Category Archives: Uncategorized

தீராநதி — ஜன. 2004

தபசி

எல்லாம் பார்த்துவிட்டேன்
என்று சொல்வதில்
எந்த அர்த்தமில்லை
எல்லாம் பார்த்துக் கொண்டிருப்பதில்தான்
எல்லா அர்த்தமும்

புரிதலின் வழிமுறை – மனுஷ்யபுத்திரன்

அதை
அவ்வளவுதான்
புரிந்து கொள்ள முடிந்தது
நண்பர்களுக்கு
எதிரியே
உன் கைகளை முத்தமிட அனுமதி
என் நண்பர்களை விடவும்
நீ அதைப் புரிந்து கொண்டதற்கு

அசோகமித்திரன்

‘தி குருசிபிள்’ என்ற நாடகத்தில் தனுஷ்கோடிதான் முக்கிய ஆண் பாத்திரம். நாற்பது ஆண்டுகள் முன்பு அமெரிக்க நாடகாசிரியர் ஆர்தர் மில்லர் எழுதிய இந்த நாடகம் இன்று உலகின் பல நாடுகளின் நிலவரத்துக்குப் பொருந்தும். பொய்க்கருத்துகளை உலவ விட்டே வேண்டாதவரைச் சித்திரவதை செய்து அழிக்கவும் செய்வதுதான் நாடகத்தின் மையப் பொருள்.

ராஜேந்திரகுமார் இளைஞனாக இருந்தபோது அப்போது பிரசுரமாயிருந்த என் நான்கைந்து கதைகளை வீட்டுக்கு எடுத்துச் சென்றார். அவற்றைப் படித்தாரா என்று தெரியாது. அவர் படிக்கவில்லை என்றுதான் நினைக்கிறேன். அந்தக் கதைகள் தொலைந்து போய்விட்டன. இது அவருடைய விமரிசனம் என்று கூட நினைத்துக் கொள்ளலாம்.

Gates Project – Central Park – NY (c) New York Tim…

Gates Project – Central Park – NY (c) New York Times Posted by Hello

Madras – 1 : Singaara Chennai (c) princeroy.org/ch…

Madras – 1 : Singaara Chennai (c) princeroy.org/chennai Posted by Hello

Gates Project – Central Park – NY (c) New York Tim…

Gates Project – Central Park – NY (c) New York Times Posted by Hello

Gates Project Saffron Welcomes- Central Park – NY …

Gates Project Saffron Welcomes- Central Park – NY (c) New York Times Posted by Hello

Gates Project – Central Park – NY (c) New York Tim…

Gates Project – Central Park – NY (c) New York Times Posted by Hello

Madras – 1 : Singaara Chennai (c) princeroy.org/ch…

Madras – 1 : Singaara Chennai (c) princeroy.org/chennai Posted by Hello

நியு யார்க் டைம்ஸ்

ஆர்தர் மில்லரின் இரங்கல் ஆரம்பத்தில் ‘காலையில் இறங்கி வந்து, பென்சிலை எடுத்துவைத்துக் கொண்டு, யோசிக்க முயல…‘ என்னும் மேற்கோளுடன் ஆரம்பிக்கிறார் பாப் ஹெர்பர்ட். சிந்தனாவதிகளின் இழப்பை எடுத்துச் சொல்லும் பதிவு.

அட… நாம கூட காலையில் இங்கு வந்தவுடன், ப்ளாகர் பெட்டியை திறந்து வைத்துக் கொண்டு சிந்தனையை தட்டிவிடுகிறோமே என்று நினைத்தவுடன், நியு யார்க் டைம்ஸ் என்னும் அச்சு ஊடகம் தலையில் கொட்டியது. வலைப் பதிவர்களின் பேனா கத்தி வீச்சினால் பதவியிழந்த சி.என்.என். செய்தி மேலாளரை பின் தொடர்ந்து அலசியிருந்தார்கள். ‘பொறுப்பு கிடையாதா!? மெய் அலசி உணராமல் தலைகளை வெட்டி வீழ்த்துபவர்களா!? சுதந்திரம் என்னும் பம்மாத்து காட்டித் திரியும் ஓநாய் கூட்டங்களா!?‘ என்று கருத்து சொல்ல விட்டிருக்கிறார்கள்.

வலைப்பதிவில் மட்டுமல்ல… அனைத்து ஊடகங்களிலும் ‘கதை விடுபவர்கள்’ அதிகரித்துவிட்டார் என்கிறார் ஹாரி ஃப்ரான்க்ஃபர்ட். பரிசலில் வினோபா முன்பொருமுறை குறிப்பிட்டது போல் அத்தியாவசியமாக அலப்ப வேண்டிய அவசியம் நமக்கு இருக்கிறது. மேம்போக்காக பேசிச் சொல்வது, ஆழமாக சிந்திக்க மறுப்பது, பொய்யர்களுக்கு இருக்கும் தர்க்க விவாத நெறிகளைக் கூட (இத்தகையவர்கள்) அலட்சியப் படுத்துவது என்று போட்டுத் தாக்குகிறார்.

ஈராக்கில் தேர்தல் முடிவுகளை அலசத் தொடங்கியிருக்கிறார்கள். எங்கு பார்த்தாலும் ஷியா வாக்கு வங்கிகள் வெற்றி பெற்றதை முன்னிறுத்துகின்றன. வாக்குசாவடி பக்கமே எட்டிப் பார்க்காத சன்னி-களை ப்ளோ-அப் வேண்டாம். ஆறு பாயிண்ட் எழுத்துருவில் நுணுக்கி விடுகிறார்கள். யார் ஜெயித்தாலும் தொடர்வது அமெரிக்க ஆட்சிதான் என்பதும், பொருளாதாரத்தை சுய பரிபாலனம் செய்ய அனுமதிக்காததையும், பெரிதாக கண்டுகொள்ளாமல், ‘எது சுதந்திரம்; எப்படி விடுதலை‘ என்று வார்த்தை ஆராய்ச்சி நடத்த இவர்களுக்கு நிறைய மேட்டர் கிடைக்கிறது.

நியு யார்க்கில்தான் தமிழ் வலைப்பதிவர்கள் அதிகம் என்று நினைக்கிறேன். மனக்காட்சியில் தோன்றுபவர்களில் பிகேயெஸ், சீமாச்சு, அருண், தமிழோவியம் கணேஷ் சந்திரா என்று சிலர்தான் குதித்தார்கள். செண்ட்ரல் பார்க் பக்கம் யாராவது சென்றால் கேட்ஸ் குறித்த நேரடி வர்ணணை கிடைக்கலாம். க்ரிஸ்டோவும் ழான் க்ளாடும் 7,500 நுழைவாயில்களை அமைத்திருக்கிறார்கள். இவர்களின் முந்தைய கலைப் படைப்புகளை பார்க்கும்போது வாய் பிளக்கிறேன்.

நுழைவுச் சீட்டு, ஆண்டுச் சந்தா என்றெல்லாம் காசு கறக்காமல், அரசிடமிருந்து நயாபைசா கை வைக்காமல், பொதுமக்களிடமிருந்தும் நன்கொடை வாங்காமல் இவ்வளவு பெரிய, ரம்மியமான ஆக்கங்களை செய்ய ரொம்பப் பெரிய மனசு வேண்டும். நம்ம ஊராக இருந்தால் மஞ்சக் கொடி, சொர்க்க வாசல், கல்கி அவதாரம் என்று நிறைய கற்பனையைத் தட்ட விட்டிருப்பார்கள்.

‘திட்டிவாசல்’ குறித்து டைம்ஸ் விரிவாக எழுதி வருகிறார்கள். வலைப்பதிவாளர்களும் வழக்கம்போல் பதிவொன்றைத் தொடங்கி விட்டார்கள்.

மேலும் தகவல்களுக்கு: The Gates

‘இச்’ இளகல்கள்

ஜூனியர் விகடன்: “திருமாவளவனை முதல்வர் ஆக்குவேன் என்றும் வீர வசனம் பேசுகிறார் ராமதாஸ். இதற்கு முன்பு பலருக்கும் இதேபோல் வீர வசனம் பேசி ‘அல்வா’ கொடுத்தவர்தான் இவர். இப்போது அவரது ‘அல்வா’ லிஸ்ட்டில் விழுந்திருக்கிறார் திருமாவளவன்!” — ‘மக்கள் தமிழ் தேசம்’ தலைவர் ராஜ கண்ணப்பன்.

அரசியல் அல்வா இருக்கட்டும். நேற்றைய குல்கந்து அல்வா தினம் இனிதே முடிந்திருக்கும் நேரம் இது. ரோஜாப் பூ வாங்கித் தராவிட்டால் காதலே இல்லை. கூடவே இரண்டு மாச சம்பளத்தைக் கொண்டு வைரக் கல் பரிசு வேண்டும். ஆதர்ச அமெரிக்க காதலன்/புருஷன் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று நிர்ணயித்திருக்கிறார்கள்.

ஹவாயில் வசித்தால் மீன் பிடிக்கும் வேட்கை வேண்டும் என்பது போல் அமெரிக்க வாழ் இந்தியக்குடிகளையும் இந்தப் பழக்கவழக்கங்கள் விருப்பமுடனேயே எட்டியுள்ளது. கண்மூடித்தனமான வரலஷ்மி விரதத்திற்கும், கர்வாசவுத்திற்கும், கணுப்பொடி வைத்தலுக்கும் பர்த்தியாக ‘காதலர் தினம்‘ தோன்றியதும் நன்மைக்கே.

நாள் முழுக்கப் பட்டினி இருப்பது, அதன்பின் நிலாவுக்கு காத்திருத்தலும் இல்லை. கார்போஹைட்ரேட் நிரம்பி வழியும் அடைகள் இல்லை. சீவிக்காத காக்கைகளுக்காக வெள்ளைப் பனியின் மேல் பச்சை இலை போட்டு கலர் கலராக சாதம் உருட்டுவதும் தேவையில்லையே… உருப்படியான மென்வட்டுகள், வாழ்நாள் முழுக்க கூடவே வரக்கூடிய அணிகலன்கள், வசந்த கால புத்தாடைகள், பல் கூசவைக்கும் சாக்லெட்டுகள், ஜேம்ஸ் வசந்தன் விரும்பும் உள்ளாடைகள் என்று குறிகிய கால சிற்றின்பத்துக்கும் நீண்ட நாள் பேரின்பத்துக்கும் வழிவகுக்கும் ‘அன்பர் தின’ நடைமுறைகள் வரவேற்கத்தக்கதுதான்.

தேவதைகள் பெருந்தேவிகள் மோகினிப் பிசாசுகள் — விக்ரமாதித்யன்:

ஒருத்தி / இன்னொருத்தி

ஒருத்திபோல
தெரிந்தாள் இன்னொருத்தி
ஒருத்திபோல
ஆவாளோ இன்னொருத்தி
இன்னொருத்தி புதுமையாகலாம்
ஒருத்திதான் உரிமையாவாள்.
இன்னொருத்தி கைப்பையை
எடுத்துப்பார்த்ததுண்டா நீ
ஒருத்தி இடத்தை
இட்டு நிரப்பமுடியுமா இன்னொருத்தி

ஒருத்தி அருமை
இன்னொருத்தியிடம்

(வெளியீடு: காவ்யா. விலை: ரூ.100)

எங்காவது பராக்கு பார்த்துவிட்டு, இது போன்ற கவிதைகளைக் காட்டி அசத்திய காலம் (அண்ணா)மலையேறி செல்வி முடிந்து திருமதியானவுடன் ப்ராக்டிலாகி விட்டது. தற்போதைக்கு, ரயிலைத் தவறவிட்டால் கீழ்க்கண்ட இளகலை எடுத்துவிட்டு சமாளிக்கலாம்.

ஆனந்த விகடன்
உனக்கும் எனக்கும்
பிடித்த பாடல்
தேநீர்க் கடையில்
பாடிக் கொண்டிருக்கிறது

கடைசி பேருந்தையும்
விட்டு விட்டு
கேட்டுக்
கொண்டிருக்கிறது
காதல்!
— நா.முத்துக்குமார்

எஸ். என். நாகராஜன் – ஒரு சந்திப்பு

நன்றி: தமிழோவியம்.காம்

(1995 ஆண்டு காலச்சுவடு இதழ் எண் 10ல் இடம்பெற்ற எஸ்.என் நாகராஜன் நேர்காணல் 1993ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது. அந்தப் பேட்டியில் இருந்து காந்தி குறித்த அவருடைய கருத்துக்கள்)

காந்தியினுடைய தர்மகர்த்தா ராஜ்யத்தை நீங்க பார்த்தீங்கன்னா அவர் மேல் சாதி ஆதிக்கத்தைத்தான் விரும்பராருன்னு தெரியும். காந்தியைப் பற்றி இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் ஒரு நூல் எழுதியிருக்காரு. Gandhi and his Ismன்னு சொல்லி. அதுல காந்தி சொன்னதை முக்கியமா போடறாரு.

‘ஆங்கில ஏகாதிபத்தியம் அழிந்துவிட்டால் என்னுடைய கனவு எல்லாம் அழிந்துவிடும்’.

அப்ப ஏகாதிபத்தியம் ஒழியக்கூடாதுங்கறதுதான் அவரோட அபிப்பிராயம். அதே ஏகாதிபத்தியத்தை மாவோ எப்படிப் பார்த்தாரு? ஏகாதிபத்தியத்தை ஒழிச்சாத்தான் மக்கள் வாழ முடியுங்கறது அவருடைய நிலைப்பாடு. காந்தி தாழ்த்தப்பட்டவங்கள எப்படிப் பார்க்கறாரு? அடுத்தாப்ல உடலை எப்படிப் பார்க்கறாரு? பெண்களை எப்படிப் பார்க்கறாரு? இந்திய பண்பாட்டுல ஆன்மிகவாதம் சாதாரண மக்களையும் பெண்களையும் உடலையும் ஒரே தரத்தில்தான் வைக்கின்றது. அந்த மூணுமே மயக்கத்தை உருவாக்கக்கூடியதுங்கறதுதான் நம் ஆன்மீகத்தின் ஆதிக்கக் கருத்து. காந்தியினுடைய அணுகுமுறை துறவியினுடைய அணுகுமுறை. இறுதியில் துறவிக்கோலம் போலியாகத்தான் முடியும். இதற்கு காந்தியும் விதிவிலக்கல்ல. உடலை வருத்திக்கறாரு. ஆயுதத்தை எடுக்காதேங்கறாரு. சௌரி சௌராவிலே அவர் எடுத்த முடிவு அதுதான். ஆயுதத்தை எடுத்தா ஆங்கில பூர்ஷ்வா மட்டும் ஒழியமாட்டான். நம் பூர்ஷ்வாவும் ஒழிஞ்சுடுவான். காந்தி அதற்குத் தயாராக இல்லை. ஆக காந்தி ஒரு பூர்ஷ்வா வர்க்கத்தோட பிரதிநிதி. காந்திக்கு மக்கள் அதிகாரத்தைப் பிடிக்கணும்னு இல்லை. அவருக்கு மேல்தட்டு ஜாதியோட நல்ல ஆட்சி அமையணும்னுதான் விருப்பம்.