கலோக்கியல். ஓரிடத்தை விட்டு இன்னோரிடத்திற்கு அசைவது பெயர்தல். இடப் பெயர்ச்சி. குரு பெயர்ச்சி, சனி….. இத்யாதி.”

    #5. 24. தமிழச் சாதி :: சி. சுப்ரமணிய பாரதியார் பாடல்கள் – மதுரை திட்டம்:
    …..
    விதியே தமிழச் சாதியை எவ்வகை
    விதித்தாய் என்பதன் மெய்யெனக் குணர்த்துவாய்.
    ஏனெனில்
    சிலப்பதி காரச் செய்யுளைக் கருதியும்

    திருக்குற ளுறுதியும் தெளிவும் பொருளின்
    ஆழமும் விரிவும் அழகும் கருதியும்
    எல்லை யொன் றின்மைஎ எனும் பொருள் அதனைக்
    கம்பன் குறிகளாற் காட்டிட முயலும்
    முயற்சியைக் கருதியும் முன்புநான் தமிழச்

    சாதியை அமரத் தன்மை வாய்ந்தது என்று
    உறுதிகொண்டிருந்தேன். ஒருபதி னாயிரம்
    சனிவாய்ப் பட்டும் தமிழச் சாதிதான்
    உள்ளுடை வின்றி உயர்த்திடு நெறிகளைக்
    கண்டு எனது உள்ளம் கலங்கிடா திருந்தேன்.
    …..

    #6. ரா.பார்த்திபனின் கிறுக்கல்கள்

    தோஷம்: சனி தோஷம்
    பரிகாரம்: ஆஞ்ச நேயருக்கு துளசி மாலை போட்டு அபிஷேகம் செய்ய வேண்டும்.
    என் பிரகாரம்: மன வளர்ச்சி குன்றியவர்களுக்கு, மருந்து மாத்திரை வாங்கித் தர வேண்டும்.

    #7.

    ஔவையார்:
    ஆத்திசூடி – உயிர்மெய் வருக்கம் :: 16. சனி நீராடு.

    #8. உலகத்தை அதிக அளவு நாசமாக்கிய பூகம்பங்கள்

    அ) பாகிஸ்தான் (அக்ட். 8, 2005) – 80,000 இறப்பு
    ஆ) இந்தோனேஷியா (டிச. 26 [2+6 ==8], 2004 – 280,000 (சுனாமியும் கூட வந்தது)
    இ) தென்கிழக்கு ஈரான் (டிச. 26, 2003) – 26,200 இறப்பு
    ஈ) இந்தியா (ஜன. 26, 2001) – 20,000 இறப்பு
    உ) துருக்கி (ஆக. 17 [1+7 == 8], 1999 – 17,000 இறப்பு
    ஊ) நார்த்ரிட்ஜ், கலிஃபோர்னியா (ஜன. 17, 1994) – 60 இறப்பு (இருபது முதல் நாற்பது பில்லியன் வரையிலான சேதங்கள்)


    | |

    திருப்பூர் கிருஷ்ணன்

    எனது குறிப்பேடு :: அமுதசுரபி – Sify.com

    சீரும் சிறப்பும்

    தினமணி கதிரில் நா.பா. ஆசிரியராக இருந்த காலம். திடீரென்று என்னை அழைத்தார் நா.பா. அன்று வந்த ஒரு தபாலைக் கையில் கொடுத்தார். “என்ன அழகாக இந்த வெண்பாவை எழுதியிருக்கிறார் பாருங்கள்!” என்று அதில் எழுதப்பட்டிருந்த வெண்பாவைக் காண்பித்துக் கொண்டாடினார். (இப்போது அமுதசுரபியில் வெண்பாப் போட்டி தொடங்கப்பட்டிருக்கிறது. அப்போது கதிரில் வெண்பாப் போட்டி நடந்து கொண்டிருந்தது.)

    மரபுக் கவிதையில் நா.பா.வைக் கவர்வது கடினம். அவரே ஒரு பண்டிதர். சுலபத்தில் எதையும் ஏற்கமாட்டார். நா.பா. பழந்தமிழ் இலக்கியம் தொடர்பான சில முற்போக்குச் சிந்தனைகளை சுதேச மித்திரனில் ‘பண்டித. நா. பார்த்தசாரதி‘ என்ற பெயரில் எழுதியதுண்டு. அப்போது அதை எதிர்த்தவர்கள் “பண்டிதனா பார்த்தசாரதி?” என்று கேட்டு எதிர்த்ததாக சுதேசமித்திரன் சீனிவாசன் என்னிடம் சொன்னதுண்டு.

    நா.பா. ஒரு வெண்பாவின் அழகில் சொக்குவது என்பது சாமானியமல்ல. “ஒவ்வொரு சீரும் எவ்வளவு அழகாக வந்து விழுந்திருக்கிறது பாருங்கள்! இந்த வெண்பாவை இதை எழுதிய எழுத்தாளரின் புகைப்படத்துடன் வெளியிடுங்கள்!” என்று கூறினார் நா.பா. ஓவியர் தாமரை லேஅவுட் செய்ய நா.பா. விரும்பியபடியே அந்த வெண்பா அதை எழுதியவரின் புகைப்படத்துடன் வெளியிடப்பட்டது.

    “வேண்டாம் வரதட்சிணை”‘ என்ற ஈற்றடிக்குத்தான் நேரிசை வெண்பா எழுதி அனுப்பியிருந்தார் அந்தப் பிரபல எழுத்தாளர். அவரது இலக்கியப் புலமை பற்றி அறிவேன். அவரின் இலக்கணப் புலமையை அப்போதுதான் அறிந்து கொண்டேன். பின்னாளில் அம்பலம் இணைய இதழில் அவரிடமே பயிற்சி பெறும் வாய்ப்பும் பெற்றேன். அவர் – என் அபிமான எழுத்தாளர்களில் ஒருவரான சுஜாதா. அவர் எழுதிய வெண்பா:

    பத்துபவுன் தங்கம் பளிச்சென்ற கல்வளையல்
    முத்திலே சின்னதாய் மூக்குத்தி – மத்தபடி
    ‘பாண்டு’வைத்து ஊர்கோலம் பாட்டு இவைதவிர
    வேண்டாம் வரதட்சிணை!


    “நூறு மலர்களின் பெயர்களைக் கடகடவென்று மேடையில் ஒப்பிப்பீர்களே? இப்போதும் அந்த நூறு மலர்களும் ஞாபகமிருக்கிறதா?” கலகலவென மகிழ்ச்சியோடு சிரித்த சிவகுமார், “மனசுக்குள்ளேயே நிரந்தரமாய் மணம் வீசும் மலர்கள். அவை மனத்தை விட்டு எப்படிப் போகும்!” என்றார். அன்றுகண்ட மேனிக்கு அழிவில்லாத அதே இளமை, உற்சாகம், சுறுசுறுப்பு. நெறியோடு வாழ்வதால் விளைந்த தெளிவும் மலர்ச்சியும் அவர் முகத்திலும் பேச்சிலும்.


    சில எழுத்தாளர்கள் இப்படித்தான்

    கடுகடுவென்று இருக்கும் சில எழுத்தாளர்களைப் பார்க்கும்போது இரக்கம் ஏற்படுகிறது. மற்றவர்களிடம் அன்பு காட்டக்கூடத் தெரியாத இவர்கள் எழுதி என்ன செய்யப் போகிறார்கள் என்ற அலுப்பும் தோன்றுகிறது. சில எழுத்தாளர்களின் தற்பெருமையோ தாங்க முடியவில்லை. ஓர் எழுத்தாளரைச் சந்தித்தேன். கால்மணி நேரம் தன்னைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தார். நான் ஊம் கொட்டு வதைக் கூட நிறுத்திவிட்டேன். என் முகத்தில் அலுப்பின் ரேகைகளைப் படித்துவிட்ட அந்த எழுத்தாளர் என்ன சொன்னார் தெரியுமா? “கால்மணி நேரமாக என்னைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கிறேன். உங்களுக்கு அலுப்பாகத் தான் இருக்கும். சரி. இனி ஒரு கால்மணி நேரம் நீங்கள் என்னைப் பற்றிப் பேசுங்கள்!”

    நன்றி: சிஃபி.காம்


    | |

    நவராத்திரி ப்ராகென்ஸ்டெய்ன்

    பாட்டு பாடு அல்லது வேஷம் கட்டு
    Navaraathri Golu
    அன்று சென்றதும் அதே சுண்டலுக்காக

    (சச்சச்சா)

    Halloween Kitty & Frankenstein
    இங்கு வந்ததும் இதே மிட்டாய்களுக்காக

    எங்கு போனாலும் ஒரே பாடல்
    Trick or Treat

    Navaraathri Golu 

    Navaraathri Golu Posted by Picasa

    Halloween Kitty & Frankenstein 

    Halloween Kitty & Frankenstein Posted by Picasa

    Happy Diwali 

    Happy Diwali Posted by Picasa

    தீபாவளி வாழ்த்துகள்

    ஏபிசிடிக்கு சொன்ன தீபாவளி/தஸரா கதை

    http://www.flickr.com/photos/40954626@N00/

    Russian Ice Sculptures

    Happy Diwali


    | |