Monthly Archives: மார்ச் 2006

78th Oscar – Academy Awards

‘தி டெய்லி ஷோ’ வழங்கும் ஜான் ஸ்டூவர்ட் சொன்னதில் மனதில் நின்ற சில ஜோக்குகள்

  1. ஆஸ்காருக்கு வோட்டளிக்கும்போது கவலைப்பட வேண்டாம். உங்கள் வோட்டுக்களை ஒழுங்காக கணக்கில் எடுத்துக் கொண்டு, வெற்றியைத் தேர்ந்தெடுப்பார்களே! (ஜார்ஜ் புஷ்ஷுக்கு உள்குத்து)
  2. இங்கே இருக்கும் பெண்மணிகளைப் பாருங்கள். திருட்டு விசிடிப் பிரச்சினையால் போதிய அளவு மாராப்பு கூட போட முடியவில்லை. (பகட்டான ஆடை தரித்தாலும், ‘தியேட்டருக்கு கூட்டம் வரலியே’ என்று நீலிக் கண்ணீர் வடித்தவர்களுக்கு காணிக்கை.)
  3. தைரியமாக அரசாங்கத்தின் தகிடுதத்தங்களை அம்பலப்படுத்திய ஊடகங்கள் குறித்த படங்கள் எல்லாமே ஏன் பீரியட் படங்களாகவே இருக்கிறது? (தற்காலத்தில் ‘குட் நைட் குட் லக்’ சொல்பவர்கள் அடங்கிப் போவதை கவனித்தார்.)
  4. ஆப்பிரிக்காவில் பாதி குழந்தைகளை ஏஞ்சலினா ஜோலி-தான் தத்தெடுக்கப் போவதாக நினைத்து பெரிய வெயிட்டிங் லிஸ்ட்டே இருக்கிறது. நான் கூட காத்திருப்புப் பட்டியலில் பதிந்து கொண்டேன்.
  • பச்சை கலர் திரையைப் பின்னால் வைத்துக் கொண்டு ‘கிங் காங்’ ஜாலம் காட்டுவதைக் குறிக்க பச்சை டிரெஸில் விருது வழங்க வந்தார் பென் ஸ்டில்லர்.
  • ‘ப்ரோக்பெக் மவுண்டென்’க்கு முன்பே தற்பால் விரும்பிகளைக் காட்டும் வெஸ்டர்ன் படங்கள் வெளிவந்ததாக நையாண்டி செய்யும் பிட்-ஒட்டிய வெட்டிக் காட்டிய ரீல்கள் சிரிப்பலையைக் கொணர்ந்தது. தொடர்ந்து திரையிடப்பட்ட சீரியஸ் montage-கள் ஜான் ஸ்டூவர்ட்டே self-deprecating-ஆக சொன்னது போல் இதற்கு மேல் காட்டுவதற்கு எதுவுமே இல்லை என்பது போல் அயர்ச்சியை ஏற்படுத்தியது.
  • ஜென்னிஃபர் ஆனிஸ்டன் விருது வழங்குவதற்கு வந்திருந்தார். பிராட் பிட் + ஆஞ்சலினா ஜோலியைக் காணோம்.
  • நாம் காந்தியை மறந்தாலும், பயோகிராஃபி குறித்தப் பதிவின் முடிவாக காந்தியைக் காண்பித்து ஆஸ்காரை சிறப்பித்துக் கொண்டார்கள்.
  • விருது பெற்றதற்குக் காரணமாக இருந்தவர்களுக்கு நன்றி நவிலலை அநியாயத்துக்கு ப்ரெஷர் போட்டு, இசையில் அமுக்கி, மைக்கைத் துண்டித்து துரிதகதியில் மேடையை விட்டு விரட்டினார்கள்.
  • விருதுகளை அள்ளிய ‘கிராஷ்’ படப் பாடலின் முன்னுரையாக
    1. ‘காழ்ப்புணர்ச்சிக்கும் அரவணைப்புக்குமான போராட்டம்;
    2. மன்னித்தலும் வருத்தத்துக்கும்;
    3. பாவமும் மீட்சியும்’

    என்று அருமையான முன்னோட்டம் கிடைத்தது.

  • தேர்தலின் போது ‘ஜெயலலிதா ஆட்சி அழிச்சாட்டியம்’ என்று திமுக-வும்; ‘மத்திய ஆட்சி மோசம்’ என்று அதிமுக-வும் பிரச்சாரம் செய்வது போல் ஆஸ்கார் பரிந்துரைப் பெற்றவர்கள் குடுமிப்பிடி விளம்பரங்கள் இட்டால் எப்படி இருக்கும் என்னும் கற்பனை அமெரிக்க தேர்தல் கள நிஜத்தை பிரதிபலித்து சிரிக்கவும் வைத்தது.
  • ஜெஸ்ஸிகா ஆல்பா ரொம்ப திருத்தம் 🙂
  • புன்னகையரசி என்னும் பட்டத்தை ஜென்னிஃபர் கார்னருக்குத் தரவேண்டும். ஏழு மாச கர்ப்பத்துடன் வழுக்கி விழப் பார்க்கும் ஸ்டண்ட் எல்லாம் அடித்து புன்முறுவல்களுடன் விருது வழங்கினார்.
  • ‘I am just trying to matter’ – சிறந்த நடிகை விருது வென்ற ரீஸ் விதர்ஸ்பூன
  • ‘Art is not a mirror, but it is a hammer’ – க்ராஷ் படம் தயாரித்தவர்கள்.
  • நிகழ்சியின் மாஸ்டர்பீஸ் என்பது சிறந்த படத்துக்காகப் பரிந்துரைக்கப்பட்ட இசையை எல்லாம் வயலினில் லாவகத்துடன் கொண்டுவந்தவரையே சேரும். ஆப்பிரிக்க இசையைக் கொடுக்கும் ‘தி கான்ஸ்டண்ட் கார்டனர்’ முதல் வெஸ்டர்ன் சாயல் கொண்ட ‘ப்ரோக்பேக் மவுண்ட்டன்’ வரை ஒலிக்கவிட்டார்.
  • இசைக்காக விருதை வென்றவர் அர்ஜெண்டைனாவை சேர்ந்தவர். ஏ.ஆர். ரெஹ்மான் எப்பொழுது 🙂
  • டிவிடி-யில் படத்தைப் பார்க்க வேண்டாம்; வெள்ளித் திரையில் கண்டால் மட்டுமே படங்கள் ரசிக்கும் என்னும் அறிவுறுத்தலை அகதெமி தலைவர் கொடுத்தார். (ஸ்டூவர்ட் கேட்க மறந்த கேள்வி: பின்ன ஏன் சார் எல்லா திரைப்படங்களும் குறுந்தட்டிலும் வெளியாகிறது? எச்.பீ.ஓ முதல் ஏ.பி.சி வரை எல்லா கன்னல்களிலும் ஒளிப்பரப்பப்படுவதும் ஏன்???)
  • விளம்பரங்கள் நன்றாகவே இருந்தது.
    1. லோரியால்-க்கு இமை சிமிட்டிய ஐஷ்வர்யா பச்சான் ராய்;
    2. அழகிய ஆடைகளில் உலவிய ஜேசி பென்னி மங்கையரின் உடைகள்;
    3. மனோஜ் நைட் ஷ்யாமளனின் கற்பனைச் சிறகுகளை விரித்த அமெரிக்கன் எக்ஸ்பிரஸ்;
    4. டையட் கோக்கினால் டட்ச் தைரியம் பெற்றவனின் காதல் முத்தம்
    5. குரங்குகளுக்கு வேலை பார்ப்பவனை கேரியர்பில்டர்.காம் மூலம் தப்பிக்க சொல்வது


    | |

  • Bale Paandiya – Movie Review

    பொழுது போகாத வாரயிறுதி மதியம். தொலைக்கட்சியில் ‘பலே பாண்டியா‘. ஓவர் ஆக்சன், மெலோடிராமா, கறுப்பு-வெள்ளை என்று பயமுறுத்தும் குணாதிசயங்களுடன் இருக்குமோ என்னும் முன் முடிவோடுதான் சேனலை மாற்றவில்லை.

    நகைச்சுவையான திரைக்கதை; மூன்று வேடங்களில் சிவாஜியின் அசர வைக்கும் பொருத்தம்; பத்தொன்பது வயது தேவதையாக தேவிகா; நவீன விவேக்காக எம்.ஆர். ராதாவின் நையாண்டி; படம் முடியும் வரை அசர வைத்து ரசிக்க வைக்கிறது.

    தற்கொலை செய்ய நினைக்கும் பாண்டியனை (சிவாஜி) கபாலி (எம்.ஆர். ராதா) காப்பாற்றி, வீட்டுக்கு அழைத்து வந்து, வயிறு முட்ட உணவு கொடுத்து ரட்சிக்கிறார். சாப்பாடு, இருப்பிடம் எல்லாம் கிடைத்தாலும், தான் முப்பது நாளில் இறந்தே தீருவேன் என்று கொடுஞ்சபதம் எடுக்கிறான் பாண்டியன். எம்.ஆர். ராதாவின் அடியாளாக மருது (சிவாஜி-2) பணியாற்றுகிறார்.

    முப்பது நாள்களுக்குள்ளாக ஹீரோயினுடன் லவ் பிறக்கிறது. பர்ஸை அடித்துக் கொண்டுபோன திருடனிடம் இருந்து பணப்பையை மீட்டு, கீதா (தேவிகா)விடம் சேர்க்கும் சந்தடியில், ‘நான் என்ன சொல்லிவிட்டேன்… நீ ஏன் மயங்குகிறாய்‘ என்று காதல் டூயட் பாட ஆரம்பிக்கிறார் பாண்டியர்.

    மருதுவுக்கான உயிர் காப்பீட்டை ஆரம்பித்து, பாண்டியனைத் தற்கொலை செய்து கொள்ளுமாறு பணிக்கிறார் கபாலி. காதல் வயப்பட்ட ஹீரோவோ, ‘வாழ நினைத்தால் வாழலாம்… வழியா இல்லை பூமியில்‘ என்று ஜோடியுடன் உல்லாசமாகப் பாடி வருவதால், கபாலியிடமிருந்து தப்பித்து விடுகிறார்.

    மனநோய்ப்பட்ட ‘வசந்தி’யைக் காப்பாற்றுகிறார். கைலாசமலை எஸ்டேட் அதிபரின் நன்றியுணர்வால் அவரின் வளர்ப்பு மகனாகத் தத்தெடுக்கப் படுகிறார். கபாலியின் சூழ்ச்சியால் மருதுவின் குற்றத்துக்காக சிறையில் அடைக்கப்பட்டு ‘யாரை எங்கே வைப்பதென்று யாருக்கும் தெரியலை… அட அண்டங்காக்கைக்கும் குயில்களுக்கும் பேதம் புரியலை‘ பாடுகிறார்.

    கீதாவின் அப்பாவிடம் பெண் கேட்டு வருமாறு கீதாவின் அத்தை மகன் ரவி (தயாரிப்பாளர் பாலாஜி) அழைக்கிறார். மாமா அமிர்தலிங்கம் பிள்ளை (எம். ஆர். ராதா-2)வின் நேர்காணலில் ‘நீயே உனக்கு என்றும் நிகரானவன்‘ என்னும் பனிக்கட்டிப் பாடலைப் பாடி சோப் போடுகிறார் பாண்டியர். கபாலியுடன் ஆன உருவ ஒற்றுமையைப் பார்த்து அதிர்கிறார்; குழம்புகிறார்.

    அமிர்தலிங்கத்திற்குத் தெரியாமல் பாண்டியன் – கீதா திருமணமும், வசந்தி – இரவியின் கல்யாணமும் கைலாச மலை எஸ்டேட்டில் நடந்தேறுகிறது. கடைசி நிமிடத்தில் அமிர்தலிங்கத்தின் தோற்றத்தில் கபாலி ஆஜராகி அட்சதைப் போட்டு, மாப்பிள்ளை பாண்டியனைக் கடத்தி, சப்ஸ்டிட்யூட்டாக மருதுவை இறக்க திட்டம் தீட்டுகிறார்.

    சாந்தி முகூர்த்தப் பாடலாக இரட்டை அர்த்தம் தொனித்தாலும், இரு அர்த்தமும் சைவ அர்த்தமான ‘அத்திக்காய்.. காய்‘ பாடலின் முடிவில் ரியல் அமிர்தலிங்கம் வந்து விடுகிறார். மருது – கபாலி & கோ-வினால் பாண்டியன் கடத்தப்பட்டு கடலில் வீசப்படுகிறார். இறப்பதற்கு முன் எழுதிய கடிதம் ‘

    கடனில் வாழும் என் அண்ணனிற்கு ஆதரவு கொடுக்குமாறுக் கேட்டுக் கொள்கிறேன். அவர் இறப்பிற்கு பின் அனைத்து சொத்துகளும் வசந்தியைச் சேரும்

    ‘ – வக்கீலை சென்றடைகிறது.

    அண்ணனாக மூக்குக் கண்ணாடி, நரைத்த முடி, இயல்பான ஆங்கிலம் ஷங்கர் (சிவாஜி-3). சயிண்டிஸ்ட் ஷங்கருக்கு சதி தீட்டும் சந்தியா (ஜெயலலிதாவின் அம்மா) மனைவி.

    சந்தியாவின் எண்ணப்படி ஷங்கரே ‘பாண்டியனாக’ மாறி சொத்தை அபகரிப்பதற்காக நடிக்க செல்கிறார். கபாலியின் எண்ணப்படி மருதுவும் ‘பாண்டியனாக’ மாறி எஸ்டேட்டை அபேஸ் செய்ய வருகிறார்.

    நிஜ பாண்டியன் உயிர் பிழைத்தாரா? ‘வாழ நினைத்தோம் வாழுவோம்‘ என்று பாடிய கீதாவுடன் யார் இணைந்தார்கள்? என்பதை நகைச்சுவையாக வெள்ளித்திரையில் கிரேஸி மோகன் டிரேட்மார்க் நகைச்சுவையுடன் சொல்லியிருக்கிறார்கள்.

    மூன்று வேடங்களிலும் டிரேட்மார்க் மேனரிசங்களுடன் சிவாஜி அசத்தியிருக்கிறார். உருவ அமைப்பு கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருந்தாலும், கடைசி நிமிடங்களில் ஒரே ஆடையில் வந்தாலும், பாவனைகளிலேயே ‘மருதுவா’, ‘பாண்டியனா’, ‘ஷங்கரா’ என்று தெரிவிக்கிறார்.

    அசின் போன்ற துள்ளலுடன் தேவிகா. அழுவதற்கு வாய்ப்பு கிடைத்தாலும், அறுபதுகளின் துடுக்கான இளம்பெண்ணாக வளைய வந்திருக்கிறார்.

    பி.ஆர். பந்துலுவின் இயக்கத்தில் திரைக்கதை தொய்வில்லாமல் நகர்கிறது. குழப்பக்கூடிய இரட்டை, மூன்று வேடங்களையும் தெளிவாகக் கொண்டு செல்கிறார்.

    திருவிளையாடலின் ‘நக்கீரா…’ போல் பலே பாண்டியாவின் ‘மாமா அவர்களே‘ குறிப்பிடத்தக்க சொற்றொடர். கண்ணாடி முன் டூப்ளிகேட்டுடன் ஒத்திசைவோடு வரும் காட்சிகள் பல படங்களில் வந்துவிட்டாலும், எம். ஆர். ராதாவின் அங்க சேஷ்டைகளுடனும் வசனங்களுடனும் பார்க்கும்போது தனி சிறப்பைப் பெறுகிறது.

    ஹீரோ மூன்று வேடங்களில் வருவது போல், மூன்று கெட்டப்களில் வந்து – நாயகனை மிஞ்சும் விதத்தில் குணச்சித்திர நடிகர் எம். ஆர். ராதா பின்னியிருக்கிறார்.

    நகைச்சுவைப் படத்தில் சீரியஸான விவாதங்களும் இடம்பெறுகிறது. தன் காதலை நியாயப் படுத்தி, அதே சமயம் தங்கை வசந்தியின் காதலை நிராகரிக்கும் முரணை – பாண்டியனிடம் கண்ணியமாக, இரவி சுட்டிக் காட்டும் இடம்; மன்னிப்பு பற்றி அலங்கார வசனங்கள் இல்லாமல், ஆனால் தெளிவாக விளக்கும் வசனங்கள்; தேர்ந்த அரசியல்வாதி போன்ற அந்தக்காலத்திற்குப் பொருத்தமான, ஆனால் இன்றும் பொருந்தும் கருத்துக்களை முன்வைக்கும் கபாலி; அவற்றில் சில:

  • ‘தேர்தல்ல போனாத்தான் ஜெயிக்க முடியலியே… எனக்கும் அரசியலுக்கும் ராசியில்ல. நான் இனிமே அரசியல் பக்கமே எட்டிப் பார்க்கப் போவதில்லை!’ (62-இல் சிவாஜி)

  • ‘நான்கு நாள்களாக எதுவுமே சாப்பிடவில்லை; கொலைப்பட்டினி’ (பாண்டியன் ‘சிவாஜி’)

    பாண்டியனின் உருவத்தை கண்ணால் மதிப்பிட்டுக் கொண்டே ‘பட்டினி கிடக்கிற உடம்பாத் தெரியலியே?’ (கபாலி ‘எம்.ஆர். ராதா’)

  • ‘எத்தனை ஜென்மம் எடுத்தாலும் அவர்தான் கணவன்’ (தேவிகா)

    ‘நாளைக்கே என்னன்னு தெரியாது… ஜென்மக் கணக்கில் ப்ளான் போடுறியா?’ (அமிர்தலிங்கம் ‘எம் ஆர் ராதா’)

  • ‘தங்கள் இதயமென்ன கல்லா…
    வாயிலிருந்து உதிர்வதென்ன சொல்லா…
    இந்த மருமகனோடு மல்லா…’
  • ‘குறிக்கோளில்லாமல் கோட்டுவாய் கூட விடமாட்டேன்’

  • ‘நாம் நினைப்பதெல்லாம் நடக்காவிட்டால், நினைக்காததெல்லாம் கூட நடக்கலாம் அல்லவா?’
    (‘பாண்டியன்’ உயிர் பிழைத்திருக்கலாம் என்று தேற்றும்போது)

    அடுத்த முறையோ அலது மீண்டுமோ கே டிவியில் சிரிக்க வாய்ப்புக் கிடைத்தால் தவறவிடவேண்டாம்.


    | |

  • Prostating Tamil Nadu Ministers doing their loyalt…

    Prostating Tamil Nadu Ministers doing their loyalty Saashtaanga Namaskaram in Jeyalalitha & Sasikala – Valarmathy Posted by Picasa

    Prostating Tamil Nadu Ministers doing their loyalt…

    Prostating Tamil Nadu Ministers doing their loyalty Saashtaanga Namaskaram in Jeyalalitha & Sasikala – Vaidhya Lingam Posted by Picasa

    Tamil Nadu Ministers doing their loyalty Saashtaan…

    Tamil Nadu Ministers doing their loyalty Saashtaanga Namaskaram in Jeyalalitha & Sasikala – Thalavaai Sundharam Posted by Picasa

    Tamil Nadu Ministers doing their loyalty Saashtaan…

    Tamil Nadu Ministers doing their loyalty Saashtaanga Namaskaram in Jeyalalitha & Sasikala – Shamughanadhan Posted by Picasa

    Tamil Nadu Ministers doing their loyalty Saashtaan…

    Tamil Nadu Ministers doing their loyalty Saashtaanga Namaskaram in Jeyalalitha & Sasikala – How Ponnaiyan (Finance Minister & #2 in TN) lost his credibility with the leader. Posted by Picasa

    Tamil Nadu Ministers doing their loyalty Saashtaan…

    Tamil Nadu Ministers doing their loyalty Saashtaanga Namaskaram in Jeyalalitha & Sasikala – O P Paneerselvam (Ex. Chief Minister of Tamil Nadu) Posted by Picasa

    Ministers doing their loyalty Saashtaanga Namaskar…

    Ministers doing their loyalty Saashtaanga Namaskaram in Jeyalalita & Sasigala – Pandurangan Posted by Picasa

    Ministers doing their loyalty Saashtaanga Namaskaa…

    Ministers doing their loyalty Saashtaanga Namaskaaram in Jayalalidha & Sasikala –  Posted by Picasa