Tag Archives: Kalainjar

தேர்தல்: கருத்தில் கவர்ந்தது

பா ராகவன் :: Pa. Raghavan | writerpara.com » தேர்தல் 2009 – என்ன சொல்கிறது? | இந்தியத் தேர்தல் 2009 – தமிழகம் என்ன சொல்கிறது?

இலங்கைப் பிரச்னை, விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்குச் சீர்குலைவின் விளைவான வன்முறைச் சம்பவங்கள், வாரிசு அரசியல் ஆகியவை திமுகவுக்கு முற்றிலும் எதிரான தீர்வைத் தரக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பாதி எதிர் மட்டுமே.

அடித்தட்டு வாக்காளர்களுக்கு ஒரு ரூபாய் அரிசி, கலர் டிவி போன்ற கவர்ச்சித் திட்டங்கள் பிடித்திருக்கின்றன. நல்ல சாலைகள், பாலங்கள், போக்குவரத்து வசதிகள், வேலை வாய்ப்புகள், வேலை நியமனங்கள், பொதுவில் – மாநில அளவில் பெரிய பிரச்னைகள் இல்லாமல் இருப்பது ஆகியவையே முக்கியமாகப் பட்டிருக்கின்றன.

அதிமுகவுக்கு அவசியம் வாக்களித்தே தீரவேண்டும் என்பதற்கான நியாயமான காரணங்கள் ஏதும் பாமர மக்களுக்கு இல்லை.

வைகோ தோற்றிருப்பது, இலங்கைப் பிரச்னையை மக்கள், வாக்களிக்கையில் யோசிக்க வேண்டிய விஷயமாகப் பார்க்கவில்லை என்பதை எடுத்துக்காட்டுகிறது.

சீமான், பாரதிராஜா போன்றவர்களின் பேச்சுகளை ரசித்தவர்கள், அதையும் திரைப்படக் காட்சிகளாகவே எடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.

மீண்டும் மன்மோகன் சிங்கின் பெயரால் சோனியா ஆள்வார்.


மா சிவகுமார் :: எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்: தேர்தல் முடிவுகள் – சில குறிப்புகள்

மதவாதக் கட்சிகளின் பிரச்சாரம் எடுபடாமல் போனாலும்,

* கர்நாடகா, குஜராத், இமாச்சல பிரதேச மாநிலங்களில் உறுதியான வெற்றியையும்,
* மத்தியபிரதேசம், ஜார்கண்டு, உத்தரபிரதேசம், மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்களில் போட்டி போடும் வலிமையுடனும்,
* பீகார் மாநிலத்தில் கூட்டணி ஆதரவிலும்
இன்னும் தளைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

மாயாவதியின் அகில இந்திய கனவு பொய்த்துப் போய் விட்டது. அகில இந்திய அளவில் ஒத்த நோக்குடைய கட்சிகளுடன் கூட்டணி வைத்துக் கொள்ளவும் இறங்கி வர வேண்டும்.

பாமகவை எப்படியாவது தோற்கடித்தே தீருவது என்று செயல்பட்ட திமுக பணபலத்தின் முடிவாக பாமக 6 தொகுதிகளிலும் மண்ணைக் கவ்விய நல்லது நடந்திருக்கிறது. இரண்டு தீய சக்திகள் மோதிக் கொண்டால் குறைந்தது ஒன்று ஒழிந்து விடுகிறது.

குடும்ப அரசியல், பணத் திமிர் என்று செயல்பட்ட திமுகவின் அலட்டல் இன்னும் அதிகமாகும்.

அனைத்து மதங்களையும் அணைத்துச் செல்ல வேண்டும் என்ற இந்திய கோட்பாட்டுக்குக் கிடைத்த வெற்றி தேர்தல் முடிவுகள். உபியில் மாயாவதி, ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு, தமிழ்நாட்டில் செயலலிதா மூவருமே வாய்ப்பு கிடைத்தால் பிஜேபியுடன் சேர்ந்து கொள்வார்கள் என்ற எண்ணம் பரவலாக இருப்பதால் சிறுபான்மை மதத்தினர் வாக்களிக்க விரும்பவில்லை.

கன்னியாகுமரி தொகுதியில் திமுகவின் ஹெலன் டேவிட்சனுக்கு வாக்களிக்குமாறு முடிவெடுத்தார்களாம். கம்யூனிஸ்டுகளை ஒதுக்குவது என்று கேரளா முடிவெடுத்த பிரதிபலிப்பு கன்னியாகுமரியிலும்


அனானியார் சொன்னது:

பாஜக மேல் கட்சிகளுக்கு ஒருவித மனத்தடை உருவாகி இருக்கிறது. ஆனால் இதில் ஊடகங்களால் உருவாக்கி விட்ட பொய் செய்திகள் அதிக அளவில் பங்கு வகிக்கிறது.

தமிழகத்தில் அதிமுக / பாஜக கூட்டணி இருந்திருந்தால் மொத்த காங்கிரஸ் எதிர்ப்பு / திமுக எதிர்ப்பு ஓட்டுக்களும் ஒரே இடத்தில் குவிந்திருக்க வாய்ப்பு அதிகமாக இருந்திருக்கும். அது நடக்கவில்லை.

ஜனதா தள் / பகுஜன் சமாஜ் போன்ற கட்சிகள் பிராந்தியத்தில் நல்ல செல்வாக்குடன் இருந்தாலும் இன்னமும் தேசிய அளவில் வளர்ச்சி பெறவில்லை என்பது உண்மை.

பகுஜனின் தலைமையின் ஊழல் மற்றும் சாதிய பிரதிநித்துவ போக்கு நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை.

கம்யூனிஸ்ட்களுக்கு பிராந்திய கட்சிகள் அளவிற்குதான் வீச்சு இருக்கிறது.

ஆகவே இன்றும் காங்கிரஸிற்கு மாற்றாக ஒரு தேசியக் கட்சி என்ற முறையில் பாஜகதான் இருக்கிறது. தொடர்ந்து இருக்கும் என்பதும் தெரிகிறது.

பாஜக மதசார்பற்ற முத்திரை பெறுவதற்காக சங்கத்திடமிருந்து துண்டித்துக் கொள்ள நினைக்கலாம். அது வெறும் கண்துடைப்பாகத்தான் இருக்க முடியும். கோயில் போன்ற விவகாரங்களை விட்டுவிட்டு… அடிப்படை பிரச்சினைகளை முதன்மைப் படுத்தி வளர்ச்சி முறையில் நிறைய நல்ல முயற்சிகளை செய்ய முன் வந்தால் வரும் தேர்தல்களில் வளரலாம்.


Krish :: பதிவுகள்: தேர்தல் 2009 – ஒரு பார்வை

தோழர்கள் பிடிவாதமாக “பல” கொள்கைகளை எதித்தனர். கேரளாவும், மேற்கு வங்கமும் தொழில் துறையில் மற்ற மாநிலங்களை விட பின் தங்கி இருப்பது அந்த மக்களை சிந்திக்க வைத்துள்ளது.

தங்கள் சுய நலத்துக்காக அடிக்கடி அணிமாறியும், அரசை மிரட்டி தனக்கு வேண்டிய காரியங்களை சாதித்து வந்தவர்களையும் மக்கள் இனம் கண்டு கொண்டு விட்டனர். லல்லு, முலாயம், பஸ்வான், மாயாவதி, ராமதாஸ் போன்றோர் இனி திருந்தினால் நன்று.

இந்த தேர்தலில் கரும் புள்ளியாக இருப்பது பணநாயகம். தென்னிந்தியாவில், குறிப்பாக தமிழ் நாட்டில் பணம் பல வெற்றிகளை தீர்மானித்திருப்பது ஜனநாயகத்திற்கு பெரிய சவால். இதனால் பதவி காலத்தில் என்ன தவறு செய்தலும், கடைசியாக பணம் கொடுத்து வெற்றி பெற்றுக் கொள்ளலாம் என்ற எண்ணம் மேலோங்கும்.


தேர்தல் சொல்லும் செய்தி… « அனாதி என்ற குடிகாரன்:

தங்கபாலுவுக்கு மெகா டிவி இருக்கிறது.

சமக, கார்த்திக் : மேடையில் இடையிடையே வந்து சிரிப்புக் காட்டி விட்டு செல்லும் அசத்தப் போவது யார் குழுவினர்.


கார்க்கி :: சாளரம்: தமிழக தேர்தல் காமெடிகள்

தேநீர். அல்லது. பந்து (டீ.ஆர்.பாலுன்னு எதுக்கு இங்லீஷல சொல்லிகிட்டு) வருவதாக இருந்ததால் கூட்டம் அதிகமாக இருந்தது. காரில் சென்ற நான் ஹார்ன் அடித்துக் கொண்டே கடக்க முயன்றேன்.

“அப்படி சுத்திக்கிட்டு போங்க சார்.வோட்டு கேட்க வ்ர்றாங்க” என்றார் ஒரு உடன்பிறப்பு.

எனக்கு வழிவிட்டா எங்க வீட்டுல இருக்கிற அஞ்சு ஓட்டு கிடைக்கும் என்றேன் கண்ணாடியை கீழே இறக்கி. அதற்குள் அங்கு வந்த ஒரு வட்டமோ சதுரமோ, நகருங்கப்பா. டிராஃபிக் ஆவுதுன்னு களத்தில் இறங்கினார். கூட இருந்த அல்லக்கை ஒன்று “இதையே அதிமுக காரன் கிட்ட சொல்ல முடியுமா? என்றார்.

அவங்க கலாட்டா நமக்கு தெரியாதா பாஸ். மோசமானவங்க என்று சிரித்தேன். அவரும் சிரித்தார். இதுதான் நேரம் என்று நீங்க அதிமுகன்னு அழகிரி திமுகவைத்தானே சொல்றீங்க என்றபடி நேரா செகண்ட் கியர் போட்டேன். தன்னை மறந்து சிரித்துக் கொண்டிருந்தார் அந்த அல்லக்கை. அவரது தலைவர் ஸ்டாலினா தயாநிதி மாறனா என்றுத் தெரியவில்லை.


ஜாக்கி சேகர் :: பிருந்தாவனமும் , நொந்தகுமாரனும் தேர்தல் முடிவுகள் சொல்லும் சேதி….

எந்த தேர்தலிலும் இல்லாது இந்த தேர்தலில் இளைஞர் கூட்டம் பெரும் அளவில் வாக்கு அளித்தது.

சீமான், தாமரை, பாரதிராஜா போன்றவர்களின் ஆவேச பேச்சு, ஜெவின் தனி ஈழம், ராமதாசின் தைலாபுர பிரஸ்மீட், வைகோ போன்றவர்களின் எழுச்சியான பேச்சு இவைகளையும் மீறி இந்த வெற்றி என்கிற போது யோசிக்க வேண்டிய விஷயம்.

தொலைக்காட்சியில் சீமான் பேச்சும் ஈழ மக்கள் பிரச்சனைகளும் திரும்ப திரும்ப ஒளிபரப்பியது ஆனால் அது ஒரு இடத்தில் கூட வரவில்லை. வெளிப்படையாக ஆயுதம் கொடுத்தது காங்கிரஸ் கட்சி என்று மக்களுக்கு தெரிந்தும் 9 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்று இருக்கிறது.


குசும்பன் :: குசும்பு: வெற்றி தோல்வி பற்றி ந�

கேள்வி: பா.ம.க தலைவர் இது பணத்தால் வாங்கப்பட்ட வெற்றி, பணம் விளையாடி இருக்கு என்று சொல்லி இருக்கிறாரே, அதோடு பீனிக்ஸ் பறவை போல் மீண்டு வருவோம் என்று சொல்லி இருக்கிறாரே அது பற்றி?

பதில்: முதலில் அவர் பா.ஜ.கவையும் லாலுவையும் பார்த்து கற்றுக்கொள்ளவேண்டியது நிறைய இருக்கு, தோல்வியை ஒப்புக்கொண்டு அதற்கான காரணத்தை கண்டுபிடிப்போம் என்று சொல்லும் ராஜ்நாத் சிங்கும், காங்கிரஸோடு கூட்டணி வைக்காமல் மத்தியில் ஆட்சியை பிடிக்கலாம் என்று நினைத்த எங்களுக்கு மக்கள் பாடம் புகட்டிவிட்டனர் என்று சொல்லும் லாலுவிடம் இருந்தும் அந்த பக்குவத்தை பெறவேண்டும்.


மூக்கு சுந்தர் :: My Nose: தேர்தல் 2009 முடிவுகள்

எம்.ஜி.ஆர் பாணியில் கலைஞரின் இலவச அரசியல் அடித்தட்டு மக்களை வசீகரித்து இருக்கிறது. கலைஞரின் அரசியல் மத்தியமரிடமிருந்து அடித்தட்டு மக்களை குறிவைத்து மாறியதற்கு பொன்மனச் செம்மலே காரணம்.


IdlyVadai – இட்லிவடை: விஜயகாந்த் அடுத்து என்ன செய்ய வேண்டும் ?


அசுரன்: இந்த தேர்தலில் மக்கள் யாருக்கு பாடம் கற்றுக் கொடுத்தார்கள்?

எந்த அயோக்கியன் வந்தாலும் இதைத்தான் செய்யப் போகிறான் எனும் போது, மாற்று வழி எதுவும் புலப்படவில்லை எனும் போது, யார் அதிக பணம் கொடுக்கிறானோ, யார் நம்ம சாதிக்காரனோ, யார் வெற்றி பெறுவார்களோ அவர்களுக்கு வோட்டு போட்டு விட்டு போய்விடுவோம் என்பதைத்தான் மக்கள் இந்த தேர்தலில் வெளிப்படுத்தியுள்ளனர்.


CableSankar: காங்- திமுக கூட்டணி வெற்றி பெற்றது எப்படி?

பாமகவின் தோல்விக்கு இன்னொரு முக்கிய காரணம் அவர்கள் வெற்றி பெற்றால் மதுவிலக்கு வந்துவிடுமோ என்ற பயத்தில் ஏற்கனவே பலபேர் நாட்டு பிரச்சனை, ரிசஷன், வீட்டு பிரச்சனையையெல்லாம் கட்டிங்க் அடித்தும், புகைவிட்டும் ஆத்தி கொண்டிருப்பதை இவர்கள் கெடுத்து விடுவார்கள் என்று யோசித்து ஆண் வாக்காளர்கள் எல்லாம் வரிந்து கட்டி கொண்டு பமகவுக்கு எதிராய் ஓட்டு போட்டிருக்கிறார்கள் என்று உளவு துறை செய்தி ஒன்று தெரிவிக்கிறது.


சென்னைக் கச்சேரி: மொத்தமாக வென்றது அதிமுக தான்

வட தமிழ்நாட்டில் குறிப்பாக திமுகவின் கோட்டையாம் தென்சென்னையில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் திமு கழக வேட்பாளர் மண்ணைக் கவ்வியது போலவோ…திருவள்ளூரில் திமு கழகம் வீழ்ந்தது போலவோ… கொங்கு மண்டலத்தின் கரூரில் முக்கிய வேட்பாளர் தோல்வி கண்டதைப் போலவோ தென்மண்டலத்தில் திமுக எங்கும் மூக்கு உடைபடவில்லை…


ட்விட்டர்:

narain: நல்ல வேளை. ஏ.சி. சண்முகம் இன்னமும் அறிக்கை விடலை.முதலியார்கள் ஆதரவினால் தான் திமுக அமோக வெற்றின்னு

~o0o~
காசி

Anyone trying to link this election with Eelam are living in some imagnary world, or in monitor and keyboard (and maybe in siRRithazs) – 2:11 PM May 16

1,48,300; 1,35,942; 1,10,037; 1,09,796; 99,083; 91,772; 25,036: Any guess what are these numbers?

Those are the victory margins by which the PMK lost. The largest ~1.5 lakh where Kaduvetti Guru contested.

akaasi

In spite of sincere Pro-Tamil, Pro-downtrodden agenda, and reasonably good track record of ministers, why PMK is drubbed so badly?1:44 AM May 17th from web

~o0o~

kabishraj :: பாமக அடுத்து என்ன செய்யும்? இருக்கவே இருக்கு திமுக. “அண்ணா” என்றால் கருணாநிதி நெஞ்சம் இனித்து, கண்கள் பணித்து சேர்த்துக் கொள்வார். about 16 hours ago from web

~o0o~

ksnagarajan :: இந்த தேர்தலில் தமிழக மக்கள் மிகத் தெளிவாக வாக்களித்திருக்கிறார்கள். அவர்கள் Pro-LTTE(PMK, MDMK) மற்றும் Anti-Eelam(Congress) ஆகிய இரு துருவங்களையும் ஒதுக்குயிருக்கிறார்கள்

~o0o~

athisha: சென்னை முழுக்க கடும் மின்வெட்டு.. விஷமிகள் சில்மிஷம் – சன்டிவி \ திமுக மின்னணு இயந்திரங்களில் முறைகேடு செய்ய சதி – ஜெயாடிவி

~o0o~

பத்ரி சேஷாத்ரி

bseshadri :: I am told, the final TN voting percentage is 70+, though yet to see the EC data. 10% votes “polled” during the last one hour.12:39 AM May 15

Paying voters is one thing. Paying polling officials is yet another thing altogether.

(1) Paying voters directly. We have all heard them. From Rs. 500 per head to Rs. 2,500 and so on.

(2) Paying polling booth officials and polling agents of opposite parties to cast bulk votes between 4-5 in several polling booths.

(3) Paying presiding officers (I heard numbers like Rs. 2 lakh!) to fix votes for them in the dying hours.

~o0o~

srikan2 :: Manmohan Singh the first person to return to power after a full-term as PM since, guess what, since one Mr J.Nehru!!11:06 AM May 16th f

Why should you vote for DMK Alliance?

தேர்தல் கார்ட்டூன்: தி நியு யார்க்கர்

தொடர்புள்ள இடுகை: Therthal 2009: Top 10 Quotes « 10 Hot

கார்ட்டூன்: இந்திய அரசியலும் தமிழக எம்பி பேரங்களும்

Congress: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை

நன்றி: தினமணி

தொடர்புள்ள பதிவு: Who will win? Congress vs BJP: Neeraja Chowdhry: India Elections 2009 Analysis « தேர்தல் முடிவு எப்படி இருக்கும்?: “தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குப் பின்னடைவு :: நீரஜா சௌத்ரி

கடந்த தேர்தலை விட காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் குறைகிறது; கூட்டணி கட்சிகள் நெருக்கடிக்கு பணிந்தது

2004-ம் ஆண்டு பாராளு மன்றத்தேர்தலின் போது மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 417 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி போட்டியிட்டது.

இதில் 150 தொகுகளில் தான் காங்கிரஸ் கட்சியால் வெற்றி பெற முடிந்தது. இந்த தடவை அதிக இடங்களில் போட்டியிட்டால் தான், கடந்த தடவை வென்ற 150 தொகுதிகளை விட கூடுதல் இடங்களை பெற முடியும் என்று காங்கிரஸ் தலைவர்கள் கருதினார்கள். இதற்காக மாநில கட்சிகளிடம் காங்கிரஸ் பேச்சு நடத்தி வருகி றது. ஆனால் காங்கிரஸ் நினைத்த படி எதுவும் நடக்கவில்லை.

கூட்டணி கட்சிகள் எல்லாம் தாங்கள் அதிக தொகுதிகளை வைத்துக் கொண்டு சிறிதளவு இடத்தையே காங்கிரசுக்கு விட்டுக் கொடுக்க முன் வந்துள்ளன.

  • உத்தரபிரதேசத்தில் முலாயம் சிங்,
  • பீகாரில் லல்லு பிரசாத்,
  • மராட்டியத்தில் சரத்பவார்,
  • மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி

ஆகியோர் மிக, மிக குறைந்த தொகுதிகளையே காங்கிரசுக்கு கொடுக்க உள்ளனர்.

காஷ்மீரில் உள்ள தேசிய மாநாட்டு கட்சியும் காங்கிரசுக்கு குறைவான இடங்களைத் தான் தர முடியும் என்று கூறி உள்ளது. இது காங்கிரசுக்கு நெருக்கடியாக மாறி உள்ளது. உத்தரபிரதேசத்தில் கடந்த தடவை காங்கிரஸ் கட்சி மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் 73 தொகுதி களில் போட்டியிட்டு 9 இடங்களில் வெற்றி பெற்றது. இந்த தடவை முலாயம்சிங் யாதவின் சமாஜ் வாடி கட்சியுடன் நட்பை ஏற்படுத்தியுள்ள காங்கிரசுக்கு 17 முதல் 20 தொகுதிகள் வரையே கிடைக் கும் என்று தெரிகிறது. எனவே கடந்த தேர்தலுடன் ஒப்பிடுகையில் இந்த தடவை சுமார் 30 இடங்களை காங்கிரஸ் இழக்கும் என்று தெரிகிறது.

DMDK Vijaikanth Alliance Partner Cartoons

DMDK Vijaikanth Alliance Partner Cartoons

காங்கிரஸ் கட்சிக்கு இந்த தடவை ஆந்திரா, தமிழகம் இரு மாநிலங்கள் மட்டுமே ஆறுதலாக அமைந்துள்ளன. ஆந்திராவில் கணிசமான தொகுதிகளை பெற்று வெற்றி பெற முடியும் என்று சோனியா நம்பிக்கையுடன் உள்ளார்.

தமிழ்நாட்டில் கடந்த தடவை 10 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிட்டது. இந்த தடவை 20 தொகுதிகள் வரை தி.மு.க.விடம் காங்கிரஸ் கேட்கிறது. காங்கிரசுக்கு 12 முதல் 15 இடங்கள் வரை தி.மு.க. கொடுக்கும் என்று கூறப்படுகிறது.

Number of Seats & Vote Percetage of Congress

Seats & Votes

தொகுதிகள் எண்ணிக்கை குறைவது பற்றி காங்கிரஸ் பொதுச் செயலாளர்களில் ஒருவர் கூறுகையில், “கூட் டணி கட்சிகளுக்கு உரிய இடம் கொடுக்க வேண்டிய பொறுப்பு காங்கிரசுக்கு உள்ளது. அது தான் கூட்டணி தர்மமாகும். இது எங்களுக்கு அதிக பலத்தை தரும்” என்றார்.

கர்ட்டூன்: தமிழில் பெயர் சூட்டினால் தங்கம்

அடடே - மதி: தினமணி: பெயரில் என்ன இருக்கு?

அடடே - மதி: தினமணி: பெயரில் என்ன இருக்கு?

செய்தி: The Hindu : Tamil Nadu News : Babies with Tamil names to get gold ring: “Babies born in Corporation maternity hospitals will be given a one-gram gold ring each if they are given Tamil names, announced Mayor M. Subramanian.”

ஈழமும் திமுகவும்: ‘அடடே’ மதி: தினமணி கருத்துப்படங்கள்

துக்ளக் – புத்தாண்டு அட்டை கார்ட்டூன்

thuglaq-dmk-cover-new-year-calendar-image-karunanidhi

Deconstructing Anna – Derogatory remarks on Dalit?

அண்ணா சொன்ன செஞ்சிக் கோட்டை சம்பவம்

தமிழ்நாடு காங்கிரசின் சார்பில் முதலமைச்சராக இருந்தவர், “எங்களை எந்தக் காலத்திலும் பதவியிலிருந்து அசைக்க முடியாது” என்று சட்டமனறத்தில் தெரிவித்தார்.

அதற்கு பதிலளிக்கும் வகையில் அண்ணா குறிப்பிட்டார்.

“செஞ்சிக் கோட்டைக்கு மதிப்பு ஒரு காலத்தில் இருந்து வந்தது. அந்த மதிப்புக்குக் காரணம் தேசிங்கு ராஜன். அவன் செஞ்சிக் கோட்டைக்கு அதிபதியாக இருந்தவரைதான் அதெல்லாம். இப்பொழுது அதே செஞ்சிக் கோட்டையில் சில இடையர்கள் ஆடு, மாடு மேய்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களால் செஞ்சிக் கோட்டைக்கு மதிப்பு என்று சொல்லிவிட முடியுமா?”

இதற்கு அடுத்த இரண்டாவது பொதுத் தேர்தலில் ஐம்பது பேர் வரை சட்ட மன்றத்தில் திமுக உறுப்பினர்களாக வரமுடிந்தது.

நன்றி: அண்ணாவின் கதை: தினமணி கதிர் வெளியீடு :: நவீனன் (பிப்ரவரி, 1970)