மஹராஜ் – அசப்பில் மோடியைச் சொல்கிறார்களோ என்னும் சம்சயம்.
எல்லோருக்கும் குழந்தையைத் தருகிறேன் என்கிறார். தான் மனிதனே அல்ல என நம்புகிறார். தெய்வாம்சம் ஆகவே நடந்து கொள்கிறார். அவரின் சீடர்கள் மகராஜை தெய்வமாகவேப் பார்க்கிறார்கள்.
நல்ல வேளை. கவனமாக எந்த நேரடி ஒப்பிடலோ, மறைமுக வசனமோ, குறிப்பால் உணர்த்தும் காட்சியோ பா.ஜ.க.வையோ பிரதம மந்திரி நரேந்திர மோடியையோச் சொல்லவில்லை.
இரு நூறாண்டுகள் முன்பு நடந்த அசல் சம்பவங்கள். நிஜ நாயகரின் பெயர் கர்சன் தாஸ் முல்ஜி – தயானந்த சரஸ்வதி போல்… ராஜா ராம் கோகன் ராய் போல்…
சமூக சீர்திருத்தவாதிகளைக் குறித்து பள்ளி புத்தகங்களில் படித்தவுடன், இவர்களை ஏன் படமாக எடுக்காமல், தூர்தர்ஷனில் நாடகமாக மட்டுமே போடுகிறார்கள் என்னும் சந்தேகம் கலந்த சோகம் எழுந்ததுண்டு. அப்பொழுது ஆமிர் கான் நடிக்க வந்த காலம்.
இப்பொழுது, ஆமிர் கான் மகனின் முதல் படம். முந்தையத் தலைமுறை நாயகர்கள் எல்லாம் மசாலாப் படங்களில் அறிமுகம் ஆனவர்கள்.
ஃபூல் அவுர் காண்டே – அஜய் தேவ்கன் மைனே பியார் கியா – சல்மான் கான் சான்வரியா – ரன்பீர் கபூர் கஹோ நா பியார் ஹை – ஹ்ரிதிக் ரோஷன் பான்ட் பாஜா பாராத் – ரன்வீர் சிங் பாபி – ரிஷி கபூர் ஹீரோ – ஜாக்கி ஷ்ராஃப் பர்சாத் – பாபி தியோல் கயாமத் ஸே கயாமத் தக் – ஆமிர் கான் தீவானா – ஷாரூக் கான்
எல்லோரும் ஆடலும், பாடலும், காதலும், அடிதடியும் கொண்டு வெள்ளித்திரைக்குக் கொணரப்பட்டவர்கள். ஆனால், ஜுனைத் கான் வேறு மாதிரி களத்தில் இறங்கி இருக்கிறார்.
ஆஸ்காருக்கு பாடுபட்ட ‘டைட்டானிக்’ நாயகர் லியொனார்டோ டிகப்ரியோ வரலாற்று நாயகர்களாக பல படங்களில் நடித்தவர். அவர்களின் சரித்திரங்களையும் சாகசங்களையும் தகிடுதத்தங்களையும் நடித்து அகாதெமி விருது பெற்றவர்.
ஆமிர் பையனுக்கும் அதே ஆசை. ஹாலிவு படங்களில் கொஞ்சம் நியாயம் இருக்கும். வில்லனுடைய பார்வையைச் சொல்வார்கள். சமய, சந்தர்ப்பங்களை விளக்குவார்கள். சூழ்நிலைக் கைதியாவதை உணர்த்துவார்கள்.
மஹாராஜ் – இங்கெல்லாம் சறுக்குகிறது. ஹவேலி ஏன் உருவானது? எவ்வாறு அதன் உறுப்பினர்களைக் கட்டுக்குள் வைத்திருந்தது? பெரிய சமாஜ், சங்கர மடம் போன்றவற்றிற்கு ஏன் அவ்வளவு செல்வாக்கு கிடைத்தது? எப்படி வியாபாரத்தை உள்குழுவிற்குள் வைத்து, செல்வத்தைப் பெருக்கினார்கள்? – இது போன்ற சம்பவங்களைக் கொணர்ந்திருக்க வேண்டும். மகராஜின் இன்னொரு முகத்தைக் காண்பித்திருக்க வேண்டும்.
ஒரு வில்லன்; ஒரு கெட்ட விஷயம்; ஒரு நல்லவன் – எவ்வாறு தன் நாவன்மையாலும் எழுத்துத் திறமையாலும் அதிகாரத்தை வீழ்த்துகிறான் என்பதற்கு ஊறுகாயாக இரண்டு காதலிகளை வைத்து கச்சிதமாகக் கதையை முடித்து இருக்கிறார்கள். சுவாரசியமான, பார்க்க வேண்டிய படம்.
ஜெய்தீப் அலாவத் – வாழ்ந்திருக்கிறார். அடுத்த படத்தில் நவாசுதின் சித்திக்கி மாதிரி ரஜினி கையால் அடி வாங்குமளவு அசத்தியிருக்கிறார்.
ஆமிரும் புத்திரரும் அடுத்து எந்த மதகுருவை கையில் எடுப்பார் என நினைக்கிறீர்கள்?
பள்ளிக்கூடம் ஆரம்பித்தாகி விட்டது. உங்கள் வீட்டில் கணவன் & மனைவி, இருவருமே வேலைக்கு செல்கிறீர்களா?
இந்தியா என்றால் கவலை இல்லை.
முந்தானை முடிச்சு + தலையணை மந்திரம் என்றால் அம்மாவின் பெற்றோர் இருப்பார்கள். பாரம்பரியம், பழமைவாதம் என்றால் மாமனார் + மாமியார். முற்போக்கு, நாகரிகம் என்றால் சமபங்காக இருவருக்கும் டூட்டி போட்டிருப்பீர்கள். அருணாச்சல் பிரதேசம் போன்ற சீனப் பிரதேசங்களில் வாசம் என்றால், சல்லிசாக பணியாட்களை நியமனம் செய்திருப்பீர்கள்.
அமெரிக்காவில்?
பள்ளியிலேயே ஐந்துமணி வரை வைத்திருக்கும் காப்பகம் உண்டு. அதில் எல்லா வகுப்புகளும் கலந்து கட்டியிருக்கும். Gangகள் இருக்கும். உங்கள் குழந்தையை விட பெரிய வகுப்பினரும் இருப்பார்கள். போதுமான அளவு பாதுகாப்பானது. ஆனால், ஆங்காங்கே நடக்கும் மிரட்டல், உருட்டல்களைக் கண்டு காணாமல் விட்டுவிடுவார்கள்.
After school daycareன் மேய்ப்பர்களே பல சமயம் இறுதியாண்டு மாணவர்களாக இருப்பது ஒரு காரணம். பாலியல் துன்புறுத்தல்கள், WWF சண்டைகள், கத்தியால் கிழித்து குருதி வருமளவு திரைமூடி பிணக்குகளை தீர்த்துவிடுவதிலேயே அவர்கள் நேரங்கழிந்து விடுவது இன்னொரு முக்கிய காரணம்.
பள்ளியில் விட்டு வைக்க முடியாது! அப்படியானால்?
பூட்டிய வீட்டைத் தானே திறந்து, தனிமையில் இருக்க வைக்கலாம். நண்பரின் வீட்டுக்கு சென்று விளையாடு என்று சொல்லிவிடலாம்.
நம்ம வீடுதானே? தெரிந்த தோழர்கள்தானே? அக்கம்பக்கத்திலும் ஆதுரமானவர்கள்தானே! என்ன ஆபத்து வந்துவிட முடியும்?
பத்மா அர்விந்த்தை சந்தித்தபோது சொன்ன நியு ஜெர்சியில் சம்பவம் நினைவிற்கு வந்தது.
பதின்ம வயதை எட்டிப் பார்க்கும் பொறுப்புள்ள பையன். பெற்றோர் இருவரும் வேலைக்குப் போய் சம்பாதிப்பதால் பணத்தின் மதிப்பை அறிந்தவன். கூடப் படிக்கும் விடலை வகுப்பினர், ‘அந்த சைட்டுக்கு போய் காட்ட முடியுமா?’ என்று மிரட்டி உருட்டும் dareகளுக்கு ஈடுகொடுக்காமல், அமைதியாக புன்சிரிப்போடு ஒதுங்கும் பக்குவம் வாய்த்தவன்.
இப்படிப்பட்டவன் இப்போது சிறையில் இருக்கிறான். எந்தக் கைதியிடம் இருந்து எவ்வித கொடுமைகளுக்கு உள்ளாகிக் கொண்டிருக்கின்றானோ!
ஏன் தண்டிக்கப்பட்டான்? எப்படி மாட்டிக் கொண்டான்? என்ன குற்றம் புரிந்தான்?
அவனுடைய பக்கத்துவீட்டுக்காரன் வலையகம் மூலம் கமிஷன் பார்த்து சம்பாதிப்பவன். தன்னுடைய போட்டியாளர்களின் கூகிள் விளம்பரங்களை முடக்கும் விதமாகவும், அவர்களின் வலையகங்களை DDoS போன்ற கொந்தர் நுட்பங்களில் செயலிழக்கவும் இவனை சூட்சுமமாக பயன்படுத்தி இருக்கிறான்.
அறியாத வயசு. கூடவே, ‘நீ இவ்வாறு செய்தால் உனக்கு இந்த குட்டிப் பரிசு! இத்தனை தடவை க்ளிக் செய்தால் ரீபக் ஷூ!’ என்றெல்லாம் சன்மானங்களும் அளித்திருக்கிறான்.
தனிமையில் விடப்பட்ட மகனும், புதிய காலணிக்கு ஆசைப்பட்டு, அவன் சொன்ன உரல்களை விடாமல் சுட்டித் தள்ள, காவலரினால் விசாரிக்கப்பட்டு, அட்டர்னி ஜெனரலால் குற்றஞ்சாட்டப்பட்டு, ஜூரியினால் கடுங்காவலில் விழுந்துவிட்டான்.
இப்போது எம்.ஐ.டி., ஹார்வார்டு கனவு போச்சு; வாலிபம் போயே போச்சு.
சில கேள்விகள்:
அ) பதின்ம வயதினர் செய்யும் குற்றங்களுக்கு, பெரியவர்களுக்கான நீதி பொருந்துமா? அவர்களுக்கான தண்டனைகள் சிறுவர்களுக்கான சட்டத்தின் கீழ் அமைய வேண்டுமா? எந்த மீறல், எவ்விதம் என்று பகுப்பது?
ஆ) தாயும் தந்தையும் வேலைக்கு சென்றால்தான் ப்ரைவேட் பள்ளிக்கூடம், விசாலமான வீடு, ப்ளே-ஸ்டேசன் எல்லாம் சாத்தியம். ஒருவர் மட்டும் சம்பாதித்தால் கல்லூரிக்கு எப்படி பணங்கட்டுவது?
இ) தெருவிளக்கில் படித்து நீதிபதியானது, இந்தியாவில் தமிழ் மீடியத்தில் இருந்து அமெரிக்கா வந்தது என்பது போன்ற உதாரணங்கள், வருடத்திற்கு நாற்பதாயிரம் கோரும் தனியார் வாசகசாலையில் இல்லாமல், சாதாரண அமெரிக்க அரசுப் பள்ளிக்கு செல்வோருக்கும் பொருந்துமா?
ஈ) பசங்களுக்கு Bullying, பெண்களுக்கு barbie doll இலக்கணங்கள், இருபாலாருக்கும் dare செய்து பலான விஷயங்கள் செய்யவைப்பது போன்ற சூழலில் நான் கடைத்தேறிவிட்டேன். என் மக்கள்?
உ) குழந்தைகளின் கணினி பயன்பாட்டையும், தொலைக்காட்சி பார்த்தல்களையும் எவ்வளவு தூரம் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்? எப்பொழுது அவர்களுக்கு கோபம் எல்லை மீறும்? எது அத்துமீறி தணிக்கை என்று வரையறுப்பது?
தொடர்புள்ள சமீபத்திய பதிவுகள், செய்திக் கட்டுரைகள்:
3. Editorial – 12 and in Prison – NYTimes.com: “According to the study, every state allows juveniles to be tried as adults, and more than 20 states permit preadolescent children as young as 7 to be tried in adult courts.”
தற்சமயம் அமெரிக்காவில் புகழ்பெற்ற Phillip Garrido குறித்த செய்தி: Questions arise over how kidnapper went undetected – Yahoo! News: “For 18 years, Phillip Garrido managed to elude detection as he pulled off what authorities are calling an unfathomable crime, kidnapping and raping 11-year-old Jaycee Dugard, keeping her as his secret captive for nearly two decades and fathering two of her children.”
பள்ளிக்கு செல்லும் பேருந்து. அதைப் பிடிக்க தன் வளர்ப்பு தந்தையோடு நடந்து செல்கிறாள் 11 வயதுச் சிறுமி. அப்பொழுது அரக்கபரக்க வரும் கார், அவளைக் கடத்தி சென்றுவிடுகிறது.
பதினெட்டு வருடமாக காணாமல் போனவர்கள் பட்டியலில் இருக்கிறாள். போன வாரம் கண்டெடுத்திருக்கிறார்கள். பதினோரு வயதில் இருந்து பாலியல் அடிமை போல் இருந்தவளுக்கு இரு பெண் குழந்தைகள். 13… வெறும் பதின்மூன்று வயதிலேயே முதல் குழந்தையைப் பெற்றுப் போட்டிருக்கிறாள்.
மூத்த மகளுக்கு 15 வயசு. இரண்டாமவளுக்கு 11. அம்மாவாது பதினொன்று வயது வரை சுதந்திரமாக இருந்தாள். இவர்களோ, பிறந்த நாளில் இருந்து முடக்கம். இருவரும் வெளியுலகை பார்த்ததில்லை. அவர்களும் செக்சுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கலாம்.
இந்தச் சிறுமிகள் பள்ளிக்கு சென்றதில்லை. தடுப்பூசி எதுவும் கிடைக்கவில்லை. நோய்வாய்ப்பட்டால், மருத்துவரிடம் கூட சென்றது கிடையாது.
அமெரிக்காவில் இப்படி நடக்கும் என்று என்னைப் போல் பலரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ‘அச்சமுண்டு அச்சமுண்டு‘ வெளியான சமயம் இந்த செய்தி வெளியாகியுள்ளது.
நல்ல வேளை.
‘கமல்ஹாசன் – ஒரு தீர்க்கதரிசி‘ போன்று அருண் வைத்தியநாதன் குறித்த அஞ்சல் எதுவும் வந்துசேரவில்லை. வாயில் லிங்கம் எடுப்பது போன்ற இந்த மாதிரி மாயாஜாலங்கள் எல்லாமே ஹம்பக் என்பது என்னுடைய ஆழமான நம்பிக்கை.
அப்படியே தொடர்பான சமீபத்திய இரு பதிவுகளும், அதில் பொருத்தமான மேற்கோள்களும்:
மாந்திரீகம், மேஜிக், மாயாஜாலம் – மூடநம்பிக்கை x கலாச்சாரம்
1. சாரு நிவேதிதா ஆன்லைன் – கடவுளைக் கண்டேன் :: பரமஹம்ஸ நித்யானந்தர் – யோகம் நிரோதம்: “ஒரே சமயத்தில் இரண்டு பேருக்கு ஒரே நபரின் பௌதிகத் தோற்றம் காட்சியளித்தால் அது எப்படி மாயத்தோற்றமாக இருக்க முடியும்? இந்தச் சம்பவத்துக்குப் பிறகும் எனக்கு ஒரு அதிசயம் நடந்தது.”
2. ஜெயமோகன் :: jeyamohan.in » ஆன்மீகம், போலி ஆன்மீகம், மதம்: “இந்த புராணங்கள் தத்துவ விளக்கத்துக்கான கருவிகளாக அமைந்தன. ஏனென்றால் தத்துவ விளக்கத்துக்கு எப்போதுமே படிமங்கள் தேவை. அப்படிமங்களை நம் புராணங்கள் தொடர்ச்ச்சியாக வழங்கின. ஆகவே பின்னர் புராணங்கள் ஒரு தனிமொழியாக [Meta Language] மாறின. அதில் நம் தத்துவம் விரிவாக பேசப்பட்டது. இது புராணங்களின் தத்துவ முகமாக இன்று நீடிக்கிறது.
புராணங்கள் மிக மேலோட்டமாக , வெறும் அற்புதக் கதைகளாக மட்டுமே வாசிக்கபப்டும் புரிந்துகொள்ளப்படும் சூழல் உருவாகியது.
இக்கடிதம் இந்த எளிய புராணமனநிலையில் நின்று எழுதப்பட்டிருக்கிறது. இந்த மனநிலை இன்று இந்துக்களிடம் மிகப்பரவலாக உள்ளது. இதைப் பயன்படுத்திக் கொள்ளும் மனிதர்களே இன்று நாம் தொலைக்காட்சிகளில் மேடைகளில் மிக அதிகமாக கண்டுகொண்டிருப்பவர்கள். சொல்லப்போனால் நாம் இந்து மதம் சார்ந்தவர்களாக காண்பவார்கள் அனைவருமே இப்படித்தான் இன்று இருக்கிறார்கள். அவர்கள் தங்களை அற்புத மனிதர்களாக காட்டிக்கொள்கிறார்கள். அருள்வாக்கு சொல்கிறார்கள். ஆசி அளிக்கிறார்கள். நோய் குணமாக்குகிறர்கள். நீர் மேல் நடக்கிறார்கள். நெருப்பில் நீந்துகிறாரர்கள்.”
இப்பொழுதாவது செய்தியில் நிறைய அடிபடுகிறார்களா? தடுப்பது குறித்து விவாதம் எழும்புகிறதா?
அமெரிக்காவில் இன பேதத்திற்கும் இதற்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா? ஹார்வார்ட் பேராசிரியர் கேட்ஸ் வழக்கில் வெள்ளையன், கறுப்பினம் என்றார்களே… அந்த மாதிரி பிலிப் காரிடோ மட்டும் கருப்பனாக இருந்தால், சீக்கிரமே ஆராயப்பட்டிருப்பாரா? அல்லது குறைந்தபட்சம் கடுங்காவலிலேயே வைக்கப்பட்டிருப்பாரா?
மேற்கத்திய உலகுகளில் எப்பொழுதாவது நடக்கும் ஒன்றிரண்டு சம்பவம் பெரிதாக்கப்படுகிறதா? எத்தனை குற்றம் அம்பலமேறுகிறது? எவ்வளவு சதவிகிதம் சந்தேகத்திற்கு இடமின்றி முற்றுப்பெற்று நீதி கிடைக்கிறது?
அதெல்லாம் சரி… ஆரம்பத்தில் கடவுள் குறித்து ஏன் இவ்வளவு பில்ட்டப்பு?
பாலியல் குற்றவாளி – Sex Offender
சிறுவன்களையோ சிறுமிகளையோ வன்புணர்பவர்
அவ்வாறு வன்முறைக்குள்ளாக்கியதை நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டு ஒப்புக் கொண்டவர்.
குழந்தைகளிடம் செக்ஸ் வைத்த குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு சிறை சென்றவர்.
சிறார்களிடம் உறவு வைத்துக் கொள்வதை வீடியோ, புகைப்படம் எடுத்து உலவ விடுபவர்.
மேற்சொன்னதை பல தடவை பல்வேறு குழந்தைகளிடம் விதம் விதமாக தொடர்ந்து செய்து வருபவர்.
ரேப், பொது இடத்தில் ஆடையின்றித் திரிவது, பலர் பார்க்குமாறு மலஜலம் கழிப்பது போன்ற சிறு குற்றங்களும் இதில் அடக்கம்.
மதநம்பிக்கை & கடவுள் மீது பழிபோடும் பக்த சுபாவம்
அந்தக் காலத்தில் வள்ளியும் தெய்வானையும் கந்தசாமிக்கு துணையிருந்தார்கள். தெய்வானையை மணந்த பிறகு, வள்ளியை, யானைகளைக் கொண்டு பயமுறுத்தி இழுத்துக் கொண்டு வந்திருக்கிறார் முருகன். எம்பெருமான் தண்டபாணியைக் கூட பாலியல் பலாத்கார லிஸ்டில் திருத்தணிகை காவல்நிலையம் விசாரிக்க வேண்டும். ஆனால், போலீஸ் ஸ்டேசனிலேயே இந்த மாதிரி ரேப் நடந்தேறுவது சினிமாவில் அடிக்கடி பார்க்கும் நிஜம்.
ஃபிலிப்பும் இதையேதான் தன் நம்பிக்கையாக சாட்சியம் சொல்கிறார். கடவுள் அவர் காதில் வந்து ஓதியிருக்கிறார். இளம்வயதில் பெண்ணின் அடக்குமுறையால் பாதிக்கப்படும் ‘சிவப்பு ரோஜாக்களி‘ல் இந்தப் பொண்ணுங்களே இப்படித்தான். குத்துங்க எசமான் குத்துங்கஎன்பதாக எழும் குரோதம், தனக்கு பலம் கிடைத்தபின், அந்த அதிகாரத்தை பிரயோகிக்க, அடக்கியாள கீழ்ப்படிந்த சிறுவயது சிறுமியை நாடுகிறது. அதற்கு அல்லாவும் துணையாகிறார். பிலிப்புக்கு ஜீஸஸ்.
‘மாயாவி‘ திரைப்படத்தில் சூர்யாவால் சிறைவைக்கப்படும் ஜோதிகா, திருடன் மேலே காதல்வயப்படும் ஸ்டாக்ஹோம் தாக்கீட்டின்படி 11 வயதில் கவரப்பட்ட Dugardம் இப்பொழுது தன்னை டென்ட் கொட்டகையில் அடைத்து வைத்தவன் மீது பாசமோ, பரிதாபமோ கொண்டிருக்கிறார்.
‘நான் மிகவும் முக்கியமானவன்’ என்று எனக்கு கூட வலையில் இயங்குவதால் பொய்யாகத் தோன்றும். வாழ்க்கையில் மிட்-லைஃப் போராட்டத்தில், நாய்க்குணம் எட்டிப்பார்க்கும் நாற்பது வயதில் இந்த மாதிரி திரிபுணர்ச்சிகள் சாதாரணம். மாயத்தோற்றங்களை இறையாணையாகக் கனவு கொண்டு, செயலாக்கலில் ஈடுபடுவது அபாயம்.
தனிநபர் சுதந்திரம் & குற்றவாளிக்கு மறுவாழ்வு: புனர்வாழ்வும் புணர்வாழ்வும்
பாலியல் வக்கிரம் பிடித்தவன் என்பதை பிலிப் காரிட் ஏற்கனவே ஒப்புக் கொண்டிருக்கிறான். மூன்று தமிழ் சினிமாக்களை எடுத்துக் கொள்ளலாம்.
1. மகாநதி: சிறைவாசம் குறைப்பு: ஆயுள் தண்டனையாக ஐம்பதாண்டு காலம் கடுஞ்சிறையில் இருந்திருக்க வேண்டியவன். பரோல் என்பது குற்றத்தை ஒப்புக் கொண்டு மன்னிப்பு கேட்டல். அவ்வாறு மனந்திருந்திய செய்கைக்காக, கடவுள் நல்வழி காட்டினார் என்னும் ஒப்புதலுக்காக பத்தாண்டுகளிலேயே விடுவிக்கப்படுகிறான். வெளியே வந்ததும், யேசுவின் சொற்படி வேட்டை தொடர்கிறது.
2. வேட்டையாடு விளையாடு: – Garrido came under suspicion in the unsolved murders of several prostitutes in the 1990s, raising the prospect he was a serial killer as well. Several of the women’s bodies — the exact number is not known — were dumped near an industrial park where Garrido worked during the 1990s. Police executed a search warrant at his home in the investigation.
3. நந்தா: இந்த மாதிரி ஆளுங்களையெல்லாம் வெளியில் விடுவதில் தப்பேயில்லை. சுதந்திரம் அவசியம். சிறையை விட்டு அனுப்புமுன் சுன்னியை மட்டும் வெட்டி விடுதல் எல்லோருக்கும் நலம்.”
உங்கள் ஊரில் பாலியல் வக்கிரம் பிடித்தவர் இருக்கிறாரா?
3. Just another week of rapes | Life and style | The Guardian: “Nearly 50,000 rapes and attempted rapes take place in the UK every year, but only a few are covered by the media. Julie Bindel gives a snapshot of which cases are reported – and how”
பரோல் கொடுத்த மகராசர் இனிமேலாவது தாராளப் பிரபுவாக இல்லாம, தன்னுடைய குடும்பத்த ஒரு தடவ நெனச்சுண்டு ரிலீஸ் செய்வாரா?
கோடவுனிலிருந்து விடுதலை கிடைச்சாச்சு… ஆனா, புத்தகம் போடு, சுயசரிதை சொல்லு, ஓப்ராவில் வா என்று துரத்தும் மீடியாவிலிருந்து அவளுக்கு எப்போ விடுதலை?
அன்னிக்குக் குற்றவாளிங்கள ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பிச்சாங்க.. அந்த மாதிரி புத்தம் புது பூமிய உருவாக்கி, அங்கே இந்த மாதிரி பன்னாடைங்கள பதுக்கி வைக்கலாமே!
5. அடுத்த அதிபருக்கு நீங்கதான் தொழில்நுட்ப ஆலோசகர். என்ன அட்வைஸ் கொடுப்பீங்க?
சில துறைகள் பற்றி மட்டும் இங்கே:
இமிக்ரேஷன்:
வேண்டும் என்கிறபோது இம்க்ரேஷன் துறை கண்டும் காணாமல் இருக்கிறது. சட்டவிரோதமாக வரும் நிறைய ஹிஸ்பானியர்கள், ஆசியர்கள் கட்டிட தொழில், சுற்றுப்புற சுத்தம் செய்யும் தொழிலில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். இதில் சட்டத்திற்கு விரோதமாக வரும் மக்களின் தேவை மட்டும் இல்லாமல் மிக குறைந்த ஊதியம் கொடுத்து எந்த வித பாதுகாப்பும் தர வேண்டாமல் இலாபம் ஈட்டும் அமெரிக்கர்களின் பேராசையும் அடங்கும்.
அட்லாண்டாவில் ஒலிம்பிக்ஸ் போது கட்டிடடம் கட்ட வந்த பல மெக்சிகோகாரர்களின் குழந்தைகள் பள்ளியில் படிக்கும் போதே ஆளான கேலியும் கிண்டலும் துன்பங்களும் நிறைய குழுக்களை ஆரம்பிக்க காரணமாகின. இவற்றல் உயிரிழந்த குழந்தைகள் நிறைய பேர். இப்போது திடீரென சட்டவிரோதமாக வந்த மக்கள் வெளியேற வேண்டும் என்று சொல்வது எப்படி நியாயமாகும்?
அதற்கு மாறாக தேவைப்பட்டு மக்களை சட்டவிரோதமாக்க கடத்தப்படுவை கண்டும் காணாமல் இருக்காமல், சட்ட பூர்வமாக தற்காலிக விசா தந்து, அவர்களுக்கும் நியாய ஊதியம் கிடைக்க வழி செய்ய வேண்டும். இவர்கள் சட்ட விரோதமாக வந்தாலும் அவர்களுக்கு குழந்தை பிறந்தால் அதன் முழு பாதுகாப்பையும் ஏற்றுக்கொள்ளும் அரசு, அதற்காக ஆகும் செலவு பற்றி யோசிப்பதற்கு முன், இவர்கள் சட்டவிரோதமாக இங்கே கடத்தப்பட்டு வருவதே தங்கள் பேராசைதான் காரணம் என்பதை உணர வேண்டும். அவர்களை பணிக்கு அமர்த்தும் நிறுவனங்கள் இதற்கு பொறுப்பேற்க வேண்டும். இதனால் பல சட்ட விரோத நடவடிக்கைகள் குறையும். அது வருங்காலத்தில் சேமிப்பிற்கு வழி வகுக்கும்.
போக்குவரத்துத் துறை:
மத நிறுவனங்களின் தலையீடு அமெரிக்க தலைவர்களின் கொள்கை சார்பினை நியாயப்படுத்துவதால், 1990களின் ஆரம்பத்தில் இருந்தது போல் அல்லாமல் இப்போதெல்லாம் ஆராய்ச்சிகள் சார்புடையதாகிக்கொண்டு வருவதாக எனக்கு தோன்றுகிரது. அறிவியலாகட்டும், தொழில் நுட்பமாகட்டும் தனித்து சுதந்திரமாக இயங்க வேண்டியது கட்டாயமாகும்.
புதிய போர் தளவாடங்களை வடிவமைக்க ஆகும் செலவில், சில அடிப்படை பிரச்சினைகளை தீர்வாக நிதி ஒதுக்கலாம்.
இன்னும் கொஞ்ச நாளில் அமெரிக்கா முதியவர்கள் அதிகமாக இருக்கும் நாடாக போகிறது. இதில் பலருக்கு வருமானம் என்பது பென்ஷன், சோசிஷியல் செக்யூரிட்டி ஆகியவை மட்டுமே என்னும் போது காரும், பெட்ரோலும், அதற்கான காப்பீடும் ஒரு பாரமாகிப்போகும். உடல்நலம் தொய்வடையும் தருணம், கார் ஓட்டுவதுகூட முடியாததாகும். இதற்கெல்லாம் பொது போக்குவரத்தை வடிவமைக்க வேண்டியது மிக அவசியமாகும். மக்களின் டோல் வரியை உபயோகித்து இன்னும் அதிக சாலைகள் வடிவமைப்பதை போலவே, பேருந்துகள் போன்றவற்றில் கவனம் செலுத்த ஆ ரம்பிக்கலாம்.
Foster Care:
மருத்துவக் காரணங்கள், இல்லை பதின்ம வயது பெண்கள், போதைப் பழக்கம், அல்லது மதுவிற்கு அடிமையானவர்கள் நிரந்த குடும்பசூழலை கொடுக்க முடியாதவர்கள் கருவைக் கலைக்க விரும்பினால் அது சரியே. இதில் அரசு தலையிட்டு குழந்தை வளர்ப்பை தான் எடுத்துக் கொண்டு கோடிக்கணக்கில் செலவு செய்வது அனாவசியம்.
சின்ன குற்றங்களுக்காக dyfs தலையிட்டு குழந்தைகள் பொருப்பை எடுத்துக் கொண்டு பிறகு foster care இல் ஒப்படைக்கிறது. இதற்காக ஒரு குழந்தைக்கு மாதம் $800 தருவதால் சில பெற்றோர்கள் அந்த பொறுப்பை ஒரு வேலையாக எடுத்துச் செய்கிறார்கள்.
அதன் பிறகு அவர்கள் தனியே வாழவோ அல்லது தத்து எடுத்துக் கொள்லவோ தயார் செய்யப்படுகிறார்கள். குழந்தைகள் மீண்டும் பெற்ரோரிடம் செல்ல வேண்டுமானால், மன நல மருத்துவர்கள், 6 பேர் கொண்ட ஒரு குழு ஒருமனதாக முடிவெடுக்க வேண்டும். இதைப் பயன் படுத்தி மன நல ஆலோசனையை நேரம் இல்லாமை போன்ற காரணங்களுக்காக தட்டிக் கழிப்பது அது மீண்டும் நீதி மன்றத்தீற்கு வருவது போன்ற செயல்பாடுகள் அதிகம் செல்வாவதோடு, குழந்தைகள் நலத்தையும் பாதிக்கிறது. இதை தடுக்கவும் சீக்கிரமே அவர்கள் ரெச்பைட் (respite) பாதுகாக்கப்படவும் கிளிண்டன் அரசு தீர்மானங்கள் எடுத்தது.
அபார்ஷன் சட்டரீதியாக இல்லாத மாநிலங்களில் இந்த ஆதரவற்ற குழந்தைகள் காக்கும் பொறுப்பு ஒரு சோஷியல் பணியாளருக்கு 200 வரை போக, நிறைய கவனக்குறைவுகள் உண்டாகின்றன. அரசாங்கம் பொறுப்பேற்காமல், பெற்றோர் அதிக பொறுப்புடன் இருக்கவும், குறைந்த பட்சம் 6 மாத காலத்துள் அந்த குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பையும் அல்லது அதற்கான செலவை தண்டனையாக கட்டவும் செய்ய வேண்டும்.
உள்நாட்டு பாதுகாப்பு:
பறவைக்காய்ச்சல் மற்றும் உயிரியல் தீவிரவாதம், வேதியியல் ரேடிய கதிர் தீவிர வாதம் என்று எல்லாத்துறைகளிலும் அனாவசியமாக செலவழிக்கப்படும் நிதியை அங்கிருந்து பொது நலத்திட்டத்திற்கு மாற்ற செய்வேன். FEMA போன்ற நிறுவனங்கள் அவசரக்காலம் மட்டும் அல்லாமல் பொதுவாகவே மக்களின் விழிப்புணர்ச்சியை தூண்டு வண்ணம் செயல் படலாம்.இது குறித்து
உடல்நலத்துறை:
காப்பீடுகள், அதன் காரணமாக மிக அதிகமான மருத்துவ செலவுகள் என்ற சுழற்சி இங்கே மருத்துவ கவனிப்பை சாதாரண மக்களுக்கும், நடுத்தர மக்களுக்கும் மிகவும்கடினமாக மாற்றி இருக்கின்றன. ஒவ்வொருவரும் சிகிச்சை முடிந்து தேர்ச்சிபெறஆகும் காலத்தை காப்பீடுகள் தீர்மானிப்பதை நிறுத்த வேண்டும். இப்போது மன நலத்திற்கும், வன்புணர்ச்சிக்கான கவுன்சிலிங்கிற்கும் 10 sitting , 15 sitting என்பதையெல்லாம் காப்பீடுகளே தீர்மானிக்கின்றன. இதுவும் தீவிரம், நோயாளியின் தனித்துவம் பொறுத்து மாறும்.
மருத்துவ சிகிச்சைக்காக வரும் போது விசா பற்றிய கேள்விகள் கூடாது என்றாலும், அதிகரித்துவரும் மருத்துவ செலவுகள் மற்றவர்களின் காப்பீடு கட்டணத்தை உயர்த்துகின்றன. இதை தீர்க்க முறைக்கப்பட்ட charity care நிதியை உடனடியாக அதிகரிக்க செய்வேன். மேலும் நோய் வந்தபின் அதை சரிபார்ப்பதைவிட interventionஇல் அதிக கவனம் செலுத்த சொல்வேன்.
முதுமை இல்லங்களில் ஆள்பற்றாக்குறையை சரி செய்ய வேண்டியதும் அதற்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிப்பதும் முக்கியம். பரிந்துரை செய்யப்பட்ட மருந்துகள், உணவு துறையின் கட்டுப்பாட்டில் வரும் சில மருந்துகள் பற்றி இன்னமும் யோசனைகள் எழுத ஆரம்பித்தால் இப்போதைக்கு முடியாது என்பதால் இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன்.
போரில் இருந்து வரும் வீரர்கள், வியட்னாம் வீரார்கள் இவர்களின் மன அழுத்தம் அதிகரித்து மன நோய் பெருகிவரும் இந்நேரம், மன நலனில் அதிக கவனம் செலுத்த வேண்டியதும் முக்கியம்.
முக்கியமாக, மது அருந்தும் சட்ட வயது வரம்பை 18 ஆக குறைக்க வரும் மசோதாவை இப்போதைக்கு எதிர்க்கிறேன்.
* Accept that some days you’re the pigeon, and some days you’re the statue.
* Solitude is independence
* Call no man happy until he is dead - Oedipus
* It is what you read when you don't have to that determines what you will be when you can't help it. - Oscar Wilde
* The difference between literature and journalism is that journalism is unreadable and literature is not read. - Oscar Wilde