நேற்று நாங்கள் கிளி வாங்கினோம்

ரொம்ப நாளாகவே வேண்டுகோள் பட்டியலில் இருந்தது. நேற்று நிறைவேறியது.

சக்கர வளையத்தில் சுற்றித்தீர்க்கும் வெள்ளெலி, பொசுபொசு மொசக்குட்டி, சாம்பல் நிறத்திலொரு பூனை, அடக்கி வாசித்து மிரட்டும் உம்மணாம்மூஞ்சி நாய்; எல்லாவற்றுக்கும் நடுவே ஃப்ரென்ச் கிஸ் அடுத்துக் கொண்டு கிளிக்கூண்டு.

இரண்டு கிளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டது. ஒன்று மஞ்சள் கலந்த பச்சை. மற்றொன்று வெளிர் நீலம்.

அதற்குத் தேவையான உணவு; காலைக்கடன்களை மறைக்க சோள வஸ்து; விளையாட கிண்கிணிகள்; அடைத்து வைக்க கூண்டு. மேலும் சில விநோதப் பொருட்கள் வாங்கப்பட்டது.

கடையில் இருந்தவரை ‘லவ் பேர்ட்ஸ்… லவ் பேர்ட்ஸ்‘ பாடல் போல் ‘கீக்கீக்கீ’வென்று கத்திக் கொண்டிருந்ததாக எண்ணம். வீட்டுக்கு வந்தவுடன் ‘குயிலப் பிடிச்சு கூட்டில் அடைச்சு கூவச் சொல்லுகிற உலகம்‘ பிரபு மாதிரி இறுக்கமாக, இல்லாத இறக்கையை படபடத்து, உணவை சீந்தாமல், தண்ணீர் பருகாமல் சத்தியாகிரக கோலம்.

நிறைய பூனை வளர்த்திருக்கிறேன். நாய் வைத்துக் கொண்ட அனுபவமும் உண்டு. ஐந்து மீனை தொட்டியில் நீந்தி மகிழ்வதைப் பார்க்க நினைத்து, நாளுக்கு இரண்டாக சாகடித்து, மீன் எலும்புகளைப் பொறுக்கியதும் நிகழ்ந்திருக்கிறது.

கிளியை வளர்த்துப் பூனை கையில் கொடுக்கும் பழமொழியை நான் மனைவியிடம் நினைவு கூற, அவளும் ‘என் விஷயத்தில் கிளியை வளர்த்து யானை கையில் கொடுத்துட்டாங்க’ என்கிறாள்.

சாப்பாடு புத்தம்புதுசாகப் போட்டால்தான் சீந்துகிறார்கள். ஒரு மணி நேரம் வட்டிலில் காய்ந்துவிட்டால் ஃப்ரிட்ஜில் வைக்காத பழைய சோற்றை சீந்தாத என்னுடைய அந்தக்காலத்தை நினைவுறுத்தும் பட்சிகள்.

பழியாய் பவளவாய் கண்டது போதும் என்று மின்னஞ்சல் பக்கம் பார்க்க சென்றால், நண்பரிடமிருந்து ‘கிருஷ்ணம்மாளுக்கு பணம் கொடுக்கறேன்னியே… அனுப்பியாச்சா?’ என்னும் நினைவூட்டல். ‘பூனை நாயும் கிளியும் கூட மனிதர் மடியிலே‘ என்று கமல் பாடும் நேரம் இது.

Hazaaron Khwaishein Aisi பார்த்தால் கூட அன்னப் பறவையாக சித்ரா சிங்கை மட்டும் பால் பிரித்து மேயும் மனப்பான்மை, சுயவிமர்சனம் செய்தவுடன் அடங்கிப் போகிறது. அதை வைத்துப் பதிவெழுதும் எண்ணம் உதிக்கிறது.

இப்போதைக்கு தீராத வினா: ’24×7 தேமேயென்று தனியே வாளாவிருக்கும் இரண்டும் என்ன யோசிக்கும்?’

  • நம்மை ஏன் கூண்டு விட்டு கூ(ண்)டு மாற்றுகிறார்கள்?
  • பழைய தோழர்(கள்) என்னவானார்?
  • பக்கத்தில் உட்கார்ந்து பார்ப்பதில் இவனுக்கு என்ன கிட்டுகிறது?
  • வெளியே போனால் சோறு கிடைக்குமா?

தொடர்பான இன்றைய நியு யார்க் டைம்ஸ் பத்தி:

Should Most Pet Owners Be Required to Neuter Their Animals? – New York Times

By VERLYN KLINKENBORG
When it comes to pets, Americans are lost in a seemingly endless act of transference.

We expect to find as much innocence in our pets as we do in newborn children, which may be one reason why so few older pets are adopted from shelters.

We want the pleasures of neoteny — the adorable sustained appearance of infancy — in part because it helps us forget how much responsibility is involved in owning and training.

Americans are consumers of pets just as we are consumers of everything else.


1. Mapping a political era2. An Ideological Reading of Hazaaron Khwaishein Aisi

3. Join the fight

4. lazygeek.net: Hazaaron Khwaishein Aisi

5. Hazaaron Khwaishein Aisi (Hindi) « One Small Voice

6. The Meltdown Chronicles: Hazaaron Khwaishein Aisi

7. Sen’s Spot: Hazaaron Khwaishein Aisi(Thousand Desires such as this) – part1

8. Ruminations of a meandering mind: Hazaaron Khwaishein Aisi

9. As you like it…: Hazaaron Khwaishein Aisi (HKA) *****

Flickr Portraits – Interesting Photos

ஃப்ளிக்கரில் Portrait என்று தேடியபோது அகப்பட்டதில் பிடித்தவை:

slide show portrait favorites flickr interesting

 போட்டி விவரங்கள்

சிவாஜியினால் வாய்ப்பை இழந்த நடிகை

தமிழில் மட்டும் கிட்டத்தட்ட 150 படங்கள். சிவாஜியுடன் 20 படங்கள், ஜெய்சங்கருடன் 20 படங்கள், கமலுடன் 32 படங்கள், ரஜினியுடன் 30 படங்கள் என்று முன்னணி நட்சத்திரங்களின் நடித்தவர்.

ஜெமினி, ஏவி.எம். போன்ற பெரிய சினிமா நிறுவனங்களில் ஆஸ்தான நடனக் கலைஞர் என்ற அந்தஸ்துடன் இருந்த பிரபல நடனமேதை கே.என்.தண்டாயுதபாணி பிள்ளை, இவரின் பெரியப்பா. எம்.ஜி.ஆரின் நெருங்கிய நண்பராகவும் தண்டாயுதபாணி இருந்தார். நடன அமைப்பாளர்கள் சங்கத்தில் இப்போதும் கே.என்.தண்டாயுதபாணி பிள்ளையின் படம் இருக்கிறது.

பெரியப்பாவின் நடனப்பின்னணியில் இவரின் அப்பா பக்கிரிசாமியும் நடனக் கலைஞர். அம்மா கிரிஜாவும் நடனத்தில் தேர்ந்தவர்.

ஜெமினி தயாரித்த ‘மூன்று பிள்ளைகள்’ படத்தில் பக்கிரிசாமி நடன இயக்குனராக இருந்து, கிரிஜாவை நடனமாடச் செய்திருக்கிறார்.

டைரக்டர் பி.மாத வன் இயக்கிய ‘முருகன் காட்டிய வழி’ என்ற படம் மூலம்தான் சினிமாவில் அறிமுகமானார். நிஜப்பெயர் அலமேலு. சினிமாவுக்காக டைரக்டர் பி.மாதவன் சூட்டிய பெயர் என்ன?

வரலாற்றுச் சுவடுகள் : திரைப்பட வரலாறு (716)

Nina Simone – Backlash Blues

NPR : Remembering Singer Nina Simone

Mr. Backlash, Mr. Backlash
Just who do think I am
You raise my taxes, freeze my wages
And send my son to Vietnam

You give me second class houses
And second class schools
Do you think that alla colored folks
Are just second class fools
Mr. Backlash, I’m gonna leave you
With the backlash blues

When I try to find a job
To earn a little cash
All you got to offer
Is your mean old white backlash
But the world is big
Big and bright and round
And it’s full of folks like me
Who are black, yellow, beige and brown
Mr. Backlash, I’m gonna leave you
With the backlash blues

Mr. Backlash, Mr. Backlash
Just what do you think I got to lose
I’m gonna leave you
With the backlash blues
You’re the one will have the blues
Not me, just wait and see

Langston Hughes

பாடலைக் கேட்க

நன்றி : Ahhh, Nina « And She Wrote

நடிப்பு சுதேசிகள் :: (பழித்தறிவுறுத்தல்) – கிளிக்கண்ணிகள் : சுப்ரமணிய பாரதியார்

நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி,
வஞ்சனை சொல்வாரடீ! – கிளியே!
வாய்ச் சொல்லில் வீரரடி.

கூட்டத்தில் கூடிநின்று கூவிப் பிதற்றலன்றி,
நாட்டத்தில் கொள்ளாரடீ!
– கிளியே!
நாளில் மறப்பாரடீ

சொந்த அரசும்புவிச் சுகங்களும் மாண்புகளும்
அந்தகர்க் குண்டாகுமோ? – கிளியே!
அகலிகளுக்கின்பமுண்டோ?

கண்கள் இரண்டிருந்தும் காணுந் திறமையற்ற
பெண்களின் கூட்டமடீ! – கிளியே!
பேசிப் பயனென்னடீ

யந்திர சாலை யென்பார் எங்கள் துணிகளென்பார்,
மந்திரத்தாலேயெங்கும் – கிளியே!
மாங்கனி வீழ்வதுண்டோ!

உப்பென்றும் சீனி என்றும் உள்நாட்டுச் சேலை என்றும்
செப்பித் திரிவாரடீ! – கிளியே!
செய்வதறியாரடீ!

தேவியர் மானம் என்றும் தெய்வத்தின் பக்தி என்றும்
நாவினாற் சொல்வதல்லால் – கிளியே!
நம்புதலற்றாரடீ!

மாதரைக் கற்பழித்து வன்கண்மை பிறர் செய்யப்
பேதைகள் போலுயிரைக் – கிளியே
பேணியிருந்தாரடீ!

தேவி கோயிலிற் சென்று தீமை பிறர்கள் செய்ய
ஆவி பெரிதென்றெண்ணிக் – கிளியே
அஞ்சிக் கிடந்தாரடீ!

அச்சமும் பேடிமையும் அடிமைச் சிறுமதியும்
உச்சத்திற் கொண்டாரடீ‚ – கிளியே
ஊமைச் சனங்களடீ!

ஊக்கமும் உள்வலியும் உண்மையிற் பற்றுமில்லா
மாக்களுக்கோர்கணமும் – கிளியே
வாழத் தகுதியுண்டோ?

மானம் சிறிதென்றெண்ணி வாழ்வு பெரிதென்றெண்ணும்
ஈனர்க் குலகந்தனில் – கிளியே!
இருக்க நிலைமையுண்டோ?

சிந்தையிற் கள்விரும்பிச் சிவசிவவென்பது போல்
வந்தே மாதரமென்பார்!
– கிளியே!
மனத்திலதனைக் கொள்ளார்

பழமை பழமையென்று பாவனை பேசலன்றிப்
பழமை இருந்த நிலை! – கிளியே!
பாமரரேதறிவார்!

நாட்டில் அவமதிப்பும் நாணின்றி இழி செல்வத்
தேட்டில் விருப்புங் கொண்டே! – கிளியே!
சிறுமையடைவாரடீ!

சொந்த சகோதரர்கள் துன்பத்திற் சாதல் கண்டும்
சிந்தை இரங்காரடீ! – கிளியே!
செம்மை மறந்தாரடீ!

பஞ்சத்தும் நோய்களிலும் பாரதர் புழுக்கள் போல்
துஞ்சத்தும் கண்ணாற் கண்டும் – கிளியே!
சோம்பிக் கிடப்பாரடீ!

தாயைக் கொல்லும் பஞ்சத்தைத் தடுக்க முயற்சி யுறார்
வாயைத் திறந்து சும்மா – கிளியே!
வந்தே மாதரமென்பார்!

நன்றி: மதுரைத் திட்டம்

Random Songs

வீட்டில் இலக்கின்றி தட்டுமுட்டு வேலைகள் செய்யும் நேரம். சத்தமாக பாடல் பாடிய போது வாயில் முணுமுணுத்தவை:

1. ‘காற்றடிக்கும் நேரம் மாவு விற்கப் போனேன்;
கொட்டும் மழைக்காலம் உப்பு விற்கப் போனேன்’

உன்னை நினைச்சேன் பாட்டு படிச்சேன்

2. ‘பருவ மழை பொழியப் பொழிய உறவு தாம்பத்யம் ஆகாதோ;
இவள் வாழ்வில் பருவ மழை பெய்ததால் உடம்பு பாலைவனமாகியதே’

வேறு இடம் தேடிப் போவாளோ 

3. ‘இது தேவதையின் பரிசு; யாரும் திருப்பித்தர வேண்டாம்
நெடுஞ்சாலையிலே நடக்க ஒரு சம்மதமும் வேண்டாம்’

சின்னச் சின்ன மழைத்துளிகள் சேர்த்து வைப்பேனோ

4. ‘பொண்ணுக்கும் பொன்னுக்கும் அடிதடிதான்
மண்ணுக்குப் போகிற உலகத்தில’

நிலா அது வானத்து மேலே

5. ‘தேனோடை ஓரமே நீராடும் நேரமே
புல்லாங்குழல் தள்ளாடுதே’- ராஜராஜ சோழன் நான்

6. ‘காலங்கள் போனால் என்ன…
தலை சாய இடமா இல்லை; இளைப்பாறு பரவாயில்லை’

அகரம் இப்போ சிகரமாச்சு

7. ‘நிலவெங்கே சென்றாலும் பின்னால் வராதா;
நீ வேண்டாமென்றாலும் வட்டமிடாதா’

புது ரூட்டுலதான்

8. ‘மனதின் ஆசைகள்; மலரின் கோலங்கள்; குயிலோசையின் பரிபாஷைகள்
அதிகாலையின் வரவேற்புகள்’

புத்தம் புதுக்காலை பொன்னிற வேளை

9. ‘நடந்தவை எல்லாம் வேஷங்களா; நடப்பவை எல்லாம் மோசங்களா…
திரை போட்டு நீ மறைத்தாலென்ன தெரியாமல் போகுமா?’

வாழ்வே மாயமா பெருங்கதையா கடும்புயலா வெறுங்கனவா

10. ‘ஆட்டுக்கு வேலி தேவையும் இல்ல;
என் பாட்டுக்குத் தாளம் தேவையும் இல்ல’

ஒயிலாப் பாடும் பாட்டில ஆடுது ஆடு

முந்தைய பத்து

Unsettling history of assassinations (Rajiv et al)

It was on July 29, 1987, that then Indian prime minister Rajiv Gandhi flew to Colombo to sign the agreement with president J.R. Jayewardene in a bid to end a raging Tamil separatist drive.

For the first time in Sri Lanka’s troubled history, the country was formally recognised as a multi-religious, multi-ethnic and multi-lingual society. It also brought about the only major act of constitutional reforms, devolving powers to minorities in the form of provincial councils with judicial, civil and police services.

The fighting between the LTTE and Indians not only led to the death of nearly 1,200 Indian soldiers and hundreds of Tamils, combatants and non-combatants

இது செய்திThe accord’s 20th anniversary.


இப்பொழுது புத்தகங்கள்:1. “Royal Murders” by Dulcie M. Ashdown (Sutton, 1998) – murders of European rulers

2. “Political Murder” by Franklin L. Ford (Harvard, 1985) – The most successful political assassins, he believes, approximate the pop-culture stereotype of lone killers who act primarily to earn a place in history, snuffing out useful lives so that their meaningless ones will be remembered.

3. “Killing No Murder” by Edward Hyams (Thomas Nelson, 1969) – Murderous anarchists would plague Europe and America for more than a decade.

4. “Assassination” by Linda Laucella (Lowell House, 1998) – looks at assassins as individuals

5. “American Brutus” by Michael W. Kauffman (Random House, 2004) – Kauffman’s Booth is the author of the 19th century’s most complex assassination conspiracy, designed to cripple the country’s command structure by eliminating the president, vice president and secretary of state in a single night’s work.

Fetherling, a Canadian novelist and poet, is the author of “The Book of Assassins” (John Wiley).

(Scary) Quote for the day

“Just the idea that this person could get away with what he was doing and no one could press charges has made me angry.”

JANE THOMPSON, of East Los Angeles, on a pedophile blogger who she believes described her child in a posting.

from Parents’ Ire Grows at Pedophile’s Unabashed Blog – New York Times : Los Angeles police say they have no legal recourse against a man who has written about how he trolls for children.

Vairamuthu Question & Answer – MSV, Rajaraja Chozhan

அல்லிமுத்து, பர்கூர்.

ஒழுக்கம் – சுத்தம் உங்கள் விளக்கம்?

சாட்சியில்லாத இடத்திலும் நேர்மையாயிருப்பது ஒழுக்கம்.

கண்காணா இடங்களையும் தூய்மையாய் வைத்திருப்பது சுத்தம்.


விஜி செந்தில், பேராவூரணி.மேட்டுக்குடி மக்களுக்கே ஆதரவு தந்த ராஜராஜசோழனை மாமன்னன் என்பது பொருந்துமா?

கல்வெட்டுச் செய்தி ஒன்று அறிந்தபோது மாமன்னன் ராஜ-ராஜனைக் கையெடுத்துக் கும்பிடத் தோன்றியது. இறைவன் பெயரால் அமைக்கப்பட்ட ஆலயத்தை நகர்த்தி நகர்த்தி மக்களுக்குக் கொண்டு சென்ற மாண்பு கண்டு வியந்துபோனேன்.

தாயின் நினைவாய், தந்தையின் நினைவாய்த் தஞ்சைப் பெருவுடை-யார் ஆலயத்தில் அணையா தீபம் ஏற்றிக்கொள்ளலாம் என்றோர் ஆணை பிறப்பித்தான் அரசன். போகப் போகத்தான் தெரிந்தது அது தீபமல்ல ஏழைகளுக்கான திட்டம் என்று.

அணையா தீபம் ஏற்ற வருகிற செல்வந்தர்களுக்கு அரசன் ஒரு நிபந்தனை விதித்தான்.

சந்திரசூரியர் உள்ளவரை அந்த அணையா-விளக்கு ஒளிவிடவேண்டு-மென்றால், அது எரியத் தேவையான திரிக்கும் எண்ணெய்க்குமான பொறுப்பை சம்பந்தப்பட்டவர்களே ஏற்றுக் கொள்ள வேண்டும்.

அதற்காக 96 ஆடுகளைக் கோயிலுக்கு அவர்கள் கொடை கொடுத்துவிட வேண்டும். அந்த ஆடுகளை ‘சாவா மூவாப் பேராடு’ என்கிறது கல்வெட்டு. அந்த ஆடுகள் சோழமண்டலத்தில் உள்ள ஓர் ஏழைக் குடிமகனை அழைத்து ஒப்படைக்கப்படும். அவன் அதை வளர்த்துக் காத்து ஆண்டு அனுப-வித்துக் கொள்ள வேண்டியது; ஆலயத்தில் எரியும் தீபத்திற்கான எண்ணெய்ச் செலவை மட்டும் அவன் ஏற்றுக் கொள்ள வேண்டியது.

எரியும் தீபம் எரிந்து கொண்டே-யிருக்கும்; ஓர் ஏழைக் குடும்பம் வாழ்ந்து கொண்டேயிருக்கும். தீபத்தில் எண்ணெய் உயர உயர சோழமண்டலத்தின் பால்வளமும் பெருகிக் கொண்டேயிருக்கும்.

ஆலயத்தில் எரியும் ஒரு சுடர் நெருப்பினால் ஓர் ஏழைக் குடும்பத்-திற்குப் பால் வார்த்தவன் என்றும், நெருப்பிலே பால் கறந்தவன் என்று-மல்லவா அந்த மாமன்னனுக்கு மெய்க்கீர்த்தி பாடத் தோன்றுகிறது.


அப்துல் அஜீஸ், திருநாகேஸ்வரம். மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் பற்றி உங்கள் மதிப்பீடு?

மும்பையில் (பழைய பம்பாயில்) ஒரு மெல்லிசை நிகழ்ச்சி. மெல்லிசை மன்னரின் இசைமழையில் அரங்கம் மிதக்கிறது ஆனந்தத் தெப்பத்தில். மேடைக்கு ஒரு துண்டுத்தாள் வருகிறது. அதில் இருந்த செய்தி இதுதான்.ஓடம் நதியினிலே பாடுங்கள், எழுதியவர் யாரென்று பார்க்கிறார்கள். ‘இப்படிக்கு நௌஷாத்’ என்றிருக்கிறது. ‘அய்யோ… இது நேயர் விருப்பமல்ல. கடவுள் விருப்பம்’ என்று கும்பிடுகிறார் மெல்லிசை மன்னர்.

இப்படி இசைமேதைகளையே சுரக் கயிறுகளால் கட்டிப்போட்ட-வரல்லவா மெல்லிசை மன்னர்! எத்தனை மோதிரங்கள் பூட்டுவது அந்த வித்தக விரல்களுக்கு?

அறுபதுகளின் ஆகாயத்தையே தன் ஆர்மோனியத்துக்குள் அடைத்-துப் போட்ட அந்த ஆளுமையைச் சொல்லவா?

உணரமட்டுமே முடிந்த உணர்ச்சி-களுக்கு சப்த வடிவம் கொடுத்த சக்கரவர்த்தி என்று சொல்லவா?

தம்புராவின் சுதியிலேயே ஒரு மொத்தப் பாட்டும் அமையவேண்டும் என்று இயக்குநர் கேட்டபோது, ‘பொன்னென்பேன்… சிறு பூ வென்பேன்’ என்று பாடி முடித்த படைப்பாற்றலைச் சொல்லவா?

‘சிந்துநதியின் மிசை நிலவினிலே’ என்ற பாரதி பாட்டுக்கு இசை-யமைத்தபோது, ஒரு கவிஞன் எழுத எத்தனிக்கும் முணுமுணுப்பிலிருந்து இசையமைத்தால் என்ன என்ற உத்தி படைத்த புத்தியைச் சொல்லவா?

‘ஆடை முழுதும் நனைய நனைய மழை-யடிக்குதடி’ என்ற பாடலின் இணைப்-பிசையில், அழுகை வாத்தியம் என்று அறியப்பட்ட ஷெனாயில் ஆனந்தத் தாண்டவம் வாசித்த அதிசயத்தைச் சொல்லவா?

உப்புச் சப்பில்லாத படங்களுக்-கும் வஞ்சகமில்லாமல் வாசித்த வள்ளன்மை சொல்லவா?

‘என் பெயரே எனக்கு மறந்து-போன இந்த வனாந்தரத்தில்’ என்ற என் கவிதைக்கு இசையமைத்து இந்தியாவிலேயே புதுக் கவிதைக்கு இசை யமைத்தவர் என்ற புதுமை புரிந்ததைச் சொல்லவா!

வார்த்தைகள் பாடப்படும்போது ‘சற்றே விலகியிரும் பிள்ளாய்’ என்று வாத்தியங்களை ஒதுக்கிவைத்துத் தமிழுக்குத் தலைமை தந்த தகைமை-யைச் சொல்லவா!

  • பிறப்பு _
  • இறப்பு,
  • தாலாட்டு _
  • ஒப்பாரி,
  • காதல் _
  • பிரிவு,
  • கண்ணீர் _
  • புன்னகை,
  • விரக்தி _
  • நம்பிக்கை,
  • வெற்றி _
  • தோல்வி

என்று வாழ்வின் சகல உபநதிகளையும் தனக்குள் வாங்கி வைத்துக்கொண்ட சமுத்திர-மல்லவா மெல்லிசை மன்னர்!எல்லாவற்றுக்கும் மேலாய் தன் இசைக்குத் தமிழூட்டிய கவிஞனை மறவாத நன்றியாளர்; இசை நிழல்; தமிழே நிஜம் என்னும் பெருந்தன்மை-யாளர்.

எம்.எஸ்.வி மூன்றெழுத்தில் ஏழுசுரம்.

நூற்றாண்டுகளுக்குப் புகழ்சேர்த்த-வர் நூறாண்டுகள் வாழட்டும்!

பாட்டாளி மக்கள் கட்சியும் பசுமை தாயகமும் :: அரசு பதில்கள்

வீ.பெரியசாமி, தேளூர்.

‘ஊருக்கு உபதேசம்’ என்பதற்கு உதாரணம்?

சென்னைக்கு அருகே நடந்த பா.ம.க. இளைஞர் அணி மாநாட்டுக்காக நிழல் தரும் சாலையோர புங்க மரங்கள் வெட்டப்பட்ட சம்பவம்.