Monthly Archives: செப்ரெம்பர் 2008

Srikanth Meenakshi: Obama’s Campaign Finance Pledge & System of Public Financing

ஸ்ரீகாந்த் மீனாக்ஷி கருத்துகளின் தொடர்ச்சி:

3. ஹில்லரி க்ளின்டனையும் சாரா பேலினையும் தாக்கிய விதம் ‘பராக் பெண்களுக்கு எதிரானவர்’ என்னும் பிம்பத்தை உருவாக்க இலகுவாக்கியிருக்கிறது. இதை அவர் எப்படி தடுத்திருக்கலாம்? உதட்டுச்சாயம்/பன்றி போன்ற உவமானங்கள் குறித்த உங்கள் அபிப்ராயம் என்ன?

பதில்: ஹில்லரி க்ளிண்டனையும் சாரா பேலினையும் எதிர்த்துப் பிரசாரம் நிகழ்த்துவது என்பதே ‘தாக்குவதற்கு’ இணையானது என்றால் அது அநியாயம். ‘என்னை எதிர்த்து என்ன சொன்னாலும் அது பெண்களையே அவமானம் செய்வதற்கு ஒப்பு’ என்று சொல்பவர்கள் பொது வாழ்விற்கு லாயக்கற்றவர்கள்.

உதட்டுச்சாயம்/பன்றி விஷயத்தில் அவர் பேலினை மனதில் வைத்துப் பேசவில்லை என்பது பேச்சைக் கேட்ட/படித்த எவருக்கும் தெளிவாகத் தெரியும் விஷயம். வாஷிங்டன் போஸ்ட் இதைக் கிண்டலாக ‘What’s the Pig deal?’ என்று எழுதி, மெக்கெயினைச் சாடியது.

மற்றபடி இந்த உவமானப் பேச்சைக் கண்டிப்பது போன்றவை எதிரிகளுக்கு வாய்ப்பூட்டு போட முயலும் தந்திரம். மெக்கெயினை எதிர்த்தால், ‘ஒரு போர் வீரனை அவமானப்படுத்துகிறார்’, பேலினை எதிர்த்தால், ‘ஒரு பெண்ணை/பெண்ணினத்தை அவமானப்படுத்துகிறார்’. என்ன கயமை, என்ன பேடித்தனம்!

4. ஜனநாயகக் கட்சி மாநாட்டிலும் — ஏடி & டி (AT&T) போன்ற பெருநிறுவனங்கள் எக்ஸ்க்ளூசிவ் விருந்து அளிக்கின்றன. ஒபாமாவும் வீடு வாங்கியதில் சந்தேகாஸ்தபமான நபரின் உதவியை நாடியிருக்கிறார். மற்ற அரசியல்வாதிகளிடமிருந்து பராக் ஒபாமா எப்படி மாறுபட்டு விளங்குவார்?

பதில்: இரு வேறு விஷயங்கள்.
ஜனநாயகக் கட்சி மாநாட்டில் நிறுவனங்கள் விருந்தளிப்பது என்பது கட்சி சார்ந்த முடிவு (வேட்பாளர் எடுக்கும் முடிவு இல்லை). மேலும், இன்றைய அமெரிக்க அரசியலில் இது ஒரு தவிர்க்க முடியாத சடங்கு. இது போன்றவற்றை வேண்டாம் என்று ஒதுக்கி விட்டு ஒரு சமகளனில் போராட முடியாது.

ஒபாமா வீடு வாங்கிய விஷயத்தில் சறுக்கினார் என்றுதான் நினைக்கிறேன். அதை அவரும் ஏற்றுக் கொள்கிறார் (‘A bone-headed decision’). ஒரு ஆரம்பகால அரசியல்வாதி ஆழம் தெரியாமல் காலை விட்ட நிகழ்வு என்று என்னால் இதை ஏற்றுக் கொள்ள முடிகிறது.

5. தேர்தல் நிதி குறித்து முன்பு ஒரு மாதிரி வாக்குறுதி கொடுத்துவிட்டு, அதன்பின் அந்தக் கொள்கையை ஒபாமா மாற்றிக்கொண்டது, ‘அவர் நிலையான நம்பிக்கை உடையவர் அல்ல’ என்பதற்கான உதாரணமா? பொதுமக்களிடமிருந்து அளப்பரிய காணிக்கை பெறுவது பின்வாசல் கதவைத் திறந்து மீண்டும் நிக்சன்களை உருவாக்காதா? பிரச்சார செலவுகளை இப்படி திரைமறைவாக பணம் திரட்டி நடத்துவது குறித்த தங்கள் எண்ணங்கள் என்ன?

பதில்: பொதுமக்களிடமிருந்து நேரடியாகப் பணம் பெறுவது என்பதற்கும் அரசாங்கத்திடமிருந்து (மக்கள் வரிப்பணத்திலிருந்து) பணம் பெறுவதற்கும் பெரிய வித்தியாசம் இல்லை. சில பெரும் நிறுவனங்களிடமிருந்து பெரும்பணம் பெறுவதே தவறானது, ஆபத்தானது. ஒபாமாவின் திறமையான தேர்தல் இயந்திரம் வரலாறு காணாத அளவு ஏராளமான மக்களிடமிருந்து சிறிய நன்கொடைகளைப் பெற்று செயல்படுகிறது. இது போன்ற ஒரு ஜனநாயக ரீதியான தேர்தல் நிதி சேகரிப்பு உலக வரலாற்றிலேயே நிகழ்ந்ததில்லை. இது ஒரு பிரமிக்கத்தக்க சாதனை.

இத்தகைய வெற்றியை, சாதனையை, ஒபாமாவே எதிர்பார்க்கவில்லை என்பதையே அவரது முந்திய வாக்குறுதி உணர்த்துகிறது. அவர் அந்த வாக்குறுதியை மீறியது உண்மையாயினும், அவரது மீறல் எழுத்தளவான மீறலேயன்றி, கொள்கைரீதியான மீறல் இல்லை.

மைத்ரேயன் – India & USA – Comparing the Political Process

எழுத்து: மைத்ரேயன்

இந்திய ஜனநாயகமும், தமிழக ஜனநாயகமும் ஒரு வகை கலவை ஜனநாயகங்கள்.

ஜனநாயக அமைப்புகளை மேற்கத்திய அளவுகோல்களில் வைத்து அளப்பது முற்றிலும் தவறு என்று நான் சொல்லத் தயாரில்லை. ஏனெனில் இந்திய ஜனநாயக அமைப்பே, அதன் உருவத்தைப் பொறுத்துச் சொல்கிறேன், பெருமளவு மேற்கத்திய வடிவுதான்.

  • அமெரிக்கா போல ஒரு சட்ட அமைப்பு,
  • ஃப்ரான்சைப் போல ஒரு கருத்தியல்,
  • பிரிட்டனைப் போல ஒரு அரசு அமைப்பு

என்று மூன்று வகை ஜனநாயகங்களை மாதிரியாகக் கொண்டு அம்பேத்காரும் இதர அரசியல் சாசனகர்த்தாக்களும் கட்டமைத்தார்கள் என்று சொல்லிக் கேட்டிருக்கிறேன். அதனால்தான் ஜனாதிபதியும், பிரதம மந்திரியும் கொண்ட ஒரு விசித்திர அமைப்பு நம்முடையது.

மேலை ஜனநாயக அமைப்புகளின் பின்புலனில் கிரேக்கத்தில் முன்பு நடந்த அரசியல் மோதல்கள் இருக்கின்றன. கிரேக்க அரசியலில்- கிருத்தவத்துக்கு முந்தைய கிரேக்கத்தைச் சொல்கிறேன் – பிரதிநிதித்துவ ஜனநாயகம், நேரடி ஜனநாயகம் என்ற இரண்டு உண்டு. Direct democracy / participatory democracy, and indirect democracy/ representative democracy என்ற ஆங்கிலப் பதங்களை அப்படி முழி பெயர்த்திருக்கிறேன், மன்னிக்கவும்.

City state ஆக இருந்த கிரேக்க அரசுகளில் பல இடங்களில் குடியுரிமை பெற்றவர்கள் அரசின் செயல்பாட்டிலும், முடிவு எடுக்கும் சடங்குகளிலும் தொடர்ந்து பங்கெடுக்க வற்புறுத்தப் பட்டார்கள். அது மட்டுமல்ல, சில ஒய்ரோப்பிய நாடுகளில் இருப்பது போல வயது வந்த எல்லா ஆண்களும், முடமாக இல்லை என்றால், கட்டாயம் ராணுவ சேவை செய்தாக வேண்டும் என்று கூட வற்புறுத்தல் இருந்தது. இந்த வகை நாடுகள் / நகரங்கள் அனேகமாக participatory/ direct democracy என அறியப்படும்.

இதர அரசியல் அமைப்புகளில் சிலர் பெருவாரி மக்களின் ஆதரவைப் பெற்று பிரதிநிதிகளாகச் செயல்பட்டார்கள். இந்த வகை அமைப்பில் கூலிக்காகவும், பதவிக்காகவும், பொருளாதார வசதிக்காகவும் பணி செய்ய வந்த மனிதர்களால் ஒரு ராணுவம் அமைக்கப்பட்டது. அரசு இந்த வகை அமைப்புகளில் மக்களின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருந்து விலகி ஒரு தனி உரு பெற்றது. இந்த வகை அமைப்புதான் இன்று பெருவாரி மேலை நாட்டு அமைப்புகளில் ஆட்சியில் உள்ளது என்றாலும், மற்ற அரசியல் அமைப்புடைய உந்துதல் எல்லா மேற்கத்திய நாடுகளிலும் தொடர்ந்து அரசியல் அரங்கில் இடம் கேட்டு முரண்டுகிறது.

அனேகமாக இடது என்று அறியப்படும் எல்லா அரசியல் இயக்கங்களும், இந்த நகரக் குடிமகன்களால் ஆன சுய ஆர்வ ராணுவப்படை கொண்ட அரசியல் அமைப்பு வேண்டும் என்று முரண்டு செய்வன. கிருத்தவ அரசியல், வலது சாரி அரசியல் செய்யும் இயக்கங்கள் பிரதிநிதித்துவ ஜனநாயகத்தை முன் நிறுத்துவன.

அமெரிக்க அரசியலில் populism is allowed, but is filtered through gargantuan administrative rules and regulations of many layers – some fascist in origin, some elitist in nature, some repressive of working class aspirations, some purely for the sake of administrative and technical convenience- control popular participation in the political process.

In India, we have not managed to evolve such a sophisticated control system. Instead we have a deeply fascist but also populist system of political participation. It is more like the carnival model. Where people come for entertainment and get just that. They believe they participated in a deeply democratic process. But in reality it is one of the worst forms of elitist manipulation of the masses.

இருந்தாலும் பொது வெளியில் இந்திய மக்களுக்கு அரசியல் ரீதியாக இயங்க இருக்கும் சுதந்திரம் அமெரிக்கருக்குக் கிடையாது. (உதா: பெருவாரியான இந்தியருக்கு எந்த அடையாள அட்டையும் கிடையாது. அவர்கள் நாட்டை விட்டு வெளியேற மட்டும்தான் தடை உள்ளதே தவிர உள்நாட்டில் எங்கும் (கருத்தளவிலாவது) சுதந்திரமாக அவர்களால் உலவ முடியும்.

அதே நேரம் அமெரிக்கருக்கு அரசியலிலும், அரசு அமைப்புகளிலு இருக்கும் செயல் நிமித்தமான உரிமைகளும், பங்கெடுக்கும் வாய்ப்புகளும், அரசைத் தட்டிக் கேட்க இருக்கும் சட்ட, நிர்வாகக் கருவிகள் மேலும் விதிகள் எல்லாம் இந்தியருக்கு கிடையாது.

விரித்து எழுத எனக்கு நேரம் இல்லை, விருப்பமும் இல்லை.

Controlled and highly regulated american democracy is not really a people’s democracy. It is in general nicely manipulated elitist democracy. எனவே அது மோசமானது என்ற இடது சாரிப் புலம்பலை நான் முன்மொழியவில்லை. அது முன்னேற நிறைய தேவையும், இடமும் இருக்கிறது என்று மட்டும் சுட்டுகிறேன்.

இந்தியா உருவ அளவிலாவது ஒரு பொதுமக்கள் ஜனநாயகம்தான். செயல் முறையில் அது அமெரிக்க ஜனநாயகத்தை விட மோசமான மேல்தட்டு மனிதரால் கடுமையாகக் கட்டுப்படுத்தப்பட்ட ஒரு ‘ஜனநாயகம்’ என்பதில் ஐயம் கொள்ள வேண்டாம். ஆனாலும் அதில் அமெரிக்க ஜனநாயகத்தை விட மேலான ஜனநாயகமாக வருவதற்கான வழிவகைகள் அதிகம்.

If only the indian middle class got out of its babu mentality, and learnt its key role in the system as the guardian of the ethics and functional efficiency of the state and polity, and also decides to take responsibility for the conduct of the political affairs of the nation, India will be a far superior democracy.

Of course the same path is open to americans too. But mobilizing American middle class to any mass action is far more difficult than in the case of India.

At least that is my biased opinion! 🙂

So please don’t use a lot of invectives against Indian democracy and cut it some slack. It is indeed obscene in many ways, but 1000 years of colonialism does not leave a lot of independent thinking as a culture among people of a nation.

தொடர்புள்ள வாசிப்புக்கு :: Robert B. Talisse – A Pragmatist Philosophy of Democracy – Reviewed by David Hildebrand, University of Colorado Denver – Philosophical Reviews – University of Notre Dame

வலைப்பதிவுகளில் 'அமெரிக்க அதிபர் தேர்தல்'

தமிழ்ப்பதிவுகளில் சமீபத்திய குடியரசு, ஜனநாயக் கட்சி மாநாடுகள்; ஒபாமா, மெகெயின், பைடன், பேலின் குறித்த பார்வைகள்; ஆகியவற்றின் தொகுப்பு. விடுபட்டதை சொல்லவும்.

1. டெமாக்ரடிக் நேஷனல் கண்வென்ஷுன், டென்வர்- ஒரு நேரடி ரிப்போர்ட் :: ராஜா சொக்கலிங்கம்

நான் அறிவாலயம் சென்றிருக்கிறேன். அறிவாலயத்தை சுற்றி என்ன என்ன பார்த்தேனோ அது எல்லாவற்றையும் இங்கும் பார்க்கமுடிந்தது. உதாரணமாக, அறிவாலயத்தில் கலைஞரின் படம், அவர் எழுதிய புத்தகம், அவரை பற்றிய புத்தகம், வாழ்க கோஷங்கள், தி.மு.க கொடி, கட்சி சார்ந்த பொருள்கள் விற்கும் குட்டி குட்டி கடைகள் என நான் அங்கே பார்த்ததை அனைத்தும் இங்கேயும் பார்க்க முடிந்தது. கலைஞருக்கு பதில் இங்கே ஒபாமா அவ்வளவுதான் வித்தியாசம்.

2. ஒபாமா பராக் பராக் :: ‘உள்ளும் புறமும்’ மருதன்

ஜார்ஜ் புஷ்ஷின் கொள்கைகள்தான் பராக் ஒபாமாவின் கொள்கைகளும். பில் கிளிண்டனின் கொள்கைகள்தான் பராக் ஒபாமாவின் கொள்கைகளும். யார் அதிபர் என்பது அவ்வளவு முக்கியமில்லை. குடியரசுக் கட்சியா அல்லது ஜனநாயகக் கட்சியா என்பதல்ல கேள்வி. வெள்ளையரா கறுப்பரா என்பதல்ல முக்கியம். அமெரிக்காவின் தன்மை மாறாது.

3. மலிந்து வரும் அமெரிக்க அரசியல்: Cheap Political Stunts :: தெக்கிகாட்டான்

சாரா பலீன் இந்தக் காட்சியில் இணையும் வரை நன்றாகவே சென்று கொண்டிருந்த அரசியல் சார் பிரச்சாரங்கள் இன்று வேறு திசை நோக்கி பயணிக்க ஆரம்பித்திருக்கிறது… பேசப் படக் கூடிய விசயங்களை ஓரத்தில் ஒதுக்கி வைத்துவிட்டு, கூட்டத்தினை கைதட்டி “க்கோ ட்டீம் க்கோ” சொல்லி…

4. அமெரிக்க அரசியல் – தெகாவிற்கான பதில்! :: யு.எஸ்.தமிழன்

Unemployment rate had been within the required amount throughout Bush’s regime. ஒரு நாடு சுபிட்சமாக, inflation இல்லாமல் இருக்க 4-6% unemployment rate இருக்க வேண்டும் என்று பொருளாதார வல்லுனர்கள் கூறுகிறார்கள்…highly not recommended to bring the unemployment rate below this levels as it will trigger inflation! http://www.bls.gov/cps/cpsaat1.pdf இதில் கிளிண்டன் காலத்தையும் புஷ்சின் காலகட்டத்தையும் compare செய்து நீங்களே பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

5. பாரக் ஒபாமா: அமெரிக்காவின் மாயாவதி! :: புதிய ஜனநாயகம்

முதலாளித்துவ நாடாளுமன்றத்திற்கு நடத்தப்படும் தேர்தல்கள் மூலம், அடிப்படையான எந்த மாற்றத்தையும் கொண்டுவந்துவிட முடியாது என்பதற்கு பல நாடுகளின் அனுபவங்கள் சான்றாக உள்ளன. அமெரிக்க ஜனநாயகம் பற்றிய வீண்பெருமையில் மூழ்கிக் கிடக்கும் அமெரிக்க மக்களுக்கு இந்த அனுபவங்கள் கண்ணில் படாது, அமெரிக்க மக்கள் பட்டுத்தான் புரிந்து கொள்ள வேண்டும்; அதற்கு வேண்டுமானால், பாரக் ஒபாமாவின் தேர்வு பயன்படக்கூடும்.

6. வெள்ளை நிறவெறி கறுப்பு உண்மைகள் : இளநம்பிபுதிய கலாச்சாரம்

கடந்த இருபதாண்டுகளில் அமெரிக்க சமூகத்தின் பல்வேறு துறைகளில் நடந்த நிறவெறிக் கொடுமைகளை இங்கே தொகுத்துத் தருகிறோம், இக்கட்டுரை எழுத உதவிய நூல் ரோலொஜ் பதிப்பகத்தின் ஒயிட்ரேசிசம், ஆசிரியர்கள் ஜோ ஆர்.பேகின், ஷொர்னன் வெரா மற்றும் பினார்பாதர்.

சமகால அமெரிக்காவில் நிறவெறிப் பாகுபாடு எந்த அளவுக்கு வெள்ளையர்களிடம் ஊறியிருக்கிறது என்பதை விரிவான ஆய்வின் மூலம் நிறுவுகிறது இந்நூல். உலக மனித உரிமை பற்றிக் கூப்பாடு போடும் அமெரிக்காவின் உண்மை முகத்தையும் அமெரிக்கா ஜனநாயகத்தின் உண்மை முகத்தையும் இதன் மூலம் புரிந்து கொள்ளமுடியும்.

7. அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா…. :: அவியல் செல்வி

ஒரே வேலைக்கு, பெண்களுக்கும் , ஆண்களுக்கும் சமமான ஊதியம் வழங்குவதையே ஏற்றுக்கொள்ளாத மெக்கெயின், துணை ஜனாதிபதி வேட்பாளராக தேர்ந்தெடுப்பதற்கு முன் ஒரே ஒருமுறை மட்டுமே சந்தித்திருக்கும் பெண்ணை திடீர்னு துணை ஜனாதிபதி பதவிக்கு ஏன் நிறுத்தினார்?

ஒபாமாவை நிர்வாக அனுபவம் பத்தாதுன்னு மூச்சுக்கு மூச்சு திட்டிக்கிட்டே, இரண்டே இரண்டு வருஷங்கள் அலாஸ்கா என்ற பனி பிரதேசத்திற்கு ஆளுநராக இருக்கும், தனக்கு பரிச்சயமில்லாத ஒருவரை ஏன் துணை ஜனாதிபதி பதவிக்கு வேட்பாளராகினார்

8. சாரா பாலினின் திருமணமாகாத 17 வயது மகள் கர்ப்பம் :: வினாயக்

– அமேரிக்க பள்ளிகளில் வெளிப்படையான பாலியல் கல்வி கூடாது,
– பாலியல் கல்விக்கு அரசுப் பணமேன் ? வரிப் பணமேன் ?
– abstinence – அதாவது மறுத்தலே சிறந்த கருத்தடை
– கருக்கலைப்பு கூடாது
என்றெல்லாம் பழமையான கருத்துக்களை பறை சாற்றிவரும் சாரா பாலினின் வீட்டிலேயே, அவருடைய சொந்தப் பெண்ணே, 17ழே வயதில், அதுவும் திருமணத்துக்கு முன் கருவுற்று இருப்பது எதிர் தரப்பில் பெரும் நகைப்பையும், அமேரிக்க conservative பழமைவாதிகளிடத்து பெரும் திகைப்பையும் உண்டாக்கியுள்ளது

9. அவுட் சோர்சிங்: இந்தியாவைக் கலங்க வைத்துள்ள ஒபாமா!நாடும் நடப்பும்

அவுட்சோர்சிங் செய்யாத அமெரிக்க நிறுவனங்களுக்கு மட்டுமே இனி வரிச்சலுகை அளிக்கப்படும் நிலையை உருவாக்கப் போகிறேன் என்றார் அவர்.

10. ஒபாமா இது நியாயமா! சாய்கணேஷ் (பங்கு சந்தையில் பணம் பண்ணலாம் வாங்க)

இனவெறிக்கு எதிராக போராடியவர் என்றெல்லாம் சொல்லபடும் அவர் பேசியதும் (மண்ணின் மைந்தர்களுக்கே முதலிடம் என்ற வகையில்) இனவெறி தாக்குதலே/தூண்டுதலே.

அமெரிக்காவின் ஒவ்வொரு அசைவும் மற்ற நாடுகளின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது உலகறிந்த விசயம்…. அப்படி இருக்கையில், அவர் நடை முறைக்கு சாத்தியமா (அமெரிக்க காங்கிரஸின் அங்கிகாரம் / செனட் அங்கிகாரம் கிடைக்குமா) என்பதை யோசிக்காமல் சொல்லிய வார்த்தைகள், ஓட்டு பொறுக்கும் அரசியல் வாதிகளின் பேச்சை போல் தான் இருந்தது

11. இந்தியா – அமெரிக்கா ஒன்றிணைந்து தீவிரவாதத்தை முறியடிக்க வேண்டும் – சுதந்திர தின வாழ்த்து செய்தியில் ஒபாமா :: வியப்பு.கொம் செய்தி

21ஆம் நூற்றாண்டில் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது. இதனை இந்தியா அமெரிக்க நாடுகள் இணைந்து முறியடிக்க வேண்டும். இந்திய சுதந்திரத்தில் மகாத்மா காந்தியின் பங்கு மகத்தானது. அவரது நெறிமுறைகளை இக்காலத்து இளைஞர்கள் பின்பற்ற வேண்டும்.

12. வாங்கலையோ ஒபாமா, மெக்கெனின் காண்டம்… !!! :: சேவியர்

ஒபாமா காண்டம் சொல்கிறது : Use With Good Judgment
மெக்கெயின் காண்டம் சொல்கிறது : Old but not expired

13. ஒபாமாவின் நலன் கருதிய உப ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு :: அதிரன் மெட்ரோ நியூஸ் 29.08.08

பயங்கரவாதத்தை பொறுத்தரை ஈராக் முக்கிய இடம் வகிக்கவில்லை. ஒரு போதும் வகிக்கவும் போவதில்லை என்பது ஒபாமாவின் முடிவாக இருந்தாலும் ஈராக்கில் நிலையான இராணுவ தளங்களை ஏற்படுத்துவது தொடர்பான தவறான வழிகாட்டலுக்கு அமெரிக்கப் படையினரையும் வளங்களையும் வீணடிக்கமாட்டார் என்றே தெரிகிறது.

ரஜினிக்குப் பின் கமல்: டைனோக்குப் பின் யாரு? – கேள்வி – பதில்

முதல் போணியாக வந்தவர் டைனோபாய். (பார்க்க: Dyno Buoyயிடம் சில கேள்விகள் | இந்தியர்களுக்கும் இந்தியாவுக்கும் யார் நல்லது?) திமுக செய்தி ஒன்று போட்டால், உடனடியாக அதிமுக தகவல் வரவேண்டும் என்பது விதி. அமெரிக்கர்கள் ஏன் குடியரசுக் கட்சி விசுவாசிகளாக இருக்கிறார்கள் என்பதை டைனோ சொன்னார்.

ரஜினிக்குப் பின் கமலாக ஸ்ரீகாந்த் மீனாக்ஷி. (வழக்கம் போல் கலர் கோடிங், தடிமன்படுத்துதல் எல்லாம் என்னால் ஆன உபகாரம்)

முழுக்க முழுக்க மெகயின் சார்பு முழக்கத்திற்குப் பிறகு தீவிர ஒபாமாப் பற்றாளரிடம் என்னுடைய சந்தேகங்கள்:

1. ஒபாமாவின் பிரச்சாரத்திற்கு உதவுமளவு உங்களுக்கு அவர் உந்துதல் அளித்திருக்கிறார். ஏன்?

பதில்: நான் ஒபாமாவை முதலில் பார்த்தது 2004ம் ஆண்டு தேர்தலில் செனட் வேட்பாளராக. அந்த வருடம் அவர் ஜான் கெர்ரியை அறிமுகப்படுத்தி ஜனநாயகக் கட்சியின் மாநாட்டில் அற்புதமாகப் பேசினார். பின்னர் MSNBC தொலைக்காட்சியில் பேட்டியும் கொடுத்தார். இரண்டு சந்தர்ப்பங்களிலும் புத்திசாலித்தனமாக, தெளிவாக, நிதானமாக, ஒரு இயல்பான புன்னகையோடு பேசிய ஒபாமாவின் மேல் எனக்கு சற்று நம்பிக்கை ஏற்பட்டு அவரது எழுத்துக்களை, செயல்களை கவனிக்கத் துவங்கினேன். அதன் பின்னர் அவரைப் பற்றி நான் அறிந்து கொண்ட ஒவ்வொரு விஷயமும் எனது ஆதரவை வலுப்படுத்தின:

  1. அவரது ஈராக் போர் பற்றிய 2002 உரை. மிகத்தெளிவாக, மிகுந்த தீர்க்க தரிசனத்துடன் ஈராக் போரினால் அமெரிக்காவிற்கு எந்த எந்த விதத்தில் கெடுதல் வரும் என்பதையும், இந்தப் போர் எப்படியெல்லாம் திசைமாறிப் போகும் என்பதையும் விளக்கும் இந்த உரை போர் துவங்குவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பே வழங்கப்பட்டது. அந்த சமயத்தில் (October 2002) அமெரிக்காவில் போருக்கு ஆதரவாக சுமார் 70% மக்கள் இருந்தனர் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். அறிவுள்ள அரசியல்வாதிகள் அநேகம் பேர் உண்டு. துணிச்சலான அரசியல்வாதிகள் அநேகம் பேர் உண்டு. வசீகரமான பேச்சுத்திறன் கொண்ட அரசியல்வாதிகள் அநேக அநேகம் உண்டு. இந்த ஒரு உரையில் ஒபாமா தன் அறிவு, துணிச்சல், திறன் மூன்றையும் வெளிப்படுத்தினார். இந்த உரையைப் படித்ததும் எனக்கேற்பட்ட ஆச்சரியத்திற்கு அளவேயில்லை.
  2. அவரது பின்புலம். பலமுறை சொல்லப்பட்டதென்றாலும், இப்பொழுதும் வியப்பூட்டுவது. ஒரு கென்ய (கறுப்புத்) தந்தைக்கும் ஒரு கான்ஸாஸ் (வெள்ளைத்) தாய்க்கும் ஹவாயில் பிறந்து, பின் இந்தொனேஷியாவில் வளர்ந்து, பின் அமெரிக்கா வந்து ஹார்வர்டில் பெரும் கீர்த்தியுடன் படித்து, மிகுந்த செல்வம் ஈட்டித் தரக்கூடிய தொழில்களைத் துறந்து சமூகப் பணிக்கும், பின் அரசியலுக்கும் வந்தவர் என்பது பிரமிப்பான விஷயம். இப்படிப்பட்ட ஒரு ‘சர்வதேச மனிதர்’ அமெரிக்கத் தலைவராவது இந்த சிக்கலான தருணத்தில் மிகவும் தேவையானது என்று நினைக்கிறேன். இது பற்றி ஆன்ட்ரூ சல்லிவன் ‘தி அட்லாண்டிக்’கில் ஒரு நல்ல கட்டுரை எழுதினார்: http://www.theatlantic.com/doc/200712/obama
  3. பொதுவாக, அவரது பேச்சு மற்றும் தேர்தல் பிரச்சார அணுகுமுறை. குறிப்பாகச் சொல்லப்பட வேண்டியது, மார்ச்சில் அவர் நிகழ்த்திய இனத்துவேஷம் குறித்த உரை. அவரது பிரச்சாரத்தின் மிகவும் இக்கட்டான நிலையில் நிகழ்த்தப்பட்ட இந்த உரையில் தனது ‘கறுப்பர்’ என்ற அடையாளம் சார்ந்த பெருமை, தனித்தன்மைகளை விட்டுக் கொடுக்காமலும், அதே சமயத்தில் பெரும்பான்மை இனத்தவர்களை ஒட்டு மொத்தமாக குற்றம் சாட்டாமலும் மிகச் சிறப்பாகப் பேசினார். இந்த உரையில் அரசியல் சாதுர்யத்தை விட அதிகமாக அவரது நேர்மையும், உள்ளத்து ஒளியும் தெரிந்தது என்று சொன்னால் மிகை வார்த்தையாகத் தோன்றும். ஆனால் அதுதான் உண்மை.

ஒபாமா ஒரு அதிஉன்னத அரசியல்வாதி என்று சொல்ல வரவில்லை. சில கண்கூடான குறைகள் அவரிடமும் உள்ளன – சட்டென்று முடிவெடுக்க முடியாத தடுமாற்றக் கணங்கள், வாதங்களில் உழைப்பிற்கு பதில் திறமை/புத்திசாலித்தனத்தை நம்புவதால் வரும் குழப்பங்கள், சில கொள்கைகளில் தெரியும் நெகிழ்வுத்தன்மை ஆகியவற்றைக் குறிப்பிடலாம். ஆயினும், இவற்றை எல்லாம் மீறி, கடந்த பதினாறு வருடங்களில் நான் கண்ட அமெரிக்க அரசியல்வாதிகளிலிருந்து மிகுந்த மாறுபட்டவராகவும், மிகவும் நம்பிக்கையூட்டுபவராகவும் ஒபாமா இருக்கிறார்.

2. துணை ஜனாதிபதிக்கு எத்தனையோ பொருத்தமானவர்கள் இருந்தாலும், ‘மூத்தவர்’, ‘அடக்கி வாசிப்பவர்’ என்ற காரணங்களினால் ஜோ பைடன் தேர்ந்தெடுக்ககப்பட்டிருக்கிறார். உங்கள் பார்வையில் துணை ஜனாதிபதி தேர்வு எப்படி? ஒபாமா எடுக்கும் முதல் முடிவு சிறப்பாக இருந்ததா?

பதில்: இந்தத் தேர்வு எனக்கு இரண்டு காரணங்களுக்காகப் பிடித்திருந்தது:

  1. பைடனின் விஷய/அனுபவ ஞானம். குறிப்பாக வெளியுறவுத்துறையில். இந்த விஷயத்தில் ஒபாமாவிற்கு ஒரு அண்ணன் போலிருந்து ஆலோசனை தரக்கூடியவர்.
  2. இவர் பெயர் ஹில்லரி க்ளிண்டன் இல்லை. 🙂

பொதுவாகவே, யோசிக்காமல் சட்டென்று பேசி விட்டு பின்பு மாட்டிக் கொண்டு ‘திருதிரு’வென்று முழிக்கும் அரசியல்வாதிகளை எனக்குக் கொஞ்சம் பிடிக்கும். ஏனெனில் அவர்கள் பேசும் போது உண்மை பேசுகிறார்கள் என்று நம்பலாம். 🙂 பைடன் இந்த விஷயத்தில் டாக்டர் பட்டம் பெறத் தகுதியுள்ளவர். அடுத்த இரண்டு மாதங்களுக்குள் இதைப்போல வாயைக் கொடுத்து வம்பில் மாட்டிக் கொள்ளும் வைபவங்கள் ஒன்றேனும் நிகழும் என்று எதிர்பார்க்கலாம்.

3. ஹில்லரி க்ளின்டனையும் சாரா பேலினையும் தாக்கிய விதம் ‘பராக் பெண்களுக்கு எதிரானவர்’ என்னும் பிம்பத்தை உருவாக்க இலகுவாக்கியிருக்கிறது. இதை அவர் எப்படி தடுத்திருக்கலாம்? உதட்டுச்சாயம்/பன்றி போன்ற உவமானங்கள் குறித்த உங்கள் அபிப்ராயம் என்ன?

தொடர்ச்சி நாளை…

'அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் களம்' – செய்தித் தொகுப்பு

1. ஒபாமா அமெரிக்க ஜனாதிபதியாவதே உலகெங்கிலுமுள்ள மக்களின் விருப்பம்-பி.பி.சி :: தமிழ்செய்தி

ஒபாமாவின் தந்தையின் பிறப்பிடமான கென்யாவில் ஒபாமாவுக்கு 82 சதவீதமான ஆதரவும் இந்தியாவில் 9 வீதமான ஆதரவும் கிடைத்துள்ளது.

2. ஹெச்.2-பி விசா நடைமுறைகளை ஒழுங்குபடுத்த ஒபாமா ஆதரவு! :: வெப்துனியா

அமெரிக்காவில் வேளாண் துறை அல்லாத மற்ற துறைகளில், குறிப்பாக தகவல் தொழில்நுட்பம், மென்பொருள் துறைகளில் ஏற்படும் பணியாளர் பற்றாக்குறையை சமாளிக்க, வெளிநாடுகளில் இருந்து ஹெச்.2-பி விசா மூலம் குறிப்பிட்ட காலத்துக்கு தற்காலிகமாக ஊழியர்கள் நியமிக்கப்படுகின்றனர்.

3. அமெ‌‌ரி‌க்க ‌நி‌தியை பா‌கி‌ஸ்தா‌ன் இ‌ந்‌தியாவு‌க்கு எ‌திராக பய‌ன்படு‌த்து‌‌கிறது: ஒபாமா கு‌ற்ற‌ச்சா‌‌ற்று! :: வெப்துனியா

தீ‌விரவா‌த‌த்து‌க்கு எ‌திரான போரு‌க்காக அமெ‌ரி‌க்கா, பா‌கி‌ஸ்தா‌னு‌க்கு 10 ‌பி‌‌ல்‌லிய‌ன் டால‌ர் நி‌தி அ‌ளி‌‌த்து‌ள்ளது. ஆனா‌ல் பா‌கி‌ஸ்தா‌ன் அரசு அ‌ந்த ‌நி‌தியை பய‌ன்படு‌த்‌தி இ‌ந்‌தியாவு‌க்கு எ‌திராக போரு‌க்கு த‌ன்னை தயா‌ர் படு‌த்‌தி வரு‌கிறது எ‌ன்று கு‌ற்ற‌ம் சா‌‌ற்‌றியு‌ள்ளா‌ர்.

4. இந்தியாவுடன் நிரந்தர உறவு: அமெரிக்க குடியரசு கட்சி விருப்பம்! :: வெப்துனியா

இந்தியா-அமெரிக்கா இடையிலான அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்திலும் குடியரசுக் கட்சியின் பங்களிப்பு குறித்து எடுத்துரைக்கப்பட்டது

5. தட்பவெப்ப நிலை : ஒபாமா, மெக்கைனுக்கு ஐ.நா. வலியுறுத்தல் :: யாஹூ

புவி வெப்பமடைவதற்கு காரணமான பசுமைக்குடில் வாயுக்களை (கரியமில வாயு உள்ளிட்டவை) வெளியிடுவதில் முன்னிலை வகிக்கும் நாடுகளில் அமெரிக்காவும் முக்கியத்துவம் பெறுகிறது என்ற அவர், உலக அளவில் பொருளாதாரத்தில் மேம்பட்டு இருக்கும் அந்நாடு, புவி வெப்பமடைதலை தடுப்பதற்கு குறிப்பிடத்தக்க வகையில் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறியுள்ளார்.

அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்சுக்குப் பிறகு, அப்பதவியை வகிக்கவுள்ள பராக் ஒபமா அல்லது ஜான் மெக்கைன், தற்போதையை நிலையைக் காட்டிலும் மிகச் சிறப்பான வகையில் தட்பவெப்ப நிலை மாற்றத்தைச் சமாளிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் பான் கி-மூன் வலியுறுத்தியுள்ளார்.

6. ஒபாமாவின் காணாமல் போன சகோதரர் கண்டுபிடிப்பு :: கூடல்

பராக் ஒபாமாவிற்கு ஜார்ஜ் ஹூசைன் ஓனியான்கோ ஒபாமா என்ற தம்பி இருக்கிறார். இவருக்கு இப்போது 26 வயது ஆகிறது. இவர் இப்போது ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கென்யா நாட்டின் தலைநகர் நைரோபியின் புற நகர் பகுதி ஒன்றில் வசித்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது. இவர் ஒரு குடிசை வீட்டில் வாழ்ந்து வருகிறார். ஜார்ஜ் ஒபாமா வேறு ஒரு மனைவிக்கு பிறந்தவர் என்று இத்தாலியின் வேனிட்டி பேர் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.

தான் இரண்டே முறை தான் பராக் ஒபாமாவை பார்த்ததாகவும், 5 வயதாக இருக்கும் போது ஒருமுறையும், கடந்த 2006 ம் ஆண்டு பராக் ஒபாமா நைரோபிக்கு வந்திருந்த போது ஒருமுறையும் மட்டுமே பார்த்ததாக ஜார்ஜ் ஒபாமா கூறியதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல்கள் லண்டனில் இருந்து வெளிவரும் டெய்லி டெலிகிராப் என்ற செய்தி தாளிலும் வெளியிடப்பட்டுள்ளது.

7. சர்வதேச தலைவர்களுக்கான கூட்டத்தில் கார்த்தி ப.சிதம்பரம் :: மாலைச்சுடர்

அமெரிக்க முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் மேடாலின் கே.ஆல்பிரைட் அழைப்பினை ஏற்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் கார்த்தி ப.சிதம்பரம் அமெரிக்கா பயணமானார்.

8. யுஎஸ் மீது புதின் தாக்கு :: மாலைச்சுடர்

அமெரிக்க அதிபர் தேர்தலில் பலனடையும் நோக்குடன் அமெரிக்க அதிபர் வேட்பாளர் ஒருவர் ஜார்ஜியா பிரச்சனையை கிளப்பி இருப்பதாக ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புதின் குற்றம் சாட்டியுள்ளார். அவர் குடியரசு கட்சி வேட்பாளர் ஜான் மெக்கைனை குறி வைத்து இவ்வாறு கூறியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

9. ஒபாமாவை கொல்ல சதி :: மாலைச்சுடர்

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் 750 அடி தொலைவில் இருந்து ஒபாமாவை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்ய திட்டமிட்டிருந்ததாக தெரிய வந்துள்ளது என்று அமெரிக்க தொலைக்காட்சி ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்கத் தேர்தல் 2008 – மாநாடுகள் குறித்த ஒரு ஒப்பீட்டு அலசல் – வாஷிங்டனில் நல்லதம்பி

வாஷிங்டனில் நல்லதம்பியிடமிருந்து வந்த மின்மடலை ஸ்க்ரிப்டில் இங்கே சேமித்திருக்கிறேன்.

வாசிப்பதற்கு முன் எச்சரிக்கை: திராவிட எதிர்க்கருத்துகளைத் தவிர்த்து அமெரிக்க தேர்தல் கூட்டத்தை மட்டும் கருத்தில் கொள்வது நன்மை பயக்கும்.

இளையராஜா இசையில் இறுதியாக இதம் தந்த இந்தி அல்லாத இனியவை எது?

இளையராஜா இசையில் கடைசியாக மனதை அள்ளிய பாடல் பெற்ற படம் எது? Cheeni Kum சொல்லக்கூடாது. எனக்கு ‘சேது’.

இதுதான் என்னுடைய கேள்வி. ட்விட்டரில் வெளியான மற்றவர்களின் எண்ணங்கள்:

neotamizhan @bsubra இளங்காத்து வீசுதே…. பிதாமகன்

spinesurgeon @bsubra உன்னைவிட (விருமாண்டி) . அத்ற்கு முன் எங்கே செல்லும் இந்த பாதை (சேது)

sivaramang @bsubra ‘kaiyetha kombatho’ from vinodayathra –http://tinyurl.com/5ay368, if tamil katrilvarum&kajuraho from ONOK http://tinyurl.com/644jfh

santhoshguru @bsubra Sihi Gaali from a Kannada movie Aah Dinagalu

paval @bsubra நீ பார்த்த பார்வைக்கு.. (ஹே ராம்!)

neotamizhan @bsubra @paval இசையில் தொடங்குதம்மா…. ஹே ராம்

krgopalan @bsubra எளங்காத்து வீசுதே…! (பிதாமகன்)

sudgopal @bsubra “மயில் போல பொண்ணு ஒண்ணு..” பாரதி

anbudan_BALA @bsubra பாட்டு தொண்டையில நிக்குது, மொட்டையும் ஜானகியும் பாடின பாட்டு, படம்:அவதாரம்

rarunach @anbudan_BALA Thendral vandhu veesum bodhu?

sureshkannan70 @bsubra //இளையராஜா இசையில் // நினைவிலிருப்பது ” உன்ன விட” (விருமாண்டி) சேதுக்கப்புறம் எதுவுமே பிடிக்கலையே? இணையத்துல உதைக்கப் போறாங்க.

sureshkannan70 பாலாவிற்கு போட்டிக் கேள்வி: ரகுமானின் இசையில் கடைசியாய் நன்றாக அமைந்திருப்பதாக தோன்றின பாடல் எது? எனக்கு ‘மருதாணி” (சக்கரகட்டி)

mohandoss @bsubra எனக்கு விருமாண்டி

sugavasi @bsubra “பிதாமகன்”-ல் “எளங்காத்து வீசுதே”….Loved it. The BGM for the movie was also great.

nandhakumar @bsubra எனக்கு விருமாண்டியும் ஹேராமில் இசையில் தொடங்குதம்மாவும்தான்…

ilavanji @bsubra விரு விரு மாண்டி விருமாண்டி!!! 🙂

rozavasanth @bsubra கடைசியாய் எரிச்சலை கிளப்பியது மாயாபஜார், அஜந்தா, க.க.பா., உளியின் ஓசை, தனம் அட எல்லாமே!

bmurali80 @bsubra ஒரு நாள் ஒரு கனவு – ஃபாசில் படம், இளையராஜா இசையில். 3 பாடல்கள் கிளாஸ்…

icarusprakash @bsubra : kajuraho kanavile – http://tinyurl.com/6eodmz

sudgopal @bsubra “எனக்குப் பிடித்த பாடல்…” ஜூலி கணபதியையும் சேர்த்துக்கோங்க

parisalkaaran @bsubra இளையராஜா இசையில்… நீங்க கேட்டதுக்கு என் பதில் இளங்காத்து வீசுதே…. (பிதாமகன்)

penathalar @bsubra இளங்காத்து வீசுதே. வானவில்லே வானவில்லே

valluvan @bsubra Virumandi

rozavasanth @bsubra சரி, கேள்விக்கான பதில், கடைசியாக மனதை அள்ளியது (சொல்லப்போனால் அழ வைத்தது) ̀அழகி’.

rozavasanth @donion உங்களுக்கு ஜூலி கணபதியின் இசை பிடிக்கவில்லையா? (பிடித்திருந்ததாக எனக்கு நினைவு, இப்போது சரியாக தெரியவில்லை.)

icarusprakash @donion we tend to ignore these just becoz the films are bad. I zapped when i saw athu oru… few weeks back in tv

icarusprakash @donion even i thought so. but u shud spend some time listening to the BGM scores of julie ganapathy and athu oru kana kalam.

rarunach @bsubra My last ilaiyaraja favorite was “Onna vida” from Virumandi. (Used Imdb for ilaiyaraja’s filmography!). Kaasi, how about you?

thendral @bsubra கடைசியா அவரு இசை அமைத்த படம் எது…? ம்ம்ம் 😉

இந்தியர்களுக்கும் இந்தியாவுக்கும் யார் நல்லது? – அமெரிக்க அதிபர் தேர்தல்

நேற்றைய கேள்வி – பதிலின் தொடர்ச்சி…

3. ‘ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் அமெரிக்காவில் மாற்றம் வராது’ என்று மேலோட்டமான அனுமானம் எனக்கு உண்டு. அடுத்து மெகயின் வந்தால் எது வேறுபடும்? ஒபாமாவாக இருந்தால் எப்படி ஆகும்??

பெரிய மாறுதல்கள் வர வாய்பில்லாவிட்டாலும் அரசாங்க மருத்துவக் காப்பீட்டுத்திட்டத்தை எந்த வகையிலாவது சட்டமாக்கிவிட டெமக்கரட்ஸ் உத்வேகம் காட்டுகிறார்கள்.அதன் மூலம் ஆப்ரிக்க அமேரிக்கர்கள் மற்றும் லத்தீனோக்களின் வாக்கு வங்கியை தக்க வைத்துக்கொள்ளலாம் என்று டெமக்ராடிக்கட்சி நினைக்கிறது. அரசாங்கத்தின் உதவித்தொகைகளில் அவ்விரு சமூகங்களே அதிகம் பெறுவதால் இவ்வாறான திட்டத்தை அறிமுகங்செய்வது அந்த வோட்டு வங்கியை தனதாக்கிக் காக்க முடியும் என்பது டெமாக்ரட்ஸின் திட்டம்.அவர்கள் தங்கள் தேவையை அரசாங்கம் தீர்க்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்! அதனால் ஜனநாயகக் கட்சி ஆட்சிஅமைக்கும்பட்சத்தில் அரசாங்க மருத்துவக் காப்பீடு எந்த வகையிலாவது அமல்படுத்தப்படும்.

இவ்வாறான அரசாங்க் தலையீட்டிற்கு அரசாங்கத்திற்கு வருவாய் அதிகம் தேவைப்படும். அதற்கு ஒரே வழி வரி அதிகரிப்பபது மட்டுமே. பராக் மற்றும் ஹில்லாரியின் மருத்துவக் காப்பீட்டை அமல் படுத்த அமெரிக்கர்களின் வரியை பத்து சதவீதமாவது உயர்த்தினால் மட்டுமே முடியும் என்று பல வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள்.

அடுத்ததாகப் போர். அமெரிக்காவின் பொருளாதாரம் போரினால் விளையும் நன்மைகளில் வளர்ந்தது (Benefactor of the ‘Broken Window’ economic principle). எங்காவது எதற்காகவாவது போர் நடந்தால்தான் அமெரிக்காவினால் வர்த்தகத்தை விரிவுபடுத்த முடியும். முன்னாள் சோவியத் ரஷ்யாவுடன் கொண்ட பனிப்போரினால் அமெரிக்க வர்த்தகம் பல மடங்கு வளர்ந்தது. சோவியத்தின் மறைவிற்குப்பிறகு தனது தளவாட விற்பனை, மற்ற நாடுகளைக் காக்க வாங்கும் மானியம், குறைவற்ற எண்ணை இறக்குமதிக்கான ஒப்பந்தங்கள் போன்ற பல வர்த்தக தொடர்புகளிலும் அமெரிக்க பொருளாதாரத்திற்கு நெருக்கடி வளர்கிறது. அதை சமன் செய்ய அமெரிக்கா தன்னை ஒரு வல்லரசாகக் காட்டி மிரட்டுவது அவசியமாகிறது.

பராக் ஜனாதிபதியானால் அவ்வாறான ஒரு சக்தி வாய்ந்த தளபதியாக செயல்படுவாறா என்பது சந்தேகமே. Barack’s ascend to presidency could start America’s fall from being a super power.

4. இந்தியர்களின் நலனுக்கு எவரின் எந்தக் கொள்கை உகந்தது? எச்1பி எண்ணிக்கை அதிகரிப்பார்களா? பச்சை அட்டை துரிதப்படுமா? எவரினால் இந்தியாவுடன் வர்த்தகம் மேம்படும்?

The biggest myth amonst Indians is that emocrats favor aliens or immigration which is NOT the fact! உங்களுக்கு சந்தேகமிருந்தால் ஜான் கெர்ரியின் சென்ற தேர்தல் வலைதளதில் தேடிப்பார்க்கவும்! இப்போதைய தேர்தலில் இம்மிக்ரேஷனுக்கு அத்துணை முக்கியத்துவம் கொடுக்கப்படாததால் இரு வேட்பாளர்களும் அதைப்பற்றி பெரும் அக்கரை எடுத்துக்கொள்ளவில்லை. ஆனாலும் வந்தேறிகளுக்கான குடியுரிமை சட்டங்களை முன்னின்று இயற்றி அதை அமல் படுத்தியது குடியரசுக் கட்சியே!

என்னை பொருத்தமட்டில் (ஒரு சுயநல நோக்கில்கூட) எச்1பி எண்ணிக்கை இப்போதிருக்கும் அளவே அதிகமாகப்படுகிறது. மேலும் எச்1பி, பச்சை அட்டைக்களில் அரசாங்கம் நேரிடையாக தலையிடுவதில்லை. பச்சை அட்டை வழங்க அதிக ஆண்டுகள் எடுப்பதற்குக்காரணம் இல்லீகல் இமிக்கரண்ட்ஸ் எனப்படும் சட்டவிரோத வந்தேரிகளுக்கு அரசாங்கம் சட்டபூர்வ குடியுரிமை வழங்க முடிவெடுத்ததே காரணம். அந்த திட்டத்தினால் குடிநுழைவுத்துறையினர் ஏற்கனவே ஏற்றுக்கொள்ளப்பட்ட பல விண்ணப்பங்களை பார்க்க தேவையான ஆட்பலமின்றி நிலுவையில் கிடத்தப்பட்டது. மேலும் எச்1பி அதிகப்படுத்துவதாலும் பச்சை அட்டை வழங்க அதிக தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. பொருளாதாரம் முன்னேற்ற ஏற்பட்டு திறனுள்ள ஆட்களுக்கான தேவை ஏற்பட்டால் ஒழிய எச்1பியை அதிகப்படுத்துவது முட்டாள்தனமே. மேலும் ஏற்கனவே இங்குள்ளவர்களின் பணி நிலவரமே ஆட்டம் காணும் போது அதிக ஆட்களை இறக்குமதி செய்வது மக்களுக்கு அபிமானம்தரக்கூடியது அல்ல.

BRICS – Brazil, Russia, India, China and South Africa (Previously BRIC now SA joined the league to become the emerging five) ஆகிய ஐந்து நாடுகளின் வளர்ச்சியை புறக்கணிக்கமுடியாத ஒரு தளத்தில் இன்றைய பொருளாதாரம் நகர்ந்து கொண்டிருக்கிறது. உலக வர்த்தகதில் போட்டியிடவும், அதில் கலந்து கொள்ளவும் இந்த ஐந்து நாடுகளிடமும் நல்ல நட்புறவை பேணுவதே புத்திசாலித்தனம் என்பதை இரு கட்சிகளைச் சேர்ந்த அமெரிக்க பொருளாதார வல்லுனர்கள் உணர்ந்திருக்கிறார்கள்.

அதனால் எந்த கட்சி வந்தாலும் இந்தியாவுடனான வர்த்தகமும் பொருளாதார பரிவர்த்தனைகளும் அதிகரிக்கும் என்பதே உண்மை!

5.நியூ யார்க் டைம்ஸ், வாஷிங்டன் போஸ்ட், ஸ்லேட் போன்றவை ஏன் குடியரசுக் கட்சிக்கு சார்பாக தலையங்கங்கள் தீட்டுவதில்லை?

அதையே நான் திருப்பிக்கேட்கலாம் – ஏன் அவர்கள் ஜனநாயகக் கட்சியை குடியரசுக் கட்சியைத் தாக்குவதைப்போல தாக்குவதில்லை? தமிழ் நாட்டில் திராவிடக் கட்சிகள் எப்படி மிடியா உலகையே தன் பிடியில் வைத்திருக்கிறதோ அதைப்போலவே இங்கு ஜனநாயகக் கட்சியும். பராக் ஒரு கொலையே செய்தாலும் அதை கருணைக் கொலை என்று வாதிடக்கூடிய பத்திரிக்கைகள் இங்கு அதிகம். மேலும் பெரும்பான்மையான குடியரசுக் கட்சிக்காரர்கள் அந்த பத்திரிக்கைகளை படிக்காமல் இருப்பதும் காரணமாக இருக்கலாம். முன்னால் கம்யூனிஸ்ட் மற்றும் இடது சார்புடைய வெளிநாடுகள் மூலம் அவர்களுக்கு பணம் வருவதாலும் இருக்கலாம்.

டைனோ | டைனோ

சாரா பேலின் – கருத்துப்படங்கள்

நன்றி: ஸ்லேட் தொகுப்பு

Dyno Buoyயிடம் சில கேள்விகள்

அமெரிக்க அதிபர் தேர்தலை முன்னிட்டு பதிவர்களிடம் கேள்வி கேட்டு எனக்குள்ள சந்தேகங்களை நிவர்த்திக்க எண்ணம். முதலில் மாட்டியவர் பதிவர் டைனோ.

நீங்களும் பதிலளிக்க ரெடி என்றால், உங்கள் மின்னஞ்சலை எனக்கு அஞ்சல் செய்ய வேண்டுகிறேன். கூடவே கேள்விகளையும் கேட்டுக் கொண்டுவிட்டால், பதிலளிக்க தோதுப்படும் என்பது என் தனிப்பட்ட அபிப்பிராயம்.

இனி டைனோவுடன் குறுக்கு விசாரணை:

1. ட்விட்டரில் கொடுக்கும் ஸ்டேட்டகளைப் பார்த்தால் நீங்க குடியரசுக் கட்சி ஆதரவாளர் போல் தெரிகிறீர்? ஏன் ரிபப்ளிகன்ஸ்?

நான் குடியரசுக்கட்சி ஆதரவாளன். கட்சிகளைக்களைக் கடந்து, நல்ல நவரச பேச்சாளர் என்பதால் பில் க்ளிண்ட்டன் பால் கொஞ்சம் சாஃப்ட் கார்னர் உண்டு.

ஏன் ரிபப்ளிக்கன் – கொஞ்சம் எனக்கு தெரிந்தளவில் விரிவாக பதிலளிக்க முயல்கிறேன்:

அவர்களின் கொள்கை மேல் கொண்ட ஈர்ப்புத்தான் முதல் காரணம். குடியரசுக்கட்சியின் கருக்கலைப்பு, ஒருபால் சேர்க்கை ஆகிய சில கொள்கைகளில் எனக்கு உடன்பாடு கிடையாது. ஆனால் அவர்களின் மற்ற கொள்கைகளில் மிகவும் ஈர்க்கப்பட்டுள்ளேன். ஜனாதிபதி ரீகன் அவர்களின் “Lesser Government Intervention” அதாவது அரசாங்கத்தின் குறுக்கீடு இல்லாத ஒரு நாடு/பொருளாதாரம் என்பது என்னை மிகவும் கவர்ந்தது.

காப்பிடலிசத்திற்கும் கம்யூனிசத்திற்கும் உள்ள பெரிய வேறுபாடு என்று இதை நான் கூறுவேன். கம்யூனிசம் சம்பாதிப்பது அனைத்தையும் அரசாங்கத்திடம் கொடுத்துவிட்டு அரசாங்கத்திடமே கையேந்தச்செய்யும் ஒரு வறட்டு சித்தாந்தம். எல்லாவற்றையும் அரசாங்கத்திடம் இறைந்து பெறவேண்டிய நிலை வந்தால் தனி மனித முன்னேற்றத்தை தடை செய்வது போல உள்ளது. வாசிப்பிற்கு மிகவும் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் எழுதத்ப்பட்ட ஒரு நடைமுறை சாத்தியமில்லாத மனிதகுல வளர்ச்சியை தடைசெய்யும் புதினம்தான் கம்யூனிசம். கம்யூனிசத்தின் வீழ்ச்சி மனித பரிணாமத்தின் அவசியம் என்பதை உலக மக்களைப்போல நானும் உணரத்துவங்கியிருக்கிறேன்.

சுதந்திரக்கட்சி சமத்துவம், சமதர்மம் போன்ற ஏட்டு சுரைக்காய்களை இன்னும் தாங்கிப்பிடிப்பதால் அவர்களை வெறுக்கிறேன். அரசாங்க மருத்துவக் காப்பீடு, அரசாங்கத்தின் தயவிலான கல்வி போன்றவை எனக்கு பிடிக்கவில்லை. நம்மை பாதுகாத்துக்கொள்ள ‘நம்மை’ விட சிறந்தவர் யாருமில்லை என்பது ரிபப்ளிக்கன்கள் கருத்து. நமக்கு ‘அரசாங்கமே’ சிறந்த பாதுகாப்பு அளிக்கும் என்பது ஜனநாயக கட்சியின் வாதம்.

இப்போதைய அமெரிக்காவில் என் குழந்தையை நான் தனியார் பள்ளிக்கு அனுப்ப விரும்பினாலும் அரசாங்கத்திற்கு பள்ளிக்கான வரியை செலுத்தியே ஆகவேண்டும். ஒரு வகையில் என் பிள்ளைகள் எந்த பள்ளிக்கு செல்லவேண்டும் என்பதை அரசாங்கம்தான் முடிவு செய்கிறது. (ஏன் நல்ல பள்ளியிருக்கும் மாவட்டத்திற்கு மாறி விட வேண்டியதுதானே என்று விதண்டாவாதம் செய்யலாம் – அதைப்பற்றி விரிவாக பிரிதொருநாளில்).

நாளை அதே முறையைத்தான் ஜனநாயகக்கட்சி மருத்துவத்திற்கும் அறிமுகம் செய்யவிருக்கிறது. வருடத்திற்கு 10,000 டாலர் மருத்துவ சேவை வரி கட்டும் நானும், வேலை செய்யாமல் அரசாங்க உதவி பெரும் ஒருவரும் ஒரே வரிசையில் தரமில்லாத ஒரு மருத்துவமனை வரிசையில் காத்திருக்ககும் நிலை வரும். இதில் ஹில்லாரி/ஓபாமா கொண்டுவருவதாக சொல்லப்படும் மருத்துவக் காப்பீட்டில் எனக்கு விருப்பமில்லாவிட்டாலும் நான் வரி செலுத்த கட்டாயப்படுத்தப்படுவேன், இப்போது பள்ளிகளுக்கு வரி கட்டுவதைப்போல! Rob the rich and distribute to poor என்பது ராபின்ஹுட்டிற்கும் எம்ஜியார் திரைப்படங்களுக்கு மட்டுமே உரிதானவை. அவரே தன் கடைசி காலத்தில் அமேரிக்கா வந்துதான் மருத்துவச்சிகிச்சை பெற்றார் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

ஏன் எல்லோரும் சமமாக இருக்கலாமே என்று இந்திய கம்யூனிஸ்டுகளைப்போல கேட்கலாம். அதற்கு லிங்கன் அவர்களின் கூற்றே பதில் – “The government that can do everything for us will take everything from us”. அரசாங்கம் சீரமைப்பு சட்டங்களை ஏற்படுத்திவிட்டு அதை வழிநடத்துவதை தனியாரிடம் ஒப்படைத்துவிடுவதே காப்பிடலிஸத்தின் அடித்தளம்.

The government should regulate by creating and amending laws not own institutes and run them. அரசாங்க சேவை என்றுமே தரத்துடன் இருக்காது என்பது கண்கூடு! அரசாங்கம் எப்போதுமே ஊழல் நிறைந்தது. அதன் தாக்கத்தை குறைப்பதே ஒரு நாடு பொருளாதார முன்னேற்றம் அடைய தற்போதைக்கு நமக்கிருக்கும் ஒரே தீர்வு! இந்தியாவில் அரசாங்கம் நடத்தும் பள்ளிகள்,மருத்துவமனைகள் எந்த தரத்துடன் இருக்கிறதோ அதே தரத்துக்கு அமெரிக்கவிலும் வந்து விட ஜனநாயகக்கட்சி துணை போவதாலும் அவர்களைப்பிடிக்காது.

நான் மேலே குறிப்பிட்டதைப்போல அரசாங்கமே பல துறைகளை நடத்த வேண்டும் என்று டெமக்ரட்ஸ் விரும்புவதால் அவர்கள் வரிகளை உயர்த்திக்கொண்டே வந்திருக்கிறார்கள். வரி அதிகம் கட்டுவது எனக்கு உவப்பில்லாததால் வரி குறைப்பை ஆதரிக்கும் குடியரசுக்கட்சியை எனக்குப் பிடிக்கும். பதில் மிகவும் நீண்டு விட்டது. விளக்கம் தேவைப்பட்டால் மீண்டும் தொடர்கிறேன்!

2. ஜான் மெகயின் – சாரா பேலின் அல்லது பராக் ஒபாமா – ஜோ பைடன்: எவருக்கு உங்க ஆதரவு? அடுத்த ஆட்சிக்கு எப்படி பொருத்தமானவர்கள் ஆகிறார்கள்.

இதற்கான பதிலை என் சென்ற பதிலில் இருந்தே ஊகித்திருக்கலாம். மெக்கெய்ன்னுக்குத்தான் என் ஆதரவு!

பராக் சிறந்த பேச்சாளர். அமெரிக்கத் தேர்தலில் இந்த நிலையை எட்டியிருக்கும் முதல் கருப்பினத்தவர் என்ற வகையில் அவரை மிகவும் மதிக்கிறேன். ஆனால் அதே சமயம் அவருக்கு பின்னால் இருக்கும் கட்சி இறந்த சித்தாந்தங்களை தூக்கிப்பிடிக்கும் வயதானவர்களும் புதிய சிந்தனைகளை ஏற்காத ஒரு கட்சி. சென்ற இரு தேர்தலின் போது பத்திரிக்கைகளில் வந்த பல கட்டுரைகள் டெமக்ரட் கட்சியின் அடிவேரை அம்பலப்படுத்தி அந்த கட்சிக்கு ஒரு நல்ல தலைமை இல்லாத குறையை சுட்டியிருக்கிறார்கள். அந்த ஒரு பெரிய இடைவெளியை ராஜ தந்திரத்துடன், இனபற்றையும் மாற்றம் என்ற வரையறுக்காத கொள்கையையும் முன்னிறுத்தி சொகுசாக அமர்ந்து கொண்டவர்தான் பராக். குடியரசுக் கட்சி அவ்வாறல்ல. இப்போதே Fiorina, Bobby Jindal, Palin போன்ற இள ரத்தங்களை பாய்ச்சி தன் கொள்கைகளை உயிர்பித்துக்கொண்டே இருக்கும் ஒரு கட்சி. என்னைப்பொருத்தமட்டில் பராக் இந்த ஆண்டு பொறுத்து அடுத்த தேர்தலாண்டில் போட்டியிட்டிருக்கலாம். அவர் செய்த சாதனைகள் எதுவும் பட்டியலிடும்படி இல்லை. அனுபவமின்மை, தலைமை ஏற்று நடத்தகுடிய முதிர்ச்சியின்மை ஆகியவை பெரிய கெடுதல்களை உருவாக்கலாம்.

மெக்கெய்னின் அனுபவம், நாடாளும் திறமை, நாட்டுக்கு ஆற்றிய சேவை, பல்லாண்டு கால செனட்டில் இருகட்சிகளை பல திட்டங்களில் ஒருங்கிணைத்த பாங்கு, பொறுமை, எதிர்த்து போட்டியிட்ட தன் கட்சி மற்றும் மற்ற கட்சி வேட்பாளர்களை கையாண்ட முதிர்ச்சி ஆகிய பல பண்புகளுக்கு டெமக்ராட்ஸிடம் எந்த சரியான பதிலுமில்லை!

3. ‘ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் அமெரிக்காவில் மாற்றம் வராது’ என்று மேலோட்டமான அனுமானம் எனக்கு உண்டு. அடுத்து மெகயின் வந்தால் எது வேறுபடும்? ஒபாமாவாக இருந்தால் எப்படி ஆகும்??

பாக்கி விடைகள் நாளை…