Monthly Archives: ஜூலை 2007

Karaintha Nizhalgal – Asokamithiran (3) : Links

இந்த நாவலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்களுள் ஒருவரான பேராசிரியர் ஆல்பர்ட் ஃப்ராங்க்ளின் (எஸ். கோபாலியுடன் இணைந்து மொழிபெயர்த்தார்) நாவலின் தலைப்பை ‘பாத்திரங்களின் வரிசை’ (Cast of Characters)என்று வைத்தார்.

ஓர் அத்தியாயத்தில் கால நிர்ணயத்துக்கு இடம் கொடுக்கும் ஓர் உண்மைத் தகவல் வந்துவிட்டது; அது நாவலின் தரத்தைக் குறைத்துவிட்டது என்று தி.க.சி. சொன்னார். அந்த நேரத்தில் இந்த உலகத்தின் மிகச் சிறந்த இலக்கியத் திறனாய்வாளராக அவர் எனக்குத் தோன்றினார்.

செப். 2005 முன்னுரையில் அசோகமித்திரன்.


சினிமா என்னும் மிகப் பிரம்மாண்டமான கனவு உலகத்தின் இயக்கத்தையும் செயல்பாட்டையும் அநாயாசமாகக் காட்சிப்படுத்தும் நாவல் கரைந்த நிழல்கள். சினிமா உலகத்தில் தானாகவே உருவான சட்ட திட்டங்கள்; அந்தச் சட்ட திட்டங்களுக்குள் சிக்கிக் கொள்ளும் தயாரிப்பாளர்கள், ஸ்டுடியோ முதலாளிகள், டிஸ்ட்ரிபியூட்டர்கள், புரொடக்ஷன் – புரோகிராம் மேனேஜர்கள், இயக்குநர்கள், துணை இயக்குநர்கள், துணை நடிகர்கள் என்று பல்வேறு தரப்பினரின் வாழ்க்கை பெரும்பாலும் சினிமாவைப்போல் வண்ணமயமாக அமைந்துவிடுவதில்லை. திரையில் பயிரிடும் கனவுகளுக்காக வாழ்வின் கனவுகளைச் சிதைத்து உரமாக்கும் வர்க்கம் குறித்த இப்படியொரு யதார்த்தம் குலையாத நாவல் இதற்கு முன்னும் பின்னும் தமிழில் எழுதப்பட்டதில்லை.


கடந்த ஐம்பது ஆண்டுகளாகத் தமிழ்ப் படைப்பியக்கத்தில் மிகத் தீவிரமாக இயங்கிவரும் அசோகமித்திரன், ஜெமினி ஸ்டுடியோவில் மக்கள் தொடர்புத் துறையில் சில காலம் பணியாற்றியவர். அவரது பல படைப்புகள் இந்திய-அயல் மொழிகளில் மொழியாக்கம் பெற்றிருக்கின்றன. இந்த நாவல் ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளில் மொழிமாற்றம் பெற்றுள்ளது. அசோகமித்திரன், ‘அப்பாவின் சிநேகிதர்’ என்ற சிறுகதைத் தொகுப்புக்காக 1996-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாதமி விருது பெற்றவர்.


1. எண்ணங்கள்: படித்த இரு கதைகள்

பின்னிணைப்பாக மணி என்பவர் எழுதிய விமரிசனமும் உள்ளது. இந்த விமரிசனம் இந்தக் கதையைப் புரிந்து கொள்ள, இந்தக் கதையின் மூலம் அசோகமித்திரன் என்ன சாதித்துள்ளார் என்பதைத் தெரிந்து கொள்ள வெகு உதவியாயிருக்கிறது.

2. புத்தக அறிமுகம்: அசோகமித்திரனின் ‘கரைந்த நிழல்கள்’

வழக்கமான கதை பாணியில் அமையாமல் பல்வேறு கதாபாத்திரங்களைக் கொண்டு கால இடைவெளிக்கு ஏற்ப அத்தியாயஙகளாக அமைந்த நாவல். திரைப்படம் என்னும் மாய உலகுக்குப் பின்னால் இயங்கிக் கொண்டிருக்கும் மனிதர்களின் வாழ்க்கையைப் படம் பிடித்துக் காட்டும் நாவல்.

3. Thinnai :: அசோகமித்திரனின் ‘கரைந்த நிழல்கள்’ – ‘சூரியராஜன் ‘

4. சுரேஷ் கண்ணன் (maraththadi.com) – கரைந்த நிழல்கள்

5. நல்லநிலம்: முத்துராமன்

பெரும்பாலும் தன்னுடைய நாவல்களில் நனவோட்டம் என்ற முறையை அவர் வெகுவாகத் தவிர்த்துவிடுவதால், பாத்திரங்களின் செயல், பேச்சு ஆகியவற்றின் மூலம் கதை வளர்கிறது.

6. Karaintha Nizhalgal – Asokamithiran (1) | பகிர்வு II

7. கதாவிலாசம் – எஸ். ராமகிருஷ்ணன் :: மீதமிருக்கும் சொற்கள்!

சினிமா உலகின் நிஜத்தை முகத்தில் அறைவது போலச் சொல்லும் அசோக மித்திரனின் ஒரு சிறுகதை இருக்கிறது. அக்கதை ‘புலிக் கலைஞன்’. ‘காலமும் ஐந்து குழந்தைகளும்’ என்ற அசோக மித்திரனின் சிறுகதைத் தொகுப்பில் அது இருக்கிறது.

8. அசோகமித்திரனும் போடப்படாத இரண்டு சட்டை பித்தான்களும்

சினிமா உலகின் மாயபிம்பத்தை சுஜாதாவின் ‘கனவுத் தொழிற்சாலை’ ஒரு கோடி காட்டியதென்றால்

9. Riyadh Tamil Sangam – ரியாத் தமிழ் சங்கம்

அசோகமித்திரனும் ஆறாவது கூட்டமும் – லக்கி ஷாஜஹான்.

10. அம்பலம் – ஒரு நுட்பமான படைப்பாளி அசோகமித்திரனுடன் நேர்காணல்

Continue reading

Karaintha Nizhalgal – Asokamithiran (2)

‘பணம் பணத்தினால் வாங்கக்கூடிய வாழ்க்கை – இந்த இரண்டுக்கும் நீ சபலமில்லாமல் மீண்டு வளர்ந்தது பற்றி எனக்கு உன் மேல் மதிப்புண்டு. ஆனால் உனக்கு எவ்வளவோ விஷயங்கள் பற்றி அபிப்பிராயம் சொல்லக்கூடப் போதிய அறிவு கிடையாது என்று எனக்குத் தெரியும். உனக்குத் தெரியவில்லை. ஆனால் எல்லாவற்றையும் கரைகண்டவன் என்ற நினைப்புதான் உனக்கு இருக்கிறது.

மிகச் சாதாரணமான ஒன்றைப் பற்றி உனக்குச் சரியான மதிப்பீடு கிடையாது. உனக்கு பணத்தின் மதிப்பே தெரியாது. ஒவ்வொரு தம்படியும் எவ்வளவு நேர உழைப்பு, எவ்வளவு தீவிரமான உழைப்பு என்று எண்ணிக் கொண்டு இங்கே என் எஸ்டேட்டில் என் காரை எடுத்துக் கொண்டு வந்து என் பணத்தை வைத்துக் கொண்டு குடித்து விழுந்து கிடக்கிறாய்.

நான் வாழ்க்கையை ஆரம்பித்தபோது எனக்கு என் மூளை ஒன்றுதான் இருந்தது. உனக்கு என் மூளை இருக்கிறது. கூட ஒரு சிறு சாம்ராஜ்யம் இருக்கிறது. எனக்கு இருபது வருஷம் முப்பது வருஷம் உழைத்து எட்டிப் பிடிக்க முடிந்த நிலை உனக்கு இன் பிரக்ஞயில்லாமலேயே கொடுக்கப்பட்டிருக்கிறது. நீ என்னோடும் சேராமல், குடும்பத்தோடும் சேராமல் வேறு யாருடனும் சேராமல் இங்கே வந்து அரை இருட்டில் அரை நினைவில் கிடப்பது ஏதோ பெரிய சாதனை என்று நினைத்துக் கொண்டிருக்கிறாய்.

நான் இதைச் சொல்ல முடியும். இது சாதனையே அல்ல. நீ மனிதர்களைப் பார்த்துப் பேச நிற்காமல் நழுவிவிடுவது உனக்கு அவர்களின் தேவை இல்லை என்பதனால் இல்லை. நீ பேசப் பேச உன் அந்தரங்க நிலைமை சிறிதளவாவது வெளிப்பட்டுவிடும். உனக்கு உன்னைப் பற்றி நிர்ணயம் கிடையாது. அப்படியிருந்தாலும் அது நீ பெருமை கொள்ளும்படி இல்லை.

அதுதான் நீ மனிதர்களைக் கண்டு தூரப் போவதின் காரணம். பணம் பற்றி, பணம் ஒருவழிப் பாதை அல்ல. அது உனக்குத் தெரியும். உனக்கு வாங்கிக் கொள்ளத் தெரியும். திருப்பித்தரத் தெரியாது. ஒரு ஒப்பந்தத்தையும் காப்பாற்றத் தெரியாது. ஒப்பந்தங்களைக் காப்பாற்ற வேண்டிய குணம் உன்னிடம் கிடையாது.

நீ என்னைத் தராசிலிட்டுப் பேசுகிறாய், நீ பேசுவது எனக்கு வருத்தத்தைத் தரவில்லை. ஆனால், என்னைத் தராசிலிட்டு, தவ்றான மதிப்பீடுகள் வைத்து நீ சிந்தனை செய்கிறாய். என்னைப் பற்றி நினைக்கும்போதெல்லாம் இந்த வக்கிரப்பட்ட சிந்தனை ஓட்டம்தான் இருக்கும். இதே பின்னப்பட்ட ஓட்டம்தான் மற்றெல்லாவற்றுக்கும். நீ எனக்கு நாணயம் பற்றி சொல்கிறாய்.

நான் துரும்பு பெற்றாலும் அதற்குரிய கட்டணம் கொடுத்து விடுகிறேன். யாரையும் என்னிடம் ஏமாற்றம் அடைய விடுவதில்லை. அது எங்கள் தலைமுறை. அந்தத் தலைமுறையில் சிக்கெடுத்துப் போகும் புத்தி கிடையாது. பொறுப்புகளைக் கண்டு நாங்கள் ஓடிப்போனது கிடையாது. வாக்குறுதிகள் தரவேண்டியிருப்பதற்காகச் சமூகத்தினின்றே ஒளிந்து கொண்டு இருந்தது கிடையாது. உன் புத்தி, உன்னைப் போன்றவரின் புத்திதான் விநோதமாக இருக்கிறது. அந்தப் புத்தி இன்றிருப்பதை எல்லாம் அப்படியே என்றைக்கும் இருக்கும் என்கிற நிச்சயித்தில் உழல்கிறது.

ஆனால் ஒவ்வொரு நாளிலும் எவ்வளவோ விஷயங்கள் அப்படியே அழிந்து போய் விடுகின்றன. இதோ இந்த இரண்டு மணி நேரம் உன்னை என்னோடு சேர்த்துக் கொண்டு போவதற்காக நான் மன்றாடிக் கொண்டிருக்கும் வேளையில் எவ்வளவோ விஷயங்கள், எவ்வளவோ பொருள்கள் என் கையை விட்டுப் போய்க் கொண்டிருக்கின்றன.

போவதை ஈடுகட்டுவதற்கு வேறு பல பெற வேன்டும். இதை நான் முதலிலிருந்து செய்தேன். இதைத்தான் நான் திட்டமிட்டுச் செய்தேன். இப்போது உன்னிடமுள்ளதைப் பெருக்க முயற்சி செய்யாவிட்டாலும் பாதுகாக்கப் பிரயத்தனம் எடுத்துக் கொள்ளாவிட்டால் திடீரென்று ஒரு நாளைக்கு இந்தக் கூரை இருக்காது. அந்த வேலி இருக்காது.

எதுவும் திடீரென்று மடிவது இல்லை. எதுவும் திடீரென்று பிறந்து விடுவதும் இல்லை. ஒவ்வொருவனுக்கும் ஒரு சாம்ராஜ்யம் பெரிதோ சிறிதோ இருக்கிறது. அதை அவன் விழிப்பொடு கைவசம் வைத்துக் கொள்ளத் தவறும் ஒவ்வொரு கணத்திலும் அதன் மீது இருபது படையெடுப்புகள் நிகழ்கின்றன. நீ என்றாவது திவாலாகப் போனால் இதை நினைவில் வைத்துக் கொள். நீ ஒரே நாளில் திவாலாகவில்லை.’

நன்றி: கரைந்த நிழல்கள் – அசோகமித்திரன்  

Karaintha Nizhalgal – Asokamithiran (1)

அவர் பேச்சு முடிந்தபிறகு, காலி கப்-சாஸர்கள், தட்டுகள் அகற்றப்பட்ட பிறகு  விருந்தினர் பார்ப்பதற்காகவென்று முந்தைய ஆண்டு ஜனாதிபதி வெள்ளிப் பதக்கம் பெற்று, சினிமா விசிறிகள் சங்கம் (ரிஜிஸ்டர்), தலை சிறந்த படம் என்று நற்சான்றிதழ் வழங்கிய தமிழ்ப்படம் ஆரம்பித்தது.

…..

ராம்சிங் அந்தப் பாராட்டை அப்படியே அங்கீகரித்துக் கொண்டான்.

‘சோக அம்சம்தான் கொஞ்சம் அதிகமாக இருந்தது’ என்று செக்காரர் சேர்த்துக் கொண்டார்.

இப்போது ராம்சிங்குக்கும் சிறிது சந்தேகம் வந்தது. ஜகன்னாத்ராவ் கண்களில் ஓரளவு தெரியுமளவுக்கு விஷமம் தென்பட்டது. அந்தப் படத்தில் ஆரம்பத்தில் நன்றாகப் பாடி விளையாடிக் கொண்டிருந்த வாலிபக் கதாநாயகனுக்குக் கைபோய், கல்யாணமான பிறகு தாய், சொத்து, பிறந்த குழந்தை இவை எல்லாம் போய் குருடனாகவும் ஆகிவிடுகிறான்.

‘வாழ்க்கையே சோகம்தானே’, என்று ராம்சிங் சொன்னான்.

‘எங்களுக்கு (நாஜி) ஆக்கிரமிப்பு இருந்தது. லட்சக்கணக்கான பேர் நசித்துப் போனார்கள். அப்படியும் எங்கள் கதைகளை விட உங்களுடையதில் சோகம் அதிகமாகத்தான் இருக்கிறது.’

திரவியம் ஏனிந்தப் பேச்சைத் தொடங்கினோம் என்ற சங்கடம் தெரிய நின்றுகொண்டிருந்தார்.

செக்காரர் இறுதியாக ஒன்று கூறி முடித்தார். ‘நானும் மூன்று இந்தியப் படங்களைப் பார்த்து விட்டேன். உங்கள் கதாநாயகர்களுக்கு பெண்மை சிறிது அதிகமாக இருப்பதாகப் பட்டது. அதிலும் உங்கள் படத்து நடிகர் எல்லாவற்றுக்கும் அழுது விடுகிறார்.’

எல்லோரும் லேசாகச் சிரித்தார்கள். உலகத்திலேயே தலைசிறந்த நடிகர் என்று நாட்டில் ஒரு சிலரால் கொண்டாடப்படும் அந்த நடிகர் வலுவான சுவாசம் பெற்றவர்.

நன்றி: கரைந்த நிழல்கள் – அசோகமித்திரன் 

Satham Podathey – Audio Review(s)

1. பிச்சைப்பாத்திரம்: சத்தம் போடாதே – இசை வெளியீட்டு விழா

2. Senthamizh Thaenmozhiyaan!: சத்தம் போடாதே (யுவன் ஷங்கர் ராஜா): சத்தம் போடாதேவின் பாடல்கள் சுமார்தான்.

3, செல்வேந்திரன்: சத்தம் போடாமல் கேளுங்கள்

“அழகு குட்டி செல்லம்
உன்னை அள்ளித் தூக்கும்போது
பிஞ்சு விரல்கள் மோதி
நான் நெஞ்சம் உடைந்து போனேன்”
சங்கர் மகாதேவன் பாடும் சத்தம் போடாதே படப்பாடலை கேட்க நேர்ந்தது.

எந்த நேரம் ஓயாத அழுகை
ஏனிந்த முட்டிக்கால் தொழுகை
எப்போதும் இவன் மீது பால் வாசனை
எந்த மொழியில் சிந்திக்கும் இவன் யோசனை
எந்த நாட்டை பிடித்துவிட்டான்
இப்படியோர் அட்டினக்கால் தோரணை

நீ தின்ற மண் சேர்த்தால்
வீடொன்று கட்டிடலாம்

தண்டவாளம் இல்லாத இரயிலை
தவழ்ந்தபடி நீ ஓட்டிப் போவாய்
——————————————————–
பாடல்கள்: நா முத்துக்குமார்
இசை: யுவன் ஷங்கர் ராஜா

௧) அழகு குட்டிச் செல்லம் – ஷங்கர் மஹாதேவன் :: ♥♥♥ /4

ஷங்கருக்காக ஒரு ♥;
நா முத்துக்குமாருக்காக ஒன்று;
கொஞ்சம் தாலாட்டு கேட்டு நாளாச்சு – ஒன்று.

இதே மாதிரி குழந்தை அடம்பிடிப்பதை, பொம்மை வாங்கப் படுத்துவதை, பாத்ரூம் போகும்போது பாதியில் அழுகையை முடிக்கிவிடுவதை, இராட்சஸியாக மாறுவதையும் மணமகன் கூடிய சீக்கிரம் எழுத பதினாறும் பெறுவாராக.

௨) எந்தக் குதிரையில் – ராஹுல் நம்பியார் & ஷ்ரேயா கோஷல் :: ♥♥♥♥ /4

என்னுடைய இசை குறுநிலத்தில், சுஜாதா, சித்ரா, ஹரிணி, மாலதி வரிசையில் ஷ்ரேயாவுக்கும் அரியணை உண்டு.
நெஞ்சில் நிற்கும் மெட்டு. Flawless Execution.

௩) காதல் பெரியதா – சுதா ரகுநாதன் :: ♥♥ /4

சுதா என்பதே தெரியாத மாதிரி பாட சுதா ரகுநாதன் எதற்கு? இருந்தாலும், சுதாத்தனம் தெரியாமல் பாடியது ஆச்சரியம்.

௪) ஓ இந்தக் காதல் – அட்னான் சாமி & யுவன் ஷங்கர் ராஜா :: ♥♥½ /4

‘மௌனம் பேசியதே’யில் ‘காதல் செய்தால் பாவம்’ நினைவுக்கு வருவது பள்ளிக்கூட காதலியை குழந்தையுடன் பீச்சில் சந்தித்தவுடன் ஏற்படும் தொண்டைக்குழி அவஸ்தை தருகிறது.

௫) பேசுகிறேன் பேசுகிறேன் – விவா கேர்ள்ஸ் :: ♥♥♥ /4

கடல் தாண்டும் பறவைக்கெல்லாம்
இளைப்பாற மரங்கள் இல்லை
கலங்காமலே
கண்டம் தாண்டுமே

சிக்கன் சூப் பாடல். (ஒரு நட்சத்திரம்)
ராஜா போலவே எங்கிருந்தோ வந்த, ரசனையாக சுட்ட இடைச்செருகல். (ஒன்று)
குரல்களுக்காக… *

ரிதம்‘ மாதிரி இதமா அல்லது ‘பூவெல்லாம் கேட்டுப்பார்‘ மாதிரி காதுக்கு மட்டும் வைத்துப் பாரா என்பதை பார்த்த பிறகுதான் பாடல்கள் சத்தம் போடுதா, போடாதே-வா என்று தெரியும்.

அடிபட்டாலும் சிங்கம் சிங்கிளாத்தான் வரும்

வேட்டையாடப்பட்ட புள்ளிமான்: டேனியலா ஹண்ட்ஸோவா (Daniela Hantuchova)

Daniela Hantuchova lost serena williams

செரீனா சிங்கம்

serena williams hurt wimbledon 16

செய்தி: NDTV.com: Wimbledon: Serena Williams advances
காலில் தசைப்பிடிப்பு வந்த பிறகுதான் கர்ஜிக்கவே ஆரம்பித்த மாதிரி பாய்ச்சல் பந்து. விந்தி விந்தி, விடாக்கண்டராக களமெங்கும் துரத்தல். அடிபட்டாலும் ஜெயிக்கவைக்கும் ஆட்டம். கலக்கிட்டாங்க…

சிவாஜி: பெயர் வைத்ததில் பின்னுள்ள மதவாத அரசியல்

நன்றி: உணர்வு வார இதழ் 11:42

Sivaji name controversy islam Tamil religion fans Page 10

Unarvu Sivaji name controversy Muslim in Tamil Nadu - Hindutva

Vairamuthu lists his favorite Movie Lyrics & Songs

வாசு.ஸ்ரீராம், செந்தலை.

தமிழ் சினிமாக் கதாநாயகர்களுக்கு நீங்கள் எழுதிய பாடல்களில் உங்களுக்குப் பிடித்த பாடலாக நீங்கள் கருதுவது?

பட்டியல் நீளும் ; பரவாயில்லையா?

  • எம்.ஜி.ஆர். –_ சந்தனப்பேழையே (அஞ்சலிப்பாடல்)
  • சிவாஜி _ பூங்காத்து திரும்புமா (முதல் மரியாதை)
  • சிவக்குமார் _ கலைவாணியே (சிந்துபைரவி)
  • ரஜினிகாந்த் _ ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன் (படிக்காதவன்)
  • கமல்ஹாசன் _ அந்திமழை பொழிகிறது (ராஜபார்வை)
  • விஜய்காந்த் _ எரிமலை எப்படிப் பொறுக்கும் (சிவப்பு மல்லி)
  • கே. பாக்யராஜ் _ எண்ணியிருந்தது ஈடேற (அந்த ஏழுநாட்கள்)
  • ராஜேஷ் _ ஓடுகிற தண்ணியிலே (அச்சமில்லை அச்சமில்லை)
  • பிரபு _ பூவே இளைய பூவே (கோழி கூவுது)
  • அர்ஜுன் _ தாயின் மணிக்கொடி (ஜெய்ஹிந்த்)
  • சத்யராஜ் _ தாயும் யாரோ (பெரியார்)
  • சரத்குமார் _ கொட்டப்பாக்கும் கொழுந்து வெத்தலையும் (நாட்டாமை)
  • விக்ரம் _ மூங்கில் காடுகளே (சாமுராய்)
  • மோகன் _ இளையநிலா பொழிகிறதே (பயணங்கள் முடிவதில்லை)
  • கார்த்திக் _ பனிவிழும் மலர்வனம் (நினைவெல்லாம் நித்யா)
  • தியாகராஜன் _ ரோஜா ஒன்று முத்தம் கேட்கும்நேரம் (கொம்பேறி மூக்கன்)
  • பார்த்திபன் _ அம்மா யாரு அப்பா யாரு (புதிய பாதை)
  • பாண்டி-யராஜன் _ ஆராரிரோ பாடிய-தாரோ (தாய்க்-கொரு தாலாட்டு)
  • பாண்-டியன் _- பொத்-திவச்ச மல்லிகை மொட்டு (புதுமைப் பெண்)
  • மோகன்லால் _ நறுமுகையே (இருவர்)
  • முரளி _ ஒரு ஜீவன் அழைத்தது (கீதாஞ்சலி)
  • ராமராஜன் _ ஓடம் எங்கே போகும் (நம்ம ஊரு நல்ல ஊரு)
  • அரவிந்த் சாமி _ காதல் ரோஜாவே (ரோஜா)
  • பிரபுதேவா _ என்னவளே அடி என்னவளே (காதலன்)
  • விஜய் _ சர்க்கரை நிலவே (யூத்)
  • அஜீத் _ சத்தம் இல்லாத தனிமை கேட்டேன் (அமர்க்களம்)
  • சூர்யா _ ஜன கண மன (ஆய்த எழுத்து)
  • மாதவன் _ தெய்வம் தந்த பூவே (கன்னத்தில் முத்தமிட்டால்)
  • பிரசாந்த் _ அன்பே அன்பே கொல்லாதே (ஜீன்ஸ்)
  • ரகுமான் _ வராக நதிக்கரை ஓரம் (சங்கமம்)
  • தனுஷ் _ என்னம்மா கண்ணு (திருவிளையாடல்)
  • ஸ்ரீகாந்த் _ ஆப்பிள் பெண்ணே (ரோஜாக்கூட்டம்)
  • ஜெயம் ரவி _ மண்ணிலே வந்து உடையிது வானம் (மழை)
  • விஷால் -_ ஆரிய உதடுகள் (செல்லமே)
  • ஷாம் _ காதல் வந்தால் சொல்லி அனுப்பு (இயற்கை)
  • ஜீவா _ நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய் (டிஷ்யும்)
  • ஆர்யா _ ஒவ்வொரு பிள்ளையும் (வட்டாரம்)
  • பிருதிவிராஜ் _ காற்றின் மொழி (மொழி)

Arasu Bathilgal

1. கே.பலராமன், கடலூர்.

கலைஞர் டி.வி. எப்படி இருக்கும்?

‘முரசொலி’ மாதிரி இருக்குமோ?

—————————————————————————

2. துரைராஜ், திருப்பூர்.

அசின், த்ரிஷா, நயன்தாரா, பாவனா என்று வரிசையாகப் பலர் வந்தாலும் சிம்ரன் விட்டுச் சென்ற இடம் காலி யாகவே இருக்கிறதே?

குறிஞ்சி மலர்கள் உடனுக்குடன் பூக்காது.
—————————————————————————
3. சந்திரகுமார், தில்லையாடி.

‘டாக்டர் ராமதாஸ் காந்தியைப் போல் சிந்தனை செய்கிறார்’ என்று கலைஞர் சொல்லியிருக்கிறாரே?

பல நேரங்களில் ஒத்துழையாமை இயக்கம் நடத்துவதால் இருக்கலாம்.

Political (satire) Cartoons (Week of Jul 1)

mathy dinamani irresponsible presidents power centers prathiba

Prathibha President candidate corruption politics

Pon Vizha dinamani power cut DMK functions Adade 04

Continue reading

Madurai West bypoll Calculations & an old op-ed by Kalachuvadu

2006

முந்தைய வேட்பாளருடனான வித்தியாசம்

வாக்களித்தோர் சதவிகிதம்


மொத்த வாக்காளர்கள்

1,85,269

பதிவான வாக்குகள்

1,31,030

வாக்கு சதவிகிதம்

70.72%

.தி.மு..

57,208

43.66 %

காங்கிரஸ்

53,741

3,467

41.01 %

தே.மு.தி..

14,527

39,214

11.09 %

பா...

1,851

2007

கடந்த தேர்தலில் இருந்து வாக்கு மாற்றம்

மொத்த வாக்காளர்கள்

1,56,180

-29,089

பதிவான வாக்குகள்

1,17 895

-13,135

வாக்கு சதவிகிதம்

75.49%

↑ 4.77 %


காங்கிரஸ்

60,933

51.68 %

7,192

(↑ 13.38 %)

.தி.மு..

29,818

31,115

25.29 %

-27,390

(↓ 47.88 %)

தே.மு.தி..

21,272

8,546

18.04 %

6,745

( 46.43 %)

பா...

1,308

 

 

 

 

 

 

முந்தைய தலையங்கம்: எது பெரிய ஆபத்து? (காலச்சுவடு)

காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டி இடைத் தேர்தல் முடிவுகள் இயல்புக்கு மாறான முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளன. இடைத் தேர்தலில் ஆளுங்கட்சி வெற்றிபெறுவது புதியதல்ல. அதிலும் ஜெயலலிதாவுக்கு இது புதிதல்ல. 12 அமைச்சர்கள், 60 எம்.எல்.ஏ.க்கள், கோடிக்கணக்கில் பணம் ஆகிய ‘யதார்த்தங்க’ளைக் கவனத்தில் கொண்டால் இவ்வெற்றி வியப்பளிக்காது. தி.மு.க. அணியும் சளைக்காமல் (மத்திய) அமைச்சர்களை, எம்.எல்.ஏ.க்களைக் களமிறக்கியிருந்தது. பண விஷயத்திலும் ‘குறை’ இல்லை. எல்லாவற்றுக்கும் மேலாக ஏழு கட்சிக் கூட்டணி அது. இருந்தும் பெரிய வாக்கு வித்தியாசம் எப்படி ஏற்பட்டது என்பதுதான் பலரும் சுட்டிக்காட்டும் ‘புதிர்’.

 

2001 சட்டமன்றத் தேர்தலில் பெற்றதைவிட அதிக வாக்குகளை இந்தத் தேர்தலில் அ.தி.மு.க. பெற்றுள்ளது. 2004 நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. அணி பெற்ற வாக்குகள் கணிசமாகக் குறைந்துள்ளன. இவற்றைச் சுட்டிக்காட்டும் அரசியல் நோக்கர்கள் வாக்காளர்களின் மனநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தின் விளைவாக இதைக் குறிப்பிடுகின்றனர். ஆனால் அவர்கள் இரு அம்சங்களைக் கவனத்தில் கொள்ளவில்லை.

 

ஒன்று: இந்த இரு தொகுதிகளிலும் வாக்காளர்களின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம். காஞ்சிபுரத்தில் 2001 சட்டமன்றத் தேர்தல் – 2004 நாடாளுமன்றத் தேர்தல்களின் வாக்காளர் எண்ணிக்கைகளுக்கிடையே வெறும் 32 வாக்குகள் மட்டுமே வித்தியாசம். கும்மிடிப்பூண்டியிலோ 2004 தேர்தலின்போது வாக்காளர் எண்ணிக்கையில் 4854 பேர் குறைந்திருந்தனர். ஆனால் இவ்விரு தொகுதிகளிலும் இடைப்பட்ட இந்த ஓராண்டில் சுமார் 16 ஆயிரம் வாக்காளர்கள் கூடியுள்ளனர். இப்படி அதிகரித்த வாக்குகள் யாவும் அ.தி.மு.க.வுக்கே சென்றுள்ளன.

 

இரண்டாவது: வாக்களித்தோர் எண்ணிக்கையில் காணப்பட்ட அபரிமிதமான வேறுபாடு, காஞ்சிபுரத்தில் மட்டும் சுமார் 10 சதவீதம் அதிகரித்துள்ளது. அந்தத் தொகுதியில் பல வாக்குச் சாவடிகளில் 90 சதவீதத்துக்கும் அதிகமாக வாக்குப் பதிவு நடந்துள்ளது.

 

இடைத் தேர்தல் முடிவு வரவிருக்கும் பொதுத் தேர்தலின் அறிகுறி என உண்மையாகவே நம்பினால் அ.தி.மு.க.வை எவராலும் காப்பாற்ற முடியாது. தி.மு.க.வோ இப்போதாவது சுயபரிசீலனை செய்துகொள்வது நல்லது. தகுதிக்கு அதிகமாக மாறன் குடும்பத்துக்குத் தரப்படும் முக்கியத்துவம் கட்சியின் பிற தலைவர்களைப் பாதிக்கும் என்பதை கவனத்தில் கொள்வது நல்லது.

 

பொதுத் தேர்தலில் அ.தி.மு.க வெற்றி பெற முடியாது எனச் சொல்பவர்கள் இடைத் தேர்தலில் செய்ததைப்போல் பண பலத்தையும் அதிகார பலத்தையும் அது பயன்படுத்த முடியாது என்பதைக் காரணமாகக் காட்டுகிறார்கள். ஆனால் இந்த முடிவுகள் அதைக்கூட அவர்கள் செய்யக்கூடியவர்கள்தான் என்ற அச்சத்தையே ஏற்படுத்துகின்றன. பணம் கொடுத்து வாக்குகளை வாங்குகிற அரசியல் கட்சிகளைவிடவும் பணம் கொடுத்தால் வாக்களிக்கிற வாக்காளர்களே மிகவும் ஆபத்தானவர்கள். இதை எப்படி எதிர்கொள்வது?