அவுரங்கசீப்

முன்னுமொரு காலத்தில் நான் ஒரு கதை கேட்டேன்: “நடந்த கதை. அவர் ஒரு புகழ்பெற்ற எழுத்தாளர். அதை விட புகழ்பெற்ற பத்திரிகையாளர். அவர் ஒருக்கா ரயில்ல மெட்ராஸ்லேர்ந்து தூத்துக்குடி வரைக்கும் செகண்ட் க்ளாஸ்ல போனாராம். பக்கத்து சீட் ஆசாமி கையில மேற்படி எழுத்தாளரோட புஸ்தகம் ஒண்ணு இருந்தது. பார்ட்டி படு சுவாரசியமா படிச்சிட்டு வருது.

நம்மாளுக்கு அவன் முடிச்சதும் என்ன மாதிரி முகபாவம் காட்டப்போறான்னு ஒரு இது. வண்டி முக்கா தூரம் கடந்ததும் படிச்சி முடிச்சவன், இவராண்ட, “பார்த்துக்கிட்டே வர்ரீங்களே, வேணுமா?”ன்னு கேட்டிருக்கான்.

அதுக்கு அவர் ‘நீங்க படிச்சீங்களே, எப்படி இருக்கு’ன்னு கேட்டாரு.

வந்த பதில்: “இவன் கதையை விட இவன் பத்திரிகை ரொம்ப நல்லா இருக்கும்”

ஆசிரியர் தாந்தான் அந்த இவன் என்று முன்னமேயே சொல்லியிருந்தா அந்த உண்மையான, ராவான, பாமர உள்ளக் கருத்து வந்திருக்குமா?

புரிஞ்சிருக்கும். அந்த மனிதர் பேர் எஸ்.ஏ.பி. அந்த புஸ்தகம் “காதலெனும் ஏணியிலே”

இப்படியொரு அறிமுகத்துடன் வந்தாலும், ‘அவுரங்கசீப்’ என்னும் லட்சணமான பெயரை பா ராகவன் என்று வெளிப்படுத்திக் கொண்டதால்தான், இணையத்து வாசகர்களின் உரிமையான இடித்துரைத்தல்களையும் schadenfruede அறிக்கைகளையும் பெற்று வருகிறார்.

இன்னசண்ட் எரிந்த்ரா, பெரியாத்தா கருமாதி, எம்.டி. ராமனாதன் குரலில் பாட்டு கேட்பது போன்ற குந்தர் அண்ணனின் டின் ட்ரம் என்று பட்டியல்களும், விவரிப்புகளும், அனுபவங்களும் பகிர்வதைப் படித்தால் வலைப்பதிவுகளின் சாத்தியக்கூறுகள் விளங்கியது.

‘புத்தகப்புழு’வில் பதினெட்டே முக்கால் மறுமொழிகளும் ராயர் காபி கிளப்பில் அறிமுகமும் கிடைத்த தைரியத்தில் ‘பாரா’வை சந்திக்க அழைத்தேன். தொய்வில்லாத பேச்சு. ‘ஏதாவது எழுதுங்க’ என்ன்னும் ஊக்குவிப்பு. வெங்கடேஷுடன் மறுதலிக்கும் கருத்துக்களில் வெளிப்படையான விவாதிப்பு. வலைப்பதிவுகளை நோட்டம் விட்டுக் கொண்டே அலுவலக server-இல் யாராவது ஊடுருவுகிறாளா என்று ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டிருப்பது போல் மாலை நேரத்தில் நண்பர்களின் உரையாடலுக்கு நடுநடுவே பதிப்பகத்தின் முதல் ப்ரிண்டுகளையும், அலுவலக வேலைகளையும் தவறாமல் கவனித்தல்.

அர்ஜுனன் அம்பை எடுத்ததுதான் தெரியும்; பாரா பான் பராக் ஜர்தாவை எடுப்பதுதான் தெரியும். பல லட்சம் மக்கள் படிக்கும் குமுதம் ஜங்ஷன் ஆசிரியராக இருந்தபோதும் எளிதாக சந்திக்க முடிந்தது. பத்திரிகைகளுக்கும் ஒப்புக்கொண்ட தொடர்களூம் எழுதவே நேரமில்லாத போதும், பதிப்பாசிரியராக திட்டமிட்ட புத்தகங்களும் எழுதியவர்களும் நெருக்குதல்களுக்கிடையேயும் ஜெயா டிவியில் கெட்டிமேளம் கொட்டுவதற்கு நடுவிலும் நண்பர்களூடன் உரையாடுகிற சந்தோஷத்துக்காகவே பல முறை தொடர்ந்து சந்திக்க வரவழத்தவர்.

கடைசியாகப் பேசிக் கொண்டிருந்தபோது, கோவை மண்டல இருளர் ஆதிவாசி சமூகத்தினரை குறித்த ஓர் ஆய்வைச் செய்துவருவதாக சொல்லியிருந்தார். அக்டோபர் எட்டு பிறந்த நாளுக்கு, எப்பொழுது எனக்கு முடிகிறதோ அப்பொழுது தொலைபேசும்போது, அது ஃபிலிம் டிவிஷனுக்கான டாக்குமெண்டரி ஆகிவிட்டதா என்று விசாரிக்க வேண்டும்.

ஒரு வித்தியாசமான பேட்டி | கிழக்கு பதிப்பகம் – பா. ராகவன் | Tamiloviam Tamil Ebooks | அலகிலா விளையாட்டு – நாகரத்தினம் க்ருஷ்ணா | மெல்லினம் – பாஸ்டன் பாலாஜி

பாரா எழுத்தில் சேமித்ததில் சில…..

  • ஆரம்ப எழுத்தாளர்கள் கற்கவும் சந்தேகம் தீர்க்கவும் புதிய விஷயங்கள் குறித்து அறிந்துகொள்ளவும் இணையம் மிகச் சிறந்த கருவியாகச் செயல்படமுடியும். ஒரு உதாரணத்துக்கு இரண்டுபேரை மட்டும் சொல்கிறேன். மாலன், இரா. முருகன் போன்ற மிகச் சிறந்த படைப்பாளிகள் குழுக்களுக்கு வருகை தந்து / நடத்தித் தந்து உதவும் அற்புதமான காலகட்டமாக இது இருக்கிறது. ஆனால் எத்தனைபேர் இந்த வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள்? இணைய எழுத்தாளர்களில் எத்தனைபேருக்குத் தெரியும்? மாலன் மாதிரி ஒரு ஆசிரியர் வெகு அபூர்வம். அவரிடமிருந்து பயின்று பூத்தவர்கள் தான் இந்தத் தலைமுறை தமிழ்ப் பத்திரிகைத் துறையை ஆக்கிரமித்திருக்கிறார்கள். அவர் அடையாளம் காட்டிய எந்த இடத்திலும் ஊற்று பீறிடாமல் இருந்ததில்லை.
  • மேஜிக்கல் ரியலிசம் என்கிற இலக்கிய உத்தியை ஒரு பூச்சாண்டி மாதிரி பயன்படுத்திக்கொண்டிருந்த தமிழ் எழுத்துலகுக்கு முதல்முறையாக அந்த உத்தியை அதன் அதிகபட்ச எளிமையுடன் அறிமுகப்படுத்தியவர் முருகன். சிறுகதைகளில் அவரடைந்த உயரங்கள் மிக அதிகம். ஆனால் யாராவது ஒருத்தர்? ஒருத்தராவது படைப்பின் சூட்சுமங்கள் குறித்து அவருடன் விவாதித்திருக்கிறார்களா? சந்தேகம் கேட்டிருக்கிறார்களா? கலந்துரையாடியிருக்கிறார்களா?
  • சாப்பிட்டுப் பல்குத்திக்கொண்டு என்னவாவது எழுதலாமா என்று யோசிக்கிற பார்ட்டைம் எழுத்தாளர்கள் வேறு. எழுத்தைத் தவிர வேறெதையும் எப்போதும் நினைக்கத் தெரியாத எழுத்தாளர்கள் வேறு.
  • ஊடகங்களை மாற்றிப் பார்க்கிறேன். உள்மனசு மாறவில்லை. எழுதுகிற ஒவ்வொரு சொல்லும் உயிரைத் தின்றுகொண்டுதான் இருக்கிறது. சாகாத எழுத்து சாத்தியமா என்கிற முயற்சியில் சாகும்வரை எழுதிக்கொண்டிருக்க நிச்சயித்திருக்கிறேன்.
  • தயவுசெய்து உங்கள் உடைந்த ஸ்கேலை என் பக்கத்தில் வைத்து அளந்துபார்க்காதீர்கள்.

    பாராவின் ‘அலகில்லா விளையாட்டு’ உபயம்:

  • அவரவர் நியாயங்களின் உட்புறச் சுவரைக் குடைந்துபார்க்க எல்லாருக்கும் சாத்தியமில்லை.
  • உணர்ச்சி மிகுந்தால் அழுகை வருகிறது. கோபம் வருகிறது. சிரிப்பு வருகிறது. அறிவு மிகுந்தால் அமைதி வருகிறது. புத்தி விழித்துக்கொண்டு நாலையும் யோசித்துத் தெளிவு பெறுகிறது.
  • கூடியவரை நல்லது செய்ய முயற்சி செய்துகொண்டே இருக்கவேண்டியது தான். நமக்கே செய்துகொண்டாலும் நல்லது நல்லது தான்.
  • ஆனால் லட்சியம் உள்ளவர்களுக்கெல்லாம் காரியம் கைகூடிவிடுகிறதா என்ன?
  • Female Question 

    Female Question Posted by Picasa

    More SMS Stuff from Vikatan 

    More SMS Stuff from Vikatan Posted by Picasa

    Ila Ganesan & K Balachander with & in Bhavadaarini…

    Ila Ganesan & K Balachander with & in Bhavadaarini Ilaiyaraaja Marriage
     Posted by Picasa

    Rajinigaanth in Bhavataarini Ilaiyaraja Marriage …

    Rajinigaanth in Bhavataarini Ilaiyaraja Marriage
     Posted by Picasa

    Sabari Rajan & Bhavathaarini Ilaiaraaja Marriage …

    Sabari Rajan & Bhavathaarini Ilaiaraaja Marriage
     Posted by Picasa

    SMS Jokes by Vikadan 

    SMS Jokes by Vikadan Posted by Picasa

    Mrs Vijayakaanth in Bhavathaarini Ilaiyaraaja Marr…

    Mrs Vijayakaanth in Bhavathaarini Ilaiyaraaja Marriage Posted by Picasa

    Hundred best novels of the century

    சமீபத்தில் நண்பர் ஒருவரின் பரிந்துரையில் Darkness at Noon by Arthur Koestler படிக்க ஆரம்பித்தேன். பின் அட்டையில் உலகின் தலைசிறந்த பத்து நாவல்களுள் ஒன்றாக கருதப்படுவதாக சொல்லியிருந்தார்கள்.

    Dr. Daniel J. Boorstin, A.S. Byatt, Christopher Cerf, Shelby Foote, Vartan Gregorian, Edmund Morris, John Richardson, Arthur Schlessinger, Jr., William Styron, and Gore Vidal. ஆகியோர் கொண்ட குழு தேர்ந்தெடுத்த நூறு நாவல்களின் பட்டியல் இணையத்தில் கிடைத்தது.

    சல்மான் ருஷ்டி #90 ஆகவும் , நய்பால் #72 & #83 ஆகவும், இருக்கிறார்கள். எனக்குப் பரிச்சயமான வழக்கமான பெயர்களான ‘லோலிதா’, டி எச் லாரென்ஸ், ஜார்ஜ் ஆர்வெல், வர்ஜீனியா வுல்ஃப், ‘எ பாஸேஜ் டு இந்தியா’, ஈ எம் ஃபாஸ்டர், ஜோஸப் கான்ராட், போன்ற சிலரையாவது பார்த்தபோது சந்தோஷமாக இருந்தது.

    வாசகர்களைக் கொண்டு தேர்ந்தெடுப்பதை விட தேர்வுக்குழுவைக் கொண்டு பட்டியலிடுவது படிக்க வேண்டிய இலக்கியங்களை அடையாளங்காட்டும். இட ஒதுக்கீடாக தலித், பெண்ணியம், பின் நவீனத்துவம் என்று அனைத்து சாராருக்கும் இடம் கிடைக்காமல் அபாயங்களைத் தடுக்கலாம்.

    ஏற்கனவே ஜெயமோகன், சுயேச்சையாக இந்த மாதிரி தலை பத்து நாவல் பட்டியலை திண்ணையில் வெளியிட்டிருக்கிறார். இரா. முருகன் கொடுத்த பட்டியலில் கட்டுரை மற்றும் கவிதைத் தொகுப்புகளும் அடக்கம். பா ராகவன், எஸ் இராமகிருஷ்ணன் போன்றவர்களின் தேர்வுகளில் உலக இலக்கியங்களும் இடம்பெற்றிருந்தது. கணையாழியில் க நா சு-வும் இன்னும் சிலரும் பட்டியல்களை ரெகுலராக கொடுத்து வந்திருக்கிறார்கள்.

    தமிழ் நாவல்களை மட்டும் விருப்பு வெறுப்பின்றி பட்டியலிட இந்த மாதிரி who is who கொண்ட தேர்வுக்குழு அமைத்தால், இடம்பெறுபவர்கள் யாராக இருப்பார்கள்?

    என்னுடைய தேர்வுக்குழு உறுப்பினர்கள்:

    1. ஆ.மாதவன்
    2. சுந்தர ராமசாமி
    3. ஜெயமோகன்
    4. அசோகமித்திரன்
    5. கி ராஜநாராயணன்
    6. சுஜாதா
    7. உமா மஹேஸ்வரி
    8. ராஜ்கௌதமன்
    9. பாவண்ணன்
    10. எம் ஏ நுஃமான்

    விடுபட்டவர்களையும் பொருத்தமில்லாதவர்களையும் உங்கள் பரிந்துரைகளையும் சொல்லலாம்…

    குறிப்பு 1: ஜெயமோகனின் பட்டியல்:

    குறிப்பு 2: தமிழ் நாவல்கள் விமர்சகனின் சிபாரிசு :: ஜெயமோகன்.

    (மீண்டும்) இயக்குநராகும் தோழன்

    தெலுங்குப் படங்கள் தினுசானவை. வயதில் சிரஞ்சீவியாக இருந்தாலும், தோற்றத்தில் சித்தார்த்தாக இருந்தாலும் மூன்று நாயகிகளாவது வேண்டும். சிவகுமார் வெற்றி பெற வேண்டும்.

    திரைப்படத்துறைக்குள் நுழைவதன் கஷ்டங்களை அஜீத் மூலமே தெரிந்து கொள்ளலாம். ‘(கண்டு கொண்டேன்)’2-இல் அப்பா மாத்ருபூதம் தலையில் அடித்துக் கொள்ள விளக்குப் பிடிக்கும் அஜீத்; ‘முகவரி‘யில் மாடியுச்சிக்கான கடைசிப்படியில் லிஃப்டைப் பிடித்து தரைக்கு இறங்கிவிடும் அஜீத். ‘சர்வர் சுந்தரம்’ முதல் ‘அழகிய தீயே’ வரை உதவி இயக்குநர் ஆகாமல் போவதற்கான காரணங்களைத் தேற்றிக் கொள்ளலாம்.

    ‘கற்றதும் பெற்றதும்’-இல் சுஜாதா காந்தி கிருஷ்ணாவை சொல்லியிருந்தார். முன்பொரு சமயம் சிவகுமாரைக் குறிப்பிட்டிருந்தார். மணி ரத்னத்தின் சிஷ்யர். பிட்ஸ் பிலானி (BITS, Pilani) மாணவர். ஆஷா (Asha for Education), எயிட் (Association for India Development) போன்ற சேவை நிறுவனங்களுக்கு குறும்படம் எடுத்தவர்.

    அரவிந்த் சாமி நடித்த என்ஜினீயர் நின்று போனது போலவே சிவகுமாருடைய அரவிந்த் சுவாமி – ஏ.ஆர்.ரெஹ்மான் – சிம்ரன் படமும் பூஜை முடிந்தாலும் பாதிப்படத்தில் காணாமல் போனது.

    திரையுலகில் தவறவிட்ட சந்தர்ப்பங்களும் கலைந்த கனவுகளும் பல. கலையுணர்வும் திறமைகளும் படைத்த பலரைத் திரைத்துறையில் அடிக்கடி சந்தித்திருக்கிறேன். ஒவ்வொருவரும் சந்தர்ப்ப மணியோசை அழைக்கக் காத்திருக் கிறார்கள். சில சமயம் இரைச்சலின் நடுவே, அதன் மெல்லிய கிணுகிணு கேட்காது! – சுஜாதா

    கல்லூரி நாடகங்களை ஆர்வமாக நடத்தியவர். ‘தில்ஸே’ முடித்துவிட்டு தற்செயலாக சென்னையில் சந்தித்தபோது, தன்னுடைய திட்டங்களையும் கனவுகளையும் லட்சியமாக விவரித்தார். திருப்திக்காக தொண்டு நிறுவன ஆவணப்படங்களும், குறிக்கோள் குறும்படங்களும்; வாழ்க்கை செலவுக்கு வணிகப்படங்கள்.

    பிலானியில் தமிழர்கள் அதிகம். கிட்டத்தட்ட ஐம்பது சதவீதம் தெலுங்கர் என்றால், மீதம் தமிழ்நாடு. ஹிந்திகாரர்களுக்கும் ‘தொங்கண கொடுகா’வும் ‘இல்லடா மச்சி’யும் சொல்லிக் கொடுத்து திராவிடப் பாரம்பரியத்தை வளர்க்கும் உணர்வுடையோர் நிறைந்தது.

    பேச்சு வளம் இருக்கும் அளவுக்கு, படிக்கும் சக்தி இல்லாதவர்கள். ஐநூறு பேரில் ஐம்பது என்ஜினீயர்களுக்குத்தான் தமிழ் எழுத்து கூட்ட வரும். விகடன் படிப்போர் எல்லாரும் சேர்த்தாலும், ஒரு கை ஓசை. சிவகுமாரில் இந்த ஒரு கையில் ஒருவர். இணையம் வந்தபிறகு நான் தெரிந்து கொண்ட சில எழுத்தாளர்களை அப்பொழுதே படித்து மகிழ்ந்தவர்.

    தமிழ் படிக்கத் தெரியாமல், பேசிக் களைத்த மாணவ சமூகத்துக்கு இரு பொழுதுபோக்குகள்: சினிமா மற்றும் நாடகம். கூத்துப் பட்டறை, பாதல் சர்க்கார் ரேஞ்சுக்கு பிலானி தமிழ் சங்கத்தின் நாடகங்களைக் கொண்டு செல்லாவிட்டாலும், பல இயக்கங்களில் எங்களை ‘அட’ போட வைத்தவன் சிவகுமார். பார்வையாளர்களின் நடுவில் இருந்து கதாபாத்திரங்கள் தோன்றுவது, சுஜாதாவின் ‘பதவிக்காக’, இந்திரா பார்த்தசாரதியின் ‘மழை’ என பல வித்தியாசங்களை முயற்சித்தவன்.

    சுக்கல்லோ சந்துருடு‘ சிவகுமாரின் புதிய படம். சுறுசுறுப்பாக முடிந்து, பிரபுதேவாவைப் போல் சிவகுமாரையும் தெலுங்கு தேசம் ஸ்வீகரிக்க வேண்டும்.

    மேலும் விவரங்களுக்கு: Chukkallo Chandrudu – பூஜை – Telugu Cinema – Siddardha, Charmme, Sada & Saloni

    சிவகுமாரின் ‘ஆஷா’ படங்கள்: Asha for EducationAsha :: Gomathi | Asha :: ஜீவன் ஞானோதயா பள்ளி | Asha :: Silence