ஜனவரி அமுதசுரபி

ஜனவரி மாத அமுதசுரபியில் எஸ். வி. ராமகிருஷ்ணன் எழுதிய அந்தக்கால சென்னை நினைவலைகள், பாரதி மணியின் ‘சிரிப்புத்தான் வருகுதையா’ என்று பாராளுமன்ற உறுப்பினர்கள் குறித்த அலசல் இரண்டையும் விரும்பிப் படித்தேன்.

மேலும் குறிப்பிடத்தக்க சில பகுதிகள்:

திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
சென்னையில் வரலாறு காணாத வெள்ளம்… உங்கள் கடந்த கால நினைவு? – ஆர். கோபிநாத், ஈரோடு

எம்.ஜி.ஆர். எங்கு சென்றாலும் மக்கள் வெள்ளம் அவரைச் சூழும். 1985-ல் சென்னையில் கடும்மழை பெய்தபோது எம்.ஜி.ஆரின் ராமாபுரம் இல்லத்தை நிஜ வெள்ளம் சூழ்ந்தது. படகில் ஏறிக்குடும்பத்தாரோடு பிரதான சாலை வந்தார். அண்ணாசாலை கன்னிமாரா உணவகத்தில் அறையெடுத்து சில நாட்கள் தங்கினார்.


இந்திரா பார்த்தசாரதி இப்போது ஷேக்ஸ்பியரின் டெம்ப்பஸ்ட் நாடகத்தைத் தழுவித் தமிழில் ஒரு முழுநீள நாடகம் எழுதியுள்ளார். பெயர் சூறாவளி. பிரிட்டிஷ் கவுன்சில் ஆதரவுடன் அதை மேடையேற்ற முயன்று வருகிறார் புதுவைப் பேராசிரியர் ஆறுமுகம்.


விற்பனையில் சாதனை
வானதி பதிப்பகம்வானதி திருநாவுக்கரசு : ஒவ்வொரு நாளும் பதிப்பகம் திறந்தவுடன் வாசகர்கள் கேட்கும் நூல்களான ஸ்ரீ காஞ்சி மகாசுவாமிகள் எழுதிய தெய்வத்தின் குரல் என்ற நூலைச் சொல்வதா, மூதறிஞர் ராஜாஜியின் இராமாயணம், மகாபாரதத்தைச் சொல்வதா, முக்கூராரின் குறையொன்று மில்லையைச் சொல்வதா, கவிஞர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதத்தைச் சொல்வதா, சாண்டில்யனின் வரலாற்று நாவல்களைச் சொல்வதா, அமரர் கல்கியின் நூல்களைச் சொல்வதா என்று திகைப்புத்தான் மேலிட்டது. “தெம்புக்குப் படிங்க” என்ற தலைப்பில் வெளியாகியுள்ள நூல். தென்கச்சி சுவாமிநாதன் எழுதிய இந்நூல் வாசகர்களிடையே அமோக வரவேற்பைப் பெற்று வருகிறது.

நர்மதா பதிப்பகம்டி. இராமலிங்கம் : அறுபது தமிழறிஞர்களின் வாழ்வை எளிய முறையில் விவரிக்கும் நூல். தமிழ்ப்பிரியன் எழுதிய இரு நூற்றாண்டுகளும் 50 தமிழறிஞர்களும் என்ற நூல்.

நிவேதிதா பதிப்பகம்தேவகி : தா.பாண்டியனின் “நெல்சன் மண்டேலா”, சிட்டியின் “மண்ணாங்கட்டி” நரசய்யாவின் “கடலோடி” ஆகியவை குறிப்பிடத்தக்கவை. ரசிகமணி டி.கே.சியின் கடிதங்கள் என்ற நூல் எங்களை மிகவும் பரவசப்படுத்திய ஒன்று. ரசிகமணி, அவரது ஆத்ம நண்பரும், ஐ.ஏ.எஸ் அதிகாரியும், படைப்பாளியுமான பாஸ்கரத் தொண்டைமானுக்கு எழுதிய பல கடிதங்களின் தொகுப்பு அது.


நீல பத்மநாபனின் எழுத்துலகம் : முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால், அடுத்தடுத்து வெளிவந்த “தலை முறைகள்” “பள்ளி கொண்டபுரம்” – இரண்டு நாவல்களையும் நேரடியாகவே நூலாக வெளியிட்டுத் தமிழ் இலக்கிய உலகில் தமக்கென்று ஒரு தனியான இடத்தை உருவாக்கிக் கொண்டவர். நாகர்கோயிலில் பிறந்து, திருவனந்தபுரத்துக்கு இடம் பெயர்ந்த நீல பத்மநாபன். மலையாள மொழிக் கவிஞர் அய்யப்பப் பணிக்கரின் கவிதைகளைத் தமிழில் மொழி பெயர்த்தமைக்காக 2003 ஆண்டுக்கான சாஹித்ய அகாதமியின் மொழிபெயர்ப்பாளர் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது.

“தேரோடும் வீதி” என்று பெரிய அளவில் ஒரு நாவலை எழுதினார். அதற்குப் பிறகுதான் நுணுக்கமான விஷயங்களை ஆன்மீக நோக்கில் எழுதிய “கூண்டுக்குள் பக்ஷிகள்” வெயியானது. முதலில் மலையாள மொழியில் “கேரள கௌமுதி” இதழில் தொடராக வந்து நூல்வடிவம் பெற்றது. கடைசியாக எழுதி வெளிவந்த நாவல் “கூண்டுக்குள் பக்ஷிகள்”.

கணிசமான இடைவெளிக்குப் பிறகு இப்போது இவர் எழுதி முடித்திருக்கும் நாவல் “இலையுதிர் காலம்” என்பது. இதுவும் வானதி வெளியீடு.

“கூண்டுக்குள் பக்ஷிகள் நாவலை எழுதிமுடித்த பின்னர் இருக்கும் ‘நான்’ வேறு, அதை எழுதுவதற்கு முன்னால் இருந்த நான்வேறு” என்கிறார் நீலபத்மநாபன். நான்கு ஆண்டுகள் உழைப்பில் அந்த நாவல் உருவானதன் விளைவாய்த் தனக்குள் ஒரு முதிர்ச்சி ஏற்பட்டிருப்பதாய்ச் சொல்கிறார்.

“சக்தியை விரயம் பண்ணாமல் சமநிலையோடு வைத்துப் பார்ப்பதுதான் ஆன்மீகம். நாம் எதிர் வினையாற்றி என்ன ஆகப் போகிறது? நல்லதை கேட்டும் பார்த்தும் மகிழ்வோம் என்கிற திருப்தி வந்துவிட்டது”.


கண.சிற்சபேசன் : ஒரு கெட்ட வழக்கம் உண்டு. ஒருவன் வந்து “ஐயா அவர்களைத் தலைமை தாங்க நான் முன் மொழிகிறேன்” என்பான். அடுத்து மற்றொருவன் வந்து “நான் வழிமொழிகிறேன்” என்பான். இதே முறையில் ஒருவன் வந்து “நான் முன் மொழிகிறேன்” என்றான். அடுத்ததாக ஒருவன் வந்தான்.

சோமசுந்தர பாரதியார் அவனைத் தடுத்து “நிறுத்து, அடுத்து நீ என்ன சொல்லப் போறே. வழி மொழிகிறேன்னு சொல்லப்போறியா. நாங்க வர்ற வழியையே ஒழுங்கா மொழியல. ஊரெல்லாம் சுற்றிக்கொண்டு வருவதற்குள் நாங்க பட்ட பாடு எங்களுக்கில்ல தெரியும். ஒழுங்கா நாகலாபுரம்னு சொல்லாததனால நாலாபுறமும் தேடவேண்டியதாகி விட்டது” என்று ஒரு போடு போட்டார்.


நினைவலைகள்: மறக்க முடியாத அப்பா
பா.திருநாராயணன் (நா. பார்த்த சாரதியின் புதல்வர்) : தன்னுடைய கையேட்டில் அவர் தன்னைக் கவர்ந்த, பாதித்த விஷயங்களைப் பற்றிக் குறிப்பு எடுத்துக் கொள்வார். பின்னாளில் அவைகள் அவருடைய கதைகளில் பிரதிபலிக்கும். அவர் தினசரி நாட்குறிப்பு எழுதும் பழக்கம் உள்ளவர். ஒரு நாள் கூட நாட்குறிப்பு எழுதத் தவறியது கிடையாது.

அகிலன் கண்ணன் (அகிலனின் புதல்வர்) : கோவி மணிசேகரன் குமுதத்தில் மயிலிறகு என்ற சரித்திர நாவலை எழுதிவந்தார். இரண்டு மூன்று இதழ்களைப் படித்து, எழுதிய ஆசிரியரையும் வெளியிட்ட குமுதம் இதழையும் ஒரு வாசகராகப் பாராட்டி கடிதம் எழுதினார். நா.பா. எழுத ஆரம்பித்தவுடனேயே அந்த எழுத்துக்களைக் கூர்ந்து படித்துப் பாராட்டினார். “எங்கே போகிறோம்” என்ற அரசியல் நாவல் தமிழக அரசியல் போக்குகளை விமர்சித்து எழுதப்பட்ட நாவல். காமராஜர், “நம்ம அகிலன்” இப்படி எழுதிவிட்டாரே என்று வருத்தப்பட்டு தந்தையையும் எனது மாமனார் கண.முத்தையா அவர்களையும் அழைத்துப் பேசினார். கலைஞர் இதே நாவலைப் பற்றிப் பேசும் பொழுது எங்களை விமர்சித்து எழுதினாலும் அகிலனின் தமிழின் நடையை ரசித்தோம் என்பது போல் குறிப்பிட்டார்.

ரவிசுவாமிநாதன் (கோமல் சுவாமிநாதனின் புதல்வர்) : பொதுவாக 20 வயதுக்குள் நமக்குள் படிந்த மனநிலை எண்ணங்கள் தான் வாழ்நாள் வரை நீடித்து வரும். இந்தக் கருத்து ஏற்றத்திற்கு முக்கியமாகப் பங்களிப்பவர்கள் பெற்றோர்கள். அவருக்கு முரண்பட்ட கருத்துகளை, அவரிடம் தாராளமாக விவாதிக்கலாம். அது அரசியலாகட்டும், ஆன்மீகமாகட்டும், சினிமா வாகட்டும் ஏன் நம் படிப்பு சம்பந்தமாகட்டும் தனக்கு முரண்பாடான கருத்துக்களைக் கேட்டறிந்து தன் கருத்தை மென்மையாக எடுத்துக் கூறி ஒரு மனோதத்துவ நிபுணர் போல நம்மையே முடிவெடுக்கச் செய்துவிடுவார்.


| |

Tower 35,990 Champagne Glasses 

Tower 35,990 Champagne Glasses Posted by Picasa

ஆங்கிலப் புத்தகங்கள்

புத்தகக் கடையில் ஆற அமர அக்கம்பக்கம் பார்த்துக் கொண்டே படிப்பது எனக்கு ரொம்ப விருப்பமான போக்கு. குடும்பம் இந்தியா சுற்றுலா விட்டதால், சனிக்கிழமை முழுக்க பார்டர்ஸ், பார்ன்ஸ் அண்ட் நோபிள் விஜயங்கள். நண்பர்கள் எல்லாம் குழந்தை குட்டிகளுடன் சன் டிவியும், தொலைபேசுதலும், காய்கறி வாங்குதலுமாக உலா செல்ல இருப்பதால் உடன் வர முடியாததற்கு வருந்தியதால், கடையை மூடும் இரவு வரை புத்தகக் கடையிலேயே சென்றது.

நூலகத்தில் பதிவு செய்து புத்தகம் வரும் வரை காத்திருக்க வேண்டாம் என்பது புத்தகக்கடைக்கு செல்வதன் முதல் காரணம். புது புத்தகங்கள் என்ன வந்திருக்கிறது என்று மேய முடியும். நூலகத்தில் இருந்து வரும் புத்தகங்களை மேலோட்டமாகப் படித்து, நிஜமாகவே ‘நான் படிப்பேனா?’ என்பதை அறிந்து வைக்கவும் புரட்டல்கள் உபயோகப்படுகிறது.

என்னைக் கவர்ந்த புத்தகங்கள்:

1. நிக் ஃப்ளின் (Nick Flynn) – Another Bullshit Night in Suck City: A Memoir – உள்ளூர் நூலகத்திலோ நண்பரிடமோ கடன் வாங்கிப் படிக்க வேண்டும்

2. மெக்ஸ்வீனி’ஸ் (Dave Eggers): Created in Darkness by Troubled Americans : The Best of McSweeney’s Humor Category – அமேஸானில் வாங்க வேண்டும்

3. வில்லியம் ஜே மிட்சல் (William J. Mitchell) – Placing Words : Symbols, Space, and the City – நூலகத்தில் எப்பொழுது கிடைக்கிறதோ, அப்பொழுது அவசியம் படிக்க வேண்டும்.

அனைத்துமே லகுவாக படிக்க முடிகின்றது. இயல்பான நகைச்சுவை, தனித்துவமான பார்வை கொண்டது. கடைசியாக….

4. பெர்னார்ட் லூயிஸ் (Bernard Lewis) – What Went Wrong? : The Clash Between Islam and Modernity in the Middle East

தொலைக்காட்சியில் இவருடைய உரையாடல் சமீபத்தில் பார்த்திருந்ததால், தேடி எடுத்து புரட்டிக் கொண்டிருந்தேன்.

  • ஆசிய நாடுகளோ, வளைகுடா நாடுகளோ மேற்கத்திய நாடுகளை வீழ்த்த முடியாது. காட்டாக தளபதி நெப்போலியனின் எகிப்து ஆக்கிரமிப்பை பிரிட்டிஷால்தான் அகற்ற முடிந்தது. உள்ளூர் ராஜாவோ, பக்கத்து ஊர் அரசர்களோ ஃப்ரென்ச்சை ஒன்றுமே செய்ய முடியவில்லை. தொடர்ந்து, ஜெர்மனிக்கும் பிரிட்டிஷுக்கும் சண்டை; அமெரிக்காவுக்கும் ருஷியாவுக்கும் போர் என்றுதான் நடந்து வந்திருக்கிறது. இன்றைய சூழலில் அமெரிக்காவுக்கும் அமெரிக்காவுக்குமே பூசல் நிகழலாம்.
  • அமெரிக்கர்களுக்கு சரித்திரத்தின் மீது அக்கறை கிடையாது; தெரியாது. ஏழாம் நூற்றாண்டில் என்ன நடந்தது, இன்று மற்ற பிரதேசங்களில் என்ன நடக்கிறது என்று அறிந்து கொள்வதில் ஆர்வம் இல்லை.
  • இஸ்லாமிய நாடுகள் அன்றும் இன்றும் ஒரே மாதிரிதான் அரசமைப்பு கொண்டிருக்கிறது. அன்று அரசாங்கத்திடம் பணம் கிடையாது. மக்களிடம் இருந்து கிடைக்கும் வரியை நம்பியதால், மக்களை மதித்து பொதுநலனை கடைபிடித்தார்கள். வருவாயை இன்று எண்ணெய் வாரி வழங்குவதால், குடிமக்கள் மேல் உள்ள சார்புநிலை தவிர்க்கப்படுகிறது.
  • வளைகுடா நாடுகளை மூன்று வகையாகப் பிரிக்கலாம்:
    1. அரசாங்கத்தின் அமெரிக்க ஆதரவு; அதனால் குடிமக்களிடையே அமெரிக்க அதிருப்தி. இதற்கு உதாரணமாக சவூதி அரேபியாவை சொல்கிறார்.

    2. அரசாங்கத்தின் அமெரிக்க எதிர்ப்பு; அதனால் குடிமக்களிடையே அமெரிக்க ஆதரவு. இதற்கு காட்டாக ஈரானை சொல்கிறார்.

    கடைசியாக அரசும் மக்களும் அமெரிக்க ஆதரவு கொடுக்கும் நாடுகளாக துருக்கி, இஸ்ரேல் இருக்கிறது.

  • அமெரிக்காவின் குறிக்கோள் எல்லாம் எண்ணெய் மற்றும் இஸ்ரேலின் நலன் மட்டும்தான். ஜெருசலத்தையும் பெட்ரோலின் மேல் உள்ள ஊன்றுதலையும் தவிர்க்கும் வரை தீவிரவாதத்தை தொடர்ந்து (அமெரிக்காவே) வளர்த்து வருவார்கள்.

    கொசுறு: அமெரிக்காவின் தேசிய புத்தக வட்டம் இந்த வருடத்திற்கான புத்தகப் பரிந்துரைகளை அறிவித்திருக்கிறார்கள். சுயசரிதைப் பிரிவில் விக்ரம் சேத்தும் (Two Lives) ஆட்டத்தில் இருக்கிறார்.


    |

  • Ajith in and as Paramasivam 

    Ajith in and as Paramasivam Posted by Picasa

    Ajeeth in and as Paramasivan 

    Ajeeth in and as Paramasivan Posted by Picasa

    Ajith in and as Paramasivan 

    Ajith in and as Paramasivan Posted by Picasa

    பரமசிவன்

    பரமசிவன் படத்தின் திரை விமர்சனத்தையும் காட்ஃபாதர் படத்தின் திரை முன்னோட்டத்தையும் பார்த்தவுடன் அலைபாய்ந்தவை:

    Ajith in and as ParamasivamAjeeth in and as ParamasivanAjith in and as Paramasivan

  • விவேக்கே நாயகன் ஆக முடியாமல் மீண்டும் ‘சுவத்துக் கீரையை வழிச்சுப் போடுடி, சொரண கெட்ட வெள்ளாடச்சி’ என்று திரும்பிய இந்தக் காலத்தில், நகைச்சுவை நடிகர் வையாபுரிக்கு ஹீரோ வேஷம் போட்டுக் கொடுத்தது யார்?

  • திரைப்படத்தில் சட்டையை அவிழ்த்து காட்டுவதற்கு நல்ல கட்டுமஸ்தான் உடம்பு வேண்டும். செந்தில், பிரபுதேவா, அஜீத் போன்றோர் செய்தால் நகைச்சுவை முயற்சியாகக் கருதபடும். (படையப்பா-வின் ‘What a man’ அப்பாஸ் நிழலாடுகிறதா?)

  • புகை பிடிப்பவர் தடாலடியாக தம் போடுவதை நிறுத்தினால், உடல் பருமனாவார். பருமனைக் குறைப்பதற்கு நல்ல டயடீஷியனை அணுகுவது சிறப்பானது. இல்லையென்றால், அஜீத் போல் எலும்பும் தோலும் ஆகிப் போவோம்.

    | |

  • உலகம் ஹெர்குலிஸ் சைக்கிள்களால் ஆனது

    வேம்பநாட்டுக் காயலில் நான் ரசித்த பகுதிகள்:

  • அந்தக்கால மலையாள நகைச்சுவை நடிகர் பகதூர் மாதிரி கெச்சலான தேகம் சுப்பையாவுக்கு. காக்கி நிஜார், கூம்புத் தொப்பி, மட்கார்ட் இல்லாத ஹெர்குலிஸ் சைக்கிள், பின்னால் துருப்பிடித்த காரியரில் சடம்பு போட்டுக் கட்டிவைத்த லாட்டிக் கம்பு, மூக்குப்பொடி வாடை என்று அறுபதுகளின் அடையாள கான்ஸ்டபிள்.
  • திருப்பாச்சி அருவாளைத் தூக்கிண்டு வாடா அம்பி என்று பிராமணசங்க காலத்துக்கு முற்பட்ட தீர்க்கதரிசனமான அந்த முழக்கத்தைத் தொடர்ந்து. அம்பியானவன் அரிவாளும், தோட்டத்து இளநீருமாக வந்து சேர்ந்தான்.
  • மாடியிலே குடியிருக்கிற பிள்ளாண்டான். பி.டபுள்யூ.டியிலே டென் – ஏ- ஒன் கிளார்க்கா இருக்கான். அப்பப்ப ஊஸ்ட் பண்ணி வேலையிலே சேர்த்துப்பா.
  • போலீஸ்காரனை முறைத்துக் கொள்கிறான் இந்தப் பிள்ளை. பெண் கவிஞரை தூஷித்த எழுத்தாளர் கழுத்தில் துப்பட்டாவை மாட்டி இழுப்பதுபோல், தரதரவென்று இழுத்துப்போய், ஸ்டேஷனில் வௌவால் மாதிரித் தலைகீழாகத் தொங்கவிட்டு விடுவார்கள். (சும்மா, பேச்சுக்குச் சொன்னது இது அந்தக் காலத்தில் காப்பி இருந்தது. கவிஞர்கள் இருந்தார்கள். துப்பட்டா இல்லை.)
  • அந்த சாயந்திரம் கான்ஸ்டபிளுக்கு நகைச்சுவை பற்றி விளக்க என்.ஜி.ஓ பிள்ளையாண்டான் ரகோத்தமன் பட்ட கஷ்டம் போன வாரம் சட்டென்று இதை எழுதுகிறவனுக்கு நினைவு வந்தது.

    நிச்சயமாய் நான் தலையாட்டி — எனக்குத் தோன்றியதை, நான் சொல்வதைவிட சிறப்பாக சொல்லியிருக்காரே என்று நினைத்த எண்ணங்கள்:

    Sub altern, micro history கூறுகளும், காலத்தை இறுக்கி உறைய வைக்கும் புனைவும் கதையாடலும் எல்லாவற்றுக்கும் மேலாக, வாசகனைப் பயமுறுத்தாத நடையுமாக விளங்கும் இவற்றில் பலவும் இன்னும் ஐம்பது வருடம் போனாலும் நிற்கும். Derivative literature சுவடு இல்லாமல் போய்விடும்.

    காராபூந்தி சாப்பிடுதல், நகைச்சுவைக் கட்டுரை எழுதுதல் போன்ற விஷயங்களுக்காக இபிகோ – இலக்கிய பிரொசிஜர் கோட் விதிகளின்படி சகலரையும் கூண்டில் ஏற்றித் தண்டிக்க, தலைமுறை தலைமுறையாக இலக்கிய கான்ஸ்டபிள்கள் அலைந்து கொண்டிருப்பது தமிழ் இலக்கிய சூழலை சுவாரசியமாக்குகிறது என்பதில் மகிழ்ச்சியே.


    | |

  • MLK Day

    “அப்பா… மார்டின் லூதர் கிங் என்ன சொல்லியிருக்கார் தெரியுமா? ‘எனக்கு ப்ரௌவுன் ஸ்கின்; உனக்கு வைட் ஸ்கின் என்று இருந்தால், நாம் இருவரும் தொட்டுக் கொள்ளக் கூடாது’ என்று ஆரம்பித்திருக்கிறார். உனக்குத் தெரியுமா?”

    பள்ளியில் என்ன நடந்தது என்று நான் கேட்டவுடன், அன்று வரைந்த ஓவியத்தையோ, உருவாக்கிய கலைப் பொருளையோ கொண்டு வ்ந்து காட்டுவாள். ஐந்து வயது மகளிடம் அதிகம் கவலை கொள்ள வேண்டாம். இன்று என்ன ஆல்ஃபபெட் படித்தாய், கூட்டல் போடலாமா என்று வீட்டுப் பாடம் திறக்க வேண்டாம். வரைந்ததைக் காட்டியவுடன் மகிழ்வுடன் தலையாட்டி, தாளில் என்ன வெளிவந்திருக்கிறது என்பதை சொன்னால் போதும்.

    மார்ட்டின் லூதர் கிங் தினம் முடிந்த அடுத்த நாள், டாக்டர் கிங்கை குறித்து புத்தகம் படித்திருக்கிறார்கள். அதில்தான் அந்தக் குறிப்பிட்ட சொற்றொடர் இடம் பெற்றிருக்கிறது.

    “அப்படியா… அவர் அந்த மாதிரி சொலியிருக்க மாட்டாரே!”

    காந்தியைக் குறித்தே நான் முழுவதாக அறிந்ததில்லை. Martin Luther King, Jr. குறித்து பிபிஎஸ்ஸில் சில விவரணப் படங்களும், ஆங்காங்கே படித்தும்தான் கேள்வியறிவு.

    “ஃபர்ஸ்ட் அவர் அப்படித்தான் ஆரம்பித்தாராம். அதன் பிறகு தன் கருத்தை மாற்றிக் கொண்டாராம். அப்படித்தான் மிஸஸ் ரைஸ் சொன்னார்கள். நான் சஃபியாவைத் தவிர வேறு யாரையும் தொடக் கூடாதா அப்பா?”

    கொண்டிருந்த கருத்துக்கள் குறிப்பிட்ட காலகட்டத்தில் ஏற்புடையதாக இருந்தாலும், எண்ணங்களை ஒருவர் மாற்றிக் கொண்டாலும், குழந்தைகள் மனதில் பதிவது என்னவோ ‘காந்தி அந்த மாதிரி தப்பு எல்லாம் செஞ்சாரா?’ என்பது போல் எதிர்மறைகள் ஆர்வமாக ஆழமாக உள் அமர்கிறது.

    அமெரிக்காவில் ஒளிவு மறைவில்லாமல் ஒருவரின் வாழ்க்கையின் அனைத்து கூறுகளையும் முன் வைப்பது மகிழ்ச்சியாய் இருக்கிறது.

    கார்ட்டூன் படங்கள் : Cartoonist Keith Knight | Links


    | |

    அள்ளிக் கொடுக்கும் ஜெ

    இந்தியாவில் இருக்கின்ற மாநில அரசுகள் பொறுப்பில்லாமல் தங்கள் வாக்கு வங்கியை தக்க வைத்துக் கொள்ளும் பொருட்டு தேர்தல் நேரங்களில் பல “Populist” நடவடிக்கைகளை அறிவிப்பது வழக்கமான ஒன்றாகி விட்டது. கடந்த தேர்தலின் பொழுது அப்போதைய திமுக அரசு இவ்வாறான பல கவர்ச்சிகரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு தமிழக அரசின் கஜானாவை காலியாக்கியிருந்தது. தற்போதைய அதிமுக அரசின் தொடர் அறிவிப்புகள் வரும் காலங்களில் தமிழகத்தின் நிதி நெருக்கடியை அதிகரிக்க கூடிய நிலைமையை ஏற்படுத்தியுள்ளது. (நேற்று வெளியான சில அறிவிப்புகள் குறித்த செய்திகள் – Hindu, That’s Tamil)

    ஜெயலலிதா 2001 தேர்தலில் வெற்றி பெற்று பதவியேற்ற பொழுது தமிழகத்தின் நிதி நிலை மோசமாக இருந்தது. 1990களில் தமிழகத்தின் பொருளாதாரம் பெரிய வளர்ச்சி இல்லாமல் மந்த நிலையை எட்டியது. மாநிலங்களின் பொருளாதாரத்தை குறிக்ககூடிய Gross State Domestic Product (GSDP) 6.x என்ற நிலையிலே பல வருடங்களாக அப்படியே இருந்தது. இதற்கு அப்பொழுது உலகெங்கிலும் நிலவிய பொருளாதார தேக்க நிலையும் ஒரு காரணம். அதனால் தான் கலைஞரின் ஆட்சியில் சரியான பணப்புழக்கம் இல்லை என்று அப்பொழுது கூறப்பட்டது. திமுகவின் கடந்த தேர்தல் தோல்விக்கு இது கூட ஒரு முக்கிய காரணம்.

    ஜெயலலிதா பதவியேற்ற பொழுது தமிழக அரசின் கஜானா காலியாக இருந்தது. அரசின் கைவசம் பணமே இல்லாத சூழ்நிலை. தமிழக அரசு ரிசர்வ் வங்கிக்கு கொடுக்க வேண்டிய கடன், ஓப்பந்ததாரர்களுக்கும் பிறருக்கும் கொடுக்கவேண்டிய சுமார் 700கோடி போன்றவற்றுக்கு கூட பணம் இல்லாமல் திணறிக் கொண்டிருந்தது. அரசின் கஜானாவில் பணமே இல்லாமல் உடனடியாக கொடுக்க வேண்டிய கடனுக்கும், வட்டிக்கும் கூட மற்றொரு கடன் வாங்கி வட்டியை கட்ட வேண்டிய மோசமான நிலையில் தான் தமிழகத்தின் நிதி நிலைமை இருந்தது.

    தமிழகம் ஒரு “fiscal bankruptcy”யை நோக்கி சென்று கொண்டிருந்தது. இதே நிலை நீடித்தால் தமிழகத்தில் முதலீடு செய்ய எந்த பன்னாட்டு நிறுவனங்களும் முன்வராது என்ற நிலை ஏற்பட்டு இருந்தது.

    திமுக அரசு எடுத்த பல “Populist” அறிவிப்புகள் தான் தமிழகத்தின் நிதிநிலைமைகள் அதளபாதாளத்திற்கு கொண்டு செல்ல முக்கிய காரணம். குறிப்பாக அரசு ஊழியர்களுக்கு 5வது ஊதியக் குழுவின் பரிந்துரையை அமல்படுத்தியது, பென்ஷன் தொகை, அரியர்ஸாக வழங்கப்பட்ட தொகை போன்றவை அரசின் நிதிச்சுமையை அதிகரித்து இருந்தன. திமுக அரசின் இத்தகைய நடவடிக்கைகள் அரசின் மொத்த வருவாயில் சுமார் 94% அரசு ஊழியர்களின் சம்பளம், போனஸ், பென்ஷன் போன்றவற்றுக்கே செலவிடப்படும் சூழ்நிலையை ஏற்படுத்தி இருப்பதாக மாநில அரசு அப்பொழுது வெளியிட்டிருந்த வெள்ளை அறிக்கையில் கூறியிருந்தது.

    இது தவிர தமிழகத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவர்கள், மேலே உள்ளவர்கள் போன்றவை சரியாக முறைப்படுத்தப் படாததால் தமிழக அரசு ரேஷன் கடைகள் மூலம் வழங்கும் பொருட்களுக்கான மானியமாக சுமார் 1600 கோடிக்கும் மேல் செலவிட வேண்டிய சூழ்நிலை இருந்தது. இலவச மின்சாரம் போன்றவற்றால் மற்றொரு கணிசமான தொகையை அரசு இழக்க நேரிட்டது.

    இத்தகைய மோசமான நிதி நெருக்கடியில் இருந்து மீள வேண்டுமானால் தமிழக அரசு நிதிச் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டிய கட்டாய சூழ்நிலையில் தான் ஜெயலலிதா நிதிச் சீர்திருத்தங்களை தொடங்கினார். அரசு ஊழியர்களின் போன்ஸ், சலுகைகள் போன்றவைகள் குறைக்கப்பட்டன, ரேஷன் கார்ட்டுகளில் “H” முத்திரை குத்தம் முறை கொண்டு வரப்பட்டது, அரசு பணிகளுக்கு ஆள் சேர்ப்பது நிறுத்தப்பட்டது, விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் ரத்து செய்யப்பட்டது. இந்த நடவடிக்கைகள் அரசின் நிதி நிலைமைகளை ஓரளவுக்கு மீட்டெடுத்தது என்று சொல்லலாம். இவையெல்லாம் சரியான நடவடிக்கைகளே.

    ஆனால் ஜெயலலிதா தனது வழக்கமான அராஜகபோக்கினால் மேற்கொண்ட மதமாற்ற தடுப்புச் சட்டம், கூட்டணியில் இருந்த பாமக, காங்கிரஸ் போன்ற கட்சிகளை காரியம் ஆனதும் கைகழுவியது, வைகோவை அநியாயமாக கைது செய்து சிறையில் அடைத்தது போன்றவற்றால் திமுக கூட்டணிக்கு வலுச்சேர்த்துக் கொடுத்தார். அதனாலேயே தோல்வியும் அடைந்தார்.

    இந்த தோல்விக்குப் பின் தான் முன்னெடுத்த பல நிதிச் சீர்திருத்தங்களை திரும்பப் பெற்றுக் கொள்ளத் தொடங்கினார்.

    இந்தியாவில் இருக்கின்ற மாநில அரசுகள் நிதிச் சீர்திருத்தங்களையும், வருவாய் பற்றாக்குறைகளையும் குறைக்க சி.ரங்கராஜன் தலைமையில் இருந்த 12வது நிதிக் கமிஷன் (Twelfth Finance Commission) பல்வேறு பரிந்துரைகளை செய்திருந்தது. அதன் பரிந்துரைக்கேற்ப தமிழக அரசும் TAMIL NADU FISCAL RESPONSIBILITY ACT என்ற நிதி சட்டவரைவு ஒன்றை 2003ல் அறிவித்திருந்தது. அதன் படியே நிதி சீர்திருத்தங்களை செய்தது. ஆனாலும் அரசு திரும்பப்பெற்றுக் கொண்ட சில நல்ல நடவடிக்கைகள் அரசின் நிதி நிலையை பெரிய அளவில் முன்னேற்றி விட வில்லை.

    தற்பொழுது தேர்தல் காரணமாக அறிவிக்கப்படும் பல அறிவிப்புகள் ஜெயலலிதா அரசு அறிவித்த TAMIL NADU FISCAL RESPONSIBILITY ACTக்கு எதிராக இருப்பதாகவே எனக்கு தோன்றுகிறது.

    தமிழக அரசின் தற்போதைய நிதி நிலைமை குறித்த விவரங்கள் எனக்கு தெரியவில்லை. தேர்தல் முடிந்து திமுக அரசு அமைந்தால் அது நிச்சயமாக ஒரு வெள்ளை அறிக்கை சமர்ப்பிக்கும். அப்பொழுது தான் சரியான நிலவரம் தெரியவரும். புதிய அரசு அமைந்தால் எல்லாப் பழியையும் பழைய அரசின் மீது சுமத்தி இவ்வாறான வெள்ளை அறிக்கையை சமர்ப்பிப்பது தான் தமிழக அரசியல் கலாச்சாரம். ஆனாலும் திமுக அரசு சில கடுமையான நடவடிக்கைகளை எடுத்தே தீர வேண்டும்.

    அதிமுக அரசு அமைந்தால் அடுத்த சில வருடங்களுக்கு பிரச்சனை இல்லை என்று வழக்கம் போல ஜெயலலிதா சில நடவடிக்கைகளை எடுப்பார்.

    இந்தியாவில் இருக்கின்ற பல மாநில அரசுகள் ஓட்டு வங்கி அரசியல் செய்து கொண்டிருக்கும் வரை இவ்வாறான நிதிப் பிரச்சனைகளுக்கு நீண்ட கால தீர்வு எதுவும் ஏற்படப்போவதாக தெரியவில்லை.