Monthly Archives: மார்ச் 2006

Ministers doing their loyalty Saashtaanga Namaskar…

Ministers doing their loyalty Saashtaanga Namaskaram in Jeyalalita & Sasigala – Jeevanandham Posted by Picasa

Ministers doing their loyalty Saashtaanga Namaskar…

Ministers doing their loyalty Saashtaanga Namaskaram in Jayalalitha & Sasikalaa – Dhanabal Posted by Picasa

Ministers doing their loyalty Saashtaanga Namaskar…

Ministers doing their loyalty Saashtaanga Namaskaram in Jeyalalitha & Sasikala – Anwar Raja Posted by Picasa

Black Panther Party

ஹூயி நியுட்டன் (Huey Newton (1942–1989)) குறித்த புத்தகத்தின் சிற்றுரை:

Spirit of the Black Panther Introduction - I :: audio post - click to play

முன்னுரை

Book Intro - audio post - click to play

புத்தகத்தில் இருந்து:

David Hilliard, Keith Zimmerman, Kent Zimmerman : audio post - click to play

புத்தகத்தைக் குறித்து மேலும் அறிய – Amazon.com: Huey : Spirit of the Panther: Books: David Hilliard,Keith Zimmerman,Kent Zimmerman

நன்றி: சி.ஸ்பான் – புக் டிவி


| |

Raama Gurunaathan

இராம குருநாதன் பச்சையப்பன் கல்லூரி பேராசிரியர். சங்க காலத்தை மட்டுமே பாராட்டும், தமிழ் ஆசான்களில், தற்கால போக்குகளையும் ஆர்வத்துடன் கவனிக்கிறார்.

சன் டிவியின் வணக்கம் தமிழகத்தில் நடந்த பேட்டியில் இருந்து:

Translation of Tamil works, Analysis/Comparison with other Dravidian Languages/English :: an audio post - click to play

இன்னொரு பகுதி:

Sun TV's 'Vanakkam Thamizhagam' Intro for Prof. Rama. Gurunaathan on Tamil - Sangam Literature vs Post Modernism Isms :: this is an audio post - click to play

| |

தலித் அடையாளமா? தமிழ் அடையாளமா?

பிபிசி தமிழ்: எதிர்வரும் தமிழக சட்டமன்றத்தேர்தலில், புதிய தமிழகம் கட்சி 150 தொகுதிகளில் போட்டியிடப்போவதாக, அக்கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

டாக்டர் கிருஷ்ணசாமி செவ்வி (அலர்ட் விட்டவர்: Sambhar Mafia)

அதேசமயம், தம்மோடு கூட்டணி அமைப்பதற்கு காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர்கள் சிலர் தொடர்புகொண்டு பேசியதாகவும், ஆனால், தமிழக சட்டமன்றத்தேர்தலில் கூட்டணிக்கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கும் அளவுக்கு காங்கிரஸ் கட்சிக்கு அதிகாரம் இருப்பதாக தமக்கு தெரியவில்லை என்றும் அவர் கூறினார்.

தமது கட்சியுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக ஆளும் அஇஅதிமுக தரப்பிலிருந்தும் பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் கூறிய கிருஷ்ணசாமி, அஇஅதிமுக தலைமை, தமது கட்சிக்கு உரிய அங்கீகாரம் அளித்து, தமது தலித் சமூகத்திற்கு சம அந்தஸ்தும் அதிகாரப்பகிர்வில் உரிய இடத்தையும் உறுதி செய்தால் அஇஅதிமுகவுடன் தமது கட்சி கூட்டணி அமைத்துக்கொள்ள தயாராக இருப்பதாக, அவர் தெரிவித்தார்.

அஇஅதிமுகவுடன் தமது கட்சிக்கு ஏற்கெனவே ரகசிய ஒப்பந்தம் உருவானதாக வெளியாகும் தகவல்களை உறுதியாக மறுத்த கிருஷ்ணசாமி, எந்த தேர்தல் உடன்பாடானாலும், அது வெளிப்படையாக இருக்க வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு என்றும் அவர் கூறினார்.

தமக்கும், விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல் திருமாவளவனுக்கும் கருத்து வேறுபாடுகள் எதுவும் இல்லை என்று தெரிவித்த கிருஷ்ணசாமி, கடந்த காலத்தில் தலித் என்கிற பொதுவான தளத்தில் தாங்கள் ஒருவரும் இணைந்து செயல்பட்டதாகவும், ஆனால் திருமாவளவன் தலித் என்கிற தனி அடையாளத்தை விட்டு விலகி, தமிழ் அடையாளத்தில் தன்னை சுருக்கிக்கொண்டதால் தான் தலித் ஒற்றுமையில் பின்னடைவு ஏற்பட்டதாகவும் அவர் கூறினார்.

தலித் அடையாளத்திற்கு தமிழ் அடையாளம் ஒரு பின்னடைவை உருவாக்ககூடிய விடயம் என்றும் அவர் தெரிவித்தார்.

கூட்டணி கணக்குகள்

தி.மு.க கூட்டணி

தி.மு.க – 143
காங்கிரஸ் – 45
பா.ம.க – 30
கம்யுனிஸ்டுகள் – 14
முஸ்லீம் லீக்/இதர கட்சிகள் – 2

Update: ஜெயலலிதா இந்திய தேசிய லீக்கிற்கு இரண்டு தொகுதிகளும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கிற்கு ஒரு தொகுதியும் கொடுத்து கூட்டணியில் இழுத்துள்ளார்.

ஆர்.எம்.வீ
கண்ணப்பன்
பிற சாதி சங்கங்கள் – இதயத்தில் இடம்

அ.தி.மு.க கூட்டணி

அ.தி.மு.க – 172
ம.தி.மு.க – 35
விடுதலை சிறுத்தைகள் – 9
இந்திய தேசிய லீக் -2
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் – 1
பா.ஜ.க – 15 [கடைசி நிமிட பல்டி நடக்கலாம்]

வெளியில் இருப்பவை / எந்நேரமும் அ.தி.மு.கவில் சேரலாம் என்றிருப்பவை

புதிய தமிழகம்
பார்வார்டு ப்ளாக்
விஜயகாந்தின் தே.தி.மு.க
உதிரி கட்சிகள்

அப்படி வந்து பா.ஜ.க உள்ளே வரமால் போனால், பத்ரி சொல்வது போல நடப்பதற்கு வாய்ப்பிருக்கிறது. ஆனால், பார்வார்ட் ப்ளாகில் கார்த்திக் 35 இடங்கள் கேட்கிறார் – காமெடி படங்களில் நடித்து, நன்றாக நகைச்சுவை உணர்வு பொங்க பேசுகிறார். விஜயகாந்த் சடாலென ரிவர்ஸ் கியரில் இப்போது எல்லா இடங்களில் இரண்டு திராவிட கட்சிகளுக்கும் போட்டு என்னத்த கண்டீர்கள் என்று அறைகூவல் விடுகிறார், கடைசி நிமிடம் சூட்கேஸ் மாறலாம்.
புதிய தமிழகமும், வி.சி.களும் ஒரே அணியில் இருந்தால் அது எந்தளவிற்கு உபயோகப்படும் என்று தெரியாது.

இப்போதைக்கு மேலுள்ள கணக்கில் மாறுதல் வரவேண்டுமானால், பா.ம.க.விற்கும், கம்யுனிஸ்டுகளுக்கும் வாய்ப்புகள் இருக்கின்றன. வை.கோ இல்லாததால், 20 தொகுதிகள் மிச்சம் என்று எண்ணியவாறே கூட்டணி கட்சிகள் பங்கீட்டினை அதிகரிக்கச் சொல்லுவார்கள்.

ஆனால், கலைஞரின் சாமர்த்தியமே, எவையெல்லாம் அ.தி.மு.க வின் கோட்டை என்று நினைக்கிறாரோ, அவற்றினை காங்கிரஸ், கம்யுனிஸ்டுகளின் தலையில் கட்டிவிடுவார். டிட்டோ ஜெயலலிதாவும். 135 தொகுதிகளுக்கு குறைவாக தி.மு.க போட்டியிட்டால், கூட்டணி ஆட்சி கோஷம் தொடங்க ஏதுவாக இருக்கும்.

இப்போதைக்கு சுவாரசியமான நிகழ்வு இனி வரும் மாதங்களில், வை.கோ கருணாநிதியினை எதிர்த்து என்ன பேசுவார்? மருத்துவர் தான் “அன்பு சகோதரர்”, “அன்பு சகோதரி” என்று மாறுவாரா என்ன? “சமத்துவ நல்லாட்சி அமைய” வை.கோ “அன்பு சகோதரிக்கு” ஒட்டுப் போட சொல்லுவாரா? அல்லது கருணாநிதி அன்பு தம்பி துரோகியாகிவிட்டான் என்று புறநானூறு கதைகள் சொல்வாரா?

ஆக மொத்தம், அடுத்த இரண்டு மாதங்கள், சுவாரசியத்திற்கு பஞ்சமில்லை.

வைகோ – அதிமுக கூட்டணி

முன்னாள் எதிரிகளான வைகோவும் ஜெயலலிதாவும் இன்று கூட்டு சேர்ந்துள்ளனர். திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 22 சீட்டுகளுக்குமேல் கிடையாது என்று நேற்று கருணாநிதி அறிவித்தபிறகு இந்த நகர்வு எதிர்பார்க்கப்பட்டதே.

வைகோவுக்கு அதிமுக கூட்டணியில் 35 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இப்போதைக்கு அதிமுக கூட்டணி நிலவரம்:
விடுதலைச் சிறுத்தைகள் – 9
மதிமுக – 35

இன்னமும் விஜயகாந்த், பாஜக, புதிய தமிழகம் ஆகியவை அதிமுகவுடன் சேர வாய்ப்புகள் உள்ளன. பலரும் சொல்வதுபோல கம்யூனிஸ்டுகள் அணி மாறுவார்கள் என்று நான் நினைக்கவில்லை.

வைகோ அதிமுக கூட்டணிக்குச் செல்வது பாமக, காங்கிரஸ் கட்சிகளுக்கு திமுக கூட்டணியில் அதிக இடங்கள் கிடைக்க உதவும். இப்பொழுது மேலும் பிரித்துக்கொடுக்க திமுகவிடம் 22 இடங்கள் உள்ளன. அதில் 10 நிச்சயம் பாமகவுக்குப் போய்ச்சேரும். இதனால் பாமக 35 இடங்களிலும், காங்கிரஸ் 45 இடங்கள் வரையிலும் போட்டியிடுவார்கள் என்று நினைக்கிறேன். கம்யூனிஸ்டுகளுக்கு 15 இடங்கள். 4-5 இடங்கள் இதர உதிரிகளுக்கு. திமுக 135 இடங்களிலாவது போட்டியிடும்.

அதிமுக கூட்டணியில் இன்னமும் 20 இடங்கள்வரை வெளியாருக்குக் கொடுக்க ஜெயலலிதா முன்வரலாம். ஆளுக்கு ஐந்து வீதம் விஜயகாந்த், பாஜக, புதிய தமிழகம் ஆகியவை பெறலாம். இதனால் அதிமுக கிட்டத்தட்ட 170 இடங்களில் போட்டியிடும்.

தேர்தல் விஷயங்கள்

தேர்தல் 2006 பதிவு சற்றே தூங்கிவழிவதால் சில அப்டேட்கள்:

* தமிழகத்தில் தேர்தல் தேதி நிச்சயம் செய்யப்பட்டது. மே 8, 2006.

* ஒரே கட்டமாகத் தேர்தல் நடக்கும். கிட்டத்தட்ட ஒரே அளவுள்ள மாநிலமான மேற்கு வங்கத்தில் ஐந்து கட்டமாகத் தேர்தல் நடக்கிறது.

* திமுக மாநில மாநாடு இன்று திருச்சியில் தொடங்குகிறது. ஞாயிறு அன்று கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கும் இடங்களைப் பற்றி மேடையிலேயே அறிவிப்பார் கருணாநிதி.

* புதிய தமிழகம், அதிமுகவுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.

Madras Engg College Protests

நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் வேண்டாமா? | எஸ்.ஆர்.எம் கல்லூரி ரகளை | Dreamchaser’s Blog | SRM Engineering College Under ATTACK!

மாணவர்களை நினைத்தால் சந்தோஷமாக இருக்கிறது. அணி திரண்டிருக்கிறார்கள். ஆதிக்க சக்திகளை தூக்கியெறிந்திருக்கிறார்கள். அநியாயத்துக்கு எதிராக குரல் எழுப்பியிருக்கிறார்கள். எஸ்.ஆர்.எம். அனுப்பிய அடியாட்களையே மிரள வைத்திருக்கிறார்கள்.

மணி ரத்னம் கூட நம்பும்படியாகத்தான் படம் எடுத்திருக்கிறார். ‘இரமணா‘, ‘ஜெண்டில்மேன்‘ போன்ற எழுச்சிப் பட கிளைமேக்ஸ்கள் கூட நிஜத்தில் சாத்தியமே.

எம்.ஜி.ஆர். கல்லூரி மாணவர்கள்தான் முதலில் தட்டிக் கேட்டிருக்கிறார்கள் (கல்லூரி மாணவன் சொன்னபடி). ஏற்கனவே கூவம் ஆக்கிரமிப்பால் இடிபாடுகளுக்கிடையில் கல்லூரிக்கு சென்று வந்தவர்கள். (என்னுடைய முந்தைய பதிவு).

பி.ஈ. கிடைக்காது. பி.எஸ்சி.தான் தருவார்கள் என்றவுடன் கையில்க கிடைத்ததை வைத்துத் கண்ணில் பட்டதையெல்லாம் தாக்கியிருக்கிறார்கள்.

விஷயம் பரவி ‘பாரத் என்ஜினீயரிங்‘ கல்லூரிக்கு சென்றிருக்கிறது. பிரச்சினையை சுமூகமாக அணுகி, கரிசனத்துடன் பார்த்தவர்கள் இந்த மாணவர்கள் மட்டும்தான்.

அடுத்த நியூஸ் எஸ்.ஆர்.எம். அடைந்திருக்கிறது.

பக்கத்தில் இருக்கும் நெடுஞ்சாலை உயர்தர உணவகத்தை ரணகளமாக்கியிருக்கிறார்கள். கம்ப்யூட்டரை அப்படியே திருடாமல், உடைத்து விட்டு, பார்ட் பார்ட்டாக பிரித்து, சி.பி.யூ., மௌஸ், கீ-போர்ட், ராம், சவுண்ட் கார்ட் என்று அக்குவேறாக கடத்தியிருக்கிறார்கள்.

அந்தப் பகுதியிலிருந்து பாரிமுனை வருவதற்கு நண்பர் ஒருவர் 800 ரூபாய் கொடுக்க வேண்டிய அளவு ஆட்டோக்காரர்களுக்கும் அமர்க்களமான வருமானம்.

சத்யபாமா‘வில் போர் முரசு கொட்டியவுடன் விழித்துக் கொண்ட மேனேஜ்மெண்ட், மாணவர்களின் +2 மார்க் ஷீட்களை கிழித்தெறிந்திருக்கிறது. அனேகருக்கு நம்முடைய ஒரிஜினல்களும் கிழிபடுமோ என்ற பயத்தில் அடங்கினாலும், கல்லூரி பஸ்கள் எல்லாம் பலத்த சேதம்.

நியாயம் கேட்க போன காஞ்சிபுரம் சங்கரா பொறியியல் கல்லூரியின் கூட்டத்தில் நசுங்கி மிதிபட்டு மாணவன் ஒருவன் இறந்திருக்கிறான்.

அம்ருதானந்தமயி, வேலூரி இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜி என்று இன்னும் சிலர் அமைதி காக்கிறார்கள்.

ஒரு ஸீட் வாங்க இரண்டு லட்சம் ரூபாய் கேட்டுப் பெறுகிறார்கள். கணினிப் பொறியியல் கேட்காமல் இரண்டாம் தர நிலையில் உள்ள எலெக்ட்ரிகல், எலெக்ட்ரானிக்ஸுக்கு ஒன்றரை லட்சம் என நிர்ணயித்திருக்கிறார்கள்.

கிரெஸெண்ட், வேல்டெக், வெங்கடேஸ்வரா போன்ற பெருசுகள் இன்னும் ‘அண்ணா பல்கலைக்கழக’த்துடன் இணைந்திருக்கிறார்கள். தொலைநோக்குடன் தனிவழியாக செல்லாமல் கூட்டுக் குடும்பத்தில் நிம்மதியான வாழ்க்கை.

இட ஒதுக்கீடுகளினால் சீட்டே கிடைக்கவில்லை என்பது புராணமாக மாறி, ‘அண்ணா பல்கலை’யுடன் இணைந்த கல்லூரிகளில் பல இடங்கள் காலியாக இருக்கிறது. இருந்தாலும், எம்ஜியார், எஸ்ஸாரெம், சங்கரா என்று லட்சம் கொடுத்து, கோடிக் கணக்குகளிலும் மண் விழுந்ததாகவே மாணவர்கள் நினைக்கிறார்கள்.

தன்னம்பிக்கை என்பதெல்லாம் காணாமல் போயிருக்கிறது. க்ரூப் டிஸ்கஷனில் வெற்றி பெறுவதற்கும், ஆப்டிடியூட் போட்டிகளில் தேர்வாவதற்கும் பிஈ-யாக இருந்தல் என்ன்? பி.டெக். ஆக இருந்தால் என்ன? பி.எஸ்சி.யாக இருந்தால் என்ன?

இந்த மாதிரி திறமையுடன் ஆசிட் பாட்டில் வீசுவது எல்லாம் அரசியலுக்கு வந்தால் பயன்படும். இப்படிப்பட்ட ‘கூட்ட‘ மனப்பான்மையுடன் ரகளை செய்வது கட்சி ஆரம்பித்தால், திராவிட பாரம்பரியத்தைக் கட்டிக் காக்கும்.

ஆனால், சொந்தக் கல்லூரியின் பஸ்ஸையும், தினசரி பயன்படுத்தி வித்தை கற்கும் கணினிகளையும் உடைப்பதனால் யாருக்கு லாபம்?

வெளியூருக்கு சென்று ‘நான் சத்யபாமாவில் படித்தேன்’/’நான் எம்.ஜி.ஆரில் என்ஜினியரிங் கற்றேன்’ என்றால் இனி எல்லாருக்கும் தெரிந்திருக்கும். ‘ஓ… கம்ப்யூட்டர் லேப் எல்லாம் அடிச்சு உடைச்சீங்களே? அந்த காலேஜ்தானே…’ என எளிதாக அறியுமாறு விசிட்டிங் கார்ட் செய்திருக்கிறார்கள்.

தான் நினைத்தால், தங்கள் படை சேர்ந்தால் அழிச்சாட்டியம் செய்யலாம் என்னும் தைரியத்தை சினிமாவும் சமூகமும் சேர்ந்து இவர்களுக்கு தோன்ற வைத்திருக்கிறது.

வருகிற தேர்தலில் கட்சி ஆரம்பித்து, கன்ஸ்ட்ரக்டிவ் ஆக மாற்ற தலைவர்தான் எவரும் இல்லை.


| |