Category Archives: Uncategorized

Indira Gandhi in earlier Years 

Indira Gandhi in earlier Years Posted by Hello

Jamie Foxx & Alicia Keys – Grammy Music Awards 200…

Jamie Foxx & Alicia Keys – Grammy Music Awards 2005 Posted by Hello

The Many Lives of Marilyn Monroe – Sarah Churchwel…

The Many Lives of Marilyn Monroe – Sarah Churchwell Book Posted by Hello

சிகரம் – எஸ்.பி.பி – வைரமுத்து

வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ
விண்ணிலே பாதையில்லை
உன்னைத் தொட ஏணியில்லை

(வண்ணம்)

பக்கத்தில் நீயுமில்லை
பார்வையில் ஈரமில்லை
சொந்தத்தில் பாஷையில்லை
சுவாசிக்க ஆசையில்லை

கண்டுவந்து சொல்வதற்கு
காற்றுக்கு ஞானமில்லை
நீலத்தைப் பிரித்துவிட்டால்
வானத்தில் ஏதுமில்லை
தள்ளித் தள்ளி நீயிருந்தால்
சொல்லிக் கொள்ள வாழ்க்கையில்லை

(வண்ணம்)

நங்கை உந்தன் கூந்தலுக்கு
நட்சத்திரப் பூப்பறித்தேன்
நங்கை வந்து சேரவில்லை
நட்சத்திரம் வாடுதடி

கண்ணிரண்டில் பார்த்திருப்பேன்
கால்கடுக்க காத்திருப்பேன்
ஜீவன் வந்துசேரும்வரை
தேகம்போல் நான் கிடப்பேன்
தேவி வந்து சேர்ந்துவிட்டால்
ஆவி கொண்டு நான் நடப்பேன்

(வண்ணம்)

தமிழ்பௌல்

அமெரிக்காவில் சூப்பர்பௌல் பலராலும் விரும்பிப் பார்க்கப்படுகிறது. தொலைக்காட்சியின் நம்பர் 1 நிகழ்ச்சியாக இருக்கிறது. நடுவே வரும் விளம்பரங்களுக்கும் பெரிய அளவில் சிரத்தை எடுத்து காண்பிக்கிறார்கள். சூப்பர் பௌலுக்காகவே சிறப்பாக புத்தம்புதிய விளம்பரங்கள் தயாரித்து வெளியிடுகிறார்கள். கால்-செண்டர்கள் மிகுந்திருக்கும் தமிழகத்திலும் சூப்பர் பௌலை கண்டு புரிந்து கொள்ளுமாறு அமெரிக்க முதலாளிகள் கட்டளையிட்டிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தகவல் சொல்கிறது. தமிழர்களுக்காக ஸ்பெஷல் விளம்பரங்களும் ரெடி.

அந்த விளம்பரங்களில் சிலவற்றின் முன்னேட்டத்தை உங்களுடன் பகிர்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.

சென்னையில் ஏற்கனவே பல்லாண்டு காலமாய் கடை வைத்திருப்பதால் ‘பழம்பட்டு’ என்னும் புதிய பட்டு வகையை அறிமுகம் செய்கிறார்கள் ‘ரோத்தீஸ்’. ‘ராத்திரியிலும் ரோதனையில்லாமல் ஷாப்பிங் செய்ய வரூவீர் ரோத்தீஸ்’ என்னும் வார்த்தைகள் விளம்பரம் முழுக்க வருகிறது. இந்த விளம்பரத்தில் பழம்பட்டு வகையை அறிமுகம் செய்பவர் அஞ்சு எலி தேவி. ‘என்னுடைய காலத்தில் இந்தப் பட்டை காண்பித்தார்கள். அன்று இருந்த அதே காவியப் பட்டை பத்திரம் இல்லாமல் வைத்ததால், என்னால் கிழிக்க முடிந்தது. ஆங்காங்கே பொத்தல் எல்லாம் வந்திருக்கிறது. இது இந்தக் காலத்துக்கு ஏற்ற ·பேஷன். கிழிசல் ஜீன்ஸ் போல் இருக்கிறது. பழமை என்றாலே பெருமை! அதிலும் கிழிந்த பழம் பட்டின் பெருமை அறியாமல் வாங்கிக் கொள்வது கொடுமை’ என்று முடிக்கிறார் அஞ்சு எலி தேவி.

இதற்கு அடுத்த விளம்பரம் கார்ட்டூன் மூலமாக கார் பாட்டரியின் அருமையை காட்டுகிறது. விளம்பரத்தின் ஆரம்பத்தில் சிறுமியருத்தி ஓடி வருகிறாள். கையில் தண்டத்துடன் காவியுடையுடன் சிறுவன் அவளைத் துரத்த ஆரம்பிக்கிறான். சைக்கிளில் செல்கிறாள். குட்டி சாமியும் விடாமல் காரில் தொடர்கிறான். சைக்கிள் பன்சராகி பஜாஜ் ஸ்கூட்டிக்கு மாறுகிறாள். சாமியாரின் கார் நிற்காமல் ஓடுகிறது. ஸ்கூட்டியில் இருந்து ரயிலுக்குத் தாவுகிறாள். சாமியின் கார் அதையும் பின்தொடர்கிறது. ரயில் தடம்புரள, ஏர்-இந்தியாவில் ஏறுகிறாள். இதற்குள் நேபாளம் வந்துவிட, பெருமூச்சுடன் காரை நிறுத்தி இளைப்பாறி ‘எங்கேயும், எப்போதும், தோன்ற வைக்கும் பத்தாயிரம் ஆண்டுகள் இருக்கும், இறவா வரம் கொண்ட பாபா பாட்டரிகள்‘ என்று முடிக்கிறார்கள்.

அடுத்ததாக செல்பேசி விளம்பரம். கிட்டத்தட்ட சென்ற விளம்பரம் விட்ட இடத்தில் தொடர்கிறது. விமானத்தின் உள்ளே இருக்கும் பாட்டி செல்பேச ஆரம்பிக்கிறாள். ‘நானும் ஐம்பது வருஷமா ட்ரை செய்கிறேன்! இப்பத்தான் லைன் கிடைக்கிறது’ என்கிறாள். ‘உங்களுக்கும் இந்த நிலை ஏற்படாமல் இருக்க உபயோகிப்பீர் “காக்கா செல்“. ஆசாமிகள் ஆகட்டும் சாமியார்கள் ஆகட்டும்… தப்பித்து ஓடும்போதெல்லாம் உங்களை நாங்களும் விடாது தொடர்வோம்… கா… கா… கா…’ என்று காகங்கள் கரைந்து கொண்டிருக்கின்றன.

சுமா பாரதியும் ரெட் ராம் சாவ்தானியும் காரில் வந்து இறங்குவதில் அடுத்த விளம்பரம் ஆரம்பிக்கிறது. உள்ளே போனவுடன் கை தட்டும் ஓசை கேட்கிறது. அடுத்து சுவற்றில் அடிக்கும் சத்தம். தொடர்ந்து இன்னும் கைகலப்பு குரல்கள். வெளியே இருக்கும் வாட்ச்மேனுக்கு உறக்கமே இல்லை. இந்த சத்தங்களையேக் கேட்டு வியந்து கொண்டிருக்கிறார். அவர்களின் அறைக்கு தன்னுடைய டார்டாய்ஸ் கொசுவத்திச் சுருளை எடுத்துக் கொண்டு செல்ல ஆரம்பிக்கும்போது ‘இந்த இரவுக்கு முடிவேயில்லை’ என்னும் உணர்ச்சிகரமான குரல் பிண்ணனியில் ஒலிக்கிறது.

கோக்கும் பெப்ஸியும் ஒருவரையருவர் தாக்கிக் கொள்வது நாம் அறிந்ததே. லிஃப்டில் அதி தத்ரூபமான குரங்கு பொம்மையுடன் சிப்பந்தி காத்திருக்கிறார். பத்தாவது மாடியில் கோக் வைத்துக் கொண்டு உள்ளே நுழைகிறார் லல்லூ ப்ரசாத் யாதவ். பதினோராவது மாடியில் கையில் பெப்ஸியுடன் இளைய சேனாபதி சிஜய் லிஃப்டுக்குள் வருகிறார். திடீரென்று கரண்ட் போய்விட ‘கரக் முரக்’ சத்தங்கள். இரண்டே விநாடிகளில் மின்சாரம் வந்து விடுகிறது. இப்பொழுது பார்த்தால் குரங்கு பொம்மை காணோம். அதற்கு பதிலாக லல்லூவின் பொம்மை இருக்கிறது. குரங்கு உயிர் பெற்று ‘திரு திரு’ பாய்ச்சுகிறது. சிஜய் கையில் இருந்த பெப்ஸி காலி. ‘பெப்ஸி குடியுங்கள்… உங்களுக்குள் தூங்கிக் கொண்டிருக்கும் குரங்கை எழுப்புங்கள்’ என்று ஒரு குரலும், ‘கோக் குடியுங்கள்… உங்களின் மூளையை உடல் முழுக்க பரவ விடுங்கள்’ என்று இன்னொரு குரலும் ஒலிக்கும்.

அந்த இடம் மெல்லிய விளக்குகளால் நிறைந்திருக்கிறது. ‘நான் சிரித்தால் தீபாவளி’க்கு முன்னாள் முன்னணி நடிகன் ஜின்ரம் நடனம் பயில்கிறார். அப்பொழுதுதான் காமத்திபுராவிற்கு வந்தது போன்ற இளம் மாணாக்கன்கள் குருவைப் பின்பற்றி ஆட முயற்சிக்கின்றார்கள். அங்கே காதலனை பார்க்க வரும் தொப்பை நடிகை கிளாஸுடன் உதிக்கிறார். ‘சரக்கை அடிச்சுக்கோ… சரிஞ்சு படுத்துக்கோ’ என்று திடீரென்று பாடல் மாறி தொப்புள் நடனம் ஆட ஆரம்பிக்கிறார். ஜின்ரம் வெட்கப்பட்டுக் கொண்டு கொண்டு வந்த தண்ணியை அடிக்கும் போது ‘கிங்ஃபிஷர் குடிச்சுக்கோ… ஊத்திக்கோ’ என்று மாணவர்களின் போதையுடன் முடிக்கிறார்கள்.

சூப்பர் பௌல் ஒளிபரப்பும் நிறுவனமே வலைபத்திரிகையும் நடத்தி வருகிறது. அந்த வலையிதழுக்காக மூன்று விதமான விளம்பரங்கள் காட்டப்படுகிறது. ‘மங்காத்தா கண்ணு மங்காத்தா’ என்று தொடங்கும் முதல் விளம்பரத்தில் டஹிதி முதல் தாம்பரம் வரை உள்ள பல்வேறு ஊர்கள் காட்டப்படுகிறது. ஒவ்வொரு ஊரிலும் மங்காத்தா ஆடுகிறார்கள். இணையத்தில் அவர்கள் மகிழ்ச்சியுடன் ஆடிக் கொண்டேயிருப்பதாகக் காட்டப்படுகிறது. ‘மூணுசீட்டு கண்ணா மூணுசீட்டு’ என்று இதேபோல் இன்னொரு விளம்பரமும் தொடர்ச்சியாக வந்து கொண்டேயிருக்கும். ‘செம்மொழியில் முதன்முறையாக மங்காத்தா’ என்று ஆரம்பிக்கும் மூன்றாவது விளம்பரத்தை நான் இன்னும் பார்க்கவில்லை.

உங்களுடைய முதலிரவைக் கொண்டாட அழைக்கும் ஜி.எம். மகிழுந்துகள், ‘சலிக்குது… சலி சலிக்குது’ என்று சல்லடையுன் அழைக்கும் புடைவைகள், புதிய சாயம் பூசியதால் வென்ச்சர் காபிடலிஸ்ட்களிடம் இருந்து பணம் கிடைத்த வித்தையை சொல்லும் அமிதாப் என்று நீங்கள் பார்த்த விளம்பரங்களையும் சொல்லுங்கள்.

-பாலாஜி / Tamiloviam

அள்ள அள்ளப் பக்கம்

“இலக்கியம் மற்றும் எனது வாழ்க்கை குறிப்புகள் சார்ந்த கேள்விகள் அடங்கிய எனது நேர்முகம் முன்னதாக காலச்சுவடு இதழிலும் ஆறாம் திணை இணைய இதழிலும் குமுதம் இலக்கியமலரிலும் வெளியாகியிருக்கின்றன.”
எஸ்.ராமகிருஷ்ணன்

வெள்ளிக்கிழமை ‘திண்ணை‘ பக்கம் அசகாயத் தீனி போடும். ஆனால், இரண்டு வாரத்துக்கு விடுமுறை விட்டிருக்கிறார்கள். இதைத் தொடர்ந்துதான் ஆறாம்திணை பக்கம் சென்று துழாவ ஆரம்பித்தேன். எதையோத் தேட, என்னென்னவோ கிடைத்தது.

இலக்கியம் :
வாய்மொழி இலக்கியம் | திட்டிவாசல் | நூல் விமர்சனம் | படைப்புலகம் | சிறுவர் இலக்கியம் | சிற்றிதழ் வரிசை

அரசியல் :
தலையங்கம் | தலைமை | தேர்தல் | தேசியம் | மாநிலம் | சர்வதேசம்

சமுகவரலாறு :
மண்வாசனை | தன்வரலாறு | கருவூலம் | சென்னை சுவடுகள் | மக்கள் தெய்வங்கள் | சிறப்புப்பார்வை

தோழி :
ஆக்கம் | சந்திப்போமா…. | கருவூலம் | சாதனையாளர் | பெண் மொழி | கட்டுரை

மொழி :
தமிழறிவோம் | பழமொழி | மொழி வரலாறு | சொல் புதிது | விடுகதை | கட்டுரை

கலை :
தூரிகை | இசை | நாடகம் | சினிமா | நாட்டார் கலைகள் | பரதம்

சினிமா :
நேருக்கு நேர் | ரெடி டேக் | கண்ணோட்டம் | தகவல் பெட்டகம் | விமர்சனம் | ஊசிப்பட்டாசு | நிகழ்வுகள் | பொம்மை

முகப்பு :
எண்ணங்கள் | சமயம் | கவிதை | சிறுகதை | கல்வி | குழந்தை | குறுக்கெழுத்து | புது வரவு | விடுகதை | பழமொழி | நேர்காணல் | சொல்லாட்டம்

சுரா, பொன்னம்பலம் என்று பலரில் தொலைந்து போக வைத்தார்கள். எஸ்.ரா. எங்கேயாவது கிடைத்தால் சொல்லுங்க.

அப்படியே வலைப்பதிவுகளையும் இவ்வாறு பட்டியலிட்டு தொகுத்து வைத்தால் சௌகரியமாக இருக்குமே!

பொறிப்புரை

ச.திருமலை: ஒரு ஹிந்துத்துவா ஆதரவாளர் ‘காதல்’ படத்தைப் பார்த்திருந்தால் இப்படி எழுதியிருப்பாரோ:

‘மதுரை என்பது ஒரு கோவில் நகரம். ஹிந்துக்களின் முக்கியமான கோவில், பிரமாணடமானக் கோவில் உள்ள நகரம். உலக அதிசயத்தில் ஒன்றா என்று வாக்கெடுப்பு நடத்தப்படும் நகரம்.

அந்த நகரத்தைக் காண்பிக்கும் பொழுது கேமரா கோணம் அங்குள்ள மசூதி ஒன்றை பிரமாண்டமாகக் காட்டி, அரபி மொழியில் ஓதப்படும் ஒலியின் பிண்ணனியில், மீனாட்சி அம்மன் கோவிலை சிறிதாகக் காண்பிக்கிறார் ஒரு போலி மதச்சார்பின்மைவாதியான பாலாஜி சக்திவேல். அந்தக் கோணம் ஏதோ மெக்கா மெதினாவைக் காண்பிப்பது போல் இருந்தது. நிச்சயம் அந்தக் கோணம் தற்செயலான ஒன்றாக இருந்திருக்காது. ஒரு பிரமாண்டமான கோவிலை சிறுமைப் படுத்தும் முயற்சியே இது.

இது போக இவர் பல காட்சிகளில் கிறிஸ்துவக் கடவுள்களுக்கும் தேவாலயங்களுக்கும் காண்பிக்கும் முக்கியத்துவம் இந்துக் கடவுள்களுக்குக் காண்பிப்பக் படுவதில்லை. மேலும் பழநிக்குப் பாதயாத்திரை போகும் பக்தர்களை கேலி செய்யும் விதத்தில் ஒரு வசனமும் வருகிறது. தி க காரர், மற்றும் கிறிஸ்துவரான தேவசகாயத்தின் கடையான எண்ணெய்ப் பலகாரக் கடைக்கு முக்கியத்துவம் கொடுத்துக் காண்பிக்கப் படுகிறது. திண்டுக்கல்லில் ஈ வே ரா சிலையைக் காண்பிக்கின்றார்கள்.

காதலுக்கு ஆதரவு அளிப்பவராக ஒரு கிறிஸ்துவரையும் எதிர்ப்பு தெரிவிக்கும் கொடுமனம் படைத்தவர்களாக குங்குமம் வைத்துள்ள ஒரு இந்துவும் காட்டப் படுகிறார்கள். ஆகவே இது முழுக்க முழுக்க ஒரு இந்து மத விரோதி எடுத்த படமே என்பது உறுதியாகிறது’.

Yahoo! Groups : RaayarKaapiKlub Messages : Message 10797 — அ. ராமசாமி :: தீம்தரிகிட



நிலாச்சாரல்.காம் :: “ஒட்டக்கூத்தர் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்

குலோத்துங்க சோழனின் அவைக்களப் புலவரும் குருவுமான ஒட்டக்கூத்தர் புகழேந்தியை எக்காரணமுமின்றிச் சிறையிலடைத்துவிட்டார். இந்த விவரத்தைக் கேள்வியுற்ற ராணிக்குக் கோபம் வந்து விட்டது. அதனால் அவள் அரசன் அந்தப்புரத்திற்கு வரும் சமயம் அறைக்குள்ளே புகுந்து கொண்டு கதவைத் தாழிட்டுக் கொண்டாள். மன்னன் குரல் கொடுத்தும் கதவைத் திறக்கவில்லை. அந்த நாளில் மகாராணிகள் ஊடல் கொண்டால் மன்னர்கள் தங்கள் அவைக்களப் புலவரை அனுப்பி சமாதானம் செய்து வைப்பது வழக்கம். அதன்படியே குலோத்துங்கனும் தனது அவைக்களப் புலவரும் குருவுமான ஒட்டக்கூத்தரை அனுப்பினான்.

நானே இனியுன்னை வேண்டுவதில்லை நளினமலர்த்

தேனே கபாடந் திறந்திடு திறவா விடிலோ

வானேறனைய வாள் விரவிகுலாதிபன் வாசல் வந்தால்

தானே திறக்கு நின் கையிதழாகிய தாமரையே!

இந்தப் பாடலைக் கேட்ட அரசியின் கோபம் அதிகமாகவே அவள் கதவின் இன்னுமொரு தாழ்ப்பாளையும் தாளிட்டுக் கொண்டாள். அப்படித்தான் ‘ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்” சொற்றொடர் உருவானது.

ஒட்டக்கூத்தரின் மீது மனைவியின் கோபத்திற்குக் காரணம் புகழேந்திப் புலவர் சிறையிலிருப்பதுதான் என்பதைப் புரிந்து கொண்ட அரசன் உடனே புகழேந்தியை விடுதலை செய்து அவரை அந்தப்புரத்திற்கு அனுப்பித் தன் மனைவியை சமாதானம் செய்யும்படிக் கேட்டுக் கொண்டான். புகழேந்தி அரசியின் வாசலுக்கு வந்து

இழையன்றிரண்டு வகிர் செய்த நுண்ணிடை யேந்தியபொற்

குழையன்றிரண்டு விழியணங்கே கொண்ட கோபந் தணி

மழையன்றிரண்டு கைப் பாணாபரண நின் வாசல் வந்தால்

பிழையன்றிரண்டு பொறாரோ குடியிற் பிறந்தவரே!

எனும் பாடலைக் கூறியதும் அரசி இரண்டு தாழ்ப்பாள்களையும் திறந்தாள்.

பாடல்களின் விரிவுரைக்கு: nilacharal.com

சிகிச்சை சக்ஸஸ்

ஆனால், நோயாளிதான் இன்னும் தேறவில்லை.

பரி மற்றும் இன்னும் சில நண்பர்களின் தொடர்ந்த இடித்துரைத்தலுக்குப் பிறகு ஒரு வழியாக ‘ப்ளாக்ஸ்கின்ஸ்’ வழியாக வார்ப்புருவை உருவி, மாற்றி விட்டேன். ஆனால், முன்பு இருந்த ஸ்க்ரிப்ட்கள், உரல்கள், படங்கள் எல்லாம் தொடர்ந்ததால், வலைப்பதிவு பழைய வேகத்திலேயேதான் வந்து கொண்டிருக்கிறது.

ஷங்கர் படம் வெளிவருவதற்கு காத்திருப்போம். இரண்டு வருடங்கள் ஆனால் கூட பொறுத்திருப்போம். ஆனால், ‘அன்புமணி’ போன்றவை தாமதித்து வெளிவந்தால் நஷ்டம் பார்வையாளர்களுக்கு அல்ல. நாம ‘அன்புமணி’/’ஜனனம்‘ ரேஞ்சு. எனவே, உடனடியாக கணினித் திரையில் வரவழைக்க என்ன மாயாஜாலம் செய்ய வேண்டும் என்று யாராவது சொன்னால் புண்ணியமாகப் போகும்.

டெம்பிளேட்டில் வேறு ஏதாவது பிரச்சினை இருந்தாலும் சொல்லவும்.

அமெரிக்கத் தொலைகாட்சிகளில் மீண்டும் ஐஷ்வர்யா ராய் தோன்றினார். அவர் நடித்த ப்ரைட் & ப்ரெஜுடிஸ் இந்த வாரம் முதல் (பெரும்பாலான அமெரிக்க நகரங்களில்) ஆரம்பிக்கிறது. ‘மில்லியன் டாலர் பேபி’யை மக்களிடம் கொண்டு செல்ல க்ளிண்ட் ஈஸ்ட்வுட்டும் வந்திருந்தார். ஐஷ்வர்யா டேவிட் லெட்டர்மேனுடனும், க்ளிண்ட் ஜே லீனோவுடனும் அளவளாவினார்கள்.

முன்ன பின்ன பேட்டி கொடுத்து ஐஷ்வர்யாவுக்கு அனுபவம் இல்லாதது தெரிந்தது. ரொம்பவும் பரபரப்புடன் காணப்பட்டார். ‘பேட்டி முடிந்து விட்டதா’ என்று ஆயாசமாகக் கேட்டு தர்மசங்கடமான சிரிப்புடன் முடித்துக் கொண்டார். எவ்வளவு தடவைதான் ‘இன்னும் பெற்றோருடன்தான் குடித்தனமா?’ என்னும் அபத்தமான கேள்விக்கு விடையளிக்க வேண்டுமோ… தெரியவில்லை.

அந்தப் பக்கம் க்ளிண்ட் ஈஸ்ட்வுட் அமர்த்தலாக பேசிக் கொண்டிருந்தார். “உங்க படம் ஆஸ்காருக்கு பரிந்துரைத்திருக்கிறார்களே… உங்களுக்கும் அகாடெமியில் ஓட்டு உண்டே! உங்க படத்துக்குத்தான் ஓட்டுப் போடுவீங்களா? அல்லது வேறு யாருக்காவது வாக்களிப்பீங்களா?” போன்ற பூடகமான கேள்விக்கெல்லாம் கூட இயற்கையாக பேசினார்.

“என்னுடைய படத்துக்குத்தான் என்னுடைய ஓட்டு. என் மேலே எனக்கு நம்பிக்கை வேண்டும். மேலும், ஜெயிக்க வேண்டும் என்பதைத்தான் பலரும் விரும்புவோம். நானே எனக்கு ஓட்டுப் போடாவிட்டால், வேறு யார் போடுவார்கள்?” என்று பதிலடி கொடுத்தார்.

அப்பா அம்மாவுடன் வாழ்க்கையா என்னும் வினாவிற்கு ஐஷ்வர்யாவும் சற்றே கோபமாக இயலாமையுடன் பதில் கொடுத்தார்.

“உங்களைப் போல் பெற்றொரை நடத்த முடியாது! வருடத்துக்கு ஒரு முறை சேர்ந்து சாப்பிட — பல மாதம் முன்பே அப்பாயிண்ட்மெண்ட் செய்து வைத்துக் கொள்பவர்கள் அல்ல இந்தியர்கள்” என்று உறுமினார். பாவமாக இருந்தது.

பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் (எனக்குத்தான்… வார்ப்புரு அடுத்த தபா அமர்க்களமாக அமைய!)

ஆவி வார்த்தை

கல்லூரி காலத்தில் ஒய்ஜா போர்டில் ஆவி கூப்பிடுவது பிடித்தமான பொழுதுபோக்கு. அப்படி ஒரு முறை நடிகர் முத்துராமனை அழைத்துப் பேசிய குறிப்புகள்.

1. ஆவியுலகத்தில் எத்தனை பகுதிகள்?

நான்கு (A, B, C, D)

2. ஆவியுலகத்தில் எந்தப் பகுதியில் இருப்பவர்கள் எல்லா உலகத்தையும் பார்க்கமுடியும்?

ஏ, பி

3. சி, டி பகுதியில் இருப்பவர்க்கு விமோசனம் உண்டா?

உண்டு.

4. அவர்கள் எவ்வளவு நாள் இருக்க வேண்டும்?

சுமார் 8 வருடம்

5. ஆவியுலக்த் தலைவர் யார்?

Divsdrep

6. அவர் எந்த நாட்டுக்காரர்?

துபாய்

7. உங்களுக்கு அந்தப் பதவி கிடைக்குமா?

கிடைக்காது.

8. அவர் எந்தப் பகுதியில் இருக்கிறார்/

9. நீங்கள் பி-யிலிருந்து ஏ-க்குப் போக முடியுமா? (விருந்தினராக/விசிட்)

முடியாது.

10. நீங்கள் அங்கேயே புண்ணியம் செய்து ஏ பகுதிக்கு செல்ல முடியுமா?

முடியும்

11. எந்த விதத்தில் என்று கூற முடியுமா?

முடியாது

12. காலயிலும் மாலையிலும் பூஜை செய்கிறீர்களா? அதனால் நன்மை என்ன?

போடா (மறக்கவே முடியாத பதில் 😉

13. ஆவியுலகத்தில் இருக்கிறவர்கள் உருவத்தைப் பார்க்க முடியுமா?

முடியும்

14. எதிர்காலத்தைப் பற்றி சொல்கிற சக்தி உண்டா?

இல்லை.

15. அந்த சக்தி எந்தப் பகுதியில் உள்ளவர்க்கு உண்டு?

16. இன்னும் எத்தனை நாட்களுக்கு நீங்கள் அந்தப் பகுதியில் இருக்க வேண்டும்?

10 வருடங்கள்

17. பேய்க்கும் ஆவிக்கும் வேறுபாடு உண்டா?

உண்டு

18. பேய் என்று எப்படி கண்டுபிடிப்பது?

இருள் பகுதியில் இருப்பவர்கள்

19. அங்கு நீங்கள் சந்தோஷமாக இருக்கிறீர்களா?

ஆமாம்

20. உங்களுக்கு திடமான உடம்பு உண்டா?

கிடையாது.

21. ருசி, வாசனை இவற்றைப் புரிந்துகொள்ள முடியுமா?

முடியும்

22. இறந்தவர்கள் ஆவி அந்த வீட்டின் முன் எத்தனை நாளைக்குச் சுற்றி வரும்?

15 நாட்கள்

23. முனீஸ்வரன் என்பது ஆவியா? கடவுளா?

கடவுள்

24. காட்டேரி என்பது பேயா?

ஆமாம்

25. முனீஸ்வரன் என்பதில் பாகுபாடு என்ன?

கெட்டது… நல்லது

26. ஏ பகுதியில் இருப்பவர்களைக் கூப்பிட்டால் வருவார்களா?

வர மாட்டார்கள்

27. விபத்துக்கு உள்ளானவர்கள் எந்தப் பகுதியில் இருப்பார்கள்?

எல்லாப் பகுதிகளிலும்

28. நோய்வாய்ப்பட்டவர்கள், நாள்பட இருந்தவர்கள் எந்தப் பகுதியில் இருப்பார்கள்?

பி

29. சி, டி பகுதியில் இருப்பவர்கள் நல்லவர்களா? கெட்டவர்களா?

கெட்டவர்கள்

30. தற்கொலை செய்தவர் எந்தப் பகுதி?

எங்கு வேண்டுமானாலும்

31. சி, டி-யில் இருப்பவர்கள் பேய்கள் மாதிரியா?

ஆம்

32. கெடுதல் செய்யாமல் தடுக்க உங்களால் முடியுமா?

முடியாது

33. கெடுதலை தடுக்க என்ன வழி

தெரியாது

34. மந்திரவாதிகளால் முடியுமா?

முடியாது

35. சாமி வந்து ஆடுகிறவர்கள் சாமியா, ஆவியா?

ஆவி

36. கடவுள் மனிதர்கள் மேல் வருவார்களா?

இல்லை

37. நீங்கள் காந்தி, நேரு எல்லாம் பார்த்து இருக்கிறீர்களா?

ஆமாம்

38. அவர்கள் எந்தப் பகுதியில் இருக்கிறார்கள்?

39. சி, டி பகுதியில் இருப்பவர்களைக் கூப்பிட்டால் வருவார்களா?

வரமாட்டார்கள்

40. நீங்கள் ஒருவருக்கு கெடுதல் செய்தால் தண்டனை உண்டா?

உண்டு

41. அங்கு ஜாதி, மதம் உண்டா?

இல்லை

42. மற்ற கிரகங்களைப் பார்த்ததுண்டா?

இல்லை

43. மற்ற கிரகங்களைப் பற்றி கூற முடியுமா?

இல்லை

44. அவி உலகத்தில் இருக்கின்ற ஆவிக்கு வளர்ச்சி உண்டா?

உண்டு

45. ஆவிகளுக்கு அதிவேகமாகப் போகக்கூடிய சக்தி உண்டா?

உண்டு

46. நீங்கள் இந்தக் கிண்ணத்தில் அடைபட்டு இருப்பது சந்தோஷமா? கஷ்டமா?

சந்தோஷம்

47. காலையும் மாலையும் 5-7 வரை பூஜை நேரம். கூப்பிடக் கூடாது என்கிறார்களே… உண்மையா?

ஆம்

48. கூப்பிட்டால் வருவீர்களா?

மாட்டேன்

49. பிராணிகளுக்கு தனி உலகம் உண்டா?

உண்டு

50. நீங்கள் அந்த உலகத்தைப் பார்த்து இருக்கிறீர்களா?

இல்லை

51. அதைப் பார்க்கக் கூடாது என்று கட்டளை உண்டா?

உண்டு

குறிப்பு:

* இதே மாதிரி வேற்று கிரகவாசி நம்மிடம் வந்து கேள்வி கேட்டால், பதில்கள் எவ்வாறு இருக்கும்?!

* பல பதில்கள் எங்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு அமைந்திருந்தது.

* இன்றைய சூழலில் வேறு யாரையாவது கூப்பிட்டு இதே கேள்விகளைக் கேட்டு cross-examine செய்யவேண்டும்

MTV’s ‘Cribs’

பொழுது வேகமாகப் போய்க் கொண்டிருந்த பனி மாலைப்பொழுது. சன் டிவியில் எதிர்கட்சிகள் வெளிநடப்பு செய்ததைப் பார்க்கப் பிடிக்காமல் கன்னல் திருகிக் கொண்டிருந்ததில் எம்.டிவியின் ‘க்ரிப்ஸ்‘ கிடைத்தது. தொலைக்காட்சியின் கன்னல் பட்டியலில் அடுத்தடுத்து வரும் எம்.டிவியும் வி.எச்.1-உம் குழந்தைகளுடன் பார்த்தால், அவர்களிடமிருந்து நிறையக் கேள்விகளை வரவழைக்கும். வி.எச்.1-இன் ‘தலை நூறு சூடான சீன்‘கள் பார்க்க நினைத்தாலும், பார்ப்பதை அப்படியே கடைபிடிக்க விரும்பும் சிறுவயதுப் பார்வையாளரை வைத்திருப்பதால் முடியாது. பெரும்பாலும் ‘ரியல் வோர்ல்ட்’ போன்ற அறுவைகளைப் போடுவதால் எம்.டிவியும் ஓடிப் போக வைக்கும் கன்னல்.

ஆனால், எம்.டிவியில் கூடைப்பந்து நட்சத்திரம் ஷக்கீல் ஓநீலைப் பார்த்தவுடன் ரிமோட் ஓட்டுவதை நிறுத்தினேன். பிரபலங்களின் வீடுகளை நமக்கு அறிமுகப் படுத்துகிறார்கள். அவர்களின் வரவேற்பறை, சாப்பாட்டு அறை, சமையல் உள் என்று ஆரம்பிக்கிறார்கள். படுக்கை அறையையும் விடுவதில்லை. பிரும்மாண்டம் பிரமிக்க வைத்தாலும், அவர்களின் ‘க்ளோஸெட்‘ — துணிமணி வைத்துக் கொள்ளும் அறைகள்தான் எங்களை மிரள வைத்தது. நான் இருக்கும் அபார்ட்மெண்ட் சைஸுக்கு நீள்கிறது.

பெண்களின் காலணி அறைகளுக்குள் பார்த்தால் ‘பாட்டா’ ஷோரூமுக்குள் நுழைந்த அனுபவம் ஏற்படும். அமெரிக்க ஷூ கடைகளே நாணிக் கோணி வெட்கப்பட வைக்கும் அளவு அசத்தல் கலெக்ஷன்கள்.

வீட்டுக்குள்ளேயே உடற்பயிற்சி, திரையரங்கு என்று அவரவர் விருப்பத்திற்கேற்ப அமைத்துள்ளார்கள். தோட்டங்களில் செயற்கை மலைகள், அருவிகள், என்று தொடர்கிறார்கள். வீட்டை ரொம்ப ரசனையோடு தேக்குகளாலும், சலவைக் கல்லினாலும் கலைப் பொருட்களிலும் இழைத்திருக்கிறார்கள்.

Mariah Careyயின் தல தரிசனம் இன்னும் கிட்டாவிட்டாலும், புகைப்படங்களையாவது MTV Cribs அதிகாரபூர்வ தளத்தில் பார்க்கலாம்.

ஒஸாமாவின் குகை வீடு என்று நக்கல் ஃப்ளாஷ் பதிப்பு பரவாயில்லையாக பின் லேடனை வாறுகிறது. GOYK.COM-இன் Ghetto MTV Cribs பார்ப்பது ‘உனக்கும் கீழே உள்ளவர் கோடி‘ என்கிறது.

‘ப்ளேபாய்’ மனையகத்தையும் அரகராப் போடும் வாய்ப்பைக் கொடுத்தார்கள். தசரதருக்கு மனைவிகளை எண்ணி விடலாம். ஹ்யூக் ஹெஃப்னர் (Hugh Heffner) காதலிகளை எண்ண ஐன்ஸ்டீனால் கூட முடியாது. ‘காதலர் தின’த்தன்று பரிசு கொடுத்தே சொத்து கரைந்துவிடும் போலத் தோன்றுகிறது. இந்த மாதிரி ஜலபுலா ஜல்ஸ் வீடுகளைத் தொடர்ந்து ரஸ்ஸல் சிம்மன்ஸின் (Russell Simmons) தியானம்/யோகம் செய்ய, மனம் ஒருநிலைப்பட உள்ள அறைகளையும்; அவர்களிடம் உள்ள புத்தரில் ஆரம்பித்து கிருஷ்ணர் வரை உள்ள மினி கோவில்களையும் காட்டுவார்கள். திங்கட்கிழமைதோறும் இரவு பத்து மணிக்கு இந்த நிகழ்ச்சியை பார்க்கலாம்.

அனேகரின் வசிப்பிடங்களில் வீட்டுக்குள்ளேயே நீச்சல் குளம் (வெளியில் இருந்தால் படங்கள் சுட்டு விடுவார்களே!); சினிமாஸ்கோப் சைஸ் மீன்தொட்டிகள்; குறைந்தபட்சமாய் ஆறு கார்கள்; இளமைக்காலங்களை நினைவு கூற லாலிபாப் கொடுக்கும் மெஷின்கள்; என்று ஒரே மாதிரி இருப்பது — சுதந்திரமாக என்னைப் போல் வெளியில் உலாவி அடைய முடியாததை, வீட்டுக்குள் அடைப்பட்டு சாதிக்கிறார்களோ என்னும் பச்சாதபத்தையும் கொடுத்தது.

இசைஞர்களின் வீடுகளில் அவர்கள் வாங்கிக் குவித்த இசைத்தட்டுகளையும், திரைப்பட வட்டுக்களையும் பார்த்தால் பொறாமையாக இருக்கிறது. பாத்ரூமில் கூட ஐம்பது இன்ச் டிவி வைத்திருக்கிறார்கள். நான் பார்த்த வரைக்கும் ஒருவரின் வீட்டில் கூட புத்தக அலமாரி இல்லாதது ஆச்சரியப்படவைக்கவில்லை.

ஆனால், எம்டிவி. பார்த்தால் சிறார்களிடமிருந்து விவகாரமான கேள்வி வரும் என்று சொன்னேன் அல்லவா… அன்றும் கேட்கப்பட்டேன்.

“நாம எப்ப இந்த மாதிரி வீடு வாங்கப் போறோம்?”

Official Site: MTV Cribs