ஆல் கோரை நினைத்து கொண்டேன். 28 கேள்விகளில் விடையைக் கண்டு பிடித்தது.
ஐஷ்வர்யா ராயை 18 கேள்விகளில் சொல்லிவிட்டது.
புத்திசாலிதான்! நீங்களும் விளையாடிப் பாருங்களேன்.
ஆல் கோரை நினைத்து கொண்டேன். 28 கேள்விகளில் விடையைக் கண்டு பிடித்தது.
ஐஷ்வர்யா ராயை 18 கேள்விகளில் சொல்லிவிட்டது.
புத்திசாலிதான்! நீங்களும் விளையாடிப் பாருங்களேன்.
தமிழ்வெளி – இன் user interface குறித்து பயனராகத் தோன்றியவை:
1. உரல் (http://www.tamilveli.com/) ரொம்ப எளிதில் தட்டி்சி செல்லும்விதமாக இருக்கிறது. +1
2. எழுத்துக்களுக்கிடையே போதிய இடைவெளி இல்லை. வார்த்தை, வரி, பத்தி என்று எல்லாவற்றுக்கும் இடையே வெள்ளை நிறம் நிறைய வேண்டும். தற்போதைக்கு பார்த்தவுடன் மயக்கமா… கலக்கமா… குழப்பமா! -1
3. ‘அச்சு மாதிரி‘ அமர்க்களம். வேண்டிய பதிவுகளை தேர்ந்தெடுத்து, ஹாயாக பக்கங்களைப் புரட்டலாம். +1
4. சுட்டி செல்லாமல், அங்கேயே காட்டும் தேடல் அருமை +1ஆனால், ‘முன்னோட்டம் மட்டும்‘ அல்லது ‘முழுமையான இடுகை‘ என்று இரண்டு தேர்வுகளை வாசகர்களிடமே விடலாம். மொத்தமாக் காட்டுவதால், தேடல் முடிவுகள் வருவதற்கு தாமதமாகிறது. -1
‘பழையதிலிருந்து புதிதுக்கு‘ & ‘புதியதிலிருந்து பழையதற்கு‘ மக்கர் செய்வதால் -1.
5. திடீரென்று மாமல்லபுர ஓவியம் எட்டிப் பார்க்கிறது. பல பக்கங்களில் வேறு இலச்சினைகள் வருகிறது. இடைமுகத்தை நிலையாக நிறுத்தலாம். (0)
6. உரல்களை சுட்டினால், தேன்கூடு, தமிழ்மணம் போல் இங்கும் புத்தம்புதிய சாளரங்களை (அல்லது tabs) திறந்து, இடுகையைக் காண்பிக்கிறார்கள். அதே சாளரத்தில் வலைப்பதிவை படிக்கும் வசதி வேண்டும். பயனரே விருப்பப்பட்டால், தனியாக திறந்து கொள்வார் என்று அவரின் இச்சைக்கே விட்டுவிடும் இடைமுகம் வேண்டும். (0)
7. பக்கத்தின் முடிவுக்கு சென்றவுடன் ‘முந்தைய இடுகைகள்‘ என்றோ, ‘பழைய பதிவுகள்‘ என்றோ, ப்ளாக்ஸ்பாட் (அல்லது) வோர்ட்பிரெஸ்.காம் தளத்தில் ‘Older Posts‘ என்று தூண்டில் இழுப்பது போல் போட்டு வைக்கலாம். மீண்டும் மவுசைத் தூக்கிக் கொண்டு, ஹோம் செல்ல நேரிடுவதால் -1
8. ‘இதர வகை பதிவுகள்‘ என்று சோத்தாங்கைப் பக்கம் வருவது எந்த வகை? எப்படி அங்கு இடுகைகள் இடம்பிடிக்கின்றன? (0)
9. ‘பின்னூட்டங்கள்‘ என்னும் பகுதியில் பழைய மறுமொழிகளின் நிலவரங்களை எவ்வாறு பார்ப்பது? பின்னூட்ட எண்ணிக்கைக்கு பக்கத்தில் – 0, 1, 2 என்று எண்கள் வருகிறதே… அது எதைக் குறிக்கிறது?
(எத்தனை பேர் அழுத்தி உள்ளே சென்றார்கள் என்னும் எண்ணிக்கை என்றால், பின்னூட்டங்களில் இந்த எண்ணைத் தவிர்த்து விடலாம். இடுகைகளிலும் இந்த எண் காணப்படுவது, பரபரப்பான பதிவுக்கு செல்ல வழிகாட்டுவது வசதிதான் என்றாலும், மறுமொழிப் பட்டியலில் குழப்பம் கொடுக்கலாம்.)
10. #8, #9 போல் எழும் வழமையாக கேட்கும் கேள்விகளுக்கு FAQ போட்டு, உதவிப் பக்கங்களைப் பார்க்க சொல்லலாம்.
ஏற்கனவே இருப்பதோடு திருப்திப்பட்டுக் கொள்ளாமல் தமிழ்ப்ளாக்ஸ்.காம் போல் புதியவை வருவது மகிழ்ச்சியைத் தருகிறது. மாற்று முயற்சிகளை முன்னெடுத்து செல்லும் தமிழ்வெளிக்கு பாராட்டு கலந்த வாழ்த்துக்கள்.
Posted in Aggregators, Blogs, Feeds, Posts, Readers, Reviews, Suggestions, TamilVeli, UI
ஆங்கிலத்தில் ‘must read’ என்று ஒரு பட்டியல் போடச்சொன்னால், நீங்கள் பரிந்துரைக்கும் பட்டியல் தருவீர்களா எனக்கு? நவீன இலக்கியத்தில் தான் வேண்டும்.
என்று நண்பரிடமிருந்து கேள்வி. என்றாவது நேரம் கிடைக்கும்போது படிக்க வேண்டும் என்று நான் நினைக்கும் பட்டியல்:
இது ஒரு ஜாலியான பட்டியல். ‘அவசியம் படிக்க வேண்டும்’ அல்லது ‘மிகவும் புகழ் பெற்றவை’ என்பதை விட வெரைட்டி + வித்தியாசம் நிறைந்த லிஸ்ட்.
அவசியம் புரட்ட வேண்டிய புத்தகங்களுக்கு The Book of Great Books: A Guide to 100 World Classics: (W. John Campbell) போன்றவற்றையும் கவனிக்கலாம்.
‘சிலகம்மா செப்பந்தி‘ என்ற தெலுங்குப் படத்தில் ரஜினியும், ஸ்ரீபிரியாவும் ஜோடியாக நடித்தனர். இது ‘அடிமைகள்‘ என்ற மலையாளப் படத்தின் ரீமேக். மலையாளத்தில் சாரதா நடித்த கேரக்டரில் தெலுங்கில் ஸ்ரீபிரியா நடித்திருந்தார். கே.பாலசந்தர் மேற்பார்வையில் ஈரங்கி ஷர்மா டைரக்ட் செய்திருந்தார்.
இந்த தெலுங்குப் படமும் வெற்றி பெற்றது. இதையே தமிழில் கே.பாலசந்தர் உருவாக்கினார். தெலுங்கில் ரஜினி நடித்த கேரக்டரில் தமிழில் கமலஹாசனும், ஸ்ரீபிரியா நடித்த கேரக்டரில் ஷோபாவும் நடித்தார்கள். தமிழிலும் படம் வெற்றி பெற்றது.
கொசுறு:
இந்தியில் “ராம் கு கா லட்சுமண்” என்ற பெயரில் ரந்திர்கபூர், சத்ருகன் சின்கா, ரேகா நடித்த படத்தின் தமிழ்ப் பதிப்பு வி.சி.குகநாதன் டைரக்ட் செய்த ‘மாங்குடி மைனர்‘. விஜயகுமார்தான் ‘மாங்குடி மைனர்’! இந்தியில் சத்ருகன் சின்கா ஏற்றிருந்த வேடத்தை தமிழில் ரஜினி ஏற்க, ரேகா கேரக்டரில் ஸ்ரீபிரியா நடித்தார்.
Posted in Cinema, Movies, Rajini, Rajiniganth, Rajni, Rajniganth, Rajnikanth, Sreepriya, Sripriya, Thinathanthi
1. Thinnai: சில வரலாற்று நூல்கள் 1 – மதுரை நாடு : ஒரு ஆவணப்பதிவு (ஜெ.எச்.நெல்சன்) :: ஜெயமோகன் [The Madura Country -A manual J..H..Nelson.Asian Educational Services New Delhi, Madras, 1989]
2. Thinnai: சில வரலாற்று நூல்கள் 2 – திருநெல்வேலி மாவட்ட ஆவணப்பதிவு – ஹெச்.ஆர்.பேட் ஐ.சி.எஸ் :: ஜெயமோகன் [Tinneveli District Gazetteer By H.R.Pate I.C.S. ]
ஆங்கிலேயர் எழுதிய ஆவணக்குறிப்புகள் மற்றும் வரலாற்று நூல்கள் பொதுவாக கீழ்க்கண்ட சிறப்புகள் உடையவை.
1. தெளிவான செறிவான நடை
2. ஏராளமான தகவல்கள்
3. தகவல்களை பகுக்கவும் தொகுக்கவும் அறிவியல்நோக்கு சார்ந்த ஒரு அடிப்படைத்தளம்
4. பிரச்சார நோக்கம் இல்லாத பதிவுத்தன்மை.
5. பலதுறை அறிதல்களை தொகுக்கும் இயல்பு
அவை அனைத்துக்குமே கீழ்க்கண்ட குறைகளும் உண்டு
1. ஆதிக்க இனத்தின் நோக்கில் இந்தியாவை பார்ப்பதனால் உருவாகும் இயல்பான அலட்சியமும் புரிதல் குறைகளும்
2. மதக்காழ்ப்பும் மதக்காழ்ப்புள்ள பாதிரிமாரின் நூல்களை சார்ந்திருக்கும் தன்மையும்
3. இந்தியா போன்ற ஒரு பரந்த நாட்டின் பல்லினப் பலமொழி பலமதப் பண்பாட்டை எளிதில் பொதுமைப்படுத்திக்கொள்ளும் முயற்சி.
கட்டப்பொம்மு நாயக்கனும் பூலித்தேவனும் நடத்திய கலகங்களின் விரிவான சித்திரம் அளிக்கப்படுகிறது. கட்டப்பொம்மு நாயக்கரின் கலகம் நாம் நன்கறிந்த சிவாஜிகணேசனின் திரைப்படம் காட்டும் சித்திரத்துக்கு பலவகையிலும் வேறுபட்டு இந்நூலில் காட்சியளிக்கிறது. கட்டபொம்மு நாயக்கருக்கு தேசியம் சார்ந்த புரிதலோ ஒரு நாட்டை அமைக்கும் நோக்கமோ இருந்ததாக தெரியவில்லை.
பிற பாளையக்காரர்களைப்போல அவரும் மற்ற பாளையபப்ட்டுகளில் மக்களை கொள்ளையடிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். பிரிட்டிஷார் அவரை கட்டுப்படுத்தி கடுமையான கிஸ்தி போடுகிறார்கள். பொதுவாக பாளையக்காரர்களுக்கு போடப்பட்ட கிஸ்திக்கு எதிராக கடுமையான அதிருப்தி இருந்தது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து லெ·ப்.ஜாக்ஸனிடம் வாதாடியபின் இறங்கிச்ச்செல்லும் வழியில் கட்டப்பொம்மு நாயக்கர் அவரை தடுக்க முயன்ற ஆங்கில ஊழியர் கிளேர்க்கை கொன்று தப்பிச்செல்கிறார்.
கட்டபொம்மு நாயக்கருக்கு அவரைச் சுற்றியிருந்த மறவர், வன்னியர் பாளையக்காரர்கள் அனைவருமே எதிராக இருக்கிறார்கள். ஊத்துமலை ஜமீந்தாரும், சிவகிரி ஜமீந்தாரும் சுப்ரமணியபிள்ளை தலைமையில் தங்கள் நாடுகளில் கொள்ளையடிக்கும் பாஞ்சாலங்குறிச்சிக்காரர்களுக்கு எதிராக போராட வெள்ளையரை தங்கள் உதவிக்கு அழைக்கிறார்கள். இவர்களின் உதவிகொண்டு கட்டப்பொம்மு நாயக்கர் ஒடுக்கப்படுகிறார். இதன் விரிவான தகவல்கள் இந்நூலில் அளிக்கப்படுகின்றன.
3. Thinnai: சில வரலாற்று நூல்கள் – 3 –மதுரை நாயக்கர் வரலாறு : (அ.கி.பரந்தாமனார் எம்.ஏ) :: ஜெயமோகன் [பாரிநிலையம். 90 பிரகாசம் சாலை சென்னை 600018]
4. Thinnai: சில வரலாற்று நூல்கள் 4 – தமிழ்நாட்டு பாளையக்காரர்களின் எழுச்சியும் வீழ்ச்சியும்: கெ.ராஜையன் :: ஜெயமோகன் [Rise And Fall Of Poligars Of Tamilnad . Prof .K.Rajaiyyan M.A, M.Litt, A.M, PhD, Published by University Of Madras 1974]
Posted in Books, History, Jayamogan, Jayamohan, Jeyamogan, Jeyamohan, Kattabomman, Krishnadevarayar, Mangammal, Nayak, Quotes, Reviews, Thinnai, Thirumalai
1. காலம் உனக்காகக் காத்திருக்காவிட்டால் கவலைப்படாதே…
கடிகாரத்திலிருக்கும் பயனற்ற பேட்டரியைத் தூக்கி எறி.
அப்புறம் பாரு…
டைம் எப்பவும் உனக்காக வெயிட் பண்ணிட்டே இருக்கும்!
2. என்னதான் நீங்க பிரம்மச்சாரியா இருந்தாலும்,
நீங்க ஸ்கூலுக்கு pen இல்லாம போக முடியாது.
தமிழ்மணத்தில் கண்ட சங்கிலிப் பின்னல் தலைப்புகளும் தொடர் அந்தாதிப் பதிவுகளும்…
Posted in Blogs, Conventions, Infectious, Meme, Naming, Subject, Titles
From Thamizhan Express:
நியூட்டன் இயக்கிய ‘தூவானம்’ படத்தைப் பார்த்த நடிகர் சிவகுமார், தனது மகன்கள் சூர்யா, கார்த்திக் இருவரிடமும் அந்தப் படத்தைக் கண்டிப்பாகப் பார்க்கச் சொல்லி உத்தரவிட்டிருக்கிறார்.
‘தூவானம்,’ அந்த அளவிற்கு அவரை ஈர்த்திருக்கிறது. இதேபோல சத்யராஜின் மனைவியும் படத்தைப் பார்த்து விட்டு சத்யராஜ், சிபிராஜ் ஆகியோரைப் பார்க்கச் சொல்லியிருக்கிறார். அதாவது அப்பா, மகன்கள் சேர்ந்து பார்க்க வேண்டிய படமாம்.
(1) – பிரபு & ஃபெராரி
மேட்டர்: Prabhu n Ferrari » Gowri Kalyana vaibogame
இப்போ டவுட்: இம்புட்டு விளம்பரம் போட்டிருக்கீங்க! துட்டு கொட்டுதா?
(2) – லேஸிகீக்
மேட்டர்: lazygeek.net: Starbucksed 2
இப்போ டவுட்: விரிவாக வலையில் விழாத வாசகர்களிடமிருந்து வாராது வந்த மாமணியே என்பது ச(ா)ர்தான். ரசிகர்களை திருப்திபடுத்துவீங்களா?
(3) – பூங்கா
மேட்டர்: பூங்கா – இணையத் தமிழின் முதல் வல�
இப்போ டவுட்: ரொம்ப காலமா தொணப்பிண்டு இருக்கிறதுதான். தமிழ்மணத்தில் இருந்து வரும் ‘முதல் வலைப்பதிவு இதழ்’ என்று சொல்லவேண்டியது ஸ்லிப்பாகி இப்படி ப்ராண்டிங் செஞ்சுக்கறீங்களே… Twist in the tail என்பது இதுதானா?
ரொம்ப நாளாகவே வேண்டுகோள் பட்டியலில் இருந்தது. நேற்று நிறைவேறியது.
சக்கர வளையத்தில் சுற்றித்தீர்க்கும் வெள்ளெலி, பொசுபொசு மொசக்குட்டி, சாம்பல் நிறத்திலொரு பூனை, அடக்கி வாசித்து மிரட்டும் உம்மணாம்மூஞ்சி நாய்; எல்லாவற்றுக்கும் நடுவே ஃப்ரென்ச் கிஸ் அடுத்துக் கொண்டு கிளிக்கூண்டு.
இரண்டு கிளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டது. ஒன்று மஞ்சள் கலந்த பச்சை. மற்றொன்று வெளிர் நீலம்.
அதற்குத் தேவையான உணவு; காலைக்கடன்களை மறைக்க சோள வஸ்து; விளையாட கிண்கிணிகள்; அடைத்து வைக்க கூண்டு. மேலும் சில விநோதப் பொருட்கள் வாங்கப்பட்டது.
கடையில் இருந்தவரை ‘லவ் பேர்ட்ஸ்… லவ் பேர்ட்ஸ்‘ பாடல் போல் ‘கீக்கீக்கீ’வென்று கத்திக் கொண்டிருந்ததாக எண்ணம். வீட்டுக்கு வந்தவுடன் ‘குயிலப் பிடிச்சு கூட்டில் அடைச்சு கூவச் சொல்லுகிற உலகம்‘ பிரபு மாதிரி இறுக்கமாக, இல்லாத இறக்கையை படபடத்து, உணவை சீந்தாமல், தண்ணீர் பருகாமல் சத்தியாகிரக கோலம்.
நிறைய பூனை வளர்த்திருக்கிறேன். நாய் வைத்துக் கொண்ட அனுபவமும் உண்டு. ஐந்து மீனை தொட்டியில் நீந்தி மகிழ்வதைப் பார்க்க நினைத்து, நாளுக்கு இரண்டாக சாகடித்து, மீன் எலும்புகளைப் பொறுக்கியதும் நிகழ்ந்திருக்கிறது.
கிளியை வளர்த்துப் பூனை கையில் கொடுக்கும் பழமொழியை நான் மனைவியிடம் நினைவு கூற, அவளும் ‘என் விஷயத்தில் கிளியை வளர்த்து யானை கையில் கொடுத்துட்டாங்க’ என்கிறாள்.
சாப்பாடு புத்தம்புதுசாகப் போட்டால்தான் சீந்துகிறார்கள். ஒரு மணி நேரம் வட்டிலில் காய்ந்துவிட்டால் ஃப்ரிட்ஜில் வைக்காத பழைய சோற்றை சீந்தாத என்னுடைய அந்தக்காலத்தை நினைவுறுத்தும் பட்சிகள்.
பழியாய் பவளவாய் கண்டது போதும் என்று மின்னஞ்சல் பக்கம் பார்க்க சென்றால், நண்பரிடமிருந்து ‘கிருஷ்ணம்மாளுக்கு பணம் கொடுக்கறேன்னியே… அனுப்பியாச்சா?’ என்னும் நினைவூட்டல். ‘பூனை நாயும் கிளியும் கூட மனிதர் மடியிலே‘ என்று கமல் பாடும் நேரம் இது.
Hazaaron Khwaishein Aisi பார்த்தால் கூட அன்னப் பறவையாக சித்ரா சிங்கை மட்டும் பால் பிரித்து மேயும் மனப்பான்மை, சுயவிமர்சனம் செய்தவுடன் அடங்கிப் போகிறது. அதை வைத்துப் பதிவெழுதும் எண்ணம் உதிக்கிறது.
இப்போதைக்கு தீராத வினா: ’24×7 தேமேயென்று தனியே வாளாவிருக்கும் இரண்டும் என்ன யோசிக்கும்?’
தொடர்பான இன்றைய நியு யார்க் டைம்ஸ் பத்தி:
Should Most Pet Owners Be Required to Neuter Their Animals? – New York Times
By VERLYN KLINKENBORG
When it comes to pets, Americans are lost in a seemingly endless act of transference.
We expect to find as much innocence in our pets as we do in newborn children, which may be one reason why so few older pets are adopted from shelters.
We want the pleasures of neoteny — the adorable sustained appearance of infancy — in part because it helps us forget how much responsibility is involved in owning and training.
Americans are consumers of pets just as we are consumers of everything else.
1. Mapping a political era2. An Ideological Reading of Hazaaron Khwaishein Aisi
4. lazygeek.net: Hazaaron Khwaishein Aisi
5. Hazaaron Khwaishein Aisi (Hindi) « One Small Voice
6. The Meltdown Chronicles: Hazaaron Khwaishein Aisi
7. Sen’s Spot: Hazaaron Khwaishein Aisi(Thousand Desires such as this) – part1
8. Ruminations of a meandering mind: Hazaaron Khwaishein Aisi