டாவின்சி கோடும் தசாவதாரமும்: கமல் படத்துக்கு தடை கோரி புதிய வழக்கு

கமலும் கேயெஸ் ரவிக்குமாரும் எடுப்பதெல்லாம் அசல் என்று நம்புவது போல் இந்தப் பதிவும் சொந்த சரக்கு என்று ஏமாறுபவர்களுக்கான உரிமைதுறப்பு: இது உண்மை செய்தி அல்ல!

Tamil Movies on Spotசென்னை, மே. 20: நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் தசாவதாரம்படம் வெளியிட தடை செய்யக் கோரி இன்ட்டர்போலில் புகார் செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக காவல்துறை இயக்குநர் நாஞ்சில் குமரனிடம், ‘டாவின்சி கோட்‘ எழுதிய டான் ப்ரௌன் கொடுத்துள்ள புகார் விவரம்:

அமெரிக்காவின் நியூ ஹாம்ஷைரை சேர்ந்தவர் டேன் ப்ரவுன். இவர் ‘ஏஞ்சல்ஸ் அண்ட் டீமன்ஸ்‘ என்ற கதையை முதலில் சுட்டு எழுதினார். அதன் பின் ‘தி டாவின்சி கோட்‘ புத்தகம் எழுதினார். இந்தப் புத்தகத்தை பெருமளவில் விற்க இயேசு கிறிஸ்துதான் சரியானவர் என்று நினைத்து அவரை பயன்படுத்தியுள்ளார்.

அப்பொழுது அதைப் வாங்கியவர்களும், கதையைப் படித்துவிட்டு, தங்களது அபிலாஷைகளுக்கு ஏற்ப விமர்சனங்கள் எழுதியுள்ளனர். (வாசிக்க: Thinnai: “டாவின்சி கோட்… டான் பிரவுன்… பாரதி! – ஜடாயு“)

இதற்கிடையில், ஒரு நாள் கமல் தொலைபேசியில் டேன் பிரவுனை அலுவலகத்துக்கு அழைத்துள்ளார். தனக்கு முகப்பூச்சு போட வட அமெரிக்காவில் இருந்து வருபவர்களைப் போல் பிரௌனும், கே எஸ் ரவிகுமாருக்கு உதவி இயக்குநராக நியமிக்கும்படி கமல் கூறினாராம்.

Kamal in dasavatahramஜூன் ஆறாம் தேதி, ‘தசாவதாரம்’ படம் வெளியாகிறது. ‘என்னுடைய கதையில் இயேசுவின் வழித்தோன்றல்கள் என்றேன். அதை வைத்து உலகெங்கும் சுற்றிச் செல்லும் கதையை அமைத்தேன். இங்கே இயேசுவே காணோம் என்பது போல் ஈரைப் பேனாக்கி, பேனை பேயாக்கி, பேயைப் பெருமாளாக்கி மூழ்கடித்து வளர்த்திருக்கிறார்கள்! ‘, என்று கேஎஸ் ரவிக்குமாரிடம் விளக்கம் கேட்டுள்ளார் பிரௌன்.

எனவே, திருமலை வாழும் வெங்கடேசர், அமெரிக்கா வாழும் பிரவுன் ஆகிய இரு தரப்பையும் அழைத்து பேசி நியாயம் வழங்க வேண்டும். அதுவரை ‘தசாவதாரம்’ படம் எடுப்பதைத் தடை செய்ய வேண்டும் என்று புகாரில் தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலளித்த கே எஸ் ரவிகுமார், ‘கமல் வேண்டுமானால் ஆங்கிலப் படங்களை எடுத்துக் கையாள்வதை வழமையாகக் கொண்டிருக்கலாம். நான் என்னுடைய படங்களில் இருந்துதான் மறுபதிப்பை உருவாக்குகிறேன்’ என்று சுருக்கமாக முடித்துக் கொண்டார்.

வழக்கு நடக்கும்போது கருத்து எதுவும் தெரிவிக்க கமல் மறுத்துவிட்டாலும், ‘என்னுடைய படத்தில் தொப்புளும் தொடையும் தென்பட்டாலும் தெற்கத்திய தொன்மைகளுக்கு ஏற்ப ‘யூ’ முத்திரை வழங்கியுள்ளது தணிக்கை குழு. ஆனால், ஆட்ரேயின் அக்குள் கூட காட்டாத ஆங்கிலப் படத்துக்கு ‘ஏ’ கொடுத்தார்கள் சென்சார். இதை சுட்டிக் காட்டி, இரு படத்துக்கும் உள்ள வித்தியாசத்தை உணர்த்த விரும்புகிறேன். மேலும் அந்தப் படத்தில் துப்பு துலக்கி கண்டுபிடிப்பார்கள். அப்படிப்பட்டKamal and asin in Dasavatharam எந்தவிதமான புதிர் சமாச்சாரமும் இங்கே கிடைக்காது!’ என்று சுருக்கமாக முடித்துக் கொண்டார்.


சைவம் x வைணவம்? – இராமானுசர் வழக்கு தொடுக்க முடியுமா?
கமலின் தசாவதாரம் – குழந்தைகளுக்காக இராமானுஜர் கதை: பாட்காஸ்ட்

கே எஸ் ரவிகுமார் :: ‘புரியாத புதிர்‘ எங்கிருந்து சுடப்பட்டது ஆராய்ச்சி:
Balaji’s Thots: Shyamalan and K.S.Ravikumar

ஒவ்வொரு படத்துக்கு ஒரு விதி:
Religion & Spirituality : Upcoming Competitive Intolerance Events [varnam]

டாவின்சி கோட் திரைப்படம் தமிழ்நாட்டில் வெளியாக திமுக அரசு தடை விதித்தது: பதிவுகள் Kamalahassan in Dasavatharam - Tamil Movie Reviews, Story Previews
1. Thinnai: “டாவின்சி கோட்டினை முன் வைத்து – 1 :: K. ரவி ஸ்ரீநிவாஸ்

2. தேன் » Blog Archive » சிறில் அலெக்ஸ்: “என்ன’டா’ வின்சி கோட்?”

தொடர்புள்ள புனைவுகள்:
1. கருத்துக்களம் (இந்து மதம்/இராமன்): “தி இராவணன் கோட்’ (The Ravana Code) – சிறுகதை”

2. தமிழோவியம் சிறுகதை (புதிர்கள்): “தாத்தாச்சாரியார் கோட் – என். சொக்கன்

சினிமா விமர்சனங்கள்:
முகமூடி: டாவின்சி கோட் – புதிரா புனிதமா?

புத்தக அனுபவம்:
1. படித்ததில், பார்த்ததில் ரசித்தது உணர்ந்தது – செந்தில் குமரன்: “டாவின்சி கோட் – இயேசு கிறிஸ்து திருமணமானவர் என்ற நாவல்”

2. அபுல் கலாம் ஆசாத் :: எண்ணம்: டாவின்சி கோடு – THE DA VINCI CODEKamal in Dasavatharam - daVinci Code spoof

பத்திரிகை அலசல்:
ஜீனியர் விகடன், விகடன்.காம் :: தி டாவின்சி கோடு திரைப்படமும் அரசியலும்: கிழுமத்தூர் எக்ஸ்பிரஸ்

மதம்:
நேசகுமார் :: செக்சும் கடவுளும் சாத்தானும்

அசல் செய்திகள் (100% நிஜ நிகழ்வுகள்):
1. Did Kamal & Murali cheat Assistant Director Senthilkumar: Dasavatharam « Tamil News: “நடிகர் கமல் நடிக்கும் “தசாவதாரம்’ படத்துக்கு தடை கோரி போலீஸில் மனு”

2. ‘Dasavatharam movie story is stolen from me’ – Su Senthilkumar gets stay order « Tamil News: “கமல்ஹாசன் நடிக்கும் `தசாவதாரம்’ படத்தை வெளியிட 4 வாரங்களுக்கு தடை: ஐகோர்ட்டு உத்தரவு”

ரசிகர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் தடியடி: கமலும் ஆஸ்கார் ரவியும் பதிலடி

நன்றி: Kamal and Oscar Ravi reply to Journalists – Scans | Kollywood Today

கமலின் கடிதம்:

Fans, scribes cane-charged at Chennai movie function

Kamal\'s reply for Chennai Audio release event mishaps

Letter from Oscar Films:

காஸெட், ஒலிப்பேழை, வட்டு வெளியீடு - விழா சர்ச்சைகள்

அமெரிக்காவில் இனவெறியா – ஒபாமா செய்திகள்

மேற்கு வர்ஜினியாவில் தேர்தல் நடந்து முடிந்தது. அது தொடர்பான விழியம்:

நன்றி: Obama Faces Racism in West Virginia Video – Metacafe

வெஸ்ட் வெர்ஜீனியாவில் எதிர்பார்த்தவாறே ஹில்லரி எளிதில் வென்றார். ஆனால், ஹில்லரி க்ளின்டனை விரும்பும் வெள்ளையின வாக்காளர்களைக் கவர்வதற்காக ஜான் எட்வர்ட்ஸை தன் பக்கம் இழுத்துள்ளார் பராக் ஒபாமா. லத்தீனோ வாக்கு தேவைப்படும் காலம் கடந்தபின் கிடைத்த ரிச்சர்ட்ஸன் ஆதரவு மாதிரி பாட்டாளி வர்க்க வோட்டுகள் தேவைப்படும் நேரம் கழிந்தபின்னே ஆற அமர தன்னுடைய சார்பை ஒப்புக்கு சப்பாணியாக ஜான் எட்வர்ட்ஸ் வெளிப்படுத்தி இருக்கிறார்.

கிட்டத்தட்ட ஹில்லரி க்ளின்டனின் ஆதர்ச ஆதரவாளர்கள் தவிர பெரும்பாலானவர்கள் பராக் ஒபாமாவிற்கு மாறியபிறகு கிடைத்திருக்கும் எட்வர்ட்சின் ஆதரவினால் அடுத்து வரும் கென்டக்கியில் ஹில்லரியின் வெற்றிவாய்ப்பு பாதிக்கப்படலாம்.

மேற்கு வர்ஜீனியா, கென்டக்கி போன்ற இவையெல்லாம் ஜனநாயகக் கட்சி நிச்சயம் தோற்றுவிடக் கூடிய இடங்கள் என்பதால் அதிக முக்கியத்துவம் தர வேண்டியதில்லை. எனினும், இந்த மாகாணங்களின் பிரதிநிதிகளைப் பெறுவதற்கான போட்டியாக இவை மாறியுள்ளதால், இந்தத் தேர்தல்களும் கவனிப்பைப் பெறுகின்றன.

முக்கிய கட்சிகளான ஜனநாயகக் கட்சிக்கும் குடியரசுக் கட்சிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவப்போகும் மாநிலங்கள்: Election Guide 2008 – Presidential Election – Politics – Electoral Map – The New York Times: “Here are what the Obama and McCain campaigns now consider the true battleground states going into the fall campaign, assuming — as both candidates now do — that Barack Obama is likely to win his party’s nomination. In addition to these states, both sides have states that they say (or rather hope) will come into play in the months ahead — think New Jersey for Republicans and Georgia for Democrats — but for the time being, this is where the action is going to be.”

தொடர்புள்ள அலசல் பத்தி Trailhead : Hard-Working White American Endorses Obama: “Edwards is still influential. Just look at the 7 percent of the vote he picked up in West Virginia—impressive for someone who dropped out more than three months ago. If Edwards supporters in Kentucky take his cue and vote for Obama…”

கமலின் பத்து திருநாமங்கள் – தசாவதார கதாபத்திரங்கள்

Dasavatharam Posters Bannersகே எஸ் ரவிக்குமாரின் தசாவதாரம் திரைப்படத்தில் கமலஹாஸன் தோன்றும் வேடங்களின் பெயர்கள்: (முந்தைய இடுகை: Dasavatharam « Tamil News)

  1. இரங்கராஜ நம்பி
  2. கோவிந்த் இராமசாமி
  3. அவ்தார் சிங்
  4. பல்ராம் நாயுடு
  5. Audio wrappers Initial Gossipsக்ரிஸ்டியன் ப்ளிட்சர்
  6. ஷிங்கென் நரஹாஜி
  7. ஜார்ஜ் புஷ்
  8. வின்சென்ட் பொவராகன்
  9. கிருஷ்ணவேணி பாட்டி
  10. கலிபுல்லா கான்

ஆத்திச்சூடி எழுதுவது எளிதா?

கேள்விக்கு விடை: ‘சுருட்டுக மக்கள் பணம்‘ என்னும் வெண்பா ஈற்றடி போல் எல்லா எழுத்துக்கும் எழுதுவது கஷ்டம்தான்!

கலைஞரின் ஆத்திச்சூடி

அண்ணா வழி நில்!
ஆற்றுக பொதுப்பணி!
இலக்கியம் புதுக்கிடு!
ஈனரை ஒதுக்கிடு!
உயிர் தமிழாம் உணர்ந்திடு!
ஊழலை நொறுக்கிடு!
எட்டப்பர் இகழ்ந்திடு!
ஏறுபோல் வீறு கொள்!
ஐயம் கலைந்து அறிவைப் பயிர்செய்!
ஒழுக்கம் போற்றிடு!
ஓம்புக மெலியோரை!
ஒளவைக் குலம் போற்று!

கழகம் வில்லாம், நின் அணியே கணையாம்!
சாதியை விடுத்து சமத்துவம் முழக்கு!
ஞாயிறு வாழ்த்தி நாளும் உழைத்திடு!
தனியுடைமை தகர்ந்திட தடந்தோள் தட்டு!
நாடு வாழ்ந்திட நலிவு தீர்த்திடு!
பகைவர்க்கு வளையேல்!
மாயைக்கு மயங்கேல்!
வாய்மையே போர்வாள்!
யானை போல் பயன்படு!
“ழ” கரமாய்ச் சிறப்புறு!

நன்றி: கலைஞரின் புதிய ஆத்திச்சூடி « கிழுமத்தூர் எக்ஸ்பிரஸ் | கலைஞரின் ஆத்திச்சூடி – முத்தமிழ்


1. அஞ்சாதே திரைப்படத்தில் இடம்பெற்ற பாரதியாரின் ஆத்திச்சூடி

2. சிறில் அலெக்சின் தேன் » e-த்திச் சூடி

3. ஞகரம் – என். சொக்கன்: “‘ஔவை வழியில், பாரதி நெறியில் சிற்பி வரைந்த ஆத்திச்சூடி'”

4. பார்வையாளனாக…: நவீன ஆத்திச்சூடி: “அகமது சுபைர்

5. Tamil | Literatue | Poem | Michael | Tamil: “இளைய ஆத்திச்சூடி! – தொ. சூசைமிக்கேல்

6. அசல்: ஒளவையார் – ஆத்திசூடி, Auvayar ‘s Athisoodi

7. கொசுறு: கொன்றைவேந்தன்


பாரதிதாசன் ஆத்திச்சூடி – Andhimazhai – Web Address of Tamils

1. அனைவரும் உறவினர்
2. ஆட்சியைப் பொதுமைசெய்
3. இசைமொழி மேலதே
4. ஈதல் இன்பம்
5. உடைமை பொதுவே
6. ஊன்றுளம் ஊறும்
7. எழுது புதிய நூல்
8. ஏடு பெருக்கு
9. ஐந்தொழிற்கு இறை நீ
10. ஒற்றுமை அமைதி
11. ஓவியம் பயில்
12. ஔவியம் பெருநோய்
13. கல்லார் நலிவர்
14. காற்றினைத் தூய்மைசெய்
15. கிழிப்பொறி பெருக்கு
16. கீழ்மகன் உயர்வெனும்
17. குள்ள நினைவுதீர்
18. கூன்நடை பயிலேல்
19. கெடு நினைவு அகற்று
20. கேட்டு விடையிறு
21. கைம்மை அகற்று
22. கொடுத்தோன் பறித்தோன்
23. கோனாட்சி வீழ்த்து
24. சதுர்பிறர்க்கு உழைத்தல்
25. சாதல் இறுதி
26. சிறார் நலம்தேடு
27. சீர்பெறல் செயலால்
28. சுவைஉணர் திறங்கொள்
29. சூழ்நிலை நோக்கு
30. செல்வம் நுண்ணறிவாம்
31. சேய்மை மாற்று
32. சைகையோடு ஆடல் சேர்
33. சொற்பெருக்கு ஆற்றல் கொள்
34. சோர்வு நீக்கு
35. தளையினைக் களைந்து வாழ்
36. தாழ்வு அடிமை நிலை
37. திருஎனல் உழுபயன்
38. தீங்கனி வகைவிளை
39. துன்பம் இன்பத்தின் வேர்
40. தூய நீராடு
41. தெருவெல்லாம் மரம் வளர்
42. தேன்எனப் பாடு
43. தைக்க இனிது உரை
44. தொன்மை மாற்று
45. தோல்வி ஊக்கம்தரும்
46. நடுங்கல் அறியாமை
47. நால்வகைப் பிறவிபொய்
48. நினைவினில் தெளிவுகொள்
49. நீணிலம் உன் இல்லம்
50. நுண்ணிதின் உண்மை தேர்
51. நூலும் புளுகும்
52. நெடுவான் உலவு
53. நேர்பயில் ஆழ்கடல்
54. நைந்தார்க்கு உதவிசெய்
55. நொடிதோÚம் புதுமைசேர்
56. நோய் தீயொழுக்கம்
57. பல்கலை நிறுவு
58. பார்ப்பு பொதுப்பகை
59. பிஞ்சு பழாது
60. பீடு தன்மானம்
61. புதுச்சுவை உணவுகாண்
62. பூப்பின் மணங்கொள்
63. பெண்ணோடு ஆண்நிகர்
64. பேயிலை மதலால்
65. பைந்தமிழ் முதல்மொழி
66. பொழுதென இரவுகாண்
67. போர்த்தொழில் பழகு
68. மறைஎனல் சூழ்ச்சி
69. மாறுவது இயற்கை
70. மிதியடியோடு நட
71. மீச்செலவு தவிர்
72. முகச்சரக்காய் வாழ்
73. மூப்பினுக்கு இடம்கொடேல்
74. மெய்கழிவு அயற்கின்னா
75. மேலை உன்பெயர் பொறி
76. மையம் பாய்தல் தீர்
77. மொடுமாற்றுப் பொது இன்னா
78. மோத்தலில் கூர்மை கொள்
79. வறுமை ஏமாப்பு
80. வாழாட்கு வாழ்வு சேர்
81. விடுதலை உயிக்குயிர்
82. வீடு எனல் சாதல்
83. வெறும் பேச்சு பேசேல்
84. வேளையோடு ஆர உண்
85. வையம் வாழ வாழ்


ட்விட்டரில் கவர்ந்தவை

ட்விட்டரில் நான் தொடரும் சிலரின் கால நீரோட்டத்தில் என்னைக் கவர்ந்த சமீபத்திய சில வாசகங்கள், தருணங்கள்…

  • ரவி: While a history of millenium can be written in one wikipedia page, it’s irony v read / watch daily news for hours 😦
  • சங்கர் கணேஷ்: “To the world, you might be one person. But, to one person you might be the world” @iheartquotes
  • போட்டோமாட்: well we’re 20ish full-time and only 2.5 years old. what’s the breaking point – # of people? money raised? market success?
  • நாராயண்: கல்யாணங்கறது பப்ளிக் டாய்லெட் மாதிரி. உள்ளே இருக்கறவன் எப்படா வெளிய போவோம்னு இருப்பான். வெளிய இருப்பவன் எப்படா உள்ள போவோம்னு இருப்பான்.
  • கிருபா: SavitaBhabhi.com is easily the desibaba of the toon world.
  • பிரிஜ் சிங்: Playing with Scribd apis. Grand plan = email your doc, let your friends view/comment (NOT OPEN) on those docs.
  • அருட்பெருங்கோ: நேத்து ‘க்ராந்தி’ தெலுங்கு படம் பார்த்தேன். முடியல! 😦 இதுக்கு ‘பருகு’ வே ரெண்டாவது தடவை பாத்திருக்கலாம்!
  • ஆர்கே: “The difference between life and the movies is that a script has to make sense, and life doesn’t.” – Joseph L Mankiewicz
  • ரவிகிரண் ராவ்: If the cafeteria food stays this bad, I will seriously consider quitting my job.
  • பவளராஜா: ‘பிரியாணி’ய பத்தி தொல்காப்பியத்துல குறிப்பு இருக்குதாம்.. ஊண்சோறு’ன்னு.. நிசமா??
  • பாட்ரிக்ஸ்: Perpetrator of a race attack in College Station last month caught. White male. Why mention the race of the culpirt? More later.
  • விஜய்: Serial Bomb blast in Jaipur.வழக்கம் போல் ஒரு ‘உச்’.அதற்கு என்ன செய்யமுடியும்? என் மேம்போக்கான கொடிய மனமே!நீ இல்லாமலே நான் பிறந்திருக்கலாம்.
  • sidin: I don’t care if sound hoity toity. I want Suchi NOW!
    (தொடர்ச்சி) Ahem. I meant I want Sushi now.
  • விக்கி: Read Es.Ra’sஉறுபசி while returning frm native.Characters r stereotypic, storyline not much impresive.But can read it once 4 xcelnt narration
  • அக்கிராஜு: Why can we never OWN a domain name? Why is it always leased for a particular amount of time?
  • சாய் ராம்: செய்ய வேண்டியவை லிஸ்ட் அடுத்த ஜென்மத்திற்கும் நீளும் போலிருக்கிறது. பேசாமல் எல்லாவற்றையும் அழித்து விட்டால்?
  • காயத்ரி: I have new found respect for my mother. Standing in the kitchen in this weather is no joke! yabbba..
  • அப்பண்டை: Work fascinates me – I can look at it for hours!
  • ஜான்: Thanks for the birthday wishes, everyone! My age is nicely divisible by 2, 3, 4, 6, 8, and 12! Going to be a squared number next year.
  • சிறில் அலெக்ஸ்: The Special Effect I meant is different. It’s said crab meat is poor man’s Viagara. Hope you didn’t have such incidents 🙂 (in reply to bsubra)
  • நித்யாஸ்: Reading Hari Kunzru’s book ‘Transmission”. Interesting novel about a computer geek from India.
  • பிரகாஷ்: dosai +milagapodi+white chutney+ghee = short cut route to heaven
  • பரத்: Shocked to hear that my friend’s roomie died in a car accident yesterday in Pennsylvania.He got engaged recently.totally 6 indians died.
  • அனிதா போரா: observation: girls in singapore are way too thin. i have yet to figure out the magic recipe for this wide spread phenomenon.
  • மோகன்தாஸ்: இன்னிக்கு யார் முகத்தில் முழித்தேன். நானும் அக்காவும் தான் வீட்டில், அக்கா நான் எழுவதுக்கு முன் ஆபிஸ் போய்டுவாங்க. அப்ப யாராயிருக்கும்???
  • சாகேத் வைத்யா: Saying that Java is nice because it works on all OS’s is like saying that anal sex is nice because it works on all genders (bash.org)
  • ஸ்ரீநிதி ஹண்டே: Bought mangoes at 49 a kilo-reminds me of childhood days when we used to eat dozens of them 4 free grown in our own garden
  • பிரபு ஃபெராரி: Chat is impersonal. Voice call is not. Thanks Chenthil 🙂
  • நான்: What is the difference between a blogger and a bond? A bond matures and makes money. (adapted from Chuck Leavell)
  • சந்திரசூடன்: yup. writing them all down. used to be blog. now twitter
  • லேஸிகீக்: the twitter politics just sucks
  • ஜேக்: new hobby: sneaking up on people in twitter, did you forget it’s all indexed? thx @tweetscan
  • எலிசபெத் சக்: one the one hand, anthropologist robin dunbar says the human brain can handle about 150 friendships. on the other hand, twitter.
  • ஸ்டீவ் ரூபல்: Even better. Using Friendfeed you can create your own custom Twitter search engine – like Google Coop – of just your pals.

DMK – Second Year: Ads & achievements – Viduthalai

நன்றி: விடுதலை

Viduthalai News paper

Madurai Alagiri Prominent Feature

Insurance, Medical Schemes, Heath care, Hospitals

படிக்காத மேதை – புத்தக வாசமில்லாத விமர்சகர்

கரிசலில் சாலைகள், சதியாலோசனைகள் என்று சன்னாசி பதிவெழுதியிருக்கிறார்.

மேற்கோளாகக் கொஞ்சமே கொஞ்சம்:

அசலில் எனது இணையான சாலை எனக்கு சரியாக இருபத்துமூன்று கிலோமீட்டர்களுக்கு அப்பால் இருக்கிறது. அதனுடன் ஒருகாலத்தில் இணைந்திருக்கலாமென்று நினைத்தேன், அதனுடன் எனது ஒரு கரம் இணைந்திருக்கலாம் – எனக்குப் பல கரங்கள். எனது கரத்தைக் கொண்டுதான் நான் பெருகுவது – உதாரணமாய் ஒரு ஊரின் வெளிப்புறத்தை எனது கரம் அணையும், அணையும் என் கரத்தின்மேல் குழந்தைகள் துள்ளிக் குதித்துக் குதியாளமிட்டு என்னைத் தங்களாக்க முயல்வர் தமது குழந்தைமையால். ஆஹா அற்புதம், ஆஹா அற்புதம், குழந்தைகள் குதியாளமிடும்போது எனக்குள்ளிருக்கும் ஜல்லிகள் குதித்து அவற்றுடன் இணைந்து ஆனந்திக்க முயல்வதில்லை, எங்களுக்கு அவை தரும் எரிச்சலில் சூரியக் கதிர்களை உள்வாங்கி செருப்புகளைத் தாண்டிக் குழந்தைகளின் பாதங்களை எரிக்க முயல்கிறோம், அதுதான் எங்கள் நியதி என்பதில்லை, அதுதான் எங்கள் விழைவு – எங்களது இடம் எங்களுக்கு என்பது எங்களால் வகுத்துக்கொள்ளப்பட்ட ஒன்று. இருந்துகொண்டேயிருப்பதன் தேய்மானத்துக்குப் பங்களிக்கும் பாதங்களுக்கு எங்களால் செய்யக்கூடிய சிறு உபகாரமென்பது அதுவே.

இப்பொழுது இதற்கு விமர்சனம் எழுதவேண்டும் என்று உங்களைப் பணித்தால் எப்படி ஆரம்பிப்பீர்கள்?

முதலில் விமர்சனம் எப்படி இருக்க வேண்டும் என்று தீர்மானிக்கலாம்.

‘பால்சாக்’கின் Lost Illusions நாவலின் நாயகனிடம் அவன் நண்பன் சொல்வதை வேதமாக வைத்துக் கொள்ளவும்:

ஒரு நாவலைக் கூட தவறவிடாமல் படித்துவிடுவாள் என்னுடைய காதலி. என்னிடம் விமர்சனத்திற்காக வரும் புத்தகத்தை அவளிடம் கொடுப்பேன். ‘நாவல் ரொம்ப போர்’ என்று அவள் சொன்னால்தான், நான் படிப்பேன். முடிந்தவரைக்கும் அதைப் பாராட்டி விமர்சனம் எழுதுவேன்.

அடுத்ததாக அடிக்கடி சொல்லப்படும் வாசகம் “the author is dead”. இதை நம்ப வேண்டாம் என்பதை ஆய்வு முடிவுகளும் உறுதியாக்கியுள்ளன. ஜெயமோகன் என்றால் வாசிக்கமாட்டேன் என்பது போன்ற சமகால நிகழ்வுகளும் இந்தக் கோணத்தை முற்றிலும் நிராகரிக்க வைக்கிறது.

ஐஸ்க்ரீமுக்கு சாக்லேட் சாஸ் ஊற்றுகிறோமா அல்லது ஸ்ட்ராபெர்ரி ரசம் தெளிக்கிறோமா என்பதைப் பொறுத்து சுவை மாறும். ஆசிரியர் பெயர் என்ன வந்திருக்கிறது என்பதைப் பொறுத்து விமர்சனம் வேறுபடும் என்பதற்கு டேவிட் லாட்ஜின் ‘Changing Places: A Tale of Two Campuses‘ நூலை துணைக்கழைக்கலாம்.

வகுப்பறையின் முதல் நாளில் ஆசிரியரால் அறிமுகமாக்கப்படும் ஒரு விளையாட்டு:

  • நீங்க இதுவரைக்கும் வாசிக்காத புத்தகத்தை நினைச்சுக்குங்க…
  • நெனச்சாச்சா?
  • இப்ப வகுப்பில் யாரெல்லாம் அந்தப் புத்தகத்தைப் படிச்சிருக்காங்களே, உங்களுக்கு ஒரு மதிப்பெண்

இதுதான் விளையாட்டு. வெட்கப்படவைத்து ‘அது கூட வாசிக்காதவரா!?’ என்று மற்றவரிடம் நெளிந்து குழையவைக்கும் ஆட்டம். இந்திய நடுத்தர வர்க்கம் மாதிரி ‘முதல் ரேங்க் வாங்கணும்!’ என்று துடிப்பவர்களுக்கு தர்மசங்கடப்படவைக்கும் ஆட்டம்.

முதலிடம் பெற வேண்டுமானால், தன்னுடைய அறியாமையை போட்டுடைக்க வேண்டும். ‘காந்தியின் சுயசரிதை‘யை நான் படித்ததில்லை என்று சொன்னால், நிச்சயம் மற்றவர்கள் ‘நான் வாசித்திருக்கிறேன்‘ என்று சொல்லப் போவதால், நிறைய மதிப்பெண் அள்ளலாம். ஆனால், ‘காந்தியக் கூட படிச்சதில்லையா‘ என்னும் ஏளனம் வந்தே தீரும்!

தமிழர்களிடம் மற்றவர்கள் நிச்சயம் பார்த்திருக்கக் கூடிய, ஆனால் தான் பார்த்திராத திரைப்படம் என்று போட்டி வைத்து வாசிப்பு போதாமையை வெளிக்காட்டாமல் அடக்கி வாசிக்கலாம்.

டயலாக் விருமாண்டி நேரம்: படிக்கலன்னு சொல்லிடறவன் வீரன்; படிக்காதவனப் படிக்க வக்கிறவன் மனுசன்!

இதில் எந்த நிலை எடுக்கிறீர்கள் என்பதைப் பொறுத்து, குறிப்பிடப்பட்ட புத்தகம் அல்லது ஆசிரியர் எவ்வளவு தூரம் புகழடைந்திருக்கிறார் என்பதை புறங்கையால் தள்ளக்கூடியவரா என்பதையும் பொறுத்து — இலக்கியத்தரமாக இருக்கிறதா அல்லது வெகுசனத்தரமாக இருக்கிறதா என்றெல்லாம் விமர்சனம் கிழிக்கலாம்.

கடைசியாக எழுதியதை வாசித்திருக்க வேண்டுமா என்பதற்கு உம்பர்ட்டோ ஈக்கோவின் ‘The Name of the Rose‘ பயன்படும்.

வாடிகனுக்குள் மிக மிகப் பெரிய நூலகம் இருக்கிறது. ஏதாவது தேவை என்றால் மனுப் போட்டு, ஐந்தாண்டுகள் காத்திருந்து, ஐம்பது கிலோமீட்டர் எட்டி நின்று வாங்கிக் கொண்டு போகலாம். அந்த மாதிரி ஓரிடத்தில் கதை நடக்கிறது. வடக்கு இத்தாலி. மர்மமான முறையில் சாவு. பினங்கள் குவிகிறது. யார் கொன்றார்கள் என்பதைக் கண்டறிய வேண்டும்.

டேன் பிரௌனின் ஏஞ்சல்ஸ் & டீமன்ஸ் ராஜேஷ்குமார் வகையறா என்றால், இது பின் நவீனத்துவ உம்பர்ட்டோ இகோ வகையறா.

எதற்காக எல்லாம் கொல்லப்படுகிறார்கள்? இரகசியமாகப் பாதுகாக்கப்படும் புத்தகத்தை கண்டடைந்தவர்கள் எல்லாருமே இறந்திருக்கிறார்கள். எப்படி இறந்தார்கள் என்பதும் மர்மம். ஆனால், நூலைத் தொட்டவர்கள் பரமபதம் அடைந்து விட்டார்கள்.

நாவலின் இறுதிக் காட்சியில் ஹீரோவுக்கும் நம்பியார் போன்ற வயசான வில்லனுக்கும் இடையே விவாதம். தாத்தாவாகிப் போன பாதுகாவலருக்கு கண் பார்வை முழுவதுமாக பழுதடைந்து விட்டது. அவ்வளவு கடும் கட்டுப்பாட்டுக்குள் இருந்த புத்தகம் ‘நகைச்சுவை’யின் ரசங்களை விவரிக்கும் அரிஸ்டாட்டிலின் அங்கத இலக்கிய ஆய்வு.

புத்தகத்தை தவமாய் தவமிருந்து தேடல் முடிவில் பெற்றவர்கள் — எப்படி இறந்தார்கள்?

இப்பொழுது பழசாகிப் போன டெக்னிக். தாள்களில் விஷம் தோய்ந்திருக்கிறது. பக்கங்கள் ஒன்றுடன் ஒன்று ஒட்டிக் கொண்டிருப்பதால், நாக்கில் எச்சில் தொட்டுக் கொள்ள, விடமேறி மர்ம மரணம் அடைந்திருக்கிறார்கள்.

பலான படத்தை டவுன்லோடும் அவசரத்தில் வைரசைக் கொண்டு வந்த கதையாக, முந்தைய வாசகர்கள் அனைவரும் முட்டாளாக கையுறை அணியாமல் புத்தகத்தை புரட்டியிருக்கிறார்கள். ஹீரோ அதி புத்திசாலி. கையுறை அணிகிறார். என்றாலும், புத்தக ஓரங்கள் கையுறையையும் சிராய்த்து கிழிக்கின்றன. பக்கங்களைத் தொடர்ந்து படிக்க முடியவில்லை.

இப்படிப்பட்ட அந்தப் புத்தகத்தை, புரட்டக் கூட இயலாமல், அந்த நூலில் என்ன எழுதியிருக்கிறது, யார் எழுதினார்கள் என்பதைப் பார்க்காமலே, படிக்காமலே உணர்ந்து கொள்கிறார் ஹீரோ!

நீண்ட நெடுங்காலமாக காவல் காக்கும் வயதான மூத்த முனிவரும் அந்தப் புத்தகத்தைப் புரட்டியதில்லை. எங்கே புரட்டினால், பகிடியும் நக்கலும் தன்னையும் தொற்றிக் கொண்டு, தானும் இறை நிந்தனையில் இறங்கிவிடுவோமோ என்னும் அச்சம். நையாண்டியில் திளைத்து கேளிக்கை, கொண்டாட்டத்தில் விழுந்து விடுவோமோ என்னும் பயம். அவரும் புத்தகத்தைப் படிக்காமலே புரிந்து வைத்துக் கொண்டிருக்கிறார்.

வாசிக்க விழைந்தவர்களையும் தீர்த்துக் கட்டி, இமேஜைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறார்.

ஹீரோவோ முதற்பக்கத்தை மட்டும் வாசித்துவிட்டு, கிட்டத்தட்ட முழு புத்தகத்தையும் அனுமாணித்து விடுகிறான். ஹீரோவும் வில்லனும் இருவேறு நூல்களைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு அத்தியாயம் கூட வாசிக்காமலேயே தங்கள் அனுபவங்களை வைத்து, இட்டுக் கட்டி விவாதம் நடத்துகிறார்கள்.

விமர்சகரின் வேலையும் இதுதான்.

கட்டாங்கடைசியாக, இவ்வளவு ஆராய்ந்து அனுபவித்து புகழ்ந்து விதந்தோந்து விமர்சனம் எதற்காக எழுதுகிறோம் என்பதை ஆஸ்கார் வைல்ட்-டின் ‘படிக்கலாமா? வேண்டாமா’ என்னும் கட்டுரையில் இருந்து உணரலாம்:

சிறந்த நூறு புத்தகங்களை தேர்ந்தெடுக்குமாறு என்னிடம் கேட்டிருக்கிறார்கள். வசதிக்காக மூன்று பிரிவாக பிரித்துக் கொள்கிறேன்.

1. சுயசரிதை, சரித்திர நூல்கள்.
2. மீள்வாசிப்பில் புது வாசல்களைத் திறக்கும் மகாகவிகளின் கவிதைகள்; தத்துவபிரக்ஞைகளின் எழுத்துகள்; ஞானிகள் அல்ல!
3. எதை எல்லாம் தொடக் கூடாது என்பதன் பட்டியல்.

படித்தால் பைசா பிரயோஜனமில்லாதது என்பதை விமர்சகர் சொல்லவேண்டும். வாசித்தால் ஊறு விளையலாம் என்பதை உணர்த்துவது முக்கியம். நூறு மோசமான புத்தகங்களின் பட்டியல் வெளியிடுபவருக்கு இந்த உலகம் என்றென்றும் நன்றிக்கடன் பட்டிருக்கும்.

சன்னாசியின் பதிவு உட்பட மேலேக் குறிப்பிட்ட எந்தப் புத்தகத்தையும் நான் படித்ததில்லை. எனினும் விமர்சனம் போல் ஒன்று சமைத்தாக்க முடிகிறது. நீங்களும் இப்பொழுது விமர்சனம் எழுதத் தயாரா?

உதவிய புத்தகம்: புத்தக தினம்

உதவிய பதிவு: Literature, Science, and a New Humanities :: Jonathan Gottschall Measure for Measure – The Boston Globe: “Literary criticism could be one of our best tools for understanding the human condition. But first, it needs a radical change: embracing science”

வாழ்க்கை சக்கரம் – காமிக்ஸ்

Staying up Late Night & Productivity

நன்றி: PHD Comics: Vicious Cycle

கமலின் தசாவதாரம் – குழந்தைகளுக்காக இராமானுஜர் கதை: பாட்காஸ்ட்

அம்மாவின் விவரிப்பில் மொத்தமாக 24½ நிமிடங்கள். இன்னமும் கால் கிணறு ராமானுசனைக் கூட தொடவில்லை என்கிறார். சிறுவர்களுக்கு கதை சொல்லும் பாணியிலான பாக்கி சொற்பொழிவு நேரம் கிடைக்கும்போது…

ஒன்றரை வருடங்களுக்கு முன்பு திருமூலர் பதிந்தது. அதன் பிறகு இப்பொழுதுதான் கமல்ஹாசன் புண்ணியத்தில் இராமானுஜரைக் குறித்த குழந்தைகளுக்கான குரல் பதிவுகள் – நான்கு பாகங்களாக:

1. இ – ஸ்னிப்ஸ் :

2. ஐ – மீம்: (மேலே சரியாக வேலை செய்யாவிட்டால் மாற்று mirror)

  1. தசாவதாரத்தில் இராமானுஜர் சரித்திரம் பொருத்தமா? இல்லையா!
  2. கல்லைக் கட்டியதும் கண்களைப் பிடுங்குவதும்
  3. அதிகப் பிரசங்கியா? அந்த நாள் கலகக்குரலா?
  4. கடைசி வரை அசின் இருந்தாரா? நம்பி எத்தனை நம்பி!

தொடர்புள்ள சில சேரிய சுட்டிகள்: