Tag Archives: திரைப்படம்

Bheema – Audio Lyrics

Host unlimited photos at slide.com for FREE!
Host unlimited photos at slide.com for FREE!
Host unlimited photos at slide.com for FREE!
Host unlimited photos at slide.com for FREE!
Host unlimited photos at slide.com for FREE!
Host unlimited photos at slide.com for FREE!

2007 – பேசப்பட்ட தமிழ் திரைப்படங்கள்

மசாலா பத்து

  1. போக்கிரி – தூள். மகேஷ் பாபு மலை என்றாலும், மடுவாகாத விஜய்.
  2. அழகிய தமிழ்மகன் – ரஜினிக்குப் பிறகு மசாலை ஊச வைக்காத நம்பிக்கை நட்சத்திரம் விஜய் முதல் முறையாக இரு வேடத்தில் தோன்றினார்.
  3. தாமிரபரணி – கடகட காட்சி நகர்த்தல். நேர்த்தியான விஷால். சன் டிவி சீரியலின் சாமுத்ரிகா நாயகி. சந்திரமுகி அல்லாத பிரபு.
  4. கண்ணாமூச்சி ஏனடா – பெண்களுக்கு பிடித்த மாதிரி படம் எடுக்க இன்னும் முன்வருகிறார்களே! பார்க்கலாம்… பாராட்டலாம்.
  5. பருத்திவீரன் – ஜாலியான கதையில் கடைசி அரை மணி ரணகளம்.
  6. நான் அவனில்லை – ஸ்னேகா திருஷ்டிப் பொட்டாக இருந்தாலும் ஜீவன் பிழைக்கவைக்கிறார்.
  7. அம்முவாகிய நான் – பார்த்திபனுக்கு என்றும் பாயசம், செக்ஸ் அன்றும் விற்றது; இன்றும் சதை சக்கை போடுகிறது.
  8. கிரீடம் – இளைய தளபதிக்கு மட்டும்தானா ரீமேக்?
  9. பில்லா – மீண்டும் வறட்சி; இன்னொரு ரீமேக்.
  10. பச்சைக்கிளி முத்துச்சரம் – மொழிமாற்றம் என்ற முறையில் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

வித்தியாச பத்து

  1. உன்னாலே உன்னாலே – வசனத்தில் பன்ச்; துள்ளலில் தங்கச்சி கஜோலுக்கு அக்கா; ‘ஜெய’த்திற்கு பின் மீண்டும் சதா நடிப்பு.
  2. எவனோ ஒருவன – சாது மிரண்டால்; கல்கி புருஷன்.
  3. ஒன்பது ரூபாய் நோட்டு – சிவாஜி கணேசனுக்கு போட்டியாக நடிப்பும் சோகமும்.
  4. ஓரம்போ – சென்னை ஆட்டோக்களும் ஆட்டோ சார்ந்த பிரதேசங்களும்.
  5. கற்றது தமிழ் – ஆசைப்படுவதை படிப்பதை விட ஆசைப்பட்டது கிடைக்குமாறு படிக்க சொன்ன படம்
  6. கல்லூரி விஸ்வாமித்திரர் வாயால் பிரும்மரிஷி பட்டம்
  7. லீ – படம் நல்லா இருக்காமே?
  8. சென்னை 600028 – படம் நன்றாக இருக்கிறது
  9. சத்தம் போடாதே – வசந்த்
  10. பொல்லாதவன் – பார்க்கவேண்டும்

விட்டுப்போனவை

பயமுறுத்தியவை

  1. மிருகம் – சலனம் செய்யவேண்டுமென்றால் ஆவணப்படமாவது எடுக்கத் தெரிந்திருக்கவேண்டும்
  2. வீராசாமி – உடலுக்கும் உருவத்துக்கும் ஏற்ற பாத்திரம் எடுக்கத் தெரியவேண்டும்
  3. ஆழ்வார் – இயக்குநரை தேர்தெடுக்கத் தெரியவேண்டும்
  4. குற்றப்பத்திரிகை – தணிக்கை அரசியல் தெரிந்திருக்கவேண்டும்
  5. தீ நகர் – கரண் பொருத்தமாக செய்கிறாரே என்னும்போது கொம்புசீவுபவர்களை அடக்கத் தெரியவேண்டும்
  6. தீபாவளி – ஜெயம் ரவிக்கு தெரிந்ததெல்லாம் மறுசுழற்சி; எதற்கு சொந்த முயற்சி?
  7. மாயக்கண்ணாடி – சேரன், எஸ்,ஜே. சூர்யாவுக்கு எல்லாம் இயக்குநர் சரக்கு தீர்ந்தாச்சா?

உதவிய பதிவுகள்:
சண்டே சினிமா :: ஃப்ளாஷ் பேக் 2007 – மனோஜ்கிருஷ்ணா

Tamil Cinema 2007 – Top Films, Movies, Flashback, Stars: Dinamalar

பார்த்த படங்கள்

1. அழகிய தமிழ்மகன்: கடைசி அரை மணி நேரம் பார்க்க முடியாதபடிக்கு சில நிர்ப்பந்தங்கள். மற்றபடி, பார்த்தவரைக்கும், விஜய் ரசிகர்களுக்கு தேவையான அம்சங்கள் என்று கோவி கண்ணன் சொல்வது போல் பலவும் இருப்பதால், ரசிக்கவைத்து ஈர்த்தது.

2. சக் தே இந்தியா: ரொம்ப ரொம்ப நல்ல படம். இந்த மாதிரி ஷாரூக் முயற்சிகள் மிகப் பெரிய வெற்றி அடைய வேண்டும். விறுவிறுப்பான ஹாக்கி ஆட்டங்கள். உணர்ச்சி பொங்கும் திரைக்கதை, வசனம். ஹீரோயிஸம் இல்லாத நாயகன்.

3. ஈ.டி.: எத்தனையோ முறை பார்த்திருந்தாலும், ஸ்டீவன் ஸ்பீல்பெர்குக்காகவும் அந்த அன்னியருக்காகவும் மீண்டும் குடும்பத்துடன் மகிழவைத்த படம்.

The Great Debaters – Quote

You have to do what you have to do in order to do what you want to do.

விரும்பியதை நிகழ்த்துவதற்கு என்ன செய்யவேண்டுமோ அதை நிறைவேற்ற வேண்டும்.

மொழியாக்கம் சிலாக்கியமில்லை. டென்சல் சொன்ன மூல வசனத்தில் வேகம் இருக்கிறது. உணர்ச்சி இருக்கிறது.

டென்சலுக்கு இயக்குநராக ஆசை. சேரனுக்கு நடிக்க ஆசை. எல்லாம் உடனடியாகவா வந்துவிடுகிறது?

Muthu – Movie Screenplay bits & pieces

மீனா: வேதனை. அவமானம், வெட்கம்!

பாண்டிய மன்னனாக வடிவேலு: ஆமா… இது என் டயலாக் இல்ல?

மன்னனுடன் கூட வந்திருக்கும் மந்திரிகள்: டயலாக்க ரிப்பீட் பண்ணாத்தான் ஜெயிக்க முடியும்.

மீனா: அழகு ராணி; அதிரூப சுந்தரி; ஆடவர் மயங்கும் அற்புத மேனி கொண்ட இந்த அரசிளங்குமரிக்கு, சுடுகாட்டில் எரியும் கொள்ளியில் இருந்து சூடு தாங்க முடியாமல் எழுந்தோடி வந்த பிணம் போல் இருக்கும் இவனா எனக்கு மணமகன்?

பார்வையாளன் ரஜினி: ஆ…ஆச்சு (தும்மல் போடுகிறார்

மீனா கடுப்பாகிறார்

மீனா:  என் கடைக்கண் பார்வை பட்டால் படைபலம் கொண்ட மன்னர் கூட்டம் அனைத்தும் நாடு மறந்து நகரம் மறந்து என் பின்னால் வர தயாராக இருக்கும்போது… என்னை நாடி வந்த பேடியே!

ரஜினி மீன்டும் பெருந்தும்மல்.

மீனா:  என்னை நாடி வந்த பேடியே! இந்த பூலோகத்தில் மட்டுமல்ல. ஏழேழு லோகம் சுற்றிவந்தாலும் உன்னை ஒரு பைத்தியக்காரி கூட மணந்து கொள்ள மாட்டாள். ஹ்ம்ம்ம்… அமாவாசைக்கு பௌர்ணமி மேல் ஆசையா?

Rajni continues his lengthy preludes to and the sneezing process itself.

மீனா:  யோவ்! என்னா? விளயாட்டா இருக்கா? வந்ததில் இருந்து பார்க்கிறேன்… சும்மா தும்மிக்கினே இருக்கே!

ரஜினி அப்பாவியாய் சுற்றுமுற்றும் பார்க்கிறார்.

மீனா:  யோவ்… உன்னத்தான் சொல்றேன்.

காந்திமதி: ரெங்கநாயகி… வேண்டாம்! பேசாமல் இரு.

மீனா: நீங்க சும்மா இருங்க அக்கா! அப்பத்திலிருந்து நானும் பார்த்துட்டே இருக்கேன். தும்மிக்கிட்டே இருக்கியே!? என்ன நெனச்சுட்டு இருக்கே உன் மனசில்?

ரஜினி: ஏம்ப்பா… நாட்டில மனுசன் தும்மினாக் கூடவா தப்பு?

மக்கள்: கோரஸாக அதானே?!

மீனா: தும்மினா ஒண்ணும் தப்பில்லைய்யா…ஆனா! இங்க ஒருத்தி அழகா நடிச்சுட்டு இருக்கும்போது டிஸ்டர்ப் பண்ற மாதிரி தும்முறியே… அதான் தப்பு!

ரஜினி: ஏம்மா… இந்தத் தும்மலு, இருமலு, விக்கலு, கொட்டாவி, நல்லது, கெட்டது, பசி, தூக்கம், பொறப்பு, இறப்பு, பணம், பட்டம், பதவி… இதெல்லாம் கேட்டு வராது. தானா வரும். வந்தாலும் ஏன்னு கேக்க முடியாது. போனாலும் தடுக்க முடியாது.

எச்ச எச்ச எச்ச எச்சா… கச்சச்ச கச்சகச்சா

(ரஜினியின் தோழர்) ரமேஷ்கன்னா: இது வசனம்… முத்து… தூள் கிளப்புமா! ஆ… அக்காங்… நீயும் பேசறியே!?

மீனா:  யோவ்… வசனம் எல்லாம் கிழேயிருந்து என்ன வேணா பேசலாம்யா. இத்தன பேருக்கு முன்னால மேசையேறி பேசிப்பாரு. ஒதறும்!

ர.கன்னா: யாருக்கு உதறும்? என்னா நெனச்சுக்கிட்ட எங்க முத்துவப் பத்தி!? அவர் வண்டியோட்ற ஸ்டைல்ல பார்த்தே இந்த ஊர் மயங்கிக் கிடக்குது.

மீனா: வண்டி ஓட்டிடலாம்யா.. மேடையேற முடியுமா?

ர.கன்னா:  யாரப் பாத்து என்னா கேள்வி கேக்கறே? இது என்னா மேடை? அவர் எந்த மேடையா இருந்தாலும் ஏறுவாரு! தைரியமாப் பேசுவாரு! ஆடுவாரு! பாடுவாரு… பார்க்கிறீயா!?

ரஜினி:  என்ன கண்ணா… இப்படி மாட்டி விடுறீயே!

ர.கன்னா:  சும்மா இரு முத்து! உன் வெயிட்டு உனக்கேத் தெரியாது!

மீனா:  யோவ்… தைரியமான ஆம்பிளையா இருந்தா.. மெடையில வந்து ஆடிப்பாடி நடிக்க சொல்லுய்யா பார்ப்பம்…

கூட்டத்திலொருவர்: என்னா முத்தூ… அந்தப் பொண்ணு அது பாட்டுக்கு பேசிகிட்டிருக்கு. நீ பேசாம ஒக்காந்திட்டிருக்கியே.. மேடையில போய் கொஞ்சம் வெளையாண்டுட்டு வாம்மா…

ரஜினி:   ஐய்யய்யோ… அண்ணே… நமக்கெதுக்கண்ணே இந்த வேண்டாத விளையாட்டெல்லாம்?

கூட்டத்தில் இன்னொருவர்: உன் வேலைய நீ காட்ட வேண்டாமா? போ வாத்யாரே

ரஜினி:  அட சும்மா இருப்பா… ஏதோ சின்னப் பொண்ணு… தெரியாமப் பேசிடுச்சு…

ர.கன்னா:  ஐய்யய்யே… இப்படி சொன்னா கேட்க மாட்டாருப்பா… நாமதான் அவரை மேடையேத்தி வுடணும்

ரஜினி மிரள மிரள மக்கள் குண்டு கட்டாக தூக்குகிறார்கள்.

மேடையில் ஏற்றப்பட்ட ரஜினி: ஏம்ப்பா சுடுது!!

ரஜினி: உங்க பாட்டுக்கு ஏத்திவிட்டீங்க… இவங்களையெல்லாம் எப்படிம்மா மேய்க்கிறது?

மக்கள்: சும்மா பூந்து விளையாடும்மா… இத்தினி பேரு உன் பின்னாடி இருக்கம்ல…

ரஜினி:  எசமான்…??

சரத்பாபு மையமாக உம் கொட்டி தலையாட்டுகிறார்.

ஒருவன் ஒருவன் முதலாளி பேக்கிரவுண்ட் ம்யூசிக்குடன் துண்டு ஸ்டைல் விசிறுகிறார் சூப்பர் ஸ்டார்.

ரஜினி: பெண் பார்க்க வந்த மன்னவனின் மனதைப் புண்படுத்திய மருத நாட்டின் மகளே! ஆண் அழகை முகத்தில் பார்க்காதே… அகத்தில் பார்! மற்றவர்களின் மனதைப் புண்படுத்துவதற்கு பதிலாக, நீ கூறிய அதே… அதே பதிலை, கொஞ்சம் புன்னகையுடன் கூறிப்பார்!

அப்பொழுது நீ அறிவாய்… அதில் இருக்கும் இனிமை! அவைதான் நீ பொறந்த நாட்டிற்கும் புகுந்த வீட்டுக்கும் பெருமை!! பார்த்தாயா… தமிழ் மொழியின் அருமை!!!

மீனா:  எல்லாரும் கை தட்டினா… நீ என்ன பெரிய ஆளா?

ரஜினி:  அவங்க கை தட்டிதாம்மா எல்லாரும் பெரிய ஆளாயிருக்காங்க…

மீனா:  டிராமா பார்க்க வந்தாயா? இல்ல… வம்பிழுக்க வந்தாயா?

ரஜினி:  வம்புக்கு நான் இழுக்கல

மீனா:  என்ன… திமிரா?

ரஜினி:  அது எனக்கில்ல

மீனா:  பின்ன எனக்கா?

ரஜினி:  அப்படீன்னு நான் சொல்லல

மீனா:  யோவ்… நீ உன் மனசுல என்னதான் நெனச்சுட்டிருக்கே?

பொதுவாக என் மனசுத் தங்கம்… ஒலிக்கிறது.

கண்டு ரசிக்க:

மீனா:ரஜினி:

Nandha – Engengo Kaalkal Sellum Paathayil

எங்கெங்கோ கால்கள் செல்லும் பாதையில் போகின்றாய்..
ஏதேதோ நாளை என்ற ஆசையில் வாழ்கின்றாய்..
உன் சொந்தம் இங்கு யார் யாரோ?
நீ சொல்லிக்கொள்ள யார் யாரோ?
நீ வாழும் வாழ்வில் அர்த்தம் என்ன என்றே நீ சொல்லு?

காதில்லா ஊசியுமே கடைசி வரைக்கும் வராதே..
பட்டினத்தார் சொன்னானே பாட்டு ஒன்றில் அப்போதே..
எதனைக்கொண்டு நாம் வந்தோம்..?
எதனைக் கொண்டு போகின்றோம்..?
ஓடும் பொன்னும் ஒன்றாய் எண்ணும் இதயம் வேண்டுமே..

காற்றுக்கு யார் இங்கே பாட்டுச் சொல்லித் தந்தாரோ?
ஆற்றுக்கு யார் இங்கே பாதை போட்டுத் தந்தாரோ?
வாழ்க்கை எங்கு போய்ச் சேரும்?
காலம் செய்யும் தீர்மானம்…
என்னை உன்னை கேட்டா வாழ்க்கை பயணம் போகுது?

‘தசாவதாரம்’ அசின் புத்தம்புதிய உலக சாதனை!!!

தசாவதாரம் திரைப்படத்தில் தனக்குத் தரப்பட்ட பத்து எழுத்துக்களை ஒரு நாளுக்குள் டப்பிங் முடித்துக் கொடுத்து அசின் உலக சாதனை புரிந்துள்ளார்.

முழு செய்திக்கு: Asin’s new record! – Sify.com

அசினைக் கூப்பிட்டு ‘எப்படி தஞ்சாவூர் பிராமண பாஷை பேசினீர்கள்?‘ என்று விசாரித்தவுடன்,

‘பதினேழாயிரம் அடி முழுக்க பத்து கமல்ஹாசன்களே திரையெங்கும் வியாபித்திருக்க, விஷ்ணுவின் இதயத்தில் கிடைத்த இடமாக தன்னை இவ்வளவு எழுத்து உதிர்க்கவைத்ததே போன ஜென்மத்து பாக்கியாம்’ என்று வியாக்கியானித்தார்

‘Dasavatharam’ – Kamal’s plea & Other trivia

தொடர்பான செய்திகள், தகவல்கள்:

1. ‘தசாவதாரம் தமிழ்ப் பெயர் அல்ல – வரிவிலக்கு கிடையாது’

2. சர்ச்சை சமாச்சாரப் பதிவு: கமலின் தசாவதாரம்: பிரச்சினை வளர்க்க யோசனைகள்: “கேள்வி நேரம்”

3. கமலின் பத்து திருநாமங்கள் – தசாவதார கதாபத்திரங்கள்

4. ரசிகர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் தடியடி: கமலும் ஆஸ்கார் ரவியும் பதிலடி

5. டாவின்சி கோடும் தசாவதாரமும்: கமல் படத்துக்கு தடை கோரி புதிய வழக்கு

6. தசாவதாரத்துக்கு அன்புமணி முட்டுக்கட்டை இடுகிறாரா?

7. கமலின் தசாவதாரம் – குழந்தைகளுக்காக இராமானுஜர் கதை: பாட்காஸ்ட்

8. பாஸ்டனில் தசாவதாரம்

Dasavatharam Kamal kizhavi old lady kungumam Makeup

India Glitz handwritten copyrights lawsuit Dasavatharam Kamal

English IndiaGlitz handwriting copyright Violations legal Dhasavatharam Kamalahasan

  • Kamal has done the story, screenplay and dialogues. Kamal had written the dialogues for Mumbai Xpress and Virumandi in recent times.
  • The story does not straddle between centuries, but between millennia.
  • Kamal starts off as Rangaraja Nambi who gets under sea along with a Perumal idol. Immediately, the story jumps off 1000 years later, with Kamal being shown as a scientist in America.
  • One of the 10 roles the actor doing in Dasavatharam is based on popular pop singer Daler Mehendi.
  • Jayapradha is playing a prominent role in Kamal Haasan’s Dasavatharam.
  • Kamal had played ‘Nepoleon’ in a pivotal role in his Virumandi. Now in his Dasavatharam, he has cast him in the role of a king.
  • திரைப்படத்தில் சுனாமியும் இடம்பெறுகிறது.

நன்றி: இந்தியா க்ளிட்ஸ்