Tag Archives: சினிமா

கருத்துப் படமும் கமல் பாட்டும்

தொடர்புள்ள தினமணி தலையங்கம்: Sri Lankan Navy plants mines along marine border with India: Defence system in Palk straits « என்ன கொடுமை இது!

Host unlimited photos at slide.com for FREE!

அலைகளில் மிதக்குது நிலவொன்று குளிக்குது கை கொடு
குளிக்கின்ற நிலவுக்கு முதுகினில் அரிக்குது கை தொடு
தேகம் உருகியதே
ஆடை உருகியதே
நீரும் சூடு ஏற

வழி ஒண்ணும் தெரியல
வயசுக்கு வரவில்ல நானடி
குளிப்பது நீயடி குளிர்வது எனக்கடி ஏனடி…

தேகம் மறந்துடிச்சே நீச்சல் மறந்திடுச்சே கூச்சம் ஆகி போச்சே
வழி ஒண்ணும் தெரியல
வயசுக்கு வரவில்ல நானடி
குளிப்பது நீயடி
குளிர்வது எனக்கடி ஏனடி…

முத்தங்கள் முன்னூறு நீ தந்து முன்னேறு
அய்யோ முன்னூறும் தாங்காது தந்தாலும் தகராறு
இவள் வசம் புது ரசம்… இவள் வசம் புது ரசம்
இதழ் ரசம் இலவசம் நீ குடி

ஓ… புதுரசம் அழைக்குது பழரசம் கொதிக்குது பாரடி
நானிங்கு நானில்லை நீ இன்றோ ஆளில்லை…
ஆடை காண வில்லை

ஆணுக்கு ஆவேசம்… வந்தாலே சந்தோசம்
உன்பாடு உல்லாசம் எம்பாடு படு மோசம்
வெயிலுக்கு நிழல்கொடு… வெயிலுக்கு நிழல் கொடு
மயிலுக்கு உடை கொடு மாமனே

அய்யய்யோ…
இருக்குற வேட்டிய கொடுத்துட்டு தவிப்பது பாவமே
பஞ்சாங்கம் பாக்காதே என் அங்கம் தாங்காதே…
நீரில் ஈரம் இல்லை!

Thuglaq Thai Puthaandu - Tamil New Years Day: DMK, Kalainjar Karunanidhi

சித்திரையில் என்ன வரும்?

தொடர்புடைய தினமணி கட்டுரை: Tamil New Year: Thai Pongal or Chithirai First Day?: “சித்திரையில்தான் புத்தாண்டு – எஸ். ராமச்சந்திரன்”

பெண்
MK Young Youth Chithirai Karunanidhi அப்படியோர் ஆணழகன் என்னை ஆளவந்த பேரழகன்
செப்புக்கல்லு சீரழகன் சின்ன
செம்பவள வாயழகன்
இப்படியோர் தேரழகன் இல்ல
இன்னு சொல்லும் ஊரழகன்
அப்பறம்நான் என்ன சொல்ல
என்னை கட்டிக்கிட்டான் கட்டழகன்

பல்லவி

சித்திரையில் என்ன வரும்?
வெய்யில்
சிந்துவதால் வெக்கவரும்

நித்திரையில் என்ன வரும்?
கெட்ட
சொப்பனங்கள் முட்ட வரும்

கண்ணான கண்ணுக்குள்ளே
காதல் வந்தால்
உண்மையில் என்ன வரும்?

தேசங்கள் அத்தனையும்
வென்றுவிட்ட
தித்திப்பு நெஞ்சில் வரும்

சரணம் : ஒன்று

பாவி பயலால
இப்ப நானும்
படும் பாடுயென்ன

ஆவி பொகபோல
தொட்டிடாம
அவன் போறதென்ன

கண்ணுக்கு காவலா
சொப்பனத்தப் போடுற
கன்னத்துக்கு பவுடரா
முத்தங்கள பூசுற

நூலப்போல சீல – பெத்த
தாயப்போல காள
யாருபோல காதல் ,சொல்ல
யாருமே இல்ல

சரணம் : இரண்டு

கேணி கயிறாக
ஒங்கபார்வ
என்ன மேலிழுக்க

கூனி முதுகாக
செல்லவார்த்த
வந்து கீழிழுக்க

மாவிளக்கு போலநீ
மனசையும் கொளுத்துற
நாவிடுக்கு ஓரமா
நாணத்தப் பதுக்குற

யாரும் எறச்சிடாத – ஒரு
ஊத்துப்போல தேங்கி
ஆகிப்போச்சு வாரம்- இவ
கண்ணுமுழி தூங்கி

அசல்: யுகபாரதி: சித்திரையில் என்ன வரும்

DMDK Vijayganth vs AIADMK Jeyalalitha – Tamil Nadu Politics: Cartoons by Mathy

Host unlimited photos at slide.com for FREE!

Raman Thediya Seethai – Movie Ads

Host unlimited photos at slide.com for FREE!

Raman Thediya Seethai - Cheran with Heroines: Dinamani Paper Advertisements

காளை & Disaster Lyricism

ஆண்: குட்டிப் பிசாசே
குட்டிப் பிசாசே
உன் தொல்ல தாங்கலே

பெண்: சுட்டிப் பிசாசே
சுட்டிப் பிசாசே
உன்னால தூங்கலே

ஆண்: ட்வின் டவர் மேல ஏர்க்ராஃப்ட் போல
என் மேல மோதுனா என்னாவது?

பெண்: ஹ்ம்ம்
உன்மேல மோதி
உற்சாகம் கோடி
உண்டாகத்தானே
நான் மே மாசம் பெண்ணானது

தொடர்புடைய சேவியரின் பதிவு:

கட்டிக் கொண்டு கையாடச் சொன்னது காமச் சாமியோ
நான் கட்டும் ஆடை களவாடப் பார்க்கும் நீதான் சுனாமியோ ?

Bheema – Audio Lyrics

Host unlimited photos at slide.com for FREE!
Host unlimited photos at slide.com for FREE!
Host unlimited photos at slide.com for FREE!
Host unlimited photos at slide.com for FREE!
Host unlimited photos at slide.com for FREE!
Host unlimited photos at slide.com for FREE!

ஓரம் போ – ஆடல், பாடல், தாளம்

நந்தவனத்தில் ஓரு ஆண்டி

ஜிகு ஜிக்கா ஜிகு ஜிக்கா ஜிக்கான்

முயலுக்கும் ஆமைக்கும் ரேசு
இதுல ஜெயிக்கிற ஆள்தாண்டா எப்போதும் பாஸு

ஃபயரில்லா ஆள் எல்லாம் க்ளோசு
மொக்கை பல்பாக இருந்தாக்க உன் கதை ஃப்யூஸு

ஜிகு ஜிக்கா ஜிகு ஜிக்கா ஜிக்கான்

குண்டாக சுட்டாக்க இட்லி ..
அதையே ரவுண்டா சுட்டாக்கா உத்தப்பம் தோசை

எல்லாமே ஒரு கரண்டீ மாவு
அதிகம் பேராச பட்டாக்க மனசுக்குள்ள நோவு

ஜிகு ஜிக்கா ஜிகு ஜிக்கா ஜிக்கான்

உலகத்தில் எங்கேயும் போட்டீ
நீ கண்மூடித் தூங்கினா கழண்டுடும் வேட்டீ

ரொம்பத்தான் அடிக்காத லூட்டி


கன் கணபதிதான் காலேஜ் படிக்க போனானாம்
அரியர்ஸே வேணாம் ஆட்டோவே மேலுன்னு வந்தானாம்

எட்டு எட்டா
பதினாறு போட்டு ரெண்டு லைசென்சு வாங்கினானாம்


கோழி காலு ரெண்டு என்னும் கவிதையை வரி வடிவில் கொண்டு வந்து தருபவர்களுக்கு ‘இல்லிக்காது சுருதிப்பேட்டையர்’ விருது வழங்கலாம்.

2007 – பேசப்பட்ட தமிழ் திரைப்படங்கள்

மசாலா பத்து

  1. போக்கிரி – தூள். மகேஷ் பாபு மலை என்றாலும், மடுவாகாத விஜய்.
  2. அழகிய தமிழ்மகன் – ரஜினிக்குப் பிறகு மசாலை ஊச வைக்காத நம்பிக்கை நட்சத்திரம் விஜய் முதல் முறையாக இரு வேடத்தில் தோன்றினார்.
  3. தாமிரபரணி – கடகட காட்சி நகர்த்தல். நேர்த்தியான விஷால். சன் டிவி சீரியலின் சாமுத்ரிகா நாயகி. சந்திரமுகி அல்லாத பிரபு.
  4. கண்ணாமூச்சி ஏனடா – பெண்களுக்கு பிடித்த மாதிரி படம் எடுக்க இன்னும் முன்வருகிறார்களே! பார்க்கலாம்… பாராட்டலாம்.
  5. பருத்திவீரன் – ஜாலியான கதையில் கடைசி அரை மணி ரணகளம்.
  6. நான் அவனில்லை – ஸ்னேகா திருஷ்டிப் பொட்டாக இருந்தாலும் ஜீவன் பிழைக்கவைக்கிறார்.
  7. அம்முவாகிய நான் – பார்த்திபனுக்கு என்றும் பாயசம், செக்ஸ் அன்றும் விற்றது; இன்றும் சதை சக்கை போடுகிறது.
  8. கிரீடம் – இளைய தளபதிக்கு மட்டும்தானா ரீமேக்?
  9. பில்லா – மீண்டும் வறட்சி; இன்னொரு ரீமேக்.
  10. பச்சைக்கிளி முத்துச்சரம் – மொழிமாற்றம் என்ற முறையில் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

வித்தியாச பத்து

  1. உன்னாலே உன்னாலே – வசனத்தில் பன்ச்; துள்ளலில் தங்கச்சி கஜோலுக்கு அக்கா; ‘ஜெய’த்திற்கு பின் மீண்டும் சதா நடிப்பு.
  2. எவனோ ஒருவன – சாது மிரண்டால்; கல்கி புருஷன்.
  3. ஒன்பது ரூபாய் நோட்டு – சிவாஜி கணேசனுக்கு போட்டியாக நடிப்பும் சோகமும்.
  4. ஓரம்போ – சென்னை ஆட்டோக்களும் ஆட்டோ சார்ந்த பிரதேசங்களும்.
  5. கற்றது தமிழ் – ஆசைப்படுவதை படிப்பதை விட ஆசைப்பட்டது கிடைக்குமாறு படிக்க சொன்ன படம்
  6. கல்லூரி விஸ்வாமித்திரர் வாயால் பிரும்மரிஷி பட்டம்
  7. லீ – படம் நல்லா இருக்காமே?
  8. சென்னை 600028 – படம் நன்றாக இருக்கிறது
  9. சத்தம் போடாதே – வசந்த்
  10. பொல்லாதவன் – பார்க்கவேண்டும்

விட்டுப்போனவை

பயமுறுத்தியவை

  1. மிருகம் – சலனம் செய்யவேண்டுமென்றால் ஆவணப்படமாவது எடுக்கத் தெரிந்திருக்கவேண்டும்
  2. வீராசாமி – உடலுக்கும் உருவத்துக்கும் ஏற்ற பாத்திரம் எடுக்கத் தெரியவேண்டும்
  3. ஆழ்வார் – இயக்குநரை தேர்தெடுக்கத் தெரியவேண்டும்
  4. குற்றப்பத்திரிகை – தணிக்கை அரசியல் தெரிந்திருக்கவேண்டும்
  5. தீ நகர் – கரண் பொருத்தமாக செய்கிறாரே என்னும்போது கொம்புசீவுபவர்களை அடக்கத் தெரியவேண்டும்
  6. தீபாவளி – ஜெயம் ரவிக்கு தெரிந்ததெல்லாம் மறுசுழற்சி; எதற்கு சொந்த முயற்சி?
  7. மாயக்கண்ணாடி – சேரன், எஸ்,ஜே. சூர்யாவுக்கு எல்லாம் இயக்குநர் சரக்கு தீர்ந்தாச்சா?

உதவிய பதிவுகள்:
சண்டே சினிமா :: ஃப்ளாஷ் பேக் 2007 – மனோஜ்கிருஷ்ணா

Tamil Cinema 2007 – Top Films, Movies, Flashback, Stars: Dinamalar

The Great Debaters – Quote

You have to do what you have to do in order to do what you want to do.

விரும்பியதை நிகழ்த்துவதற்கு என்ன செய்யவேண்டுமோ அதை நிறைவேற்ற வேண்டும்.

மொழியாக்கம் சிலாக்கியமில்லை. டென்சல் சொன்ன மூல வசனத்தில் வேகம் இருக்கிறது. உணர்ச்சி இருக்கிறது.

டென்சலுக்கு இயக்குநராக ஆசை. சேரனுக்கு நடிக்க ஆசை. எல்லாம் உடனடியாகவா வந்துவிடுகிறது?

Muthu – Movie Screenplay bits & pieces

மீனா: வேதனை. அவமானம், வெட்கம்!

பாண்டிய மன்னனாக வடிவேலு: ஆமா… இது என் டயலாக் இல்ல?

மன்னனுடன் கூட வந்திருக்கும் மந்திரிகள்: டயலாக்க ரிப்பீட் பண்ணாத்தான் ஜெயிக்க முடியும்.

மீனா: அழகு ராணி; அதிரூப சுந்தரி; ஆடவர் மயங்கும் அற்புத மேனி கொண்ட இந்த அரசிளங்குமரிக்கு, சுடுகாட்டில் எரியும் கொள்ளியில் இருந்து சூடு தாங்க முடியாமல் எழுந்தோடி வந்த பிணம் போல் இருக்கும் இவனா எனக்கு மணமகன்?

பார்வையாளன் ரஜினி: ஆ…ஆச்சு (தும்மல் போடுகிறார்

மீனா கடுப்பாகிறார்

மீனா:  என் கடைக்கண் பார்வை பட்டால் படைபலம் கொண்ட மன்னர் கூட்டம் அனைத்தும் நாடு மறந்து நகரம் மறந்து என் பின்னால் வர தயாராக இருக்கும்போது… என்னை நாடி வந்த பேடியே!

ரஜினி மீன்டும் பெருந்தும்மல்.

மீனா:  என்னை நாடி வந்த பேடியே! இந்த பூலோகத்தில் மட்டுமல்ல. ஏழேழு லோகம் சுற்றிவந்தாலும் உன்னை ஒரு பைத்தியக்காரி கூட மணந்து கொள்ள மாட்டாள். ஹ்ம்ம்ம்… அமாவாசைக்கு பௌர்ணமி மேல் ஆசையா?

Rajni continues his lengthy preludes to and the sneezing process itself.

மீனா:  யோவ்! என்னா? விளயாட்டா இருக்கா? வந்ததில் இருந்து பார்க்கிறேன்… சும்மா தும்மிக்கினே இருக்கே!

ரஜினி அப்பாவியாய் சுற்றுமுற்றும் பார்க்கிறார்.

மீனா:  யோவ்… உன்னத்தான் சொல்றேன்.

காந்திமதி: ரெங்கநாயகி… வேண்டாம்! பேசாமல் இரு.

மீனா: நீங்க சும்மா இருங்க அக்கா! அப்பத்திலிருந்து நானும் பார்த்துட்டே இருக்கேன். தும்மிக்கிட்டே இருக்கியே!? என்ன நெனச்சுட்டு இருக்கே உன் மனசில்?

ரஜினி: ஏம்ப்பா… நாட்டில மனுசன் தும்மினாக் கூடவா தப்பு?

மக்கள்: கோரஸாக அதானே?!

மீனா: தும்மினா ஒண்ணும் தப்பில்லைய்யா…ஆனா! இங்க ஒருத்தி அழகா நடிச்சுட்டு இருக்கும்போது டிஸ்டர்ப் பண்ற மாதிரி தும்முறியே… அதான் தப்பு!

ரஜினி: ஏம்மா… இந்தத் தும்மலு, இருமலு, விக்கலு, கொட்டாவி, நல்லது, கெட்டது, பசி, தூக்கம், பொறப்பு, இறப்பு, பணம், பட்டம், பதவி… இதெல்லாம் கேட்டு வராது. தானா வரும். வந்தாலும் ஏன்னு கேக்க முடியாது. போனாலும் தடுக்க முடியாது.

எச்ச எச்ச எச்ச எச்சா… கச்சச்ச கச்சகச்சா

(ரஜினியின் தோழர்) ரமேஷ்கன்னா: இது வசனம்… முத்து… தூள் கிளப்புமா! ஆ… அக்காங்… நீயும் பேசறியே!?

மீனா:  யோவ்… வசனம் எல்லாம் கிழேயிருந்து என்ன வேணா பேசலாம்யா. இத்தன பேருக்கு முன்னால மேசையேறி பேசிப்பாரு. ஒதறும்!

ர.கன்னா: யாருக்கு உதறும்? என்னா நெனச்சுக்கிட்ட எங்க முத்துவப் பத்தி!? அவர் வண்டியோட்ற ஸ்டைல்ல பார்த்தே இந்த ஊர் மயங்கிக் கிடக்குது.

மீனா: வண்டி ஓட்டிடலாம்யா.. மேடையேற முடியுமா?

ர.கன்னா:  யாரப் பாத்து என்னா கேள்வி கேக்கறே? இது என்னா மேடை? அவர் எந்த மேடையா இருந்தாலும் ஏறுவாரு! தைரியமாப் பேசுவாரு! ஆடுவாரு! பாடுவாரு… பார்க்கிறீயா!?

ரஜினி:  என்ன கண்ணா… இப்படி மாட்டி விடுறீயே!

ர.கன்னா:  சும்மா இரு முத்து! உன் வெயிட்டு உனக்கேத் தெரியாது!

மீனா:  யோவ்… தைரியமான ஆம்பிளையா இருந்தா.. மெடையில வந்து ஆடிப்பாடி நடிக்க சொல்லுய்யா பார்ப்பம்…

கூட்டத்திலொருவர்: என்னா முத்தூ… அந்தப் பொண்ணு அது பாட்டுக்கு பேசிகிட்டிருக்கு. நீ பேசாம ஒக்காந்திட்டிருக்கியே.. மேடையில போய் கொஞ்சம் வெளையாண்டுட்டு வாம்மா…

ரஜினி:   ஐய்யய்யோ… அண்ணே… நமக்கெதுக்கண்ணே இந்த வேண்டாத விளையாட்டெல்லாம்?

கூட்டத்தில் இன்னொருவர்: உன் வேலைய நீ காட்ட வேண்டாமா? போ வாத்யாரே

ரஜினி:  அட சும்மா இருப்பா… ஏதோ சின்னப் பொண்ணு… தெரியாமப் பேசிடுச்சு…

ர.கன்னா:  ஐய்யய்யே… இப்படி சொன்னா கேட்க மாட்டாருப்பா… நாமதான் அவரை மேடையேத்தி வுடணும்

ரஜினி மிரள மிரள மக்கள் குண்டு கட்டாக தூக்குகிறார்கள்.

மேடையில் ஏற்றப்பட்ட ரஜினி: ஏம்ப்பா சுடுது!!

ரஜினி: உங்க பாட்டுக்கு ஏத்திவிட்டீங்க… இவங்களையெல்லாம் எப்படிம்மா மேய்க்கிறது?

மக்கள்: சும்மா பூந்து விளையாடும்மா… இத்தினி பேரு உன் பின்னாடி இருக்கம்ல…

ரஜினி:  எசமான்…??

சரத்பாபு மையமாக உம் கொட்டி தலையாட்டுகிறார்.

ஒருவன் ஒருவன் முதலாளி பேக்கிரவுண்ட் ம்யூசிக்குடன் துண்டு ஸ்டைல் விசிறுகிறார் சூப்பர் ஸ்டார்.

ரஜினி: பெண் பார்க்க வந்த மன்னவனின் மனதைப் புண்படுத்திய மருத நாட்டின் மகளே! ஆண் அழகை முகத்தில் பார்க்காதே… அகத்தில் பார்! மற்றவர்களின் மனதைப் புண்படுத்துவதற்கு பதிலாக, நீ கூறிய அதே… அதே பதிலை, கொஞ்சம் புன்னகையுடன் கூறிப்பார்!

அப்பொழுது நீ அறிவாய்… அதில் இருக்கும் இனிமை! அவைதான் நீ பொறந்த நாட்டிற்கும் புகுந்த வீட்டுக்கும் பெருமை!! பார்த்தாயா… தமிழ் மொழியின் அருமை!!!

மீனா:  எல்லாரும் கை தட்டினா… நீ என்ன பெரிய ஆளா?

ரஜினி:  அவங்க கை தட்டிதாம்மா எல்லாரும் பெரிய ஆளாயிருக்காங்க…

மீனா:  டிராமா பார்க்க வந்தாயா? இல்ல… வம்பிழுக்க வந்தாயா?

ரஜினி:  வம்புக்கு நான் இழுக்கல

மீனா:  என்ன… திமிரா?

ரஜினி:  அது எனக்கில்ல

மீனா:  பின்ன எனக்கா?

ரஜினி:  அப்படீன்னு நான் சொல்லல

மீனா:  யோவ்… நீ உன் மனசுல என்னதான் நெனச்சுட்டிருக்கே?

பொதுவாக என் மனசுத் தங்கம்… ஒலிக்கிறது.

கண்டு ரசிக்க:

மீனா:ரஜினி: