‘சிவாஜி’ கொண்டு வரப்போகும் மாற்றங்கள்:
– ஸ்ரேயா தன்னை இரசிகர்கள் ‘அண்ணி’ எனக் கூப்பிடுவதை ஒரு தமிழ் பத்திரிக்கையில் புளங்காகிப்பார்.
– விகடனில் மதனின் அசட்டுக் கேள்விகளுக்கு ரஜினி பொறுமையாகப் பதிலளிப்பார்.
– குமுதத்தில் அடுத்த வாரம் அதே கேள்விகள் கேட்க்கப்படும்.
– தவறாமல் ‘அடுத்தப் படம் எப்போ?’ என்ற இந்தியப் பொருளாதாரத்தையே அசைக்கப் போகும் கேள்விக் கேட்கப்படும்.
– தவறாமல் ரஜினியும் ‘அது ஆண்டவன் செயல்’ என்பார்.
– கலைஞர் இப்போது வாரிசுகளைத் தயார் செய்துக் கொண்டிருப்பதால் ‘ரெக்கார்டை உடையப்பா’ வாழ்த்தெல்லாம் இருக்காது.
– வைரமுத்து இப் படத்திற்கு எழுதியப் பாடல்களை அவர் தாயின் கர்ப்பத்தில் இருந்த போதே ரஜினிக்கு எழுதி வைத்து விட்டேன்..இதை நோபலுக்கு அனுப்ப வேண்டும் என்று வேண்டுகோள் விடுப்பார்.
– படத்தை மக்கள் கண்டித்தால், சுஜாதா ‘கற்றதும் பெற்றதும்’ பகுதியில், ‘தமிழ் சனங்களுக்கு நகைச்சுவை உணர்வு சுத்தமாக இல்லை. இதை ஏற்கனவே சங்கரிடம் எழுதிக் கொடுத்து விட்டேன்’ என்று ‘உண்மை’ விளம்புவார்.
– படத்தில் அரசியல் இருந்தால் டி. இராசேந்தர் படப்பெட்டியைத் தூக்கிக் கொண்டு ஓடுவார் (பா.ம.க.வுக்கு இப்போது அலுத்து விட்டதாம்).
– படக்கலக்ஷனைப் பொறுத்து, ரஜினி இமயமலைக்கோ இல்லை திருவேங்கிநாதர் மலைக்கோ 2000 வருஷம் வாழும் சித்தர்களைச் சந்திக்க செல்வார். அதை ஒரு பத்திரிக்கை தெடராக எழுதும்.
– தமிழ்மணத்தில் கலைப் படங்கள் எழுதுவோர் திட்டி எழுதி தங்களின் பின்னூட்ட எண்ணிக்கையை அதிகரிக்கலாம்.
– சங்கர் அடுத்து எந்த சமூகப் பிரச்சனைக்கு சுண்டல் பாக்கெட் அளவில் தீர்வு கண்டு அதை பிரம்மாண்டமாக எடுக்கலாம் என திட்டம் போடுவார். வசனம்: சுஜாதா.
– கே. எஸ். இரவிக்குமார் தனக்குதான் அடுத்த ரஜினிப் படம் என்பார். தவறினால்…இருக்கவே இருக்கிறார் கமல்…ஏதாவது ஏமாந்த ஹாலிவுட் காமெடி இல்லாமலா போகும்?
– இரசிகர்கள்? நீங்களே இந்த வரியை எழுதிக் கொள்ளுங்கள்.
நான் எழுதவில்லை. முன்னாள் தமிழ் வலைப்பதிவர், இந்நாள் நண்பர், நாளை ??? எழுதியது 🙂
யார் என்று சரியான விடை சொல்பவருக்கு ஈசானிய மூலயில் ஃபெங்ஷுய் சாஸ்திரப்படி கட்-அவுட் உன்டு