Tag Archives: DMK

Congress: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை

நன்றி: தினமணி

தொடர்புள்ள பதிவு: Who will win? Congress vs BJP: Neeraja Chowdhry: India Elections 2009 Analysis « தேர்தல் முடிவு எப்படி இருக்கும்?: “தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குப் பின்னடைவு :: நீரஜா சௌத்ரி

கடந்த தேர்தலை விட காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் குறைகிறது; கூட்டணி கட்சிகள் நெருக்கடிக்கு பணிந்தது

2004-ம் ஆண்டு பாராளு மன்றத்தேர்தலின் போது மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 417 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி போட்டியிட்டது.

இதில் 150 தொகுகளில் தான் காங்கிரஸ் கட்சியால் வெற்றி பெற முடிந்தது. இந்த தடவை அதிக இடங்களில் போட்டியிட்டால் தான், கடந்த தடவை வென்ற 150 தொகுதிகளை விட கூடுதல் இடங்களை பெற முடியும் என்று காங்கிரஸ் தலைவர்கள் கருதினார்கள். இதற்காக மாநில கட்சிகளிடம் காங்கிரஸ் பேச்சு நடத்தி வருகி றது. ஆனால் காங்கிரஸ் நினைத்த படி எதுவும் நடக்கவில்லை.

கூட்டணி கட்சிகள் எல்லாம் தாங்கள் அதிக தொகுதிகளை வைத்துக் கொண்டு சிறிதளவு இடத்தையே காங்கிரசுக்கு விட்டுக் கொடுக்க முன் வந்துள்ளன.

  • உத்தரபிரதேசத்தில் முலாயம் சிங்,
  • பீகாரில் லல்லு பிரசாத்,
  • மராட்டியத்தில் சரத்பவார்,
  • மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி

ஆகியோர் மிக, மிக குறைந்த தொகுதிகளையே காங்கிரசுக்கு கொடுக்க உள்ளனர்.

காஷ்மீரில் உள்ள தேசிய மாநாட்டு கட்சியும் காங்கிரசுக்கு குறைவான இடங்களைத் தான் தர முடியும் என்று கூறி உள்ளது. இது காங்கிரசுக்கு நெருக்கடியாக மாறி உள்ளது. உத்தரபிரதேசத்தில் கடந்த தடவை காங்கிரஸ் கட்சி மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் 73 தொகுதி களில் போட்டியிட்டு 9 இடங்களில் வெற்றி பெற்றது. இந்த தடவை முலாயம்சிங் யாதவின் சமாஜ் வாடி கட்சியுடன் நட்பை ஏற்படுத்தியுள்ள காங்கிரசுக்கு 17 முதல் 20 தொகுதிகள் வரையே கிடைக் கும் என்று தெரிகிறது. எனவே கடந்த தேர்தலுடன் ஒப்பிடுகையில் இந்த தடவை சுமார் 30 இடங்களை காங்கிரஸ் இழக்கும் என்று தெரிகிறது.

DMDK Vijaikanth Alliance Partner Cartoons

DMDK Vijaikanth Alliance Partner Cartoons

காங்கிரஸ் கட்சிக்கு இந்த தடவை ஆந்திரா, தமிழகம் இரு மாநிலங்கள் மட்டுமே ஆறுதலாக அமைந்துள்ளன. ஆந்திராவில் கணிசமான தொகுதிகளை பெற்று வெற்றி பெற முடியும் என்று சோனியா நம்பிக்கையுடன் உள்ளார்.

தமிழ்நாட்டில் கடந்த தடவை 10 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிட்டது. இந்த தடவை 20 தொகுதிகள் வரை தி.மு.க.விடம் காங்கிரஸ் கேட்கிறது. காங்கிரசுக்கு 12 முதல் 15 இடங்கள் வரை தி.மு.க. கொடுக்கும் என்று கூறப்படுகிறது.

Number of Seats & Vote Percetage of Congress

Seats & Votes

தொகுதிகள் எண்ணிக்கை குறைவது பற்றி காங்கிரஸ் பொதுச் செயலாளர்களில் ஒருவர் கூறுகையில், “கூட் டணி கட்சிகளுக்கு உரிய இடம் கொடுக்க வேண்டிய பொறுப்பு காங்கிரசுக்கு உள்ளது. அது தான் கூட்டணி தர்மமாகும். இது எங்களுக்கு அதிக பலத்தை தரும்” என்றார்.

கர்ட்டூன்: தமிழில் பெயர் சூட்டினால் தங்கம்

அடடே - மதி: தினமணி: பெயரில் என்ன இருக்கு?

அடடே - மதி: தினமணி: பெயரில் என்ன இருக்கு?

செய்தி: The Hindu : Tamil Nadu News : Babies with Tamil names to get gold ring: “Babies born in Corporation maternity hospitals will be given a one-gram gold ring each if they are given Tamil names, announced Mayor M. Subramanian.”

DMK Leaders: Dinamani Cartoons

dmk-leaders-then-now-family-karunanidhy-kanimozhi1

ஈழமும் திமுகவும்: ‘அடடே’ மதி: தினமணி கருத்துப்படங்கள்

துக்ளக் – புத்தாண்டு அட்டை கார்ட்டூன்

thuglaq-dmk-cover-new-year-calendar-image-karunanidhi

Deconstructing Anna – Derogatory remarks on Dalit?

அண்ணா சொன்ன செஞ்சிக் கோட்டை சம்பவம்

தமிழ்நாடு காங்கிரசின் சார்பில் முதலமைச்சராக இருந்தவர், “எங்களை எந்தக் காலத்திலும் பதவியிலிருந்து அசைக்க முடியாது” என்று சட்டமனறத்தில் தெரிவித்தார்.

அதற்கு பதிலளிக்கும் வகையில் அண்ணா குறிப்பிட்டார்.

“செஞ்சிக் கோட்டைக்கு மதிப்பு ஒரு காலத்தில் இருந்து வந்தது. அந்த மதிப்புக்குக் காரணம் தேசிங்கு ராஜன். அவன் செஞ்சிக் கோட்டைக்கு அதிபதியாக இருந்தவரைதான் அதெல்லாம். இப்பொழுது அதே செஞ்சிக் கோட்டையில் சில இடையர்கள் ஆடு, மாடு மேய்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களால் செஞ்சிக் கோட்டைக்கு மதிப்பு என்று சொல்லிவிட முடியுமா?”

இதற்கு அடுத்த இரண்டாவது பொதுத் தேர்தலில் ஐம்பது பேர் வரை சட்ட மன்றத்தில் திமுக உறுப்பினர்களாக வரமுடிந்தது.

நன்றி: அண்ணாவின் கதை: தினமணி கதிர் வெளியீடு :: நவீனன் (பிப்ரவரி, 1970)

‘புலிகள் பெயர் சொல்லி பல வழிகளில் பொருளீட்டும் காகிதப் புலிகள்’ – கலைஞர்

கேள்வி:- தமிழர்க்கும், தமிழ்நாட்டுக்கும் தாங்கள் துரோகம் செய்து விட்டதாக பழ. நெடுமாறன் சொல்லுகிறாரே?

கலைஞர்:- நெடுமாறன் போன்றவர்களுக்கு ஜெயலலிதாவின் பொடா பாணி அரசி யல்தான் துரோகமற்றதாகத் தெரியும்!

அண்ணாவுக்கும் – அடுத்து காமராஜருக்கும் – பின்னர் குமரி அனந்தனுக்கும் – பிறகு மூப்பனார் அவர்களுக்கும் துரோகம் செய்தது யார்? என்று கேட்டால் உண்மையான துரோகத்தின் மொத்த உருவத்தை அடையாளம் காணலாம். பாவம்; புலிகள் பெயர் சொல்லி பல வழிகளில் பொருளீட்டும் காகிதப் புலிகள்!

தொடர்புள்ள செய்தி & கட்டுரை: Pazha Nedumaran on POTA Detainees – Supporting the LTTE; Freedom of Expression « தினமணி: “நீதி நெறியை மதிக்காத முதல்வர்கள்”