Social Networking – Tamil Blogs, Thamizmanam, Poongaa

தமிழ்மண நிர்வாகிகள் கவனிப்பார்களா?விற்கு, பிரகாஷின் பின்னூட்டத்தைப் பின் தொடர்ந்து…

1. —தமிழிலே மட்டும் தான், இது போன்ற சேவைகளைத் தரும் திரட்டி உண்டு. blogger என்ற மெகா வலைப்பதிவுச் சேவையில் கூட பின்னூட்டங்களைத் திரட்டும் வசதி கிடையாது.—

ப்ளாகரில் இல்லாவிட்டால் என்ன? Commentful அல்லது co.mments என்று பல்வேறு இடங்களில் (ப்ளாகர் போலவே ஆங்கில இடைமுகம் கொண்டு) பின்னூட்ட திரட்டி இருக்கிறதே. புழங்குகிற இடத்தில் (தமிழிலே கதைப்பதால்)தானே கேள்வி கேட்கத் தோன்றும்?

இங்கே ஒரு காட்டு காட்டிக்கறேன் 🙂 (அதாவது எடுத்துக்காட்டு). செனகலில் வாழ்ந்தால் Wolof-இல் இருக்கும் திரட்டி குறித்து கவலைப்படுவார்கள். தமிழில் எழுதுவதால் தமிழ் திரட்டி குறித்த சந்தேகங்கள்.

தலைவர் ஸ்டைலில் ஒரு பாடல்: ம்யூசிக்

2. —தமிழ்மணம், தேன்கூடு போன்ற திரட்டிகள் இல்லாத ஒரு சூழ்நிலையைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.—

தமிழ்மணம்/தேன்கூடு இருப்பதால் மட்டுமே வலைப்பதிவில் பின்னூட்டங்கள் கரை புரண்டோடுகிறது என்பது ஜாதி மட்டுமே இட ஒதுக்கீடைத் தீர்மானிக்க வேண்டும் என்று சொல்வதைப் போல (அப்பாடா… க்ரீமி லேயரையும் உள்ளே இட்டாந்தாச்சு 😉 (ஜி.ரா.வின் ‘நீ கிரீமி லேயர். புரிஞ்சதா?’ ஒத்து ஊதிக்கறேன் )

பத்ரி, துளசி போன்ற பதிவர்களில் பின்னூட்டம் இட்டுத் தொடங்குவார்கள். இன்னும் விவகாரமானத் தலைப்புகளில் எழுது கவன ஈர்ப்பு போராட்டம் நடத்த வேண்டும். தமிழ் திரட்டிகளின் இலவச சேவை இந்த தகிடுதத்தங்களைப் பெருமளவில் தடுத்து, ஆக்கபூர்வமாக புதியவரை வழிநடத்துகிறது.

—உங்க பதிவுக்கு வாசகரைத் திரட்டுவதற்குள் நாக்கு தள்ளிவிடும்—
—வலைப்பபதிவுகளுக்கு டிராஃபிக் வரவெக்கிறது எவ்ளோ சிரமமான காரியம்னு..—

தமிழ்மணம்/தேன்கூடு இருந்தாலும், இல்லாவிட்டாலும் பதிவுக்கு வாசகரைத் திரட்டுவதற்கு ஒரே டெக்னிக்தானோ…?

3. —பத்தாயிரம் பதிவுகளாகப் பெருகி விட்டால், தமிழ்மணம் உயரெல்லை கட்டுப்பாடு விதித்தாலும் விதிக்காவிட்டாலும், பதிவு செய்யும் frequency அதிமாகும் என்பதால் உங்க பதிவு தோன்றிய சில விநாடிகளிலேயே தொபுக்கடீர் என்று கீழே இறங்கிவிடும்—

அப்ப சைடில் ‘அண்மையில் மறுமொழியப்பட்ட இடுகைகள்’-இல் மணிக்கொன்றாகப் போட்டு இடம் பிடிச்சுடலாம் 😉 நாற்பது எல்லை இல்லாவிட்டால், கீழே இறங்கும் போதெல்லாம், இன்னொன்று, ‘லிஃப்ட் கராதோ’தான்.

இதற்காகத்தான் QOTD : Scobleized – “semantic” Web பரிந்துரைக்கிறார்கள்: எழுதியதை அப்படியே புரிந்து கொள்வதற்கு பதிலாக, காலத்துக்குத் தக்கவாறு, வினாவிற்கேற்ற விடையாக, ஜெஜெ x கேகே அரசுக்கு ஏற்றவாறு பொருத்தமாக மாற்றுவது எப்படி? இணையத்தின் அடுத்த கட்டம்.

இவ்வளவு உயர்ந்த நுட்பம் இல்லாவிட்டாலும், மறுமொழிகளுக்கும் செய்தியோடை இருக்கும் இந்தக் காலத்தில், அதை உபயோகித்து, முன்னோட்டங்கள் + பின்னூட்டியவர் பெயர் கொண்ட திரட்டி என்று மேம்படுத்தலாமே. மூன்றாண்டுக்கு முந்தைய நுட்பம், இன்றும் பொருத்தமா?

4. —feed reader, google reader போன்ற சேவைகள் இல்லாத நேரத்தில், —

இது எந்த காலகட்டம் ;)) Kinja, ப்ளாக்லைன்ஸ் போன்ற பல சேவைகள் அன்றும் இருந்துச்சே!

தமிழ்மணம் is a trendsetter. டக்கென்று பலரின் பதிவுகளையும் வகையாகத் தொகுத்து எளிதாகப் படிக்க வைத்தது.

—தனிப்பட்ட வலைப்பதிவாளர்களின் பாப்புலாரிட்டியை அதிகரிக்கும் நோக்கத்தில் அல்ல.—

ஆமாம்.

அட்வைஸ் (தமிழ் திரட்டிகளுக்கு) செய்யாமல் என் பதிவு நிறைவுறாது என்பதால் 😉

௧) ‘நோ ஸ்மோகிங்’ முத்திரை மாதிரி, இடுகை பூங்காவுக்கு சமர்ப்பிக்க பட்டதா/இல்லையா என்று குறிப்பால் உணர்த்த icon போடலாம்.

௨) ‘நட்சத்திரமா இருக்க விருப்பமா’ என்று பொட்டி கொடுத்து, சுய/வெளி பரிந்துரை கொடுக்க வைக்கலாம். (முன்பு எப்பொழுதோ எழுதியிருந்தவாறு, தமிழ்மணத்தின் பயனராக பதிந்திருப்பது அவசியம்.)

௩) வோர்ட்ப்ரெஸ்.காம் இரண்டு முறை எனக்கு மக்கர் செய்திருக்கிறது. ஒரு தடவை ‘நன்றியறிவித்தல்’ விடுமுறை சமயம். இரண்டு தடவையும் ‘என்னாச்சு?’ என்று மின்மடல் தட்டியவுடன், இரண்டு மணி நேரத்துக்குள் பதில் கொடுத்தார்கள். அவர்களும் தானம் கொடுக்கிறார்கள். மாட்டுக்கு பல் பிடித்து பார்க்கவும் சங்கோஜமின்றி அழைக்கிறார்கள்.

௪) Poonga – Web Design & Feedback ஆகியவற்றை பூங்காவில் வெளியிடுவதை விட, செயல்படுத்தலாம்.

௫) பூங்கா – இணையத் தமிழின் முதல் வலைப்பதிவு இதழ் – Contact-இல் மின்னஞ்சல் முகவரியை கொடுக்கலாம்.

௬) பூங்கா – இணையத் தமிழின் முதல் வலைப்பதிவு இதழ் – வறட்டி தட்டுவது எப்படி?? போன்ற இடுகைகளை நகைச்சுவை என்று வகைப்படுத்தாமல் சரியாக பொருத்தலாம்.

௭) ‘தமிழ்மணம் திரட்டும் வலைப்பதிவுகளிலிருந்து, வாரந்தோறும் சிறந்தவையென அடையாளம் காணப்படும் படைப்புகள் தொகுக்கப்பட்டு’ (பூங்கா அறிவிப்புகள் » Blog Archive » பூங்கா வலையிதழ் பற்றிய விரிவான அறிவிப்பு) போன்ற பொலிடிகலி இன்கரெக்ட் அறிவிப்புகளால்தான் பாதி சலசலப்பு உருவாகிறது.

கொசுறு: OpenYou: The Limits of Privacy on the Social Web: இத்தனையும் இருந்தும் ஆய பயன் என்ன என்பதை சுருங்க சொல்லும் டக்கர் மேட்டர். இதுக்குப் போய் அலட்டிக்கலாமா?

Reservations, Creamy Layer – Thoughts, Observations, Personal Experiences, Analysis

பாலாஜியின் பதிவில் இருந்து:

முக்கால்வாசி நல்ல மார்க் வாங்கிட்டு வரது இந்த க்ரீமி லேயர் கூட்டம் தான். அது பார்த்தனா OC சீட் இருந்தா OCல எடுக்கும் இல்லைனா BCல எடுக்கும். இப்ப அதை தூக்கி OCல மட்டும் தான் நீ எடுக்கனும்னு சொல்லிட்டா ரெண்டு பேருக்கும் செம சண்டையா இருக்கும் இல்ல.

இப்ப

  1. 295 எடுத்த ஒரு BC பையன் இருக்கான்.
  2. அவனுக்கு அடுத்து 294.98 எடுத்த FC பையன் நிக்கறான்.

இப்ப அண்ணா யுனிவர்சிட்டில BCல ஒரு சீட் இருக்கு PSGல ஒரு சீட் இருக்குனு வை. இந்த் Creamy layer பிரிக்கலைனா அந்த BC பையன்

  • அண்ணா யுனிவர்சிட்டில BC கோட்டால எடுக்கனும்னா எடுக்கலாம்.
  • இல்லைனா OCல எடுக்கலாம்.

ஆனா Creamy layer பிரிச்சிட்டானு வை அவன் கண்டிப்பா OCல தான் எடுப்பான்.

G.Ragavan:

  • இட ஒதுக்கீடு என்பது தவிர்க்க முடியாதது என்பதில் மறுப்பில்லை. ஆனால் கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளாகச் செயல்பாட்டில் இருந்தும் அதனால் முன்னேற்றத்தைக் கொண்டு வரமுடியவில்லை என்றால்..அது செயல்படுத்தப்படும் முறையில் எங்கேயோ பிரச்சனை இருக்கிறது.
  • கிரீமி லேயர் என்பது கண்டிப்பாக அவசியம். அதைச் செயல்படுத்த வேண்டும்.

வெட்டிப்பயல்:

//சுயநிதிகல்லூரிகளில் பிசியில் 4757சீட்டுகள் காலியாக உள்ளன, ஒரு பிசி ஓசி பிரிவில் சென்று காசு கொடுத்து சீட்டுவாங்குவதை விட பிசி பிரிவில் வாங்குவது இன்னமும் லாபம்… கல்லூரி பிரிவுகளை தேர்ந்தெடுக்கலாம் எனவே அவர்கள் ஓசியில் சேரமாட்டார்கள், அப்படியிருந்தும் பிசியில்,எம்பிசி,எஸ்சி, எஸ்டியில் இத்தனை காலியிடமென்றால் ஓசி முழுக்க எஃப்சி என்று தானே அர்த்தம்?//

இந்த லாஜிக் தப்பு…

அந்த லேயர கண்டுபிடிக்கறதால FCக்கு ஆப்பு தானே தவிர அவர்களுக்கும் எதுவும் பெருசா நல்லதாக போறதில்லை.

Anonymous:

  • தொழிற்கல்லூரிகளில் சீட் கிடைப்பது என்ற ஒரு விஷயத்தை மட்டும் முன்வைத்து இந்த க்ரீமி லேயர் வாதம் வைக்கப்படுகிறது என்று அப்பாவியாக நம்பிக்கொண்டிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன் –
  • இட ஒதுக்கீட்டை சுத்தமாகத் துடைத்து எறிவதற்காக ஊடகங்களாலும் ஸ்பெஷல் இண்ட்ரஸ்ட் குழுக்களாலும் வைக்கப்படும் திட்டத்தின் முதல் படி மட்டுமே இது.
  • வி.ஏ.ஓ அலுவலகம், தாசில்தார் அலுவலகம், பியூன்கள், வங்கி மேனேஜர்கள், கிளர்க்குகள், பள்ளிக்கூட வாத்தியார்கள், எம்.எல்.ஏக்கள் (ரிசர்வ் தொகுதிகள்), பஞ்சாயத்துத் தலைவர்கள் என்று இட ஒதுக்கீட்டால் பயனடைபவர்களை, இஞ்சினியர் டாக்டர்களைத் தாண்டியும் பாருங்கள் – சமமான பிரதிநிதித்துவம் தற்போது இருக்கிறதென்றால் இட ஒதுக்கீட்டால் வந்ததுதான்.

பொன்ஸ்~~Poorna:
எப்படி க்ரீமிலேயரை நடைமுறைப்படுத்தி லட்சாதிபதிகளைக் கோடீஸ்வரன் ஆக்காமல் தடுக்க முடியும்?

செய்தி :

‘பதவி உயர்வில் ஒதுக்கீடு’ என்கிற சமூகநீதிக் கொள்கை: ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்கு மேல் பெறுவோருக்கு இட ஒதுக்கீட்டுப் பயன் கிடைக்கக் கூடாது.

Affirmative Action & India’s Reservations:

இனம், மொழி போன்றவற்றுடன் கீழ்க்கண்டவை மிகுந்த முக்கியத்துவமானது:

  1. பள்ளியில் கிடைத்த கிரேட்ஜி.பி.ஏ.
  2. SAT, போன்ற பொது நுழைவுத் தேர்வு மதிப்பெண்
  3. பெற்றோர் கல்லூரியில் படித்தவர்களா?
  4. விளையாட்டுத் தேர்ச்சி, சாதனைகள்
  5. எந்த மாகாணத்தில் இருந்து வருகிறார்?
  6. எந்தப் பூர்வகுடியை சேர்ந்தவர் (caucasian ஆகவே இருந்தாலும் இத்தாலியனா, அயர்லாந்தா, என்று பரவலான சேர்க்கைக்கு முயற்சிப்பார்கள்; ஆப்பிரிக்க அமெரிக்கர் என்றால் சோமாலியா, சியரா லியோன்…?)
  7. தொண்டு நிறுவனங்களில் பங்களிப்பு
  8. பொழுதுபோக்காக, வாழ்க்கையை ரசிப்பதற்காக என்ன செய்கிறார்?
  9. கல்லூரியின் புரவலர்களுடன் ஆன தொடர்புகள்
  10. கல்லூரியில் சேர்வதற்காக எழுதும் நீள் கட்டுரையின் தரம்
  11. ரெஃபரன்ஸ் – (பரிந்துரை – சிபாரிசுக் கடிதம்) எந்தப் பெருந்தலைகளிடம் இருந்து தன்னுடைய திறத்தை மதிப்பிட்டு சான்றிதழ் கட்டுரைப் பெற்றிருக்கிறார்? அவர்கள் மதிப்பீட்டில் இவர் எந்த திறமையைக் கொண்டிருக்கிறார்? அது இந்தக் கல்லூரியின் திறங்களுடன் ஒத்துப் போகிறதா?
  12. எவ்வளவு சீக்கிரம் அப்ளிகேஷன் போட்டார்?
  13. எத்தனை முறை நேரடியாக கல்லூரிக்கு வருகை தந்து, தேர்ந்தெடுக்கும் அதிகாரிகளுடன் உரையாடினார்? அவருக்கு இந்தக் கல்லூரியில் சேர்வது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை எப்படி நேர்மையாக நம்மிடம் வெளிப்படுத்தினார்?

இவை அனைத்தும் முக்கியம். இட ஒதுக்கீடு என்று இவ்வளவையும் ஒற்றைப் பரிமாணத்தில் அடக்கி விட முடியாது.

ஆதிக்க வெறி, ஐஐடி மற்றும் ஆங்கில அனானி – ஜெகத்

அன்று மதராஸ் மாகாணத்தில் இருந்த அனைத்துக் கல்லூரிகளும் சென்னைப் பல்கலைக்கழகத்தின் கீழ் தான் இருந்தன என்பதுக் குறிப்பிடத்தக்கது. மக்கட்தொகையில் 4 விழுக்காட்டுக்கு குறைவாக இருந்த சமூகம் கல்லூரிகளில் 71 விழுக்காடு இடங்களைப் பெற்றிருந்தது. அன்றும் சில மேதாவிகள் இதற்கு “திறமையை” காரணமாகச் சொல்லியிருப்பார்கள். சில சாதிகள் இயல்பிலேயே அறிவாளிகள் என்றும் வேறு சில சாதிகளுக்கும் அறிவுக்கும் சம்பந்தமே கிடையாது என்றும் நம்பப்பட்டக் காலம் அது.

சரி, மீதி 29% இடங்கள் யாருக்குப் போயிருக்கக் கூடும்? அந்தக் காலத்தில் இந்தியக் கல்லூரிகளில் படித்தவர்களிடையே ஆங்கிலேயர்களின் வாரிசுகளும், ஆங்கிலோ இந்தியர்களும் உண்டு. அக்கால தமிழ் சமூகத்தைப் பற்றிய நம் அறிவை வைத்து நோக்குகையில் எஞ்சியுள்ள இடங்களில் பெரும்பாலானவற்றை இதர ‘உயர்’ சாதியினர் (முதலியார், வெள்ளாளர், நாயுடு..) கைப்பற்றியிருப்பதற்கே வாய்ப்புகள் அதிகம். மக்கட்தொகையில் 85% இருக்கும் மற்ற பின்தங்கிய சாதியினர் (நாடார், தேவர், வன்னியர், மீனவர், தலித்துக்கள்..) முற்றிலும் “திறந்த போட்டி” நிலவிய அக்காலத்தில் கல்லூரிகளில் 10% இடங்களைக் கூட பெற்றிருக்கவில்லை என்பது நியாயமான ஐயங்களுக்கு அப்பாற்பட்டது.

உயர் சாதியிலிருந்து க்ரீமி லேயரை ஆரம்பிப்போம் –

இடஒதுக்கீட்டை ஒருதலைமுறை பயன்படுத்தினால் அவர்களின் பிள்ளைகள் பயன்படுத்தக்கூடாது என்பதும் ஒயின்ஷாப்பில் ஊற்றிக்கொடுக்கும் அரசாங்க வேலை இடஒதுக்கீட்டில் கிடைத்துவிட்டால், ‘டி’ கிரேட் பியூனாகவும், கிளார்க்காகவும் இடஒதுக்கீட்டால் பெற்றுவிட்டால் அவர்கள் பிள்ளைகள் இடஒதுக்கீட்டிற்கு தகுதியில்லையா?

– ஏன் வேண்டும் இடஒதுக்கீடு – கட்டுரைகளின் தொகுப்பு

27%, பந்த் பற்றி – ஞாநி

2. கல்வி, வேலைவாய்ப்பு, அதிகாரப்பதவிகள் (அமைச்சர், ஐ.ஏ.எஸ் முதல் அர்ச்சகர் வரை), வணிகம், தொழில் முதலியவற்றில் பங்கு ஒவ்வொருசாதிக்கும் எவ்வளவு உள்ளது என்று கணக்கிட வேண்டும்.

4. ஒவ்வொரு சாதியிலும் (ஓப்பன் கோட்டா உட்பட) கிரீமிலேயர் எனப்படும் வசதியானவர்களின் பங்கு இப்போது கல்வியிலும் வேலைகளிலும் எவ்வளவு என்று கணக்கிடப்பட வேண்டும். சாதிவாரியான இட ஒதுக்கீட்டுக்குள் அந்தந்தச் சாதியில் வசதி யற்றோருக்கு முன்னுரிமை தரப்பட வேண்டும்.

5. அரசாங்க வேலைவாய்ப்புகள் குறைக்கப்பட்டு வரும் சூழலில், தனியார் துறையிலேயே வேலை வாய்ப்புகள் அதிகரித்து வரும் நிலையில், சாதிகளின் பங்கு எல்லாத் துறைகளிலும் கணக் கிடப்பட வேண்டும்.

6. பொது ஒதுக்கீட்டுக்கான சாதிகள், பிற்படுத்தப்பட்ட சாதிகள், மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிகள், தாழ்த்தப்பட்ட சாதிகள், பழங்குடியினர் என்ற ஐந்து பிரிவுக்குள் எல்லாச் சாதிகளும் வந்துவிடும் என்பதால், சாதி பெயரிட்ட கம்யூனிட்டி சான்றிதழ்களை ரத்து செய்து, அவற்றுக்குப் பதிலாக மேற்படி ஐந்து பிரிவுகளை மட்டுமே சான்றிதழில் குறிப்பிடும் முறையைக் கொண்டுவரவேண்டும். தொலைநோக்கில் சாதியை ஒழிக்கத் தேவையான நடவடிக்கை களில் இதுவும் ஒன்று. கலப்பு மணம் செய்து குடும்பத்துக்குள் சாதியை ஒழிப்போரை ஆறாவது பிரிவாக ஆக்கலாம். அவர்களுக்கும் இட ஒதுக்கீடு செய்யலாம்.

  • Thinnai – முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீடு- எனது கேள்விகள் :: சின்னக்கருப்பன்

Caste Admissions Quota reservation wiki TN colleges education Performance

Reservation in India

Admission Data from http://www.hindu.com/2005/07/20/stories/2005072011970100.htm

Community Population (in Tamil Nadu only) Population % (in Tamil Nadu only) Reserved Seats(%) (in Tamil Nadu only) Seats secured in OC (in Tamil Nadu only) % in OC (in Tamil Nadu only) +/- Over Population in OC (in Tamil Nadu only) % in Total (in Tamil Nadu only) +/- Over Population in Total (in Tamil Nadu only)
BC 2,87,93,980 46.14% 425(30%) 321 74.65% (+)28.51 52.72% (+)6.58
MBC/DC 1,30,24,065 20.86% 285(20%) 57 13.25% (-)7.61 24.16% (+)3.30
SC 1,18,57,504 19.00% 260(18%) 14 3.25% (-)15.75 19.36% (+)1.36
ST 6,51,321 1.04% 15(1%) 0 0% (-)1.04 1.06% (+)0.02%
Forward Castes 80,78,809 12.95% 0(0%) 38 8.83% (-)4.12% 2.68% (-)10.27%
Total 6,24,05,679 100.00% 100% 430 100% 100% 100% 100%

Medical admissions reserved seats caste quota

Observations – Nirmal

  • பகுத்தறிவு, சுயமரியாதை உள்ள சமுதாயத்தில் அனைவருக்கும் அனைவர் நோக்கி மரியாதை உண்டு. ஆனால் ஆண்டவனாக யாரும் சித்தரிக்கப்படுவதில்லை.
  • ஆண்டவன் பற்றிய விளக்கங்களும், சிந்தனைகளும் தனிமனிதனின் உரிமையாக கொள்ளப்படுகின்றது,
  • கூட்டுச்சமுதாயம் சகமனிதனை முத்திரைகள் அற்ற மனிதாய் பார்க்கின்றது.
  • உருக்கம், கண்ணீர், கோபம், எள்ளல் போன்ற பலகீனமான தருணங்களில் பகுத்தறிவோ, சுய மரியோதையோ இருப்பதில்லை.

சொன்னார்கள்

Knowledge is power, if you know it about the right person.
Ethel Mumford

The first question I ask myself when something doesn’t seem to be beautiful is why do I think it’s not beautiful. And very shortly you discover that there is no reason.
John Cage

கேக்குத்தான் வெட்டக் கூடாது; துணியைத் தைக்கலாம்

USA Flag

Offending Cake

தெருக்கோணல்களும் முகங்காட்டத் தெரியாதவர்களின் சேற்றடிப்புகளும்

Anonymous கருத்து:
இந்த செய்தியெல்லாம் தமிழ் நியூஸ் வலைப்பதிவிலோ, சற்றுமுன் செய்திகளிளோ ஏன் வருவதில்லை ?
Wed Apr 11, 03:04:00 PM 2007

Boston Bala said… எல்லாரும் கேள்வி கேட்கிறாங்க 😉
நானும் (விடை) கேட்டு வைக்கிறேன் 😛

அனானி ஸ்டைலில் ஒரு கேள்வி: Snap Judgment போன்ற பதிவுகளெல்லாம் தமிழ்மணத்திலோ பூங்காவிலோ ஏன் வருவதில்லை ?

Thu Apr 12, 10:04:00 AM 2007


Anonymous said… //அனானி ஸ்டைலில் ஒரு கேள்வி: Snap Judgment போன்ற பதிவுகளெல்லாம் தமிழ்மணத்திலோ பூங்காவிலோ ஏன் வருவதில்லை ? //

Snap Judgment பதிவை தமிழ்மணத்துல சேர்த்திடுங்க, வந்துடும். தமிழ்மணத்துல பல குப்பைங்கள் இருக்கு, பத்தோட பதினொன்னா இதுவும் இருக்கட்டும்

என்ன நாஞ் சொல்றது 🙂

அது சரி Snap Judgment எல்லாம் ஒரு வலைப்பதிவா 🙂

Thu Apr 12, 10:53:00 AM 2007 

 

 

-/பெயரிலி. said… ஐயோ! ஐயோ!! பெட்டி மாறிக் கடிதத்தைப் போடுகின்றீர்களே? 🙂

இரண்டு நாட்களுக்கு முன்னால், பூங்கா ஆசிரியரின் படமா என்று கேட்டும் ஒரு பின்னூட்டம் என் இன்னொரு இடுகைக்கு விழுந்தது.

பாபாலாஜி, இதே கேள்வியை தமிழ்மணம், பூங்கா என்பவற்றின் முகவரிகளுக்கே அனுப்பிவைக்கலாமே? அவர்கள் பதிலைத் தரக்கூடும்.

Thu Apr 12, 11:10:00 AM 2007

-/பெயரிலி. said… மேலேயுள்ள முகவரியிலியின் சலசலப்பூட்டும் கருத்தினை அனுமதிப்பதா இல்லையா என்று மணிநேர எண்ணத்தின் பின்னால், அனுமதித்திருக்கின்றேன். இனி இது போன்ற கருத்துகள் தலைப்பிற்குப் பொருந்தாதென்பதாலே அனுமதிக்கப்படாது.

Thu Apr 12, 11:44:00 AM 2007

 

தொக்கி நிற்கும் கேள்வி

—இனி இது போன்ற கருத்துகள் தலைப்பிற்குப் பொருந்தாதென்பதாலே அனுமதிக்கப்படாது.—

சண்டைய வேற இடத்தில் வச்சுக்குங்க என்பதும் சரிதான் 🙂
முதல் பின்னூட்டத்தையே ரிஜெக்டிருக்கலாமே 😉

Love Life

off the mark

Park Alone

Nine to Five

Outsourcing to cut costs

Close To Home by John McPherson

BC – RIP

‘B.C.’ cartoonist Johnny Hart dies at 76 (it’s too bad he’ll most often be remembered by his controversial religious strips) [via]

முந்தைய பதிவு – எ.பி.சி.