காவிரி, பாலாறு, முல்லைப் பெரியாறு மட்டுமா?

Economist

நன்றி: Rivers and conflict | Streams of blood, or streams of peace | Economist.com: “Talk of thirsty armies marching to battle is surely overdone, but violence and drought can easily go together”

  • உலக நாடுகளுக்கிடையே பாயும் நதிகளின் எண்ணிக்கை – 263
  • கடந்த ஐம்பந்தாண்டுகளில், நதிநீர் பங்கீட்டுக்காக 400 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி இருக்கிறது.
  • பெரும்பாலான நாடுகள் அமைதியாக பிரித்துக் கொண்டாலும், தண்ணீருக்காக 37 வன்சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
  • இந்த முப்பத்தேழில், 30 சண்டை இஸ்ரேலுக்கும் அண்டை நாடுகளுக்கும் நடுவில் மூண்டிருக்கிறது. ஜோர்டான் நதியின் மேற்பாகம் எவருக்கு சொந்தம்?
  • எண்ணெயும் வைரமும்தான் தற்போதைக்கு சர்வாதிகாரிகளின் விருப்பமாக உள்ளன. கோங்கோ (Congo), அங்கோலா (Angola) போன்ற கொடுங்கோல் ஆட்சிநாயகர்களுக்கு தண்ணீரைக் கடத்துவது கஷ்டமான காரியம்.
  • தமிழகப் புலவர்களுக்கு பிடித்த பாடுபொருளான சஹாரா பாலைவனத்திற்கு கூப்பிடு தூரத்தில் இருக்கும் நைல், நைஜர், வோல்டா, ஜம்பேசி எல்லாமே ஆபத்தான பகுதிகளாக ஐ.நா. அறிவித்துள்ளது.
  • Global Worldwide water relationsஆனால், உலக வங்கியை நம்பியிருக்கும் ஆப்பிரிக்க நாடுகள் போல் அல்லாமல் சீனா தன்னிச்சையாக நதிகளை தடுத்தாட்கொண்டு, அணையெழுப்பி, திசைதிருப்பி, இயற்கையை சுதந்திரமாக கட்டுப்படுத்துகின்றது.
  • ருசியாவின் ஆப் (Ob) நதியோடு இணையும் இர்திஷ் (Irtysh) நதியை நிறுத்துவதாகட்டும்; கஜக்ஸ்தானின் பல்காஷ் (Balkhash) ஏரியை நிரப்பும் இலி (Ili) நதியாகட்டும்… யாரும் தட்டிக் கேட்க முடியவில்லை. (கஜக்ஸ்தான் மக்கள்தொகை: 15 மில்./சைனா: 1300 மில்.)
  • இதே ரீதியில் உலகம் வெம்மை அடைந்து கொண்டிருந்தால் மௌரிடானியா (Mauritania), மாலி, எத்தியிப்போ போன்ற நாடுகளில் தனிநாடு கேட்டுப் போராடுபவர்களின் பிரிவினைவாதம் வலுப்பட்டு கலகம் வெடிக்கலாம். ஆப்பிரிக்காவின் மக்கள் பெருக்கமும் இந்த இனப் போராட்டத்திற்கும் நன்னீர் பற்றாக்குறைக்கும் தூபம் போட்டு சாமரம் வீசுகின்றன.
  • நேபாளத்தில் சமீபத்தில் நடந்த மாவோயிச வெற்றிக்கும், முன்னுமொரு காலத்தில் ஆப்கானிஸ்தானில் தாலிபான் வளர்ந்ததற்கும் கூட வறட்சிதான் காரணம்.

ட்விட்டரியம்

ஒருவர் சகட்டுமேனிக்கு இடுகைகளை அளித்துக் கொண்டேயிருந்தால் அவர்களை டயரீயா என்பதை நினைவூட்டும் “ட்விட்டெரியா” என்று அழைக்கின்றனர். – நுண் வலைப்பதிவுகள் :: எம்.எஸ்.என்

அதே போல் சோஷலிசம், காந்தியம், மார்க்சியம், அழகியல், கம்யூனிசம், உளவியல் என்னும் இயம், இயல் போன்ற பின்னொட்டிட்டு, ட்விட்டரியம் தோன்றுகிறது.

நீங்கள் ட்விட்ட்ரியவாதியா என்றறிய, கீழே உள்ளதில் உடன்படும் கருத்துக்களை குறியிடவும்:

  1. [ ] If i sign up, i may get hooked on and wont be able to control it (Especially with iPhone/data plan at hand)
  2. [ ] Life is pretty routine… so after some time will get repetitive answers to “What are you doing?”
  3. [ ] Not in my information diet plan
  4. [ ] Current modes (email + phone) of keeping in touch with friends works out pretty well
  5. [ ] I am known for writing very brief messages. Wanted write longer messages. Twitter make me not get out of brief messages habit.

1 – × போட்டிருந்தால் வியாதியாகும் அறிகுறி

2 – × : நீங்கள் வலைப்பதிவுக்கு லாயக்கில்லை

3 – × : பழனி மலையில் ஏறியிருக்கீங்க. கொஞ்சம் தலாய் லாமாவாகும் வழியைப் பாருங்க

4 – × : நீங்கள் வலைப்பதிய அவசியமில்லை

5 – × : கூடிய சீக்கிரம் புத்தக பேரம் பிராப்திரஸ்து.

தொடர்புள்ள முந்தைய இடுகை: நான் ஏன் எழுதுகிறேன் – தலை பத்து

Hannah Montana & Kamal: Father – Daughter photos

கமல் – சுருதிஹாசன் புகைப்படம் குறித்த விவாதம் அறியாதவர்கள் முதலில் இதை வாசிக்கவும்:
என் பார்வையில்.. – Johan-Paris: கமல் இதைத் தவிர்த்திருக்கலாம்…

இப்போது அமெரிக்காவில் புகழ் பெற்ற ஹானா மொன்டானாநாயகி மிலி சைரஸின் சமீபத்திய அப்பா-பெண் புகைப்படம்:
Kamalahasan - Daughter & Father Issues

அது குறித்த சர்ச்சை: Photo no-no controversy – BostonHerald.com

அதே பத்திரிகையில் வெளியாகிய இன்னொரு கலைப்படம்:
miley cyrus Howard Stern

பத்திரிகை பத்தியை வாசிக்க: Miley Knows Best: Entertainment & Culture: vanityfair.com: “Between sold-out concerts, multi-platinum records, and a hit TV series, Hannah Montana star Miley Cyrus has some serious business riding on her 15-year-old shoulders—not to mention paparazzi on her tail and tabloid editors praying for her to pull a Britney.”

சுருக்கமான பின்னணி:

  • ஹானா மொன்டானா‘ பார்த்திரா விட்டால், பள்ளியில் புழு போல் பார்க்கப்படுவதாக என்னுடைய எட்டு வயது மகள் பயப்படும் அளவு புகழ்பெற்ற பதின்ம வயதினருக்கான தொடர்.
  • வழக்கம் போல் இனக்கவர்ச்சி (டேட்டிங்), பாடல் ரசனை, ஆசிரியர் ரகளை என்று டிஸ்னித்தனமாக இருக்கும். அதாவது, தமிழ் கதாநாயகி பாஷையில் சொன்னால், ‘கவர்ச்சிக்கும் புணர்ச்சிக்கும் இடையே உள்ள லஷ்மண் ரேகா’வைத் தாண்டாமல் தொட்டுச் செல்லும்.
  • விஜய் தொலைக்காட்சியின் ‘நீயா… நானா‘ போலும் இல்லாமல், சன் தொலைக்காட்சியின் ஜோடிப் பெருத்தம் போலும் இல்லாமல், அதையும் தாண்டி குடும்ப அடிதடிகளை அரங்கேற்றி தற்கொலைகள், மன நல பாதிப்புகள் வரை சம்பந்தப்பட்டவரை இட்டுச் செல்லும் ருசிகரமான நிஜ நாடக நிகழ்ச்சியைத் தொகுத்தளிப்பவர் ‘ஹோவர்ட் ஸ்டெர்ன்‘ (Howard Stern).
  • “The picture disturbs me. It looks like his daughter is his girlfriend. He’s trying to be hot” என்று திருபாட்காஸ்ட் மலர்ந்தருளி இருக்கிறார்.

சிந்தனைவயப்படும் நேரம்:

  • அப்பாவையும் பொண்ணையும் ஃப்ராய்ட்தனமாக பார்ப்பது உலகளாவியது.
  • மகள் நட்சத்திரமாகி விட்டால், ஆதுரமாக புகைப்படம் எடுப்பது உகந்தது அல்ல.
  • புகழ் பெற்றவரை shadenfraude-ஆக குரலெழுப்பினால், பதிவிட சங்கதி கிடைக்கும்.

Cartoons Comics

    கலைஞர் கவிதை – பச்சைக்கிளி: தை இதழ் (தமிழ்வெளி)

    இதழை வாசிக்க: தை இதழ் மூன்று

    Kalainjar Mu Karunanidhi Tamil Kavidhai

    நன்றி: கலைஞர் மு கருணாநிதி

    Is Google biased towards Rajni? – Condemning the hijacking of Dasavatharam

    ஆஸ்க்.காம்

    Tamil Cinema Search Results by Ask.com
    சொல்லப்பட்ட பரிந்துரை: தசாவதாரம் ஸ்டோரீஸ்

    லைவ்.காம்

    Dasavatharam - Tamil Films

    சொல்லப்பட்ட பரிந்துரை:

    • தசாவதாரம் கமல் மூவி
    • தசாவதாரம் தமிழ் மூவி

    யாஹூ.காம்

    Thasavatharam in Yahoo

    சொல்லப்பட்ட பரிந்துரை: எக்கச்சக்கம்! ஆனால், ரஜினி, சிவாஜி இல்லை

    கூகிள்.காம்

    Dasavatharam - Kamalahassan

    கூகிளின் பச்சை துரோகத்தை, தசாவதாரம் தேடுபவர்களை ‘சிவாஜி‘க்கு திசை திருப்புவதை கண்டிக்கிறேன்.

    அது எப்படி! கூகிள் மட்டும் கமலைத் தேடினா ரஜினி வரணும் என்று சரியா யோசிக்குது?!

    ஆனால்… ‘சிவாஜி‘ என்று தேடினால், தசாவதாரம் வராமல், கமல் முதுகில் குத்தியுள்ளதை கண்டிக்கிறேன். இனி தன்மான கமல் ரசிகர் எவரும் கூகுளை நாடக்கூடாது என்று பெட்டிசன் போட்டால், கையெழுத்து இடுவேன் என்று வாக்குறுதியும் கொடுக்கிறேன்.

    குறிப்பிட்ட ‘சிவாஜி’ தேடல் முடிவுகள்:

    Rajnikantha Movie - Sivaji The Boss by Shankar

    ஒரு கார்ட்டூன் & ஒரு கவர்ச்சிப் படம்

    Dinamani Mathy

    Sun TV Tamil Ramayanam

    Bhajji – Sreesanth row: How to market sports to Men?

    ஆணுக்கு என்ன பிடிக்கும்? ஆக்ரோஷமான குத்துச்சண்டை பிடிக்கும். குத்துச்சண்டை விளையாட்டா என்பது விவாதத்துக்குரிய விஷயம். ஆனால், விளையாட்டில் போட்டி மட்டும் பார்வையாளனுக்கு போதாது.

    போர்முனைக்கு செல்லும் பயம், கத்தி கிழித்த ரத்தம், கொலைவெறி பகைமை எல்லாம் இருக்க வேண்டும். அப்பொழுது கிடைக்கும் மாமிசத் துண்டுகளில் கேளிக்கைத்தனம் பூர்த்தியடையும்.

    அமெரிக்காவில் இதை கொள்கையாகவே வைத்திருக்கிறார்கள். நியு யார்க் யாங்கீஸுக்கும் பாஸ்டன் ரெட் சாக்ஸுக்கும் ஆகவே ஆகாது.

    நியூ யார்க் தோற்க வேண்டும் என்பதற்காக ‘செய்வினை’ வைப்பார்கள். பாஸ்டன் பேஸ்பால் வீரரின் சட்டையை விளையாட்டு அரங்கத்துக்குள் புதைத்து வைப்பார்கள். சென்ற வருடம் யாங்க்கீஸ் தோற்றதற்கு காரணம் தேடுபவர்கள் அந்த ‘மந்திரித்த டி-சர்ட்’டை தோண்டி கண்டுபிடித்து வழக்கு தொடுக்கும் நாடகம் எல்லாம் நடக்கும்.

    (கடைசியாக அந்த சட்டை $175,100 டாலருக்கு நன்கொடை அமைப்புக்காக ஏலத்தில் விலை போனது நல்ல விசயம்).

    இன்று பாஸ்டனுக்கு விளையாடும் வீரர், நாளை நடக்கும் ஏல பேரத்தில் நியூ யார்க்கிற்கு செல்வது சகஜமாக நிகழ்ந்தேறினாலும், இதே மாதிரி அண்டை நகரங்களுக்குள் தீராப்பகை இருப்பது போல் பாவ்லா காட்டி ரசிகர்களை முறுக்கேற்றுவார்கள்.

    கபில் தேவுக்கு அழத் தெரியவில்லை என்றால், ஹர்பஜன் சிங்குக்கு அறையத் தெரியவில்லை.

    இணையத்தில் பதினாலு தடவை ஃபார்வர்ட் மடலாக படித்த நகைச்சுவையை சொல்லும் ‘அசத்த/கலக்கப் போவது யாரு‘ நபருக்கு ‘டைமிங்’ முக்கியம். இந்த மாதிரி உணர்ச்சிகரமான உச்சகட்டத்திற்கும் ‘டைமிங்’ அதி முக்கியம்.

    ஸ்ரீசாந்த் பவுன்சர் போட்டவுடன் ‘திமிரு’ தருண் கோபி எழுதிய இலக்கியத்தரமான டயலாக் ஆன ‘டேஏஏஏஏய்ய்ய்ய்ய்ய்ய்’ என்று கோபமாக அறைந்தால், அதற்கு பெயர் டைமிங். தொலைக்காட்சிகளும் நேரடியாக ஒளிபரப்பும்.

    செய்தி:

    மொஹாலி போட்டி முடிந்ததும் வரிசையாக பஞ்சாப் அணி வீரர்கள் ஒவ்வொருவரிடமும் கைகொடுத்து வாழ்த்து தெரிவித்து வந்துள்ளார் ஹர்பஜன் சிங். 3-வது வீரராக ஸ்ரீசாந்த் நின்றுள்ளார். அவரிடம் கைகொடுப்பதற்குப் பதிலாக ஓங்கி அறைந்துள்ளார். ஹர்பஜனைத் தொடர்ந்து வந்துகொண்டி ருந்த அணியின் பயிற்சியாளர் லால்சந்த் ராஜ்புத், அதைக் கண்டு கொள் ளாமல் மற்ற வீரர்களிடம் கைகொடுப்பதில் கவனம் செலுத்தி யுள்ளார்.

    மும்பை அணியின் பயிற்சியாளர் லால்சந்த் ராஜ்புத்துக்கு, போட்டிக்கான சம்பளத்தில் 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஹர்பஜன் சிங்கை தடுக்கத் தவறியதால் அவருக்குத் இந்தத் தண்டனை.

    நேற்றைய கூடைப்பந்தாட்ட நிகழ்ச்சியில் கூட கைகலப்பு அரங்கேறியது. ஒரு தலை பட்சமாக பாஸ்டன் செல்டிக்ஸ்‘ அணியே வென்று கொண்டிருக்க ஆட்டத்தை விறுவிறுப்பாக்க என்.பி.ஏ. (நேஷனல் பாஸ்கெட்பால் அஸோசியேஷன்) நினைத்தது.

    முதலில் நடுவர்கள் பாரபட்சமாக செயல்பட்டனர். எதிரணியின் அராஜகமான செயல்களுக்கு விசிலடித்து குற்றங்கண்டு பிடிக்க வேண்டிய தருணங்களில் கண்டுங்காணாமல் விட்டுக் கொடுத்தும், ‘மாமியார் கை பட்டா குத்தம்’ என்பது போல் பாஸ்டன் லேசாக எதிரணியினர் மேல் உரசினாலும், ‘ஃபவுல்’ என்று ஊக்கப்படுத்தி, பார்வையாளர்களை உசுப்பேத்தினர்.

    ‘அதாவது நாலு பேருக்கு நல்லதுன்னா’ என்பது போல் நாற்பது பார்வையாளர்களுக்கு கோபம் பொங்கி வர வேண்டும். வந்தது.

    அடுத்தது, சண்டக்கோழியாக வளர்த்துவிடப்பட்டிருக்கும் ஒருவர் மேல் ‘Foul’ முழங்கியவுடன், ‘அவன்தான் தவறு செய்தான்’ என்பது அப்பட்டமாக தெரிகிறதே என்று சிலுப்பிக் கொண்டு எழ ஆட்டம் சூடு பிடித்தது.

    இதைத்தான் லால்சந்த் ராஜ்புத் + ஹர்பஜன் சிங் + ச்ரீசாந்த் (& நடுவர்(கள்)) செய்யத்தவறி விட்டனர்.

    ஆட்டம் ஆரம்பத்தில் ‘முக அழகிரி + தயாநிதி மாறன்’ மாதிரி நட்போடு உரசவேண்டும். நடுவே கருத்துக்கணிப்பு மாதிரி பொறி பறக்க வேண்டும். கடைசியில் அப்பாவியாக மூன்று பேரைப் போட்டுத் தள்ளிவிட்டு நாடகத்தை முழுமையாக்க வேண்டும்.

    இதற்காகத்தான் நடிகர்களை கிரிக்கெட் அணிகளின் தூதுவர்களாக நியமிப்பது வசதிப்படும். பெங்களூர் அணிக்கு த்ரிஷாவை தூதுவராக ஆக்கியிருந்தால் ‘சபாஷ்! சரியானப் போட்டி’ என்று எல்லாரும் உற்சாகமடைந்திருப்பார்கள்.

    நிஜ களவீரர்களுக்கு பதில் ‘த்ரிஷா – நயந்தாரா இடையே சௌரிப்பிடி சண்டை’ என்று காண கண்கோடி வேண்டும் காட்சிக்காக முந்தின நாளே நுழைவதற்கு க்யூ வரிசையில் காத்திருப்பார்கள்.

    ஆனால், ஹர்பஜன்/ஸ்ரீசாந்த் என்று நாடகத்தனமாக, கொல்கத்தாவின் ஷாரூக் கானுக்கும் மும்பை அம்பானிக்கும் வாள் சண்டை என்றால் எவர் நம்புவார்கள்?

    தொடர்புள்ள நகைச்சுவைகள்

    ஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்ச பட்சி சாத்திரம்

    முதலில் வந்த பட்சிக்காக:

    K.N. Rao‘s introduction to the book “Biorhythms of Natal Moon – Panchapakshi Shastram”

    http://groups.yahoo.com/group/JyotishGroup/message/5080
    http://groups.yahoo.com/group/JyotishGroup/message/5081
    http://groups.yahoo.com/group/JyotishGroup/message/5082
    http://groups.yahoo.com/group/JyotishGroup/message/5083
    http://groups.yahoo.com/group/JyotishGroup/message/5084
    http://groups.yahoo.com/group/JyotishGroup/message/5085
    http://groups.yahoo.com/group/JyotishGroup/message/5086
    http://groups.yahoo.com/group/JyotishGroup/message/5087

    சூக்குமம் நமசிவய என்னும் ஐந்தெழுத்தில் உள்ளது.

    இவ்வாறே, மானுட இனத்தையும் பிறந்த நட்சேத்திரங்களை அடிப்படையாக வைத்து ஐந்து பிரிவுகளாகப்
    பிரித்தனர். ஒவ்வொரு பிரிவையும் அடையாளம்காண ஒரு பறவையின் பெயரைக்கொடுத்தனர். அந்த
    நட்சேத்திரத்தில் பிறந்தவனுக்குண்டான குணநலன்களைக் கணக்கில் கொண்டு, அதேவகை குணநலன்களையுடைய பறவையைத் தெரிவுசெய்தனர். அவைகள்:

    1. வல்லூறு,
    2. ஆந்தை,
    3. காகம்,
    4. கோழி,
    5. மயில்

    பறவைகள் உருவகமே.

    பறவை அரசாளும் என்றால் அப்பறவை அரசனாகவியலாது. இவ்வைந்து பறவைகளும் பகலில் ஐந்துசெயல்களையும் இரவில் ஐந்துசெயல்களையும் செய்யும். ஆனால், செயல்கள் ஐந்துதான்.

    வளர்பிறைக்கும், தேய்பிறைக்கும் தொழில்கள் மாறும். அவையாவன:

    1. உண்ணும்,
    2. நடக்கும்,
    3. தூங்கும்,
    4. அரசாளும்,
    5. இறக்கும்.

    இதை,

    1. ஊண்,
    2. நடை,
    3. நித்திரை,
    4. அரசு,
    5. மரித்தல்

    என்பர்.

    இப்பஞ்சபட்சி சாற்றிறத்தில்,

    • திதிப் பிரிவு,
    • அட்சரப் புணர்ச்சி,
    • பட்சிப் புணர்ச்சி,
    • அட்டயோனிப் பொருத்தம்,
    • எழுத்தலங்காரப் பொருத்தம்,
    • நாமயோனிப் பொருத்தம்,
    • வெற்றி தோல்விநிலை,
    • அருக்கனிலை,
    • பட்சியின் வலிமை,
    • படுபட்சிகள்(இறக்கும் பட்சிகள்),
    • பட்சிகளின் செயல்கள்,
    • பட்சி பாகம்

    இவ்வாறு பலவற்றை இச்சாற்றிறம் இயம்புகிறது.

    அகத்தியரின் பஞ்ச பட்சி சாற்றிறம்

    காப்பு

    1. உன்னியொருவன் உரைத்த முதலெழுத்தைப்
    பன்னிப் பறவையாய்ப் பாவித்து – வன்னி
    உதைய திசைப்பட்சி யுண்மை யுரைக்கக்
    கதை காவியப் பொருலே காப்பு.

    2. துய்யமலருறையுந் தோகா யுன தைம்பொற்
    செய்யமலர்ப் பாதஞ் சேவித்தேன் – வையத்
    தைந்து வகைப்பட்சி யமையுங் குணமென்றன்
    சிந்தை தனினிற்கவே செய்.

    3. ஒன்று திசைக்குருவி யொன்றிவரு மோர்தூதன்
    நின்றநிலை யாருடத்தில் நேருமே – நன்று
    வழுவா துரைதாயும் வல்லவர்கள் சொன்ன
    முழுவா கடத்தின் முறை.


    முதலதிகாரம்.

    1. மொழிக்கு முதலெழுத்தே முன்னுதிக்கு மாமதனைப்
    பழித்தவலன் றன்னிலையும் பார்த்து – வழிபெறவே
    பேரால் வருவனவும் பேதமறிந் துணர்ந்து
    ஆராய்ந்து சொல்வ தறி.

    2. அகரமே வல்லூறு ஆந்தை இகரமதாம்
    உகரங் கருங்காக முன்னிப் – பகரில்
    எகரமது கோழி யெஞ்ஞான்று மஞ்ஞை
    ஒகார முயர் மெய்யாந் துரை.

    3. ஊணடையரசு நித்திரை மரணம் உயிர்பகலிரவினிலுண்டு
    நீணிலத்தரசு செய்துபின் சென்று நெறியுடனடந்து மேயுறங்கும்
    பூணுறும்மர பக்க நற்பகலூண் பொன்றியுந் துயின்றரசாகிக்
    சேணுறு நடையுண் டுறங்கியே சென்றுஞ் செத்தர சாளுநல்லிரவே.

    ஐந்து பட்சிகளும் ஐந்து செய்கைகளை மாறிமாறிச் செய்கின்றன. அவைகளின் முறை:
    பூர்வபக்கம்:
    பகல்: ஊண், நடை, அரசு, நித்திரை, மரணம்.
    இரவு: ஊண், அரசு, மரணம், நடை, நித்திரை.
    அமரபக்கம்:
    பகல்: ஊண், மரணம், நித்திரை, அரசு, நடை.
    இரவு: ஊண், நித்திரை, நடை, மரணம், அரசு.

    4. ஒன்றேகா லொன்ரறையீ ரொன்று முக்காலரையும்
    நன்றாக விவ்வாறு நாழிகையுங் – குன்றாத
    வளர்பிறைக்குந் தேய்பிறைக்கும் வாலாய மாஞ்சூட்ச
    வளமுரைத்தார் முன்னோர் வகுத்து.
    (இச் சாற்றிறம் அகத்தியர் காலத்திற்கு முன்னமேயே வளர்ந்து வாழ்ந்திருத்தல் வேண்டும்)

    5. மறித்து மொருவகையால் வண்கடிகை யாறுந்
    தெறித்ததொரு சூக்குமத்தைச் சேரக் – குறித்திடுங்கா
    லுண்டு நடந்தாண் டுறங்கி யிறந்திடுமே
    வண்டனைய கண்ணாய் மதி.

    6. உண்பானுக் கொன்றேகா லொன்றரையிற் றானடக்க
    கண்பார்த் தரசிரண்டிற் காண்போமே – பண்பாகத்
    தூங்குவது முக்காலாய்த் துஞ்சுவது தானரையாய்ப்
    பாங்குடைய பட்சி பலன்.

    7. வினவின் முதற்றி தியாறும் பதினொன்று நத்தை
    மேலிரண்டேழ் பன்னிரண்டும் விளங்கும் பத்திரையா
    மினியதொரு மூன்றெட்டும் பதிமூன்றுஞ் சயையா
    மிருத்தை யென்பா னாந்கிலுட நவமி பதினான்கை
    புனைகுழலாய்ப் பஞ்சமியும் பத்துமுவரத் தரமும்
    பூரணை மென் மறியலவன் கோன் மகரஞ் சரமாந்
    தனிவிடை தேள் குடஞ்சிங்கம் நிலைராசி சாகுந்
    தனுமிதுனங் கன்னியுமீ னுபய மெனத்தகுமே.

    8. ஊர்கோணத்தைக் கதிர்செவ்வாய் அகரமோங் கும்பத்திரையாம்
    தேர்கோளருணன் மதி இகரஞ் சயையும்பொன்னும் உகரமதாம்
    வேர்கோளிருத்தைப் புகர் எகரம் வெய்யசனிபூரணை ஒகரம்
    ஏர்கோளிடையாய் பகற்கடிகை யிவ்வாறிவையூண் சொன்னோமே.

    9. சொன்னவகரம் வல்லூறூண் துய்ய இகரமாந்தையிணூண்
    முன்னை உகரங் கொடியூணா மொழியிலெகரங் கோழியிணூண்
    பன்னுமெகர மஞ்ஞையிணூண் பண்டையடையவே பறவைகளொண்
    றுண்ணுமிரண்டு நடைமுடி மூன்றுறக்க நான்குசாவைந்தே.

    10.சாய்ந்த அகரங்ககரமுடன் சகரந்தகரந் தந்நகரம்
    வாய்ந்தபகர மகரமுடன் வகரமிவை யெட்டெழுத்தாகும்
    ஆய்ந்தபருந்து முதல் யோனியிரு நான்கினுக்குமடைவாக
    வேய்ந்த பொருத்தம் வெற்றியுடனிதனாற் பறவையியம்பிடுமே.

    பகுதி 4

    31. வல்லூறு முண்ண மாமயிலுந் தானரசாய்ப்
    பொல்லாத கொழியது போயிறக்க – நல்லாய்க்கேள்
    காரண்டந் தானடக்கக் கண்டுயிலு மேயாந்தை
    சீரண்ட மாலுண்டு சேர்.

    32. ஆந்தை யமுதுண்ணும் வல்லூறரசு செயுஞ்
    சாந்த மயிலதுவுஞ் செத்துவிழும் – ஏந்திழையீர்
    கோழியது நடக்குங் கொம்பார்ந்த காகமது
    வீழும் விழிதுயின்று மேல்.

    33. திங்கட் சனிமயிலாஞ் சேயருக்கன் கோழியதாம்
    பொங்கு புதன்காகம் போசனமா – மங்கையே
    அந்தணனுக் காந்தை யணிபுகர்க்கும் வல்லூறு
    சந்தமும் பிற் பகற்கே சாற்று.

    34. கூறிடுந் திங்களாந்தை குலவுசேய் வல்லூறு
    மீறிய வருக்கன் காகம் வெள்ளியும் – புதனுமஞ்ஞை
    யேறியசனி வியாழங் கோழியா மியம்புங்காலை
    யாறுபத்தாகுங் கன்ன லதிற் சாகும மரபக்கம்.

    35. உண்டுடனே செத்து முறங்கிய ரசாண்டும்
    விண்டு நடக்கும் விழிமடவீ – ரன்றிரவில்
    உண்டு முறங்கு முடனே நடத்திறக்குங்
    கண்டரசனாகு மெனக் காண்.

    36. வரியார் மயிலுண்ண மாலாகு மாந்தை
    திரியாதோ தேசமெலாஞ் சென்று – பெரிய
    வாரணமே மண்ணாள வல்லூறு தானுறங்கக்
    காரணத்தாற் காக்கை சாங் காண்.

    37. கண்டாந்தை யுண்ணக் கருங்கோழி தானடக்க
    வண்டாயுண் வல்லூறு மன்னவனாய் – விண்ட
    விழிமூடுமே காகம் வீணாக மஞ்ஞை
    பழிதேட வேயிறக்கும் பார்.

    38. சொற்கோழி யுண்ணத் தொடர்ந்தேகும் வல்லூறு
    நற்காக நன்றாக நாடாளும் – பொற்காவின்
    மண்ணின் மயிலுறங்க மாலாந்தையே மரணம்
    எண் ணுமறிவா லெடு.

    39. வந்த பிற் பக்கத்தில் வல்லூறு முண்ணவே
    முந்து கருங்காக முடனேகும் – அந்தமயி
    லாளுமே பூமியது வாந்தையே கண்டுயிலு
    மாளுமே கோழியதே வந்து.

    40. தண்காக முண்ணத் தனிமயிலுந் தானடக்க
    மண்காவ லாந்தையது வந்தாளப் – பெண்கொடியே
    கோழியுறங்கக் குல வலியானே சாக
    வாழி புதனுக் கெனவே வை.

    பகுதி 5

    41.மந்தன் சோமன் கோழியிணூண் மானேவெள்ளி மயிலுண்ணும்
    புந்தியாந்தைப் போசனமாம் பொன்னிற்காக மிரையருந்தும்
    சிந்தைமகிழச் சேயிரவி தினத்தேவல்லூ றமுதுசெயும்
    அந்தித்தோன்றும் பிற்பக்கத்தடைவே சொன்னோமறி நன்றே.

    42.வாரணம் பொன்னேகாரி மயில்புகர் புதனேமிக்கச்
    சீரணிகாகம் வெய்யோன் சிறந்தமாமுனி யாந்திங்கள்
    பேரணிவலியன் செவ்வாய்ப் பிற்பக்கத் திரவிற்றங்கும்
    ஏரணி குழலாயென்று மிடமறிந்தியம் புவாயே.

    43.சேவல் புசிக்கத் திரியுமே யாந்தையது
    மாவிற் புவியாளு மாமயிலுங் – கூவி
    யுறங்குமே காக்கையுடனி றக்குமே வலியன்
    கறங்கு மேகக் கலையாய் காண்.

    44.அல்லின் மயிலுண்ண வார்ந்து நடக்குங்காகம்
    வல்லம் புவியாளும் வாரணமு – மில்லுறங்கு
    மாந்தையது சாகுமன்ன நடைக் கன்னன்மொழி
    யேந்திழையா யென்னே இடர்.

    45.வகுத்த மினியுண்ண மஞ்ஞையது நடக்கச்
    செகத்திற் கொடியரசு செய்யவே – நகைத்துத்
    தூங்குமே வல்லூறு துஞ்சுமே செஞ்சேவல்
    மாங்குயிலே யென்னா மதி.

    46.செப்பக் காரண்டந்தான் றின்னநடக்கும் வலியான்
    தப்பிலாக்கோழி தரையாளும் – ஒப்பிலா
    மாலாந்தை கண்டுயிலும் வாழ்மயிலுஞ் சாவாகும்
    சேலார்விழி மடவீர் செப்பு.

    47.வல்லூறினிதுண்ண வார்கோழியே நடக்க
    நல்லாந்தை வந்திருந்து நாடாளப் – பொல்லாத்
    தூக்கமுறு மயிலாஞ் சொல்ல விழுங்காகத்
    தாக்கமலைப் பொடியாந் தான்.

    48.போசனமாகில் பதிவாழும் போனார்மீள்வார் போங்கவலை
    காசினிவாழுமீ மழைபொழியுங் களவுமில்லைக் கதிர்விளையும்
    பேசிற்கன்னிப் பேறாகும் பிணியுந்தீரும் பெண்பெறுவள்
    வாசிசெழும் பொன்வாணிபமாம் மன்னரைவெல்வாய் மாங்குயிலே.

    49.யாத்திரையாகில்லை நிலைகுலையு மொன்னார் வெல்வரிருநீதிபோங்
    காத்திரமில்லாக் கதிர்விளையுங் கன்னியர்வாழ்க்கை நன்றாகா
    மாத்திரள்செல்லும் பொருள் கூடாவேட்கை தவழ்ந்துமணங்கூடா
    சூத்திரஞ் சொன்னபடியாலே சொன்னார்பெரியோர் சுரிகுழலே.

    50.அரசேசெய்யிற் புவிப்பேராம் அரசராலே பலனெய்து
    முரசுமதிரும் வரிசையுடன்மூண்ட கருமந்தான் விலகும்
    பரிசும்பெரியோர் திறலிடுவர் பழையபிணி போம்பயமில்லை
    புரைபோங் களவுந்தான் காணும்போக்குமில்லை புரிகுழலே.

    பகுதி 6

    51. தூங்குமாகில் நோய்மாறா தூரம்போனார் தாம்மீளார்
    ஆங்கேகரும நன்றாகா வரிவைவாழ்க்கைத் தாழ்வாகுந்
    தீங்கேயல்லால் மழைபொழியாச் செந்நெல்விளையாச் செய்குறியீர்
    ஓங்கிமணமுந் தாராதே யுண்மையாக வுரைத்தோமே.

    52. துஞ்சுமாகிற் சாவுசொலுந் துலையாப்பிணியுந் தானெய்தும்
    நெஞ்சினினைந்த பொருள்கூடா நிதியுங்காணார் நிலைகுலைவார்
    வஞ்சநோயுமிக வுண்டாமனையாள் வெறுக்கிலு றவாகாள்
    கஞ்சமலரார் குழலாளே கருத்தாயுரைத்த படியறியே.

    53. கெடுதிய்முட நேகாணார் கிளையுடன் வாழ்வுபேறாம்
    கடுகிய பிணியுந்தீருங் கலக்கமோ சற்றுமில்லை
    அடைமழை பெருகவுண்டா மகமேற நிற்குந்தன்மை
    முடுகிய பயணமில்லை மொழிந்தபின் நுண்ணுங்காலை.

    54. வெற்றியுஞ்சுகமு முண்டாம் வியாதியும் மாற்றும்பின்பு
    பற்றியகருமந் தானும் பயமில்லையக முந்தாழார்
    உற்றதோர் கெடுதி காணாருறு மழையுண்டுதூரத்
    துற்றவர் வரவுங்கூடச் சொல்லும் பின்னடக்கத்தோன்றில.

    55. ஜெயமொடு சுகமுமுண்டு சிறந்ததோர் பயணந்தன்னில்
    புயலிடுமழையு மற்பம் புவிதனிற் கலக்கமில்லை
    இயம்பினாற் பெறலாம்வெற்றி யிலாபமும் நீடுமாகும்
    பயம்விளையாது நாளும் அரசதாம் பறவையாகில்.

    56. உன்னிடிற் பிணியுமல்லா லொருபிணி யதிகமாகும்
    மண்ணில்மழையே யில்லை வையத்தில் கெடுதிகாணும்
    துன்னிய நெஞ்சிற்றோடந் தோன்றிடுங் கருமஞ்செய்யும்
    பன்னியே யுதிக்கும் பட்சிபயனுட னுறங்குமாகில்.

    57. காவினிற் பயமுமுண்டு கலகமாங் கருமமெல்லாம்
    தீவினைபடு மற்றன்றிச் செய்யுநல் வினைகளாகாச்
    சாவினில் விழுந்த பட்சி தனித்து வந்துதிப்பதாலே
    பூவினிற்சிறந்த மாதே புகன்றனர் பள்ளினூலே.

    58. ஓதுகிலோ மாபட்சி யன்றுண்ணு மொன்றுயிர்போம்
    ஏதுமிலா வொன்றையிலேகுமே – நீதிபுனை
    நன்றி யுடநொன்றறையி நாடறியத் தானுறங்கும்
    ஒன்று முதலாள் வதுலகு.

    59. போசனத்தில் மூத்தோனும் போய்நடக்கி லிளையோனும்
    ஆசனத்தி னெடியோனு மாயவனை – மாசற்றுத்
    தூங்குமவன் குள்ளன் றுஞ்சிடுமே யாமாகில்
    அங்கி ருவரோ ராண்டறி.

    60. உண்கின்றான்பால நுயர்நடை யானே குமரன்
    பண்பாமரசனே பாராள்வான் நண்பு பெறு
    முற்றுந்துயில் கிழவன் மோனமுடிந்தோன் சாவோன்
    பற்றுந் தவத்தின் பலன்.

    பகுதி 7
    61. ஊணினிலுயர்ந்தோன் வெல்வனுயர் நடைக்குள்ளன் வெல்வன்
    காணுறு வெகுரோமத்தன் கடுகராச்சியத்தில் வெல்வன்
    தானருந் தூக்கந்தன்னி ளிருவருள் வலுத்தோன் வெல்வன்
    வேணுமோர் மரணந்தன்னுளிருவருள் வலுத்தோன் வெல்வன்.

    62. ஊணில் நடைவலிது நடையி லரசுறுதி
    நாணியுறங்கிடவு நன்றாகப் – பேணி
    விலகுகுழலாளே யிறப்பும் பொல்லாதென்
    றுலகு புகழவுரை.

    63. உண்பா னடப்பானை வெல்வ னடப்பானுந்
    தன்பாலரசனையுந் தானழிப்பான் – மன்காத்
    திருப்பான் றுயில்வானை வெல்லத் துயில்வோன்
    மரிம்மானை வெல்வன் மதி.

    64. நல்லூணாகிற் கிழவன்வெல்வ நடையேயாகிலிளவல் வெல்வான்
    செல்லத்தூக்கமாமரசிற் சிறந்தோன் மிகவும் வென்றிடுவான்
    எல்லாமரசேயாமாகி லிளையோன் வெல்வா னென்நாளும்
    பொல்லாச் சாவேயாமாகிற் போனாரிருவர் மீளாரே.

    65. உரைத்திடு மிருவர்பேரு மொரு பக்ஷ¢யுண்ணுமாகில்
    நரைத்திடுமவனே வெல்வனடையினி னெடியோன் வெல்வன்
    கருத்தரசிளை யோன்வெல்வன் கருங்குட்டன் துயிலில்வெல்வன்
    மரித்திடச் சரியாமென்றே மாதவருரைத்தார் மாதே.

    66. உண்பான டப்பானை யோட்டு மிருவர்களும்
    பண்பாம் பதியைப் பரிந்தோட்டும் – பெண்பாவாய்
    துஞ்சினோர்க் கஞ்சுந் துயில்வோனை யாவருமே
    யஞ்சலென் றழைத்திடு வாராம்.

    67. வல்லூறு பொன்னிறமாம் வாழாந்தை வெள்ளியதாம்
    செல்லாருங் காகஞ் சிவப்ப்பாகு – நல்லாய்கேள்
    கோழியுறு பச்சை குளிர்ந்தமயில் கறுப்பாம்
    நாழி மணக்க நவில்.

    68. ஆந்தை சிவப்பாம் அணிகாகம் பொன்னிறமாம்
    வாய்த்த பச்சை வண்ணமயிலாகும் – ஏந்திழையீர்
    வெள்ளையாங்கோழி விளங்கு வரிகறுப்பு
    வல்லூறாக் கொண்டு மதி.

    69. வல்லூறு பார்ப்பான் வளராந்தை தான்வணிகன்
    செல்லாருங் காகஞ் செகத்தரசன் – நல்லாய்க்கேள்
    கோழியாம் வேளாளன் கூறுமயில் சண்டாளன்
    ஆழியா நூலாய்ந் தறி.

    70. பொன்மறையோனும் வலியான் பேராந்தை வேந்தனும்
    துன்னுமொழிகாகந் துலை வணிகன் – மன்னும்
    உழுகுலத்தோன் கோழியே யோதுங்காண் மஞ்ஞை
    இழிகுலத்தோ னென்றே யிசை.

    பகுதி 9

    81. வல்லூறு பாலை வளராந்தை வண்குறிஞ்சி
    நல்லாருங்காக நடுமருதம் – மெல்லியரே
    வாரணமே முல்லை வளருமயி னெய்தல்
    ஆரணத்தோர் சொல்லா லறி.

    82. வல்லூறு வண்மை வளர்காக நீர்க்காலாம்
    நல்ல திறலாந்தையது நாற்காலாம் – சொல்லக்
    குறுங்கோழி கொம்பாங் குலவு மயில் பட்சி
    பெறுங்கா ணிவையாய்ந்து பேசு.

    83. வல்லூறு பொன்னாம் வளராந்தை வெள்ளியதாம்
    நெல்லார்ய்ங்காக நிறஞ் செம்பாம் – பொல்லாத
    கோழியது வெண்கலமாங் கோலமயிலி ரும்பாம்
    வாழி மடவார் வகை.

    84. வல்லூறு வருகின்றான் மாமறையோன் தூரவந்தான்
    நெல்லிக் கருங்காக நிற்கின்றான் – மெல்லியரே
    கோழியே மீண்டான் குலவு மயிலுமரை
    நாழிகையிலே வருவா னாடு.

    85. மன்னவன் வல்லூறாகின் மனிதர்கைப் புகுந்ததென்க
    வெண்ணிய வாந்தையாகி லொண்டொடியெடுத்தாளென்க
    உண்ணிடுங்காகமாகி லொருவனே கொண்டா னென்க
    வண்ணமார்கோழி யாணும் பூமியின்மயில்தான் பெண்ணே.

    86. வல்லூறுகாக மயின் மூன்று மாணாகும்
    நல்லதிரவுகோ லுஞ்சொன்னோம் – பொல்லாத
    ஆந்தை பொற்கோழி பெண்ணாகுமிதேதோழி
    செர்ந்தறிந்து சொல்லுந் திறம்.

    87. உரைகிழக்கு வல்லூறு உயிராந்தை தெற்காம்
    விரையங் கருங்காக மேற்காம் – புரைதீரக்
    கொத்தியிரை விழுங்குங் கோழி வடக்காகு
    மத்திபத்தி னிற்கு மயில்.

    88. பச்சைமயில் மேற்காம் பாரில் வடக்காந்தையா
    மிக்ககிழக்காகும் வல்லூறு – மெச்சு நல்ல
    தெற்காகும் காகமது தேனார்விழி மடவாய்
    பொற்கோழி மத்திபமாம் போற்று.

    89. மத்திபத்தில் வல்லூறு வாழாந்தை தெற்காகும்
    உற்றநிதி கிழக்கேயொண் காகம் – சற்றிடமே
    தெற்காகுங் கோழி சிறந்தமயின் மேற்காகும்
    எக்காலுஞ் சாற்றுதற்கா மீடு.

    90. காணு மகாரப் பேரானுடைய கண்டமுதல்
    காணுஞ் சிரசாந்தை கைகாகம் – பேணிக்
    கோழியுடம்பு மயில் முன்பின்னாகும் வலியான்
    தாழுமிரு சரணந்தான் இஉஎஒஅ

    பாஸ்டனில் தசாவதாரம்

    ஜூன் ரெண்டாந்தேதி வருதாம்.

    அதுவரை, வாலியின் இந்தப் பாடலை உல்டா செஞ்சுண்டிருங்க… நமச்சிவாய வாழ்க!

    ஓம் நமோ நாராயணாய

    கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது
    கடவுள் மட்டும் கண்டால் கல்லடி தெரியாது

    எட்டில் ஐந்து எண் கழியும் என்றும்
    ஐந்தில் எட்டு எண் அறியாது

    அஷ்ட அட்சரம் ஏற்கும் நெஞ்சு
    பஞ்ச அட்சரம் பார்க்காது

    ஊனக் கண்ணில் பார்த்தால் யாவும் குற்றம்தான்
    ஞானக் கண்ணில் பார்த்தால் யாரும் சுற்றம்தான்

    (கல்லை மட்டும் கண்டால்)

    இல்லை என்று சொன்ன பின்பும் இன்றியமையாது
    தொல்லை தந்தபோதும் எங்கள் தில்லை மாறாது

    வீரசைவர்கள் முன்னால் எங்கள் வீர வைணவம் தோற்காது
    மன்னன் சொல்லுக்கு அஞ்சி என்றும் மேற்கே சூரியன் உதிக்காது

    இராஜலஷ்மி ராஜ நாயகன் ஸ்ரீனிவாசன்தான்
    ஸ்ரீனிவாசன் சேர் சேய் இந்த விஷ்ணுதாசன்தான்
    நாட்டில் உண்டு ஆயிரம் ராஜராஜன்தான்
    ராஜனுக்கு ராஜன் இந்த ரங்கராஜன்தான்

    (கல்லை மட்டும் கண்டால்)

    நீருக்குள்ளே மூழ்கினாலும் நீதி சாகாது
    நெஞ்சுக்குள்ளே வாழும் எங்கள் ஜோதி சாகாது

    வீசும் காற்று வந்து விளக்கை அணைக்கும்
    வெண்ணிலாவை அது அணைத்திடுமா?

    கொட்டும் வான்மழை நிலம் நனைக்கும்
    அந்த வானம் தன்னை அது நனைத்திடுமா?

    சைவம் என்று பார்த்தால தெய்வம் தெரியாது
    தெய்வம் என்று பார்த்தால் சமயம் கிடையாது

    Kuruvi in Boston

    இந்த சனிக்கிழமை இரண்டு காட்சிகள்: நாலு மணி; ஏழரை மணி.

    சுலேகாவில் மீத விவரங்கள்.