Maxim Kushboo Stuff 

Maxim Kushboo Stuff Posted by Picasa

பிசாசு மொழி

பிசாசு (பின்னூட்ட சாதனையாளர்களின் சுபாவம்)

மின்மடல் அனுப்புவது ஒரு கலை. இரண்டு வரி எழுதினவுடன், பலுக்கப் பிழைகளுக்கு கவலைப்படாமல், தங்கிலீஷில் தட்டச்சி, எலிக்குட்டியை ‘Send’ மேல் வைத்து அழுத்த வேண்டியதுதான்.

ஆனால், கண்ணும் கண்ணும் கொள்ளையடிக்காத இணைய உலகத்தில், முகந்தெரியாத ஒருவரின் கவன ஈர்ப்பைக் கோருவது, வேறு விதிகளை ஆட்டத்திற்கு அழைக்கிறது.

நான் பின்னூட்ட சாதனையாளன் என்று எல்லாரும் அறிவார்கள். மன்ற மைய காலத்தில் ஆரம்பித்து வலைப்பதிவு காலம் வரை மறுமொழிந்தே இலக்கியவாதி ஆகியிருக்கிறேன்.

தன்முனைப்பை விட, எழுத்தார்வத்தை விட, இலக்கிய சேவையை விட, வேலையில்லா அலுவலை விட, இதற்கு பல சுபாவங்கள் தேவை. உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் எனக்கு மகிழ்ச்சியே.

1. முடிந்தவரை கடுமையான மொழியைப் பயன்படுத்தவும். அடைமொழிகளில் விளித்தல் நலம். ஆங்கிலத்தில் நான்கெழுத்து சுடுசொற்களை ஆங்காங்கே தெளிக்கவும். (மறந்தும் தமிழில் திட்டக் கூடாது).

2. வன்கருத்தை முன்வைக்கும்போது அந்த நிலைப்பாட்டை நீங்கள் கடைபிடிப்பதற்கான அவசியம் கிடையாது. தமிழ்ப் புத்தாண்டுக்கு வரப்போகும் படங்களையும் ஜெயமோகன் எழுதும் காவியங்களையும் அனைவரும் பார்க்கவும் படிக்கவுமா போகிறோம்? எனினும் விமர்சிக்கலாம்.

3. ஒரு விஷயத்தை ஒருவர் வரவேற்பது பிடிக்கவில்லையென்றால் ‘ரசிகர் மன்றக் கூட்டம்’ என்று கூப்பிடவும். பாராட்டி எழுதுபவர்கள் பணம் வாங்கிக் கொண்டுதான் எழுதுகிறார்கள் என்று அனுமானித்துக் கொள்ளுங்கள்.

4. எதிர்மறையான் விமர்சனம் என்றால், எழுதியவரை உளவியல் நோய் உள்ளவராக சொல்லுங்கள். நுணுக்கி நுணுக்கி குறை கண்டுபிடித்து பெயர் வாங்கிக் கொள்ளும் கூட்டம் என்று அழையுங்கள்.

5. ஆங்காங்கே பாராட்டுக்களும், சிற்சில இடங்களில் பிழைசுட்டுதலுமாக அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டால், உங்களின் தேவைக்கேற்ப நல்லதையோ கெட்டதையோ மறைத்துக் கொண்டு, செலக்டிவ் அம்னீஷியாவாக மறந்துவிட்டு, #3 அல்லது #4-ஐக் கொண்டு பின்னூட்டமிடுங்கள்.

6. முழு கட்டுரையும் படிக்க வேண்டிய அவசியமில்லை. தொடக்கத்தில் ஒரு வரி ஆட்சேபகரமாக இருந்தாலோ அல்லது மறுமொழிந்தவர்களில் உங்கள் நண்பரின் பதிலை அடியொற்றியோ உங்கள் பின்னூட்டம் அமையலாம். அரைகுறையாக அலசியவுடன் எழும் உணர்ச்சியை உடனடியாக எழுதவேண்டும். யோசித்து எழுதினால் மறந்து போகும் அபாயம் இருக்கிறது.

7. உங்களின் வாதம் எடுபடாத மாதிரி தோன்றினால் ‘எனக்கு தற்போது வேலை அதிகம்’ என்று கூறிவிடுங்கள். கண்ணில் சிக்காமல் பதில் போடாமல் தப்பித்து விடுங்கள். ரொம்பவே தர்மசங்கடமாக இருந்தால் புதுப்பெயரில் உலாவரத் தொடங்குங்கள்.

8. புகழ் பெற்றவரை shadenfraude-ஆக குரலெழுப்புங்கள். மதம், மொழி, இனம், கட்சி, நாடு போன்றவை எடுபடும். திரியைக் கொளுத்திய பிறகு இருபக்கமும் அடித்துக் கொள்வதை ஓரமாக நின்று வேடிக்கை மட்டுமே பார்க்கவேண்டும். மறந்துபோய் கூட வாதத்தில் பங்கு கொள்ளக் கூடாது.

9. எளிமைப்படுத்தலை சகித்துக் கொள்ளாதீர்கள். எடுத்துக்காட்டாக ‘வோர்ட்ப்ரெஸ்.காம் இலவசமாக செயல்படுகிறது’ என்றால் அதற்கு முன்னரே நியூக்ளியஸ் இலவசமாகக் கொடுத்தார்களே என்று நுட்பமான ஆதாரங்களுடன் தவிடு பொடியாக்குங்கள்.

வெற்றிபெற மனதார வாழ்த்துகிறேன்.

இந்தப் பதிவிற்கு உதவியவர்: Pills of the American Internet Neighborhood Society (PAINS)

பிசாசு முறைகள் வெற்றியடையாவிட்டால்: Rules for Making Oneself a Disagreeable Companion


| |

காஷ்மீர்

குடியரசு தின வாழ்த்துக்கள்
Happy Republic Day

எந்த நாய் இந்தியாவைக் குறிக்கிறது என்று சொல்பவருக்கு அல்லது எந்த நாய்க்கு மட்டுமே பூனை சொந்தம் என்று தீர்ப்பளிப்பவருக்கு ‘பூனை’ மின்மடலிடப்படும்


|

ஈகோ

எனக்கு ஈகோ கிடையாது என்றால் பலரும் நம்புவதே இல்லை. யாரென்று குறிப்பிட்டு சொன்னால் மானநஷ்ட வழக்கு விழும் அபாயம் வேறு இருக்கிறது 😉

மூன்றாம் பிறையை நாலாம் நாள் பார்த்ததாலோ என்னவோ ‘பட்ட பழி படாத பழி‘யாக இருக்கிறதே என்னும் தீராக் கவலையுடன் சலித்திருந்தபோதுதான் ஈகோ மேய்ச்சல் கண்ணில் பட்டது.

தேர்தலில்தான் டெபாஸிட் இழந்தோம்.

அகங்காரம், தன்முனைப்பு, தற்புகழ்ச்சி, தற்பெருமை என்று ஏதாவது இருக்கிறதா என்று தேடிப் பார்த்தால்உனக்கு அந்த மாதிரி தன்னலமே கிடையாதே கண்ணா‘ என்று பெரிய முட்டை காண்பித்தார்கள்:

சில முக்கிய வலையகங்களின் கணக்கெடுப்புகள்:

  • விகடன்: 4928 புள்ளிகள்
  • திசைகள்: 6371 புள்ளிகள்
  • தமிழ்மணம்: 14817 புள்ளிகள்
  • நிலாச்சாரல்: 9318 புள்ளிகள்
  • தமிழோவியம்: 10431 புள்ளிகள்

    யார் இனிமேல் ஈகோ ட்ரிப் என்று கதைக்க ஆரம்பித்தாலும் இவர்களை சுட்டி என்னுடைய பொதுப்பணியை முன்வைத்து கதைக்கலாம்


    |

  • ஜூ.வி கட்டுரையிலிருந்து

    “மார்ச் மாதம் திருச்சியில் நடக்கவிருக்கும் தி.மு.க. மாநாட்டுக்குள் கூட்டணிப் பேச்சுவார்த்தைகளை முடித்துவிட கருணாநிதி தீர்மானித்து இருக்கிறார். எந்தெந்த தொகுதிகள் யார்யாருக்கு என்பது முடிவாகாவிட்டாலும், குறைந்தபட்சம் யாருக்கு எத்தனை தொகுதிகள் என்பதை முடிவுசெய்வது அவருடைய திட்டம். இதற்காக சோனியாவின் உதவியை நாடியிருக்கிறார் என்பதுதான் லேட்டஸ்ட் தகவல்.

    கருணாநிதி, இப்போது ஜெயலலிதாவைவிட கூட்டணிக் கட்சிகளை நினைத்துதான் அதிகம் கவலைப்படுகிறார். அதிக தொகுதிகள்… கூட்டணி ஆட்சி என கலர் கனவுகளில் இருக்கும் கூட்டணித் தலைவர்கள், அவரது திட்டத்துக்குப் பெரும் முட்டுக்கட்டையாக இருக்கிறார்கள்.

    மர்மப் பேச்சோடு வளையவரும் வைகோ… கூப்பிட்டாலும் கூட்டணித் தலைவர்கள் கூட்டத்துக்கு வராத ராமதாஸ்… ஏகப்பட்ட கோஷ்டி கானங்களோடு குழப்பத்தில் தவிக்கும் காங்கிரஸ்…தனி ரூட்டில் ஆவர்த்தனம் செய்து வரும் கம்யூனிஸ்ட்கள்… என இவர்கள் எல்லோரையும் சமாளிப்பது பெரிய விஷயமாக இருக்கிறது. ஆனால், இவர்களில் யாராவது ஓரிருவர் வெளியில்போய் எதிரணியில் சேர்ந்தாலும் வெற்றிக்குப் பங்கமாகி விடும் என்பதையும் யோசிக்க வேண்டியிருக்கிறது.”

    லயோலா கல்லூரி – கருத்து கணிப்புகள்

    சென்னை லயோலா கல்லூரியின் காட்சி தகவலியல் துறை சார்பாக, வரும் சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்து எடுத்த கருத்துக் கணிப்பில், பல ஆச்சரியத் தகவல்கள். அதில் முக்கியமானது 2004_ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் இருந்த மக்கள் மனநிலை, இப்போது தலைகீழாக மாறியிருக்கிறது என்பது. இந்தக் கருத்துக்கணிப்புகள் பற்றி அத்துறைத் தலைவர் பேராசிரியர் டாக்டர் ராஜநாயகத்திடம் பேசினோம்.

    நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்

    பா.ஏகலைவன்

    ‘‘கடந்த ஐந்தாண்டுகளாக, ஆறு மாதத்திற்கு ஒருமுறை, ‘தமிழக அரசியல் பண்பாட்டு அமைப்பு’ பற்றிய கருத்துக்கணிப்பை, தொடர்ச்சியாக நடத்தி வருகிறோம். அந்த வகையில் கடந்த நவம்பர் மூன்றாம் தேதி முதல் பதினாறாம் தேதி வரையில் ஒரு கட்டமாகவும், ஜனவரி எட்டிலிருந்து பதினாறாம் தேதி ஒரு கட்டமாகவும் சர்வே செய்தோம்.

    இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்து, இந்தக் கருத்துக்கணிப்பு முடிவை தயார் செய்திருக்கிறோம். இதில் தொகுதி வாரியாக மேற்கொள்ளவில்லை. எந்தக் கட்சிக்கு எந்த தொகுதி, யார் வேட்பாளர் என்ற பங்கீடு தெரியாத நிலையில், மாவட்டவாரியாக சர்வேயை மேற்கொள்வதுதான் சிறந்தது என செயல்பட்டோம். இதிலும் நீலகிரி மாவட்டத்தை நடைமுறை காரணங்களுக்காகத் தவிர்த்தோம். அதேபோன்று புதுவை மாநிலமும் தவிர்க்கப்பட்டிருக்கிறது.

    இந்தக் கருத்துக்கணிப்பில், கேள்விகள் அடங்கிய குறிப்பேடுகளைப் பயன்படுத்தியது ஓர் உதவிக்காகத்தான். மற்றபடி அவர்களின் போக்கிலேயே சகஜமாகப் பேசி, கலந்துரையாடல் அடிப்படையில், அவர்களின் ஆழமான கருத்துப்பதிவு என்ன என்பதையும் கணக்கிலெடுத்தோம். சமூக உளவு ஆய்வியல் முறையில் இது ஒரு முக்கிய அம்சம்.

    கடந்த இரண்டாயிரத்து நான்கு, மே மாதம் நடந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிந்தவுடன் ஓர் ஆய்வை தமிழகம் முழுவதும் நடத்தினோம். அப்போது அ.தி.மு.க.விற்குப் பத்தொன்பது சதவிகிதம் மக்கள் ஆதரவு. தி.மு.க.விற்கு ஐம்பத்தேழு சதவிகிதம் ஆதரவு என்று இருந்தது. அதன் பிறகு, தொடர்ச்சியாக நான்கு முறை சர்வேக்கள் நடத்தினோம்.

    தற்போது எடுத்த சர்வே முடிவுப்படி, அ.தி.மு.க. படிப்படியாக 33.7 சதவிகிதத்திற்கு உயர்ந்து வலுவாக வளர்ச்சி கண்டிருக்கிறது. தி.மு.க.வோ பழைய செல்வாக்கு நிலையிலிருந்து படிப்படியாகக் குறைந்து, 38.4 சதவிகிதத்தில் இறங்கிவிட்டிருக்கிறது. நான்கு சதவிகிதம்தான் வித்தியாசம். இது வெறும் சதவிகித கண்ணோட்டம் மட்டுமல்ல; அரசியல் போக்கைக் காட்டுவதாகக் கொள்ள வேண்டும்.

    தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்களே இருக்கிறது. இதற்குள் அ.தி.மு.க., நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு, இதுவரை பயன்படுத்தி வரும் ‘அணுகு முறையையே பயன்படுத்துமேயானால், மிக எளிதாக தற்போதிருக்கும் நான்கு சதவிகித இடைவெளியைத் தாண்டிவிடும் என்றே சொல்லலாம்.

    அ.தி.மு.க. ஆதரவு உயர்வுக்குக் காரணம், இந்த ஆட்சியில் மக்கள் கண்களால் பார்க்கும், நேரடியாக அனுபவபூர்வமாக உணரும் பல நடவடிக்கைகளை எடுத்து வந்ததுதான்.

    சுனாமி நிவாரண நிதி, வெள்ள நிவாரண நிதி, விவசாயிகள் கடன் தள்ளுபடி, ப்ளஸ்டூ படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் சைக்கிள், விவசாயிகளுக்கு மோட்டார் பம்ப் லோன், வீரப்பன் உள்ளிட்ட சில சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுத்தது உள்ளிட்ட பலவும், நம்பகத்தன்மை உணர்வை கொடுத்திருப்பதாகக் கூறுகிறார்கள்.

    அதே சமயத்தில் வெள்ள நிவாரண நிதி வழங்கும் திட்டத்தில் அதிருப்தியும் உள்ளது. பாதிக்கப்பட்ட பலருக்கும் அது சென்றடையவில்லை. கட்சி சாராத மக்கள் என நாற்பது சதவிகிதம் பேர் இருக்கிறார்கள். இதில் பாதிப்பேருக்கு உதவி கிட்டவில்லை. அ.தி.மு.க. தி.மு.க. என அரசியல் பார்க்காமல், பாதிக்கப்பட்ட எல்லோருக்கும் உதவி என அரசு இயந்திரத்தை முடுக்கிவிட்டால், வரும் தேர்தலுக்குள் நான்கு சதவிகித வித்தியாசம் என்பது பெரிய விஷயமேயில்லை.

    இதில் மற்றொரு அம்சத்தையும் கணக்கெடுத்தோம். தி.மு.க., கூட்டணிக் கட்சிகளின் துணை இன்றி தன்னந்தனியாக அ.தி.மு.க.வை எதிர்த்து நின்றால் ஜெயிப்பது கடினமே.

    எனவே, தி.மு.க. கூட்டணியிலிருந்து ஒரே ஒரு கட்சி விலகி வந்தாலும் கூட, அ.தி.மு.க.விற்குச் சாதகமான வாய்ப்பாகப் போய்விடும் வாய்ப்பு உள்ளது. இன்றைய அரசியல் சூழ்நிலையில் தி.மு.க., தனது கூட்டணிக் கட்சிகளில் ஒன்றைக்கூட உதாசீனப்படுத்த முடியாது.

    இன்னொரு ஆச்சரியமான விஷயம், கட்சிகளில் மூன்றாவது இடம் என்றிருப்பது நடிகர் விஜயகாந்துக்குத்தான் 8.9 சதவிகிதம். இதற்கடுத்துதான் காங்கிரஸ், பா.ம.க., ம.தி.மு.க., கம்யூனிஸ்ட், பா.ஜ.க. என்று சதவிகித அடிப்படையில் வரிசையாக வருகிறது. நடிகர் விஜயகாந்திற்கு இருப்பது ‘பாசிட்டிவ்’ ஓட்டு அல்ல. அவரது ஆளுமை, வசீகரிப்பு, கொள்கை என்பவற்றிற்கானதல்ல.

    ‘இரண்டு திராவிட கட்சிகளுக்கும் மாறி மாறி ஓட்டுப் போட்டும், அடுத்த பிரதான கட்சியான காங்கிரஸ§ம் இந்த இரண்டுக் கட்சிகளில் யாராவது ஒருவருடன்தான் இருக்கிறது. மூன்றாவதாக, புதிதாக ஒருவர் வரட்டுமே’ என்ற எதிர்ப்பார்ப்பில்தான் இந்த ஆதரவு உள்ளது. இந்த நிலையும் நடிகர் விஜயகாந்த் ஏதாவது ஒரு பெரிய கட்சியுடன் கூட்டணி என முடிவெடுத்தால் மாறிவிடும்.

    அதேபோன்று விஜயகாந்திற்கு மட்டுமே இந்த 8.9 சதவிகிதம் ஆதரவு. அவரது கட்சி சார்பாகப் போட்டியிடும் வேட்பாளருக்கு, அந்த சதவிகிதம் இல்லை. எந்த வேட்பாளரை நிறுத்தப் போகிறார்? அவரை எதிர்த்து அந்தத் தொகுதியில் நிற்கும் மாற்றுக் கட்சி வேட்பாளர் யார்? தேர்தலை ஒட்டிய மற்ற பரிவர்த்தனை என்பதையெல்லாம் பொறுத்து, விஜயகாந்த் கட்சி வேட்பாளரின் செல்வாக்கு மேலும் கூடும் குறையும். அவ்வளவுதான்.

    சமீபத்தில் அவர் தேனியில் கலந்துகொண்ட கூட்டத்தில் நாங்கள் நேரில் பங்கெடுத்தோம் நல்ல கூட்டம் இருந்தது.

    அந்தக் கூட்டத்தில் எண்பது சதவிகிதம் பேர் வேடிக்கை பார்க்க வந்தவர்கள். பத்து சதவிகிதம் பேர் ஆதரவாளர்கள். மீதமுள்ள பத்து சதவிகிதம் பேர் ‘பார்ப்போம்’ என்ற நிலையிலிருப்பவர்களாகத்தான் இருந்தார்கள். விஜயகாந்த் தவிர, வேறு எந்த நடிகர் கட்சி தொடங்கி வந்தாலும் இந்தளவில் அல்லது கூடுதலாகவே கூட்டம் இருக்கும். ஆனால், இந்த அளவு ஆதரவு இருக்குமா என்பது தெரியாது.

    இவரால் தனித்து நின்று எந்தத் தொகுதியிலும் வெற்றி பெற முடியாது. ஆனால், தி.மு.க. அ.தி.மு.க. உள்ளிட்ட மற்ற கட்சிகளின் ஓட்டுக்களை சிறு அளவில் பிரிக்க முடியும்.

    அதேபோன்று விஜயகாந்த் வருகையால் சாதி அடிப்படையில் வைகோவின் செல்வாக்கு பாதிக்கப்பட்டதாக சர்வேயில் தெரியவில்லை. சாதி அடிப்படையில் பார்த்தால் முதலிடம் வன்னியர்கள். அடுத்து ஆதி திராவிடர் மற்றும் முக்குலத்தோர் என நீண்டு, கடைசியாகத்தான் நாயுடு சமூக ஆதரவு விஜயகாந்திற்கு வருகிறது.

    தி.மு.க.வின் படிப்படியான சரிவுக்குக் காரணம் என்பது, யதார்த்தத்தில் இயற்கையாக நடக்கக் கூடியதுதான். எதிராக இருக்கக் கூடிய அ.தி.மு.க. அரசு, படிப்படியாகச் சில திட்டங்களை அறிவித்து ஆதரவு நிலையைப் பெருக்கிவரும்போது, தி.மு.க. மக்கள் ஆதரவு என்பது, குறையத்தான் செய்யும்.

    அடுத்த குறை, தி.மு.க. சார்பாக இப்போது மக்களிடம் நேரடியாகச் சென்றடையும் நலன் பலன் என்று ஏதும் இல்லாததுதான். தொலை தொடர்பு சாதனை செல்போன் சலுகை வசதி என தினந்தோறும் டி.வி.யில் செய்தி வருவதைப் பற்றி மக்களிடம் கேட்டோம்.

    மெஜாரிட்டி ஓட்டு வங்கி என்பது கீழ்த்தட்டு, மக்கள்தான். அவர்கள் ‘எல்லாமும் சரி வயிற்றுப் பாட்டுக்கு, சோற்றுக்கு வழி உள்ளதா?’ என்கிறார்கள். வரவேற்கக்கூடிய திட்டங்கள் என்பதற்கு மறுப்பில்லை. அதனால் வாக்காளருக்கு நேரடிப் பயன் என்ன என்ற கேள்வி உள்ளது.

    ‘‘தமிழ் செம்மொழியாகிவிட்டது. அதனால் எனக்கென்ன பயன்?’ என்கிறார்கள். சேதுசமுத்திரத் திட்டமும் அப்படித்தான். அதனால் நாட்டிற்கு நல்லது. வருவாய் பெருகும். வர்த்தகத்தைக் கூட்டும் என்பதெல்லாம் சரி. அது எப்போது? யாருக்கு? ஓட்டுப் போடும் எங்களுக்கு இப்போது என்ன? என்ற நிலையில் உள்ளார்கள். இப்படி மக்களுக்கு நேரடியான பலன் இல்லாதபடிக்கு தி.மு.க.வின் அணுகுமுறை இருந்துள்ளதைத் தெரிவிக்கிறார்கள்.

    அடுத்து, தி.மு.க. கூட்டணி பற்றியது. இப்போது இருக்கும் கூட்டணிக்கு ஆதரவு என்பது மிகமிக குறைவுதான். அது நீடிக்குமா நீடிக்காதா, யார் பிரிந்து செல்வார்கள், யார் விலகுவார்கள், தேர்தலின் போதுதான் கூறமுடியும் என்ற குழப்ப நிலையையே பலரும் தெரிவித்துள்ளார்கள். கடந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிந்தவுடன் எடுத்த ‘கூட்டணி ஒற்றுமை’ பற்றிய கருத்துக் கணிப்பில், அபாரமான ஆதரவு இருந்தது. இப்போது சுத்தமாக குறைந்து, சுமார் இருபது சதவிகிதம் பேர்தான் இந்தக் கூட்டணியே நீடிக்கும் என்கிறார்கள்.

    தி.மு.க. ஆதரவு சரிவுக்கு இதுவும் ஒரு காரணம். அவர்களுக்குள் ஒருமித்த கருத்து இல்லை என்று மக்கள் மத்தியில் பரவிக் கிடக்கிறது. ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் தமிழகத்தில் ஆளும் கட்சியான அ.தி.மு.க. மேல் அதிருப்தியை விட, திருப்தி அதிகம் இருக்கிறது. தமிழ்நாட்டில் எதிர்க்கட்சி, மத்திய ஆட்சியில் உள்ள கூட்டணிக் கட்சி என இருக்கும் தி.மு.க.வைப் பார்க்கும்போது, அதிருப்தி என்று எதுவும் இல்லை. சிக்கலான நிலைதான். ஆளும் கட்சிக்கு எதிர்ப்பலை என இருக்க வேண்டும். அல்லது அந்தவித எதிர்ப்பலைக்கான சாத்தியமும் தெரிய வேண்டும். ஆனால், அ.தி.மு.க.விற்கு அப்படி ஏதும் இல்லை. அதேபோல தி.மு.க. ஆதரவு அலையும் இல்லை. இன்றைய தேர்தல் களத்தின் விநோத சூழ்நிலை இதுதான். அடுத்து வரும் இரண்டு, மூன்று மாதத்தில் பெரிய டிரெண்ட் ஏதும் நிகழாதபட்சத்தில், இப்போதைய மக்கள் போக்கில் மாற்றமிருக்காது. அ.தி.மு.க.விற்கு அதிகரித்து வரும் செல்வாக்கு என்ற போக்கு, தி.மு.க.விற்குச் சரிவு ஏற்படலாம், என்ற போக்கு. அதுதான் நீடிக்கும்.

    அதேபோன்று வரும் சட்டமன்றத் தேர்தலில் மூன்றாவது அணி உருவாகி களம் குதித்தால், அதுவும் அ.தி.மு.க.விற்குத்தான் சாதகமாக முடியும். வெற்றி என்பது ஒரே ஒரு ஓட்டு வித்தியாசம். என்றாலும், நிச்சயிக்கக்கூடியதுதான். தி.மு.க.வின் தற்போதைய பலம், அதன் கூட்டணியின் பலமே. இதில் மூன்றாவது அணி என்றால், தி.மு.க. கூட்டணியிலிருந்து ஏதாவது ஒரு பிரதான கட்சி அதிலிருந்து வெளியேறும். இது நடந்தால் வாக்கு சதவிகிதம் குறையும். வெற்றி, அ.தி.மு.க.வுக்கு சாதகமாக அமையும்.’’ என்று முடித்தார் ராஜநாயகம்.

    அடுத்த முதல்வர் யார்? என்ற 2005 மே மாத கருத்துக் கணிப்பில், பதினைந்து புள்ளிகள் வித்தியாசத்தில் கருணாநிதி முன்னணியில் இருந்தார். இதே கணிப்பில் அந்த இடைவெளி வெகுவாகக் குறைந்துள்ளது. கருணாநிதிக்கு 87.46 புள்ளிகள். ஜெயலலிதாவிற்கு 82.09 புள்ளிகள். இது ‘திறமை.’ அடிப்படைக்கு எடுத்தது. ‘வாய்ப்பு’ என எடுத்ததில் கருணாநிதிக்கு 81.98 புள்ளிகள். ஜெயலலிதாவிற்கு 78.07 புள்ளிகள். சுமாராக நான்கு புள்ளிகள்தான் வித்தியாசம்.

    இதில் மூன்றாவது இடம் நடிகர் விஜயகாந்த் கட்சிக்கு. ‘திறமை ’அடிப்படையில் 32.27 புள்ளிகளும் ‘வாய்ப்பு’ ரீதியில் 30.19 புள்ளிகளும் எடுத்திருக்கிறார். அதாவது, மாற்றுக் கட்சி இருந்தால் நன்றாக இருக்கும் எனக் கருதபவர்கள்தான் இவர்கள்.

    மக்கள் இன்றைக்கு ஓட்டுப்போட்டால், தி.மு.க.விற்கு 38.4 சதவிகிதம் அ.தி.மு.க.விற்கு 33.7 சதவிகிதம் (வித்தியாசம் 4 சதவிகிதம்) விஜயகாந்திற்கு 8.9 சதவிகிதம், காங்கிரஸ§க்கு 4.7, அடுத்து பா.ம.க., ம.தி.மு.க., கம்யூனிஸ்ட்டும், பா.ஜ.க.வும் உள்ளன.

    சிறுசிறு கட்சிகளுக்கு .2 சதவிகிதம். வாக்களிக்க விரும்பாதவர்கள் 10 சதவிகிதம்.

    மகளிர் சுய உதவிக்குழுக்கள் கிராமங்கள் தோறும் ‘தன்னம்பிக்கை’க் களமாக வளர்ந்துள்ளன. இவர்களின் ஆதரவு என்பதும் அ.தி.மு.க.விற்குத்தான் அதிகம். பெண்கள் ஓட்டுக்கள் அதிகப்படியாக அ.தி.மு.க.விற்குத்தான்.

    நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்

    http://www.kumudam.com/reporter/260106/pg1.php

    பா.ஏகலைவன்

    கூடிய விரைவில்

    அடுத்த தேர்தல்தான்; வேறு என்ன!

    ஜனவரி மாதத்தில் தமிழ் பதிவர் வட்டத்தில் பெரிதும் அல(விளா)சப்பட்ட கருத்து எது?

    1. ஹஜ் உயிரிழப்பு விபத்து
    2. காந்தியும் கோட்ஸேயும்
    3. பொங்கல் திரைப்படங்கள்
    4. தமிழ்மணம் கருவிப்பட்டி
    5. சண்டக்கோழி – எஸ் ராமகிருஷ்ணன் – குட்டி ரேவதி
    6. தாம்ப்ராஸ் – சுஜாதா
    7. புத்தகக் கண்காட்சி
    8. எஸ்.சி.வி. – சன் டிவி – கேபிள்
    9. கருத்துக்கணிப்புகள்

    விடுபட்டவைகளையும் மறந்து போனவைகளையும் பின்னூட்டமிடவும். நன்றிகள்.


    |

    ரங் தே பஸந்தி

    வாராரு வாராரு

    மங்கள் பாண்டே தோல்விக்குப் பின் நாற்பது வயது ஆமீர் கான் இருபத்தைந்து வயது பஞ்சாபியாக (நிஜமாகவே பார்ப்பதற்கு ‘பாய்ஸ்’ சித்தார்த்துக்குத் தம்பி மாதிரிதான் இருக்கிறார்) அடுத்த படத்தில் வருகிறார்.

    படம் பார்த்துவிட்டு மிச்ச புராணங்களைத் தொடர்கிறேன்


    |

    My Life My Election

    எல்லாரும் சேரியமாய தேர்தல் அலசல் கொடுக்கிறார்கள். இப்போதைக்கு மேலோட்டமாய் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் ஸ்டைலில் பயோடேட்டா போட்டுப் பழகுகிறேன்.

    முதலைமைச்சர் ஜெயலலிதா

    மழலைப்பருவ லட்சியம்: பெரிய படிப்பு

    முதல் வேலை: சினிமா நடிகை

    கடைசியாக வாங்கியது: பா.ம.க. எம்.எல்.ஏக்கள்

    செல்லமான மோகம்: அசையா சொத்துக்கள்

    அசை போடும் நிகழ்வு: இறுதி ஊர்வலத்தில் தள்ளப்பட்டது

    பிடித்த பாடல்: ‘அம்மாவும் நீயே அப்பாவும் நீயே அன்புடனே ஆதரிக்கும் தெய்வமும் நீயே’

    விடுமுறை வாசஸ்தலம்: மக்களின் மனது அல்ல.

    கனவு: என்றும் முதல்வர்

    உவகை தரும் பெருமிதம்: கருணாநிதியை நள்ளிரவில் கைது

    மிகப் பெரிய சவால்: பொதுஜனத்திற்கு மறதியைக் கொடுப்பது

    அலாரம்: பாராளுமன்ற தேர்தல்

    குறையில்லாத நாள்: கலைஞர் அறிக்கை விடும் நாளெல்லாம்

    திரைப்படம்: இருவர்

    லட்சிய நபர்: ஜெ. ஜெயலலிதா

    என் வாழ்க்கை: விமரிசனத்துக்கு அப்பாற்பட்டது


    |

    தமிழக அரசியல் களம்

    தமிழக அரசியல் களம் நாளுக்கு நாள் சூடாகிக்கொண்டிருக்கிறது. ஒரு புறம் கேபிள் டிவி மசோதா, இன்னோரு பக்கம் மிடாஸ் மதுபான ஆலை ரெய்டு, இன்னோர் பக்கம் கார்த்திக், விஜயகாந்த் போன்றோரின் பயணங்கள், பேச்சுகள், ம.தி.மு.கவின் வீர சவால்கள், ஜாதிக்கட்சிகளின் முழக்கங்கள்.

    இன்னும் 3.5 மாதங்களே தேர்தலுக்கு இருக்கும் நிலையில் ஜெ.அரசோ கஜானா காலியானாலும் பரவாயில்லை என சலுகைகளையும் அறிக்கைகளையும் அள்ளி வீசுகிறது. எல்லாமே ‘என் அரசு’ – ‘நான் செய்தேன்’ என ஒருவரின் பிரதாபமே பெருமளவில் பேசப்படுகிறது. டீம் வொர்க் எனப்படும் பேச்சுக்கே இடமில்லை போல.

    வரும் பதிவுகளில் நாளொரு தினமும் வரும் சில தலைப்புச் செய்திகளும், சில யூகங்களும், சில உள்குத்து விவகாரங்களும் இணைய வழிச் செய்திகள் மூலம் அறியத் தரலாம்.

    தமிழ்மணம் புது திரட்டியில் பழைய பரபரப்பு இல்லை என்பதாலோ என்னவோ பல பதிவுகள் படிக்கப்படுகிறதா – கவனிக்கப்படுகிறதா – எத்தனை பேர் இந்த தேர்தல் பதிவுகளைப் படிக்கிறார்கள் அல்லது ஆர்வமுடன் கவனிக்கிறார்கள் என்பது தெரியவில்லை. என்ன மாதிரி அலசல்கள் அல்லது செய்திகள் வரவேற்கப்படும் என்பது போகப் போகத் தெரியுமென நினைக்கிறேன்.

    தமிழக அரசியல் என்றாலே தி.மு.க, அதிமுக, காங்கிரஸ், பா.ம.க, மதிமுக, தேமுதிக இவர்களின் வீரப் பேச்சுகள் என களை கட்டும் என்றே நினைக்கிறேன்.

    நேற்று CNN-IBN, Centre for the Study of Developing Societies மற்றும் ஹிந்துஸ்தான் டைம்ஸ் நடத்திய கருத்துக் கணிப்பின் முடிவுகளைப் பகிர்ந்து கொண்டார்கள். இதில் தமிழகம் சம்பந்தப்பட்ட எந்த செய்தியும் இல்லை. டாப் 3/6 அல்லது கடைசி 3ல் கூட தமிழக அரசோ, முதல்வரோ இல்லை என்பது ஆச்சரியம். (சில மாதங்கள் முன்பு இந்தியா டுடே நடத்திய கணிப்பில் தமிழக அரசு /முதல்வர் கடைசி சில இடங்களில் இருந்த ஞாபகம்). சில நாட்கள் முன்பு லயோலா கல்லூரி கணிப்புகள் அதிமுகவுக்கு ஆதரவாக நிலை இருப்பதாக தெரிவித்தது. சென்ற முறை லயோலா கணிப்பு திமுக கூட்டணிக்கு ஆதரவாய் தெரிவித்தது.

    பார்க்கலாம்.

    State of the Nation survey by CNN-IBN
    சிறந்த முதலமைச்சராக கணிப்பில் தேர்ந்தவர்கள்
    1. நிதீஷ் குமார் (ஹனிமூன் பீரியட் என வர்ணித்தனர்) (பீஹார்)
    2. புத்ததேவ் பட்டாசார்யா (மேற்கு வங்காளம்)
    3. ஷீலா தீக்ஷித் (புதுடெல்லி)

    4, 5, 6 இடங்கள்
    பிஜு பட்நாயக் (ஒரிஸ்ஸா), ராஜசேகர் ரெட்டி (ஆந்திரம்), நரேந்திர மோடி (குஜராத்)

    மோசமான முதல்வர்கள் பட்டியலில் – முலாயம் சிங் யாதவ் (உத்திர பிரதேசம்), அமரீந்தர் சிங் (பஞ்சாப்), சிவராஜ் சிங் சௌஹான் (மத்திய பிரதேசம்).

    – அலெக்ஸ் பாண்டியன்
    24-ஜனவரி 2006