Category Archives: Uncategorized

‘கூப்பிடு தூரம்’ அது எவ்வளவு தூரம் என்பதைப் பா…

‘கூப்பிடு தூரம்’

அது எவ்வளவு தூரம் என்பதைப் பார்ப்போம்.

வீரசோழிய உரையில், ‘முழ நான்கு கோல்; அக்கோலைஞ்ஞூறு கூப்பீடு’

என்று சொல்லப்பட்டிருக்கிறது.

முழநான்கு கொண்ட கோல் = 6 அடி நீளமுள்ள கோல்

இந்தக் கோலால் 500 = 500 X 6 = 3000 அடிகள்.

கிட்டத்தட்ட முக்கால் மைலுக்குச் சற்றுக்குறைவான தூரம்.

இன்னொன்று ‘யோசனை’ எனப்படும். இதன் அளவுகள் ஒன்றுடன்

ஒன்று மிகவும் வித்தியாசப்படும்.

பொதுவாக இது நான்கு காதம் கொண்டது. அப்படியானால்

12000 கஜம் X 4 = 48000 கஜங்கள் கொண்டது. கிட்டத்தட்ட 30 மைல்

என்று கொள்ளலாம்.

ராமாயணத்தில் எல்லாமே யோசனைக் கணக்கில்தான் இருக்கும்.

நூறு யோசனை நீளம், நூறு யோசனை உயரம், நூறு யோசனை அகலம்

என்று இப்படி.

நாட்டுக்கு நாடு பல அளவைகள் இருந்திருக்கின்றன.

பொதுவான வழக்கில் இருந்ததைச் சொல்கிறேன்.

இந்த வாய்ப்பாடுகளையெல்லாம் எங்காவது சேமித்து

வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் கொள்ளுப்பேரப்பிள்ளைகளிடம்

நீங்கள் கதை சொல்லும்போது, “இப்படியெல்லாம் அளந்து

விட்டிருக்கிறாங்கப்பா, நம்ப ஆளுங்க”, என்று அளந்துவிடலாம்.

8 நெல் = 1 விரக்கடை (0.75 inches)

12 விரக்கடை = 1 சாண் (9 inches)

2 சாண் = 1 முழம் (18 inches)

2 முழம் = 1 கஜம் (3 feet = 36 inches)

4 முழம் = 1 பாகம் ( 6 feet)

6000 பாகம் = 1 காதம்(12000 கஜம்)

1 காதம் என்பது கிட்டத்தட்ட 7 மைல்.

கீலோமீட்டராக்க 7 X 8 / 5 செய்துகொள்ளுங்கள்.

இதனை ‘ஏழரை நாழிகை வழி’ என்றும் சொல்வார்கள்.

ஏழரை நாழிகை என்பது 3 மணி நேரம்.

ஒரு சராசரி மனிதன் 3 மணி நேரத்தில் பொடிநடையால் கடக்கும்

தூரமாக இதைக் கருதினார்கள்.

சரிதானே? மூன்று மணி நேரத்தில் 7 மைல். ஒரு மணிக்கு ஒன்றே

முக்கால் மைல்.

மனிதனே மூன்று மணி நேரத்தில் காத தூரம் போகிறான்.

ஆனால் ஒரு குறிப்பிட்ட குதிரை அப்படியல்ல.

காளமேகப்புலவர் சொல்கிறார் கேளுங்கள்:

முன்னே கடிவாளம் மூன்றுபேர் தொட்டிழுக்க

பின்னே இருந்திரண்டு பேர்தள்ள – எந்நேரம்

வேதம்போம் வாயான் விகடராமன் குதிரை

மாதம்போம் காத வழி!

விகடராமன் என்பவனுடைய குதிரை ஒரு காதம் செல்வதற்கு

ஒரு மாதம் பிடிக்குமாம். அதுவும் முன்னாலிருந்துகொண்டு மூன்று பேர்

கடிவாளத்தைப் பற்றியிழுக்க, பின்னாலிருந்துகொண்டு இரண்டு பேர்

தள்ளினால்தான் அந்த வேகமும்கூட.

சிவகங்கைப் பக்கத்தில் ராசசிங்கமங்கலக் கண்மாய் என்றொரு

பேரேரி இருக்கிறது. ராசசிம்ம பாண்டியன் காலத்தில் கிபி 800 வாக்கில்

வெட்டப்பட்டது. அதற்கு நாற்பத்தெட்டுக் கலிங்குகள் இருந்தனவாம்.

ஒரு காதத்துக்கு ஒரு கலிங்கு வீதம் கட்டியிருக்கிறார்கள்.

அதையட்டி ஒரு பெயர் அந்தக் கண்மாய்க்கு ஏற்பட்டிருக்கிறது.

‘நாரை பறக்காத நாற்பத்தெட்டுக் காதவழி’.

நாரைகள் ஆர்க்டிக் பிரதேசத்திலிருந்து நவம்பர் டிசம்பர் மாதத்தில்

தெற்கு நோக்கி பறந்துவரும். ஆங்கில V எழுத்து அமைப்பில் அவை

கூட்டங்கூட்டமாகப் பறந்துவந்து தமிழக நீர்நிலைகளில் நிலை கொள்ளும்.

நாரை அடாது விடாது நீண்ட தூரம் பறக்கக்கூடியது.

அப்பேர்ப்பட்ட நாரையும்கூட ராசசிங்கமங்கலத்துக் கண்மாயின்

நாற்பத்தெட்டுக் கலிங்குகளையும் ஒரே வீச்சில் பறந்து கடக்கமாட்டாதாம்.

நன்றி அகத்தியம் இணைய குழு

காலங்களில் அவள் ??? 6-00am – 8-24am – பூர்வான்ன…

காலங்களில் அவள் ???

6-00am – 8-24am – பூர்வான்னம்

8-24am – 10-48am – பாரான்னம்

10-48am – 1-12 pm – மத்தியான்னம் (மத்ய அன்னம்)

1-12pm – 3-36pm – அபரான்னம்

3-36pm – 6-00pm – சாயான்னம்

சாமம் என்பதற்கு இரண்டு மூன்று வகையாக கணக்குகள் இருந்தன.

சாதாரண வழக்கத்தில் ஒரு சாமம் என்பது ஏழரை நாழிகை

கொண்டது. அதாவது மூன்று மணி நேரம். அப்படியானால் ஒரு நாளில்

எட்டு சாமங்கள் இருக்கின்றன.

முழுக்கணக்கு –>

2 கண்ணிமை = 1 நொடி

2 கைந்நொடி = 1 மாத்திரை

2 மாத்திரை = 1 குரு

2 குரு = 1 உயிர்

2 உயிர் = 1 சணிகம்

12 சணிகம் = 1 வினாடி

60 வினாடி = 1 நாழிகை

2.5 நாழிகை = 1 ஓரை (1 மணி நேரம்)

3.75 நாழிகை = 1 முகூர்த்தம் (1.5 மணி)

2 முகூர்த்தம் = 1 சாமம் (3 மணி)

4 சாமம் = 1 பொழுது

2 பொழுது = 1 நாள்

15 நாள் = 1 பக்கம்

2 பக்கம் = 1 மாதம்

6 மாதம் = 1 அயனம்

2 அயனம் = 1 ஆண்டு

12 ஆண்டு = 1 மாமாங்கம்

5 மாமாங்கம் = 1 வட்டம்

பெரும்பொழுது 1 இளவேனில் சித்திரை, வைகாசி 2 ம…

பெரும்பொழுது

1 இளவேனில் சித்திரை, வைகாசி

2 முதுவேனில் ஆனி, ஆடி

3 கார் ஆவணி, புரட்டாதி

4 குளிர் ஐப்பசி, கார்த்திகை

5 முன்பனி மார்கழி, தை

6 பின்பனி மாசி, பங்குனி

சிறுபொழுது

1 காலை காலை 6 மணி – 10 மணி வரை

2 நண்பகல் காலை 10 மணி – பிற்பகல் 2 மணி வரை

3 எற்பாடு பிற்பகல் 2 மணி – மாலை 6 வரை

4 மாலை மாலை 6 மணி – முன் இரவு 10 மணி வரை

5 யாமம் இரவு 10 மணி – பின் இரவு 2 மணி வரை

6 வைகறை விடியற்காலம் 2 மணி – பின் இரவு

சல்மான் ருஷ்டி : என் சொக்கன் [ஃபத்வா முதல் பத்மா வரை]

சல்மான் ருஷ்டி

——————————————————

டெண்டுல்கரைத் தொடர்ந்து மற்றுமொரு சுவையான வரலாறு ஸ்டைல் நாவல்.

அயாதுல்லா கொமேனியே புத்தகத்தை படித்திருந்தால், ·பாத்வா கொடுப்பதற்கு பதில், விருந்துக்கு வரவழைக்கும் அளவு சல்மான் ருஷ்டி என்னும் படைப்பாளியை தூக்கி நிறுத்தும் அறிமுகம்.

ருஷ்டி என்றவுடன் என் மனதில் ஓடிய பிம்பம், இஸ்லாமியத்தைப் பழிக்கும் ஒரு முஸ்லீம்; மேற்கத்திய தாக்கத்தினால் இந்தியாவைத் துறந்த ஒரு முசுடு; முட்டை உடைப்பதற்காக உலக்கை உபயோகபடுத்தும் எழுத்தாளர். புகழ் பெறுவதற்காக சலசலப்பு ஏற்படுத்தும், வார்த்தை ஜால வித்தகர்.

இந்த பிம்பங்களையும், அவை ஏன் உண்டாயின, எழுத்தில் எங்கு தெரிகின்றன, எவ்வாறு இவற்றில் சிலது சரி, எங்கு தவறாக எடை போட்டோம் என்பதை நிலா இரவில் கதை சொல்லும் அம்மாவாக உணவைக் கொடுக்கிறது, இந்த புத்தகம்.

என்னைப் போன்ற attentiion deficit syndrome மக்கள் கூட கீழே வைக்க முடியாத வேகம். (வேகத் தடைகளாய் ஆங்காங்கே சில மொழிபெயர்ப்புகள் தென்படுகிறது: ‘நம்முடைய இப்போதைய இந்த வாழ்க்கை எந்த அளவு பாதுகாப்பாய், சவுகர்யமாய் இருக்கிறது என்பதைப்பற்றி சிந்திப்பதிலேயே வாழ்நாள்களைச் செலவிட்டுவிட்டால், நம்மெதிரே இருக்கிற சாலைகளை நாம் எப்போதும் கடக்கப்போவதில்லை’).

ருஷ்டி என்னும் கதாநயாகனுடன் வாசகனை வளர விடுகிறார் நூலாசிரியர். அவரோடு பம்பாயின் தெருக்களில் உலாவுகிறோம். அங்கிருந்து லண்டன் பள்ளியில் நம்மை சேர்த்து, எழுத வைத்து, இருட்டில் தள்ளி, ஊரை விட்டு ஒதுக்கி வைத்து, விருது வாங்கி குதூகலித்து என்று frame by frame நெருங்கியும் விலகியும் காட்டும் பாலு மகேந்திராவின் படத்தில், சொக்கனின் மொழி நடை இளையராஜாவின் பிண்ணனி இசையாக இடையூறு செய்யாமல் ஒன்ற வைக்கிறது.

அலுப்பு தட்டாத விவரங்களுடன் ருஷ்டியின் எழுத்து பாணிகள், கிண்டல், satire, மண வாழ்க்கை, இலக்கியத் தடங்களை பதிவு செய்துள்ளார் ஆசிரியர். ருஷ்டியின் எழுத்துக்களை உள்வாங்கியது போல் அவரின் சலனமற்ற முகத்தை கூட சொக்கர் படித்து விடுகிறார். இந்தியாவில் நடந்த காமன்வெல்த் பரிசு கிடைக்காத சோகத்தை மறைத்ததை குறிப்பிடுதல், தாய்நாடு பற்றிய மனோபாவம், வளர்ந்த இடத்தை இழந்த வருத்தம் என அலசி, ஒரு எழுத்தாளனை பல கோணங்களிலும் முன்னிறுத்துகிற நிறைவான அறிமுகம்.

சோகத்தையும், சுய அகப்பாடுகளையும் ருஷ்டியின் எழுத்துக்களில் கண்டுபிடுத்து சொல்லும் அதே வேகத்தில், அவரின் காதல் லீலைகளையும் துள்ளலாக ஒரு பகுதியில் எல்லை மீறாமல் வர்ணிக்கிறார். விரவியிருக்கும் புத்தக சுருக்கங்களும், குறிப்புகளும் ‘ருஷ்டியின் படைப்புகள்’ என ஒரு சேர ஒரே அத்தியாயத்தில் reference ஆக்குவது பயனுள்ளது. மேஜிக்கல் ருஷ்டி-யிசம் பகுதியும் குறிப்பிடப்பட வேண்டிய பதிவு கட்டுரை.

சுண்டி இழுக்கும் பகுதி தலைப்புகளுக்கும், அவற்றின் உள்ளடக்கங்களுக்கும் சில சமயம் சம்பந்தம் இல்லை என்பது எல்லாம் படிக்கும் போது தோன்றாது; கருத்து வழங்கும்போது தோன்றலாம். நிறைய ஆச்சரியகுறிகள், பலர் அறிந்த மும்பையும் பம்பாயும் ஒன்று போன்ற குறிப்பிடல்கள், ஆகியவற்றை தவிர்த்திருக்கலாம்.

‘சாத்தானின் வேர்ஸசை’ விவரித்த அளவுக்கு இல்லாவிட்டாலும், அவரின் சிறுகதை/கட்டுரை ஒன்றையாவது எடுத்து அலசியிருக்கலாம். புத்தகக் குறிப்புகளில் கோடிட்டு காட்டிவிட்டு, வாசகனின் ஆர்வத்துக்கே விட்டு விடுகிறார். சொக்கனின் அறிமுகத்தைப் படித்த பிறகு, புத்தகத்தில் குறிப்பிட்ட சில மேட்டர்களைத் தேடி பிடித்து நான் படித்துக் கொண்டிருக்கிறேன்.

ஒரு புகழ் பெற்ற எழுத்தாளரை பற்றி, தேர்ந்த எழுத்தாளர் எழுதிய, எழுத்துலக ஆர்வம் கொண்டவர்கள் அனவரும் படிக்க வேண்டிய அறிமுகம்.

——————————————————

“சல்மான் ருஷ்டி – என். சொக்கன் – சபரி பதிப்பகம் வெளியீடு –
128 பக்கங்கள் – ரூ 45/-”

——————————————————

யாத்ரா மார்க்கம் – புதுமைப்பித்தன் ==============…

யாத்ரா மார்க்கம் – புதுமைப்பித்தன்

====================================

சமீபத்தில் ‘பம்பாய் கிரானிக்கல்’ பத்திரிகையைப் புரட்டிக்

கொண்டிருந்தபொழுது, பிரிட்டிஷ் நாவலாசிரியர்களைப் பற்றி

அமெரிக்க பிரசுரகர்த்தர் சொல்லிய அபிப்பிராயம் என் கவனத்தை

இழுத்தது. அந்த பிரசுரகர்த்தர் பெயர் பெரிஸ் கிரீன்ஸ்லெட்.

அவர் சொல்லுகிறார்:

உங்கள் நாவலாசிரியர்கள் (பிரிட்டிஷ்) திறமைசாலிகள்.

தங்கள் இஷ்டப்படிக்கெல்லாம் பேனாவை வளையவைக்கும்

சக்தி பெற்றவர்கள் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால்

அவர்கள் புல் மேயும் ஆசாமிகளாயிருக்கிறார்கள்; அடிப்படையான

விஷயங்களைப் பற்றி சிந்திக்கிறதில்லை.

இதற்கு இவர் கூறும் காரணம் விசித்திரமாக இருக்கிறது; ஆனாலும்

அது அவ்வளவும் உண்மை என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். அவர்

கூறுவதாவது:

பிரிட்டிஷ் விமர்சகர்கள்தான் இந்த நிலைக்குக் காரணம். அவர்கள்

வெகுவிரைவில் திருப்தியடைந்து புகழ ஆரம்பித்து விடுகின்றனர்.

பிரிட்டிஷ் விமர்சகர்கள் உயர்வு நவிர்ச்சிகளையிட்டு அபிப்பிராயம்

கொடுத்த சில நாவல்களைக் கண்ணுற்றேன். அவற்றை என்னால்

வாசிக்க முடியவில்லை.

இதைப் பற்றி படித்தவுடன் நமது புத்தகங்களைப் பற்றி வெளிவரும்

‘மதிப்புரைகள்’ என் நினைவிற்கு வந்தன. தமிழில் வாசிக்கும் பழக்கம்

மிகவும் குறைவு. அதிலும் மதிப்புரை வாசிக்கும் பழக்கம், அம்மதிப்புரைகளில்

குறிப்பிட்ட புத்தக ஆசிரிய – பிரசுரகர்த்தர்களைத் தவிர வேறு யாரும்

கிடையாது என்றால், உயர்வு நவிற்சியில்லா மதிப்புரையின் தூண்டுதலால்

புத்தகம் வாங்கும் பழக்கம் எவ்வளவு அளவில் இருக்கிறது என்பதை

நான் திட்டமாகக் கூற முடியாது. ஆனால் ஒன்று. அவற்றின் உதவியை

நாடுகிறவர்களை ‘நமது’ மதிப்புரைகள் தவறான வழியில் செலுத்தும்

‘ஓர் மகத்தான’ தொண்டு புரிந்து வருகின்றன.

நான் இவ்விஷயத்தைப் பற்றி எனது நண்பர் ஒருவரிடம் குறிப்பிட்டேன்.

‘புஸ்தகப் பிரசுரமே சிசுப் பருவத்தில் இருந்து வருகிறது; நாம்

கொஞ்சம் அப்படி இப்படித்தான் இருக்கவேண்டும்’ என்றார்.

(கட்டுரை வெட்டப்பட்டுள்ளது…)

புதுமைப்பித்தன்

மணிக்கொடி, 15 ஆகஸ்டு 1937

மணிக்கொடியில் கருத்துப் பரிமாற்றத்துக்கான பகுதி ‘யாத்ரா மார்க்கம்’.

அதில் புதுமைப்பித்தன் எழுதிய குறிப்புகள் இவை.

நன்றி: அன்னை இட்ட தீ (புதுமைப்பித்தனின் அச்சிடப்படாத/தொகுக்கப்

படாத படைப்புகள்)

வெளியீடு – காலச்சுவடு பதிப்பகம்

பிடித்த பாட்டுக்கள் டெண்டுல்கர்: "ராமன் ஆண்டா…

பிடித்த பாட்டுக்கள்

டெண்டுல்கர்:

“ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்ல!” – முள்ளும் மலரும்

சேவாக்:

“என்னம்மா கண்ணு சௌக்கியமா?” – Mr. பாரத்

கங்குலி:

“ஒண்ணுமே புரியலை…உலகத்தில! என்னமோ நடக்குது; மர்மமா இருக்குது!”

டிராவிட்:

“ராஜா என்பார்; மந்திரி என்பார்! ஒரு ராஜ்யம் இல்லை ஆள!” – புவனா ஒரு கேள்விக்குறி

யுவ்ராஜ் / கை·ப்:

“நாங்க புதுசா கட்டிகிட்ட ஜோடிதானுங்க”

ஹர்பஜன்:

“சுற்றும் பூமி சுற்றும்” – டும் டும் டும்

ஜஹீர்:

“நீங்க நல்லா இருக்கோணும்; நாடு முன்னேற”

ஸ்ரீநாத்:

“ஓடி ஓடி உழைக்கணும்; ஊருக்கெல்லாம் கொடுக்கணும்!”

பார்திவ்:

“புது மாப்பிள்ளைக்கு ரப்பரே… நல்ல யோகமடா!” – அபூர்வ சகோதரர்கள்

பங்கார்:

“காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடி” – வைதேகி காத்திருந்தாள்

அகர்கர்:

“ஆட்டுக்குட்டி முட்டையிட்டு…” – பதினாறு வயதினிலே

கும்ப்ளே:

“உங்களை ஒண்ணும் பண்ண மாட்டோம்!” – நினைவே ஒரு சங்கீதம்

மனோஜ் ப்ரபாகர்:

“எல்லாருமே திருடங்கதான்!” – நான் சிகப்பு மனிதன்

கவாஸ்கர்:

“ஆடாத ஆட்டம் எல்லாம் போட்டவன்தான் மண்ணுக்குள்ளேப்

போன கதை, உனக்குத் தெரியுமா?” – மௌனம் பேசியதே

ரவி சாஸ்திரி:

“கண்டதைச் சொல்கிறேன்; உங்கள் கதையை சொல்லுகிறேன்!” – சில நேரங்களில் சில மனிதர்கள்

வெங்கட்ராகவன்:

“வடிவேலன் மனசுவெச்சான்” – தாய் இல்லாமல் நான் இல்லை

பாய்ஸ் இசை – சில மேற்குறிப்புகள் Secret of Rehm…

பாய்ஸ் இசை – சில மேற்குறிப்புகள்

Secret of Rehman’s வேட்ற்றி is Britney Spears, N’Sync and Remix

of பீட் இட் & his own ‘ஓட்யா’வின் ‘பூக்கும் மலர்கள்’. Not path breaking,

ஆனா certainly youthish and hep, complete with மாரோ kids’ lingo!

மன்னிக்க…

ரொம்ப நேரம் ‘பாய்ஸ்’ எம்.பி3கள் கேட்டதனால், ஆங்கிலமும், தமிழ் போன்ற

இங்கிலீஷ¤ம் மட்டுமே வாயில் வருகிறது. கொஞ்சம் நிலைப்படுத்திக் கொண்டு

தொடர்கிறேன்.

1. அலெ… அலே (எகிறி குதித்தேன்) – கபிலன் – **** / 5

கொஞ்சம் அமைதியாக, தமிழ் தெரிந்தவர்களுக்கும் புரியக்கூடிய

பாடல். யார் இந்த சித்ரா சிவராமன்? ஒழுங்காகப் பாடுகிறார்;

இளசாக சிரிக்கிறார். உதட்டில் அடிபட்டதாலோ என்னவோ

ச்

கவர்ந்த வரி:

வெண்ணிலவை இவன் வருடியதும் விண்மீனாய் நான் சிதறி விட்டேன்!

சாதா வரி:

ஒரு விதை இதயத்தில் விழுந்தது;

அது தலை வரை கிளைகளாய் முளைக்கிறதே!

2. பூம் (காதல் இதுதான்) – கபிலன் – – * / 5

திருச்சி லோகனாதனும், எஸ். வரலட்சுமியும் ஆங்கிலப் பாடல்

பாடியிருந்தால் இப்படித்தான் இருந்திருக்கும். பழகிப்போன உதித்தைத்

துறந்து, அத்னான் சாமியும், கீச் சர்கமும் குரல் உதிர்க்கிறார்கள்.

சத்தியமாய் புரியவில்லை. boysthemovie.com-இல் வரிகள் கண்டால்

புரிந்து கொள்ள ஐந்து சதவீத வாய்ப்பு இருக்கு. (ஆனால், அத்னான்,

கார்த்திக் மொழியை விட எவ்வளவோ தேவலை)!

கவர்ந்த வரி:

தங்க பஸ்பம் தேவையில்லை தண்ணீரே போதும்!

ஓட்டை உடைசல் காதல் நுழைந்தால் புல்லாங்குழலாகும்!

சாதா வரி:

குப்பை மேட்டில் ரோஜாச் செடி பூப்பதில்லையா?

(போனஸ்: அழுகிவிட்ட மாம்பழத்தில் இருவண்டுகள் நாம்தான்!)

3. டேட்டிங் (யாரை கேட்டு) – பா.விஜய் – *.5 / 5

தமிழை வித்தியாசபடுத்த இன்னொரு கண்டுபிடிப்பு ப்ளாசி.

பார்பி குரலோடு கர்னாடக வசுந்தரா தாஸ் வாய்ஸ்.

‘பேட்டை ராப்’ போல இல்லாமல், வித்தியசமான ராப் (முயற்சி).

ஆங்கிலப் பாடல்; தமிழும் இருக்கிறது! (நான் உச்சரிப்பை சொல்லவில்லை).

கவர்ந்த வரி:

ஹார்ட்டில் ஹெல்மெட் மாட்டாதே…

·ப்ரெண்ட்ன்னு ·புல்ஸ்டாப் வைக்காதே!

சாதா வரி:

கற்க கசடற கற்பவை

கற்றபின் மறக்க செய்வது லவ்வாகும்!

4. கேர்ள்·ப்ரெண்ட் (பால் போல) – பா.விஜய் – **.5 / 5

கார்த்திக், டிம்மி, திப்பு என்று மூவர் பெயர் குறிப்பிட்டிருந்தாலும், என்

காதில் ஒலித்தது ஒரு குரலே! புகழ் பெற்ற வைரமுத்துவின் பெயர்ச்சொல்லும்

அதன் குணாதிசங்களையும், புல்லட் எண் பட்டியலிடும் அடியற்றி கொடுக்கப்

பட்ட பாடல்.

கவர்ந்த வரி:

இணையதளத்தில் கணினி களத்தில்,

மின்னஞ்சல் அரட்டைகள் அடிக்கணுமே!

சாதா வரி:

பார்பி டால் போல போனி டெய்லோடு தேவை கேர்ள் ·ப்ரெண்டுதான்

5. ப்ரேக் தி ரூல்ஸ் (மாரோ மாரோ) – வாலி – **** / 5

பீச்சில் பார்க்கும் முதல் பார்வையிலேயே மயக்க வைக்கும் பிகினி இளங்கன்னி.

நியு யார்க்கின் தெருக்களில் டப்பாவை வைத்து கலக்கும் ஹிப் ஹாப்; கூட கொஞ்சம்

ஹார்ட் ராக்; பாடல் வரிகளின் போது பாப்; பல genres அனாயசமாகக் கலங்கடிக்கிறது.

கவர்ந்த வரி:

பஞ்சும் நெருப்பும் பார்த்தா தப்பு!

பஞ்சும் பஞ்சும் சேர்ந்தா தப்பு!

சாதா வரி:

வீட்டுக்கு லேட்டா வந்தா தப்பு!

6. சீக்ரெட் ஆ·ப் சக்சஸ் (சகசரிகமே) – வாலி – **.5 / 5

‘மாட்டீ ஓஸே’ என்று ஒரு ரகசியம் பரிபாஷையில் சொல்கிறார்கள்.

அது என்னது என்று கண்டுபிடிப்பவர்களுக்கு இன்றே திருட்டு விசிடி

கிடைக்கும் வழியை சொல்வேன்! கர்னாடிக சங்கீதம் தெரியாத பாக்யராஜ்

‘ஓ…’ என்று கத்தியே போட்டியை வெல்வது போல் பாட்டும் ஹிட்.

சாதா வரி:

தப்பான ரூட்டில் சென்று ரைட்டான ரூட்டைக் கண்டோம்.

முரண் வரி:

இந்த இசை சொந்த இசை!?

7. ப்ளீஸ் சார் – ??? – * / 5

மெலடி/ப்ளூஸ் என்றும் யாரும் ஒதுக்கி வைத்து விடக்கூடாது என்பதால்,

இங்கும் பாப்/ரீ-மிக்ஸ் வேலைகள் உண்டு.

8. தீம் ம்யூசிக் – *** / 5

நிறைய டெக்னோ, கொஞ்சம் ட்ரம்ஸ், தொட்டுக்க ஹெவி மெடல்;

படத்தின் மற்ற பாடல்களோடு ஒத்துப் போகிறது.

பாய்ஸ் – இலக்கியம் இல்லாத படைப்பு போல சுவாரசியமான பாடல்+இசை.

அன்புடன்,

-பாலாஜி

சில பழைய மொழிகள் —-> புண்ணியத்துக்குப் பழைய ப…

சில பழைய மொழிகள் —->

புண்ணியத்துக்குப் பழைய புடவை கொடுத்தா,

வீட்டு முன்னாலே போயி, முழம் போட்டு பார்த்தானாம்.

கூரை ஏறி, கோழி பிடிக்கத் தெரியாதவன்,

வானம் ஏறி வைகுண்டம் போறேனான்.

எள்ளுதான் புண்ணாக்குக்காக காயுறதுதான்,

எலிவால் என்னத்துக்குக் காயறது?

எல்லாரும் நெல்லை உலர்த்தினா,

எலி வாலை உலர்த்தியதாம்.

The buzzword seems to be Manushyaputhiran பாஸ்டன்…

The buzzword seems to be Manushyaputhiran

பாஸ்டன் பாலாஜி

அம்மா இல்லாத முதல் ரம்ஜான்

அம்மா இல்லாத

முதல் ரம்ஜான்

நன்றாய் நினைவிருக்கிறது

அம்மாவைப்போலவே.

எல்லா வீடுகளுக்கும்

வெள்ளையடித்த சுவர்களையும்

எங்களுக்கு

ஞானத்தையும் கொண்டுவந்த

ரம்ஜான்.

அதிகாலையில்

குளிக்க எழுப்பிவிடும்

அம்மாவை எழுப்பிவிட

அன்று யாருமில்லை.

தூங்காத இரவை

சூரியன் எடுத்துச் சென்றபின்

எழுந்தோம்.

உலகம் முழுவதற்கும் போதுமான

நிராதரவும், ஏழ்மையும்

எங்கள் வீட்டில்

கப்பிக்கிடந்தது.

பிறரது

இரக்கத்தின் கனத்தை

பொறுக்கச் சக்தியில்லாத

தங்கை

கொடுத்தனுப்பப்பட்ட

எல்லாப் பட்சணங்களையும்

திருப்பியனுப்பிவிட்டு

ஐதீகம் மீறி

எண்ணெய் சட்டி

பற்றவைத்தாள்

தந்தை சாப்பிடாமலே

தொழுகைக்குச் சென்றார்.

அவரைப்போன்றோரின்

காதல்பற்றி

கவிதைகளில் குறிப்பிடப்படுவதில்லை.

சின்னத் தம்பியை

கட்டாயப்படுத்தி

புத்தாடை அணிவித்தோம்.

அம்மா இறந்த இரவில்

‘இனிமேல்

வரவே வராதா ?’

என்றழுத பிள்ளையை

அப்படியே விட்டுவிட முடியாது.

ஆண்டுக்கொருமுறை

தெருவெல்லைகள் கடந்து

வீடுவீடாய்ச் செல்லும்

உறவுக்காரப் பெண்கள்

எங்கள் வீட்டில்

நுழையாமலே கடந்துசென்றனர்.

அம்மா இறந்த மறுநாள்

சாவு பயத்தில்

மெடிக்கல் செக்-அப்

செய்துகொண்டவர்கள்தான்

அவர்கள்.

(அம்மாவுக்கு சாகிற வயசா ?

சாகிறதுக்கு வயசா ?)

நரம்புகளைத் தூண்டும்

மந்திரங்களின் பேரொலியுடன்

தொழுகை ஊர்வலம்

வீதியில் சென்றது.

பாட்டியின் கைகள்

ஏன் அவ்வளவு பயங்கரமாய்

நடுங்கின ?

மூலைக்கு மூலை

சாவு சிரித்தது.

அம்மாவை

நீலம் பாரித்த முகத்துடன்

மீண்டும் தூக்கிவந்து

கிடத்தியதுபோலிருந்தது.

முந்தைய ரம்ஜானில்

இந்த அளவுக்கு

இல்லாமல் போவோம் என

நினைத்திருப்பாளா ?

பண்டிகைகள் கொண்டாடாத

நாத்திகனான நான்

முகத்தை மூடிக்கொண்டு

அழுதேன்.

பின்னர்

வேறு ரம்ஜான்கள் வந்தன.

அதிகாலைக் குளியல்,

வெள்ளையடித்த சுவர்கள்,

வீட்டில் கூட்டம்,

புத்தாடைகளின் நறுமணம்,

அம்மா இடத்தில் அண்ணி.

எல்லாமே

எப்படியோ

சரிக்கட்டப்பட்டு

திரும்பிவிடுகிறது.

ஆனால்,

நானந்த

முதல் ரம்ஜானை

பத்திரமாய் வைத்திருப்பேன்.

ஏனெனில்,

அல்லாவை எதிர்த்து

எங்கள் அம்மாவுக்காக

கொண்டாடப்பட்ட அது.

– மனுஷ்ய புத்திரன்

‘என் படுக்கையறையில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள்’ தொகுப்பிலிருந்து

கொஞ்ச நாளைக்கு புதிய ப்ளாஃகில் பழைய வலைப்பூக்கள் ம…

கொஞ்ச நாளைக்கு புதிய ப்ளாஃகில் பழைய வலைப்பூக்கள் மட்டுமே. படிக்காதவர்கள் படித்துத் துன்பமுறுக.