-
-
அண்மைய பதிவுகள்
- சனாதனம் என்றால் என்ன? இந்த கேள்வியே தவறானதா?
- குண்டியில் ஓக்கப் பார்க்கும் உலகில் ஒரு ரூபாய் அவமானம்
- பிளேட்டோவின் குகை: தற்கணத்தின் நிழல்கள்
- இது அரசியல் பதிவல்ல
- 🎤 இதயம் இந்தியன் தான்! 🎤
- ஆழியின் ஆட்டம்: மீன்காடு கிராமத்தின் கடைசி வேட்டை
- Dinamalar Essay – TN Politics 2026: Rural Voters Analysis
- ஆரவிந்தன்
- StoryJudge: TamilOsai on Air with Siva Durai: இந்த வார இலக்கியம்
- தொல்சொல் வேர் தேடும் அகவுநர் திரள்
- Oru Oorla Oru Rajakumari
- பக்கம் திரும்பு, தீப்பொறி உணர்
- “எப்போதும் நிரபராதியை குற்றஞ்சாட்டு”
- ஞானபீட இதிகாசம்: ஆழ்ந்த ஞானங்கள்
- மணல், மழை, பச்சை
காப்பகம்
- ஜூன் 2026
- மே 2026
- ஏப்ரல் 2026
- மார்ச் 2026
- பிப்ரவரி 2026
- நவம்பர் 2025
- ஒக்ரோபர் 2025
- ஜூன் 2025
- மே 2025
- மார்ச் 2025
- திசெம்பர் 2024
- நவம்பர் 2024
- ஒக்ரோபர் 2024
- செப்ரெம்பர் 2024
- ஓகஸ்ட் 2024
- ஜூலை 2024
- ஜூன் 2024
- மே 2024
- மார்ச் 2024
- பிப்ரவரி 2024
- ஜனவரி 2024
- திசெம்பர் 2023
- நவம்பர் 2023
- ஒக்ரோபர் 2023
- செப்ரெம்பர் 2023
- ஓகஸ்ட் 2023
- ஜூலை 2023
- ஜூன் 2023
- மே 2023
- ஏப்ரல் 2023
- மார்ச் 2023
- பிப்ரவரி 2023
- ஜனவரி 2023
- திசெம்பர் 2022
- நவம்பர் 2022
- செப்ரெம்பர் 2022
- ஜூலை 2022
- ஜூன் 2022
- மே 2022
- ஏப்ரல் 2022
- மார்ச் 2022
- பிப்ரவரி 2022
- ஜனவரி 2022
- திசெம்பர் 2021
- ஓகஸ்ட் 2021
- மே 2021
- ஏப்ரல் 2021
- மார்ச் 2021
- ஜனவரி 2021
- திசெம்பர் 2020
- நவம்பர் 2020
- ஓகஸ்ட் 2020
- ஜூலை 2020
- ஜூன் 2020
- ஏப்ரல் 2020
- மார்ச் 2020
- நவம்பர் 2019
- ஒக்ரோபர் 2019
- ஓகஸ்ட் 2019
- ஜூலை 2019
- ஏப்ரல் 2019
- மார்ச் 2019
- ஜனவரி 2019
- திசெம்பர் 2018
- நவம்பர் 2018
- ஒக்ரோபர் 2018
- செப்ரெம்பர் 2018
- ஜூன் 2018
- செப்ரெம்பர் 2017
- ஓகஸ்ட் 2017
- ஜூலை 2017
- ஏப்ரல் 2017
- மார்ச் 2017
- பிப்ரவரி 2017
- ஜனவரி 2017
- திசெம்பர் 2016
- நவம்பர் 2016
- ஒக்ரோபர் 2016
- செப்ரெம்பர் 2016
- ஓகஸ்ட் 2016
- ஜூலை 2016
- ஜூன் 2016
- மார்ச் 2016
- பிப்ரவரி 2016
- ஜனவரி 2016
- திசெம்பர் 2015
- நவம்பர் 2015
- ஒக்ரோபர் 2015
- செப்ரெம்பர் 2015
- ஓகஸ்ட் 2015
- ஜூன் 2015
- மே 2015
- ஏப்ரல் 2015
- மார்ச் 2015
- பிப்ரவரி 2015
- ஜனவரி 2015
- நவம்பர் 2014
- ஓகஸ்ட் 2014
- ஜூலை 2014
- ஜூன் 2014
- மே 2014
- ஏப்ரல் 2014
- மார்ச் 2014
- பிப்ரவரி 2014
- ஜனவரி 2014
- திசெம்பர் 2013
- நவம்பர் 2013
- செப்ரெம்பர் 2013
- ஓகஸ்ட் 2013
- ஜூன் 2013
- ஏப்ரல் 2013
- மார்ச் 2013
- பிப்ரவரி 2013
- ஜனவரி 2013
- திசெம்பர் 2012
- நவம்பர் 2012
- ஒக்ரோபர் 2012
- செப்ரெம்பர் 2012
- ஓகஸ்ட் 2012
- ஜூலை 2012
- ஜூன் 2012
- மே 2012
- மார்ச் 2012
- பிப்ரவரி 2012
- ஜனவரி 2012
- திசெம்பர் 2011
- நவம்பர் 2011
- செப்ரெம்பர் 2011
- ஓகஸ்ட் 2011
- ஜூலை 2011
- ஜூன் 2011
- மே 2011
- ஏப்ரல் 2011
- மார்ச் 2011
- பிப்ரவரி 2011
- ஜனவரி 2011
- திசெம்பர் 2010
- நவம்பர் 2010
- ஒக்ரோபர் 2010
- ஓகஸ்ட் 2010
- ஜூலை 2010
- ஜூன் 2010
- மார்ச் 2010
- பிப்ரவரி 2010
- ஜனவரி 2010
- திசெம்பர் 2009
- செப்ரெம்பர் 2009
- ஓகஸ்ட் 2009
- ஜூலை 2009
- ஜூன் 2009
- மே 2009
- ஏப்ரல் 2009
- மார்ச் 2009
- பிப்ரவரி 2009
- ஜனவரி 2009
- திசெம்பர் 2008
- நவம்பர் 2008
- ஒக்ரோபர் 2008
- செப்ரெம்பர் 2008
- ஓகஸ்ட் 2008
- ஜூலை 2008
- ஜூன் 2008
- மே 2008
- ஏப்ரல் 2008
- மார்ச் 2008
- பிப்ரவரி 2008
- ஜனவரி 2008
- திசெம்பர் 2007
- நவம்பர் 2007
- ஒக்ரோபர் 2007
- செப்ரெம்பர் 2007
- ஓகஸ்ட் 2007
- ஜூலை 2007
- ஜூன் 2007
- மே 2007
- ஏப்ரல் 2007
- மார்ச் 2007
- பிப்ரவரி 2007
- ஜனவரி 2007
- திசெம்பர் 2006
- நவம்பர் 2006
- ஒக்ரோபர் 2006
- செப்ரெம்பர் 2006
- ஓகஸ்ட் 2006
- ஜூலை 2006
- ஜூன் 2006
- மே 2006
- ஏப்ரல் 2006
- மார்ச் 2006
- பிப்ரவரி 2006
- ஜனவரி 2006
- திசெம்பர் 2005
- நவம்பர் 2005
- ஒக்ரோபர் 2005
- செப்ரெம்பர் 2005
- ஓகஸ்ட் 2005
- ஜூலை 2005
- ஜூன் 2005
- மே 2005
- ஏப்ரல் 2005
- மார்ச் 2005
- பிப்ரவரி 2005
- ஜனவரி 2005
- திசெம்பர் 2004
- நவம்பர் 2004
- ஒக்ரோபர் 2004
- செப்ரெம்பர் 2004
- ஓகஸ்ட் 2004
- ஜூலை 2004
- ஜூன் 2004
- மே 2004
- ஏப்ரல் 2004
- மார்ச் 2004
- பிப்ரவரி 2004
- ஜனவரி 2004
- திசெம்பர் 2003
பக்கங்கள்
Blogroll
- +: etcetera :+
- =விடை தேடும் வினா?
- அகத்தீடு
- அட்டவணை
- அயில்வார்நஞ்சை
- அரசியல்வாதி
- அரவாணி
- அரிச்சந்திரன்
- அலைபாயுதே
- அவியல்
- ஆகாசவாணி
- ஆங்கிலேயன்
- ஆஞ்ஞானம்
- இங்கிலாந்து
- இதழ்
- இத்யாதி
- இந்தியன்
- இன்று
- இலக்கியன்
- இலம்பகம்
- ஈழத்தமிழன்
- ஈழம்
- உக்கடத்துப் பப்படம்
- உங்க ஏரியா
- உபன்யாசி
- உப்புமா
- உருப்படாதவன்
- உருப்படி
- உலா வரும் ஒளிக்கதிர்
- உலோட்டி
- உஷ்ணவாயு
- ஊர்சுற்றி
- எங்க ஏரியா
- எம்டன்
- எழுத்து
- ஒன்றுமில்லை
- கடலை
- கடி
- கடிகையார்
- கனடா
- கனிமொழி
- கப்பி
- கரிப்புறத்திணை
- கருத்து
- கறுப்பி
- கலகக்காரன்
- கலம்பகம்
- கலாம்
- கவிஞர்
- காக்டெயில்
- காஞ்சி
- கானா
- காபி பேஸ்ட்
- கார்காரர்
- கிரி அஸெம்பிளி
- குசும்பன்
- குடிகாரன் பேச்சு
- குப்பை
- கென்
- கேமிரா கண்ணாயிரம்
- கைக்குள் பிரபஞ்சம்
- கைமண்
- கொலம்போ
- கோமாளி
- கோலு
- சந்தக்கட செல்லாயி
- சன்னாசி
- சரக்கு
- சரம்
- சரஸ்வதி
- சர்வே-சன்
- சற்குரு
- சாட்டான்
- சாம்பார் மாஃபியா
- சிந்தனாவாதி
- சினிமாகாரன்
- சின்ன கிறுக்கல்
- சிவியார்
- சுட்ட தமிழ்
- சுட்டன்
- சுண்டல்
- சுருணை
- சுவரோவியன்
- சூன்யம்
- சென்னைவாசி
- சேவகி
- சோடா பாட்டில்
- ஜெத்மலானி
- ஜெயமோகன்
- டாக்டர்
- டாக்டர்
- டாலர்வாசி
- டிசே தமிழன்
- டின்னர்
- டுபுக்கு
- டூப்புடு
- டைரி
- தங்கபஸ்பம்
- தபால்
- தமிழ் செய்திகள்
- தம்பி
- தல
- திரித்தல்
- துட்டு
- துள்ளி
- தேனிக்காரன்
- தொட்டி
- தோட்டக்காரன்
- நகரம்
- நல்ல பையன்
- நா காக்க
- நாதன்
- நானே நானா
- நார்வே
- நிஜம்
- நிதர்சனம்
- நியூஸிலாந்து
- நிலம்
- நீதிபதி
- நீதிலு
- நேரடி
- நேஹா
- பக்கிரி
- பட்டணம் பொடி
- பண்டிட்ஜி
- பண்ணையார்
- பயணி
- பல-ராமன்
- பாசமுள்ள பாண்டியன்
- பாட்டாளி

- பிலிம்
- புரியிலி
- பெரிய கிறுக்கல்
- பேப்பர் புலி
- பொம்மு
- பொயட்
- போக்கன்
- ப்ப்ப்பூ
- மங்கை
- மடி
- மண்
- மதராசி
- மதுர
- மனோகரம்
- மாத்து
- மீறான்
- முயற்சி
- முயல்
- முரசு (கேப்டன் அல்ல)
- முரு(க்)கு
- மூக்கன்
- மேலெழுத்து
- மொழி
- ரிசர்ச்சு
- ரீல்
- வம்பு
- வலைச்சரம்
- வள்ளல்
- வவ்வால்
- வாதம்
- வால்
- விக்கன்
- விமர்சகன்
- விளையாட்டு
- வெங்காயம்
- வெட்டி
- BBthots
- Blogbharti
- Cinema
- E=mc^2
- Hawkeye
- India Uncut
- Lazygeek
- Sharanya Manivannan
- SMS
- Superstarksa
- Uberdesi
- Unplugged
தெரியாத செய்தியோடை- ஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.
ஒரு வார்த்தை ஐயா
ரமணாவுக்குத் தமிழில் பிடிக்காத வார்த்தை ‘மன்னிப்பு’ என்று அறிந்து கொண்டேன்.
அப்ப்டியே கொஞ்சம் சேரியமில்லாமல் யோசித்தால்…
1. ஜெயலலிதாவுக்கு ‘மன்னிப்பு’
2. நடிகனுக்கு ‘பரிசோதனை’
3. குஷ்பூவிற்கு ‘புனிதப் பூச்சு’
4. தங்கர் பச்சனுக்கு ‘சிகையலங்காரம்’
5. கமலுக்கு ‘கலைப்படம்’
6. தினேஷ் கார்த்திக்கிற்கு ‘தோனி’
7. தயாநிதி மாறனுக்கு ‘வாரிசு’
8. அன்புமணிக்கு ‘செஞ்சிலுவை’
9. பீஹாருக்கு ‘தேர்தல்’
10. சோனியாவுக்கு (காங்கிரஸ்) ‘முதல்வர்’
வலைப்பதிவர்கள் சிலரிடம் விசாரித்தபோது, ‘பெயர்’களை வெளியிட வேண்டாம் என்று வேண்டுகோளை வைத்து விட்டு, தங்களின் pet hate-ஐ பகிர்ந்து கொண்டார்கள்:
1. வாத்து
2. தமிழ்மணம்
3. ஜெயமோகன்
4. அறிஞர்
5. அமெரிக்கா
6. தொடுப்பு
7. நன்றி
8. தீபாவளி
9. ஐ.பி. முகவரி
பத்து கட்டளை
Posted in Uncategorized
தீபாவளி படங்கள்
தீபாவளிக்கு ஸ்வீட்கள் நிறைய கிடைக்கும். சன் டிவியில் தீபாவளி நிகழ்ச்சிகளில் சினிமா நிறைய கிடைக்கும். லேகியம் உடலுக்கு நல்லது என்று சொல்லிக் கொண்டே, மணக்க மணக்க நெய்யில் செய்வார்கள். தமிழ் பேசுகிறோம் என்று பட்டிமன்றம் பழைய மருந்தாக இருந்தது.
அசின் நடித்த படங்கள் தவிரவும் வேறு சில வந்திருப்பதை தெரிந்து கொள்ள நேரிட்டது.
எஸ்.பி.பி. தெலுங்கில் ‘ஸ்ரீவேங்கடேசா… ஸ்ரீனிவாசா‘ என்பது போல், ‘அது ஒரு கனாக்காலம்’ தனுஷ்ஷின் ‘கண்டக்டர் பொண்ணை யார் வெட்றா மாமே… யார் வெட்றா மாமே‘, தமிழ் கலாசாரத்திற்கு ஏற்பட்ட இழுக்கு என்று அ.ராமசாமி நடையில் விமர்சனம் எழுத தட்டச்சுப் பலகையை ரா…ரா… என்றது.
ஹரிணியின் ச்சிச்சீச்சிச்சீ பிரயோகத்தைக் கண்டவர்கள் எல்லாரும் சிங்காரவேல ‘ககாகிகீக்குகக்கேக்குக்கூகொக்கோகேக்கே’ போல் இன்ஸ்டண்டா பிடித்துக் கொண்டு ‘என்ன பழக்கம் இது… சின்ன புள்ள போல‘ என்று மஜாவாக்கினார்கள்.
ஜெயமோகன் வசனம் எப்படியிருக்கிறதாம்?
ஆறாம்திணை.காம் :: Cini News – Deepavali Padangal – கே.டி.ஸ்ரீ
சிவகாசி
‘திருப்பாச்சி’க்கு பிறகு விஜய் – பேரரசு கூட்டணியில் உருவாகியுள்ளது ‘சிவகாசி’. சிவகாசியில் விஜய்யுடன் முதன் முதலாக ஜோடி சேர்ந்து நடித்திருக்கிறார் அசின். அசின் மட்டுமல்லாது இப்படத்தில் நயன்தாரா ஒரே ஒரு நடனம் ஆடி அசத்தியிருக்கிறார்.
தங்கை சென்டிமெண்டை அடிப்படையாக கொண்டு தன்னுடைய முந்தைய படத்தை இயக்கிய இயக்குநர், இப்படத்தில் அம்மா – மகன் சென்டிமெண்டை வைத்து கதையை நகர்த்துகிறார். படத்தில் கீதா அம்மாவாக நடித்திருக்கிறார்.
விஜய், அசின், நயன்தாரா, கீதாவுடன் ராஜேஷ், அருண்குமார், எம்.எஸ். பாஸ்கர், முரளி மற்றும் சிட்டிபாபு ஆகியோர் நடித்திருக்கின்றனர். பிரகாஷ்ராஜ் இப்படத்தில் வில்லனாக வருகிறார்.
இப்படத்திற்காக சென்னையில் புகழ்பெற்ற தி.நகர் ரங்கநாதன் தெரு போன்ற ஒரு செட்டை வாகினி ஸ்டூடியோவில் அமைத்து அசத்தியிருக்கிறார் இயக்குநர். சூர்ய மூவிஸ் நிறுவனத்தினருக்காக ஏ.எம். ரத்தினம் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘சிவகாசி’க்கு ஸ்ரீகாந்த்தேவா இசையமைத்திருக்கிறார். ‘சந்திரமுகி’ புகழ் சேகர் ஜோசப் படத்திற்கான ஒளிப்பதிவை செய்திருக்கிறார்.
தீபாவளியின் இந்த ‘சிவகாசி’ வெடி தூள் கிளப்புமா?
சென்னையில் சிவகாசி திரையிடப்பட்ட அரங்குகள்: தேவி, தேவிபாலா, சங்கம், உதயம், மினி உதயம், அகஸ்தியா, மாயாஜல், வெற்றி, கங்கா, ராக்கி, தேவிகுமாரி, தியாகராஜா, சுந்தர், எம்எஸ்எம்.
மஜா
‘அந்நியன்’ வெற்றியை தொடர்ந்து விக்ரம் நடிப்பில் வெளியாகிருக்கிறது ‘மஜா’. மலையாளத்தில் மம்முட்டி, பிஜுமேனன் நடித்த ‘தொம்மனும் மக்களும்’ என்கிற வெற்றிப்படமே ‘மஜா’.
நாயகியாக நடித்திருக்கிறார் அஸின். பிதாமகனுக்கு ஒளிப்பதிவு செய்த பாலசுப்ரமணியன் இப்படத்திற்கான ஒளிப்பதிவை கவனிக்கிறார். வித்தியாசாகர் இசையை உருவான ‘மஜா’ அந்நியன் போலவே ஒரு பிரம்மாண்டமான தயாரிப்பாகும்.
பசுபதி, மணிவண்ணன், மலையாள படஉலகின் புகழ்பெற்ற நடிகர் பிஜுமேனன் வித்தியாசமான வேடத்தில் இப்படத்தில் நடித்திருக்கிறார்.
மஜா திரையிடப்பட்டிருக்கும் திரையரங்குகள்: சத்யம், ஆல்பர்ட், அபிராமி, பாரத், ஸ்ரீபிருந்தா, காசி, பிரார்த்தனா டிரைவ்இன், ஆராதனா, மாயாஜால், சாலிகிராமம், எஸ்.எஸ்.ஆர். பங்கஜம், வித்யா, வேலன், லட்சுமி
கஸ்தூரிமான்
புகழ்பெற்ற மலையாளபட இயக்குநர் லோகிதாஸ் முதன்முதலாக ‘கஸ்தூரிமான்’ மூலம் தமிழ்திரைப்பட உலகில் காலடி எடுத்து வைக்கிறார். இவரின் மலையாள படமான ‘கஸ்தூரிமானை’ அதே பெயரில் தமிழில் தயாரித்திருக்கிறார்.
மீராஜாஸ்மீன் நாயகியாக நடிக்கும் இப்படத்தின் கதை அவரைச் சுற்றியே பின்னப்பட்டுள்ளது. படத்தில் பிரசன்னா நாயகனாக நடிக்க, மீரா ஜாஸ்மின் நாயகியாக நடிக்கிறார்கள். வழக்கம் போல் காதல், அதனால் ஏற்படும் சிக்கல்கள் என்று கதை செல்கிறது.
படத்தைப் பற்றிய முக்கிய செய்தி என்னவென்றால் −ப்படத்திற்கான வசனத்தை எழுதுகிறார் பிரபல எழுத்தாளர் ஜெயமோகன்.! ‘கஸ்தூரிமான்’ மூலம் தமிழ்த்திரைப்பட உலகில் முதன்முதலாக காலடி எடுத்து வைக்கிறார் ஜெயமோகன்.
அது ஒரு கனா காலம்
பாலுமகேந்திரா இயக்கத்தில் வெளிவருகிறது ‘அது ஒரு கனா காலம்’. தனுஷ், பிரியாமணி நடிக்கின்றனர். தனுஷ் கதாநாயகனாக நடிக்கும் இப்படம் தனுஷிற்கு மீண்டும் தமிழ் திரைப்பட உலகில் நல்ல இடத்தை தேடி தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பல்வேறு தடைகளையும் தாண்டி ‘அது ஒரு கனா காலம்’ தீபாவளிக்கு தமிழக திரையரங்குகளில் வெளிவரவிருக்கிறது.
சென்னையில் திரையிடப்பட்ட திரையரங்குகள்: உட்லாண்ட்ஸ், சிம்பொனி, அபிராமி காம்ப்ளக்ஸ், பேபி ஆல்பர்ட், கமலா, எம்.எம். தியேட்டர்.
tamilcinema.com:: பம்பரக்கண்ணாலே
ஸ்ரீகாந்த் படமாச்சே, மெல்லிய காதலாக இருக்கும் என்று உள்ளே போனால், ஆயிரம் வாலா பட்டாசை அசராமல் கொளுத்தி போடுகிறார்கள். ஜில்லாலக்கடி ஜில்லாக்கோ, திருப்பி போடு மல்லாக்கோ என்று குஷியாட்டம் போடுகிறது கோஷ்டி மொத்தமும். அட…ஸ்ரீகாந்த் படங்களில் இது வேற ரகமுங்கோ…
குடியிருப்பு பெண்களுக்கு சைக்கிள் கற்று கொடுப்பதும், அதை தொடர்ந்து வருகிற டயலாக்குகளும் முனியாண்டி விலாசின் அசைவ மெனு! க்ளைமாக்சில் நடனம்-சண்டை-பாடல் என்று புதுமையான கலவையை தந்திருக்கிறார் இயக்குனர் பார்த்தி பாஸ்கர்.
Posted in Uncategorized
மலரும் ஆலோசனைகள்
:: நினைவலை, நனவோடை, மலரும் நினைவுகள், ‘அந்த நாள் ஞாபகம்’ என்று பல பெயரில் அழைத்தாலும், வாழ்ந்த காலத்தை அசை போடுதல் மிகவும் விருப்பமான விஷயம். நிகழ்காலத்தை விட்டுவிட்டு, இனிமையான பழங்காலத்திற்கு ஓடிப் போக முடியும். கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்த கதையை பகிர முடியும். தனக்கு மட்டும் உரியதான அனுபவங்களை மற்றவர்களுக்கு சொல்ல முடிகிறது. எல்லாவற்றையும் விட நீங்கள் வாழ்ந்த கணங்களில் தவறவிட்டதை கண்டெடுக்க ‘டயரி’ உதவுகிறது.
எல்லோரும் அலையடித்தாலும், போரடிக்காமல் விரும்பிப் படிக்க வைக்க தலை பத்து ஆலோசனைகள்:
1. எழுத ஆரம்பிப்பதற்கு முன் எதை குறித்து பகிர்ந்து கொள்ளப் போகிறோம் என்பதை முழுமையாக அசை போடாதீர்கள். ரத்து செய்யப்பட்ட விமானப் பயணியை போல எழுத்தை அமைத்துக் கொள்ளலாம். செல்ல வேண்டிய இடம் தெரியும். ஆனால், எப்படி போகப் போகிறோம், எங்கே விமான கனெக்ஷன் கிடைக்கும் என்ற துல்லிய விவரங்கள் தெரிந்து கொள்ள வேண்டாம்.
2. காலவரிசைப்படி எழுத வேண்டாம். முதலில் இது நடந்தது, அதன் பின் இவ்வாறு என்று தொடங்குவதற்கு பதிலாக, மிகவும் முக்கியமாக கருதும் நிகழ்வில் ஆரம்பிக்கலாம். ரசமான சம்பவத்தில் தொடங்கி, அதை விவரித்துத் தொடர்ந்தால், வாசகருடன் தொடர்பை ஏற்படுத்துவது எளிமையாகும்.
3. கணினியில் எழுதுவதில் எண்ணவோட்டங்கள் தடைப்படலாம். நாம் நினைப்பதை அப்படியே, நாம் சொல்வதை அவ்வாறே, நாம் கண்டதை கண்டபடியே கொண்டு வர முடியாமல் போகும். டேப் ரிகார்டரில் பதிவு செய்து கொள்ளலாம். அல்லது வெள்ளைத்தாளில் நமக்குப் பிடித்த பிள்ளையார் சுழி, 786 எல்லாம் போட்டு துவங்கி, பேனா கொண்டு எழுதலாம். கணினி எழுத்தில் தோன்றும் அயர்வை, ஒரே விதமான உணர்ச்சியற்ற நடையைக் கொண்டு உணர்ச்சிபூர்வமான சம்பவங்களை விவரிப்பதை, தவிர்க்க வேண்டும்.
4. சந்தி மிகும், மிகா இடங்கள், அ·றிணை, பன்மை ஒற்றுமைகள், தூய தமிழ் சொல் என்றெல்லாம் யோசனையை அலைபாய விட வேண்டாம். முழுவதுமாக எழுத வேண்டியதை கொட்டிய பின், இரண்டு நாள் கழித்து, பிழை திருத்தம், பொருத்தமான தமிழ் பதங்கள், இலக்கண திருத்தங்கள் போன்றவற்றை செய்யத் தொடங்கலாம்.
5. #2-வில் சொன்னபடி சுவாரசியமான சம்பவங்களை நினைவு கூர்ந்த பின், அவற்றை முறையாகத் தொகுக்கவும். கோர்வையில்லாத கூட்ஸ் ட்ரெயினின் பெட்டிகளைப் போல் நிகழ்வுகள் தோன்றினாலும், அதன் பின்னணியில் இருந்து ‘சிக்கு புக்கு’ சத்தம் தாளம் பிசகாமல் எழுந்து, தண்டவாளமாக வாசகனை கூட்டிச் செல்ல வேண்டும்.
6. முதல் முறை எழுதிய நினைவலையை அலசி திருத்தும்போது, மீண்டும் படித்து பார்க்கும்போது, அனுபவத்தின் பல பரிமாணங்களை உணர முடியலாம். வெறுமனே கதையை சொல்லாமல், தவறவிட்ட ஆழ்நிலை தரிசனங்களை வாசகருக்கு கொடுக்க வேண்டும்.
7. உண்மையை எழுத வேண்டும். எழுதும்போது நம்மை எதிர்பாராததை கண்டுகொள்ள நேரிடலாம். அதிர்ஷ்டவசமாக கண்டுபிடித்த புதையல்களை சொல்லுங்கள்.
8. கட்டுரைகளில், கதைகளில் வினையுரிச்சொல், இடைச்சொல், பெயருரிச்சொல், பண்புகொள்பெயர் என்று போட்டு நிரப்புவது சுவாரசியமாக்கலாம். ஆனால், நினைவலைகளில் ஒவ்வொரு பெயர்ச்சொல்லுக்கும், வினைச்சொல்லுக்கும் அடைமொழி கொடுப்பது வீரியத்தைக் குறைத்துவிடும்.
9. அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுதல் மட்டுமே போதுமானது. வாசகர் எவ்விதம் பிரதிபலிக்க வேண்டும், எவ்வாறு உணர வேண்டும், என்ன யோசிக்க வேண்டும் என்று உபதேசிக்க வேண்டாம். அனுபூதியைக் கொடுத்தவுடன் நம்முடைய கடமை முடிந்து போனது.
10. எழுதிய முடித்தவுடன், எவருடனும் உடனே பகிர்ந்து கொள்ள வேண்டாம். ஒரு முறை சரி பார்த்து, இரு முறை திருத்தி முடிக்கும் வரை பொறுமை காக்கவும். அதன் பின் மின்னஞ்சலையும், வலைப்பதிவையும் அனுப்பவும்.
இவ்வளவும் யோசித்து, அனுபவங்களையும் சுவாரசியமாக மீண்டும் அனுபவிக்க வேண்டும்.
Posted in Uncategorized
பதித்தல்
சு.ரா.வுடனான முதல் கலந்துரையாடல் – III
அண்ணாமலை: கலைஞருக்கு மட்டும் இல்லை. பொதுவாகவே தமிழ்நாட்டுல our public posture is different from our private choice. (சு.ரா. சிரிக்கிறார்.) இப்போ private choice-னு வரும்போது கல்யாணமோ, ஜாதியோ எதுனாலும், public-ல ஜாதி வேணாம்னு எல்லாரும் பேசுவாங்க. ஆனா, private life-க்கு வரும்போது வேற மாதிரி. அதே மாதிரி நாங்க சர்வே எத்தனையோ பண்ணியிருக்கோம். அந்த சர்வேல தமிழ் மீடியம் வேணும்னுதான் மெஜாரிட்டி சொல்வாங்க. ஆனால், குறிப்பா உங்க பிள்ளையை எங்கே அனுப்புவீங்கன்னா, வேற மாதிரி பதில் வரும். பொதுவா – தமிழ் மீடியம் வேணுமான்னா, வேணும், வேணும், வேணும். Symbolic-ஆ சொல்லும்போது எல்லாம் ஒத்துக்குவாங்க. ஆனால், private action-னு வரும்போது we behave differently.
சு.ரா.: கருணாநிதியின் நெகட்டிவ் சைட்ஸ் ஒண்ணுமே நான் மறுக்கலை. ஆனா – அவருக்குப் பாசிட்டிவ் சைட்ஸ் நிறைய உண்டு. இந்த அம்மாவுக்கு ஒண்ணுமே கிடையாது.
அண்ணாமலை: DMK has become a party of upper-caste non-brahmins. So for the lower caste they were looking for a political platform and MGR provided it.
சு.ரா.: சிறுபத்திரிகைக்காரங்க – இப்படி ஒண்ணு நடந்ததாவே அவங்களுக்குத் தெரியாது. அவங்களுக்குனு சொந்தமா ஒரு உலகம் இருக்கு. சின்ன குட்டி உலகம். ஒரு டாய்லெட் அளவு இருக்கும். அந்த உலகத்துக்குள்ளே அவன் சின்ன சின்ன சண்டைகள் போட்டுக் கொண்டிருப்பானே ஒழிய – இந்த டாய்லெட்டைவிட – ஒரு பெரிய உலகம் இருக்கு. அங்க பல காரியங்கள் நடக்குது. அந்தக் காரியங்கள் நம்ம வாழ்க்கையைப் பாதிக்குது – நீங்க டாய்லெட்ல போய் ஒளிஞ்சிண்டாலும் உங்க வாழ்க்கையை அது பாதிக்காம இருக்காது. So, அப்படிங்கற ஒரு consciousness நம்ம சிறுபத்திரிகைக்காரங்களுக்கு என்னிக்குமே இருந்ததில்லை.
சாமிநாதன்: ஜெமினி ஸ்டுடியோவைப் பத்தி எழுதியதால்தான் அசோகமித்ரனுக்கு வந்து ஆனந்தவிகடன்லே சான்ஸே கிடைக்காது.
சாமிநாதன்: ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்போது – நிறைய பேரு தீக்குளிச்சாங்க இல்லையா? தீக்குளிச்ச ஒரு family மட்டும் trace பண்றோம்னு வச்சிக்குங்க. இந்த மாதிரி bread winner செத்ததால, அவங்க என்னென்ன கஷ்டப்பட்டாங்க – இன்னைக்கு என்ன நிலையிலே இருக்காங்க என்பதை trace பண்ணி, அவர்கள் நன்றாக இல்லையென்றால் – அதைக் கதையாகவோ படமாகவோ எடுக்கிறோம் என்றால் – அதை திராவிட இயக்கம் விடுவாங்களா?
சு.ரா.: ரொம்ப opinionated அவர் (ஜெயகாந்தன்). அவருக்கு வந்து – ஒரு சுதந்தரமான சஞ்சாரமே கிடையாது. கிரியேட்டிங் என்கிற ப்ராஸஸை வந்து – நீங்க ஒரு சுதந்தரமான சஞ்சாரத்துக்காக – அதுக்காக நீங்க எல்லாமே சுதந்தரமா போய்விடலாம் என்ற அர்த்தம் இல்லே – but நீங்க உங்களை டிஸ்கவர் பண்றீங்க. உங்களோட உண்மையான அபிப்ராயம் என்ன என்று நீங்க டிஸ்கவர் பண்றீங்க. அதற்கான ஒரு ப்ராஸஸை மேற்கொள்றீங்க. இந்த விஷயமே அவர்கிட்டே கிடையாது. அவர் வந்து – ஏற்கனவே society-ல இருக்கக் கூடிய பலவகையான அபிப்ராயங்களை – பல முக்கியமான ஆட்களோட அபிப்ராயங்களைக் கதையா – ஐடியாஸை கதையா transform பண்ணறது என்கிறது எனக்கு ஒத்துக்கறது இல்லே. எனக்கு எக்ஸ்பீரியன்ஸ், இமேஜினேஷன் எல்லாம் எனக்கு முக்கியமான விஷயம். அதன்மூலம் அவன் அடையக்கூடிய – அவனுக்கே தெரியாமல் அவன் அடையக்கூடிய – அவனுக்கே தெரியாமல் அவன் அடையக்கூடிய விஷயங்கள் இருக்கே – அதெல்லாம் ரொம்ப முக்கியமான விஷயம். அதுதான் கிரியேட்டிவ் ரைட்டருடைய முக்கியமான குவாலிட்டி. அந்தக் குவாலிட்டி அவர்கிட்ட இல்லை. social-ஆ அவர் ரொம்ப நல்லா function பண்றார். அதைப் பத்தி நான் question பண்ணல. அவருடைய ஐடியாஸ் எல்லாம் question பண்ண முடியாது.
Posted in Uncategorized
காலவரிசை
தமிழ் வலைப்பதிவுகள் & தமிழ்மணம் – காலவரிசை
2003
Tamil Bloggers List | Valaippoo
2004
குடில் – சுரதா
தமிழ்மணம்
ஆக. 23, 2004 01:02:37
வலைப்பதிவுகளுக்காக ஒரு மேடைத்தளம் – காசி
ஆக. 23, 2004 21:49:30
தமிழ்மணம்.காம் – ஒரு விளக்கம் – காசி
ஆக. 24, 2004 11:57:49
இலகுவான திரட்டுப் பட்டியல் – காசி
ஆக. 24, 2004 11:51:00
விருப்பப் பட்டியல் – ‘தமிழ் வலைப்பதிவுகள் அரங்கம்’ – பாலாஜி
ஆக. 28, 2004 09:54:10
தமிழ்மணம் தளத்துக்கு தொடுப்புக் கொடுங்கள்
செப். 12, 2004 22:55:40
தமிழ்மணம் தளத்தில் சில மாறுதல்கள் – காசி
நவ. 11, 2004 21:23:53
தமிழ்மணத்தின் முதல் 100 நாட்கள் – காசி
2005
மார். 03, 2005 11:02
புதிய மாற்றங்கள் – சில விளக்கங்கள் – காசி
மார். 08, 2005 11:33
தொட்டால் பூ மலரும் – காசி
மார். 08, 2005 15:34
*The* List – காசி
மார். 18, 2005 15:05
போலீஸ் வேலை – காசி
ஏப். 01, 2005 10:10
நினைவூட்டல் – காசி
ஜூலை 16, 2005 06:01
நடப்பிலில்லாத பதிவுகள் விலக்கம் – காசி
ஆக. 23, 2005 03:54:42
தமிழ்மணம் – 365 – காசி
அக்டோபர் 2005
அக். 14, 2005 01:51:26
தமிழ்மணம் தள நடவடிக்கைகள் பற்றி சில அறிவிப்புகள். – காசி
அக். 14, 2005 23:01:26
குடியரசுத்தலைவருக்கு அனுப்பிய கடிதம் – காசி
அக். 16, 2005 17:34
குசும்புதலைவருக்கு அனுப்பிய மடல் – குசும்பன்
அக். 18, 2005 12:19
நன்றி பொறுக்குதிலையே – குசும்பன்
அக். 18, 2005 19:37
மன்றம் முகமூடி
அக். 18, 2005 20:40:52
ஒரு அறிவிப்பு – காசி
அக். 18, 2005
ஓர் அறிவிப்பு – பிகே சிவகுமார்
அக். 18, 2005 23:42
அந்தக் காலத்தில் RSS இல்லை – பாலாஜி
அக். 19, 2005 09:28
ஏன்? ஏன் ?? – News From Shallow End of Gene Pool
அக். 19, 2005
தமிழ்மணமும், தணிக்கையும்! – அருண்
அக். 19, 2005 10:27
காசி,வணக்கம்! – ப.வி.ஸ்ரீரங்கன்
அக். 19, 2005 13:51:06
தமிழ்மணம் திரட்டும் பட்டியலில் உள்ள/இல்லாத பதிவுகள் – காசி
அக். 19, 2005 17:22
தமிழ்மணம் அறிவிப்பு – இட்லி வடை
அக். 19, 2005 17:54
“ஒரு” தமிழ் மணத்தின் உதிர்வு. – மயூரன்
அக். 19, 2005 18:17
தணிக்கைகளற்ற ஓர் திரட்டி அமைப்பு – வாய்ஸ் ஆன் விங்ஸ்
அக். 19, 2005 18:53
தமிழ்மணம் குறித்து – சன்னாசி
அக். 20, 2005 09:05
கட்டுப்பாடும் சில கருத்துக்களும் – சின்னவன்
அக். 20, 2005
சில விளக்கங்கள்! – அருண்
அக். 20, 2005
பெட்டிக்கடை – சுரேஷ்
அக். 20, 2005 14:57
தமிழ்மண தணிக்கையும் வலைப்பதிவர் பிணக்கங்களும் – அனுராக்
அக். 21, 2005
தமிழ்மணத்திற்கு நன்றி – முகமூடி
அக். 21, 2005 01:40
காசியின் தமிழ்மண அறிவிப்பு பற்றி – கல்வெட்டு
அக். 21, 2005 04:00
வலைப் பூக்களில் என்ன எழுதலாம், என்ன எழுதக்கூடாது! – டி.பி.ஆர். ஜோசஃப்
அக். 21, 2005 17:14
தமிழ்மணத்திற்கு விழும் அடி – செல்வராஜ்
அக். 21, 2005 16:27
தமிழ்மணம் டாப் 10 – இட்லி வடை
அக். 23, 2005 06:27
தமிழ்மணம் சிந்தனைகள் தொடர்ச்சி – செல்வராஜ்
அக். 23, 2005 22:03:58
சில எண்ணங்கள் – காசி
Posted in Uncategorized
தமிழோசையில் திருமா
கேள்விகள் சில:
Posted in Uncategorized
சனி #8
#1: மறுப்புக்கூற்று(கள்): இந்தப் பதிவை படிப்பதால் கூட்டல் கழித்தல் மேலான நம்பிக்கைகள் மூடமாகலாம். உங்கள் உடைந்த ஸ்கேலைக் கொண்டு ரிச்டர், சனியை சுற்றியிருக்கும் தூசு வட்டம் ஆகியவற்றை அடிக்க நேரிடலாம்.
#2.
Yarl.com :: எண் சோதிடம்: இந்திய எண் சோதிடர்கள் ஒவ்வொரு எண்ணுக்கும் ஒவ்வொரு கோளை ஒதுக்கி பலன் சொல்கிறார்கள்.
1 – ஞாயிறு,
2 – கேது,
3 – குரு,
4 – இராகு,
5 – புதன்,
6 – சுக்கிரன் (வெள்ளி )
7 – சந்திரன்,
8 – சனி,
9 – செவ்வாய்
#4.
திருப்பாவை: சில விளக்கங்கள் – ஹரி கிருஷ்ணன் – (maraththadi.com): “பேர்த்து என்ற சொல்லுக்கு ‘மறுபடியும்’ என்று ஒரு பொருள் வரும். பேர்த்தும். ‘பின்னைப் பழம்பொருட்கும் பேர்த்துமப் பெற்றியனே’ என்று திருவாசகம் சொல்லும். இங்கே இருக்கும் ‘பேர்த்து’ வேறு. பெயர்த்து என்பதன் வழக்கு வடிவம். கலோக்கியல். ஓரிடத்தை விட்டு இன்னோரிடத்திற்கு அசைவது பெயர்தல். இடப் பெயர்ச்சி. குரு பெயர்ச்சி, சனி….. இத்யாதி.”
#5. 24. தமிழச் சாதி :: சி. சுப்ரமணிய பாரதியார் பாடல்கள் – மதுரை திட்டம்:
…..
விதியே தமிழச் சாதியை எவ்வகை
விதித்தாய் என்பதன் மெய்யெனக் குணர்த்துவாய்.
ஏனெனில்
சிலப்பதி காரச் செய்யுளைக் கருதியும்
திருக்குற ளுறுதியும் தெளிவும் பொருளின்
ஆழமும் விரிவும் அழகும் கருதியும்
எல்லை யொன் றின்மைஎ எனும் பொருள் அதனைக்
கம்பன் குறிகளாற் காட்டிட முயலும்
முயற்சியைக் கருதியும் முன்புநான் தமிழச்
சாதியை அமரத் தன்மை வாய்ந்தது என்று
உறுதிகொண்டிருந்தேன். ஒருபதி னாயிரம்
சனிவாய்ப் பட்டும் தமிழச் சாதிதான்
உள்ளுடை வின்றி உயர்த்திடு நெறிகளைக்
கண்டு எனது உள்ளம் கலங்கிடா திருந்தேன்.
…..
#6. ரா.பார்த்திபனின் கிறுக்கல்கள்
தோஷம்: சனி தோஷம்
பரிகாரம்: ஆஞ்ச நேயருக்கு துளசி மாலை போட்டு அபிஷேகம் செய்ய வேண்டும்.
என் பிரகாரம்: மன வளர்ச்சி குன்றியவர்களுக்கு, மருந்து மாத்திரை வாங்கித் தர வேண்டும்.
#7.
ஔவையார்:
ஆத்திசூடி – உயிர்மெய் வருக்கம் :: 16. சனி நீராடு.
#8. உலகத்தை அதிக அளவு நாசமாக்கிய பூகம்பங்கள்
அ) பாகிஸ்தான் (அக்ட். 8, 2005) – 80,000 இறப்பு
ஆ) இந்தோனேஷியா (டிச. 26 [2+6 ==8], 2004 – 280,000 (சுனாமியும் கூட வந்தது)
இ) தென்கிழக்கு ஈரான் (டிச. 26, 2003) – 26,200 இறப்பு
ஈ) இந்தியா (ஜன. 26, 2001) – 20,000 இறப்பு
உ) துருக்கி (ஆக. 17 [1+7 == 8], 1999 – 17,000 இறப்பு
ஊ) நார்த்ரிட்ஜ், கலிஃபோர்னியா (ஜன. 17, 1994) – 60 இறப்பு (இருபது முதல் நாற்பது பில்லியன் வரையிலான சேதங்கள்)
Posted in Uncategorized
திருப்பூர் கிருஷ்ணன்
எனது குறிப்பேடு :: அமுதசுரபி – Sify.com
சீரும் சிறப்பும்
தினமணி கதிரில் நா.பா. ஆசிரியராக இருந்த காலம். திடீரென்று என்னை அழைத்தார் நா.பா. அன்று வந்த ஒரு தபாலைக் கையில் கொடுத்தார். “என்ன அழகாக இந்த வெண்பாவை எழுதியிருக்கிறார் பாருங்கள்!” என்று அதில் எழுதப்பட்டிருந்த வெண்பாவைக் காண்பித்துக் கொண்டாடினார். (இப்போது அமுதசுரபியில் வெண்பாப் போட்டி தொடங்கப்பட்டிருக்கிறது. அப்போது கதிரில் வெண்பாப் போட்டி நடந்து கொண்டிருந்தது.)
மரபுக் கவிதையில் நா.பா.வைக் கவர்வது கடினம். அவரே ஒரு பண்டிதர். சுலபத்தில் எதையும் ஏற்கமாட்டார். நா.பா. பழந்தமிழ் இலக்கியம் தொடர்பான சில முற்போக்குச் சிந்தனைகளை சுதேச மித்திரனில் ‘பண்டித. நா. பார்த்தசாரதி‘ என்ற பெயரில் எழுதியதுண்டு. அப்போது அதை எதிர்த்தவர்கள் “பண்டிதனா பார்த்தசாரதி?” என்று கேட்டு எதிர்த்ததாக சுதேசமித்திரன் சீனிவாசன் என்னிடம் சொன்னதுண்டு.
நா.பா. ஒரு வெண்பாவின் அழகில் சொக்குவது என்பது சாமானியமல்ல. “ஒவ்வொரு சீரும் எவ்வளவு அழகாக வந்து விழுந்திருக்கிறது பாருங்கள்! இந்த வெண்பாவை இதை எழுதிய எழுத்தாளரின் புகைப்படத்துடன் வெளியிடுங்கள்!” என்று கூறினார் நா.பா. ஓவியர் தாமரை லேஅவுட் செய்ய நா.பா. விரும்பியபடியே அந்த வெண்பா அதை எழுதியவரின் புகைப்படத்துடன் வெளியிடப்பட்டது.
“வேண்டாம் வரதட்சிணை”‘ என்ற ஈற்றடிக்குத்தான் நேரிசை வெண்பா எழுதி அனுப்பியிருந்தார் அந்தப் பிரபல எழுத்தாளர். அவரது இலக்கியப் புலமை பற்றி அறிவேன். அவரின் இலக்கணப் புலமையை அப்போதுதான் அறிந்து கொண்டேன். பின்னாளில் அம்பலம் இணைய இதழில் அவரிடமே பயிற்சி பெறும் வாய்ப்பும் பெற்றேன். அவர் – என் அபிமான எழுத்தாளர்களில் ஒருவரான சுஜாதா. அவர் எழுதிய வெண்பா:
பத்துபவுன் தங்கம் பளிச்சென்ற கல்வளையல்
முத்திலே சின்னதாய் மூக்குத்தி – மத்தபடி
‘பாண்டு’வைத்து ஊர்கோலம் பாட்டு இவைதவிர
வேண்டாம் வரதட்சிணை!
“நூறு மலர்களின் பெயர்களைக் கடகடவென்று மேடையில் ஒப்பிப்பீர்களே? இப்போதும் அந்த நூறு மலர்களும் ஞாபகமிருக்கிறதா?” கலகலவென மகிழ்ச்சியோடு சிரித்த சிவகுமார், “மனசுக்குள்ளேயே நிரந்தரமாய் மணம் வீசும் மலர்கள். அவை மனத்தை விட்டு எப்படிப் போகும்!” என்றார். அன்றுகண்ட மேனிக்கு அழிவில்லாத அதே இளமை, உற்சாகம், சுறுசுறுப்பு. நெறியோடு வாழ்வதால் விளைந்த தெளிவும் மலர்ச்சியும் அவர் முகத்திலும் பேச்சிலும்.
சில எழுத்தாளர்கள் இப்படித்தான்
கடுகடுவென்று இருக்கும் சில எழுத்தாளர்களைப் பார்க்கும்போது இரக்கம் ஏற்படுகிறது. மற்றவர்களிடம் அன்பு காட்டக்கூடத் தெரியாத இவர்கள் எழுதி என்ன செய்யப் போகிறார்கள் என்ற அலுப்பும் தோன்றுகிறது. சில எழுத்தாளர்களின் தற்பெருமையோ தாங்க முடியவில்லை. ஓர் எழுத்தாளரைச் சந்தித்தேன். கால்மணி நேரம் தன்னைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தார். நான் ஊம் கொட்டு வதைக் கூட நிறுத்திவிட்டேன். என் முகத்தில் அலுப்பின் ரேகைகளைப் படித்துவிட்ட அந்த எழுத்தாளர் என்ன சொன்னார் தெரியுமா? “கால்மணி நேரமாக என்னைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கிறேன். உங்களுக்கு அலுப்பாகத் தான் இருக்கும். சரி. இனி ஒரு கால்மணி நேரம் நீங்கள் என்னைப் பற்றிப் பேசுங்கள்!”
நன்றி: சிஃபி.காம்
Posted in Uncategorized
நவராத்திரி ப்ராகென்ஸ்டெய்ன்
பாட்டு பாடு அல்லது வேஷம் கட்டு
அன்று சென்றதும் அதே சுண்டலுக்காக
(சச்சச்சா)

இங்கு வந்ததும் இதே மிட்டாய்களுக்காக
எங்கு போனாலும் ஒரே பாடல்
Trick or Treat
Posted in Uncategorized













