Monthly Archives: ஜூன் 2006

Raj Gouthaman – State of Tamil Daliths

ராஜ் கௌதமன்

ஆங்கிலேயர் புகுத்திய பூர்ஷ்வா ஜனநாயகத்தில், பிரதிநிதித்துவ அரசியல், பெரும்பான்மையோரின் ஆதரவு அதிகாரத்தைக் கைப்பற்ற உதவியது. தமிழக மக்கள் தொகையில் இரு சதவிகிதத்தினராக இருந்த பார்ப்பனரை எதிர்க்க மீதி 98 சதவிகிதத்தினரைத் திராவிடர் என்ற ஒரு குடையின் கீழ் வேளாளர்கள் திரட்ட முனைந்தனர். வேளாளரின் சாதி அரசியலுக்குத் தமிழ் மொழியும் சைவ மதமும் ஆய்தங்களாயின.

தலித் மக்களைத் தீண்டாதவர்களாக ஆக்கியதில் பார்ப்பனரைப் போலவே வேளாளருக்கும் பங்குண்டு. ஆனால் தீண்டாமைக் குற்றத்திற்கு பார்ப்பனரையும், அவர்களுடைய சமஸ்கிருதப் பண்பாட்டையும் காரணங்களாக வேளாளர்கள் எடுத்துக் காட்டினார்கள். நீலாம்பிகை அம்மையார் போன்றவர்கள் பார்ப்பனரின் சமஸ்கிருதப் பண்பாட்டிற்குள் கால்களைப் பதித்துக் கொண்டே தீண்டாமைக்குப் பார்ப்பனர் மட்டுமே காரணம் என்றார்கள்.

வேளாளர் சத்திரியர் முதலான சாதியினரைத் திராவிடர் எனவும், எஞ்சிய பெரும்பான்மை தலித் மக்களை ஆதி திராவிடர் எனவும் ஒன்று திரட்டும் நோக்கில் ஜஸ்டிஸ் கட்சி தோன்றியது. இக்கட்சியின் தலைமை தெலுங்கு நிலவுடமையாளர்களிடமும் தமிழ் வேளாளர்களிடமும் இருந்தது. படித்த சிறுபான்மை ஆதிதிராவிடரும் இக்கட்சியில் அங்கம் வகித்தார்கள்.
….

படித்த ஆதிதிராவிடர்கள் நகரங்களில் கால்பதித்து வாழ்ந்த சிறுபான்மையோராவார். தோட்டி, சக்கிலியர், ஒட்டர், உப்பரவர் முதலான தெலுங்கு – தலித்களும், தேவேந்திரகுலம் என்று தங்களை சமஸ்கிருதமயப்படுத்தி மேற்சாதியாக மாற்ற முனந்த பள்ளரும், இவர்கட்கெல்லாம் புரோகித காரியங்களைப் பார்த்து மேற்சாதியாகப் பாவித்துக் கொண்ட வள்ளுவர்களும், மாடு தின்ற, தின்னாத பறையர்களும் ஒரு அரசியற் கொடியின் கீழ் இன்றும் வரமுடியாதிருக்கிற போது, அன்றைக்கு இதனை நினைத்துப் பார்க்கவே முடியாதுதான்.
….

சைவ உணவு, பசுவின் பால், நெய் ஆகியவை உயர்சாதி அடையாளத்தையும், அசைவ உணவு, குறிப்பாக மாடு, பன்றி இறைச்சி உணவு போன்றவை கீழ்ச்சாதி அடையாளத்தையும் சுட்டின. சாதி இந்துக் கூட்டுக் குடும்ப அமைப்பில் ஓரிரு வயது முதலாகவே எவை எவை தீட்டுக்கள், எவரெவர் தீண்டத்தகாதவர் ஆகியவை உணவு அடிப்படையில் சொல்லித் தரப்படுகின்றன.

பசுவோடு தொடர்புடையவை சுத்தமானவை என்றும், நாய், பன்றியோடு தொடர்புடையவை அசுத்தமானவை என்றும் உணர்த்தப்படுகின்றன.

‘பசுவாலைப் பிடித்தபடியே நதியைக்
கடக்கலாம்; நாய்வாலைப் பிடித்தபடி
நதியைக் கடக்க முடியுமா ?’

என்று அறநெறிச்சாரம் என்ற நீதி நூலும்,

‘எலும்பைத் தின்று செமிக்கிற நாய்க்குப்
பசுவின் நெய்யுண்டு செமிக்க முடியுமா ?’

என்று நீதி வெண்பா என்ற நீதி நூலும் கேட்கும் வினாக்கட்கு அடியில் பசு / நாய் என்ற ரீதியில் சுத்த / அசுத்தப் பாகுபாடு இருப்பது தெரியும். பழைய புறநானூறு போன்ற இலக்கியங்களிலும், பசு, பார்ப்பார், பத்தினிப் பெண் என்று பசுவின் வரிசையில் பார்ப்பனரையும், ஒருவனுக்கே உடலைத் தரும் பெண்டிரையும் சேர்த்திருப்பதைக் காணலாம். வேளாள / பார்ப்பன பக்தர்கள் இறைவனிடம் கசிந்துருகும்போது,

‘சீலமில்லாத புலையன், நாயன்’ என்றும்,
‘நாயடியேன், புலையடியேன்’ என்றும்

தங்களைத் தாழ்த்திக் கொள்ளுகிறபோது, தாழ்ச்சியின் இறுதி எல்லையாக நாயும், புலையன் என்ற தலித்தும்தான் வாய்த்தார்கள்.
….

எல்லாவித அதிகாரங்களும், குடும்ப அமைப்பில் தனிமனித அளவில் உளவியல் ரீதியாக உள்வாங்கப் படுவது பாலியல் அடிப்படையில்தான். தலித்கள் சாதி, பொருளாதார அதிகாரங்களைத் தகர்ப்பது போல, குடும்பத்தில் பாலியல் அதிகாரத்தையும் தகர்ப்பது கடமை.

ஆண் ஆதிக்கம் கொண்ட குடும்பத்தையும், அதன் வழியே உயர்சாதி ஆதிக்கம் கொண்ட சாதியமைப்பையும் இவை இரண்டையும் நிரந்தரப்படுத்துகின்ற மத நிறுவனத்தையும் உடைக்கின்றபோது தான் மொத்த சமுதாயத்தோடு தலித்களும் விடுதலை பெறுவது சாத்தியமாகும். எத்தனை அரசியல் – பொருளாதார மாற்றங்கள் நடந்தாலும் முழு விடுதலை என்பது சாதிய, பாலியல் ஒடுக்குமுறைச் சமுதாயத்தில் சாத்தியமில்லை.

வரலாறு தலித் மீது தொடுத்த, தொடுத்துக் கொண்டிருக்கிற சகலவிதமான வன்முறைகட்கும், அவற்றைச் செய்து கொண்டிருக்கிற அதிகாரத்துவத்திற்கும் எதிரான குரலைத் தலித் இலக்கியம் ஒலிக்க வேண்டும். ‘தலித்’ ஒன்றுக்குத்தான் சாதி இல்லை, மதம் இல்லை எனக் கூறும் உரிமையும், தைரியமும், தேவையும், கடமையும் உண்டு. ஏனெனில் அதற்குக் கீழே ஒடுக்கப்படுவதற்குச் சாதிகள் இல்லை; இதனைக் கட்டிக்காக்க மதங்கள் இல்லை. சாதியையும் மதத்தையும் ஆண்மகனையும் மையமாகக் கொண்ட குடும்பத்தையும் தகர்ப்பதே தலித் இலக்கியத்தின் உள்ளடக்கமாக இருக்கும். இவ்விததில் கறுப்பர் இலக்கியமும், பெண்ணிய இலக்கியமும், நாட்டுப்புற இலக்கியமும் தலித் இலக்கியப் பரப்பிற்குரிய இன்றியமையாத கூறுகளை வழங்க முடியும்.

தலித் இலக்கியம் சுகமான வாசிப்புக்கு உரியதல்ல. படிப்பவர்கள் சூடாக வேண்டும்; முகம் சுளிக்க வேண்டும்; சாதி மதமெல்லாம் இல்லை என்று சொல்லிக் கொண்டிருப்ப்வர்களுக்குள் புதைந்திருக்கிற சாதி, ம்தக் கருத்தியலைத் தோலுரித்துக் காட்ட வேண்டும்; அவர்கட்கு குமட்டலை ஏற்படுத்த வேண்டும். நாகரிகமும் நாசூக்கும் பார்ப்பது மிதிபட்டவன் காரியமல்ல. படிப்பவனின் இதயமும் கண்களும் சிவக்க வேண்டும். அதன் பிறகே தலித் இலக்கியம் வந்துவிட்டதாகக் கருத முடியும். அது வரை?

நன்றி: தலித்திய விமர்சனக் கட்டுரைகள் :: ராஜ் கௌதமன் – காலச்சுவடு


| |

La Sa Ramamirtham

அடையாளங்கள் – லா.ச.ரா.

தருணத்தின் தர்க்கத்தினின்னு இன்னும் மீளவிலை. தேடினால் வராது; ஆனால் எதிர்பாராத சமயத்தில் பின்னால் வந்து தோளை தொடும் தருணத்தின் ஸரஸம்.

எண்ணத்தோடு, அதனினும் மஹத்தான இன்னொரு எண்ணம் இழையும் ரஸாயனத்தில், மனம் நித்யத்வத்துடன் உராய்கையில், வேறு ரோமாஞ்சலி, நெஞ்சடைப்பு, தனக்குத்தானே தனிழப்பு, பயம், கணமேயுகம். யுகமே கணம் – கோடுகள் அறிந்த நிலையில் எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டு ஒரு ஆனந்தம் – ஆனால் நொடி நேரமே தாள முடியாது. ஆனால் அதில் அமுதம் உண்டு விட்டேனே! அதற்காக அலைகிறேன்.

தரிசனத்துக்கு ஆதாரம் அன்புதான். அன்பின் பெருக்கு. அன்புக்கேற்றபடி ஆவாஹனம் ஆவாஹனத்துக்கு ஏற்றவாறு தரிசனம். தரிசனம் என்பது என்ன? அன்பின் அலைச் சிகரத்தில் சமயத்துக்கேற்றவாறு அவள் தோன்றுவிதம், ரூபம். இங்கு அரூபமும் ரூபம்தான்; ஆமாம் யார் அவள்?

நித்யத்வத்தில், மானிடப் பரம்பரை வழிவழி. நம்பிக்கையின் தீவிரத்தில் செதுக்கப்பெற்று, அதே வழிவழி பக்தியில் ஊறி, இலக்கியமென்றும் இசையென்றும் கலை, ஞானம், விஞ்ஞானம், தியானம் என்றும் பல்வகை வழிபாடுகளில் செழித்தவள்.

அவள் எங்கும் நிறைந்த சக்தி ஆதலால் அவளை தனி உருவத்தில் முடக்குவதற்கில்லை.

வான் நீலம் அவள் நிறம்.

வாழை மரத்தில் ஆடும் தலைவாழையிலை அவள் பச்சைப் பட்டுப்பாவாடை.

அதோ செம்பருத்திச் செடியில் எட்டா உயரத்தில் என்னப் பார்த்து நாக்கை நீட்டிச் சிரிக்கிறாள்.

துளும்பிய கண்ணீர்த் துளியில், குமுறும் இடியில் நிறைந்த மனதில், இருவரிடையே தேங்கும் மௌனத்தில்.

பூவரச மரத்தினின்று தானே சுழன்று சுழன்று உதிரும் இலையின் காவிய சோகத்தில்.

கிணறுள், அதோ ஆழத்தில் சுரந்து கொண்டேயிருக்கும் தாரைகளில்,

கோபுர ஸ்தூபி உச்சியில் உட்கார்ந்து சிறகைக் கோதி, உடனே பறக்கும் பச்சைக் கிளியின் சொகுஸில்,

அடுத்த சமயம் அதே ஸ்தூபி மேல் கழுகின் சிறகு விரிப்பில்.

சொல்லிக் கொண்டே போகலாம். உவமைகளில், உருவங்களில், அடையாளமாய்த் தன்னைக் காட்டிக் கொள்கிறாள். உள்ளத்தின் நெகிழ்ச்சியில் அவள் நடமாட்டம்; மௌனத்தின் உச்சிதான் அவள் வாழுமிடம்.

திரிகரண சுத்தியில் எப்பவுமே இருக்க முடியாது. சுத்தமாயிருக்க ப்ராயத்தனம் தான் செய்ய முடியும். அழுக்கு சேர்ந்து கொண்டே தான் இருக்கும்.

ஆனால் சில அபூர்வ சமயங்களில், முகூர்த்த வேளைகள் என்றே சொல்லலாம். தருணங்கள்; நான் என் பாசாங்குகளைக் களைந்து, பொய்மையில் மூழ்கிக் கிடந்த என் நாணயம் தானே மேல்வந்து, நான் யாருடனும், எதனுடனும் விரோதமில்லாமல் புவனத்தின் ஜீவஸ்ருதியோடு இழைந்துபோன வேளையில், இதயத்தின் அமுத கலசம் பொங்குகையில், தன் ஸஹிக்க முடியாத சௌந்தர்யத்தில் அவள் தோன்றுகிறாள். என் உள்ளத்தின் சதுப்பில் இறங்கி நடக்கிறாள். மார்பை இருகைகளாலும் பொத்திக் கொள்கிறேன். அவள் பாதச்சுவடுக்ளின் இன்பம் தாங்க முடியவில்லை. அதோ அவள் கொலுசு சப்தம் கேட்கவில்லை?

அவள் தருண்யை.

தெய்வம் வேண்டாம். ஆனால் தரிசனம் கட்டாயம் வேண்டும்.

வார்த்தைகள் கிளிஞ்சல்கள்.

அடையாளங்கள் (கட்டுரையின் சில பகுதிகள்) – லா.ச.ரா. (லா. ச. ராமாமிருதம்)


| |

Chat Meet – Icarus Prakash

இகாரஸ் அல்லது ஐகாரஸ் பிரகாசு என்னும் ஜெயப்பிரகாஷ் குறித்து நிறைய எழுதலாம். சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் சலக்கு சலக்கு நடையில் மண்டையின் ஓரத்தில் விடாப்பிடியாக ஒட்டிக் கொள்ளும் எழுத்தின் கர்த்தா.

சாம்பிளுக்கு பழைய ராயர் காபி கிளப்பில் இருந்து ஆவி பறந்த மெனுவில் சில:

  • Entrance with a Bang – சுய அறிமுகம்
  • முதல் கதை (1) | (2)
  • அறிவுஜீவிகளும் அற்பாயுளுக்கும் …் (ஆதவன்)
  • ஓ…. கல்கத்தா இன்ன பிற
  • ஜெ.ஜெ. சில குறிப்புகள்

    முழுவதையும் சாப்பிட வயிற்றில் இடம் இல்லாவிட்டாலும், ருசி பார்க்கத் தவறவிடக் கூடாத…

  • இதற்குத்தானே ஆசைப்பட்டாய் செயப்பிரகாசா
  • 1. கில்லியின் இலக்கு/வெற்றி என்று எதைக் கருதுகிறீர்கள்?

    கில்லியை, ஒரு personal project ஆக நினைத்துத்தான் துவக்கினேன், community service ஆக அல்ல. இப்போதும் அப்படியே தான் நினைக்கிறேன். ஆகவே, இலட்சியம், இலக்கு என்றெல்லாம் பெரிதாக எதையும் வைத்துக் கொள்ளவில்லை. எனக்கு எழுதுவதை விட, படிப்பதிலும், அதை பகிர்ந்து கொள்ளுவதிலும் ஆர்வம் அதிகம். சுவாரசியமான விஷயம் ஏதேனும் தென்பட்டால், அதை நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுவது வழக்கம். அதை பொதுவான இடத்தில் வைத்துச் செய்தால், தொலைபேசிக்கு ஆகும் பணத்தையும், தனி மடல் பரிமாற்றங்களுக்குச் ஆகும் நேரத்தையும் மிச்சப்படுத்தலாம் என்று நினைத்துத்தான் கில்லியைத் துவக்கினேன்.

    2. ஆங்கிலப் பயன்பாடை கில்லி அதிகரிக்கிறது; கில்லியில் சிலரை பரிந்துரைப்பதே இல்லை; இவரை சுட்டினால்,அந்தப் பக்கத்தில் இருந்து ஒருவரை சுட்டி சமநிலை பாதுகாக்கிறார்கள்; என்றெல்லாம் குற்றச்சாட்டு எழவில்லை:-) வந்தால் எப்படி பதில் கொடுப்பதாக உத்தேசம்? பரிந்துரைகளினால்,பதிவுகளினால் வரும் எதிர்பார்ப்புகளை எப்படி சமாளிக்கிறீர்?

    இப்படிப் பட்ட குற்றச்சாட்டுகள் எழத்தான் செய்கிறது.

    ஆங்கிலப் பயன்பாடு : கில்லியின் நோக்கம் மொழி வளர்ச்சி அல்ல, அதே சமயம் மொழியைக் கொலை செய்வதுமல்ல. தமிழ் மொழி பேசுபவர்களுக்கு அப்பீல் ஆகும் என்று நினைக்கிற விஷயம், ஆங்கிலமோ, தமிழோ, இந்த இரண்டில், எந்த மொழியில் இருந்தாலும், அது கில்லியிலே இடம் பெறும். உருப்படியான சங்கதிகள் எந்த மொழியில் இருந்தால் என்ன? தேவைப்படும் போது மொழிபெயர்த்துக் கொண்டால் போயிற்று.

    சிலரைப் பரிந்துரைப்பதே இல்லை : கில்லி, ஒரு exhaustive aggregator அல்ல. சிறந்ததையே கொடுப்போம் என்றோ, எல்லாப் பதிவுகளையும் கண்காணிக்கிறோம் என்றோ, சொல்வதில்லை. அப்படிச் செய்யவும் இயலாது. நிமிடத்துக்கு எத்தனை பதிவுகள் ஆரம்பிக்கப்படுகின்றன என்கிற புள்ளிவிவரம், கூகிளில் தேடினால் கிடைக்கும். அப்படி இருக்கும் பட்சத்தில், எல்லாப் பதிவுகளையும் தொடர்ந்து வாசிப்பது மனித யத்தனத்துக்கு அப்பாற்பட்ட விஷயம். மேய்கிற போது, கண்ணில் படுகிற, சுவாரசியமான விஷயத்தை இணைக்கிறோம். இணைக்கப்படுகிற அனைத்து விஷயங்களும், கில்லியின் தொகுப்பாளர்களின் விருப்பு வெறுப்பு, ரசனையைச் சார்ந்தே அமைகிறது.கில்லி தொகுப்பாளர்கள் அனைவரும், கிட்டதட்ட ஒத்த அலைவரிசையில் இயங்குவதால், இப்படிப் பட்ட கேள்விகள் எழுகின்றன. புதிதாக வேறு யாராவது உறுப்பினர் வந்தால் கில்லியின் நிறம் மாறலாம்.

    பரிந்துரைகள் : பரிந்துரைகள் அதிகம் வருவதில்லை. அப்படி வந்தாலும், அதை வாசித்து விட்டு, பிடித்திருந்தால் தான் இணைக்கிறேன். இது வரை யாரும், ” நான் பரிந்துரை செய்தேன், ஏன் போடலை? ” என்று கேட்டதில்லை. இனி யாராவது அப்படி கேட்டால், அது பாலாஜியின் டிபார்ட்மெண்ட் , அவரைக் கேட்டுங்க” என்று சொல்லலாம் என்று உத்தேசம்.

    3. மற்ற இடங்களில் கிடைப்பதுதானே கில்லியிலும் இருக்கிறது என்று வலைப்பார்வையாளர் விலகிச் செல்லும் அபாயம் இருக்கும் தற்போதைய கில்லிப் பதிவுகளை, மாற்றும் எண்ணம்
    இருக்கிறதா? எக்ஸ்க்ளூசிவ்கள் வரவாய்ப்புண்டா? வருங்காலத்தில் எவ்வாறு வளர்ச்சி அடையும்?

    சீரியஸாகச் சொல்கிறேன். வாசகர் வட்டம், ப்ராண்ட் லாயல்ட்டி என்று எல்லாம் நான் யோசிக்கவே இல்லை. ஒரு நாளைக்கு இத்தனை பேர் வாசிக்கிறார்கள் என்று கிடைக்கிற புள்ளிவிவரம், கொஞ்சம் திருப்தியைத் தருகிறது. அவ்வளவே. வாசகர்களைத் தக்க வைத்துக் கொள்ளவேண்டும், வீச்சை அதிகப்படுத்த வேண்டும் ஏன்பதற்கான திட்டம் ஏதும் இல்லை. உதாரணமாக, இது போன்ற முயற்சி ஒன்றை இணையத்தில் துவங்கினால், அதை பிரபலப்படுத்த என்று சில வழிகள் வழிகள் இருக்கின்றன. அதிலே மிக மிக எளிமையானது, என்னுடைய அட்ரஸ் புஸ்தகத்தில், இருக்கிற நண்பர்களின் முகவரிக்கு ஒரு மெயில் தட்டிவிடுவதுதான். அதைக் கூட நான் செய்ய வில்லை. ஏனெனில், இதை நானாகச் சென்று பிறருக்கு அறிவிக்கும் போது, அதிகமான பொறுப்புணர்ச்சியுடன் இயங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. அதை நான் விரும்பவில்லை. அலுவலகப் பணி, விற்பனை இலக்கு, டெட்லைன், என்கிற அழுத்தங்களில் இருந்து தப்பிக்கும் முகமாக, தளைகளில்லாத, ஜாலியான ஒரு பணியாகவே கில்லியை நான் கருதுகிறேன். ‘வெத்தான பதிவுகள் இடம் பெறுகின்றன, தரம் கூடிவிட்டது அல்லது குறைந்துவிட்டது’ என்பது போன்ற குற்றச்சாட்டுகள் அவ்வப்போது வருவதற்கு காரணம், இதுதான்.

    ” இதப்பாருங்க சார்/மேடம், நான் எனக்குப் புடிச்சதை இங்கே லிங்க் கொடுக்கிறேன். அது எதைப் பத்தினதுங்கறது ஒரு சின்ன லீடும் கொடுக்கிறேன். புடிச்சிருந்தா கிளிக் செஞ்சு படிங்க, இல்லாட்டி விடுங்க..டைம் கிடைச்சா நாளைக்கு நைட் வந்து பாருங்க, ஏதாச்சும் ஒண்ணு ரெண்டு புடிக்கும். படிச்சுட்டு, ஏதாச்ச்சும் சொல்லணும்னு தோணினா, இங்கே பின்னூட்டம், கொடுக்கணும்னு கட்டாயமே இல்லை, அந்தப் பதிவிலேயே போய் சொல்லுங்க”

    இதைத்தான், நான் அடிக்கடி, நேரிலே பார்க்கிற நண்பர்களிடம் சொல்வது. no-obligation-from-either side. இதுதான் கில்லியின் மாடல்.

    புதுசு புதுசாக ஏதாச்சும் ஐடியா வர வர, செஞ்சு பார்த்துக்கிட்டே இருப்போம். ஆகவே வருங்காலத்தில் கில்லியில் மாற்றமும் வளர்ச்சியும் இருக்கும். ஆனால், அது வாசிக்கிற அனுபவத்தை மேம்படுத்துகிற மாதிரியும், கில்லியின் தெரிவுகளில் நம்பிக்கை வைத்து, ஆசையாக வந்து படிப்பவர்களுக்கு, இன்னும் அதிகம் தீனி போடுகிற மாதிரியும் தான் இருக்கும்.

    4. கில்லியினால் தங்களின் சொந்தப் பதிவில் இடுகைகள் குறைந்து, கிட்டத்தட்ட நிறுத்தவேப் பட்டுவிட்டது? உங்களின் எழுத்தார்வம் எப்படி இருக்கிறது? புத்தகம் எல்லாம் போடும் எண்ணம்
    உண்டா…

    எனக்கு எழுதுவதைவிடவும் படிப்பதிலே தான் ஆர்வம் அதிகம். எதையாவது எழுதினேன் என்றாலும் கூட, அதும் அந்த நேரத்தில் படித்தது, பார்த்தது , கேட்டது ஆகியவற்றின் எதிர்வினையாகத்தான் அமையும். சுயமாக ஒரு விஷயத்தை என்னால் உருவாக்கவே முடியாது என்பது, எனக்கு தாமதமாகத்தான் புரிந்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாக, அவ்வப்போது எழுதி, பின்னூட்டங்கள் மூலமாக பிடரியில் அடியும், பூங்கொத்தும் பெறுவது வேறு. எழுதுவதற்கு என்று நேரம் ஒதுக்கி, consistent ஆக செயல்படுவது என்பது வேறு. பின்னது எனக்கு வராது.

    சொந்தப்பதிவு இயங்கிக் கொண்டுதான் இருக்கிறது, சொந்தப் பதிவில் நீளமாக எழுத வேண்டும் என்று நினைப்பதைத்தான், கில்லியிலே சுருக்கமாக எழுதிவிடுகிறேன். கில்லிக்குள் அடங்காது என்று நினைப்பதை சொந்தப் பதிவில் எழுதுவேன்.

    எழுத்தார்வம்? இருக்கிறது. ஆனால், அது, எதிர் வீட்டு அம்மாவின் ஆஸ்துமா போல அடிக்கடி வந்து வந்து போகும். முன்பெல்லாம், ஆர்வக்கோளாறில் சிலதை எழுதிக் கொண்டிருப்பேன், இப்போது அதை எல்லாம் குறைத்து விட்டேன். அப்படியும், வெட்ட வெட்ட, சில சம, பை பை அடலசன்ஸ் ‘ என்று முளைத்துவிடுகிறது 🙂

    புத்தகம் போடும் எண்ணம் ? இருக்கிறது. ஆனால், இது வரை எழுதியதில், புத்தகம் போடுகிற அளவுக்கு ஒன்றுமே தேறவில்லை. பிசினஸ் புத்தகம் ஒன்று எழுத வேண்டும் என்று ஆசை இருக்கிறது. என்னுடைய அனுபவங்களை அடிப்படையாக வைத்து, கொஞ்சம் கற்பனை கலந்து, சென்னை போன்ற வளரும் மாநகரத்திலே ஒரு மீடியம் லெவல் பிசினஸ் செய்வதிலுள்ள கஷ்ட நஷ்டங்களை, உபதேசங்கள், புள்ளிவிவரங்கள், பின்னிணைப்புகள் ஏதுமில்லாமல், entertainment value அதிகம் உள்ள மாதிரி ஒரு ஜாலியான புஸ்தகம் எழுத வேண்டும் என்று எண்ணம் உள்ளது. அதிலே இடம் பெற இருக்கும் ஒரு அத்தியாயத்தை [ recruitment process இல், ரிசப்ஷனிஸ்ட்டைத் தேர்வு செய்யும் போது நடக்கும் கூத்துக்கள் ( உண்மை +கற்பனை) ], ஏழாவது முறையாக அடித்துத் திருத்தி சீராக்கி, நண்பர்களிடம் ( வலைப்பதிவு பக்கமே வராதவர்கள்) காண்பித்த போது, கிடைத்த reaction நம்பிக்கை தருவதாக இருந்தது. என்னுடைய வேகத்துக்கு, எப்படியும் முடிக்க இன்னும் ஆறுமாசமாவது ஆகும். பதிப்பகத்துக்கு பேர் கூட தேர்வு செய்துவிட்டேன். oneBookWonder. புஸ்தகம் போட முப்பதாயிரத்து சொச்சம் செலவாகும் என்கிறார்கள்.அதான் கொஞ்சம் யோசனையாக இருக்கிறது 🙂

    5. கிரிக்கெட் போல் பதினொன்று ஆட்டக்காரர்களாக மாறும் வரை பங்களிப்போர் எண்ணிக்கை உயருமா? விகிதாசாரப் பிரதிநித்துவம் உண்டா? யார், யார் அடுத்து சேர்கிறார்கள்.

    எந்த திட்டமும் கிடையாது. கில்லி என்கிற ஐடியா முந்திய நாள் இரவு தோன்றியதும், அடுத்த நாள் இரவு பாலாஜியிடம் கேட்டேன். ‘சரி வரேன்’ என்றார். பத்ரியிடம் கேட்டேன். ‘சரி, ஆவட்டும் பாக்கலாம்’ என்றார் காமராஜர் மாதிரி. பிறகு வந்தார். திடீர்னு ஒரு நாள் வெங்கட் கிட்டே கேட்டேன். சரின்னார். wa வும் அப்படியே. சில பேர் இயலாமையைச் சொல்லி மறுக்கவும் செய்தார்கள். இனிமே யார் வருவாங்கன்னு எனக்கே தெரியாது. ப்ளான், ஸ்ட்ராடஜின்னு எதுவும் கிடையாது. கோட்டு சூட்டு போட்டு, கண்ணாடி அறைக்குள்ளே நடக்கிற conference ஐ விட, barCamp மாதிரியான un-conference க்குத்தான் இப்ப மவுசு ஜாஸ்தி. மூளை ஒழுங்கா வேலை செய்யற வரைக்கும், தோணின படியெல்லாம் செஞ்சுகிட்டே போவோம். நல்லா இருந்தா நாலு பேர் வந்து படிப்பாங்க. இல்லைன்னா, வேற நாலுபேர் சேர்ந்து, கில்லிக்கு பதிலா, கபடின்னு ஒண்ணு ஆரம்பிப்பாங்க. இதானே யதார்த்தம்?


    | |

    Jerk Off

    கைமைதுனம் (masturbation) என்னும் பாடம் எட்டாவது படிக்கும்போது தமிழ் பாடப் புத்தகத்தில் இருந்தது. காலையில் வெந்நீரில் குளிக்க வேண்டும் என்று unscientific-ஆக நிறைய axiom-களை திரு.வி.க. சொல்லிக் கொண்டே சென்றிருந்தார். அதில் மனதில் மிகவும் பதிந்தது: ‘கைமைதுத்தனம் செய்வதால் உடல் சக்தி விரயம் (உண்மை); பிற்காலத்தில் நலக்கேடு வரும் (ஃபில்டர்ட் பொய்).

    தண்டமிழ்க் கொண்டல் சுவாமிநாதனிடம் பாடத்தை நடத்தும்படி வேண்டிக் கொண்டாலும், இதை விட உங்களுக்கு சீதையின் வர்ணனை சுவாரசியமாய் இருக்கும் என்று காலாண்டுத் தேர்வுக்கு இடம்பெறாத, கம்பராமாயணத்தில் இருந்து இலக்கியரசத்துக்குக் கொண்டு போய் விட்டார்.

    ‘ஒரு தடவை கையடிச்சா தப்பா? வாரத்துக்கு ஏழு தபா, கண்ணாலம் கட்டிக்கற வரைக்கும் கையடிச்சா தப்பா?’ என்று அன்னியன் மாதிரி கேள்விகள் ‘டெபோனேர்’-இல் வருஷத்துக்கு எட்டு தடவை விதவிதமாக இடம்பெறும்.

  • ‘நான் நடிகையைப் பார்த்து செய்து கொள்கிறேன். தவறா?’
  • ‘அம்மா பக்கத்திலேயே தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். அப்போதும் செய்ய ஆவல் எழுகிறது? என்ன செய்யலாம்?’
  • ‘எதிர் வீட்டு சித்ரகலாவை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. இருவரும் ஒருவரையொருவர் காதலிக்கிறோம். ஆனால், அவளை நினைத்து நான் கையடிக்கிறேன். இது உண்மையான காதலா?’
  • ‘எனக்கு வயதானவர்களைப் பார்த்தால் உணர்வு மேலிடுகிறது. அவர்களை நினைத்து வெளிவருகிறேன். எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. நான் என்னை விட பத்து வயது பெரியவளை திருமணம் செய்து கொள்ளலாமா?’

    கேள்விகளை நிஜங்கள் எழுதினார்களோ… உதவி ஆசிரியரே எழுதினாரோ… பதில்களை விட முக்கியமானவை.

    வலையகத்துக்காக டெம்பிளேட் தேடிக் கொண்டிருந்தபோது, Why Spouses Masturbate படிக்க நேரிட்டது. தனிமடலில் கல்லூரி நண்பன் ரகுவிற்கு அனுப்பி வைத்துவிட்டு விஷயத்தை மறந்தே போனேன்.

    ‘இதை ஏன் நீ மொழிபெயர்க்க கூடாது’ என்றபோது ‘என்னுடையது “அப்படிப்பட்ட” பதிவில்லை‘ என்று சொல்ல மொழிபெயர்த்தே மின்னஞ்சலில் அனுப்பியும் விட்டான்:


    கைமுஷ்டி ஏன் ?

    பெரும்பாலான பெண்களுக்கு உள்ள பொதுவான சந்தேகம், சமயங்களில் ஆண்கள் தங்களுடன் உறவு வைத்துக்கொள்வதை விட ஏன் கைமுஷ்டி வேலை செய்கிறார்கள் ? என்னதான் தாங்கள் தங்கள் துணையுடன் உறவு வைத்துக்கொள்ள தயாராக இருந்தாலும் அவர்கள் கைமுஷ்டியே ஏன் நாடுகிறார்கள் ?

    இப்படி குறைப்படும் பெண்கள், தங்கள் துணைவர்கள் தங்களுடன் போதுமான அளவு உறவு வைத்துக்கொள்வதாகவும், அதில் அவர்கள் திருப்தியுடன் இருப்பதாகவும் கண்டிப்பாக ஒத்துக்கொள்கிறார்கள். இவ்வளவு இருந்தும் கைவேலை ஏன் என்ற கேள்விக்கு அவர்களுக்கு விடை தெரியவில்லை.

    இதனால் சிலர் தங்கள் துணை தங்களை நிராகரிப்பதாக நினைத்துக்கொண்டு பெரும் சோகத்திலும், மனக்குழப்பதிலும் இருக்கின்றனர்.

    “என்னிடம் என்ன குறை ? என்னிடம் என்ன இல்லை ?”

    “கைவேலைக்கு பதில் என்னிடம் உறவு வெத்தால் என்ன ?” போன்ற கேள்விகள் அவர்கள் மண்டையைக் குடைகின்றன.

    இதற்கு ஒரே பதில் “அவர்களுக்கு விளங்காது / புரியாது”. ஏன் புரியாது … புரியாது.

    பிரசவம், மாதவிடாய் பிரச்சனைகள் பற்றி ஆயுசுக்கு படித்தாலும் எப்படி ஆண்களால் அதன் வலியை புரிந்து கொள்ள முடியாதோ அதே போல் பெண்களால் கைவேலை பற்றி புரிந்துகொள்ள முடியாது.

    ஆனால் பெண்களுக்கு சிலவற்றை சொல்லியே ஆக வேண்டும்…

    பெரும்பாலான ஆண்கள், தங்கள் துணையோடு உறவு வைத்துக்கொள்ள எவ்வளவு ஏங்குவார்களோ அதே அளவு கைவேலைக்கும் ஏங்குவார்கள்.

    கைவேலை தரும் திருப்தியை உறவு தர இயலாது, அதே போல் உறவின் போது ஏற்படும் இன்பம்,நெருக்கத்தை கைவேலை தர இயலாது.

    இரண்டும், வெவ்வேறு வகையான இன்பங்கள். ஒன்றோடு ஒன்றை ஒப்பிட முடியாது. இவை இரண்டுமே பெரும்பாலான ஆண்களுக்கு தேவையாவைகள்.

    முழுவதுமாக உறவில் ஈடுபட முடியாத ஆண்கள்தான் இது போன்ற வழிகளை தேர்ந்தெடுப்பதாக பெண்கள் கருதுகிறார்கள். இது சில சதவீதம் உண்மையென்றாலும், ஆண்களுக்கு கைவேலையில் கிடைக்கும் இன்பமே வேறு. இதைப்பற்றிய பல ஆராய்ச்சிகள் நடந்துள்ளன. சில ஆராய்ச்சிகளின் முடிவுகள் என்னவென்றால், “தன் துணையுடன் தொடர்ந்து நல்ல உறவில் இருக்கும் ஆண்களே, உறவில் இல்லாத ஆண்களை விட அதிக அளவு கைவேலையில் ஈடுபடுகின்றனர்”.

    கைவேலை செய்வதனால் ஆண்கள் தங்கள் துணையை வெறுக்கிறார்கள் என்றோ, அவர்களுக்கு துரோகம் செய்கிறார்கள் என்றோ அர்த்தம் கிடையாது. அதே சமயம் அவர்களுக்கு வேறு சிந்ததையே இல்லை என்றும் கிடையாது. நல்ல கணவனாக / துணைவனாக இருப்பது வேறு இது வேறு.

    முடிவாக ஆண்கள் ஏன் செய்கிறார்கள் ?

    கைவேலை செய்வது ஆண்களின் தேவை. இதை சொல்லி புரிய வைக்க முடியாது, மாற்றும் சொல்ல முடியாது.

    ஆக பெண்களே, உங்கள் துணையின் கைவேலை பற்றி தெரியவந்தால் அதை பெரிது படுத்தாதீர்கள். திருப்தியோடு இருக்கும் உங்கள் துணை உங்களை மேலும் ஆழமாக நேசிப்பார்.

    ஆண்களே ! உங்கள் துணையோடு இது பற்றி பேசுங்கள். அவர்களுக்கு உங்கள் தேவையை விளக்க முயற்சியுங்கள்.

    முடியாவிட்டால் இந்த கட்டுரையை ஒரு முறை படிக்க சொல்லுங்கள்.


    திருமணத்திற்குப் பின் உறவு குறித்து முன்பு படித்தது:

    மாப்பிளையின் மாமா, கல்யாணப்பரிசாக தம்பதியருக்கு ஒரு 64 அவுன்ஸ் கூஜாவைக் கொடுத்திருந்தார். பையனை தனியை அழைத்து சென்று, ஒவ்வொரு முறை உறவு வைத்துக் கொள்ளும்போதும் ஒரு கல்லை அதில் போட்டு வருமாறு சொல்லியிருந்தார்.

    முதல் வருடம் கழிந்தது.

    விருந்துண்ண வந்திருந்த மாமாவிடம் கூஜாவைக் காட்டினான். கற்களால் நிரம்பி, வழியும் தருவாயில் இருந்தது. ‘இனி ஒவ்வொரு முறை வச்சுக்கும்போதும் ஒரு கல்லை எடுத்து வெளியே எறிந்து வா’ என்று சொல்லிவிட்டு சென்று விட்டார்.

    பத்து வருடம் கழித்து குழந்தைகளுடன் மாமாவைப் பார்க்க வந்தவன், கூஜா இன்னும் காலியாகாத சோகத்தை சொன்னான். ‘இங்கே வா’ என்று அழைத்துக் கொண்டு பாதி நிரம்பிய தன்னுடைய கூஜாவை வறட்சியாகக் காண்பித்தார் மாமா.


    | |

  • Lets Choose Kanimozhi as CM

    வெள்ளையர்கள் நம்மை ஆண்ட காலத்தில் அவர்களின் உணவு மற்றும் கேளிக்கை விடுதிகளின் வாயில்களில் ‘நாய்களும் இந்தியர்களும் நுழையக் கூடாது’ என்று எழுதி வைத்திருப்பார்களாம். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கூட பல உணவு விடுதிகள் ‘மற்ற’ ஜாதியினர் நுழையக் கூடாது என்ற வாசகத்தைத் தாங்கியிருந்தன. இன்று இவை எத்த்னையோ போராட்டங்களின் விளைவாக மறைந்துவிட்டன என்று நாம் நம்பும் காலத்தில்தான் தளர்ந்து கொண்டிருப்பதாகத் தோன்றும் ஜாதிவெறி இத்தகைய ரூபங்களில் மீண்டும் உயிர்த்தெழுகிறது. திருமண விளம்பரங்களில் ஜாதி பற்றிய குறிப்புகள் வந்தால் ஃபெமினா போன்ற பத்திரிகைகள் அத்தகைய விளம்பரங்கள் ஏற்றுக் கொள்ள மறுத்து விடுகின்றன. மற்ற பத்திரிகைகள் ஏன் இந்தக் கோட்பாட்டைப் பின்பற்றக் கூடாது?

    கனிமொழி (நவம்பர் 11, 2001)

    நன்றி: வெறுப்புக்கு எத்தனை முகங்கள்கறுக்கும் மருதாணி :: காலச்சுவடு பதிப்பகம் | நூலின் முன்னுரை – ரவிக்குமார் | கணிப்பும் காழ்ப்பும்


    | |

    Sheik Chinna Moulaana

    ஷேக் சின்ன மௌலானா
    ‘கரவாடி’. ஆந்திராவில் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள இந்தக் கிராமத்தில் முந்நூறு வருஷங்களுக்கு மேல் நாதஸ்வரத்தை இசைக்கிற குடும்பத்தின் இளங்கொழுந்து. அங்கு இருந்த விஷ்ணு கோவில், சிவன் கோவில்களில் காலையிலும், மாலையிலும் கேட்பது இஸ்லாமிய சமூகத்தவர்களான சாஹிப் குடும்பத்தாரின் நாதஸ்வர இசைதான்.

    ஆந்திராவில் சிவகலூரிப் பேட்டையில் இருந்த ஷேக் ஆதம் சாகிப்பிடம் நாதஸ்வரம் கற்றுக் கொண்டு மூத்த சகோதரரான பெரிய மௌலானாவுடன் இணைந்து வாசிக்க ஆரம்பித்ததால் இவர் பெயர் ஷேக் சின்ன மௌலானாவாகி விட்டது.

    மௌலானாவும், தவில் வித்வான் வலங்கைமான் சண்முகசுந்தரமும் இணைந்த இசைக் கூட்டணி, முப்பதாண்டுகளுக்கு மேல் தமிழகம் இந்தியா, வெளிநாட்டு நிகழ்ச்சிகள் உட்பட நீடித்திருக்கிறது.

    நாதஸ்வரத்தில் தனது மருமகன் ஷேக் சுபானுடன் இணைந்து நிகழ்ச்சிகள் நடத்தின மௌலானா, கடந்த பதினைந்து வருடங்களாக தனது பேரன் காசிமுடன் இணைந்து நிகழ்ச்சிகள் நடத்துகிறார். அதோடு இன்னொரு பேரன் பாபுவும் நாதஸ்வரம் இசைக்கிறார். முந்நூறு ஆண்டுகளாக கரவாடி கிராமத்தில் எத்தனையோ தலைமுறை தாண்டி வந்த நாதஸ்வர இசை ஸ்ரீரங்கத்திற்கு வந்தாலும் அடுத்தடுத்த தலைமுறை தாண்டி தொடர்கிறது.

    “எழுபத்தி நாலு வயசிலும் இன்றைக்கும் சாதகம் பண்றார். மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கிறார். இப்போதும் இசைக் கச்சேரிகளில் ஒன்றரை மணி நேரத்தீற்குக் குறையாமல் வாசிக்கிறார். அவருடைய ஈடுபாடு, சிரத்தையிலிருந்து இளைய தலைமுறையிரான நாங்கள் நிறையக் கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது” என்கிறார் மௌலானாவின் பேரனான இளம் நாதஸ்வரக் கலைஞரான காசிம்.

    நன்றி: நதிமூலம் – மணா (உயிர்மை) – புத்தகம் குறித்த மாலனின் அணிந்துரை | சுப்பிரமணிய சுவாமி


    | |

    True Stars – Jaya Seel

    Tamil Actress Menaka

    ‘நெற்றிக்கண்’/’கீழ் வானம் சிவக்கும்’ மேனகா, எண்பதுகளின் இரண்டாவது கதாநாயகி அருந்ததி (இவர் நடித்த ஒரு படம்/கதாபாத்திரம் கூட நினைவுக்கு வர மாட்டேங்குதே… அல்செய்மர்ஸ் எட்டிப்பார்க்குதோ? இவர்களிடம் விசாரிக்கணும்) ‘அலைபாயுதே’விலும் நடிப்பிலும் இளமையாய் இருந்த ஜெயசுதா போல் காணாமல் போகாமல் இருக்க எண்டே குருவாயூரப்பனும், பழனி முருகனும், ஏழுகொண்ட்லவாடாவும் ரஷிக்கணும்.

    இன்றைய நட்சத்திர சுவரோட்டி:

    Jaya Seel @ Pennin Manathai Thottu


    | |

    This Day That Age – E-Tamil

    எல்லாமே ஆறின கஞ்சிதான்; மீள் பதிவு; பழைய கள்ளு – புதிய பதிவு

  • நடுநிலையாகிப் போன பாலாஜி:
    Libertarian இருந்து Centrists ஆகி இருக்கிறது. தேர்வை நாளைக்கு எடுத்தால், வேறு முடிவு வரலாம்.

    அன்று: தேர்வு எழுத வருகிறீர்களா?
    நீங்களும் சோதித்துக் கொள்ள: Your Political Philosophy

  • விருப்பப் பட்டியல் – வைரமுத்து

    அன்று: பெரியகுளம் – திண்டுக்கல் நெடுஞ்சாலை. ஒரு விழா முடிந்து நண்பர்களோடு காரில் பயணித்துக் கொண்டிருக்கிறேன். விழாவில் வழங்கப்பட்ட நினைவுப் பரிசைப் பிரித்துப் பார்க்கிறார் நண்பர் ஒருவர். அது ஒரு வெள்ளிக் குத்துவிளக்கு. நல்ல வெள்ளிதானா என்று தேய்த்துப் பார்க்கிறார் இன்னொரு நண்பர். “விளக்கை அதிகம் தேய்க்காதீர்கள்; பூதம் வந்துவிடப் போகிறது” என்று சிரிக்கிறேன் நான். அப்படி பூதம் வந்துவிட்டால் யார் யார் என்னென்ன கேட்பார்கள் என்ற சுவையான கற்பனை தொடங்க ஒவ்வொருவரும் ஒவ்வொன்று கேட்கிறார்கள். கடைசியில் கேள்வி எனக்கு வருகிறது. காரை நிறுத்துங்கள் என்கிறேன். ஒரு புளிய மரத்தடி. தாள் கொடுங்கள் என்கிறேன்; தாள் இல்லை. அழைப்பிதழ்களின் வெள்ளைப் பக்கங்களில் எழுதத் தொடங்குகிறேன். எழுத வசதி எண்சீர் விருத்தம், புளிய மரத்தடியில் பூத்த கவிதை இது.

    நோட் #3: பவித்ராவின் ஆங்கில வலைப்பதிவில், அவருடைய விஷ்-லிஸ்ட் படித்திருக்கிறீர்களா?

  • அன்று: காலச்சுவடு – ஜூன் 2004 (My Takeaways) | இன்று: இன்னும் இணையத்தில் காலச்சுவடு புதுப்பிக்கவில்லை (இன்று: தமிழ் சிஃபி – ஏப்ரல் 2006 காலச்சுவடு)

    1. கடவுளுக்குத் தெரியாதவர்கள் – ஆதவன் தீட்சண்யா

    2. நீரோட்டம் – கண்ணன்: “நான் சந்திக்கும் பலர் எதற்காக இவ்வளவு பொய் சொல்கிறார்கள் என்றே தெரியவில்லை. பல சமயம் பொய் வெளிப்படும்போதே பொய் எனத் தெரிவித்தபடி வருகிறது. அல்லது இரண்டொரு நாட்களில் பொய் என ஊர்ஜிதமாகிறது. மீண்டுமொரு முறை பேச நேரும் போது முன்னர் கூறிய பொய்கள் மறைந்து புதிய பொய்கள் வெளிப்படுகின்றன. இவர்கள் எல்லோரையும் மோசமானவர்கள் எனக் கருத முடியவில்லை. பலர் நல்லவர்கள். நண்பர்கள். இந்தப் பொய்களுக்கு அற்பத்தனத்தைவிடப் பெரிய காரணம் எதையும் கண்டுபிடிக்கவும் முடியவில்லை. நான் பொய் சொல்லாதவன் அல்லதான். சத்திய சீலன்களைத் தேடி உறவுகொள்பவனும் அல்ல. இருப்பினும் அன்றாடம் பல சில்லறைப் பொய்களைச் சந்திக்க வேண்டியிருப்பது, வழக்கமான தமிழ் சினிமாவைப் பார்ப்பதுபோல, அவமானமாக இருக்கிறது. நம் அறிவை, புரிதலை, உள்ளுணர்வை இப்பொய்கள் தொடர்ந்து அவமதிக்கின்றன. இக்காலகட்டத்தில் “பொய்யானாலும் பொருந்தச் சொல்ல வேண்டும்’ என்ற பழமொழி என் மனத்தில் புதிய பொருள் கொண்டு ஒளிரத் தொடங்கியுள்ளது.”

  • அன்று: Box Office History for India Movies | இன்று: Fanaa – $1,730,829

    1999 முதல் தற்போதைய ‘யுவா’ வரை அமெரிக்காவில் எவ்வளவு சம்பாதித்துள்ளது? வெற்றிகரமான ஆங்கிலப் படங்கள், அமெரிக்காவிலும், மற்ற இடங்களிலும் எவ்வளவு ஈட்டுகிறது? இந்தியர்கள், அமெரிக்காவில் இருந்து பெருமளவில் வீட்டுக்கு அனுப்பப்பட்டதால், படங்களின் வரும்படி குறைந்துள்ளதா? ஹிந்தி ‘அலைபாயுதே’, ‘ஹே ராம்’ அமெரிக்காவில் மட்டுமாவது வெற்றிபெற்றதா? ‘கிலாடி 420’ போன்ற அமெரிக்க இந்தியர்களிடம் எடுபடாத படங்களுக்கு, எவ்வளவு பணம் வருகிறது?

  • அன்று: நம்மில் ஒருவன்.. நமக்காக ஒருவன்! – ஷங்கர் பேட்டி | என்று? அன்னியன் தேவை (2) | அன்னியன் தேவை (1)

    “இத்தனை வருட சினிமா அனுபவம் தந்த படிப்பினை என்ன?”
    “ரொம்பக் கஷ்டப்பட்டு ‘செட்டில்’ ஆயிட்டோம் என்று நினைத்தால், அது உண்மையில்லைன்னு தெரியுது! ‘செட்டில்’ ஆவது ஒன்றுதான் எல்லோருடைய எதிர்பார்ப்பும் நம்பிக்கையும். ஆனால், நடக்கிறது என்ன? இந்த வாழ்க்கை கடைசிவரைக்கும் உழைப்பைக் கேட்டுக்கிட்டே இருக்கு. அதுவும் சினிமா… குறைந்தபட்ச தர்மத்தோடு இருக்கிறவங்கதான் நிலைக்க முடியுது. இது நண்பர்கள் யாரு, எதிரிகள் யாருன்னு தெரிஞ்சுக்க முடியாத உலகம். ஆனா அந்த ரெண்டு பேருமே கண் முன்னாடி சிநேகமா சிரிச்சுக்கிட்டே இருப்பாங்க. அதுதான் விசேஷம்!”

    “விமரிசனங்களை எப்படி எடுத்துப்பீங்க?”
    “நல்லாயிருக்குன்னு சொல்லும் போது சந்தோஷப்படறோமே… அதுமாதிரி நெகட்டிவ் விமரிசனம் கேட்கும்போதும் ‘லைட்’டாக எடுத்துக்க வேண்டியதுதான். நானே குத்தம் பண்ணியிருக்கலாம். ஆனால், ‘பாய்ஸ்’ படத்துக்கு விகடன் எழுதின விமரிசனம்… தப்பிருந்தா தலையில் குட்டலாம். ஸ்கேலில் ரெண்டு தட்டு தட்டலாம். முட்டிப்போட வைக்கலாம். கத்தியை எடுத்துச் செருகலாமா? அந்தக் காயம் அதிகமாக வலித்தது. என்னை வளர்த்துவிட்டு, என்னைக் கொண்டாடிவிட்டு, திடீர்னு தோளிலிருந்து தூக்கிப் போட்டால் என்ன செய்வேன், சொல்லுங்க. பரவாயில்லை.. இப்போ அந்தக் காயம் ஆறிவிட்டது!”

  • அன்று: இவரா… இவருடனா… இப்படியா | இன்று(ம்): தந்தையர் தினம்
  • அன்று: அன்றைய கில்லி கால்கோள் | இன்று: கில்லி

    | |

  • Chat Meet – Tamiloviam Meena

    எனக்கு அறிமுகமான சில இணைய விஐபி-க்களுடன் சிறு மின்னஞ்சல் அரட்டை பேட்டி:

    மீனா (மீனாஷி) தமிழோவியத்தின் தொடக்க காலத்தில் இருந்து தொடர்ந்து பல்வேறு தளங்களில் எழுதி வருபவர். கடந்த மூன்றாண்டுகளாக ஆசிரியர் பொறுப்பு.

    ‘முக்கிய இணைய இதழ்களின் ஆசிரியர்கள் எல்லாருமே் பெண்களாகவே இருப்பது எப்படி’ என்பது வாசகரிடம் கேட்க விரும்பும் கேள்வி 🙂

    1. திங்கள் இரவு நெருங்கிவிட, வேலை நெட்டி முறிக்க, செய்தி வெள்ளமாய் குழப்ப, என்ன எழுதலாம் என்று திணறியதுண்டா? (ஆம் என்றால்) எப்படி முடிவெடுத்தை எதை எழுத நேரிட்டது? (இல்லை என்றால்) என்ன எழுதலாம் என்பதை எவ்வளவு சீக்கிரம், எப்படி முடிவெடுப்பீர்கள்?

    பொதுவாக வாரம் முழுவதும் வரும் உலக, தேசிய, மாநில செய்திகளை விடாமல் படிக்கும் பழக்கம் உண்டு. அந்த வாரத்தில் எந்த நிகழ்வு எனக்கு முக்கியமாகப் படுகிறதோ அதுதான் அந்த வாரத் தராசாக வெளிவரும். பல நேரங்களில் முதலில் நான் எழுத நினைத்திருந்த செய்தியை விட விருவிருப்பான / முக்கியமான நிகழ்வுகளை கடைசி நேரத்தில் படிக்க நேர்ந்தால் அதை அந்த வார தராசாக எழுதுவது வழக்கம். ஆனால் இன்று வரை தராசு பகுதிக்காக என்ன எழுதலாம் என்று குழம்பியது கிடையாது.

    2. தாங்களும் கணேஷ் சந்திராவும் இணைந்துதான் ‘தராசு’/இன்ன பிற எழுதுவதாக காதுவாக்கில் செய்தி வந்தது. கணேஷ் சந்திராவுடன் இணைந்து எழுதிய அனுபவம் உண்டா? எப்படி இருந்தது? ‘சுபா’ போன்று உருவாகும் சாத்தியம் இருக்கிறதா?

    தமிழோவியத்தின் ஆசிரியராக நான் விரும்பி செய்யும் வேலைகளில் ஒன்று தராசு மற்றும் சினிமா விமர்சனம் எழுதுவது. நான் எழுதும் கட்டுரைகளில் யாரும் தலையிடுவது கிடையாது. அதை நான் விரும்பவும் மாட்டேன். ஒவ்வொரு வாரமும் தராசு மற்றும் சினிமா விமர்சனத்தை எழுதி முடித்த பிறகு அதை கணேஷ் அவர்களிடம் காட்டுவேன். என்னுடைய கட்டுடைகளின் முதல் விமர்சகர் அவர். மற்றபடி அவருடன் இணைந்து எழுதிய அனுபவம் இல்லை. எனவே சுபா போன்று உருவாகும் சாத்தியம் இருப்பதாக தெரியவில்லை.

    3. தாங்கள் இதுவரை எழுதியதில் மிகவும் பிடித்த கட்டுரை/செய்தி அலசல் எது? ஏன்? அந்த ஆக்கம் உருவாகுவதற்கு ஏதாவது சிறப்பு காரணங்கள்…

    தனஞ்சய் தலை தப்பலாமா என்ற தராசு தான் என் எழுத்துகளில் எனக்கு மிகப்பிடித்த ஆக்கம். ஒரு 14 வயது மாணவியை கற்பழித்து கொலை செய்த பாதகன் அவன். உச்சநீதிமன்றம் வரை அவனுடைய மரண தண்டனையை உறுதி செய்த பிறகு தண்டனையை ரத்து செய்யுமாறு அவன் ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பியிருந்தான். குடியரசுத் தலைவர் அவனுடைய மனுவை நிராகரிக்கவேண்டும் என்ற கோரிக்கையுடன் எழுதப்பட்டது அந்த தராசு. உச்சநீதிமன்றம் வரை தண்டனை உறுதி செய்யப்பட்ட ஒருவனது மரண தண்டனையை எந்தக் காலத்திலும் குடியரசுத் தலைவர் ரத்து செய்யக்கூடாது என்பதே என்னுடைய கருத்து. என்னதான் மரணத்திற்கு மரணம் தீர்வாகாது என்று ஆர்வலர்கள் சிலர் கூறினாலும் உச்ச நீதிமன்றம் வரை ஒருவனது தண்டனை உறுதி செய்யப்பட்டது என்றால் அவன் எத்தகைய கொடூரமானவனாக இருந்திருக்கவேண்டும்? அவனை ஏன் மன்னிக்கவேண்டும்? சட்டம் தண்டித்த ஒருவரை ஜனாதிபதி மன்னித்துவிட்டால் நீதிமன்றங்கள் வழங்கிய தீர்ப்புக்கு என்ன மரியாதை இருக்கும்? செய்த குற்றத்திற்கான தண்டனையிலிருந்து ஒருவரை எக்காரணத்தை முன்னிட்டும் தப்ப விடக்கூடாது என்ற கருத்தை வலியுறுத்தும் இந்தக் கட்டுரைதான் எனக்கு மிகவும் பிடித்த கட்டுரை.

    4. கதை/நாவல் பக்கம் ஒதுங்கும் எண்ணம் இருக்கிறதா? மனதில் உட்கார்ந்திருக்கும் கரு மற்றும் கதைக்களம் குறித்துப் பகிர முடியுமா?

    கதை / நாவல் எல்லாம் எழுதும் எண்ணம் இல்லை. மேலும் எனக்கு அரசியல் (உள்நாடு, வெளிநாடு) மிகவும் பிடிக்கும். எதிர்காலத்தில் ஒரு சிறந்த அரசியல் விமர்சகராக ஆவதே என் ஆசை.

    5. வலைப்பதிவு ஆரம்பிப்பீர்களா ? (ஆம் என்றால்) எப்போது… சொந்தப் பெயரிலா… எதைக் குறித்து அனுதினம் பதிவீர்கள்? (இல்லை என்றால்) ஏன் ? தற்போது பதிவுகளைப் படிக்கிறீர்களா? எது தவறவிடாமல் படிப்பீர்கள் ?

    எனக்கென்று வலைப்பதிவு தொடங்கும் எண்ணம் ஏதும் இல்லை. நான் எழுத நினைப்பதை எழுத “தமிழோவியம்” இருக்கிறது. தற்போது வேலை, குழந்தை இதற்கே நேரம் சரியாக இருக்கிறது. நாளிதழ்கள், வார இதழ்கள் படித்தது போக நேரம் கிடைக்கும் போது தமிழ்மணம் / தேன்கூடு வலைதிரட்டிகளை படிப்பதுண்டு.


    | |

    Subramania Saami

    மதுரை மாவட்டம். சோழவந்தான் அருகே வைகையாற்றைக் கடந்தால் முள்ளிப்பள்ளம். சின்னக் கிராமம். நுழைந்ததும் இருபுறமும் விரிகிற அக்கிரஹாரத் தெரு. இதில் ஒரு தெருவில் பிறந்து பிரபலாமனவர் சில்லென்ற குரலோடு வளைய வந்த பாடகரான டி.ஆர். மகாலிங்கம். இன்னொரு தெருவில் சரிந்த ஓடும், திண்ணையுமாக சிதிலமாகிக் கிடக்கிறது சுப்பிரமணிய சுவாமியின் பூர்வீக வீடு.

    “ஆச்சர்யமா இருக்கு… எங்க முன்னோர்கள் திருமலை நாயக்கர் அரசவையில் வேலை பார்த்திருக்கிறார்கள். அப்பொழுது எங்க குடும்ப முன்னோர்களுக்குக் கொடுக்கப்பட்ட நிலம்தான் சோழவந்தான் பக்கத்திலே உள்ள முள்ளிப் பள்ளத்தில் இருக்கு.

    பூணூல் போட என்னை அழைத்தபோது ‘எதுக்குப் பூணூல்‘ என்று கேட்டேன். அதற்குச் சரியான பத்ல் இல்லை. ‘நியாயமான காரணம் தெரியாமல் பூணூலைப் போட்டுக்க மாட்டேன்‘ என்று மறுத்துவிட்டேன். அதனால் ஏழு வயதிலிருந்து பத்து வயது வரைக்கும் அப்பாவோடு பேசவில்லை. பிறகுதான் அம்மா, எங்களைச் சமாதானப்படுத்தி வைத்தார்கள்” என்கிறார் சுவாமி.

    ஒன்பதாவது வகுப்புப் படிக்கும்போது பள்ளித் தலைமை ஆசிரியர் கட்டிட நிதியில் குறிப்பிட்ட பணத்தைக் கையாடல் செய்துவிட்டார் என்று மாணவர்களை அழைத்துப் போராட்டம் நடத்தினதின் விளைவு? தலைமை ஆசிரியர் மாற்றப்பட்டார்.

    கல்கத்தாவில் உள்ள ‘இந்தியன் ஸ்டாஸ்டிகல் இன்ஸ்டிடியூட்‘டில் எம்.ஏ. சேர்ந்ததும் அங்கும் சிக்கல். அதன் டைரக்டர் எழுதிய கட்டுரையில் இருந்த தவறுகளைக் குறிப்பிட்டு சுவாமி ஒரு கட்டுரை எழுத, இன்ஸ்டிடியூட்டில் பிரச்சினை ஏற்பட்டு சுவாமிக்குக் கிடைத்து வந்த ஸ்காலர்ஷிப் நிறுத்தப்பட்டது.

    “அன்றைக்கு ஐஐடி-யில் என்னை அவர்கள் வெளியேற்றி இருக்காவிட்டால் இன்றைக்குப் பொருளாதாரக் கட்டுரைகளை எழுதிக் கொண்டு பேராசிரியராகத்தான் இருந்திருப்பேன்” – சு. சுவாமி

    நன்றி: நதிமூலம்மணா (உயிர்மை) – புத்தகம் குறித்த மாலனின் அணிந்துரை


    | |