Tag Archives: Fun

வாரயிறுதி விருந்தினர் – 'உருப்படாதது நாராயண்'

‘உருப்பாதது’ நாராயணுடன் வீக்எண்ட் ரிலாக்ஸ் கேள்விகள்

1. ஒபாமா & மெகயின்: இலக்கியவாதி அடையாளம் யாருக்கு பொருத்தமாக இருக்கும்?

மெகயினுக்கு தான் இலக்கியவாதி அடையாளம் பொருத்தமாக இருக்கும். ஏனெனில் அவரொருவர் தான் வாரத்து ஒரு முறை தான் சொன்ன கருத்திலிருந்து வேறொரு கருத்தினை சொல்லி அதையே பொதுமக்களின் கருத்தாக ஊர்ஜிதம் செய்து கொள்கிறார். இசங்கள் விட்டு இசங்கள் சடசடவென தாவும் மெகயின் தான் இலக்கியவா(ந்)தி!

2. ப்ளாக்பெரியை ‘கண்டுபிடித்த’ ஜான் மகயின்; கணினியே பயன்படுத்த தெரியாது என்னும் ஜான் மகயின்: எந்த மெக்கயின் உங்களைக் கவர்கிறார்?

ப்ளாக்பெரி ஜான் மெகயின் தான்.பொண்டாட்டிகளின் தொல்லைகள் இல்லாமல் கில்மா மேட்டர்களின் மெயில் படிப்பதையே வேலை என சொல்லி ஜம்பம் அடித்துக் கொள்ளலாம்.

3. சிண்டி மெகயின் & மிஷேல் ஒபாமா: யார் நல்ல பேச்சாளர்?

பேச்சாளரை விட்டு தள்ளுங்கள். சாரா பேலினின் நீச்சலுடை வீடியோ யூ ட்ப்யூல் இருக்கிறதா ?

4. குடியரசு, ஜனநாயக கட்சிகளை மட்டும் வைத்துக் கொண்டு என்ன பெரிய அரசியல் நடத்துகிறது அமெரிக்கா? சோஷலிச, கம்யூனிச, இந்திராயிச, பெரியாரிய, அண்ணாயிச, திராவிட, சமத்துவ அரசியல் தெரிவு/தெளிவுகள் இல்லாமல் உப்புச் சப்பில்லாத அரசியல்தானா? (கேள்வி உபயம்: ஸ்ரீதர் நாராயணன்)

இல்லை அமெரிக்காவிலும் இசங்கள் உண்டு.

வால் மார்டிச, மெக்டோன்லாடிச, கூகிளச, ஆப்பிளச அரசியல் பின்நவீனத்துவ சண்டைகளும், அதன் தெரிபுகளுன் ஊடே ஜார்ஜ் வாஷிங்கடன் கண்ட கனவு வில் சும்தின் இடது தோள்பட்டையிலும், 50 செ ன் டின் நா உச்சரிப்பிலும், இன்ன பிற ஜனங்களின் கண்டுக்கொள்ளாத இடத்தில் குத்தப்பட்ட டாட்டூவுமாக கன ஜோராக தான் இருக்கிறது.

5. தற்போது நடக்கும் பொருளாதாரப் பிரச்சினையினால் திடீரென்று அமெரிக்க தேர்தல் முறை மாற்றியமைக்கப்படுகிறது. தமிழ்நாட்டு நடிகரை ஜனாதிபதியாக்க முடிவெடுக்கிறார்கள். எவர் பொருத்தமானவர்? ஏன்?

கேள்வி பாஸ் ஆன் டூ இட்லிவடை 🙂

Puzzles for Dasavatharam Movie Vimarsagar: How to review a Kamal Film?

நன்றி: ட்விட்டரில் சிறில்

நட்பைக்கூடத்தானே கற்பைப் போல எண்ணுவோம் – ஆண்

தோழியின் வீட்டுக்கு சென்ற மனைவி நேரம் போனது தெரியாமல் சன் டிவி பார்த்ததில் தாமதமாகிப் போகிறது. இரவு வீட்டுக்கு திரும்பாமல், நண்பியின் இடத்திலேயே டேரா அடித்துவிடுகிறாள். செல்பேசியிலும் போதிய அளவு சிக்னல் கிடைக்காமல் படுத்துகிறது.

காலையில் வீட்டுக்கு வந்தவுடன் தோழியின் இல்லத்தில் உறங்கியதை கணவனிடம் சொல்கிறாள்.

தனக்குத் தெரிந்த அவளின் தலை பத்து நண்பர்களை அழைத்து விசாரிக்கிறான் புருஷன்காரன். அவர்களில் எவரிடத்திலும் மனைவி தங்கவில்லை.

கொஞ்ச நாள் கழித்து…

கணவன் வீட்டுக்கு வராமல் வெளியில் தங்கிவிடுகிறான். வீடு திரும்பியவுடன், சில நாள் முன்பு மனைவி சொன்ன அதே சாக்கை சொல்கிறான். ‘நண்பனின் வீட்டில் போதை அதிகமாகி உறங்கிப் போனேன்’.

அவளும் அவனுடைய ஆத்மார்த்தமான அத்யந்த சினேகிதர்களைக் கூப்பிட ஆரம்பிக்கிறார்.

எட்டு பேர் அவன் தன்னுடைய இடத்தில் சீட்டாடி களைத்து நித்திரை பயின்றதாக சொல்கிறார்கள். பாக்கி இரண்டு பேர் இன்னும் அவன் அங்கேதான் இருப்பதாக தலையிலடித்து சத்தியம் செய்கிறார்கள்.

அசல்