வருது… வருது! மூழ்காத ஷிப்

Media, MSM

தொடர்புள்ள இடுகை: அங்கும் இங்கும் இஸம் உண்டு – இந்தியன் ப்ரெசிஸம்

நியூட்டனின் மூன்றாம் விதி – எஸ் ஜே சூர்யா: Ads

Newton Moonraam Vithy - Tamil Cinema

How to increase your hit rate based on a Search term?

1. தலைப்பு ரொம்ப முக்கியம். ஒரு இடுகைக்கு ஒரு தலைப்புதான். செக்ஸ் படங்கள் குறித்த பதிவு என்றால் செக்ஸியாக படங்களை இடாவிட்டாலும், அப்படி வைக்கவும்.

2. நாலைந்து முறை தேடிப் பார்க்கவும். தேடல் முடிவில், அப்படியே சென்று விடாமல், க்ளிக் செய்து, தேடல் பூர்த்தியானதை கூகிளிடம் தெரிவிக்கவும். இப்படி தினசரி முழுமையடைதலை, பல்வேறு கணினிகளில், விதவிதமான ஐ.பி.க்களில், எல்லாவிதமான உலாவிகளின் துணையுடன் செய்தால், சீக்கிரமே முதலிடம் சித்திக்கும்.

3. உங்களுக்குத் தெரிந்த நாலு பதிவரை அழைத்து, படங்கள் செக்ஸ் வேன்டுமானால், என்னும் தொடர்புள்ள வார்த்தைகள் வருமாறு, முன்னே பின்னே மாற்றிப் போட்டு, தொடுப்பு கொடுக்க வைக்கலாம். இதனால், இது நிச்சயம் நம்பகமான இடுகை என்று தேடல் பொறிகள் அறிந்து கொள்ளும்.

பயணங்கள் முடிவதில்லை அந்தக்காலம்;
முடிவுகள் பயனில்லை இந்தக்காலம் 🙂

How to name it? – சித்திரை, தை, ஜனவரி: Happy New Year

Thamizh new Years Day - Chithirai, Kalainjar TV

Comics - TV Special Programmes

Jeyalalitha Thamizh New Year Wishes - AIADMK vs DMK kalainjar Karunanidhi

நல்ல கூத்து! சித்திரைத் திங்கள் முதல் நாள் சிறப்பு நிகழ்ச்சிகள் கலைஞர் டிவி-ல காண்பிக்கிறாங்க! அடுத்ததா வைகாசி, ஆனி, ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை… முதல் நாள்களுக்கெல்லாம் கூட சிறப்பு நிகழ்ச்சிகள் காட்டப் போறாங்களோ என்னமோ?!

மதி (தினமணி)

தொடர்புள்ள இடுகை: விடுபட்டவை »‘தை தை’ என்று குதிக்காமல் வெளியே வரும் பூனைக்குட்டி! – ஆனந்தவிகடன் ( ஏப்ரல் 16.2008) : ஹாய் மதன் கேள்வி-பகுதி பதில் பகுதி

Notable Hindi Songs – 2007 – Film Music: Top 13

2008 முடிவதற்கு முன்பாகவே பதிந்து வைக்க முடிகிறது 🙂

எந்த வரிசையிலும் இல்லை; என்றாலும்

  • ‘ஹே கண்பத்’, நோ ஸ்மோக்கிங் போன்றவை அடிக்கடி கேட்கும் பட்டியலில் இருக்கின்றன.
  • சக்தே இந்தியா, சீனி கம், குரு ஏற்கனவே நிறைய தடவை கேட்டிருப்பீர்கள்!
  • வெல்கம் படத்தின் குத்துப் பாடல், சிவாஜியோடு முட்டிய ஜூம் பராபர் ஆகியவை கேட்டிருக்காவிட்டால், பாப் கல்ச்சர் அறிய காது கொடுக்கவும்.
  • ‘ஹம் தோ அய்ஸே ஹை பையா’ பாடல் பால் மணம் மாறா பாலகனாக இருந்தபோது வந்த ‘ஃபிர் பீ தில் ஹை ஹிந்துஸ்தானி’ போல் துள்ளலாக இருக்கிறது; ‘காசிசென்றுவந்தவுடன் பார்த்ததாலோ என்னவோ தனிப் பாசத்துடன் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.
  • படங்களை மொத்தமாக குறிப்பிட வேண்டும் (அல்லது) எந்தப் பாடலை சொல்வது என்னும் குழப்பத்தில் தீம் கோர்வைகளைத் தவிர்த்து, ஒரு படம் ஒருமுறைதான் இடம்பெறுமாறு அமைத்த பட்டியல் இது.
  • தமிழ்ப்படப் பாடல் பட்டியலுக்கு – Tamil Film Songs – Best of 2007 Movie Music « Snap Judgment
  1. சந்தா ரே (நிலாப் பாடல்) – ஏகலவ்யா
    • பாடியவர்: ஹம்ஸிகா ஐயர்
    • இசை: ஷாந்தனு மொய்த்ரா
    • பாடலாசிரியர்: ஸ்வானாந்த் கிர்கிரே
  2. சா ரஹா‘ராம் கோபால் வர்மா’வின் ஆக்
    • பாடியவர்: ஷ்வேதா பண்டிட், வினோத் ரதோட்
    • இசை: அமர் மொஹிலே, டிஜே அமித், கணேஷ் ஹெக்டே, நிதின் ரால்வாக்கர், பிரசன்னா சேகர்
    • பாடலாசிரியர்: ஜெய்தீப் சாஹ்னி
  3. ஹம்தோ அய்ஸே ஹேன் லகா சுனரி மே தாக்
    • இசை: ஷாந்தனு மொய்த்ரா
  4. ஜப் பீ சிகரெட் நோ ஸ்மோகிங்
    • பாடியவர்: அத்னான் சாமி
    • இசை: விஷால் பரத்வாஜ்
    • பாடலாசிரியர்: குல்சார்
  5. மௌலா மேரே லே லே மேரி ஜான் சக் தே இந்தியா
    • பாடியவர்: கிருஷ்ணா, சலிம் மெர்சன்ட்
    • இசை: சலீம் – சுலைமான்
    • பாடலாசிரியர்: ஜெய்தீப் சானி
  6. ஆஜா நாச்லே ஆஜா நாச்லே
    • பாடியவர்: சுனிதி சௌஹான்
    • இசை: சலிம் – சுலய்மான்
    • பாடலாசிரியர்: பியூஷ் மிஷ்ரா
  7. குர்தி மல்மல் திநிஷப்த்
    • பாடியவர்: அனுராதா போட்வால், கைலாஷ் கெர், ஸ்னேகா பந்த், சோனு நிகம், சுதேஷ் போஸ்லே
  8. கண்பத் ஷூட் அவுட் அட் லோகன்ட்வாலா
    • பாடியவர்: அன்ச்சல், மிகா
    • இசை: மிகா
    • பாடலாசிரியர்: மிகா
  9. சீனி கம் சீனி கம்
    • பாடியவர்: ஷ்ரேயா கோஸல்
    • இசை: இளையராஜா
    • பாடலாசிரியர்: சமீர்
  10. ஊன்ச்சா லம்பா வெல்கம்
    • பாடியவர்: ஆனந்த் ராஜ் ஆனந்த் & குழு
    • இசை: ஆனந்த் ராஜ் ஆனந்த்
    • பாடலாசிரியர்: ஆனந்த் ராஜ் ஆனந்த்
  11. மேரி ஜிந்தாரி கன்னா & அய்யர்
    • பாடியவர்: மதுஸ்ரீ, சுக்விந்தர் சிங்
    • இசை: தபுன் சூத்ரதார்
    • பாடலாசிரியர்: ராஜேஷ் ஜோரி
  12. ஜூம் பராபர் ஜூம் ஜூம் பராபர் ஜூம்
    • பாடியவர்: ஷங்கர் மகாதேவன், சுனிதி சவுஹான், ஜூபீன் கர்க்
    • இசை: சங்கர் – எசான் – லாய்
    • பாடலாசிரியர்: குல்சார்
  13. திருமணப் பாடல் காந்தி மை ஃபாதர்
    • பாடியவர்: பலர்
    • இசை: பியூஷ் கனோஜியா

ரெண்டுக்கு வந்த கோலாகலம்

Comedy with Urine, Shit, Crap
அரியணை என்பார்கள் சில பேர்கள்; கொல்லைக்கு என்பார்கள் அந்தக் காலத்தவர்கள்; ‘எக்ஸ்யூம் மீ‘ கேட்டுப் போவார்கள் நவநாகரிகர்கள். எல்லாத்துக்கும் ஒன்றுதான் இலக்கு – ‘காலைக்கடனை மாலையில் செய்தாலும் காலைக்கடனா?’ என்று செந்தில் கவுண்டமணியிடம் கேட்டால் நகைச்சுவை. இனி ‘ரெண்டுக்கின் கதை‘.

காலைக்கடனையும் வலையில் மேய்வதையும் சரிசமமாகக் கழிக்க கருத வேண்டும்.

  • இரண்டுமே அளவோடு இருத்தல் முக்கியம். நேரங்காலம் தெரியாமல் போய்க்கொண்டிருக்க கூடாது.
  • கண்ட இடத்தில் சென்றால் ஜாக்கிரதையாக கிருமிநாசினிகளை தெளித்து பயன்படுத்த வேண்டும். பாதுகாப்பாக செல்லாவிட்டால் தொற்று வியாதி பீடிக்கும் அபாயம் உண்டு.
  • வேலையை முடித்த பிறகு, சென்ற சுவடே இல்லாமல் தனிப்பட்ட விஷயங்களை ஒழுங்காக சுத்தம் செய்தல் அவசியம்.
  • திறந்தவற்றையெல்லாம் மூடிவைத்துவிட்டு வெளியேற வேண்டும். அடுத்தவர் எட்டிப் பார்த்தால் எதுவும் தெரியக்கூடாது.
  • சிக்கலாக இறங்கிக் கொண்டிருந்தால், செரிமானத்தில் போதிய நடவடிக்கை தேவை. இங்கே காய்கறிகளை வெட்டவும்; அங்கே வீடீயோக்களை வெட்டி விடும்.
  • ரொம்ப உட்கொண்டால் அஜீரணமாகி ஒவ்வாமை ஏற்பட்டு, எங்கும் துர்நாற்றம் எழவைக்கலாம்.
  • இரண்டுமே வர வேண்டிய நேரத்தில் வராவிட்டால், நித்திரை நிர்மூலமாகி அவஸ்தை கொடுக்கும்.
  • இரண்டும் இடங்களிலும் செல்லும் இடத்திலெல்லாம் அனானியாக கிறுக்கி வைக்கலாம்.

வலைவலத்திற்கும் மலஜலத்திற்கும் பாக்கி உள்ள ஆறு வித்தியாசங்களை ஆற அமர அங்கே இருக்கும்போது யோசிக்குமாறு வீட்டுப் பாடம் தந்துவிட்டு சொந்தக் கதைக்கு போவோம்.

பாட்டி ரொம்ப ரொம்ப ஆசாரமானவள். ‘கோமாதாடா… மஹாலஷ்மியே குடியிருக்கா’ என்றவுடன் பெசன்ட் நகருக்கு செல்லாமலேயே தரிசனம் கிடைத்த மகிழ்ச்சியுடன் தொட்டு கும்பிட சென்றது நினைவில் இருக்கிறது.

‘உதயம்’ படத்தில் அமலாவைக் கடத்தி செல்லும் காட்சி நினைவிருக்கிறதா? சத்தவஹனா எக்ஸ்பிரெஸ் போன்ற ஏதோ ஒரு வண்டி செல்வதற்காக லெவல் கிராசிங்கில் காத்திருந்தால், ட்ரெயின் சென்றவுடன் அந்தப் பக்கம் நாகார்ஜுனா இருப்பார். அந்த மாதிரி, நான் பசுவை தொட்டு வணங்க சென்றவுடன் எனக்கு கோமிய அபிஷேகம் லபித்தது. ராம் கோபால் வர்மாவுக்கும் இந்த மாதிரி தடாலடி டைமிங் கிடைத்திருக்க வேண்டும். அதை உருவி உதயமாக்கிவிட்டார்.

கோடைகாலத்துக்கு ஏற்ற சூடான அருவி. இன்றளவில் சூடான விசயம் ஒகேனக்கல்.

‘எப்பா… இவ்வளவு மூத்திரம் அடிக்குதே இயற்கை? இதற்கும் நியுசன்ஸ் கேசு போடுவதே அண்ணன் கை!’ என்று கவிப்பேரரசர் வைரமுத்து விஜயகாந்த்துக்கு பாட்டெழுதினால் பன்ச் பறக்கும்.

காவேரி பொங்கி வந்தால்தான் பிரச்சினை இல்லை. பிரயாணத்தின்போது பொங்கி வந்தால் மிகக் கொடுமை. அதுவும் நிகழ்ந்திருக்கிறது.

புது தில்லிக்குள் புகுந்திருந்த புதுசு.

ஹிந்தியைத் தமிழில் கூட படிக்கமாட்டோம் என்ற இறுமாப்புடன் வளர்ந்த நண்பர்கள், என்னுடைய வடமொழி புலமையை மெச்சி, ‘மாம்ஸ்… இந்த வண்டி டிஃபன்ஸ் காலனி போகுமான்னு விசாரி’ என்று அனுப்பி வைத்தார்கள். ‘ஏ பஸ் கைஸே சல்தே ஹைன்?’ என்று நான் வினவ, நடத்துனர் சொன்ன ‘பெட்ரோல்’ பதில் எல்லாருக்கும் புரிந்து என்னுடைய மொழி ஆளுமையை இன்றும் சந்தேகாஸ்தபமாகப் பார்ப்பது தனிக்கதை.

இப்படிப்பட்ட ஹிந்தியை வைத்துக் கொண்டு, ராஜஸ்தான்-ஜெய்ப்பூர் சுற்றுலாவில் அர்த்த ராத்திரி அரைத் தூக்கத்தில் ஓட்டிக்கொண்டிருந்த ஓட்டுனரிடம் பிரச்சினையை விளக்கிய சோகக் காவியத்தை சொல்ல ஆசைதான். ஆனால், அதைவிட சட்டென்று நினைவுக்கு வந்த ஒன்றைக் கூறி இந்த அமர்வை பூர்த்தி செய்யலாம். சாஸ்திரீய ஹிந்துஸ்தானி முறை கக்கூசையும் மேற்கத்திய நாகரிக டாய்லெட்டையும் ஒப்பிட்டு நிறைய நகைச்சுவை குஷ்வந்த் சிங் துவங்கி குழும மடல் வரை மணம் வீசும்.

மிஸ்டர் எக்சுக்கு அதுதான் முதல் விமான பயணம். அமிஞ்சிகரையைத் தாண்டாதவருக்கு ஏரோபிளேன் சுற்றுலா. விமானத்தில் கொடுத்ததெல்லாம் சாப்பிட்டதில் வயிறு கலக்குகிறது. இவரைப் போல் இன்னும் பலரும் பெரிய வரிசையாகக் காத்திருக்க, தன் அவஸ்தையை அழகான விமானப் பணிப்பெண்ணிடம் நாணிக் கோணிக் கொண்டு அவசரமாக உணரவைக்கிறார்.

“அவசரத்துக்கு பாவமில்ல. மகளிர் கழிவறையை உபயோகிச்சுக்குங்க. ஆனால், அங்கே மூணு பொத்தான் இருக்கும்! அதை மட்டும் தொடாம இருக்கணும்! புரிஞ்சுதா?” என்று கண்டிப்புடன் அனுப்பி வைக்கப் படுகிறார்.

வந்த காரியம் ஸ்வஸ்தமாக நிறைவேறுகிறது. சொன்ன மாதிரியே மூணு பட்டன் இருக்கிறது. மஞ்சள், சிவப்பு, பச்சை நிறங்களில் அழுத்த அழைக்கிறது.

ஆர்வம் தாங்காமல் மஞ்சள் பொத்தானை தட்டுகிறார். என்ன ஆச்சரியம்! வேகமாகவும் பீய்ச்சாமல், வென்னீராகவும் ஊற்றாமல், சில்லென்று விறைக்காத இளஞ்சூட்டோடு தண்ணீர் கழுவி விட்டுவிடுகிறது. ‘இதைப் போய் அமுக்கக் கூடாதுன்னு சொல்லிட்டாளே’ என்று ஆப்பிள் விழுந்த நியூட்டனாக அடுத்து சிவப்பை தட்டிவிடுகிறார்.

முடி வெட்டியவுடன் ஷாம்பூ போட்டு தலை துவட்டுவது போல் தாலாட்டாக தசைகளை பிடித்து விட்டு, உலர்த்திவிடுகிறது. ‘இதுவல்லவா சொர்க்கம்’ என்று பச்சை விசையை முடுக்குகிறார்.

மூர்ச்சையடைந்து, ‘நான் எங்கிருக்கிறேன்’ என்னும் வசனத்துடன் மருத்துவமனையில் துயில் களைகிறார். அருகே பரிவு கலந்த கோபத்துடன் அதே அழகுடன் விமான சிப்பந்தி.

“நான் எத்தனை தடவை சொன்னேன்? கேட்காம அந்த பச்சை பட்டனை அமுக்கியிருக்கே… மாதவிடாய் வரும் சமயம் வச்சுக்கும் தக்கை அடைப்பானை எடுக்கிறது அது! உன்னோட ஆணுறுப்பு தலைகாணிக்கடியில் பத்திரமா இருக்கு”

கடைசியில் கருத்து சொல்லாமல் போக இது கமல் படம் அல்ல என்பதால்…

அந்தக் காலத்தில் பஞ்சகவ்வியம் புனிதப்பசு என்றால் இன்று சிறுநீர் நிறைந்த இலக்கியம் புனிதப்பசு.

வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம் இரண்டாமாண்டு விழா போட்டிக்கான இடுகை: சங்கம்னா ரெண்டு

பொய் சொல்லக் கூடாது ஹில்லரி

பாஸ்டர் ரைட்டின் பேச்சினால் ஒபாமாவுக்குப் பின்னடைவிருந்தது தெரியும். தற்போது அந்நிலை மாறி அவர் ஏறுமுகத்திலிருக்கிறார். இனப் பிரச்சனை போன்றதொரு அதிசிக்கலான பிரச்சனையை யாரின் மனதையும் புண்படுத்தாதவாறு எதிர்கொண்டு இந்த யுகத்தில் இனப்பிரச்சனையின் முகங்களை இனம் கண்டு அவற்றைக் கடந்து செல்வதன் அவசியத்தை உணர்த்தித் தன் தரப்பையும் விட்டுக்கொடுக்காமல் பிறரையும் வருத்தாமல் அவர் ஆற்றிய உரைக்குக் கிடைத்த வெற்றி இந்த ஏறுமுகம். தன் நண்பரின் வார்த்தைகளால் ஏற்பட்ட காயத்தை தன் வார்த்தைகளால் ஆறச் செய்யும் குணம் கொண்டவர் தலைவரில்லையென்றால் வேறு யார் தலைவர்?

இதற்கிடையில் ஹில்லரி பொதுவில் பொய் சொல்லும் தன் குடும்ப வழக்கத்தை வெளிச்சமிட்டுக் காட்டிவிட்டார்.

பாஸ்னியாவுக்கு அவர் சென்றபோது விமான நிலையத்தில் தீவிரவாதிகளின் துப்பாக்கிச் சூட்டிலிருந்து தப்பக் குனிந்து மறைந்து ஓடியதாக ஒரு மாபெரும் பொய்யைச் சொன்னார். போஸ்னியாவில் தன்னை யாரும் வரவேற்க வரவில்லையென்றும் நேரடியாகக் காருக்குள் ஓடிச் சென்றுவிட்டதாகவும் மிகத் ‘தெளிவாகச்’ சொன்னார்.

என்ன பிரச்சனை? அவர் போஸ்னியாவில் இறங்கி வரவேற்பு நிகழ்ச்சியில் ஒரு சிறுமி உட்பட அவரை வருக வருக என வரவேற்பதை இந்தப் பாழாய் போன மீடியா மக்கள் படம் பிடித்துவிட்டனர்.

அது ஒரு lapse என சமாளித்தார். மறதியின் காரணமாய்ச் சொன்னால் இத்தனை விளக்கமாக துல்லிய விபரங்களுடன் யாரேனும் சொல்ல இயலுமா என மக்கள் யோசிக்கவில்லை போலும்? அவரது புத்தகத்திலேயே இந்த நிகழ்ச்சி சரியான முறையில் சொல்லப்பட்டிருக்கிறதாம்.

ஒபாமா இதெல்லாம் சகஜம் என விட்டுவிட்டார். இவர் அரசியல்வாதிதானா இல்லை இமாலயத்தின் அடிவாரத்தில் ஆயிரம் ஆண்டுகள் தியானத்தைக் கலைத்துவந்த சாமியாரா எனக் குழப்பமே வந்துவிட்டது. ஆனால் அ-அரசியல்தான் தன் ஸ்டைல் என்பதை மீண்டும் ஒபாமா நிரூபித்துவிட்டார்.

ஹிலாரி போஸ்னியா பொய்க்குச் சரியான விளக்கமளிக்காமல் விட்டதும் பரவாயில்லை ஆனால் லேட் நைட் ஷோவில் சென்று அதை கிண்டல் செய்து மக்களை கோமாளியாக்கிவிட்டார் என்பதுவும் இப்போது சர்ச்சைக்குரியதாகிவிட்டது.

ஹில்லரியின் அடுத்த மிகைப்படுத்தல் போஸ்னியப் பொய்யின் தாக்கம் மறைவதற்கு முன்னமே வந்துவிட்டது. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு முறையாக மருத்துவ உதவி அளிக்கப்பட்டு பின்னர் இறந்துபோன ஒரு பெண்ணின் கதையை திரித்து அந்தப் பெண் $100 இல்லாத காரணத்தினால் சிகிச்சை மறுக்கப்பட்டு இறந்துபோனாள் என கதை கட்டிவிட்டார்.

நியூயார்க் டைம்ஸ் அந்த மருத்துவமனையின் நிர்வாகத்திடம் செவ்வி செய்து உண்மை செய்தியை வெளியிட்டுள்ளது. உண்மையில் அந்தப் பெண்ணிடம் காப்பீடு இருந்தது என்றும் நிறுவப்பட்டுள்ளது.

ஹில்லரியின் தலமை பிரச்சார மேலாளர் வேலையிலிருந்து விலகியுள்ளார். மொத்தத்தில் ஹில்லரிக்கு மலையாள நம்பூதிரிகள் ஏதேனும் உதவினால் தேவலை எனத் தோன்றுகிறது.

Hillary lies எனக் கூகிளில் தேடினேன், பக்கம் பக்கமாய் வந்து விழுந்தது.

ஹில்லரியும் தன் வாயால் கெடலாம்.

போஸ்னியா பொய்

மருத்துவப் பொய்
ஹிலரியின் பிற பொய்களின் பட்டியல்

No you can't

ஓபாமாவின் Yes we can பாடல் கேட்டிருப்பீர்கள்.. இதோ புதிய பாடல்!!

மக் கெயினை எப்படியெல்லாம் கடிக்கிறார்கள்…!!!

தாயுள்ளம் – Mr. Mom

“I don’t think mothers are only female. I think mothering is a quality, a character trait. Mothering is about responsibility. There are plenty of men who are great, great mothers.” – Sally Field, making very little sense in Ladies’ Home Journal.

நன்றி: Pavarotti faked finale – The Boston Globe

தொடர்புள்ள பதிவு: எண்ணங்கள்: தாயுள்ளம்

Defining Conspiracy Theory with the help of Shreya

கான்ஸ்பிரசி தியரி என்பதற்கு பொருத்தமான தமிழ் வார்த்தை என்ன?

  1. சூழ்ச்சிக் கொள்கை
  2. சதியோசனை
  3. பந்துக்கட்டு
  4. பிதூரி
  5. உட்பகை
  6. சுற்றிக்கட்டுதல்
  7. கொடுமுடிச்சு
  8. கூட்டுமூட்டு
  9. நெஞ்சாங்கட்டை
  10. மாற்றுக்கருத்து
  11. எதிர்மறைக் கொள்கை
  12. அடிப்படையற்ற எதிர்கொள்கை
  13. குற்றச்சாட்டு கோட்பாடு

உங்களுக்குப் பிடித்ததைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளவும்.

இனி செய்தியைத் தேர்ந்தெடுக்கும் நேரம்.

‘எனக்கு 20 உனக்கு 18’ படத்தின் மூலமாக தமிழ் திரைஉலகில் அறிமுகமாகி, ரஜினி உடன் ‘சிவாஜி’ படத்தில் நடித்ததால் புகழ் உச்சிக்கு சென்றவர் நடிகை ஸ்ரேயா. புத்தாண்டை முன்னிட்டு திருப்பதி வெங்கடாசலபதியை தரிசனம் செய்வதற்காக நேற்று முன்தினம் திருமலைக்கு ஸ்ரேயா சென்றிருந்தார்.

அதிகாலையில் சாமி கும்பிட்டு விட்டு கோவிலுக்கு வெளியே வந்தபோது சிலர் அவரை அடையாளம் கண்டனர். உடனே ஸ்ரேயாவை நெருங்கி `ஆட்டோகிராப்’ கேட்டனர். கையை பிடித்து குலுக்கவும் முயற்சித்தனர். அப்போது ஒரு ரசிகரை ஸ்ரேயா ஓங்கி அறைந்தார். அவருடைய உதவியாளர்களும் அந்த ரசிகரை அடித்து உதைத்தனர்.

ஸ்ரேயாவின் இடுப்பை அந்த ரசிகர் கிள்ளியதால் அவர் கோபமடைந்து அடித்ததாக கூறப்பட்டது. ஸ்ரேயாவிடம் அடி வாங்கியவர் பெயர் ஹரி என்பது, பின்னர் தெரிய வந்தது. திருமலையில் உள்ள ஒரு மடத்தில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வருகிறார்.

ஸ்ரேயா கூறியதாவது:-

கோவிலில் பிரார்த்தனையை முடித்துவிட்டு வெளியே வந்த நான், பத்திரிகையாளர்களிடம் பேசிக் கொண்டு இருந்தேன். அப்போது, எனக்கு பின்னால் நின்று கொண்டு இருந்த ஒருவன் எனது இடுப்பை கிள்ளி சில்மிஷம் செய்தான். புனிதமான இடத்தில் இப்படி நடந்து கொள்வதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது.

முதலில் கண்ணில் படுவது ‘புத்தாண்டை முன்னிட்டு’.

தற்போது ஒகெனக்கல் தமிழ்நாட்டில் இருக்கிறதா/சத்யராஜ் தேர்தலில் நிற்பாரா என்னும் சூழல் நிலவுவதை கணக்கில் எடுக்கவும். கன்னட வருடம் பிறந்ததைக் கொண்டாட ‘முன்னாள் தமிழ்நாடு’ (சென்னை மாகாணத்தில்) இருந்து துண்டாடப்பட்ட தெலுங்கு தேசத்தில் உள்ள கோவிலுக்கு ஷ்ரேயா சென்றிருப்பதன் அவசியம் என்ன? அன்று திருப்பதி தாரை வார்க்கப்பட்டது; இன்று ஹொகேனக்கல் சென்று விடக் கூடுமா?

இவ்வாறு சிந்திப்பது ‘ சுற்றிக்கட்டு’ காட்டினாலும், ஷ்ரேயாவை முடிச்சுப் போடாமல் பாதியில் அனாதரவாகத் தொங்கி நிற்கிறது. இந்த மாதிரி எழுதுவது ‘தொலைநோக்கு பார்வை‘ எனப்படும்.

அடுத்ததாக ஹரி ‘இந்து சமயம்’ சார்ந்த மடத்தில் வேலை பார்க்கும் சமாச்சாரம் கிடைக்கும். இது முற்போக்கு பார்வைக்கு மட்டுமே உதவும். பார்ப்பனியம், ஆரியம், மடத்தலைவன் என்று முடிந்த அளவு தட்டையாக சித்தாந்தப் பார்வை ஆக்கி விடலாம்.

மதம் எல்லாம் ‘கதம் கதம்’ என்று பாபா ரஜினி வழியா உங்களுக்கு? பரவாயில்லை! அடிபட்டவர் துப்புரவு பணியாளர் என்பதால், கவிஞர் வாலியைப் போல் ‘சாக்கடைக்குள் போய் சுத்தம் செய்யும் பேரு; நாலு நாளைக்கு லீவு போட்டா நாறிப்போகும் ஊரு’ என்று இலக்கியப் பார்வை வடிக்கலாம்.

‘ஷ்ரேயாவுக்கு நேர்ந்தது எனக்கும் அன்றாடம் நேர்கிறதே’ என்று பாலாஜி பக்தையின் கதியை எடுத்துவைத்தால் பெண்ணியப் பார்வை என்று முடக்கப்படலாம்.

கரிசல் » பொதுவுடைமை என்பது போல் “சாமானியர்களும் ஏழைகளும் தொடக்கூடாதா என்ன?” என்று ஆணியப் பார்வைக்கு தாவலாம்.

இதெல்லாம் ‘குற்றச்சாட்டு கோட்பாட்டை’ நெருங்கவில்லை.

  • கிராண்ட் ட்ரங்க் எக்ஸ்பிரெஸின் ஏசி வகுப்பு போல் அலுக்காத சினேகா இன்னமும் சந்தையில் காலந்தள்ளுகிறார்.
  • பதிவுசெய்யப்படாத வகுப்பு போல் எப்பொழுது வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் பயணிக்கும் நமீதா;
  • நிதிநிலை அறிக்கையில் தள்ளுபடியான விலை போல குறைந்த சம்பளத்தில் கிடைக்கும் சிம்ரன்;
  • ராஜதானி போல் தலைநகரை நோக்கினாலும் சென்னையிலும் கால் வைத்திருக்கும் அசின்;
  • எப்பொழுது வேண்டுமானாலும் ரத்து செய்யப்படும் என்று கிசுகிசுக்கப்பட்டாலும் பாஸெஞ்சரின் வாஞ்சையான நடிகையர் திலகம் மீரா ஜாஸ்மின்;
  • கிராமம், நகரம் என்று வித்தியாசம் பாராட்டாமல் பயணிக்கும் இருவுள் போல் இரண்டுவிதமான நடிப்பிலும் அசத்தும் ப்ரியாமணி;
  • ரயில்வே சாப்பாடாக சென்நை பிரியாணி பரிமாறிய பூஜா;
  • பொறிக்கு தக்கவாறு, ஒரே தடத்தில் வேகமாக செல்லும் வண்டியும், நின்று நிதானித்து செல்லும் வண்டியும் செல்வது போல் இயக்குநருக்கு ஏற்ப மிளிரும் பாவ்னா;
  • புதிய விமானங்களாக வந்திறங்கும் பாரதி, விஜயலஷ்மிகள்;
  • ஏர் இந்தியாவாகப் பறந்து கொன்டிருக்கும் த்ரிசா;
  • ‘தவமாய் தவமிருந்து’ என்று எக்ஸ்பிரெசாக அறிமுகம் ஆகி ‘பட்டியல்’ சூப்பர் ஃபாஸ்ட் என்று பதவி உயர்வு அடையும் பத்மப்ரியா;

தடம் மாறக் கூடாது. மீண்டும் சதியாலோசனைக்குத் திரும்பவும்.

சொர்ணமால்யா குறித்த கிசுகிசு வந்தால் எவராவது சீந்துகிறார்களா? இல்லையே! புகழுக்கும் புதருக்கும் மோனை மட்டும் ஒற்றுமை அல்ல. இன்று புகழோடு இருப்பவர் நாளை கோப்புகளாக்கி மூலையில் புதைக்கப்படுகின்றனர்.

கொண்டாட்ட மேடையில் நடிகர்களின் பேச்சு மட்டுமே முன்னிறுத்தப்பட்டது. நடிகைகளுக்கு கனவுப்பாடல் தரப்படவில்லை. பின்னணிக்குரல் நாயகி சவீதாவும் வரவில்லை. இப்படிபட்ட சமயத்தில் செய்தியில் எப்படி இடம்பிடிப்பது?

பிடித்தார் துணை நடிகரை; கொடுத்தார் ரியாலிடி டிவியை!

‘நடிக்கிற மாதிரி நடி; அடிக்கிற மாதிரி அடிக்கிறேன்’ என்று சொல்லி வைத்ததை அரங்கேற்ற, அகில லோக செய்திகளிலும் தலைப்புகளில் அடிபடல் ஆனார்.

மெரீனாவில் பெருமாளின் திருக்கல்யாண சேவை பார்த்த மக்களிடம் தன் கடவுள் பக்தியை பறைசாற்றினார். புலியை முறத்தால் விரட்டிய தமிழ்க் கலாச்சாரத்தில் ஊறி விளைந்த வீர பரம்பரை சங்கச் சித்திரத்தை செயலில் காட்டி இலக்கிய தமிழர்களை மெய்சிலிர்க்க வைத்தார் என்று அடுக்கினால் கான்ஸ்பிரசி கொள்கை எனப்படும் என்றறிக!