Tag Archives: கிரிக்கெட்

குற்றுழிஞை

ஏன் காவ்யா மாறன் தனியே, தன்னந்தனியே அமர்ந்து சன்ரைசர்ஸ் ஆட்டங்களை ரசிக்கிறார்?

ஏதாவதொன்றை தேர்ந்தெடுக்கவும்:

1. அப்பா கலாநிதி படம் எடுத்துக் கொண்டிருப்பதால்
2. ஹைதராபாத் பிரியாணியில் மற்றவர்கள் எல்லாம் பங்கு கேட்பதால்
3. ஸ்டெல்லா மேரீஸ் பொண்ணுங்களே இப்படித்தான்… இதுவே இராணி மேரி ஆகவோ எத்திராஜாகவோ பெண்கள் கிறித்துவக் கல்லூரியாகவோ இல்லாமல் போனதால்
4. கண்ணா பன்றிங்க தான் கூட்டமா வரும்! சிங்கம் சிங்கிள் ஆ தான் வரும் என ஜெயிலர் சிவாஜி பன்ச் பேசியதால்
5. ஆந்திரப் பிரதேசம் வேண்டுமென்றால் தெலுங்கானா எனப் பிரிந்து போயிருக்கலாம். ஹைதராபாத் என்றைக்கும் கொல்ட்டிகளின் ஒரே தலைநகரமாக இருப்பதால்
6. கூட வர பிசினாறிகளுக்கு எல்லாம் விமானத்தில் பயணச்சீட்டு எடுத்து இந்தியா எங்கும் சுற்றிக் காண்பிக்க விரும்பாததால்
7. அணியில் வேண்டுமானால் பதினொன்று பேர் ஆடலாம். எல்லோர்க்கும் தலைவி ஒருத்தியாக புதிய அம்மாவாக உருவாவதால்
8. தேர்தல் நேரம் – உறவினர் முக ஸ்டாலின் அவர்களும் அமைச்சர் உதயநிதி அவர்களும் பிரச்சாரத்திலும் பதற்றத்திலும் இருப்பதால்
9. அதுதான் இராசி என்பதால்… அப்பொழுதுதான் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஜெயிக்கும் என்பதால்

பத்தாவது காரணத்தை பின்னூட்டத்தில் சொல்லவும்

ஒரு தானாகி மலைதல் (குற்றுழிஞை)

https://www.tamilvu.org/courses/degree/d021/d0213/html/d0213665.htm#:~:text=%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%20%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%20%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%20(%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%88)

அம்பையர் அவுட்!

மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்!’ என்று ஸ்ரீகிருஷ்ணர் சொல்லலாம்.
கிராண்ட் ஸ்லாம்களில் சிறந்தது அமெரிக்க ஓப்பன் டென்னிஸ்.

ஏன் என்றால், இங்கே பந்து, ‘உள்ளேவா? வெளியேவா?’ என சோதிக்கும் நடுவர்கள் கிடையாது.

கிரிக்கெட்டுக்கும் இது தேவை. சுவாரசியமான ஆட்டத்தின் நடுவே அந்த கறுப்பு+வெளுப்பு ஆடை மத்தியஸ்தர்கள் தேவையே இல்லை.
ஏன்?

1. எல்லாவற்றுக்கும் தொலைக்காட்சியில் அசரீரியாக ஒலிக்கும் மூன்றாம் நடுவர் இருக்கிறார். அவர் போதும்.

2. ஒரு ஓவருக்கு ஆறு பந்து. அதை அரங்கில் இருக்கும் வெள்ளித்திரை காண்பிக்கும். அது போதும்.

3. தொப்பியையும் கம்பளி ஜாக்கெட்டையும் தாங்கிக் கொள்ள கோட் தலைப்பாமாட்டி போதும்.

4. பந்து வீசுபவர் எல்லைக் கோட்டைத் தொட்டாரா; இடுப்புக்கு மேல் போட்டாரா என்பற்கு எல்லாம் கேமிராக்கள் போதும்.

5. காலில் வாங்கி ஓடினாரா, கையைத் தொட்டுப் போனதா எல்லாம் தப்பு தப்பாகவோ, குத்துமதிப்பாகவோ சொல்லாமல் இருக்க கணினி போதும்.

6. சண்டையோ கலகலப்போ சூடான தடித்த வார்த்தைகளோ இருந்தால்தான் ஆட்டம் களை கட்டும். அவற்றை விலக்கி விடாமல் இருக்க நடுவர் இல்லாவிட்டால் போதும்.

7. பந்து, ஆடுகளம் எல்லாம் தேர்ந்தெடுக்க ஐ.சி.சி (அல்லது பி.சி.சி.ஐ.) போதும்

8. இடக்கை ஆட்டக்காரரும் வலக்கை ஆட்டக்காரரும் ஆடும் போதும் அங்குமிங்கும் ஒட சதுரக்கால் அம்பையர் வேண்டாம். ஃபீல்டிங் அரணை மாற்றுவது மட்டும் போதும்.

9. அம்பையர் மாதிரி நடுவில் நின்று கொண்டு ஆட்டத்தைப் பார்க்க வேண்டுமென்றால் காசு கொடுத்தால் போதும் என்னும் ஷரத்து வரவேண்டும்.

அந்த இரண்டு பேர் இன்னும் தேவையா? என்ன சாதிக்கிறார்கள்? எதற்காக இன்னும் ஏதோ வேலை செய்வது போல் நடிக்கிறார்கள்?

களவுபூசல் – லடாய் ப்ளே

ஜிம்பாப்வே இன்னும் கிரிக்கெட் ஆடுகிறது. தெரியுமா?

எப்படி தெரிய வைப்பது… இப்படித்தான்!

அயர்லாந்து நாட்டுடன் ஆன போட்டியில், சிக்கந்தர் ராஜா தன் மட்டையை ஓங்கிக் காண்பித்து ‘ஒண்டிக்கு ஒண்டி வரியா’ என ஜோஷ் லிட்டில் என்னும் பந்து வீச்சாளரை அழைத்திருக்கிறார். கர்ட்டிஸ் காம்ஃபர் என்னும் அயர்லாந்து வீரரும் சண்டைக்குத் தயாராக சிக்கந்தருடன் மல்லுக்கட்ட களமிறங்குகிறார். நடுவர் ஒருவழியாக கைகலப்பை விலக்கி விட்டிருக்கிறார்.

அதே போல் இந்தியாவில் கேப்பிடல்ஸ் அணியும் குஜராத் ஜியண்ட்ஸ் அணியும் போட்டியில் ஆடியிருக்கின்றனர்.

இந்த ஆட்டம் எல்லாம் எவர் பார்ப்பார்கள்? ஆனால், கவுதம் கம்பீரும் ஸ்ரீசாந்த்தும் இதைத் திரும்பிப் பார்க்க வைக்கின்றனர். இருவரும் அரசியல்வாதிகள். அதனால், வாய்ச் சவடாலுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டுமா… என்ன!?

ஆட்டத்தின் நடுவில் ஸ்ரீசாந்த்தை “எத்தன்” (ஃபிக்ஸர்) என அழைக்கிறார் கௌதம் கம்பீர். அசாரூதீன், ஜடேஜா, தோனி என்னும் நெடிய வரிசையில் ஸ்ரீசாந்த் சகதலப்புரட்டன். எந்த ஆட்டத்தில் எவர் ஆடுவார், எப்பொழுது தலைக்கு மேல் பந்து போடுவார், துடுப்பாட்டத்தில் என்னவெல்லாம் நடக்கும் என்பதை முன்கூட்டியே ஆரூடம் சொல்வது மட்டும் அல்லாமல், சொன்னதை சொன்னபடி நிறைவேற்றிக் காட்டுபவர்.

இப்பொழுது அவரிடம் புதிய பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. கிரிக்கெட் மழையில் மூழ்கித் தவிக்கும் பார்வையாளரை எப்படி உப்பு சப்பில்லாத உள்ளூர் போட்டிகளையும் பார்க்க வைப்பது?

எனவே, கீழ்க்கண்ட புதிய பவர்ப்ளே – லடாய் ப்ளே முறையை அறிமுகம் செய்யுமாறு பரிந்துரைக்கிறேன்:

  1. ஓரு போட்டியில் மூன்று சண்டைகள் வரை போடலாம். (டி10 ஆட்டம் என்றால் அதிகபட்சமாய் இரண்டு சண்டைகள்)
  2. ஒரு அணிக்கு ஒரு சண்டை. நடுவர்களும் ஒரு சண்டையைத் துவக்கலாம். சண்டைகள் ட்விட்டரில் வைரல் ஆனால், துவக்கிய அணிக்கு ஒரு புள்ளி கிடைக்கும். நடுவர் துவங்கினால், மூன்றாவது அம்பையரின் முடிவே இறுதி முடிவாகக் கொண்டு புள்ளிகள் கொடுக்கப்படலாம்/
  3. மட்டையை வைத்துக் கொண்டு அடித்துக் கொள்ளக் கூடாது. குறிபார்த்து பந்தை எறிவது என்றால் நாற்பது மீட்டராவது தள்ளி நின்று வீச வேண்டும்.
  4. ஒரு பந்தயத்தில் ஒருவர் அதிகபட்சமாய் ஒரு முறை மட்டும் களத்தில் குதித்து கட்டிப் புரண்டு சேற்றை வாரி இரைக்கலாம்

சண்டைகளை சமூக ஊடகத்திலும் தொடரலாம். விரைவிற் பரவுகின்ற வரையில் கொண்டு செல்லும் அணிக்கு ஒரு புள்ளி தரப்படும்.

பார்வையாளர்கள் பகுதியில் நடக்கும் கைகலப்புகளுக்கு மதிப்பெண் கிடையாது.

அப்படியாவது இந்த ஆட்டங்களை தொலைக்காட்சியில் பார்ப்பீர்களா? என்ன விதிகளை சேர்க்கலாம்? யார், யார் சிறப்பாக வாய்ச் சவடால் விடுபவர்கள்?

சென்னை வீரர்களும் சி.எஸ்.கே.வும்

சென்னை சூப்பர் கிங்ஸ் என்று பெயர்.
ஆனால், தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு வீரர் கூட இல்லை.

சோனு யாதவ் – ஆர்.சி.பி – பெங்களூர்
சாய் சுதர்சன் – குஜராத் டைட்டன்ஸ்
முருகன் அச்வின் – ராஜஸ்தான் ராயல்ஸ்
என் ஜெகதீசன் – கல்கத்தா க்நைட் ரைடர்ஸ்
விஜய் ஷங்கர் – குஜராத் டைட்டன்ஸ்
ரவிஸ்ரீனிவாசன் சாய் கிஷோர் – குஜராத் டைட்டன்ஸ்
டி நட்ராஜன் – சன்ரைஸர்ஸ் ஹைதராபாத்
ரவிச்சந்திரன் அச்வின் – ராஜஸ்தான் ராயல்ஸ்
தினேஷ் கார்த்திக் – ஆர்.சி.பி – பெங்களூர்
வருண் சக்கரவர்த்தி – கல்கத்தா க்நைட் ரைடர்ஸ்
வாஷிங்டன் சுந்தர் – சன்ரைஸர்ஸ் ஹைதராபாத்
ஷாருக் கான் – பஞ்சாப் கிங்ஸ்

பிசாத்து இருபது லட்சம் கொடுத்து, ஒருவரைக் கூடவா ஏலத்தில் எடுக்கவில்லை?

புரிகிறது…

இதே போல்தானே கால்பந்து கிளப்புகள் நடக்கின்றன!?
அமெரிக்க ஃபுட்பால், கூடைப்பந்து எல்லாம் கூட இப்படித்தானே…
பாஸ்டன் நகரத்தில் பிறந்த வீரர் –> சிகாகோ அணிக்காக ஆடுவாரே!?

இருந்தாலும்…

துலீப் கோப்பையிலும், ரஞ்சி டிராபியிலும் நம்ம உள்ளூரு பசங்க ஜெயிக்க வேண்டும் என்னும் நினைப்பு வரும்.
இப்பொழுது ராஜஸ்தான் ராயல் ஜெயிக்கணும்னு நெனப்பு வருது.

எது எப்படியோ…

இருபது ஓவர் பந்தயத்தில் கடைசி பந்து வரை இருக்கை நுனியில் இருபத்தைந்து பேர் உட்கார்த்தி வைக்கிறார்கள்.
அதற்கு தனி மேலாண்மை நிர்வாகமும் நடுங்காத அமரிக்கையும் சூது தகிடுதத்தங்களும் வேண்டும்.
அத்தனையும் ஒருங்கிணைக்கிறார்கள். அரங்கேற்றுகிறார்கள்.

லலித் மோடி இல்லாவிட்டால் என்ன? எத்தனையோ எத்தர்கள்!

போட்டி

http://twitter.com/#!/snapjudge/status/53439389321269248

சென்னை ராஜாங்கம் – 2

நேற்று பெருமாளுடன் தொடங்கியதால் இன்று ருத்ரனில் துவங்கலாம். ரஜினி பாட்டு போட்டால் கமல் பாடலும் தொடரும் ‘ஒலியும் ஒளியும்’ கால பாரம்பரியம். வெள்ளீஸ்வரர் கோவிலிலும் ‘வைகாசிப் பெருவிழா’ ஆரம்பிக்க இருக்கிறது. ஸ்ரீனிவாசர் ஷங்கர் படம் மாதிரி. வண்ணப் புகைப்படங்களுடன் பிரும்மாண்டம். இருபக்க பச்சைத்தாளில் தம்பி வெட்டோத்தி சுந்தரம் மாதிரி அமரிக்கையான தயாரிப்புடன் வள்ளீசுவரர்.

கோவில் படிக்கட்டில் அழுக்கான bitch படுத்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. பைரவர் கழுத்தைச் சுற்றி ருத்திராட்சம் அணிந்திருந்தார்.

கபாலி கோவில் பிரதோஷத்திற்கு ரஜினி பட ஓப்பனிங் போல் கூட்டம் அலைமோதும். இருபது வருடம் முன்பு பார்த்த சிலர் இன்றும் வந்திருந்தார்கள். கோவில்களில் கூட்டம் அதிகரிக்கவும் இல்லை; எல்லா வயது வகையிலும் குறையவும் இல்லை.

நந்திதேவரைப் பார்க்க பெண்மணிகள் தாராளமாக முண்டியடித்து இடிக்கிறார்கள். இனி சல்லிக்கட்டுக்கு ‘மகளிர் மட்டும்’ சிறப்பு போட்டி நடத்தலாம். விருமாண்டித் தோற்றுப் போவார்.

உடற்பயிற்சிக்கும் உண்ணாமுலைக்கும் சம்பந்தம் இருப்பது எத்தனை அட்சரம் உண்மையோ, மகிழ்ச்சிக்கும் மலர்மிசை ஏகுவதற்கும் தொடர்பு இருக்கும்.

வரப்போவதை அறிந்து அறிவுறுத்த சோதிடமும் எண் கணிதமும் கைரேகையும் மூலஸ்தானமும் உதவுமா? சந்தோஷம் குறித்து அமெரிக்க ஊடகங்கள் அலசி ட்ரையரில் போடுகின்றன.

1. What Makes Us Happy? – The Atlantic (June 2009): “Is there a formula—some mix of love, work, and psychological adaptation—for a good life?”

2. What You Don’t Know Makes You Nervous – Happy Days Blog – NYTimes.com: “Happy Days is a discussion about the search for contentment in its many forms — economic, emotional, physical, spiritual — and the stories of those striving to come to terms with the lives they lead.”

‘டெக்கான் சார்ஜர்ஸ்’ கில்லி அடித்து நொறுக்குவார் என்பதை ‘டெல்லி டேர்டெவில்ஸ்’ செவாக் முன்பே அறிந்திருந்தால் யாதொரு வருத்தமும் ரசிகருக்கு இல்லை என்கிறது பிந்தைய கட்டுரை.

Wiiஇல் பௌலிங் போடும்போது ஒரு பால் ஸ்ட்ரைக் செய்தாலே, அடுத்த தடவை கை நடுங்கும். பந்துக்கு பந்து ஆறும், நான்குமாக விளாசி, இடைவேளைக்கு ஒரு பந்து பாக்கி இருக்கும் சமயத்தில், லட்டுவாக தூக்கி அடித்து ஆட்டமிழந்தார் கில்க்ரிஸ்ட்.

‘ஏதோ நடக்கிறது! இதமாய் இருக்கிறது!!’ என்று விட்டுவிடலாம். மேட்ச் ஃபிக்ஸிங் என்பது அந்தக் காலம். பெட் பாக்ஸிங் என்பது இந்தக் காலம்.

Where-is-prabhakaran-LTTE-Nakkeeran-Cover-Storyதமிழகப் பாதை தனிமனிதக் கவலை என்றால், தமிழ்வலை வழி தனி வழி. சென்னையெங்கும் ‘தமிழக அரசியல்’ பத்திரிகையின் சுவரொட்டி அல்லோலகல்லப்படுகிறது. இணையத்தில் வழக்கம்போல் குண்டுச்சட்டி கழுதையாக நக்கீரன் அடிபடுகிறது.

1. உயிருடன் உள்ளார் பிரபாகரன்

2. சிதைவுகள்…: நக்கீரன்: ஊடகத்துறையின் பொறுக்கித்தனம்?

3. புலித்தலைமையின் கழுத்தை அறுத்த துரோகிகள் யார்?: பி.இரயாகரன்

கடந்த மூன்று உரல்களைத் தேடும்போது கிடைத்த Ivan Sivan ட்விட்:

TV Artists Union President passed away. http://bit.ly/vo1ud
12:06 PM May 19

IPL – Cricket: Cartoons (Janasakthi)

jana-sakthy-blade-bakkiri-cartoon.jpg

நன்றி: பிளேடு பக்ரி

தொடர்புள்ள முந்தையப் பதிவு: தமிழா… தமிழா « Snap Judgment