பார்லர் மூடுவிழா – ஏன்? எதற்கு? எப்படி?

பேச்சுரிமை

அது சடாரென்றுதான் எனக்கு நிகழ்ந்தது. ஒரு வார காலம் அவகாசம் கொடுத்திருப்பார்கள். சொல்வனம் இயங்கும் வோர்ட்பிரெஸ் தளத்தில் என் வலைப்பதிவை வைத்திருந்தேன். அந்த வலைப்பதிவில், ஆங்கிலத்தில் பல இடங்களில் வரும் விஷயங்களை சுட்டு, மறுபதிப்பாக என் தனி வலையாக சேமிப்பது வழக்கம். ஹார்வார்டு பிஸினெஸ் ரிவ்யூ போன்ற புகழ் பெற்ற பத்திரிகைகள், மெக்கின்ஸி போன்ற செல்வாக்கான மேலாண்மை நிறுவன ஆராய்ச்சிகள், நியூ யார்க்கர் போன்ற வெகுஜன பத்திரிகைகளில் வந்த முக்கிய கட்டுரைகள், வால் ஸ்ட்ரீட் ஜர்னல் போன்ற தினசரிகளின் தலையங்கங்கள் – இது போன்று காசு கொடுத்து படிக்க வேண்டிய விஷயங்களை, இலவசமாக விநியோகித்தேன். சும்மா கொடுப்பது போதும்; இனிமேல் எல்லாமே காசு கொடுத்தால் மட்டுமே கிடைக்கும் என்று காப்புரிமை குறித்து அப்போது கெடிபிடி அதிகமான காலம். ஆலன் ஷ்வார்ஸ் தற்கொலைக்கு ஓரிரு வருடங்கள் முன்பான நேரம். ஒரே வாரம் கெடு தந்தார்கள். அதன் முடிவில் என் வலையகத்தை முடக்கி, நொடியில் வலையில் இருந்து காணாமல் போக்கிவிட்டார்கள். சிலிக்கான் வேலி நிறுவனங்கள் எல்லாம் எதுவும் செய்யத் துணிந்தவை என்பதை நேரடியாக பாதிப்பின் அடிப்படையில் உணர்ந்தேன். என்னுடன் வாருங்கள் என்று 8சான் (8chan) மாதிரி க்யூஅனான் (QAnon) மாதிரி தனது பைநாகப்பையை சுருட்டிக் கொண்டு கிளம்பும் திருமழிசைப் பெருமாள் போன்ற டொனால்டு டிரம்ப்பும் கிடையாது. நானும் ஆழ்வார் கிடையாது.

கணிகண்ணன் போகின்றான் காமருபூ கச்சி மணிவண்ணா
நீ கிடக்க வேண்டாம் துணிவுடைய செந்நாப்புலவனும்
போகின்றேன் நீயும் உன் பைநாகப் பாயை சுருட்டிக்கொள்

கணிகண்ணன் போக்கொழிந்தான்
காமருபூகச்சி மணிவண்ணா நீ
நிற்க வேண்டாம் துணிவுடைய
செந்நாப்புலவனும் போக்கொழிந்தான்
நீயும் உன் பைநாகப் பாயில் படுத்துக்கொள்

பார்லர் நிறுவனத்தை முடக்கிய கதை

ஜன.6. – பெரும்பாலோரின் முதல் எதிர்வினை நிம்மதி பெருமூச்சாக இருந்தது. ஜனவரி மாதத்தின் ஆறாம் நாள் அந்த அதிரடிகள் துவங்கின. தன்னுடைய பதவிக்காலத்தில் பதினான்கே பதினான்கு நாள்கள் மட்டுமே டொனால்ட் டிரம்ப் பாக்கி வைத்திருந்தார், ஜனவரி 6 – ஜனாதிபதியின் டிவிட்டர் கணக்கு முடக்கப்பட்டது. எண்ணற்ற துஷ்பிரயோகங்கள், பொய்கள் மற்றும் முட்டாள்தனங்களை இனிமேல் அவரால் டிவிட்ட முடியாது. அதன் தொடர்ச்சியாக அவருடைய அடிவருடிகள் கணக்கும் நிறுத்தி நீக்கப்பட்டது. ட்ரம்ப்பின் பல நண்பர்களும் ஆதரவாளர் கணக்குகளும் மூடப்பட்டது. அவர்களின் அவச்சத்தத்தின் முடிவு ஆனந்தமாக இருந்தது. சமாதானத்திற்கான விலை என்பது சுதந்திரப் பேச்சைக் கட்டுப்படுத்துவது என்பது – ஜனநாயக நாடுகளுக்கு தலைகுனிவு.

பேச்சுரிமையின் காவலராக தொழில்நுட்ப நிறுவனங்கள்

ஜனவரி ஏழாம் தேதி ஃபேஸ்புக் நிறுவனம் டொனால்ட் டிரம்ப்பின் கணக்கை காலவரையற்ற நிலுவையில் வைப்பதாக அறிவிக்கிறது. அதற்கு மறுநாள் டிவிட்டர் அவரின் கணக்கை நிரந்தரமாக மூடுகிறது. ஸ்னாப்சாட் சமூக ஊடகமும் வீடியோக்கள் போடும் கூகுள் நிறுவனத்தின் யூடியுப் தளமும் இதே போன்ற தடைகளை ஜனாதிபதி டிரம்ப் மேல் போடுகிறது. டிரம்ப்பை போன்றே செல்வாக்குடன் திகழ்ந்த பல தீவிர வலதுசாரி சார்பாளர்களுக்கும் இதே கதி. அவர்களின் கணக்குகளும் முடக்கப்படுகின்றன.

கூகுள் நிறுவனத்தின் ப்ளே ஸ்டோர் கடையும் ஆப்பிள் நிறுவனத்தில் ஐஃபோன் கடையிலும் இருந்து “பார்லர்” (Parler) நீக்கப்படுகிறது. பார்லர் – வலதுசாரிகளிடம் புகழ்பெற்றது. டிவிட்டர் மாதிரி பார்லரும் ஒரு சமூக ஊடகம். ஆனால், ட்விட்டரை விட அளவில் மிகச் சிறியது. டிவிட்டர் பயனர்கள் மொத்தம் 32 கோடி; பார்லர் மூடியபோது, அதன் பயனர்கள் எண்ணிக்கை மொத்தம் 23 லட்சம். ட்விட்டரை விட்டு நீக்கப்பட்டவர்கள் பார்லருக்கு சென்று கடையைத் துவங்கினர். வலதுசாரிகளுக்கு தங்களின் கருத்துகளையும் சித்தாந்தங்களையும் ஆக்ரோஷமாக முன்வைக்க பார்லர் உதவியது. கூகிள் கடையும் ஆப்பிள் செல்பேசி கடையும் நீக்குவதனால் – இனிமேல் எந்தப் புதிய நபராலும் பார்லர் நிரலியை தரவிறக்க முடியாது. எனினும், இதற்கு சந்து பொந்து ஓட்டைகள் இருந்தன.

A screenshot included in Amazon’s letter to Parler

இந்த நிலையில் அமேசான் நிறுவனம் பார்லருக்கு மரண அடி கொடுத்தது. பார்லர் செயலி இயங்குவதற்கு ஆதாரமாக இருப்பது அமேசான் வெப் செர்வீசஸ் எனப்படும் ஏ.டபிள்யு.எஸ் (AWS). அந்த வசதிகள் நிறுத்தப்படும் என்று அமெசான் ஒரு நாள் கெடு கொடுத்து, அடுத்த நாளே பார்லரை செயலிழக்க வைக்கிறது.

வெறியாட்டத்தைத் தூண்டிய மந்தை கும்பல் இவர்கள், என்று பார்த்தால் நிச்சயமாக இது ஏற்றுக்கொள்ளத்தக்கது. அமேசானும் கூகுளும் ஃபேஸ்புக்கும் ட்விட்டரும் தனியார் நிறுவனங்கள்; எனவே, தங்களின் வசதிக்கேற்ப, தங்களின் சுயவிருப்பத்திற்கேற்ப – என்ன வேண்டுமோ அதைச் செய்யும். நாம் எல்லோரும், ஒரு நிரலியையோ செயலியையோ தரவிறக்கும்போதும், உபயோகிக்கும் போதும், “உரிமைதுறப்பு” என்பதை ஒப்புகொண்டு, அந்தந்த பெருநிறுவனங்களின் விருப்பத்திற்கேற்ப கட்டுப்படுவோம் என்பதை ஒப்புக் கொள்கிறோம். அதிபர் டிரம்ப் கொஞ்சம் எசகுபிசகாக டிவிட்டுகிறார். அவரின் நிலைத்தகவலைக் கேட்டோர் கொதித்தெழுகின்றனர். கிளர்ச்சியில் ஈடுபடுகின்றனர். எனவே, பார்லர் நிரலியை நாங்கள் வழங்கமாட்டோம் என முடிவெடுத்ததாக அமேசான் கடிதம் போடுகிறது.

ஆனால், இன்றைய அளவிலும் அயொத்தொல்லா அலி கொமேனி டிவிட்டரில் இயங்குகிறார். டொனால்டு டிரம்ப்பை போல் அறச்சீற்றம் எல்லாம் கொள்ள தன் ஆதரவாளர்களை அவர் தூண்டவில்லை. 8,815,000த்துக்கும் மேற்பட்ட தன் சீடர்களுக்கு, ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலி காமெனி நேரடியாக “இன்னாரை தீர்த்துக் கட்டு” என்று ஃபாத்வா கொலை உத்தரவை இன்றளவும் விடுத்துக் கொண்டே இருக்கிறார். அவர் ட்விட்டரில் தான் இன்னும் இருக்கிறார். அந்த மாதிரி வெளிப்படையான வெறித்தாக்குதல் அழைப்புக்கும் மறைமுகமாகத் தூண்டி விடுவதற்கும் உள்ள வேறுபாடு கூட சமூக மிடையக் காவலர்களுக்குத் தெரியவில்லையா?

Supporters listen as President Trump speaks during a Save America Rally near the White House on January 6—not long before a pro-Trump mob stormed the Capitol Building

இணையம் எவ்வாறு இயங்குகிறது?

இதற்கு வலை எவ்வாறு, எவரின் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளுதல் அவசியம்.

உங்களின் வலை செயல்பாட்டிற்கும், வலையகம் இயக்குவதற்கும் “ஏற்றுக்கொள்ளக்கூடிய பயன்பாட்டுக் கொள்கை” (acceptable use policy) என்பதை நீங்கள் ஒப்புக் கொள்கிறீர்கள். சேவை விதிமுறைகள் (terms of service) என்பது கட்டுப்பாடுகளும் சட்ட திட்டங்களும் கொண்டவை. அவை தேசங்களுக்கேற்ப மாறும். ஆனால், “ஏற்றுக்கொள்ளக்கூடிய பயன்பாட்டுக் கொள்கை” என்பது நிறுவனங்களுக்கு நடுவே நிலவும் பரஸ்பர புரிதல்.

இது எப்பொழுது, எப்படி நடைமுறைக்கு வந்தது?

தொண்ணூறுகளில் எரிதம் (spam) அஞ்சல்கள் தலைவிரித்தாடியது. சாதரண மக்களால் அனுப்பப்படும் மின்னஞ்சல்கள், மொத்த வலையையும் ஸ்தம்பிக்க வைத்தது. வணிக நிறுவனங்களால் தங்களின் குறைந்த பட்ச சேவையைக் கூட வழங்க இயலாதவாறு எரிதங்கள் ஆக்கிரமித்தன. அப்பொழுது இந்த அடாவடியை அடக்க அடாவடியான அணுகுமுறை, பல்வேறு சேவை வழங்குநர்களால் (ISPs) ஒப்புக்கொள்ளப்பட்டன.

இதற்கெல்லாம் கண்ணாமூச்சி காட்டி மாற்றுப் பாதையில் பயணிக்க பிறிதொரு மார்க்கம் இல்லையா?

இருக்கிறது. அது ருஷிய வழி. டி-டாஸ் காவலர் (DDoS-Guard) என்னும் பேரில் தீவிரவாத ஹமாஸ் முதற்கொண்டு எல்லா பாதகர்களுக்கும் வலைச்சேவை வழங்குகிறார்கள். மற்ற நாடுகளின் சட்டங்களையும் சாதாரண தயவு தாட்சண்யங்களும் பாராமல் வெறுப்பையும் வன்மத்தையும் பஞ்சமா பாதகத்தையும் பரப்புவதற்கு பாதை அமைத்துக் கொடுக்கிறார்கள்.

அதிருக்கட்டும். இந்தியாவில் ஒரு இணையம். சீனாவில் இன்னொரு இணையம். இதெல்லாம் எப்படி சாத்தியம்?

இணையம் என்பது கூட்டாட்சி. இந்தியாவில் அது ஜியோ, பி.எஸ்.என்.எல்., ஏர்டெல். அமெரிக்காவில் அது ஏடி அண்ட் டி, வெரைசான், ஸ்ப்ரிண்ட், டி – மொபைல். ஜெர்மனியில் டாயிச் டெலிகாம்.

People associated with far-right online movements such as QAnon breached the Capitol on Wednesday

மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத முதலாளிகள் சட்டத்திற்கு அப்பாற்பட்டு இயங்குகிறார்களா?

கிளவுட்-கம்ப்யூட்டிங் சேவைகள் உட்பட இணையத்தின் உள்கட்டமைப்பு நடுநிலையாக இருக்க வேண்டும். பிளவுபடுத்தும் பாகுபாடான போர்களில் இழுக்கப்பட்டாலும் நாடுகளுக்கு அப்பாற்பட்ட ஒரே மாதிரியான முடிவுகளை எடுக்க வேண்டும். இந்த முடிவுகளை எவர் எடுக்கிறார்கள்? தொழில்நுட்ப நிறுவனங்களின் கையில் இந்த சாவி இருக்கிறது. தேர்ந்தெடுக்கப்படாத மற்றும் கணக்கிட முடியாத சில நிர்வாகிகள் கட்டுப்பாட்டில் இவை இருக்கின்றன.

தங்களை மேய்க்கப்போகும் எல்லா செயற்குழுக்களையும் டெமோகிராட் கட்சி கையில் எடுத்து விட்டது என்பதை FAAMG எனப்படும் ஃபேஸ்புக், ஆப்பிள், அமேசான், மைக்ரோசாஃப்ட், கூகிள் உணர்கிறது. ஜியார்ஜியா மாகாண தேர்தல் முடிவுகளும் வந்துவிட்டன. இனிமேல் தங்களின் குடுமி ரிபப்ளிகன் கட்சியிடம் இல்லை. டொனால்ட் டிரம்ப்பும் அவரின் ரிபப்ளிகன் கட்சியும் எந்த முடிவும் எடுக்கப் போவதில்லை என்பதைப் புரிந்து கொள்கிறார்கள்.

டெமோகிரட் பெரும்பான்மை. ஜனாதிபதி ஜோ பைடன்; செனேட் பெரும்பான்மைக்கு துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ்; ஹவுஸ் ஆஃப் ரெப்ரசெண்டேடிவ்ஸ் எனப்படும் காங்கிரசிலும் ஜனநாயகக் கட்சியே வெற்றி பெற்றுள்ளது. அவர்கள் என்ன சொல்கிறார்களோ, அதை செய்து நிறைவேற்றி விட்டார்கள். இந்த சிலிகான் வாலி பெருநிறுவனங்களில் வேலை பார்ப்போரின் 95% தேர்தல் காணிக்கைகள் ஜோ பைடனுக்கு சென்றுள்ளது. (பார்க்க: Silicon Valley Opens Its Wallet for Joe Biden | WIRED). பார்லர் பெரு முதலையாக இருந்தால், இந்த மாதிரி, “எடுத்தோமா… கவிழ்த்தோமா” என்னும் மூடுவேலை சாத்தியமேயில்லை.

கீழேக் காணும் ட்விட்டை போட்டவர் ஜெனிஃபர் பால்மியெரி (Jennifer Palmieri). இவர் க்ளிண்டன் ஆதரவாளர்.

இதனால் கூகிள் நிறுவனம், சில பல சில்லறையாக சிதற வேண்டாம். ஆப்பிள் எத்தனை காசுக்கு வேண்டுமானாலும் ஐஃபோனை விற்றுக் கொள்ளலாம். அமேசான் வருமான வரியை அதிக அளவில் கட்ட வேண்டாம்.

இன்று ஜனநாயகக் கட்சிக்கு ஆதரவாக செயல்படும் சிலிகான் வேலி நிறுவனங்கள், நாளைக்கே குடியரசுக் கட்சி பெரும்பான்மை பெற்றால், அவர்களின் துதி பாடி, இன்னொரு ஆட்சி சொல்வதை சிரமேற்கொண்டு இரும்புக்கரத்தினால் இன்னொருவரை அடக்கும் என்பதில் எவருக்கும் துளிக் கூட ஐயமிருக்கக் கூடாது. ஜெர்மனியின் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல், “தனியார் நிறுவனங்கள் பேச்சு விதிகளை தீர்மானிக்கக்கூடாது.” என்றார். ருஷியாவைல் வெளியேறிய அதிருப்தியாளரான அலெக்ஸீ நவல்னி (Alexei Navalny), “இந்தத் தணிக்கை ஏற்றுக்கொள்ள முடியாத செயல்” என்று தன் கண்டனத்தைப் பதிவு செய்தார். இவ்வளவு ஏன்!? ட்விட்டர் நிறுவனத் தலைவரான, ஜாக் டார்சி கூட “ஆபத்தான முன்மாதிரி” என வருந்தியிருக்கிறார்.

List of most-downloaded apps on Apple Store, Jan. 8, 2021

வருங்காலத்திற்கான சில தீர்வுகள்

  1. ஒரு சில நிறுவனங்களே இப்போது எவர் பேசலாம், எதைப் பேசலாம், எவ்வளவு பேசலாம், எப்படி பேசலாம் என்பதை முடிவு செய்கின்றன. இந்த நிலை மாற விதவிதமான விளம்பரம் சார்ந்த, விளம்பரங்கள் சாராத வணிக அமைப்புகள் வரவேண்டும்.
  2. வைரல் ஆவது என்பது இன்றைய நிலையில் எல்லோருக்கும் முக்கியமாக அமைந்திருக்கிறது. விற்கிறதோ இல்லையோ – எல்லாவிதமான நூல்களும் அச்சிடப்பட்டது ஒரு காலம். அது போல், பரவலாக பல்லாயிரம் பேரைச் சென்றடையாவிட்டாலும் முக்கியமான விஷயங்களை முன்னிறுத்துவது எப்படி என்று யோசிக்க வேண்டும்.
  3. எதை தணிக்கை செய்வது என்பது குறித்து பல்வேறு சிந்தனையாளர்களிடமிருந்து கருத்துக்களைப் பெறவேண்டும்.
  4. சில ஸ்டேட்டஸ் தகவலுக்கு அடியில் “இது உண்மை அல்ல.” என்பது போன்ற எச்சரிகைகள், கொட்டை எழுத்தில் போட வேண்டும்.
  5. எந்த விதமான நடவடிக்கை எடுக்கப் படுகிறதோ, அது வெளிப்படையாகவும் கணிக்கக்கூடியதாகவும் அமையவேண்டும்.
  6. கடினமான தீர்ப்புகளை பாதிக்கப்பட்ட மக்கள், மறு முறையீடு செய்வதற்கான உரிமையை வழங்கும் சுயாதீனமான சட்டரீதியான வாரியங்கள் அமைய வேண்டும்.
  7. உகாண்டாவில் தன் நிரலி கிடைக்காது என்பதற்காக, நாட்டிற்கேற்ப வளைந்து கொடுக்காத சுதந்திர செயலிகள் இயங்க வேண்டும்.
  8. இன்றைக்கு சரியெனப் படுவது நாளைக்கு தவறாக இருக்கும். பன்னிரெண்டாம் நூற்றாண்டில் பனிரெண்டு வயதில் மணமுடித்து, 13ல் குழந்தை பெறுவது சகஜமாக இருந்தது. அது போல், காலத்திற்கேற்பவும் வளர்ச்சிக்கேற்பவும் மாறும் சட்டதிட்டங்களை சமூகங்களும் பிரஜைகளும் உருவாக்க வேண்டும். விற்பனையைக் குறிக்கோள் வைக்கும் நிறுவனங்கள் கையில் இந்த முடிவுகள் இருக்கக் கூடாது.
  9. ஒவ்வொரு நாட்டிற்கும் ஒவ்வொரு சட்டதிட்டங்கள் இருக்கின்றன. இழிமொழியை கதையில் வரும் கதாபாத்திரம், அந்தச் சூழலுக்கேற்ப பயன்படுத்தலாம். அது ஒப்புக்கொள்ளக் கூடியதே. அதே வெறுப்பு மொழியை டிவிட்டரில் பயன்படுத்த முடியாது. இது சுதந்திர நாட்டிற்கும் கொடுங்கோல் ஆட்சி நடக்கும் பிரதேசத்திற்கும் இடையே வேறுபடும். சீனர்களுக்கு ஒரு சட்டம், அமெரிக்கர்களுக்கு ஒரு சட்டம் என்று பிரிவுபடுத்தாத உலகளாவிய ஒரு நோக்கு வரவேண்டும்.

இமையிலி மக்களும் கிழிமுறி பண்பாடும்

ருட்யார்ட் கிப்ளிங் எழுதிய “ஒருவேளை” புத்தாண்டு வாழ்த்தாகக் கிடைத்தது:

ஒருவேளை

தங்களுடையதை இழந்து உங்கள் மீது பழி சுமத்தும் சமயத்தில்,
உங்களை ஒருநிலையாக வைத்திருக்க முடிந்தால்
எல்லா மனிதர்களும் உங்களை சந்தேகிக்கும்போது உங்களை நீங்கள் நம்பினால்,
எனினும் அவர்களின் சந்தேகத்திற்கும் அனுமதி கொடுத்திருங்கள்;
காத்திருக்கும் காலங்களில் சோர்வடையாமல் காத்திருந்தால்,
அல்லது பொய்கள் சொல்லப்பட்டாலும், அந்தப் பொய்களை கையாளாதீர்கள்,
அல்லது வெறுக்கப்பட்டாலும், வெறுப்புக்கு வழி விடாதீர்கள்,
இன்னும் அழகாகத் தோன்றாதே, புத்திசாலித்தனமாகப் பேசாதே:

உன்னால் கனவு காண முடிந்தால் – கனவுகளை உன்னுடைய எஜமானனாக ஆக்காமல் இருந்தால்;
உங்களால் சிந்திக்க முடிந்தால் – எண்ணங்களை உங்கள் குறிக்கோளாக ஆக்காமல் இருந்தால்;
நீங்கள் ஜயகோஷத்தையும் பேரழிவையும் சந்திக்க முடிந்தால்
அந்த இரண்டு ஏமாற்றுக்காரர்களையும் ஒரே மாதிரியாக நடத்துங்கள்;
நீங்கள் சொன்ன உண்மையை உரைக்குமாறு கேட்க உங்களால் முடிந்தால்
முறுக்கப்பட்ட கத்திகளால் முட்டாள்களுக்கான ஒரு பொறியை உருவாக்க,
அல்லது உங்கள் வாழ்க்கையை நீங்கள் அர்ப்பணித்து, அதன் பின்னும் நொறுங்கிய விஷயங்களைப் பாருங்கள்
மேலும் தேய்ந்து போன கருவிகளைக் கொண்டு குனிந்து அவற்றை மீட்டெழுப்பி உருவாக்குங்கள்:

உங்கள் எல்லா வெற்றிகளிளையும் ஒரேயொரு பந்துக் குவியலாக உருவாக்க முடிந்தால்
மொத்தத்தையும் சுண்டிப் போட்டுப் பார்த்து இடருக்கு உள்ளாக்கி
இழக்கவும், உங்கள் தொடக்கத்தில் மீண்டும் தொடங்கவும்
உங்களின் பழைய இழப்பைப் பற்றி மீண்டும் ஒருபோதும் மூச்சுவிடாதீர்கள்;
உங்கள் இதயத்தையும் நாடி நரம்புகளையும் நீங்கள் கட்டாயப்படுத்தினால்
அவை தேய்ந்து மறைந்து நீண்ட நாட்களுக்குப் பிறகும் உங்களுக்கு சேவை செய்ய,
உங்களிடம் எதுவும் இல்லாதபோது பிடித்துக் கொள்ளுங்கள்
அவற்றிடம் சொல்லும் மனத்திட்பத்தைத் தவிர: ‘பொறுங்கள்!’

பெருங்கூட்டத்தினரோடு பேசி உங்கள் நற்பண்புகளைக் கடைப்பிடித்தால்,
அல்லது அரசர்களுடன் உலாவி நடந்தாலும் – சாதாரணத் தொடர்பை இழக்காதீர்கள்,
எதிரிகளோ அல்லது அன்பான நண்பர்களோ உங்களை காயப்படுத்த முடியாது என்றால்,
எல்லா மனிதர்களும் உங்களை நம்பகமாக எண்ணினாலும், எவரும் அளவுக்கதிகமாக சார்ந்தும் இல்லாமல்;
மன்னிக்காத நிமிடத்தை உங்களால் நிரப்ப முடிந்தால்
அறுபது வினாடிகள் மதிப்புள்ள தூர ஓட்டத்துடன்,
பூமியும் அதில் உள்ள அனைத்தும் உன்னுடையது,
மேலும்-அது அதிகம் – நீ ஒரு மனிதனாக இருப்பாய், மகனே!

If— by Rudyard Kipling | Poetry Foundation

இன்று கிழிமுறி – ‘கேன்சல்’ கலாச்சாரம் (Cancel Culture). இமையிலி — “விழித்திரு” (Woke) அறைகூவல் காலம்.

1941-இலேயே கிப்ளிங்-கை ஜார்ஜ் ஆர்வெல் ஒரு கை பார்த்து இருக்கிறார்:

கிப்ளிங் ஒரு ஏகாதிபத்திய போர் வெறியர். அவர் தார்மீக ரீதியாக உணர்ச்சியற்றவர் மற்றும் அழகியல் ரீதியாக அருவருப்பானவர். அதை ஒப்புக்கொண்டு தொடங்குவது நல்லது,

மிகவும் தொழில்மயமான நாடுகளில் உள்ள அனைத்து இடதுசாரிக் கட்சிகளும் ஒரு ஏமாற்று நிலையில் உள்ளன. ஏனென்றால் அவர்கள் உண்மையில் அழிக்க விரும்பாத ஒன்றை எதிர்த்துப் போராடுவதைத் தங்கள் தொழிலாகக் கொண்டுள்ளனர். அவர்கள் சர்வதேசிய நோக்கங்களைக் கொண்டுள்ளனர், அதே நேரத்தில் அந்த நோக்கங்கள் பொருந்தாத வாழ்க்கைத் தரத்தைத் தக்கவைக்க அவர்கள் போராடுகிறார்கள். நாம் அனைவரும் ஆசியக் கூலிகளைக் கொள்ளையடிப்பதன் மூலம் வாழ்கிறோம், மேலும் ‘அறிவொளி’ பெற்றவர்கள் அனைவரும் அந்தக் கூலியாட்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்று கருதுகிறோம்; ஆனால் நமது வாழ்க்கைத் தரம், அதனால் நமது ‘அறிவொளி’, கொள்ளை தொடர வேண்டும் என்று கோருகிறது.

எந்தவொரு அரசியல் கட்சியுடனும் அவருக்கு நேரடி தொடர்பு இல்லை என்றாலும், கிப்ளிங் ஒரு பழமைவாதவாதி, இது இப்போதெல்லாம் இல்லை. இப்போது தங்களை பழமைவாதிகள் என்று சொல்லிக்கொள்பவர்கள் லிபரல், பாசிஸ்டுகள் அல்லது பாசிஸ்டுகளின் கூட்டாளிகள். அவர் தன்னை ஆளும் அதிகாரத்துடன் அடையாளப்படுத்தினார், எதிர்க்கட்சியுடன் அல்ல. ஒரு திறமையான எழுத்தாளருக்கு இது நமக்கு விசித்திரமாகவும் அருவருப்பாகவும் தோன்றுகிறது, ஆனால் கிப்ளிங்கிற்கு யதார்த்தத்தின் மீது ஒரு குறிப்பிட்ட பிடியைக் கொடுப்பதற்கு இது உதவுகிறது.

Rudyard Kipling | The Orwell Foundation

இந்த ஆர்வெல் கட்டுரையின் துவக்கத்தில் டி.எஸ். எலியட் என்பவரும் ஃபாஸிஸ்ட் ஆகவும் யூத எதிர்ப்பாளராகவும் அடையாளம் ஆகிறார்.

தமிழிலும் எக்கச்சக்கமான பேர்கள், எழுத்தாளர்கள் தடை செய்யப்பட்டு, அவர்களின் எதிர்தரப்பினாரால் ப்ளாக் ஆகி, கருத்துக்களைக் கேட்காமல் விட்டுவிடுகிறார்கள்.

கேள்விகள்:

  1. ”படைப்பாளியைப் பார்க்காதே. படைப்பைப் பார்!” – என்று வாசிக்க வேண்டுமா?
  2. கோபத்தில் வரும் தகாத வார்த்தை வெளிப்பாடு என்பது ஆழ்மனதில் பொதிந்திருக்கும் வெறுப்பை பொதுவிற்குக் கொணர்கிறதா?
  3. ஒவ்வொரு பிரயோகத்தையும் எவ்விதமான கருத்தையும் – இது யார் மனத்தை புண்படுத்தும்? எந்தச் சமூகத்தை பாதிக்கும்? எவருடைய இனத்தை, மதத்தை, குறியிட்டு இழிபடுத்தும்? :: என்று கவனித்து, யோசித்து, கத்திரி போட்டு, அதன் பின் இன்னும் ஆறப்போட்டு, வெட்டி, சரி செய்த பிறகே ஃபேஸ்புக் / டிவிட்டரில் இட வேண்டுமா?
  4. அந்தக் கால விழுமியங்கள், அப்போதைய கலாச்சாரம் என எல்லாவற்றையும் கருத்தில் இடஞ்சுட்டி பொருள் விளக்க வேண்டுமா?
  5. விக்கிரமாதித்தன் என்னும் மனிதரை விவரிக்க வேண்டுமா அல்லது விக்கி அண்ணாச்சியின் கவிதைகள் எவ்வாறு, அடு எவ்வகை உணர்வுகள் எழுப்புகின்றன என விஷ்ணுபுரம் மேடையில் உரையாற்ற வேண்டுமா?

சீனாவின் மோசடி விளம்பரங்கள்

காசு கொடுத்தால் பத்திரிகைகள் விளம்பரம் கொடுக்கும். தேர்தல் நாளன்று முதல் பக்கத்தை தாரை வார்த்துத் தரும். நடிகர் பணம் கொடுத்தால், அவரின் படத்தை அட்டையில் போடும்.

அமெரிக்காவை விட பணக்கார நாடாகி வரும் சீனா சும்மா இருக்குமா?

எங்களிடம் பாலும் தேனும் ஓடுகிறது. எல்லோரும் தங்கள் இஷ்டப்படி கட்டுப்பட்டு, அடங்கி ஒடுங்கி இருக்கிறார்கள். கம்யூனிசத் தலைவர்கள் எல்லோரும் உத்தமர்கள். எந்த டென்னிஸ் வீராங்கனைகளையும் வன்புணர்வு எதுவும் செய்வதில்லை. பேச்சுரிமை இருந்தாலும் எவரும் வாய்திறப்பதில்லை. அவ்வளவு கேளிக்கைமயமாக குடிமக்கள் பொழுதுபோக்குகிறார்கள். எப்போதும் இயற்கையோடு ஒன்றோடு ஒன்றாக இயைந்து வாழ்கிறார்கள். ஆடல், பாடல், இசை என உற்சாகமாக ஓய்வெடுக்கிறார்கள். நஞ்சில்லா வேளாண்மை உணவை சல்லிசாக சோஷலிசம் விற்பதால் எல்லோரும் நலமாக உண்கிறார்கள்.

திராவிட மேடை தோற்றது! கட்சிப் பிரச்சாரங்கள் கூசி நாணும் அளவு சீனாவை எப்படி உலகிற்கு சந்தையாக்கம் செய்கிறார்கள்?

நீங்களும் சைனாவின் மூளைச்சலவைக்கு உள்ளாகி விட்டீர்களா?

உத்ராவின் #சொல்வனம் கட்டுரையை வாசியுங்கள்:

கம்யூனிஸம் பேசுகிறாரா அமெரிக்க ஜனாதிபதி?

சென்னையில் மருந்தகங்களே மருத்துவராக மாறி நோயை குணப்படுத்துவார்கள். மேற்கத்திய உலகில் சட்டங்களும் திட்டங்களும் அதிகம். தெருமுக்கில் ஒற்றை அறையில் உங்களை நாடி பிடித்து குணப்படுத்தும் நம்பகமான ஐந்து ரூபாய் டாக்டர் கிடையாது.

அவசர அவசரமாக உடனடியாக சிகிச்சை பெற வேண்டுமானால் உயர்தரமான சேமநல காப்பீடு வேண்டும். அந்த மாதிரி முன் ஜாக்கிரதையாக இன்ஷூரன்ஸ் எடுக்காதவர்களுக்கு உடம்பு சரியில்லாமல் போனால் சொத்தையே எழுதி வைக்க வேண்டும்.

இதற்கெல்லாம் மாற்றாக ஒபாமா-கேர் வரப் பார்த்தது. மாஸசூஸட்ஸ் மாநிலத்தை முன் மாதிரியாக வைத்து உருவான சகலருக்குமான காப்புறுதி திட்டம் அது. பராக் ஒபாமாவின் காலத்திலேயே அது நீர்த்துப் போய் பேருக்கு காப்புறுதி கொடுத்தது. டொனால்டு டிரம்ப் வந்து அந்த ஹெல்த்-கேர் திட்டங்களை இன்னும் காலாவதியாக்கினார்.

அதில் விட்டதையும் தொட்டதையும் தற்போதைய அதிபர் பைடன் சட்டமாக்கப் பார்க்கிறார். எக்கச்சக்க விலை கொடுத்து வாங்க வேண்டிய மருந்துகளை சகாயமாக அணுகக் கூடிய விலையில் தர முயல்கிறார்.

அது சோஷலிசமா?

சமத்துவமா?

கம்யூனிஸம் பேசுகிறாரா அமெரிக்க ஜனாதிபதி?

லதா குப்பாவின் #சொல்வனம் கட்டுரையை வாசியுங்கள்.

This May Be Democrats’ Best Chance to Lower Drug Prices | Democrats Add Drug Cost Curbs to Social Policy Plan, Pushing for Vote #solvanam

வெப்3.0 – ராவோடு ராவாக மில்லியனர் ஆவது எப்படி?

தொடர்புள்ள பதிவு:

“வெப்3-இல் வேலை செய்ய $500,000 சம்பளம் கொடுக்கிறோம். வாங்க…” என்கிறார்கள்.

‘அம்மாவிற்கு கிறிஸ்துமஸ் பரிசாக என்.எஃப்.டி.-இல் கிடைத்த லாபத்தை வைத்து சான் ஹோஸே நகரத்தில் மூன்று மில்லியன் டாலர்கள் ரொக்கமாகக் கொடுத்து வீடு வாங்கிவிட்டேன்!” என்கிறார்கள்.

இதெல்லாம் கட்டுக்கதை இல்லை. நிஜமாகவே பற்பலரின் அனுபவம்.

கணினி, மென்பொருள், சொவ்வறை – இதெல்லாம் 90கள்

இணையம், வலை, டாட் காம் – 2000கள்

சமூக ஊடகம், நேரடிச் சந்தை, இடைத் தரகரில்லாத வியாபாரம் – 2010கள்

இப்பொழுது க்ரிப்டோ, பிட்காயின், ப்ளாக்செயின், மாற்றமுடியா முத்திரை (NFT), மெய்யுரு (non fungible token), மெட்டா, மெய்நிகர் உலகம் – 2020கள்.

இந்த நுட்பங்களுக்கு நுழைவாயிலாக பானுமதி ந. எழுதும் தொடர் அமைந்திருக்கிறது. கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளிக்கும் விதமாக கட்டுரைகள் இருக்கின்றன:

1. ஒவ்வொரு நாட்டு அரசாங்கமும் இந்த சங்கேத பட்டுவாடாக்களை எவ்வாறு எதிர்கொள்கின்றன?

2. இந்த Decentralized Autonomous Organization, DeFi எல்லாம் வைத்து செல்வம் சேர்ப்பது ஒரு சிலரால் மட்டுமே ஆக்கிரமிப்புக்குள் அடங்கி, மற்ற எல்லாருக்கும் சில்லறைக் காசு மட்டுமே அள்ளித் தெளிக்கப்படுகிறதா?

3. ஃபேஸ்புக் மெட்டா, ஆக்குலஸ் ரிஃப்ட் போன்ற கற்பனாலோகங்களில் சஞ்சரித்து கல்லா கட்டுவது எப்படி?

பணம் மட்டுமல்ல. நீங்கள் எந்தத் துறையாக இருந்தாலும்… பயணத்துறை, கல்வித்துறை, விவசாயம், கட்டுமானம், மருந்து, உடல்நலம், உணவு, கேளிக்கை, இலக்கியம், அச்சு, செய்தித்துறை, இசை – எதுவாக இருந்தாலும் நுண்நாணயம் தன் வீச்சை செலுத்தப் போகிறது. அதை பயன்படுத்த நீங்கள் தயாரா?

முதல் பகுதிக்கான அறிமுகம்:

நாய் மனிதனைக் கடித்தால் செய்தி இல்லை; மனிதன் நாயைக் கடித்தால் செய்தி.

அது போல் உங்கள் நிறுவனத்தையோ நகரத்தையோ கள்வர்கள் வந்து கணினியை முடக்கினால் செய்தி இல்லை. நீங்கள் அந்தக் கயவர்கள் யார், எவர் எனத் தெரிந்து கொண்டால் மட்டுமே செய்தி.

இதைக் குறித்த விரிவான கட்டுரையை இந்த சொல்வனம் இதழில் வாசிக்கலாம்.

சின்ன கம்பெனி முதல் பெரிய ஃபார்ச்சூன் 500 அமைப்பு வரை எல்லோரும் கொந்தர்களிடம் மாட்டிக் கொள்கிறார்கள். அதன் பின் அவர்கள் கேட்கும் பிட்காயின் / எதிரீயம் தொகையை பட்டுவாடா செய்கிறார்கள். அதன் பின் தங்கள் வியாபாரத்தை நிர்வாகத்தைத் தொடர்கிறார்கள்.

நாடுகளே இதில் தங்கள் ஆள்களை உலவ விட்டிருக்கிறார்கள். சீனா, ருஷியா போன்ற நாடுகளுக்கு இது அதிகாரபூர்வமற்ற திருட்டு வியாபாரம். உக்ரைன், கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு இது கண்ணாமூச்சி ஆட்டம்.

முதல் பகுதியை ந. பானுமதி சிறப்பாக அறிமுகம் செய்திருக்கிறார்.

இதன் தொடர்ச்சியாக:

– எவ்வாறு வர்த்தக ரகசியங்கள் களவாடப்படுகிறது?

– அமெரிக்காவிற்கும் மேற்குலகிற்கும் இதனால் என்ன லாபம்?

– கள்ள இணையம் எனப்படும் டார்க் வெப் எப்படி இயங்குகிறது?

– கறுப்பை வெளுப்பாக்குவது போல் புலப்படா இணையப் பணம் எவ்வாறு அமெரிக்கன் டாலராக மாறி நிதிப் புழக்கத்திற்கு விடப்படுகிறது?

– காப்பீடு நிறுவனங்கள், கஞ்சா விற்பவர்கள், தகாத செயல்கள் செய்பவர்கள் சில்லறை வியாபாரிகளாக இருந்த காலம் மாறி எப்படி முறைசார்ந்த அடுக்குமுறை அதிகாரவர்க்கத்தின் அடியில் ஒழுங்காக இயங்குகிறார்கள்?

Where have you looked?

Review of Vikramadithyan Documentary | Vishnupuram Awards 2021

Vikramadithyan Documentary | Vishnupuram Awards 2021: ‘வீடும் வீதிகளும்’, 2021ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது பெறும் கவிஞர் விக்ரமாதித்யன் அவர்களைப் பற்றிய ஆவணப்படம் பார்த்தேன்.

சில எண்ணங்கள்:

1. துணையெழுத்து இல்லாமை: தமிழ்க் கவிஞரைப் பற்றிய அறிமுகப் படத்தில் வரும் உரையாடலை, உரையாடற் மொழியிலோ பிற வேற்று மொழியிலோ எழுத்து வடிவில் காட்டப்படும் உரை; ஆங்கிலத்தில் துணையுரை இல்லாமல் இருப்பது ஏமாற்றம் அளிக்கிறது.

2. அரை மணி நேரத்தில் முடிக்க வேண்டும் என்று அவசர கதியில் மிச்சம் மீதியைப் போட்டு செய்யும் வடகறி கொத்து பரோட்டா போல் வந்திருக்கிறது. வடகறி சுவையாக இருக்கும். ஆனால், இங்கே சாஸ்திரோப்தமான சூப், சிற்றுண்டி பலகாரம், தலைவாழை இலை சாப்பாடு, பீடா எல்லாம் எதிர்பார்க்கிறேன்.

3. இந்தப் படங்கள் எவரைக் குறிவைத்து எடுக்கப்படுகின்றன?

அ) தமிழ்க் கவிஞர்களை அதிகம் அறியாத தமிழ் தெரிந்தோர்

ஆ) விக்கிரமாதித்தனை நன்கு அறிந்தோர்

இ) தமிழ் இலக்கியத்தில் நிறைய பரிச்சயம் இருந்தாலும் விக்கிரமாதித்தனை அறியாதோர்

ஈ) தமிழ் புரிந்தாலும் எழுத/வாசிக்கத் தெரியாத தலைமுறை

உ) விஷ்ணுபுரம் வாசகர் வட்டம்

என்னை (இ) பிரிவில் வைத்திருக்கிறேன். என் மனைவியை (அ) பிரிவில் வைக்கிறேன். எங்கள் குழந்தைகளை (ஈ) பிரிவில் வைக்கலாம். இந்த மூவருக்குமே இந்தப் படம் எதையும் கொண்டு சேர்க்கவில்லை.

4. நான் எதை எதிர்பார்த்தேன் – இந்தப் படத்தில்?

i) தமிழ்க் கவிஞர்கள் – சுருக்கமான பாரம்பரியம்; எந்த இடத்தில் விக்கிரமாதித்தன் வருகிறார்?

ii) விக்கிரமாதித்தன் தோற்றமும் வளர்ச்சியும் – எவ்வாறு அந்தக் கவியாளுமை உருவானது?

iii) சமகால கவிஞர்களை எவ்வாறு அவர் ஊடுருவுகிறார்? அவரின் நெடிய இலக்கிய பயணத்தில் என்னென்ன மாற்றங்கள் தோன்றின?

iv) கவிஞரை வாசித்ததால் அவரவருக்கு என்ன கிடைத்தது? போகன் சங்கர், லஷ்மி மணிவண்ணன், வண்ணதாசன் – சுய அனுபவம் / நேர்மையான தன்மை நிலைப் பார்வை / அகப் பகிர்வு – இது இல்லாமல் பீடத்தில் இருந்து கொண்டு சொற்பொழிவாற்றுவது ‘ராஜாதி ராஜ ராஜ கவிராய ராஜ மார்த்தாண்ட ராஜ கம்பீர விக்கிரமாதித்தாய நமஹ!’ என அலறுகிறது.

5. அறிமுகமாக அந்த வீணை இசை மெல்லிய அபாரம். படம் முழுக்கவே சத்தமாக, “நான் இருக்கிறேன்!” என்று கத்தாமல், படத்தோடு இயைபான இசை.

6. ஏன் பேசுபவர்களின் பெயர்களை ஆங்கிலத்தில் போடுகிறார்கள்? பேசுபவர் யார், எங்கிருக்கிறார், என்ன எழுதியிருக்கிறார், ஏன் பேசத் தகுதியானவர் என்றெல்லாம் போட வேண்டும்.

7. கவிஞரைக் குறித்த ஜெயமோகனின் அறிமுகம் முகஞ்சுளிக்க வைத்தது. இன்னாரைப் பாராட்டி சீராட்டும் தருணத்தில் “சட்டையில்லாமல் வந்தார்! சண்டைக்காரராக முன்வந்தார்!!” என்று சொல்லிவிட்டு, “நான் எழுதியதுதான் அவரைப் பற்றிய முதல் கட்டுரை!” என்று ஜம்பமும் தட்டிக் கொள்வது உவ்வேக். கொஞ்சம் தன்னடக்கத்தோடு உரையாடியிருக்கலாம்.

8. இறுதியில் போடப்படும் பெயர் பட்டியல் – அகர வரிசைப்படி இருக்க வேண்டும். இது ஏதோ இலக்கிய அந்தஸ்து பீடம் போல் வயதை வைத்து போடப்பட்டிருக்கிறது.

9. ஒரே ஒரு பெண்ணாக சுபஸ்ரீ வந்து போகிறார். நன்றாகப் பேசினார்.

10. விக்கிரமாதித்தன் உரையாடலை இன்னும் தீவிரமாக ஆழமாக நடத்தியிருக்க வேண்டும். குடியோடு என்றால் குடியோடு. ஏழெட்டு நாள்கள் என்றால் அத்தனை பொறுமையோடு. அதன் பின் கத்திரி போட்டு ஆங்காங்கே கிடைத்த நறுக்குகளைக் கொண்டு அவரின் பேச்சு வந்திருக்க வேண்டும். இப்பொழுது ஏதோ தாதா சாகேப் பால்கே விருது பெற்ற ரஜினிகாந்த்தை வைத்து பொம்மை கோச்சடையான் எடுத்த மாதிரி தீட்டியிருக்கிறார்கள்.

குருதி – மலையாளப் படம்: மூன்று பார்வைகள்

நன்றி: ஃபேஸ்புக்

Gokul Prasad

குருதி- சில எண்ணங்கள்.

இந்தப் படத்தின் திரைக்கதையில் ஏகப்பட்ட பிரச்சினைகள் இருக்கின்றன. தர்க்கப் பிழைகள் இருக்கின்றன. இதன் க்ளைமாக்ஸ் ஓர் உதாரணம். அதன் காரணமாக படம் நன்றாக இல்லை.

இப்படம் இஸ்லாமியர்களை ‘மட்டும்’ மோசமாகச் சித்தரித்திருப்பதாகவும் அவர்களது தீவினைகளுக்கு எதிர்வினையாகவே இந்துத்வர்கள் செயல்படுவது போலக் கட்டமைக்கப் பிரயத்தனப்படுகிறது என்றும் பலரும் அபிப்ராயப்படுவதை நான் ஏற்கவில்லை.

முதல் விஷயம், பிருத்விராஜ் சொல்கிற ஃப்ளாஷ்பேக். ஃபிரான்சின் நவீன மனநிலையுடன் ஒப்பிடும்போது, அவர்களது முற்போக்குத்தனத்துடன் ஒப்பிடும்போது, இஸ்லாமியர்கள் அங்கே நிகழ்த்திய வன்முறை – நேரடியாகவும் கருத்தியல் ரீதியிலும் – சகித்துக்கொள்ள முடியாதது. சார்லி ஹெப்டோ பத்திரிகையில் முகமது நபியின் கேலிச் சித்திரத்தை வரைந்ததற்காக குண்டு வைத்த இஸ்லாமியர்களைக் கண்டு ஐரோப்பியர்கள் அஞ்சுவது நியாயமானதே. புரிந்துகொள்ளக்கூடியதே. அவர்கள் முந்நூறு ஆண்டுகளாக இரத்தம் சிந்தி அந்தக் கருத்துச் சுதந்திரத்தை அடைந்தவர்கள். அவர்களுக்கு அதன் மதிப்பு தெரியும்.

இந்தப் படம் இஸ்லாமியக் குடியேறிகள் ஃப்ரான்ஸில் செய்த அட்டூழியங்களையும் அவர்கள் ஈடுபட்ட ஜனநாயக விரோத நடவடிக்கைகளையும் தன்னுடைய கதாபாத்திரத்தின் மனநிலையை வகுப்பதற்கான reference-ஆக எடுத்துக்கொள்கிறது. இதில் எந்தத் தவறுமில்லை.

நான் இப்படிப் புரிந்துகொள்கிறேன்.

இரண்டு விதமான இஸ்லாமியர்களை இப்படம் சித்தரிக்க முயல்கிறது.

1. தங்களது மதவெறி காரணமாக கொலைவெறிச் செயல்களில் ஈடுபடுபவர்கள்.

2. இஸ்லாமிய மதநெறியின் பொருட்டு தங்களது நன்னம்பிக்கை வழுவாது வாழ்பவர்கள். யாருடைய பார்வை சரி, எந்தத் தரப்பு தவறு என்பதற்குள் விரிவாகச் செல்லாமல் சுருக்கமாக இப்படி வரையறுக்கலாம். இந்த இரண்டு தரப்பு இஸ்லாமியர்களுமே தங்களது நம்பிக்கை மீது மிகுந்த பிடிப்புடனும் பற்றுடனும் வாழ்கிறார்கள். அதில் பாவனை இல்லை, நாடகம் இல்லை, போலித்தனம் இல்லை. சரியோ தவறோ தாங்கள் தீர்க்கமாக நம்புவதைக் கடைபிடிப்பதில் தயக்கங்கள் இல்லை. இதில் அவரவர்க்கு அவரவர் நியாயம் இருக்கிறது.

ஆனால், பலரும் கருதுவதைப் போல அந்த இந்துத்வ சிறுவனை இப்படம் அப்பாவியாகக் காட்டவில்லை. அவனை ஒரு புழுவைப் போல காட்டுகிறார்கள். அவன் தனது கொள்கைக்கு விரோதமாக மாட்டுக்கறி உண்கிறான். தன்னைக் காப்பாற்றிக்கொள்ள எந்த எல்லைக்கும் செல்லத் தயாராக இருக்கிறான். இதன் மூலம் அவன் எவ்வளவு அற்பமானவன் என்பதை நிறுவிவிடுகிறார்கள்.

‘அவங்க கோவிலை எரிச்சாங்க. இவன் கத்தியை எடுத்துட்டான்’ என இந்துப் பெண் சுமா சொல்லும் காரணம்கூட வெறும் சால்ஜாப்புதான். இஸ்லாமியர்களைப் போல தன்னுடைய செயலுக்கான விளைவுகளை (conviction) ஏற்றுக்கொள்ள அவன் தயாராக இல்லை. தன்னுடைய வயதைக் காரணம் காட்டி அடுத்தவர்கள் மீதோ பழிசுமத்தி தன்னைத் தூய்மையில் நிறுத்திக்கொள்ள அவன் நடிக்கிறான். அதற்கு சுமா துணைபோகிறாள். கடைசியில், தான் உயிர் பிழைப்பதற்காக, தன்னைக் காப்பாற்றிய சுமாவையும் அவளது அண்ணனையும் நடுக்காட்டில் தள்ளிவிட்டு இருவரையும் உயிருக்குப் போராட விட்டுவிடுகிறான். எவ்வளவு சுயநலம்! குள்ளநரித்தனம்! (ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கே மதவெறி/சாதிவெறி அதிகம் எனக் கோடிட்டுக் காட்டுகிறார்கள்.)

பிரச்சினை என வந்துவிட்டால், இஸ்லாமியர்கள் ஒருவருக்கொருவர் சளைக்காமல் உதவுகிறார்கள். தங்களது கூட்டாளிகளைப் பாதுகாக்கிறார்கள். ஆனால், இந்துத்வனோ, தான் மட்டும் தப்பிப் பிழைத்தால் போதுமென நினைக்கிறான். ஓர் இந்துத்வனை நம்பி சக இந்துக்கள் அவனுக்கு உதவிசெய்ய நினைப்பதுகூட பேராபத்தில்தான் முடியும் என்பதல்லவா இதன் பொருள்? அவன் கடைசிவரை தன் தவறை ஒப்புக்கொள்வதில்லை, மனம் திருந்துவதில்லை, தனக்காகச் சொந்த மதத்தினரைப் பகைத்துக்கொண்ட ஓர் இஸ்லாமியக் குடும்பத்தின் வேதனை எந்த விதத்திலும் அவனைப் பாதிக்கவில்லை. அவர்களது குருதியை உறிஞ்சிவிட்டு இன்னமும் வெறி அடங்காது வெறுப்புடன் திரிகிறான். இவனை விடவா இப்படத்தின் இஸ்லாமியத் தீவிரவாதிகள் மோசமானவர்கள்?

அதனால், அந்த இந்துத்வனை அப்பாவியாகச் சித்தரித்திருக்கிறார்கள் என்பதைத் தர்க்கரீதியில் ஒப்புக்கொள்ள முடியாது. அவனைத் தீமையின் உருவகமாகக் காட்டியிருக்கிறார்கள் என்கிற முடிவுக்கே வரவேண்டியிருக்கிறது.


Suresh Kannan

‘மனிதனால் யாரையும் வெறுக்காமல் இருக்க முடியாது’

‘குருதி’ மலையாள திரைப்படம் பார்த்தேன். மேற்கண்ட வாக்கியம்தான் இந்தப் படத்தின் ஆதார மையம் என்று தோன்றுகிறது.

‘இந்த வாக்கியத்தை உங்களால் தாண்டி வர முடியுமா?” என்கிற சவாலான கேள்வியை, மூசா என்கிற ஓர் இஸ்லாமியப் பெரியவரின் வழியாக ஒவ்வொரு பார்வையாளனையும் நோக்கி கேட்கிறது இந்தப் படம்.

ஆயிரம்தான் இருந்தாலும் மதம் என்பது ஒரு கற்பிதம்தான். அது நம்முள் விதைக்கும் நல்ல விஷயங்களைத் தாண்டி வன்மமாகவும் வெறுப்பரசியலாகவும் பரவும் அபத்தத்தை ரத்தக் கறையோடு விறுவிறுப்பாக சொல்லிச் செல்கிறது இந்தத் திரைப்படம்.

அனைத்து மதத்திலும் சில அடிப்படைவாதிகள் இருப்பார்கள். மத அரசியலின் புகையை ஊதிக் கொண்டே இருப்பார்கள். இந்தச் சாத்தான்களின் குரலை புறக்கணித்து விட்டாலே போதும்.

அப்படியொரு ‘சாத்தானாக’ ருத்ரதாண்டவம் ஆடியிருக்கிறார் பிருத்விராஜ். அவருடைய தயாரிப்பாக இருந்தாலும் இப்படியொரு எதிர்மறைப் பாத்திரத்தை எடுத்ததற்கு பாராட்டு. (ஹேராமில் கமல் ‘அப்யங்கர்’ பாத்திரத்தை எடுத்திருப்பாரா என்கிற கேள்வி இங்கு எழுகிறது).

படம் இழுவையான காட்சிகளுடன் துவங்கினாலும் ஒரு கட்டத்தில் நெருப்பு மாதிரி பற்றிக் கொள்கிறது. பிறகு வேகம். வேகம்தான்..

மதக்காழ்ப்பு என்பது சிலரிடம் அப்பட்டமாகவும் பலரிடம் மறைமுகமாகவும் ஒளிந்திருக்கும் ஆபத்து, ‘நாம்’ ‘அவர்கள்’ போன்ற பிரிவினைவாத சிந்தனைகள் எவ்வாறு உருவாகின்றன என்பது உள்ளிட்ட பல விஷயங்களை சொல்லிச் செல்கிறது, இந்தப்படம்.

திரைக்கதை, ஒளிப்பதிவு, பின்னணி இசை என்று பல தொழில்நுட்ப சமாச்சாரங்கள் சிறப்பாக அமைந்துள்ளன. நிச்சயம் தவற விடக்கூடாத திரைப்படம்.


Devibala Malathi DM

சிறப்பான படத்தை பார்த்த ஒரு திருப்தி. வாழ்வில் நாம் காணும் மனிதர்களின் மேல் அரசியல் , சுயநலம் ,பொறாமை என்ற பெயரில் நாம் செலுத்தும் வெறுப்பை நம் கண் முன்னே ஓர் இரவின் நிகழ்வுகள் பின்னணியில் சொல்லிவிடுவதே இந்த படம்.

மதத்தின் மேல் பலருக்கும் பல கருத்துக்கள் இருக்கும். அந்த கருத்துக்கள் ஒரு பக்கம் இருக்கட்டும் , அதன் இரு வேறு நன்மை தீமைகளை எடுத்துக்கூறும் ஒரு திரைக்காவியம் என்பதாக இந்த படத்தை நாம் காணலாம்.

ஒரு காட்சி என்னை மிகவும் கவர்ந்தது, கொல்வதற்காக வரும் எதிரிகள் வீட்டு மெயின் ஸ்விட்சை அணைக்கிறார்கள் அப்பொழுது அங்கு உள்ளிருக்கும் இருவர் தன்னைத்தான் கொல்ல வருகிறான் என்று நினைத்து இரு மத இளைஞர்கள் எதிர் எதிர் ஒரு ஆயுதத்தை ஏந்தி எதிர்த்து நிற்பார்கள் . அப்பொழுது அங்கிருக்கும் பெரியவர் ” இதுதான் நம் நாட்டின் பிரச்சனையும் ” என்பார். எவ்வளவு நாசூக்காக நம் நாட்டின் மத பிரச்சினையை விளக்கி விட்டார்.

பிருத்விராஜ் சிறப்பான நடிப்பு😊.

தி. ஜானகிராமன் – ”வெங்கிட்டு சார் ஏன் ஓடினார்”

ஒரு எழுத்தின் சாயல் உங்கள் மீது பட்டு விடாமல் இருக்க கண்டதையும் படிக்க வேண்டும். வித விதமாக வாசிக்க வேண்டும். ஆய்வுக் கட்டுரை முதல் ஆன்மிகம் வரை எதையும் விடக் கூடாது.

அதுவும் அறிவியல் புனைவு மாதிரி எழுத நினைக்கும் போது ஃபிலிப் ராத் கதைகளும் ஜெயகாந்தன் புனைவுகளும் கையில் எடுக்க வேண்டும். சம்பந்தமே இல்லாத துறையில் ஆழ்ந்து, அமைதியாக மூழ்கினால் நல்ல எழுத்து வரும்.

அந்த நினைப்பில் மீண்டும் தி.ஜா.வை எடுத்தேன். பயப்பட வேண்டாம். இன்னும் எதுவும் எழுத ஆரம்பிக்கவில்லை. எனினும், அரூ போட்டி முடிவவில் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகளும், அதில் சில கதைகள் ஜெயமோகனின் சாயலில் இருப்பதாக வெளியான கட்டுரைகளும் இந்த முன்குறிப்பை எழுத வைத்தது.

தலைப்புக்கு போய் விடலாம்: ”வெங்கிட்டு சார் ஏன் ஓடினார்” – குறுநாவல் அளவில் ஒரு சிறுகதை. நல்ல வேளையாக இணையத்தில் கிடைக்கவில்லை.

கதையை சொல்லாமல், இந்த ஆக்கம் ஏன் எனக்குப் பிடித்தது என்று பட்டியல் போடலாம்:

  1. பா. ராகவன் சொல்வார் (அவர்தான் என்று நினைக்கிறேன். இல்லாவிட்டாலும் சிக்கலில்லை) – ஒரு நல்லவர் கெட்ட விஷயத்தை செய்ய வேண்டும். கெட்டவராக சித்தரிக்கப்படும் கதாபாத்திரம் ஏதாவதொரு உத்தமமான விஷயத்தை செய்ய வேண்டும். அதெல்லாம் இந்தக் கதையில் நடக்கிறது.

2. என்னுடைய மாமா அன்னதாதா. நிறைய தான தருமங்கள் செய்பவர். தினமும் வீட்டு வாசலில் வரும் மாடு முதல் எங்கோ இருக்கும் குப்பைமேட்டில் பொறுக்குபவர் வரை தேடிச் சென்று உணவுப் பொட்டலங்களும் ஆடைகளும் தருபவர். கோடையில் அவரின் நிலத்தடி நீர் வற்றி விட்டது. கிணற்றை தூர் வார ஆட்களை அழைத்திருந்தார். நூறடி வரை புரட்டிப் போட்டு வெளியகற்றுவது என்று ஒப்புதல். வந்த மூன்று பேரும் காலை ஏழில் இருந்து மாலை நான்கு வரை அடைப்பை நீக்கி தெளிவாக்கின்றனர். வண்டலை இழுத்து வெளியேற்றி விட்டதாகச் சொல்கின்றனர். நீர்நிலைகளின் கொள்ளளவு அதிகமாகி நீரேந்தும் அளவும் மேம்பட்டதாக கண்ணுக்கு பட்டது. ஆனால், என் மாமாவோ, “இது நூறடி இல்லை!” என்றார். அவர்கள், “சாமீ… இது சத்தியமா நீங்க சொன்ன கூலிக்கு, ஒப்பந்தப்படி முழுக்க தூர் வாரிட்டோம்.” என இறைஞ்சுகிறார்கள்.

கடகடவென் மாமா கிணற்றில் கயிற்றைப் பிடித்துக் கொண்டு அதல பாதாளத்தை நோக்கி இறங்க ஆரம்பித்தார். கையில் நூறடியை அளக்கும் அளவுகோல் வேறு. நான் மிரண்டு விட்டேன். அவர்களும் அரண்டு விட்டார்கள். கடைசியில் அளந்து பார்த்ததில் எண்பத்தி ஏழு அடிதான் ஆகி இருந்தது. தானம் கொடுத்த மாட்டின் பல்லைப் பிடித்துப் பார்க்க மாட்டார்; ஆனால், ஆற்றில் போடும் ஊதியத்தை அளந்து பார்ப்பார்கள் மனிதர்கள்.

  1. மீண்டும் பாரா: சிறு சிறு விவரங்கள் சிறுகதைக்கு முக்கியம். ஒரு கதையில் ஆள், உயரம்,வாசனை,நடை, நாற்றம்,லே அவுட், மேனரிசம், கோபம், புன்னகை,அழுகை, துடிப்பு, வேகம்,சூழல், செயல், செயலின்மை, பேச்சு, மௌனம் இதெல்லாம் வரவேண்டும்; தெரியவேண்டும். – இதெல்லாம் வைத்திருக்கிறார் ஜானகிராமன்.
  2. இதைத்தான் சிவசங்கரி “சின்ன நூற்கண்டா உங்களை சிறைப்படுத்தும்?” என்று அ-புனைவாக ஆக்கினார்?
  3. தி.ஜா.ரா.வின் வார்த்தையிலே சொல்வதானால்: “எடுத்துக்கொண்ட விஷயம் உணர்வோ, சிரிப்போ, புன்சிரிப்போ, நகையாடலோ முறுக்கேறிய, துடிப்பான ஒரு கட்டத்தில்தான் இருக்கமுடியும். சிறிது நேரத்தில் வெடித்துவிடப் போகிற ஒரு தெறிப்பும், ஓர் அவசரத் தன்மையும் நம்மை ஆட்கொள்ள வேண்டும். தெறிக்கப் போகிறது பட்டுக் கயிறாக இருக்கலாம். எஃகு வடமாக இருக்கலாம். ஆனால் அந்தத் தெறிப்பும் நிரம்பி வழிகிற துடிப்பும் இருக்கத்தான் வேண்டும். இந்தத் தெறிப்பு விஷயத்திறகுத் தகுந்தாற்போல் வேறுபடுவது சகஜம். கதையின் பொருள் சோம்பல், காதல், வீரம், தியாகம், நிராசை, ஏமாற்றம், நம்பிக்கை, பக்தி, உல்லாசம், புதிர் அவிழல் அல்லது இவற்றில் சிலவற்றின் கலவைகளாக இருக்கலாம். அதற்குத் தகுந்தபடி அந்தத் தெறிப்பு பஞ்சின் தெறிப்பாகவோ, பட்டின் தெறிப்பாகவோ, எஃகின் தெறிப்பாகவோ, குண்டு மருந்தின் வெடிப்பாகவோ சத்தம் அதிகமாகவோ குறைந்தோ மௌனமாகவோ மாறுபடும். ”

இந்தக் கதையில் என்னத் தெறிப்பு என்பதை வாசித்து விட்டு சொல்லுங்கள்.

டாக்டர் நாகேஸ்வரன் – அஞ்சலி

மயிலாப்பூர் டி.எஸ்.வி கோவில் தெருவில் ஒரு சின்ன அறையில் அவரின் பார்வையறை இருக்கும். அந்தத் தெருவிற்கு ஏன் “டாக்டர் நாகேஸ்வரன் தெரு” என்று பெயர் வைக்கவில்லை என்று நினைத்திருக்கிறேன்.

அவர் குழந்தை நல மருத்துவர்.
அவர் ஒரு மனநல மருத்துவரும் கூட.
அவரை குருஜி என்றும் சொல்ல வேண்டும்.
பலர் அவரை தங்களின் ஆலோசகர் + வழிகாட்டுனர் ஆகவே பார்த்தார்கள்.

சுருக்கமாக நல்ல மனிதர். பழகுவதற்கு எளிமையானவர். வாழ்க்கை சிக்கல்கள் ஆகட்டும்; உடல்நலக் குறைபாடுகள் ஆகட்டும்; பிரச்சினையில் சிக்கித் தவிக்கும் எண்ணற்றோருக்கு சுருக்கமான தீர்வுகளை ஐந்து ரூபாயில் தந்தவர்.

மயிலையில் நிறைய விஷயங்களுக்கு கூட்டம் அலை மோதும். வருடத்திற்கொரு முறை அறுபத்து மூவர். ஆண்டிற்கொரு முறை வைந்த ஏகாதசியின் போது ஸ்ரீனிவாசப் பெருமாள். கிறிஸ்துமஸ் இரவின் போதும் புனித வெள்ளி காலத்தின் போதும் சாந்தோம் சர்ச். ஆனால், நாகேஸ்வரன் எப்பொழுதெல்லாம் அவர் க்ளினிக்கில் இருக்கிறாரோ, அப்பெழுதெல்லாம் அந்தத் தெருவே ரொம்பி வழியும்.

சாதாரண பொது சந்திப்பு, சிறப்பு வழி, ஐநூறு ரூபாய் வழி, பின் வழி, வி.ஐ.பி. வழி என்பதெல்லாம் திருப்பதி பெருமாளுக்கு மட்டும் உரியதல்ல. டாகடர் நாகேஸ்வரனுக்கும் உரியது. சொல்லப் போனால், திருமலை தேவஸ்தானத்திற்கு இவர்தான் வழிகாட்டி.

மருத்துவமனையை நடத்தும் நேரம் போக, தன் நோயாளிகளின் நல்ல / கெட்ட விஷயங்களுக்கும் தவறாமல் ஆஜர் ஆவார். காதுகுத்து, கல்யாணம் என்று பத்திரிகை வைத்தால், அவரின் அக்மார்க் சிரிப்புடன் வருவார். ஓரமாக உட்கார்ந்திருப்பார். சகஜமாகப் பேசுவார். உங்களை இயல்பாக்குவார்.

நான்கைந்து முறை அவரைப் பார்க்க நான் சென்றிருக்கிறேன். கடுமையான ஜுரம், வாந்தி / பேதி, உடல்கட்டிகள் என்று விதவிதமான உடலியல் சிக்கல்களுடன் போயிருக்கிறேன். ஒவ்வொரு முறையும் அதற்குரிய கவனிப்பையும் மருந்தையும் கொடுத்துவிட்டு, அவர் என்னிடம் பல்வேறு முக்கியமான விஷயங்களைப் பற்றி உரையாடியிருக்கிறார்.

  1. ‘நீ ஏன் மதராஸ் மொழியில் பேசுகிறாய்? நல்ல தமிழில் உரையாட வருமா?’; என் அம்மாவைப் பார்த்து, “இந்தப் பையனுக்கு சுத்தமா பிராமண பாஷையே வருவதில்லை… இல்லியா?” – வந்த சிக்கல் போயேவிடும். உண்மையான சிக்கல் உரைக்கும்.
  2. “வடக்கிந்தியா வாசம் எப்படி இருக்கிறது? வீட்டை விட்டு தொலைதூராம் இருக்கிறாயே… பிரிவை எவ்வாறு சமாளிக்கிறாய்?”
  3. “ஆளைப் பார்த்தால் மூன்று வேளை சாப்பிடற மாதிரியே தெரியலியே! பூஞ்சான் மாதிரி இருக்கே… புரதச் சத்து சேர்த்துக்கோ; கார்த்தாலே சாப்பிடாம இருக்கியோ?”

அவரைப் போல் உழைக்க வேண்டும்.
சக உயிர்கள் மீது கரிசனமும் பரிவும் வேண்டும்.
சரியான கவலைகளை நோக்கி நமக்குத் தெரிந்தவர்களை முன் செலுத்த வேண்டும்.

வாழும் காலத்தில் ஆரவாரமின்றி மருத்துவர் நாகேஸ்வரன் போல் சுற்றத்தினாரின் மகிழ்ச்சிக்காவும் ஆரோக்கியத்துக்காகவும் அர்ப்பணிப்புடன் ஆர்வத்துடன் இயங்க வேண்டும்.

கொஞ்சம் தாகூர்; கொஞ்சம் வங்காளம்; மற்றும் நிறைய மயக்கும் பெண்டிர்

நெட்ஃப்ளிக்சில் “ரவீந்திரநாத் தாகூரின் கதைகள்” பார்த்தேன். அனுராக் பாசுஇயக்கியது. கதைகளில் மிகவும் குறிப்பிடத்தக்க பகுதி என்னவென்றால், பெரும்பாலான கதைகளில் பெண் கதாபாத்திரங்கள் துன்பத்தில் இல்லை.

  1. சோகர் பாலி
  2. மான்பஞ்சன்
  3. உடைந்த கூடு
  4. எறும்பு அரம்பு (“சமப்தி” அடிப்படையில்)
  5. தண்டனை (‘சாஸ்தி’ அடிப்படையில்)
  6. டுய் பான் (இரண்டு சகோதரிகள்)
  7. மிருனால் கி சித்தி
  8. அதிதி
  9. காபூலிவாலா

The stories by themselves may not read great (now).

Assume for a second (hypothetically), a well-trained person who is good in literal translation brings it to Tamil – It will be verbatim and plain.

but, The screen adaptation, the sets (art director), time machine going to the 19th century, beautiful costumes, coloring, photography, rustic scenery – all add magic to the short stories/fiction.

Did I say, the women in this series are just nostalgic and beautiful? The same actresses in other films were never showed them in this light.

It is relaxing, enjoyable, and pleasant. When I am in tough times (job loss, covid, other sad events), I like to watch feel-good films. When life is good (promotion, arrival of newborns, good events), I like to watch depressing movies, dystopian sci-fi.

So, I liked this Tagore series on Netflix.

via interweb

“துன்பத்தில் ஒரு பெண் இல்லை” – ரவீந்திரநாத் தாகூரின் கதைகள் சக்திவாய்ந்த பெண்களை சித்தரிக்கின்றன

By ராஜ் தீபால பாண்டே

தாகூர் எழுதிய கதைகள்

நோபல் பரிசு பெற்ற ரவீந்திரநாத் தாகூர் முற்போக்கான, தைரியமான, மற்றும் அவர்களின் காலத்திற்கு முன்னால் இருந்த கதைகளுக்கு பெயர் பெற்றவர். இந்த கதைகளின் தொகுப்பானது ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் “ரவீந்திரநாத் தாகூரின் கதைகள்” என்ற பெயரில் அனுராக் பாசு இயக்கியது. இது EPICசேனலில் ஒளிபரப்பப்பட்டது, மேலும் இது பார்வையாளர்களிடமிருந்தும் விமர்சகர்களிடமிருந்தும் பாராட்டுக்களைப் பெற்றது. இந்த நிகழ்ச்சி தற்போது நெட்ஃபிக்ஸ் இல் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது. அனுராக் பாசு வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து தனது தனித்துவமான தொடர்பைக் கொடுத்தார், மேலும் நடிகர்கள் தங்கள் பங்கை மிகச்சிறப்பாக நடித்து இந்த கதைகளை உயிர்ப்பிக்க வைத்தனர். கதைகளில் மிகவும் குறிப்பிடத்தக்க பகுதி என்னவென்றால், பெரும்பாலான கதைகளில் பெண் கதாபாத்திரங்கள் துன்பத்தில் இல்லை. தாகூரால் நெய்யப்பட்ட பெண் கதாபாத்திரங்கள் பெண்கள் பலவீனமானவர்களாகவும் சார்புடையவர்களாகவும் கருதப்பட்டு ஆணாதிக்க வங்காள சமுதாயத்தால் ஒடுக்குமுறைக்கு ஆளான காலங்களில் தைரியமாக இருந்தன. ரவீந்திரநாத் தாகூரின் சில கதைகளின் பட்டியல் இங்கே, பெண் கதாபாத்திரங்கள் அவற்றின் காலத்திற்கு முன்னால் இருந்தன, தங்களுக்குள் புரட்சிகரமாக இருந்தன.

1. சோகர் பாலி

சோக்கர் பாலி

ஆதாரம்: தாசா புதுப்பிப்புகள்

சோகர் பாலி என்பது ஒரு பெங்காலி சொல், அதாவது ‘கண்ணில் மணல்’ அல்லது ‘கண்ணில் உள்ள துகள் தொடர்ந்து எரிச்சலை ஏற்படுத்துகிறது’. இந்த சொல் தனிநபர்களுக்கிடையேயான உறவுகளின் சிக்கலான வலையை மிகச்சரியாக விவரிக்கிறது, குறிப்பாக இந்த வார்த்தை ஒரே மனிதனை விரும்பும் இரண்டு பெண்களுக்கு இடையிலான பொறாமையை விவரிக்கிறது. ராதிகா ஆப்டே, ஆரம்பத்தில் விதவை பெற்ற பினோதினி என்ற பெண்ணின் கதாபாத்திரத்தில் நடித்தவர், ஆஷலதாவை திருமணம் செய்து கொண்ட மகேந்திராவின் மீது கண்களைக் கொண்ட ஒரு பெண்மணியாக சித்தரிக்கப்படுகிறார். பினோடினி ஒரு விதவை, இது சமூகத்தின் ஒடுக்கப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட பிரிவாக கருதப்பட்டது. மகேந்திராவை அவளது சிற்றின்பத்தால் கவர்ந்திழுக்க முயற்சிக்கையில், அவளது பாலுணர்வை ஆராய அவளுக்கு ஒரு வெறி இருந்தது. இது காமம் மற்றும் பொறாமை ஆகியவற்றின் கலவையாக இருந்தது, ஏனென்றால் பினோடினியை கூட பார்க்காமல் திருமணம் செய்து கொள்ளும் திட்டத்தை மகேந்திர நிராகரித்தார், மேலும் அழகான ஆனால் படிக்காத பெண்ணாக இருந்த ஆஷலதாவை மணந்தார். தனது வாழ்க்கையில் எந்த விதியை எதிர்கொண்டாலும் அது மகேந்திரா மற்றும் அஷலதா தான் என்று பினோடினியின் இதயத்தில் ஆழ்ந்த மனக்கசப்பு இருந்தது, மேலும் அவர் அவருக்கு ஒரு சிறந்த போட்டி என்று அவர் நம்பினார். அவள் ஆஷலதாவுடன் நட்பு கொண்டிருந்தாள், இது மகேந்திராவை நெருங்குவதற்கான வாய்ப்பாகக் கண்டாள்.

    பினோடினியின் விதவை அவளது பாலியல் ஆசைகளை அடக்கச் செய்யவில்லை. அவர் ஒரு வாம்பாக சித்தரிக்கப்படுகிறார் என்றாலும், அவர் சூழ்நிலைகளுக்கு பலியானார் என்ற உண்மையை மறுப்பதற்கில்லை. மகிழ்ச்சியான வாழ்க்கைக்கான அவளுடைய உரிமை அவளுடைய விதியால் பறிக்கப்பட்டது. அவர் ஒரு துறவி அல்ல, ஆனால் ஒரு பெண், அதன் செயல்கள் அன்பு, காமம் மற்றும் பொறாமை ஆகியவற்றால் நகர்த்தப்பட்டன, அது அதிக உயிர்களை நாசமாக்கியது மற்றும் அவளுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை என்பதை உணராமல். பல்துறை நடிகையாக ராதிகா ஆப்தே பினோடினியின் பாத்திரத்திற்கு நியாயம் செய்தார், இது தாகூரின் கதைகளில் மிகவும் சக்திவாய்ந்த மற்றும் புத்திசாலித்தனமான கதாபாத்திரங்களில் ஒன்றாக மாறியது.

2. Maanbhanjan

Maanbhanjan

source: instagram

ஒரு அழகான மற்றும் திறமையான பெண்மணியான கிரிபாலாவைச் சுற்றி கதை சுழல்கிறது, அவர் ஒரு பணக்கார ஆனால் மோசமான நில உரிமையாளரான கோபிநாத்தை மணந்தார். அவர் மீதான காதல் இழந்து அவர் ஒரு நாடக நடிகை லத்திகாவைப் பார்க்கத் தொடங்கினார். ஒருமுறை, கிரிபாலா தனது கணவர் தன்னைப் பற்றிய அலட்சியத்தின் மூலத்தைக் காண ரகசியமாக தியேட்டருக்குச் சென்றார். லத்திகா நடித்த லைலா மஜ்னுவின் நாடகத்தைப் பார்த்த அவர், மயக்கமடைந்தார். கணவனை மீண்டும் வெல்ல நாடக நடிகையின் அழகை ஏற்றுக்கொள்ள முடிவு செய்தார். அவரது அழகு மற்றும் பல முயற்சிகள் இருந்தபோதிலும், கோபிநாத் ஒதுங்கி இருந்தார். அவன் ஒரு முறை அவளை மோசமாகத் தூக்கி லத்திகாவுடன் ஓடிவிட்டான். லத்திகா கணிசமான காலத்திற்கு தியேட்டரில் இல்லாததால், அவருக்கு பதிலாக ஒரு புதிய நடிகை வந்தார் என்ற செய்தியைக் கேட்டார். அவர் ஏமாற்றமடைந்து, அவருக்கு பதிலாக யார் என்று கண்டுபிடிக்க கோபிநாத்தை தியேட்டருக்கு அழைத்துச் செல்லுமாறு வலியுறுத்தினார். பாராட்டுக்களைப் பெற்ற புதிய நடிகை வேறு யாருமல்ல, அவரது சொந்த மனைவி கிரிபாலா அல்ல என்பதைக் கண்ட கோபிநாத், அதிர்ச்சியடைந்தார்.

    கிரிபாலா தனது கணவரை மீண்டும் கவர்ந்திழுக்க ஒரு நாடகக் கலைஞராக ஆனார் என்று சில பார்வையாளர்கள் கருதினாலும், ஒரு முறை அவர் தியேட்டரில் சேர்ந்து புகழ்பெற்ற முகமாக மாறினார் என்ற விளக்கத்தை நான் கண்டேன், அது அவளிடமிருந்து எடுக்கப்பட்ட சரியான பழிவாங்கல் வேறொரு நாடக நடிகைக்காக அவரை விட்டு வெளியேறிய கோபிநாத். கணவனால் துஷ்பிரயோகம் செய்யப்படும் ஒரு திருமணமான பெண்ணின் அவலநிலையை இந்தக் கதை காட்டுகிறது, அதே நேரத்தில் தனக்கு ஒரு பெயரை உருவாக்க தனது துக்கங்களுக்கு மேலே உயர்ந்த அதே பெண்ணின் வலிமையையும் இது காட்டுகிறது.

3. உடைந்த கூடு (நாஷ்டானீர்)

உடைக்கப்பட-நெஸ்ட்-Nashtanirh

Thanks: pinterest

ஒரு தனிமையான இல்லத்தரசி தனது திருமணத்திற்கு வெளியே உருவாகும் ஒரு உணர்ச்சி ரீதியான இணைப்பை மையமாகக் கொண்டு, கதையின் தலைப்பு சரியானது, இது ஒரு திட்டமிடப்படாத காதல் முக்கோணத்தின் காரணமாக ஒரு திருமண உறவு எவ்வாறு சிதைந்து போகிறது என்பதைக் காட்டுகிறது. செய்தித்தாள் ஆசிரியரான பூபதி தனது பணியில் மிகவும் ஈடுபாடு கொண்டிருந்தார், அவரது மனைவி சாருலதா, அழகான, திறமையான மற்றும் படித்த பெண்மணிக்கு இசையில் ஆர்வம் கொண்டவர். அவர் தனது உறவினர் அமோல் என்ற சட்ட மாணவரை அவர்களுடன் வாழ அழைக்கிறார், இதனால் அவர் சாருலதாவுக்கு நிறுவனம் கொடுக்க முடியும். அமோல், தனது நகைச்சுவையான தன்மையுடன், அவளுக்கு ஒரு சிறந்த நிறுவனமாக மாறிவிடுகிறார், அதே நேரத்தில் அவளுக்கு இசை பாடங்களையும் தருகிறார். தேவர்-பாபி இரட்டையர்கள் இசை, கவிதை மற்றும் இயற்கையின் மீது பிணைப்பைத் தொடங்கினர். படிப்படியாக, சாருலதா தனது கணவரைப் புறக்கணிக்கும்போது அமோலுக்கு ஒரு பாசத்தை வளர்த்துக் கொண்டார். அமோல் இதை உணர்ந்து, அவளிடமிருந்து தன்னை விலக்கிக் கொள்ள முடிவுசெய்து, ஒரு திருமண கூட்டணியை ஏற்றுக்கொண்டார். சாருலதா அவனை தங்குமாறு கெஞ்சினாலும் அவர் அவ்வாறு செய்யவில்லை. க்ரெஸ்ட்ஃபாலன், அவள் மீண்டும் தனிமையாகி, அமோல் வெளியேறியவுடன் இசை மற்றும் கவிதை மீதான அனைத்து ஆர்வத்தையும் இழந்தாள். தனக்கு ஒரே ஆதரவாக இருந்த மனைவி, தனது தம்பியின் எண்ணங்களில் தொலைந்து போயிருப்பதை அறிந்த பூபதி மனம் உடைந்தாள். மைசூரில் ஒரு வேலையை எடுக்க அவர் நகரத்தை விட்டு வெளியேறினார், சாருலதாவிடம் தன்னுடன் இருந்தால் மட்டுமே அவளை தன்னுடன் அழைத்துச் செல்வேன் என்று கூறி அவளது சோகத்தையும் தனிமையையும் முடிவுக்குக் கொண்டுவந்தான். அவள் உண்மையாக இருக்க முடிவுசெய்து, இந்த திருமணத்தில் எந்தவிதமான உணர்ச்சிகரமான தொடர்பும் இல்லை என்பதை அறிந்த அவனுடன் செல்ல மறுத்துவிட்டாள்.

   ஒரு வழக்கமான உலகத்தைப் பொறுத்தவரை, திருமணமான ஒரு பெண் மற்றொரு ஆணுக்கு விழுவது ஒரு முழுமையான பாவமாகத் தோன்றலாம். ஆனால் சாகுலதா கறுப்பு நிறத்தை வரைவதற்கு தாகூர் தைரியமாக இருந்தார். இந்த நிகழ்ச்சி ஒரு பெண்ணின் தனிமை, அவரது துக்கம், வாழ்க்கையின் அனைத்து சிறிய விஷயங்களிலும் அவருடன் சேர்ந்து கொள்ள வேண்டும் என்ற ஆசை, சாருலதா இழந்த அனைத்தையும் மிக அழகாக சித்தரிக்கிறது. சாருலதா கதாபாத்திரத்தில் நடிக்கும் அமிர்தா பூரி பார்வையாளர்களை தனது ஒளி வீசுவதால் மெய்மறக்கச் செய்து கதையை உணர்ச்சிவசப்பட வைக்கிறது.

4. எறும்பு அரம்பு (“சமப்தி” அடிப்படையில்)

எறும்பு aarambh சார்ந்த மீது Samapti

Courtesy: pinterest

இது இரண்டு துருவ எதிர் நபர்களுக்கு இடையிலான காதல் கதை. அபூர்பா, ஒரு பணக்கார குடும்பத்தைச் சேர்ந்தவர், படித்தவர், தனது விதவை தாயிடம் கீழ்ப்படிதல் கொண்டவர், ஒரு தாழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த டோம்பாய்ஷ் பெண்ணான மிருன்மொயீயைக் காதலிக்கிறார். ஒரு மருமகள் மற்றும் ஒரு பாரம்பரிய வீட்டில் பொருத்தமாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்திற்கு அவள் வெறுப்படைந்தாள். அபூர்பாவின் தாயும் மிருன்மொயீயை ஒப்புக் கொள்ளவில்லை, ஆனால் இறுதியாக தனது மகனின் ஒரே விருப்பத்திற்கு அடிபணிந்து, அவர்களை திருமணம் செய்து கொண்டார். மிருன்மோய் அபூர்பாவிடம் தன்னை நேசிக்கவில்லை என்று தெளிவாகக் கூறுகிறார், மேலும் ஒரு மரபுவழி குடும்பத்தின் மருமகளின் தரத்துடன் பொருந்த முயற்சித்ததில்லை. ஆனால் அபூர்பாவின் கனிவான இதயமும், அவர்மீது அவர் கொண்டிருந்த அன்பும், அவருக்காக அவளை வீழ்த்தியது, அதே நேரத்தில் அவளும் மாமியார் மீது ஒரு பாசத்தை வளர்த்துக் கொண்டாள், அவளுடைய பாசத்தை வென்றாள்.

     ஒரு ஆண் தன்னை காதலிக்க வைப்பதற்கு பெண்ணின் தன்மை, நேர்த்தியானது அல்லது கருணை போன்ற சமூக விதிமுறைகளுக்கு ஒரு பெண் பொருந்த வேண்டியதில்லை என்ற கதை ஒரு செய்தியை அனுப்புகிறது. அவள் அவளாகவே இருக்க முடியும், அவளுடைய எல்லா குறைபாடுகளையும் மீறி சரியான மனிதன் அவளை நேசிப்பான். இங்கே, திருமணத்திற்குப் பிறகு ஒரு பெண்ணின் வாழ்க்கை ஏன் கடுமையாக மாறுகிறது என்பதை மிருன்மோயியால் புரிந்து கொள்ள முடியவில்லை, அதே நேரத்தில் ஒரு பையனின் வாழ்க்கை அப்படியே உள்ளது. இந்த நிகழ்ச்சி ஒரு பெண்ணாக இருந்து ஒரு பெண்ணாக இருக்கும் பயணத்தின் பாரம்பரிய யோசனையையும், இந்த யோசனைகளுக்கு எதிராக நிற்கும் கதாநாயகன் பற்றியும் ஆராய்கிறது.

5. தண்டனை (‘சாஸ்தி’ அடிப்படையில்)தண்டனை அடிப்படையிலான மீது Shastiஆதாரம்: எழுத்தாளரின் கஷாயம்

“நான் என் மனைவியை இழந்தால் இன்னொருவரைப் பெற முடியும், ஆனால் நான் என் சகோதரனை இழந்தால் நான் எப்படி மற்றொரு சகோதரனைப் பெறுவது?” கதையில் ஒரு கதாபாத்திரத்தால் கூறப்பட்ட இந்த வரிகள் பெண்களை மனித நேயமயமாக்குவதன் வேதனையான யதார்த்தத்தை வெளிப்படுத்துகின்றன, குறிப்பாக ஒரு மனைவி மற்றும் மருமகளின். பெண்கள் வெறுமனே சமூகத்தில் மலிவான, மாற்றக்கூடிய பொருட்களாக கருதப்படுகிறார்கள். ஒரு திருமண வீடு ஒரு பெண்ணின் உண்மையான வீடாகக் கருதப்படுகிறது, ஆனால் அவள் காட்டிக் கொடுக்கப்பட்டு மாற்றக்கூடிய விஷயமாகக் கருதப்பட்டால் என்ன செய்வது? தாகூரின் ‘சாஸ்தி’யை அடிப்படையாகக் கொண்ட’ தண்டனை ‘என்பது ஒரு கதை, அங்கு மினி என்ற இளம் பெண் தனது பெற்றோர் வீட்டில் நேசிக்கப்படுகிறாள், அவளது புதிய வீட்டில் சரிசெய்ய முயற்சிக்கிறாள். அவரது மூத்த மைத்துனர் ஒரு மோசமான பெண்மணி, அவர் எப்போதும் வேலை செய்வதைக் கண்டித்தார், அதே நேரத்தில் அவரது கணவர் உபேந்திரா ஒரு அன்பான மனிதர், வீட்டில் அவரது ஒரே தனிமை. ஒரு அதிர்ஷ்டமான தேதியில், அவரது மைத்துனருக்கும் அவரது மனைவிக்கும் இடையே ஒரு சூடான வாக்குவாதம் நடந்தது, அந்த தருணத்தின் வெப்பத்தில், அவர் அவளைக் கொன்றார். காவல்துறையினர் வந்ததும், இதனால் முற்றிலும் அதிர்ச்சியடைந்த அப்பாவி மினி மீதான குற்றச்சாட்டுகளை உபேந்திரா மாற்றினார். இரண்டு பெண்களுக்கு இடையே சண்டை ஏற்பட்டதாக அவர் போலீசாரிடம் கூறினார், மினி தற்செயலாக ராதாவின் தலையில் ஒரு குவளை அடித்தார். மினி எல்லா வழிகளிலும் அமைதியாக இருந்தார். அவள் மறுக்கவில்லை. கீழ்ப்படிதலுள்ள மனைவியின் கடமையை நிறைவேற்ற வேண்டும் என்ற தந்தையின் வார்த்தைகளை அவள் நினைவில் வைத்தாள். உபேந்திரா குற்றத்தை இனி தாங்க முடியாதபோது, ​​அவர் தான் குற்றவாளி என்று திறந்த நீதிமன்றத்தில் கூறினார். தனது சகோதரனின் தியாகத்தைப் பார்த்ததும், மூத்த சகோதரர் தேவேந்திரர் கடைசியாக தனது மனைவியைக் கொன்றது என்று ஒப்புக்கொண்டார். இந்த குழப்பத்தில், மினி பின்வாங்கவில்லை, முன்பு அவர் மட்டுமே என்று கூறப்பட்டதால், அவர் நீதிமன்றத்தால் தூக்கு மேடைக்கு அனுப்பப்பட்டார்.

    வெளிப்புறமாக, மினி தனது கணவனையும் அவரது சகோதரரையும் காப்பாற்றும் ஒரு நல்ல மனைவியின் கடமையை நிறைவேற்றுவதாகத் தோன்றலாம். ஆனால் உண்மையில், அது அவளுடைய அமைதியான கிளர்ச்சி. தனது நம்பிக்கையை காட்டிக்கொடுத்து சிறைக்கு அனுப்பிய கணவருக்கு எதிரான கிளர்ச்சி. அவர் தனது தரையில் நின்று, தனது கணவரை பாரிய குற்ற உணர்ச்சி, தனிமை மற்றும் வருத்தத்தின் ஆயுள் தண்டனைக்கு அனுப்ப இறக்க தயாராக இருந்தார். தன்னை பின்னுக்குத் தள்ளிய கணவனை விட தூக்கு மேடைக்கு தன் உயிரைக் கொடுக்க அவள் தயாராக இருந்தாள். சோதனை முழுவதும் மினியின் ம silence னம் மற்றும் இறுதி வரை கதையின் மிக சக்திவாய்ந்த, இதயத்தைத் தூண்டும் பேச்சு என்பதை நிரூபித்தது.

6. டுய் பான் (இரண்டு சகோதரிகள்)டுய் பான் (இரண்டு சகோதரிகள்)ஆதாரம்: ரைட்டர்ஸ் ப்ரூ

கதாநாயகர்களின் பாலின மாற்றத்துடன் கதை தி ப்ரோக்கன் நெஸ்ட்டைப் போன்றது. இங்கே ஒரு மனிதன் தன் மனைவியின் சகோதரியை காதலிக்கிறான். கதை ஒரு பெண்ணின் இரண்டு வடிவங்களை சித்தரிக்கிறது. ஒன்று அன்பானவர் – மகிழ்ச்சியான, கட்டுப்பாடற்ற மற்றும் சுதந்திரமான, காமவெறி, மற்றும் உற்சாகம் நிறைந்தவர். மற்றொன்று தாய்மார் அன்பின் ஒரு வடிவம் – பாசம், கவனிப்பு மற்றும் பாதுகாப்பு நிறைந்தவை. ஒரு மனிதன் எப்போதுமே இந்த இரண்டு வடிவங்களையும் தனது வாழ்க்கைத் துணையில் விரும்புகிறான், ஆனால் எப்போதாவது எந்தவொரு பெண்ணும் இந்த எல்லா பண்புகளையும் பெற்றிருக்கிறாள். ஆகவே, மனிதன் தனது வாழ்க்கையில் காணாமல் போன விஷயங்களில் ஈர்க்கப்பட்டு, குழப்பத்தில் இருக்கிறான். தாய்மைப் பண்புகள் அனைத்தையும் பெற்ற மூத்த சகோதரியான ஷர்மிலாவின் கணவர் ஷஷாங்க். ஆனால் அவள் அவனுக்கு மிகவும் பாதுகாப்பானவள், மேலும் அவன் அவளை ஒரு கூண்டில் வசிப்பதைப் போல உணரவைக்கிறான், அவன் அவளை மிகவும் நேசிக்கிறான். ஷர்மிலாவின் தந்தையிடமிருந்தும் அவர் பெரும் உதவிகளைக் கொடுத்தார், எனவே அவர் அவர்களிடம் நன்றியுணர்வை உணர்ந்தார், மேலும் அவரது உணர்வுகளை அவளிடம் ஒருபோதும் திறக்க முடியவில்லை. மருந்துகள் படித்து வரும் ஷர்மிலாவின் தங்கை உர்மி, ஷர்மிளாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போகும்போது அவர்களுடன் வாழ வருகிறார். நோய்வாய்ப்பட்ட தனது மனைவிக்கு நேரமில்லை, ஒரு வேலையாள் ஷாஷாங்க், இப்போது பெரும்பாலான நேரத்தை வீட்டிலேயே செலவிட்டார். அவரும் உர்மியும் நட்பு மற்றும் வசதியான உறவுகளைப் பகிர்ந்து கொண்டனர், டென்னிஸில் பொதுவான ஆர்வம் கொண்டிருந்தனர், மேலும் பெரும்பாலும் மனம் கவர்ந்த தருணங்களை ஒன்றாகக் கழித்தனர். அவர் தனது வேலையை புறக்கணிக்கத் தொடங்கினார், இதனால் அவரது வணிகத்திற்கு இழப்பு ஏற்பட்டது, அதில் ஷர்மிளாவுக்குத் தெரிந்தது. கடனை அடைப்பதற்கும், புதிதாக வியாபாரத்தைத் தொடங்குவதற்கும் அவள் நகைகளை அடமானம் வைத்தாள், ஷாஷாங்க் அதைப் பற்றி தெரிந்து கொள்ளவில்லை என்பதை உறுதிசெய்தாள். விரைவில் சஷாங்கும் உர்மியும் ஒருவரையொருவர் காதலித்தார்கள். இந்த நெருக்கம் பற்றி ஷர்மிளாவுக்கு நன்றாகவே தெரியும், அவளுடைய உடல்நிலை மோசமடைந்து கொண்டே இருந்தது, அவளுடைய காதல் அவளிடமிருந்து விலகிச் சென்றது, ஆனாலும் அவள் கணவனின் மகிழ்ச்சிக்காக அமைதியாக இருந்தாள். தனக்கு மிகக் குறுகிய ஆயுட்காலம் இருப்பதை அவள் உணர்ந்தாள். எனவே அவள் ஷஷாங்கையும் உர்மியையும் அழைத்து எப்போதும் நிரந்தரமாக இருக்கச் சொன்னாள். இதற்கிடையில், ஷர்மிலா நகைகளை அடமானம் வைத்திருப்பது குறித்து ஷஷாங்கிற்கு தெரிய வந்தது. ஒரு குற்றப் பயணம் அவரைத் தாக்குகிறது, அவர் தனது அன்பான மற்றும் அக்கறையுள்ள மனைவியை தனது சுயநலத்திற்காக காட்டிக் கொடுத்தார் என்ற உணர்வு. அவர் திருத்தங்களைச் செய்ய முடிவுசெய்து, உர்மியுடன் பிரிந்து செல்வதாக ஷர்மிலாவிடம் கூறுகிறார், அது ஒரு தவறு என்பதால். இதற்கிடையில், அவர்கள் இருவரும் ஏற்கனவே தங்கள் இடத்தை விட்டு வெளியேறிய உர்மியிடமிருந்து ஒரு கடிதத்தைப் பெறுகிறார்கள், மேலும் படிப்புக்காக வெளிநாடு சென்று கொண்டிருந்தனர். கடிதத்தில் ஷர்மிளாவுக்கு இவ்வளவு வேதனையை ஏற்படுத்திய இந்த முறைகேடான உறவுக்கு சகோதரியிடம் மன்னிப்பு கேட்டார்.

     ஒரு ஆணின் வேறொரு பெண்ணிடம் செல்வதைத் தடுக்க, ஒரு மனைவி அவனை மகிழ்ச்சியாக வைத்திருக்க தன்னால் முடிந்ததைச் செய்ய வேண்டும் என்று அடிக்கடி கூறப்படுகிறது. கணவருக்காக ஒரு மனைவி செய்த தியாகங்களை கதை சித்தரிக்கிறது, அவர் இன்னும் திணறடிக்கப்பட்டு தனது சகோதரிக்காக விழுந்தார். இது ஒரு பெண்ணின் தைரியத்தின் கதையைச் சொல்கிறது, அவர் தனது கணவரும் அவரது சகோதரியும் அவருக்கு மிகவும் தேவைப்படும்போது நெருங்கி வருவதைக் கண்டார், இன்னும் அவரது மகிழ்ச்சிக்காக அமைதியாக இருந்தார். ஒரு பெண்ணின் விருப்ப சக்தியைப் பற்றியும் இது கூறுகிறது, அவளுடைய இணைப்பு மற்றும் வலுவான உணர்வுகள் இருந்தபோதிலும், சரியான பாதையில் செல்லவும், சட்டவிரோத உறவிலிருந்து தனது படிகளை பின்வாங்கவும் தைரியம் இருந்தது, அவளுடைய சகோதரியின் மகிழ்ச்சிக்காக.

7. மிருனால் கி சித்தி (‘ஸ்ட்ரியர் போட்ரோ’ அடிப்படையில்)ஸ்ட்ரியர் போட்ரோவை அடிப்படையாகக் கொண்ட மிருனால் கி சித்திமூல: Pinterest

கதை ஒரு அழகான, புத்திசாலித்தனமான பெண், எழுதுவதில் விருப்பம், ஒரு ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர், ஒரு பணக்கார குடும்பத்தினரால் திருமணத்திற்காக நல்ல தோற்றத்தின் அடிப்படையில் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டார். இது ஒரு பழமைவாத குடும்பமாக இருந்தது, அங்கு பெண்களின் வாழ்க்கை சமையலறையில் மட்டுமே இருந்தது. அவளுடைய இருண்ட நிறத்திற்காக எப்போதும் அவதூறாக இருந்த அவளுடைய மூத்த சகோதரி, எந்த கேள்வியும் இல்லாமல் விதிமுறைகளை ஏற்றுக்கொண்டாள். ஆனால் மிருனால் வித்தியாசமாக இருந்தார், எப்போதும் பாலியல் பற்றி கேள்வி எழுப்பினார். அவளுடைய மூத்த சகோதரியின் தூரத்து சகோதரி பிந்து, ஒரு சிறுமி அவர்களுடன் வாழ வந்தபோது, ​​எல்லோரும் அவளை ஒரு ஊதியம் பெறாத ஊழியரைப் போலவே நடத்தினார்கள், மிருனால் மட்டுமே அவள் பக்கத்தில் நின்றாள். பிந்துவின் சுமையிலிருந்து விடுபட, அவர்கள் அவளுக்காக ஒரு திருமணத்தை ஏற்பாடு செய்தனர். மிருனாலுக்கு அவளுடைய அச்சங்கள் இருந்தபோதிலும், பிந்து தனது புதிய வீட்டில் மகிழ்ச்சியாக இருப்பார் என்ற நம்பிக்கை அவளுக்கு இருந்தது. திருமணத்திற்குப் பிறகு பிந்துவின் கணவர் ஒரு பைத்தியக்காரர், அவரது குடும்பத்தினர் அவளை உடல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்தனர். மிருனால் பிந்துவை மீண்டும் அழைத்து வர முயன்றார், ஆனால் அவரது குடும்பத்தினர் அவரை எதிர்த்தனர். பூரிக்கு யாத்திரை என்ற போலிக்காரணத்தில் வீட்டை விட்டு வெளியேறி, பிந்துவை வீட்டிலிருந்து அழைத்துச் செல்ல அவள் தீர்மானிக்கிறாள். ஆனால் பிந்து தன்னை தீ வைத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார் என்ற துயரமான செய்தி அவளுக்கு கிடைத்தது. உடைந்து நொறுங்கி, அவள் தன் கணவருக்கு ஒரு கடிதம் எழுதுகிறாள், மேலும் பெண்களுக்கு மரியாதை இல்லாத தனது வீட்டிற்கு ஒருபோதும் திரும்பி வரக்கூடாது என்ற தனது தீர்மானத்தை அவனிடம் கூறுகிறாள்.

    கதை மிகவும் தொடுகின்றது மற்றும் இதயம் உடைக்கும் ஒன்று. ஒரு பெண் மட்டும் சமுதாயத்தின் ஆணாதிக்க விதிமுறைகளை சவால் செய்கிறாள், கணவனின் கட்டளைகளுக்கு அடிபணிய மறுக்கிறாள், ஒரு சிறுமி அனுபவிக்கும் அட்டூழியங்களுக்கு எதிராக போராடுகிறாள், அவளுக்கு ஆதரவாக யாரும் இல்லை. பிந்து இறந்துவிட்டார், ஆனால் அவரது மரணம் மிருனாலுக்குள் சுயமரியாதையின் தீப்பிடித்தது, அவர் இப்போது தனது குடும்பத்தை விட்டு வெளியேறி, தனது நிபந்தனைகளுக்கு ஏற்ப தனது வாழ்க்கையை வாழ தயாராக இருந்தார். வாழ்க்கையில் செய்ய வேண்டியது நிறைய இருப்பதை அவள் உணர்ந்தாள், அந்த வீட்டின் மருமகளாக இருப்பதன் மூலம் அவளால் சாதிக்க முடியவில்லை. அமிர்தா பாக்சி நடித்த மிருனாலின் கதாபாத்திரம் அப்பாவி மற்றும் அமைதியானதாகத் தோன்றுகிறது, ஆனால் குருதேவ் செதுக்கிய வலிமையான மற்றும் கடுமையான பெண் கதாநாயகர்களில் ஒருவர்.

      அந்தக் காலத்து பெண்கள் தங்கள் குரல் சமூகத்தில் கேட்கப்படுவதை உறுதிசெய்ய இன்னமும் சிரமப்பட்டுக் கொண்டிருந்தாலும், குருதேவ் எழுதிய இந்த சக்திவாய்ந்த பெண் கதாபாத்திரங்கள் கதையின் மற்ற கதாபாத்திரங்களை மறைத்துவிட்டன.