Category Archives: Uncategorized

தமிழ் – ஹிந்தி – தெலுங்கு

சுஜாதா: “ஒரு தெலுங்குப் படத்துக்கான அத்தனை தேவைகளையும் பூர்த்தி செய்திருப்பதுடன், இந்திப் படம் போல ரிச்-சாக எடுத்திருக்கிறார் பிரபுதேவா!”

வழக்கம் போல் போகிற போக்கில் ‘அசால்ட்’டாக சொல்லியிருக்கிறார். அவரை ‘மென்டல்’ என்றாலும் ‘டென்ஷன்’ ஆகாமல் கவனிக்கவேண்டிய பதிவு. தெலுங்குப் படங்கள் கூட பேரை ‘ரிப்பேர்’ ஆக்காமல் காப்பாற்றுகிறது என்பது ‘ஃபீலிங்’ ஆகவேண்டிய சமாசாரம்.

சமீபத்தில் இரண்டு ஆக்ஷன் மசாலாக்களைப் பார்த்தேன். முதலில் ‘சத்ரபதி’. இரண்டாவது ஹிந்தி ‘முஸாஃபிர்’.

தமிழோவியம் எல்லாம் போதிய அளவு எச்சரித்தாலும் பார்த்த படம். ‘இது ஒரு மனிதனின் கதை’யில் வந்த காட்சி நினைவுக்கு வந்து போனது. தியாகு (தானே?) கிட்டத்தட்ட பூரணமாக தேறியபின் “நீங்கள் இனிமே மதுவே அருந்தக் கூடாது… எனினும், ஒரு ‘பெக்’ அடிக்கறீங்களா?” என்று டாக்டர் ஆசை காட்டுவார். நோயாளி ஹீரோவும் “சரி’ என்பார்.

உடனே, ஐ.சி.யூவிற்குத் தேவையான ஐ.வி. திரவங்கள், ஈ.சி.ஜி. என்று லாகிரி அயிட்டங்கள் அறைக்குள் வந்து சேரும். தியாகுவும் ட்ரின்க்ஸ் (அப்பாடா…. சுஜாதா உபயோகித்த இன்னொரு வார்த்தையும் கொண்டு வந்தாச்சு ;-)) எடுக்க…. நிலைமை படு மோசமாகும்.

இவ்வாறு தலைவலி, திருகுவலி சித்திரவதைக்கப் போகும் படத்தைப் பார்த்தவுடன் antidote வைத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு ‘முஸாஃபிர்‘ அமைந்தது.

‘நம்ம ஊர் படம்தானே…. இப்படித்தானே போகும்’ என்னும் முன்னெச்சரிக்கையுடன் கையில் இந்தியா டுடேவை வைத்துக் கொண்டு ஓட விட்டேன். ஆங்கிலப் படங்களுக்கு நிகரான காமிரா கோணங்கள் புத்தகத்தை மூட வைத்தது. சஞ்சய் தத்தின் சத்யராஜ் போன்ற நக்கல்கள் இன்னும் கொஞ்சம் சிரத்தையை ஏற்படுத்தியது.

Musafir படத்தின் கதை எல்லாம் சொல்லி உங்களின் அனுபவத்தைக் கெடுக்க விரும்பவில்லை. ஃப்ளாஷ்பேக் சொல்லும் வித்தையில் வெறுமனே ‘கறுப்பு-வெள்ளை’/கலர் என்று எல்லாம் வித்தியாசம் காட்டுகிறேன் என்று பந்தா இல்லை. இரண்டு பேரின் பார்வையை இத்தாலிய படம் போல் காட்டுகிறேன் என்று எல்லாம் சிரமப்படாமல் மினுக்கிறார்கள்.

ஹீரோயிஸத்தைக் கூட அதற்குத் தேவையான கிண்டலுடன் காட்டுகிறார்கள். பாடல்கள் எல்லாம் இடையூறாக இருந்தாலும், படத்துடன் பொருந்திப் போக வெகுவாக சிரத்தையெடுத்திருக்கிறது. காட்சி மாற்றங்களில் பார்வையாளனின் புத்திசாலித்தனத்தை சோதிக்காமல் நகர்த்தல். உரையாடல்களில் வளவளா இல்லாத கூர்மை.

கிழட்டு கோவாகாரராக முன்னாள் விமர்சகர் — இன்னாள் இயக்குநர் மஹேஷ் மஞ்சரேகர். தீர்க்கமாக கொள்ளையடிக்கும் உள்ளூர் போலீஸாக ஆதித்யா பன்சோலி. பாவம் வரவைக்கும் வில்லனாக அனில் கபூர். அப்புறம் அப்பிராணி போல் இருக்கும் பெயர் நினைவில் இல்லாத இரண்டு அரைகுறை நாயகிகள்.

தமிழ்ப் படங்களுக்கும் ஹிந்திப் படங்களுக்கும் வித்தியாசம் நிறைய என்பதை உணர முடிகிறது. ஹீரோ எப்பொழுதுமே ஜெயிப்பதில்லை. கதாபாத்திரத்துக்கு நாற்பது வயதானால் அதற்கேற்ற தோற்றம் உள்ளவர்தான் கதாநாயகர். இமேஜுக்காக பதினெட்டாக்கிக் கொள்வதில்லை. நூறு சதவீதம் கெட்டவன் என்று யாருமே இல்லை. வில்லன் உட்பட அனைவரும் தேவைக்கேற்ப அவ்வப்போது காமெடி உதிர்க்கலாம்.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக நாயகிகளுக்கு ஹிந்தியில் ஃபேஷன் சென்ஸ் அதிகம். கச்சிதமாக வருகிறார்கள். எசகு பிசகாக ஆடுகிறார்கள். ஆங்கிலப் படங்களில் ‘R’ முத்திரைக்கு இணையாக பாலுறவு காட்சிகள் வருகிறது.

இதற்கும் மேலாக நவநாகரிக ஆண்களும் பெண்களும் அழகாக சுத்தமான ஹிந்தியில் பேசிக் கொள்கிறார்கள். தலைப்பையும் ஆங்கிலத்தில்தான் வைப்பேன் என்று வறட்டு ஜம்பம் எதுவும் செய்வதில்லை. ஆனால், தயாரிப்பில் ஹாலிவுட்டை சர்வசாதாரணமாக தொடுகிறார்கள்.

ஹிந்திக்கும் தமிழுக்கும் ‘உருப்படியான’ சினிமாவில் டயானாவுக்கும் சார்லஸுக்கும் உள்ள தூரம்! Probably so close… yet, verrrry farrrr!

Madurai Thamizh Peragarathi – Dictionary in Tamil …

Madurai Thamizh Peragarathi – Dictionary in Tamil Posted by Hello

Pooja – Jay Jay & Attagasam 

Pooja – Jay Jay & Attagasam Posted by Hello

Tamarin Monkey 

Tamarin Monkey Posted by Hello

Don’t Worry Be Happy! 

Don’t Worry Be Happy! Posted by Hello

Daily Thanthi – Word Games 

Daily Thanthi – Word Games Posted by Hello

பதினைந்து – இராணுவ வீரன் – குறும்படம்

கல்கி: ஜவான்கள் சிலர் பயணம் செய்த ரயில் பெட்டியில் ஐந்து பேர் ரிசர்வேஷன் இல்லாமல் ஏறியிருக்கிறார்கள். இந்த ஐந்து பேரையும் ரயிலிலிருந்து பலவந்தமாக வெளியே தள்ளியிருக்கிறார்கள் அந்த ஜவான்கள். பக்கத்தில் ஓடிய தண்டவாளத்தில் அவர்கள் விழ, விரைந்து வந்துகொண்டிருந்த மற்றொரு ரயில் அவர்களை அரைத்துக் கொன்றுவிட்டது!

குடிமக்களுக்குப் பாதுகாப்பாக இருக்க வேண்டிய ராணுவ வீரர்கள்தான் இவ்வாறு அரக்கத்தனமாக நடந்து கொண்டிருக்கிறார்கள். பிளாட்ஃபாரத்திலாவது அந்தப் பயணிகளை இறக்கி விட்டிருக்கக் கூடாதா? மனித உயிர்களைத் துச்சமாக மதிக்கும் போக்கு அதிகரித்துவிட்டது!

ஆந்திராவில் ஆட்சியிலிருக்கும் காங்கிரஸ் முதல்வர், காவல் துறையில் பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையில் தமது மகனின் பெயர் இடம் பெற்றிருக்கிறது என்று தெரிந்ததும் வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற சம்மதித்திருக்கிறார்.



ஆறாம்திணை — ஏகலைவன்: சமீப காலங்களாக குறும்படத்திற்கான வீச்சு தமிழ்சூழலில் அதிகமாகக் காணப்படுகின்றன. சூல் குறும்பட அமைப்பும், இண்டர்நேஷ்னல் சினி அப்ரிசியேஷன் ஃபாரமும் இணைந்து நடத்திய குறும்பட திரையிடலில் அந்த வீச்சை கண்கூடாகக் காண முடிந்தது. திரைப்படச் சங்கங்கள் தமிழ்ச் சூழலில் முதன் முதலாக குறும்படத்தை மட்டும் திரையிடத் துவங்கியிருக்கிறது. இது ஒரு நல்ல துவக்கமாக அமைந்திருக்கிறது. இந்த குறும்பட விழாவில் அடையாளம் (அம்ஜத் மீரா அகிலன்), பரமபதம் (பிரபு ராதாகிருஷ்ணன்), பஞ்ச(ம்)பூதம் (முத்துக் குமார்), நானும் (மாமல்லன்), கலர்ஸ் (விஜய் சங்கர்) என்கிற ஐந்து குறும்படங்கள் திரையிடப்பட்டன.

பரமபதம் ஒரு இளைஞனது தேடலைச் சொல்கிறது. ஒரு அறிவு ஜீவிக்கான தோற்றத்துடன் இருக்கிற அந்த நபரின் தேடல் இறுதியில் காமத்தில் அடங்கி விடுகிறது. அவனது தேடல் எதுவென்று தெளிவாகச் சொல்லாமல் காமத்திலேயே அடங்கிப் போவதாக காட்டியிருக்கிறது. பஞ்ச பூதத்தில் தண்ணீர் வருவதற்கான குறியீடாக பிரசவ வேதனையைக் காட்டுகிறது. இந்த ஐந்து படங்களில் பிந்தைய இரண்டு படங்கள் பார்வையாளர்களை பெரிதும் ஈர்த்தது. ஒன்று பார்வையற்ற குழந்தையின் நிறத்திற்கான தேடல். கலர்ஸ் என்கிற இந்தக் குறும்படம் தமிழ்ச் சூழலில் ஒரு மிகச்சிறந்த முயற்சியாகவே எனக்குப் படுகிறது

இந்த விழாவில் பெரிதும் ஈர்த்த, பாராட்டுப் பெற்ற மாமல்லனின் ‘நானும்’ என்கிற குறும்படம் மிக அதிக கரகோஷம் பெற்றது.

உதவி இயக்குநராக சேர வந்து இரண்டு வருஷம் கோடம்பாக்கத்தில் இருந்து மோதிவிட்டு சொந்த ஊருக்கு போய் விடுகிறான். பின்னர் மீண்டும் அசோக் நகரில் இருக்கும் தன் சக உதவி இயக்குனர் நண்பனை தேடி வருவதில் படம் தொடங்குகிறது. மீண்டும் தன் பழைய இயக்குனரை தேடிப்போய் வாய்ப்பு கேட்கிறான். காத்திருக்கும் நேரத்தில் வயிற்று வலி எடுத்து மலம் கழிக்க முடியாமல் அவதியுறுகிறான். மீண்டும் சென்று இயக்குனரை பார்க்கும்போது, அவர் திட்டி அனுப்பிவிடுகிறார். சோர்வுற்றிருக்கும்போது அறை நண்பன் அழைத்துச் சென்று சாப்பாடு வாங்கிக் கொடுத்து, தீர்த்தமும் நடக்கிறது. அறை நண்பன் ‘மப்பில்’ சினிமாவின் யதார்த்தத்தை விவரிக்கிறான். ‘நல்லபடம்’ என்பது இங்கு முக்கியமல்ல. வியாபாரம் தான், ஜெயித்துக் காட்டுவதுதான் முக்கியம். இன்றைய சினிமா உலகத்துடன் சமரசம் செய்து கொள்’ என்கிறான். இவனும் அவனைப் போலவே மாறி எப்படி சினிமாவில் கரைகிறான் என்பதோடு படம் முடிகிறது.



தினத்தந்தி: அருகே உள்ள கட்டங்களில் கொடுக்கப்பட்டுள்ள எழுத்துகளை எப்படியும் பயன்படுத்தலாம். ஆனால் குறைந்தது 15 தமிழ் வார்த்தைகளையாவது கண்டுபிடிக்க வேண்டும்.

(உதாரணமாக :கூட்டணி, ஆடு…) அதிக வார்த்தைகளை கண்டுபிடித்து எழுதுபவர்களுக்கு ரொக்கப் பரிசு ரூ. 500 வழங்கப்படும். ஒன்றுக்கு மேற்பட்ட வாசகர்கள் சரியான விëடை எழுதி இருந்தால் அவர்களுக்கு பரிசு தொகை பகிர்ந்து அளிக்கப்படும். விடைகளை எழுதி தபால் கவரில் வைத்து ஒரு வார காலத்துக்குள் அனுப்ப வேண்டும்.

Kanji Mutt – Police 

Kanji Mutt – Police Posted by Hello

உருவாரம்

பிம்பங்களை சுட்டினால் தொலைதொடர் செய்திகள் கிட்டும் :->

ப்ளூ க்ரஷ் நாயகி: பாஸ்டன் க்ளோப்

டெஸ்பரேட் ஹவுஸ்வைவ்ஸ் : ஈவா

ஸ்வட்தேஸ் நாயகி : விமர்சனங்கள்

ஐ… ரோபோ: டாம் ப்ராடி

டீனேஜ் பசங்களுக்கு மட்டும்: ‘ப்ராக்டிஸ்’ புகழ் லாரா ஃப்ளின் பாய்ல்

கொழுப்பாச்சி

வாரே வாரே

வாராரே

அட தள்ளு

வாரே வாரே

வாராரே

ஒத்துடா

வாரே வாரே

வாராரே

அடங்குடா

நீ எந்த ஊரு

நான் எந்த ஊரு

முகவரி தேவையில்ல

இல்ல இல்ல

நீ எந்த உறவு

நான் என்ன உறவு

சொந்தத்தில் அர்த்தம் இல்ல

இல்ல இல்ல

தொப்புள் கொடி உறவா

இல்ல இல்ல

அல்ல

கட்சிக்கொடி உறவா

இல்ல இல்ல

ஹே

மேட்டுக்குடி உறவா

இல்ல இல்ல

அட

கள்ளு கட உறவா

இல்லவே இல்ல

உன்ன யாரோ பெத்திருக்க

என்னை யாரோ பெத்திருக்க

ஆனாலும்

நீயும் நானும்

அண்ணன் தம்பிடா

—————

சாமி வரம் தந்திட்டா

கொட்டும் மழை கொட்டும்டா

ஏழை மனம் பொங்கும்டா

நான் அய்யனாரு பக்தண்டா

மண்ண நம்பி வேரு

விண்ண நம்பி ஆறு

என்ன நம்பி யாரும்

கெட்டதில்ல பாரு

உனக்கொரு பேரு

எனக்கொரு பேரு

ஒண்ணு சேர்த்து பாரு

இந்தியன்னு பேரு

பொறப்பும் இறப்பும் அவன் கையிலே

நாம வாழும் வாழ்க்கை நம்ம கையிலே

—————

அம்மை அப்பன் தானடா

ஓ…

நம்மையாளும் சாமிடா

கருவற தோழிடா

ஓ…

நம்ம உயிர் நாடிடா

கண்ணப் பொத்தி வாழு

காதப் பொத்தி வாழு

வாயப் பொத்தி வாழு

நம்ம காந்தி மொழி கேளு

ஓ…

ஆத்திகம்தான் மூச்சு

சத்தியம்தான் பேச்சு

ஆசை எல்லாம் போச்சு

நம்ம புத்த கொடி ஏத்து

ஓ…

அட பொறப்பும் இறப்பும் அவன் கையிலே

நாம வாழும் வாழ்க்கை நம்ம கையிலே

Music India OnLine – Thirupachi