Tag Archives: Hyderabad

குற்றுழிஞை

ஏன் காவ்யா மாறன் தனியே, தன்னந்தனியே அமர்ந்து சன்ரைசர்ஸ் ஆட்டங்களை ரசிக்கிறார்?

ஏதாவதொன்றை தேர்ந்தெடுக்கவும்:

1. அப்பா கலாநிதி படம் எடுத்துக் கொண்டிருப்பதால்
2. ஹைதராபாத் பிரியாணியில் மற்றவர்கள் எல்லாம் பங்கு கேட்பதால்
3. ஸ்டெல்லா மேரீஸ் பொண்ணுங்களே இப்படித்தான்… இதுவே இராணி மேரி ஆகவோ எத்திராஜாகவோ பெண்கள் கிறித்துவக் கல்லூரியாகவோ இல்லாமல் போனதால்
4. கண்ணா பன்றிங்க தான் கூட்டமா வரும்! சிங்கம் சிங்கிள் ஆ தான் வரும் என ஜெயிலர் சிவாஜி பன்ச் பேசியதால்
5. ஆந்திரப் பிரதேசம் வேண்டுமென்றால் தெலுங்கானா எனப் பிரிந்து போயிருக்கலாம். ஹைதராபாத் என்றைக்கும் கொல்ட்டிகளின் ஒரே தலைநகரமாக இருப்பதால்
6. கூட வர பிசினாறிகளுக்கு எல்லாம் விமானத்தில் பயணச்சீட்டு எடுத்து இந்தியா எங்கும் சுற்றிக் காண்பிக்க விரும்பாததால்
7. அணியில் வேண்டுமானால் பதினொன்று பேர் ஆடலாம். எல்லோர்க்கும் தலைவி ஒருத்தியாக புதிய அம்மாவாக உருவாவதால்
8. தேர்தல் நேரம் – உறவினர் முக ஸ்டாலின் அவர்களும் அமைச்சர் உதயநிதி அவர்களும் பிரச்சாரத்திலும் பதற்றத்திலும் இருப்பதால்
9. அதுதான் இராசி என்பதால்… அப்பொழுதுதான் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஜெயிக்கும் என்பதால்

பத்தாவது காரணத்தை பின்னூட்டத்தில் சொல்லவும்

ஒரு தானாகி மலைதல் (குற்றுழிஞை)

https://www.tamilvu.org/courses/degree/d021/d0213/html/d0213665.htm#:~:text=%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%20%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%20%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%20(%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%88)

வாரிசு ஜெகன் மோகன் ரெட்டி அரசியலில் ஜாதியும் லஞ்சமும்

தெலுங்குப் படம் லீடர் பார்த்தேன். ‘முதல்வன்’ திரைப்படத்தின் இறுதி வசனமான ‘என்னையும் அரசியல்வாதி ஆக்கிட்டாங்களே’ கால்கோளாக வைத்து எழுதியிருக்கிறார்கள்.

ஆந்திரா என்றால் இரண்டு ஹீரோயின். இங்கும் உண்டு. ஒருவர் ‘மயக்கம் என்ன’ ரிச்சா கங்கோபாத்யா. புடைவையில் லட்சணமாக ஹீரோவிடம் ஏமாறுகிறார். கொஞ்சம் ஒல்லியாகக் கூட கேமிரா காட்டுகிறது.

சுகாசினிக்கு பெரிய ரோல். கோட்டா ஸ்ரீனிவாசாவும் அலட்டாமல் வந்திருந்தார்.

தமிழில் இப்படி துளி வெளிப்படையாக பேசினால் கூட சத்யராஜ் மட்டுமே நாயகன் கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பார்.

சலங்கை ஒலி: கமல், பஞ்சு அருணாச்சலம், கே விஸ்வநாத், இளையராஜா

தமிழ்ப்பதிவுகளில் சலங்கை ஒலி திரைப்பட விமர்சனங்கள்

திரைப்படம்:

இந்தப் படம் இன்றும் ஏன் பிடித்திருக்கிறது?

படம் முழுக்க புடைவை மட்டுமே கட்டி வரும் ஜெயப்பிரதாவில் ஆரம்பிக்கலாம். வெற்றியடைந்த ஒவ்வொரு மனிதனுக்குப் பின்னாலும் ஒருத்தி இருப்பாள். ஜெயலலிதா பின்னால் கூட சசிகலா இருக்கிறார். ராசாவிற்கு பின் கனிமொழி. ஜயப்பிரதா பிறிதொருவருடன் சென்று விட்டதால் – கமல், (படத்தில் நடன மேதை பாலு) வாழ்வில் தோல்வி அடைகிறார்.

எண்பதுகளை பிரதிபலிக்கும் படம். இன்றும் சுப்பிரமணியபுரத்தைக் கொஞ்சுகிறோம். இந்தப் படம் 83ல் வந்ததால், அந்த ஆண்டு தோட்டா தரணி சாமான் செட் கலாச்சாரங்களை முகர வைக்கிறது.

இயக்குநர் விஸ்வநாத்தின் சிப்பிக்குள் முத்து, சங்கராபரணம் போன்ற பிற படங்களை மீண்டும் பார்த்தால் கவரலாம். ஆனால், இதில் சின்ன விஷயங்களில் நகாசு செய்திருக்கிறார். விமர்சனங்களைப் படபடப்பாக நகம் வெட்டியுடன் பார்க்கும் ஷைலஜா, பாலுவின் எழுத்தைப் பார்த்தவுடன் கடிக்க ஆரம்பிப்பது அந்த மாதிரி ஒரு ரகம். மாதவியின் புருஷன் (பாஸ்கர் – லஷ்மியின் முதல் கணவர்?) காபி கொடுக்கும்போது தர்மசங்கடமாய் நிலம் பார்க்கும் தருணம் இன்னொரு சாம்பிள். சரத்பாபுவின் பாடல்வரி, கமலின் இசை + நடன கோர்ப்பு, ஜெயப்பிரதாவின் ஒருங்கிணைப்பு என சொல்ல நினைக்கும்போது கையை வாய்க்கு கொண்டுபோகும் தற்செயலாக மற்றொரு இயல்புத்தனம்.

கதாநாயகியைப் பற்றி எழுதாவிட்டால் அடுக்காது. (ஏற்கனவே எழுதிட்டேனோ?) தெலுங்குப் படங்களில் ஹீரோயின்களை எப்பொழுதுமே அழகாக்கி இருக்கிறார்கள். காதில் ஜிமிக்கி, மைக்கேல் ஃபெல்ப்ஸ் தங்கம் வெல்ல நீஞ்சுவது போல் அகல விரியும் ஐடெக்ஸ் மை போட்ட இமை, கேசவர்த்தினி கூந்தல், அந்தக் கறுப்பை நிறைத்து டிவியில் இருந்தும் வாசம் வரவைக்கும் மல்லிகைப்பூ, காதின் முன் எட்டிப் பார்க்கும் இரண்டே இரண்டு சுருள்முடி, தரையைப் பெருக்குமோ என வியக்க வைக்கும் ஆளுமை தரும் டிசைனர் சாரியை மிஞ்சும் பாந்தம் – அமர் சிங் சும்மாவா கவுந்தார் என்று ஆச்சரியப்பட வைக்காத நிவாஸின் கேமிரா.

டப்பிங் மாந்தர்களின் பெயர்களைப் போடாதது பெருங்குறை. மூன்றாம் கட்ட நடிகர் எல்லோருக்கும் மைக் மோகனின் பினாமி சுரேந்தர் குரல் கொடுத்திருக்கிறார். ஜெயப்பிரதாவிற்கு? ஸ்ரீதேவி மாதிரி படுது.

தமிழ்ப்படம் என உணரவைக்கும் பஞ்சு அருணாச்சலம் வசனங்கள்.

  • ‘ஆலோசனைய வச்சுகிட்டு என்ன செய்யறது? அத அப்படியே செயல்படுத்த வாய்ப்பு வேணும்!’
  • ‘பைத்தியத்துக்கும் வெறிக்கும் அளவு இருக்கணும்டா’
  • ‘அந்தப் பையனும் நீங்களும் கேமிராவோட சர்க்கஸ் செஞ்சப்ப எடுத்தேன்’.
  • ‘நாட்டியம் கத்துக்கவே இவனுக்கு நேரம் சரியாப் போயிடும். நாம இங்கே சமையற்கட்டிலயும், கல்யாண சமையல்லயும் எண்ணெய்ப் புகையிலயும் நம்ம காலம் முடிஞ்சுடும்.  இன்னொரு ஜென்மம் எடுத்து, அவன் நாட்டியத்துல கரை கண்டு, அவன் ஆடுவான்… நாம பார்க்கலாம்.’
  • ‘இந்த உறவுக்காரங்கள்னாலே இதான் தொந்தரவு. அடுத்தவங்க கஷ்டத்தப் பத்தி கவலப்பட மாட்டாங்க. எப்ப குத்தம் சொல்லலாம்னு காத்திருப்பாங்க!’

இவர்களெல்லாம் உபதெய்வங்கள். இன்னும் மூணு பேர் இருக்கிறார்கள். அவர்கள் மும்மூர்த்திகள்.

1. இளையராஜா

கண்ணை மூடிக் கொண்டு ஒரு தடவை படம் பாருங்களேன்.

2. கமலஹாசன்

நண்பனைப் பாடி அழைக்கிறார். உக்கிரமாக நடனம் ஆடுகிறார். நாயகன் மாதிரி அழத் தெரியாமல் அழாமல், கே விச்வநாத் சொன்ன பேச்சைக் கேட்டு அடக்கி வாசித்திருக்கிறார்.

3. எஸ் பி ஷைலஜா

அண்ணன் பாடினாலும், இவங்கதானே sole வில்லி?

ஆனாக்க… எல்லாத்துக்கும் கில்லாடி திரைக்கதையாளர் விஸ்வநாத். ஒவ்வொரு சீனும் உங்களுக்கு நினைவிருக்கும்.

  • இது ரகு (சரத்பாபு) & பாலு (கமல்) நட்புக்கான கற்பைப் பற்றிய படமா?
  • When Harry met Sallyஆக ஆணுக்கும் பெண்ணுக்கும் ஆன உறவை ஆராய்கிற படமா?
  • கணவனை இழந்த தாய்க்கும் பதின்ம வயதுக் குழப்பத்தில் இருக்கும் மகளுக்கும் இடையேயான சிக்கல்களைப் பேசுகிற படமா?
  • அம்மாவை அண்ணியிடமும் காதலியிடமும் சிஷ்யையிடமும் தேடுபவனைப் பற்றிய படமா?
  • நடனத்தையும் ஆடுகலைஞர்களின் வாழ்வையும் அலசும் படமா?
  • பாலுவின் சமரசமற்ற ஐடியலிசத்தையும் மாதவியின் வாழ்க்கை ரியலிசத்திற்குமான போராட்டத்தை சொல்லும் படமா?
  • தலையெழுத்து விதிக்கும் தன்முனைப்பு செயல்பாட்டிற்கும் இடையே இருக்கும் தத்துவ சிக்கலா?