Tag Archives: வாசிப்பு

தேவதச்சன் கவிதை – உயிர்மை

வானவில்கள்

அது
நிறங்கள் அடர்த்தியாகிக்
கொண்டுவரும் வானவில். என்
வீட்டின்மேல் அழகாய் வட்டமிடத்
தொடங்கியது
“எவ்வளவு பெரிய வில். உள்ளே
வந்தால் வீடு
உடந்துவிடும்தானே” என்கிறார்கள்
உறவினர்கள்
“வில்லும் உடைந்துதானே
போகும்” என்கிறார்கள்
நண்பர்கள்
கண்ணில் வழிந்தோடு
குமிழிகளில்
தானே வளர்கிறது
சப்தத்தைக் கடந்த அன்பில் வில்
தோன்றித் தோன்றி மறையும் சாலைகளாக
வளைந்திருக்கும்
வானவில்லுக்குள்ளே
இருக்கிறது என் ஊர்.
ஊருக்குள்ளே இருக்கிறது
என் வீடு,
எப்போதும்
கதவுகள் மூடியிருக்கும்
என் சின்னஞ்சிறிய வீடு

கல் எறிதல்
ஆளாளுக்கு கல் எடுத்து
எறிந்தனர். என் கையிலும்
ஒன்றைத் திணித்தனர்

உள்ளங்கையை விரித்து
மலைத்தொடர் வடிவத்தில்
இருந்த கல்லைப் பார்த்தேன்

உற்று நோக்கினேன்
உற்று நோக்கிக் கொண்டிருந்தேன். ஓசையற்று
மலைத்தொடர் மறைந்தது

வெறுங்கையை வேகமாக
வீசினேன்.
விடைபெறும் முகமாகவும்
என்னையும்
தூக்கிச் செல்லேன் என்று
இறைஞ்சும் விதமாகவும்.

சென்னை புத்ததகக் காட்சி – மனுஷ்யபுத்திரன் (சென்ற வருடம்)

நன்றி: உயிர்மை :: இதழ் 54 – பிப்ரவரி 2008

wrappers-publishers-generic-tamil-booksநடந்து முடிந்த 31 ஆவது சென்னை புத்தகக் காட்சி, மாறுபட்ட மங்கலான சித்திரங்களை பதிப்பாளர்கள், வாசகர்களிடையே உருவாக்கி இருக்கிறது. சென்னை புத்தகக் காட்சி கடந்த சில ஆண்டுகளாக தமிழில் எழுத்தியக்கம், பதிப்புத் தொழில் சார்ந்த மாற்றங்களை அளவிடும் ஒரு பெரும் நிகழ்வாக நடந்தேறி வருவதால் அதன் குணாதிசயங்கள் பற்றிய கேள்விகளும் விவாதங்களும் எழுப்பப்படுகின்றன. சென்னை புத்தகக் காட்சியின் வளர்ச்சி ஏறாளமான பதிப்பகங்கள் தோன்றுவதற்கு உந்துதலாக இருப்பது மட்டுமல்ல, தமிழகத்தின் முக்கிய மையங்களில் புத்தகக் காட்சிகள் நடத்தப்படுவதற்கும் காரணமாக இருக்கிறது.

:::

புத்தகங்களின் மீதான ஆர்வம் ஒரு பண்பாட்டின் விழிப்புணர்ச்சியோடு தொடர்புடையது. இந்த விழிப்புணர்ச்சியே புத்தகங்கள் வாங்குவதை ஒரு அத்யாவசிய தேவையாக மாற்றக்கூடியது. ஒரு சமூகத்தில் அத்தகைய விழிப்புணர்ச்சி பெருகாத வரை புத்தக சந்தையை ஒரு எல்லைக்கு மேல் விரிக்க முடியாது.

:::

கடந்த சில ஆண்டுகளாக சென்னை புத்ததகக் காட்சி கண்ட வளர்ச்சி பல புதிய முதலீட்டாளர்களையும் பெரிய நிறுவனங்களையும் பதிப்புத் துறை நோக்கி ஈர்த்திருக்கிறது. பதிப்புத் தொழில் வளர்ச்சி அடைவதற்கும் விரிவடைவதற்கும் புதிய முதலீட்டாளர்கள் வருவது மிகவும் அவசியம். தமிழ் எழுத்தாளனின் பிரசுரம் சார்ந்த நெருக்கடிகள் ஏற்கனவே பெருமளவு தீர்ந்துவிட்டதுடன் புதிய துறை சார்ந்த நூல்கள் தொடர்ந்து வெளிவருவதற்கான சூழலும் உருவாகி இருக்கிறது.

அதே சமயம் எந்த ஒரு மாற்றமும் தமிழில் நிகழும்போது அதன் எதிர்மறை அம்சங்களே மேலோங்குவது தமிழின் துரதிஷ்டங்களில் ஒன்று.

பதிப்பகத் துறைக்குள் நுழைந்திருக்கும் பெரிய நிறுவனங்கள் சந்தையைக் கைப்பற்றிக் கொள்ளும் ஆவேசத்தில் துறை சார்ந்த நூல்களை வாங்கும் வாசகனின் ஆர்வத்தை சுரண்ட முற்படுகின்றன. மேலோட்டமான தகவல்களுடனும் உவப்பற்ற மொழி நடையுடனும் அவசர அவசரமாக எழுதப்பட்டு, பதிப்பிக்கப்பட்டு, சந்தைப்படுத்தப்படும் இந்த நூல்கள் வாசகர்களிடையே கடும் ஏமாற்றத்தை ஏற்படுத்துவதை பரவலாகப் பார்க்க முடிந்தது.

ஒரு நூலை எழுதுவதற்கான குறைந்தபட்ச உழைப்போ மொழி ஆளுமையோ இன்றி எழுதப்படும் இத்தகைய நூல்களை பதிப்பிப்பவர்கள் தமிழில் செயல்படும் வெகுசன இதழியல் கலாச்சாரத்தை பதிப்புத் துறைக்குள்ளும் கொண்டுவந்து வெற்றியடையலாம் என நம்புகின்றனர்.

பத்திரிகை வாசகனும் புத்தக வாசகனும் குணாம்ச ரீதியில் வேறுபட்டவர்கள் என்பதை இந்த புதிய முதலீட்டாளர்கள் அறியாததற்கு காரணம் தமிழின் கலை, கலாச்சாரம், அறிவுத்துறைக்கும் இவர்களுக்கும் இடையிலான இடைவெளியே.

தமிழ் பதிப்புத்துறையை முழுக்க ஒரு சந்தையாக மட்டுமே அணுகுகிறவர்கள் இதற்குள் நீண்ட காலமாக செய்யப்பட்டு வரும் அறிவியக்கத்தையும் பண்பாட்டு இயக்கத்தையும் கடுமையாக அவமதிக்கிறார்கள்.

புத்தக கண்காட்சி ஒரு வர்த்தக மையம் மட்டுமல்ல. அது ஒரு பண்பாட்டு நிகழ்வு. அதில் ஏற்படக்கூடிய தளர்ச்சியினை போக்கி அதை வளர்த்தெடுப்பது காட்சி ஊடகங்களால் அழிக்கப்படும் ஒரு சமூகத்தின் பண்பாடியக்கத்தினை பாதுகாக்கும் ஒரு செயல்பாடு.

குறிப்பு: காலச்சுவடு பிப்ரவரி 2007 இதழிலும் இதே போன்ற ஒத்த கருத்துடைய தலையங்கம் வெளியாகியுள்ளது.

2008 – Tamil Books

சென்ற முறை இந்தியா போனபோது எனி இந்தியனில் வாங்கிய புத்தகப் பட்டியல். பரிந்துரைத்த எனி இந்தியன் தேவராஜனுக்கும் நிழல்கள் பிரசன்னாவுக்கும் நன்றி. கிழக்குப் பதிப்பகத்தில் வாங்கியது தனிப் பட்டியல்.

படித்ததும் பிடித்தவை நீலவண்ணத்திலும், கவராதவை சிவப்பு வண்ணத்திலும், படிக்க எடுக்காதவை கறுப்பு நிறத்திலும் உள்ளது.

வெங்கட்டின் இவ்வருடத் தொகுப்பு :: சென்னை புத்தகக் கண்காட்சி 2009

‘நுனிப்புல்’ உஷா: 2009ன் புத்தக சந்தையும் நான் வாங்கியவைகளும்

தொடர்புள்ள சில:

1. இரண்டாம் ஜாமங்களின் கதை: சல்மா – காலச்சுவடு
2. நாஞ்சில் நாடன் கதைகள் – தமிழினி
3. கானல் நதி: யுவன் சந்திரசேகர் – உயிர்மை
4. கணையாழி கடைசிப் பக்கங்கள் – சுஜாதா
5. சிலுவைராஜ் சரித்திரம்ராஜ் கௌதமன் – தமிழினி
6. ஆழிசூழ் உலகு: ஜோ டி குருஸ் – தமிழினி
7. கன்னி: ஜெ.பிரான்சிஸ் கிருபா – தமிழினி
8. யாமம்: எஸ்.ராமகிருஷ்ணன் – உயிர்மை
9. மணல் கடிகை: சூத்ரதாரி – தமிழினி
10. சாருநிவேதிதா ராஸ லீலா – உயிர்மை
11. சிலிர்ப்பு: தி. ஜானகிராமனின் தேர்ந்தெடுத்த சிறுகதை தொகுப்பு
12. வெள்ளாவி: விமல் குழந்தைவேல் – உயிர்மை
13. கமண்டல நதி – நாஞ்சில் நாடனின் புனைவுலகு: ஜெயமோகன் – தமிழினி
14. குள்ளச்சித்தன் சரித்திரம்: யுவன் சந்திரசேகர் – தமிழினி
15. நான் சரவணன் வித்யா: லிவிங் ஸ்மைல் வித்யா – கிழக்கு
16. நளினி ஜமீலா – ஒரு பாலியல் தொழிலாளியின் சுய சரிதை: தமிழில்: குளச்சல் மு. யூசுப் – காலச்சுவடு
17. கண்ணீரைப் பின் தொடர்தல்: ஜெயமோகன் – உயிர்மை
18. நிழல் முற்றம்: பெருமாள் முருகன்
19. மகாராஜாவின் ரயில்வண்டி: அ. முத்துலிங்கம்
20. வாஸவேச்வரம்: கிருத்திகா
21. சூடிய பூ சூடற்க: நாஞ்சில் நாடன்
22. கோவில் – நிலம் – சாதி: பொ. வேல்சாமி – காலச்சுவடு
23. பூமியின் பாதி வயது: அ. முத்துலிங்கம்
24. பெர்லின் இரவுகள்: பொ கருணாகரமூர்த்தி – உயிர்மை
25. ஆழ்நதியைத் தேடி: ஜெயமோகன் – உயிர்மை
26. ஆஸ்பத்திரி: சுதேசமித்திரன் – உயிர்மை
27. நிழல்வெளிக்கதைகள்: ஜெயமோகன்
28. நித்தியக்கன்னி: எம். வி. வெங்கட்ராம்
29. நவீனன் டைரி: நகுலன்
30. நினைவுப் பாதை: நகுலன்
31. இவர்கள்: நகுலன்
32. வாக்குமூலம்: நகுலன்
33. கூகை: சோ தர்மன்
34. தூர்வை: சோ தர்மன்
35. விசும்பு: ஜெயமோகன் – எனிஇந்தியன்
36. உயிர்த்தலம்: ஆபிதீன் – எனிஇந்தியன்
37. நவீனத் தமிழிலக்கிய அறிமுகம்: ஜெயமோகன் – உயிர்மை
38. நதியின் கரையில்: பாவண்ணன் – எனிஇந்தியன்
39. துங்கபத்திரை: பாவண்ணன் – எனிஇந்தியன்
40. ஸீரோ டிகிரி: சாரு நிவேதிதா – உயிர்மை
41. என் இலக்கிய நண்பர்கள்: ந.முருகேச பாண்டியன் – உயிர்மை
42. ஒற்றன்: அசோகமித்திரன்

நான் விரும்புவது நமீதாவைத்தான்

மக்கள் என்ன விரும்புகிறார்களோ அதைத்தானே தர முடியும்?

வாசகர்களுக்கு என்ன வேண்டும் என்பது முந்தைய காலத்தில் புரியாத புதிராக இருந்தது. இன்றைய சூடான இடுகைகள் காலத்தில் ‘நான் அதெல்லாம் படிப்பதேயில்ல’ என்று வெளியில் மேனாமினுக்கி விட்டு, கதவ சாத்தி க்ளிக்கினாலும் வெளியில் தெரிந்துவிடுகிறது.

அமெரிக்க தொலைக்காட்சிகளுக்கு இந்த விஷயம் தெரிந்திருக்கிறது. மும்பை சாலைகளில் சகட்டு மேனிக்கு தீவிரவாதிகள் சுட்டுக் கொண்டிருக்க, அமெரிக்க டிவி நிறுவனங்கள் அதைக் கண்டுகொள்ளவில்லை.

பாஸ்டன் க்ளோபும் நியு யார்க் டைம்சும் தலையங்கக் கட்டுரை தீட்டினாலும் என்ன பயன்? யாரும் அதை படிக்கவில்லை என்கிறது இந்த அலசல்

Fluff wins | Weekly Dig

So, you would think that the tragic events that shook Mumbai last Wednesday would have interrupted all that noise. You would be wrong. In fact, on Wednesday night, none of the networks cancelled their very important programming—like Private Practice and Law & Order—to deliver breaking news (at that point, we knew about the hostage situation and 80 people had been declared dead)

if you look at the Globe’s most emailed stories for this past week, the popular articles were overwhelmingly asinine. In first place, with 1,049 recommendations, was “Facebook Broke My Heart,”

Then stories on the SAT not being as important to college admission as it used to be, rats sniffing out bombs and 25 things to do in Boston for under $25 … all of these came before the headlining story on boston.com on Wednesday when the Mumbai attacks began. Not only did the Mumbai story come in sixth place during an incredibly slow news week, the stupid Facebook story was emailed twice as many times (1,049 times, compared to 495).

The top-ranking emailed stories for the Times were an op-ed piece about why we should be angry about the Citibank bailout

The second most-emailed story was about an evangelical TV host who preached from a giant bed with a paisley cover

And then there was the fucked-up story about Black Friday shoppers trampling a Wal-Mart employee to death.

“When they were saying they had to leave, that an employee got killed, people were yelling, ‘I’ve been on line since yesterday morning,’ ” Ms. Cribbs told The Associated Press. “They kept shopping.”

Because, c’mon, priorities! Speaking of priorities, this story ranked below a review of the new Blackberry, but above anything on Mumbai.

Why didn’t the Mumbai attacks merit more attention from us readers? The same reason there were profiles of Americans like the rabbi from Brooklyn and the Virginian father and daughter, and relatively nothing on the estimated 158 Indians killed (out of a total of about 180 fatalities) … because we’re constantly looking for ourselves in everything we consume, and Americans can’t identify with hand grenades and burning hotel rooms like we relate to internet stalking and Black Friday.

இதுவரை உளறியது

நன்றி: உளறல்

தெரியல’ என்பதற்கு இரண்டு அர்த்தங்கள்: விளங்கவில்லை (அல்லது) பார்க்க முடியவில்லை

நான் சட்ட அமைச்சரானால்:

1. மந்திரியாக பதவியேற்பதற்கு குறைந்தபட்சம் இரண்டாண்டுகளாவது லோக் சபா எம்.பி. ஆக இருத்தல் அவசியம்

2. எம்.எல்.ஏ, எம்.பி.க்கள் இரு முறைகளுக்கு மேல் ஒரே தொகுதியில் இருந்து தேர்தலில் நிற்க முடியாது.

3. இருபது ஆண்டுகளுக்கு மேல் தொடர்ச்சியாக மந்திரி பதவி/எம்.எல்.ஏ/எம்.பி ஆக இருக்க முடியாது. கட்டாய ஓய்வு தரப்படும்.

ஆகிய சட்டங்கள் அமலாக்கப்படும்.


மின்னஞ்சலில் கிடைத்த விவாதக் கருத்து:

“புரட்சி என்று நாடுபவர்கள் கருத்தளவிலும், அமைப்பளவிலும் செயல் திறன் போதாத மக்கள்.

பல கோடி மக்களின் வாழ்வில் நெருப்பைக் கொட்டி கருக அடித்த ஒரு பெரும் செயலை — புரட்சி என்று கொண்டாடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றன.

நம் தனிமனித இயலாமைகளை மக்கள் திரள் இயலாமையாக மாற்றி நம்மை அடியோடு திருத்தினால்தான் நம் வாழ்வு மாறும் என்ற நிலை போலவே சமுதாயமும் என்று கருதும் ஒரு வித கிட்டப் பார்வை இது (myopia).

உடோபியாவுக்குக் கடும் எதிரி மயோபியா. 🙂

அதே நேரம் உடோபியக் கனவுக்கு மக்கள் பலியாகாமல் தவிர்த்துப் பாதுகாப்பதும் மக்களின் மயோபியாதான்.”


  1. நண்பரின் நக்கல் நறுக் :: எல்லாருக்கும் ஏதோ குருட்டுத்தனம் இருக்கும், இவருக்கு இடது கண்ணில் ஒரு பக்கம் பார்வை தெரியாது என்று வைத்துக் கொள்வோம் என்று விட்டு விட்டேன். அவர் கண், அவருக்குக் குருட்டுத்தனம், நமக்கென்ன? அதைக் கட்டுரையாக எழுதி நம் மேல் திணித்தால், படிக்காமல் இருந்து விட்டால் போகிறது.
  2. “The bloody massacre in Bangladesh quickly covered over the memory of the Russian invasion of Czechoslovakia, the assassination of Allende drowned out the groans of Bangladesh, the war in the Sinai Desert made people forget Allende, the Cambodian massacre made people forget Sinai, and so on and so forth until ultimately everyone lets everything be forgotten.”
    – Kundera
  3. டவுன்லோடிட்டு பார்த்த திரைப்படத்தை விமர்சிப்பது, நண்பனின் டாவுக்கு மார்க் போடுவதற்கு ஒப்பாகும் என்றார் ஃபிகரின் அப்பாவாகிய விநியோகஸ்தர்.

பா ராகவன் :: (குதிரைகளின் கதை தொகுப்பு)

1. யுவர்ஸ் ஒபீடியன்ட்லி

இருக்கும் வரை எட்டிப் பார்க்காத அக்கறைகளும் அனுதாபங்களும், இறந்தபின் எல்லோருக்கும் எப்படியோ வந்துவிடுகிறது. மரணம் ஒரு நல்ல மருந்து. உயிரோடு இருக்கும் பலரின் மனநோய்களை அது சட்டென்று குணப்படுத்திவிடுகிறது

2. மூன்று காதல்கள்

அரச மரத்தடியில் கொண்டு வைத்த பிள்ளையார் சிலை போல், மாற்றங்களற்றுப் போனது வாழ்க்கை. எப்போதாவது சில்லறை விழும். சிலர் வணக்கிப் போவார்கள். பிழைப்பில் கலவரம் ஏற்பட்டால் தூக்கி, நீரற்ற கிணற்றில் போட்டு விடுவார்கள்.

3. ஆயில் ரேகை

“புத்திசாலி நவீன இலக்கியவாதிகள் தமிழ் சினிமாவுக்கு டயலாக் எழுதப் போகும்போது ஒரு மாதிரி பட்டும் படாமலும் ஸ்டேட்மெண்ட் விடுவார்கள் இல்லியா? அந்த மாதிரி. நான் உலக உத்தமன்தான். அவன் அயோக்கியன்தான். ஆனால், நானும் அவனும் சேரும் இந்த ஒரு விஷயம் மட்டும் புனிதப் பசுவின் பாலிலிருந்து தயாரிக்கப்பட்டது என்பது மாதிரி.”

4. பனங்கள், தென்னங்கள், கன்னங்கள் என்று எதிலெல்லாம் மெல்லிய கிக் கிடைக்கிறதோ, அதிலெல்லாம் ஈத்தைல் ஆல்கஹால் இருக்கிறதென்று அர்த்தம். (கன்னங்கள்? சந்தேகப்படாதீர்கள். நம் கண்ணுக்குத் தெரியும் மாபெரும் ஹைட்ரோகார்பன் ப்ராடக்ட், மனித உடல்தான்.)


இரண்டே அறைகள் கொண்ட வீடு :: யுவன் சந்திரசேகர்

தற்காலத் தமிழிலக்கியத்தில் வந்து சேர்ந்திருக்கும் புதிய போக்குகள், எழுத்தாளர்களெல்லாம் பத்தியாளர்களாக உருமாறிக் கொண்டிருக்கும் ரசவாதம், கவிதைகளில் பெரும் தேக்கம் வந்து சேர்ந்திருப்பது, புத்தகங்கள் மிக அதிக எண்ணிக்கையில் பிரசுரமாவதும் அவற்றைப் பற்றி மிகையான கூறுகளில் விளம்பரங்களும் மதிப்புரைகளும் வெளியாகி, அப்பாவி வாசகனைக் கடுமையான ஏமாற்றத்துக்குள்ளாக்குவதும், ஜனநாயகமயமாகும் எல்லாத்துறையிலும் இயல்பாகவே பதர்கள் அதிகரித்துவிடுவது என்று அலைந்து கொண்டிருந்தது பேச்சு.

இசைத்துறையும் விதிவிலக்கில்லை என்றும் சாஸ்திரிய சங்கீதமும் திரைப்பட பாடல்களும் கூட இந்த ஸ்திதிக்கு வந்து சேர்ந்துவிட்டன என்றும் நாங்கள் இருவரும் சேர்ந்து கண்டுபிடித்தோம்.

(வார்த்தை – ஜூன் 2008)

தமிழோவியம்.காம் வாக்கு

இந்த வார தமிழோவியத்தில் இருந்து

பாபா வாக்கு

அருள்வாக்கு

பெயரில் என்ன இருக்கிறது? ஜோசியரைக் கேட்டால் விஜய்காந்த்தின் ‘பெரியண்ணா’வை Periannaha என்று மாற்றியது போல் ஏதாவது நியுமராலஜிப்படி திருகிவிடுவார்.

உளவியல் ஆராய்ச்சியாளர்களிடம் கேட்டால் இனிஷியலில்தான் எல்லாமும் இருக்கிறது என்று முதலெழுத்தை கைகாட்டுகிறார்கள்.

நேரு ஏன் நியு டில்லியை ஆண்டார்? காந்திக்கும் காங்கிரசுக்கும் என்ன தொடர்பு? சென்னைக்கு செயலலிதாவுக்கும் எப்படி பொருத்தம்?தன்னையறியாமல் அன்னி பெசன்ட் பாரதம் நோக்கி வந்தார் என்று நிலைநிறுத்தாத குறை.

நம் முதலெழுத்தைப் பொறுத்து, அதே எழுத்துடைய ஊர், உறவினர், உடைமை எல்லாமே நாடிச் செல்கிறோம்.

பாலாஜி பாஸ்டனில் தங்குவதும், பாலாம்பிகா பெயரில் மயங்குவதும், பார்ன்ஸ் அன்ட் நோபிளில் புத்தகம் வாங்குவதும் சகஜம். லைஞர் ருணாநிதிக்கு எந்த மகவு பேல் பாசம் அதிகம் என்பது உங்களுடைய வீட்டுப்பாடம்.

எம்.பி.ஏ மாணாக்கர்களிந் பெயர்கள் ‘C’ அல்லது ‘D’யில் ஆரம்பித்தால் கம்மி மதிப்பெண்கள் எடுத்திருக்கிறார்கள். வழக்கறிஞர்களில் ‘A’ அல்லது ‘B’யில் பெயர் துவங்குபவர்கள் ஜோராகப் படித்து சி/டி இனிஷியல்காரர்களை விட நல்ல கிரேடு வாங்கியிருக்கிறார்கள். அப்பா இனிமேல் ‘ஏண்டா ஃபெயிலானே?’ என்று பிரம்பை தூக்கினால், ‘என் பெயரை ஒழுங்கா வைப்பா!’ என்று சொல்லலாம்.

ஆதாரம்: Moniker Maladies: When Names Sabotage Success. Leif D. Nelson & Joseph P. Simmons

சுட்ட வாக்கு

வகுப்புவாதத்தைத் தீனியாகக் கொண்டுதான் அந்த இயக்கம் இந்த அளவு வளர்ந்தது.

“உயிரும் மயிருமில்லா
உருவச் சிலைகளுக்கு
வயிர முடிகள் ஏனடா?”

“வாயும் வயிறுமில்லா
சாமிக்கு மானியமாகவே
வயலும் வாய்க்காலும் ஏன்டா?”

— என்றும்,

“சீரங்கநாதரையும்
தில்லை நடராசரையும்
பீரங்கி வைத்துப்
பிளப்பதுவும் எக்காலம்?”

— என்றும் அவர்கள் பாட்டுப் பாடினார்கள்.

“ஏரோட்டும் மக்களெல்லாம்
ஏங்கித் தவிக்கையிலே
தேரோட்டம் எனுனக்கு
தியாகராசா?”

— என்று கருணாநிதி பாட்டெழுதினார்.

அதற்குப் பதிலாக காங்கிரஸ்காரர்,

“ஏரோட்டும் மக்களெல்லாம்
ஏங்கித் தவிக்கையினிலே
காரோட்டம் ஏனுனக்குக்
கருணாநிதி”

— என்று பதில் பாட்டெழுதினார்

நன்றி: கண்ணதாசனின் வனவாசம்

பட வாக்கு

New Yorker Cover Cartoon - Images, Comics, satire

New Yorker Cover Cartoon - Images, Comics, satire

‘தி நியூ யார்க்கர்’ இதழிந் அட்டைப்படத்தை மேற்படி படம் அலங்கரித்திருப்பதை ஒபாமாவிடம் கண்டித்து இருக்கிறார்.

  • பராக் ஒபாமாவிற்கு முஸ்லீம் முண்டாசு,
  • மனைவி மிஷேல் ஒபாமாவிற்கு ருசிய துப்பாக்கி;
  • குளிர் காய எரியும் நெருப்பில் அமெரிக்கக் கொடி;
  • வெள்ளை மாளிகையில் ஒசாமா பின் லாடன் உருவப்படம்;
  • ஆப்பிரிக்க – அமெரிக்கர்களின் சிகையலங்காரத்தையும்
  • இஸ்லாமியச் சின்னங்களையும்

வைத்து கிண்டலடிப்பவர்களை கிண்டலடிப்பதுதான் நியு யார்க்கரின் குறிக்கோள். ஆனால், ஒபாமாவோ, ‘வெறும் வாயை மெல்பவர்களுக்கு’, சூயிங் கம் கொடுத்திருக்கிறது ‘நியு யார்க்கர்’ என்கிறார்.

பண வாக்கு

விலையுயர்ந்த வலையக முகவரிகளின் பட்டியல்

  1. Sex.com $12 million
  2. Porn.com $9.5 million
  3. Business.com $7.5 million
  4. Diamond.com $7.5 million
  5. Beer.com $7 million

நன்றி: ஃபோர்ப்ஸ்

ட்விட்டர் உரை வாக்கு

முதலாளி கூலிக்காரனை நடத்துவது போல் மக்கள் நலனில் அக்கறை செலுத்தும் அமெரிக்கா, தொழிலாளியிடம் வரி போடும்போது சோஷலிசம் பேசும். – லேக்னி & ஃப்ரெட் வில்சன்

பாடல் வாக்கு

ப்ரம்மம் ஒக்கடே பரப்பிரம்மமொக்கடே

அரசனா இருக்கட்டும்; ஆண்டியா இருக்கட்டும்; தூக்கம் ரென்டு பேருக்கும் ஒண்ணுதான்!
பிராமனணா இருக்கட்டும்; தலித்தா இருக்கட்டும்; நடக்கிறது இந்த பூமி மேலத்தான்!

அறுநூறு வருஷம் முன்பு தாழ்த்தப்பட்டவர்கள் திருமலைக்குள் நுழைய வைத்த அன்னம்மாச்சார்யாவில் பாடலை ஜனரஞ்சகமாக இயக்கியிருக்கிறார்கள்.

புத்தகங்கள் – Must browse Books: Library

சமீபத்தில் படிக்க வேண்டும் என்று நூலகத்தில் முன்பதிவு செய்துவைத்துக் கொண்ட புத்தகங்களின் பட்டியல்:

1. Nudge: Improving Decisions About Health, Wealth, and Happiness: Richard H. Thaler, Cass R. Sunstein

  • மக்கள் எடுக்கும் முடிவுகளில் நேர்மறையான தாக்கம் ஏற்படுத்துவது எவ்வாறு?
  • மோசமான தேர்ந்தெடுப்புக்கு வழிவகுக்காமல், வாழ்க்கையில் வெற்றியும் சமூகத்திற்கு நன்மையும் கிடைக்கும் வழி செல்ல வைப்பது எப்படி?

தொடர்புள்ள வலையகம்: Nudge

2. McMafia: A Journey Through the Global Criminal Underworld: Misha Glenny

  • சிரியானா, ட்ராஃபிக் மாதிரி உலகத்தில் நடக்கும் அக்கிரமங்களை அறிந்து கொள்ள வேண்டுமா?
  • இஸ்ரேலின் விலைமாதுக்கள் முதல் 93 மும்பை குண்டுவெடிப்புகள் வரை உள்ள தொடுப்பு

தொடர்புள்ள பேட்டி: McMafia: A Journey Through the Global Criminal Underworld by Misha Glenny – Carnegie Endowment for International Peace

3. அ) When Men Become Gods: Mormon Polygamist Warren Jeffs, His Cult of Fear, and the Women Who Fought Back: Stephen Singular

ஆ) Stolen Innocence: My Story of Growing Up in a Polygamous Sect, Becoming a Teenage Bride, and Breaking Free of Warren Jeffs: Elissa Wall, Lisa Pulitzer

இ) Escape: Carolyn Jessop, Laura Palmer

  • அமெரிக்காவில் பைபிள் பெல்ட் என்றழைக்கப்படும் டெக்சாஸ் சார்ந்த சுற்றுப்புறங்களில் இயங்கும் Fundamentalist Church of Latter Day Saints (FLDS) குறித்த பின்னணி
  • கடவுள் நம்பிக்கைகளுக்கும் சட்டத்திற்கும் இடையே உள்ள உறவு
  • மனித உரிமைகளும் மதங்களும் எங்கு உரசுகின்றன?

4. Worst-Case Scenarios: Cass R. Sunstein

  • எம்பி3 பேட்டி: Sunstein on Worst-case Scenarios, EconTalk Permanent Podcast Link: Library of Economics and Liberty
  • உலக வெம்மையாக்கலும் தீவிரவாத ஆபத்துக்களும் – எவ்வாறு ஒப்பிடலாம்?
  • இந்தியா & ஆப்பிரிக்கா: சுனாமி, ஏவியன் பறவை காய்ச்சல், ஒசோன் படலம் – பேராபத்து களங்கள்

5. அ) Freedom From Oil: How the Next President Can End the United States’ Oil Addiction: David Sandalow

ஆ) Over a Barrel: The Costs of U.S. Foreign Oil Dependence: John Duffield

  • உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வளம் இருந்தும் அமெரிக்கா ஏன் எண்ணெய் மேலே மட்டும் சார்ந்திருக்கிறது?
  • ஒவ்வொரு நாளும் 500 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு எண்ணெய் இறக்குமதியாகிறது. இது அதிகாரபூர்வ தகவல். இதில் வெளியே தெரியாமல் மறைந்திருக்கும் செலவினங்கள் எவ்வளவு?
  • சுருக்கமான செயல்திட்டம்: How the Next President Can End Our Oil Addiction
  • பாட்காஸ்ட் பேட்டி: Freedom from Oil: How the Next President Can End the United States’ Oil Addiction – Brookings Institution

6. The Really Inconvenient Truths: Seven Environmental Catastrophes Liberals Don’t Want You to Know About–Because They Helped Cause Them: Iain Murray

  • ஆல் கோர் நோபல் பரிசு பேசுவதற்காக சுற்றுச்சூழல் குறித்து ஏட்டுச்சுரைக்காயாக கவலைப்படுகிறாரா?
  • பூச்சிக்கொல்லிகளை தடை செய்ததும் மலேரியா பரவியதும்
  • உணவுத் தட்டுப்பாடு x பயிர்களில் தயாரகும் எண்ணெய் – சாப்பாட்டு பஞ்சம்

7. Invisible Nation: How the Kurds’ Quest for Statehood Is Shaping Iraq and the Middle East: Quil Lawrence

  • குர்திஸ்தான் வலுப்பெறுவதை மேற்கத்திய நாடுகளின் செல்லப்பிள்ளை துருக்கி எந்நாளும் விரும்பாது.
  • இரானுக்கும் சிரியாவுக்கும் கூட குர்து பகுதியில் உள்ள எண்ணெய் வளத்தின் மீது நிறையவே பாசம் இருக்கிறது. இப்படியாகப் பட்ட சந்தர்ப்பத்தில் உள்ள அலசல்

8. அ) Free Ride: John McCain and the Media: David Brock, Paul Waldman

ஆ) Amazon.com: The Real McCain: Why Conservatives Don’t Trust Him and Why Independents Shouldn’t: Cliff Schecter

  • அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் குடியரசு கட்சி சார்பாக போட்டியிடும் ஜான் மெகெயின் குறித்த பின்னணித் தகவல்கள்
  • மெக்கெயின் – இடதுசாரியா? மிதவாத வலதுசாரியா? கைதேர்ந்த அரசியல்வாதியாக எவ்வாறு ‘வெளிப்படையானவர்’ போல் வேஷம் கட்டுகிறார்?

9. An Unbroken Agony: Haiti, From Revolution to the Kidnapping of a President: Randall Robinson

  • அமெரிக்காவின் அருகில் இருந்தாலும் ஆப்பிரிக்காவை விட பரம ஏழையாக இருக்கும் ஹைதி நாட்டின் மேலோட்டமான சரித்திரம்
  • சமீபத்தில் நாடுகடத்தப்பட்ட ஜனாதிபதி ழான் – பெர்ட்ரான்ட் ஆர்ட்டிசைட் குறித்த டைரிப் பதிவுகள்

10. Stuffed and Starved: The Hidden Battle for the World Food System: Raj Patel

  • நவோமி க்ளெய்ன், சாய்னாத் என்று டிஸாஸ்டர் கேபிடலிசம் படிப்பவர்களுக்கு, மேலும் புரிதல்கள் கிடைக்கும்
  • அமெரிக்காவில் உழவர்களுக்கு கிடைக்கும் மானியங்கள், வரிவிலக்குகள் எவ்வாறு உலக சந்தையை பாதிக்கிறது?
  • மொத்த உணவு வர்த்தகத்திற்கு பல்லாயிரக் கணக்கான தயாரிப்பாளர்களும் கொள்முதலாளர்களும் இருந்தாலும் ஒரு கைக்குள் அடங்கும் இடைத்தரகர்கள்தான் விலையை நிர்ணயிக்கிறார்கள்

11. Inside the Jihad: My Life with Al Qaeda: Omar Nasiri

  • அல் க்வெய்தா, ஜிஹாத் எல்லாம் குழந்தைகளும் அறிந்த பெயராக ஆகுமுன் உள்ளே இருந்து உளவாளியான கதை

12. Snoop: What Your Stuff Says About You: Sam Gosling

  • அலுவலில் உங்கள் இடம் எப்படி இருக்கிறது? என்ன பொருட்கள் வைத்திருக்கிறீர்கள்? என்பதை வைத்து வேலைக்கு ஏற்றவரா என்று அலசலாம்
  • காதலிப்பவரின் உண்மையான குணாதிசயங்கள் என்ன என்று உளவியல் ரீதியாக அறிவது எவ்வாறு?
  • வலைப்பதிவரின் எண்ணவோட்டங்கள் எப்படி என்பதை கேள்வி-பதில் போன்ற எளிய அலசல்களில், புறச்சூழலை ஒப்பிட்டு தெரிந்து கொள்ளலாம்

13. The Fate of Africa: A History of Fifty Years of Independence: Martin Meredith

14. Maxims and Reflections (Penguin Classics): Johann Wolfgang von Goethe

  • அந்தக் காலத்தில் ட்விட்டர் இல்லை. அதற்காக சும்மா விட்டுவிட முடியுமா? சில எடுத்துக்காட்டுகள்:
    • என்ன வார்த்தை சொன்னாலும் அதற்கு எதிர்ப்பதம் நிழலாடுவது இயல்பு
    • பாராட்டிப் பேசுவதும் வெட்டிப் பேசுவதும் சுவாரசியமான உரையாடலுக்கு வசதிப்படாது
    • உங்களைப் பார்த்து மற்றவர் சிரித்தால் நேர்பட இயங்குகிறீர்கள் என்று அர்த்தம்
  • மேலும்: Johann Wolfgang von Goethe – Wikiquote

15. Weird History 101: John Richard Stephens

  • சரித்திரத்தை ரொம்ப சேரியமாய் எடுத்துக் கொண்டு வாசித்தறிவது இயல்பு. பிரச்சினை செய்து பரபரப்புக்கு பதிவு போட விஷயம் தேடுவது வலை இயல்பு. இரண்டாவது பிரிவுக்கு ஏற்ற புத்தகம்

16. அ) The Translator: A Tribesman’s Memoir of Darfur: Daoud Hari

ஆ) They Poured Fire On Us From The Sky: The True Story of Three Lost Boys from Sudan: Alphonsion Deng, Benson Deng, Benjamin Ajak, Judy A. Bernstein

  • சூடானில் மொழிபெயர்ப்பாளராக பணியாற்றிவரின் குறிப்புகள்
  • தன் குடும்பம் கரையேற்றப்பட்ட பிறகும், பிறருக்காக மீண்டும் தாய்நாடு சென்று பணியாற்றிவரின் வரலாறு.
  • தனி மனிதரால் என்ன செய்ய முடியும் என்பதற்கான விடை

17. Aristotle and an Aardvark Go to Washington: Thomas Cathcart, Daniel Klein

  • அரசியல்வாதி பேச்சை கனகாரியமாக எடுத்து ஆராய்ந்து, ஓட்டைகளை நகைச்சுவையாக கட்சிப் பாகுபாடின்றி கோர்க்கும் புத்தகம்.
  • இவர்களின் முந்தைய புத்தகத்தின் ரசிகன் என்பதால், எமாற்றி இருக்க மாட்டார்கள்.

18. The Logic of Life: The Rational Economics of an Irrational World: Tim Harford

  • ஆணுறை அணியாமல் விலைமாதுக்கள் ஏன் உறவு கொள்கிறார்கள்?
  • கால்பந்தாட்ட பெனால்டி கிக்கில் எந்தப் பக்கம் அடிப்பது என்று பெக்கம் எப்படி முடிவெடுகிறார்?
  • திருமணத்திற்கும் விவாகரத்திற்கும் இடையே உள்ள பொருளாதார அடிப்படை, கணக்கு என்ன?

19. The Year of Living Biblically: One Man’s Humble Quest to Follow the Bible as Literally as Possible: A. J. Jacobs

  • பைபிளில் சொல்வது போல் பரீட்சார்த்தமாக வாழ்ந்த காலத்தின் அனுபவங்கள்
  • பொய் சொல்லக்கூடாது, வதந்தி பேசக்கூடாது, அடுத்தவரின் பொருள் மேல் கண்வைக்க கூடாது என்று கர்ம சிரத்தையாக கடைபிடிக்க முடியுமா?
  • வாரத்தில் ஒரு நாள் வேலை பார்க்காமல் (அதாவது வலைப்பதியாமல்) வெறுமனே இருக்க முடியுமா?

20. How to Read Literature Like a Professor: Thomas C. Foster

  • இலக்கியத்தில் என்ன சொல்ல வருகிறார்கள் என்பதற்கு கோனார் நோட்ஸோ க்ளிஃப் உரையோ உங்களுக்குத் தேவையா?
  • எந்த உவமை வந்தாலும், குறிப்பால் உணர்த்தினாலும் தட்டையாக உணராமல், உள்ளே உறைந்திருக்கும் பொருளைப் (உள்குத்து) புரிந்து கொள்வது எப்படி?

படிக்காத மேதை – புத்தக வாசமில்லாத விமர்சகர்

கரிசலில் சாலைகள், சதியாலோசனைகள் என்று சன்னாசி பதிவெழுதியிருக்கிறார்.

மேற்கோளாகக் கொஞ்சமே கொஞ்சம்:

அசலில் எனது இணையான சாலை எனக்கு சரியாக இருபத்துமூன்று கிலோமீட்டர்களுக்கு அப்பால் இருக்கிறது. அதனுடன் ஒருகாலத்தில் இணைந்திருக்கலாமென்று நினைத்தேன், அதனுடன் எனது ஒரு கரம் இணைந்திருக்கலாம் – எனக்குப் பல கரங்கள். எனது கரத்தைக் கொண்டுதான் நான் பெருகுவது – உதாரணமாய் ஒரு ஊரின் வெளிப்புறத்தை எனது கரம் அணையும், அணையும் என் கரத்தின்மேல் குழந்தைகள் துள்ளிக் குதித்துக் குதியாளமிட்டு என்னைத் தங்களாக்க முயல்வர் தமது குழந்தைமையால். ஆஹா அற்புதம், ஆஹா அற்புதம், குழந்தைகள் குதியாளமிடும்போது எனக்குள்ளிருக்கும் ஜல்லிகள் குதித்து அவற்றுடன் இணைந்து ஆனந்திக்க முயல்வதில்லை, எங்களுக்கு அவை தரும் எரிச்சலில் சூரியக் கதிர்களை உள்வாங்கி செருப்புகளைத் தாண்டிக் குழந்தைகளின் பாதங்களை எரிக்க முயல்கிறோம், அதுதான் எங்கள் நியதி என்பதில்லை, அதுதான் எங்கள் விழைவு – எங்களது இடம் எங்களுக்கு என்பது எங்களால் வகுத்துக்கொள்ளப்பட்ட ஒன்று. இருந்துகொண்டேயிருப்பதன் தேய்மானத்துக்குப் பங்களிக்கும் பாதங்களுக்கு எங்களால் செய்யக்கூடிய சிறு உபகாரமென்பது அதுவே.

இப்பொழுது இதற்கு விமர்சனம் எழுதவேண்டும் என்று உங்களைப் பணித்தால் எப்படி ஆரம்பிப்பீர்கள்?

முதலில் விமர்சனம் எப்படி இருக்க வேண்டும் என்று தீர்மானிக்கலாம்.

‘பால்சாக்’கின் Lost Illusions நாவலின் நாயகனிடம் அவன் நண்பன் சொல்வதை வேதமாக வைத்துக் கொள்ளவும்:

ஒரு நாவலைக் கூட தவறவிடாமல் படித்துவிடுவாள் என்னுடைய காதலி. என்னிடம் விமர்சனத்திற்காக வரும் புத்தகத்தை அவளிடம் கொடுப்பேன். ‘நாவல் ரொம்ப போர்’ என்று அவள் சொன்னால்தான், நான் படிப்பேன். முடிந்தவரைக்கும் அதைப் பாராட்டி விமர்சனம் எழுதுவேன்.

அடுத்ததாக அடிக்கடி சொல்லப்படும் வாசகம் “the author is dead”. இதை நம்ப வேண்டாம் என்பதை ஆய்வு முடிவுகளும் உறுதியாக்கியுள்ளன. ஜெயமோகன் என்றால் வாசிக்கமாட்டேன் என்பது போன்ற சமகால நிகழ்வுகளும் இந்தக் கோணத்தை முற்றிலும் நிராகரிக்க வைக்கிறது.

ஐஸ்க்ரீமுக்கு சாக்லேட் சாஸ் ஊற்றுகிறோமா அல்லது ஸ்ட்ராபெர்ரி ரசம் தெளிக்கிறோமா என்பதைப் பொறுத்து சுவை மாறும். ஆசிரியர் பெயர் என்ன வந்திருக்கிறது என்பதைப் பொறுத்து விமர்சனம் வேறுபடும் என்பதற்கு டேவிட் லாட்ஜின் ‘Changing Places: A Tale of Two Campuses‘ நூலை துணைக்கழைக்கலாம்.

வகுப்பறையின் முதல் நாளில் ஆசிரியரால் அறிமுகமாக்கப்படும் ஒரு விளையாட்டு:

  • நீங்க இதுவரைக்கும் வாசிக்காத புத்தகத்தை நினைச்சுக்குங்க…
  • நெனச்சாச்சா?
  • இப்ப வகுப்பில் யாரெல்லாம் அந்தப் புத்தகத்தைப் படிச்சிருக்காங்களே, உங்களுக்கு ஒரு மதிப்பெண்

இதுதான் விளையாட்டு. வெட்கப்படவைத்து ‘அது கூட வாசிக்காதவரா!?’ என்று மற்றவரிடம் நெளிந்து குழையவைக்கும் ஆட்டம். இந்திய நடுத்தர வர்க்கம் மாதிரி ‘முதல் ரேங்க் வாங்கணும்!’ என்று துடிப்பவர்களுக்கு தர்மசங்கடப்படவைக்கும் ஆட்டம்.

முதலிடம் பெற வேண்டுமானால், தன்னுடைய அறியாமையை போட்டுடைக்க வேண்டும். ‘காந்தியின் சுயசரிதை‘யை நான் படித்ததில்லை என்று சொன்னால், நிச்சயம் மற்றவர்கள் ‘நான் வாசித்திருக்கிறேன்‘ என்று சொல்லப் போவதால், நிறைய மதிப்பெண் அள்ளலாம். ஆனால், ‘காந்தியக் கூட படிச்சதில்லையா‘ என்னும் ஏளனம் வந்தே தீரும்!

தமிழர்களிடம் மற்றவர்கள் நிச்சயம் பார்த்திருக்கக் கூடிய, ஆனால் தான் பார்த்திராத திரைப்படம் என்று போட்டி வைத்து வாசிப்பு போதாமையை வெளிக்காட்டாமல் அடக்கி வாசிக்கலாம்.

டயலாக் விருமாண்டி நேரம்: படிக்கலன்னு சொல்லிடறவன் வீரன்; படிக்காதவனப் படிக்க வக்கிறவன் மனுசன்!

இதில் எந்த நிலை எடுக்கிறீர்கள் என்பதைப் பொறுத்து, குறிப்பிடப்பட்ட புத்தகம் அல்லது ஆசிரியர் எவ்வளவு தூரம் புகழடைந்திருக்கிறார் என்பதை புறங்கையால் தள்ளக்கூடியவரா என்பதையும் பொறுத்து — இலக்கியத்தரமாக இருக்கிறதா அல்லது வெகுசனத்தரமாக இருக்கிறதா என்றெல்லாம் விமர்சனம் கிழிக்கலாம்.

கடைசியாக எழுதியதை வாசித்திருக்க வேண்டுமா என்பதற்கு உம்பர்ட்டோ ஈக்கோவின் ‘The Name of the Rose‘ பயன்படும்.

வாடிகனுக்குள் மிக மிகப் பெரிய நூலகம் இருக்கிறது. ஏதாவது தேவை என்றால் மனுப் போட்டு, ஐந்தாண்டுகள் காத்திருந்து, ஐம்பது கிலோமீட்டர் எட்டி நின்று வாங்கிக் கொண்டு போகலாம். அந்த மாதிரி ஓரிடத்தில் கதை நடக்கிறது. வடக்கு இத்தாலி. மர்மமான முறையில் சாவு. பினங்கள் குவிகிறது. யார் கொன்றார்கள் என்பதைக் கண்டறிய வேண்டும்.

டேன் பிரௌனின் ஏஞ்சல்ஸ் & டீமன்ஸ் ராஜேஷ்குமார் வகையறா என்றால், இது பின் நவீனத்துவ உம்பர்ட்டோ இகோ வகையறா.

எதற்காக எல்லாம் கொல்லப்படுகிறார்கள்? இரகசியமாகப் பாதுகாக்கப்படும் புத்தகத்தை கண்டடைந்தவர்கள் எல்லாருமே இறந்திருக்கிறார்கள். எப்படி இறந்தார்கள் என்பதும் மர்மம். ஆனால், நூலைத் தொட்டவர்கள் பரமபதம் அடைந்து விட்டார்கள்.

நாவலின் இறுதிக் காட்சியில் ஹீரோவுக்கும் நம்பியார் போன்ற வயசான வில்லனுக்கும் இடையே விவாதம். தாத்தாவாகிப் போன பாதுகாவலருக்கு கண் பார்வை முழுவதுமாக பழுதடைந்து விட்டது. அவ்வளவு கடும் கட்டுப்பாட்டுக்குள் இருந்த புத்தகம் ‘நகைச்சுவை’யின் ரசங்களை விவரிக்கும் அரிஸ்டாட்டிலின் அங்கத இலக்கிய ஆய்வு.

புத்தகத்தை தவமாய் தவமிருந்து தேடல் முடிவில் பெற்றவர்கள் — எப்படி இறந்தார்கள்?

இப்பொழுது பழசாகிப் போன டெக்னிக். தாள்களில் விஷம் தோய்ந்திருக்கிறது. பக்கங்கள் ஒன்றுடன் ஒன்று ஒட்டிக் கொண்டிருப்பதால், நாக்கில் எச்சில் தொட்டுக் கொள்ள, விடமேறி மர்ம மரணம் அடைந்திருக்கிறார்கள்.

பலான படத்தை டவுன்லோடும் அவசரத்தில் வைரசைக் கொண்டு வந்த கதையாக, முந்தைய வாசகர்கள் அனைவரும் முட்டாளாக கையுறை அணியாமல் புத்தகத்தை புரட்டியிருக்கிறார்கள். ஹீரோ அதி புத்திசாலி. கையுறை அணிகிறார். என்றாலும், புத்தக ஓரங்கள் கையுறையையும் சிராய்த்து கிழிக்கின்றன. பக்கங்களைத் தொடர்ந்து படிக்க முடியவில்லை.

இப்படிப்பட்ட அந்தப் புத்தகத்தை, புரட்டக் கூட இயலாமல், அந்த நூலில் என்ன எழுதியிருக்கிறது, யார் எழுதினார்கள் என்பதைப் பார்க்காமலே, படிக்காமலே உணர்ந்து கொள்கிறார் ஹீரோ!

நீண்ட நெடுங்காலமாக காவல் காக்கும் வயதான மூத்த முனிவரும் அந்தப் புத்தகத்தைப் புரட்டியதில்லை. எங்கே புரட்டினால், பகிடியும் நக்கலும் தன்னையும் தொற்றிக் கொண்டு, தானும் இறை நிந்தனையில் இறங்கிவிடுவோமோ என்னும் அச்சம். நையாண்டியில் திளைத்து கேளிக்கை, கொண்டாட்டத்தில் விழுந்து விடுவோமோ என்னும் பயம். அவரும் புத்தகத்தைப் படிக்காமலே புரிந்து வைத்துக் கொண்டிருக்கிறார்.

வாசிக்க விழைந்தவர்களையும் தீர்த்துக் கட்டி, இமேஜைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறார்.

ஹீரோவோ முதற்பக்கத்தை மட்டும் வாசித்துவிட்டு, கிட்டத்தட்ட முழு புத்தகத்தையும் அனுமாணித்து விடுகிறான். ஹீரோவும் வில்லனும் இருவேறு நூல்களைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு அத்தியாயம் கூட வாசிக்காமலேயே தங்கள் அனுபவங்களை வைத்து, இட்டுக் கட்டி விவாதம் நடத்துகிறார்கள்.

விமர்சகரின் வேலையும் இதுதான்.

கட்டாங்கடைசியாக, இவ்வளவு ஆராய்ந்து அனுபவித்து புகழ்ந்து விதந்தோந்து விமர்சனம் எதற்காக எழுதுகிறோம் என்பதை ஆஸ்கார் வைல்ட்-டின் ‘படிக்கலாமா? வேண்டாமா’ என்னும் கட்டுரையில் இருந்து உணரலாம்:

சிறந்த நூறு புத்தகங்களை தேர்ந்தெடுக்குமாறு என்னிடம் கேட்டிருக்கிறார்கள். வசதிக்காக மூன்று பிரிவாக பிரித்துக் கொள்கிறேன்.

1. சுயசரிதை, சரித்திர நூல்கள்.
2. மீள்வாசிப்பில் புது வாசல்களைத் திறக்கும் மகாகவிகளின் கவிதைகள்; தத்துவபிரக்ஞைகளின் எழுத்துகள்; ஞானிகள் அல்ல!
3. எதை எல்லாம் தொடக் கூடாது என்பதன் பட்டியல்.

படித்தால் பைசா பிரயோஜனமில்லாதது என்பதை விமர்சகர் சொல்லவேண்டும். வாசித்தால் ஊறு விளையலாம் என்பதை உணர்த்துவது முக்கியம். நூறு மோசமான புத்தகங்களின் பட்டியல் வெளியிடுபவருக்கு இந்த உலகம் என்றென்றும் நன்றிக்கடன் பட்டிருக்கும்.

சன்னாசியின் பதிவு உட்பட மேலேக் குறிப்பிட்ட எந்தப் புத்தகத்தையும் நான் படித்ததில்லை. எனினும் விமர்சனம் போல் ஒன்று சமைத்தாக்க முடிகிறது. நீங்களும் இப்பொழுது விமர்சனம் எழுதத் தயாரா?

உதவிய புத்தகம்: புத்தக தினம்

உதவிய பதிவு: Literature, Science, and a New Humanities :: Jonathan Gottschall Measure for Measure – The Boston Globe: “Literary criticism could be one of our best tools for understanding the human condition. But first, it needs a radical change: embracing science”

Tamil Websites in Unicode – A List

அவ்வப்போது புதிய விஷயங்கள், கட்டுரைகள், ஆக்கங்களுடன் ஒருங்குறியில் வெளியாகும் வலையகங்களின் தொகுப்பு:

இணைய இதழ்:
வ.ந.கிரிதரன் – பதிவுகள்
வார்த்தை, எனி இந்தியன் – Thinnai
Tamiloviam / தமிழோவியம்
யாஹு குழுமம் – மரத்தடி.காம் (maraththadi.com)
நிலாச்சாரல்
முத்துக்கமலம்
மகளிர் பக்கம் – ஊடறு : பெண்குரல்
எழில்நிலா

இலக்கியம்:
அப்பால் தமிழ்
வார்ப்பு : கவிதை வாராந்தரி – Tamil Poetry Weekly

செய்தி:
சிஃபி – தமிழ்
யாஹு – Welcome to Yahoo! Tamil
தமிழ் – MSN India – Tamil Latest Tamil News, Business, Movies, Music, Cricket and more..
Thatstamil.com – தட்ஸ்தமிழ்.காம்
For the latest on Tamil cinema, general news, views and in-depth analysis in Tamil.- AOL Tamil
வெப் உலகம்.காம் :: வெப்துனியா
சென்னை ஆன்லைன் :: ஆறாம்திணை
adhikaalai.com

அச்சு இதழ்
கீற்று
தமிழக வாராந்தரி: விகடன்
இஸ்லாம், முஸ்லீம்: Welcome to Samarasam.com – Your Fortnightly Tamil Islamic Magazine from IFTchennai.org
தமிழக மாதாந்தரி: காலச்சுவடு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் – Tamil Nadu Thawheedh Jamaath
அமெரிக்க மாதாந்தரி: தென்றல்
வல்லினம் – காலாண்டிதழ்
மாதமிருமுறை: தென் செய்தி :: பழ நெடுமாறன்
உண்மை – கி வீரமணி
கனடா, ஈழம், இலங்கை: வைகறை

வரலாறு, ஆன்மிகம்:
DREAM LAND – You Have Reached The Right Place To Know About Islam & Tamil Muslims
Welcome to South Indian Social History Research Institute
Varalaaru – Monthly Magazine for Tamil History
Tamil Bible (Holy Bible in Tamil & English) – பரிசுத்த வேதாகமம்
இஸ்லாமிய இணையத்தளம்

வணிகம்:
சென்னை நூலகம்
கணியத்தமிழ்

ஆளுமை:
சுந்தர ராமசாமி
Pa. Raghavan : Home Page : பாரா-பேப்பர்
எஸ் ராமகிருஷ்ணன்
ஜெயமோகன்
சாரு நிவேதிதா
லேனா தமிழ்வாணன் :: மணிமேகலை பிரசுரம்

நாடு
அமீரகம்: செந்தமிழ் – தமிழ் அறிவியல் இதழ்
மலேசியா இன்று

அரசியல்:
வைகோ :: மதிமுக

நாளிதழ்:
தினமலர்
விடுதலை

இலங்கை, ஈழம்:
வீரகேசரி
தினக்குரல்
ஒரு பேப்பர்
சங்கதி
http://www.pathivu.com/
புதினம்
http://www.tamilwin.com/
http://www.sooriyan.com/
http://www.alaikal.com/news/
நெருடல்
முழக்கம்
தமிழீழம்

தகவல்:
Kalanjiam – Tamil Encylopedia

தொண்டு:
உதவி – உங்கள் உதவியுடன்….

சினிமா, திரைப்படம்:
Tamilcinema | Tamilmovie | Tamilsongs | Tamil Film
விடுப்பு

கணினி:
w3 Tamil
தமிழ்99: தமிழ்99 விசைப்பலகை விழிப்புணர்வு இணையத்தளம்

புத்தகம்:
காந்தளகம்: தமிழ்நூல்.காம்
எனி இந்தியன்: AnyIndian – An Internet Book Shop for Indian Books
வித்லோகா, நியு ஹொரைசான் மீடியா, கிழக்கு பதிப்பகம், காமதேனு: Kamadenu.com
நியூ புக்லான்டஸ், சென்னை: ::New Book Lands:: (சோதனை ஓட்டத்தில்)

இன்ன பிற:
இணையத்தில் தேனீ :: லியோமோகன்
தமிழ் அமுதம்

கடைசியாக் டிஸ்கியில் ஒன்று:
பொள்ளாச்சியிலிருந்து தமிழம் வலை: தமிழம்.நெட்

புத்தக தினம்

“If you want to know how I know about every book here, I can tell you! Because I never read any of them.” – நியு யார்க் டைம்ஸ் விமர்சனம்

மாக்கியவெல்லியைக் கூட மாச்சியவெல்லி என்று விளிப்பவன் நான். மெத்த புத்தகம் பல படித்த பாச்சா வேகுவதில்லை.

ரொம்ப நாள் கழித்து மாதுவை பார்த்தவுடன் விசாரித்தான். ‘நீ நிறைய படிப்பாயே? என்ன புத்தகம் சமீபத்தில் படித்தாய்?’ திரைப்படமாக பார்த்த ‘நேம்சேக்’கில் துவங்கி, பார்பரா காஸ்டெல்லோ தொட்டு, திஸாரஸ் கொடுத்த ரோஜெட் சுயசரிதம் என்று ஜாலியாக ஒரு மணி நேரம் ஓடியேப் போனது.

இந்த மாதிரி பேச (அல்லது வலைக்குறிப்பெழுத) என்ன செய்ய வேண்டும்?

சினிமாவிற்கு ஐஎம்டிபி என்றால், நூல்களுக்கு கம்ப்ளீட் ரிவ்யூ.

அவர்கள் மூலமாகக் கிடைத்த பரிந்துரைதான் இன்றைய பதிவுக்கான மேட்டர்: How to Talk About Books You Haven’t Read – Pierre Bayard

நல்ல நிரலி எழுதுவதற்கான சாமுத்ரிகா லட்சணங்கள், பட்டியல் எதற்கெல்லாம் போடலாம், என்று கேட்டால் நீட்டமாக பேச முடியும். படித்த புனைவுகளை ஆராய்ந்து குதறி ‘ஜஸ்ட் எ மினிட்’ ஆக கூகிள் அரட்டையில் மாட்டிக் கொண்டால்? (சமீபத்தில் கப்பி இப்படித்தான் கேட்டு வைத்தார். இந்த மாதிரி அவஸ்தை படுகிறேன் என்று அறிந்த அலுவல்பிராட்டி, என்னுடைய அரட்டை வசதியையே அனைவருக்கும் நீக்குமாறு உத்தரவிட்டு மானத்தைக் காப்பாற்றியுள்ளார்).

புத்தகங்களை நான்காக பிரிக்க சொல்கிறார்: கேள்விப்பட்டது; கேள்வி கூடப் படாதது; மேலோட்டப் பார்வை இட்டது; மறக்கப்பட்டது.

இது அவரின் கணக்கு வழக்கு:
Books he has started but not finished

  • The Man Without Qualities, Robert Musil
  • Ulysses, James Joyce

Books he has only heard others talk about

  • The Aeneid, Virgil
  • Oliver Twist, Charles Dickens

Books he has read but forgotten

  • The Interpretation of Dreams, Sigmund Freud
  • Steppenwolf, Hermann Hesse

Books about which he admits he knows nothing

  • Rhetoric, Aristotle
  • Mémoires, Joachim du Bellay

நானும் போட்டுப் பார்த்தால்…
கேள்விப்பட்டது

கேள்வி கூடப் படாதது

  • விஷ்ணுபுரம் – ஜெயமோகன்
  • கடல்புறா – சாண்டில்யன்
  • பாழி – கோணங்கி

மேலோட்டப் பார்வை இட்டது

  • குருதிப்புனல் – இந்திரா பார்த்தசாரதி
  • பதினெட்டாவது அட்சக்கோடு – அசோகமித்திரன்
  • ஜே.ஜே. சில குறிப்புகள் – சுந்தர ராமசாமி

மறக்கப்பட்டது

  • கனவுத் தொழிற்சாலை – சுஜாதா
  • பொன்னியின் செல்வன் – கல்கி
  • காதலெனும் தீவினிலே – எஸ்.ஏ.பி.
  • முகமது பின் துக்ளக் – சோ

இந்தக் குறிப்பில் இருக்கும் புத்தகத்தை நான் இன்னும் வாசிக்கவில்லை. நூலகத்தில் எடுத்து இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறேன். சுருக்கமான அத்தியாயங்கள்; விறுவிறு நடை.

வாசிப்பதே சுகம்; படம் பார்ப்பதே பரமபதம் என்று ஓய்ந்துவிடாமல், ‘எத்துணை காலம்தான் வாசித்து மட்டுமே காலந்தள்ளுவது’ என்று வலைப்பதிவர் போல் துள்ளியெழுந்து சிந்தனைகளை திக்கெட்டும் பரப்ப — எழுதுகோலெடுக்க பணிக்கிறார். எனினும் ரவி ஸ்ரீனிவாசின் நேற்றைய பதிவைப் பார்த்தவுடன் உந்துதல் எழுந்தது… இன்று பதிவிட்டாகிவிட்டது.

முடிப்பதற்கு முன் இன்னொரு மேற்கோள்:

இப்புத்தகத்தைப் பற்றிக் கேள்விப்பட்டவுடன் இதைப் படிக்க வேண்டாம் என்று எனக்குத் தோன்றிய உள்ளுணர்வு? Pop psychology புத்தகங்களைப் பற்றிய எனது நெகட்டிவ் சாய்மானமே அதற்குக் காரணம் என்று நினைக்கிறேன். ‘Don’t judge a book by its cover’ என்பது போல், ‘Don’t judge a book’s content by its topic’ – ‘Blink’: உள்ளுணர்வுகளை நம்பலாமா?

நீதி
நல்லாப் படிங்க. படிக்க வைங்க. படிச்சதைப் பயன்படுத்துங்க.
Happy to onlook - Cartoons, Comics