Category Archives: Uncategorized

Ship’s Golf 

Ship’s Golf Posted by Hello

நக்கீரன்

nakkheeranbiweekly.com: சுனாமியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் உள்ள குழந்தைகளிடம் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட எந்தக் கல்வி நிறுவனமும் கல்விக் கட்டணம், சிறப்புக் கட்டணம், தேர்வுக் கட்டணம் உள்ளிட்ட எந்த கட்டணமும் வாங்கக்கூடாது என தமிழக அரசின் அரசாணை எண் 31/2005 தெரிவிக்கிறது. அனால், ஆந்த உத்தரவை மீறி தனியார் பள்ளிகள், சுனாமியால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் குழந்தைகளிடம் பணம் கட்டச் சொல்லி நெருக்கடி தருகின்றன.


இனிய உதயம்: சிவந்த நிலம் :: நிமிர்ந்த வயல்கள் — கிஷன் சந்தர் (தமிழில்: சுரா)

காலச்சுவடு ஏப். 05

Sify.com ::

* கம்யூனிசமும் மலையாளிகளும் :: சக்கரியா
அதிகார நாற்காலிகளுடன் பழகியதோடு கம்யூனிசத்தின் இலட்சியத் தூய்மை காணாமற் போயிற்று. அதை உருவாக்க உதவிய முற்போக்குக் கேரளத்திலேயே அது ஒரு சனாதனப் பிரிவாக மாறியது. கிராமத் தொழிலாளிகளிடமிருந்தும் ஏழை விவசாயிகளிடமிருந்தும் கம்யூனிசத்தின் அக்கறை மாறி, சம்பளக்காரர்களான வெள்ளைக் காலர் ஊழியர்களிடம் மையங்கொண்டது.

* விவாதம்: வகாபியிசமும் சூஃபியிசமும்
சூபிகள் என்று பின்னர் அறியப்பட்ட முஸ்லிம் ஞானவான்கள் இந்தியாவில் இஸ்லாமைப் போதிக்க ஆரம்பித்தார்கள். ஆனால் வகாபிகள் என்று அறியப்பட்டவர்கள் ஏகத்துவத்தை அதிகமாக வலியுறுத்துவதாகக் கூறிக்கொண்டு சில பத்தாண்டுகளுக்கு முன் இந்தியாவில் அறிமுகமானார்கள்.

* உரைப் பதிவு: கவிதை என்னும் விந்தை :: சுந்தர ராமசாமி
அனுபவம் எப்படிப் படைப்பாக மாறுகிறது? ஏன் அது சில நேரங்களில் ஆற்றல் பெறுகிறது? பல நேரங்களில் ஏன் ஆற்றல் பெறாமல்போகிறது? சில கவிதைகளைப் படிக்கத் தொடங்கியதுமே அது விருப்பமின்மையையும் அலுப்பையும் ஏற்படுத்துகிறது. வேறு சில கவிதைகளை எத்தனை முறை படித்தாலும் அவை அலுப்பை ஏற்படுத்துவதில்லை.

* தலையங்கம்: ஜனநாயகத்தைத் துறக்காதீர்கள்
அரசியல் சந்தர்ப்பவாதத்தை ஊக்குவிப்பது, அதிகாரத்தைக் கைப்பற்ற எதையும் செய்வது என்பவை உடனடியாகச் சில லாபங்களைப் பெற்றுத் தரலாம். ஆனால் அது உருவாக்கும் அரசியல் பண்பாடு ஜனநாயகத்தின் அடிப்படையை அரித்துவிடும். மதவாதத்திற்கான மாற்று, ஜனநாயகமே தவிர அதிகாரத்துவம் அல்ல. இதை இடதுசாரிகளும் காங்கிரசின் ஏனைய கூட்டாளிகளும் உணர்ந்ததாகத் தெரியவில்லை.

* அகாடமிகளின் விருதுகள் :: அ ராமசாமி
பிராமண எதிர்ப்பு, நவீனத்துவ எதிர்ப்பு என்னும் இரண்டும் கைவரப்பெற்ற ஒரு குழு இப்பொழுது அதிகாரத்திலிருக்கிறது. எனவே அவர்களின் ஆதரவாளர்களும் அவர்களை ஆதரிப்பவர்களும் குஷி அடைவது நடந்துகொண்டுதான் இருக்கும்.

* தூரிகை மொழி: வண்ணங்களில் ஒளியும் நிலப்பரப்புகள்
அரூப ஓவியங்களில் பொதுவாக நமக்குக் கிடைக்கக் கூடிய அனுபவத்தை ரமேஷின் ஓவியங்கள் தருவதில்லை. அது வேறு விதமான அனுபவம். நமக்குப் பரிச்சயமான ஒரு காட்சியை, அல்லது பல காட்சிகளை, மனத்தில் தோன்ற வைத்து, இந்த ஓவியங்கள் காட்டுவது அவற்றைத்தானோ என்று நம்மை நினைக்கச் செய்யும் தந்திரத்தை ரமேஷ் கையாள்கிறார்.

* பெரியார்: புதிய பார்வைக்கான அவசியம்
சில வாதங்களும் எதிர்வினைகளும் பெரியாரின் சிந்தனைகளை, அவர் வாழ்ந்த காலத்தின் சமூக, கலாச்சார, பொருளாதார, அரசியல் சூழலின் தன்மையோடு பொருத்திப் பார்க்கும் ஆய்வு நோக்கை முற்றிலும் மழுங்கடிக்கக் கூடியவை.

* அறிவுஜீவிகளின் ஆழ்மனத்தில் என்ன இருக்கிறது?
பெரியார் மீதான மறுவாசிப்பைத் தொடர்ந்து ‘மறுப்புகள்’ என்ற பெயரில் வெளிவந்துகொண்டிருக்கும் கட்டுரைகளும் கடிதங்களும் இந்து ஆழ்மனத்தில் என்ன இருக்கிறது என்பதனைத் தெளிவுபடுத்துவதாகவே இருக்கின்றன.

* வெற்றுத் தலைகளின் பெருக்கம் :: களந்தை பீர் முகம்மது
பாகிஸ்தான் ஓர் இஸ்லாமிய நாடாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இஸ்லாம் வகுத்த நெறிமுறைகளின்படியும் குர்ஆன் வலியுறுத்தும் சமூக ஒழுங்குகளின்படியும் ‘ஒரு முஸ்லிம் நடிகை’ என்கிற சமூக அந்தஸ்து ஒன்று இருக்கவே இருக்காது. ஓர் இஸ்லாமிய நாட்டில் இஸ்லாமிய மார்க்கத்திற்கு விரோதமான செயல்களைப் புரிந்தபடியே, தான் வாழ்வதற்கான ஒரு பாதுகாப்பை ஒருவர் கோரிப் பெறவும் வழியில்லை.

* அதிநுண் நுட்பத்தின் சின்னஞ்சிறு உலகம் :: வெங்கட்ரமணன்
நுண் தொழில்நுட்பத்தில் பொருள்கள் அடிப்படை அலகுகளான அணுக்கள் மற்றும் மூலக்கூறுகளைக் கொண்டு கட்டியெழுப்பப்படுகின்றன. இந்தச் சின்னஞ்சிறு உலகம் வித்தியாசமானது, தீராத அலைச்சலைக் கொண்டது.

* பத்திரிகைச் சுதந்திரமும் பத்திரிகைத் தர்மமும்
பத்திரிகைச் சுதந்திரமும் பத்திரிகைத் தர்மமும் ஒன்றுக்கொன்று எதிரானதா? அவற்றின் எல்லைகள் என்ன? இரண்டும் சந்தித்துக்கொள்கிற அல்லது மோதிக்கொள்கிற இடம் எது?

* கோணங்கள்: எது அவமானம்? :: கண்ணன்
நரேந்திர மோடி போன்ற ஓர் அரசியல்வாதி தொடர்ந்து பதவியில் இருப்பது நமக்கு அவமானம். இந்த அவமானத்தைப் பல ஆண்டுகளாக சகித்துக்கொண்டிருக்கும் நமது அரசு அமைப்புக்கு அமெரிக்காவின் நடவடிக்கை அவமானமாகத் தெரிவது நகைப்புக்குரியது.

* பத்துக் கவிஞர்களின் பன்னிரண்டு கவிதைகள்

* கலைச்செல்வன்: இன்பமெனச் சில கதைகள், துன்பமெனச் சில கதைகள் :: கண்ணன்
பாரீஸ் ரயில் நிலைய முகப்பில் சந்திப்பதற்கு முன் நான் அவர் குரலைக் கேட்டதில்லை; அவர் கையெழுத்தைக் கண்டதில்லை; முகத்தையும் பார்த்ததில்லை. சில குழப்பங்களுக்குப் பிறகு ஒருவரை ஒருவர் அடையாளம் கண்டுகொண்டோம். நேர்த்தியான உடலமைப்பும் முகவெட்டும் கொண்டவர். நட்புணர்வு மிளிரும் முகம். சந்தித்த சில நிமிடங்களிலேயே மனத்தில் குதூகலம் குமிழியிடத் தொடங்கியது.

* சிறுகதை: நதியின் புன்னகை :: ஜே பி சாணக்யா
மூத்தவளுக்கும் இளையவளுக்கும் ஒரு வயது வித்தியாசமிருந்தது. இளையவள் சென்ற மாதம் பூப்பெய்து இத்தோடு நாற்பது நாள்கள் முடிகின்றன. அவர்களிருவருக்கும் கால்சட்டை போட்டுத் திரியும் அவன்தான் சினேகிதன். மூத்தவளுக்குத்தான் அவனை மிகவும் பிடிக்கும். அவனும் அல்லும் பகலும் அவளோடுதான் இருந்தான்.

* தலையங்கம்: ஜெயகாந்தனுக்கு ஞானபீடப் பரிசு
வெகுஜன இதழ்களின் வாசகர்கள் பலரைத் தீவிர எழுத்தின் பக்கம் திருப்பியதில் இவருக்குக் கணிசமான பங்கு உள்ளது. பலவீனமான அப்பிராணி என்பதாகத் தமிழ்ப் பொதுப் புத்தியில் உறைந்துபோயிருந்த எழுத்தாளன் குறித்த படிமத்தைக் கலைத்து அவனுக்கென்று ஒரு கெüரவத்தை ஏற்படுத்தியதிலும் ஜெயகாந்தனின் பங்கு அளப்பரியது.

* அசோகமித்திரன் – 50: ஒர் உரை, இரு பதிவுகள்
கடந்த பிப்ரவரி 12 அன்று சென்னை, தென்னிந்திய திரைப்பட வர்த்தகச் சபை அரங்கில் அசோகமித்திரன் – 50 என்னும் நிகழ்வு நடைபெற்றது. கிழக்கு பதிப்பகமும் கடவு இலக்கிய அமைப்பும் நடத்திய அக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய சுந்தர ராமசாமியின் உரையை இரு வேறு இதழ்கள் பதிவுசெய்த விதம் கவனத்திற்குரியது.

* எதிர்வினை: தலித் எழுத்தாளர்களின் கூட்டறிக்கை
எங்கள் கூட்டறிக்கை மூன்று இதழ்களில்தான் வெளிவந்திருந்தது. ஆனால் கூட்டறிக்கையை வெளியிடாத ஏறக்குறைய 10க்கும் மேற்பட்ட இதழ்கள் அதற்கான மறுப்பறிக்கைகளை மட்டும் வெளியிட்டிருந்தன. இதுவே பார்ப்பனர் அல்லாத ஆதிக்க சாதியினர் பெற்றிருக்கும் மீடியா அதிகாரத்தைக் காட்டுகிறது.

* மதிப்புரை: மாலன் சிறுகதைகள்
இத்தொகுப்பின் பெரும்பாலான கதைகள் சுவாரஸ்யத்தை முன்னிறுத்தி எழுதப்பட்டவை. இதன் தரம் குறித்த நிச்சயமின்மையே இத்தொகுப்பின் இருப்பிற்கான நியாயம் குறித்தும் கேள்விகளை எழுப்புகிறது.

* இந்திய-பாகிஸ்தான் கிரிக்கெட்: சில பழைய நினைவுகள் :: பி ஏ கிருஷ்ணன்
1978ஆம் ஆண்டு. அணியில் பிரசன்னா, சந்திரசேகர், கவாஸ்கர், அமர்நாத் சகோதரர்கள், விஸ்வநாத், வெங்சர்க்கார், காவ்ரி, செüஹான், கிர்மாணி ஆகியோர் இருந்தனர். கபில் தேவ் என்று அதிகம் கேள்விப்படாத ஒரு இளைஞனும் இருந்தான். புறப்படுவதற்கு முன்பே இது ஒரு நல்லெண்ணப் போட்டி என்று அறிவிக்கப்பட்டுவிட்டது.

* மதிப்புரை: ஏ.கே. செட்டியாரின் ‘அண்ணல் அடிச்சுவட்டில்’ :: இமையம்
நாமறியாத, நம்ப முடியாத பல அரிய தகவல்கள் இந்நூலில் உள்ளன. அவை நம் வரலாற்று அறிவை மறுமதிப்பீடு செய்யக் கோருகின்றன.

* அசோகமித்திரன் சிறுகதைகளினூடே ஒரு பயணம் :: அரவிந்தன்
அசோகமித்திரனின் படைப்புகளில் அங்குமிங்குமாகச் சுமார் 100 பக்கங்களையேனும் படிக்கும் ஒரு வாசகருக்கு அவரது படைப்புலகின் சில முக்கியமான தடங்களை இனம்காண முடியும். தமிழின் முக்கியமான கலைஞர் ஒருவரது படைப்புக் களத்தில் தான் நடமாடுவதையும் இதன் மூலம் உணர்ந்துகொள்ள முடியும்.

* இயற்கை வேளாண்மை குறித்த புரிதலை நோக்கி
எஸ்ஆர்ஐ முறை 19 நாடுகளில், பல்லாயிரக்கணக்கான நெல் விவசாயிகளுக்குப் பரவியிருக்கிறது. பல தேசிய, சர்வதேச மாநாடுகளில் வெற்றிக் கதைகளின் பரிமாற்றம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

உயிர்மை – ஏப். 2005

Sify Tamil

* ஜெயகாந்தனுக்கு ஞானபீடம்
தமிழ் இலக்கியத்திற்கு தேசிய விருதுகள் அறிவிக்கப்படும் பெரும்பாலான சந்தர்ப்பங்கள் கூச்சத்தையும் அவமானத்தையும் ஏற்படுத்துவதாகவே இருந்து வந்திருக்கின்றன.

* விவாதத்தைத் தொடரலாம்
தொழில் அக்கறையுடனும், கொஞ்சம் சமூகப் பொறுப்புடனும் எடுக்கப்பட்ட சினிமாக்கள் பலவற்றையும் பார்த்து விடுவதும், பேசிக்கொள்வதும் தமிழ் சினிமாவின் பார்வையாளர் உளவியலாக இருக்கிறது. அந்தப் பொது உளவியலில் எந்தவித மாற்றமுமின்றிக் ‘காதல்’ படமும் பார்க்கப்படுகிறது. இப்படத்தின் மீதான கூடுதல் அக்கறை இப்படி விவாதிக்கப்படுவதுதான்; காதல் பார்க்கப்படவும் விவாதிக்கப்படவும் வேண்டிய படம் என்பதில் மாற்றுக்கருத்து எனக்கு இல்லை

* அசோகமித்திரன் படைப்பு மீதான அவதூறு
உயிர்மை இதழில் அசோகமித்திரனுக்கு நடந்த பாரட்டுக்கூட்டம் பற்றிய செய்தியைப் படித்தேன். தமிழிலக்கியத்தின் பெரும்படைப்பாளியாகக் கருதப்படும் ஒருவருக்கு அவரது முதிர்ந்த வயதில், அவரது வாழ்நாளிலேயே முதன்முறையாக நடத்தப்பட்ட அப்பாராட்டுக் கூட்டத்தில் சுந்தரராமசாமி ஆற்றிய உரையில் இருந்த எள்ளல் தொனி குறித்துப் பலரும் தங்கள் வருத்தத்தை வெளிப்படுத்தினர்.

* தம்பி
பெயர் எம். சரவணகுமார். எம். ஏ., ஆங்கில இலக்கியம்; ஒரு தனியார் கல்லூரியில் வேலை; கரிய திடமான உடல்; கன்னங்கரிய நறுக்கப்பட்ட மீசை. நான் மேஜை மீது முன்னால் சாய்ந்து அவனை உற்றுப் பார்த்தேன். அப்படிப் பார்க்கும்போது நோயாளிக்கு அது ஒரு ஆய்வுப்பார்வை என்று படக்கூடாது.

* எரியும் வீடு
அது ஒரு தேவடியாகுடி என்று துளிகூட சந்தேகம் வராது. பார்த்தால், கோயில் என்று வர்ணித்துவிட முடியாது என்றாலும், அதை ஒரு விடுதி என்றும் கருதிவிட முடியாது. ஷாம்தான் உறுதியாக, என்னை அங்கே அனுப்பி வைத்தார். ‘உனக்கு ஒரு பிரச்சினையும் வராது.

* பெண்களும் அறிவியலும்
பத்து பெண் அறிவியலாளர்கள் பெயர்களைக் கூறமுடியுமா? என்று கேட்டுப் பாருங்கள் அல்லது உங்களையே கேட்டுக் கொள்ளுங்கள். பலர் அறிந்த ஒரே பெண் அறிவியலாளர் மேரி க்யுரி. ஆனால் ஐன்ஸ்டின், நியுட்டன், ஜகதிஷ் சந்திர போஸ், சி. வி. ராமன் என்று பலராலும் பட்டியல் தரமுடியும். ஏன் அறிவியலில் பெண்கள் இல்லையா? இல்லை அவர்கள் அதிகம் அறியப்படவில்லையா?

* கலைநயமிக்க மதுக்குவளைகள்
16 ஆம் நூற்றாண்டின்
இறுதி வருடங்களில் ஓர்நாள்
அழகிய மரமஞ்சங்கள் செய்யும் தச்சன் ஒருவனை
கிழக்கிலிருந்து பாயும்
ஒரு நதிக்கரையோர சிறுநகரத்தில்

* கவிதை:மழை உடல் கொண்டவன்
வெயில் ருசித்தவாறு ஐஸ்கிரீம் கடிக்கும்
மழை உடல் கொண்டவன் மீது
சொட்டுச் சொட்டாக உதிர்கிறது
முன்பு பெய்த மழை.

* கடிதங்கள்
யதார்த்தத் தளத்திலிருந்து பாய்ந்து அதிபுனைவைத்தொட்டு மீளும் சிறுகதைகளில் ஒன்றாக ஜெயமோகனின் ‘அறைகள்’ சிறுகதையைக் கூறலாம்

* திரைப்படம் : ப்ளாக்
பாலிவுட் மெய்யாகவே மாறிக்கொண்டிருக்கிறது. சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால் கூட அதன் தயாரிப்புகள் மசாலா என்கிற அடைமொழியால் அழைக்கப்பட்டு பரிகாசத்திற்குள்ளாகின.

* காட்சிகளில் மால்கம் எக்ஸ்
ஆப்பிரிக்க அமெரிக்கத் தலைவரான மால்கம் எக்ஸ் பற்றிச் சற்று அறிந்திருந்தாலும், ரவிக்குமார் அவரைத் தமிழில் வழங்கியபோது கூடுதலாக அறிய முடிந்தது.

* பொன்னகரம்
சேலம் நகரத்தில் ‘தாதுபாய் குட்டை’ அல்லது ‘கிச்சிப் பாளையம்’ என்னும் ஸ்தலநாமம் கொண்ட இடத்துக்குப் போய்ச் சேர்ந்தபோது நள்ளிரவு தாண்டியிருந்தது. அர்த்த ஜாமத்தில் தங்குவதற்கான இடம்தேடி அலைவதில்லை என்ற முன்தீர்மானத்தின்படி, அங்கிருக்கும் திருவள்ளுவர் பேருந்து நிலையத்தில் அடைக்கலம் புகுந்திருந்தேன்.

* லோர்கா எனும் சிற்பி
‘இக்கேனஷியா சாஞ்சஸ் மெஜஸ்’ என்ற வீரன் 1934ஆம் ஆண்டு, காளைச் சண்டையின் இறுதியில் காளையால் குத்தி வீசி எறியப்பட்டு ரத்தக் காயத்துடன் மைதானத்திலே இறந்துபோய்விடுகிறான். அவனது நண்பனும் கவிஞனுமான பிடெரிகோ கார்சியா லோர்க்காவிற்கு விற்குத் தகவல் சொல்கிறார்கள். லோர்கா அதை நம்ப முடியாமல் எத்தனை மணிக்கு நடந்தது என்று கேட்கிறான்

* கடவுளைக் கொல்பவர்கள்
உலகச் சிந்தனை மரபுகள் அனைத்தையும் இருபெரும் பிரிவுகளுக்குள் அடக்க முடியுமென்றால் அவை இறைநம்பிக்கை, இறைநம்பிக்கை அற்றவை என்ற பகுதிகளாகப் பிளவுபடும். இறை நம்பிக்கை என்பது எவ்வளவு தொன்மையானதோ அதே அளவுக்கு இறைமறுப்பும் தொன்மையானதே.

* கருப்புக் கிறிஸ்துவும் வெள்ளைச் சிங்கங்களும்
‘சிகப்பழகு’ என்னும் புதிய தமிழ்ச்சொல்லொன்று ஒன்று தமிழகத்தில் உலவி வருகின்றது இன்று. வெள்ளைத் தோலுக்கு இப்படியொரு அபத்தமான தமிழ்ப்படுத்தல். சருமத்தை வெளுக்க வைப்பதாகக் கூறப்படும் தைலங்களும், களிம்புகளும் விளம்பரப்படுத்தப்படுகின்றன

* தேவதச்சன் கவிதைகளில் புனைவும் வனப்பும்
புதுக்கவிதையை இன்னமும் புதுக் கவிதை என்று சொல்லத்தான் வேண்டுமா? நவீன கவிதை என்று சொன்னால் என்ன? இப்படிச் சிலர் கேட்கின்றனர். 1978இல் ‘ழ’ கவிதை ஏடு தொடங்கியபோது நானும் ஆத்மநாமும் இதைப் பற்றிப் பேசினோம். கவிதை என்று சொன்னாலே போதும் என்றே இருவரும் கருதினோம்.

* தேசிய நியாயங்கள் : ‘மற்றவரை வெளியேற்றுவோம்’
சென்ற மாதம், நான் குடந்தையிலிருந்தபோது ஒரு நூல் வெளியீட்டு விழா. பாலமுருகனின் ‘சோளகர் தொட்டி’ நாவல் வெளியீட்டைக் கிட்டத்தட்ட ஒரு கட்சி மாநாடு போல நடத்தினார்கள் தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சியினர்

* ரிச்சர்ட் டி சொய்சா: குதறி எறியப்பட்ட ஆளுமையின் புன்னகை
திடீரென வீட்டு வாசலில் கிறீச்சிட்டு நிற்கும் ஜீப் வண்டி அல்லது ஒரு வாகனம்; அதிலிருந்து வீட்டிற்குள் குதிக்கும் சீருடை அணிந்த, அணியாத அரசினதோ, ஆயுதக் குழுக்களினதோ அடியாட்கள்; அச்சம், இழுத்துச் செல்லப்படுதல், வீட்டிலிருப்பவர்களின் கதறல் இவையெல்லாம் இலங்கையின் யுத்தப் பிரதேசத் தமிழ்ப் பேசும் மனமொன்றிற்குப் பரிச்சயமான ஒரு நிகழ்வு

கணினி புரட்சி

nakeeran: விழாவில் பேசிய நக்கீரன் கோபால்:

“தமிழுக்கு ஒரு புதிய கணினித் தகுதி கிடைத்திருக்கிறது. தமிழை உயர்த்துவதற்காக தாத்தா எட்டடி பாய்ந்தால்… பேரனான நான் பதினாறடி பாய்வேன் என்பதை நிரூபித்திருக்கிறார் மத்திய அமைச்சர் தயாநிதிமாறன்…” என்று குறிப்பிட்டார்.

ஹிந்து என்.ராம்… “கலைஞர் தன் தொடக்க காலத்திலிருந்து நடத்திவந்த தமிழ் போராட்டத்துக்கு கிடைத்திருக்கும் இன்னொரு மகத்தான வெற்றி இது” என்றார்.

துக்ளக் சோ இவ்விழாவில் மைக் பிடித்தபோது…

“கம்ப்யூட்டரில் தமிழுக்கு புதிய தகுதி கடைத்திருக்கிறது. இங்கே இன்னொரு தமிழ் கம்ப்யூட்டரும் (கலைஞரைப் பார்த்து) உண்டு. அரசியலில் என்று, என்னென்ன நடந்தது. எந்தெந்த பத்திரிகைகளில் என்னென்ன செய்திகள் வந்தன என்பது அந்த கம்ப்யூட்டருக்கு அத்துப்படி. எனவே மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தினர் இந்த தமிழ் கம்ப்யூட்டரையும் அனலைஸ் செய்யவேண்டும்” என கலைஞரை கம்ப்யூட்டரோடு ஒப்பிட்டுப் பேச அரங்கம் எங்கும் பலத்த சிரிப்பு.

தமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்… “இந்திய மொழிகளில் மென்பொருள் கருவிகள் முதலில் தமிழில் செய்யப்பட்டதற்காக தயாநிதிமாறனுக்கு வாழ்த்துக்கள்” என குறிப்பிட்டார்.

விழாவுக்கு வேட்டியில் வந்திருந்த தயாநிதி மாறன்

“இங்கு வந்திருப்பவர்களுக்குத்தான் இந்த இலவச மென்பொருள் கருவிகள் என்பதில்லை. நீங்கள் வீட்டிலிருந்தே இண்டர்நெட்டில் ரிஜிஸ்தர் செய்தால் அடுத்த 7 நாட்களுக்குள் இந்த தமிழ் மென்பொருள் கருவிகள் உங்கள் வீடுதேடி விரைந்து வரும்” என்றார்.

தமிழிலேயே ஈமெயில் அனுப்பலாம். தமிழ் சொற்களை கம்ப்யூட்டரிலேயே எழுத்துப்பிழை திருத்தலாம். தமிழ் அகராதியை கணிணியிலேயே பெறலாம் என பல பயன்கள் கொண்ட இவ்விழாவில் இவற்றை எப்படி பயன்படுத்துவது என்றும் செய்முறை விளக்கம் செய்து காட்டப்பட்டது.

மறுநாள் தஞ்சை தி.மு.க. மாநாடு பரபரப்பிலும் இவ்விழாவிற்கு வந்த கலைஞர்… “இது உலக அளவில் தமிழை கொண்டுசேர்க்கும் முயற்சி” என வாழ்த்தினார்.

அந்த நாள் ஞாபகம்

ஏவிஎம் சரவணன்: ”எப்படி வரும்?” என்று கேட்டார் திரிலோக். ”நீங்க எடுக்கறது படிக்காத மேதை. எமோஷனல் ஸ்டோரி. அதில் சீன்கள்ல எமோஷனைக் காட்டணுமே தவிர, காட்ட முடியுமே தவிர, அங்கே போய் ‘செட்’டோட ரிச்னஸை எப்படிக் காட்ட முடியும்? பீம்சிங் எப்படிக் காட்டுவார்?”

”நெறய செலவு பண்ணி ‘செட்’ போட்டாச்சு. என்ன பண்றதுன்னே தெரியல” என்றார் அப்பச்சி.

ஸ்டூடியோவில் செட் போட்டு அங்கே ஷ¥ட்டிங் முடிந்த பின்பு, அந்த செட்டைப் பிரித்து விடுவதுதான் எங்கள் வழக்கம். அதே செட்டை பிறகு யாருக்கும் வாடகைக்கு விடுவதில்லை. மெஹர்பான் செட்டைப் பொறுத்தவரை, அதன் ‘ரிச்னஸ்’ஸை படத்தில் காட்ட முடியவில்லையே என்ற ஆதங்கம் அப்பச்சிக்கு இருந்தது.

”சரி… இந்தப் படம் முடிஞ்ச பிறகு இந்த செட்டைப் பிரிக்க வேணாம்” என்றார் ”இந்த செட்டுக்குப் பொருந்தி வராப்போல ஒரு கதை ரெடி பண்ணுங்க”

”பொருந்தி வராப்போலன்னா, இதுக்கு சோஷியல் சப்ஜெக்ட்ஸ் சரிப்பட்டு வராது. க்ரைம் த்ரில்லர் தான் பொருந்தி வரும். செட்டுக்கு ஸ்கோப் இருக்கும்” என்றார் திருலோக்.

பூட்பங்களா, பீஸ் ஸால் பாத், கும்நாம், டார்க் பங்களா போன்ற நாங்கள் பார்த்திருந்த படங்களையெல்லாம் மிக்ஸ் பண்ணி, ஒரு க்ரைம் த்ரில்லர் கதையை தயார் செய்தோம். அதுதான் ‘அதே கண்கள்!’

டி.என். பாலுவை வைத்து காமெடி ட்ராக்கை மட்டும் தனியாக எழுதினோம். டி.ஆர். ராமண்ணாவிடம் இருந்தவர் பாலு. ‘நான்’, ‘குமரிப்பெண்’ போன்ற படங்களில் பிரபலமான காமெடி ட்ராக்கை எழுதியவர். ஒரே வாரத்தில் முழு ஸ்கிரிப்டையும் தயார் செய்து விட்டோம்.

இந்தப் படத்துக்கு வேதா இசையமைத்தார். இலங்கை வானொலியில் புகழ் பெற்ற மயில்வாகனன்தான், இந்த வேதாவை என் சகோதரர் குமரனுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்.

”இவருக்கு இசையமைக்க வாய்ப்புத் தாருங்கள். பாடல்களை இலங்கை வானொலி மூலம் ‘ஹிட்’டாக்கிக் காட்டுவது என் பொறுப்பு’ என்று மயில் வாகனன் உறுதியும் தந்திருந்தார்.

இதில் வேடிக்கை என்னவென்றால், எந்தப் பாடல்களை வானொலி மூலம் ஹிட்டாக்கிக் காட்டுகிறேன் என்று மயில் வாகனன் உறுதி தந்திருந்தாரோ, அந்தப் பாடல்கள் வெளியானபோது அவர் இலங்கை வானொலியில் பணியில் இல்லை. இருந்தாலும் பாடல்கள் யாவும் இனிமை காரணமாக தாமாகவே பிரபலமாயின.

நன்றி: kalki

மந்திரமுகி கதை

அமெரிக்காவில் சொட்டைய கூஜாவின் வீட்டை பழனி வாங்குகிறான்.

சூனியக்காரி மந்திரமுகி இந்த வீட்டில் ஆயிரம் தலைகளை காவு வாங்கியதாக சரித்திரம். கடைசியாக போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர் சொட்டைய கூஜா. இதனால் அவளின் ஆஸ்தான கேப்டன் சவுரவ் (கிரிக்கெட் வீரன்) ஓய்வு பெற்றதாக தகன எரிப்பாளர் தாடிவாலா முன்கதை சுருக்குகிறார்.

மந்திரமுகியால் பலி வாங்கப்பட்ட ஆயிரம் வீரர்களின் ஆவிகளும் சொட்டைய கூஜாவின் வீட்டில் உலாவுவதாக வதந்தி. அவற்றை சச்சின் டெண்டுல்கரின் முப்பதடி மட்டை காத்திருப்பதாக ஐதீகம். மந்திரமுகியின் அறையில் இருந்து எட்டிப் பார்த்தால் சேப்பாக்கம் மைதானம் இன்றும் தெரிகிறது. சேப்பாக்கத்தின் பெவிலியனில்தான் முன்னாள் அணித் தலைவன் சவுரவ் வசித்திருந்தான்.

இந்நாளில் அங்கு டிராவிட் வசிக்கிறார். அவரும் கிரிக்கெட் கேப்டன்தான்.

காவேரியை பழனி காதல் மணம் புரிந்திருக்கிறான். இது பிரிந்திருந்த பழனியின் பழங்குடியில் பிளவை வலுப்படுத்துகிறது. என்றாலும் பழனியின் மொத்த குடும்பமும் அறுபடை வீடுகளுடன் மந்திரமுகி மாளிகையில் குடிபுகுகிறது.

இவர்களுடன் மறைவாணனும் விடுமுறையை பழனியுடன் களிக்க வருகிறார். வீட்டை கவனித்துக் கொள்ள அவுட் ஹவுஸில் பாட்டியும் பேத்தி சச்சுவும் வசிக்கிறார்கள். சச்சுவை சர்ச்சு என்றழைத்து வெறுப்பேத்துவதை கர்ம சிரத்தையாக மறைவாணன் சிறப்புற செய்து வருகிறார். எனினும், சர்ச்சுக்கு… சாரி… சச்சுவுக்கு மரை கழண்டுவிட மறைவாணனிடம் காதல் வந்து விடுகிறது.

‘மறைவாணன் இருக்க மரை கழல்வதேன்’ என்று படம் நெடுக வசனம் இடம் பெறுகிறது.

மற்றவர்க்குள் மனதுக்குள் மறைத்து வைப்பதை மறைவாணன் தன்னுடைய அமெரிக்கப் படிப்பால் உணர்ந்துகொள்கிறார். புகழ்பெற்ற பல மனவியல் பேறாயர்களையும் பேராசிரியர்களையும் மாணாக்கர்களாக வைத்துக் கொண்டவர்.

அக்கம்பக்க குழந்தைகளுக்கு சச்சு வாய்ப்பாடு கற்றுத் தந்து வருகிறார். காலையில் எழுந்தவுடன் ‘ஒரோண் ஒண்ணு… ஈரோன்னு இரண்டு’ என்று தமிழ் நாராசமாக நித்திரையை கஷ்டப்படுத்துவதால், வகுப்புகளை நிறுத்த உத்தரவிடுகிறார் மறைவாணன். பெரிய இடத்து பழனி நண்பனாக இருப்பதால், இது எளிதில் சாத்தியமாகிறது. வாய்ப்பாடுகளைப் படிக்காமல் தான் கழற்றி வைத்த நட்/போல்ட்களை மெக்கானிக் வேலை பார்க்குமாறு அறுவுறுத்தி சிறுவர்களை விரட்டியடிக்கிறார். பொழுதுபோக்கு நின்று போனதால் சச்சுவின் காதல் வலுவடைகிறது. சச்சுவை மேலும் கவருமாறு ‘ஒன் ஒன் சார் ஒண்… டூ ஒண் சார் டூ’ என்று ஆங்கிலப் புலமையை காட்டி நம்மையும் முடுக்குகிறார் மறை.

காவேரிக்கு கர்னாடகமாக அடைந்து கிடக்க போரடிக்கிறது. பக்கத்தில் சென்று காய்ந்து போன மந்திரமுகியின் அறைக்குள் நுழைய ஆசை. ஆனால், புக விட மாட்டேன் என்று தடுத்து வருகிறார்கள். சச்சுவின் உதவியை நாடுகிறார் காவேரி. நண்பனிடம் தனது மதிப்பை உயர்த்த மறைவாணனும் சச்சுவின் உதவியைக் கோருகிறான்.

சச்சுவும் சேவல் பண்னையை பழனியின் மேல் ஏவி விடுகிறாள். மறைவாணன் சேவல்களிடமிருந்து பழனியைக் காப்பாற்றுகிறான். மாம்பழத்தில் விஷம் தோயித்திருப்பதை பழனிக்கு உணர்த்துக்கிறான்.

  • சச்சு பழனியைக் கொல்ல முயன்றது ஏன்?
  • மந்திரமுகியால் பலி வாங்கப்பட்ட ஆயிரம் வீரர்களின் ஆவிகளும் பழனியின் அறுபடை வீட்டாரையும் பிடித்திருக்கிறதா?
  • டிராவிட் நிலைமை என்ன ஆச்சு?
  • ஆயிரம் வீரர்களின் ஆவிகளை மேய்க்க வரவழைக்கப்பட்ட புது பயிற்சியாளர் யார்?

    மந்திரமுகியின் இத்தைகைய புதிய கேள்விகளுக்கு சொட்டைய கூஜாவின் விடையை வெள்ளித்திரையில் காண்க!

    – பாஸ்டன் பாலாஜி

  • கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி

    சென்னையில் புத்தகம் என்றால் ‘ஹிக்கின்பாதம்ஸ்’ நினைவுக்கு வரும். அதன் பிறகு பெங்களூர் வாசத்தில் ‘கங்காராம்ஸ்’ பிடித்திருந்தது. ஹிக்கின்பாதம்ஸில் வாஸ்து பார்க்கிறார்கள் என்று நினைக்கிறேன். தென்மேற்கு மூலையில் ஒதுக்குப்புறமாக தமிழ் புத்தகங்கள் வைத்திருப்பார்கள். நியு புக்லேண்ட்ஸில்தான் உருப்படியான வரிசையில் நிறைய தமிழ் புத்தகங்கள் கிடைக்கும் என்றார் ஆனந்த் ராகவ். ஆட்டோகாரர்களுக்கு எளிதில் புரியவேண்டும் என்பதற்காக ஆங்கிலப் பெயர் வைத்துக் கொண்டிருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டேன். மரங்களும் பெண்மணிகளும் நிறைந்த குளுகுளு தி.நகரில் (52-C, கீழ் தளம், வடக்கு உஸ்மான் ரோடு) இருக்கும் புண்ணியஸ்தலம் புக்லேண்ட்ஸ். மாமிகளும் தண்ணீர் இல்லாத குளங்களும் நிறைந்த மயிலையில் திலீப் குமார் கடையும் (216/10, ராமகிருஷ்ண மடம் சாலை) சென்னை ஷேத்ராடனத்தில் அவசியம் இடம்பெற வேண்டும். (இரண்டு முகவரிக்கும் நன்றி: Kizhakku Pathippagam)

    ஈழநாதனின் சிங்கை நூலக அனுபவங்களை பெற இயலாதவர்கள் நிச்சயம் மேற்கண்ட ஏதாவதொன்றுக்கு வருடத்துக்கு ஒரு முறையாவது சென்று வருவார்கள். நூலகங்களில் குவிந்து கிடக்கும் புத்தகங்களை இணையம் மூலமாக அலசுவது சௌகரியமான விஷயம். அதை விட்டு விட்டு, நூறாண்டுகளாக அடைக்கப்பட்ட சந்திரமுகியின் அறையில் நுழைவது போல் இல்லாவிட்டாலும் தூசி வாசனையடிக்கும் பெரிய அடுக்குகளுக்கு நடுவே சுற்றித் திரிவது இன்னொரு சௌகரியமான பொழுதுபோக்கு. இவற்றை மட்டும் நம் வீட்டில் வைத்திருந்தால் நூலாம்படை தட்டவே வாரயிறுதிக்கள் செலவழியுமே என்னும் எண்ணமும் சம்பந்தமில்லாமல் தோன்றும்.

    சில புத்தகங்கள் பின்னட்டைக் குறிப்புகளில் கவரும். சில முகப்பு அட்டையின் புகைப்படத்தினால். இவை இரண்டு வகையுமே கிட்டத்தட்ட AnyIndian.com போன்ற இணையத்தின் மூலமே எளிதில் சாத்தியமாகிறது. இவ்வாறு நோட்டமிடுவதில் புகழ் பெற்ற எழுத்தாளர்களும் திண்ணை போன்றவற்றில் வெளியான மதிப்புரைகளில் கவர்ந்தவையும் விருப்பப்பட்டியலில் இடம்பிடிக்கும். சில பல லிஸ்ட்களின் உதவியை நாடியும் வாங்கலாம்.

    ஆனால், இவ்வாறு (மட்டுமே) வாங்கினால் எனக்கு பிடித்திருக்கக் கூடிய பல புத்தகங்கள் தட்டிப் போகிறது. இணையம் மூலமே கிடைக்கக்கூடிய தகவல் சார்ந்த புத்தகங்கள் சிலவும் தேவையில்லாமல் சேர்ந்துவிடலாம். சுஜாதாவின் எல்லா எழுத்தையும் வாங்கி (படித்தும்) விட வேண்டும் என்னும் ஆவலுடன் எடுத்து வைக்க சொன்னேன். மொத்தமாக பார்த்தபோது பிரமிப்பாக இருந்தது. நிரையவே மிரண்டுபோய், நூறு புத்தகங்கள் சுஜாதாவுக்கு quota வைக்க முடிவு செய்து, புரட்டி, எடை அளந்து, தொடர்கதை சிலவற்றை ஒதுக்கி, எடுக்க முடிந்தது.

    எஸ்.ராவின் உலகசினிமாவும் மிகவும் ஆர்வமாகப் பார்க்க நுழைந்த ‘பாபா’ படம் போல் சப்பென்று போனது. பாபா படம் போலவே நிறைய மேட்டர் இருந்தது. ஆனால், imdb.com ரோஜர்/ஈபெர்ட் தலை நூறு பட்டியல் போன்ற விவரங்கள். இதுதான் எனக்கு இன்னும் எளிதாக கைநுனி இணையம் வழியாகக் கிடைக்கிறதே என்ற அலட்சியம் எட்டிப் பார்க்க shelf-இலேயே திருப்ப ஏதுவாகிறது.

    பசும்பொன் குறித்த புத்தகங்களைப் பார்த்தபோது பெருத்த ஏமாற்றம் மட்டுமே விஞ்சியது. வாங்க வேண்டிய பு(து)த்தகங்களில் பலவும் இணைப்பு துண்டிக்கப்பட்ட தரவிறக்கமாகிப் போனது. ரொம்ப காலமாகத் தேடிக் கொண்டிருந்த (ஆனால் லிஸ்ட்டில் இல்லாத/மறந்து போன) மௌனி மாட்டிக் கொண்டார்.

    கலைமகள் களஞ்சியத்தின் இரண்டாம் பாகம் தேவையில்லை என்றால் ‘இரண்டையுமே சேர்த்து எடுத்துக் கொள்ளவேண்டும்’ என்று மிரட்டுகிறார்கள். தொகுப்பின் இரண்டாம் பாகம் முழுவதும் சிறுகதைகளே நிறைந்திருந்தது. கட்டுரைகள் மட்டுமே பிரியமாக இருக்கும் என்னுடைய தற்கால வாசிப்புக்கு வேண்டாத சுமையாக இருக்குமே என்று நினைத்தால் negotiation-க்கு வேலை வைத்தார்கள்.

    அசோகமித்திரனும் தனது கிழக்குக் கட்டுரைத் தொகுப்பின் முதல் பாகத்தில், எனக்கு ஏனோ சாய்ஸில் விட்டுவிடத் தூண்டினார். அதற்கும் ஒன்று எடுத்தாலே மற்றொரு புத்தகம் (இரண்டும் தனித்தனியே 350 ரூபாய்) என்று ஆசை காட்டினாலும் கடைசியில் தனியே தர சம்மதிக்கிறார்கள். இணைம் மூலம் இந்த மாதிரி (என்னுடைய) அடாவடித்தனம் செல்லுபடியாகுமா என்று தெரியவில்லை 😉

    மொத்தமாக வாங்கிய புத்தகங்கள் இன்னும் இரண்டு மாதம் கழித்துதான் வந்து சேரும் என்றாலும் நிச்சயதார்த்தம் முடிந்து கல்யாணத்துக்கு காத்திருக்கும் பிரம்மச்சாரி போன்ற சுகமான காலம் இது.


    Noolagam – Interview with Mr. Ramalingam – Narmada Pathippagam:
    “ஒரே கூரையின் கீழ் எல்லா தமிழ் நூல்களும்” என்கிற விதத்தில் உருவாக்கப்பட்ட ‘புக் லேண்ட்ஸ்’ பற்றி…?

    தமிழில் ஒவ்வொரு பதிப்பாளரும் ஒரு (ஆஸ்தான) எழுத்தாளருடைய நூல்களையே அதிகம் வெளியிடுகிறார்கள். குறிப்பாக, மு.வ. நூல்களென்றால் பாரி, நா.பா. – தமிழ்ப் புத்தகாலயம், ஜெயகாந்தன் – மீனாட்சி, கலைஞர் – பாரதி, சுஜாதா – இமயம். இந்த பதிப்பாளர்களெல்லாம் ஆளுக்கொரு திசையில் சிதறிக்கிடக்கிறார்கள். அதனாலே வெளியூரிலிருந்தோ, வெளிநாட்டிலிருந்தோ புத்தகம் வாங்க வருபவர்கள் ரொம்ப கஷ்டப்படுகிறார்கள். அதனாலே, ஒரே இடத்தில் எல்லா நூல்களும் விற்பனைக்கு கிடைத்தால் வசதியாக இருக்கும் என்பதால்தான் புக்லேண்டை ஆரம்பித்தோம். தமிழில் ஒரு சில புத்தகங்களை மட்டுமே வெளியிட்ட பதிப்பகங்கள் நிறைய இருக்கின்றன. அவர்களின் நூல்களை சந்தைப்படுத்துவதற்கும் இந்த புக்லேண்ட்ஸ் உதவிகரமாக இருக்கிறது.

    முக்கியமாக, சென்னையில் உள்ள நவீன, குளிர்சாதன வசதி கொண்ட நூல் விற்பனைக்கூடத்தில் ஆங்கில நூல்கள் மட்டுமே அதிக அளவில் விற்பனைக்கு வைக்கப்படுகின்றன. தமிழ் நூல்களை அவர்கள் விற்க விரும்பவதில்லை. தமிழ் நூல்களை விற்கும் ஓரிரு நிறுவனங்களும் அவற்றை தற்போது குறைத்துக் கொண்டு வருகின்றன. இந்த நிலையை மாற்றி தமிழ் நூல்களை விற்பனை செய்யும் நோக்கத்தோடு அமைக்கப்பட்டதுதான், புக்லேண்ட்ஸ்.”


    அசோகமித்திரன் கட்டுரைகள் – 2 : முதல் நூலில் அசோகமித்திரனின் அனுபவங்களும் அபிப்பிராயங்களும் இடம்பெற்றுள்ளன. இந்நூலில் கலைகளும் கலைஞர்களும்.

    தமிழிலும் பிற மொழிகளிலும் பல்வேறு காலகட்டங்களில் வெளியான முக்கியமான நூல்கள் குறித்தும், ஏராளமான இந்திய, அயல்மொழி எழுத்தாளர்களின் படைப்புகள் மற்றும் வாழ்க்கை குறித்தும் அசோகமித்திரன் எழுதிய கட்டுரைகள் இந்நூலின் முக்கியப் பகுதி. நாடகம், சினிமா போன்ற நுண்கலைகள் குறித்த அவரது அக்கறைகள் தனிப்பகுதியாகச் சேர்க்கப்பட்டிருக்கிறது. இவை அனைத்தும் காலவரிசைப்படி தொகுக்கப்பட்டிருக்கின்றன.

    அமுதசுரபி – ஏப். 05

    Sify.com :: Amudha Surabi

    * பட்ஜெட் 2005
    உண்மைதான், இந்த பட்ஜெட் நல்ல பட்ஜெட்தான். புதிய திட்டங்கள் பல கொண்டுவந்துள்ளார்கள். இந்தத் திட்டங் களால் யாருக்கு என்ன நன்மை கிடைக்கிறது என்பதைப் பற்றிய கவனம் போதுமான அளவு யாருக்கும் இருப்பதில்லை. இந்தப் பட்ஜெட்டில் பற்றாக்குறை அதிகப்படியாகாமல் ஓரளவு கட்டுக்குள் வைத்திருப்பதுடன், ஆண்டு வரவு செலவுகளில் பற்றாக்குறை விகிதம் ஓரளவு குறைந்திருப்பது ஒரு பெரிய சாதனை. வரும் ஆண்டில் அது மேலும் கணிசமாகக் குறையுமா என்பதுதான் சந்தேகம்.

    * இராணி இரஸோமணி
    பச்சைக் கிளிக்குப் பல்இல்லை
    பெட்டைக் கோழிக்குக் கிரீடமில்லை
    அத்தி மரத்துக்குப் பூ இல்லை
    நதி பின் செல்வதில்லை
    பின்னே செல்வதில்லை (நாம்) கோஷ்டியாக
    சிவன் விஷமருந்தி தொண்டையில் அடக்கி
    பார்வதி தியானத்திலமர்ந்து சிவா கண்களைத் திறக்க
    வழி விடு, வழி விடு, மங்களகரமான அன்னியர்களே
    மலடிகூட குழந்தை பெறுவாள் சிவன் விரும்பினால்

    * கவிதைகள்
    இதுதான் சாலை கண்மணியே! – நீ
    எங்கே செல்ல விரும்புகிறாய்?
    இதன்மேல் எத்தனை வாகனங்கள்! – நீ
    எதிலே செல்ல விரும்புகிறாய்?
    முதலில் செல்வது முக்கியமா?- நீ
    முழுதாய்ச் செல்வது முக்கியமா?

    * எத்தனை கோடி வளங்கள்!!!
    நாம் மரபுசார் வளங்களை முறையாகவும் சிக்கனமாகவும் பயன்படுத்தக் கற்றுக்கொள் வதுடன் உடனடியாக மாற்று எரிசக்தி வளங்களைக் கண்டறிந்து அவற்றைப் பயன்படுத்து வதன் மூலம் வருங்காலத்தினை வளமானதாக ஆக்கிக்கொள்ளலாம். அத்தகைய எரிசக்தி வளங்கள் பின்வருமாறு:-

    1.சூரிய ஒளிச் சக்தியும் வெப்ப சக்தியும்
    2.காற்றுச் சக்தி
    3.உயிரியல், தாவர உயிரியல், கழிவுப் பொருள்களின் சக்தி
    4.பிற மாற்று எரிசக்தி வளங்கள்

    * அனைத்துலக நகரம் ஆரோவில்லில் மாற்று எரிசக்தி ஆய்வுகள்
    இன்றைய நாளில் சுமார் 30 நாடுகளைச் சேர்ந்த 1800 ஆரோவில்வாசிகள் பன்னாட்டு ஆரோவில் மையங்களுடன் இணைந்து சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த 5000 பணியாளர்களின் உழைப்பு உதவியுடன் 50,000 பேர் வசிக்கத் தகுந்த பசுமை வளையத்துடன் நவீன கட்டடங்களைக் கொண்ட இந்த ஆன்மீக நகரைத் திட்ட மிட்டு அமைத்து வருகின்றனர்.

    * இங்கு கனவு காண்பது கற்றுத் தரப்படும்… :: வெ இறையன்பு
    நலவாழ்வு குறித்த பிரகடனத்தில் நம் மண் சார்ந்த மூலிகைகள் எப்படி மருத்து வத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன என்பதும், உலக வர்த்தகத்தில் மூலிகை மருத்துவத்தில் சீனம் பங்கு பெறுமளவு நாம் பங்களிப்புச் செய்யாமலிருக்கும் குறைபாடும் சுட்டிக் காட்டப்பட்டிருக்கின்றன. சோற்றுக் கற்றாழைக்கு இவ்வளவு மருத்துவ குணமா என்று வியக்க வைக்கும் உதாரணமொன்று மென்மை யாக எடுத்துச் சொல்லப்பட்டிருக்கிறது.

    * கவிதாயினி குட்டி ரேவதி
    படைப்பாளியின் சமையல் அறையில் மொழி முதலில் ஒன்றும் தெரியாததுபோல் அஞ்சறைப் பெட்டிகளுக்குள் அமர்ந்திருக்கும். ஒரே மாதிரியான உணவுகளை நாள்தோறும் சமைக்கும்போது மொழி, தன் சுவையை இழந்துகொண்டே வருகிறது. புதுமையான சமையலில் மொழி, இதுவரை காட்டாத சுவைகளை வெளிப்படுத்திவிடும். புதுவிதக் கலவைகளை உண்டாக்கும்போது அந்த உணவால் ஊரே மணக்கும்.

    நல்ல உணவானது, சூடு, சுவை, மணம், ஆற்றல் ஆகிய நான்கையும் தருவதாய் இருக்கும். நல்ல படைப்பாளி ஒரே மாதிரி சமைக்கமாட்டார். வேதியியல் ஆராய்ச்சிக் கூடத்தில் சோதனைகளில் ஈடுபடுபவரைப் போல் அவரிடம் ஒரு தொடர்ந்த ஆய்வு இருக்கும்.

    * நூல் நயம்
    பங்குச் சந்தையில் லாபம் : ப. ந. ஜெயராம்
    குரு தஷிணாமூர்த்தி சுவாமிகள் அருளுரை : கி. நாகராசன்
    அருளாளர்கள் : கவிக்கோ ஞானச்செல்வன்
    எனது கனவில் இந்தியா : அ. முகமது இஸ்மாயில்
    இந்தியக் குடும்பங்களில் பெருகும் பிரச்சனைகள் : கடமை யள் அன்பு

    * இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு : நூல் நயம்
    பல்வேறு மொழிகளில் கூறப்பட்டாலும் இந்திய இலக்கியம் என்பது ஒன்றுதான் என்ற கருத்துக்கு விளக்கவுரையாக வந்திருப்பவை தாம் எழுத்தாளர் சிவசங்கரியின் ‘இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு’ வரிசைத் தொகுப்புகள். ஏற்கெனவே வெளியான இரண்டு தொகுப்புகளைத் தொடர்ந்து மேற்குத் திசை மாநிலங்களான கோவா, மகாராஷ்டிரம், குஜராத், சிந்து ஆகியவற்றின் இலக்கிய முயற்சிகளைச் சிவசங்கரி தமது மூன்றாவதான இந்தத் தொகுப்பில் திரட்டித் தந்திருக்கிறார்.

    * படிக்கக் கிடைத்தவை : நூல் நயம் :: வெங்கட் சாமிநாதன்
    விக்கிரமாதித்யன் நிறைய எழுதுகிறவர். நீண்ட காலமாக எழுதி வருகிறவர். அவர் கவிதைகள் வெளிவராத பத்திரிகைகள் ஏதும் உண்டா என்று கேட்டால் உடன் பதில் சொல்லிவிட முடியாது. அவர் ஒரு சுவாரஸ்யமான கவிஞர், மனிதர். பொஹீமியன் என்று சொல்வார்கள், ஆங்கிலத்தில். தன் இச்சையாக தன் வழி செல்பவர். சமூகம் விதிக்கும் கட்டுப்பாடுகள் அவருக்கு உவப்பதில்லை. கவிஞராகவும் அவர் ஒரு பொஹீமியன் தான். அவர் தன் கவிதைகளில் சொல்ல எடுத்துக் கொள்ளும் விஷயங்களும் சரி, கவிதை மொழியும் சரி, அவருடையதேயானவை. அம்மொழியும் வேண்டும் நமக்கு. அவ்விஷயங்களும் வேண்டும் நமக்கு.

    * நாட்டின் மின் தேவைக்கு அணுவாற்றல்
    நம் நாட்டின் முதல் அணுமின் நிலையம் மகாராஷ்டிர மாநிலத்தில் தாராபூர் என்னு மிடத்தில் அமெரிக்க உதவியுடன் 1964இல் நிறுவப்பட்டது. இரண்டாவதாக, ராஜஸ்தான் மாநிலத்தில் ராவத்பாட்டா என்னுமிடத்தில் கனடா நாட்டு உதவியுடன் மற்றொரு அணுமின் நிலையம் நிறுவப்பட்டது. அதன் பிறகு, இதுபோன்ற அணுமின் நிலையங்கள் “நமக்கு நாமே’ என்கிற அடிப்படையில் அயல்நாட்டு உதவியின்றி நம் நாட்டிலேயே வடிவமைத்து கட்டப்பட்டு வருகின்றன. இவை அனைத்தும் கனநீர் உலைகள் ஆகும். மொத்தம் 14 அணு உலைகள் தற்போது நம்நாட்டில் சிறப்பாக இயங்கி வருகின்றன.

    * தெய்வீக உடல்
    ஓர் இறையுடலிலே ஓர் இறைவாழ்க்கை. இதுதான் நாம் எதிர்நோக்கியிருக்கும் இலட்சியத்தினுடைய வழிமுறை. ஆனால் இந்த இறையுடல் என்பது என்ன? இவ்வுடலின் பண்பு எத்தகையதாக இருக்கும்? இதன் கட்டமைப்பு, செயல்பாட்டு முறைகள் எப்படி இருக்கும்? தற்போது நமக்குள்ள பல குறைபாடுகளுடன் கூடிய, குறுகிய எல்லைக்கு உட்பட்ட உடலிலிருந்து அந்தப் புதிய, பூரண உடலை எப்படி வேறுபடுத்திக் காண முடியும்? இந்த மண்ணுலகில், மண்ணியலையே அடிப்படையாகக் கொண்டு இயங்கப் போகும் அந்த உடல் வாழ்க்கையின் நடைமுறை என்னவாக இருக்கும்?

    * வெப்பக் கூடு கருவாடு
    நெய்த்தலை (நெத்தலி), மிகச் சிறிய மீன்; சாலை, சிறிய மீன்; இவற்றை அப்படியே உப்பில் முதலில் ஊறவைக்கலாம். பின்னர் வெயிலில் காயவிடலாம். சுறா, பேய்ச்சாலை போன்ற பெரிய மீன் வகைகளின் உடலை அறுத்துப் பிளந்து, தசைப் பகுதியைக் கீறி உப் பிடலாம், பின்னர் காயவைக்கலாம். உப்பூறல் உடலின் நீர்ப் பங்கையும் வேதி மாற்றத்தையும் குறைக்கும், கிருமிகளையும் அறுகாலிகளையும் அணுகவிடா. காயவைத்தலால் உடலின் நீர்ப் பங்கு கணிசமாகக் குறையும். காய்ந்த மீனில் உணவுச் சத்துக் கெடுவது மிகக் குறையும். மீன் இறந்து சில ஆண்டுகள் வரை அதன் உணவுச் சத்தைக் கருவாடாகப் பேணலாம்.

    * சவாலே சமாளி
    கூட்டம் நடந்துகொண்டிருக்கையில், ஆணையாளரும் பரபரப்புடன் வந்து சேர்ந்தார். அதே சமயத்தில், எங்கள் எல்லோரையும் வம்பு செய்து வேடிக்கை பார்த்த சுற்றறிக் கையும் பொள்ளாச்சி தாலுகா அலுவலகக் கடைநிலை ஊழியர் மூலம் வந்தது. அதைக் கூட்டத்திலிருந்த துணை ஆட்சியருக்குத் தெரிவித்தோம்.

    தலைக்கு வந்தது, தலைப்பாகையோடு போயிற்று!

    * பணம் – வாமன கதை :: ரேவதி பாலு
    வேலை செய்யும்போது பக்கத்திலேயே நின்று திருத்தங்கள் சொன்ன அய்யாவும் அம்மாவும், வேலை முடிந்து கூலிக்காக நின்ற போது, “நாளைக்கு வாயேம்ப்பா! வாங்கிக் கிட்டுப் போயிடலாம்!’ என்று சர்வ சாதாரண மாகச் சொன்னபோது, நாள் முழுவதும் வேலை செய்த உடல் அசதியோடு மனவலியும் சேர்ந்துகொண்டது செல்வராஜூக்கு.

    * தேவன் வருவாரா? :: ஜெயகாந்தன்
    “அதோ நெலாவிலே பாரேன்…. அன்னக்கி என் தேவன் அங்கேருந்துதான், இறங்கி வந்தார்…. ஆயா, அந்தத் தேவனோட ஒடம்பு தங்கம் மாதிரி சொலிச்சிது. அவரு நெலாவிலேருந்து எறங்கி வந்து என்கிட்டே பேசினார். நான் இந்த மரத்தடியிலே படுத்திருந்தேன்… அவரைப் பார்த்துச் சிரிச்சேன்…. நெலவுக்கும் தரைக்குமா, சரிவா ஒரு பாலம் மாதிரி போட்டிருந்தது…. அவரு வரும்போது அந்த பாதை மறைஞ்சிப் போச்சு… ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும்போதும் அந்தப் பாலம் ஒவ்வொரு அடி மறைஞ்சி போச்சு…

    * தமிழ் இலக்கியத்தில் ஜெயகாந்தன் தடம் :: திருப்பூர் கிருஷ்ணன்
    “கடந்த கால எழுத்தாளர்களில் நீங்கள் ஒரே ஒருவரைத்தான் சொல்ல வேண்டும் என்றால் யாரைச் சொல்வீர்கள்?’ என்று கேட்டேன். புதுமைப்பித்தன் பெயரைச் சொல்வார் எனக் காத்திருந்தேன். ஆனால் யோசித்துவிட்டு “அழகிரிசாமி’ என முணு முணுத்தார் அவர். “இப்போது இருப்பவர்களில் ஒருவரை மட்டும் சொல்லவேண்டுமானால்?’ எனக் கேட்டேன். யோசிக்காமல் தயக்கமின்றி “ஜெயகாந்தன்’ என்று தெரிவித்தார்.

    * புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளங்கள் :: ஜெ ஜெயலலிதா
    இந்த நேரத்தில், கிராமப் புறங்களில் உள்ள வீடுகளில் சாண எரிவாயுக் கலன்கள் பிற வாயுக் கலன்களை அமைத்தும்; விவசாயப் பெருமக்கள் சூரிய சக்தி பம்புகளை விவசாயத்திற்கும் குடிநீருக்கும் பயன்படுத்தியும்; தொழிற் சாலைகள், தாவர எரிவாயுக் கலன்களை, சூரிய வெப்பக் காற்று மற்றும் சுடுநீர்க் கலன்களை அமைத்தும்; மின்சாரத்தைச் சேமித்துப் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளங்களைப் பயன்படுத்திக்கொள்ள முன் வரவேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

    * வெற்றித் திருமகள் : சுதாராணி ரகுபதி
    பெங்களூரில் பிறந்தவர்; மைசூர் பல்கலைக்கழகத்தில் தத்துவத்திலும் சமூகவியலிலும் பட்டம் பெற்றவர்; கே.பி. கிட்டப்பா பிள்ளை, யு.எஸ். கிருஷ்ணா ராவ், மயிலாப்பூர் கெüரி அம்மாள் ஆகியோரிடம் பரதக் கலையைப் பயின்றவர்; வயலின் மேதை செüடையா, வாகேயகாரர் வித்து வான் மதுரை என். கிருஷ்ணன் ஆகியோரிடம் இசைப் பயின்றவர்; சிறு வயதிலேயே பாரதப் பிரதமர் ஜவகர்லால் நேரு உள்ளிட்ட பல பிரமுகர்கள் முன் பரதநாட்டியத்தை மேடையேற்றியவர்.

    * புதிய திசையில் பயணிப்போம்!
    காற்றாலை மின்சாரம், சூரிய ஒளியிலிருந்து மின்சாரம், கடல் அலை மின்சாரம், சாண எரிவாயுக் கலன்கள், அணுவைப் பிளந்து மின்சாரம், ஹைட்ரஜன் சக்தி… என எண்ணற்ற முறைகளில் மின்சாரம் தயாரித்து வருகிறார்கள். தாவரக் கழிவுகள், கரும்புச் சக்கை, நகரக் கழிவு, தொழிற்சாலைக் கழிவு, ஜவ்வரிசி – மரவள்ளிக் கிழங்கின் கழிவு, கோழி எச்சம் ஆகியவற்றிலிருந்தும் மின்சாரம் தயாரிக்க முடிகிறது.

    இயக்குநர் செல்வராகவன்

    Ananadha Vikadan :: என் குடும்பத்தினர் யாரையும் என்னால் நேராகப் பார்த்துப் பேச முடியாது. யார் என்ன பேசினாலும், நான் தண்டமாக இருக்கிறேன் என்று குத்திக்காட்டுவது போல் இருந்தது! அப்போதெல்லாம், கடவுள் என் முன்னால் வந்து எனக்கு எதிரில் அமர்ந்து கால் மேல் கால் போட்டபடி பேசிவிட்டுப் போவார்.

    என் அப்பா கேட்டவுடன், ‘என் கதையைத்தான் முதலில் எடுப்பேன்!’ என்று அடம் பிடிக்காமல், ‘சரி’ என்று சொன்ன அந்த ஒரு சிறிய பதில்தான், என்னை அடுத்த கட்டத்துக்கு அழைத்துச் சென்றது. எவ்வளவு சிறிய வாய்ப்பிருந்தாலும், அதில் முன்னேற்றத்துக்கு ஒரு துளி தென்பட்டாலும் சம்மதித்து, சவாலை ஏற்பது உத்தமம்!

    இன்றைய இளைஞர்களிடம் எனக்குப் புரியாதது இதுதான். எத்தனையோ சின்னச் சின்ன நல்ல வாய்ப்புகளையெல்லாம் கோட்டை விட்டுவிட்டு, வாழ்க்கையெல்லாம் புலம்பியபடி திரியும் எத்தனையோ இளைஞர்களைப் பார்த்திருக்கிறேன். காற்றிலே ஒரு நூல் பறந்து வந்தாலும், அதைப் பிடித்து முன்னுக்கு வர மாட்டேன் என்று வறட்டுக் கௌரவம் பார்க்கிறார்கள். அவர்களுக்கு ஒரே ஒரு வார்த்தை… ‘காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்’ என்று சொல்லி வைத்த முன்னோர்கள் முட்டாள்கள் இல்லை!

    இப்படி அட்வைஸ் சொல்கிற அளவுக்கு நான் பெரியவன் இல்லை. அது எனக்கும் தெளிவாகத் தெரியும். ஆனாலும் காதல், கனவு, வாழ்க்கை பற்றிய என் வாழ்க்கைப் பாடங்கள் உங்களுக்கும் பயன்பட வேண்டும் என்கிற ஆசையில்தான் எழுதினேன்… ‘கனா காணும் காலங்கள்!’