Monthly Archives: பிப்ரவரி 2009

காதலர் தினக் கதைகள்

Happy Valentines Day!

அன்பர் தினத்திற்காக என்ன வாங்கிக் கொடுக்கலாம் என்று யோசித்துக் கொண்டே விலுக் விலுக்கென்று நடந்தபோதுதான் அது நடந்தது. நடந்தால்தான் பரவாயில்லையே! கால் வழுக்கி கீழே உடல் விழ, வலது கை அதிரடியாகத் தாங்கி தோள் கொடுத்தது.

சமாளித்து பயணத்தைத் தொடர்ந்தேன்.

நண்பரிடமும் இந்த வீர சாகச விழுந்தெழுந்த கதையை சொன்னேன். எங்களுக்கு அறிமுகமான இன்னொரு நண்பருக்கு நிகழ்ந்ததை விவரிக்க ஆரம்பித்தார்.

மனைவி ஊருக்கு புதுசில்லை. என்றாலும் ஆனைக்கும் அடி சறுக்கும் அல்லவா? பனியில் தவறி விழுந்திருக்கிறார். சுற்றும் முற்றும் எவரும் பார்க்கவில்லையே என்று உறுதி செய்துவிட்டு அசால்ட்டாக அப்படியே விட்டும் விட்டார்.

இரண்டு வாரம் கழித்து தலைவலி, மண்டையிடி. மருத்துவரிடம் போனால் எம்.ஆர்.ஐ, ஸ்கேன் செய்து தலையில் கட்டி இருப்பது தெரியவந்துள்ளது. பனியில் விழுந்ததனால்தான் என்று டாக்டர்கள் சந்தேகிக்கிறார்கள்.

பனியில் பார்த்து நடந்து கொள்ளவும்.

~oOo~

முன்னே பின்னே புஷ் அப் செய்து மூன்று வருடமாவது ஆகிப் போயிருக்கும். ‘காக்கி சட்டை’ கமலாக ஒற்றைக் கை புஷ் அப் எடுத்த தோள் பட்டை வலித்துக் கொண்டிருந்தது.

காந்தாரி பரம்பரையில் வந்த மனைவி சும்மா விடுவாரா?

பார்வையற்ற திருதராட்டிரனுக்காக கண்ணைக் கட்டிக் கொண்டாள் காந்தாரி. கை வலியால் பாதிக்கப்பட்ட கணவனுக்காகவோ, என்னவோ!?

கார் கதவை சாத்தும்போது கையை வைத்து சாத்திக் கொண்டு விட்டாள். விரல் நகம் பெயர்ந்து உதிர, உதிரமும் கொட்டுகிறது. எனக்கு கால்கட்டு போட்டார்கள். அவளுக்கு இப்போது விரல்கட்டு.

பட்ட காலே படும்; லே ஆஃப் ஆன குடியே டவுன்சைஸ் ஆகும் என்று பெரியோர்கள் அன்றே பழமொழிந்து இருக்கிறார்கள்.

~oOo~

இந்த சம்பவத்தையும் மதிய உணவில் சம்பாஷித்தோம். இன்னொரு நண்பர் தன் அம்மாவிற்கு செருமனி நிகழ்த்திய கொடூரத்தை நினைவு கூர்ந்தார்.

லுஃப்தான்ஸா சென்னையில் இருந்து ஃப்ரான்க்ஃபர்ட் கொண்டுவிட்டிருக்கிறது. ஏழு எஸ்கலேட்டர், ஆறு செக்யூரிடி செக் முடித்துவிட்டாள் அவரின் அன்னை.

கடைசியாக லிஃப்ட்.

எலிவேட்டரில் பாய்வதற்காக தன் மெல்லிய கையை நடுவில் வீசிப் பார்க்க, லிஃப்ட் கதவு மூடிக் கொண்டு, விரல்களை பதம் பார்த்து விட்டது.

குருதி கொட்ட கொட்ட, முதலுதவி கேட்டிருக்கிறார். ‘விமான நிலைய ஊழியருக்கு அடிபட்டால்தான் ஃபர்ஸ்ட் – எயிட்; உங்களுக்கு நோ எயிட்’ என்று ஜெர்மானிய ஊழியர்கள் நிராகரித்துவிட்டார்கள். வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக ‘Defibrillator இருக்கிறது! வேண்டுமா?’ என்றும் கரிசனையோடு விசாரிக்கிறார்கள்.

கூடவே, இரண்டு பெரிய ஃபாரம்களை நீட்டி, கையெழுத்தும் கோரி இருக்கிறார்கள். கையொப்பம் இட்டால்தான், பாஸ்டனுக்குப் பறக்கும் விமானத்தில் ஏற முடியும். அதாகப்பட்டது, ‘உங்களுக்கு விமானத்தில் அடிபடவில்லை; அதற்கு முன்பே பாதிக்கப்பட்டு விட்டீர்கள்! எங்களுக்கும் உங்கள் உடல் சேதத்துக்கும் எந்தப் பொறுப்பும் கிடையாது!’

கைகுட்டை எடுத்து ஐஸ் கட்டி ஒத்தடம் கொடுத்து வலது கை இழந்த ஏழு மணி நேரப் பயணத்திற்கு பின் பாஸ்டன் வந்தவுடன் நேரே எமர்ஜென்சி சென்றிருக்கிறார்கள்.

‘உடைநெகிழ்ந்தவனுடைய கை, உடனே உதவிக்காப்பது போல் ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு’ என்றுதானே வள்ளுவப் பெருந்தகை சொல்லி விட்டுப் போயிருக்கிறார். சேவை நிறுவனங்களுக்கும், விமான நிலையத்திற்கும், தொலைதூர பயணிகளுக்கும் விரல் நெகிழ்ந்தாலும் பொருந்தும் என்று சொல்லவில்லையே!

எனவே, லிஃப்ட்டுக்குள் நுழையும் அவசரத்தில் கையை நீட்டாதீர்கள். அதுவும் லுப்தான்சாவில் பயணித்து ப்ரான்க்பர்ட்டில் நீட்டவே நீட்ட வேண்டாம்.

~oOo~

மீண்டும் சொந்தக் கதைக்கே வந்து விடுவோம்.

வருத்தந் தரும்மெய்யுங் கையில்
    தழையும்வன் மாவினவும்
கருத்தந் தரிக்கும் நடக்கவின்
    றைய கழல்நினையத்
திருத்தந் தருளும் திகழ்கச்சி
    ஏகம்பர் சீர்க்கயிலைத்
துருத்தந் திருப்பதன் றிப்புனம்
    காக்கும் தொழிலெமக்கே.

எமக்குத் தொழில் ட்விட்டர் அடிப்பது, ப்ளாகில் பின்னூட்டம் இடுவது, விவாதத்தில் வம்பு தேடுவது என்று தேமேன்னு இருந்தவனை பாத்திரம் தேய்ப்பது, சமைப்பது என்று பொறுப்பு கூட்டினார்கள்.

ஆடலுடன் பாடல் போல் படத்துடன் பப்படம் பொரிப்பது எப்படி என்று எழுதியவரை கிண்டல் செய்ததன் கர்மபலனோ? டிஷ்வாஷர் போட்டால் உலகம் வெம்மையாகிறது என்று ஒப்பாரி கட்டுரை எழுதியதற்கான பழிக்குப் பழியோ? Frozen vegetables வாங்குபவரை ஃப்ரெஷ்ஷாக வாங்கி, கட் செய்தால்தான் சத்து என்று மிரட்டியதற்கான கை மேல் பலனோ? மினிமம் – ஒக்க கூட்டு, தோ கறி, மூன்று கோர்ஸ் இருந்தால் மட்டுமே பசியாறுவேன் என்று முனிசிரேஷ்ட வாழ்க்கையின் சாபமோ?

இரண்டு நாள் சமைத்தால் போதும். ஐந்தாண்டு வலைப்பதிந்த அனுபவமும் பத்தாண்டு இலக்கியம் வாசித்ததின் ஆய பயனும் ஒருங்கே சித்திக்கும்.

~oOo~

கல்யாணத்திற்கு முன் என்னுடைய சமையல் சம்பிரதாயமானவை. ஃப்ரென்ச் ஃப்ரைஸ் கொண்டு கறி செய்வோம். ஆனியன் ரிங்ஸ் சாம்பாரும் கிடைக்கும்.

கைக்குக் கிடைத்த பதார்த்தத்தைக் கொண்டு வழக்கமான சிஷ்ருஷைகளை அரங்கேற்றி சமையல் நடக்கும். எல்லாவற்றுக்கும் தாளித்துக் கொட்ட வேண்டும். சாம்பாரோ, ரசமோ, கூட்டோ — எதுவாகினும் கவலை வேண்டாம். எல்லாவற்றிலும் பெருங்காயம் முதல் சிக்கன் மசாலா வரை சகலமும் மிதக்கும்.

எது செய்தாலும் ஒரே ஸ்டான்டர்ட்; அதே டேஸ்ட். யார் நளபாகப் பொறுப்பெடுத்துக் கொண்டாலும் மாறி விடாத சுவை; சிம்பிள் சூத்திரம். எல்லாவற்றையும் போடு; நாலு கலக்கு கலக்கு. நிறைய காரம் போடு. இதுதான் ட்ரேட் சீக்ரெட்.

வந்த புதிதில் மனைவிக்கு இதை செய்து போட்டு மிரளவைத்ததுதான். இன்றளவிலும் ‘அவன் வெண்பொங்கல் எக்ஸ்பர்ட் ஆக்கும்!’ என்று செல்லமாய் வஞ்சப் புகழ்ந்து ஒதுக்கி வைத்திருக்க செய்தது.

‘இப்படித்தான் இருக்க வேணும் சமையலு’ என்று மைக்ரோ மேனேஜ் செய்து, அடுப்பங்கரையிலே மேற்பார்வையிட்டு, ஒவ்வொன்றையும் எப்படி பொறுமையாக பாதி சூட்டில் வைத்து வேக வைக்கவேண்டும் என்று பாலபாடம் எடுத்ததில் மனைவிக்கு சமையலே மறந்திருக்க வேண்டும்.

இப்பொழுதெல்லாம் மைரோவேவ் டின்னர் மாதிரி வருமா? இன்று பீட்சா சாப்பிடலாமா என்று மார்க்கெடிங் செய்து பார்க்கிறேன். சமையலை விட சந்தைப்படுத்தல் சுளுவானது.

~oOo~

சமைத்தேன் என்பதற்கான சாட்சியாக கீழே கொண்டைக்கடலை சாம்பார் கிடைக்கிறது. கூடிய விரைவில் ரெஸிபியுடன் சந்திக்கிறேன்.

kondai-kadalai-sambar-chick-peas-gravy-garbanzo-beans-recipes

ஆர். வெங்கடேஷ் – மூன்று கதை

ஆர். வெங்கடேஷ் சமீபத்தில் எழுதிய கதைகள் கிடைத்தது. வாய்ப்பைத் தவறவிடாமல் விமர்சனம்.

இலகுவான வாசிப்புக்கு ஏற்றவை. வாசகனுக்கு சிரமம் தராத நடை. தற்கால இடங்களும் நகரத்தின் விரிவாக்கங்களும் பின்னணியாக உள்ளது. பதைபதைக்கும் விறுவிறுப்பு கிடைக்காது. சுவாரசியத்திற்கும் பஞ்சமில்லை.

~oOo~

temple-elephant-sundar-venkatesh-story-heroஅழகான பெண் வேண்டும்!

‘நான் விசுவலாகத்தான் இதை விளக்க முடியும்’ என்று மார்க்கரும் போர்டுமாக அலைபவரா நீங்க?

அப்படியானால் சுந்தர் நம்மவன். அசகாயமாக செய்து முடிப்பதை பேச்சில் சூரத்தனம் இல்லாமல் கருமமே தொடர்ச்சியாக காலங்காலமாக நடத்த விதிக்கப்பட்டவன்.

அமெரிக்காவின் திருப்பதியாம் நயாகரா நீர்வீழ்ச்சிப் பயணத்தை நினைவூட்டுகிறார். விச்ராந்தியாக உடற்பயிற்சிக்குப் பின்னுள்ள களைப்புற்று உட்காரும்போது தெய்வம் பிரசன்னமாகி அருள்பாலிக்கிறார்.

~oOo~

காதலென்பது…

lovers-lane-together-college-bikes-hold-hands-valentine‘இதயமே! இதயமே! உன் மௌனம் என்னைக் கொல்லுதே!’ என்று முகாரி தலை ராகம் பாடும் இளசு.

இப்பொழுதைய தலைமுறை ‘அதிரடி’ என்பது அதீதமான கற்பனை. இன்று தாடி வளர்க்காமல், தம்/தண்ணி அடித்து பூச்சி மருந்து அருந்தாமல் மருகும் கல்லூரி மாணவனின் களம்.

தெரிந்த முடிவை நோக்கிய பயணம்: கதையிலும் கதைநாயகனிலும்.

~oOo~

தொடரும்…

lonely-top-busy-lazy-rest-actress-story-flickrஅது யாரு சிம்ரனா? மீனா? மாதுரி தீக்சிட்?

முன்னாள் நடிகை நாடகம் பார்க்கும் கதை. அழுத்தம் குறைவு. சம்பவங்களினால் கோர்க்காமல் விவரிப்பில் வளர்வதால் மனதில் எதுவும் வெண்பஞ்சு snowஆக உரசாமல் பனிக்கட்டியாக இடறுகிறது.

மூன்று கதைகளில் இது கொஞ்சம் ஏமாற்றம் தரும் ஆக்கம்.

~oOo~

வெங்கடேஷ் சிறுகதைத் தொகுப்பு வெளியாகி உள்ளதா? அடுத்த கலெக்சன் ரெடி என்று பட்சி சொல்லுகிறது.

என்னைப் போன்ற புதிய எழுத்தாளர்கள, எழுத முயல்பவர்கள் கற்றுக் கொள்ள இந்தக் கதைகளை மனனப் பகுதியாக ஈராறு முறை படிப்பது நலம்.

எவ்வாறு காட்டாறாக துவங்குவது, ஆரம்பித்த வேகத்தை சீராக்குவது, பின்னோக்கி ஃப்ளாஷ்பேக் சொல்லிவிட்டு, அடுத்த காட்சிக்கு கதாசிரியர் சென்றுவிட்டதை எங்ஙனம் உணர்த்துவது, சொற் சிக்கனம், வடிவ நேர்த்தி, என்று சிறுகதையின் சூத்திரங்களைத் தெளிய உதவலாம். இதெல்லாம் சித்திக்காவிட்டாலும் நல்ல கதை படித்த திருப்தி கிட்டும் என்பதற்கு நான் கியாரண்டி.

அமெரிக்க தேர்தல் 2008 ஒரு பார்வை – ச. திருமலை

நன்றி: விஜயபாரதம்

கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக கடுமையாக நடந்த தேர்தல் ஒரு முடிவுக்கு வந்து பராக் ஹுசைன் ஒபாமா அமெரிக்காவின் 44வது அதிபராகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.

கென்யா நாட்டைச் சேர்ந்த ஆப்பிரிக்க இனத் தந்தைக்கும், அமெரிக்காவைச் சேர்ந்த வெள்ளை இனத் தாய்க்கும் மகனாக அமெரிக்காவின் ஹவாய் மாநிலத்தில் 1961ம் ஆண்டு பிறந்த கலப்பினத்தவரான பராக் ஒபாமா உலகமே வியக்கும் இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

அமெரிக்காவில் ஒரு வெள்ளையர் மட்டுமே ஜனாதிபதியாக வர முடியும் என்று உலக மக்களிடம் நிலவிய எண்ணத்தைப் போக்கி அமெரிக்கா என்பது தகுதியையும் திறமையையும் மதிக்கும் ஒரு நாடு என்பதை காண்பித்துள்ளார். திறமையுள்ள எவருமே அவ்ருக்குத் தகுதியான பதவியை அடைய நிறம், இனம் எதுவும் தடையாக இருக்க முடியாது என்பதை அவரது வெற்றி காட்டியுள்ளது.

47 வயதாகும் பராக் ஒபாமா உலகப் புகழ் பெற்ற ஹார்வார்ட் பல்கலையில் சட்டம் பயின்ற ஒரு புத்திசாலியான வழக்கறிஞர். அவரது மனைவி மிச்சயில் ஒபாமாவும் அந்தப் பல்க்லையில் சட்டம் பயின்றவரே. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள்.

சட்டம் பயின்று பல லட்சம் சம்பள வருமானம் வரும் வாய்ப்பு இருந்தாலும் தன்னை சமூக சேவையில் ஈடுபடுத்திக் கொண்டு அரசியலில் நுழைந்து இல்லினாய்ஸ் மாகாணத்தில் இருந்து செனட்டராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார். தொடர்ந்து தனது அபாரமான பேச்சாற்றலாலும், கூர்மையான மதியினாலும், தெளிவான சிந்தனையினாலும் மக்கள் மற்றும் தனது கட்சியினரின் ஆதரவையும் பெரு மதிப்பையும் பெற்று வந்து 8 ஆண்டுகளுக்குள் நாட்டின் மிக உச்சமான பதவியை அடைந்து சாதனை படைத்திருக்கிறார்.

அமெரிக்க வரலாற்றிலேயே முதன் முதலாக ஒரு சிறுபான்மை இனத்தவர் ஜனாதிபதி பதவியை அடைந்திருக்கிறார். அமெரிக்க மக்களின் இந்தத் தேர்வு உலக நாடுகளிடையிலும் அமெரிக்கா மீதான ஒரு நம்பிக்கையும், நன் மதிப்பையும் ஈட்டியிருக்கிறது.

ஒரு இருபது ஆண்டுகளுக்கு முன்பாகக் கூட யாரும் நினைத்துப் பார்த்திருக்க இயலாத ஒரு கனவு நனவாகி இருக்கிறது.

அமெரிக்கத் தேர்தல் அமைப்பு சற்று சிக்கலான தேர்தல் அமைப்பு. இந்தியாவில் மக்கள் பாராளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.

ப்ராளுமன்ற உறுப்பினர்களில் அதிக இடங்கள் பெற்ற கட்சியானது தங்களுக்குள் ஒரு பாராளுமன்ற உறுப்பினரை பிரதமராகத் தேர்ந்தெடுக்கிறது. அவர் அந்த பாராளுமன்ற உறுப்பினர்களிடமிருந்தே தனது மந்திரி சபையைத் தேர்வு செய்து அமைத்துக் கொள்கிறார். இந்தியாவின் ஜனாதிபதி பதவி பெரும்பாலும் ஆளுங்கட்சிக்குக் கட்டுப்பட்ட ஒரு ரப்பர் ஸ்டாம்ப் பதவியாகவே நின்று விடுகிறது.

அமெரிக்காவில் மூன்று விதமான அரசியல் நிர்ணய அமைப்புக்கள் உள்ளன.

ஜனாதிபதியும் அவரது அமைச்சர்களும் நிர்வாகத் தூணாகவும், காங்கிரஸ் எனப்படும் பாராளுமன்றம் மற்றொரு தூணாகவும், நீதி மன்றங்கள் மூன்றாவது தூணாகவும் இருந்து அமெரிக்காவை ஆட்சி செய்கின்றன, சட்டட்ங்களை உருவாக்கி அமுல் படுத்துகின்றன.

இதில் ஜனாதிபதியை நேரடியாக மக்கள் ஓட்டுப் போட்டுத் தேர்ந்தெடுக்கிறார்கள்.

ஒவ்வொரு மாநிலத்திற்கும் இத்தனை உறுப்பினர்களின் ஓட்டு என்ற கணக்கில் ஒவ்வொரு மாநிலத்த்திலும் எந்த வேட்பாளர் ஜெயிக்கிறாரோ அவருக்கு அந்த எண்ணிக்கை வழங்கப் பட்டு இறுதியில் அதிக பிரதிநிதித்துவ எண்ணிக்கப் பெறும் வேட்பாளர் வெல்கிறார். ஒட்டு மொத்தமாக அமெரிக்கா முழுவதும் அதிக ஓட்டுக்கள் வாங்கியிருந்தாலும் கூட மாநில அளவிலான எண்ணிக்கையைப் பொறுத்த்து ஒரு வேட்பாளர் தோல்வி அடையவும் கூடும்.

கலிஃபோர்னியா மாகாணத்தில் யார் ஜெய்க்கிறார்களோ அவர்களுக்கு 55 ஓட்டுக்கள், ஃப்ளோரிடா மாநிலத்தில் ஜெயிப்பவருக்கு 27 வாக்குகள் என்று மொத்தம் யார் 270 வாக்குகளை மாநிலவாரியாகப் பெற்ற வெற்றியின் அடிப்படையில் பெறுகிறார்களோ அவரே வெற்றி பெற்றதாக அறிவிக்க்ப் படுகிறார்கள்.

அப்படி பல மாநிலங்களில் அதிக ஓட்டுக்கள் பெற்று மொத்தம் 364 எலக்டோரல் காலேஜ் எனப்படும் பிரதிநித்துவ வாக்குகள் பெற்று மாபெரும் வெற்றியை பெற்றிருக்கிறார் ஒபாமா.

மேலும் ஒட்டு மொத்த மக்கள் அளித்த வாக்குகளின் அடிப்படையிலும் 52 சதவிகிதம் பெற்று சாதனை படைத்து ஒரு மெஜாரிட்டி ஆதரவு பெற்ற ஜனாதிபதியாக வெற்றி பெற்றிருக்கிறார். வெற்றி பெற்றவர் தனது மந்திரி சபையைத் தேர்ந்தெடுக் கொள்வார்.

மந்திரிகள் பாராளுமனற உறுப்பினர்களாக இருக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. தகுதியும் திறமையும், அனுபவமும் உள்ள எந்தக் குடிமகனாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஜனாதிபதி தேர்ந்தெடுக்கும் மந்திரிகளை செனட் உறுப்பினர்கள் கேள்விகள் கேட்டு பரிசோதனை செய்து ஒப்புதல் அளித்த பின் அவர்கள் மந்திரியாகச் செயல் படுவார்கள்.

காங்கிரஸ் என்பதில் செனட், ஹவுஸ் ஆஃப் ரெப்ரசெண்டேடிவ்ஸ் எனப்படும் பிரதிநிதிகள் சபை என்று இரண்டு சபைகள் உள்ளன. செனட்டில் மொத்தம் 100 உறுப்பினர்கள். செனட் உறுப்பினரின் பதவிக் காலம் 6 வருடங்கள். ஒரு மாநிலத்திற்கு இரண்டு உறுப்பினர் வீதம் மொத்தம் 100 செனட்டர்கள் தேர்ந்தெடுக்கப் படுவார்கள்.

இதற்கு நமது பாராளுமன்றம் போல ஒட்டு மொத்தத் தேர்தல் இருக்காது, நமது ராஜ்ய சபை போல பதவி முடிய முடிய தேர்வுகள் இருக்கும். பிரதிநிதிகள் சபையில் 435 உறுப்பினர்கள் அவர்களின் பதவிக்காலம் 2 வருடம், ஒவ்வொரு இரண்டு வருடத்திலும் 435 இடங்களுக்கும் தேர்தல் நடக்கும்.

செனட்டில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர்கள் 57 இடங்களையும், பிரதிநிதிகள் சபையில் 251 இடங்களையும் பெற்று ஏறக்குறையப் பெரும்பான்மை பெற்ற கட்சியாக இருக்கிறார்கள்.

ஜனாதிபதியும் ஜனாநாயக் கட்சியின் வேட்பாளரே. தனது கட்சியினரே பெரும்பான்மையாக இருப்பதால் தான் நினைக்கும் திட்டங்களுக்கு காங்கிரஸின் ஒப்புதல் வாங்குவது ஓரளவுக்கு ஒபாமாவுக்கு வசதியாக இருக்கும் என்பது அவருக்கு அனுகூலமான ஒரு நிலைமையாகும்.

அமெரிக்காவில் ரிபப்ளிக்கன் கட்சி, டெமாக்ரடிக் கட்சி என்ற இரு பெரும் கட்சிகள் இருக்கின்றன. இவை போக ஒரு சில சிறு கட்சிகளும் உள்ளன. அவர்களுக்கு ஒரிரு சதவிகித ஆதரவு மட்டுமே உள்ளது.

டெமாக்ரடிக் கட்சியின் சார்பில் பராக் ஒபாமாவும், ரிபப்ளிக்கன் கட்சியின் சார்பில் ஜான் மெக்கெயின் என்பவரும் போட்டியிட்டார்கள். இந்த ஜனாதிபதி தேர்தலுக்கான முஸ்தீபுகள் ஒரு வருடத்திற்கு முன்பாகவே தொடங்கி விடுகின்றன.

இரண்டு கட்சியிலும் ஜனாதிபதிக்குப் போட்டியிட விருப்பம் உள்ள அனைவரும் அவர்களது உள்கட்சி தேர்தலில் கட்சி உறுப்பினர்களின் ஆதரவைப் பெற வேண்டும். ஒரு சில இடங்களில் பொது மக்களும் கலந்து கொண்டு ஓட்டளிக்கலாம்.

அப்படி இரண்டு கட்சிகளிலும் யார் அதிக வாக்குகள் பெற்று ஜெயிக்கிறார்களோ அவர்கள் அந்தந்தக் கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப் படுகிறார்கள். ஆகவே திறமையும். தகுதியும், ஆளுமையும், ஆதரவும் செயல் திட்டங்களும், பிரச்சாரத்திற்கான பண பலமும் உடையவர்களே இறுதி வரை போட்டியிட்டு வேட்பாளருக்கான தகுதியை அடைந்து அந்தந்தக் கட்சிகளால் தங்களது அதிகாரபூர்வமான வேட்பாளர்களாக நிறுத்தப் படுகிறார்கள்.

ஒரு பெரிய மாநாட்டை நடத்தி இரண்டு கட்சிகளும் தங்களது அதிகாரபூர்வமான வேட்பாளரை அறிவிக்கின்றன. அந்த மாநாட்டின் பொழுது ஜனாதிபதிப் பதவிக்கான வேட்பாளர் தனது துணை ஜனாதிபதி வேட்பாளரைத் தேர்வு செய்து அறிவிக்கிறார். அதன் பிறகு இரண்டு கட்சியின் வேட்ப்பாளர்களும் மக்களிடம் சென்று, மாநிலம் மாநிலமாகச் சென்று தங்களது கொள்கைகளையும் திட்டங்களையும் அறிவித்து ஆதரவு கேட்க்கிறார்கள்.

மக்களும் அவர்களது தகுதி, திறமை, கொள்கைகள் ஆகியவற்றை அலசி ஆராய்ந்து, தத்தம் சார்புள்ள கட்சி ரீதியாகவோ அல்லது யார் சிறந்த வேட்பாளர் என்பதை பகுத்தறிந்தோ தங்கள் ஓட்டுக்களை அளிக்கின்றனர்.

ஜான் மெக்க்யின் சார்ந்துள்ள ரிபப்ளிக்கன் கட்சி தீவிரமான கிறிஸ்துவர்களின் ஆதரவினைப் பெற்ற மத ரீதியான கொள்கைகளைக் கொண்ட கட்சி.

ஒபாமா சார்ந்துள்ள டெமாக்ரடிக் கட்சி சற்று ப்ரந்த மனமுள்ள லிபரல் கட்சி. ரிபப்ளிக்கன் கட்சியானது கருக்கலைப்புக்கு எதிரானது,. உலகத்தை ஆண்டவன் மட்டுமே படைத்தான் என்பதில் நம்பிக்கையுள்ளது. ஓரினத் திருமணத்தை எதிர்ப்பது. வெள்ளை அமெரிக்கர்களால் பெரிதும் ஆதரிக்கப் படுவது. சர்ச்சுக்களின் ஆதரவினைப் பெற்ற கட்சி.

டெமாக்ரடிக் கட்சி லேசான இடதுசாரி கட்சி எனலாம். தொழிற்சங்கத் தொழிலாளர்கள், வெள்ளையரல்லாத இனத்தவர்கள் போன்ற பரவலான ஆதரவைப் பெற்றக் கட்சி. கருக்கலைப்பு செய்வது அவரவர் தேர்வு என்பதும், ஓரினத் திருமணத்தைச் சட்டப் படி தடை செய்யத் தேவையில்லை என்றும் சற்றே லிபரலான கொள்கைகள் உடைய கட்சி.

ரிபப்ளிக்கன் கட்சிக்கு பெரும்பாலான மத்திய, தெற்குப் பகுதிகளில் பலத்த ஆதரவு உள்ளது. டெமாக்ரடிக் கட்சியினருக்கு கடற்கரையோர கிழக்கு, மேற்கு மாகாணங்களில் பலத்த ஆதரவு உள்ளது.

இவை போக இரண்டு கட்சியினருக்கும் பொருளாதாரக் கொள்கைகளை வகுப்பதிலும் பலத்த வேறு பாடுகள் உள்ளன.

பொருளாதாரக் கொள்கையில் ரிபப்ளிக்கன் கட்சி அரசாங்கத்தின் செலவுகளும், வரிகளும் குறைந்து இருக்க வேண்டும் என்ற கொள்கை உடையது,டெமாக்ரடிக் கட்சியோ பணக்காரர்களிடம் அதிக வரி விதித்து ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்ற கொள்கையும், கட்டுப்பாடுகள் அதிகம் இருக்க வேண்டும் என்ற கொள்கையும் உடையது.

இந்த முறை வெளியுறவுக் கொள்கையிலும் இரண்டு கட்சிக்கும் வேறுபாடுகள் இருந்தன.

ஈராக்கில் இன்னும் அதிக ஆண்டுகள் தொடர்ந்து அமெரிக்க ராணுவம் இருக்க வேண்டும் என்பதும், ஈரானுடன் அடுத்துப் போருக்குப் போய் அடக்க வேண்டும் என்றும் ஜான் மெக்கெயின் மற்றும் அவரது ரிபப்ளிக்கன் கட்சி உறுதியாக நின்றது. ஒபாமா ஈராக்கில் இருந்து அமெரிக்க ராணுவம் வெளியேற வேண்டும் என்பதிலும், ஆப்கானிஸ்தானில் வளர்ந்து வரும் தாலிபான்களை ஒடுக்க வேண்டும் என்பதிலும், பாக்கிஸ்தானிற்குள் நுழைந்து அங்கிருக்கும் தாலிபான்களையும் பின்லாடனையும் ஒழிக்க வேண்டும் என்றும் உறுதியாக இருந்தார்.

கல்வி, மருத்துவம் ஆகிய துறைகளிலும், சுற்றுச் சூழல் விஷயங்களிலும் இரு வேட்பாளர்களும் பெரிதும் வேறு பட்டனர்.

அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் தோண்டி எண்ணெய் எடுக்க வேண்டும் என்பது மெக்கெயின், பெல்லன் நிலைப்பாடாகவும், மரபுசாரா மாற்று எரிபொருள் ஆராய்ச்சியில் அதிக முதலீடு செலுத்தி பெட்ரோலுக்கு மாற்று எரிபொருள் கண்டு பிடித்து அதன் மூலம் அரேபிய நாடுகள் மீதான அமெரிக்காவின் சார்பு நிலையைப் போக்குவேன் என்பது ஒபாமாவின் நிலைப்பாடாகவும் இருந்தது.

ஜான் மெக்யென் தன் துணை ஜனாதிபதி வேட்பாளராக சாரப் பெல்லன் எனப்படும் அலாஸ்கா மாநிலத்து கவ்ர்னரையும் (நமது முதல்வர் போன்ற பதவி) ஒபாமா தன் துணை வேட்பாளராக ஜோ பைடன் என்னும் செனட்ட்ரும் வெளியுறவுக் கொள்கையில் ப்ழுத்த அனுபவம் உள்ளவரையும் தேர்ந்தெடுத்திருந்தனர்.

சாராப் பெல்லன் ஒரு மாநிலத்தின் கவர்னராக இருந்தும் கூட அவரது அனுபவின்மையும், பொது அறிவின்மையும் அவரது பேட்டிகளில் வெளிப்பட்டு அவ்ர் ஒரு மோசமான தேர்வு என்ற செய்தி மக்களிடம் பரவி விட்டது. பெல்லனின் தேர்வு மெக்கெயினின் வெற்றியை மேலும் பாதித்தது.

இரண்டு கட்சியினரின் மாநாடுகளும் பிரமாண்டமாக நடை பெற்றன. டெமாக்ரடிக் கட்சி மாநாட்டில் பல தரப்பட்ட மக்களும் கலந்து கொண்டனர். ஆப்பிரிக்க இன அமெரிக்கர்களும், தென்னமரிக்கர்களும், சீனர்களும் அதிக அளவில் காணப் பட்டனர். இளைஞர்களும் முதல் முறை ஒட்டுப் போடுபவர்களும் அதிக அளவில் காணப் பட்டனர்.

மாநாட்டுக் கூட்டம் பல இனங்களும் கலந்த ஒரு வண்ணக் கலவையாக இருந்தது. மேடையிலும் நிறைய ஆப்பிரிக்க அமேரிக்கர்களும், லத்தீன் அமெரிக்கர்களும் பேசினார்கள். இது எல்லா தரப்பினரையும் கவர்ந்த ஒரு கட்சி என்பது நிரூபணமாகியது.

மாறாக ரிபப்ளிக்கன் கட்சி மாநாட்டில் ஆப்பிரிக்க அமெரிக்கர்களையோ, லத்தீன் அமெரிக்கர்களையோ லென்ஸ் வைத்துத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டி இருந்தது. பன்முகத்தன்மையின்றி சுத்தமாக இல்லாமல் தூய வெள்ளையாக மட்டுமே காட்சியளித்தது.

மாநாட்டில் கூடிய கூட்டம் தவிர இரண்டு ம்நாட்டுக்களையும் பல மில்லியன் மக்கள்
டெலிவிஷனில் கண்டிருக்கிறார்கள்.

இந்தியாவில் அரசியல் கட்சி மாநாடுகள் பொது தொலைக்காட்சிகளில் (கட்சி சார்பு டி விக்களில் அல்ல) முழு நிகழ்ச்சிகளும் காண்பிக்கப் படுவது இல்லை. அப்படியே காண்பிக்கப் பட்டாலும் இத்தனை லட்சம் மக்கள் ஆர்வத்துடன் கண்டிருக்க வாய்ப்பும் இல்லை என்பது ஒரு முக்கியமான வேறுபாடாகும். அமெரிக்கத் தேர்தலில் பங்கு பெறும் ஆர்வமுள்ள கட்சி சாராத நடுநிலை மக்கள் அனைவரும் டி வி யில் நடக்கும் அரசியல் விவாதங்கள், டி வி யில் கான்பிக்கப் படும் பேச்சுக்ள் ஆகியவற்றை வைத்தே தங்கள் தேர்வை முடிவு செய்கிறார்கள்.

சார்பு நிலைகள் இருந்தாலும் டி வி க்கள் அமெரிக்க ஜன்நாயகத்தில் முக்கிய பங்கு ஆற்றுகின்றன. மாநாட்டுப் பேச்சு, டெலிவிஷன் விவாதம், நேரடியாக மக்களைச் சந்த்தித்து ஓட்டுச் சேகரித்தல் ஆகிய பிரச்சார உத்திகளை இரு வேட்பாளர்களும் பின்பற்றினார்கள். இருந்தாலும் பராக் ஒபாமா தனது தேர்தல் பிரச்சார உத்திகளிலும் பெரும் மாறுதலைக் கொண்டு வந்திருந்தார். இணையத்தையும், ஃபேஸ் புக், பாட்காஸ்ட், டெக்ஸ்ட் செய்திகள், டிவ்ட்டர் செய்திகள், ப்ளாகுகள், யூட்யூப் போன்ற பல்வேறு தொழில் நுட்பங்களை மிகத் திறமையாக தன் வெற்றிக்கு ஒபாமா பயன் படுத்திக் கொண்டது அவரது திட்டமிடலையும், நுட்பத்தையும் காட்டுகின்றன.

தொழில்நுடபத்தைத் தன் தேர்தலுக்கு மிக வலிமையாகப் பயன் படுத்திக் கொண்டதன் மூலம், இணையம் மூலமாகவே கிட்டத்தட்ட அரை பில்லியன் டாலர் நிதி குவிக்க முடிந்திருக்கிறது. அதைக் கொண்டு லட்சக்கணக்கான டெலிவிஷன் விளம்பரங்களைத் தொடர்ந்து கொடுத்து மக்களுடன் தொடர்ந்து தொடர்பு கொண்டிருந்தார்.

மேலும் அமெரிக்க வரலாற்றிலேயே முன் எப்பொழுதும் இருந்திராத அளவுக்கு இளைஞர்களையும், மாணவர்களையும் தன் தொண்டர்களாகச் சேர்த்து அவர்களை ஒருங்கிணைத்துத் தேர்தல் நாள் அன்று ஓட்டுச் சாவடிக்கு மக்களைக் கொண்டு சேர்ப்பதில் பெரும் வெற்றி பெற்றார்.

அவரது வெற்றிக்கு முதன் முறை வாக்காளர்களும், இளைஞர்களும் ஒரு முக்கிய காரணியாக இருந்தனர். அவர்களை மிகத் திறமையாகப் பயன் படுத்திக் கொண்டு அவர்களுடன் நெருக்கமான உறவையும் நட்பையும் வளர்த்துக் கொண்டது ஒபாமாவின் அபரிதமான வெற்றிக்கு ஒரு முக்கிய காரணமாக இருந்தது. அமெரிக்காவின் வழக்கத்துக்கு மாறாக இந்த முறை 64 சதவிகித வாக்காளர்கள் ஓட்டளித்தது குறிப்பிடத்தக்கது.

டெமாக்ரடிக் கட்சியின் வேட்பாளர் ஒபாமாவின் பேச்சுக்கள் அனைத்துமே அபாரமாக இருந்தது. இந்த இளம் வயதில் இந்த இடத்தை இவர் எப்படி எட்டினார் என்பதன் ரகசியம் அவரது அற்புதமான பேச்சாற்றலில் இருப்பது புரிந்தது. அவரது பேச்சில் தான் ஆட்சிக்கு வந்தால் என்னென்ன செய்வேன் என்பதை பட்டியலிட்டார்.

ஈராக்கில் இருந்து படைகளை விலக்கி ஆப்கானிஸ்தானத்திற்கு படைகளை அனுப்புவேன், பாக்கிஸ்தானிற்குள் ஒளீந்திருக்கும் பின்லாடன் குழுவினரை அழிப்பேன். ஈரானுடன் முதலில் பேச்சு வார்த்தை நடத்துவேன். இன்னும் பத்தாண்டுகளில் சுத்தமாக மிடில் ஈஸ்டின் எண்ணெய்க்காக காத்திருக்கும் நிலையை மாற்றுவேன், அமெரிக்காவில் மாற்று எரிபொருள் கண்டுபிடிப்புக்கான ஆராய்ச்சித் தொகையை அதிகரித்து கண்டு பிடிப்புகள் மூலமாக எரிபொருள் தன்னிறைவை ஏற்படுத்துவேன், புஷ்ஷினால் இன்று ஏற்பட்டிருக்கும் கடுமையான நிதி நெருக்கடியைப் போக்குவேன் என்று தான் செய்யப் போவதைப் பட்டியலிட்ட ஒபாமா, புஷ்ஷின் மோசமான ஆட்சியினால் அமெரிக்கா இன்றிருக்கும் நிலமையை விளக்கினார்.

எட்டு வருட ஆட்சி போதும் அது இனியும் வேற்று ரூபத்தில் தொடர வேண்டாம் எயிட் இஸ் எனஃப் என்ற கோஷத்தினை எழுப்பினார்.

பேசிய அனைவரும் எதிர் கட்சி வேட்பாளரான ஜான் மெக்கயினுக்கு மிகுந்த மரியாதை கொடுத்தார்கள். அவரது ராணுவ அனுபவத்தையும், தியாகத்தையும் வெகுவாகப் போற்றினார்கள். அனைவரும் அவரை மிகவும் மரியாதைக்குரிய நண்பர் என்றே விளித்தார்கள். அப்பேர்ப்பட்ட நல்ல மனிதர் புஷ்ஷின் மடத்தனமான ஆட்சிக்கு ஆதரவு அளித்ததையும் 90% புஷ்ஷின் தீர்மானங்களை மெக்கயின் ஆதரித்ததினால் அவர் ஒரு புஷ்ஷின் நீட்சியே ஆகவே அவருக்கு ஓட்டளிப்பதும் புஷ்ஷின் ஆட்சியைத் தொடர வைப்பதும் ஒன்றே என்ற ஒரே குற்றசாட்டை மட்டும் மீண்டும் மீண்டும் அனைத்துப் பேச்சாளர்களும் பேசினார்கள்.

ரிபப்ளிக்கன் கட்சி கூட்டங்களில் ஒபாமா மீது அவரது நடுப் பெயரை வைத்து சந்தேகங்கள் கிளப்பட்டன. அவருக்கு இருந்த ஒரு சில அறிமுகங்களை வைத்து அவர் மீது தீவீரவாதச் சந்தேகமும் வீசப் பட்டன. ஏராளமான தனி நபர் தாக்குதலுக்கு உள்ளானாலும் கூட அவற்றையெல்லாம் மிக அமைதியான புன்னகை தவழும் முகத்துடனும், தீர்க்கத்துடனும், மன உறுதியுடனும் பொறுமையுடனும் ஆத்திரப் படாமல் எதிர் கொண்டது அவர் மீது மக்களுக்குப் பெருத்த மரியாதையை உருவாக்கி அவரது வெற்றிக்கு வித்திட்டது.

இந்திய அரசியல்வாதிகள் பேச்சுக்கும் அமெரிக்க அரசியல்வாதிகள் பேச்சுக்கும் உள்ள ஒரே ஒற்றுமை தங்கள் வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றப் போகிறோம் என்பது குறித்த தெளிவின்மை. அவை பற்றிய அக்கறையின்மையும் எப்படியாவது மக்களைத் தங்கள் வசீகரமான பேச்சுக்களால் கவர்ந்தால் மட்டும் போதுமானது என்ற அலட்சியமும் பொதுவான அம்சமாக விளங்குகிறது.

ரிபப்ளிக்கன் கட்சி மாநாட்டில் முக்கியமாக தவிர்க்க விரும்பிய இரண்டு பெயர்கள் புஷ் மற்றும் சென்னி. அவர்கள் மாநாட்டுப் பக்கம் எட்டிப் பார்க்காமல் இருக்க வேண்டுமே என்று ஆண்டவனை வேண்டிக் கொண்டு இருந்தனர். அந்த அளவுக்கு கெட்ட பெயரைச் சம்பாதித்துக் கொடுத்த ஜனாதிபதியையும் துணை ஜனாதிபதியையும் தவிர்க்க முடிவு செய்தனர்.

ரிபப்ளிக்கன் கட்சியில் பேசிய அனைவரும் மீண்டும் மீண்டும் மெக்கெயின் வியட்நாம் போரில் சிறைப் பிடிக்கப் பட்டதையும் அவர் அங்கு அனுபவித்த சித்ரவதைகளையும் அவரது மன உறுதியையும் பற்றியே மீண்டும் மீண்டும் பேசிப் போரடித்தார்கள். சொன்னதையே பல விதங்களில் திருப்பித் திருப்பிச் சொன்னார்கள்.

ரிபப்ளிக்கன் கட்சியின் இரண்டு வேபாளர்களும் திறமையாக, அலங்காரமாக,கவர்ச்சியாகப் பேசினார்கள் பெரும் வரவேற்பை பெற்றார்கள். ஆனால் மக்களை வாட்டும் எந்தப் பிரச்சினையைப் பற்றியும் பேசத் துணியவில்லை.

அவர்கள் குறி அமெரிக்காவில் எண்ணெய் தோண்டுவதிலும், வரி விலக்குக் கொடுப்போம் என்பதிலும், ஒரீன திருமணத்தைத் தடுப்போம், அபார்ஷனைத் தடுப்போம் என்பதில் மட்டுமே இருந்தன. வேலையின்மை, ரிசஷன், டாலர் மதிப்பிழப்பு, வீடுகள் மதிப்பிழந்து உருகும் மிக அபாயகரமான நிலமை, பண வீக்கம் போன்ற எதையுமே பேசத் தயாராக இல்லை. மெக்கெயின் மீண்டும் ஈராக்கில் ஆக்கிரமிப்பைத் தொடருவோம் என்றே பேசிக் கொண்டிருந்தார். அவரது துணை ஜனாதிபதி வேட்பாளரான பெண்மணியோ அபார்ஷனை ஒழிப்பேன் அலாஸ்காவில் எண்ணெய் தோண்டுவேன் என்றார்..

மாநாடுகளைத் தொடர்ந்து இரு வேட்பாளர்களும் நேருக்கு நேரான விவாதங்களில் மூன்று முறை கலந்து கொண்டு உள்நாட்டுப் பிரச்சினைகள், பொருளாதாரப் பிரச்சினைகள்,வெளிநாட்டுக் கொள்கைகள், மருத்துவ நலன், கல்வி, வேலை வாய்ப்பு ஆகியவை குறித்து விவாதித்தனர். இவை தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பப் பட்டன.

மூன்று விவாதங்களிலுமே ஒபாமா தன் தெளிவான பேச்சாற்றலாலும், திட்டங்களை எடுத்துச் சொல்லும் திறத்தினாலும் தனிநபர் தாக்குதல்களில் ஈடுபடாமலும் மிக அமைதியாக ஆனால் வலுவாக தன் நிலையை எடுத்த்து வைத்ததினால் விவாதங்களின் பொழுதே நடுநிலை வாக்களர்களின் மனக்களையும் கவர்ந்து அவர்களின் ஆதரவினைப் பெற்றார்.

மெக்க்யின் தனது கோபத்தைக் காண்பித்தது மூலமாகவும், மீண்டும் மீண்டும் போர் போர் என்று மக்களின் பிரச்சினைகளைப் பற்றி போசாததினாலும், புஷ் ஏற்படுத்திய கெட்ட பெயரினாலும், மிக மோசமான பொருளாதார நிலைக்கு அவர் கட்சியைச் சார்ந்த ஜனாதிபதி புஷ்ஷின் திறமையின்மை காரணமாகக் கருதப் பட்ட்தாலும் விவாதங்களின் பொழுதும், பிரச்சாரங்களின் பொழுதும் மக்களைக் கவராமல் போய் தொடர்ந்து பிண்டடைந்தே இருந்தார்.

இறுதியில் ஒபாமாவின் செயல் திடங்களும், பேச்சாற்றலும், கண்னியமான தன்மையும், அறிவும், அவருக்கு அப்ரிதமான வெற்றியைப் பெற்றுத் தந்தன. மெக்கெயினின் தெளிவில்லாத கொள்கைகளும், திறமையில்லாத அவரது துணை ஜனாதிபதி தேர்வும், அவரது கட்சியின் ஆட்சியில் நேர்ந்த பொருளாதாரத் தேக்கமும் அவருக்குக் கடும் தோல்வியை ஏற்படுத்தின.

பரபரப்பான தேர்தல் முடிந்து, மகத்தான வெற்றி பெற்று வரும் ஜனவரி 20 அன்று பொறுப்பேற்க ஒபாமா காத்திருக்கிறார். இடைப் பட்டக் காலத்தில் அவரது மந்திரி சபையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பொருளாதாரச் சிக்கல்களுக்குத் தீர்வுகளைக் கண்டு வைத்து ஆட்சி பொறுப்பேற்றவுடன் அவசர கால அடிப்படையில் நிலமை மேலும் மோசமாவதற்குள் தீர்வுகள் கொடுக்க வேண்டும்.

ஒபாமாவின் வெற்றியினால் அமெரிக்க இந்திய உறவில் பெருத்த மாறுதல்கள் இருக்காது என்றே தோன்றுகிறது. ஒபாமா தன் தேர்தல் பிரச்சாரங்களின் பொழுது இந்தியாவின் பிரச்சினைகளை நன்கு அறிந்தவர்காகவே தெரிந்தார். நம் அரசியல்வாதிகள் கூட அனுதாபம் தெரிவிக்க மறந்த ஃபீல்டு மார்ஷல் மானெக்‌ஷாவின் மறைவுக்கு ஒபாமா அனுதாபம் தெரிவித்தார்.

நம் அரசியல்வாதிகள் கூட வாழ்த்துத் தெரிவிக்க மறுக்கும் தீபாவளிப் பண்டிகைக்கு முதல் ஆளாக வாழ்த்துத் தெரிவித்திருந்தார். ராசியின் மேல் உள்ள நம்பிக்கையின் காரணமாக ஒரு சிறிய அனுமன் உருவத்தை தன்னுடனே எப்பொழுதும் வைத்திருந்தார். தனக்கு ஆன்ம பலமும் தன்னம்பிக்கையும் அந்த அனுமன் உருவம் வழங்குவதாக நம்பிக்கைக் கொண்டிருந்தார். பாக்கிஸ்தானுக்கு அமெரிக்கா அளிக்கும் நிதிய்தவியைத் துர்பிரயோகம் செய்து இந்தியாவின் மீது தீவீரவாதத் தாக்குதல் நடத்தப் பய்ன் படுத்துவதாக பாக்கிஸ்தானை வெளிப்படையாகக் கண்டனம் செய்திருந்தா.

ஆனால் தான் ஆட்சிக்கு வந்தால் அமெரிக்காவின் வேலைகள் வெளியேற்றம் செய்யப் படுவதைத் தடுக்க உள்நாட்டில் வேலை வாய்ய்பு ஏற்படுத்தும் நிறுவங்களுக்கு வரிச்சலுகை அளிக்கப் போவதாகக் கூறியுள்ளார். இதன் காரணமாக இந்தியாவின் பி பி ஓ மற்றும் ஐ டி நிறுவனங்களுக்கு லேசான பாதிப்பு ஏற்படலாம். ஆனால் மிகுந்த அளவிலான பாதிப்பாக அவை இருக்காது. மற்றபடி இந்திய அமெரிக்க நல்லுறவு தொடரவே வாய்ப்புகள் உள்ளன.

அமெரிககவின் மிக மோசமான பொருளாதார நிலமையும், தொடர்ந்து அதிகரித்து வரும் வேலை இழப்புக்க்களும், முழுகிக் கொண்டிருக்கும் நிதி நிறுவனங்களும், மதிப்பை இழந்து வரும் பங்குச் சந்தையும் மிகவும் கடுமையான சவாலான ஒரு நிலைமையை ஏற்படுத்தியுள்ளன. புதிதாக பதவியேற்கவிருக்கும் ஒபாமாவிற்கு இது மிகவும் சோதனையான பணி காத்திருக்கின்றது.

உலக அளவிலும் ஈரானின் அணு ஆயுதத் தாயாரிப்பு, ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு முயற்சிகள். ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் அட்டூழியங்கள். ஈராக்கிலிருந்து வெளியேற வேண்டிய நிலைமை என்று மிகவும் சிக்கலான சவால்கள் அவருக்குக் காத்திருக்கின்றன. பொருளாதாரத் தேக்கத்தில் இருந்து அமெரிக்காவை மீட்டெடுக்கும் உடனடியான அவசர பணி அவரை எதிர் நோக்கியுள்ளது. எப்படி இத்தனை பிரச்சினைகளையும் தீர்க்கப் போகிறார் என்று அமெரிக்கா மட்டும் அல்லாமல் உலகமே அயர்ச்சியுடனும் ஆர்வத்துடனும் எதிர் நோக்கியுள்ளது.

அமெரிக்காவின் வரலாற்றுத் திருப்பு முனைத் தேர்தல் இந்தத் தேர்தல். 50 வருடங்களுக்கு முன்பாகக் கூட வாக்களிக்கும் உரிமை கூட இல்லாமல் இருந்த அடிமை இனத்தில் பிறந்த ஒருவரால் தன் திறமை, அறிவு, ஆற்றல் மட்டுமே வைத்துக்கொண்டு ஜனாதிபதியாக முடிந்திருக்கும் அற்புதம் நிகழ்ந்திருக்கிறது அமெரிக்காவில்.

ஐந்து வருடங்களுக்கு முன்பாகக் கூட அடையாளம் தெரியாமல் இருந்த ஒரு கருப்பின சமூக சேவகர் இன்று உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார். ஆம், மாற்றம் வந்தே விட்டது. ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கு ஓட்டு உரிமை கொடுக்கப் பட்ட பொழுது அவர்களது அடிமை விலங்கு சட்ட ரீதியாக மட்டுமே விலக்கப் பட்டிருந்தது.

ஆனால் இன்றோ மனோ ரீதியாகவும் கூட தலைக்கு மேலே இருந்த கண்ணாடிக் கூரை நொறுங்கி, இடம் விட்டு, வானம் ஒன்றே எல்லை என்று வழி விட்டிருக்கிறது. இது எழுச்சி மிக்க ஒரு மாறுதலே. அவர் மீது ஒட்டு மொத்த அமெரிக்காவும், நிற வேற்றுமை, இன வேற்றுமை மத வேற்றுமை இன்றி நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.

இந்த அபரிதமான நம்பிக்கையை அவர் எவ்வளவு தூரம் நிறைவேற்றப் போகிறார் என்பது பொருத்திருந்து காண வேண்டிய ஒன்று. ஆனால் இந்த மாற்றம் மக்களிடையே குறிப்பாக ஆப்பிரிக்க அமெரிக்க மக்களிடமும், வெள்ளையர் அல்லாத பிற மக்களிடமும் ஏற்படுத்தி இருக்கும் எழுச்சியும், நம்பிக்கையும், எதிர்காலம் குறித்த தன்னம்பிக்கையும் மகத்தானது. அந்த நம்பிக்கையே இந்த அதிபர் தேர்தல் ஏற்படுத்திய மிக முக்கியமான மாறுதல்.

ஒபாமாவினால் அவர் வாக்குறுதி அளித்திருக்கும் பொருளாதார மாற்றத்தைக் கொணர முடியாமல் போகலாம் ஆனால் அவரது தேர்வு மக்களிடையே எழுப்பி இருக்கும் மன எழுச்சியும் நம்பிக்கையுமே அவர் கொணர்ந்த முக்கியமான மாற்றம். அந்த மாபெரும் மாற்றத்தை உலகமே வியந்து வரவேற்கிறது அமெரிக்கா மீது உலக மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் ஒரு வித கசப்பையும், அவநம்பிக்கையையும், அச்சத்தையும் கூட இந்த மாற்றம் ஓரளவுக்குப் போக்கக் கூடும் என்னும் பொழுது இது உலக அளவிலும் கூட ஒரு வரவேற்கத்தக்க மாற்றமே..

நம்மைப் போன்ற ஒரு சாதரணர் அமெரிக்காவின் தலைமைப் பதவிக்கு வர முடியும் என்ற நம்பிக்கையை ஒவ்வொரு மத்ய வர்க்க அமெரிக்கர் மனதிலும் உருவாக்கியுள்ளது இவரது வெற்றி. குறிப்பாக ஆப்பிரிக்க அமெரிக்க இனத்திற்கு இவரது வெற்றி மாபெரும் தன்னம்பிக்கையும், உற்சாகத்தையும் அளித்துள்ளது.

தனது நிறத்தை முன் வைத்து இவர் எந்த விதப் பிரச்சாரமும் செய்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தன் ஆற்றலையும் திறமையையும் மட்டுமே முன் வைத்து பிரச்சாரம் செய்தார். இவரது வெற்றியின் மூலம் அமெரிக்காவின் நிற வேற்றுமை ஒரே இரவில் மாயமாக மறைந்து போய் விடாது. இருந்தாலும் அமெரிக்கர்கள் நேற்றை விட இன்று சற்றே நிறத்தை மறந்து நெருக்கமாக வந்திருக்கிறார்கள் என்பதையே இந்த மாற்றம் உணர்த்துகிறது.

தனது திறமையினாலும், புத்தி கூர்மையினாலும், தான் தேர்வு செய்துள்ள அனுபமிக்க மந்திரிகளினாலும், திறமையான நிர்வாகத்தினாலும் மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து ஒரு மாற்றமுள்ள அனைத்துத் தரபபாரின் ஆதரவையும் நன் மதிப்பையும் பெற்ற ஒரு அமெரிக்காவையும் அதன் மூலம் உலக அமைதியையும் நல்லிணத்தையும் ஏற்படுத்துவார் என்று நம்புவோம். அதற்கான சக்தியை அவருக்கு ஆண்டவன் அளிக்க வாழ்த்துகிறேன்.

ஒளிப் பாம்புகள் – பா ராகவன்

sex-swamis-book-reviews-tamil-art-allowing-let-goபுத்தக விவரம்:
தலைப்பு: நிலா வேட்டை
முதற் பதிப்பு: அக்டோபர், 1998
வானதி பதிப்பகம்
விலை: ரூ. 32.00

ரா.கி. ரங்கராஜன் முன்னுரையில் இருந்து சில பகுதி:

‘ஒளிப் பாம்புகள்’ யதார்த்தத்தில் இருந்து விலகி, அதே சமயம் சுவாரசியமான பயமுறுத்தலைக் கொண்ட கதை. ஒரு கணம் படமெடுத்து ஆடி மறுகணம் சரசரவென்று வழுக்கிக் கொண்டு ஓடும் நாகப் பாம்பு கதையிலும் இருக்கிறது; நடையிலும் இருக்கிறது!

When you turn the last page and feel a little as if you have lost a friend – அதுவே ஒரு நல்ல கதையைப் படித்தோம் என்பதற்கு அடையாளம்.

-oOo-

பா ராகவன் நன்றியுரையில் இருந்து சில பகுதி:

power-hungry-flickr-cord-wire-snakes-paraஇந்தத் தொகுப்பில் உள்ள இரண்டு குறுநாவல்களுமே மிகவும் நெருடலான விஷயங்களை விவரிப்பவை. கொஞ்சம் பிசகினால் ஒரு விரச உற்சவமே நடந்துவிடும் என்பது போல. ஆனால், எழுத்தில் ஆடையவிழ்ப்புச் செய்யாத ஆணமையை கல்கி எனக்குக் கொடுத்தது.

முற்றிலும் குறியீட்டு வகை சார்ந்த, சம்பிரதாய வடிவமற்ற ‘ஒளிப்பாம்புகளை’யும் கல்கியில்தான் எழுதினேன் என்பது பெரும்பாலானோருக்கு வியப்புத் தரலாம்.

-oOo-

கதையில் கவர்ந்த சில இடம்:

  • “விலக்கி வைக்க சரியான வழி, கடந்து போவதுதான்!” என்றார் சாமி. “சொந்தக்காரனா இல்லாமெ, பார்வையாளனா மட்டுமே இருக்கணும்னா, அதுக்கான உபாயம். தந்த்ரம் படிக்கிறவன் ஒரு பாம்பாட்டி. அவன் மனசு ஒரு மகுடி.”
  • “கெடைச்சது போதும்னு உட்கார்ந்துடறவன் சித்தன். இன்னும் வேணும்னு போறவன் யோகி. அப்படியே தேடிட்டுப் போக கடேசியிலே மெய்யா ஒண்ணைப் பார்த்துட்டு மிச்சமெல்லாம் ஒண்ணுமில்லேன்னு சும்மா நிக்கறவன் ஞானி!”

-oOo-

இரண்டு வரி விமர்சனம்:

snake-fountain-king-throne-control-oli-paambugalசெப்டம்பர் 3, 2004 சங்கர்ராமன் கொலை செய்யப்பட்டார். நல்லவேலை ‘தவத்திரு பிரம்மானந்த சாமி டிரஸ்ட்பள்ளியின் தலைமை ஆசிரியர் தப்பித்து விட்டார்.

பாம்பு என்பது அஃறிணை; சாமியார் என்பது உயர்திணை. பாராவின் நடையில் சாமி திடீரென்று உயர்திணை விகுதியில் உலா வருகிறது; அதே ஆளுக்கு அன்னியோன்யமான அஃறிணையும் இட்டு கௌரவிக்கிறார்.

நாச்சியார் திருமொழியில் அஃறிணைப் பொருளான வெண்சங்கைப் பார்த்து ஆண்டாள் ‘சங்கனாயா’ என்பார். சங்குஅனாயா என்றால் சங்கர்+ஐயா என்றும் பிரிக்கலாம். அஃறிணைச் சங்கு உயர்திணை மரியாதை பெற்றதே நாச்சியார் அனுபவம். தெய்வாம்சம் தருபவர் மனித மாச்சர்யம் பெறுபவது பாரானுபவம்.

வாய்திறந்து பேசுகிற உயிர்கள் உயர்திணை; வாய் பேச இயலாதவை அஃறிணை. மனதிற்குள் ஆசையை வைத்து குமைவது அஃறிணை; வெளிப்படையாக லஜ்ஜையில்லாமால் போட்டுடைத்து ஆசைக்கு அடிமை என ஒப்புதல் வாக்குமூலம் சொல்வதால் உயர்திணை ஆகிவிடுவோமா?

மக்கள், தேவர், நரகர் என்னும் முத்திறத்தாரும் ஏனைய உயிர்களை நோக்க உயர் ஒழுக்கம் (உயர்திணை) உடையவர் என்றும் மற்ற உயிர்கள் உயர்வு அல்லாத ஒழுக்கம் (அல் + திணை) உடையன என்றும் நம் முன்னோர் பிரித்துக் கூறினர். ஆறறிவு படைத்த உயர்திணை மாந்தர் ஆறாவது அறிவு கொண்டு அஃறிணை பாம்புகளை ஒளி என்னும் உயிரற்றவைகளாக ஆக்கினால் உயர்திணை.

அஃறிணை பாம்புகளுக்கு ஒளி கிடைத்தால் மோட்சம்!

பா.ரா.வின் முந்தைய சிறுகதை: உண்ணி – பா. ராகவன்

Pratap Chatterjee on “Halliburtons Army”

  • page14_halliburton__s_armyடிக் சேனிக்கு மட்டும் ‘ஹாலிபர்டனி’ன் எல்லா புகழும் சென்றடையக் கூடாது. இரண்டாம் உலகப்போரில் இருந்து வாடகைக்கு போர் வீரர்களை குத்தகை விடும் நிறுவனமாக ஹாலிபர்டன் திகழ்கிறது.
  • இராக் போரை ஹாலிபர்டனுக்கு ஏலம் கொடுத்தவர் டொனால்ட் ரம்ஸ்ஃபெல்ட் ஆவார். அதே ரம்ஸ்ஃபீல்ட் லின்டன் பி. ஜான்ஸன் காலத்தில் ஹாலிபர்டனை மிகக் கடுமையாக விமர்சித்து இருக்கிறார்.
  • டிக் சீனி தலைமைப் பொறுப்பை எடுத்தவுடன் வெறும் 100 மில்லியன் பண்ணிக் கொண்டிருந்த ஹாலிபர்டன் 2.3 பில்லியன் பணக்கார நிறுவனமாக மாறியது.
  • டிக் செனி துணை ஜனாதிபதி ஆகியவுடன் வாஷிங்டனில் ஹாலிபர்டன் லாபி செய்வதற்கான நிதியை சரி பாதியாக குறைத்துக்கொன்டது.
  • இராக் போர் முடிந்தாலும் ஹாலிபர்டனின் லாபத்திற்கு எந்தக் குறைவும் இருக்காது. போஸ்னியாவில் ஆகட்டும் அல்லது பிறிதொரு போர்க்களத்தில் ஆகட்டும்; அங்கே, அவுட்சோர்சிங் முறையில் ஹாலிபர்டனுக்குத்தான் கான்ட்ராக்ட் விடப்படும்; விடப்படுகிறது.
  • பராக் ஒபாமாவினால் ஹாலிபர்ட்டன் குத்தகையை ரத்து செய்ய இயலாது. ஆனால், கொடுக்கும் பணம் எவ்வாறு, எதற்காக, எப்படி செலவாகிறது என்பதற்கு கணக்கு கேட்க முடியும்.
  • தெற்காசியர்களும் இந்தியர்களும் கொத்தடிமையாக மலம் அள்ளுவதற்கும் ஆபத்தான வேலைக்கும் வைக்கப்பட்டு ஹாலிபர்ட்டனுக்கு கிடைக்கும் கொள்ளை லாபம் குறைந்து, இந்த தகிடுதத்தங்கள் அம்பலம் ஏறுமாறு வெளிப்படையான செயல்பாடுகள் அரங்கேறக் கூடும்.
  • Labor exploitation and an unofficial “caste system” perpetrated by Halliburton/KBR and its subcontractors, with sliding pay scales based on workers’ nationalities.

தொடர்புள்ள சில சுட்டி:

1. நேர்காணல்: Pratap Chatterjee: Texas Monthly February 2009: “An extended interview with the author of Halliburton’s Army: How a Well-Connected Texas Oil Company Revolutionized the Way America Makes War.”

2. ப்ரதாப் சாடர்ஜியின் வலைப்பதிவு: Pratap Chatterjee's blog | The War Comes Home, A Project of KPFA Radio

இந்தியாவைப் பற்றி வரைக

ஸ்லம்டாக் மில்லியனர் பார்த்ததினாலா என்று அறியேன்.

அம்மா இல்லாத மகளை சமாளிப்பதற்கான உபாயம் என்று அறிவேன்.

ஆறு மாதம் முன்பு பயணித்த இந்தியாவைப் பற்றி என்ன தோன்றுகிறதோ ஒரு தாளில் வரைந்து கொடேன் என்றவுடன் மகளே யோசித்து உருவாக்கிய ஓவியம்:

india-art-work-kids-desi-portray-slumdog-millionaire

வெற்றிகரமான நூறாவது நாள்

இந்த வருடம் பள்ளிக்கு 100 நாள் சென்றதற்காக ஏதாவது கட் – அவுட் கொண்டுவர சொன்னார்கள். அந்தத் திட்டத்தில் செய்தது:

school-100-day-project-children-2009-kids-world-apha-numeric-1

முந்தைய பதாகைக் குறிப்பு:
100 days of Kindergarten : Ideas Required

100th Day Project – School Activities: Kids, Children

நான் கடவுள்: 140 எழுத்து விமர்சனம்

முந்தைய நான் கடவுள் பதிவு

1. நான் கடவுள் பாத்த பயபுள்ள் எமோசனல் ஆகி ஃபர்ஸ்ட் ஃஹாப்புல அழுதுட்டதா வேற சொல்லுறான். அகோரிஸ் தானாமாம் about – Potteakadai

2. நான் கடவுள்: பல இடங்களில் லாஜிக் இடிக்கிறது. திரைக்கதையில் எதிர்பார்த்த நேர்த்தி இல்லை. படம் சட்டென்று முடிந்து விட்ட உணர்வு nklraja

3. #naan kadavul. Nonsense. pls stay away folks.

premise. விளிம்பு நிலைல இருந்தா செத்துப் போறதுதான் வழி. இதுக்கு ஏதோ உபநிஷத்துக்களை எல்லாம் துணைக்குக் கூப்பிடறார் வசனகர்த்தா.

bala’s picturisation was realistic than Slumdog Millionaire. but that did not make the film ( in total) any better.

he film seemed okay in the first half. but nothing much in the latter part. romba yematram

saw today at sangam cinemas with azad bhai. not suitable for kids. bala got carried away by the praises he got 4 pithamagan.

if pithamagan is 8 on a 10 scale, then nan kadavul is just 3. fully agree with pavithra’s review – http://is.gd/iEud

icarusprakash

4. அப்ப படம் நல்லா ஒடும்னு தோணுது.நான் கடவுள் பத்தி பேசுன எல்லாரும் பயங்கர Goryனு சொல்றாங்க. தயாரிப்பாளாருக்கும் பாலாவுக்கும் வேலை ஒவர்.narain

5. NAAN KADAVUL passed 12A: The BBFC gave the Tamil language film NAAN KADAVUL a rating of 12A on Fri, 06 Feb. This.. http://tinyurl.com/b9e4lpbbfc

6. நான் கடவுள் ஒரு அற்புதம்…பூஜாவுக்கு நேஷனல் அவார்டு கொடுக்கலையெண்டால் இந்தியாவைக் கொளுத்துவோம் என்று ஒரு ரசிகர் பொங்குகிறார் Potteakadai

7. Saw Naan Kadavul. watchable once. heavy plot. too sad. his earlier three movies touched me better. bala has to reinvent his hero characters. – ravidreams
/ ரவி

8. found this line “Bala can ask Danny Boyle (Slumdog Millionaire director) to take a walk” in Naan Kadavul review http://tinyurl.com/csfmsbDK

9. A H A M B R A H M A S I….. A must watch movie from Bala – anenth

10. A friend of mine whos a bigtime Bala fan watched the movie. He says the movie is a ‘Thooo’ . I’m still gonna watch it. – benly

11. Sify review – Outstanding. Indiaglitz calls it “a movie to cherish and celebrate” & says Bala’s gone to greater heights.

Previous tweet re. Sify’s Naan Kadavul review (verdict – Outstanding) http://tinyurl.com/cvfscz

If Naan Kadavul the level 3 in Tamil cinema’s journey to intl. cinema & Subramaniyapuram the level 2, what’s level 1? Is there a level 4?

anantha

12. Just got back from “Naan Kadavul”. I strongly advice all to avoid this movie.

Naan Kadavul: Like a typical Bala movie, one of the lead character kills few bad mans and the other lead character gets killed.

jaggy / Jagadishkumar G

சுடச்சுட விமர்சனங்கள், பார்வைகள்ஸ்பாய்லர்கள் இருக்கலாம்

Naan Kadavul: Something is Missing

நான் கடவுள் திரைப்பட விமர்சனங்கள்:

முந்தைய பதிவு: சென்சார் விமர்சனம் + கதை

1. உண்மைத்தமிழன்: First Day; First Look: ஆர்யா பேசும் மொத்த வசனங்களை ஒரு A4 பேப்பரில் எழுதிவிடலாம்.
:::
டைட்டில் காட்சியில் துவங்கி, இறுதிக் காட்சி வரை எங்கும் காவிக்கொடிகள்.. பக்தி, ஆன்மீகம்.. ஜோதிடம், சாஸ்திரம், சடங்குகள், சமஸ்கிருதம், கேள்விகள்.. கடவுளைத் தேடும் பணி என்று படம் முழுவதும் இந்துத்துவா மயம்தான். வலையுலகத்தினருக்கு கடும் பணிகள் காத்திருக்கின்றன.
:::
சென்ற வாரம்தான் Slumdog Millonaire படத்தினைப் பார்த்துத் தொலைத்துவிட்டதனால், இத்திரைப்படத்தின் பிச்சைக்காரத்தனமான வாழ்க்கை முறைகள், என் இதயத்தைத் துளைத்து நுரையீரலைத் தொடவில்லை.

bala-arya-movies-previews-films-reviews-naan-kadavul-stills-018

2. செய்திகள் மட்டுமே சித்திரமானால்:
மூலம்: ஜெயமோகன், இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கிலக் கட்டுரை
தமிழில்: ஜடாயு

“இந்த ஸ்லம்டாக் மில்லியனர் (Slumdog Millionaire) படத்தில் உங்கள் ஏழாம் உலகம் நூலில் உள்ளது போன்றே பல காட்சிகள் உள்ளன, நீங்கள் கட்டாயம் பார்க்கவேண்டும்” என்று வேறு தொலைபேசியில் சொன்னார் ஜீவானந்தம்.

இந்தச் செய்தி கொஞ்சம் கவலையையும் ஏற்பத்தியது. ஏனென்றால், 2003-ல் வெளிவந்த இந்தப் புதினத்தில் உள்ள சில நிகழ்ச்சித் தொடர்களை, இப்போது வெளிவரும் தறுவாயில் இருக்கும், நான் வசனம் எழுதியிருக்கும் பாலாவின் நான் கடவுள் படத்தில் நாங்கள் பயன்படுத்தியிருந்தோம். நான் கடவுள் படத்தை மூன்று வருடங்கள் முன்பே எடுக்க ஆரம்பித்து விட்டோம். அதென்னவோ, சரியாக இந்த நேரத்தில் இப்படி ஒரு ஆங்கிலப் படம் வருகிறது.

3. Cable Sankar: நான் கடவுள் – சினிமா விமர்சனம்.: பிச்சைகாரர்களை மேய்க்கும் முருகன், திருநங்கை பெண், அவர்களின் தலைவன், போலீஸ் இன்ஸ்பெக்ட்ர், அந்த போலீஸ் ஏட்டு, உடல் ஊனமுற்ற அம்பானி பற்றி பேசும் சிறுவன், இரண்டு கை, கால் இல்லாத எப்போது கண் மூடி, வாய் பேசாதிருக்கும் சாமியார், சாமியார் என்று சொல்லிக் கொண்டு தலைமறைவு வாழ்க்கை வாழும் சாமியார்கள், கீச்சு குரல் சாமியார், சாமி வேடமிட்டு பிச்சையெடுக்கும் குறை கொண்ட பெண்கள், என்று நிஜ பிச்சைகாரர்களை நம் கண்முன்னே வாழ விட்டிருக்கிறார்கள்.

கவிஞர் விக்ரமாதித்தன் மனநிலை குன்றிய குழந்தையை அந்த கும்பலில் வைத்து காப்பாற்றும் ஒரு பிச்சைகாரர்.

அழகன் தமிழ்மணி ருத்ரனின் அப்பாவாக வந்திருக்கிறார். அமமாவாக பாரதி.

பல ஆண்டுகளுக்கு முன்னால் தன்னால் எங்கே விட்டோம் என்று தெரியாமல் அலையும் தகப்பனுக்கு, ருத்ரனை பார்த்ததும் ஞாபகம் வருவது ‘என் புள்ளைய எனக்கு தெரியாதா’ என்பதெல்லாம் சரியான ஜல்லியடிப்பு. பூஜாவிடம் நீ வயசுக்கு வந்திட்டியான்னு கேட்கும் பிச்சைகார தலைவன், அவளை பாலியல் பலாத்காரம் செய்யாமல் கடைசிவரை பாதுகாப்பது படத்தின் இயல்பு நிலைக்கு மாற்றான காட்சிகள்.

பாலா சார் இன்னும் எத்தனை நாளைக்குதான் பழைய காமெடி என்கிற பெயரில் எம்.ஜி.ஆர், சிவாஜி பாடல்களை வைத்து பாடி மிமிக்கிரி செய்து படத்தை ஓட்டுவீர்கள். அந்த காட்சிகள் படத்துக்கு எந்த விதத்தில் உதவியிருக்கிறது என்றே புரியவில்லை.

4. அயன்:

Cinema Critics: விளிம்பு நிலை மக்களைப் பற்றி மட்டுமே அதிகமாகப் படம் எடுத்திருக்கிற பாலா

  1. சேது – தேவதாசிகள்
  2. நந்தா – அகதிகள் மற்றும் இளம் கொலைகாரர்கள்
  3. பிதாமகன் – கஞ்சா விற்பவர்கள்

இந்தப் படத்துக்கு எடுத்துக் கொண்ட கதைக்களம். . . .

‘வாழத்தெரியாதவங்களுக்கு நீ அளிக்கும் மரணம் தண்டனை வாழ இயலாதவர்களுக்கு நீ அளிக்கும் மரணம் வரம்’

பேசாமலேயே மொழி படத்துல கலக்கின ஜோதிகாவை விட்டுவிட்டு பிரியாமணிக்கு தேசிய விருது கொடுத்த விஷயம் எனக்கு வருத்தம் தான். பூஜாவுக்கு பெரிய ஜே. . . .

5. லக்கிலுக் / மடிப்பாக்கம்

யுவகிருஷ்ணா: Movie Reviews: ‘தொப்பி, திலகம்’ மேட்டரில் ஜெமோ அண்ணாச்சியை கண்டித்த சினிமாக்காரர்களை அதே சினிமா மூலமாகவே மறுபடியும் வம்புக்கு இழுத்திருக்கிறார்.

ட்விட்டரில் வந்த சுறுக் + நறுக் கருத்துக் கோர்வை

அமெரிக்காவால்/அமெரிக்காவினால்/அமெரிக்காவில் ஏவியன் ஃப்ளூ?

அதிகாரபூர்வ அமெரிக்கா செய்தி:

Feds apologize but insist birds had to be poisoned – NJ.com: Hundreds of birds that dropped dead on Somerset County cars, porches and snow-covered lawns, alarming residents over the weekend, were all of a rather foul breed of fowl — the notorious European starling, which the United States Department of Agriculture killed on purpose.

Everything from Avian influenza to West Nile disease, both bird-killing ailments that also affect humans, was feared. But no humans or pets were ever at risk, said the USDA, contending the pesticide, known as DRC-1339, is inert once it is eaten by the birds and becomes metabolized.


கனடா செய்தி: 60,000 B.C. turkeys culled in avian flu outbreak:

“The mass destruction of thousands of turkeys on a farm near Abbotsford, B.C., began Monday after the Canadian Food Inspection Agency (CFIA) confirmed a positive test result for avian flu over the weekend.

‘Today the Canadian Food Inspection Agency has started the humane destruction of approximately 60,000 birds on the infected premises in British Columbia where H5 avian influenza has been confirmed,’ said Sandra Stephens, a CFIA disease control specialist.”


இந்தியா செய்தி:

பறவைக் காய்ச்சல்: கோழிகள் அழிப்பு தொடர்கிறது: இரு கிராமங்களிலும் நேற்று 2ஆவது நாளாக சுமார் 7 ஆயிரம் கோழிகள் அழிக்கப்பட்டதாகவும், மால்டாவில் 600 கோழிகள் பறவைக்காய்ச்சலாம் உயிரிழந்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

45 ஆயிரம் கோழிகளை அழிப்பதற்கு கூடுதல் காலம் தேவைப்படுதால், 32 குழுக்களாக பிரிந்து அழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.


அமெரிக்காவில் என்ன நடக்கிறது?

சீனாவில் பறவைக்காய்ச்சல் என்று நிருபணம் ஆன பின், நியு ஜெர்சியில் விஷம் கலந்த மாத்திரைகளை கொடுத்து பறவைகளை கொல்ல சொல்லி உத்தரவு.

நியுஜெர்சி வீடுகளில் பறவைகளாக செத்து விழுந்திருக்கிறது. ஒரு சில வீட்டு கூரைகளில் நாற்பதுக்கும் மேலாக கொத்தாக பொத்தென்று மரணம் எய்திருக்கின்றன. அவற்றை அகற்றுவது வீட்டு சொந்தக்காரரின் கடமை எனவும் சொல்லப்பட்டுவிட்டது.

நியு ஜெர்ஸி நாளிதழில் செய்தி வந்திருக்கிறது. ஆனால், இதுகுறித்து எதுவும் எழுதக்கூடாது சொல்லவும் கூடாது என்று கட்டளை இட்டது போல் இராட்சச விநியோக இதழ்களில் கப்சிப்.

அதிக பறவைத்தொகை, அதனால் கொன்று விட்டோம் என்பது மேல் துடைப்பு.

அப்படி இருந்தால் வழக்கம் போல வேட்டைக்கு அனுமதி தந்திருப்பார்கள். இதே போல் பொது நலத்துறை மூலமாக ஒரு முறை வாத்து முட்டைக்குள் விஷம் ஊசி மூல நிரப்பினார்கள்.

இதன் தொடர்பாக ஆப்கானிஸ்தானில் சிலர் பரிசோதித்துக் கொண்டிருக்கும் போது பாதிக்கப்பட்டு பிளேக்கால் இறந்தனர். இதை உளவுத்துறை மிக இரகசியமாக வைத்திருக்கிறது. ஆக ஸ்ட்ரெயின் தயார்.


தொடர்புள்ள சில செய்திக் குறிப்பு:

1. AFP: Japan suspends imports of French foie gras, poultry

2. Bird flu strikes Cooch Behar – Kolkata – Cities – The Times of India: After Malda and Darjeeling, bird flu has now spread to Cooch Behar.

3. The Ecologist – 10 things you didn’t know about bird flu: The biblical concept of ‘dominion over the fish of the sea and over the birds of heaven; and every living thing that moved upon the earth’ has populated a veritable Pandora’s box full of humankind’s greatest killers. Scourges such as smallpox and measles, which have claimed hundreds of millions of lives in recent centuries, were birthed in the barnyard about 10,000 years ago.

Smallpox likely came from camelpox and measles from the rinderpest virus of cattle. Before the domestication of ducks, there was likely no such thing as the human flu or influenza pandemics. Domesticated pigs probably gave us whooping cough, and water buffalo, leprosy. Horses likely gave us the common cold.