விதி, கர்மவினை மற்றும் கிரியா = ஞானசக்தி?

கொடி அசைந்ததும் காற்று வந்ததா?
காற்று வந்ததும் கொடி அசைந்ததா?
நிலவு வந்ததும் மலர் மலர்ந்ததா?
மலர் மலர்ந்ததால் நிலவு வந்ததா?

முதல் கேள்விக்கான விடை பொதுபுத்தியில் எளிதானது. காற்றடிப்பதால் கொடி அசைகிறது. ஆனால், அமாவாசை அன்றும் மலர் மலர்ந்தால், இரண்டாம் கேள்விக்கான பதில் சிக்கலாகிறது. அதைப் போன்ற சில கஷ்டமான வினாக்களை பார்ப்போம்.

கீழ்க்கண்டவற்றில் மெய்யாலுமே சொல்லப்பட்ட காரணத்தினால்தான், இந்த முடிவு நிகழ்ந்ததா?

  • புரதச் சத்து மிக்க உணவு உண்டால் எடை குறையும்.
  • தினசரி ஆஸ்ப்ரின் மாத்திரை போட்டுக் கொண்டால் இதய நோயைத் தடுத்து விடலாம்.
  • பெண்ணுரிமைப் போராட்டங்களினால் குழந்தைப் பிறப்பு குறைந்து, மக்கள்தொகை சுருங்கும்.
  • தேடு பொத்தானை பெரிதாக வைப்பதன் மூலம் நிறைய பார்வையாளரைப் பெறலாம்.
  • பாலுடன் ஊட்டச்சத்துகள் கலந்து கொடுத்தால் சிறார்களின் உயரம் அதிகமாகும்.
  • வகுப்பில் குறைந்த அளவில் மாணவர்களை அமர்த்துவதன் மூலம் அவர்களின் தேர்ச்சி விகிதத்தை உயர்த்தலாம்.
  • வரியைக் குறைப்பதன் மூலம் வேலைவாய்ப்பைப் பெருக்கலாம்.
  • குறைந்த வட்டிவிகிதத்தின் மூலம் பொருளாதாரத்தை மேம்படுத்தலாம்.
  • நிறைய சம்பளம் கொடுப்பதன் மூலம் ஊழியர்களின் பணிவிலகலைத் தடுக்கலாம்.

ஏன் இவ்வாறு நடந்தது? எப்படி இந்த நிலை உருவானது? உண்மையான ஆதார நிமித்தன் எது? இவ்வாறு நிழந்ததற்கான  மூலப் பொறுப்பை எங்ஙனம் கண்டு கொள்வது?

தூண்டு காரணம் என்ன என்பதையும், எப்படி ஒரு வினை நடந்தது என்பதையும் The Book of Why: The New Science of Cause and Effect புத்தகத்தில் ஜூடேயா பெர்ல் (Judea Pearl) என்பவரும் & டானா மாக்கென்ஸி (Dana Mackenzie) என்பவரும் விரிவாக அலசுகிறார்கள். மனித சிந்தனையில் மூலாதாரத்தை கணினிக்குப் புரியுமாறு விளக்குவது எப்படி என்பதற்கு பாதை போடுகிறார்கள்.

கலிஃபோர்னியா பல்கலை பேராசிரியராக ஜூடேயா பெர்ல் இருக்கிறார். 2011ல் ட்யூரிங் விருது பெற்றவர். இவர் மகன் டேனியல் பேர்ல் குறித்து நீங்கள் அறிந்திருப்பீர்கள். இவரின் பேட்டி சொல்வனத்தின் இந்த இதழில் வெளியாகி உள்ளது.

புத்தகத்திற்குள் செல்வதற்கு முன் “தூண்டு காரணம்” எப்படி, எப்பொழுது தோன்றியது என்பதைப் பார்க்கலாம்.

புராணகாலத்தில், 1. ஹிரண்யகசிபு & ஹிரண்யாக்ஷன், 2. இராவணன் & கும்பகர்ணன் 3. கம்சன் & சிசுபாலன் – ஏன் பிறந்தார்கள்? வைகுண்டத்தில் பள்ளிகொண்டிருக்கும் நாராயணரை சனகாதி முனிவர்கள் தரிசிக்க வருகிறார்கள். அவர்களை “ஜெய – விஜயர்” என்னும் துவார பாலகர்கள் தடுத்து நிறுத்துகிறார்கள். அந்த அவமானத்தால் சினம் கொண்ட அம்முனிவர்களின் சாபத்தினால் இந்த அரக்கர்கள் தீமை உருவானார்கள்.

அடுத்து அரிஸ்டாட்டில் (300 பொ.மு.) – ஒன்றை உருவாக்கும் செயல், அல்லது வழிமுறையை சொல்கிறார்: மாற்றம் என்பது மாயை அல்ல. இயற்கையின் வழியாக மாற்றத்தை மனிதர் உணர்கிறார். உண்மை நிலவரம் என்பது எங்கோ நிலவுவது அல்ல. நாம் உணர்வதுதான் எதார்த்தம். மனிதர் தன் அனுபவத்தை நம்பலாம். சொல்லப் போனால், உணர்வது மட்டுமே நிஜத்தை அறியும் ஒரே வழி.

அரிஸ்டாட்டிலின் உலகத்தில் உயிரியலின் அடிப்படையில் இயற்பியல் கட்டமைக்கப் பட்டிருந்தது. அரிஸ்டாட்டிலை பொருத்தவரை, மனிதரின் (அதே போல் மிருகங்களின்) நடத்தைக்கு, குறிப்பிட்ட காரணங்கள் இருந்தன. ஒன்றின் தேவையைப் புரிந்துகொண்டால், அது எவ்வாறு நடந்துகொள்ளும் என்பதைப் புரிந்துகொள்ளலாம். அரிஸ்டாட்டிலின் நான்கு காரணங்களைப் பார்த்தால், ஒரு பொருளின் நோக்கத்தை அறியலாம்:

1. ஒன்றின் உருவ, வடிவ குறிக்கோள்: இது இட்ட நோக்கம். ஒன்றின் உள்ளார்ந்த வளர்ச்சியினால் உண்டாவது.
2. பொருண்ம குறிக்கோள்: இது அந்தப் பொருள் எதனால் கட்டமைக்கப்பட்டிருக்கிறது என்பதைப் பொருத்து உண்டாவது.
3. செயல்திறன் குறிக்கோள்: இது மற்றொன்றினால் நிகழ்வது. எப்படி மற்ற செயல்களால் மாறுதல் நிகழும் என்பதை விளக்கும்.
4. அறுதி குறிக்கோள்: மாற்றத்தினால் உண்டாகும் ஆய பயன் என்ன?

ஒரு உதாரணம் பார்க்கலாம். இராவண வதத்திற்குப் பின் சிவபெருமானை வழிபட ராமர் தீர்மானிக்கிறார். சிவலிங்கம் கொண்டு வருமாறு கூறி அனுமனை காசிக்கு அனுப்பினார். சிவலிங்கப் பிரதிஷ்டைக்கு குறிப்பிட்டிருந்த நேரத்திற்குள் அனுமன் திரும்பி வராததால், சீதாதேவி இராமேஸ்வரம் கடற் கரையில் உள்ள மணலிலேயே ஒரு சிவலிங்கம் உருவாக்கித் தருகிறாள். இது “செயல்திறன் குறிக்கோள்”. மணல் என்பது “பொருண்ம குறிக்கோள்”. காசிலிங்கம் என்பது “ஒன்றின் உருவ, வடிவ குறிக்கோள்”. சீதையின் தவவலிமையால், மணல் லிங்கமானது, இறுகிய பாறை போன்று உறுதியாக நின்றது, “இறுதி குறிக்கோள்”.

கொஞ்ச நாள் கழித்து கலிலீயோ வருகிறார். கூடவே பேக்கன், தாமஸ் ஹாப்ஸ் போன்றோரும் அணி சேர்கிறார்கள். மண்ணுக்கும் மணலுக்கும் ஆசை இருக்கிறது என்பதும் மனிதரைப் போல் அவையும் உன்னத நிலையை தங்கள் குறிக்கோளால் அடையும் என்பதும் சுத்த பைத்தியக்காரத்தனம் என்கிறார்கள்.

அரிஸ்டாட்டிலின் தத்துவங்கள் உயிரியலில் முக்கியமானதாக முன்னெடுக்கப்பட்டு, சார்லஸ் டார்வின் முன்வைத்த பரிணாம வளர்ச்சி கொள்கைக்கும் பாதை வகுக்கிறது. ஆனால், பௌதிகத்தில் கலிலீயோ அல்ஜீப்ரா என்னும் அயல்மொழியைக் கொண்டு இயற்பியல் கோட்பாடுகளை விளக்குகிறார். கலிலீயோவிற்கு “எப்படி” என்பது முதலில் முக்கியம்; அதன் பிறகு “ஏன்” என்பதை பார்த்துக் கொள்ளலாம் என்கிறார். கலிலீயோவிற்கு முதலில் ஒரு விஷயத்தை விளக்க வேண்டும். அதுவும் கணித சமன்பாடு(கள்) கொண்டு விளக்க வேண்டும்.

அதன் தொடர்ச்சியாக டெஸ்கார்ட்டே (Descartes) 1600-களில் இவர் நான்கு சிந்தனை ஆணைகளை முன்வைக்கிறார்:
1. என்னிடம் ஏற்கனவே நிரூபிக்கப்படாத எதையும் உண்மை என்று ஒப்புக் கொள்ள வேண்டாம்
2. என்னிடம் வரும் மலை போன்ற சிக்கல்களை, ஆராய்ந்த ஆய்வின் மூலம் குட்டி குட்டி பகுதிகளாக பிரித்துக் கொள்ளவும்
3. ஒவ்வொன்றையும் விலாவாரியாக யோசிக்கவும்; முதலில் எளிய, புரியக்கூடிய விஷயங்களில் துவங்கவும்; படிப்படியாக முன்னேறி முழு சிக்கலையும் புரிந்து கொள்ளவும்.
4. விலாவாரியாக ஒவ்வொரு நுணுக்கத்தையும் விளக்கவும்; பொதுப்படையாக விவரிப்பதன் மூலம் எந்தவொரு சின்ன விஷயத்தையும் தவறவிடுவதை தடுக்கவும்.

அவருக்குப் பின் டேவிட் ஹ்யூம் (David Hume) 1711 –1776. கணித சமன்பாடுகள் இயந்திரங்களுக்கும் இயற்பியலுக்கும் மட்டுமல்ல. மனிதர்களின் நடவடிக்கைகளுக்கும் பொருந்தும் என்கிறார். “நெருப்பைத் தொட்டால் சுடுமென்று சின்ன வயசில் அண்ணன் சொல்லுமடா! மீறி தொட்டேண்டா!” என்னும் டி ராஜேந்தர் பாடலைக் கேட்டிருப்பீர்கள். பின்விளைவு என்ன என்பதை பழக்கவழக்கத்தின் மூலம் மூளைக்குக் கற்றுக் கொடுக்கலாம். ஒன்றினால் இன்னொன்று விளைந்தது, பிற்காலத்திலும் அவ்வாறே நடக்கும் என்பதைப் பழக்கப்படுத்தாலாம் என்கிறார். கோழி கூவுவதால் சூரியன் உதயமாகியதா அல்லது கோழி குருமா வைத்த பின்னும் சூரியன் உதயமானாரா என்பதை மூளை தானியங்கியாக உணரும் வித்தையை விதிகளாக்கி எழுதுகிறார்.

கொஞ்ச நாள் கழித்து பெர்ட்ராண்ட் ரஸ்ஸல் வருகிறார். அவர் ரமணா படத்தில் விஜயகாந்த் சொல்வது போல், “எனக்கு காரணவியம் (Causation) என்பது அறிவியலில் பிடிக்காத கோட்பாடு” என்கிறார். ”எல்லா தத்துவவியலாளர்களும் காரணவியம் என்பது அறிவியலின் ஆதார மெய்ம்மை என்னும் கற்பனையில் திளைக்கிறார்கள். ஆனால், மேம்பட்ட அறிவியலில் ‘காரணம்’ என்னும் பேச்சுக்கே இடமில்லை. காரணவியக் கோட்பாடு என்பது காலாவதியான காலத்தின் எச்சமே. இன்னும் கூட ராஜா-ராணிகள் ஆள்வதால் நாட்டுக்கும் நாட்டுமக்களுக்கும் எந்தவித சிக்கலும் வராது என்று நினைத்து ஒரு ஒரமாக விட்டுவைப்பது போல் ‘காரணம்’ என்னும் சிந்தனையும் அறிவியலில் மூலையில் தூசு படிந்து வாழ்கிறது.” என்கிறார்.

இதற்கும் இவருக்கும் பதிலாக ஒட்டுறவு (Correlation) & சார்புள்ளமை (Dependence) தோன்றுகிறது. ஃப்ரான்சிஸ் கால்ட்டன் (Francis Galton) மற்றும் கார்ல் பியர்ஸன் (Karl Pearson) உதயமாகிறார்கள்.

 

ஒருவருக்கு முழங்கை அதிக நீளம் இருந்தால், அவர் உயரமானவராக இருப்பார். இது இரு அளவைகளுக்கு இடையே உள்ள உறவை இயைபுபடுத்துகின்றன. இது ஒட்டுறவு. இரு கணித மாறிகளுக்கு (mathematical variables) இடையே ஆன தொடர்பை அளவிட்டுச் சொல்வது ஒட்டுறவு.

ஒட்டுறவு அதிகமாக இருப்பதால் மட்டுமே, ‘அதனால் இது நிகழ்ந்தது’ என்று சொல்ல முடியாது. “காக்கை உட்கார பனங்காய் விழுந்தது” என்பது போல், எதை வேண்டுமானாலும் ஒட்டுறவாக்கும் சாமர்த்தியமான தரவுகளைக் கொண்டு ஒப்பேற்றலாம். சென்னையில் சூறாவளி வரும்போதெல்லாம் மழை அடிக்கும். அதனால் சூறாவளிதான் மழைக்கு மூல காரணம் என்று நிறுவ முடியாது அல்லவா!? மழை பெய்வதற்கு பல காரணங்கள் இருக்கும்.

இதன் நீட்சியாக “இயைபிலா சோதனை”யை (Randomized Controlled Trials) சர் ரொனால்ட் ஃபிஷர் (Sir Ronald Fisher) தோற்றுவிக்கிறார். தரவுகளில் இருந்து காரணங்களை அறிவியல்பூர்வமாக நிரூபிப்பதற்கும் மூல காரணங்களைக் கண்டுபிடிப்பதற்கும் இந்த சமவாய்ப்புள்ள சோதனை உதவுகிறது.

மூன்று கட்டளைகளை ரொனால்ட் ஃபிஷர் முன்வைக்கிறார்:

1. ஒட்டுறவு: காரணமும் தாக்கமும் ஒன்றொடன்று இயைபாக நகர வேண்டும்.

2. நேர வரிசை: தாக்கத்திற்கு முன் காரணம் நிகழ வேண்டும்.

3. போலியற்ற தன்மை: காரணத்திற்கும் தாக்கத்திற்கும் உள்ள தொடர்பை மூன்றாம் பொருளைக் கொண்டு விளக்க முடியாமல் இருக்க வேண்டும்.

இது பொறியியல் போன்ற அறிவியலின் எல்லா பகுதிகளிலும் பயன்படுகிறது. தகவல்களின் அடிப்படையில் முடிவெடுப்பதை A/B சோதனை முறை என அழைக்கிறோம். இணையம் வழியாக இந்த மாதிரி சோதனைகளை செய்து பார்ப்பது மிக எளிதான ஒன்றாக இருக்கிறது. ஆண்டுதோறும் பன்னிரெண்டாயிரத்திற்கும் மேற்பட்ட சோதனைகளை கூகுள் செய்து பார்க்கிறது. அதன் முடிவுகளின் அடிப்படையில் பத்து சதவிகித மாற்றங்களை உண்டாக்குகிறது.

சரித்திரம் போதும். ஜுடேயா பெர்ல் புத்தகத்திற்கு வந்து விடலாம்.

கீழ்க்கண்ட பன்மாறி தொடர்புப் போக்கு பகுப்பாய்வை (multiple regression analysis) பார்க்கவும். இந்தப் படம், உங்கள் வேலையில் உங்களுக்கு திருப்தி கிடைக்குமா என்பதை மூலக்காரணங்கள் கொண்டு அலசுகிறது. உங்கள் வயது என்பது ஒரு முக்கியமான மூல காரணம். உங்கள் வேலையில் உங்களுக்கு சுதந்திரம் இருக்கிறதா என்பது இன்னொரு மூல காரணம். உங்கள் சமபளம் எவ்வளவு என்பதையும் கணக்கில் வைத்துக் கொண்டு, ஒவ்வொரு காரணத்திற்கும் ஒரு ஊக அளவை நிர்ணயித்து, அதன் மூலம் ‘உங்களுக்கு எவ்வளவு திருப்தி கிடைக்கும்?’ என்பதை நிகழ்தகவாக (probability) சொல்கிறது.

அதை மீறி வேலைக்கு செல்லும் தூரம், பாதையில் ஏற்படும் நெரிசல்கள், சக ஊழியர்களுடன் ஆன நேசம், அந்தஸ்து, வீட்டில் இருந்தே வேலை பார்க்கும் வசதி, சமகால பொருளாதார நிலை போன்ற பற்பல விஷயங்களை இந்தப் படம் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை.

இது எளிமையான பாதை வரைபடம். இந்த சாதாரண சுருக்கமான படத்தின் மூலமே, ஒரேயொரு சமன்பாட்டைக் கொண்டு மொத்த பேசுபொருளையும் விளக்க முடியாது என்பதை அறிய முடிகிறது. பேயிசிய தொடர்முனைகள் (Bayesian Networks) கொண்டு இந்த காரண சமன்பாடுகளை அணுகவேண்டும் என்கிறார் பேர்ல். நிகழக்கூடியதன்மை கொண்டு இவ்வாறு பின்விளைவுகள் இருக்கும் என்பதை எவ்வாறு உறுதியாகக் கணக்கிடலாம் என்பதை ஜுடேயா பேர்ல் விவரிக்கிறார்.

எந்திர தற்கற்றலுக்கு பாதை அமைக்க ஜுடேயா பேர்லின் ஆராய்ச்சி – பாதை அமைக்கின்றது. புள்ளிவிவர கோட்பாடுகளை மட்டுமே கணக்கில் எடுக்காமல், எதிர்மெய் (அல்லது) மறு உண்மை எவ்வாறு செயற்கை நுண்ணறிவிற்கு உதவலாம் என்பதை இவ்வாறு பகுத்துப் பார்க்கலாம் என்கிறார்:

அடுக்கு (குறியீடு) செயல்பாடு கேள்விகள் உதாரணங்கள்
இணைதல் (அ) சேர்த்தல்

P(y|x)

பார்த்தல் * அது என்ன?

* ஒன்றைப் பார்ப்பதால் என் நம்பிக்கை எப்படி மாறும்?

1. அறிகுறிகள், நோயைக் குறித்து என்ன சொல்கின்றன?

2. கருத்துக்கணிப்புகள், தேர்தல் முடிவைக் குறித்து என்ன சொல்கின்றன?

குறுக்கிடுதல் (அ) தலையிடுதல்

P(y|do(x), z)

செய்தல் * ஒரு வேளை அப்படி நடந்தால்…

* நான் இதைச் செய்தால் என்ன ஆகும்?

1. ஆஸ்ப்ரின் மாத்திரை எடுத்துக்கொண்டால், என் தலைவலி போய்விடுமா?

2. சிகரெட்களை தடை செய்தால் என்ன நடக்கும்?

எதிர்மெய் (அ) மறு உண்மை

P(yx|x`,y`)

கற்பனை செய்தல்,

பின் திரும்பி அவதானித்தல்

* ஏன்?

* இந்த செயலினால் அந்த நிகழ்வு நடந்ததா?

* நான் மட்டும் அதை செய்யாதிருந்தால் அல்லது வேறு மாதிரி நடந்து கொண்டிருந்தால் என்ன ஆகி இருக்கும்?

1.ஆஸ்ப்ரின் மாத்திரையினால் மட்டுமே என் தலைவலி நிவாரணம் பெற்றதா?

2. கோட்ஸே சுடாவிட்டால், காந்தி உயிர் வாழ்ந்திருப்பாரா?

3. கடந்த இரண்டு வருடங்களாக நான் புகை பிடிக்காமல் இருந்தால் என்ன நடக்கும்?

 

அடுத்த பகுதியில் கீழ்க்கண்ட வினாக்களுக்கு “ஏனின் புத்தகம்” மூலம் விடை காண முயலுவோம்:

1. மார்கழி மாதமே அக்னி நட்சத்திரம் போல் வெந்து உருகுவதற்கும் உலக வெப்ப ஏற்றத்திற்கும் சம்பந்தம் உண்டா? எப்படி கண்டறிந்து நிறுவி நிரூபிப்பது?

2. சில காலம் முன்பு வரை கணித அறிஞர்களிடம் ‘காரணத்தினால் உண்டான விளைவு’ என்பது தீண்டத்தகாத சொல்லாக இருந்தது. எல்லோரும் ஒட்டுறவு என்பதை மட்டுமே நம்பினோம். ஏன் அது தவறு?

3. ‘தகவல் மட்டுமே உதவும்; தரவுகள் மட்டுமே முடிவுகளுக்கு அடிகோலும்’ – என்னும் தகவல் ஆய்வாளர்களின் தாரக மந்திரம்  இறுதி உண்மையா?

4. எல்லா விஷயங்களையும் ஒரேயொரு கோட்டில் (Line of Best Fit) பொருத்துவது எவ்வளவு பெரிய அனர்த்தமான முடிவுகளுக்கு இட்டுச் செல்லும்?

5. ‘அதெல்லாம் கணிக்கவே முடியாது’ என்பது போன்ற விஷயங்களுக்குக் கூட எப்படி நமபகமாக விடைக்கான பாதையை ஒவ்வொரு தடவையும் எவ்வாறு போடுவது?

மேலும்:

  • Causality: Models, Reasoning, and Inference – Judea Pearl, 2nd Edition
  • A Tutorial on Learning With Bayesian Networks , David Heckerman – Technical Report, Microsoft Research.
  • Bayesian Networks without Tears, Eugene Cherniak – AI Magazine, 1991
  • If Correlation does not imply Causation, what does ? – Michael Nielson blog
  • Complexity and Management: Fad Or Radical Challenge to Systems Thinking?
    By Ralph D. Stacey, Douglas Griffin, Patricia Shaw

Asokamithiran on Jeyamohan

தமிழில் இப்போது எழுதுபவர்களில் நம்பிக்கை அளிப்பவர்களாக யாரைக் கருதுகிறீர்கள்?”

ஜெயமோகன். அவருக்கு இருக்கும் அனுபவங்களும் வாசிப்பும் இன்னும் அவரைப் பெரிய உயரங்களுக்குக்கொண்டு செல்லும் என்று நினைக்கிறேன். ஆனால், படைப்புகளைத் தாண்டி அவர் எழுது வதும் பேசுவதும்… ம்ஹூம்…”

அசோகமித்திரனின் கதைகளில் சினிமா குறித்தும் அரசியல் குறித்தும் இலக்கியம் குறித்தும் கடுமையான விமர்சனங்கள் இருக்கும். அதையே அவர் நேரடியாக பெயரைக் குறிப்பிட்டு சொல்லி இருந்தால் ஜெயகாந்தன் போல் புகழ் அடைந்திருப்பார். உதாரணத்திற்கு விழா மாலைப் போதில் எடுத்துக் கொள்ளலாம்.

அதில் சொல்லப்பட்டவர்களை அடையாளம் காட்டி ஆங்கிலக் கட்டுரை எழுதி இருக்கலாம். குஷ்வந்த் சிங் மாதிரி கவனம் பெற்றிருப்பார்.

அதை அசோகமித்திரன் விரும்பியதில்லை. அதனால்தான் ‘படைப்புகளைத் தாண்டி எழுதுவதும் பேசுவதும்’ அவருக்கு உவப்பாய் இருக்கவில்லை.

‘செய் அல்லது செய்தவரை சுட்டிக் காட்டு’ விரும்பிகள் ஒரு பக்கம். ‘என் கடன் எழுதி கிடப்பதே’ இன்னொரு பக்கம்.

படைப்பாளி: அமெரிக்க இந்தியர் சமூகவியல்

நேர்காணல்: கனடாவைக் குறித்து எனக்குத் தெரியாது.

அமெரிக்காவில் தமிழ் எழுத்தாளர்கள் உருவாகாமல் இருப்பதற்கும் இந்தியாவில் தமிழ் இலக்கியம் பரவலாக சென்றடையாமல் இருப்பதற்கும் ஒரே காரணம்தான்.

அமெரிக்காவில் எல்லோரும் புத்தகம் வாசிக்கிறார்கள். வாரத்திற்கு ஒரு நூலாவது படித்து முடித்து விடுகிறார்கள். இந்தியாவில் ரமணி சந்திரன் படித்தாலே பெரிய படிப்பாளி.

அமெரிக்காவில் எல்லோருமே ஒரு புத்தகமாவது எழுதுகிறார்கள்… அவர்களின் அனுபவம் சார்ந்து; துறை சார்ந்து; சொந்த வாழ்க்கை சார்ந்து…

தமிழரில் புத்தகம் போட்டால், ‘தமிழ் வாழ்க’ என்றோ ‘சிலப்பதிகாரம், திருக்குறள்’ சார்ந்தோ மட்டுமே மருத்துவ டாக்டர்கள் முதற்கொண்டு ஆய்வு பிஎச்டிக்கள் வரை எழுதுகிறார்கள். அவர்களே தங்களின் ஸ்பெஷலைசேஷனில் பேச ஆரம்பித்தால் நன்றாக இருக்கும்.

அமெரிக்காவில் பாதிப் பேர் கம்ப்யூட்டர்; மீதி பேர் பிஸினஸ். கணினி மொழி குறித்தும் பங்குச்சந்தை வர்த்தகம் குறித்தும் தமிழில் எழுதலாம்தான்.

காலச்சுவடுகளும் குமுதங்களும் அதை பரவலாக மக்களிடம் கொண்டு செல்லாது. காசும் பெயராது. அதற்கு பதில் அந்த நாலும் மணி நேரம் நிரலில் எழுதி நானூறு டாலர் சம்பாதிக்கலாம் என்று எண்ணுகிறார்கள்.

All Politics is Local


அறிவா உள்ளுணர்வா?  | திண்ணை

இறந்து போன எழுத்தாளர்களைப் பற்றிய குறிப்புக்கள் பற்றிச் சில குறிப்புக்கள் | திண்ணை: ஸிந்துஜா

திண்ணைப் பேச்சு – கனிமொழி, சின்னக் குத்தூசி பற்றி ஜெயமோகன் பற்றி பி கே சிவகுமார் பற்றி ஸிந்துஜா | திண்ணை :: கோபால் ராஜாராம்

குரங்கில் இருந்து பிறந்து…

ape:
வினைச்சொல்:
மற்றவரைப் போல் நடி; குறிப்பாக – சிந்திக்காமலோ பொருளற்ற நகைப்புக்கிடமான அறிவுகுறைந்த வகையில் நடத்தைகளை கண்மூடித்தனமாகப் பின்பற்று.
ஒத்தச்சொல்: கண்டுபாவித்தல், விகடன், ஒற்றிப் பிரதியெடுத்தல், கிளி, இன்னொருவரின் செய்கையை கண்டுசெய்தல், பகடி, பரிகசித்தல்

இது நம்முடைய அர்த்தம். ஒன்றைக் கண்டு பிரதிபலித்தலை ‘ஏப்’ (ape) என்கிறோம். அகரமுதலியில் ‘ஏப்’ எனத் தேடினால், பாவித்தல், பாசாங்கு செய்தல், கிளிப்பிள்ளை போல் யோசிக்காமல் பிரதிபலித்தல் என அர்த்தம் சொல்கிறார்கள்.

ஆனால், அறிவியல் ஆராய்ச்சியின் படி பார்த்தால் ஒரு விஷயத்தைக் காண்பித்தால் மனிதக் குரங்கு அதனை நினைவில் வைத்திருக்கிறது.  வெறுமனே கண்ணாடியாக புத்தியில்லாமல் பிரதிபலிப்பதில்லை. அந்தச் செய்கையை வருங்காலத்தில் எதிர்பார்க்கிறது. ஒவ்வொரு செயலையும் நினைவுகூர்ந்து அதற்கேற்ப தன் கண்ணோட்டத்தைச் சொல்கிறது. சொல்லையும் அதற்கேற்ற செய்கையையும் அந்த செய்கையின் பின் விளைவுகளையும் நினைவில் நிறுத்திக் கொள்ளும் குரங்குகள், சிந்தித்த பின் செயல்படுகிறது. நான் கூட இவ்வளவு நிதானமாக என் தரப்பின் செய்கைகளுக்கு, யோசித்து நிதானமாகச் செயல்படுவதில்லை

செய்தி: Great Apes Make Anticipatory Looks Based on Long-Term Memory of Single Events: Current Biology

கொரில்லாக் குரங்கு மட்டுமல்ல… நாய் கூட ஆயிரக்கணக்கான வார்த்தைகளைக் கற்றுத் தேர்ந்திருக்கிறது. நாம் சொல்வதைப் புரிந்து கொள்கிறது. நம்மிடம் பதிலுக்கு பதில் உரையாடாமல், நாம் சொல்லும் வார்த்தையை வைத்து, அது ஒரு பொருளா அல்லது வினைச் சொல் கட்டளையா என பகுக்கத் தெரிந்திருக்கிறது. நாம் உரைப்பது – பந்தா, எந்த நிறப் பந்து, அல்லது எந்த பொம்மை என்று புரிந்து கொண்டு, அதற்கேற்ப ஈடு கொடுக்கிறது: What a Border Collie Taught a Linguist About Language | WIRED

மொழி எவ்வாறு உருவானது? கபிகள் பேசுமா? சைகை மொழியை சிம்பன்ஸிக்கு எப்படிக் கற்றுத் தருவது? மிருகங்களை சுதந்திரமாக வாழவிடாமல், நம் கண்காட்சிக்கென, விலங்கியல் பூங்காவில் அடைத்து வைப்பது தகுமா? அவற்றின் பரிணாம வளர்ச்சியைப் புரிந்து கொள்கிறேன் என்னும் சாக்கு சொல்லி, வீட்டிற்குக் கொண்டு வந்து தத்துவவியல் விஞ்ஞானியோ அறிவியல் ஆய்வாளரோ ஆராயலாமா?

இந்தக் கேள்விகளுக்கு பதிலாக அல்லது நீட்சியாக இந்த ஆராய்ச்சியை படிக்கலாம்: There is a moral argument for keeping great apes in zoos | Aeon Ideas

இதெல்லாம் மிருகங்களைப் பற்றின செய்திகள். மனிதனுக்கு ஆறறிவு இருக்கிறது. அவனுக்கும் இந்த மந்தைக் கூட்டத்துக்கும் என்ன சம்பந்தம் என்று நீங்கள் உறுமுவது எனக்குக் கேட்கிறது. உங்களுக்கு ஒரு சம்பவத்தை நினைவு கூறுகிறேன்.

நடிகர் சூர்யாவின் உயரம் 5′ 7″
நடிகை அனுஷ்காவின் 5′ 10″
சிங்கம் படப்பிடிப்பில் ஸ்டூல் போட்டார்களா அல்லது சூர்யாவிற்கு ஹை- ஹீல்ஸ் செருப்பு கொடுத்தார்களா என்பதை பட்டிமன்றத் தலைப்பாக்கலாம். இது மிருகத்தின் சுபாவம். மண்டியிட வைப்பது மன்னனின் சுபாவம் என்றால், ஆண்மகனுடன் டூயட் பாடும் காதலி தாழ்தளத்தில் நின்று சிருங்கார ரசம் முகத்தில் கொணர வேண்டும் என்பது சினிமா சுபாவம்.

அது சினிமா. நிஜமல்ல. அதைக் கூட விட்டுவிடலாம். நீங்கள் தற்படம் (செல்ஃபீ) எடுப்பதையும் அது எவ்வாறு நம் முன்னோரின் குணநலனோடு ஒத்துப் போகிறது என்பதையும் எவ்வாறு ஒவ்வொரு சுய புகைப்படத்திலும் உங்களின் விலங்கு மனோபாவம் வெளிப்படுகிறது என்பதையும் இங்கே ஆராய்கிறார்கள்: The Psychology of Selfies | Psychology Today

இது தற்கால ஆராய்ச்சி. கொஞ்சம் சங்க காலத்திற்குச் செல்வோம். தமிழில் தோன்றிய முதல் சமயக் காப்பியம் மணிமேகலை ஆகும். இந்நூல் பவுத்த மத சார்புடைய நீதிகளை எடுத்துச் சொல்லும் பேரிலக்கியம் என்ற பெருமை கொண்டது. குமரி முனையிலிருநது இலங்கைக்குக் குரங்குப் படைகள் அணை அமைத்தன என்று மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் மணிமேகலையில் கூறுகின்றார். அதில், ஐந்தாவது மணிமேகலை உதயகுமரன்பால் உள்ளத்தாள் என மணிமேகலை தனக்கு மணிமேகலா தெய்வம் வந்து தோன்றிய பாட்டில்:

பழ வினைப் பயத்தான் பிழை மணம் எய்திய
எற்கெடுத்து இரங்கி தன் தகவு உடைமையின்
குரங்கு செய் கடல் குமரி அம் பெருந் துறைப்
பரந்து செல் மாக்களொடு தேடினன்
– (மணிமேகலை 5133 – 38)

குரங்கு செய்கடல் குமரியம் பெருந்துறை-குரங்குகளாலே இயற்றப்பட்ட திருவணையையுடைய கடலின்கண் அமைந்த பெரிய புண்ணியத் துறையாகிய கன்னியாகுமரித் துறையில் ஆடுதற் பொருட்டு என்பது பொருள். குரங்கு செய்கடல் என்றது தென்கடலை அறிவிக்கிறது. குமரி என்பது கன்னியாகுமரியைக் குறிக்கிறது.

”நம் உலகத்தில் இரு வகை மனிதர்கள் இருக்கிறார்கள்: ஒருவர் ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் என்பவர்; இன்னொருவர் உலகை இரண்டாகப் பிரிப்பவர்கள்.” என்பதற்கேற்ப, 1968ல் முதன் முதலாக ‘பிளானெட் ஆஃப் தி ஏப்ஸ்’ படப்பிடிப்பு நடத்தியபோது அந்த சம்பவம் நடந்தது. திரைப்படத்தில் இரு தரப்பினருக்கு இடையே போர் நிகழுமாறு காட்சியைப் படமாக்கிக் கொண்டிருந்தார்கள். ஒரு தரப்பில் கொரில்லாக்கள். அவர்களுக்கு எதிராக குரங்குகளாக ஆயிரக்கணக்கான துணைநடிகர்கள் போர் புரிந்தார்கள். இடைவேளை வந்தது. கொரில்லாவாக வேஷம் கட்டியவர்கள் எல்லோரும் ஒரு பக்கம் சேர்ந்து உணவு உட்கொண்டார்கள். அதன் எதிர்ப்புறம் குரங்காக வேடம் தரித்தவர்கள் கொரில்லா வேஷதாரிகளிடம் இருந்து விலகி தனியே உணவு உண்டார்கள். நாம் எங்கே பார்த்தாலும் பேதம் பார்த்துக் கொண்டே இருக்கிறோம். இனம், மதம், பூர்விகம், நிறம், பிறப்பிடம், மொழி, உடலமைப்பு, பால், மொழி, வசிப்பிடம், வேலை, பணம், வயது… எண்ணற்ற வகைகளில் நம்மவர்களைத் தேர்ந்தெடுக்கிறோம்: Why Your Brain Hates Other People: And how to make it think differently – Overcoming Us vs. Them

’பிளானெட் ஆஃப் தி ஏப்ஸ்’ வரிசைப் படங்கள் இதையெல்லாம் சற்றே நீட்டித்து அறிவியல் புனைவாக, கற்பனை செய்து பார்க்கின்றன:

இந்த ஜூலை மாதம் ”வார் ஃபார் தி பிளானெட் ஆஃப் தி ஏப்ஸ்” வெளிவந்தது. சமீபத்தில் தூசி தட்டி மீண்டும் இந்த குரங்கு சாம்ராஜ்யத்தை படமாக்கத் துவங்கிய பிறகு, வரும் மூன்றாம் படம் இது. இந்தப் படத்திலும் குரங்குகள் பேசுகின்றன. மனிதர்கள் மெதுவாகப் பேச்சை இழந்து வருகிறார்கள். மனிதனின் அறிவியல் ஆற்றல் அவனின் அழிவிற்கு இட்டுச் சென்றிருக்கிறது. சண்டை ஆயுதங்களைக் கொண்டு ஒருவரையொருவர் கொன்று குவிக்க தொழிநுட்ப முன்னேற்றங்களைப் பயன்படுத்தும் வர்க்கமாக மானுடம் சித்தரிக்கப்படுகிறது. குடியுரிமைக்காகக் குரங்குகள் குரல் எழுப்புகின்றன. சம அந்தஸ்துடன் வாழாவிட்டாலும், தங்களின் காட்டில், ஒரு மூலையில் ஒதுக்குப்புறமாக, மனிதனின் நகரங்களுக்குள் வராமல் ஒளிந்து வாழப் போராடுகின்றன.

2011-ல் முதல் பகுதி வந்தது – ஏற்றம்: rise
2014-ல் இரண்டாம் பகுதி வெள்ளித்திரையில் வெளியானது – வைகறை: dawn
இந்த வருடம் இறுதி பாகம் – யுத்தம்: war

ஹாலிவுட் மசாலப் படங்களைப் பார்க்கும்போது மூளையைக் கழற்றிவைத்து விட்டு பார்ப்பது உங்களின் அறிவிற்கு குந்தகம் விளைவிக்காது. அதற்காகவே இந்தக் கட்டுரையின் துவக்கத்தில் இந்தப் படம் நிஜத்திலேயே நடக்கும் என்னும் தோற்றமயக்கத்தை ஏற்படுத்தும் உண்மைச் செய்திகளைப் பகிர்ந்து கொண்டேன். அந்தச் செய்திகளைப் போல் இந்தப் படமும் படு தீவிரமாக குரங்குகளின் ராஜாங்கத்தை விளக்குகிறது. வந்தியத்தேவனை குதிரையில் கற்பனை செய்த எனக்கு, ஒராங்குட்டான் அதே குதிரையை ஓட்டுவதை திரையில் பார்க்கும்போது மெல்லிய சிரிப்பு எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. எனினும், இந்தப் படமும் முந்தையப் படங்கள் போலவே வெறுமனே கேலி செய்து ஒதுக்க முடியாதபடி யோசிக்கவும் வைத்தன.

அது எப்படி சாத்தியமாகிறது?

முதலில் சீஸராக நடித்தது மனிதன். அவர் பெயர் ஆண்டி செர்கிஸ். கோச்சடையான் படத்தின் ரஜினி போல் நிழல் உருவமாக உயிர் கொடுக்கிறார்.

இரண்டாவதாக படத்தின் துவக்கக் காட்சியில் “விவேகம்” அஜீத் போல் சீஸர் அறிமுகம் செய்யப்படுகிறார். போரில் வெற்றியை அடைகிறார். அதன் பின் ஒவ்வொரு விதமான குரங்கும் அவர் வரும் வழிவிட்டு விலகி, வணக்கம் செலுத்தி, மரியாதையையும் தலைவன் என்னும் மதிப்பையும் உணர்த்துகின்றன. அதன்பின் வரும் இரண்டரை மணி நேரமும் சீஸரின் பார்வையிலேயே கதை சொல்லப்படுகிறது. சீஸர் எவ்வாறு தன் குடும்பத்தை இழக்கிறது என்பதில் துவங்கி, மனிதன் போல் கோபம் தலைக்கேறி பழிவாங்கும் வெறி தலைதூக்குவதிற்குச் சென்று, கடைசியில் சிறைபிடிக்கப்பட்டு, தப்பிக்க யோசிப்பது வரை எல்லாம் சீஸர். ”அபாயம் தவிர்த்துத் தடுத்தாட் கொண்டருள்வாய்; நிழல் வெயில் நீர் நெருப்பு மண் காற்று வானதிலும் பகைமையை அகற்றி அபயமளித்திடுவீர் உணர்விலே ஒன்றி என்னை நிர்மலமாக்கிடுவாய்; யான்/எனது அற்ற மெய்ஞ்ஞானமது அருள்வாய் நீ” என சீஸர் குரு கவசம் பாடாத குறையொன்றுதான் படத்தில் பாக்கி.

சக மனிதர்களைக் கொல்லத் துடிக்கும் கர்னல் ஒரு பக்கம். இன்னொரு பக்கம் தன் சக உயிர்களைக் காத்து பேண நினைக்கும் சீஸர். சாதாரண மாஸ் ஹீரோ படத்தில் கர்னலை வில்லன் என்று நிலைநிறுத்துவார்கள். இந்தப் பக்கம் சீஸரை தலைவராக, அதிநாயகராக உயர்வு நவிற்சியில் அமிழ்த்துவார்கள். கர்னலின் ஒரு கொடூரச் செய்கையைக் காட்டிவிட்டு; அதற்கு மாற்றாக சீஸரின் உன்னதமான பதிலை காட்சியாக நிறுத்துவார்கள். அப்படியெல்லாம் அல்பத்தனம் இந்தப் படத்தில் இல்லை. சீஸர் கம்பியெண்ணுகிறாரா… நாமும் கூண்டில் இருக்கிறோம். சீஸர் பிரம்படி வாங்குகிறாரா… நமக்கும் ரத்தம் வருகிறது. சீஸர் மண் சுமக்கிறாரா… நமக்கு பாரம் அழுத்துகிறது. கையாலாகவராக சீஸர் இருக்கிறாரா… நமக்கும் அடுத்து எப்படி அவரின் நண்பர்கள் யோசிப்பார்கள்; எவ்வாறு தைரியமாக செயலில் இறங்குவார்கள், அதில் எவ்வளவு வெற்றி பெறுவாரகள் என்பதெல்லாம் அவ்வப்போதுதான் தெரிகிறது.

படத்துவக்கத்தில் குரங்கிற்கு கோபம் வந்தால் மனிதத்தன்மையை இழக்குமா என்பது கேட்கப்படுகிறது. மனிதத்தன்மை என்பதை மன்னித்தருள்வது என்று பார்க்கிறேன். மனிதனே காருண்யத்தை விட்டுவிட்டு ஒரு கண்ணிற்கு இரண்டு கண் என்று பிடுங்கிக் கொண்டிருக்கும் காலகட்டம் இது. எனவே, ஆத்திரம் அட்டுமீறினால், மனிதன் குரங்காவானா? கொஞ்சம் நேரம் கழித்து சூதானம் திரும்பியவுடன் குரங்காக நடந்தவரை மனிதனாகக் கருதலாமா?

ஸ்காட் எஃப் ஃபிட்ஸ்ஜெரால்ட் மொழியில் சொல்வதனால்:

“முதல் தரமான புத்திசாலித்தனத்திற்கான சோதனை எதுவென்றால் – மண்டைக்குள் எதிரும் புதிருமான இரு கருத்துகளை மோதவிட்டுக் கொண்டிருந்தாலும், செயல்பாட்டில் எந்த சுகவீனமும் இல்லாமல் இருத்தல்”

நம் சிந்தனையை நாம் இழந்தால் அப்போதும் மனிதத் தன்மையோடு நடந்துகொள்வோமோ? மொழி என்னும் பேசும் சக்தியை ஏதோவொரு கொடிய வியாதி தாக்கி கொள்ளை போய்விட்டால், அப்போது எப்படி யோசிப்போம்? மனிதனோடு வளர்வதால் உரையாடும் சக்தி பெற்ற குரங்கு, தன் சொந்த பாஷையான ஊளை சத்தத்தை மறந்து விடுமா? ஆந்தை அலறும், யானை பிளிறும் என்பது போல் குரங்கு அலப்பும் என்பது மரபு. விலங்கியல் பூங்காவில் வளரும் குரங்கு சகமாந்தர் போல் பேசினால் மனிதர் எனக் கருதலாமா?

பாகுபலி போன்ற மெகா பட்ஜெட் இந்தியப் படங்களில் வரும் கிராஃபிக்ஸ் யானைகளைப் பார்த்தால் கேலிச் சித்திரங்கள் போல் விழுந்து விழுந்து விலா நோக சிரிக்கவைக்கின்றன. ஆங்கிலப் படங்களில் இந்தக் குறை கிடையாது. செய்வதை செவ்வனே சிறப்பாகச் செய்கிறார்கள். அரைகுறை வேலை கிடையவே கிடையாது. அந்தக் குரங்கு பேசினால் வாயசைப்பு முதல் உடல் மொழி வரை மனதில் நம்பவைக்கும்படி இருக்கிறது. அதன் கண்ணில் அப்படியொரு தீவிரம். அதன் முகத்தில் தலைமைப் பண்பு. தோள் அசைவில் ”முதல்வனே வனே வனே வனே வனே முதல்வனே வனே வனே வனே” என முழங்க வைக்கும் பாவம். குரங்குகள் அழுதால் நானும் கிட்டத்தட்ட பரிதாபம் கலந்த சோக மனநிலைக்குச் செல்கிறேன். அந்த ஜந்துக்கள் மனிதரைப் போல் தன்னைத் தானே ஆராய்ந்து அலசி சுய பகுப்பாய்வு செய்தால், அப்படித்தானே ஒருவர் தன் வாழ்வின் முடிவுகளை ஆராய்வார் என எண்ணுகிறேன்.

அதை சிறைப் பிடித்து குரங்கைக் கூண்டில் அடைத்தால், ஏதோ தப்பாக செய்வதாக உணரவைப்பதில் திரைக்கதாசிரியரும் மாயாஜால வடிவமைப்பாளரும் வாகை சூடுகிறார்கள். குரங்குகளும் மனிதர்கள்தானே என தோன்றவைப்பதில் இந்தத் திரைப்படம் வெற்றியைடைகிறது.

அடுத்த படத்தில் டிவிட்டரில் 140 எழுத்துகளுக்குள் தன் கருத்தை வெளிப்படுத்தி, “ஓவியா ஆர்மி”யை உருவாக்கும் என தோன்றவைப்பதில் பிக் பாஸ் யார் என்பதை தெளிவாக உணர்த்துகிறது. அப்போது நான் மரம் விட்டு மரம் தாவிக் கொண்டிருப்பேன்.

மாற்றங்களின் திருப்புமுனையில்… – வெங்கட் சாமிநாதன்

1968-1970க்குப் போக வேண்டும். 35 ஆண்டுகளுக்கும் மேல் பின்னோக்கி, எல்லாவற்றையும் பதிந்த நினைவுகளிலிருந்தே அக்காலகட்ட மனப்பதிவுகளை மீட்க வேண்டும். ஆய்வாளனின் காரியமில்லை. அப்படித்தானா என்று சரிபார்த்துக் கொள்ள பழைய இதழ்கள் கூட இல்லை. பத்திரப்படுத்தி வைத்திருந்தவற்றை யார் எடுத்துப் போய்… சரி, நல்லபடியாகத்தான் நினைப்போமே, திரும்பக் கொடுக்க மறந்துவிட்டார்களோ?

‘எழுத்து’ பத்திரிகையோடு கிட்டத்தட்ட பத்து வருடங்கள் வலர்ந்தாயிற்று. அது ஒரு புத்துணர்வு தந்து, புதிய பாதைகளைக் காட்டிய பத்திரிகை. கிண்டல்களோடும், எதிர்ப்புகளோடும், வசைகளோடும், எல்லாவற்றிற்கும் மேலாக வறுமையோடும் போராடி வளர்ந்த பத்திரிகை. அது கண்டெடுத்தவர்களை வளர்த்த பத்திரிகை. ‘எழுத்து’ தோன்றியிராவிட்டால் எங்களில் பலர் என்னவாக வளர்ந்திருப்போம் என்று சொல்லமுடியாது. 70-க்குப் பிறகு கேட்கப்பட்ட பெயர்கள், “நாங்கள் பிச்சமூர்த்திக்கு முன்னோடிகளாக்கும்” என்று அதற்கும் வெகு வருடங்கள் பின்னால் தங்களுக்கு முடிசூட்டிக்கொள்ள இருந்தார்கள். இப்படிப் பலர் தங்கள் ஜாதகத்தைத் தாங்களே திரும்பக் கணித்துக் கொண்டார்கள். அன்று எதிர்ப்பும், கண்டனங்களும், ஆதரவின்மையும் மாத்திரமே எழுந்தன. இன்று 80-க்குப் பிறகு, அதில் பார்ப்பனீய எலீட்டிஸமும் இருந்ததாகக் கண்டுபிடித்துச் சொல்கிறார்கள்.

எங்களுக்கும் இவர்களுக்கும் நாங்கள் குரல் எழுப்ப மேடை அமைத்ததும், அமைத்துக் கொள்ளும் வழிகாட்டித் தந்ததும் ‘எழுத்து’. அதற்கு முன்னர், ‘எழுத்து’ மூலமும், அது போன்ற பின் வந்த மேடைகள் மூலமும் கேட்ட குரல்களை, சுட்டிய புதிய பாதைகளை முன்னர் யாரும் கேட்டதில்லை; கண்டதில்லை.

இலக்கியச் சிறுபத்திரிகை, புதுக்கவிதை, விமர்சனம் என இம்மூன்றையும் மரபுகளாக, இன்றைய தமிழுக்கு ‘எழுத்து’தான் தந்தது. அது ஒரு கொடை. இவ்வலவும் நான் முன்னர் சொன்னதுதான். ஆனால் இன்று மறுபடியும் சொல்லியாக வேண்டியிருக்கிறது. இவ்வளவையும் சொல்லி, அங்கீகரித்துப் பின்னர் மேற்சொல்வதுதான் முறையும் நியாயமும் ஆகும். ‘எழுத்து’ வை செல்லப்பாவை மீறிச் செல்வது, நிராகரிப்பதாகாது.

ஆக, எழுத்துவோடு வளர்ந்த பிறகு, ஒரு காலகட்டத்தில், எங்களில் சிலருக்கு, எழுத்து பத்திரிகையில் எல்லை வரையறுப்பில் அதிருப்தி. நாங்கள் யாரும் எக்கருத்தையும் எழுத்துவில் வெளியிடும் சுதந்திரம் எங்களுக்கு இருந்தது. செல்லப்பா மிகவும் மதித்த, அவருக்கு மிகவும் நெருக்கமானவர்களின் எழுத்துக்களையே நான் குறை சொல்லி விமர்சித்திருக்கிறேன். என்னையே ‘சாமிநாதன் பதம் பார்த்திருக்கிறார்’ என்று செல்லப்பாவே சொல்லியிருக்கிறார். ஆனால் செல்லப்பாவின் அக்கறை இலக்கியம் என்ற வட்டத்திற்குள்ளேயேதான் இருந்தன. அதிகம் போனால் நாடகம் பற்றி கொஞ்சம் எட்டிப் பார்க்கலாம். ஆனால் எனக்கு எழுத, சொல்ல, கருத்துக்கள் பரிமாறிக் கொள்ள நிறைய விஷயங்கள் இந்த எல்லைகளை மீறி இருந்தன. எனக்குத் தெரியும், சச்சிதானந்தத்தின் ஈடுபாடுகளும் அக்கறைகளும் பரந்த அளவிலானது என்பது. தருமு சிவராமுவின் விஷயத்திலும் அப்படியே. இருப்பினும் என் முதல் கட்டுரையிலேயே, இந்த எல்லைகளை நான் மீறி இருந்தாலும் செல்லப்பா அதற்குத் தடை சொல்லவில்லை என்றாலும், இலக்கியம் மீறிய விஷயங்களுக்கு அதிக இடம் கொடுக்க அவர் விருப்பப்பட்டதில்லை. ஒரு சிறிய பத்திரிகை, இலக்கியம் என்ற எல்லைக்குள்ளேயே செய்ய வேண்டியவை நிறைய இருக்க, அவர் வார்த்தைகளில் “அகலக்கால் வைக்க” அவருக்கு இஷ்டமில்லை. இவ்வளவையும் மீறி நானும் சிவராமுவும் ஒன்றிரண்டு எழுதத்தான் செய்தோம். யூகோஸ்லாவியா க்ராஃபிக்ஸ் பற்றி எழுதியது எனக்கு ஞாபகம் வருகிறது.

எஸ். பொன்னுத்துரை மட்டக்களப்பிலிருந்து சென்னைக்கு வந்திருந்தபோது, தற்செயலாக நானும் சென்னையிலிருந்தேன். செல்லப்பா வீட்டில் அவர் முன்னிலையில் நான் பொன்னுத்துரையும் விவாதித்துக் கொண்டிருந்தோம். இரண்டு விஷயங்கள்: ஒன்று இலங்கையில் தமிழர் போராட்டம்; மற்றது பக்கத்தில் ஓடிக் கொண்டிருந்த டேபிள் ஃபான். அது art-ஆ அல்லது craft-ஆ என்று எங்களுக்குள் பட்டிமன்றம். எங்களுக்குள் முதல் படிவமைப்பு art. பின்னர் அது லஷக்கணக்கில் தயாரிக்கப்பட்டது craft என்றேன் நான். எஸ். பொ. என்ன சொன்னார் என்பது என் நினைவில் இல்லை. ஒரு கட்டத்தில் செல்லப்பா “போதுமே, நீங்கள் இரண்டு பேரும் பேசியது. இனி இலக்கியம் பேசலாம் கொஞ்சம்” என்று கடிந்து கொண்டார்.

எதற்காகச் சொல்ல வந்தேன் என்றால், எதற்கும் ஓர் அளவுக்கு செல்லப்பா பொறுமை காப்பார். வரம்பு மீறிப் போவதாக, தன் இலக்கிய அக்கறைகள் பாதிக்கப்படுவதாக அவருக்குத் தோன்றினால் ஒரே இடுக்கிப் பிடிதான்.

செல்லப்பா வழியில் நாமும் ஒரு பத்திரிகை நடத்தினால் என்ன என்று தோன்றிற்று. எனக்குத் தெரிந்த இலக்கிய நண்பர்களுக்கெல்லாம் எழுதினேன். எல்லோரும் சம்மதம் தெரிவித்தார்கள். பத்திரிகை நடத்தப் பணம் கொடுப்பவர்கள் அல்லாத ஒருவர் பொறுப்பேற்க என்று வல்லிக்கண்ணனை ஆசிரியராக இருந்து பொறுப்பேற்கக் கேட்டேன். நாங்கள் பத்து பதினைந்து பேர் ஆளுக்கு ரூபாய் நூறு முதலில் முதலாகவும், பின்னர் மாதம் பத்து ரூபாய் என பத்திரிகை தானே தன்னை நிறுத்திக் கொள்ளும்வரை கொடுப்பது என்றும் தீர்மானம். பத்திரிகை தன் காலில் நிற்கும் வரை இலவசமாகத் தான் பொறுப்பேற்பதாக வல்லிக்கண்ணன் எனக்கெழுதினார். “எல்லா வேலைகளையும் அநேகமாக வல்லிக்கண்ணனே பார்த்துக் கொள்வார். அவ்வப்போது அவர் ஏதாவது உதவி வேண்டினால் செய்யுங்கள் அது போதும்” என்று அசோகமித்திரனுக்கு எழுதினேன். கணையாழி அனுபவம் அவருக்கு உண்டு என்ற நோக்கில். அவர் உடனே எனக்கு மிக விரிவான பதில் எழுதினார். அதன் முக்கிய வாக்கியம், “பின் கழுத்துப் பட்டு சட்டையின் காலர் அழுக்குப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. மாதம் ரூ.300 தனக்கு தந்தால் உதவுவதாக” அவர் எழுதினார்.

இதற்குப் பிறகு நான் அதிகம் பிரயாசைப்படவில்லை. இது நம்மால் ஆகாது என்று நான் அந்த எண்ணத்தைக் கை விட்டேன். 1967-இல் என் சம்பளமே ஒரு 350-400 என்று தான் ஞாபகம்.

நான் யார் யாருக்கெல்லாம் எழுதினேனோ அவர்களுக்கு ஒரு வேளை ஞாபகமிருக்கலாம். ”‘எழுத்து’வின் எல்லைக் கட்டுப்பாடு அதிருப்தி தருகிறது. நம் எல்லைகளை விஸ்தரித்து நாமே ஏன் ஒரு பத்திரிகை நடத்தக் கூடாது?” என்றுதான் எல்லோருக்கும் எழுதியிருந்தேன்.

இந்த அதிருப்தி எங்களில் பலருக்கு இருந்தது. அதே சமயம் ஆங்காங்கே பலரும் இவ்வாறு சிந்திக்கத் தொடங்கியிருந்தார்கள் என்பதும் பின்னர் தெரிந்தது. ஒன்றை மாத்திரம் இப்போதும் நினைவுறுத்திக் கொள்ள வேண்டும். இம்மாதிரியான சிந்தனைகளுக்கே வழிகாட்டி, க.நா.சு.வின் இரண்டரை வருட ‘இலக்கிய வட்டமும்’, செல்லப்பாவின் ‘எழுத்து’வும்தான்.

அந்த சமயத்தில்தான் நடை என ஒரு காலாண்டு பத்திரிகை தொடங்கப் போவதாக ந. முத்துசாமியும், சச்சிதானந்தமும் எனக்கு எழுதினார்கள் என்று நினைவு.

நடை இரண்டு வருட காலம் நீடித்தது. எட்டு இதழ்கள் சில மெலிந்தும் சில பருத்தும் வெளிவந்தன. இதழ்கள் இல்லாததால் நினைவிலிருந்துதான் நான் பல விஷயங்களைத் தொட்டுப் பேச முடியும்.

கவிதை என்றும் பாடல் என்றும் பன்முக மாயம் செய்யும் திரைப்படப் பாடல்களில் என்ன கவித்துவமோ பாடலோ இருக்கிறது என்று ஒருவர் ஆராய்ந்தார். இது எழுத்துவில் வருவது சந்தேகம்தான். அப்போது காலமாகிவிட்டிருந்த பத்மினி என்னும் ஓவியர் பற்றி, அவரது ஓவியப் பிரதிகளோடு ஒரு கட்டுரை, சச்சிதானந்தம் எழுதியிருந்தார் என்று நினைவு. புதுக்கவிதையில் காணும் யாப்பு மீறல் அத்தனைக்கும் பழம் இலக்கணங்களில், தொல்காப்பியம், யாப்பருங்கலக்காரிகை, விருத்தி இத்யாதிகளில் விதி அமைத்துக் கொடுத்திருப்பதை ஒரு சிறு புத்தக இணைப்பாகவே, செல்வம் தந்திருந்தார். அதற்கு எந்த பண்டிதரும் இதுவரை மறுப்பு சொன்னதில்லை.

நடையின் முதல் இதழிலேயே ஞானக்கூத்தன் என்னும் ஒரு புதிய குரல் கேட்கத் தொடங்கியது. அக்குரல் எனக்கு அப்போது மிக உற்சாகம் தந்தது. இன்றுவரை தொடரும் தமிழரின் பரிசில் வாழ்க்கை அவர் கவிதை ஒன்றில் நினைவுறுத்தப்பட்டிருந்தது. சி. மணியும், தனது இயல்பான விமர்சன எள்ளலுக்கு புதிய குரல் கொடுத்து வே. மாலி என்று நாமகரணம் கொடுத்தார்.

தாமோதரன், தக்ஷ்ணாமூர்த்தி, ஆதிமூலம் போன்றோரின் கோட்டுச் சித்திரங்கள் ஒவ்வொரு இதழிலும் வெளியாயின. இவைதாம் தமிழ் எழுத்துலகுக்கும் தமிழ் ஓவியர் / சிற்பிகளுக்கும் இடையிலான முதல் பரிச்சயம், பரஸ்பர உறவின் தொடக்கம். இது இன்று 35 வருடங்களுக்குப் பின் என்னவாக வளர்ந்து பெருகியுள்ளது என்பது, இன்றைய தலைமுறையினருக்குத் தெரியாது. அதன் எளிய ஆரம்பங்கள் நடையில் என்பதையும், அவர்களுக்குச் சொல்ல வேண்டும், வேதாள உலகமும், மனோகராவும் பம்மல் சம்பந்த முதலியாரிடமிருந்து தொடங்கியது என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?

ந. முத்துசாமி, முன்னால் சிறந்த கதைகள் எழுதியவர் என்பதும் பலருக்குத் தெரியாமக் இருக்கலாம். ந. முத்துசாமிக்கேக் கூட அது மறந்து விட்டதோ என்னவோ. “அப்படியா? அப்படியானால் நல்லதாச்சு” என்று நினைக்கும் சிறுகதைக்காரர்கள் இருக்கக்கூடும். இன்று ந. முத்துசாமி இந்தியா அறிந்த சங்கீத நாடக அகாடமி விருது வாங்கிய, கொலம்பியாவில் தன் புகழ்நாட்டிய, கூத்துப்பட்டறையை உருவாக்கியவர் என்று இந்தியா அறிந்த நாடகாசிரியர். அதன் ஆரம்பம் நடை பத்திரிகையில்தான். நாடையில் அவரது இரண்டு நாடகங்கள் பிரசுரமாகியிருந்தன. முதலாக வந்தது காலம் காலமாக. முதல் தடவையாக நாடகம் என்று தமிழில் சொல்லத் தகுந்ததன் தொடக்கம் காலம் காலமாகவிலிருந்துதான் என்று அன்றும் இன்றும் என் அபிப்ராயம். அத்தொடக்கம் கண்ட மகிழ்ச்சியில் அதை நான் மொழிபெயர்த்து, டெல்லியிலிருந்து வெளியான நாடகத்துக்கேயான Enact என்ற பத்திரிகையில் வெளியிடக் கொடுத்தேன். அது வெளியானது. பின்னர் நடந்தவை சரித்திரம். தமிழில் நாடகத் தொடக்கம் நடை பத்திரிகையில்தான்.

ஞானக்கூத்தன். தன் கவிதைகளை செல்லப்பா ஏற்பதில்லை என்றும் எழுத்துவில் பிரசுரிக்க மறுத்துவிட்டார் என்றும் சொல்லக் கேட்டதுண்டு. எழுதியுமிருக்கிறாரோ? இருக்கலாம். ஆனால் ஞானக்கூத்தன் கவிதைகள் நடையின் முதல் இதழிலிருந்தே நிறைய பிரசுரமாகியிருக்கின்றன. நடையின் எழுத்து மூலம்தான் அவர் இலக்கிய உலகுக்குத் தெரிய வந்தார் என்று சொல்லவேண்டும். தொடக்கம் நடையில்தான். எழுத்து காலாண்டு இதழாகிய எண் 115 இதழில் செல்லப்பா எழுதுகிறார்: “கவிதைகளில் ஞானக்கூத்தனின் பிரச்னை சிறப்பானது” என்று.

இத்தோடு இன்னொன்றையும் என் கூற்றுக்கு எதிராகச் சொல்லவேண்டும். எழுத்து செல்லப்பாவோடு அதிருப்தி கண்டு அவர் காட்டிய வழியிலேயே பின் கிளை பிரிந்து நடை தொடங்கப்பட்டது. அல்லது அதிருப்தி அடைந்தவர்களின் பத்திரிகையாக நடை இருந்தது – என்று சொன்னேன். க.நா. சுப்பிரமணியமும், ”சி.சு. செல்லப்பா, தன் அச்சிலேயே மற்றவர்களையும் வார்க்கப் பார்க்கிறார். அதிலிருந்து அதிருப்தி கொண்டவர்களால் நடை தொடங்கப்பட்டது” என்று டெல்லி பத்திரிகைகளில் எழுதினார். ஆனால் செல்லப்பா எழுத்து 115-இல் எழுதும்போது, நடை பத்திரிகையை ஆதரவுடனேயே வரவேற்று, அதில் வந்துள்ள ஒவ்வொன்று பற்றியும் உற்சாகமூட்டியே எழுதியிருந்தார்.

இதெல்லாம் அன்றைய சூழல்: நடையின் தோற்றத்திற்கு முன்னும், அதன் ஜீவிய காலத்திலும் நிலவிய போக்குகள்.

எழுத்து நடந்த காலத்தில், க.நா.சு.வும் செல்லப்பாவும் தோற்றுவித்த புதுக்கவிதையையும், விமர்சனத் திருப்பத்தையும் கடுமையாக எதிர்த்த சக்திகளில் முன்னிற்பது அன்றைய தமிழ் முற்போக்கு முகாம். கருத்து வேறுபாடு கொண்டு எதிர்ப்பது பற்றிச் சொல்ல ஏதும் இல்லை. கருத்துப் பரிமாற்றம் அவசியம் வேண்டியதுதான். ஆனால் எந்தப் புதிய மாற்றத்தையும் தனது அரசியல் எதிரியாகக் கண்டு வசைபாடுவது முற்றிலும் வேறானது. இதற்கு வலுச்சேர்க்க, முற்போக்குப் பட்டயமும், பண்டிதத்தனமும் ஒருங்கே கொண்ட கைலாசபதியையும் சிவத்தம்பியையும் பெருந்தலைகளாக, இங்குள்ள முற்போக்கு முகாமும் பண்டித உலகமும் தங்கள் பிரச்சாரத்தின் மூலம் கட்டமைக்கத் தொடங்கினார்கள். இதில் அதிகார வேட்கையும், பதவி ஆசையும் கொண்ட கைலாசபதி, மிகக் கேவலமான முறையில், க.நா.சு.வையும் செல்லப்பாவையும் புறந்தள்ளி, தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளும் ஆசை கொண்டு க.நா.சு.வுக்கு சாதிச் சாயம் பூசும் காரியத்தில் இறங்கினார். இலக்கிய சர்ச்சைகளில் சாதிக் குண்டாந்தடியை சுழற்ற ஆரம்பித்ததில் முன்னோடி, கைலாசபதிதான். வேறு யாரும் அன்று இத்தகைய கேவலங்களில் இறங்கவில்லை. இவ்வளவுக்கும் கைலாசபதி வாழ்ந்த வளர்ந்த ஈழத்தில் பார்ப்பன எதிர்ப்பு கோஷம் எழ எந்தச் சமூகக் காரணமும் கிடையாது. அங்கு நிலவுவது சைவ வேளாள மேலாண்மை. கைலாசபதியின் பிரக்ஞையில் மேலோங்கி இருப்பது, தாழ்த்தப்பட்ட நண்பர் வீட்டுக்கு வந்தால், வீட்டுக்கு வெளியே அழைத்துச் சென்று “நிலவிலே கதைக்கும் முன்னோடி புரட்சியாளர் அவர். இங்கு பார்ப்பன எதிர்ப்பு கோஷம் எழுப்பியது தமிழ் நாட்டில் செலாவணியாகும்” என்ற நோக்கில்.

கைலாசபதியின் முற்போக்கு வறட்டு யாந்தீக வாய்பாடுகள் கொண்டது. அச்சமயத்தில் வெளியான அன்று இங்கு பலருக்கும் மயக்கம் தந்த அவரது ‘தமிழ் நாவல் இலக்கியம்’ என்ற புத்தகத்தை எடுத்துக் கொண்டு, அதன் போலித்தனத்தையும், சிந்தனை வறட்சியையும், இலக்கிய / கலை உணர்வின்மையையும் விரிவாகவே முன் வைத்தேன். இது நடை பத்திரிகையின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்று. கைலாசபதி உயிரோடிருந்த வரையில் இதற்கு பதில் அளித்ததில்லை. ஒரு முற்போக்கு அணி திரண்டு, கூட்டுச் செயலாக கோஷிப்பதன் மூலம் எந்த போலியையும் பிரபலப்படுத்திவிட முடியும் என்பதற்கு தமிழ்நாட்டு முற்போக்குகளும் கைலாசபதியும் நல்ல உதாரணங்கள்.

நடை எட்டு இதழ்களே வெளிவந்தன. செல்லப்பாவிடம் அதிருப்தி கண்டு தன் வழி சமைக்க வந்தவர்களுக்கு, செல்லப்பாவின் பிடிவாதமும், மனந்தளரா செயலூக்கமும் இருக்கவில்லை.

க.நா.சு. அடிக்கடி சொல்வார். “எந்த இலக்கியச் சிறுபத்திரிகையும் இரண்டு வருடங்களுக்கு மேல் ஜீவிக்கக் கூடாது. அவ்வளவு காலம்தான் அதன் தீவிரமும் செயலூக்கமும் இருக்கும். புத்துணர்வு இருக்கும். பின் பழகிய இடத்தில் நிலத்தி விடும் ஸ்தாபனமாக மந்தித்துப் போகும்” என்பார்.

நடை நின்ற காரணம் எதுவானாலும், பின்வரும் பத்திரிகைகள், எவ்வழிகளில் எல்லாம் பயணிக்க வேண்டும் என்று வழிகாட்டிவிட்டது. அது நின்றதும் உடனே – ஒரு சில மாதங்கள் இடைவெளிக்குள்ளேயே – கசடதபற தொடங்கியது. நடையில் விட்டது, கசடதபறவில் தொடர்ந்தது. இவையெல்லாம் தமிழ் இலக்கிய/ கலைச்சூழலில் ஒவ்வொரு காலகட்டங்கள், பாதை திருப்பங்கள்.

இன்றைய இலக்கிய / கலைப் பத்திரிகைகள், தம்முடைய இன்றைய அக்கறைகள், குணமாற்றங்கள் – இவற்றிற்கு உந்துசக்தியாக இருந்தவற்றின் ஆரம்பங்களை அறியமாட்டார்கள். அன்றைய கால உணர்வையும் அறிய மாட்டார்கள். இவர்கள் ஏதும், சுயம்புவாக திடீரென அவதரித்த பன்முக ஜோதிப் பிரகாசங்கள் இல்லை. இந்த ஜோதிகளின் ஒருமுக ஆரம்பம் எழுத்து பத்திரிகையில். இன்னும் சில முகங்கள் நடையில். இன்னும் சில தொடர்ந்து மற்றவைகளில்.
—-

நடை இதழ் தொகுப்பு – முன்னுரை
வெளியீடு: சந்தியா பதிப்பகம்
முதற் பதிப்பு : 2004
தொகுப்பு: கி. அ. சச்சிதானதம்

வெங்கட் சாமிநாதன் – குறிப்பு

நூல்கள்

I. விமர்சனங்கள்

1. அன்றைய வறட்சியிலிருந்து இன்றைய முயற்சி வரை (நாடகக் கட்டுரைகள்) வெளியீடு: அன்னம், சிவகங்கை (1985)
2. பாவைக்கூத்து – வெளியீடு: அன்னம், சிவகங்கை
3. என் பார்வையில் சில கவிதைகள் (விமர்சனக் கட்டுரைகள்): வெளியீடு: கலைஞன் பதிப்பகம், சென்னை (2000)
4. என் பார்வையில் சில கதைகள் நாவல்கள் (விமர்சனம்): வெளியீடு: கலைஞன் பதிப்பகம், சென்னை (2000)
5. சில இலக்கிய ஆளுமைகள். வெளியீடு: காவ்யா, சென்னை (2001)
6. பான்ஸாய் மனிதன் (விமர்சனம்). வெளியீடு: கவிதா, சென்னை (2001)
7. இச் சூழலில் (கலாச்சார விமர்சனம்). வெளியீடு: மதி நிலையம், சென்னை (2001)
8. கலை வெளிப் பயணங்கள் (கலை விமர்சனம்) அன்னம் வெளியீடு: தஞ்சை (2003)
9. திரை உலகில் (சினிமா விமர்சனம்) காவ்யா, சென்னை (2003)

II. தொகுப்புகள்

10. தேர்ந்தெடுத்த ந. பிச்சமூர்த்தி கதைகள் – தொகுப்பு: வெங்கட் சாமிநாதன், வெளியீடு: சாகித்ய அகாடமி (2000)
11. பிச்சமூர்த்தி நினைவாக – பிச்சமூர்த்தி நினைவாஞ்சலிக் கட்டுரைகள் தொகுப்பு: வெங்கட் சாமிநாதன். வெளியீடு : மதி நிலையம், சென்னை (2000)

III. மொழி பெயர்ப்புகள்

12. A Movement for Literature: க. நா. சுப்பிரமணியம். தமிழிலிருந்து ஆங்கிலத்தில்: வெங்கட் சாமிநாதன், சாகித்ய அகாடமி வெளியீடு
13. ஏழாம் முத்திரை (ஸ்வீடிஷ் திரைக்கதை) – இங்மார் பெர்க்மன் (தமிழ் மொழிபெயர்ப்பு: வெங்கட் சாமிநாதன்). வெளியீடு: தமிழினி, சென்னை (2001)
14. தமஸ் (இருட்டு) ஹிந்தி நாவல் : பீஷ்ம ஸாஹ்னி. மொழிபெயர்ப்பு: வெங்கட் சாமிநாதன். வெளியீடு சாகித்ய அகாடமி, சென்னை
15. ஆச்சரியம் என்னும் கிரகம் (குழந்தைக் கதைகள், சுற்றுச்சூழல் பற்றியவை; ஜப்பானிய மூலம்). ஆங்கிலத்திலிருந்து தமிழில்: வெங்கட் சாமிநாதன், வெளியீடு சாகித்ய அகாடமி, சென்னை

IV. திரைப்பிரதி (ஃபிலிம் ஸ்கிரிப்ட்)

16. அக்கிரகாரத்தில் கழுதை (திரைப்பிரதி) இரண்டாம் பதிப்பு. வெளியீடு: காவ்யா, சென்னை. (1997)

V. இன்ன பிற

17. உரையாடல்கள் (பேட்டிகளின் பதிவு) வெளியீடு: நவீன விருட்சம், சென்னை
18. விவாதங்கள்… சர்ச்சைகள். (எப்ரல் 1969 – இலிருந்து டிசம்பர் 2003 வரை) அமுதசுரபி வெளியீடு

VI. வெ.சா.வைப் பற்றி

க.நா.சு.

என்னுடைய மற்ற நண்பர்களுக்கு எரிச்சலூட்டும் அளவுக்கு நான் வெங்கட் சாமிநாதனின் அபிப்ராயங்களை மதிக்கிறேன்

Financial Express 23.9.84

க.நா.சு.

சிந்தனையைத் தூண்டும் புஸ்தகங்கள் தமிழில் குறைவாகவே இன்னமும் வெளிவருகின்றன. அதுவும் புதுச் சிந்தனைகள் என்றால் பலரும் ஓடி விடுகிறார்கள். சிந்தனைக்குப் பல விஷயங்களை அள்ளித் தருகிற வெங்கட் சாமிநாதனின் நூல், பாராட்டப்படவேண்டிய ஒன்று.

தினமணியில் மதிப்புரை :: அன்றைய வறட்சியிலிருந்து இன்றைய முயற்சி வரை: அக்டோபர் 1986

சி.சு. செல்லப்பா

சாமிநாதன், ஒரு ‘ப்ரொவோகேடிவ்’ விமர்சகர். இக்கட்டுரைகளில் பாலையின் உஷ்ணம் இருக்கிறது. நம்மைச் சுடவும் செய்கிறது. கசப்பான உண்மைகளை நாம் விழுங்கவும் வேண்டி இருக்கிறது. தமிழ் மொழி, தமிழ் இலக்கியம் இரண்டிலும், மற்ற கலைத் துறைகளிலும் அக்கறை எடுத்து அவற்றின் போக்கு, நிலை, சாதனை பற்றி சுய விமர்சனம் செய்து, உரிமையுடன் குந்தகமானவற்றை கடுமையாகச் சாடும் சாமிநாதனது பேனா வரிகள், ‘புலிக்குத் தன் காடு பிறகாடு வித்யாசம் கிடையாது’ என்றபடி சகலத்தையும் பதம் பார்க்கும் கூர்மையிலே யார் யாருக்கோ, எங்கெங்கெல்லாமோ சுடக்கூடும்…

பாலையும் வாழையும் (27.2.76) முன்னுரையில்

கோமல் சுவாமிநாதன்

மகாபாரதத்திலுள்ள கர்ணனின் பாத்திரம், போற்றுதலுக்கும் தூற்றுதலுக்கும் மிகவும் ஆளான ஒன்று. இலக்கிய உலகில் வெங்கட் சாமிநாதன், நிறைய போற்றுதலுக்கும் தூற்றுதலுக்கும் ஆலானவர். போற்றுதலை விட தூற்றுதலையே அதிகமாக வாங்கிக் கொண்டவர். கானகத்தில் தனிக்குரலாக இவர் – இலக்கிய உலகில் தனக்குத் தோன்றிய விஷயங்களைப் பக்கபலம் சேர்த்துக் கொள்ளாமல், கொடி பிடிக்கும் ஆட்களைத் திரட்டாமல், ‘ஆமாம் சாமி’ போடுகிறவர்களை அணுகவிடாமல் ஒலித்து வருகிறார், எவ்வித சமரசமுமின்றி. தன் மனதிற்குப் பட்டதை பளிச்சென்று எழுதும் வழக்கம் உள்ளவர். எழுத்து பத்திரிகையின் மூலம் அறிமுகமான இவர் தனது பாலையும் வாழையும் என்ற விமர்சன நூலால், தமிழ் இலக்கிய உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர். எந்த மேல் நாட்டு விமர்சன பாணியையும் கைக் கொள்ளாமல், தன்சுவைக்கு உட்பட்டதை, படைப்பின் கலாச்சாரப் பின்னணியோடு பார்க்கும் தனி ரகம், இவரது விமர்சனம்… இவர் விமர்சனத்தை நாம் ஏற்றுக் கொள்கிறோமா இல்லையா என்பது வேறு விஷயம். ஆனால் “இதோ ஒரு விமர்சகர்” என்று சுட்டிக் காட்டுவதற்கு கோபுர உச்சியிலே உட்கார்ந்திருக்கும் ஒரு விமர்சகர், வெங்கட் சாமிநாதன். இலக்கியம் மட்டுமல்லாமல் – இசை, ஓவியம், நாடகம், சினிமா போன்ற பல துறைகளிலும் கால் பதித்து, அவைகளைப் பற்றியெல்லாம் விமர்சனம் எழுதுபவர்.

சுபமங்களா அக்டோபர் 1995

சுந்தர ராமசாமியைத் தவிர வெங்கட் சாமிநாதன் மட்டும் தான் என் தோள்மீது கையைப் போட்டுக்கொண்டு நடப்பார். – இமையம்

மார்க்ஸின் கல்லறையிலிருந்து ஒரு குரல் – வெங்கட் சாமிநாதன்

வெங்கட் சாமிநாதனின் ‘மார்க்ஸின் கல்லறையிலிருந்து ஒரு குரல்’ அச்சுக் கோக்கப்பட்ட சமயம். தலைப்புக் கீழ் ஒரு பெரிய அடிக்கோடு வேண்டும் என்று சுந்தரத்திடம் சொல்லியிருந்தேன். ‘ஜாப் ஒர்க்’ செய்கிற – திருமண அழைப்பிதழ், ரசீதுகள், துண்டுப் பிரசுரங்கள் முதலியன; மிக நீண்டது என்றால் ‘புக் ஒர்க்’ மாதிரி வருவது, திருமண வாழ்த்துப் பா முதலியன செய்கிற – இந்தத் தொழிலாளர்களுக்கு ‘ஸ்டிக்’கில் வரி, வரி, அடுத்த வரி என்று அடுக்கிக் கொண்டே போவது சலிப்பூட்டும் வேலை; அதோடு எரிச்சலூட்டுவதும் கூட. சில தடவை அடிக்கோடு இன்னும் கொஞ்சம் பெரிதாக என்றதால், சுந்தரம் அந்தத் தலைப்புக்கு பார்டர் கட்டி விட்டார்; இருக்கட்டும்; ஆனால் ‘மேட்டரை’ இன்னும் கீழே இறக்கணும் அப்போது சரி என்றார். அச்சாகி வந்தபோது தோழர்கள் அதைத் தவறாகப் புரிந்து கொண்டதாகத் தெரிந்தது. அது, அப்படி எடுத்துக் கொள்ளப்படும் சாத்தியம் எனக்குப் படவேயில்லை. ஈமக்கிரியை அட்டைக்குத்தானே அப்படி, அதுவும் இன்னமும் சிறிய அலவில் என்று சுந்தரத்திற்கும் கூட தோன்றவில்லை. இதை அவரிடம் நான் சொன்னதாக ஞாபகமில்லை. அடுத்த இதழில் அது பற்றிய சிறு விளக்கம் தரலாம் என்ற எண்ணத்தையும் நாங்கள் விட்டுவிட்டோம்.
சில நினைவுகள்சி. மணி

மலேரியா சுரம் நிறைந்த பிரதேசத்தில் வாழும்போது, எவ்வளவோ அதிக முக்கியமான தேவைகள் முன் நின்றாலும் அவற்றையெல்லாம் பின்னொதுக்கு, முதன் முதலாக, நாம் வாங்குவது கொசு வலை. பின்னர், நீர்த்தேக்கங்களில் கொசுக்களைக் கொல்ல மருந்து வகைகள். சாப்பாட்டுத் தேவைகள் கூட அவ்வளவு முக்கியமல்ல. சூழ்நிலையைய் பொருத்து நேரும் தலைகீழ் முக்கியத்துவங்கள் இவை. இன்றைய தமிழ் இலக்கியச் சூழ்நிலையில், இக்கல்லறைக் குரலையும் பொருட்படுத்த வேண்டுவதாகிறது. அது, அநாவசிய நிர்பந்தம்.

மார்க்ஸின் நித்தாந்தம் பிறந்த பத்தொன்பதாம் நூற்றாண்டு, சகல துறைகளிலும் பொருள்நோக்கு (Materialism) நிறைந்த ஒரு காலம். விஞ்ஞானத்திலும், தத்துவ சிந்தனைகளிலும், பொருள் நோக்கு ஆதிக்கம் செலுத்தி வந்தது. பிரபஞ்சம் முழுவதையுமே ஒரு யந்திர ரீதியான அமைப்பாக பார்த்த, இதன் விளைவாக ஒரு குட்டிப் பிரபஞ்சத்தைப் பரிசோதனை சாலைகளில், working model ஆக அமைத்துக் காட்டிவிட முடியும் என்றும், மனித வாழ்க்கையும், பிரபஞ்ச இயக்கமும் ஒரு வரையறுப்பில் அடங்கிய, எனவே, அவற்றின் எதிர்காலமும் முன் அறியப்படக்கூடிய ஒரு நிர்ணய இயக்கமே என்ற கருத்துகள் மேலோங்கியிருந்த காலம். இத்தகைய யந்திர ரீதியான சூழ்நிலையில் மார்க்ஸ், உலகத்தின் ஒரு நாட்டில், ஒரு சமுதாயத்தில், ஒரு காலக்கட்டத்தில், அதன் புறவாழ்வின் ஒரு அம்சத்தில், நிகழ்ந்த மனிதத் தன்மையற்ற அநீதிப் போக்குகளைக் கண்டு, அவற்றின் இயல்பை, நேர்ந்த காரணங்களை ஆராய்ந்தார். அவருடைய ஆராய்வு, சில முடிவுகளைத் தந்தது. அம்முடிவுகள், அவ்வளவு ஒன்றும் புரட்சிகரமானவை, வெறுமையிலிருந்து பிறந்து திடுக்கிட வைப்பன அல்ல. உண்மையில் மார்க்ஸ் வரைய சிந்தனை வளர்ச்சி, சமுதாய வளர்ச்சி, அன்றைய மனிதநிலை, மார்க்சை எதிர்பார்க்க வைத்தன என்று சொல்லவேண்டும். மார்க்ஸுக்கும் முன்பு, பொருள் முதல் நோக்குகள் இருந்தன. தத்துவார்த்த ரீதியில், பொருளாதாரத்துறையில் கூட மார்க்ஸுக்கு முன் ராபர்ட் ஓவன், ரிக்கார்டோ முதலானோர், மார்க்ஸின் தோற்றத்திற்கு வழிவகுத்திருந்தனர். ஹெகல், மார்க்ஸுக்கு முன்னோடி. ஆனால், மார்க்ஸின் சிந்தனையில் இத்தகைய பரந்த, எல்லாத் துறைகளையும் உள்ளடக்கிய ஒரு பூரண சித்தாந்தத் தோற்றத்திற்கு விஞ்ஞான வளர்ச்சியும், சமூக மாறுதல்களும் வழிவகுத்தன. அக்கால இயல்பிலேயே, யந்திரப் பிரபஞ்சப் பார்வையில் மார்க்ஸ் ஒரு நாட்டில் அதனுள்ளும் குறுகி ஒரு சமுதாயத்தில், அதனுள்ளும் குறுகி அதன் ஒரு காலக் கட்ட நிகழ்வில், அதனுள்ளும் குறுகி அதன் புறவாழ்வின் ஓர் அம்சத்தில் தான் கண்ட தத்துவப் பின்னணியைப், பிரபஞ்ச அகண்டத்திற்கு விரித்து எல்லாச் சமுதாயங்களையும், எல்லாக் காலங்களையும், எல்லாத் துறைகளையும், தன் விதிமுறைகளில் உள்ளடக்கியதான ஒரு சித்தாந்த அமைப்பாக (System)க் கண்டார். மார்க்ஸின் சித்தாந்த்தின் பின் தூண்டுதலாக இருந்த அவருடைய மனிதாபிமானத்தையோ, அவருடைய மஹோன்னத மேதைமையையோ இது குறை கூறுவதாகாது. இவரை சரித்திர நிர்ப்பந்தங்கள். இத்தகைய சித்தாந்த அமைப்புகள் (System Building) பல நூற்றாண்டுகளாக, 19-ஆம் நூற்றாண்டு வரை தத்துவ தரிசிகளின் சிந்தனைகள் கட்டுப்பட்ட ஒரு பழக்கம். ஆமாம், அதைப் பழக்கம் என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால், 20-ஆம் நூற்றாண்டில் இப்பழக்கம் கைவிடப்பட்டுள்ளது. காரணம், விஞ்ஞானத் துறைகளிலும், சிந்தனைத் துறைகளிலும் ஏற்பட்டுள்ள வளர்ச்சியும், பிரபஞ்சம் தன்னுள் கொண்ட சிக்கல்களின் ஞானமும் , இவை ஒரு புறம் இருக்கட்டும்.

மார்க்ஸின் முடிவுகள், மனித சிந்தனை வளத்திற்கு அளித்த பங்கு, உண்மையிலேயே அதிகம். அவரது காலம் வரை, இல்லாத அல்லது குறைபட்ட ஒரு பார்வை. மனித சிந்தனை இதுவரை தன்னை அவ்வளவாக ஈடுபடுத்திக் கொள்ளாத ஒரு பார்வையை அளித்தது. அப்பார்வை, எத்தனையோ பார்வைகளுடன் உடன்கொள்ள வேண்டிய ஓர் அவசியமான என்பதல்லாது, அதுவேதான் பார்வை, ஒரே பார்வை, மற்றவை இதன் சமன் தூக்கில் உட்கொள்ளப்பட வேண்டியவை, அல்லது வேண்டாது ஒதுக்கப்பட வேண்டியவை என்ற நிலை மார்க்ஸின் காலத்தில், அவர் வாழ்ந்த சூழ்நிலையில், அவர் காலம் வரை, கிடைத்த விஞ்ஞான, அறிவுத்துறை வளர்ச்சியில் நிர்ப்பந்தமாகிப் பெற்ற ஒன்று. மார்க்ஸ், இத்தகைய சிந்தனை அமைப்பு நிர்ணயத்திலிருந்து, தன்னைக் காத்துக் கொண்டிருக்க முடியாது. தவிர்த்திருக்க முடியாது.

எனவே, மார்க்ஸின் சித்தாந்தம் ஒரு காலக் கட்ட வளர்ச்சியின் சிறைக்குள் அகப்பட்ட ஒன்று. இது மாக்ஸுக்கு மாத்திரம் நிகழும் துரதிருஷ்டம் அல்ல. மனித சமுதாய வளர்ச்சியில், அறிவு விஸ்தாரத்தில், விஞ்ஞானப் பெருக்கத்தில், எந்த சித்தாந்தத்திற்கும் ஏற்படும் நிகழ்வு, இது. மார்க்ஸின் சித்தாந்தம் மனித சமுதாயத்தின் ஒரு துணுக்கில் ஒரு காலகட்டத்தில், ஒரு புறவாழ்வு அம்சத்தின் ஆராய்வில் பெற்ற சில முடிவுகளை விஸ்தரித்துப் பெற்ற பிரபஞ்ச நிர்ணய அமைப்பு. அதன் பிறப்பிடமான பொருளாதாரத்திலேயே அதன் முடிவுகள் செலாவணி அழிந்தது, குறையாகாது. அதுவே, அதன் நிறையும் ஆகும். அதிலேயே அதன் லட்சிய பூர்த்தியும் ஆகும். ஒரு நோக்கில், எந்நிகழ்ச்சிகள், அநீதி முறைகள், மார்க்ஸின் பொருளாதார சமுதாய நோக்குக்குக் காரணமாகவிருந்தனவோ, அம்முறைகளும் நிகழ்வுகளும் அழியக் காரணம், மார்க்ஸின் சித்தாந்தப் பிறப்புதான். அது அழியவே சித்தாந்த ஜீவிய நியாமும் உடம் மறைந்துவிட்டது. பொருளாதாரத் துறையிலும் சமூகவியல் துறையிலும் இம்மாற்றம் நிக்ழ்ந்து மாக்ஸின் சித்தாந்தம் மறைந்தபின், அப்பார்வையில் விஸ்தரிக்கப்பட்ட மனவியல், பௌதீகம், தத்துவம், இலக்கியம், கலைச் சித்தாந்தம், ஜீவ அணுஇயல், சரித்திரம் ஆகிய இவற்றில் அச்சித்தாந்தப் பார்வைகளும் அழிந்துவிட்டன.

ஆனால், அவற்றின் உயிர் இழப்பிற்குப் பின்னும், இச்சிந்த்தாந்தங்களினால் சவ உருவம் (mummies) பாதுகாக்கப்பட்டு நடமாட வைக்கப்படுகின்றன, காலம் கடந்து, ஜீவிய நியாயமற்று. காரணம், இச்சித்தாந்த அமைப்பு (Philosophic system), ஒரு ‘மூடுண்ட’ (closed system), வளர்ச்சி மறுக்கப்பட்ட ஓர் அமைப்பு. இதன் சிருஷ்டி இயல்பிலேயே இச்சித்தாந்தத்தின் பிறப்பிற்குப் பின், ஏற்பட்டுள்ள எந்த வளர்ச்சியும், மாறுதல்களும், அறிவுத் துறைகளிலும், சிந்தனைப் பாதைகளிலும், விஞ்ஞானப் பிரிவுகளிலும் சரி, எவையுமே, அவற்றின் முன் இவ்வமைப்பு, உரசி, அவற்றின் எதிர்ப்பில் இதன் நியாயத்தை, உண்மையைச் சரிபார்க்கவொட்டாதவாறு, ஒரு மூடுண்ட அமைப்பாக, சிருஷ்டிக்கப்பட்டு, எத்தகைய எதிர்ச்சிந்தனையும், விஞ்ஞானத் தெரிவுகளும், இவ்வமைப்பின் கட்டடத்தில் மார்க்ஸ் தன் காலச் சூழ்நிலையின் நிர்ப்பந்தத்தில், தான் நின்று பார்த்த கோணத்திலிருந்தே, பார்வையிலிருந்தே, காலத்தால் வளர்ச்சியால் பிற்பட்ட எந்த வளர்ச்சியின் எதிர்நோக்கும் நின்று பார்க்க வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தை தன் உடன் அடக்கியது. இந்நிலையை, மார்க்ஸைத் தவிர வேறு எந்த மார்க்ஸிஸ வாதியாலும் எதிர்க்க, மறுக்க முடியாத ஒன்றாகிவிட்டது. ஓர் உதார்ணம்: வான சாஸ்திரத்தில் ஒரு புதிய கண்டுபிடிப்பு. பல்ஸார் (Pulsar) எனப்படும் ரிஷபக் கூட்டத்தில் (Taurus Constellation) காணப்படும் நட்சத்திர கோளங்கள். இக்கோளங்களிலிருந்து கிளம்பும் ரேடியோ அலைகள், ஒரு வருடத்திற்கு முன்னதாகத்தான் கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றின் கண்டுபிடிப்பிற்குப் பிறகு பழைய பௌதிக சாஸ்திரத்தையே சிருஷ்டிக்க வேண்டியிருக்குமா என்பதே. உண்மையில் எந்த விஞ்ஞானமும், அறிவுத்துறையும் ஒரு மூடுண்ட அமைப்பாக இருக்க முடியாது. ஆனால் மார்க்ஸின் சித்தாந்த அமைப்பு அது பிறந்த நாளிலிருந்து இதுவரை ஏற்பட்டுள்ள எத்தகைய துறை வளர்ச்சிகளையும், மாறுதல்களையும், எதிர் கொண்டதுமில்லை; அவற்றைக் கண்கொண்டு பார்த்ததுமில்லை. அவை ஏதும் இச்சித்தாந்தத்தைப் பொருத்தவரை நிகழாதவை. ஒரே வரியில் 1848-க்குப் பிறகு உலகம் சிலையாகி நின்று விட்டது, மார்க்ஸியவாதிகளின் நோக்கில். இவர்கள் இங்கிலாந்தில் உள்ள Flat Earth Society-க்காரர்கள் போன்றவர்கள். நம் ஜோதிட நிபுணர்கள், ராவணனின் புஷ்பக விமானத்தைத் தாண்டி எதையும் நோக்க மறுக்கும் மடிசஞ்சிகள் போன்றவர்கள். டார்வின் சித்தாந்தம் பிறந்த காலத்தில், பைபிளின் Genesis-ஐ விடாப்பிடியாக அரவணைத்துக் கொண்டு விஞ்ஞான ஆராய்ச்சி முடிவுகளைக் கண்கொண்டும் பாராது, குருட்டுத்தனமாக எதிர்த்தா டார்வின் காலத்திய கத்தோலிக்க சர்ச்சுக்காரர்களைப் போன்றவர்கள் இவர்கள்.

இச்சித்தாந்தத்தில் மூடுண்ட இயல்பிற்கும் ஒரு யதேச்சதிகாரத்தின் நிழலில், அதன் கருவியாக வளர்ந்த துரதிருஷ்டமும், இக்காலங்கடந்த சவ வாழ்விற்குப் பெரும் காரணமாகும். மற்ற துறைகள் போல, கலையும் இலக்கியமும் அவற்றின் தன் இயக்கம், சுய வளர்ச்சி மறுக்கப்பட்டு சித்தாந்தத்தின் பிரசார அம்சமாகக் கருதப்பட்டதாலும் சோஷலிஸ யதார்த்தம் பிறந்தது. சோஷலிஸ யதார்த்தவாதம் மார்க்ஸின் படைப்பும் அல்ல; இலக்கிய நோக்கும் அல்ல. ஒரு யதேச்சதிகாரம், தன்னைப் பலப்படுத்திக்கொள்ள, தன் வாழ்வை ஸ்திரமாக்கிக் கொள்ள சிருஷ்டித்துக் கொண்ட பிரசாரக் கருவி. மேலும், சோஷலிஸ யதார்த்தத்தின் கட்டுண்ட, இழிநிலைக்குக் காரணம், எந்த யதேச்சதிகாரத்தின் பிரசரா கருவியாயிற்றோ அதன் மூலகர்த்தா, கலை, இலக்கிய விகாரங்களில் ஒரு நிரட்சர குக்ஷியாக (Philistine) இருந்ததும் காரணம்.

ஆகவே, இப்பார்வை, மார்க்ஸியத்தின் பிறழ்ச்சி, இலக்கியத்துக்கும், கலைக்கும் சம்பந்தமில்லாத ஒரு அரசியல் பார்வை, அதிலும் ஒரு தனி மனித அதிகாரம், அரசியலாகிவிட்ட நிலையில் பிறந்த அரசியல் பார்வை.

எளிமை நாடும் மனம், ஒரு பத்திரிகை மனம், நோய்க்கூறான பண்பில், பொது ஜன நோக்கம் கொண்ட மனம் (demagogic mind) இதற்கும் சிந்தனை, இலக்கியம் போன்றவற்றிற்கும் உறவு ஏதும் இல்லை. இதைத் தெளிவாகச் சொல்வது என்றால் நான் C.E.M. Joad-ஐத்தான் மேற்கோள் காட்ட வேண்டும்.

“There is no necessary reason – atleast I know of none – why the universe should be readily comprehensible by a twentieth – century mind. or why persons of average capacity should be enabled easily to grasp the thoughts of the profoundest intelligences that life has yet succeeded in evolving.” (Guide to Philosophy – p.11)

—-
நடை, இதழ்கள் 3,4,5,6
பூரணு இதழ் 8, 1974 (இலங்கை)

———–

கரவினில் வந்துயிர்க் குலத்தினை அழிக்கும் காலன்

1968ல் ஃபிலிப் கே டிக் (Philip K. Dick) ஒரு நாவல் எழுதுகிறார். அதன் பெயர் எந்திரன்கள் மின்-ஆட்டை குறித்து கனவு காணுமா? (Do Androids Dream of Electric Sheep?).

அந்த 240 பக்க நாவல், இரண்டு மணி நேர திரைப்படமாக பிளேட் ரன்னர் (Blade Runner) என்னும் தலைப்பில் 1982ல் வெளியானது. முப்பத்தியேழு ஆண்டுகள் முன்னகர்ந்து, 2019ஆம் வருட அமெரிக்காவும் லாஸ் ஏஞ்சலீஸ் நகரமும் எவ்வாறு இருக்கும் என்பதை காட்சிபூர்வமாகக் கற்பனையில் காண்பித்தது.

முதல் பிளேட் ரன்னரில் தனி ஒருவனின் உளச்சோர்வை பிரதானமாக முன்னிறுத்தினார்கள். நம்முள்ளே பொதிந்து கிடக்கும் ஆற்றலிழப்பையும் தனிமையில் புழுங்கி செயலிழக்கும் தன்மையையும் உணர்த்தினார்கள்.

இப்போது அந்தப் படத்தின் அடுத்த பாகம் பிளேட் ரன்னர் 2049 (Blade Runner 2049) வெளிவந்திருக்கிறது. படம் வெளிவருவதற்கு முன்பே, நடுப்பட்ட முப்பதாண்டுகளில் என்ன நடந்திருக்கிறது என்பதற்கு முஸ்தீபாக மூன்று குறும்படங்களை முன்னோட்டம் விட்டார்கள். இவற்றில் முதல் குறும்படம் ஜப்பானிய மாங்கா வகையில் எடுக்கப்பட்டது. அது 2036ஆம் ஆண்டில் பிளேட் ரன்னர் குறிப்பிட்ட சமூகம் எப்படி நிலவியது என்பதை அசைபடமாகச் சொல்கிறது. அதற்கு அடுத்த இரண்டாம் குறும்படம் 2048ல் நடப்பதாக அமைந்திருக்கிறது. இந்தத் திரைப்படத்தின் பிரதான எதிர்நாயகன் ஆன நியாண்டர் வாலஸ் (நடிகர் ஜாரெட் லீடோ) இதில் தோன்றியிருக்கிறார்.

அந்தப் படங்களை இங்கே பார்க்கலாம்:

மூன்றாவது குறும்படம் தற்போதைய ப்ளேடு ரன்னருக்கு அஸ்திவாரம் அமைக்கிறது. அதில் வரும் முக்கிய கதாபத்திரமான ஒட்டன் (Sapper) 2049ன் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தின் சந்து பொந்துகளை சமாளிப்பதில் குறும்படம் துவங்குகிறது. மனிதர்கள் உயர்வானவார்களாகவும் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர்களாகவும், ரோபாட் எந்திரன்கள் அடிமைகளாகவும் வாழும் காலகட்டம் அது. மனிதத்தன்மை என்பது என்ன என்பதைக் குறித்த விமர்சனத்துடனேயே அந்தக் காட்சி அரங்கேறுகிறது. தாயையும் அவளின் பதின்ம வயதுச் சிறுமியையும் மனிதத்தனம் இல்லாமல் கொடூரத்திற்கு உள்ளாக்கும் மனிதர்களை அடித்து நொறுக்குகிறான் எந்திரன் ஆகிய ஒட்டன். மனிதர்களைத் தாக்கியதால் எந்திரனுக்கு கண்டதும் கொலை தண்டனை விதிக்கப்படுவதில் அந்தக் குறும்படம் முடிகிறது.

அதில் மாட்சியும் புகழும் (The Power and the Glory) என்னும் புத்தகம் பரிசளிக்கப்படுவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ’தி பவர் அண்ட் தி குளோரி’ புத்தகம் கிரஹாம் க்ரீன் என்பவரால் 1940ல் எழுதப்பட்டது. இதன் தலைப்பு அஷ்டோத்திர நாமாவளிகளில் “போற்றி” என்று முடிவது போல்… “எல்லாப் புகழும் இறைவனுக்கே” என்று ஆஸ்கார் விருது ஒப்புதல் பேச்சின் முடிவில் ஏ ஆர் ரெஹ்மான் அனுஷ்டிப்பது போல்… ”உமக்கே புகழ், உமக்கே மாட்சி, ஆமென்.” என்று கிறித்துவ நற்செய்திகளின் முடிவிலும் ஜெபப் பாடல்களின் இறுதியிலும் மீண்டும் மீண்டும் வரும் சொற்றொடர் ஆகும்.

இந்த நாவலின் கதைக்கும் பிலிப் கே டிக் எழுதிய “எந்திரன்கள் மின்-ஆட்டை குறித்து கனவு காணுமா?” கதைக்கும் பல ஒற்றுமைகள் இருக்கின்றன. ”விஸ்கி பாதிரியார்” என்பவர் ”மாட்சியும் புகழும்” நாவலின் முக்கிய கதாபாத்திரம் ஆவார். விஸ்கி பாதிரியாரை ஒரு சமயம் பார்த்தால் பரிதாபமாக இருக்கும். இப்படித் தன்னைத் தானே அழித்துக் கொள்கிறாரே என வருத்தம் எழும். தன் மதம் சொன்ன குருமார்களுக்கான லட்சணத்தை மீறி ஒரு குழந்தைக்குத் தந்தையாக விஸ்கி பாதிரியார் இருக்கிறார். முன் செய்த பாவத்திற்காக வருந்தி வாழும் தவ ஒழுக்கத்தைப் பார்த்தால் கொஞ்சம் உன்னையே மன்னித்துக் கொள்ளுங்களேன் என சொல்லத் தோன்றும். அவரின் பிராயச்சித்தத் தேடலை முடிவுக்குக் கொணர்ந்து அவருக்கு நற்கதி கொடுக்கக் கூட நாம் எண்ணுவோம்.

விஸ்கி பாதிரியாருக்கு எதிர் நாயகராக காவல்துறை அதிகாரி உலாவருகிறார். இந்த இரு கதாபாத்திரங்களுக்கும் மாட்சியும் புகழும் நாவலில் பெயர்கள் எதுவும் தரப்படவில்லை. காவல்துறை அதிகாரிக்கோ திருச்சபை மீதும் தேவாலயம் மீதும் அப்படியொரு வெறுப்பு. அவர் சோஷலிஸத்தை சிரத்தையாக பின்பற்றும் காம்ரேடு ஆவார். சர்ச் அமைப்பு, காவல்துறை அதிகாரியின் இளமையில், அவரை சின்னாபின்னமாக்கியுள்ளதாலும் காவலருக்கு மாதாகோவில் மீது கோபம் கலந்த பழிவாங்கும் உணர்ச்சி நிலவுகிறது. அந்தக் காவலரைப் பொருத்தவரை தேவாலயம் என்பது திருடர் கூட்டத்தின் பதுங்குமிடம். திருச்சபை குருக்கள் எல்லோரும் கொலைகாரர்கள். மார்க்ஸ் சொன்னது போல் அது வெகுசனத்தின் அபின் என்னும் எண்ணம் கொண்டவர்.

இவர்கள் இருவரும் கொண்ட கொள்கையில் சிரத்தையாகப் பயணிப்பவர்கள். இவர்களுக்கு நடுவே மூன்றாவது முக்கிய கதாபாத்திரமாக முன்னாள் அருட்தந்தை ஹோஸே வருகிறார். அவர் முந்தைய அரசின் ஆணைப்படி கிறித்துவ மதத்தை போதிக்க வந்தவர். ஆனால், போர் முடிந்து அரசு மாறிய பிறகு, தன் மார்க்கத்தை கைவிட்டு மனைவியைக் கைப்பற்றியவர். முன்பு மதத்தின் வழி சென்றவர், இப்பொழுது மனைவியின் பின் செல்கிறார். மக்களுக்கு நம்பிக்கையையும் உற்சாகத்தையூட்டும் பிரச்சாரகராக விளங்கியவர், இப்போது எவ்வளவுதான் நம்பிக்கையாளர் கெஞ்சினாலும் – எந்தவித ஜெபமும் வழிபாடும் நடத்தாமல், அரசு கொடுக்கும் பென்சன் பணத்தில் காலந்தள்ளுகிறார். அதனால், மக்களின் மதிப்பை இழக்கிறார். தன் சுய கௌவரவத்தையும் இழந்து நிற்கிறார். காவல்துறைக்கு பயந்து அஞ்சி நடுங்கி வாழ்கிறார்.

கத்தோலிக்க மதம் தடை செய்யப்பட்ட கிராமத்தில் விஸ்கி பாதிரியார் நுழைவதுடன் கதை துவங்குகிறது. மெக்ஸிகோ எங்கும் ரோமன் கத்தோலிக்கத்தை பரப்பவியலாத நேரத்தில், சமயக்கோட்பாடுகளை நிறுவி மெக்சிக மக்களை மதம் மாற்றுவதை குறிக்கோளாகக் கொண்ட விஸ்கி பாதிரியாரின் பயணங்களை இந்த நாவல் விவரிக்கிறது. அவர் அனாதரவாக விட்ட அவரின் பெண் குழந்தையை அவர் தன் பாதையின் நடுவே சந்திக்கிறார். ஆனால், அந்த இளமைக்கால தவற்றுக்காக அவர் வருந்தி தன் மதம் பரப்புக் கொள்கையை விட்டு விலகுவதில்லை. தன் பாட்டுக்கு உறுதிப் பூசுதல், ஒப்புரவு வழங்குவது, ஆன்ம சோதனைகளை நிறைவேற்றுவது, என்று மதகுருவாக உலாவுகிறார்.

கதையின் இறுதியில் இறக்கும் தருவாயில் இருப்பவருக்காக கத்தோலிக்கம் தடைசெய்யப்பட்ட பகுதிக்குள் மதபோதகர் நுழைய வேண்டுமா என்னும் உச்சகட்டத்தில் நிற்கிறது. சோதனைகள், மனித பலவீனம், உலக துன்பங்கள், மாயக் கவர்ச்சிகள், பேராசை, சுயநலம் போன்றவற்றில் வீழ்த்தாட்டும் மனிதரை பாவத்தில் இருந்து மீட்டு புதுவாழ்வுக்கு அழைத்துச் செல்லும் பாவசங்கீத்தனம் செய்ய விஸ்கி பாதிரி செல்வாரா? அப்படிச் சென்றால் காவல்துறையினரால் கைது செய்யப்படுவாரா? கைதாகினால் மரண தண்டனை நிறைவேற்றப்படுமா? இந்த ஒரு மதபோதகரை நீக்கினால் மட்டும் கத்தோலிக்கம் நசுங்குமா? வாத்திகன் திருத்தூதரக அரண்மனையில் இருந்து மற்றுமொரு தூதர் அனுப்பப்படுவாரா?

இதே போன்ற பல கேள்விகளை ப்ளேட் ரன்னர் 2049 எழுப்புகிறது.

கிட்டத்தட்ட, முதல் பாகத்தைப் போலவே, ப்ளேட் ரன்னரின் இரண்டாம் பாகத்தை ”அரைவல்” (பார்க்க: உங்கள் வாழ்க்கையின் கதை – வருகை – சொல்வனம்) திரைப்படத்தின் இயக்குனர் அமைத்திருக்கிறார். எந்திரகதியையும் மனிதத்தனத்தையும் எந்த குணாதிசயம் வேறுபடுத்துகிறது? புறத்தோற்றத்தில் மானுடர் போல் இருந்தாலும் அகத்தில் எவ்வாறு நல்லுயிர் ஞானம் இருப்பதை உணர்வது? – போன்ற கேள்விகளை எழுப்பி விடை தேடிக் கொள்ளச் சொல்கிறார்கள்.

ப்ளேட் ரன்னர் என்பவர் யார்?

வருங்காலத்தில் மனிதரைப் போலவே தோற்றமளிக்கும் இயந்திரன்கள் உலாவுகிறார்கள். இவர்களை நகலன் (Replicant) என்று அழைக்கிறார்கள். மனிதர்கள் வெறுத்து ஒதுக்கும் வேலைகளை நகலர்கள் நிறைவேற்றுகிறார்கள். இந்த நகலன்களை, தெய்வத்தை ஒத்த முதலாளி என்னும் கடவுள் ஆன நியாண்டர் வாலஸ் படைக்கிறார். அவரின் நிறுவனம், பாலியல் வக்கிரங்களுக்கு துணைபோகும் அடிமைப்பெண்ணை, ”தேவதை” என்னும் வர்த்தகச் சின்னத்தின் கீழ் விற்பனை செய்கிறது. திரைப்படத்தில் தோலிகள் என்றும் தோல்-வேலயாட்கள் என்றும் கீழ்மையான விளிப்புகளின் மூலம், மனிதர்களின் கொத்தடிமைகளாக இவர்கள் நடத்தப்படுகிறார்கள்.

இதனால் சில நகலன் இயந்திரன்கள், அடக்குமுறைக்கு எதிராக குரல் கொடுக்கின்றன. மனிதர் கொடுக்கும் அறமற்ற கட்டளைகளை அவர்கள் செவிமடுக்க மறுக்கின்றன. அந்த அயோக்கிய நகலன்களைக் கொன்று அடக்குவோரே ப்ளேட் ரன்னர்கள்.

1982ல் வெளியான ப்ளேட் ரன்னரில், நெக்ஸஸ்-6 ரக நகலன்களை வேட்டையாடிக் கொல்வது கதாநாயகன் ஹாரிஸன் ஃபோர்டின் வேலை. தற்போதைய ப்ளேட் ரன்னரில், நெக்ஸஸ்-8 ரக நகலன் ஆன ஒட்டன் என்பவனைக் கொல்வதில் படம் துவங்குகிறது. படத்தின் நாயகனின் பெயர் வெறுமனே “கே” எனப்படுகிறது. அவனின் உற்பத்தி எண் ஆன KD6.3-7 என்பதன் சுருக்கம் “கே”. அவனும் ஒரு நகலன் தான். அவன் மனிதரின் கட்டளையை எந்த வித எதிர்க்கேள்வியுமின்றி அடிபணிந்து நிறைவேற்றுபவன். அவன் நெக்சஸ்-9 ரகத்தை சேர்ந்த நகலன்.

அந்த KD6-3.7 என்னும் நகலன் தன் வாழ்வின் ரகசியங்களை ஆராய்வதுதான் ப்ளேட் ரன்னரின் திரைக்கதை. எங்கிருந்து உருவானான்? எப்படிப்பட்ட நினைவுகளை தன்னகத்தேத் தேக்கியிருக்கிறான்? எவ்வாறு அந்த அவதானங்கள் தன்னுணர்ச்சியாக மாற்றம் பெறுகின்றன? ஒருவருடைய உறுதியான நம்பிக்கை, எவ்வாறு பொய்யாக கட்டமைக்கப்படிருக்கலாம்? முன்னோர் சொன்ன பொய்களும் அவர்கள் கற்பித்த கதைகளும் எவ்விதமான உணர்ச்சி வசப்படல்களை அவனுள் உருவாக்குகின்றன?

அறிபுனை திரைப்படங்களில் பட்டாசு வெடிப்பது போல் எல்லாம் வெடித்துச் சிதறும். மாயாஜாலம் போல் அனைத்தும் மின்னும். கார்கள் பறக்கும். ஸ்டார் வார்ஸ் போன்ற ஹாலிவுட் அறிவியல் படங்களில் இது போன்ற சாகசக் கற்பனைகளைப் பார்த்திருப்பீர்கள். பிளேட் ரன்னர் படங்கள் இதில் நிறைய வித்தியாசப்படுகின்றன. எப்போது பார்த்தாலும் சள்ளென்று ஜலதாரையாக மழை பொழிகிறது. மேகம் போல் நச்சுப்புகை படர்ந்திருக்கிறது. நடு நடுவே சாம்பல் நிறத்தில் பனிப்பொழிகிறது. மக்கள் வாழும் நகரைச் சுற்றி குப்பையினால் எழுந்த மலைகள் சூழ்ந்திருக்கின்றன. மலையெனும் கழிவுகளைத் தாண்டினால் கதிரியக்க பயனிலா பாலைவன நிலத்திற்குச் செல்கிறோம்.

ஆனால், இதையெல்லாம் விட ஒன்றேயொன்றைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால், அது – இசை. ’ச்சும்மாஆஆ அதிருதுல்ல..’ என அதிநாயகத் தமிழ்த் திரைப்படத்தில் வரும் இரைச்சல், அச்சுறுத்தாமல், நம்மை பல்லிளிக்க வைக்கும். இங்கே அதே பேரோசை நம்மை முற்றுகையிடுகிறது. 1982ல் வெளியான அசலைப் போலவே புதிய படத்தின் இசையும் இருக்கிறது. கொஞ்சம் போல் ஈ.டி.எம் எனப்படும் ‘எலெக்ட்ரானிக் டான்ஸ் மியூஸிக்’ வகை இசைக்கோர்வையைக் கலக்கிறது. காட்சியில் மூழ்கடித்து அந்த வெறுமையில் அமிழ்த்துகிறது. கரையை நோக்கி வரும் கப்பல் எழுப்பும் மூடுபனி எச்சரிக்கைக் கொம்பாக எதிர்பார்த்த தாக்குதலாகத்தான் பின்னணி ஒலித்தாலும், அதன் சிலிர்ப்பு தரும் வசைதாக்குதல், பிறழ்ந்த உலகில் நம்மை நிலைநிறுத்துகின்றது.

படத்தின் நாயகன் “கே” ஒரு நகலர் பொம்மையை தன் வீட்டில் வைத்திருக்கிறான். அந்த பொம்மையின் பெயர் “மகிழ்ச்சி” (Joi). அது “கே” என்ன விரும்புகிறானோ அந்த ஆடையை அணிகிறது. “கே” செத்தால் தானும் உடனே மரிக்க நினைக்கிறது. “கே” என்னும் நகலனை உயிருக்கு உயிராகக் காதலிக்கிறது. “கே” என்ன நினைக்கிறானோ, அதை அப்படியே கிளிப்பிள்ளை போல் திரும்பி உறுதி செய்து அவன் முன்மொழிந்த எண்ணங்களை மறுமொழிகிறது. இது அத்தனையையும் சொந்தமாக சிந்தித்து நிதானமாக யோசித்து தன்னுள்ளே விவாதித்த பின் தீர்மானித்தது போல் நம்பகமாக “கே”யின் முடிவுகளை ஆதரித்து அவனை குஷியாக்குகிறது. கடையில் இந்த “மகிழ்ச்சி” என்னும் பொம்மையை “காதல் (Luv) என்னும் இன்னொரு நகலர் கதாபாத்திரம் கொன்றுவிடுகிறது.

“மகிழ்ச்சி” என்பது ஒலிமப் பருவரை (ஹாலாகிராம்) நிரலி பொம்மை. அதை வில்லன் நியாண்டர் வாலஸ் நடத்தும் கடையில் “கே” வாங்கியிருக்கிறான். அதற்கு முப்பரிமாண படிமம் கொடுக்குமாறு, மற்றுமொரு நிரலியை வாங்கி “மகிழ்ச்சி”யின் திறத்தை உயர்த்துகிறான். தான் ஒரு நகலன் என்பதை “கே” அறிந்திருக்கிறான். அவனைப் போலவே ”மகிழ்ச்சி”க்கும் தான் ஒரு எந்திரம் என்பது தெரிந்தே இருக்கிறது. இருந்தாலும் அவளும் ஆன்மா என்னும் சுயம் அறியும் பயணத்தை மேற்கொள்கிறாள்.

ப்ளேட் ரன்னர் படத்தில் வரும் நகலன்களுக்கும் ரத்தமும் சதையும் கொண்ட நமக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை. ப்ளேட் ரன்னர் படத்தின் நகலர்கள் போல் நாமும் எண்ணற்ற சக்திகள் கொண்டவர்கள். நம்முடைய உடலின் ஒவ்வொரு உறுப்பும் மிக சிக்கலான வடிவமைப்பு கொண்டவை. மூளையில் எவ்வளவு விஷயம் வேண்டுமானாலும் ஏற்றிக் கொள்ளலாம். அடிபட்டால் தானாகவே குணமாகும் வழியை நம் தோல் கொண்டிருக்கிறது. கணினி உருவான தேதி போல் நமக்கும் பிறந்த நாள் இருக்கிறது. கணினி காலாவதி ஆவது போல் நாமும் ஓய்வு பெறுகிறோம். படத்தில் வரும் நகலன் அஞ்சி அஞ்சி சாவது போல் நமக்கும் நிறைய பயம் இருக்கிறது. நகலர்களைப் போலவே யாருக்காவது அடிமையாகக் குழப்பத்தில் வாழ்கிறோம். நாளை எனும் நம்பிக்கையில் காலம் கடத்துகிறோம்.

சித்தார்த்த முகர்ஜி எழுதிய மரபணு (ஜீன்) படித்திருப்பீர்கள். நம்முடைய உயிரின் எல்லாத் தகவல்களுக்கும் ஒரு சின்ன மரபீனி முதல் துவங்குகிறது. கணினி எவ்வாறு ஆமாம்/இல்லை என்னும் இருமி எண்மத்தில் அமைக்கப்பட்டிருக்கறதோ… அவ்வாறே, நாமும் உருவாகிறோம். நம்முள் மரபணுத் தகவல் இருக்கிறது. கணினியில் இரும இலக்கங்களின் தொகுதி இருக்கிறது. இரண்டுமே துண்டுகளின் சேர்க்கைதான்.

தங்கம் ஏன் மினுமினுக்கிறது? கரியம் எப்படி படிம எரிபொருள் ஆகிறது? ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு குணாதிசயம். ஆனால், எல்லாப் பொருள்களுக்குள்ளும் அணுக்கள் இருக்கிறது. ஒரேயொரு அணுவில் இருந்து எல்லா பருப்பொருள்களும் உருவாகின்றன. கணினி ஏன் பிழற்ந்து செயல்படுகிறது என்பதற்கு இரும இலக்கம், 0, 1. தகவலின் அடிப்படையலகு சிக்கல்களைச் சொல்ல வேண்டும். அதே போல் மனிதன் எவ்வாறு பிழற்கிறான் என்பதற்கு மரபணுவிற்கு செல்லவேண்டும்.

இப்பொழுது படத்தில் அடிக்கடி வந்து போகும் விளாடிமிர் நபகோவ் எழுதிய ”மங்கிய தீ” (Pale Fire) என்னும் நாவல் ஏன் பொருத்தமாகிறது என எண்ணிப் பார்ப்பது பொருத்தமாக இருக்கும்.

Cells interlinked within cells interlinked
Within one stem. And dreadfully distinct
Against the dark, a tall white fountain played.

உயிரணுக்கள் ஒன்றொடு ஒன்று உயிரணுக்கள் இணையும்
அதில் ஒன்று. வியத்தகு வகையில் தனிப்படும்
இருட்டினுள்ளே, உயரமான வெள்ளையருவி விளையாடும்

இந்தக் கவிதையின் வார்த்தைகளை அதன் அர்த்தம் புரியாமலே திரும்பத் திரும்ப சொல்ல “கே” பணிக்கப்படுகிறான். அதாவது, கணினி ஒழுங்காக வேலை செய்கிறதா என சோதிக்க சில பரிசோதனைகளை மேற்கோள்வோம். அதன் நினைவகத்தில் ஏதேனும் பழுதாகி இருக்கிறதா அல்லது அதன் கட்டளை மையத்தில் நச்சுச் செயலிகள் குடிகொண்டுவிட்டதா என்னும் துப்புரவை தினமும் அனுசரிப்போம். அது போல், “கே”விற்கு நடக்கும் சோதனையில், ‘உயிரணு’ என்னும் வார்த்தையையும் ‘இணை’ என்னும் சொல்லையும் கவிதையின் பொருளோடு பார்க்காமல், இயந்திரத்தனமாக தனித்து உச்சரிக்க வைக்கிறார்கள். கணினி கொஞ்சம் போல் யோசிக்கவோ ஆராயவோ ஆரம்பித்தால், “கே” பழுதுப்பட நகலன் என்று ஓய்வுகொடுத்துவிடுவார்கள்.

முதல் படத்தில் வாழ்வதற்காக நகலர் இறைஞ்சினார். ஏன் தாம் படைக்கப்பட்டோம் என்னும் கேள்விக்கு விடை தேடினார். கடவுளையே பார்த்து அந்த வினாவிற்கான விடையைக் கேட்டாலும், தம் சுய அச்சத்திற்கும் அதனால் எழுப்பும் குழப்பங்களுக்கும் எளிமையான ஒரு வார்த்தை பதில்கள் கிடையாது என்பது புரிந்தது. நமக்கு வேண்டியது எல்லாமுமேக் கிடைக்கப் பெற்றாலும், ஏன் இந்த உலகில் நாம் இருக்கிறோம் என்பதற்கான தேடலையும் நாம் மனிதராக வாழ்வதற்கான கடமை என்ன என்பதற்கான பதிலையும், மகிழ்ச்சிக்கும் திருப்திக்குமான இடைவெளியை “கே” இங்கே ஆராய்கிறான். உங்களுக்கு விடைகள் கிடைக்காது. ஆனால், சரியான கேள்விகளை எழுப்பிக் கொள்வீர்கள்.

Top 10 Indians of 2018 – Gnani Sankaran

என் கணக்கில் இந்த வருடத்தின் தலை பத்து இந்தியர்கள் யார் என்பதை பட்டியலிட எண்ணம். அந்தப் பட்டியலை ஞாநி சங்கரன் கொண்டு துவக்குகிறேன்.

அவரைப் போன்ற மிதமான குரலில் தீர்க்கமாக பிரச்சினையை அணுகி, சுயசிந்தனையுடன் இயங்குபவர் குறைவு. அதுவும் தொலைக்காட்சியும், சமூக ஊடகங்களும், அரசியல் பிரச்சார கோஷங்களும் ஆக்கிரமித்திருக்கும் தமிழ் வெளியில் தொடர்ச்சியாக தன் குரலை வாதங்களுடன் முன்னிறுத்தி செயலிலும் கூட்டு செயல்பாடுகளிலும் முன்னெடுப்பவர் அதனினும் குறைவு. சினிமா மயக்கம், பதவி ஆசை, பண லட்சியங்கள் என்று சமரசம் செய்து கொள்ளாமல், சொந்த வாழ்விலும் அறவிழுமியங்களை பின்பற்றுபவர் ஓரிருவர் மட்டுமே நான் அறிவேன்.

அவர் சென்ற வருடம் மறைந்தார்.

Gnani Sankaran - ஞாநி (ஞானி) - Jnani (Njaani Sangaran)

சில காரணங்கள்

  1. ஆம் ஆத்மி ஆகட்டும்; நோட்டா – 49 ஓ போடு ஆகட்டும் – ஏதாவது சிக்கலான விஷயம் என்றால் தலை பதுங்கும் கூட்டத்தினுள், தன் குரலை தீர்க்கமாக முன்வத்தவர்
  2. மூத்திர சட்டி தூக்க இன்னொருவரின் உதவி தேவைப்படும் வயதில் திறமையாக தலைமைப் பதவியை செயலாற்ற முடியுமா என்று கருணாநிதியின் முதல் மந்திரி பேராசையை போட்டுடைத்தவர் – ஓ பக்கங்கள்
  3. எளிமையானவர்; அழைக்கும் போதெல்லாம் நெருக்கமாக உரையாடியவர்; எசகு பிசகான கேள்வியானாலும் வெளிப்படையாக பதிலுரைத்தவர் – மனிதன் பதில்கள்
  4. கேணி
  5. சிந்தனையாளர்
  6. பரிக்ஷா
  7. நேர்மையான கொம்பன்
  8. “கண்டதைச் சொல்கிறேன்” என்றவர்
  9. ‘அறிந்தும் அறியாமலும்’
  10. தீம்தரிகிட
  11. ஜூனியர் போஸ்ட்
  12. ராமசாமியையும் விடவில்லை (அய்யா – EVR)

ஞாநி குறித்த என்னுடைய பதிவுகள்