Tag Archives: பொருளாதாரம்

Rogue Economics: Capitalism’s New Reality :: Loretta Napoleoni

புத்தக ஆசிரியரின் வலையகம்: Rogue Economics

புத்தகம் வாசிக்க: Rogue Economics: Capitalism’s New … – Google Book Search

மேற்கோள் 1: “The first business on the Internet is pornography, the second is gambling, the third is child pornography. There is no doubt about that.”

மேற்கோள் 2: “”We have thankfully watched the fall of the Berlin Wall, but unfortunately the Wall fell on women’s heads.”

‘வேர் இஸ் த பார்ட்டி’ போட்ட சுப்பிரமணிய சுவாமி, உள்ளூர் அமைச்சர் ப சிதம்பரம் போன்ற பல வல்லுநர்கள் படித்த ஹார்வார்ட் பல்கலையில் செய்த ஆராய்ச்சி இது:

குரங்குக்கு காசு கொடுப்பார். பணத்தை வைத்து என்ன வாங்கலாம் என்றும் கற்றுக் கொடுப்பார். முதலில் தனக்குத் தேவையான திராட்சை, தண்ணீர் என்று வாங்கிக் கொண்டது குரங்கு.

குரங்குகளிடம் பணம் புழங்க ஆரம்பித்த கொஞ்ச நாளிலேயே பாலியல் இச்சைக்காகவும் பணம் கொடுக்க முயற்சித்தன.

மனிதனின் முன் தோன்றலாகிய வானரம், உணவு, இருப்பிடம் என்பதை விட்டுவிட்டு செக்ஸ் நாட்டத்திற்கு செலவழிக்க சென்றதேன்?

நிதி வரும் முன்னே; தவறான எண்ணம் வரும் பின்னே என்பது புதுமொழியா?

  • சுதந்திரத்திற்கும் அடிமை பேரம் அதிகரிப்பதற்கும் என்ன சம்பந்தம்?
  • விலைமாதர் சல்லிசாவதற்கும் கம்யூனிசம் வீழ்ந்ததற்கும் யாது தொடர்பு?
  • வட்டி விகிதம் குறைவதனால் மட்டுமே வீடு விலை ஏறியதா? வங்கி எப்படி விளையாடியது?

புத்தகம்: Amazon.com: Rogue Economics: Capitalism’s New Reality: Loretta Napoleoni: Books

அமெரிக்க கல்விமுறை: அறிமுகம் – பத்மா அர்விந்த்

பத்மா அர்விந்த் (மாற்று தேர்ந்தெடுப்புகள் | தமிழோவியம் தொடர்கள் | வலைப்பதிவு) கொடுக்கும் பருந்துப் பார்வை

பொதுப்பள்ளிகள் இயங்கும் முறை குறித்து எழுத வேண்டும் என்று நீண்ட நாளாகவே ஒரு எண்ணம் உண்டு. ஜனவரி மாதம் மாற்றலாகி வந்தாலும், எந்த வித தடங்கலும் இன்றி இந்த ஊரில் வசிப்பவர் என்ற சான்றிதழ் மட்டும் இருந்தால், பள்ளியில் சேர்த்துக் கொள்வதோடு, பாடபுத்தகங்கள், இசை குழுவில் சேர்ந்தால், கருவி, பள்ளி செல்ல பேருந்து என அனைத்தும் வரிசைக்கிரமமாக நடக்கும்.

யார் தயவும் தேவையில்லை.

இத்தனை ஒழுங்கு இருந்தாலும், பள்ளிகள் நடக்கும் செயல்பாடு வெளியே பலருக்கும் தெரிவதில்லை. அமெரிக்காவில் எதையும் பொதுப்படையாக சொல்ல முடியாது. மாநிலங்கள் இடையே, மாவட்டங்கள் இடையே நகரசபைக்களுக்குள் என திட்டங்கள், சட்ட முறைகள், பள்ளிவிடுமுறைகள் என பலவும் வேறுபடும். இங்கே மாணவர்களுக்கு என்று சில உரிமைகள் உண்டு.

நியுஜெர்சியில் பள்ளி ஆசிரியராக அரசாங்க அங்கீகாரம் உள்ள சான்றிதழ் வேண்டும்.அந்த சான்றிதழ் வருடா வருடம் நீட்டிக்க தேவையான CEs (continued education credit) வேண்டும்.

அதே போல பள்ளி தகுதிக்கான சான்றிதழ் பல காரணிகள் கொண்டு தீர்மானிக்கப்படும். உதாரணமாக பள்ளியின் தொழில் நுட்பம், ஒவ்வொரு மாணவனுக்கும் எத்தனை பொருள் செலவு செய்யப்படும், பாடம் தவிர்த்து மற்ற செயல்பாடுகள் (activities), எத்தனை சதவிகிதம் பல தரப்பட்ட மாணவர்கள் படிக்கிறார்கள் (diversity) எத்தனை சதவிகிதம் மாணவர்கள் advanced placement இல் இருக்கிறார்கள், எத்தனை சதவிகிதம் ஒழுங்குமுறைக்காக பள்ளியைவிட்டு நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள் என்பது போல பலவும் அடங்கும்.

பள்ளிகள் நடக்க வருமானம் எங்கிருந்து வருகிறது?

  • மாநிலங்கள்,
  • மத்திய அரசிடம் இருந்து வரும் நிதி,
  • பள்ளிகள் தரக்கூடிய (விற்க கூடிய bonds),
  • பெற்றோர்கள் அமைப்பு திரட்டக்கூடிய நிதி,
  • மாவட்டம் தரும் நிதி,
  • மக்கள் கட்டும் வீடு,
  • கடைகள் போன்ற சொத்து வரி (property tax),
  • சில மாநிலங்களில் தனியாக கட்டும் school district tax போன்றவை

முக்கியமான வருமான தளங்கள் ஆகும்.

கீழே உள்ள ஒரு மாதிரி திட்டத்தை கவனியுங்கள். சொத்துவரியில் பாதிக்கு மேல் பள்ளிக்காக ஒதுக்கப்படுகிறது.

நீங்கள் வசிக்கும் பள்ளி, குறைந்த வருமானம் உள்ளவர்கள் வாழும் இடத்தில் இருந்தால், பள்ளிக்காக ஒதுக்கப்படும் நிதியும் குறைவு, அதற்கேற்ப அந்த பள்ளியில் மாணவர்களுக்கு கிடைக்கும் வசதிகள் தொழில் நுட்பங்கள் குறைவு.

School district tax and property tax get distributed as follows:

55.3% பள்ளி

1.4 % விவசாய நில பாதுகாப்பு, வீடு வாங்கும் முன் நகரசமையால் அங்கே நடப்படும் மரங்கள், பூங்கா போன்றவை பராமரிக்க

1.1% நூலகம்

13.6 % மாவட்டம் (county,)(this helps to run county level charter, academic schools and vocational schools)

28.6% Local purposes (sewage, water, maintenance , to remove snow, spread sand salt etc road etc)

பள்ளி நிதிதிட்டம் :: School Budget: (revenue from property tax(also includes school district tax, state grants, federal grants, PTO fund raisers and some time through bonds)

Personnel : all administrative, teachers’ salaries, benefits 60%

Books, music instruments, orchestra or band expense 10%

Gym – school team expenses (sport shirt etc) 5%

Food: Free food for underserved kids, subsidized food for students 15%

Free breakfast for poor kids

Latchkey program (free before and after care)

Teachers’ professional training, kids participation in interschool competition etc 5%

Free Transportation: If the kid lives in less than 2 miles, cannot use free transportation, but parents get $400 reimbursed per year for this purpose. 5%

Apart from public schools, there are charter schools and academic schools run in each county. They are school for academically talented kids who are sponsored by schools and get selected based on performance in competitive exam,

Vocational schools are also run from the tax that we pay, and they gear to students who want to be trained as baker, carpenter or plumber etc.

இது ஒரு அடிப்படை பட்ஜெட். ஒவ்வொரு முனிசிபாலிட்டியும் தங்களின் கல்வி பட்ஜெட்டை சமர்ப்பிக்க, மேயர், நகரசபை உறுப்பினர்களால் ஒப்புக்கொள்ளப்படுகிறது. கூடுதல் நிதி தேவையானால், மாவட்டம், மாநிலத்திற்கு விண்ணப்பிக்கப்படுகிறது.

இங்கேயே நிரந்தரமாக தங்காதவர்கள், தாயகம் திரும்பி செல்கிறவர்கள் தங்களின் பள்ளி வரியை திரும்ப பெற்றுக்கொள்ள முடியும்.

பட்ஜெட் குறைக்கப்படும் போது முதலில் விளையாட்டு அல்லது கல்வியல்லாத மற்ற செயல்பாடுகள் (Extra curricular) குறைக்கப்படும். இதற்கும் உறுப்பினர்கள் அங்கீகாரம் தேவை. யார்வேண்டுமானாலும் உறுப்பினராகலாம். அதே போல யார் வேண்டுமானாலும் பாடதிட்ட குழுவில் சேர்ந்து பரிந்துரைக்கலாம்.

மாவட்ட இணைய தளத்தீற்கு சென்றால் ஒவ்வொரு பள்ளியிலும் மாணவர்களின் இன பங்கீடு (racial distribution), ஆசிரியர்களின் கல்வி, எத்தனை மாணவர்களுக்கு எத்தனை கணினி, ஆய்வக வசதி, பள்ளியின் இணைய தொடர்பு போன்றவை, எத்தனை மாணவர்கள் ஒழுங்காக வந்தனர் போன்ற விவரங்கள் இருக்கும். ஒரு மாணவனுக்கு சராசரியாக எவ்வளவு செலவழிக்கப்படுகிறது போன்ற விவரமும் இருக்கும்.

எ.கா பள்ளியின் செலவறிக்கை: Comparative Spending Guide 2008

எ.கா: பள்ளியின் ரிப்போர்ட் கார்ட்: New Jersey Department of Education :: NEW JERSEY SCHOOL REPORT CARD

மாணவர்கள் பள்ளி விதிகளுக்கு உட்படாமல் இருந்தால் முதலில் எச்சரிக்கப்படுகிரார்கள். மூன்று எச்சரிக்கைகளுக்கு பிறகு detention க்கு அனுப்படுவார்கள். அதற்குள் பெற்றோருடன் பேசுவார்கள். மூன்று detention க்கு பிறகு தற்காலிகமாக நீக்கப்படுவார்கள். குறைகள் சரிசெய்யப்பட்டபின் சேர்த்து கொள்ளப்படுவார்கள்.

சில பள்ளிகளில் மாணவிகளால் restraining order வாங்கப்பட்ட மாணவர்கள் சந்திக்காமல் இருக்க சிரமப்பட்டு வகுப்பு பீரியட்கள் கவனமாக திட்டமிடுவதும் உண்டு.

மாணவர்கள் பேச கலந்தாலோசிக்க நம்பிக்கை உள்ள கவுன்சிலர் உண்டு. மனநல ஆலோசகர்கள் உண்டு.

பெற்றோர்கள் விவகாரத்தால் தாயோடு அல்லது தந்தையோடு மட்டும் இருக்க நீதிமன்றம் கட்டுப்பாடு விதித்தால் பள்ளியிலும் மற்ற பெற்றோர் வந்து பார்க்காமல் இருக்க வேண்டிய கவனம் தரப்படும். இல்லை என்றால் சட்டப்படி அவர்கள் மீது வழக்கு பதிய முடியும்.

இதே போல சில மாணவர்கள் பாலியல் தொடர்பான நோயுற்றிருந்தால், இல்லை பாலுறவில் ஈடுபடுபவராக இருந்தால் அவரின் அனுமதி இல்லாமல் பெற்றோரிடம் சொல்ல முடியாது.

அதேபோல பல பள்ளிகள் zero tolerance விதியை செயல்படுத்துவதால் துப்பாக்கி, வன்முறை போன்ற சொற்றொடர்கள் பயன்படுத்தினாலும் வீட்டுக்கு அனுப்ப முடியும். இது போன்ற பள்ளிகளின் கொள்கை நகரசபைக்கு நகரசபைக்கு இடையே கூட மாறுபடும்.

இந்த கொள்கைகள் தீர்மானிக்கப்படும் குழுவில் பெற்றோர்கள் செயல்பட அனுமதி உண்டு. இது மட்டும் அல்லாமல் பள்ளி பாடதிட்டங்கள் நிர்மாணிக்க கூட பெற்றோர்கள் பங்கு கொள்ளலாம்.

நியுஜெர்சியில் மாவட்டம் வாரியாக சில உருப்பினர் உண்டு. இவர்கள் மாநில அரசுக்கும் county (மாவட்ட) அரசுக்கும் இடையே பாலமாக செயல்படுகிறார்கள். பள்ளி தலைமையாசிரியர் சூப்பிரெண்டன்ட்டிடம், அவர் மாவட்ட சேர்மன் (இங்கே freeholder) இடம் தங்கள் பணி குறித்து விவரம் அளிப்பார்கள். Freeholder தன் தலவரிடம் சொல்ல, அது மாதம் ஒருமுறை கூடும் கூட்டத்தில் விவாதிக்கப்படும்.

எடிசனில் ஒரு சர்தார் மாணவன் டர்பன் அணிந்ததால் ஹெல்மெட் போட முடியாமல், விளையாட்டு குழுவில் சேர்த்துக் கொள்ள மறுத்ததும், அந்த பெற்றோர்கள் நீதிமன்றம் போய் டர்பன் அணிந்ததால், ஹெல்மெட் அணிய தேவையில்லை என்றும் மாணவனை மீண்டும் சேர்த்து கொள்ளுமாறும் அனுமதி பெற்று வந்தனர். இந்த வழக்குகள் உடனுக்குடன் தீர்ப்பு அளிக்கப்படும்.

உடல்நல குறைபாடுள்ள குழந்தைகளுக்கான சிறப்பு திட்டமும் உண்டு. இதையெல்லாம் மீறி குறைபாடுகள் நடப்பதும் உண்டு. ஆனால் அது கட்டுரையில் சொல்லி இருப்பதை போல இல்லை.

சில பள்ளிகளில் நிறைய சதவிகித மாணவர்கள் பொறுத்தே விடுமுறைகள் தீர்மானிக்கப்படும். இதே போல no child is left behind, free breakfast, health clinic பற்றி தனிதனியாகவே நிறைய எழுதலாம். குறைகள் இருப்பதும், மாநிலங்களுக்கு மாநிலம் கலவி முறை மாறுபடுதலும் உண்டு என்றாலும் விகடன் கட்டுரை போல மோசம் இல்லை.

அமெரிக்காவில் கல்வித்துறை எதிர்நோக்கும் சமகால சர்ச்சை குறித்த என்னுடைய பதிவு: ஆனந்த விகடனில் அவதூறு பிரச்சாரம்

ஆனந்த விகடனில் அவதூறு பிரச்சாரம்

ஆனந்த விகடனில் வெளியாகிய மருதனின் அமெரிக்கப் பள்ளிகள் காலி வாசிக்க கிடைத்தது.


முதலில் மருதன் பாணியில் rhetoric மட்டும்.

காட்ஃபாதர் நாயகன் ஆனது போல் சிலர், பல ஆங்கிலப் படத்தில் இருந்து சிற்சில இடங்களைத் தமிழுக்கு ஏற்றபடி மாற்றியமைத்து திரையாக்குவார். எஸ் ஜே சூர்யா போல் சிலர் அப்படியே தமிழுக்கு இடப்பெயர்வு செய்வார். இன்னும் சிலர் ஹாரிஸ் ஜெயராஜ் இசை போல் அதே பாட்டை, அப்படியே வேறு பாட்டாக்குவார்.

மருதன் ஹாரிஸ் ஜெயராஜ் ரகம்.

  • எந்த மாணவர் எதற்காக நீக்கப்பட்டார் என்னும் முன்கதை இருக்காது.
  • ஆர்னே அல்ல; ஆர்நி என்னும் சின்ன விசயம் கற்றுக் கொள்ளும் உழைப்பு கூட இருக்காது.
  • ‘ஒபாமாவின் தீவிர ரசிகர்களேகூட இந்த விஷயத்தில் சங்கடத்துடன் நெளிந்துகொண்டிருக்கிறார்கள்’  என்பார். எவர், எங்கே, எப்போது, என்ன சொன்னார் என்பதெல்லாம் மூடுமந்திரம்.
  • ஆனால், அமெரிக்காவில் கறுப்பர்களை விட வெள்ளையர்களின் மக்கள்தொகை அதிகம் போன்ற தகவற்பிழை நிரப்பியிருப்பார்.

இந்த மாதிரிதான் எல்.டி.டி.ஈ., லியனார்டோ டா வின்ச்சி என்று புத்தகம் எழுதி குவிக்கிறாரா என்னும் அச்சமும் எழுகிறது.


இப்பொழுது மருதனின் விகடன் கட்டுரையில் இல்லாதவை இங்கு இடம் பெறும் இடம். ஆதாரம், அலசல், பின்னணி, விஷயம்.

அமெரிக்கக் கல்வித் திட்டத்தை அதனுடன் சரிசமமான OECD, மேற்கத்திய சூழலுடன் ஒப்பிட வேண்டும். அதை மருதன் செய்யவில்லை.

கடந்த எட்டாண்டில் பள்ளி மாணவர் தேர்ச்சி, பெரிய வகுப்புகளில் எண்ணிக்கை, மேற்படிப்பு நிலவரம், குடும்பச் சூழல் என்று மதிப்பிடலாம். மற்ற வளர்ந்த நாடுகளில் இந்த குறியீட்டெண் என்ன, எவ்வாறு வளர்கிறது, ஜார்ஜ் புஷ்ஷின் No Child Left Behind என்ன செய்ய நினைத்தது என்றும் ஆராயலாம்.

அதெல்லாம் மருதன் கட்டுரையில் கிடைக்கவில்லை.

obama-interest-nat-webeducationபராக் ஒபாமாவின் திட்டம் என்ன, ஏன் அவர் படிப்பில் ஆர்வம் காட்டுகிறார், எவ்வாறு ஜார்ஜ் புஷ்ஷின் அணுகுமுறையில் இருந்து வேறுபடுகிறார், படிப்பு கொள்கை எங்ஙனம் செயலாக்கம் பெறும் என்றெல்லாம் சுட்டலாம்.

மருதனின் பத்தியில் விஷயம் இல்லை.

அமெரிக்க கல்வியின் இன்றைய நிலை :

வினாத்தாளா, Street smart சாதுர்யமா?

அமெரிக்கா கேள்விஞானத்திற்கு பெருமதிப்பு தருகிறது. விஷயஞானத்திற்கு அல்ல.

அதாவது, இந்தியாவில் (x+y)² என்ன என்பது மிக முக்கியம். இங்கே அது ‘ஏன் முக்கியம்’ என்று தெரிந்து வைத்தால் போதுமானது.

எப்படி விடை வருகிறது, (x+y)² ≡ 2(x+y) என்றெல்லாம் வித்தியாசமாக யோசித்து கேள்வி கேட்க வேண்டும். அதுதான் முக்கியம்.

இந்த மாதிரி வினாக்காரரின் விடைத்தாளை எவ்வாறு திருத்துவது?

குதித்தது ‘தேர்வு முறை‘. அமெரிக்காவில் பலருக்கு ‘தேர்வு எழுது, அதில் 40 வாங்கினால் பி க்ரேடு’ என்பது அலர்ஜி தந்தது. வினா – விடை வேண்டாம்; ‘இவ நல்லா படிக்கிறா!’ என்று சொல்லி அடுத்த வகுப்பிற்கு தூக்கிப் போடலாம் என்னும் சமூகம்.

இதை மாற்ற முயற்சி நடந்து வருகிறது.

ஆசிரியர் ஊக்கத்தொகை

ஒழுங்காக வேலை செய்பவருக்கு ஊக்கத் தொகையா? அல்லது வேலைக்கு எட்டு மணிக்கு ஆஜராகிவிட்டு ஐந்து மணி வரை இருக்கை தேய்ப்பவருக்கும் ஊக்கத் தொகையா?

தொழிற்சங்கவாதியிடம் கேட்டால் ‘வேலைக்கு வராவிட்டால் கூட போனஸ் வேண்டும் என்று போராடு தோழா’ என்பார்.

திறமையாக பாடங்கற்பிப்பவருக்கு சம்பளம் அதிகம் தர வேண்டும். சூட்டிகையான மாணவரையும் தூங்கவைக்குமாறு தாலாட்டும் ஆசிரியருக்கு சம்பளம் குறைக்க வேண்டும்.

கையில் காசு; வாயில் படிப்பு.

கல்வி: யார் பொறுப்பு?

‘உணவகத்த்கின் உரிமை மாறியுள்ளது’ என்னும் பலகையை பார்த்திருப்போம். பழைய சொந்தக்காரர் ஒழுங்காக நடத்தாவிட்டால் புதியதாக இன்னொருவர் பொறுப்பேற்று அதை நல்லபடியாக்குவது சகஜம்.

கல்விக்கூடத்திலும் அதை நடைமுறை ஆக்கலாம்.

மோசமான பள்ளி என்று பெயர் எவ்வாறு கிடைக்கிறது? மாணவரின் குடும்பச்சூழல் காரணமாக பள்ளிக்கு ஒழுங்காக வர இயலவில்லை; தரமாக சொல்லித் தராத வாத்தியார்; உபகரணம் உடைந்த சோதனைச்சாவடி; பராமரிப்பு இல்லாத பள்ளிக்கூடம்.

இப்படி எதுவாக இருந்தாலும், ‘தண்டம்’ என்று பெயரெடுத்ததை மூடிவிட்டு, அதற்கு பதில் இன்னொரு பள்ளி புத்தம்புதிதாக புதிய ரத்தம் கொண்டு துவங்குவது; அதுவரை, அங்கு வாசித்தவர்களை, தாற்காலிகமாக இன்னொரு சிறப்பான பள்ளியில் கோர்த்து, அந்த அலைவரிசையில் பயணிக்க வைப்பது.

புதிய பள்ளி கட்டுமானம்:

இந்தப் புதிய பள்ளிக்கான பணத்திற்கு என்ன செய்வது?

‘இவ்வளவுதான் பணம். இதைக் கொண்டு பள்ளி துவங்க முடியுமா?’ என்றால் அரசிடம் இருந்து இயலாமை. ஆனால், தனியார் நிறுவனமோ — துடிப்புடன், கொடுத்த பணத்தை வைத்து, வேண்டிய தரத்தில், சேர்க்கவேண்டிய எண்ணிக்கையையும் நிரப்பி பள்ளி துவங்க ரெடி!

பெற்றோரும், ‘என் குழந்தைக்கு செலவிடும் பணத்தை என்னிடமே கொடுத்துவிடு! அந்தப் பணத்தை கொண்டு நானே நல்ல பள்ளியைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறேன்.’ என்கிறார்.

இந்த நிலையில் கையாலாகாத அரசாங்கமே பள்ளியை நிர்வகிக்க வேண்டுமா? அல்லது அதே நிதியில் அதே அளவு மாணவர்களை இன்னும் சிறப்பாக தயார் செய்யும் தனியாரிடம் தர வேண்டுமா?

ஒவ்வொரு கு(ட்)டி மக்களுக்கும் செலவழிக்கும் கல்வித்தொகையை அவரிடமே தந்து நன்றாக படித்து முன்னேரிக் கொள்ளுமாறு விட்டுவிட வேண்டுமா? அல்லது தானே வரிந்து கட்டி சீர்திருத்த வேண்டுமா?

எல்லோரும் ஆசிரியர் ஆகலாம்:

ஆசிரியர் பற்றாக்குறை நிலவும் காலத்தில், வாத்தியாராக பட்டம் பெற ஏழு கடல் கடந்து, செவ்வாய்க்கு சென்று கல் எடுத்து வந்தால்தான் ஆச்சு என்பது சரிப்படுமா?

அறிவியல் போதிக்க அறிவியலில் முதுகலை படித்திருந்தால் மட்டும் போதுமே? வீட்டில் இரண்டு குழந்தையை மேய்ப்பது போல் இருபது குழந்தை நிரம்பிய வகுப்பைத் தந்து பார்ப்போம். போகப் போக பழகிக் கொள்வார் என்பது ஒரு வாதம்.

இப்படி சேர்க்கப்பட்டு, தலைமை ஆசிரியர் வரை உயர்ந்து நிற்பவர் ஏராளம். குறிப்பாக புதிய தலைமுறை சப்ஜெக்ட்களான கணினி, நுண்ணுயிரியல் போன்றவற்றில் சக்கைபோடு போடுகிறது.

இவ்வாறு புது இரத்தம் வருவதை, ஆசிரியர் யூனியன் விரும்பவில்லை. பல்லாண்டு கால வழக்குமுறை மாற்றப்படுவதை பயத்துடன் நிராகரித்து, பொது அறிவு வினாத்தாள் முதல் உளவியல் பயிற்சி வரை பல்வேறு தடைக்கல்லை வைத்து புதிய ஆசிரியர் சேர்ப்புக்கு முட்டுக்கட்டை இட்டிருக்கிறது.

இன்னும் இது போல் நிறைய உபதலைப்பில் விலாவாரியாக ஆயலாம். மருதனின் விகடன் அலசலை மட்டும் படித்து கிணற்றுத்தவளையாக இல்லாமல் இருக்க; நுனிப்புல் மேய நமக்கு இது போதும்.

ஆர்நியைக் குறித்து

  • ஆர்நியின் குழந்தைகள் அரசுப் பள்ளிக்கூடத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். தனியார் பள்ளிக்கு அனுப்பும் செல்வம் இருந்தாலும், ஒய்யாரமாக சென்றுவரவில்லை.
  • 2001ல் டங்கன் பதவியேற்ற பிறகு குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கிடைத்துள்ளதாக ஆய்வு முடிவு வெளியாகியுள்ளது.
  • எல்லாத்தரப்பு மாணவரிடத்திலும், ஆங்கிலம் தாய்மொழியாக இல்லாதவரிடத்தும், உடல் ஊனமுற்றோரிடத்திலும் எல்லாப் பாடத்திலும் அளவிடக்கூடிய வளர்ச்சிக் காணக்கிடைக்கிறது.
  • நியு யார்க், லாஸ் ஏஞ்சலீசுக்கு அடுத்த படியாக மூன்றாவது மிகப் பெரிய, நான்கு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணாக்கர்களை கொண்ட சிகாகோ கல்விக்கூட பொறுப்பை நிர்வகித்த அனுபவம் கொண்டவர்.

மேலும் தகவல்: Snap Judgement: US Education System; Secretary of State


கடைசியாக மருதன் கட்டுரைக்கு பதில்.

தன்னை எதற்காக பள்ளியில் இருந்து நீக்கினார்கள் என்று அந்த மாணவருக்கு இந்த நிமிடம் வரை தெரியாது.

கதையுடன் கட்டுரையை ஆரம்பிப்பது நல்ல உத்தி. நானும் இப்படித்தான் ஆரம்பித்திருக்க வேண்டும். ஆனால், நான் ஆதாரம் தருவேன். அவர் இணையத்தில் இடும் கட்டுரையிலும் சாய்ஸில் விட்டு விடுவார்.

கெமரான் பள்ளி பாலகர் பள்ளி. ஆனால், பச்சிளம் பாலகரும் ஏகே-47 சுடக் கற்றுக் கொண்டுதான் ஆன்னா, ஆவன்னா கற்றுக் கொள்வதற்கு வருவார். முன் எப்போதும் இல்லாத அளவிற்கு அங்கே மழலைச் செல்வங்களின் வாசிப்பு சக்தி உயர்ந்திருக்கிறது. கணித மேதையாகாத குறை.

இந்தப் பள்ளி சிகாகோவில் உள்ளது.

என்னை நம்பவேண்டாம். 2001ல் இருந்து பள்ளிச்சிறுவர்கள் பரீட்சை முடிவில் வாங்கிய மதிப்பெண்ணை ஒப்பிட்டு பார்த்தாலே தெரியும்.

ஒழுங்கீனமானவர்கள் என்று முத்திரை குத்தப்பட்டு பலர் சிறைச்சாலைகளில் (குழந்தைகளுக்கான சிறைச்சாலைகள்) அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.

வீட்டிற்கே சென்று சொல்லிக் கொடுக்கும் ஆசிரியரில் ஆரம்பித்து விளையும் பயிரை முளையிலேயே வளைத்துப் போடுவதற்கு ஒபாமா தரும் பத்து பில்லியன் வரை தொட்டு செல்லவேண்டியதை,ரெண்டுகண்ணன் வரான்; குழந்தையப் பிடிச்சுண்டு போயிடுவான்’ என்னும் ரீதியில் சிம்ப்ளிஃபை செய்திருக்கிறார் மருதன்.

ஜார்ஜ் புஷ்ஷின் மற்றுமொரு சொதப்பல் என்பதாகத்தான் நினைத்துக்கொண்டது அமெரிக்கா

ஜார்ஜ் புஷ்ஷின் நோ சைல்ட் லெஃப்ட் பிஹன்ட், பதின்ம வகுப்புகளில் மாணவரைத் தக்கவைப்பதிலும், விருப்பப் பாடத்தை தேர்வு செய்வதிலும், கல்லூரிக்கு அழைத்துச் செல்வதிலும் பெருத்த வெற்றி என்பதை அவரின் எதிரியே ஒத்துக் கொள்கிறார்.

இளவயது நண்பர் எனும் ஒரே காரணத்துக்காக ஒரு முக்கியப் பதவியை அவரிடம் கொடுப்பது நியாயமா? பல லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் சம்பந்தப்பட்ட முடிவு அல்லவா இது?

சினிமாவின் அடுக்கு மொழி வசனம் கெட்டது போங்கோ 🙂

பள்ளிக்கூடங்களில் ராணுவக் கட்டுப்பாட்டை கொண்டுவரவேண்டும்.

ஒரு கையில் நூறு பேருக்குத் தேவையான அபின் (விற்பனைக்குத்தான்; ஒரு பிஸினஸ்மேன் உருவாகிறார்); இன்னொரு கையில் சேவல்தோகையாக (காக்-டெயில்) வோட்கா கலந்த தண்ணீர் (இது விற்பனைக்காக அல்ல; சுய பயன்பாட்டிற்கு); பாகம் பாகமாகப் பிரிக்கப்பட்ட கைத் துப்பாக்கியுடன் உலா வரும் உள்ளூர் கஸப்களை எவ்வாறு எதிர்கொள்வது என்றும் மருதன் ஆலோசனை தரவேண்டுகிறேன்.

பச்சை, மஞ்சள், சிகப்பு என்று கிராஃப் போட்டு. குறிப்பிட்ட வகுப்பில் எத்தனை மாணவர்கள் படிக்கிறார்கள், அவர்களது மூன்று மாத பெர்ஃபார்மன்ஸ் என்ன, எடுத்த மதிப்பெண்கள் எவ்வளவு அனைத்தையும் கலரில் குறிக்கவேண்டும். இதை வைத்துக்கொண்டு குறிப்பிட்ட பள்ளியின் தரத்தை அதிகாரிகள் முடிவு செய்வார்கள்

இதில் என்ன தவறோ? ரிப்போர் கார்டில் போலி கையெழுத்து போட்டால்தானே பிரச்சினை!

ரிப்போர் கார்டே ஆகாதா? பள்ளியில் தூங்கினாலும், பள்ளிக்கே வராமல் இருந்தாலும், அடுத்த அடுத்த வகுப்பிற்கு பிரமோசன் உண்டா? மருதன் இன்னும் குழந்தையா; அதான் இவ்வளவு ஆசை!

பொதுப் பள்ளிகள் மீது ஏன் அரசாங்கத்துக்கும், குறிப்பாக கல்வி அமைச்சகத்துக்கும் இத்தனை காழ்ப்புணர்ச்சி? ஏன் இத்தனை வெறுப்பு? காரணம், பொதுப் பள்ளிகளில் அதிகம் படிப்பவர்கள் வெள்ளை இன அமெரிக்கக் குழந்தைகள் கிடையாது. கறுப்பினத்தவர்.

என்னது! அமெரிக்காவில் வெள்ளை இனம் மைனாரிட்டியா! சொல்லவே இல்லியே!!

அரசியல் ஆழிப்பேரலை: மணி மு. மணிவண்ணன்

  • பொருளாதார வீழ்ச்சி.
  • பெட்ரோல் விலை எகிறல்.
  • ஜெனரல் மோட்டார்ஸ் தடுமாற்றம்.
  • அமெரிக்காவின் எதிரிகளின் ஏற்றம்.
  • மத்திய கிழக்கில் அமெரிக்கப் படையினரின் வலுவின்மை.
  • வருங்காலத்தைப் பற்றிய நம்பிக்கையின்மை.
  • அமெரிக்க அதிபரின் மீது ஏமாற்றம்.

இத்தனையும் இருந்தும் தேர்தல் நாள்வரை ஆளுங்கட்சியின் வேட்பாளர் தாக்குப் பிடித்துக் கொண்டிருந்தார். எதிர்க்கட்சியின் வேட்பாளர் மக்களின் முழுநம்பிக்கையைப் பெறவில்லை.

இது மெக்கேன் ஒபாமா போட்டியைப் பற்றிய செய்தியல்ல.

28 ஆண்டுகளுக்கு முன்னர், 1980இல் அதிபர் கார்ட்டர் – ஆளுநர் ரேகன் போட்டியின் கடைசிவாரச் செய்தி.
“நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் இருந்ததை விட இப்போது நல்ல நிலையில் இருக்கிறீர்களா? நல்ல நிலையில் இருக்கிறீர்கள் என்றால் ஆளுங்கட்சிக்கு வாக்களியுங்கள். இல்லை என்றால் எனக்கு வாய்ப்பளியுங்கள்.” இது குடியரசுக் கட்சி வேட்பாளர் ரோனால்டு ரேகனின் அறைகூவல்.

எதிர்க்கட்சி வேட்பாளர் உலக அரசியல் அனுபவமில்லாதவர். அவரைத் தேர்ந்தெடுத்தால், அணுவாயுதங்கள் வெடிக்கும் மூன்றாம் உலகப் போருக்கு ஆயத்தமாகுங்கள். இது ஆளுங்கட்சியான மக்களாட்சிக் கட்சியினரின் மிரட்டல்.

தேர்தல் நாளான நவம்பர் முதல் செவ்வாய்க்கு மூன்று நாள் முன்னர் வரை மக்கள் வேண்டா வெறுப்புடன் அதிபர் கார்ட்டரைத்தான் ஆதரித்தார்கள். ஈரானில் சிக்கியிருந்த அமெரிக்கப் பிணைக்கைதிகளை மீட்கும் முயற்சியில் கார்ட்டரின் தோல்வி, 23% அடமான வட்டி வீதம், வேலையில்லாத் திண்டாட்டம், பெட்ரோல் விலையேற்றம், பெட்ரோல் சிக்கனப் படுத்தும் சின்ன கார் உற்பத்தியில் அமெரிக்க நிறுவனங்களின் தடுமாற்றம் இவை எல்லாவற்றையும் விட மூன்றாம் உலகப் போரை முடுக்கி விடுவதைப் போல சோவியத் யூனியனை மிரட்டிக் கொண்டிருந்த ரோனால்டு ரேகனைத் தேர்ந்தெடுக்க பயமாகத்தான் இருந்தது. ஆனாலும், அவர் போர் வெறியை விட அமெரிக்காவின் ஏற்றத்தைப் பற்றிய அவரது நம்பிக்கையும், உறுதியும் மக்களை ஈர்த்தது.

தேர்தலுக்கு முந்திய மூன்று நாட்களில் ஓர் அரசியல் பேரலை எழும்பியது. அந்த அலையின் தாக்கத்தில்தான் அரசாங்கம் என்பது மக்களின் முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டை என்ற கொள்கை அமெரிக்க அரசியலின் தாரக மந்திரமாயிற்று. தனி மனிதர்கள், அவர்களது நிறுவனங்கள், அவர்கள் பொருளாதாரச் சந்தை, இவை அரசாங்கத்தின் சங்கிலிகளிலிருந்து விடுவிக்கப் பட்டால் மாபெரும் பொருளாதார வளர்ச்சியைச் சாதிக்க முடியும் என்ற ஏயின் ரேண்ட் கொள்கைகளில் ஆழமான நம்பிக்கை கொண்டவர்கள் ஆட்சிக்கு வந்தார்கள். அப்படி வந்தவர்களில் முன்னாள் கூட்டுக் கருவூலக் குழுமத் தலைவர் ஆலன் கிரீன்ஸ்பேனும் ஒருவர்.

1929இல் பொருளாதாரப் பெருவீழ்ச்சிக்குப் பின்னர் அரசாங்கம் கொண்டு வந்த எல்லாக் கட்டுக்கோப்புகளையும் உடைத்தெறியும் முயற்சியில் இவர்கள் ஈடு பட்டனர். அரசு விதிக்கும் வரி மக்களின் பொருளாதார வளர்ச்சிக்குத் துணை போகும் முதலீட்டைப் பறித்து சோம்பேறிகள் சுகமாக வாழ வழிவகுக்கும் போதைப் பொருள் என்பது இவர்கள் வாதம். ஏழ்மைக்குக் காரணம் சோம்பல் என்பது இவர்கள் கூற்று. எதிரி நாட்டுகளைக் கட்டுப் படுத்தவும் அமெரிக்க நிறுவனங்களுக்கு உதவவும் மட்டுமே அரசாங்கம் தேவை என்ற பொருளாதார அடிப்படை வாதம் இவர்கள் அடிநாதம்.

1932-ல் அதிபர் பிராங்க்ளின் டெலினோ ரூசவெல்ட் உருவாக்கிய முற்போக்குக் கூட்டணியை உடைத்தெறிய இவர்கள் அதிபர் நிக்சன் தந்திரங்களைப் பயன்படுத்திப் பிற்போக்குச் சக்திகளைத் திரட்டி மாபெரும் கூட்டணி ஒன்றை அமைத்தார்கள்.

  • மதவாதப் பிற்போக்கு சக்திகள்,
  • இனவாதப் பிற்போக்கு சக்திகள்,
  • பொருளாதாரப் பிற்போக்கு சக்திகள்

இவை அனைத்தும் ஒரே கூடாரத்தில் ரேகன் தலைமையில் கூடின. ரூசவெல்ட் தலைமையில் உருவான முற்போக்கு அரசு அமைப்புகள் மக்களின் வரிப்பணத்தை அட்டை போல் உறிஞ்சிக் கொண்டு ஊழலில் ஊறியிருந்தது இவர்களுக்குச் சாதகமாக இருந்தது.

உழைப்பவர்களுக்கு வரி, சோம்பேறிகளுக்கு அரசு சலுகையா? என்ற இவர்கள் அறைகூவல் வரிகளை நம்பியிருந்த அரசாங்கத்தின் அடித்தளத்தையே ஆட்டம் காண வைத்தது. “வரி விதி, செலவு செய்” என்பதுதான் மக்களாட்சிக் கட்சியின் கொள்கை என்று இவர்கள் கட்டிய பட்டம் இன்று வரை மக்களாட்சிக் கட்சியை மிரள வைத்துக் கொண்டிருக்கிறது. 1992-ல் அதிபரான பில் கிளின்டனும் கூட இந்தப் பேரலையின் தாக்கத்தை எதிர் கொள்ள முடியாமல் இவர்களோடு ஒட்டி உறவாடிக் கொண்டே முற்போக்கு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருந்தது.

ரேகனின் பேரலையை வானளாவ உயர்த்தும் முயற்சியில் எழுந்தவர்தாம் இன்றைய அதிபர் ஜோர்ஜ் டப்யா புஷ். ரேகனைப் போன்ற பேரலையில் ஆட்சிக்கு வராமல், தட்டுத் தடுமாறி ஆட்சிக்கு வந்தாலும் தன்னை ரேகனின் மறு அவதாரமாகக் கருதிக் கொண்டவர் டப்யா புஷ். ரேகனைப் போலவே அரசு அமைப்புகளைச் சற்றும் நம்பாதவர் இவர். வாஷிங்டன் மக்கள் வரிப்பணத்தில் வாழும் அட்டைகள் நிரம்பிய குட்டை என்பது இவர் கொள்கை.

ரேகன் கொள்கைகளின் அடித்தளமே ஆடத் தொடங்கியது இவரது ஆட்சியில்தான்.

“கடன் வாங்கு, செலவு செய்” என்ற இவரது பொறுப்பற்ற கொள்கையின் விளைவுகளப் பார்க்கும்போது “வரி விதி, செலவு செய்” என்பது மிகவும் பொறுப்பான செயல் என்றே தோன்றுகிறது. மக்கள் வங்கிக்கணக்குகளைப் பாதுகாக்கத் தனியார் நிதி நிறுவனங்களின் மீது ரூசவெல்ட் ஆட்சி விதித்திருந்த கட்டுப் பாடுகளை வெகுவாகத் தளர்த்தியதில் முன்னணியில் இருந்தவர்கள் டப்யா புஷ், குடியரசுக் கட்சி வேட்பாளர் ஜான் மெக்கேன், மற்றும் முன்னாள் கூட்டுக் கருவூலக் குழுமத் தலைவர் ஆலன் கிரீன்ஸ்பேன்.

என்னென்ன காரணங்களால் 1929 பங்குச் சந்தை வீழ்ச்சி பொருளாதாரப் பெருவீழ்ச்சிக்கு வழி வகுத்ததோ அதே காரணங்கள் மீண்டும் மேலெழுவதைப் பற்றிக் கவலைப் படாமல் கிளிப்பிள்ளை போல் அரசுக் கட்டுப்பாடுகள் தளர்ச்சி, செல்வந்தர்கள் வரி குறைப்பு என்ற மந்திரங்களை ஓதிக் கொண்டிருந்தவர்கள் இவர்கள். இதில் உண்மையிலேயே பொருளாதார நிபுணரான ஆலன் கிரீன்ஸ்பான் அண்மையில் தனது கொள்கைகளால் அமெரிக்க, மற்றும் உலகப் பொருளாதார அமைப்புகள் அனைத்துமே நொறுங்கும் நிலைக்குத் தள்ளப் பட்டிருப்பதை உணர்ந்து, தன் கொள்கைகள் இந்த வீழ்ச்சிக்கு வழி வகுக்கும் என்பதை உணராமல் போய் விட்டதைப் பற்றி வருத்தம் தெரிவித்தார்.

ஆனால், டப்யா புஷ்ஷோ, ஜான் மெக்கேனோ இதைப் பற்றிப் புரிந்து கொண்டிருப்பதாகவோ, வருந்துவதாகவோ தெரியவில்லை. ஒபாமாவைப் பற்றிய மெக்கேனின் குற்றச்சாட்டு என்ன – “ஒபாமாவின் கொள்கை ‘வரி விதி, செலவு செய்’ – ஒபாமாவைத் தேர்ந்தெடுத்தால் உங்கள் வரி கூடும்” என்பதே. புஷ் – மெக்கேனின் ‘கடன் வாங்கு, செலவு செய்’ கொள்கையால் மக்களின் 401(k) ஓய்வுநிதிக் கணக்குகள் பேரிழப்புக்கு ஆளாகிக் கொண்டிருப்பதைப் பற்றி இவர்கள் வாயைத் திறக்க மாட்டார்கள்.

செப்டம்பர் 11 தாக்குதல் இவர்கள் கண்காணிப்பில்தான் நடந்தது. நியூ ஆர்லியன்ஸ் நகர் இவர்கள் ஆட்சியின் கீழ்தான் மூழ்கியது. ஓசாமா பின் லாடனின் முடியைத் தொடக்கூட இவர்கள் வக்கற்றவர்கள். ஈராக், ஆப்கானிஸ்தான் போர்களிலும் இவர்கள் தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் ஆட்சியின் கீழ்தான் பங்குச் சந்தையின் பெரு வீழ்ச்சியும், பொருளாதாரப் பெருவீழ்ச்சியும் தொடங்கியுள்ளன. இவை அனைத்துக்கும் அடிப்படைக் காரணம் அரசாங்கக் கட்டுப்பாட்டைத் தளர்த்துவதற்குப் பதிலாக அரசாங்கத்தையே தளர்த்தும் மனப்பான்மை.

இதை மாற்ற வேண்டும் என்பதில் ஐயமில்லை. ஆனால் எத்தைகைய மாற்றம்? மெக்கேனுக்கும், டப்யாவுக்கும் அரசாங்கத்தைப் பற்றிய கொள்கைகளில் வேறுபாடு இல்லை. கடன் வாங்கிச் செலவு செய்யும் கொள்கையிலும் வேறுபாடு இல்லை. புஷ்ஷுக்குப் பதிலாக மெக்கேன் வந்தால் மட்டும் பெரிதாக என்ன மாற்றம் இருக்க முடியும்?

ஆனால், மக்களாட்சிக் கட்சியின் கொண்டு வரும் மாற்றம் என்ன?

அதற்கு எடுத்துக்காட்டு ஒன்றைப் பார்ப்போம்.

1989-ல் டப்யா புஷ்ஷின் தந்தை ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ் ஆட்சியின் கீழ் சான் ஃபிரான்சிஸ்கோ நகரம் நிலநடுக்கத்தால் விளைந்த சேதங்களால் திணறியது. முக்கியமான பல மேம்பாலங்கள் சுக்கு நூறாகின. அவற்றை மீண்டும் கட்டி முடிக்கப் பல ஆண்டுகளாகின. நகரத்தின் வளர்ச்சி மட்டுப் பட்டது. பின்னர் 1992-ல் லாஸ் ஏஞ்சலஸ் நகரம் இனக் கலவரத்தால் பற்றி எரிந்தது. நாட்டின் அதிபர் புஷ்ஷும் சரி, கலிஃபோர்னியா மாநில ஆளுநர் வில்சனும் சரி நகரத்தைக் காப்பாற்ற முன் வரவில்லை. லாஸ் ஏஞ்சலஸ் நாதியற்றுத் தவித்தது.

1994-ல் லாஸ் ஏஞ்சலஸ் நகருக்குள்ளே நார்த்ரிட்ஜில் மையம் கொண்டிருந்த நிலநடுக்கத்தால் மிகுந்த சேதம் அடைந்தது. நிலநடுக்கத்தின் சேதம் தெரிந்த சில மணி நேரத்துக்குள் அதிபர் பில் கிளின்டன் லாஸ் ஏஞ்சலஸ் நகரத்தின் மீட்சித் திட்டத்துக்கு வழி வகுத்தார். அவரது அமைச்சரவை உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள், மாநில அரசு அதிகாரிகள் இவர்கள் அனைவரும் நிலநடுக்கங்கள் தொடர்ந்து கொண்டிருக்கும்போதும் லாஸ் ஏஞ்சலஸ் நகருக்கு விரைந்து மீட்சிப் பணிகளைத் தொடங்கினார்கள். சில மாதங்களுக்குள் நகரத்தின் உடைந்த மேம்பாலங்கள் மீண்டும் கட்டப் பட்டன. பெருவீதிகள் சீரமைக்கப் பட்டன. நில நடுக்கத்தின் அடையாளமே தெரியாத அளவுக்கு நகரமும் புத்துணர்ச்சி பெற்று வளரத் தொடங்கியது. நல்ல அரசாட்சி என்பதற்கு இலக்கணம் வகுத்தார் பில் கிளின்டன். அவரது ஆட்சியின் கீழ் அமெரிக்கப் பொருளாதாரம் பெரு வளர்ச்சி நிலையை எட்டியது. ஏனென்றால், அரசாங்கத்தின் தேவையை முற்றும் உணர்ந்தவர் அவர்.

2008 தேர்தலின் முக்கியக் கொள்கைப் போராட்டம் இதுதான். அரசாங்கத்தின் தன்மை என்ன? அதன் தேவை என்ன?

குடியரசுக் கட்சிக்காரர்கள், அரசாங்கத்தின் அதிகாரத்தைப் பயன்படுத்தித் தங்கள் அரசியல் எதிரிகளைப் பழி தீர்த்துக் கொள்வார்கள். தங்கள் மத நம்பிக்கைகளை மேம்படுத்துவார்கள். ஊழல் செய்யும் பெரு நிறுவனங்களைச் செல்லமாகத் தட்டி அனுப்பி விடுவார்கள். ஆனால், வெளிநாட்டுக் கொள்கைகளிலும், பொருளாதாரக் கொள்கைகளிலும் கெட்டிக்காரர்கள் என்று எடுத்த பெயரைக் கெடுத்துக் கொண்டுவிட்டார்கள்.

மக்களாட்சிக் கட்சிக்காரர்கள், மக்களின் தனி வாழ்க்கையில் அரசாங்கம் குறுக்கிடுவதை விரும்ப மாட்டார்கள். ஆனால் வசதியுள்ளவர்கள் மீது வரி விதித்து வசதியற்றவர்களுக்கு வாழ்வு கொடுப்பது அரசாங்கத்தின் அடிப்படைக் கடமை என்று நம்புபவர்கள்.

பொருளாதார வீழ்ச்சி சமயத்தில் இவர்கள் இருவரில் எவர் கொள்கை மக்களுக்கு ஆறுதலாக இருக்கும்?

1980-ல் கார்ட்டர் காட்டிய பூச்சாண்டிகளையும் மீறி மக்கள் ரேகனை வாக்குப் பேரலை மூலம் தேர்ந்தெடுத்தார்கள். 2008-ல் ரேகன் பேரலை வடியும்போது மெக்கேன் காட்டும் பூச்சாண்டிகளையும் மீறி ஒபாமா பேரலை எழுந்து கொண்டிருப்பது புலப்படுகிறது.

அமெரிக்க வரலாற்றிலேயே முக்கியமான தேர்தல் இது என்று பலர் கருதுகிறார்கள். ஆனால், அமெரிக்க வரலாற்றிலேயே மிக முக்கியமான தேர்தல் எட்டாண்டுகளுக்கு முன்னர் நடந்தது. புதிய ஆயிரத்தாண்டு தொடங்கும்போது தேர்ந்தெடுக்கப் பட்ட ஜார்ஜ் டப்யா புஷ்ஷின் திறமையின்மை அமெரிக்க வல்லரசின் சறுக்கலுக்கு வித்திட்டு விட்டது. கடந்த எட்டாண்டுகளில் அவர் செய்தவற்றின் பின் விளைவுகளில் இருந்து மீளப் பெரு முயற்சி தேவைப்படும்.

ஒபாமா அதிபராகத் தேர்தெடுக்கப் பட்டால் குறைந்தது அமெரிக்கச் சறுக்கல் நிதானப் படலாம். புஷ்ஷின் கொடுங்கோலாட்சியின் கடுமையான விளைவுகளால் வாடும் அமெரிக்கா மட்டுமல்ல உலகமே ஒபாமாவின் வெற்றியை வரவேற்கும்.

மணி மு. மணிவண்ணன், சென்னை, இந்தியா.

தேர்தல் வாரம்: பொருளாதாரம் – இரண்டாம் விருந்தினர்

தென்றல் (பொருளாதாரம் | அமெரிக்க நிதிநிலை: பொக்கீடு பற்றாக்குறை, டாலர் மதிப்பு | பங்கு சந்தை – வருமான வரி) பதிலளித்ததைத் தொடர்ந்து இன்னொரு சிறப்பு விருந்தினர்: $ என்றவுடன் நினைவுக்கு வரும் செல்வன்.

1. முதலாளித்துவம் பரப்பிய அமெரிக்கா சோஷலிஸம் பேசுகிறதா? முதலியக் கொள்கை எப்படி இருக்கிறது? பூட்ட கேஸா அல்லது தவறன மருந்து உட்கொண்ட நோயாளியா?

சோஷலிசம் என்றால் தனியார் சொத்துடமைக்கு அனுமதி மறுப்பு, வணிகம் செய்யும் உரிமை முழுவதும் அரசுக்கே சொந்தம் என்று பொருள். அந்த நிலைக்கு அமெரிக்கா மட்டுமல்ல, உலகின் எந்த நாடுமே இனிபோகாது. காம்யூனிசம் செத்தது செத்ததுதான். ஆண்டாண்டு காலம் அழுது புரண்டாலும் மாண்டார் மீளப்போவதில்லை..

முதலிய கொள்கை எனப்படும் சுதந்திர பொருளாதார கொள்கை மனிதனுக்கு என்று ஆசை மனதில் தோன்றியதோ அன்றே தோன்றிவிட்டது. கொலம்பசை கப்பலில் ஏறி இந்தியாவை தேட வைத்ததும், ஆம்ஸ்ட்ராங்கை நிலவுக்கு அனுப்பியதும், எட்ட முடியாத பனிமலைகளை மனிதனை ஏறிக்கடக்க வைப்பதும் அதே ஆசைதான்.

ஆசையும் சுயநலமும் இல்லையென்றால் மனித இனமே கிடையாது.மீண்டும் அவன் மிருகநிலைக்கு தாழவேண்டியதுதான்.

  • டாட்டாவின் சுயநலம் லட்சம் ரூபாய் காராக மலர்ந்தது.
  • நாராயணமூர்த்தியின் சுயநலம் இந்தியாவை டிஜிட்டல் யுகத்துக்கு கொண்டு சென்றது.
  • லாரி பேஜின் சுயநலம் கணிணி இருப்பதே எழுத்தாளனாவதற்கு தகுதி என்ற நிலையை தமிழ்கூறும் நல்லுலகுக்கு கொண்டுவந்தது.

தனிமனிதனின் சுயநலத்தை பொதுநலத்துக்கு பயன்படுத்துவதே ஒரு நல்ல அரசின் கடமை.

2. வருமான வரி: தனிநபர் வரியைக் குறைப்பது என்பது கேபிடலிசத்தின் அடிநாதம் அல்லவா? அதை ஏன் ஒபாமா எதிர்க்கிறார்? உழைத்து முன்னேறியவர் தனக்குக் கிடைக்கும் செல்வத்தை மறுபடியும் சந்தையிலேயே முதலீடு செய்து புத்தம்புதிய வாய்ப்புகளையும் வேலைகளையும் உருவாக்கும் மகயினின் ‘வரிக்குறைப்பு கொள்கை’ ஒபாமாவை விட சிறந்ததா?

ஒபாமாவின் வருமான வரிக்கொள்கை ஓட்டுக்களை பெற்றுத்தருமே அன்றி வேலைகளை பெற்றுத்தராது. கம்பனிகளுக்கு வருமானவரியை அதிகரித்தால் அவை வேறு தேசத்துக்கு போய்விடும். இது எல்லைகள் இல்லாத உலகம்.

வருமானவரி விலக்கு கிடைக்கும் என்றதும்

  • ஐ.சி.சி தான் பிறந்த லண்டனை விட்டுவிட்டு துபாய்க்கு ஜாகையை மாற்றிவிட்டது.
  • டாட்டா நானோவை மேற்குவங்கம் துரத்தினால் குஜராத் கைநீட்டி வரவேற்கிறது.

ஒபாமாவின் கொள்ககளால் பீதியடைந்த வால்மார்ட் ஒபாமாவுக்கு எதிராக தனது தொழ்லாளிகளிடம் பிரச்சாரம் செய்கிறது. அமெரிக்க தொழில்துறை முழுவதும் ஒபாமாவுக்கு எதிராக மெக்கெய்னுக்கு நிதியுதவி அளிக்கின்றது. தொழிலகங்கள் இல்லாவிட்டால் தொழிலாளியே கிடையாது என்பதை டெமக்ராட்க் கட்சியினர் புரிந்துகொள்வது நல்லது

தென்றல்: அமெரிக்க பங்குசந்தை – இறுதிப் பகுதி

முந்தைய பதிவுதென்றல்

3. பொக்கீடு பற்றாக்குறை, டாலர் மதிப்பு: இதையெல்லாம் குறித்து ஒபாமாவோ மகயினோ கவலை கொள்கிறார்களா? பொருட்டாக மதித்து ஏதேனும் ஆக்கபூர்வமான திட்டங்கள் வைத்துள்ளார்களா?

Consumer Market ‘நல்ல படியாக’ வைத்துக் கொண்டாலே போதும். (அதை எப்படி நல்லபடியா வைத்துக் கொள்வது…??)

4. வருமான வரி: தனிநபர் வரியைக் குறைப்பது என்பது கேபிடலிசத்தின் அடிநாதம் அல்லவா? அதை ஏன் ஒபாமா எதிர்க்கிறார்? உழைத்து முன்னேறியவர் தனக்குக் கிடைக்கும் செல்வத்தை மறுபடியும் சந்தையிலேயே முதலீடு செய்து புத்தம்புதிய வாய்ப்புகளையும் வேலைகளையும் உருவாக்கும் மகயினின் ‘வரிக்குறைப்பு கொள்கை’ ஒபாமாவை விட சிறந்ததா?

ஆண்டிற்கு 250,000 டாலர்க்கு மேல் வாங்கும் குடும்பங்களுக்கு வரியை உயர்த்த வேண்டும் என்பது ஒபாமா தரப்பு திட்டம். அதுவும் மெக்கெய்னின் தரப்பு கூறப்படுகின்ற ‘வசதியுள்ள பெருங்குடி மக்களுக்கு’ கொடுக்ககூடிய வரி சலுகைகளைதான் ஒபாமா எதிர்கிறார்.

ஆனால் உண்மை என்னவென்றால், நாட்டின் பெரும்பான்மையான வரிபணம் கிடைப்பது அந்த குறைவான சதவீதமுள்ள ‘பெருங்குடி மக்களிடமிருந்து’ தான் என்று அரசாங்க குறிப்பு சொல்கிறது. ‘அதனால் அவர்களின் வரிச்சுமையை 3-4% குறைத்தால் என்ன?’ என்பது மெக்கெய்னின் தரப்பு கேள்வி!.

ஒபாமாவின் திட்டம் பெரும்வாரியான குடும்பங்களின் வரிச் சுமையை ஓரளவு தளர்த்த உதவும். அதனால் ஒபாமா திட்டம் சிறந்ததாகவே (எனக்கு) தோன்றுகிறது.

5. முதியவர்களுக்கான வரி: (An Updated Analysis of the 2008 :: Presidential Candidates’ Tax Plans – Tax Policy Center and Urban Institute) அறுபத்தைந்து வயதைத் தாண்டியோர் $50,000த்திற்கு குறைவாக சம்பளம் ஈட்டினால், முழுமையான வருமான வரிவிலக்கு தருவதாக ஒபாமாவின் கொள்கை தெரிவிக்கிறது. அப்படியானால் குழந்தை குட்டியோடு உழலும் சாதாரணக் குடிமக்கள் குடும்பம் இந்த சலுகைக்கு உகந்தவர்கள் இல்லையா? ஏற்கனவே முதியவர்களுக்கு பல்வேறுவிதமான தள்ளுபடி கிடைக்கும் இன்றைய நிலையில் இது போன்ற கேரட்களும் தேவைதானா?

சுட்டிக்கு நன்றி! இதுல (An Updated Analysis of the 2008 – Presidential Candidates’ Tax Plans: Revised August 15, 2008) அருமையான தகவல்கள் இருக்கு!

“அரசியல இதலாம் சகஜம்தான்” னாலும் மூத்த குடிமக்களுக்கு இதுபோன்ற சலுகைகள் வரவேற்கதக்கதே!!

அமெரிக்க பொருளாதாரம்: அலசல் – தென்றல்

முந்தைய இடுகை

2. அமெரிக்க நிதிநிலை: இப்பொழுது பங்குச்சந்தை படுத்து இருக்கும் நிலையில் இருந்து நிமிர யார் தேவை? அடுத்த அதிபர் எப்படி செயல்பட்டால் வீழ்ந்த வால்ஸ்ட்ரீட் தலைதூக்கும்?

ஆகா…இந்த கேள்விக்குதான் ‘பெரிய பெரிய தலைகளே’ மண்டை பிச்சிகிட்டு இருக்கிறாங்க!!

சமீபத்திய பங்குச்சந்தை/நிதி நிர்வாகங்களின் சரிவு, 700 பில்லியன் டாலர் தேவை ….

இந்தப் பிரச்சனைக்கு அடிப்படை காரணம் என்னனு பார்த்தா எனக்கு தோன்றியது …… பேராசை – சாமான்யமிடமிருந்து பெரிய நிர்வாகம் வரை..

5, 6 வருடத்திற்கு முன், கேக்குறவுங்களுக்கு எல்லாம் கடன். ஒரு சென்ட்கூட கையில் இருந்து குடுக்காம வீடு வாங்கலாம். அதுவும் 3-4 வருடத்திற்கு, interest only loan. ‘ஆடி/சிறப்பு தள்ளுபடி’யா 3.5% வட்டி விகிதம் !! வருசத்திற்கு 40000, 50000 டாலர் சம்பாதிக்கிறவன், ஆரம்பத்தில மாசத்துக்கு 2000 mortgage கட்டினா போதும். வாங்குறவனுக்கு தெரியாத என்ன, ‘3-4 வருசத்திற்கு அப்புறம் வட்டி கூடும், அதிகமா வட்டி கட்ட வேண்டி வரும்..நம்ம வரம்புக்கு மீறி எப்படி கட்டுறது’னு.. அவன் கணக்கென்ன, ‘3-4 வருசத்தில வீட்டோட விலை அதிகமாச்சினா, நல்ல இலாபத்துக்கு வித்துட்டு போயிடலாம்.’

வங்கிகள், நிதி நிர்வாகங்களின் கணக்கு 3-4 வருடத்தில் வீட்டின் விலை கூடும், வட்டி கூடும்….. நல்ல வசூல்!

மூன்று வருடத்தில். 3.5 சதவீதமாக இருந்த வட்டி விகிதம், 6, 6.5. சதவீதமானது. மாசத்துக்கு 2000 mortgage கட்டியவன் இப்பொழுது 3500 கட்ட வேண்டும். வீட்டை விக்கலாம்னா, வாங்கின விலையை விட கம்மி! அதுவும் வாங்க ஆளில்லை! Foreclosures!

அந்தப் பக்கம், ஃபேனி மே, ஃபிரெட்டி மேக், லெஹ்மன் பிரதர்ஸ் ..திவால்!!

இதற்கு வங்கிகள், நிதி நிர்வாங்களின் விதிமுறைகள், சட்ட திட்டங்களை கடுமையாக்க வேண்டும்.
திவால் ஆகிற நிதி நிர்வாங்களை அரசாங்கம் காப்பதறதுண்ணா. நாளைக்கு Ford, GM, Staples (!) க்கும் இதே மாதிரி நிலைமை வந்தா அரசாங்கம் ஓடி வருமா?

சரி.. இந்த நிலையில் இருந்து நிமிர யார் தேவை…!!

ஓபாமா நல்ல பேச்சாளர். ஆனால் ராஜ தந்திரியா… இப்போதைக்கு தெரியாது! ஏன்..?

செனட்ரா இருந்து அவர் செய்த சாதனைகள் எதுவும் பட்டியலிடப் படவில்லை!

He is not a good lobbyist! இப்பொழுது அவருக்கு பக்க பலமாக இருக்கும் அவருடன் இருப்பவர்களும் அப்படியே! ஓபாமா, இதுவரை lobby பண்ணி சாதிச்சதா ஒண்ணுமில்லை.

அப்புறம் அவருடைய அனுபவமின்மை….எதிர்காலத்தில் இதுவே பிரச்சனையாக இருக்கலாம். ஆனால், ஜோ பிடன் தேர்வு விவேகமானது!

பெரிய நிர்வாகங்களை (eg: Exxon-Mobil) லாம் பிடி பிடினு பிடிக்கிறார். இப்படி அவர் ‘தைரியமா’ பேசுவதற்கு காரணம், பெரிய பெரிய பணசுனாமிகளின் தாக்கம் இவர் மேல் நேரிடையாக இல்லை. எட்டு வருடம் இவருடைய கட்சி அதிகாரத்தில் இல்லாததும் இவருக்கு ப்ளஷ்.

அந்தப் பக்கம், மெக்கெய்ன்… நல்ல அனுபசாலி! இருபது ஆண்டுகள் செனட்டில் இருந்த அனுபவம், பல திட்டங்களில் ஒருங்கிணைத்த விதம், பணமுதலைகள், யூதர்கள், கிருஸ்தவர்களின் பக்க பலம்…… இதலாம் சேர்த்து அவரை ஒரு நல்ல lobbyist உருவாக்கி இருக்கிறது. அதனால், மெக்கெய்ன் வந்தால் நல்லது!

3. பொக்கீடு பற்றாக்குறை, டாலர் மதிப்பு: இதையெல்லாம் குறித்து ஒபாமாவோ மகயினோ கவலை கொள்கிறார்களா? பொருட்டாக மதித்து ஏதேனும் ஆக்கபூர்வமான திட்டங்கள் வைத்துள்ளார்களா?

தேர்தல் வாரம்: கொள்கை விளக்கம் – பொருளாதாரம்

அமெரிக்கர்களுக்கு வருமான வரி குறைகிறதா என்பது மட்டும்தான் பொருளாதாரக் கொள்கையா என்பது வெங்கட்டின் ஆதங்கம். இதை உறுதிப்படுத்துவது போல் ‘நடுத்தர வர்க்கத்தின் வரிச்சுமையைக் குறைப்பேன்‘ என்று ஒபாமாவும், ‘அது மட்டும் போதாது; பெருநிறுவனங்களுக்கும் வரிவிலக்கு தருவேன்!‘ என்று ஜான் மெகயினும் சளைக்காமல் ஆலமரத்தடி பிள்ளையாரான வரியை மட்டுமெ ஒவ்வொரு வரியிலும் சுற்றி சுற்றி வந்து பங்குச்சந்தையான அடிவயிறு பெருக்கிறதா என்று தொட்டுப் பார்த்து வருகிறார்கள்.

தேர்தலில் தற்போதைக்கு முன்நிலையில் இருக்கும் ஒபாமாவின் வலையகமும் இதை உறுதியாக்குவதாக இரண்டு கிடங்குகளை காட்டுகிறது. சேமிப்புக் கிடங்கின் அடியில் நிறைய சில்லறையும், வரிக் கிடங்கு காலியாகவும் இருந்தது. குறைவாக சேமித்தால் நிறைய வருமான வரி போடும் கொள்கை என்று இதை நான் புரிந்து கொண்டேன்.

இந்த மாதிரி நாணயமான சந்தேகங்களை விளக்க வருகிறார் தென்றல்:


முதலில் டிஸ்கி;

(அமெரிக்காவைப் பொறுத்தவரை) ராமன் ஆண்டா என்ன ..ராவணன் ஆண்டா என்ன கட்சியை சேர்ந்தவன். நம்ம ஊர்லயாவது ஓட்டு போடலாம். இங்க அதுவும் இல்ல! தலைப்பு செய்திகளை படிச்சிட்டு, வெட்டி விவாதங்கள் பண்ணிட்டு, CNN, Fox, Jay Leno, Saturday Night live பார்த்துட்டு சிரிச்சிட்டு போற கோஷ்டியை சேர்ந்தவன்!!

1. பொருளாதாரக் கொள்கை: யாருடையது மேம்பட்டதாக உங்களுக்குத் தோன்றுகிறது? ஏன்? எந்த அம்சங்கள் கவர்ந்தது?

இப்பொழுதய நிலையில், பொருளாதாரக் கொள்கை னா நாலு குருடர்கள் யானையை வர்ணித்த கதைதான் நினைவுக்கு வருது.

‘அந்தளவுக்கு’ விசய ஞானம் இல்லாததால், நமக்கு எந்தளவு இவர்களுடைய திட்டங்கள் நல்லதுனு பார்த்தா….

  • வருடத்திற்கு, $250,000 சம்பாதிக்கும் குடும்பத்திற்கு வரியை உயர்த்தப் போவதில்லை.
  • $80,000 சம்பாதிக்கும் குடும்பத்திற்கு $1000 வரி விலக்கு
  • 10% Morgage interest வரி விலக்கு
  • கல்லூரி செல்லும் மாணவர்களுக்கு $4000 வரி விலக்கு
  • ராணுவச் செலயை குறைப்பதற்கான வழிமுறைகள்
  • எல்லாரும் பொதுவா சொல்றது, நாட்டில் தொழில் உற்பத்தியை வளர்க்க பாடு படுவேன்

… இப்படியாக நடுத்தர மக்கள் சிறிது ஆசுவாசப் படுத்திக்கொள்ள உதவும் திட்டங்கள் ஒபாமா தரப்பிடமிருந்து…

மெக்யன் தரப்பிலிருந்து

  • வேலை வாய்ப்பை அதிகரிக்க, பெரிய நிர்வாகங்களின் வரி விகிதத்தை 35% லிருந்து 25% ஆக குறைத்தல்
  • Single Parentக்கான வரி விலக்கு $3500 லிருந்து $7000 ஆக உயர்த்துதல்
  • இணையதளத்திற்கான வரி விலக்கு
  • புது கைத்தொலைபேசிக்கான வரிவிலக்கு
  • கோடைகால விடுமுறை நாட்களில் பெட்ரோல்/டீசலுக்கான வரி விலக்கு

இதில் எந்தந்த அம்சங்கள் யார் யாருக்கு சிறந்தது…?!!

2. அமெரிக்க நிதிநிலை: இப்பொழுது பங்குச்சந்தை படுத்து இருக்கும் நிலையில் இருந்து நிமிர யார் தேவை? அடுத்த அதிபர் எப்படி செயல்பட்டால் வீழ்ந்த வால்ஸ்ட்ரீட் தலைதூக்கும்?

அடுத்த அமெரிக்க அதிபருக்கு நிச்சயம் ஆப்பு – சத்யா

5. ஒபாமா 98% ஜனநாயகக் கட்சியின் கொறடா/வழிகாட்டலின் படி செனேட்டில் வாக்களித்திருக்கிறார். ஜான் மகயின் 90% புஷ்ஷோடு ஒத்துப் போய் இருக்கிறார். இவர்களுக்கு ‘மாற்றம்’ தாரக மந்திரத்தையும் ‘மேவ்ரிக்’ பட்டத்தையும் வைத்துக் கொள்ள என்ன தகுதி உள்ளது? Bipartisan என்று முழங்கினாலும் செய்கையில் அதை நிரூபிக்காதவர்களின் அடுத்த நான்கு வருடங்கள் புஷ்ஷோடு ஒப்பிட்டால் எவ்வாறு வேறுபடும்?

நூறு சதவிகிதம் ஒத்துக்கொள்கிறேன். இருவருக்கும் ஒரு பெரும் வித்தியாசம் இருப்பதாக தோன்றவில்லை பார்க்க ‘என் ஓட்டு’ கேள்வியில்.

அரசியலில் வாய்ப்பந்தல் போடுபது எல்லாமே ஓட்டுக்களை வாங்குவதற்கு மட்டுனே. அரசாங்கம் எனும் மாபெரும் இயந்திரத்தை ஒட்டுமொத்தமாக யாராலும் மாற்றிவிட முடியாது. அடுத்த நான்கு வருடங்களில் இரண்டு வருடங்கள் இருக்கும் பிரச்சனைகளை சரிசெய்யவே போய்விடும். இதில் பெரும் பணிகள் காத்து இருக்கின்றன. சரியான திட்டங்கள் தேவை.

அடுத்த ஜனாதிபதி என்ன செய்தாலும் ‘அப்பவே சொன்னேன் பாத்தீங்களான்னு’ அழ அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.

ஒபாமா வந்தால் இன்னும் கட்டுப்பாடுகள் கொண்டு வருவார். வெளிநாட்டுக்கு போகும் வேலைகளை தடை பண்ண ஏதாவது சட்டம் கொண்டு வந்தாலும் வருவார். கொஞ்சம் பெரிய நிறுவனங்களுக்கு தலைவலியாக இருப்பார் என்று தோன்றுகிறது.

அவர் பேசுவதையெல்லாம் செய்ய அரசியலும் லாபிக்களும் தடைசெய்யும். அதனால் ஒரளவு கட்டுப்பாடுகளும் போர் முழக்கங்கள் இல்லாமலும் இருக்கும. ஈராக்கிலிருந்து ஓடிவருதெல்லாம் வேலைக்காகாது. கெட்ட பேரும் தலைவலியும் தான் மிஞ்சும்.

மகெயின் வந்தாலும் ஒபாமாவுக்கும் இவருக்கும் வித்தியாசம் இருக்காது. ஈராக் நிலைமையும் ஆப்கானிஸ்தானும் சீராக வேகமான சரியான முடிவெடுப்பார் என்றே தோன்றுகிறது.பொருளாதாரத்தை வேகமாக நிமிர்த்துவார் என்றே நம்பிக்கை அளிக்கிறார். கொஞ்சமாவது லாபிக்களை ஒழிப்பார்.

இவருடைய ஈரான் கொள்கைகள் கிலியை ஏற்படுத்துகின்றன. அனேகமாக நான்காவது வருட இறுதியில் புஷ் போலவே ஏதாவது வேடிக்கை காட்டுவார். பார்ப்போம்.

6. வேட்டி-சட்டை, குர்தா-பைஜாமா: ஒபாமா/மகயின் – எவருக்கு எது பொருத்தமாக இருக்கும்?

சத்யா

மெகயின்: பிரச்சாரத்திற்கு இடைக்கால ஓய்வு

பொருளாதாரத்தை பெரிதும் பொருட்படுத்துவதால் தன்னுடைய அதிபர் தேர்தல் பிரச்சாரத்திற்கு இடைக்கால ஓய்வு அளிக்க விரும்புவதாக ஜான் மெக்கெயின் தெரிவித்திருக்கிறார்.

இதனால் இந்த வெள்ளி (செப். 26) அன்று நடக்கவிருந்த ஒபாமாவுடன் ஆன வாக்குவாதத்தையும் ஒத்தி வைக்க பராக்கின் ஒத்துழைப்பைக் கோரியுள்ளார்.

தொடர்புள்ள செய்திகள்:

1. BBC NEWS | Americas | US candidates wary over bail-out

2. McCain Seeks to Delay Debate – NYTimes.com

3. McCain suspends campaign for ‘historic’ crisis – CNN.com