Ingmar Bergman = இயக்குநர் பாலச்சந்தர்

‘நகுலன்’ தேவாதி தேவன் என்று எல்லாரும் புகழ, தரைக்கு இறக்கினார் அ.மி. அது போல் இங்மேர் பெர்க்மேன் (Ingmar Bergman – ஐ எல்லாரும் புகழ, மறுபக்கம் காட்டுகிறது நியு யார்க் டைம்ஸ்.

Nearly all the obituaries I’ve read take for granted Mr. Bergman’s stature as one of the uncontestable major figures in cinema — for his serious themes (the loss of religious faith and the waning of relationships), for his expert direction of actors (many of whom, like Max von Sydow and Liv Ullmann, he introduced and made famous) and for the hard severity of his images. If you Google “Ingmar Bergman” and “great,” you get almost six million hits.

At least part of his initial appeal in the ’50s seems tied to the sexiness of his actresses and the more relaxed attitudes about nudity in Sweden; discovering the handsome look of a Bergman film also clearly meant encountering the beauty of Maj-Britt Nilsson and Harriet Andersson. … It was a seductive error, but an error nevertheless.

If the French New Wave addressed a new contemporary world, Mr. Bergman’s talent was mainly devoted to preserving and perpetuating an old one. … We remember the late Michelangelo Antonioni for his mysteriously vacant pockets of time, Andrei Tarkovsky for his elaborately choreographed long takes and Orson Welles for his canted angles and staccato editing. And we remember all three for their deep, multifaceted investments in the modern world — the same world Mr. Bergman seemed perpetually in retreat from.

சன்னாசி மட்டும்தான் அசோகமித்திரனுக்கு பதில் கொடுக்க முற்பட்டார். பெர்க்மனுக்கு பலர் கிளம்பியிருக்கிறார்கள். ‘தம்ஸ் அப்’ சொல்லும் ரோஜர் ஈபர்ட் இங்கு கவனிக்கிறார்..

மீண்டும் ஏன்?

மீண்டும் மகள். இன்னொரு கேள்வி.

‘அப்பா… நம்ம லாஸ்ட் நேம் ரொம்பப் பெருசா இருக்கு. அம்மா மாதிரி சின்னதா வச்சிருக்கலாம் இல்லியா..’

ஏதோ பதிவில் பின்னூட்டிக்கொண்டே ‘ஹ்ம்ம்’

‘அதெப்படிப்பா… நம்ம ரெண்டு பேருக்கும் ஒரே கடைசி பெயர்? அம்மாவுக்கு மட்டும் வேற பெயர்?’

‘அப்பாவின் கடைசிப் பெயர்தான் குழந்தைகளுக்கும் வைக்கிறோம். கல்யாணம் செஞ்சதுக்குப்புறம் அம்மா கூட பெயர் மாத்திக்கறேன்னு சொன்னா… நான் வேண்டாம்னு சொல்லிட்டேன்.’

‘நீ ஏம்ப்பா உன் பெயர மாத்திக்கல?’

Vairamuthu Question & Answer – Incidents, Detractors

தொடர்புள்ள பதிவு:

Vairamuthu answers – Bharathy, Tamil kavithai, Music Directors, Songs

அ.அமலோர்ப்பவமேரி, ஆத்தூர்.

உங்கள் இலக்கியப் பயணத்தில் எதிர்ப்புகளை எப்படி எதிர்கொள்கிறீர்கள்?

‘தினமணி கதிரி’ல் சுதாங்கன் ஆசிரியராயிருந்தபோது, ‘வள்ளுவர் முதல் வைரமுத்து வரை’ என்ற ஒரு தொடரை இலக்கிய ஆர்வலர் சிவா எழுதி வந்தார். தலைப்பைப் பார்த்ததும் தமிழ்நாட்டின் மூத்த முன்னோடிக் கவிஞர் ஒருவர் தீப்பிழம்பாய்ச் சினந்தெழுந்தார். ஒரு சிறு பத்திரிகையில் எதிர்ப்பறிக்கையும் எழுதி வெளியிட்டார். ‘‘யாரோடு யாரை ஒப்பிடுவது? ‘வள்ளுவர் கடல்’; வைரமுத்து குட்டை’’ என்று முடித்திருந்தார்.

அறிக்கை வந்த அடுத்த வாரம் அதே கவிஞரின் தலைமையில் ஒரு நூல் வெளியீட்டு விழா. நானும் அதில் சொற்பொழிவாளன். என்ன நடக்குமோ ஏது நடக்குமோ என்று மன்றம் முழுக்க நிலவியது ஒரு மயான அமைதி. நான் எழுந்தேன். ஒலிபெருக்கி முன்னால் முப்பது நொடிகள் மௌனம் காத்தேன்; பிறகு பேசினேன்.

‘‘வள்ளுவர் முதல் வைரமுத்து வரை’ என்று ஒரு தொடர் வெளிவந்து கொண்டிருக்கிறது. அதை ஏற்பதோ எதிர்ப்பதோ அவரவர் உரிமை. அறிக்கை வெளியிடுவது அவரவர் திறமை. ஆனால் அறிக்கையில் பொய் சொல்லக்கூடாது. அறிக்கை வெளியிட்டவர் ‘வைரமுத்து குட்டை’ என்று முடித்திருக்கிறார். நீங்களே சொல்லுங்கள். நானா குட்டை? இங்கிருக்கும் கவிஞர்களில் நான்தானே உயரம்?’’ என்றேன். இறுக்கமாயிருந்த அரங்கம் இன்னிசையாய் சிரித்தது.

சில எதிர்ப்புகள் திருத்திக்கொள்ள; பல எதிர்ப்புகள் சிரித்துக்கொள்ள.

க.சோமசுந்தரம், குடியாத்தம்.

‘‘எச்சத்தால் காணப்படும்’’ என்கிறாரே வள்ளுவர்! அது என்ன எச்சம்?

நீ இல்லாத இடத்திலும், காலத்திலும் உன் பெருமையோ, சிறுமையோ பேசும் நுண்பொருளோ பருப்பொருளோ உன் எச்சம்.

ஜான். புஷ்பராஜ், சீர்காழி.

தமிழ்த் தொலைக்காட்சிகளில் நீங்கள் கூர்ந்து கவனிக்கும் நிகழ்ச்சிகள் என்னென்ன?

சன் டி.வி. _ சென்றவார உலகம்

ஜெயா டி.வி. _ தேன் கிண்ணம் (கறுப்பு வெள்ளைப் படப் பாடல்கள்)

விஜய் டி.வி. _ நீயா? நானா?

ராஜ் டி.வி. _ செய்திகள்

மக்கள் தொலைக்காட்சி _ நீதியின் குரல்.
என். உஷாநந்தினி, மண்ணச்சநல்லூர்.

கதாநாயகர்களுக்கு நீங்கள் எழுதிய பாடல்களில் பிடித்த பாடல்களைச் சொன்னீர்களே… கதாநாயகிகளுக்கு?

பத்மினி _ பூவே பூச்சூட வா (பூவே பூச்சூட வா),

சரோஜாதேவி _ சின்னக்கண்ணா (தாய்மேல் ஆணை),

லட்சுமி _ கட்டிக் கரும்பே கண்ணா (சம்சாரம் அது மின்சாரம்),

சுஜதா _ தாலாட்டு மாறிப்போனதே (உன்னை நான் சந்தித்தேன்),

ஸ்ரீப்ரியா _ தேர்கொண்டு சென்றவன் (எனக்குள் ஒருவன்),

ராதிகா _ தென்கிழக்குச் சீமையில (கிழக்குச் சீமையிலே),

சரிதா _ கண்ணான பூ மகனே (தண்ணீர் தண்ணீர்),

அம்பிகா _ பாடவா உன் பாடலை (நான் பாடும் பாடல்),

ராதா _ ராசாவே ஒன்ன நம்பி (முதல் மரியாதை),

சுஹாசினி _ நானொரு சிந்து (சிந்துபைரவி),

பூர்ணிமா _ சாலையோரம் சோலை ஒன்று (பயணங்கள் முடிவதில்லை),

ரேவதி _ வான்மேகம் (புன்னகை மன்னன்),

பானுப்ரியா _ நாடோடி மன்னர்களே (வானமே எல்லை),

ஊர்வசி _ சிறிய பறவை (அந்த ஒரு நிமிடம்),

குஷ்பூ கொண்டையில் தாழம்பூ (அண்ணாமலை),

ரோஜா _ ஆசை கேப்பக்களிக்கு ஆசை (தமிழ்ச்செல்வன்),

ஷோபனா _ முத்தம் போதாதே (எனக்குள் ஒருவன்),

நதியா _ அன்புள்ள அப்பா (அன்புள்ள அப்பா),

அமலா _ புத்தம் புது ஓலைவரும் (வேதம் புதிது),

மதுபாலா _ சின்னச் சின்ன ஆசை (ரோஜா),

நக்மா _ தங்கமகன் இன்று (பாட்ஷா),

மனிஷாகொய்ராலா _ கண்ணாளனே (பம்பாய்),

ஐஸ்வர்யாராய் _ நறுமுகையே (இருவர்),

சிம்ரன் _ இன்னிசை பாடிவரும் (துள்ளாதமனமும் துள்ளும்),

ஜோதிகா _ திருமண மலர்கள் (பூவெல்லாம் உன் வாசம்),

ஷாலினி _ சிநேகிதனே (அலைபாயுதே),

யுக்தா முகி _ யுக்தா முகி (பூவெல்லாம் உன் வாசம்),

ரீமாசென் _ ஆரிய உதடுகள் உன்னது (செல்லமே),

த்ரிஷா _ நீ யாரோ? நான் யாரோ? (ஆய்த எழுத்து),

மீனா _ தில்லானா தில்லானா (முத்து),

சௌந்தர்யா _ நகுமோ (அருணாசலம்),

சுஷ்மிதாசென் _ சோனியா (ரட்சகன்),

கஜோல் _ பூப் பூக்கும் ஓசை (மின்சாரக் கனவு),

மீனாட்சி சேஷாத்ரி _ குளிச்சாக் குத்தாலம் (டூயட்),

ஷில்பாஷெட்டி _ தண்ணீரைக் காதலிக்கும் மீன்களா இல்லை (மிஸ்டர் ரோமியோ),

சிநேகா _ காடுதிறந்தே கிடக்கின்றது (வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்),

மீராஜாஸ்மின் _ சண்டக்கோழி (ஆய்தஎழுத்து),

அசின் _ மனமே மனமே (உள்ளம் கேட்குமே).

சட்டென்று நினைவுக்கு வந்தது இவ்வளவுதான்; விட்டுபோனவர்கள் மன்னிக்க வேண்டுகிறேன்..

கே: வாழ்க்கை என்பது?
ப: கல்யாணத்திற்கும் இழவுக்கும் ஆள்சேர்க்கும் போராட்டம்.

கே: தமிழ்த் திரைப்படங்களில் நீங்கள் அதிகம் கேட்ட வசனம்?
ப: “நீங்க பேசுனதையெல்லாம் நான் கேட்டுக்கிட்டுத்தான் இருந்தேன்.”

கே: யாரோடு பேசினால் அனுபவம் கிடைக்கும்?
ப: ஓய்வுபெற்ற நீதிபதிகள்;

காத்திருப்போர் பட்டியலில் உள்ள காவல்துறை அதிகாரிகள்;

அரைவயதில் களமிழந்த அரசியல்வாதிகள்;

நட்சத்திரங்களின் ஒப்பனைக் கலைஞர்கள்;

கட்டிய வீட்டில் திண்ணைக்கு எறியப்பட்ட கிழவன்;

மூத்த சவரத் தொழிலாளி;

விதவைகளின் மாமியார் மற்றும்

விலைமகளின் தாயார்.

Arasu Pathilgal – Kumudham

எம். சகா, மேலூர்.

அறிவாளிகள், முட்டாள்கள் இருவரின் வாழ்க்கையும் எப்படிப் பட்டது?

‘எத்தனையோ அறிவாளிகளை நான் கண்டிருக்கிறேன். அவர் களிடம் நான் காணாதது சந்தோ ஷம்’ என்றார் ஹெமிங்வே.
க.நா.ராஜேஸ்வரன், மொரட்டுப்பாளையம்.

கம்யூனிஸ்டுகளுக்கும் பா.ம.க.வுக்கும் என்ன வித்தியாசம்?

கம்யூனிஸ்டுகள் எக்காலத்திலும் பி.ஜே.பி.யோடு சேரமாட்டார்கள்.

பா.ம..க. எக்காலத்திலும் எவரோடும் கூட்டுச் சேரும்.

ஆர்.அஜிதா, கம்பம்.

சிரிப்பில் எத்தனை வகை உண்டு?

  • டாக்டர் ராமதாஸ் கலைஞரைப் பார்த்து சிரிப்பது டார்ச்சர் சிரிப்பு.
  • கம்யூனிஸ்டுகளைப் பார்த்து மன்மோகன் சிங் சிரிப்பது நக்கல் சிரிப்பு.
  • மிருகவதைத் தடுப்புச் சட்டத்தைப் பார்த்து சல்மான்கான் சிரிப்பது கேலிச் சிரிப்பு.
  • டால்மியா வகையறாக்களைப் பார்த்து கங்குலி சிரிப்பது எக்காளச் சிரிப்பு.
  • சன் டி.வி.யைப் பார்த்து கலைஞர் டிவி சிரிப்பது சவால் சிரிப்பு.
  • சிம்புவைப் பார்த்து நயன்தாரா சிரிப்பது எஸ்கேப் சிரிப்பு.
  • சில கேள்விகளுக்குப் பதில் தெரியாமல் அரசு சிரிப்பது கேனைச் சிரிப்பு.

இப்படிச் சிரிப்பில் பல வகைகள்.

எம். குமாரசாமி வேலூர்

தன்னுடைய படங்களில் வருவதைப் போலவே பல புள்ளி விவரங்களைச் சொல்லி கூட்டங்களில் அசத்துகிறாரே கேப்டன்?

அதில் நான் ரசித்த ஒன்று. ஒரு பெண்கள் கூட்டதில் அவர் சொன்ன கணக்கு : “ இலவச காஸ் அடுப்பு தர்றோம்னு சொல்லி அரசாங்கம் உங்களை ஏமாத்துது. மண்ணெண்ணை அடுப்புன்னா உங்களுக்கு மாசம் 180 ரூபாய்தான் செலவாகும். ஆனா காஸ் அடுப்பு சிலிண்டருக்கு மாசம் 300 ரூபா ஆகும்..உங்களை அதிகமா செலவழிக்க வெச்சி ஏமாத்தற திட்டம் இது”

திருமணம் ஏழரை நாட்டு சனியா?

செய்தி:

“The basic approach is wrong … many marriages last just because people believe they are safe,” she told reporters. “My suggestion is that marriages expire after seven years.”

கருத்து:
தமிழ் கலாச்சாரப்படி முதல் ஏழு வருஷம் வீட்டில் சிதம்பரம்.
அடுத்த ஏழு வருஷம் மதுரை.
பின் வரும் ஏழு பழனி.
அதற்குப் பின் DMK Font Family Marriage Rocks

Terrorism and civil liberty | Is torture ever justified?

இந்தியாவில்… ?

Torture world Countries India Acceptable

To date, 144 countries have ratified the Convention against Torture. (The hold-outs include such usual suspects as Sudan, North Korea, Myanmar and Zimbabwe, but also India.)

நன்றி: தி எகானமிஸ்ட்

Amnesty International Report 2007 • Sri Lanka

Sun TV – Ganesh Chathurthi special programs

இது work in progress. எப்பொழுது பார்த்து முடிக்கிறேனோ அதுவரை இற்றைப்படுத்தப்படும்.

1. சிறந்த நன்றியுரை: ‘சிவாஜி’ திரைப்படத்தின் இயக்குநர் ஷங்கர்.

மொட்டை பாஸ் தலையில் தட்டுவதற்கு தேவைப்பட்ட உழைப்பைக் கோடிட்டு காட்டி, ஒரு செகண்டுக்கு இவ்வளவு மினுக்கிட்டால், 12,000 விநாடிக்கு எவ்வளவு உழைத்துக் கொட்டியிருப்பார் என்பதை மேஜிக்கலாக ரியலைஸ் செய்யவைத்தார்.

மொட்டைத் தலையில் அதிறும் அந்த ஒலி, பில்லியர்ட்ஸ் பந்து அடித்தவுடன் ஏற்படும் நாதமும் தபலாவின் சத்தமும் இணைந்தது.Kaanal Neer Ritheesh Singapore Best Actor

2. சிறந்த நடிகை: சிங்கப்பூர் கலைவிழா தொகுப்பாளர் அனு ஹாஸன்

‘கானல் நீர்’ திரைப்படத்தில் நடித்து உள்ளங்கவர் கள்ளனாக, புது முக நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் ரித்தீஷைப் பாராட்டி ஒன்றைரை நிமிடம் நக்கல் வெளிப்படாமல், நையாண்டி எட்டிப்பார்க்காமல் பேசியதற்காக வழங்கப்படுகிறது.

3. சிறந்த பேச்சாளர்: மொக்கை பேசினார் சேரன்

பேசினார். பேசியதையேத் தொடர்ந்து அலுக்காமல் பேசினார். பேசிக் கொண்டிருக்கிறார். கேள்விகளும் படு திராபை ரகம். ஆனந்த விகடன் மாதிரி வாயில் வார்த்தை வரவழைக்கும் கலையை எப்பொழுதுதான் தமிழ் வெள்ளித்திரைகள் கற்றுக் கொள்ளுமோ!

4. சிறந்த பேச்சாளினி்: ஜூனியர் ‘ஸ்னேஹா’ ஷெரின்

ஸ்னேஹா போல எந்த டாபிக் கொடுத்தாலும் கருத்து இருக்கிறதோ, விஷயம் தடவலோ, தட்டித் தடுமாறாமல் பேசுகிறார். ‘திமிரு’ படத்தை இயக்கிய தருண்கோபியிடம் உதவி நெறியாளராக சேர்ந்துவிட்டார். சுகாசினியைத் தொடர்ந்து இன்னொரு கதாநாயகி ↔ இயக்குநர்.

5. சிறந்த நிகழ்ச்சி: சத்யராஜூடன் பேட்டி

கேள்வி: ‘நமீதா உங்களுடன் பல படங்கள் நடித்தது பற்றி?’

சத்யராஜ்: ‘அவங்க என் கூட நடிக்காம இருக்கிறதுதான் அவங்களுக்கு பெட்டர். என்னை மாதிரி வயசான ஆளுங்களோட நடிச்சா மார்க்கெட் அவுட்னு அர்த்தம்.

ஆன்டன் பாலசிங்கமாக நடிக்க ஆசை என்றார். குளிர் கண்ணாடியுடன் நேர்காணல் தொடுத்தவரை ‘ஹீரோயினை சைட் அடிக்க போட்டிருக்கீங்களா!’ என்று எதார்த்தமாய் கால்வாரினார். சம்பிரதாய கேள்விகளுக்குக் கூட அவரின் பாமர பதில் தவறவிடக் கூடாத நிகழ்ச்சியாக்கியது.

‘சிவாஜி’யில் காசிமேடு ஆதிக்கு கதாபாத்திரத்தின் கனம் கம்மி என்றார். நான் நடித்தால் பதிலுக்கு பதில் எகத்தாளமாய் ‘என்ன அதிறுது? சும்மா சவுண்ட் விடாதஜி’ என்று போட்டுத் தாக்கினால்தான் சரிப்படும் என்று இயல்பாகப் பேசினார்.

6. சிறந்த ஆட்ட கலைஞர்: நடன இயக்குநர் ராம்ஜி

ரஜினியை மிஞ்சும் நடனம் என்று விளித்தால் அது ராம்ஜிக்கு வஞ்சப்புகழ்ச்சியாகி விடும். பரபரப்பு, துள்ளல், grace கலந்த நளினம் எல்லாம் உண்டு. துவக்க ஆட்டத்தில் மேற்கத்திய ஆட்டமும் சாஸ்திரீய சங்கீதமும் கலந்து வித்தியாசமும் உண்டு.

7. சிறந்த ஆட்டக்காரி: one film flopper ‘புதுக்கோட்டையிலிருந்து சரவணன்’ அபர்ணா

மஸ்தானா மஸ்தானா‘வில் வந்திருக்க வேண்டியவர். ஒற்றைநாடி தேகமாக இருந்தும் மூச்சு வாங்கல் இருக்கட்டும்; உடம்பையாவது லூசாக வைத்து ஆடியிருக்கிலாம். கலக்கல் ஆட்ட அமைப்பை (dance choreography) மிரட்சியுடன் ஆடி அப்பீட்டானார்.

8. சிறந்த ஆடை அலங்காரம்: ‘காதல்’ சந்தியா

தொப்பை என்பது தமிழ் ரசிகர்களின் கனவுப் பிரதேசம். பத்மினி ஆரம்பித்து நயன் தாரா, நமீதா வரை போஷாக்கான காம்ப்ளான் கேர்ள்களை ரசிக்கும் கோலிவுட் உலகம். இருந்தாலும், கொழுப்பு மட்டும் திரட்சியாகத் தனித்துத் தெரியுமாறு ஆடை அணிவது, மில்ஸ் அண்ட் பூன் படிக்கும் chick- இடம் யூமா வாசுகி நாவலை படிக்க வைக்கும் கொடூரம்.

The Mystical Marriage of Saint Catherine of Alexandria by Giuseppe Ribera

Mystical Marriage of Catherine ribera

படம் உதவி: விக்கிப்பீடியா

கடவுளுக்கும் பக்தனுக்கும் இடையேயான உறவை கணவனுக்கும் மனைவிக்கும் வேதாகமங்கள் ஒப்பிடுகிறது. கன்னித்தன்மை இழப்பது என்பது ஆன்மாவை இறைவனிடம் சமர்ப்பிப்பதற்கு சமமாக கருதப்பட்டது.

இங்கே குழந்தை யேசுவுடன் காத்தரீனுக்கு மணமுடிப்பு நடக்கிறது.

இந்தத் திருமணத்தை காரணம் காட்டி தன்னை விரும்பும் பேரரசனை மணக்க மறுக்கிறாள். அவனும் விடாக்கண்டனாக, ஐம்பது தத்துவ அறிஞர்களைக் கொண்டு தெளிவாக்க முயற்சிக்கிறான். மறுதலிக்கிறாள்.

தெய்வீகத்தை மறக்க வைக்க இயலாத உளவியல் நிபுணர்கள் அனைவரையும் அபிராமி பட்டரைப் போல் அந்தாதி எல்லாம் பாட வைத்து வேடிக்கை பார்க்காமல், எரிக்க உத்தரவிடுகிறான் மன்னாதி மன்னன்.

மோதிரம் அணிவித்த பிஞ்சுக்கைகளுக்கு முத்தம் கொடுப்பதை ரிபேரா தீட்டியிருக்கிறார்.

என் புருஷன் குழந்தை மாதிரி‘ என்பது இந்த ஓவியத்தின் தமிழாக்கம்.

Dasavatharam Delays – Trichy Kamal Fans: Poster

Dasavatharam Kamalahasan Trichy Fans Delay Poster

Kalainjar Mu Karunanidhi & Anna as Ram & Anjaneya – Chennai Posters

Palavakkam DMK Poster Annadurai Karunanidhi EVR Periyaar