Tag Archives: பாடல்

செல்பேசியில் காதலித்துப்பார் – கவிப்பெயரரசு வரமொத்து

இணையத்தில் கண்டது:

அ) Mohamed Hashmath  –  Yesterday 11:35 AM (edited Yesterday 11:36 AM)

ஆ) செல்ஃபோனில் காதலித்துப்பார்

உன்னைச் சுற்றி ஈக்கள் மொய்க்கும்
உலகம் உன்னையே பார்க்கும்
தொலைபேசிக் கட்டணத்தின் பெறுமதி விளங்கும்
உனக்கும் வறுமை வரும்
கடன்கள் அதிகமாகும்
ரீலோட் கடைக்காரன் கடவுளாவான்
உன் விரல்கள் பட்டே (தொலைபேசி) இலக்கங்கள் அழியும்
காதிரண்டும் செவிடாகும்
செல்ஃபோனில் காதலித்துப்பார்

குப்பை மேட்டில் நின்று கதைப்பாய்
பல நாட்கள் குளிக்கமாட்டாய்
Call வராவிட்டால் நிமிசங்கள் வருசமென்பாய்
வந்துவிட்டாள் வருசங்கள் நிமிசமென்பாய்.
இந்த உலகமே உன்னைப் பைத்தியக்காரனாய்ப் பார்க்கும்
ஆனால் யாருமே பார்க்காததுபோல் உணர்வாய்
வீட்டுக்கும் ரோட்டுக்கும் பேயன்போல் நடந்து திரிவாய்
இந்த ஃபோன், இந்த சிம், இந்த ரிலோட் எல்லாமே காதலுக்குதவும் ஏற்பாடென்பாய்.
செல் ஃபோனில் காதலித்துப்பார்

உன் ஃபோன் அடிக்கடி சார்ஜில் கிடக்கும்
பேரிரைச்சல் கொண்ட நேரத்தில்கூட அவள் மிஸ்ட் காள் மட்டும் தெளிவாய்க் கேட்கும்
உன் ஃபோனே பெட்ரி டவுன்னாகி
உனக்கு ஆப்படிக்கும்
உன் பல மணிநேரங்களை அது விழுங்கும்
ஃபோன் கட்டணம் நைல் நதியாய் பெருக்கெடுக்கும்
உன் பாக்கெட் மட்டும் சஹாராவாகும்.
Missed Call வராவிட்டாள் பைத்தியம் பிடிக்கும்
Missed Call வந்துவிட்டால் பைத்தியம் அடங்கும்.
செல் போனில் காதலித்துப்பார்

கடன்களை வாங்கி வாங்கியே ரீலோட் பண்ண உன்னால் முடியுமா?
Out Goingஉம் SMSஉம் அவளிடமிருந்து வந்ததுண்டா
Call waiting போய் சண்டைகள் வந்ததுண்டா
கவரேஜ் இல்லா நேரங்களில் கூரைமேல் ஏறிப் பேசத் தெரியுமா
சபையிலே மெதுவாகவும்
தனிமையிலே உருகி உருகியும் பேச
உன்னால் ஆகணுமா
ஃபோன் சூடாகவேண்டுமா
ஐந்தங்குல இடைவெளியில் சாப்பாட்டுக் கடையிருந்தும்
பட்டினி கிடந்து (ரீலோர்ட் செய்ய) காசு சேர்த்துப் பழகியதுண்டா
தொலைபேசியில் காதலித்துப்பார்

ஏர்டெல் (சிம்) கொம்பனிக்காரன் வாழவேண்டுமே அதற்காகவேனும்
Nokia (ஃபோன்) கொம்பனிக்காரன் பிழைக்கவேண்டுமே அதற்காகவேனும்
டயலொக் சிம்முக்கும்
மொபிடெல் சிம்முக்கும்
கட்டண வித்தியாசம் விழங்குமே அதற்காகவேனும்
கழிவறையில் உற்காந்து கொண்டு பேசவும் முடியுமே
கட்டாந்தறையில் படுத்துக்கொண்டும் பேச முடியுமே அதற்காவேனும்
செல்ஃபோனில் காதலித்துப்பார்

பெற்றோர் உன்னிடம் சண்டைபிடித்தாலும்
உறவுகள் கேவலமாய்ப் பேசினாலும்
தொலைபேசிக் கட்டணம் எவ்வளவுதான் எகிறினாலும்
ஃபோன் எவ்வளவுதான் சூடானாலும்
நீ நேசிக்கும் அவள் உனக்கு மிஸ் கோர்ள் பண்ணாமல் விட்டாலும்
செல்ஃபோனில் காதலித்துப்பார்
நீ பிச்சைக்காரனாவாய் இல்லை கடன்காரனாவாய்

இரண்டில் ஒன்று
உனக்கு நிச்சயம்
செல்ஃபோனில் காதலித்துப்பார்..

அசல்

கவிப்பேரரசு வைரமுத்து – காதலித்துப் பார்!

உன்னைச் சுற்றி ஒளிவட்டம் தோன்றும்…
உலகம் அர்த்தப்படும்…
ராத்திரியின் நீளம் விளங்கும்….
உனக்கும் கவிதை வரும்…
கையெழுத்து அழகாகும்…..
தபால்காரன் தெய்வமாவான்…

உன் பிம்பம் விழுந்தே கண்ணாடி உடையும்…
கண்ணிரண்டும் ஒளிகொள்ளும்…
காதலித்துப்பார் !

தலையணை நனைப்பாய்
மூன்று முறை பல்துலக்குவாய்…
காத்திருந்தால் நிமிஷங்கள் வருஷமென்பாய்…
வந்துவிட்டால் வருஷங்கள் நிமிஷமென்பாய்…
காக்கைகூட உன்னை கவனிக்காது
ஆனால்…
இந்த உலகமே உன்னை கவனிப்பதாய்
உணர்வாய்…
வயிற்றுக்கும் தொண்டைக்கமாய்
உருவமில்லா உருண்டையொன்று
உருளக் காண்பாய்…
இந்த வானம் இந்த அந்தி
இந்த பூமி இந்த பூக்கள் எல்லாம்
காதலை கவுரவிக்கும் ஏற்பாடுகள்
என்பாய்
காதலித்துப் பார்!

இருதயம் அடிக்கடி
இடம் மாறித் துடிக்கும்…
நிசப்த அலைவரிசைகளில்
உனது குரல் மட்டும் ஒலிபரப்பாகும்…
உன் நரம்பே நாணேற்றி
உனக்குள்ளே அம்புவிடும்…
காதலின் திரைச்சீலையைக்
காமம் கிழிக்கும்…
ஹார்மோன்கள் நைல் நதியாய்ப் பெருக்கெடுக்கும்
உதடுகள் மட்டும் சகாராவாகும்…
தாகங்கள் சமுத்திரமாகும்…
பிறகு
கண்ணீர்த் துளிக்குள் சமுத்திரம் அடங்கும்…
காதலித்துப் பார்!

சின்ன சின்ன பரிசுகளில் சிலிர்க்க முடியுமே…
அதற்காகவேனும் புலன்களை வருத்திப் புதுப்பிக்க முடியுமே…
அதற்காகவேனும்…
ஆண் என்ற சொல்லுக்கும் பெண் என்ற சொல்லுக்கும்
அகராதியில் ஏறாத அர்த்தம் விளங்குமே..
அதற்காகவேனும்…
வாழ்ந்துகொண்டே சாகவும் முடியுமே
செத்துக் கொண்டே வாழவும் முடியுமே…
அதற்காக வேணும்…
காதலித்துப் பார்!

எவன்டி உன்னப் பெத்தான் … கைல கிடைச்சான் செத்தான்

அவசரத்தில் ஆணுக்கானதா, பெண்ணுக்குரியதா என்று கவனியாமல் தவறான கழிவறைக்குள் நுழைந்து விடுவது போன்றது சிம்புவின் திரைப்பாடல்கள். எந்த டாய்லெட்டாக இருந்தால் என்ன… காரியம் நடக்கும்.

இன்னொரு விதத்தில் பார்த்தால் சிம்பு ஒரு ட்ரீம் டெவலபர். அவரைப் போல் பன்முறை சுழற்சிக்குள்ளாக்கக் கூடிய (ரெட்யூஸ். ரீயூஸ். ரீசைக்கிள்) கவி எவரும் இல்லை. நாலு எஃப், எட்டு டி போட்டால் பாடல் தயார். அதையே காலத்திற்கேற்றபடி டெண்டுல்கர், வைரமுத்து, மன்மோகன், ஃபேஸ்புக் என்று எவருக்கும் மாற்றிப் போடலாம்.

கடைசியாக பைந்தமிழ் பா வல்லுநர். சொல்பின்வரு நிலையணி, பொருள் பின்வரு நிலையணி, சொற்பொருட் பின்வரு நிலை அணி எல்லாம் ஒரே செய்யுளில் வருமாறும் புனைகிறார்.

அப்படி ஒரு பாடல் – (படம் :: வானம்)

Oh Baby I feel like flying
Flying up up up in the aaaaaaair
When I Look At You, You Look At Me Like
You Wanna Make Love to me there

உன்னப் பாத்த ஃபெர்ஸ்டு செக்கன்ட்ல என்னக் காணோம்
தேடிப் பாக்கிறன் கண்டபடி நானும்

பாத்த ஃபெர்ஸ்டு செக்கண்ட்லேர்ந்தே என்னக் காணோம்
தேடிப் பாக்கிறன் கண்டபடி நானும்

சத்தியமா எனக்கு நீ வேணாம்
கண்டிப்பா எனக்கு நான் வேணும்

வந்து என்னக் கண்டுபிடிச்சுக் குடு
இல்ல ரொம்ப சிம்பிள் உன்ன எனக்குக் குடு
இல்ல தயவு செஞ்சு ஒரு GUN எடுத்து என்ன சுடு

எவண்டி உன்னப் பெத்தான்
கைல கிடைச்சான் செத்தான்

I Feel Like Kissing You
I Feel Like Touching You
I Feel Like Holding You
I Feel Like Looking Sweet Love To You..

என் ஃபேஸ்புக் ஸ்டேடஸும் நீதான்
என் ட்வீட்டர் ட்வீட்டிங்கும் நீதான்
என் ஸ்கைப் கோலும் நீதான் நீதான்

என் பி பி எம் உம் நீ தான்
என் ஃபேஸ் டைமும் நீதான்
என் ஐ ஃபோன் ஐ பாட் எல்லாமே நீதான்

என் ஐ டியூன்ஸ் ப்ளேலிஸ்டும் நீதான்
அதில் லவ் சோங்கும் நீதான்
அது ப்ளே ஆகிற ஸ்பீக்கர் நீதான்

என் அப்பாவும் நீதான்
என் அம்மாவும் நீதான்
என் சொத்து சுகம் எல்லாமே நீதான்

என் கடவுளும் நீதான்
என் உயிரும் நீதான்
எனக்கெல்லாமே நீதான்

I Feel Like Flying High Oh High Baby Girl
U Know U Make Me Go So Wild Oh Wild
U Baby Girl

உன் பேஸ்ட் ப்ரஷும் நான்தான்
உன் ஷவர்ஜெல்லும் நான்தான்
உன் மானம் காக்கிற மேலாடை நான்தான்

உன் லிப் க்ளொஸும் நான்தான்
உன் ஐ லைனர் நான்தான்
உன் அழகக் கூட்டிற மேக்கப் நான்தான்

உன் டெடி பெயாரும் நான்தான்
உன் பெட் & பில்லொவ் நான்தான்
உன் வீட்டோட நைட் வாட்ச்மான் நான்தான்

உன் நகமும் சதையும் நான்தான்
உன் எலும்பும் நரம்பும் நான்தான்
அது உள்ள ஓடும் ரத்தமும் நான்தான்

உன் ஃப்ரெண்டும் நான்தான்
பாய் ஃப்ரெண்டும் நான்தான்
உனக்கெல்லாமே நான்தான் நான்தான்

Who The F*** is your daddy daddy daddy daddy daddy daddy
if i see him he is just dead body body body body body body body
Who The Fuck is your daddy daddy daddy daddy daddy daddy
if I see him he is just dead body body body body body body body


இப்பொழுது இணையத்தில் கண்ட உல்டா

கலைஞர் சமீபத்துல “அம்மா”வால ஏற்பட்ட மன உளைச்சல்கள கொட்டி சிம்புவோட பாட்டுக்கு தானே வரி எழுதி பாடுறாரு… அதே ட்யூன்ல பாடுங்க..

Oh (Big)Baby I feel like spitting
Spitting up up up in the aaaaaaair
When I Look At You, You Look At Me Like
You Wanna Make fight To Me There

நீ ஜெயிச்ச first செகண்ட்ல என்ன காணும்
தேடிப்பாக்குறேன் தமிழ்நாட்டுல நானும்
நீ ஜெயிச்ச first செகண்ட்லருந்தே என்ன காணும்
தேடிப்பாக்குறேன் சந்து பொந்துல நானும்

சத்தியமா எனக்கு தயாநிதி வேணாம்
கண்டிப்பா எனக்கு கனிமொழி வேணும்
சத்தியமா எனக்கு தயாநிதி வே….ணாம்
கண்டிப்பா எனக்கு கனிமொழி வேணும்

ஒண்ணு எனக்கு தமிழ்நாட்ட குடேய்…
இல்ல ரொம்ப சிம்பிள் ஸ்பெக்ட்ரம் கேச விடேய்
இல்ல தயவு செஞ்சி கனிமொழியயாச்சும் வெளிய விடேய்….

எவண்டி உன்ன பெத்தான் பெத்தான் பெத்தான் பெத்தான்
கைல கெடச்சா செத்த்தான் செத்தான் செத்தான் செத்தான்

எவண்டி உன்ன பெத்தான் பெத்தான் பெத்தான் பெத்தான்
அவன் கைல கெடச்சா செத்தான் செத்தான் செத்தான்…

மூஞ்சப் பாரு… i feel like….
மூஞ்சப் பாரு… i feel like….
மூஞ்சப் பாரு.. i feel like….

I FEEL LIKE …. BITING YOU
I FEEL LIKE …. PUNCHING YOU
I FEEL LIKE …. BEGGING YOU
I FEEL LIKE …. FUCKING YOU

என் head ache um நீதான், என் action 500 um நீதான்
என்னப் புடிச்ச 71/2 நீ தான் ((hi pitch))
என் sleeping pills um நீதான், என் power glass um நீதான்
நான் தினமும் போடுற sugar free yum நீதான் (hi pitch)
என் கலைஞர் காப்பீடு நீதான் என் சமச்சீர் கல்வி நீதான்
எனக்கு அடிச்ச ஆ..ப்பும் நீதான்
என் கச்சத்தீவும் நீதான்… என் மஞ்ச துண்டும் நீதான்
என் உண்ணா விரத போரும் நீதான்

என் enemy யும் நீதான். மடி கணிணியும் நீதான்
அட எல்லாமே நீதான்…. நீதான்…. நீதான்… நீதான்…ஆங்….ஆங்… ஆங்,… ஆங்… அஹ அஹ அஹ அஹ..ஆங்ங்ங்ங்…..

மூஞ்சப் பாரு… I FEEL LIKE…

Who the “M..” is your Mummy Mummy Mummy Mummy
நீ என்னை ஆக்கிட்ட Dummy Dummy Dummy Dummy

who the “D..” is your teacher teacher teacher teacher
நீ என்ன படுத்துற torture torture torture torture….

எவண்டி உன்ன பெத்தான்
என் கைல கெடச்சா செத்தான்..
எவண்டி உன்ன ……….த்தான்……. த்தான்……. த்தான்….
அவன் கைல கெடச்சா செத்தான் செத்தான் செத்தான்

வீட்டுப்பாடமாக கீழ்க்கண்டவற்றுக்கு பாடல் எழுதவும்:

  1. சச்சின் டெண்டுல்கர், 100
  2. கவிப்பேரரசு வைரமுத்து, நோபல் இலக்கியம்
  3. சாரு நிவேதிதா, ஞானபீடம்
  4. ஃபேஸ்புக், ஐபிஓ
  5. சோனியா காந்தி, அன்னா ஹசாரே
  6. ரூபர்ட் முர்டாக், பி ஸ்க பி
  7. கேசி ஆண்டனி, சி என் என்
  8. பராக் ஒபாமா, பற்றாக்குறை பொக்கீடு
  9. நெட்ஃப்ளிக்ச், யூ ட்யூப்
  10. பத்மநாபசாமி, புதையல்

அமெரிக்காவில் திராவிட கலாச்சாரம்

மதியம் பதினொன்றே முக்கால்.

‘இன்று எங்கே சாப்பிடலாம்?’

‘மினர்வா போகலாமா?’

‘சரி’

நானும் அவளும் என்னுடைய காரில் பயணிக்க ஆரம்பித்தோம்.

‘ஏதாவது இந்தியப் பாட்டு போடேன்’

கொஞ்சம் தர்மசங்கடம். ஐ-பாடில் ‘ஆடுங்கடா என்ன சுத்தி’, ‘கெடா காறி’; தூக்கத்தை விரட்டும் பாடல்கள் எனக்கு உவப்பானவை. அதிர்ஷ்டவசமாக சிடி-யில் ரங்கீலா இருந்தார்.

‘அனிமல் கிங்டம் மாதிரி ம்யூசிக் ஆக இருக்கே? காட்டுவாசி தீமா?’

இல்லை என்று மறுத்தேன். அமெரிக்காவில் இந்திய ப்ரெட்டும், சிக்கன் டிக்கா மசாலாவும் பிடித்த தக்கினியூண்டு இடத்தை, ஆஸ்கார் ரெஹ்மான் கூட பிடிக்க முடியாது. சாரு, ஷாஜி சொல்வதிலும் பாயின்ட் இருக்கிறது.

வழக்கம் போல் பஃபே தேர்ந்தெடுத்தேன்.

அமெரிக்காவில் மதுவருந்தும் பப்களில் மாபெரும் தொலைக்காட்சி திரை இருக்கும். நாலு டிவியும் நாற்புறம் நிறைந்திருக்கும். எல்லாவற்றிலும் ஏதாவது விளையாட்டு காண்பிப்பார்கள். அவர்களுக்குப் போட்டியாக இந்திய உணவகங்களில் பெரிய திரை வைக்கிறார்கள்.

இந்திப் பாடல், தெலுங்கு ஆட்டம், தமிழ் குத்து என்று ஒருங்கிணைப்புடன் தேசிய உணர்வு பொங்க விடுகிறார்கள்.

‘யூ ட்யூபில் உங்க சண்டைக் காட்சி பார்த்தேன். பஞ்சதந்திரக் கதை மாதிரி மேஜிக்கலா இருந்தது. மலைக்கு நடுவில் கயிற்றுப் பாலம். நட்ட நடுவில் ஒருத்தன் ஆக்ட்ரெஸோட விரலப் பிடிச்சுண்டு இருக்கான். இன்னொருத்தன் அவனோட காலைத் தழுவித் தொங்கிண்டு இருக்கான். தீடீர்னு தன்னோட லெக் பீஸை கட் பண்ணிக்கிறான். பாலத்தை அறுத்து பறந்து போய் ஹீரோயினை அந்தப் பக்கம் விடறான். ரொம்ப காமெடியா இருந்துச்சு.’

‘இராவணன்?’

‘தெரியல… ரெண்டு மூணு பார்த்தேன்! எல்லாமே ஒரே மாதிரி இருந்தது. வெரி கன்ஃப்யூஸிங்.’

மணி ரத்தினத்தின் வழுக்கலுக்கு சுகாசினியே காரணம் என்பதை சுருக்கமாக விளக்கினேன்.

‘இதென்ன சாங்? இஸ் இட் தி எக்ஸ்ப்ளாயிடெடிவ் சீக்வென்ஸ்?’

“என் பேரு மீனாகுமாரி” போய்க் கொண்டிருந்தது. ‘அதென்ன exploitative song?’

‘நீதானே சொல்லிக் கொண்டிருந்தாய். ரொமான்ஸ், சோகம், வீரம், ருத்ரம் போன்ற நவரசங்களும் ஒவ்வொரு படத்தில் எட்டு பாடலாக அமையும் என்று… அது போல் இது போல் டான்சிங்?’

‘இது குடும்பப் படம். இது சூப்பர் மேன் பற்றியது. இந்தியாவில் “தெய்வம் மனுஷ ரூபம்” என்னும் தொன்மத்தை பின்பற்று முருகரை அடியொற்றி “கந்தசாமி” என்று யூ செர்டிஃபிகேட்… அதான் G for General Audiences அத்தாட்சி முத்திரையுடன் வெளியான படம்.’

இந்த முறை அவள் ம்ம்ம்ம்.

‘இதென்ன ரோட்டில் யாருமே இல்லை. வழிப் போக்கர்கள் கூட டீக்கா இருக்காங்களே!’

‘கஜினி; அவனுக்கு அஞ்சு நிமிஷம்தான் உலகம் நினைவில் இருக்கும். அதன் பிறகு மறந்து போகும். மெமண்டோ பார்த்திருப்பியே? அதன் முன் தோன்றிய தமிழன். நீ குந்தர் கிராஸ் மாதிரி. ரொம்பக் கேள்வி கேட்கிறே. உனக்கு ஒரு சமூகமே நொந்து நூடில்ஸாய் இருக்குனு புரிய வாய்ப்பேயில்ல. கலைகள் எங்க நாட்டில் இருக்கக் கூடாதா? உனக்கு இது சதைக் காட்சிசாலை. எங்களுக்கு நிர்வாணா!’

தெம்பாய் இன்னொரு நாப்கின் எடுத்து துடைத்தெறிந்தோம்.

Ravanan movie with Kamba Ramayanam

கம்பராமாயணம் என்பதற்கு பதிலாக கம்பராவணாயணம் என்பதே பொருத்தமோ என்பது போல், கம்பன், வில்லனைப் புகழ்ந்து தள்ளியிருக்கிறார். எனவே, மணி ரத்னத்திற்கும் ஆர் எஸ் மனோகருக்கும் இன்ஸ்பிரேசன் கம்பர் (அல்லது வான்மீகி?)

ராவணனின் வீரத்தைப் புகழும் கம்பர்:

காளி போன்றனன் இராவணன்; வெள்ளிடைக் கலந்த
பூளை போன்றதப் பொருசினத் தரிகள்தம் புணரி

மலர் மென்மையானது. [ஐஸ்வர்யா ராயை சொல்லவில்லை]. பூளைப்பூ காற்றால் சிதறியோடுவதை, வீரர் முன் வீரமிலாப் படை சிதறியோடுவதற்கு உவமையாக்குகிறார் கம்பர்.

இராமனை இகழும் இராவணன்:

தேறுதி; நாளையேயல் விருபது திண்டோள் வாடை
வீறிய பொழுது, பூளை வீயென வீவன்.

கரன் [கனகவேல் காக்க அல்ல] போன்ற தளபதிகள் இறந்தார்கள் என்னும் சூர்ப்பனகையின் சொல்லைக் கேட்டவுடன் கிளர்ந்தெழுந்த சினத்தன்மை:

ஆழித்தீயில் நெய் ஊற்ற ஆழித்தீ கனல்தலென இராவணன் சினந்தான்

மலையில் தோன்றிப் பாய்ந்த நீர், ஆறாக ஓடிக் கடலோடு கலந்தது. – ப்ருதிவிராஜில் தொடங்கும் காதல், விக்ரமில் சங்கமம் ஆகிறது.

தொடக்கத்தில் ஒரே இடத்தில் தோன்றிப் பல இடங்களில், பல்வேறு விதமான அளவுகளிலும் வடிவத்திலும் பாய்ந்து, வழிநெடுகிலும் வெவ்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டு, இறுதியில் கடலில் கலந்து, வேறுபாடின்றிக் கலக்கும் உயிர்களின் தன்மைக்கு விளக்கமாக இரு தரப்பினரும் உரைப்பதை ஒத்து இருந்தது.

கல்லிடைப் பிறந்து, போந்து, கடலிடைக் கலந்த நீத்தம்,
எல்லை இல் மறைகளாலும் இயம்ப அரும் பொருள் ஈது’ என்னத்
தொல்லையில் ஒன்றே ஆகி, துறைதொறும், பரந்த சூழ்ச்சிப்
பல் பெருஞ் சமயம் சொல்லும் பொருளும்போல், பரந்தது அன்றே.

ராமன் உலாவரும் காட்சியைக் கண்ட மிதிலைப் பெண்களின் நிலையைக் கூறுமிடத்தில், இராமனையே முழுமையாகப் பார்க்காதவர்கள் என்னும் நையாண்டி:

தோள்கண்டார் தோளேகண்டார் தொடுகழற் கமலமன்ன
தாள்கண்டார் தாளே கண்டார் தடக்கைக்க ண்டாரும் அஃதே
வாள் கொண்ட கண்ணார் யாரே வடிவினை முடியக் கண்டார்
ஊழ்கண்ட சமயத்து அன்னார் உருவு கண்டாரை ஒத்தார்

சீதையைப் பற்றி கம்பர் எப்படி வர்ணிக்கிறார்?

  • மாதரார் வடிவு கொண்ட, நஞ்சு தோய் அமுதம்
  • சீதை என்று ஒரு கொடுங் கூற்றம்
  • சனகி எனும் பெரு நஞ்சு உன்னைக் கண்ணாலே நோக்கவே, போக்கியதே உயிர்;

போர்க்களத்தில் சமையல் நடக்கும் பாடலில், யானைகளின் மேலிடும் தவிசும், அம்பும், தேரும், வில் முதலிய படைகளும் — கொடிய விறகுகளாய் அமைய, இறந்த வீரர்களுடைய சினமிக்க கண்களாகிய தீயில் பிணங்கள் வெந்து அவை பேய்கட்கு உணவாகின்றன:

சிந்துரங்களின் பருமமும், பகழியும், தேரும்,
குந்து வல் நெடுஞ் சிலை முதல் படைகளும், கொடியும்,
இந்தனங்களாய், இறந்தவர் விழிக் கனல் இலங்க,
வெந்த வெம் பிணம் விழுங்கின, கழுதுகள் விரும்பி

வீராவின் [படத்தில் விக்ரம்] மற்றொரு பாதி அவனின் தங்கை. அவளுக்கு நடந்த வன்முறை பிறரால் அன்று. இராவணனாலேயே நிகழ்ந்தது. தோன்றாதவை, அல்லது தோன்றியவை அவனைத் தவிர வேறொன்றும் இல்லை. அவன் கொலை செய்கிறான்; அல்லது வாழவைக்கிறான். பற்பலவற்றைப் படைத்த பிறகும் அவன் மட்டுமே எச்சம். ஊரார் எல்லாம் அவனின் தோற்றங்களே. பல்வேறு வகைப்பட்ட இவற்றின் அழிவிற்குப் பிறகும், அவனே இருப்பான்:

வில்லும் வேலும்வெங் குந்தமும் முதலின விறகாய்
எல்லு டைச்சுட ரெனப்புக ரெஃகெலா முருகத்,
தொல்லை நன்னிலை தொடந்துபே ருணர்வன்ன தொழிலச்
சில்லி யுண்டையிற் றிரண்டன படைக்கலச் சாலை

எம்.ஃபில்லோ, முனைவரோ ஆகுமளவு மணி ரத்தினமும் கம்ப ராமாயணத்தை அடியொற்றியே ‘இராவணன்’ அமைந்திருக்கிறார்.

நாயகனின் ‘அந்தி மழை மேகம்’ உங்களுக்குப் பிடிக்குமா? கிழவிகள் கொட்டமடிக்கும் ‘ருக்குமணி ருக்குமணி’ ரீங்காரமிடுகிறதா? ‘திருடா திருடா’வின் லாஜிக்கின்மை கவருகிறதா? உங்களுக்கு இந்தப் படம் பிடித்துப் போகும் வாய்ப்பிருக்கிறது.

ப்ரியாமணியுடையது, பருத்தி வீரனில் ஏற்கனவே செய்யப்பட்ட கதாபாத்திரம்! பிருத்விராஜைப் பார்த்தால் ‘டூயட்’ ரமேஷ் அர்விந்த் மாதிரி ஐஸ்வர்யாவோடு பொருந்தாமை!! வீரப்பன், நக்சல்பாரி, விடுதலைப் புலிகளின் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன், ‘பேராண்மை‘ என்றெல்லாம் +2 படிக்கும் மாணக்கனாக பக்கம் பக்கமாக பதிபவரா நீங்கள்? உங்களுக்கு இந்தப் படம் நிறையவே பின்னூட்ட வருகை பிராப்திரஸ்து ஆசீர்வதிக்கும்.

அவ்தார் போன்ற கொடுமையை மெச்சும் ஹாலிவுட் அர்ச்சகரா? ‘ஆயிரத்தில் ஒருவன்’ என்று பச் பச்சென்று பறித்த சாலட் கொறிப்பாளரா? உயிர்மை போன்ற நவீன குமுதங்களில் இடம்பிடிக்க விழைபவரா? உங்களுக்கும் உள்ளேன் அய்யா போட்டுக் கொள்ளலாம்.

அங்காடித் தெரு’ போன்று கருப்பு வெள்ளையாக எல்லா கதாபாத்திரமும் உங்களுக்கு உலா வர வேண்டுமா? ‘மெகாதீரா‘ போன்று அல்டாப்பு நிறைந்த மாய்மால ரசிகரா? ‘Shutter Island‘ போன்று குப்பாச்சு, குழப்பாச்சு மூக்குச்சுற்றி மூச்சுத்திணறல்களின் விரும்பியா? ஐ எம் வெரி சாரி மேடம். வெயிட் ஃபார் ‘யாவரும் கேளிர்’.

Vijay & Anushka in Vettiakkaaran: Karikalan Kaala Pola

கரிகாலன் கால போல கறுத்திருக்குது குழலு
குழல் இல்ல குழல் இல்ல தாஜ்மகால் நிழலு

சேவலோட கொண்டை போல செவந்திருக்குது உதடு
உதடு இல்ல உதடு இல்ல மந்திருச்ச தகடு

ஏய் பருத்தி பூவ போல பதியுது உன் பாதம்
பாதம் இல்ல பாதம் இல்ல பச்சரிசி சாதம்

ஏய் வலம்புரி சங்க போல வழுக்குது உன் கழுத்து
கழுத்து இல்ல கழுத்து இல்ல கண்ணதாசன் எழுத்து

ஏய் பாதை வளைவு போல உள்ளதடி மூக்கு
மூக்கு இல்ல மூக்கு இல்ல முந்திரி முந்திரி கேக்

ஊதி வச்ச பலூன் போல உப்பிருக்கு கண்ணம்
கண்ணம் இல்ல கண்ணம் இல்ல வெள்ளி வெள்ளி கிண்ணம்

மருதாணி கோலம் போட்டு மயக்குது தேகம்
தேகம் இல்ல தேகம் இல்ல தீ புடிச்ச மேகம்

மாராப்பு பந்தலிலே மறச்சி வெச்ச சோலை
சோலை இல்ல சோலை இல்ல ஜல்லிக்கட்டு காளை

கரிகாலன் கால போல கறுத்திருக்குது குழலு

கண்ட உடன் வெட்டுதடி கத்திரிக்கோலு கண்ணு
கண்ணு இல்ல கண்ணு இல்ல கிறங்கடிக்கிற ஜீன்னு

பத்த வெச்ச மத்தாப்பு போல மினுமினுக்குது பல்லு
பல்லு இல்ல பல்லு இல்ல பதிச்ச வைர கல்லு

சுறுக்கு பைய போல இருக்கு இடுப்பு
இடுப்புல இடுப்பு இல்ல எந்திர மடிப்பு

கண்ணு பட போகுதுன்னு கண்ணத்துல மச்சம்
மச்சம் இல்ல மச்சம் இல்ல நீ விட்டு வச்ச மிச்சம்

Vijay’s Vettaikaaran: Nan Adicha Thanga mata

நான் அடிச்சா தாங்க மாட்ட
நாலு மாசம் தூங்க மாட்ட
மோதி பாரு வீடு போய் சேர மாட்ட

நான் புடிச்சா உடும்புப் புடி
நான் சிரிச்சா வான வெடி
நான் பாடும் பாட்டுக்கு தோள் பறை நீ

ஏய் வாழு வாழு வாழ விடு
வாழும் போதே வானைத் தொடு

வம்பு பண்ணா வாளை எடு
வணங்கி நின்னா தோளைக் கூடு

உணவு உடை இருப்பிடம்
உழவனுக்கும் கிடைக்கணும்
அவன் அனுபவிச்ச மிச்சம் தான் ஆண்டவனுக்கு படைக்கணும்

ஆலமர பள்ளிக்கூடம் ஆக்ஸ்போர்டா மாறனும்
நீ தாய் மொழியில் கல்வி கற்று தமிழ்நாட்டை உயர்த்தனும்

வாய் மூடி வாழாதே
வீண் பேச்சு பேசாதே

காலம் கடந்து போச்சுதுன்னு கவலை பட்டு ஏங்காதே
கனவு ஜெயிக்க வேணுமுனா கண்ணை மூடி தூங்காதே

குத்துங்கடா குத்து என் கூட சேர்ந்து குத்து

வரட்டி தட்டும் செவத்துல வேட்பாளர் முகமடா
காத்திருந்து ஓட்டு போட்டு கறுத்து போச்சு நகமடா

புள்ள தூங்குது இடுப்புல
பூனை தூங்குது அடுப்புல
நம்ம நாட்டு நடப்புல யாரும் இத தடுக்கல

தாய் பேச்சை மீறாதே
தீயோர் சொல் கேட்காதே

ஏதோ நானும் சொல்லிப்புட்டேன்
ஏத்துக்கிட்டா ஏத்துக்கோ
சொன்னதெல்லாம் உண்மையினா உன்ன நீயே மாத்திக்கோ

En Uchi Mandaila: விஜய் & அனுஷ்கா – வேட்டைக்காரன்

என் உச்சி மண்டையில சுர்ங்குது
உன்ன நான் பாக்கையில கிர்ங்குது
கிட்ட நீ வந்தாலே விர்ங்குது
டர்ங்குது
டர்ர்ர்ர்ர்ர்ர்

கை தொடும் தூரம் காச்சவளே
சக்கரையால செஞ்சவளே
என் பசி தீர்க்க வந்தவளே
சுந்தரியே

தாவணி தாண்டி பாத்தவனே
கண்ணால என்ன சாச்சவனே
ராத்திரி தூக்கம் கெடுத்தவனே
சந்திரனே

என் உச்சி மண்டையில சுர்ருங்குது
உன்ன நான் பாக்கையில கிர்ருங்குது
கிட்ட நீ வந்தாலே விர்ருங்குது
டர்ருங்குது
டர்ர்ர்ர்ர்ர்ர்ரு

மீயா மீயா பூனை
நான் மீசை வச்ச யானை
கள்ளு கடை பானை
நீ மயக்குற மச்சான

வில்லு கட்ட மீசை
என் மேல பட்டு கூச
ஆட்டுக்குட்டி ஆசை
உன் கிட்ட வந்து பேச

மந்திரக்காரி மாய மந்திரக்காரி
காகிதமா நீ இருந்தா
பேனா போல நான் இருப்பேன்
ஒவியமா உன் உருவம் வரைஞ்சிடுவனே

உள்ளங்கையா நீ இருந்தா
ரேகையாக நான் இருப்பேன்
ஆயிலுக்கும் உன் கூட இணைஞ்சிருப்பனே

என்னுச்சி மண்டையில் சுர்ர்ர்ர்ர்ர்ர்
உன்னை நான் பார்க்கையில கிர்ர்ர்ர்ர்ர்
கிட்ட நீ வந்தால் விர்ர்ர்ர்ர்ர்
டர்ர்ர்ர்ர்ர்ர்

அஞ்சு மணி பஸ்
நான் அதை உட்டா மிஸ்
நான் ஆத்தா வுட்ட புஸ்
ஒரே ஒரு கிஸ்
நீ ஒத்துக்கிட்டா யெஸ்

கம்மாங்கரை காடு
நீ சுட்ட கருவாடு
பந்திய நீ போடு
நான் வாரேன் பசியோடு

மந்திரக்காரா மாய மந்திரக்காரா
ஏய் அப்பாவியா மூஞ்சிய வெச்சு
அங்க இங்க கைய வச்சு
நீயும் என்னை பிச்சு தின்ன கேக்கரியேடா

துப்பாக்கியா மூக்கை வச்சு
தோட்டா போல மூச்ச விட்டு
நீய்ம் என்னை சுட்டு தள்ள பாக்கரியேடி

Puli Urumudhu: Vijay’s Vettai Kaaran

புலி உறுமுது புலி உறுமுது
இடி இடிக்குது இடி இடிக்குது

கொடி பறக்குது கொடி பறக்குது
வேட்டக்காரன் வரதப் பாத்து

கொல நடுங்குது குல நடுங்குது
துடிதுடிக்குது துடிதுடிக்குது

நில குலையுது நெல குலையுது
வேட்டைக்காரன் வரதைப் பார்த்து

பட்ட கத்தி பளபளக்க
பட்டி தொட்டி கலகலக்க

பறந்து வரான் வேட்டைக்காரன்
பாமரனின் கூட்டுக்காரன்

நிக்காம ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு
ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு

வரான் பாரு வேட்டைக்காரன்

யார் இவன் யார் இவன் யாரிவன்
அந்த அய்யனார் ஆயுதம் போல் கூர் இவன்

இருபது நகங்களும் கழுகுடா
இவன் இருப்பதே உலகுக்கு அழகுடா

அடங்க மறுத்தா உன்ன அழிச்சிடுவான்
இவன் தமிழதான் மொண்டு தினம் குளிச்சிடுவான்

இவனோட நியாயம் தனி நியாயம்
அட இவனால அடங்கும் அநியாயம்

போடு அடியப்போடு போடு அடிய போடு
டக்கரு டங்கரு டக்கரு டக்கர்னா
போடு டக்கரு டங்கரு டக்கரு டக்கர் னா

யார் இவன் யார் இவன் யார் இவன்
ஒத்தையாக நடந்து வரும் ஊர் இவன்

சினத்துக்கு திறந்திட்ட சிவனடா
அட இவனுக்கு இணை இங்கு எவனடா

இவனுக்கு இல்லடா கடிவாளம்
இவன் வரலாற்ற மாற்றிடும் வருங்காலம்

திரும்பும் திசையெல்லாம் இவன் இருப்பான்
இவன் திமிறுக்கு முன்னால எவன் இருப்பான்

போடு அடிய போடு போடு அடிய போடு

Microsoft Excel நாமாவளி

அசல்: Kandasamy: Ithellaam Dooppu; Kanthasamythaan Taappu

சி ஷார்ப்பு, டாட் நெட்டு, ஏயெஸ்ப்பி, ஜாவா, பீன்சு, அபாச்சி, லீனக்ஸு, சீக்வலு, ஆரக்கிளு, டிபீட்டூ, வெப்ஸ்பியரு, டிப்கோ, சாப்பு, பீப்பிள்சாஃப்டு, பாஸ்கல், பியெச்பி, பெர்ல், ஐஐஎஸ்ஸு, பிஸ்டாக்கு, அஷூரு, கோ, எர்லாங்கு, அடோபு, ப்ளாசு, அஜாக்சு, எச்டியெமலு, எக்செமல்லு, அதா, சி, போர்ட்ரானு, அசெம்பிளி, வோர்டு, யூனிக்சு, கோபாலு, ட்விட்டரு, பேஸ்புக்கு, பயர்பாக்சு, சிப்ளசுபிளஸு, 68330, 8085…

இதெல்லாம் டூப்பு, எக்ஸெல்தான் டாப்பு ஏஏஏ
இதெல்லாம் டூப்பு, எக்ஸெல்தான் டாப்பு

Naan Kadavul – Lyrics

bala-arya-jeyamohan-cinema-films-reviews-naan-kadavul-stills-030ஒரு காற்றில் அலையும் சிறகு
எந்த நேரம் ஓய்வு தேடும் ?

கண்ணில்லாது காணும் கனவு
எதை தேடி எங்கு போகும் ?

எங்கெங்கும் இன்பம் இருந்தும்
உன் பங்கு போனதெங்கே ?

இது ஏனென்று பதில் யார் சொல்லுவார்
ஒரு காற்றில் அலையும் சிறகு..

யார்க்கும் போலொரு அன்னை தந்தை
உன‌க்கும் இருந்த‌து உண்டு
யார்க்கும் போலொரு தேகம் தாகம்
உனக்கும் வளர்ந்தது இங்கு
யார்க்கும் போலே விழிகள் இருந்தும்
உலகமோ இருளில் !

ஒளியைப் போலே ஓர் துணை
வந்து சென்ற‌ துன்பம் யார்க்கும் உண்டோ ?
ஒரு காற்றில் அலையும் சிறகு..

வீதி என்றொரு வீடும் உண்டு
உனக்கது சொந்தமென்று
வானம் என்றொரு கூரை உண்டு
விழிகளும் அறியாது

வேலியில்லா சோலைக்காக‌
வந்ததொரு காவல்
க‌ண்க‌ள் கொண்ட தெய்வ‌மும்
காவ‌லையும் கொண்டு சென்ற‌தேனோ ?
ஒரு காற்றில் அலையும் சிறகு..
bala-arya-movies-cinema-films-reviews-naan-kadavul-stills-003
நன்றி: Song of the Day: kaNNil paarvai from naan kadavuL: “‘கண்ணில் பார்வை’ ஷ்ரேயா கோஷல் பாடிய பாடல்.”

oOo

கண்ணில் பார்வை போன போதும்
கண்ணில் ஈரம் ததும்பும் ததும்பும்
கண்ணில்லாத பேரைக் கண்டால்
கனாக்கள் ஒதுங்கும் ஒதுங்கும்
கனவில் கூட இன்பம்
வராமல் இந்த ஜென்மம் !
ஓ தெய்வமே ! இது சம்மதமோ ?
bala-arya-movies-cinema-pooja-reviews-naan-kadavul-stills-028
முந்தைய பதிவு: எழுத்தாளர் ஜெயமோகன்: நான் கடவுள்

மேலும்: Amma Un Pillai naan – Nan Kadavul பாடல் : இசை « Karthik’s Perception
bala-arya-movies-cool-films-reviews-naan-kadavul-stills-005