Sivakumar – Sitharth – Chukkallo Chandrudu – Telug…

Sivakumar – Sitharth – Chukkallo Chandrudu – Telugu Movie

 Posted by Picasa

Sivakumar – Entire Crew – Chukkallo Chandrudu – Te…

Sivakumar – Entire Crew – Chukkallo Chandrudu – Telugu Movie Mahurath

 Posted by Picasa

Sivakumar – Heroines – Chukkallo Chandrudu – Telug…

Sivakumar – Heroines – Chukkallo Chandrudu – Telugu Movie

 Posted by Picasa

Sivakumar – Chukkallo Chandrudu – Telugu Movie – …

Sivakumar – Chukkallo Chandrudu – Telugu Movie – Muhurtham

 Posted by Picasa

Sivakumar – Nageswara Rao – Chukkallo Chandrudu – …

Sivakumar – Nageswara Rao – Chukkallo Chandrudu – Telugu Movie
 Posted by Picasa

Sivakumar – ANR – Mani Rathnam – Siddhaarth – Telu…

Sivakumar – ANR – Mani Rathnam – Siddhaarth – Telugu Movie Posted by Picasa

My Name is Earl

tamiloviam ::

முன்னுமொரு காலத்தில் ஒரு வழிப்போக்கன் நியுயார்க்கில் இருந்து டிஸ்னி இருக்கும் ஃப்ளோரிடாவுக்கு சென்று கொண்டிருந்தான். உச்சிவெய்யில் மண்டையைப் பிளக்க கொஞ்சம் இளைப்பாற ரெஸ்ட்ரூம் ப்ரேக் எடுக்கிறான். அரைத் தூக்கத்தில், இந்த வெய்யிலைத் தணிக்க ஒரு மின்விசிறி கிடைத்தால் எப்படியிருக்கும் என்று நினைத்தான். உடனே அங்கு மின்விசிறி தோன்றியது. ஓடினால் நன்றாக இருக்குமே என்று எண்ண, சுழலவும் ஆரம்பித்தது.

தொடர்ந்து ‘சரவண பவன்’ மீல்ஸ் கிடைத்தால் ‘எப்படியிருக்கும்’ என்று நாவு சப்புக் கொட்டியது. அவன் முன்பு மசாலா தோசை, காஞ்சிபுரம் இட்லி, மைசூர் போண்டா, புலவ், வெங்காய சாம்பார், பூண்டு ரசம், வெண்டைக் கறி, கத்தரி பிட்லை, பப்படாம், பாஸந்தி என்று தட்டுக்கள் விரிந்தது. இதையெல்லாம் பரிமாற ‘ஹூடர்ஸ்’ (hooters) மகளிர் வந்து பந்தி விசாரித்தால் பேஷாக இருக்குமே என்று கற்பனை ஒளிர, பிகினியாடை பமேலா ஆண்டர்சனை மிஞ்சும் வனப்புடன் அழகிகள் பரிமாறினர்.

மடிக்கணினியைத் திறந்து மின்னஞ்சல் பார்த்துக் கொண்டே சாப்பிடலாம் என்று வலைத்தமிழுடன் கொஞ்சிக் கொண்டே உணவருந்தும்போது, மனதுக்குள் மின்னல் வெட்டியது. இவற்றையெல்லாம் செய்து மாயலோகத்தில் விழவைப்பது ஹாக்கர் எனப்படும் கொந்தர்களோ என்று நினைக்க, அவன் கணினியை கிருமிகள் ஆட்கொண்டது. பெண்டிரும் சாப்பாட்டில் எம்.எஸ்.ஜி.யையும் கொழுப்பையும் கலந்து அவனின் ஐடெண்ட்டியத் திருடியதாகக் கதை முடியும்.

பாட்டி சொன்ன கதையில் நான் கற்றுக் கொண்ட பாடம். நல்லதை மட்டுமே நினைப்பவர்களுக்கு நல்லது நடக்கும். நிகழ்பவை எல்லாம் தீயதற்கான அறிகுறியே என்று உருவகித்து வந்தால், கெடுவினையேத் தொடரும் என்னும் கருத்து.

மை நேம் இஸ் ஏர்ல் (‘My Name is Earl’ ) என்னும் தொலைக்காட்சித் தொடரும் ‘கர்மா’வை பார்வையாளருக்கு நகைச்சுவையாக விளக்குகிறது.

‘ராஜா சின்ன ரோஜா’ திரைப்படப் பாடலில் மாயாஜாலத்துக்கு நடுவே ரஜினி பாடுவது போல்

‘வினை விதைத்தவன் வினை அறுப்பான்
தினை விதைத்தவன் தினை அறுப்பான்
நன்மை ஒன்று செய்தீர்கள்
நன்மை விளைந்தது
தீமை ஒன்று செய்தீர்கள்

தீமை விளைந்தது
தீமை செய்வதை
விட்டுவிட்டு
நன்மை செய்வதைத்
தொடருங்கள்’

என்று அமெரிக்காவின் புதிய டிவி சீரியலும் தொடர்கிறது.

“I forgive you for what you did to me, but how can I forgive you for what you did to yourself?” – Friedrich Nietzsche

‘மை நேம் இஸ் ஏர்ல்’ நாயகன் மனம்மாறி தன்னால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏதாவதொரு நன்மை செய்து, மன்னிப்புக் கோருகிறான்.

ஏர்ல் (Earl) ஒரு அன்றாடங்காய்ச்சி. காலை எழுந்தவுடன் எவன் கிடைப்பான், எப்படி திருடலாம், இன்றைய தினத்தை எப்படி ஒப்பேற்றலாம் என்று வாழ்க்கையை ஒட்டுகிறான் ஏர்ல். லாட்டரியில் ஒரு லட்சம் டாலர் விழுகிறது. சந்தோஷக் களிப்பில் சீட்டுப் பறந்து தவற விட்டு விடுகிறான். கார் மோத, ஆஸ்பத்திரியில் கண்விழிக்கிறான். மயக்க மருந்து தெளியாத நிலையில் மனைவியின் விவாகரத்தில் கையெழுத்திட்டு, சூதாட்டத்தில் தோற்றுப் போன தருமர் ஆக நிலபுலங்களை இழக்கிறான்.

ஞானோதயம் பிறக்கிறது. நினைவு தெரிந்த நாள் முதல், மற்றவர்களுக்கு தீவினையே விளைவித்தது கண் முன்னே நிழலாடுகிறது. செய்த தவறுகளைப் பட்டியலிடுகிறான். பள்ளியில் சகாக்களை படுத்தியது, ரோட்டில் குப்பை போட்டது, தம் அடித்து மற்றவர்களுக்கு புற்றுநோய் கொடுத்தது என்று தொல்லைகளும் கொலைகளும் பஞ்சமா பாதகங்களும் நீளுகிறது. தன் செய்கைகளினால் மனம், குணம், நிறம் உடைந்த ஒவ்வொரு ஜீவனுக்கும் ஏதாவதொரு வகையில் நல்வினை பயக்கும் செயல் புரிந்தால், தன்னுடைய விதி மாறும் என்று உறுதி பூணுகிறான்.

நடு நடுவே கேமராவிற்கு தன்னுடைய வாழ்க்கையின் பழைய அத்தியாயங்களை ஏர்ல் விவரிப்பதால், சீரியலின் ஒவ்வொரு நிமிடமும் முக்கியத்துவம் பெறுகிறது. பத்து நிமிடம் எடுத்துக் கொண்டு விவரிக்க வேண்டிய நிகழ்வை ஒரு வரியில் சுருக்கி சொல்வதால், ஏர்லின் கடந்த காலம் முழுவதும் குறித்த ஏரோப்ளேன் பார்வை நமக்கு கிடைத்து, ஐந்தே நிமிடங்களில் upto the speed ஆகிவிடுகிறோம்.

மதுமயங்கிய வேளையில் ஐந்து நிமிட உறவில் அறிமுகமான பிள்ளைத்தாச்சிக்கு மோதிரம் மாற்றி மனைவியாக்கிக் கொள்வது; வெட்டிவேலை மட்டுமே வேலையாக சோபாவைத் தேய்த்துக் கொண்டிருக்கும் தம்பியை ஆதரிப்பது; வெள்ளை ஏர்லுக்கு கறுப்புக் குழந்தை பிறந்தாலும் குழப்பத்துடன் குழந்தையை வளர்ப்பது; திருடனாக இருந்தாலும் கூட்டாளிகளுடன் நியாயமாக சொல்லுக்கு மதிப்பு கொடுப்பது என்று பல கதாபத்திரங்களை நாயகன் சுருக்கமாக அறிமுகம் செய்கிறான்.

முதல் வாரத்தில் பள்ளிக்கூடத்தில் துன்புறுத்திய மாணவன். அவன் வீட்டுக்கு சென்று, அவனிடம் மன்னிப்பு கோரி, அவனுக்கு பிராயசித்தம் செய்வதை நகைச்சுவையாக சிந்தித்தது. நிறைய எதிர்பாரா திருப்பங்களுடன் சிரிக்கவும் வைத்தது.

இரண்டாவது வாரத்தில் புகை பிடித்து மற்றவர்களுக்கு செகண்ட் ஹாண்ட் ஸ்மோக் வழங்கி லொக்கு லொக்கு வழங்கியதற்கு பாவமன்னிப்பு கோர ஆரம்பிப்பதில் தொடங்கி, தான் செய்ய நினைத்த திருட்டுக்கு, சிறை தண்டனை வாங்கி கொடுத்த நண்பனிடம் மீட்சி அடைவதில் முடிகிறது. உறுத்தாத நகைச்சுவை, இயல்பான பயங்கள், நம்பக்கூடிய செய்கைகள், திரைக்கேயுரித்தான அளவான மிகைகள் என்று முதல் வாரத்தைப் போலவே அட்டகாசமாய் மனதில் உட்காரும் சீரியல்.

30 Days -இன் மார்கன் (Morgan Spurlock) நடந்து கொண்டதைப் போல் சீரியஸான பிரச்சினையை சேரியமாய் அணுகாமல், விளையாட்டாய் சொல்வது பார்வையாளர்கள் மனதில் பதியும். ‘சூப்பர் சைஸ் மீ’ (Super Size Me) மார்கனின் நிகழ்ச்சியை அமெரிக்காவின் மாற்று ஊடகங்களோடு ஒப்பிடலாம். தலையாய செய்திகளை அலறிக் கொண்டே அரற்றுவதால் பொதுமக்களிடம் ஸ்டீரியோடைப்பையும் கவனிப்பையும் இழந்தவர்கள்.

வெகுஜன டிவியும் பத்திரிகைகளும் பொலிடிகலி கரெக்டாக செய்திகைளை முன்வைத்து ஞானோதயத்துக்கு முந்தைய My Name Is Earl -ஆக இருக்கிறார்கள். உழுகிற காலத்தில் ஊர் மேல போயிட்டு, அறுவடைக் காலத்தில் திரும்பி வருவது போல் அன்றாட போர் இழப்புகள், ஆப்பிரிக்க கண்மறைப்புகள், நிறபேதங்களை கார்பெட்டுக்கு அடியில் ஒதுக்கிவிட்டு விட்டு, வீட்டை விளக்கேற்றி வெளிச்சமாக்கிக் கொள்கிறார்கள்.

Earl-க்கு லாட்டரி சீட்டு கைவிட்டு ஓடியவுடன், ஆஸ்பத்திரி படுக்கையறையில், போதையேறிய மயக்கத்தில், கார்ஸன் மூலம் epiphany கிடைத்தது. ஜே லீனோ, ஜான் ஸ்டூவர்ட் போன்றவர்களின் நகைச்சுவைக்கு கையில் பியருடன் சிரித்துவிட்டு தூக்கம் தாலாட்டும் வெகுஜன ஊடகங்களுக்கு சீக்கிரமே epiphany வருவது அமெரிக்காவுக்கும் என்னுடைய பேரப் பிள்ளைகளுக்கும் நல்லது.

இந்தியா டுடே

குஷ்புவின் பேட்டியும் வெளியாகியிருந்த செப். 28, 2005 தமிழ்-இந்தியா டுடேயில் இருந்து எனக்கு முக்கியமாகப் பட்ட சில பகுதிகள்:

(நேரத்தே வான் மடலிட்ட எனி இந்தியன்.காம் மற்றும் இந்தியா டுடே-க்கு நன்றிகள் பல!)

பிரபு சாவ்லா:
இந்திய சினிமாக்களில் செக்ஸ் புரட்சி நடக்கிறது. முத்தக் காட்சிகள், நெருக்கமான காட்சிகள் தாராளம் கரைபுரண்டோடுகிறது. இதை ஒரு சமூக விஞ்ஞானி ‘அந்நிய கலாச்சார நேரடி முதலீடு’ என்கிறார்.

காவேரி பம்ஸாய்:

  • ஆணின் கற்பனை உலகில் பிகினி உடையில் குழந்தைத்தனத்துடன் வளையவரும் தேவதை. கார்ப்பரேட் உலகில் கோட் அணிந்து கம்பெனியை ஆளும் பெண் அதிபர். இந்த இரு பிம்பங்களுக்கிடையே எங்கோதான் நாளைய உலகின் லட்சியப் பெண் இருக்கிறாள்.
  • 55 % பெண்களுக்கு உச்சகட்டம் என்றால் என்ன என்று தெரியவில்லை.
  • 82 % தாங்கள் சுயஇன்பம் அனுபவிப்பதில்லை என்று சொன்னார்கள். அடுத்தவர்களின் சுகம்தான் முக்கியம் என்று சொல்லிச் சொல்லியே வளர்க்கப்பட்ட பெண்கள் முதல் முறையாகத் தங்கள் சுகத்திற்கு முக்கியத்துவம் தருவதால் வரும் ஆரம்பத் தடுமாற்றங்களாக இவை இருக்கக்கூடும்.
  • 60 % பெண்கள் விருப்பமில்லாமலேயே செக்ஸ் உறவு கொள்ள வேண்டியிருப்பதாகச் சொல்கிறார்க்ள்.
  • ஆண்கள் மத்தியில் நடத்தப்பட்ட சர்வேயில் ஆணின் செக்ஸ் அப்பீல் என்பது அவனது கட்டுமஸ்தான தேகத்தில்தான் இருக்கிறது என்று பாதிக்கு மேற்பட்டவர்கள் சொல்லியுள்ளனர். ஆனால், பெண்களில் பெரும்பாலானவர்கள் ஆணின் கண்கள்தான் செக்ஸ் அப்பீலுக்கு அளவுகோல் என்று சொல்கிறார்கள்.
  • ஒரு பெண்ணுக்கு கவர்ச்சி மார்பகம்தான் என்று ஆண்களில் 75 % சொல்கிறார்கள்
  • வெளிநாட்டில் வாழ்ந்தால் கூட இந்தியப் பெண்கள் மரபணுவிலேயே பரிசுத்தம், களங்கம் என்ற இரண்டு வார்த்தைகளும் கலந்திருப்பதால் செக்ஸ் தொடர்பான வார்த்தைகளை பயன்படுத்துவதில் கூட ஒரு தயக்கம் இருக்கிறது.
  • 24 வயது பெங்களூர் சாஃப்ட்வேர் எஞ்சினியரான ஆஷா ரவி தனது பாய் ஃப்ரெண்டுகளுடன் பப்களுக்கும் ரெஸ்டாரண்டுகளுக்கும் போவது பற்றி கவலைப்படவில்லை. ஆனால் பெற்றோருக்குத் தெரிந்துவிடக்கூடாது.
  • விளக்கு அணைந்ததும் என்ன நடக்கிறது என்பது புதிய நிழலுலகமான இண்டெர்நெட் பிளாக்குகளில் (வலைப்பதிவுகள்) சில பெண்கள் மூலம் தெரியவருகிறது.

    கவிஞர் சுகிர்தாராணி:
    மோசடி அகராதியிலும் பிரதிபலிக்கப்படுகிறது. வர்ஜின் என்ற சொல்லின் பொருள் குறிப்பாக பெண்களின் கன்னித்தன்மையைச் சுட்டிக் காட்டுகிறது.

    எஸ். காளிதாஸ்:

  • ஆணாதிக்க உலகம் மெச்சிக் கவிபாடிய ஜான்சி ராணி கூட வாளெடுத்து போர்க்களம் புகுந்தது தனது உரிமையை நிலைநாட்ட அல்ல. தனது வாரிசின் உரிமையை நிலைநாட்டத்தான்.
  • காத்திரமான புராண பிம்பங்கள் இந்தியாவில் உண்டு. பார்வதி ஜலக்கிரீடை செய்வதற்கு தன் கணவர் (சிவன்) வந்து இடையூறு செய்யாமலிருக்க தனது தோழிகளின் மேல் இருந்த மண்ணை வைத்து மகனாகவும் பாதுகாவலனாகவும் இருக்க ஒரு ஆணை (விநாயகர்) படைத்தாள்.
  • காளி சின்னமஸ்தா என்ற உருவெடுத்து தன் சக ஆண் வெறுமனே படுத்திருக்க, அவனருகே அமர்ந்து எல்லையில்லா பேரின்பம் துய்த்தபடியே தனது தலையையே வெட்டி தனது ரத்தத்தையே குடிக்கும் கதை உண்டு.

    சுஷ்மிதா சௌத்ரி:

  • ஹைதராபாதில் 49 % பேர் திருமணம் செய்து கொள்ளாமல் ஒருவருடன் வாழ்வதை சரி என்கிறார்கள். தேசத்திலேயே இங்குதான் அது அதிகம்.
  • அதே போல், நான்குக்கும் மேற்பட்ட ஆண்களுடன் உறவு இருந்ததாக சொல்பவர்களும் ஹைதராபாதில்தான் அதிகம். 11 % அப்படிச் சொல்கிறார்கள். தேசிய சராசரி 5 % தான்.
  • பெருநகர பெண்களுக்கு 19-21 வயதில் முதல் உறவு நிகழ்கிறது. சிறுநகரங்களில் அந்த வயது 15-18 ஆக இருக்கிறது.
  • ஆணுறை மிக அவசியம் என்று நினைக்கும் பெண்களின் சதவீதம் ஜெய்ப்பூர், லூதியானா, ஹைதராபாத் போன்ற இடங்களில் மிகக் குறைவாக இருக்கிறது. எயிட்சிற்கும் பால்வினை நோய்களுக்கும் பயமில்லை அல்லது தெரியாது என்று சொல்லும் பெண்களின் சதவீதமும் இங்குதான் அதிகம்.

    திலீப் பாப்:

  • பெரும்பாலான ஆண்கள் (54 %) திருமணமாகும்வரை பெண்கள் கன்னித்தன்மையைக் காப்பாற்றுபவர்களாக இருக்க வேண்டும் என்கிறார்கள். அதே சமயம் பெரும்பாலான ஆண்கள் (51 %) ஆண்கள் திருமணமாகும்வரை பிரம்மச்சரியத்தைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டியதில்லை என்கிறார்கள். இதை நிரூபிக்கும் விதமாக சர்வே செய்யப்பட்டவர்களில் 66 % ஆண்கள், இன்னொரு ஆணுடன் செக்ஸ் வைத்துக் கொண்ட பெண்ணை திருமணம் செய்யமாட்டோம் என்று கூறியுள்ளார்கள்.
  • ஒரு இரவு மட்டும் உறவு கொள்வது, தற்செயலாக உறவு கொள்வது என்பவை இங்கு இல்லை. பெண்ணுடன் உறவு கொள்வதற்கு அவளுடன் காதல் இருக்க வேண்டும் என்று பெரும்பாலான ஆண்கள் கூறுகிறார்கள்.
  • தலைவலி இருப்பதாக சொல்லி செக்ஸில் இருந்து தப்பிப்பதில் ஆண்களைவிட பெண்கள் அதிகம். தோழியை திருப்திப்படுத்த மட்டுமே 67 % சதவீத ஆண்கள் செக்ஸில் ஈடுபடுகிறார்கள். பெண்ணின் செக்ஸ் ஆளுமைக்கு இது நல்ல அறிகுறி.
  • இன்றைய இந்திய ஆண்மகன் தனது செக்ஸ் அடையாளம் பற்றி மிகவும் குழப்பமுடையனாக இருக்கிறான் என்பது நிரூபணமாகியிருக்கிறது. பழமையான மரபுகளில் நாட்டம், பெண்ணின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளும் தன்மை இல்லாமை, செக்ஸ் பற்றிய அடிப்படை அறிவின்மை மற்றும் நாட்டமினமை ஆகியவற்றுக்கிடையே இந்திய ஆண் தத்தளித்துக் கொண்டிருக்கிறான்.
  • சல்ஸ்மான் தனது புதிய நாவலான ‘தி ஃப்யூச்சர் ஆஃப் மென்’ என்ற புத்தகத்தில் நான்கு நாடுகளில் நடத்திய கருத்துக்கணிப்பின் முடிவுகளை வெளியிடுகிறார். ஆண்களின் செக்ஸ் ஆர்வத்திற்குப் பதிலாக இப்போது தொழில்நுட்பம் வந்திருப்பதாக அவர் கூறுகிறார். எம்.பி.3க்கள், பிளாக் பெர்ரி செல்ஃபோன், லேப்டாப்கள் போன்றவை ஆணின் ஆசைக்குப் பரிகாரம் செய்வதாக அவர் சொல்கிறார். செக்ஸ் என்பது ‘எந்திரத்தனமான’ ஒன்றாக மாறிவிட்டது என்கிறார் அவர்.

    பெண்களிடம் கருத்துக்கணிப்பு முடிவுகள்:

    1. வாய்வழி செக்ஸ் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

    அது தவறு – 24 %
    கருத்தரிக்க வாய்ப்பில்லை என்பதால் அதில் தவறில்லை – 17 %
    அது உடலுறவு அல்ல என்பதால் அதில் தவறில்லை – 15 %

    2. ஆணுறை பயன்படுத்துவது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

    கட்டாயம் – 51 %
    உபயோகிப்பதில்லை – 9 %
    இன்பத்தைத் தடுக்கிறது – 12 %

    3. நீங்கள் கீழ்கண்டவற்றில் எதைப் பற்றியாவது கற்பனை செய்திருக்கிறீர்களா?

    உங்கள் துணையுடன் பல உடலுறவு நிலைகளில் – 28 %
    மற்றவர்கள் செக்ஸ் உறவுகொள்வதை பார்ப்பது – 11 %
    உங்களுடையவர் தவிர மற்றவர்களுடன் செக்ஸ் உறவு கொள்வதை – 5 %
    பலருடன் சேர்ந்து செக்ஸ் – 3 %
    இவை எதுவுமே இல்லை – 32 %

    4. பிடித்த ஆண்கள் உடை?

    ஜீன்ஸ் மற்றும் டி ஷர்ட் – 46 %
    பேண்ட் ஷர்ட் – 19 %
    குர்தா பைஜாமா – 12 %
    ஷார்ட்ஸ் டி ஷர்ட்ஸ் – 12 %
    ஸ்வெட்டர் – ஸ்வெட் பேண்ட் – 5 %
    வேஷ்டி குர்தா – 2 %

    ஆண் சர்வே:

    1. ஆண்கள் திருமணமாகும் வரை பிரம்மச்சாரியாக இருக்கவேண்டும் என்று நினைக்கிறீர்களா?

    ஆம் – 44 %
    இல்லை – 51 %

    2. வாய்வழி செக்ஸ் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

    வாய்வழி செக்ஸ் சரியானது இல்லை – 33 %
    உடலுறவாக கருதப்படாததால் வாய்வழி செக்ஸ் சரிதான் – 26 %
    பெண்கள் கர்ப்பமாக மாட்டார்கள் என்பதால் வாய்வழி செக்ஸ் சரிதான் – 21 %

    சர்வே எடுக்கப்பட்ட விதம்:

    இந்தியா டுடே – ஏ சி நீல்சன் – ஓ ஆர் ஜி மார்க் செக்ஸ் சர்வே இந்திய நகர்ப்புறத்து மணமாகாத பெண்களின் பாலியல் உணர்வுகளைப் புரிந்து கொள்வதற்காக நடத்தப்பட்டது.

  • இன்றைய பெண் தனது பாலியல் தன்மை பற்றி என்ன நினைக்கிறார்?
  • அவரது பாலியல் கற்பனைகள் என்ன?
  • அவற்றில் எவற்றையெல்லாம் முயன்று பார்த்திருக்கிறார்?
  • தனது துணையுடன் அவர் கொண்டுள்ள நெருக்கம், பகிர்தலின் அளவு என்ன?
    இந்தக் கேள்விகளுக்கு விடை காண்பதே இந்த சர்வேயின் நோக்கம்.

    இந்த சர்வேக்காக 11 நகரங்களில் (தில்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, ஹைதராபாத், அஹமதாபாத், பட்னா, லக்னோ, லூதியானா, ஜெய்ப்பூர் மற்றும் பெங்களூர்) உள்ள 18-30 வயதிற்குட்பட்ட மணமாகாத அதிக வருவாய் உள்ள 2,035 பெண்களிடம் கருத்துக் கேட்கப்பட்டது.

  • இதில் 62 % பட்டப்படிப்பு அல்லது அதற்கு மேற்பட்ட கல்வித் தகுதியுடையவர்கள்.
  • மூன்றில் ஒரு பங்கினர் வேலைக்குப் போகிறவர்கள்.
  • 54 % மாணவிகள்.

    அதே நகர்களில் 517 ஆண்களிடம் சர்வே நடத்தப்பட்டது. அதே வயதுடைய பெண்களிடமிருந்து இந்த ஆண்களின் கருத்து எப்படி மாறுபட்டதாக இருக்கிறது என்று அறிவதே இதன் நோக்கம். தெருமுனையில் நின்றபடி தகுதியான பெண்களை ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு பிற்பாடு அழைத்து கேள்வித்தாள்கள் தரப்பட்டன. ஆண்களிடம் தெருமுனையிலேயே கேள்விகள் கேட்கப்பட்டன.

    அனைவரிடமும் கேள்வித்தாள்களைத் தந்து அவர்களையே நிரப்பச் சொல்லப்பட்டது. பிறகு அவர்களது பெயர் வெளியாகாமல் இருப்பதை உறுதி செய்ய ஒரு பெட்டியில் விடைகளைப் போடச் சொல்லப்பட்டது.

  • Commander in Chief by ABC TV 

    Commander in Chief by ABC TV Posted by Picasa

    Michigan Governor 

    Michigan Governor Posted by Picasa