Category Archives: Uncategorized

அம்மாவின் பொய்கள் – ஞானக்கூத்தன் (1971)

பெண்ணுடன் சினேகம் கொண்டால்

காதறுந்து போகும் என்றாய்

தவறுகள் செய்தால் சாமி

கண்களை குத்தும் என்றாய்

தின்பதற் கேதும் கேட்டால்

வயிற்றுக்குக் கெடுதல் என்றாய்

ஒருமுறை தவிட்டுக்காக

வாங்கினேன் உன்னை என்றாய்

எத்தனை பொய்கள் முன்பு

என்னிடம் சொன்னாய் அம்மா

அத்தனை பொய்கள் முன்பு

சொன்ன நீ எதனாலின்று

பொய்களை நிறுத்திக் கொண்டாய்

தவறு மேல் தவறு செய்யும்

ஆற்றல் போய் விட்டதென்றா?

எனக்கினி பொய்கள் தேவை

இல்லையென் றெண்ணினாயோ?

அல்லது வயதானோர்க்குத்

தகுந்ததாய்ப் பொய்கள் சொல்லும்

பொறுப்பினி அரசாங்கத்தைச்

சார்ந்ததாய்க் கருதினாயா?

தாய்ப்பாலை நிறுத்தல் போலத்

தாய்ப் பொய்யை நிறுத்தலாமா

உன்பிள்ளை உன்னை விட்டால்

வேறெங்கு பெறுவான் பொய்கள்?

—-

ஞானக்கூத்தன் கவிதைகள் – விருட்சம் – ரூ. 80.00

virutcham@mailcity.com

ஹாலிவுட் டு கோலிவுட்

சுந்தர் பசுபதி மூக்கு

அவருடைய மிகப் பெரிய (சமீப காலப் படங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும்) பட்டியலில் இருந்து தமிழில் வெளிவந்த ஒத்த படங்களை பட்டியலிட ஆசை:

A walk in the clouds = பூவேலி

AI கன்னத்தில் முத்தமிட்டால்

American pie Baby’s day out = ???

Bruce almighty == உருவங்கள் மாறலாம்

Erin brokowich == கோவில்பட்டி வீரலட்சுமி

Godfather == நாயகன்

Heat சிவசக்தி

Maid in manhattan எல்லாம் இன்ப மயம்

Mask of zorro == நான் சிகப்பு மனிதன்

Meet the parents == காதலா காதலா

Mrs.doubtfire ++ அவ்வை சண்முகி

My best friend’s wedding ==> (மறந்தே போச்சு)???

You’ve got mail ==>காதலர் தினம்

கேள்விக்குறிகளை தெளிவிப்பதற்கும், மற்ற படங்களை சொல்வதற்கும் முன்கூட்டிய நன்றி.

நன்றி: பிடித்த பட பட்டியல்

புலம்பல்ஸ் – ஹரி

Cliche:

1] நண்பன் ஒருவன் முடி வெட்டிக்கொண்டு வரும்போது சக நண்பன் அல்லது நண்பர்கள் சொல்வது “தலைய எந்த பொந்துக்குள்ளடா வுட்ட?”

[2] ரெண்டு பேர் டிவி பாத்திடிருப்போம் – டிவி-ல ஒரு குரங்கு வரும்.. உடனே இவன், ” டேய் உன் friend பாருடா!”

[3] வீட்டு பெரிசு “டேய் என்னடா லீவு விட்டாச்சா? இனிமே அவுத்து வுட்ட கழுதை தான்!”

நன்றி: தமிழ் வழக்கில் க்லீஷேக்கள்

நெடுந்தொடர் ரசிகன்

பவித்ராவின் இன்றைய கோலங்கள் பதிவுக்குத் தோன்றிய கொஞ்சம் பெரிய பின்னூட்டம். நாம் நெடுந்தொடர் பார்க்க ஆரம்பிப்பதுதான் கஷ்டம். தூர்தர்ஷன் ‘மெட்ரோ’ ஆரம்பித்த காலங்களில் ரயில் ஸ்னேஹம் விரும்பி பார்ப்பேன். ‘இரவில் ஒரு பகல்’ என்று ரேவதியும் சுரேஷ் மேனனும் செய்த ஸ்லோ த்ரில்லர் ஒன்றும் நினைவில் நிற்கிறது. இரண்டுக்குமே விழுந்தடித்து செய்யும் வேலையை அந்தரத்தில் விட்டுவிட்டு கவனிக்க செய்தன. கிருஷ்ணசாமியோ, சுப்பிரமணிய சுவாமியோ, வீணையை வைத்துக் கொண்டு இழுத்த ஒரு மகா கடி தொடர் (தலைப்பு தெரியுமா?) பதிமூன்று வாரங்களுக்கு வருகிறது என்பது மட்டும் தெரிந்து கொண்டு பாராமல் கழிப்போம்.

அதையும் ஒன்றிரண்டு வாரங்கள் கவனித்திருந்தால் வலையில் விழுந்திருப்பேன். கோலங்களை ஒன்றிரண்டு நாள் மட்டுமே பார்த்து வருவதால் அதில் வரும் சோகச்சுவை மட்டுமே கண்ணில் படுகிறது. நாத்தனார்களும், மாமியார்களும் படுத்துகிற ஜென்மங்கள்தான். ஆனால், மிகைப்படுத்தலை இங்கும் செய்கிறார்கள். உத்தமராக மாமனார்; அனால், கோழை அல்லது வாய்மூடி அங்கலாய்ப்பவர். வேலைக்கு செல்லும் ஹீரோயின் தேவயானி இவற்றை எல்லாம் மௌனியாக எதிர்க்கமாட்டார் என்பது ‘ஆட்டோகிரா·பின்’ இரண்டாம் காதலி திடீரென்று தமிழ் பேசுவது போல் நம்பமுடியவில்லை.

ஒவ்வொரு சீரியலிலும் சில கேரக்டர்கள் நன்றாக இருக்கும். நடிப்பாலோ அல்லது பாத்திர படைப்பாலோ அல்லது பிடித்த விஷயங்களை செய்வதாலோ அல்லது ஒருங்கிணைந்து கொள்வதினாலோ, எதனால் என்று சொல்லமுடியவில்லை. ‘மெட்டி ஒலி’யில் மாப்பிள்ளை (இவர்தான் ‘கோலங்கள்’ இயக்குனர்; கோலங்களிலும் தேவயானிக்குக் காதல் கடிதம் கொடுத்தவர்; ஆனால், மெட்டி ஒலியில் ராயர்களின் நக்கல் போல் டயலாக் அமர்க்களமாக எவரையும் எகிறாமல் விடாது!), முன்பு வந்த விகடனின் ‘அப்பா’வில் கள்ளச்சாராயம் காய்ச்சுபவனின் மகளாக நடித்த ஒரு தலைக் காதலி, கோலங்களில் தீபா வெங்கட் என்று அடுக்கலாம்.

பவித்ரா சொல்வது வாரத்தில் என்றாவது ஒரு நாள் ஒரு சீரியலை பார்த்தால் deja-vuவும், தலைவலியும் வராமல் நாட்டு நடப்பையும், தொலைக்காட்சிப் பிரியர்களின் ரசனையையும் அறிந்து வைத்துக் கொள்ளலாம். உறவுகள் விரிசலாவதையும் மரபுகள் மீறப்படுவதையும் மட்டுமே வித்தியாசமாக நினைத்து சீரியல் இயக்கும் பாலச்சந்தரை விட ‘கோலங்களும்’ ‘மெட்டி ஒலி’களும் எவ்வளவோ மேல்…

அம்மா மாட்டிகிட்டாங்க!

BBC NEWS | Business | Jury finds Martha Stewart guilty: ரொம்ப நாள் முன்னாடியே சிக்கிக் கொண்டவர்தான் என்றாலும் தீர்ப்பு சீக்கிரமே வெளிவந்து விட்டது. மங்கையர் எப்படி வாழவேண்டும், எவ்வாறு வீட்டை அலங்கரிக்க வேண்டும் என்று ‘அவள் விகடன்’ ரேஞ்சுக்கு அட்வைஸ் கொடுத்துக் கொண்டிருந்தார். ‘இம்க்ளொன்’ நிறுவன அதிபரின் ஆலோசனைப்படி கம்பெனியின் படுப்பதற்கு முன்பே பங்குகளை சகாய விலையில் விற்று பெரும் நஷடத்தைத் தவிர்த்து விட்டார். ஆனால் என்ரான், எம்சிஐ என்று மட்டிக் கொண்ட பிசினஸ்களின் வரிசையில் அடுத்த பெயராக மார்த்தா ஸ்டுவர்ட். பிறருக்குத் தெரியாத தகவல்களைக் கொண்டு 228,000 பங்குகளை விற்றதாக குற்றசாட்டு.

Martha Stewartஇரண்டு தபா பொய்யான வாக்குமூலமும், குற்றம் செய்ததற்காக ஒரு முறையும், காவல்துறையின் செய்ல்பாடுகளைத் தடுத்ததற்காக ஒரு வாட்டியும் தப்பு செய்துவிட்டதாக ஜூரிகள் முடிவெடுத்திருக்கின்றனர். ஒவ்வொரு குற்றத்திற்கும் ஐந்தாண்டு கடுங்காவல் கிடைக்கலாம். மில்லியன் டாலர் அபராதாமும் போடலாம். நீதிபதி மெதுவாகத்தான் முடிவெடுப்பார். ஜூன் 17-தான் தெரியும்.

கல்யாணத்துக்கு என்ன டிரெஸ் போட்டுக்கலாம் என்பது முதல் கழிவறையில் என்ன திரைச்சீலை போடலாம் என்பது வரை அறிவுறுத்தி அதன் மூலம் ஆண்குலத்துக்கு செலவும் டார்ச்சரும் செய்து வந்தவர்களில் ஒருவர் குறைக்க்கப்படுவார்? (டிஸ்க்ளெய்மர் போட்டுக்கலாம்: நான் பெண்ணியத்துக்கு எதிரானவன் அல்ல 🙂 அடுத்த வாரம் மகளிர் தினமாமே… ஏதாவது ஸ்பெஷலாய் செய்ய வேண்டும்! )

நிலாச்சாரல் – நட்சத்ரன்

அகிரா குரோசாவாவின் திரைப்படைப்பியக்கம் : நட்சத்ரன் கடந்த பத்தாண்டுகளாக தமிழ் சிற்றிதழ்களில் கவிதைகள், கட்டுரைகள் எழுதி வருபவர். சுபமங்களா, கணையாழி, சதங்கை, சுந்தரசுகன், குமுதம் ஆகிய இதழ்களிலும், அம்பலம், நிலாச்சாரல், ஆறாம்திணை, திண்ணை ஆகிய இணைய இதழ்களிலும் கவிதைகள் வெளியாகியுள்ளன. தூக்கணாங்குருவிக்கூடு என்ற நாவல் ஒன்றையும் எழுதியுள்ளார்.

“நல்ல திரைப்படம் பற்றிய எழுத்து தமிழில் மிகவும் குறைவு. எனவேதான் நான் திரைப்படக்கட்டுரைகளை பெருமளவில் எழுதத் தீர்மானித்துள்ளேன். அதற்கு முதல்படியாகவே திரைப்பட மேதை அகிரா குரோசாவா பற்றிய இக்கட்டுரை.

முதன் முதலில் அவர் உலகப்புகழ்பெறக் காரணமான படம் ‘ரஷோமான்’(தலைவாயில்) ஆகும். இது உலகெங்கிலும் உள்ள திரைக்கலைஞர்களுக்கெல்லாம் ஒரு இலக்கணமாக அமைந்தது.

இகிரு(1952), செவன் சாமுராய்(1954), குலோநோசு( ரத்த சிம்மாசனம்-1957), செந்தாடி(1965), கனவுகள்(1987), கஸ்ட் ராப்ஸடி(1990) போன்ற மகத்தான திரைப்படங்களைப் படைத்து, உலகத் திரைப்பட வரலாற்றில் தனியிடம் பெற்ற குரோசாவாவுக்கு, அவரது வாழ்நாள் பணிக்காக 1991-ல் சிறப்பு ஆஸ்கார் விருது வழங்கப்பட்டது. ”

கடந்த மாத செய்திகள்

ஃபிப்ரவரியில் நாட்டு நடப்பும், அவற்றை விரும்பியிருக்கக் கூடிய சில நபர்களும்!?

பாரா: Broom Hilda by Russell Myers

அருண்

உஷா

வாமதேவர்

‘லலிதா’ ராம்

பத்ரி

‘பிபி’ பாலாஜி

ரமணீதரன்

பெயரிலி

கார்த்திக்ராமஸ்

டைனோ

வெங்கட்

மாது

ஷக்தி பிரபா

எம்கே குமார்

நிர்மலா: B.C.

தி பியானிஸ்ட்

என்னுடைய குழந்தைக்காக ‘·பைண்டிங் நீமோ’ எடுக்கலாமா அல்லது

காதரின் ஜீடா ஜோன்சுக்காக ‘சிகாகோ’ எடுக்கலாமா என்று யோசித்த

போது கையில் சிக்கிய படம்தான் ‘தி பியானிஸ்ட்’. எங்கோ கேள்விப்பட்ட

பெயராக இருக்கிறதே என்று பின்பக்கம் திருப்பி கதை என்ன என்று

பார்த்தால் ‘ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட்’ போன்ற யூதர்களின் கொடுமை குறித்த படம்

என்று தெரிந்தது. அதை விட எடுக்கத் தூண்டியது 2002-ஆம் ஆண்டின் மூன்று

முக்கிய ஆஸ்கார் விருதுகளைப் பெற்றிருந்தது. சிறந்த இயக்குநர், சிறந்த

நடிகர், சிறந்த திரைக்கதை (ஏற்கனவே வெளியான புத்தகத்தை அடிப்படையாகக்

கொண்டது) என மிரட்டியது.

கதாநாயகன் ஏட்ரியன் ப்ரோடியை(Adrien Brody) இதற்கு முன் நான் வேறு படத்தில்

பார்த்தது இல்லை. அது படத்தோடு நகர்வதற்கு மிகவும் உதவியது. போலந்து ரேடியோவில்

ஸ்பில்மான் பியானோ வாசிக்கும் காட்சியுடன் படம் துவங்குகிறது. ஜெர்மனியின்

குண்டுகள் வானொலி நிலையத்தைத்தாக்கி, அவரை இருக்கையை விட்டுத் தூக்கியெறியப்

படும்வரை அலட்டிக் கொள்ளாமல் பியானோவை வாசிக்கிறார்.

நாஜியின் அடக்குமுறையால் ஊரிலிருந்து ஒதுக்கப்பட்ட இடத்துக்கு (ghetto) இவரின்

பணக்கார குடும்பமும் தள்ளப்படுகிறது. மற்ற யூதர்களுடன் நெருக்கியடிக்கும் ஒண்டுக்

குடித்தன வாழ்க்கை. குப்பத்து ராஜாவாக, யூதர் ஹோட்டலின் பியானோ வாசிப்பாளராகிறார்

ஹீரோ. நாஜிகளால் அடக்கப்பட்டும், எதுவுமே மாறாத மாதிரி அடக்குமுறைக்கு அடிபணியும்

யூதர் கூட்டத்தைக் காண்கிறார். கள்ளக்கடத்தல் செய்து பெரும்பணம் சேர்ப்பவர்களையும்,

நாஜிகளுடன் சேர்ந்து யூதர்களை மேய்க்கும் காவலர்களையும், மிதிக்கப்பட்டாலும் கனவான்

போல காட்சியளிக்க விரும்புவர்களையும் சலனமின்றி பியானோ வாசிப்பின் ஊடே பார்க்கலாம்.

போராளியாகி நாஜிகளை எதிர்க்க விரும்பும் ஸ்பில்மானின் தம்பி, யூதர்களின் போலீஸிடம்

மாட்டிக் கொள்கிறான். போலீஸில் இருக்கும் தன்னுடைய சக யூத நலம்விரும்பியிடம் போராடி

அவனை மீட்டெடுக்கிறார். அதே நலம்விரும்பியின் கடைசி நிமிட செயலால்,

உயிரும் பிழைக்கிறார். அவரைப் போல் கொடுத்து வைக்காத குடும்பத்தினர் அனைவரும்

நாஜியின் கொலை ரயிலில் ஏறி இறக்கின்றனர். கொஞ்ச நாள் செங்கல் தூக்கும் வேலை,

கொஞ்ச நாள் கணக்குப் பிள்ளை வேலை என்று நாஜி அடிமைத்தனம் செய்கிறார். அங்கிருந்து

தப்பித்துச் சென்று, கலையுலக நண்பர்களின் உதவியோடு வீடு வீடாக பதுங்கி ஹவுஸ் அரெஸ்ட்டான இருப்பு.

ஸ்பில்மான் தன் வீட்டு ஜன்னல் வழியாக யூதர்களின் எழுச்சி, போலந்து நாட்டு மக்களின்

கலவரமும் வீழ்ச்சியும், தன் சொந்த யூதர் இனம் ஒன்று விடாமல் அழிக்கப்படுவது, என

சரித்திரம் பதிவாவதை பசியுடன், மழிக்கப் படாத தாடியுடன், இசை உயிரும் இல்லாமல்,

அதிர்ந்து நடக்காமல், பாத்திர சப்தங்களும் இத்யாதி ஓசைகளும் செய்யாமல்

பார்வையாளராக மட்டும் நேரங்கடத்துகிறார்.

போலந்து நண்பர்களும் இறந்துவிட, போலந்தே அழிந்துவிட்ட தோற்றம் தர, ஸ்பில்மான்

நாஜிகளின் தேடலில் இருந்து தப்பித்து இருக்கையில், ஒரு நாள் மாட்டிக் கொள்கிறார்.

அப்பொழுது தற்காத்துக்கொள்ள வாசித்த பியானோவின் இசையில் சொக்கிப் போகும் ஜெர்மானிய

ஜெனரல், ஸ்பில்மானுக்கு உணவோடு உடையும் கொடுக்கிறார். ரஷியா

அவரையும் போலந்தையும் மீட்டெடுக்கும் வரை பாதுகாக்கிறார்.

படத்தின் கதை போரடிப்பது போல் தோன்றினால், படத்தை பார்த்த பிறகு கருத்தை மாற்றிக்

கொள்வீர்கள். மூன்று மணி நேர படத்தில் பல காட்சிகளாக மௌனம் மட்டுமே. உறைய

வைக்கும் காட்சிகளைக் கூட ரொம்ப ‘பில்ட்-அப்’, அதிரடி இசை என்று மிரட்டாமல்

மிரள வைத்துக் கொண்டு நகர்த்தும் திரைக்கதை.

காட்டாக ghetto-வுக்கு வந்தபிறகு இரவு உணவு அருந்திக் கொண்டு ஸ்பில்மானின்

குடும்பத்தினர் அரட்டையடிக்கின்றனர். ஜீப் வரும் சத்தம் கேட்டு, சுற்று வட்டார வீடுகளின்

விளக்குகள் அவசரமாக அணைக்கப்படுகிறது. எதிர் வீட்டு ·ப்ளாட் தட்டப்பட்டு, உள்ளே

நாஜிகள் நுழைகிறார்கள். சாப்பாட்டு மேஜையில் இருக்கும் அனைவரையும் எழுந்திருக்குமாறு

உத்தரவு. ஒருவர் மட்டும் உட்கார்ந்து கொண்டேயிருக்க, அவரை குண்டுகட்டாக தூக்கி

மூன்றாம் மாடி பால்கனி வழியே விசிறுகிறார்கள். நாஜிகளின் கையில் அப்போதுதான்

அவருடைய சக்கர நாற்காலி, நமக்குக் காட்டப்படுகிறது. தொடர்ந்து அந்தக் குடும்பத்தினர்

அனைவரும் வெளியில் கொணரப்பட்டு மிஷின் கன் அபிஷேகிக்கப் படுகிறார்கள்.

சத்தமில்லாமல் அடுத்த காட்சிக்கு கதை நகர்ந்து விடுகிறது.

முதல் ஒரு மணி நேரத்தில், என்ன நடக்கப் போகிறது என்றறியா யூதர்களின் பேதமையும்,

நாஜிகளின் எல்லைதாண்டிய அடக்குமுறையும், வளரும் ஆதிக்க வெறியும், அவமானப்படுத்தும்

மனப்பான்மையும், போலந்து மக்களின் ‘நம் தலை தப்பித்தது தம்பிரான்

புண்ணியம்’ என்னும் விட்டேத்தி மனப்பான்மையும் காணலாம். யூதர்களே ஒருவருக்கொருவர்

எட்டப்பனாய் காலை வாறிவிட்டுக் கொள்வதும், செய்வதறியாமல் ஆட்டு மந்தை கூட்டமாக

வெட்டி வீழ்த்தப்படுவதும், மூன்றாம் மனிதராக வாளாவிருப்பதும் பார்க்கலாம். திரைக்கதை

அமைதியாக நகர்ந்தாலும், நம் மனம் பதைபதைக்கும்.

ஹீரோவாக என்னை நினைத்து பார்ப்பது வழக்கம். ஜேம்ஸ் பாண்ட்/ரஜினி ரசிகனான எனக்கு

ஸ்பில்மானின் செய்கைகள் ஆச்சரியத்தைத் தந்தது. அவர் களத்தில் இறங்கவும் இல்லை; தன்

இனம் அழியும் போது துப்பாக்கி எடுக்கவும் இல்லை; நாஜிகள் வழிமறித்தபோது

புத்திசாலித்தனமான சூழ்ச்சிகள் செய்து வீழ்த்தவும் இல்லை. மாறாக ஓடினார்; தப்பித்துப்

போனார்; ரகசியமாக ஒளிந்தார்; திருடினார்; பேசாமடந்தையாக இருந்தார். ஒரு சாதாரண நடுத்தர வர்க்க

தமிழ்க்குடிமகன் என்றாவது இந்தியா ஒளிரும்; நல்ல காலம் பிறக்கும்; நமக்கெதுக்கு வம்பு

என்று அடங்கி செல்வதைப் போல். ஒரு நாயகன் இப்படி வாழ்ந்து, தன்னை மட்டும்

காப்பாற்றிக் கொள்வார் என்பது எனக்கு ஆச்சரியமான விஷயம்.

அளவாக வாழ்ந்து, ஸ்பில்மானாகவே தோற்றம் செய்கிறார், ஏட்ரியன் ப்ரோடி என்னும் நடிகர்.

தண்ணீரில்லாமல் தவிக்கும்போது, பலநாள் பேசாமல் வாய் குளறி மொழி தடுமாறும்போது, அனுபவித்து

பியானோ இசைக்கும்போது, பியானோ இருந்தும் இசைக்க முடியாத தனிமை நாட்களைக் கடத்தும்போது,

எட்டாக்காதலான போலந்து காதலியுடன் பேசும்போது என்று மிகை

எளிதில் காட்ட வாய்ப்புகள் இருந்தும் அடங்கி இருக்கும் சாதாரணனை கண்முன்னே

நிறுத்திவிடுகிறார். படத்தின் பிற்பகுதிக்காக தன்னுடைய 73 கிலோ எடையை, பதினான்கு

கிலோ குறைத்துக் கொண்டார். படத்தில் காட்டப்படும் தனிமையை ஒழுங்காக சித்தரிக்க

வேண்டும் என்பதற்காக, தன்னுடைய கார், வீடு, செல்பேசி எல்லாவற்றையும் துறந்து

டிவி கூட பார்க்காமல் இருந்தாராம்!

படத்தில் எனக்கு சில குறைகளும் தோன்றின. ஏகப்பட்ட துணை நடிகர்கள் வந்து போகிறார்கள்.

முன்னாள் காதலியும், பிற்பகுதியில் அவருக்கு ஆதரவு தரும் போலந்து பாடகியும் ஒருவரோ எனக்

குழப்புகிறார்கள். சரித்திரம் ஜன்னல் வழியே வழிவதாலோ, என்னவோ,

செரிக்கும் வேகத்தில் செல்லவில்லை. மற்றபடி கொஞ்சம் ஸ்லோவான படத்தில், இந்தப் பதிவுகள்

பறக்கடிக்கப் படுகின்றன. இடிபாடுகள் நடுவே இருக்கும் ஊரில், சிதிலமடைந்த

வீட்டில், ஸ்பில்மான் வாசித்து ஜெர்மானிய ஜெனரல் ரசிக்க ஒரு பியானோ மட்டும்

மாசுபடாமல், தூசுபடாமல், அலுங்காமல், குலுங்காமல் தப்பித்தது எப்படி?!

கடைசியாக படத்தின் இயக்குநர் ரோமன் பொலன்ஸ்கி குறித்தும் ஒரு பதிவு. ஆஸ்கார்

கிடைத்தாலும் அவர் நேரில் வாங்க அமெரிக்காவுக்கு வர இயல்வில்லை. ஏன்?

அமெரிக்காவினுள் நுழைந்தால், அவருக்கு பிடி வாரண்ட் இருக்கிறது. பச்சிளம் பாலகியை

போதை மருந்துக்கு உள்ளாக்கி வன்புணர்ந்த குற்றச்சாட்டில் இருந்து நாடோடியவர்.

தப்பித்தோடிய ஒரு கொடூர குற்றவாளியிடம் இருந்து இப்படிபட்ட மென்மையான படைப்பு!

தன்னுடைய இளமைக்காலங்களில் பொலன்ஸ்கி நாஜிகளிடம் அடிபட்டவர். ஸ்பில்மான்

மாதிரியே கடைசி நிமிடத்தில் உயிர் பிழைத்தவர். போலந்தின் தெருக்களில் அலைந்து

திரிந்தவர். சொந்த அனுபவங்கள் நிஜத்தை நிலைநிறுத்த நிச்சயம் உதவியிருக்கிறது.

நிஜமாகவே இவற்றை வாழ்ந்த ஸ்பில்ஸ்மான் தன்னுடைய வரலாற்றை இரண்டாம்

உலக யுத்தம் முடிந்தவுடனேயே (45-46-இல்) புத்தகமாக எழுதி விட்டார். புத்தகத்தை

படித்த ருஷியர்களுக்குப் பிடிக்காத்தால், வெளிவரவில்லை. ஒரு நல்ல ஜெர்மானிய கார்னல் (நாஜி)

இருந்தான் என்று ஸ்பில்மான் சொன்னதுதான் தணிக்கைக்கு காரணம். சோவியத்தின்

வீழ்ச்சிக்குப் பிறகு, தொண்ணூறுகளின் இறுதியில் பேப்பரை சென்றடைந்து மக்களை தொட்டது,

புத்தகம். வலைப்பதிவுகள் போல், முன்னும் பின்னும் சென்ற குறிப்புகளை கோர்வையாக்கி,

விட்ட இடங்களை நிரப்பி, ஸ்பில்மானோடு உறவாடியவர்களைப்

பேசி, திரைக்கதை தயாராக்கியுள்ளார்கள்.

கலை, ஆடையமைப்பு, காலத்தால் அழிந்துபோன நகரங்களை நம் முன்னே கொண்டுவந்தது,

இடிபாடுகளை பிரும்மாண்டமாக்காமல் உருகவைத்தது என்று அடுக்கிக் கொண்டே

பாராட்டும் இந்தப் படத்தை பார்த்தவுடன் உதித்த ஒரு எண்ணம்…

இலங்கையில் நடந்த இனப்போரை மூன்றாம் மனிதப் பார்வையில், உணர்ச்சி வசப்படாமல்,

சத்தமாகப் பேசாமல், ரத்தம் கொதிப்படையும் வசனங்கள் இல்லாமல் சரித்திரப் பதிவாக

எப்போது யார் திரைப்படம் கொடுக்கப் போகிறார்கள்? செய்ய விடுவார்களா?

– பாஸ்டன் பாலாஜி

நன்றி: தமிழோவியம்

போலன்ஸ்கி ஏன் அமெரிக்காவை விட்டு ஓடிப்போய் ஒளிந்தார் என்று விலாவாரியாக அறிந்துகொள்ள இங்கே சொடுக்கவும். பல இணையத்தளங்கள் ஏட்ரியன் ப்ரோடி செய்துகொண்ட பழக்கவழக்க மற்றும் உருவ மாற்றங்களை விவரிக்கிறது. தி பியானிஸ்ட் படத்தின் அதிகாரபூர்வ வலைப்பக்கத்தில் நிஜ ஸ்பில்மானை சிறுகுறிப்பிட்டிருக்கிறார்கள். மெய்யாலுமே ஸ்பில்ஸ்மானின் பியானோ இசையை அனுபவிக்கவும் முடியும். வார்சா ghetto புரட்சியை சரித்திர பிண்ணனியில் ஆராய இந்த வலைத்தளம் உதவியது. அப்பொழுது எடுத்த நிழல் படங்களையும் பார்க்க முடிகிறது.

அம்மா பிறந்தநாள்



Adigalaar

1. அதிகாரபூர்வ இணையதளம்

2. சிறிய அறிமுகம்

3. பங்காரு அடிகளார் (அம்மா)

பெண்ணியத்துக்கு மதிப்பு கொடுப்பவர் என்ற ரீதியில் மதிக்கிறேன். மெல் கிப்ஸனின் The Passion of The Christ மாதிரி வசூல் செய்யாவிட்டாலும் ‘மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி’யின் மூலம்தான் எனக்குக் கோவில் அறிமுகம். போன தடவை கோவில் சென்றபோது ‘அம்மா வருவாங்க… ஒதுங்கிக்க…’ என்ற குரல் ஒலிக்க ஆச்சரியம் அடைந்தேன். முதலமைச்சர் வெகு எளிமையாக வந்திருக்கிறார் போல என்ற எண்ணம்தான். நான் பரீட்சைக்கு செல்லும் அவசரத்தில் ஷூ காலோடு சல்யூட் அடிப்பது போல் ஆதிபராசக்திக்கு ‘அரஹர’ போட்டுக் கொண்டுவிட்டு காரில் ஏறுவதற்கு முன் பக்தர்களின் குறைகளைக் கேட்டுக் கொண்டார். கோயிலின் சுற்றுப் பிரகாரங்களில் தமிழ்நாட்டின் முன்னாள், இன்னாள் முதலமைச்சர்கள், நிதியமைச்சர்கள், கல்வியமைச்சர்கள், கால்நடை அமைச்சர்கள், பிற மாநில முதல்வர்கள், உச்சநீதிமன்ற நீதிபதிகள், ராஷ்டிரபதிகள், பிரதம மந்திரிகள், கவர்னர்கள் என முக்கிய நபர்களுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட படங்கள் ஏனோ, கபாலி கோவில் பிரகாரங்களில் அனைத்து ஊர் அம்மன் விக்கிரகங்களையும், அவதாரங்களையும் ஃப்ரேம் போட்டு மாட்டியதை நினைவ்வுக்குக் கொண்டு வந்தது. அங்கு அம்மன்; இங்கு அம்மா!

வளர்ந்த நாடுகளில் மனக்கிலேசம் ஏற்பட்டால் உளவியாலாரை அணுகி மணிக்கு நூறு டாலர் என அழுது குறைபட்டுக் கொள்வார்கள். கஷ்டத்தில் வாடும் தமிழக நடுத்தர மக்கள் உண்டியலில் ஒரு ரூபாய் போட்டுவிட்டு அடிகளாரிடம் புலம்பி இன்னல்கள் தீர்ந்துவிடும் என அசையா நம்பிக்கை அடைந்தால் (அவரின் செயல்கள்) பாராட்டிக்குரியதே.

உங்களுக்கு ஏற்ற புத்தகம் எது? ஒரு க்விஸ்



You’re One Hundred Years of Solitude!

by Gabriel Garcia Marquez

Lonely and struggling, you’ve been around for a very long time.

Conflict has filled most of your life and torn apart nearly everyone you know. Yet there

is something majestic and even epic about your presence in the world. You love life all

the more for having seen its decimation. After all, it takes a village.



Take the Book Quiz

at the Blue Pyramid.