Eelam Today

1. ஆயுதக் கடத்தல்: போராளிகளுக்காகக் கடத்தப்படவிருந்த 5,000 கிலோ இரும்பு குண்டுகள் & பலகோடி மதிப்புள்ள ஹெராயின் போதைப் பொருள்

அம்பாறை, மட்டக்களப்பு, மன்னார், வவுனியா, யாழ்ப்பாண மாவட்டங்களுக்குச் சென்று வந்த பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா, சுவீடன், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய கமிஷன் பிரதிநிதிகள் இதைத் தெரிவித்துள்ளனர். சண்டையில் ஈடுபடுபவர்கள் சாதாரண மக்களைக் கேடயமாகப் பயன்படுத்தி, தாக்குதல் நடத்துகின்றனர்.

2. விடுதலைப்புலிகள் கஞ்சா வளர்த்ததாகக் காண்பிக்கும் காட்சிகள் காட்டப்பட்டன

அம்பாறை மாவட்டத்தில் கஞ்சிக்குடிச்சாறில் உள்ள விடுதலைப்புலிகளின் முகாமில் கஞ்சாச் செடிகள் வளர்க்கப்பட்டிருந்ததாகக் கூறப்படும் வீடியோ படங்களை, இலங்கை பாதுகாப்புத் துறையினர் செய்தியாளர்களுக்குக் காண்பித்திருக்கிறார்கள்.

3. ஜனாதிபதிக்கு மாலை அணிவித்த அர்ச்சகர் கொலை

விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து இலங்கை இராணுவத்தினரால் மீட்கப்பட்ட வாகரைப் பகுதிக்கு கடந்த வெள்ளிகிழமை இலங்கை ஜனாதிபதி விஜயம் செய்திருந்தார். அப்போது அங்கு அவரை வரவேற்றவர்களில் சந்திவெளிப் பிள்ளையார் கோயிலின் அர்ச்சகர் செல்லையா பரமேஸ்வரக் குருக்களும் அடங்குவார்.

முழுமையான ஈழ செய்திகளுக்கு: Puthinam.com

இந்திய தினசரிகளில் ஈழம் குறித்த செய்திகளின் தொகுப்பு: LTTE :: Tamil News

முந்தைய டுடே பதிவு: Hinduism Today

Today’s Email Forward

கற்பனை நன்றாக வேலை செய்திருக்கிறது

இது புரியவில்லை

இது புரியாத மாதிரி புரியுது

It happens only in a Democrazy

சென்னை மாநகராட்சி தேர்தல்: மா. சுப்பிரமணியன் போட்டியின்றி தேர்வு- சுயேச்சை வாபஸ் ஆகிறார்

எதிர்க்கட்சியான அதிமுக மற்றும் மதிமுக இத் தேர்தலைப் புறக்கணிப்பதால் அக்கட்சிகள் சார்பில் யாரும் இத்தேர்தலில் மனுத் தாக்கல் செய்யவில்லை. பதவி விலகிய மேயர் மா. சுப்பிரமணியன் 140-வது வார்டில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். அவரை எதிர்த்து தேமுதிக சார்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. கடைசி நேரத்தில் சுப்பிரமணியன் என்பவர் தேமுதிக வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அவரது வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டது.

அதிமுக & மதிமுகவை எதிர்க்கட்சி என்று இந்த செய்திக்குறிப்பு அடைமொழி தருவது தவறு. ஆளுங்கட்சிக்கு எதிராக போட்டியிடாவிட்டால், அவர்களும் மைனாரிட்டி கூட்டணிக்கு வெளியில் இருந்து ஆதரவு தருகிறார்கள்.

‘ஜீ நியூஸ்’ தொலைக்காட்சி, நிருபருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

குஜராத்தில் கீழ்நீதிமன்றங்களில் நடைபெறுவதாகக் கூறப்படும் ஊழல்கள் குறித்து வெளிப்படுத்த, ஜோடிக்கப்பட்ட ஒரு வழக்கில், ஆமதாபாத் கீழ்நீதிமன்றத்தில் லஞ்சம் கொடுத்து குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி வி.என்.கரே, நீதிபதி பி.பி.சிங் மற்றும் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ஆர்.கே.ஜெயின் ஆகியோருக்கு வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இதுதொடர்பான செய்தியை ஜீ நியூஸ் தொலைக்காட்சி ஒளிபரப்பியது.

Counsel for Gujarat said a committee appointed by the Gujarat High Court exonerated the magistrate and he was reinstated in service.

லஞ்சம் பெற்றுக்கொண்ட விபச்சாரி நீதிபதி குற்றமற்றவர். குற்றத்தை வெளிக்கொணர்ந்தவர் மேல் வழக்கு.

100 Days of Kindergarten – Final Project Details

பத்து பொருட்களை எடுத்துக் கொள்வது. ஒவ்வொன்றிலும் பத்து பத்தாக சேர்ப்பது என்று முடிவானது. சாப்பாடு அயிட்டங்கள் முன்னிலை வகித்து, சாக்லேட், cereal என்று தொடங்கியது. திடீரென்று பாதை மாறி விளையாட்டு காய்களைக் கோர்க்கலாம் என்று முடிவானது.

முதலில் செட் சேர்க்கும் சீட்டாட்டம்

இன்னொரு வகை சீட்டுக்கட்டு – ஃபிஷ் என்னும் கண்டுபிடிப்பு விளையாட்டு

சிறிய பொம்மை பலூன்கள்

குட்டி அடுக்குமாடி கட்டிட செங்கல்

அலைபாயுதே படப்பாடல் ஞாபகத்துக்கு வரலாம்

ஜெம் என்பதற்கு அகரமுதலியைப் புரட்டி அர்த்தம் பார்க்க வைத்தாள்

வண்ண வண்னக் கோலங்கள்

செக்கர்ஸ் காய்கள்

சதுரங்கம் இல்லை… அது மாதிரி இன்னொரு ஆட்டம்

எல்லாவற்றையும் ஒட்டும் படலம்

வெற்றிகரமான நூறாவது நாள்

முந்தைய பதிவு: E – T a m i l : ஈ – தமிழ்: Help – 100 days of Kindergarten : Ideas Required

எண்ண மழையாகக் குவித்து எங்களுக்கு உதவிய இலவசக்கொத்தனாருக்கும், ஆதிரை, சிந்தாநதி, பொன்ஸ், செந்தழல் ரவி, பாலராஜன்கீதா, சர்வேசன், ஜி, பத்மா அர்விந்த், சேதுக்கரசி & மற்றவர்களுக்கும் வணக்கங்கள்.

The 48 Laws of Power

  1. Never Outshine the Master
  2. தலைவனின் தோள் மட்டுமே வளர்
    உங்களுக்கு மேல் இருப்பவர் அந்த இடத்திலேயே வசதியாக இருக்கிற மாதிரி பார்த்துக்கொள்ள வேண்டும். அவர்களைக் கவரும் நோக்கத்தோடு அதீதமாக செயல்பட்டால், ‘பெரியவர்’களுக்கு வயிற்றைக் கலக்கும். மேலதிகாரிகளை புத்திசாலியாகக் காட்டி வைத்திருப்பதுதான் சாமர்த்தியம்.

  3. Never put too Much Trust in Friends, Learn how to use Enemies
  4. நண்பர்களை நம்பாதே. எதிரிகளை உபயோகிக்க அறி
    தோழர்கள் பொறாமை பிடித்தவர்கள். முதுகில் குத்திவிடும் ஆபத்தும் உண்டு. கொஞ்ச நாள் முன்னாடி பகைத்துக் கொண்டவனை அழைத்து பக்கத்தில் வைத்துக் கொள். பழைய பகையை ஆற்றுப்படுத்தும் பயம் கொண்ட கடமை உணர்ச்சியுடன் செயல்படுவான். உனக்கு எதிரியே இல்லை என்றால், எப்படி சம்பாதிப்பது என்பது குறித்து யோசி.

  5. Conceal your Intentions
  6. நோக்கங்களை புதை
    ஆழ் எண்ணங்களை மறை. செயல்களின் பின்னிருக்கும் காரணங்களை வெளிக்காட்டாதே. நீ என்ன செய்யப் போகிறாய் என்று அவர்களுக்கு விளங்காவிட்டால், எப்படி உன்னுடன் சண்டைக்கு வரமுடியும்? முடிந்தவரை தவறான பாதையில் இட்டுச் சென்று, புகை மண்டலத்தில் இருத்தி வைத்திருந்தால், அவர்களுக்கு தெளிவு பிறப்பதற்குள், உன் காரியம் கடையேறியிருக்கும்.

  7. Always Say Less than Necessary
  8. சுருங்க சொல்
    புரியாத சொற்றொடர்களை கையாள். எல்லா இடத்திலும், ஏதாவது கருத்து சொல்லிக் கொண்டிருந்தால், உனக்குக் கட்டுப்பாடு இல்லை என்று அர்த்தம். வெட்டு ஒன்று; துண்டு இரண்டாக போட்டு உடைக்காமல், கழுவுகிற மீனில் நழுவும் பாணியில் எழுது. ஆதிக்கவாதிகள் வாயைத் திறந்தால், முத்து உதிர்வது போல் குறைவாகப் பேசுபவர்கள்.

  9. So Much Depends on Reputation – Guard it with your Life
  10. கீர்த்தியை கா
    ஆளுமையின் முக்கிய அங்கம் சமூகத்தில் நற்பெயர். நல்ல பெயர் எடுத்திருப்பதனாலேயே, பிறரை மிரட்டி அடக்கலாம். துளி கீறல் விழுந்தாலும், காற்றில் பறக்கும் பஞ்சு கூட பேப்பர் வெயிட்டாக கல்லெறிந்து ஏளனம் செய்துவிடும். சேறு அடிக்கும் நிகழ்வுகளை முன்கூட்டியே கவனித்து, அதற்கேற்ப காய்களை நகர்த்து. எதிரிகளுக்கு அபகீர்த்தி வருமாறு சேறு அடி. அடித்தபிறகு அவர்களின் மதிப்பு சந்தி சிரிப்பதை ஒதுங்கி நின்று வேடிக்கை பார்.

மற்றவற்றையும் அறிய: The 48 Laws of Power | The 48 Laws of Power – Wikipedia

News Stories of Interest

கருத்தைக் கவர்ந்த செய்திகள்:

  1. பதவிக்கு ஏற்ற நடத்தை இல்லை: கலாம் மீது தாக்கரே மீண்டும் தாக்கு

    குடியரசுத் தலைவர் ஆவதற்கு அவருக்கு நாங்களும்தான் வாக்களித்தோம். ஆனால் குடியரசுத் தலைவர் ஆன பிறகு அவரது நடத்தை அந்தப் பதவிக்கு ஏற்றபடி இருக்கிறதா? இல்லை என்பதுதான் பதில்.

  2. புகைப்படத்தில் விஷமம்: சோனியாவுக்கு களங்கம் ஏற்படுத்த அற்பமான சதி?

    சோனியாவின் வாழ்க்கை வரலாறை திரைப்படமாக எடுத்தார்களே! அந்தப் படத் துணுக்காக இருக்கப் போகிறது?

  3. அன்புமணி-எய்ம்ஸ் மோதல் உச்சகட்டம்: அதிகாரிக்கு அலுவலகத்துக்குள் நுழைய அனுமதி மறுப்பு

    ‘மிஸ்… என்னை அடிச்சுட்டான் மிஸ்’ என்னும் சச்சரவுகளையே டீச்சர் விலக்கி விட்டுக் கொண்டிருந்தால், எப்பொழுது அனைத்து மக்களுக்கும் உடல்நலன் என்னும் ‘பாடம்’ எல்லாம் கவனிக்க முடியும்?

  4. 6,000 திரைப்படங்களை காணும் வசதியுடன் ஜீ.வி. பிலிம்ஸின் புதிய இணையதளம்

    படத்தைக் காண ஆகும் தொகை ரூ.45.

  5. உள்ளாட்சித் தேர்தலில் முதன்முறையாக மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம்: தேர்தல் ஆணையர்

    சோதனை அடிப்படையில் 25 சதவீத இடங்களில் மிண்ணணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

    மற்ற 75 விழுக்காடு இடங்களில் வழமை போல் ஆட்சியைப் பிடிக்கலாம் என்று நிம்மதிப் பெருமூச்சு விடுகிறார் தலைவர்.

  6. ஆகஸ்டு மாதம் ஜோதிகாவுக்கு குழந்தை பிறக்கும்

    செப்டம்பரில் கல்யாணம் நடந்தது. வேகமான தயாரிப்பு.

  7. பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு அணை: தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும்

    மாற்றி மாற்றி அறிக்கை, போராட்டம் அரங்கேறுகிறது. சொற் சிலம்பம் முடியும்போது, அணை கட்டி திறப்பு விழாவுக்கு மத்திய பா.ம.க., வைகோவும் உள்ளூர் ஆளுங்கட்சியும் செல்லலாம்.

  8. கேரளாவில் பரபரப்பு: புத்தரைப் போன்ற ஏசு கிறிஸ்து சிலை

    ஜெபக்கூடத்தில் ஏசு தனது 12 சீடர்களுக்கு அளிக்கும் கடைசி விருந்தானது நமது இந்திய கலாசராப்படி நடப்பது போல ஓவியம் வரையப்பட்டுள்ளது. அதில் 12 சீடர்களும் ஏசுவின் முன்பு தரையில் அமர்ந்து வாழை இலையில் சாப்பிடுவது போல வரைந்துள்ளனர்.

    “ஜெகத் ஜோதி மந்திர்” என்று பெயரிடப்பட்டுள்ள அந்த ஜெபக்கூட்டத்தில் “ஆம் ஏசு கிறிஸ்துவே நமஹா” என்று கொட்டை எழுத்துக்களில் எழுதப்பட்டுள்ளது. ஏசு சிலை முன்பு 2 பெரிய குத்து விளக்கு வைக்கப்பட்டுள்ளது.

  9. வட இந்தியர்கள் பற்றிய ஹேமமாலினியின் கருத்துக்கு பலத்த கண்டனம்

    “மும்பையில் வட இந்தியர்கள் நடத்தப்படும் விதம், திருப்தியளிக்கும் வகையில் இல்லை என்பது குறித்த உங்கள் கருத்து என்ன” என்று கேள்வி கேட்கப்பட்டது.

    இதற்கு ஹேமமாலினி “அவர்களுக்குப் பிரச்சினை என்றால் தங்களுடைய சொந்த ஊருக்குத் திரும்பிப் போகட்டும்” என பதிலளித்திருந்தார்.

Provocative Proposals

மேற்கண்ட விளம்பரம் சென்னைவாசிகளை கோபத்தின் உச்சகட்டத்திற்கு அழைத்து செல்லலாம். க்ளைமாக்ஸ் என்றவுடன் மனதில் மெக் ரையான் நடித்த காட்சி மனதில் ஒடியது. (பார்க்க: YouTube – When Harry Met Sally)

தொடர்ந்து தினந்தோறும் இது போன்ற நிழற்படங்களைத் தாங்கியிருக்கும் நியு யார்க் நகர மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிய இந்தப் பதிவு.

தொடர்பான பதிவுகள் & பட உதவி: டூ மச் மச்சீ… :: அலசல் | விடுபட்டவை: உச்சகட்டம்!

மேன்ஹட்டன் கடையின் நுழைவாயில்

  • Under the crotch

    கால்வின் க்ளெய்ன் அழைக்கிறது

  • Calvin Klein - kate on houston

    நாக்கு சுத்தமாக இருந்தால் சொல் பிழறாது

  • times square fav ad

    குழப்பம் அதிகரிப்பு: விக்டோரியாஸ் சீக்ரெட்டா (அல்லது) கால்வின் க்ளெய்னா?

  • Times Square

    கொட்டை வடிநீர்

  • Spoons

    ஆடை அங்காடியின் கோடை கால வரவேற்பு

  • Who Needs Porn?

    இளவட்டங்களின் கோட்டை – ஏபர்காம்பி ஃபிட்ச்

  • Advertisement as it is

    மது, மாது, சூது

  • Bacardi & Cola

அனைத்துப் படங்களையும் சுட்டினால், அசலாக எடுத்தவரின் ஜாகைக்கு இட்டு செல்லும்.

Ustad Bismillah Khan & Late Night Hindustani Music

பிச்சைப்பாத்திரம்: இசைக்க மறந்த கலைஞன்: “எப்போதும் டொய்ங்.. டொய்ங்.. என்ற சப்தத்தோடோ அல்லது யாரோ அழுகிறாற் போன்ற கர்நாடக சங்கீதமோ இரண்டாவது அலைவரிசையில் கேட்கக் கிடைக்கும்.”

என்னும் அவதானிப்பை உணர்ந்தவுடன் ‘அட… இது நான்தானே!’ என்று தோன்றியது. அப்படியே இசையில் திளைக்கும் சுகுமாரனின் நிலைக்கு செல்ல விழைந்தது. பகிர்ந்து கொள்கிறேன்.

கங்கையின் பெருமூச்சு – அஞ்சலி :: உஸ்தாத் பிஸ்மில்லா கான் : சுகுமாரன்

Ustad Bismillah Khanதிடீரென்று மேடைக்குள் சலசலப்பு. தபலாக்கள், கூடுதல் ஒலிபெருக்கிகள், பக்கவாத்தியக்காரர்கள் என்று மேடை உயிர்த்தது. சில நொடிகளுக்குப் பிறகு நிதானமான நடையுடன் ஒரு சின்ன உருவம் வந்து மையத்தில் அமர்ந்தது. விளக்குகள் ஒளிர்ந்தன. திரை மேலே சுருண்டது. பார்வையாளர் வரிசையிலிருந்து கரவொலி எழுந்தது. பிஸ்மில்லா கானின் முதுகு குனிந்து நிமிர்வது மட்டும் தெரிந்தது. பின்னர் நிசப்தம். சில நொடிகளில் ‘ங்ங்ஙே’ என்று ஒரு துளிப் பிரபஞ்ச விசும்பல் ஒலித்தது. அந்த விசும்பல் அதிர்ந்து பரவி ‘மியான் கிதோடி’யாகப் பெருக்கெடுத்தது. இரண்டு மணி நேரம் அந்த ஆனந்த விசும்பல் படிப்படியாகப் பெருகி அந்த அரங்கு முழுவதும் ததும்பிக் கொண்டிருந்தது.

சராசரி வானொலி நேயர்களைப் போல எனக்கும் ஒப்பாரி வாத்தியமாகத்தான் ஷெனாய் முதலில் அறிமுகமானது. தேசீயத் தலைவர்கள் மறைவின் போது துக்கம் கடைபிடிப்பதற்கான சங்கீதமாகத்தான் அந்த வாத்திய இசை அடையாளம் பெற்றிருந்தது. செவிப்புலன் பக்குவப்பட்டு இசையின் நுண்ணதிர்வுகளைப் பிரித்து அறியத் தெரிந்துகொண்ட அந்த அறியப்படாத நொடியில் பிஸ்மில்லா கான் என்னுடைய மானசீகக் கலைஞர்களில் ஒருவரானார். ஷெனாய் இசை எனக்குள்ளிருக்கும் இயற்கையின் சாரத்தை உணர்த்தும் சமிக்ஞையானது.

பொதுவாக இந்திய இசையின் இயல்பு இது என்பது என் தரப்பு. கர்னாடக இசையோ ஹிந்துஸ்தானி இசையோ சாதாரண ரசிகனிடம் உருவாக்குவது இந்த நெகிழ்வான நிலையைத்தான். துக்கமல்ல; மகிழ்ச்சியின் உச்சத்தில் மனித மனதுக்குள் நிகழும் இளக்கத்தைத்தான் இசை சாத்தியமாக்குகிறது என்பது என் நம்பிக்கை. இந்த நெகிழ்வைத்தான் பக்தியென்றோ ஆன்மீகமென்றோ வைதீக மனப்பாங்கு சொல்லுகிறது என்று தோன்றுகிறது. பக்தியோ ஆன்மீக வேட்கையோ கலவாத நாட்டார் இசையில் மனம் லயிக்க இந்த இளக்கம்தான் காரணம். சாகித்ய வடிவத்தை அதிகம் சாராத ஹிந்துஸ்தானி இசையில் நெகிழ்வுக்கான சாத்தியங்கள் அதிகம். அதில் உச்சபட்ச சாத்தியம் கொண்ட வாத்தியம் ஷெனாய் என்பதை நிரூபித்தவர் பிஸ்மில்லா கான். அவர் பிரபலப்படுத்தும் காலம் வரை ஷெனாய் ஒரு பக்கவாத்தியம் மட்டுமே. கோவில்களில் வாசிக்கப்படும் சடங்குக் கருவியாகவும் திருமணம் போன்ற விமரிசைகளுக்கான ஊதுகுழலாகவும் கருதப்பட்டு வந்தது.
.
.
.
காசி விசுவநாதர் ஆலயத்தின் கதவுகள் பிஸ்மில்லா கானின் வாத்திய இசையுடனேயே திறக்கும். சநாதமான வரலாறும் மூர்க்கமான மத அக்கறைகளும் பின்னணியாகவுள்ள நகரத்தில் இது ஆச்சரியம். ஆனால் இது தன்னுடைய பிரிய நகரத்தில் சிறப்பு என்று நேர்காணல்களில் பலமுறை பெருமிதமாகக் குறிப்பிட்டிருக்கிறார் பிஸ்மில்லா கான்.
.
.
பிஸ்மில்லா கானின் இசையில் ஒரு நீர்ச் சலசலப்பு தொடர்ந்து இருந்து கொண்டிருப்பதாகத் தோன்றும். கங்கையின் கரையிலிருந்து உருவான இசை என்பதனால் அந்தக் கசிவா? தெரியவில்லை. ஆனால் அவரது கச்சேரி பாணியை நீரோடு தொடர்புபடுத்திதான் இதுவரை ரசிக்க முடிந்திருக்கிறது. சீவாளியை ஊதிப் பரிசோதிக்கும்போது இசையின் துளிகள் கொட்டும். பின்னர் சற்று வலுத்து சாரலாகப் பரவும். இடையில் கேட்கும் தபலாவின் தும்தும். அதில் இலைகள் சிலிர்த்து அசையும். ஷெனாயிலிருந்து சின்னதும் பெரிதுமான மேகங்கள் உருவாகி தொடர்ந்து நகர்ந்தபடிப் பொழியும். விளம்பித் (ஆலாபனை) வாசிக்கும்போது சீராக மண்ணுக்கு இறங்கும். இலைகளும் கிளைகளுமாக நிற்கும் மரங்கள் இசையின் கனம் தாளாமல் நிதானமாக அசையும். த்ருத் (நிரவல்?) வாசிப்பின்போது எல்லா அசைவுகளும் வேகமாகும். இசையும் மழையும் மண்ணும் ஆகாயத்தின் குறுக்காகப் பாயும் நதியில் கரைந்தது போலாகும். முத்தாய்ப்பான கட்டத்தில் ஒரு சந்தோஷக் கேவலாக சங்கீதம் முதிரும். அப்போது பூமி தனக்குத் தானே செய்துகொள்ளும் பிரார்த்தனையாக மாறும். இந்தக் கசிவு வாத்தியத்தினுடையதா? வாசிப்பவனுடையதா? ரசிப்பவனுடையதா? என்று வியக்க வைப்பதுதான் பிஸ்மில்லா கானின் பாணி.

நன்றி: உயிர்மை; செப். 2006

Help – 100 days of Kindergarten : Ideas Required

உதவி தேவை

மகள் பள்ளிக்கூடம் போக ஆரம்பித்ததன் நூறாவது நாள் நெருங்குகிறது. ஆசிரியர் ‘நூறை வைத்து ஏதாவது வித்தியாசமாக செய்து வா!‘ என்று கேட்டிருக்கிறார்.

‘நீதான் பார்த்திபன் மாதிரி யோசிப்பியே… அதை விட்டுட்டு உருப்படியா நூறு என்பதை எண்ணிக்கையிலும் வடிவத்திலும் கொண்டு வா’ – இது மனைவி.

‘நூறு சாக்லேட் கொண்டு போகலாம்ப்பா. எல்லாருக்கும் பிடிக்கும். நமக்கும் ஈஸி’ – இது மகள்.

சாதாரணமாக ‘நீ இதுவரை கற்றுக் கொண்ட நூறு விஷயங்களைப் பட்டியலிட்டு, அதற்குப் போதிய குறிச்சொற்களை கொடுத்து, ஆங்கிலத் தலைப்பிட்டு கொடுத்துவிடு’ என்பது என்னுடைய ஆலோசனையாக இருக்கும்.

1 முதல் 100 வரை எழுதிக் கையில் கொடுத்து விடுவாள்.

ஃபெப்ரவரி 14 ‘அன்பர் தினம்’ வருகிறது. இந்த வாரத்திலேயே க்ரௌண்ட் ஹாக் (Groundhog Day) தினம் உண்டு. இந்தியப் பின்னணியில் யோசிக்க குடியரசு தினம் சென்றிருக்கிறது.

யோசனை சொல்ல வாங்க…

கீழ்க்கண்ட நெருக்கடிகளை மனதில் வைத்துக் கொள்ளலாம்:

  • குழந்தைகளுக்கு உகந்ததாக இருக்கணும்.
  • அமெரிக்காவில் கிடைக்கக் கூடிய பொருள்களைக் கொண்டிருக்கணும்.
  • ஆறு வயதினரே முழுவதுமாக (பெரும்பாலும் பெரியோரின் உதவியின்றி) செய்து முடிக்கணும்.
  • காசை ரொம்பக் கரியாக்கக் கூடாது.
  • என் மகளுக்கு ஓவியம், வரைதல், ஒட்டுதல், வெட்டுதல், வண்ணம் தீட்டல் போன்றவற்றில் ஆர்வம் அதிகம்.

ஏதாவது தோன்றுகிறதா?

New Blogger – Acknowledgements

என்னை புதிய ப்ளாகருக்கு மாற உதவியவர்கள்

பாலபாடம் (அ) அரிச்சுவடி:

உணர்வு (அதாவது இன்ஸ்பிரேசன்): விடுபட்டவை: NEW BLOGGER புதிய ஓர் அனுபவம்
ஆக்கம் (அதாவது பிட் ஒட்டுவது): அடியேன்

அனைவருக்கும் நன்றி 🙂