Category Archives: Uncategorized

காதல் சடுகுடு

Kaathal Sadugugu (c) Hindu

மேகத்தில் ஒன்றாய் நின்றோமே அன்பே

மழைநீராய்ச் சிதறிப் போகின்றோம் அன்பே

(மேகத்தில்)

பிரிவென்பதால் நெஞ்சிலே பாரமில்லை

மழையென்பது நீருக்கு மரணமில்லை

மீண்டும் ஒரு நாள் மேகம் ஆகி

வானில் சேர்ந்திடுவோம்

இருவரும் கூடி ஒருதுளியாகி

முத்தாய் மாறிடுவோம்

(மேகத்தில்)

கண்ணைக் கவ்வும் உன் கண்களைக் காதலித்தேன்

கற்பைத் தொடும் உன் பார்வையைக் காதலித்தேன்

ஆசை கொண்டு உன் ஆண்மையைக் காதலித்தேன்

மீசை கொண்டு உன் மென்மையைக் காதலித்தேன்

நிலா விழும் உன் விழிகளைக் காதலித்தேன்

நிலம் விழும் உன் நிழலையும் காதலித்தேன்

நெற்றி தொடும் உன் முடிகளைக் காதலித்தேன்

நெஞ்சை மூடும் உன் உடைகளைக் காதலித்தேன்

கண்ணா சில நாள் பிரிவோம் அதனால் உறவா செத்துவிடும்

கடல் நீர் கொஞ்சம் மேகம் ஆனால் கடலா வற்றிவிடும்

வெளியூர் போகும் காற்றும் ஒரு நாள்

வீட்டுக்குத் திரும்பி வரும்

பிரிதல் என்பது இலையுதிர் காலம்

நிச்சயம் வசந்தம் வரும்

(மேகத்தால்)

அன்பே, அன்பே உனை எங்கனம் பிரிந்திருப்பேன்

நிலா வந்தால் என் இரவுகள் இருந்திருப்பேன்

உன்னை எண்ணி என் உயிர்த்தலம் உறைந்திருப்பேன்

கண்ணால் கண்டால் நான் இருமுறை உயிர்த் தரிப்பேன்

அன்பே, அன்பே உனை எங்கனம் மறந்திருப்பேன்

நித்தம் நித்தம் உன் கனவுக்குள் இடம் பிடிப்பேன்

பெண்ணே, பெண்ணே நம் பிரிவினில் துணையிருப்பேன்

கண்ணே கண்ணே என் கண்களை அனுப்பி வைப்பேன்

இத்தனை பிரிவு தகுமா என்று

இயற்கையைக் கண்டிக்கிறேன்

ஏன்தான் அவரைக் கண்டேன் என்று

என் கண்களைத் தண்டிக்கிறேன்

(மேகத்தால்)

நன்றி: புகாரி – உயிரெழுத்து

சிறுவர் புத்தகங்கள் – ஆர். பொன்னம்மாள் (7)

இராஜேஷ்: மாணிக்கமாக மாறிய சிறுவன் பெற்றப் படிப்பினையை சுவாரஸ்யம் குறையாமல் சொன்ன நாவல். வானதி வெளியீடு.

கனிந்த மனம்: சிறுவர் நாடக நூல். வானதி வெளியீடு.

பொன் மனம்: 1997-இல் குழந்தை எழுத்தாளர் சங்கம் நடத்திய நாடகப் போட்டியில் ஏவிஎம் வெள்ளிப் பதக்கம் பெற்ற நாடக நூல். வானதி வெளியீடு. அருணை உதாரணச் சிறுவனாகக் கொண்டாடும் நாடகம்.

திருந்திய நெஞ்சம்: சிறுகதைத் தொகுப்பு. எல்லாமே சிறுவர்களுக்கான அற்புதமான கதைகள். ‘இப்ப என்ன அவசரம்’ என்று சோம்பேறித் தனத்தை வளர்த்துக் கொண்டு உல்லாசமாக இருக்கும் சிறுவன் திறமையிருந்தும், விழலுக்கு இறைத்த நீராய் பாராட்டுப் பெறாமல் நிற்பது, கானாப் பாடல் போல் சிறுவர் மனதில் பதியும் (வானதி வெளியீடு).

பாட்டி சொன்ன கதைகள் 1,2,3: 1980-ல் முதல் பாகம் வானதி பதிப்பகத்தாரால் வெளியிடப் பட்டது. நான்கு பாகத்தையும் எழுதிக் கொடுத்தாலே வெளியிடுவேன் என்றார் திரு. திருநாவுக்கரசு அவர்கள். சவாலுடன் முடித்துக் கொடுத்தார் என் அன்னை. 1992-ல் இரண்டாம் பாகமும், 1993-ல் மூன்றாம் பாகமும் வெளி வந்தது. நான்காம் பாகம் இன்னும் வெளிவர வில்லை. பழங்காலக் கதைகள். அத்தனையும் நவரத்தினங்கள். கையிலெடுத்தால் பெரியவர்களுக்கும் கீழே வைக்க மனம் வராது.

‘சொக்கா… சொக்கா… சோறுண்டா?’, இருட்டில் ஏன் சாப்பிடக் கூடாது என்பதை விளக்குகிறது. குணமித்திரன் கதை முழக் கயிறாலும் பொருள் ஈட்டலாம் என்று சொல்கிறது. ‘வர வர மாமியார் தேய்ந்து கழுதை போலானாள்’ என்பதை இப்போதும் படித்து வயிற்றைப் பிடித்துக் கொள்ளலாம். அஷ்டலட்சுமிகளையும் வீட்டுக்குள் வரவழைக்கும் தந்திரம் சொல்லப் பட்டிருக்கிறது.

(சிறு குறிப்பு வளரும்)

புத்தகக் குறிப்புகள் – ஆர். பொன்னம்மாள் (6)

ஈசாப் நீதிக் கதைகள் பாகம் 1,2: 1998 மார்ச்சில் கங்கை புத்தக நிலையத்தாரால் பிரசுரிக்கப் பட்டவை. பொறுக்கு எடுத்த நவமணிகள். முதல் பாகத்தில் 19 கதைகளும் (96 பக்கம்), இரண்டாம் பாகத்தில் 22 கதைகளும் (103 பக்கம்) இருக்கின்றன. ஒரு கதையில் கழுகு செய்த நன்மைகளும், பசி நட்பை மறக்கச் செய்த விதமும் சொல்லப் பட்டிருக்கிறது. குட்டிக் குட்டிக் கதைகளை மாணவர் மூலமாக நிகழ்கால உவமானக் கதைகள் கூறி விளக்கி யிருக்கிறார். இது என் தாய்க்குக் கை வந்த கலை. இந்த 25 வயதுக் குழந்தை விரும்பிப் படித்த கதைகள்.

பண்டிகை, பலகாரம், மந்திரம் மகிமை: 1983 அக்டோபரில் அம்பாள் பதிப்பக வெளியீடு. 224 பக்கங்கள். ஒவ்வொரு பண்டிகைக்கும் செய்ய வேண்டிய பலகாரம், பூஜா மந்திரம், வழிபாட்டு முறை, அதன் மகிமை எல்லாம் அடங்கியுள்ள நூல். மொத்தம் 19 பண்டிகைகள் உள்ளன. தமிழ்ப் போற்றிகளும் உண்டு.

ஸ்ரீசித்ரகுப்த பூஜை: 1997 ஏப்ரலில் கிரி ட்ரேடிங் ஏஜன்ஸியால் வெளியிடப் பட்ட நூல். 32 பக்கங்கள்.

அரிச்சந்திர புராணம்: வானதி அவர்களின் மைந்தரான திரு. ராமநாதன் கேட்டு எழுதிப் பிரசுரித்த புத்தகம் இது. அரிச்சந்திரன் பொய் சொல்லி வருணனை ஏமாற்றினான் என்ற செய்தி எனக்கு முதல் அதிர்ச்சி. அவர் எப்படிப் சத்தியவானன் ஆனான் என்பது சுவாரஸ்யமான கதைப் போக்கு. 123 பக்கங்களில், 15 அத்தியாயங்களில் தர்ப்பையைக் கழுத்தில் கட்டிப் பிள்ளையை விற்ற விசுவாமித்திரரின் மனைவியை சந்திக்கலாம். திரிசங்கு, நிமி இவர்களோடு தூங்கியதற்காக சபித்த வசிஷ்டரையும் காணலாம்.

பிள்ளையை விற்ற அஜீகர்த்தன், விசுவாமித்திரரின் வளர்ப்புப் பிள்ளை சுனச்சேபன் ஆகியோரும் உலவுகிறார்கள். முப்பது விதமான நரகங்கள் விஸ்தரிக்கப் பட்டிருக்கின்றன. பாபம் செய்ய மனம் நடுங்கும் அவைகளைப் படித்தால். இதே போல் சொர்க்க விபரங்களும் தரப் பட்டிருக்கின்றன. பாதாள உலகமும் வர்ணிக்கப் படுகிறது. இவற்றை யெல்லாம் எமதர்மனே அரிச்சந்திரனுக்குச் சொல்கிறார்.

(சிறு குறிப்பு வளரும்)

விருமாண்டியோடு நாங்கள்

அன்னலஷ்மி

நாங்கள் வசதியான குடும்பம். ஜல்லிக்கட்டு பார்க்க செல்வேன். டூ-வீலரில் ஊர்

சுற்றுவேன். ரொம்ப ஜாலியாக இருந்தேன். எங்க கிராமத்தில் வெட்டு குத்து

கொஞ்சம் அதிகம். அப்படி அடிபட்டுக் கொண்ட விருமாண்டிக்கு மனிதாபிமானத்தில்

உயிரை காப்பாற்றினேன். அவனோ என்னைத் தொடர்ந்து பிட்டு போட்டுக்

கொண்டேயிருந்தான்.

சித்தப்பாவும் கல்யாணப் பேச்சை எடுக்காததால், பின்சீட்டில் பக்கத்தில் உட்காரும்

சித்தியும் கண்டுக்காத்தால் வேறு வழியின்றி நானும் காதலிக்க ஆரம்பித்தேன்.

சொந்த நிலத்தையும் ஊருக்குத் தாரைவார்த்துவிட்ட ஏமாளியை முன்னுக்குக்

கொண்டு வரும் எண்ணத்தில் வீட்டை விட்டு ஓடிப்போய் விட்டோம். சித்தப்பாவின்

முன்னிலையில் தாலி கட்டாததால் அவருக்கு என் மேல் கோபம். நான் உயிரோடு

இருந்தால் தூக்கு தண்டனையின் அருமை பெறுமைகளை விவரிக்க முடியாது

என்பதால் தூக்கு தண்டனை கொடுத்துக் கொண்டேன்.

கோவில் பூசாரி

ஆண்டு பூஜையில் மட்டுமே எனக்கு சம்பாத்தியம் வரும். விருமாண்டி அன்னலஷ்மி

கல்யாணத்துக்கு அவர்கள் எனக்கு வாத்தியார் சம்பாதணைக் கொடுக்கவில்லை.

நான் வலிந்து கேட்டபிறகு தங்க மோதிரம் என்று சொல்லி, கல்யாணி கவரிங்

கொடுத்து ஏமாற்றி விட்டார்கள். தட்சிணைக் கொடுக்காதத் திருமணம் செல்லுபடியாகாது

என்பதால் கோர்ட்டில் அவர்களின் மணமுடிப்பை ரத்து செய்துவிட்டேன்.

ஜெயிலர்

எனக்கு ரொம்ப வேலை கிடையாது. பேய்க்காமனே எல்லாவற்றையும் திறமையாக

கவனித்துக் கொள்கிறான். சிறைச்சாலைக் கைதி இறந்ததற்கு ஆர்ப்பாட்டம்

நடந்ததால், ஜெயிலில் பரிசோதனை என்று கண்துடைப்பு வேலை ஆரம்பித்தேன்.

சரியாகப் புரிந்து கொள்ளாத சிறைவாசிகள் என்னைத் தீர்த்துக் கட்டிவிட்டார்கள்.

விருமாண்டிக்கு போலீஸ் ஆடை மேல் விருப்பம். ஜெயிலை முழுவதும் சுற்றி

பார்க்கவும் ஆசை. கொத்தாளத்தேவரைக் கொலை செய்யவும் விரும்பினான்.

அவனின் திட்டத்தில் என்னையறியாமல் மாட்டிக் கொண்டேன்.

ஏஞ்சலா என்ற ஏஞ்சலா ஜேம்ஸ் என்றழைக்கப்பட்ட ஏஞ்சலா காத்தமுத்து

பெயரை மாற்றினால் வெற்றி கிட்டும் என்று சொன்னதால் இது வரை மூன்று

முறை மாற்றிக் கொண்டுவிட்டேன். குறும்படத் தயாரிப்பில் பரபரப்புடன்

செயல்பட்டு வருகிறேன். தூக்குதண்டனையை ஒழிக்க செய்திச்சுருள்

தயாரிக்க சென்று, தூக்கு தண்டனையின் மகத்துவத்தைப் புரிய வைக்கும்

பதிவை செய்துள்ளேன். ‘முதல்வன்’ அர்ஜுன் மாதிரி எல்லாத் தொலைக்

காட்சியிலும் என்னை பேட்டி கண்டார்கள். இணைய பத்திரிகைகளில்

கூட என்னை முகப்பு செய்தியாக்கினார்கள். எனக்கு ஆஸ்கார் கிடைக்குமா?

ஏஞ்சலாவின் அஸிஸ்டெண்ட்

மரணதண்டனை குறித்த திரைப்பதிவுகளுக்கு எங்கள் தொலைகாட்சியில்

போதிய ஆதரவு கிடைக்கவில்லை. ஏஞ்சலாவுக்கு எப்படியாவது அதை

பிராபல்யபடுத்தும் திட்டம். அப்பாவிக் கைதியிடம் திருட்டுதனமாகப்

படம் பிடித்து அவனை சாகடிக்க வைத்துவிட்டாள். அந்த குற்றவுணர்வு

எதுவும் இல்லாமல், பத்துக்கு மிகாமல் கொலை செய்த விருமாண்டிக்குத்

தூக்குக் கிடைக்காமல் இருப்பதற்காக என்னையும் இறக்க வைக்கிறாள்.

நல்லம்ம நாயக்கர்

விருமாண்டியிடம் கதை சொல்லும்போதே எனக்குத் தோன்றியது. அவனுடைய

பதிவுகளில் எனக்கு ஒரு மூலை மட்டுமே கொடுப்பான் என்று பட்டது. விருமனுக்கு

செல்பேசி கொடுத்ததுதான் நான் செய்த ஒரே குற்றம்.

பேய்க்காமன்

ஊர்ப் பெரியவரிடம் மட்டும் மஸ்கா போடாமல் கொத்தாளத்தேவரோடும் சகவாசம்

வைத்திருப்பது சிலருக்குப் பிடிக்கவில்லை. வாழ்க்கையில் முன்னேறத் துடிக்கும்

இளைஞன் நான். வெட்டு, குத்து, சாராயம், நிலத் தகராறு, பஞ்சாயத்து என்று

இருக்கும் கிராமங்களிலும் சமரசம் செய்து வைத்து அமைதிப் புறாவை பறக்க

விடுபவன். பொறுபற்ற காவலர்கள் நடுவே, கைதிகளுக்குள் கலவரம் வராமல்,

அதிகாரிகளுக்குத் தலைவலி கொடுக்காமல், கம்பிமேல் நடக்கும் பாலன்ஸ்

தெரிந்த வித்தகன். இந்த ஒழுங்கு பிடிக்காமல் சுயலாபத்துக்காக ‘ரெய்ட்’

கண்துடைப்பு நடத்தித் தலவலி உண்டு செய்கிறான் ஜெயிலர். அதற்கும் மேல்

சென்று விருமாண்டியைத் தப்பிக்கவிட்டு, எதிர்சாட்சியான கொத்தாளனையும்

கொலை செய்யப்படும் நிலைமையை உண்டு செய்கிறான்.

அரிவாளோடு சுத்திக் கொண்டிருந்த பக்கத்து கிராமங்களின் பெருந்தலைகளை

கோர்ட்டு, நீதிபதி, வக்கீல், வாய்தா, தூக்கு தண்டனை என்று எதுவும் இல்லாமல்

காணாமல் போக்கியதையோ, சண்டியரை சாந்தபடுத்தியதையோ கண்டுக்காமல்

மரணதண்டனை குறித்து வீடியோ பிடிக்கறாங்களே!?

எங்க வீட்டு வீடியோ கேஸட்டு

என்னுடைய இதே இழைகளில்தான் ‘படம் எடுப்பதற்கு ரொம்ப கஷ்டப்படுகிறோம்;

நான் நடிக்க வருவதற்குமுன் சராசரியான படங்களை பார்த்துவிட்டு என்ன

படம் எடுக்கிறார்கள் என்று கமெண்ட் அடிப்பேன்; திரையரங்கிலேயே சத்தமாகக்

கிண்டல் செய்வோம்’. ஆனா, இப்பொழுதுதான் தெரிகிறது எவ்வளவு உழைப்பும்

நேரமும் ஆர்வமும் ஒவ்வொரு ·ப்ரேமுக்குள்ளும் செல்கிறது’ என்று ஸ்னேஹா

சொன்னதை பதிவு செய்து வைத்திருந்தார்கள். ரிவ்யூ, விமர்சனம், பார்வை, எண்ண

அலைகள், பதிவுகள், குறிப்புகள், சிந்தனை, அலசல் என்று விருமாண்டியை (மட்டும்)

துவம்சம் செய்யாமல் இருக்க சொல்லுங்கள்

சூபர் ஹிட் முகாப்லாவும் ரெட்டும்

அமிதாப் தயாரிக்கும் முதல் படம். இரு பஞ்சாபி நடிகைகள் அறிமுகம்

ஆகிறார்கள். அப்பாவி தென்னியந்தப் பார்வதியாக ப்ரியா கில். ஓரத்தில்

இரண்டாம் கதாநாயகியாக சிம்ரன் நவல். படத்தின் ஒரு பாட்டில்

சிம்ரன் ஆடுவதைக் கூட யாரும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை.

மீண்டும் ‘சூப்பர் ஹிட் முகாபலா’வுக்கேத் திரும்பி விடலாம் என்றால்

அங்கும் வேறு யாரோ ஆக்கிரமித்து விட்டார்கள்.

Priya Gill ப்ரியாவுக்கோ படவாய்ப்புகள் குவிகின்றன. ஷாருக்கு ஜோடியாக ‘ஜோஷ்’,

‘காதல் கோட்டை’யின் ஹிந்தி பதிப்பில் தேவயானி ஏற்ற வேடம் என்று

வரிசையாக பதிவு செய்யபடுகிறார். அழகு, நளினம், பாந்தமான நடிப்பு

அனைத்தும் பெற்ற ப்ரியா வெற்றிபெறுவாரா? நெட்டைக் கொக்கு, பருத்த

நடிகைகள் விரும்பும் கோலிவுட்டில் கால் வைப்பு, ·பாரெக்ஸ் பேபி

அப்பாஸ¤டன் இரண்டு படங்கள் என்று தடுமாறுகிற சிம்ரன் நிலைப்பாரா?

Simran ஆனால், ப்ரியாவுக்கோ இறங்குமுகம். சிம்ரனோ தெலுங்கு, மலையாளம்,

மணிரத்னம் படம் என முன்னேறுகிறார். ‘ஒன்ஸ் மோரில்’ ஆரம்பித்தவர், தனது

ஆடைத்தேர்வு, இளங்கதாநாயகர்கள், பண்பட்ட நடனம், புன்சிரிப்பால்

தமிழ் பத்திரிகைகளின் அட்டை முதல் வாசகர்களின் உள்ளம் வரை நிறைத்தார்.

‘தேரே மேரே சப்னே’ ABCL-ஐ மூட வைப்பதற்கு உதவிய படம். கிட்டத்தட்ட

அதன் மறுபதிப்பான ‘விஐபி’யிலும், கிட்டத்தட்ட அதே மாதிரி கதாபத்திரத்தை

ஏற்று, படத்தையே ஹிட்டாக்கியவர் சிம்ரன். அஜீத்துக்கு ‘அவள் வருவாளா’, ‘வாலி’

என்று உச்சாணிக் கொம்புக்கு கைதூக்கியவர். ப்ரியாவும் அஜீத்துடன் ‘ரெட்’டில்

ஜோடி சேர்ந்தார். டாப் 10-ல் சன் டிவி பாடலை ஓட்டியும், அவருக்கு படம்

கைகொடுக்கவில்லை.

இவ்வளவு பெரிய வியாக்கியானம் எதற்கு?

1. நாவல்தான் எழுதவில்லை. ‘நவல் புராண’மாவது கொடுப்போமே?

2. அற்புதமான ஆரம்பம் கிடைத்தாலும், ஒருவர் வெற்றி வெறுவார்

என்பது நிச்சயமில்லை?

3. ‘வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு’, சிலருக்குத்தான் பொருத்தம்?

4. திறமை இருந்தால் போதாது. ‘காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ளும்’

மனப்பான்மையும், சமரசங்கள் செய்யவும் தயாராய் இருக்க வேண்டும்?

கதை விட வாங்க – 6

சுந்தர ராமசாமி

உலக அரங்கில் தமிழ் இலக்கியம்

ஒரு படைப்பாளி இளைய தலைமுறைக்குக் கூற விரும்புபவை

சுந்தர ராமசாமியுடன் ஒரு நேர்முகம் – வே. வெங்கடரமணன்

ஆட்டோகிராஃப் – திரைப்பாடல் விமர்சனம்

இசை: பரத்வாஜ்

நட்சத்திரங்கள்: சேரன், கோபிகா, ஸ்னேஹா

இயக்கம் & தயாரிப்பு: சேரன்

1. ஞாபகம் வருதே – பரத்வாஜ் – 2.5 / 4

‘அவரவர் வாழ்க்கையில் ஆயிரமாயிரம் மாற்றங்களை’ப் பிடித்தவர்களுக்கு, இந்தப் பாடலும் பிடிக்கும். பட்டியலிடுவது கொஞ்சம் அலுப்பு தட்ட வைத்தாலும், வரிகளை காயப்படுத்தாத இசை.

பிடித்த வரிகள்:

‘முதல் முதல் பார்த்த டூரிங் சினிமா

முதல் முதல் வாழ்ந்த கிராமத்து வீடு

முதல் முதல் அழுத சினேகிதன் மரணம்’

புளித்த வரிகள்:

‘முதல் முதல் குடித்த மலபார் பீடி

முதல் முதலாக விரும்பிய இதயம்’

2. ஜகதோ தாரண – ஸ்ரீவித்யா, ரேஷ்மி – 3 / 4

என்ன ராகம் என்று தெரியாது. ஆனால் கேட்பதற்கு ரம்மியமாக இருக்கிறது. ஒரு மெல்லிய மாலையில் காபியை வைத்துக் கொண்டு பனி விழுவதை வேடிக்கை பார்க்கும்போது கேட்பதற்கு ஏற்ற பாடல். சரளி வரிசை வந்தாலும் போரடிக்காமல் உள்ளது.

3. கிழக்கே பார்த்தேன் – யுகேந்திரா, ஃபோனி – 1.5 / 4

எதற்காக பாடல் நடுவில் ‘ராப்’ நுழைந்தது என்று தெரியவில்லை. தோழியின் பெருமைகளை அடுக்கும் சாதாரணமான இசை கொண்ட பாடல். கேட்காமலும் விடமுடியாது; கேட்டாலும் மனதில் இடம் கேட்டு ஆக்கிரமிக்காது

பிடித்த வரிகள்:

‘என் பயணத்தில் எல்லாம் நீ கைகாட்டி மரமாய் முளைத்தாய்

தோழி ஒருத்தி கிடைத்தால் இங்கு இன்னொரு பிறவி கிடைக்கும்

இதுவரை இந்த உண்மை ஏன் தெரியவில்லை எவருக்கும்?’

4. மனமே நலமா – பரத்வாஜ் – 2 / 4 (பிட் பாடல்)

கொஞ்சம் பீட்… கொஞ்சம் கொஞ்சல்…

5. மனசுக்குள்ளே தாகம் – ஹரிஷ் ராகவேந்திரா, ரேஷ்மி – 2 / 4

மெலடிக்கு மலையாளம் ரி-மிக்ஸ் கொடுத்த வார்த்தைகள். ஆங்காங்கே எட்டிபார்க்கும் ஸேக்ஸும், மலையாள வாத்தியங்களும் மெருகேற்றுகிறன. ஹரிஷும் ஏமாற்றவில்லை.

பிடித்த வரிகள்:

அனேகமாக மொத்தப் பாடலையும் சொல்ல வேண்டும்.

புளித்த வரிகள்:

‘தமிழ்நாட்டு வெட்கம் வந்துச்சோ…’

6. நினைவுகள் நெஞ்சில் – உன்னி மேனன் – 1.5 / 4

காதல் பிரிவில் வரும் துக்கப் பாடல். சோகரசத்தை விட தாலாட்டு போல் தெரிகிறது. இசையமைப்பாளரும் பாடலாசிரியரும் இன்னும் கொஞ்சம் மனதைப் பிழிந்திருக்க வேண்டிய பாடல்.

‘என்னை எனக்கேப் பிடிக்கவில்லை

காரணம் கேட்டால் தெரியவில்லை’

7. ஒவ்வொரு பூக்களுமே – சித்ரா – 2.5 / 4

நெடுந்தொடர் முன் வரும் பாடல் போல் உள்ளது. (ஆனால், நன்றாகவே உள்ளது). சேரனுக்கு ஸ்னேஹா கொடுக்கும் அட்வைஸ் படலமாக இருக்கலாம். அதை நினைத்தால் பாடல் இன்னும் மெருகேறுகிறது.

பிடித்த வரிகள்:

‘மலையோ அது பனியோ நீ மோதி விடு

ஓரு கனவு கண்டால்

அதை தினம் முயன்றால்

ஓரு நாளில் நிஜமாகும்’

புளித்த வரிகள்:

சில cliches இருந்தாலும் இனிமையான பாடல்.

8. மீசை வைச்ச பேராண்டி – கோவை கமலா, கார்த்திக் க்ரூப் – 3 / 4

‘பார்த்திபன் கனவில்’ கூட குத்தல் பாட்டு வைத்திருக்க வேண்டும். இங்கு பெணகளினால் ஏற்படும் சோகத்தை கூத்தாக சொல்லும் பாடல். ஜாலியாக ஆடிவிட்டு, தெருத்துவத்தை சிலாகிக்கவும் உள்ள ‘பெப்ஸி’ உங்கள் சாய்ஸ் பாடல். ட்ராஃபிக் ஜாமில் மாட்டிக் கொண்டால் ஒலிப்பேழையோடு சத்தமாகப் பாடி ‘டைம்பாஸ்’ செய்யுங்கள்.

காதைக் கிழிக்காத இசையையும், திரைப்பாடல்களில் வைரவரிகளைத் தேடுபவர்களுக்கும் உருப்படியான சமாசாரம் நிறைய இருக்கு. அவசியம் கேளுங்க

ஆட்டோகிராஃப் – திரைப்பாடல் (2)

இசை: பரத்வாஜ்

பாடகர்: சித்ரா

பாடலாசிரியர்: ???

F:

ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே

வாழ்வென்றால் போராடும் போர்க்களமே

ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே

வாழ்வென்றால் போராடும் போர்க்களமே

ஓவ்வொரு விடியலும் சொல்கிறதே

இரவானால் பகல் ஒன்று வந்திடுமே

நம்பிக்கை என்பது வேண்டும் நும் வாழ்வில்

லட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்

மனமே ஓ மனமே நீ மாறிவிடு

மலையோ அது பனியோ நீ மோதி விடு

உள்ளம் என்றும் எப்போதும்

உடைந்து போகக் கூடாது

என்ன இந்த வாழ்க்கையென்ற

எண்ணம் தோன்றக் கூடாது

எந்த மனிதன் நெஞ்சுக்குள்

காயம் இல்லை சொல்லுங்கள்

காலபோக்கில் காயமெல்லாம்

மறைந்து போகும் மாயங்கள்

உளி தாங்கும் கற்கள் தானே

மண் மீது சிலையாகும்

வலி தாங்கும் உள்ளம் தானே

நிலையான சுகம் காணும்

யாருக்கில்லை போராட்டம்

கண்ணில் என்ன நீரோட்டம்

ஓரு கனவு கண்டால்

ஆதை தினம் முயன்றால்

ஓரு நாளில் நிஜமாகும்

மனமே ஓ மனமே நீ மாறிவிடு

மலையோ அது பனியோ நீ மோதி விடு

ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே

வாழ்வென்றால் போராடும் போர்க்களமே

வாழ்கைக் கவிதை வாசிப்போம்

வானம் அளவு யோசிப்போம்

முயற்சி என்ற ஒன்றை மட்டும்

முச்சு போல சுவாசிப்போம்

லட்சம் கனவு கண்ணோடு

லட்சியஙள் நெஞ்சோடு

உன்னை வெல்ல யாருமில்லை

உறுதியோடு போராடு

மனிதா உன் மனதைக் கீறி விதை போடு மரமாகும்

அவமானம் தடுத்தால் நீ எல்லாமே உரமாகும்

தோல்வியின்றி வரலாறா?

துக்கம் என்ன என் தோழா?

ஓரு முடிவிருந்தால் அதில் தெளிவிருந்தால்

அந்த வானம் வசமாகும்

மனமே ஓ மனமே நீ மாறிவிடு

மலையோ அது பனியோ நீ மோதி விடு

ஆட்டோகிராஃப் – திரைப்பாடல்

பாடி இசையமைத்தவர்: பரத்வாஜ்

பாடலாசிரியர்: ???

ஞாபகம் வருதே ஞாபகம் வருதே

ஞாபகம் வருதே

பொக்கிஷமாக நெஞ்சில் புதைந்த நினைவுகள் எல்லாம்

ஞாபகம் வருதே

ஏதோ ஒன்றை தொலைத்தது போலே

ஏதோ மீண்டும் பிறந்தது போலே

தாயே என்னை வளர்த்தது போலே

கண்களின் ஓரம், கண்ணீர் வருதே

ஞாபகம் வருதே ஞாபகம் வருதே

ஞாபகம் வருதே

முதல் முதல் பிடித்த தட்டாம்பூச்சி

முதல் முதல் திருடிய திருவிழா வாட்ச்சு

முதல் முதல் குடித்த மலபார் பீடி

முதல் முதல் சேர்த்த உண்டியல் காசு

முதல் முதல் பார்த்த டூரிங் சினிமா

முதல் முதல் ஜெயித்த சடுகுடு போட்டி

முதல் முதல் வாழ்ந்த கிராமத்து வீடு

முதல் முதல் ஆக்கிய கோட்டாஞ்சோறு

முதல் முதல் போன சிகு புகு பயணம்

முதல் முதல் அழுத சினேகிதன் மரணம்

ஞாபகம் வருதே ஞாபகம் வருதே

ஞாபகம் வருதே

முதல் முதலாக பழகிய நீச்சல்

முதல் முதலாக ஓட்டிய சைக்கிள்

முதல் வகுப்பெடுத்த மல்லிக டீச்சர்

முதல் முதலாக அப்பா அடித்தது

முதல் முதலாக சாமிக்கு பயந்தது

முதல் முதலாக வானவில் ரசித்தது

முதல் முதலாக அரும்பிய மீசை

முதல் முதலாக விரும்பிய இதயம்

முதல் முதலாக எழுதிய கடிதம்

முதல் முதலாக வாங்கிய முத்தம்

ஞாபகம் வருதே ஞாபகம் வருதே

ஞாபகம் வருதே

ஞாபகம் வருதே ஞாபகம் வருதே

ஞாபகம் வருதே

அலகிலா விளையாட்டு – ஒரு வாசகனின் பார்வை

கல்லூரியில் எனக்கு ஒரு உயிர்த் தோழன் இருந்தான். மிக நன்றாக படிப்பவன். எனது கல்லூரியில் எவ்வளவு மதிப்பெண்கள் எடுக்கிறோம் என்பது முக்கியமில்லை. அடுத்தவனை விட அதிகமா என்பதே முக்கியம். ஒரு வகுப்பில் முதல் பத்து சதவீதத்தில் இருந்தாலே நூற்றுக்கு நூறு எடுத்தவாறு மதிப்பீடுவார்கள்.

என் உயிர்த் தோழனோ ஒவ்வொரு பரிட்சை முடிந்தவுடன் சோகமே உருவாகவும், தற்கொலை குழப்பங்களுடனும்தான் காணப்படுவான். முதல் வருடங்களில் மிகுந்த அக்கறையுடன் விசாரித்து ஆறுதல் அளித்து வந்தோம். திருத்திய தாள்கள் வந்தவுடன் அவனின் வருத்தங்களுக்குக் காரணம் தெரிய வரும். ஓரிரண்டு கேள்விகளில் சில இடங்களில் தவறு இழைத்ததற்கு, மன்னித்தோ மதிக்காமலோ, மார்க் போட்டு இருப்பார்கள். அந்தக் கேள்வியையே முயற்சி கூட செய்யாத நாங்கள் அவனை தேற்றி இருப்பதுதான் எங்களின் வெறுப்பு.

‘அலகில்லா விளையாட்டின்’ நாயகனும் என்னுடைய தோழனுக்கு நிகராக சிந்திக்கிறான்; வருத்தப் படுகிறான்; அருகில் உள்ளவர்களின் அனுதாபங்களை கேட்டுப் பெறுகிறான். வாலிபத்தில் வாத்தியார்

பெண்ணை கைப்பிடிக்க முடியாததை எண்ணி வாழ்நாள் முழுக்க வருத்தப் படுகிறான். தனது குடும்பத்தை விட வேத குருவின் வீட்டிலேயே ஐக்கியப்பட்டு அங்கு நிகழும் விஷயங்களுக்கு விசனப்பட்டு விடை தேடி அலைக்கழியும் சுய விசாரணை பதிவுகள்தான் இந்த மின் புத்தகம்.

‘மேஜிகல் ரியலிசமோ’ என பயமுறுத்தும் ஆரம்பம். சாத்தானின் நரகத்தைதான் குளிர் தேசம் என்றும், இந்தியர்களின் அமெரிக்க வாழ்வையும்தான் பூடகமாக சொல்கிறாரோ என்னும் சந்தேகம். சீக்கிரமே அவற்றுக்கு முற்றுப்புள்ளி வைத்து கைலாயத்தை இடஞ்சுட்டி விடுகிறார்.

துறவின் இலக்கணம், முதியோர்களுக்கு ஏற்படும் எண்ண அலைகள், ஆன்மாவின் வரையறை, துன்பங்களும் நினைவலையும், தன்முனைப்பும் வினைப்பயனும், பணத்துக்காக படிப்பா, அவலங்கள் மட்டுமே தெரியும் எழுத்துக்கள், வயதும் பக்குவமும், ஆசிரியரின் ஊக்கங்கள் ஆகியவற்றை உளவியல் ரீதியில் கேள்விகள் தொடுத்து, சமூகவியல் பார்வையிலும் விவரித்து, ஆங்காங்கே கதை என்னும் வஸ்து, தொட்டுக் கொள்ள நகர்கிறது.

அவனின் அப்பா இக்கால வழக்கத்தில் நகைக்கடையில் கை வைத்து முன்னேறுவதையும், தன் போதனைகளுக்கு சம்பந்தமில்லாத முற்றுப்புள்ளி வைக்காத குருவின் குழந்தைப்பேறு உடல் இச்சையும், வாழ்வைக் கண்டு பயந்து ஓடும் மனிதர்களையும், நமது புரிதலுக்கே பாரா விட்டு விட்டு, ஒதுங்கியே கதை நகர்த்துகிறார்.

இரண்டு பக்கங்களே வந்து போன அத்தையின் பாத்திர படைப்பு எதற்காக என்று உணரும் அளவு கூட, காந்தியை அலசும் ஐந்தாம் அத்தியாயம் எங்கே பொருந்துகிறது என்று இன்னும் எனக்கு புலப்படவில்லை. ஒரு தெளிவை நோக்கி கொண்டு செல்லப்பட்ட கதையும், தத்துவம் சார்ந்த அலசல்களும் திடீர் என ஒரு குலுங்கு குலுங்கி குருவின் துன்பங்களுக்கு ஒரு முடிவுரை, கைலாயப் பயணம் என சடாரென முடிந்து விட்டதாகத் தோன்றுகிறது. வாழைப்பழத்தை உரித்து, பழச்சாறும் எடுத்து, பாலும் ஸ்வீடெனரும் கலந்து வாயிலும் ஊத்துவார் என்னும் என் நம்பிக்கையில் மண்.

‘சம்போ சிவ சம்போ’, ‘ஓம் ஓம்’ என ஆங்காங்கே கொஞ்சம் உமா பாரதி வாடை. ஆனால், படு பாலைவன கதையின் நடுவிலும், வாய்விட்டு சிரிக்கக்கூடிய நகைச்சுவையும், பூரணியின் இதமான ஹீரோயின் வர்ணணைகளும், நாயரின் கேரளத்துத் தமிழும், திருவையாறின் தல புராணமும் நமக்கு ஒரு வெல்கம் ப்ரேக்.

ஹீரோவைப் பார்க்கும்போது திரைப்பட பித்தான எனக்கு ‘ஹே ராம்’ சாகேத் நிழலாடுகிறார். அது என்னுடைய சொந்த பாதிப்பா அல்லது பாராவின் பாத்திர படைப்பா எனத் தெரியவில்லை. ‘இருவர்’ படத்தில் பயத்தினாலோ, திமுக தலைவரினாலோ, பல முக்கிய வசனங்களுக்கு பதிலாக பிண்ணனி இசையே வந்து செல்லும். பூரணியிடம் பேச வேண்டிய சில இடங்களில் விவரிப்பே வருகிறது. உரையாடல் இடம் பெற்றிருந்தால் சுவைத்திருக்கும்.

பிரமாணம், சுருதி, தைஜஸன், 97 தையல்கள் என்று எல்லாம் நடுவில் வருகிறது. என்னைப் போன்றவர்கள் பேந்தப் பேந்த விழித்துக் கொண்டே வாசிப்பார்கள். அருஞ்சொற்பொருள் வேண்டாம்; மற்ற புதுவரவுகளுக்குக் கொடுத்தவாறு ஒரு குறைந்த பட்ச அறிமுகம் கொடுத்திருக்கலாம். ஆனால், பௌத்த மடத்தில் 63 தத்துவங்களை விளக்குவது மாதிரி ஒரு அவார்ட் பட பிரசார நெடியை தவிர்க்க நினைத்திருக்கலாம்.

என் அம்மா அமெரிக்காவில் இருந்த பொழுது, ஒரு குண்டு மட்டுமே ஈராக்கில் வெடித்த ஒரு சாதாராண தினத்தில், என்னுடைய நிறுவனம் பொருளாதார நிலையில்லாமையின் பேரில் என்னுடைய வேலையை நீக்கி விட்டார்கள். அதற்குப் பின் வந்த பல்வேறு அமெரிக்க வேலை தேடும் முறையையும், இன்ன பிற லாகிரி வஸ்துக்களையும் விளக்க முருகரின் ‘மூன்று விரல்’ பயன்பட்டது. நான் படித்த சமயம் எனக்கு போரடித்த அந்த நாவல், அம்மாவை இரவு தூங்கவும் விடாமல் முடிக்க செய்தது.

அவ்வாறே ‘அலகில்லா விளையாட்டு’ம் பதினெட்டு உபநிஷதங்களும், நான்கு வேதங்களும், கம்யூனிசம், உலகமயமாக்கம், பௌத்த சமயம், இன்ன பிற சமய, பொருளாதார, வர்த்தகவியல் தத்துவங்களையும் டக்கென்று மூன்றே நாட்களில் அலச விரும்புவர்களுக்கு, கூடவே சத்தமாக சிந்தனையைத் தூண்டி வரும் அறிவு பெட்டகம்.

-பாலாஜி

27/நவ./2003

ரசிக்கும் வரிகள்:

* உயிரே போனாலும் சரி என்று தீர்மானம் செய்து விட்டால் உயிர் போகாது!

* தியானத்துக்கும் உறக்கத்துக்கும் வித்தியாசம் தெரியாமல் குழம்பிக்கொண்டிருப்பதைவிட புத்தியை இருட்டு மூலைகளில் முட்டிமோதவிட்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பதிலேயே பலது அகப்படும்.

* மனத்துக்கு ஏது வயசு? வெட்கம் மானம் இல்லாத மனசு. சொல்லில் இறங்கக் கூச்சப்படுகிற விஷயங்களையெல்லாம் விரித்துப்போட்டுக் குளிர் காய்கிற மனசு.

* அழகு தான் என்றாலும் அலுக்காதா என்ன?

* ஹிந்துதர்மம் ஒப்புக்கொண்டிருக்கிற ஒரே கம்யூனிசச் சிந்தனை அதுதான். ஒரு ஆன்மா தான். னால் உன்னுடையது இல்லை அது. யாருடையதும் இல்லை. எல்லாருடையதும். அல்லது எல்லாருடையதும் இல்லை. எல்லாருக்கும் பொதுவான ஒரு புறம்போக்குச் சொத்து.

* “நாம இன்பம்னு நினைச்சுண்டு இருக்கறது வேற. நிஜமான இன்பம் வேற.”

* வாழ்க்கை தாற்காலிக நிம்மதிகளால் மட்டுமே செய்யப்பட்டிருக்கிறது.

* “யோசிக்கத் தொடங்கியாச்சு. கேள்விகள் தோணறதுக்குள்ள படிச்சு முடிச்சுடணும்னு ஒரு கணக்கு இருக்கு. முதல்ல மனசுக்குள்ள ஏத்திண்டுடணும். அப்புறம் வயசுக்கு ஏற்ப கேள்விகள் வரும்.”

* உள்முக நாட்டம் உள்ளவன் தன் மொழியை மனத்துக்குள் அடக்கவேண்டும். மனத்தை, விழித்துக்கொண்டிருக்கிற புத்தியில் அடக்கவேண்டும். புத்தியை ஆனந்தமயமான ன்மாவில்

ஒடுக்கவேண்டும். ஆன்மாவை அமைதிப்பெருங்கடலான இறைவனிடம் ஒடுக்கவேண்டும்.

* விடிந்தால் உத்தியோகம். தேதி ஆனால் சம்பளம். வேளைக்குச் சாப்பாடு. விழுந்து புரள பெண்டாட்டி. அவ்வப்போது சந்தோஷம். அளந்து அளந்து பூரிப்பு. கூட்டத்தில் கரைந்து காணாமல் போய்விடலாம்.

* அடிக்கடி கஷ்டம் என்றாலும் ஆற்றிக்கொள்ளவும் வழிகள் உண்டு. அம்மாவின் மடி. மனைவியின் தோள். குழந்தையின் சிரிப்பு.

* எத்தனை நாளுக்கு முன்னே நடந்து ஒரு மனிதர் மேய்த்துக்கொண்டே போகமுடியும்? ஆடுகளுக்கு என்றைக்குத்தான் சுயமாகப் பாதை புரியும்?

* தெரிந்தோ தெரியாமலோ பலபேருக்குப் பலவிதமாக நாம் கடன் பட்டுக்கொண்டே இருக்கிறோம். வாழ்நாள் முழுவதும் படுகிற கடன்களை எண்ணிப்பார்க்கத் தீராது என்று தோன்றுகிறது.

* அவரவர் நியாயங்களின் உட்புறச் சுவரைக் குடைந்துபார்க்க எல்லாருக்கும் சாத்தியமில்லை.

* “ஆமா கல்யாணத்தைப் பண்ணிண்டவாள்ளாம்தான் என்ன சாதிச்சுப்பிடறா? தோள்ள ஒண்ணு. கையிலே ஒண்ணு. என்னவோ போர்க்களத்துலே சாதிச்சவாளுக்கு வீரப்பதக்கம் குத்திவிடறாமாதிரி. ”

கிடைக்குமிடம்: தமிழோவியம்

நன்றி: திண்ணை