ஜூ.வி கட்டுரையிலிருந்து

“மார்ச் மாதம் திருச்சியில் நடக்கவிருக்கும் தி.மு.க. மாநாட்டுக்குள் கூட்டணிப் பேச்சுவார்த்தைகளை முடித்துவிட கருணாநிதி தீர்மானித்து இருக்கிறார். எந்தெந்த தொகுதிகள் யார்யாருக்கு என்பது முடிவாகாவிட்டாலும், குறைந்தபட்சம் யாருக்கு எத்தனை தொகுதிகள் என்பதை முடிவுசெய்வது அவருடைய திட்டம். இதற்காக சோனியாவின் உதவியை நாடியிருக்கிறார் என்பதுதான் லேட்டஸ்ட் தகவல்.

கருணாநிதி, இப்போது ஜெயலலிதாவைவிட கூட்டணிக் கட்சிகளை நினைத்துதான் அதிகம் கவலைப்படுகிறார். அதிக தொகுதிகள்… கூட்டணி ஆட்சி என கலர் கனவுகளில் இருக்கும் கூட்டணித் தலைவர்கள், அவரது திட்டத்துக்குப் பெரும் முட்டுக்கட்டையாக இருக்கிறார்கள்.

மர்மப் பேச்சோடு வளையவரும் வைகோ… கூப்பிட்டாலும் கூட்டணித் தலைவர்கள் கூட்டத்துக்கு வராத ராமதாஸ்… ஏகப்பட்ட கோஷ்டி கானங்களோடு குழப்பத்தில் தவிக்கும் காங்கிரஸ்…தனி ரூட்டில் ஆவர்த்தனம் செய்து வரும் கம்யூனிஸ்ட்கள்… என இவர்கள் எல்லோரையும் சமாளிப்பது பெரிய விஷயமாக இருக்கிறது. ஆனால், இவர்களில் யாராவது ஓரிருவர் வெளியில்போய் எதிரணியில் சேர்ந்தாலும் வெற்றிக்குப் பங்கமாகி விடும் என்பதையும் யோசிக்க வேண்டியிருக்கிறது.”

லயோலா கல்லூரி – கருத்து கணிப்புகள்

சென்னை லயோலா கல்லூரியின் காட்சி தகவலியல் துறை சார்பாக, வரும் சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்து எடுத்த கருத்துக் கணிப்பில், பல ஆச்சரியத் தகவல்கள். அதில் முக்கியமானது 2004_ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் இருந்த மக்கள் மனநிலை, இப்போது தலைகீழாக மாறியிருக்கிறது என்பது. இந்தக் கருத்துக்கணிப்புகள் பற்றி அத்துறைத் தலைவர் பேராசிரியர் டாக்டர் ராஜநாயகத்திடம் பேசினோம்.

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்

பா.ஏகலைவன்

‘‘கடந்த ஐந்தாண்டுகளாக, ஆறு மாதத்திற்கு ஒருமுறை, ‘தமிழக அரசியல் பண்பாட்டு அமைப்பு’ பற்றிய கருத்துக்கணிப்பை, தொடர்ச்சியாக நடத்தி வருகிறோம். அந்த வகையில் கடந்த நவம்பர் மூன்றாம் தேதி முதல் பதினாறாம் தேதி வரையில் ஒரு கட்டமாகவும், ஜனவரி எட்டிலிருந்து பதினாறாம் தேதி ஒரு கட்டமாகவும் சர்வே செய்தோம்.

இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்து, இந்தக் கருத்துக்கணிப்பு முடிவை தயார் செய்திருக்கிறோம். இதில் தொகுதி வாரியாக மேற்கொள்ளவில்லை. எந்தக் கட்சிக்கு எந்த தொகுதி, யார் வேட்பாளர் என்ற பங்கீடு தெரியாத நிலையில், மாவட்டவாரியாக சர்வேயை மேற்கொள்வதுதான் சிறந்தது என செயல்பட்டோம். இதிலும் நீலகிரி மாவட்டத்தை நடைமுறை காரணங்களுக்காகத் தவிர்த்தோம். அதேபோன்று புதுவை மாநிலமும் தவிர்க்கப்பட்டிருக்கிறது.

இந்தக் கருத்துக்கணிப்பில், கேள்விகள் அடங்கிய குறிப்பேடுகளைப் பயன்படுத்தியது ஓர் உதவிக்காகத்தான். மற்றபடி அவர்களின் போக்கிலேயே சகஜமாகப் பேசி, கலந்துரையாடல் அடிப்படையில், அவர்களின் ஆழமான கருத்துப்பதிவு என்ன என்பதையும் கணக்கிலெடுத்தோம். சமூக உளவு ஆய்வியல் முறையில் இது ஒரு முக்கிய அம்சம்.

கடந்த இரண்டாயிரத்து நான்கு, மே மாதம் நடந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிந்தவுடன் ஓர் ஆய்வை தமிழகம் முழுவதும் நடத்தினோம். அப்போது அ.தி.மு.க.விற்குப் பத்தொன்பது சதவிகிதம் மக்கள் ஆதரவு. தி.மு.க.விற்கு ஐம்பத்தேழு சதவிகிதம் ஆதரவு என்று இருந்தது. அதன் பிறகு, தொடர்ச்சியாக நான்கு முறை சர்வேக்கள் நடத்தினோம்.

தற்போது எடுத்த சர்வே முடிவுப்படி, அ.தி.மு.க. படிப்படியாக 33.7 சதவிகிதத்திற்கு உயர்ந்து வலுவாக வளர்ச்சி கண்டிருக்கிறது. தி.மு.க.வோ பழைய செல்வாக்கு நிலையிலிருந்து படிப்படியாகக் குறைந்து, 38.4 சதவிகிதத்தில் இறங்கிவிட்டிருக்கிறது. நான்கு சதவிகிதம்தான் வித்தியாசம். இது வெறும் சதவிகித கண்ணோட்டம் மட்டுமல்ல; அரசியல் போக்கைக் காட்டுவதாகக் கொள்ள வேண்டும்.

தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்களே இருக்கிறது. இதற்குள் அ.தி.மு.க., நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு, இதுவரை பயன்படுத்தி வரும் ‘அணுகு முறையையே பயன்படுத்துமேயானால், மிக எளிதாக தற்போதிருக்கும் நான்கு சதவிகித இடைவெளியைத் தாண்டிவிடும் என்றே சொல்லலாம்.

அ.தி.மு.க. ஆதரவு உயர்வுக்குக் காரணம், இந்த ஆட்சியில் மக்கள் கண்களால் பார்க்கும், நேரடியாக அனுபவபூர்வமாக உணரும் பல நடவடிக்கைகளை எடுத்து வந்ததுதான்.

சுனாமி நிவாரண நிதி, வெள்ள நிவாரண நிதி, விவசாயிகள் கடன் தள்ளுபடி, ப்ளஸ்டூ படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் சைக்கிள், விவசாயிகளுக்கு மோட்டார் பம்ப் லோன், வீரப்பன் உள்ளிட்ட சில சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுத்தது உள்ளிட்ட பலவும், நம்பகத்தன்மை உணர்வை கொடுத்திருப்பதாகக் கூறுகிறார்கள்.

அதே சமயத்தில் வெள்ள நிவாரண நிதி வழங்கும் திட்டத்தில் அதிருப்தியும் உள்ளது. பாதிக்கப்பட்ட பலருக்கும் அது சென்றடையவில்லை. கட்சி சாராத மக்கள் என நாற்பது சதவிகிதம் பேர் இருக்கிறார்கள். இதில் பாதிப்பேருக்கு உதவி கிட்டவில்லை. அ.தி.மு.க. தி.மு.க. என அரசியல் பார்க்காமல், பாதிக்கப்பட்ட எல்லோருக்கும் உதவி என அரசு இயந்திரத்தை முடுக்கிவிட்டால், வரும் தேர்தலுக்குள் நான்கு சதவிகித வித்தியாசம் என்பது பெரிய விஷயமேயில்லை.

இதில் மற்றொரு அம்சத்தையும் கணக்கெடுத்தோம். தி.மு.க., கூட்டணிக் கட்சிகளின் துணை இன்றி தன்னந்தனியாக அ.தி.மு.க.வை எதிர்த்து நின்றால் ஜெயிப்பது கடினமே.

எனவே, தி.மு.க. கூட்டணியிலிருந்து ஒரே ஒரு கட்சி விலகி வந்தாலும் கூட, அ.தி.மு.க.விற்குச் சாதகமான வாய்ப்பாகப் போய்விடும் வாய்ப்பு உள்ளது. இன்றைய அரசியல் சூழ்நிலையில் தி.மு.க., தனது கூட்டணிக் கட்சிகளில் ஒன்றைக்கூட உதாசீனப்படுத்த முடியாது.

இன்னொரு ஆச்சரியமான விஷயம், கட்சிகளில் மூன்றாவது இடம் என்றிருப்பது நடிகர் விஜயகாந்துக்குத்தான் 8.9 சதவிகிதம். இதற்கடுத்துதான் காங்கிரஸ், பா.ம.க., ம.தி.மு.க., கம்யூனிஸ்ட், பா.ஜ.க. என்று சதவிகித அடிப்படையில் வரிசையாக வருகிறது. நடிகர் விஜயகாந்திற்கு இருப்பது ‘பாசிட்டிவ்’ ஓட்டு அல்ல. அவரது ஆளுமை, வசீகரிப்பு, கொள்கை என்பவற்றிற்கானதல்ல.

‘இரண்டு திராவிட கட்சிகளுக்கும் மாறி மாறி ஓட்டுப் போட்டும், அடுத்த பிரதான கட்சியான காங்கிரஸ§ம் இந்த இரண்டுக் கட்சிகளில் யாராவது ஒருவருடன்தான் இருக்கிறது. மூன்றாவதாக, புதிதாக ஒருவர் வரட்டுமே’ என்ற எதிர்ப்பார்ப்பில்தான் இந்த ஆதரவு உள்ளது. இந்த நிலையும் நடிகர் விஜயகாந்த் ஏதாவது ஒரு பெரிய கட்சியுடன் கூட்டணி என முடிவெடுத்தால் மாறிவிடும்.

அதேபோன்று விஜயகாந்திற்கு மட்டுமே இந்த 8.9 சதவிகிதம் ஆதரவு. அவரது கட்சி சார்பாகப் போட்டியிடும் வேட்பாளருக்கு, அந்த சதவிகிதம் இல்லை. எந்த வேட்பாளரை நிறுத்தப் போகிறார்? அவரை எதிர்த்து அந்தத் தொகுதியில் நிற்கும் மாற்றுக் கட்சி வேட்பாளர் யார்? தேர்தலை ஒட்டிய மற்ற பரிவர்த்தனை என்பதையெல்லாம் பொறுத்து, விஜயகாந்த் கட்சி வேட்பாளரின் செல்வாக்கு மேலும் கூடும் குறையும். அவ்வளவுதான்.

சமீபத்தில் அவர் தேனியில் கலந்துகொண்ட கூட்டத்தில் நாங்கள் நேரில் பங்கெடுத்தோம் நல்ல கூட்டம் இருந்தது.

அந்தக் கூட்டத்தில் எண்பது சதவிகிதம் பேர் வேடிக்கை பார்க்க வந்தவர்கள். பத்து சதவிகிதம் பேர் ஆதரவாளர்கள். மீதமுள்ள பத்து சதவிகிதம் பேர் ‘பார்ப்போம்’ என்ற நிலையிலிருப்பவர்களாகத்தான் இருந்தார்கள். விஜயகாந்த் தவிர, வேறு எந்த நடிகர் கட்சி தொடங்கி வந்தாலும் இந்தளவில் அல்லது கூடுதலாகவே கூட்டம் இருக்கும். ஆனால், இந்த அளவு ஆதரவு இருக்குமா என்பது தெரியாது.

இவரால் தனித்து நின்று எந்தத் தொகுதியிலும் வெற்றி பெற முடியாது. ஆனால், தி.மு.க. அ.தி.மு.க. உள்ளிட்ட மற்ற கட்சிகளின் ஓட்டுக்களை சிறு அளவில் பிரிக்க முடியும்.

அதேபோன்று விஜயகாந்த் வருகையால் சாதி அடிப்படையில் வைகோவின் செல்வாக்கு பாதிக்கப்பட்டதாக சர்வேயில் தெரியவில்லை. சாதி அடிப்படையில் பார்த்தால் முதலிடம் வன்னியர்கள். அடுத்து ஆதி திராவிடர் மற்றும் முக்குலத்தோர் என நீண்டு, கடைசியாகத்தான் நாயுடு சமூக ஆதரவு விஜயகாந்திற்கு வருகிறது.

தி.மு.க.வின் படிப்படியான சரிவுக்குக் காரணம் என்பது, யதார்த்தத்தில் இயற்கையாக நடக்கக் கூடியதுதான். எதிராக இருக்கக் கூடிய அ.தி.மு.க. அரசு, படிப்படியாகச் சில திட்டங்களை அறிவித்து ஆதரவு நிலையைப் பெருக்கிவரும்போது, தி.மு.க. மக்கள் ஆதரவு என்பது, குறையத்தான் செய்யும்.

அடுத்த குறை, தி.மு.க. சார்பாக இப்போது மக்களிடம் நேரடியாகச் சென்றடையும் நலன் பலன் என்று ஏதும் இல்லாததுதான். தொலை தொடர்பு சாதனை செல்போன் சலுகை வசதி என தினந்தோறும் டி.வி.யில் செய்தி வருவதைப் பற்றி மக்களிடம் கேட்டோம்.

மெஜாரிட்டி ஓட்டு வங்கி என்பது கீழ்த்தட்டு, மக்கள்தான். அவர்கள் ‘எல்லாமும் சரி வயிற்றுப் பாட்டுக்கு, சோற்றுக்கு வழி உள்ளதா?’ என்கிறார்கள். வரவேற்கக்கூடிய திட்டங்கள் என்பதற்கு மறுப்பில்லை. அதனால் வாக்காளருக்கு நேரடிப் பயன் என்ன என்ற கேள்வி உள்ளது.

‘‘தமிழ் செம்மொழியாகிவிட்டது. அதனால் எனக்கென்ன பயன்?’ என்கிறார்கள். சேதுசமுத்திரத் திட்டமும் அப்படித்தான். அதனால் நாட்டிற்கு நல்லது. வருவாய் பெருகும். வர்த்தகத்தைக் கூட்டும் என்பதெல்லாம் சரி. அது எப்போது? யாருக்கு? ஓட்டுப் போடும் எங்களுக்கு இப்போது என்ன? என்ற நிலையில் உள்ளார்கள். இப்படி மக்களுக்கு நேரடியான பலன் இல்லாதபடிக்கு தி.மு.க.வின் அணுகுமுறை இருந்துள்ளதைத் தெரிவிக்கிறார்கள்.

அடுத்து, தி.மு.க. கூட்டணி பற்றியது. இப்போது இருக்கும் கூட்டணிக்கு ஆதரவு என்பது மிகமிக குறைவுதான். அது நீடிக்குமா நீடிக்காதா, யார் பிரிந்து செல்வார்கள், யார் விலகுவார்கள், தேர்தலின் போதுதான் கூறமுடியும் என்ற குழப்ப நிலையையே பலரும் தெரிவித்துள்ளார்கள். கடந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிந்தவுடன் எடுத்த ‘கூட்டணி ஒற்றுமை’ பற்றிய கருத்துக் கணிப்பில், அபாரமான ஆதரவு இருந்தது. இப்போது சுத்தமாக குறைந்து, சுமார் இருபது சதவிகிதம் பேர்தான் இந்தக் கூட்டணியே நீடிக்கும் என்கிறார்கள்.

தி.மு.க. ஆதரவு சரிவுக்கு இதுவும் ஒரு காரணம். அவர்களுக்குள் ஒருமித்த கருத்து இல்லை என்று மக்கள் மத்தியில் பரவிக் கிடக்கிறது. ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் தமிழகத்தில் ஆளும் கட்சியான அ.தி.மு.க. மேல் அதிருப்தியை விட, திருப்தி அதிகம் இருக்கிறது. தமிழ்நாட்டில் எதிர்க்கட்சி, மத்திய ஆட்சியில் உள்ள கூட்டணிக் கட்சி என இருக்கும் தி.மு.க.வைப் பார்க்கும்போது, அதிருப்தி என்று எதுவும் இல்லை. சிக்கலான நிலைதான். ஆளும் கட்சிக்கு எதிர்ப்பலை என இருக்க வேண்டும். அல்லது அந்தவித எதிர்ப்பலைக்கான சாத்தியமும் தெரிய வேண்டும். ஆனால், அ.தி.மு.க.விற்கு அப்படி ஏதும் இல்லை. அதேபோல தி.மு.க. ஆதரவு அலையும் இல்லை. இன்றைய தேர்தல் களத்தின் விநோத சூழ்நிலை இதுதான். அடுத்து வரும் இரண்டு, மூன்று மாதத்தில் பெரிய டிரெண்ட் ஏதும் நிகழாதபட்சத்தில், இப்போதைய மக்கள் போக்கில் மாற்றமிருக்காது. அ.தி.மு.க.விற்கு அதிகரித்து வரும் செல்வாக்கு என்ற போக்கு, தி.மு.க.விற்குச் சரிவு ஏற்படலாம், என்ற போக்கு. அதுதான் நீடிக்கும்.

அதேபோன்று வரும் சட்டமன்றத் தேர்தலில் மூன்றாவது அணி உருவாகி களம் குதித்தால், அதுவும் அ.தி.மு.க.விற்குத்தான் சாதகமாக முடியும். வெற்றி என்பது ஒரே ஒரு ஓட்டு வித்தியாசம். என்றாலும், நிச்சயிக்கக்கூடியதுதான். தி.மு.க.வின் தற்போதைய பலம், அதன் கூட்டணியின் பலமே. இதில் மூன்றாவது அணி என்றால், தி.மு.க. கூட்டணியிலிருந்து ஏதாவது ஒரு பிரதான கட்சி அதிலிருந்து வெளியேறும். இது நடந்தால் வாக்கு சதவிகிதம் குறையும். வெற்றி, அ.தி.மு.க.வுக்கு சாதகமாக அமையும்.’’ என்று முடித்தார் ராஜநாயகம்.

அடுத்த முதல்வர் யார்? என்ற 2005 மே மாத கருத்துக் கணிப்பில், பதினைந்து புள்ளிகள் வித்தியாசத்தில் கருணாநிதி முன்னணியில் இருந்தார். இதே கணிப்பில் அந்த இடைவெளி வெகுவாகக் குறைந்துள்ளது. கருணாநிதிக்கு 87.46 புள்ளிகள். ஜெயலலிதாவிற்கு 82.09 புள்ளிகள். இது ‘திறமை.’ அடிப்படைக்கு எடுத்தது. ‘வாய்ப்பு’ என எடுத்ததில் கருணாநிதிக்கு 81.98 புள்ளிகள். ஜெயலலிதாவிற்கு 78.07 புள்ளிகள். சுமாராக நான்கு புள்ளிகள்தான் வித்தியாசம்.

இதில் மூன்றாவது இடம் நடிகர் விஜயகாந்த் கட்சிக்கு. ‘திறமை ’அடிப்படையில் 32.27 புள்ளிகளும் ‘வாய்ப்பு’ ரீதியில் 30.19 புள்ளிகளும் எடுத்திருக்கிறார். அதாவது, மாற்றுக் கட்சி இருந்தால் நன்றாக இருக்கும் எனக் கருதபவர்கள்தான் இவர்கள்.

மக்கள் இன்றைக்கு ஓட்டுப்போட்டால், தி.மு.க.விற்கு 38.4 சதவிகிதம் அ.தி.மு.க.விற்கு 33.7 சதவிகிதம் (வித்தியாசம் 4 சதவிகிதம்) விஜயகாந்திற்கு 8.9 சதவிகிதம், காங்கிரஸ§க்கு 4.7, அடுத்து பா.ம.க., ம.தி.மு.க., கம்யூனிஸ்ட்டும், பா.ஜ.க.வும் உள்ளன.

சிறுசிறு கட்சிகளுக்கு .2 சதவிகிதம். வாக்களிக்க விரும்பாதவர்கள் 10 சதவிகிதம்.

மகளிர் சுய உதவிக்குழுக்கள் கிராமங்கள் தோறும் ‘தன்னம்பிக்கை’க் களமாக வளர்ந்துள்ளன. இவர்களின் ஆதரவு என்பதும் அ.தி.மு.க.விற்குத்தான் அதிகம். பெண்கள் ஓட்டுக்கள் அதிகப்படியாக அ.தி.மு.க.விற்குத்தான்.

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்

http://www.kumudam.com/reporter/260106/pg1.php

பா.ஏகலைவன்

கூடிய விரைவில்

அடுத்த தேர்தல்தான்; வேறு என்ன!

ஜனவரி மாதத்தில் தமிழ் பதிவர் வட்டத்தில் பெரிதும் அல(விளா)சப்பட்ட கருத்து எது?

  1. ஹஜ் உயிரிழப்பு விபத்து
  2. காந்தியும் கோட்ஸேயும்
  3. பொங்கல் திரைப்படங்கள்
  4. தமிழ்மணம் கருவிப்பட்டி
  5. சண்டக்கோழி – எஸ் ராமகிருஷ்ணன் – குட்டி ரேவதி
  6. தாம்ப்ராஸ் – சுஜாதா
  7. புத்தகக் கண்காட்சி
  8. எஸ்.சி.வி. – சன் டிவி – கேபிள்
  9. கருத்துக்கணிப்புகள்

விடுபட்டவைகளையும் மறந்து போனவைகளையும் பின்னூட்டமிடவும். நன்றிகள்.


|

ரங் தே பஸந்தி

வாராரு வாராரு

மங்கள் பாண்டே தோல்விக்குப் பின் நாற்பது வயது ஆமீர் கான் இருபத்தைந்து வயது பஞ்சாபியாக (நிஜமாகவே பார்ப்பதற்கு ‘பாய்ஸ்’ சித்தார்த்துக்குத் தம்பி மாதிரிதான் இருக்கிறார்) அடுத்த படத்தில் வருகிறார்.

படம் பார்த்துவிட்டு மிச்ச புராணங்களைத் தொடர்கிறேன்


|

My Life My Election

எல்லாரும் சேரியமாய தேர்தல் அலசல் கொடுக்கிறார்கள். இப்போதைக்கு மேலோட்டமாய் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் ஸ்டைலில் பயோடேட்டா போட்டுப் பழகுகிறேன்.

முதலைமைச்சர் ஜெயலலிதா

மழலைப்பருவ லட்சியம்: பெரிய படிப்பு

முதல் வேலை: சினிமா நடிகை

கடைசியாக வாங்கியது: பா.ம.க. எம்.எல்.ஏக்கள்

செல்லமான மோகம்: அசையா சொத்துக்கள்

அசை போடும் நிகழ்வு: இறுதி ஊர்வலத்தில் தள்ளப்பட்டது

பிடித்த பாடல்: ‘அம்மாவும் நீயே அப்பாவும் நீயே அன்புடனே ஆதரிக்கும் தெய்வமும் நீயே’

விடுமுறை வாசஸ்தலம்: மக்களின் மனது அல்ல.

கனவு: என்றும் முதல்வர்

உவகை தரும் பெருமிதம்: கருணாநிதியை நள்ளிரவில் கைது

மிகப் பெரிய சவால்: பொதுஜனத்திற்கு மறதியைக் கொடுப்பது

அலாரம்: பாராளுமன்ற தேர்தல்

குறையில்லாத நாள்: கலைஞர் அறிக்கை விடும் நாளெல்லாம்

திரைப்படம்: இருவர்

லட்சிய நபர்: ஜெ. ஜெயலலிதா

என் வாழ்க்கை: விமரிசனத்துக்கு அப்பாற்பட்டது


|

தமிழக அரசியல் களம்

தமிழக அரசியல் களம் நாளுக்கு நாள் சூடாகிக்கொண்டிருக்கிறது. ஒரு புறம் கேபிள் டிவி மசோதா, இன்னோரு பக்கம் மிடாஸ் மதுபான ஆலை ரெய்டு, இன்னோர் பக்கம் கார்த்திக், விஜயகாந்த் போன்றோரின் பயணங்கள், பேச்சுகள், ம.தி.மு.கவின் வீர சவால்கள், ஜாதிக்கட்சிகளின் முழக்கங்கள்.

இன்னும் 3.5 மாதங்களே தேர்தலுக்கு இருக்கும் நிலையில் ஜெ.அரசோ கஜானா காலியானாலும் பரவாயில்லை என சலுகைகளையும் அறிக்கைகளையும் அள்ளி வீசுகிறது. எல்லாமே ‘என் அரசு’ – ‘நான் செய்தேன்’ என ஒருவரின் பிரதாபமே பெருமளவில் பேசப்படுகிறது. டீம் வொர்க் எனப்படும் பேச்சுக்கே இடமில்லை போல.

வரும் பதிவுகளில் நாளொரு தினமும் வரும் சில தலைப்புச் செய்திகளும், சில யூகங்களும், சில உள்குத்து விவகாரங்களும் இணைய வழிச் செய்திகள் மூலம் அறியத் தரலாம்.

தமிழ்மணம் புது திரட்டியில் பழைய பரபரப்பு இல்லை என்பதாலோ என்னவோ பல பதிவுகள் படிக்கப்படுகிறதா – கவனிக்கப்படுகிறதா – எத்தனை பேர் இந்த தேர்தல் பதிவுகளைப் படிக்கிறார்கள் அல்லது ஆர்வமுடன் கவனிக்கிறார்கள் என்பது தெரியவில்லை. என்ன மாதிரி அலசல்கள் அல்லது செய்திகள் வரவேற்கப்படும் என்பது போகப் போகத் தெரியுமென நினைக்கிறேன்.

தமிழக அரசியல் என்றாலே தி.மு.க, அதிமுக, காங்கிரஸ், பா.ம.க, மதிமுக, தேமுதிக இவர்களின் வீரப் பேச்சுகள் என களை கட்டும் என்றே நினைக்கிறேன்.

நேற்று CNN-IBN, Centre for the Study of Developing Societies மற்றும் ஹிந்துஸ்தான் டைம்ஸ் நடத்திய கருத்துக் கணிப்பின் முடிவுகளைப் பகிர்ந்து கொண்டார்கள். இதில் தமிழகம் சம்பந்தப்பட்ட எந்த செய்தியும் இல்லை. டாப் 3/6 அல்லது கடைசி 3ல் கூட தமிழக அரசோ, முதல்வரோ இல்லை என்பது ஆச்சரியம். (சில மாதங்கள் முன்பு இந்தியா டுடே நடத்திய கணிப்பில் தமிழக அரசு /முதல்வர் கடைசி சில இடங்களில் இருந்த ஞாபகம்). சில நாட்கள் முன்பு லயோலா கல்லூரி கணிப்புகள் அதிமுகவுக்கு ஆதரவாக நிலை இருப்பதாக தெரிவித்தது. சென்ற முறை லயோலா கணிப்பு திமுக கூட்டணிக்கு ஆதரவாய் தெரிவித்தது.

பார்க்கலாம்.

State of the Nation survey by CNN-IBN
சிறந்த முதலமைச்சராக கணிப்பில் தேர்ந்தவர்கள்
1. நிதீஷ் குமார் (ஹனிமூன் பீரியட் என வர்ணித்தனர்) (பீஹார்)
2. புத்ததேவ் பட்டாசார்யா (மேற்கு வங்காளம்)
3. ஷீலா தீக்ஷித் (புதுடெல்லி)

4, 5, 6 இடங்கள்
பிஜு பட்நாயக் (ஒரிஸ்ஸா), ராஜசேகர் ரெட்டி (ஆந்திரம்), நரேந்திர மோடி (குஜராத்)

மோசமான முதல்வர்கள் பட்டியலில் – முலாயம் சிங் யாதவ் (உத்திர பிரதேசம்), அமரீந்தர் சிங் (பஞ்சாப்), சிவராஜ் சிங் சௌஹான் (மத்திய பிரதேசம்).

– அலெக்ஸ் பாண்டியன்
24-ஜனவரி 2006

SMS அன்பர் போட்டி

குறுமொழி & நெடுங்காதல் : காதல் பலவகைப்படும்.

சங்க காலத்துக் காதல் இலக்கணத்துக்குட்ப்பட்டது. வெண்பா, கழிநெடிலடி ஆசிரியப்பா, என்று அளவை போட்டு முறைப்பெயராக எழுதுவார்கள். இலக்கியத்தரமாய் வார்த்தைகள் கொண்டிருத்தல் தெரிநிலை வினை.

சீவகசிந்தாமணியில் இருந்து எடுத்துக்காட்டு:

ஆணை ஆணை அகலுமின் நீர் என
வேணுக் கோலின் மிடைந்தவர் ஒற்றலின்
ஆணையின்று எமதே என்று அணிநகர்
காணும் காதலில் கண் நெருக்கு உற்றவே

இறைவனை நோக்கிப் பெரும்பாலும் காதல்வயப்பட்டார்கள். பதினோராம் திருமுறையில் இருந்து:

தங்கிய துவர்ப்பூ ஏற்றி இறைச்சியில்
பெரிதும் போனகம் படைத்துப் பிரானைக்
கண்டுகண் டுள்ளங் கசிந்து காதலில்
கொண்டதோர் கூத்துமுன் ஆடிக் குரைகழல்
அன்பொடும் இறுக இறைஞ்சி ஆரா

எதுகை மோனையும் மீட்டரும் தாளமும் துள்ளி விளையாடும். கம்பராமாயணத்தில் இருந்து:

நங்கை அங்கு ஒரு பொன், ‘நயந்தார் உயத்
தங்கள் இன் உயிரும் கொடுத்தார் தமர்;
எங்கள் இன் உயிர் எங்களுக்கு ஈகலா
வெம் கண் என்கண் விளைந்தது இவற்கு?’ என்றாள்.

அடுத்த காதல் புதுக்கவிதை. நிறைய நிறுத்தற்குறிகள்……….. சொல்லாத சொற்களை fill in the blanks போட்டுக் கொள்ளும்.

பா.விஜய் எழுதிய ‘உடைந்த நிலாக்கள்’ தொகுப்பில் இருந்து உதாரணத்தைப் பார்க்கலாம்:

“நள்ளிரவு… நிலா… பூந்தென்றல்…
யாழ் இசை… பிருத்விராஜன்… சம்யுக்தை…
பார்த்தல்… அழைத்தல்… தீண்டல்…
தடவல்… சுவைத்தல்… கலத்தல்…” (பக். 99)

‘ஜூனூன்’ தரமாய் வாயசைப்பிற்கு ஏற்ற முன்பின் வார்த்தைகள் கொண்டிருக்கும். அப்துல் ரகுமானை துணைக்கு அழைத்துக் கொள்ளலாம்:

“ஞாபக முட்கள்
காயங்களைச் சுட்டி
வட்டமிடும்
என் ஏகாந்தத்தின்
இதயத் துடிப்பாக.
பிரிந்து சென்ற உன்
காலடி ஓசை”

சாதாரண வார்த்தைக் கோர்ப்பு, தானியங்கி எழுத்தாக எழுச்சியடைந்து, வினோதச் சொற் சேர்க்கையில் உதிக்கும் படிமங்களாக உருவடைந்து காதலர்களுக்கு புதுக் குறியீடுகளைக் கொடுத்தது. விக்ரமாதித்யனில் இருந்து:

“கட்டில்
செய்யலாம்

கப்பல்
செய்யலாம்

கணக்கு
செய்யலாம்

கவிதை
செய்யமுடியுமா”

இலக்கிய வார்த்தைகள் மேல் பிரேமை கொண்டது. அபியில் இருந்து ஒரு உதாரணம்:

“பிரக்ஞையின்
அறாவிழிப்பு

இரவிலி நெடுயுகம்
இடந்தொலைத்த ஆழ்வெளி

சிறையிருப்பது
காலமும்தான்”

பொன்மொழிகள் கவிதைகளாகக் கருதப்பட்டது. அறிவுமதி கைகொடுக்கிறார்:

“காமத்தாலான
பிரபஞ்சத்தில்
நட்பைச்
சுவாசித்தல்
அவ்வளவு
எளிதன்று”

சமீப காலம் வரை C++ நிரல் எழுதுவது போல் பொருட்களின் குணாதிசயங்களை ஹைகூவாக்கி காதல் சொன்னார்கள். கணையாழியில் வெளிவந்த சந்திரலேகாவின் (மார்ச், 1991) ஹைக்கூ:

“என் வீட்டுக்கு வா
என்னிடம் பாயில்லை போட
என் கண்ணின் இமையில் உட்காரு.”

ஆனால், ஹைக்கூவிற்கும் வில்லன்கள் வந்தார்கள். முதல் வரியில் இம்புட்டு ஓசை; மூன்றாம் வரியைத் தாண்டி நான்கு ரன்களுகு செல்லக் கூடாது என்று கட்டளைகள் வந்து கொண்டிருக்கிறது.

காதல் போன்ற கட்டுபாடுகளற்ற மகிழ்ச்சிக்கு ஏற்ற உருவம் எஸ்.எம்.எஸ்.(SMS). பேருந்து நிறுத்தத்தில் காத்திருக்கும் போது தோன்றியதை உடனடியாக தோழிக்கு அனுப்பலாம். பின்னால் முடிச்சுப் போட்ட துப்பட்டாவுடன் ஸ்கூட்டியில் சிக்னலுக்காக நிற்கும்போது மனதில் உதிப்பதை தோழருக்கு அஞ்சல் செய்யலாம். நண்பர்கள் அனுப்புவதை மேம்படுத்தி, ஃபார்வார்ட் செய்யலாம்.

நவீன காலத்துக்கு குறுமொழியே சிறந்ததாக விளங்குவதால், காதலர் தினத்தை முன்னிட்டு தமிழோவியமும் ‘குறுமொழி & நெடுங்காதல்’ போட்டிக்கு தங்களின் எஸ்.எம்.எஸ். காதல்மொழிகளை அனுப்புமாறு அழைக்கிறது.

எஸ்.எம்.எஸ்.ஸின் மூர்த்தி சிறிதாக இருந்தாலும், எளிதாக அனுப்புநரை சென்றடைவதால் கீர்த்தி பெரிது.

மேலும் விவரங்களுக்கு….


சொந்தமாக உல்டா செய்த சில எஸ்.எம்.எஸ்.கள்….

தீபாவளி லைட்ஃபுல்,
பொங்கல் ஸ்வீட்ஃபுல்,
ஹோலி கலர்ஃபுல்,
ஃபிரண்ட்ஷிப் பவர்ஃபுல்,
நீ இருந்தால் லைஃப் ஃபுல்!
————————————

தேங்காய், பழம், ஊதுபத்தியோட
எல்லாரும்
கோயிலுக்குப் போவாங்க…
நான் மட்டும்
உன்னோடுதான்
போவேன்
————————————

அறுத்து எடுத்தாத்தான் நெல்லு!
அடிக்கடி விளக்கினாத்தான் பல்லு!
அம்பு விட்டாத்தான் வில்லு!
அன்பே முத்தம் கொடுத்தாதான் காதலு!


| |

Vinod Tamil Channel Vimarasanam in Thuklaq 

Vinod Tamil Channel Vimarasanam in Thuklaq Posted by Picasa

Vinodh Reviews Tamil Chinnathirai in Thuglak 

Vinodh Reviews Tamil Chinnathirai in Thuglak Posted by Picasa

Vijayganth Updates on Southern Tamil Nadu District…

Vijayganth Updates on Southern Tamil Nadu Districts & TN Police Overcomes Railway Fines Posted by Picasa