Category Archives: Uncategorized

இணையப்பொறுக்கன்

1. இலவசமாக இந்தியாவைக் கூப்பிட: அமெரிக்காவில் இருந்து ரிலையன்ஸ் மூலமாக ஆக. 31 வரை இந்தியாவைக் கொஞ்ச நேரம் அழைத்துப் பேசலாம்; முற்றிலும் இலவசம் என்று சொல்கிறார்கள். (சுட்டிக் காட்டியவர்: கோபி)

2. A முதல் Z வரை: இருபத்தியாறே வழிகளில் விண்வெளியை அறிமுகப்படுத்தும் பிபிசியின் இணையத்தளம். (அ முதல் ஆய்த எழுத்து வரை என்று தமிழ்ப் பதிவர்கள் யாராவது எழுதலாம்.)

3. விளையாட்டு நேரம்: ஒலிம்பிக்ஸில்தான் கலந்துகொள்ள முடியவில்லை. கணினியிலாவது விளையாடுவோமே. சிறுவர்களுக்கும் ஏற்றவை.

4. இணைய அரும்பொருளகம்: மிட்டாய் பொட்டலங்களுக்கு நினைவாலயம் எழுப்பியிருக்கிறார். காலையில் மனைவியுடன் சண்டை போட்டுவிட்டு, அவர்களை சமாதானப்படுத்த ஃகாடிவா-வோ, லிண்ட்ஸோ வாங்கிச் சென்று கொடுத்து, பழம்விட்டபிறகு, ஏப்பமும் விட்டு, அந்த சாக்லேட் மடிக்கப்பட்ட லாவகத்தை வியந்து பாராட்டி, சேமித்து குப்பை சேர்க்கவும் முடியாமல், தூரவும் போடாமல், நினைவுச் சின்னமாய் வைத்திருப்பேன். இவர் ‘இணையக் கோயிலே’ எழுப்பி விட்டார். பேஜர், கைக்கணி, காசோலை என்று வளர்ந்தவர்களுக்கான விளையாட்டுச் சாதனங்களிலும் மிட்டாய் மூடிகள்.

5. ஆல்பர்ட் எய்ன்ஸ்டீன்: டைம் பத்திரிகையினால் ‘நூற்றாண்டு நாயகன்’ என சொல்லப்பட்டவர். அவரின் எழுத்துக்கள், அறிவியல் ஆக்கங்கள், புகைப்படங்கள் என one-stop இடமாக இருந்தாலும், சில சுட்டிகள் வேலை செய்யவில்லை.

6. ஜிமெயில்: அவுட்லுக்க்கில், யாஹுவில் மடல் வந்தால், ஓரத்தில் ஒரு நினைவூட்டி வருவது போல் கூகிள் மெயிலையும் சொல்ல வைக்கும் நிரலி ரெடி.

7. சிட்டி-அட்டை விளம்பரங்கள்: நல்ல விளம்பரங்களைப் பார்ப்பது நிகழ்ச்சிகளை விட சுவாரசியமானது. அமெரிக்காவில் அடையாளத் திருட்டு மிகவும் புகழ்பெற்றது. ‘போத்தீஸ்.காம்’ சென்று புடைவை செலக்ட் செய்து மனைவிக்கு வாங்கி அனுப்பியவுடன் (முன்னர் சொன்னேனே, அதே போல், இது கொஞ்சம் 70 எம்எம் சண்டை), தொலைபேசி சிணுங்கியது. ‘நீ இருப்பது அமெரிக்காவில்; இந்தியாவில் உன் கடன்-அட்டையை எவளோ உபயோகித்திருக்கிறாள்’ என்று அறிவுறுத்த, நான் அவர்களுக்கு குடும்ப நிலையை விளக்கினேன். அடையாள (மற்றும்) அட்டை திருட்டினால், மென்மையான ஆண் எப்படி முரட்டு ஆண் அகிப் போனாள் என்பதை விளக்கும் விளம்பரங்கள்.

8. சிகப்பு ரோஜாக்கள் : அந்தப் படத்துக்கும், இந்தப் புகைப்படங்களுக்கும் என்ன சம்பந்தம் என்று அறிந்து கொள்ள சென்று பாருங்கள். (கவலை வேண்டாம்: அனில் கபூர் அண்ணி அல்ல 😉

9. நெத்தியடி: நோவா ஸ்காடியாவை எட்டிப் பார்த்திருந்தாலும் இந்த வேனை Macromedia Flash MX சோதனைத் தளத்தின் தயவால்தான் கண்டுகொண்டேன். ‘உங்களுக்குக் குழாய் ரிப்பேரா? சரி செய்ய எங்களை அழையுங்கள்’ என்பதை நன்றாக சொல்லியிருக்கிறார்.

10. Aerogel : வானத்து தூசிகளையும், எரி நட்சத்திரங்களின் எச்சங்களையும் பிடித்து வைக்க உதவும் ஏரோஜெல் சிறுகுறிப்பு கொடுக்கிறது நாஸா. மணலை விடை மெல்லிய உருவைக் கொண்டு, தோட்டாவை விட ஆறு மடங்கு வேகத்தில் (velocity?) வரும் பொருட்களை, சேதமில்லாமல், பலவீனப்படுத்தி, அடக்கி வைப்பதை விளக்குவது எனக்குப் புரியாவிட்டாலும், புகைப்படங்கள் — வாயைப் பிளந்து பிரமிக்க வைக்கிறது.

‘ஜோர்’ ஆன அமெரிக்கத் தேர்தல்

சத்யராஜின் நக்கல் எனக்கு மிகவும் பிடிக்கும். நகைச்சுவைப் படங்களில் கமலை பார்ப்பதும், ஸ்டைல் செய்வதில் ரஜினியும். கையை ஆட்டுவதில் சிம்புவும், இடுப்பை ஒடிப்பதில் சிம்ரனும், வில்லத்தனத்தில் பிரகாஷ்ராஜும் அலுத்துப் போகலாம். ஆனால், மணிவண்ணன், விவேக் போன்றோர் அலுப்பதே இல்லை என்பது என்னுடைய கற்பனை.

மிக சமீபத்தில்தான் இலக்கவிழி தட்டுக்கு (டிவிடி-தான் சார்) ‘ஜோர்’ வந்து சேர தமிழ் சினிமா மனநிலையில் புகுந்துகொண்டு ‘ஜோரை’ ரசித்தேன். அப்பொழுது தோன்றிய உலகளாவிய தத்துவங்கள் சில:

* கல்லூரி தேர்தலில் சிபி நிற்கிறார். அவருக்கு வாக்குப் போடுவதற்கு சொல்லும் காரணம்: “எதிராளி சரியில்லை. அதிகாரவர்க்கத்தில் இருப்பவரின் மகன். அவர் உங்களுக்காக நல்லது செய்யப் போவதில்லை. எனவே, உங்கள் பொன்னான ஓட்டை…” – அமெரிக்காவில் கெர்ரி கூட தன் பிரச்சாரத்தை இப்படித்தான் துவக்கினார்.

* சத்யராஜ் வீட்டிலேயே வலம்வரும் பானுப்ரியாவை சேர்த்துக் கொண்டிருக்கும் இயக்குநரை — தெற்கத்திக்காரர்களின் வோட்டுக்காக எட்வர்ட்ஸை இணைத்துக் கொண்ட கெர்ரி நினைவுறுத்தினார்.

* சிபியைப் பிரதானப்படுத்துவதற்காக அடக்கி வாசிக்கும், ஆனால் அனைத்தையும் வழிநடத்தும் சத்யராஜ் — பெரியவர் டிக் சேனியின் பார்வையில் செயல்படும் புஷ்ஷுக்கு இணையாக சொல்லலாம்.

* தந்தை பாலாசிங் போலவே இங்கு அப்பா புஷ் சொல்லைத் தட்டாமல் மகன் புஷ் நடக்கிறார்.

* சம்பந்தமில்லாமல் வந்துபோகும் வடிவேலுவைப் போலவே பென் அஃப்லெக் (Gigli ஞாபகமிருக்கிறதா) காமெடியாக எதையாவது உதிர்த்துக் கொண்டிருக்கிறார்.

* எதிர்ப்புகளை மீறி வில்லனின் மகள் சிபியை விரும்புவது போல், செனியின் மகள் — மேரி செனி, லெஸ்பியனாக வலம்வருகிறார்.

* பள்ளிக்கூடத்தின் மேல் பொய்வழக்கு போட்டது போல், ஈராக் மீது போர்தொடுப்பு.

* புத்திசாலித்தனமான அணுகுமுறை எதுவும் இல்லாமல் காலங்காலமாக சொல்லப்பட்டுவரும் வித்தைகளை வைத்தே சிபி ஜெயிப்பதாக சொல்லப்படுவதால், கெர்ரியும் எந்தவித ஜிகினா திட்டங்களும் பரிந்துரைக்காமல், எளிமையான தாக்குதல்களிலேயே சென்றுவிடலாம் என்று அறிவுறுத்துகிறார்.

* வில்லன் தந்தையைக் கொல்லும் மகனின் முடிவைப் போல், அமெரிக்கத் தேர்தலில் தங்களின் கொள்கைகளினால் புஷ்-செனி தோற்பார்கள் என்பதைக் குறிப்பால் உணர்த்தும் முடிவு.

இவ்வளவு சப்-டெக்ஸ்ட், மெட்டாஃபோர், அமெரிக்க அரசியலின் அலசல்கள், யார் எப்போது எந்த அரசியல்வாதி என்று அறிய முடியா கதாபாத்திர சித்தரிப்புகள் அடங்கிய படத்தை, நான் பார்த்ததேயில்லை!

-பாஸ்டன் பாலாஜி

(மீண்டும்) விகடன் – சுவடுகள்

விபத்தில் அடிபட்ட

எவனோ ஒருவனைக் காட்டிலும்

அதிகமாக நீ அலறிய அன்றுதான்

என் அன்னை என்றும் உணர்ந்தேன்

உன்னை!

ஜெயபாஸ்கரன்



ரயில் சென்றுவிட்ட

கடைசி நொடியின் நிசப்தத்தில்

பேச ஆரம்பிக்கிறேன்…

ரயிலில் சென்றுவிட்ட

உன்னிடம்.

வீரமணி



திருவிழாவில்

தேர் பார்க்கச் சென்று

தேவதை பார்ப்பவர்களைத்

தெய்வங்களே நினைத்தாலும்

காப்பாற்ற முடியாது.

முருகன்



கைதொட்டு தூக்கும்வரை

கதறிக் கொண்டிருக்கும்

தொலைபேசியைப் போன்றது

என் காதல்

கைதொட்டுத் தூக்கியதும்

கதறத் தொடங்கும்

குழந்தையைப் போன்றது

உன் காதல்.

யுகபாரதி



பூமி

சூரியனைச் சுற்றினால்

வருஷம்!

தேர்

ஊரைச் சுற்றினால்

திருவிழா!

தீ

திரியைச் சுற்றினால்

வெளிச்சம்!

காற்று

உடலுக்குள் சுற்றினால்

உயிர்!

உயிர்

உயிரைச் சுற்றினால்

காதல்!

நீ என்னையும்

நான் உன்னையும்

சுற்றுவதே வாழ்க்கை!

தாஜ்



பார்த்தாலே போதும்

பள்ளிக்காதல்.

பேசாமல் தீராது

+2 வில்.

கடிதங்களால் துவங்கும் கல்லூரி

தொட்டுக் கொள்வதாக

கனவுகள் வரும் அப்போது.

முத்தங்களும் போதாது

பிறகு.

செழியன்



மூவர் அமரும்

இருக்கையில்

உனக்கும் எனக்குமிடையே

சம்மணமிட்டமர்ந்த

உன் வெட்கத்திற்கு

எத்தனை டிக்கெட் எடுப்பது?

சையத் அலி



சூரியன் இல்லாத

வானவில்லும்..

நிலவு இல்லாத

பௌர்ணமியும்..

இனிப்பு இல்லாத

சர்க்கரையும்..

மணல் இல்லாத

பாலைவனமும்…

ரசிக்கப்படும்,

என்னோடு

நீயிருக்கும் பட்சத்தில்!

தாஜ்



எங்கோ ஒரு கடையில்

காதல் விற்பது தெரிந்து

திரண்டது கூட்டம்

கடையின் கதவில்

சாவியில்லாத பூட்டு

காத்திருப்பவர்கள் கையில்

செல்லாத நோட்டு

கவிதா பாரதி



எனக்கான கேள்வி

உன்னிடத்திலும்

உனக்கான பதில்

என்னிடத்திலும்,

இருவரிடமும்

எதுவும் இல்லையென

பாவித்துக் கொண்டிருக்கிறோம்.

சுகிர்தராணி



ரயில்வே சர்வீஸ் கமிஷனோ…

பேங்க் எக்ஸாமோ…

ஸ்டாஃப் செலக்ஷன் கமிஷனோ…

எந்தப் பரீட்சைக்குப்

போனாலும்

பெஞ்சுகளில் பொறித்த

பெயர்கள்

பால்யத்தை நினைவுறுத்தி

பரீட்சையில்

ஃபெயிலாக்குகிறது..!

சி.முருகேஷ்பாபு

நகைச்சுவை தவிர

கையில் நாற்பத்து நாலே ரூபாய் – ரா கி ரங்கராஜன்: “முன்பெல்லாம் கைதிகள், குற்றவாளிகள் என்றால் ஐம்பது வயதைத் தாண்டியவர்களாக இருப்பார்கள். இங்கே குழுமியிருந்தவர்கள் பெரும்பாலும் முப்பது வயதுக்குட்பட்ட இளைஞர்களாக இருப்பதைக் காண மனசுக்குக் கஷ்டமாக இருந்தது. இந்தச் சமுதாயச் சீர்கேட்டுக்கு யாரைக் குற்றம் சொல்வது?”

இங்கே ஒரு பட்டிமன்றம் பாரீர் – துக்ளக் சத்யா:

நடுவர் கான்ஸ்டபிள் கந்தசாமி: ‘இலக்கியத்திலே குழப்பங்கள் ஏற்படப் பெரிதும் காரணம் ஆண்களா, பெண்களா?’-ன்னு தலைப்புக் கொடுத்திருக்காங்க. இது ஒரு மாமூலான பட்டி மண்டபம் இல்லை. மாமூல் மாறி இருக்கிறது. உங்க கம்ப்ளெய்ண்ட்ஸெல்லாம் பதிவு பண்ணிக்கிறேன். கடைசியிலே, எப்படித் தீர்ப்பு சொல்லணும்னு உத்தரவு வருதோ, அப்படியே தீர்ப்புச் சொல்லிடறேன். இப்ப கேஸ் எப்படிப் போவுதுன்னு விட்னெஸ் பண்றதுதான் என் வேலை.

லெண்டிங் லைப்ரரி: “குடும்ப நாவல் – ஜூலை வெளியீடு./அவள் விகடன் – ஆகஸ்ட் 13, 2004/ஆனந்த விகடன் 15.08.2004”

இரண்டாவது விமர்சகன் – நா. பார்த்தசாரதி: “தனக்கே நம்பிக்கையில்லாத பொய்களைச் சொல்லிச் சொல்லி – முடிவில் அந்தப் பொய்களும், அவை யாருக்காகப் படைக்கப்பட்டனவோ, அவர்களுடைய முகமன் வார்த்தைகளும் – அவருக்கு ஒருங்கே சலித்துப் போயின. உலகமே தன்னை வியந்து நோக்கிக் கொண்டிருப்பதாகத் தனக்குத் தானே கற்பித்து மகிழ்ந்து கொண்டிருந்த பொய்ப்புகழ் கூட அவருக்கே அருவருப்புத் தட்டிவிட்டது. பரந்த சிந்தனையும் மற்றவர்களையும் தழுவிக் கொள்கிற போது நோக்கமும் அறவே போய் எதற்கெடுத்தாலும் தன்னைச் சுற்றியே நினைக்கிற சிந்தனை மலட்டுத்தனம் வந்ததன் விளைவாக இப்போது அவர் விமர்சகராகிவிட்டார். தன்னைக் கவனிக்காத சமூகத்தைப் பழிதீர்த்துக் கொள்ளும் ரோஷமும், கொதிப்பும் அவரிடமிருந்து விமரிசனங்களாக வெளிவந்தன.”

அப்புசாமி-சீதாப்பாட்டி நகைச்சுவை அறக்கட்டளை:

“நகைஈகை இன்சொல் இகழாமை நான்கும்

வகை என்ப வாய்மைக் குடிக்கு

– குறள்”

நன்றி: appusami.com

அத்தாளநல்லூர் ஆண்டாள் – kalki: வெளியேறுகையில், இந்தியாவின் எண்ணற்ற அத்தாளநல்லூர்களையும், அடிப்படை வசதிகள்கூட இன்றி அவற்றில் வாழ்ந்து, இறைப்பணி செய்யும் பட்டர்கள், குருக்கள்மாரையும் எண்ணி நன்றி செலுத்தத் தோன்றுகிறது. இந்த தேசத்தின் பண்புகளோடு உயரிய எளிமையையும் கட்டிக் காப்பவர்கள் அல்லவா…?

நேசமுடன் – ஒழுக்கம்

ஒழுக்கம் – இது வேறு



அதுவும் குறிப்பாக ஆணின் குரலாகத்தான் இது எங்கும் ஒலிக்கிறது.

இந்தியாவில் இந்த கருத்து உண்மையாக இருக்கலாம். ஆனால், மேற்கத்திய நாடுகளில் ஆண்களும், பெண்களும் சம அளவில் ‘ஒழுக்கக் கேட்டு’க்காக விமர்சிக்கப் படுகிறார்கள். ஜனரஞ்சகம் என்றால் கிசுகிசு, அந்தரங்கத் தகவல்கள், கிளுகிளுப்பான வர்ணனை என்பதை எழுதப்படாத விதியாகவே அனைத்து ஊடகங்களுக்கும் வைத்துக் கொடுத்திருக்கிறோம்.

இந்த மாதிரி ‘ஒழூங்கீனங்களை’ அம்பலப்படுத்துவதாக கடந்த நாட்களில் அமெரிக்காவில் அதிகம் பேசப்பட்ட விஷயங்கள் சில:

* ஜேம்ஸ் பாண்ட் நாயகி, ‘Catwoman’ ஹாலி பாரியின் கணவர் எரிக் பெனெ வேறு சிலருடன் உறவு கொண்ட விவகாரம். எங்கே ஊர் சுற்றினார்கள் என்பதை ஆர்வத்துடன் எழுதினார்கள்.

* ‘Kill Bill’ நாயகி உமா தர்மனின் காதலர் ஈதன் ஹாக், கனேடியன் மாடலுடன் காணப்பட்டதால், காதல் உடைந்த விஷயம். ஆஸ்கார் விருது பெற்ற ‘Training Day’ போன்ற படங்களில் ஈதன் ஹாக் நடித்துள்ளார்.

* முன்னாள் உலக அழகி மற்றும் நடிகை வனேஸா வில்லியம்சூக்கும் ரிக் ஃபாக்ஸுக்கும் இடையேயான விவாகரத்து மனு. ஏன் மணமுறிவு கோரினார் என்ற விவரமான அலசல்கள்.

இதே போல் கூடைப்பந்து நட்சத்திரம் கோபி ப்ரையண்ட், பிரிட்டிஷ் இளவரசர் சார்லஸுக்கும் அவரது காதலிக்கும் நடக்கும் அந்தரங்கங்கள் போன்றவற்றையும் அமெரிக்கப் தினசரிகளும் பத்திரிகைகளும் தொடர்ந்து எழுதுகிறது.

என்னுடைய கேள்விகள்:

1. இருபாலாரும் ஒழுக்கக்குறைவு ஏற்படக் காரணகர்த்தாக்களாக சுட்டிக் காட்டப்படுவது விரும்பத்தக்க மாற்றமா?

2. மணமுடித்தபிறகு மற்றவரின் மேல் ஈர்ப்பு வந்தால் அது ஒழுக்கக் குறைவா?

3. வாய்ப்பு இருப்பதால் பயன்படுத்திக் கொள்வோரும், வாய்ப்புக் கிடைக்காததால் படித்துத் தீர்த்துக் கொள்வோரும் ஒரே ரகம்தானே?

4. ஆண்களுக்கானப் பத்திரிகையில் பெண்ணும், பெண்களுக்கானப் பதிப்புகளில் ஆணும் போகப் பொருளாக சித்தரிக்கப்பட்டால் ‘equal opportunity discrimination’ என்று சொல்லலாமா?

5. டாக்டர் பிரகாஷ், பிரேமானந்தா போன்ற தவறிழைத்த ஆண்களை விவரணப்படுத்தியும், சிம்பு போன்ற நடிகர்களை கொச்சைப்படுத்தியும் ரிப்போர்ட் வருகிறதே?

கற்பனை செய்து கதை கட்டிப் பேசுவதில் சுகம் காண்பவர்கள் எல்லா நாடுககளிலும், ஆண், பெண் இருவர்களிலும், இருக்கிறார்கள். இந்தியப் பாரம்பரியம் என இல்லாமல் உலகளாவிய அளவில் ஆண் அத்தனை பேரும் ஸ்ரீராமன் என்று கற்பனை கொள்வதைப் போலவே பெண் அத்தனை பேரும் சீதை என்றும், சலனமே ஏற்படதாவர்கள் என்றும் திருப்திப்பட்டுக் கொள்கிறார்கள்.

-பாஸ்டன் பாலாஜி

Questions for Computing Literates 

Questions for Computing Literates Posted by Hello

Taking Meditation to next Level 

Taking Meditation to next Level Posted by Hello

Kalakka Povathu Yaaru – 1 (Vasool Raja MBBS)  

Kalakka Povathu Yaaru – 1 (Vasool Raja MBBS)
 Posted by Hello

Unreal Snap 

Unreal Snap Posted by Hello

Exxon as Wine – Gas Prices (again) 

Exxon as Wine – Gas Prices (again) Posted by Hello