சிறுவர் பாடல்

William Brighty Rands’s ‘Godfrey Gordon Gustavus Gore’ from Oldpoetry.com:

“Godfrey Gordon Gustavus Gore —
No doubt you have heard the name before —
Was a boy who never would shut a door!

The wind might whistle, the wind might roar,
And teeth be aching and throats be sore,
But still he never would shut the door.

His father would beg, his mother implore,
“Godfrey Gordon Gustavus Gore,
We really do wish you would shut the door!”

Their hands they wrung, their hair they tore;
But Godfrey Gordon Gustavus Gore
Was deaf as the buoy out at the Nore.

When he walked forth the folks would roar,
“Godfrey Gordon Gustavus Gore,
Why don’t you think to shut the door?”

They rigged up a Shutter with sail and oar,
And threatened to pack off Gustavus Gore
On a voyage of penance to Singapore.

But he begged for mercy and said, “No more!
Pray do not send me to Singapore
On a Shutter, and then I will shut the door!”

“You will?” said his parents; “then keep on shore!
But mind you do! For the plague is sore
Of a fellow that never will shut the door,
Godfrey Gordon Gustavus Gore!”


|

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி ஒத்து வருமா?

உலக தமிழர்களின் ஒப்பற்ற தலைவர் கருணாநிதி நேற்று பத்திரிகையாளரின் கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போது: ‘ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் உள்ள கூட்டணி கட்சிகளே கூட்டணி ஆட்சியை விரும்பவில்லை’ என்று பதில் கூறியுள்ளார்.

இதுதான் கருணாநிதி!

சரி! தமிழகத்தில் கூட்டணி ஆட்சி வேண்டுமா? வேண்டாமா? இது குறித்து தமிழக மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது குறித்து கருணாநிதிக்கோ அல்லது ஜ.மு.கூ. கட்சிகளுக்கோ ஏதாவது தெரியுமா?

மத்தியில் 45 ஆண்டுகளுக்கும் மேலாக ஒற்றை கட்சி ஆட்சிதான் – குறிப்பாக காங்கிர° கட்சியின் ஆட்சிதான் நடைபெற்று வந்தது. ஆனால், இன்றைக்கு நிலைமை என்ன? பா.ஜ.க.வாக இருந்தாலும், காங்கிரசாக இருந்தாலும் யாருடைய தயவிலாவதுதான் கூட்டணி ஆட்சியில் இருக்க வேண்டும் என்ற நிலைமையல்லவா!

ஏன் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி கூடாது? தமிழகத்திற்கு பல நலன்களை செய்த கருணாநிதி ஏன் கூட்டணி ஆட்சி என்ற கூட்டாட்சி தத்துவத்திற்கு மகுடம் சூட்டக்கூடாது! இது அவருக்கு பெரும் புகழைத் தரக்கூடியதுதானே!

ஒரு வேளை தன்னுடைய கட்சியே மெஜாரிட்டி வரும் என்ற நம்பிக்கையா? இது இந்த தேர்தலில் நடக்குமா என்பதை பொருத்திருந்து பார்ப்போம்!

ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் இருக்கிற இடதுசாரிகள் மேற்கு வங்கத்திலும் – கேரளத்திலும் – திரிபுராவிலும் ஆரம்பம் முதல் இன்று வரைக்கும் கூட்டணி ஆட்சிதானே நடத்தி வருகிறார்கள்! மேற்குவங்கத்தில் 27 வருடமாக கூட்டணி ஆட்சி குழப்பம் இல்லாமல் நடைபெறுவதாக கூறுகிறார்களே! ஜனநாயகத்தில் கூட்டணி ஆட்சி என்றால் கசப்பான விஷயமா என்ன!

மத்தியில் கூட்டணி ஆட்சியும் – இடதுசாரிகளின் ஆதரவும் இருப்பதால்தான் குறைந்தபட்சம் மத்திய அரசை சில விஷயங்களிலாவது கடிவாளம் போட்டு நிறுத்த முடிகிறது என்பது அனுபவமில்லையா?

இல்லையென்றால் ஜெயலலிதா மாதிரி ஏகபோக சர்வாதிகார ஆட்சியாக அல்லவா இருக்கும். தமிழகத்தில் அம்மாவின் சொல்லுக்கு மறு சொல்லை பேச முடியுமா?

இது திமுகவாக இருந்தாலும் அதிமுகாவாக இருந்தாலும் கடந்த 30 ஆண்டுகளாக உங்கள் இருவரின் ஆட்சிதானே நடைபெற்றது. கூட்டணி ஆட்சி என்ற சோதனையை தமிழகத்தில் ஏன் பரிட்சித்து பார்க்க கூடாது! பழுத்த பண்பான அரசியல்வாதியான கருணாநிதி இதை செய்வாரா?

பதில் : வாக்காளர்கள் கையில்தான்… வாழ்க ஜனநாயகம்… வளர்க விழிப்புணர்வு…

கூட்டணி – ம.தி.மு.க. : வைகோ பதில்

தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க. நீடிக்குமா?- வைகோ பதில்

சங்கரன்கோவில், ஜன.30-

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ சங்கரன் கோவிலில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அதன் விவரம் வருமாறு:-

கேள்வி: ம.தி.மு.க.வின் தற்போதைய அரசியல் நிலைபாடு என்ன?

பதில்: ம.தி.மு.க. ஏற்கனவே உள்ள நிலைபாட்டில் எந்த மாறுதலும் இல்லை. 2004-ல் சிறைச்சாலையை விட்டு வெளியே வந்த போது இருந்த ம.தி.மு.க.வின் அதே அரசியல் நிலைபாடுதான் தொடர்கிறது.

கேள்வி: ம.தி.மு.க.வின் பெரும்பாலான தொண்டர் கள் மத்தியில் மாற்றுக்கட்சி கூட்டணியை எதிர்பார்ப்பது போல தெரிகிறதே?

பதில்: ம.தி.மு.க.வின் உயிர் சக்தியே தொண்டர்கள்தான்.ம.தி.மு.க.வின் கடுமையான தோல்வியிலும், துன்பத்திலும் தங்களின் நலன் என்று எதையும் கருதாது இயக்கத் தின் நலனுக்காக தங்களை அர்ப்பணிக்கும் வகையில் தொண்டர்கள் இருக்கிறார்கள். அவர்களின் மனம் பல சந்தர்ப்பங்களில் காயப்பட்டிருக்கிறது. 19 மாத சிறைவாசத்தின்போதும் அவர் கள் உள்ளம் ரத்தக்கண்ணீர் வடித்ததும் உண்மை.

ம.தி.மு.க.வின் கவுரமான அந்தஸ்தும் மரியாதையும் பாதுகாக்கப்படவேண்டும் என் பதுதான் தொண்டர்களின் நோக்கம்.

மேலும் இந்த இயக்கத்தின் எதிர்காலத்தையும், நிரந்தர மதிப்பையும் தொண்டர்களின் நலனையும் காப்பதில் நான் கவனமாக இருக்கிறேன்.

கேள்வி:கூட்டணி எதுவாக இருந்தாலும் எத்தனை தொகுதிகள் கேட்பீர்கள்?

பதில்:கூட்டணி எதுவாக இருந்தாலும் என்ற வார்த் தையே தவறு.

கேள்வி:வரும் தேர்தலில் எந்த தொகுதியில் போட்டியிட இருக்கிறீர்கள்?

பதில்:தேர்தலில் நிற்கும் போது உங்களிடம் சொல் கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது ம.தி.மு.க. மருத்துவர் அணி மாநிலச் செயலாளர் சுப்புராஜ், மாவட்ட செயலாளர் சரவணன், துணைச்செயலாளர் மாரியப்பன், நகரச்செயலாளர் பிச்சையா உள்பட பலர் இருந்தனர்.

Source: http://www.maalaimalar.com/asp/news/dis_news_article.asp?artid=103339
http://www.maalaimalar.com

உடைகிறதா ம.தி.மு.க. ? – ஜூ.வி

இந்த நிமிடம் வரை சஸ்பென்ஸ் நாயகனாக வலம் வந்து கொண்டிருப்பவர் வை.கோ.தான். தி.மு.க., கூட்டணியில் வைகோ தொடர்ந்து நீடிஞூபபாரா, அல்லது அதிமுக., பக்கம் சாய்ந்து விடுவாரா என்ற கேள்வி தொடர்ந்து நீடித்தபடியே இருக்க… அதையொட்டி பல்வேறு யூகங்கள் சுழன்றடித்துக் கொண்டிருந்தன. அந்த நிலை…. தற்போது அடுத்த கட்டத்தை எட்டியிருக்கிறது. தேர்தல் கூட்டணி குறித்து அக்கட்சித் தலைவர்களிடையே வேறுபட்ட அபிப்பிராயங்கள் எழுந்துள்ளதை அடுத்து, மதிமுக., வில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் உலாவரத் துவங்கிவிட்டன.

கடந்த டிசம்பர் மாதம் வரையில், தமிழகத்தின் அடுத்த முதல்வராகக் கலைஞரை அரியணையில் அமரவைப்பதுதான் என் வேலை என்று பேசிவந்த வைகோ, இப்போது அதுகுறித்து தீவிரமாகப் பேசாமலிருப்பதால் ம.தி.மு.க.,வின் இரண்டாம் கட்டத் தலைவர்களிலிருந்து கடைசித் தொண்டன் வரைக்குமுஞூஇருவேறுபட்ட மனநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அதிமுக.,வுடன் தான் போக வேண்டும் என்று ஒரு தரப்பும்…. தி.மு.க.,வுடன் தான் போகவேண்டும் என்று இன்னொரு தரப்பும் கச்சைக்கட்ட கட்சிக்குள் கலகம் வெடிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

ம.தி.மு.க.,வினரின் இந்த இரு வேறுபட்ட மன ஓட்டம் குறித்து நம்மிடம் பேசினார். கட்சியின் நிர்வாகி ஒருவர். இவர் அதிமுக., சார்பு நிலையிலிருப்பவர். எம்.பி.க்கள் ரெண்டு பேர் எக்காரணம் கொண்டும் தி.மு.க., கூட்டணியை விட்டுப் போயிடக்கூடாதுனு பிடிவாதமா இருக்காங்க. அதுக்காக அவங்க ஏதோ கட்சியைப் பத்திக் கவலைப்பட்டுதான் அப்படி சொல்றாங்கனு நினைச்சிட வேண்டாம். ரெண்டுபேரும் அமைச்சராகிற கனவுல இருக்காங்க. எலெக்ஷன் முடிஞ்சதும் அவங்களுக்கு மத்தியில் அமைச்சர் பதவி வாங்கித் தந்துடறதா தி.மு.க.,வுல சொல்லியிருக்காங்க. அதனாலதான் தி.மு.க., கூட்டணியில இருந்து விலகுறதுக்கு ஆயிரம் நியாயமான காரணங்கள் இருந்தாலும் விலகச் சம்மதிக்காம அடம்புடிக்கிறாங்க. ஒருவேளை, தி.மு.க., கூட்டணியிலிருந்து விலகிடுறதா கட்சி முடிவெடுத்துட்டா, கட்சியை உடைச்சி போட்டி இயக்கம் நடத்தியாவது அமைச்சராயிடறதுனு முடிவா இருக்காங்க.

அந்த ரெண்டு பேர்ல ஒருத்தர் ரெண்டு மூணு நாளைக்கு முன்னாடி தலைவர் வை.கோவைச் சந்திக்க தாயகத்துக்கு வர்றதாச் சொல்லியிருந்தாரு. அதுக்காக தலைவர் வந்து அரைமணி நேரமா வெயிட் பண்ணியும் அவர் வரவேயில்லை. போன் பண்ணிக் கேட்டதுக்கு அவரு குளிச்சிக்கிட்டு இருக்கிறதா சொல்லியிருக்காங்க. பாத்தாரு தலைவரு டக்குனு கிளம்பி அந்த எம்.பி.யோட இருப்பிடத்துக்கே போயிட்டார. அதுக்குப்பிறகு ரெண்டு பேரும் ரெண்டு மணி நேரம்பேசியிருக்காங்க. ஆனாலும் கூட்டணி விஷயத்துல அந்த எம்.பி.யை சமாதானப்படுத்த முடியாமலே திரும்பிட்டாரு வைகோ.அதனால கட்சி உடைஞ்சிடுமோனு பயந்து இதுவரைக்கும் எந்த முடிவும் எடுக்கமுடியாம தலைவரு தத்தளிச்சிக்கிட்டு இருக்காரு என்றார் அந்த நிர்வாகி.

தி.முக., கூட்டணியில் இருப்பதுதான் பலம் என்று நினைக்கக்கூடிய மணம் பரப்பும் பெயரைக் கொண்ட மாவட்டச் செயலாளர் ஒருவர், வைகோ அதிமுக., பக்கம் போய்விட்டால் திமுக.வில் இணைந்துவிடுவது என்ற எண்ணத்தில் இருக்கிறார். ஏற்கெனவே தான் மட்டும் திமுக.,வில் இணைவதற்கு ஆர்வம் தெரிவித்தாராம் இவர்.ஆனால் கூட்டணி இருப்பதால் இப்போது வேண்டாம் என்று திமுக., சார்பில் சொல்லப்பட்டதாம். ஒரு காலத்தில் கொடிகட்டிப் பறந்த இவருக்கு, மதிமுக.,வுக்கு வந்த பின்னர் எம்.எல்.ஏ., எம்.பி. யாகும் வாய்ப்பு தரப்படவில்லை என்ற ஆதங்கம் நீண்ட நாட்களாக இருந்து வருகிறதாம்.

சட்டசபைத் தேர்தல் நேரத்தில் ஏதாவது ஒரு தவறான முடிவை எடுத்து, தங்களுக்குப் பதவி வாய்ப்பு இல்லாமல் செய்துவிடுகிறார் வைகோ. இம்முறையும் அப்படி ஏதாவது ஒரு மடிவை அவர் எடுத்தால் இரண்டில் ஒன்று பார்த்துவிட தயாராகத்தான் இருக்கிறேன் என்று தன் சகாக்களிடம் சொல்லிக் கொண்டிருக்கிறாராம். இப்போது தனக்கு ஆதரவாகப் பேசக்கூடியவர்கள் யார் யார் என்பதை பல்ஸ், பார்க்கவும் ஆரம்பித்திருக்கும் இவர், அவர்கள் அனைவரையும் ஒன்று சேர்த்துக் கொண்டு தாய் கழகத்தில் ஐக்கியமாவதா, அல்லது தனி அணியாகச் செயல்பட்டு வைகோவுக்கு டார்ச்சர் கொடுப்பதா என்ற யோசனையில் இருக்கிறாராம். இவருக்குப் பக்கபலமாக இருப்பது, வடமாவட்டத்தைச் சேர்ந்த இன்னொரு தலைவராம்.

அந்த வடமாட்டத் தலைவருக்கும் கட்சியில் ஏகப்பட்ட வருத்தங்கள்தான். தன்னை நம்பி அரசியலுக்கு வந்த யாருக்கும் எதுவும்செய்ய முடியவில்லை என்ற ஆதங்கத்தில் இருக்கிறாராம். தன்னுடைய மாவட்டத்தில் தன்னை ஓரம் கட்டும்விதமாக சில காரியங்களை கட்சி மேலிடம் செய்வது அவருக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லையாம்.ஏöன்ன்றால் கட்சியை ஆரம்பித்தபோது வந்த மூத்த தலைவர் அவர், சில நேரங்களில் அவரை நோக்கிக் கேள்விகள் கேட்கப்படுவதை அவர் விரும்புவதில்லையாம். அவரைக் கட்டுப்படுத்தும் வகையில் சிலரைக் கட்சியில் வளர்த்துவிடுவதற்கான முயற்சிகள் நடந்துவருவதாக ஏற்கெனவே புழுக்கத்தில் இருக்கிறாராம். குறிப்பாக அமைச்சராக முடியாத வருத்தம் அவருக்கு நிறையவே இருக்கிறது. எனவே அவரும் தன்னுடைய ஆதரவாளர்களுடன் தீவிரமாக ஆலோசனை நடத்திக் கொண்டிருக்கிறார்.

அதேபோல் வைகோவுடன் சிறையில் இருந்த தலைவர் ஒருவருக்கு எம்.பி. ஸீட் கிடைக்கவில்லை என்ற வருத்தம் ஏற்கெனவே இருந்து வருகிறது. இப்பொழுது அதிமுக.,.வுடன் கூட்டணி அமைத்தால், அவர் கட்சியில் இருந்தே விலகிவிடுவார் அல்லது போட்டி இயக்கத்தில் ஐக்கியமாகிவிடுவார் என்று அவருடைய ஆதரவாளர்கள் சொல்கிறார்கள். அதுமட்டுமின்றி பொட சிறை சென்ற ஏழு பேர்களுடைய குடும்பத்தினரும் அவரைச் சந்தித்து அதிமுக.,வுடன் செல்ல வேண்டாம் என்று வைகோவிடம் எடுத்துச் சொல்லும்படிக் கேட்டிருக்கிறார்களாம். வைகோ அதை ஏற்கவில்லை என்றால், போட்டி இயக்கம் நடத்த முழு ஆதரவு அளிப்பதாகவும் கூறியிருக்கிறார்களாம். அதுமட்டுமின்றி சிறையிலிருந்த இந்தத் தலைவருடன் செல்வதற்கு மூத்த பெண் நிர்வாகி ஒருவர் தயாராகி வருகிறாராம்.

வை.கோவை சிறையில் அடைத்த ஆட்சியை அகற்றாமல் ஓயமாட்டேன் என்று சபதம் போட்டிருக்கும் நிர்வாகி சமீபகாலமாக திமுக. நிர்வாகிகளிடம் அடிக்கடி பேசி வருகிறாராம். எப்படியாவது திமுக. கூட்டணியில் தக்கவைத்துக் கொள்ளுங்கள் இல்லையென்றால் எங்களையாவது சேர்த்து கொள்ளுங்கள் என்று சொல்லி வருகிறாராம். இந்த அதிருப்தியாளர்கள் அனைவரும் தனியாக அவ்வப்போது சந்தித்துப் பேசி வருவதாகவும் செய்திகள் வருகின்றன.

ஆளும் கட்சியைப் பொறுத்தவரை, திமுக., கூட்டணியில் இருக்கும் கட்சிகளில் மதிமுக.வை மட்டுமே முழுமையாக தங்கள் பக்கம் இழுக்க முடியும் என்று உறுதியாக நம்புகிறார்கள். காங்கிரஸ், பா.ம.க, ஆகியவற்றில் உள்ள ஒரு சில அதிருப்தியாளர்களை மட்டுமே இழுக்க முடியுமே தவிர, கட்சியையே தங்கள் பக்கம் இழுக்க முடியாது என்பது அதிமுக.வுக்கு நன்றாகவே தெரியும். அதனாலேயே இம்முறை கூட்டணியை உடைத்து மதிமுக.,வை இழுத்துவிடுவதில் உறுதியாக இருக்கிறார்கள். அதற்கு அவர்கள் வைத்திருக்கும் மந்திரச்சொல் ஸ்டாலின் ஸ்டாலின் இருக்கும் வரை உங்களை வளரவே விடமாட்டார்கள் என்று சொல்லியே வைகோவை வளைக்கத் திட்டமிட்டிருக்கிறார்கள்.

ஒருவேளை திமுக. கூட்டணியில்உள்ள கட்சிகளை உடைக்க முடியாவிட்டால் திமுக.,வுக்குத் தனி மெஜாரிட்டி கிடைக்கவிடாமல் செய்துவிடுவதில் உறுதியாக இருக்கிறார்கள். ஆளுங்கட்சியினர் தனி மெஜாரிட்டி கிடைக்காவிட்டால் கூட்டணி ஆட்சி தவிர்க்க முடியாததாகிவிடும். அந்த சமயத்தில் குதிரை பேரங்கள் நடத்திஆட்சியைப் பிடிக்க முயற்சிக்கலாம் என்று ஆளுங்கட்சி கணக்குப் போடுவதாகக் கூறப்படுகிறது.

இப்படி சர்ச்சைகள் றெக்கை கட்டி மறந்து கொண்டிருக்கும் நிலையில் குடியரசு தினத்தன்று திடீர் சந்திப்பாக கருணாநிதியை வீடு தேடிப்போய் பார்த்தார் வைகோ. கூட்டணிக் குழப்ப செய்திகளுக்கு ஒரு முடிவு கட்டி விடுவார்கள் என்ற எதிர்பார்ப்போடு கருணாநிதியின் கோபாலபுரம் வீடு நோக்கி படையெடுத்தனர் பத்திரிகையாளர்கள். சுமார் முக்காமல்மி நேரம் நடந்து முடிந்த அந்தச் சந்திப்பின் முடிவில் கருணாநிதி, வைகோ இருவருமே பத்திரிகையாளர்களிடம் எதுவும் பேசாமல் போய்விட்டனர். இருவரின் முகங்களும் ஒருவித இறுக்கத்துடனேயே காணப்பட்டன.

என்னதான் பேசினார்கள்? என்று இரு கட்சி வட்டாரங்களிலும் விசாரித்தபோது, மதிமுக.,வின் நிலை பற்றி சமீபகாலமாக பத்திரிகைகளில் வரும் செய்திகள் பற்றி வைகோவிடம் கேட்டிருக்கிறார் கருணாநிதி. அதற்கு வைகோ நீண்ட விளக்கம் கொடுத்தும், கருணாநிதிக்கு திருப்தி ஏற்படவில்லை. அதனாலலேயே இருவரும் உடனடியாகப் பத்திரிகையாளர்களைச் சந்திக்கவில்லை என்று சொன்னார்கள்.

அதேசமயம் அன்று மாலை, பத்திரிகையாளர்களைச் சந்தித்த கருணாநிதி தி.மு.க., கூட்டணி அப்படியே நீடிக்கிறது. உளவுத்துறையினர்தான் கூட்டணியில் குழப்பம் இருப்பதாக செய்தி பரப்புகிறார்கள். இன்று நானும் வைகோவும் சந்தித்ததைப் பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள் என்று சொன்னார்.

ஆனால் வைகோ தன் தரப்பு என்ன என்பது பற்றி சொல்லாமல், மர்மதேச பாணியைக் கடைபிடிப்பதுதான் பலரையும் யோசிக்க வைத்திருக்கிறது!

ஜூ.வி. தேர்தல் டீம்
————————–
நன்றி: ஜூனியர் விகடன் (மற்றும் தினமலர்)


http://www.dinamalar.com/2006jan30/juniorvik.asp

Courtesy: http://www.juniorvikatan.com

வனதேவதை

வனதேவதை க(வி)தையைப் படித்தவுடன் சமீபத்தில் கேட்ட உல்டா கதை ஞாபகம் வந்தது.

மரம் வெட்டிக்கொண்டிருந்தான். கோடரி தவறிப் போய் ஆற்றில் விழுந்தது. தேவதையை வேண்டிகொண்டான். தேவதையும் தோன்றினாள்.

தங்க கோடாரியை காட்டினாள்; இல்லையென்றான்.

வெள்ளிக் கோடாரியை காட்டினாள்; அதுவும் இல்லையென்றான்.

இரும்புக் கோடாரியை காட்டினாள்; ஆமாம் யென்றான் வியாபாரி.

மூன்றையும் கொடுத்துவிட்டு சென்றுவிட்டாள்.

இன்னொரு நாள் குளிக்கும்போது தவறிப்போய் மனைவி மூழ்கி விட்டாள். தேவதையை வேண்டிகொண்டான். தேவதையும் தோன்றினாள்.

முதலில் ஐஷ்வர்யா ராயைத் தூக்கிக் கொண்டு வந்தாள். ஆம் என்றான் மரவெட்டி.

அதிர்ந்து போனாள் தேவதை.

‘நீங்க முதலில் ஐஷ்வர்யா ராய்; அதற்கப்புறம் பிபாஷா பாசு என்று கொண்டு வருவீங்க… அப்புறமா மூன்று பேரையும் வச்சுக்கோ என்று கொடுத்துருவீங்க. ஒண்ணை மட்டும் வைத்துக் கொண்டே படும்பாடு தாங்கலை. அதான் முதலில் ஒருத்தி வந்தவுடனேயே தலையாட்டிட்டேன்’ என்றான் மரவெட்டி.


|

அடிமைத்தனம்

நாவுக்கு அடிமை நான் ஆறு வயசில
பூவுக்கு அடிமை பதினாறு வயசில
நோவுக்கு அடுமைதான் பாதி வயசில
சாவுக்கு அடிமை அட நூறு வயசில

வாழ்க்கை சக்கரம்

‘மக்கள் என் பக்கம்’ பாடலில் தவறவிட்ட அடிமைத்தனம்:


|

பிஸினஸ் மாடல்கள்

எனக்கு ஐடியா கொடுக்கத்தான் தெரியும். செயல்படுத்த அறியேன். தோன்றியதில் சில

1. ஃபீட் லவுன்ஜ் போன்ற தளங்கள் தமிழ்மணம்/தேன்கூடு போன்ற சேவைகளுக்கு மாதந்தோறும் ஐந்து அமெரிக்க வெள்ளிகளை சந்தாவாகக் கட்ட சொல்கிறார்கள். படிப்பதற்கு காசு கேட்டால் தமிழ் வாசகர்கள் (விகடன் போன்ற பெத்த பெயராக இல்லாவிட்டால்) கொடுக்கமாட்டார்கள்.

படிக்க வைப்பதற்கு பணம் கேட்கலாம். ஒரு மாதத்திற்கு உங்களுடைய வலைப்பதிவை தமிழ் வலைவாசலில் காட்டுவதற்கு ஐந்து டாலர் (அல்லது 250 ரூபாய்) கட்டணமாக வசூலிக்கலாம். வருட சந்தா என்றால் தள்ளுபடியாக ஐம்பது டாலர் கேட்கலாம்.

2. பின்னூட்டங்களில் வரும் அல்லாத வார்த்தைகளை நீக்குவதற்கான நிரலியை விற்கலாம். ஆங்கிலத்தில் இது போன்ற வார்த்தைகளைத் தவிர்ப்பதற்கான செயலிகள் இருக்கிறது. அதே போல் தமிழிலும் கொண்டு வரலாம். வோர்ட்பிரெஸ் போன்றவற்றில் டேஞ்சரான சொற்களை நாமே தட்டச்சி இவை வந்தால் தடுத்துவிடவும் என்று சொன்னால், அவை வரும் மறுமொழிகள் நிராகரிக்கப்படும்.

நிரலியை நிறுவியவுடன் ஆட்டோமேடிக்காக புகழ்பெற்ற வசைப்பாடுகள் பின்னூட்டங்களில் தேடப்படும். அவசியம் என்றால் நாமே அதிகப்படியான அல்லது விடுபட்ட வன்சொற்களை நிரலிக்குக் கற்றுக் கொடுக்கலாம். ப்ளாக்ஸ்பாட்டுடன் எளிதில் இணைந்து செயல்படுவது அவசியம்.

3. தமிழில் தேட வேண்டும் என்றால் ரோமனைஸ்ட் ஆங்கிலத்தில் அடித்தால் போதுமானது என்று சொல்லுமாறு தேடுபொறி அமைக்கலாம். ரா ஷுகர் போன்ற niche தேடுபொறிகளின் காலம் இது.

அந்த நிரலியே கொடுக்கப்பட்ட சொற்றொடருடன் தேவையான விகுதிகளை சேர்த்துக் கொள்ளும். எடுத்துக்காட்டாக, ‘ஐஸ்வர்யா’ என்று தேடினால் ‘ஐஷ்வர்யா’, ‘ஐஸ்வரியா’, ‘ஐஸ்வர்யாவின்’ போன்ற உபரிகளையும் கொண்டு வர வேண்டும். உலக அழகியா அல்லது லஷ்மியின் மகளா அல்லது அஷ்டலஷ்மிகளில் ஒருவரா அல்லது ரஜினிகாந்தா என்று வினவாமல், அனைத்து முடிவுகளையும் க்ளஸ்டி போல் தொகுத்துக் கொடுக்க வேண்டும்.

பாமினி, டிஸ்கி, யூனிகோட், டாப்/டாம் என்று பல எழுத்துருக்களில் மாற்றிக் கொண்டு தேடி, அனைத்து முடிவுகளையும் ஒருங்கிணைத்துத் தரும். மின்-மடலாடற் குழுமங்கள், வலைப்பதிவுகள் என்று பொருத்தமானதைத் தேர்ந்தெடுக்கும் advanaced options-ஐயும் சேர்த்துக் கொள்ளலாம்.

4. தமிழில் குறும்படங்களும் விவரணப்படங்களும் பெருமளவில் வெளிவருவதாக ‘நிழல்’ போன்ற பத்திரிகைகள் சொல்கிறது. ஆங்கிலத்துக்கு ‘இண்டி’ சர்க்யூட் இருப்பது போல் இவற்றுக்கு வலையில் பெரும் வரவேற்பு இருக்கும். மாத சந்தாவைக் கட்டினால் எத்தனை படம் வேண்டுமானால் பார்க்கலாம் என்னும் ஏற்பாட்டின் மூலம் பட ஆர்வலர்களையும் புதுப்பட முயற்சிகளையும் கைகோர்க்க வைக்கலாம்.

குறைந்த நேரங்களே ஓடும் படங்கள் என்பதினால் அகலபாட்டை, 56 கேபிபிஎஸ் போன்ற பிரச்சினைகள் பெரிதும் தலைதூக்காது. திருட்டுப் விசிடியையும் ஒரே முகவரியையே பலரும் பயன்படுத்துவதையும் தடுக்க, ஐ-ட்யூன்ஸ் போன்ற தொழில்நுட்பத்தை செயல்படுத்த வேண்டும்.

5. சூடாக அலசவேண்டிய, உலகளாவிய மற்றும் துறைசார்ந்த விஷயங்கள் இருந்தாலும், எழுத்தில் கொண்டுவரக் கூடியவர்களைக் காணவில்லை என்று பத்திரிகைகள் அங்கலாய்க்கும். எழுத்தாளர்கள் கிடைத்தாலும் புத்தகங்களாக முழுவீச்சோடு முடிப்பதில்லை என்று பதிப்பகங்கள் அலுத்துக் கொள்ளும்.

வலைப்பதிவுகளிலும், இணையப் பத்திரிகைகளிலும் இதுவரை வெளியிட்ட அத்தனை கட்டுரை, கதை, கவிதை என்று எல்லா மேட்டர்களையும் ஒருங்கிணைத்து டேட்டாபேஸ் உருவாக்கலாம். எவர் எதை எழுதினால் சிறப்பாக இருக்கும் என்பதை அனுமாணித்து, பதிப்பாளர்களுக்கும் படைப்பாளிகளுக்கும் பாலமாக செயல்படலாம்.

இரு பக்கத்திலும் நெருக்கமான தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டு அச்சுத் தேவையையும் எழுதும் தாகத்தையும் பொருத்தி விட்டு இடைத்தரகராக விளங்கலாம்.


| |

கருத்து கார்ட்டூன்

தமிழ் திரைப்பட உலகம்:
வலைப்பதிவுகளைக் குறிக்கவில்லை!

FoxTrot by Bill Amend
நன்றி: FoxTrot by Bill Amend


கிளம்பிட்டாங்கய்யா…கிளம்பிட்டாங்கய்யா…
தமிழ்மணத்தைக் குறிக்கவில்லை!

Heart of the City
நன்றி: Heart of the City


| |

தமிழ்மணம்

கருத்து ஃபிலிம்: இன்றைக்கு காமிக்ஸ் பக்கங்களைப் புரட்டும்போது ‘மதர் கூஸ் & க்ரிம்மை‘ப் பார்த்தவுடன் தற்போதைய தமிழ்மண சூழல்தான் நினைவுக்கு வந்தது.

Mother Goose & Grimm

ஓ மோஸஸ்…. ப்ளீஸ் ஃபர்கிவ் மீ!

படம் கொடுத்தவர்: Mother Goose & Grimm Comics Page


| |

தமிழகத்தில் கம்யூனிசம் மலருமா?

தமிழகத்தில் தேர்தல் வர இருப்பதால் முக்கிய கட்சிகள் ஒவ்வொன்றை பற்றியும் என் பார்வையில் அலசலாம் என்று இருக்கிறேன். முதலில் கம்யூனிஸ்ட் கட்சிகளை எடுத்துக்கொள்ளலாம்.

தமிழகத்தை பொறுத்தவரை இரு கம்யூனிஸ்டு கட்சிகளும் இப்போது தி.மு.க கூட்டணியில் உள்ளன.எப்போதும் பி.ஜே.பிக்கு எதிர் அணியில் இருப்பது தான் அவர்கள் தற்காலத்திய கொள்கை என்பதால் அவர்கள் தி.மு.க கூட்டணியில் நீடிப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம். ஒரு வேளை அ.தி.மு.க கூட்டணியில் பி.ஜே.பி இடம்பெறாமல் போனால் அதே சமயம் தி.மு.க வும் கணிசமாக தொகுதிகளை இவர்களுக்கு தராமல் போனால் இவர்கள் கூட்டணி மாற்றிக்கொள்ளகூடும்.

1989 தேர்தலில் தி.மு.க கூட்டணியில் இருந்து கணிசமாக தொகுதிகளில் மார்க்ஸிஸ்ட் போட்டியிட்டு வென்றது எனக்கு நினைவிருக்கிறது(சுமார் 17 என்று நினைக்கிறேன்).இதில் மார்க்ஸிஸ்ட் தான் பிக் பிரதர். இந்திய கம்யூனிஸ்ட் கொஞ்சம் அடக்கி வாசிக்கும்.இரு கட்சிகளுக்கும் கொள்கை ரீதியாக என்ன வித்தியாசம் என்று தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் கொடுக்கலாம்.

தேர்தல் களத்தை பொறுத்தவரை மேற்கு வங்கம், கேரளா ஆகிய மாநிலங்களை தவிர மற்ற மாநிலங்களில் அவர்களுக்கு பி.ஜே.பி எதிர்ப்பு என்பதை தவிர மற்ற எந்த கொள்கையும் இல்லை என்றே நினைக்கிறேன்.

இவ்விரு மாநிலங்களை தவிர மற்ற மாநிலங்களில் கொள்கையை பரப்புவது, கட்சியை வளர்ப்பது என்பதை பற்றியெல்லாம் இவர்கள் அக்கறை கொள்வதில்லை. நண்பர் சந்திப்பு தன்னுடைய ஒரு அலசலில் தி.மு.க அ.தி.மு.க போன்ற கட்சிகளில் இளைஞர்கள் சேருவதில்லை என்பது போல கூறினார். அவர் கம்யூனிஸ்ட் அனுதாபியாக இருக்கலாம்.ஆனால் இக்கால இளைஞர்கள் எல்லாம் கம்யூனிஸ்ட் கட்சிகளில் தான் சேருகிறார்கள் என்றால் அது பகல் கனவுதான்.

இது தொடர்பாக அவர்கள் மேல் எனக்கு கணிசமான விமர்சனங்கள் இருக்கின்றன.மக்கள் பிரச்சனைக்காக வீதியில் இறங்கி போராடுகிறவர்கள் அவர்கள் தான்.ஆனால் தேர்தல் என்று வந்தால் ஏதோ ஒரு கூட்டணியில் சேர்ந்து (லல்லு பிரசாத் யாதவுடன் கூட்டணி சேரக்கூட தயங்குவதில்லை இவர்கள்) ஒன்றோ இரண்டோ எம்.எல்.ஏ சீட் வாங்கினால் மட்டும் பொதுவுடைமை சமுதாயம் மலர்ந்துவிடுமா?

அவ்வளவு எளிமையானவர்கள்,கொள்கை பிடிப்பாளர்கள் தோழர்கள் என்றால் எந்த கூட்டணியிலும் சேராமல் கட்சியை வளர்க்க முயற்சி செய்யலாமே?பதவிதான்(ஒரு சீட்,இரண்டு சீட்தான்) முக்கியம் என்று இருப்பது ஏன்?

தலைவர்களும் அதே பழைய ஆட்கள்தான். எண்பது தொண்ணூறு வயதில் அவர்களாக ரிட்டயர் ஆகும்வரை அதே ஆட்கள்தான்.புதுமுகங்களும் இளைஞர்களும் இங்கெல்லாம் பதவிக்கு வருவது என்பது அரிது.

லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு இல்லாதவர்கள் என்பது ஒரு பாஸிடிவ் விஷயம்.தமிழகத்தில் சில குறிப்பிட்ட தொகுதிகளில் வெற்றியை நிர்ணயிக்கக்கூடிய சக்தியாக விளங்குகிறார்கள்.
(கன்னியாகுமரி,நாகப்பட்டினம்,கோயமுத்தூர் மாவட்டங்களில் சில இடங்களில்). நல்லக்கண்ணு போன்ற கக்கன், காமராஜர் ஆகியோருடன் ஒப்பிடக்கூடிய தலைவர்களை கொண்ட கட்சிகள் இவை.