சென்ற வருடம் வந்த படங்களுக்கான, பல சிறந்தத் திரைப்பட பட்டியல்களில் முக்கிய இடத்தை இந்தப் படம் பிடித்திருக்கிறது.
தலைப்பு யேசுநாதரின் அணுக்க சீடர்களை நினைவுறுத்தும். நெட்ஃப்ளிக்சில் ஆறு மாதம் முன்பு வந்த போதே பார்த்திருந்தேன். கிறிஸ்துமஸை ஒட்டி குடும்பத்தினருடன் மீண்டும் பார்த்தேன்.
வருடத்திற்கு ஒரு முறையாவது இந்த மாதிரி பெரிய கட்டுரை எழுத நேரம் கிடைக்கிறது. இந்த வருடம் இந்த சினிமாவிற்கான விமர்சனம் + அறிமுகம்:
இது எதற்காக இந்த வடிவம்:
- மத நூல்கள், சாம வேதம், ஹிந்துஸ்தானி இசையை ஒருங்கிணைப்பது
- படத்தில் வரும் கிசுகிசுக்களுக்கு உருவம் தருவது
- கலை, தாகம், தேடல் என்பதற்கு வரி வடிவம் கொடுப்பது
- சமகாலப் படங்களை ஒப்பிடுவது
- சங்கீதமும் சமயமும் ஒன்றா என ஆராய்வது
- படத்தில் வரும் மேற்கோள்களை அப்படி மொழியாக்கம் செய்வது
- வட இந்திய இசைக்கு சற்றே அறிமுகம் தருவது
- படத்திற்கு விமர்சனம் என்பது இந்த தொகையறாக்களை ஒருங்கிணைக்கும் சபை
நீங்கள் ‘கல்லி பாய்’ பார்த்திருப்பீர்கள். அது மசாலா சினிமா. ஹீரோ கீழே விழுவான்; ஃபீனிக்ஸ் பறவை என எழுந்திருப்பான். அது சீடரின் வெற்றியை பிரும்மாண்டமாக்கி, சாகசத்தை நிஜம் போல் காட்டும்.
டிஸ்சிப்பிள் மாதிரி படங்கள் நிஜம்.
படத்தின் இன்னொரு பாதி குருநாதர். அதற்கு “டெட் பொயட்ஸ் சொஸைட்டி” மாதிரி மசாலா காவியங்கள் பார்த்திருப்பீர்கள். ஆசான் வழிநடத்துவார். நெறிப்படுத்துவார். அதுவும் நிஜத்தில் கப்ஸா.
வெறுமனே, இது உண்மை; அது பொய் என போட்டு உடைக்காமல் உணர்த்தும் படம் எதுவுமே சிறந்த படம்.
விரிவான விமர்சத்திற்கு #சொல்வனம் / #solvanam வாருங்கள்.
வாசித்து உற்சாகமூட்டிய மீனாக்ஷி பால்கணேஷ்-க்கு நன்றிகள்.