Category Archives: Cinema

அந்தக்கால ரெட்டை அர்த்த பாடல்

அத்திக்காய் காய்காய் ஆலங்காய் வெண்ணிலவே
தித்திக்காய் காயாதே என்னுயிரும் நீயல்லவோ

அத்திக்காய் காய்காய் ஆலங்காய் வெண்ணிலவே
தித்திக்காய் காயாதே என்னைப்போல் பெண்ணல்லவோ

கன்னிக்காய் ஆசைக்காய் காதல்கொண்ட பாவைக்காய்
அங்கேக்காய் அவரைக்காய் மங்கை எந்தன் கோவைக்காய்
மாதுளங்காய் ஆனாலும் என்னுளங்காய் ஆகமோ
என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ

இரவுக்காய் உறவுக்காய் எங்கும் இந்த ஏழைக்காய்
நீரும்காய் நிதமும் காய் நேரில் நிற்கும் இவளைக்காய்
உருவம்காய் ஆனாலும் பருவங்காய் ஆகமோ
என்னை நீ காயாதே என்னைப்போல் பெண்ணல்லவோ

ஏலக்காய் வாசனைபோல் எங்கள் உள்ளம் வாழைக்காய்
யாதிக்காய் கேட்டதுபோல் தனிமை இன்பம் கனியாக்காய்
சொன்னதெல்லாம் விளங்காயோ தூதுவிளங்காய் வெண்ணிலா
என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ

உள்ளமெல்லாம் மிளகாயோ ஒவ்வொரு பேச்சுரைத்தாயோ
வெள்ளரிக்காய் பிளந்தால்போல் வெண்ணிலவே நீ சிரித்தாயோ
கோதை என்னைக் காயாதே கோற்றவரங்காய் வெண்ணிலா
இருவரையும் காயாதே தனிமையிலேங்காய் வெண்ணிலா

முந்தைய பதிவு: Bale Paandiya – Movie Review

The In-Laws – Michael Douglas & Albert Brooks (2003)

ஆல்பர்ட் ப்ரூக்ஸ் நடந்தால் சிரிப்பு வரும். ‘Defending Your Life’ போல் சிரித்தால் யோசனை வரும். கமல் போன்ற திறமையான இயக்குநர், நடிகர் கம் எழுத்தாளர். இந்தப் படத்தில் நாசர் ஏற்று நடிக்கும் முசுடு போன்ற கதாபாத்திரம்.

மைக்கேல் டக்ளஸ் வில்லத்தனம் செய்வார். காதல் மன்னனாக காத்தரீன் ஜீடா ஜோன்ஸையொத்த பெண்களை வலையில் வீழ்த்துவார். என்றாவது இவரைக் குறித்து இன்னும் விரிவாக எழுதவேண்டும். இந்தப் படத்தில் சத்யராஜ் போன்ற சகலகலா பேர்வழி ரோல்.

சூப்பர் பௌல் பார்த்து பேட்ரியாட்ஸ் தோற்ற சோகத்தைக் கழுவ இருவரும் நடிக்கிறார்கள் என்றவுடன் பார்க்க ஆரம்பித்த படம். தவற விடாமல் பார்க்கும் ‘பாஸ்டன் லீகல்‘ தொலைக்காட்சித் தொடரின் கான்டிஸ் பெர்கனும் கவுரவத் தோற்றத்தில் வந்துபோகிறார்.

ஒன்றரை மணி நேரம் விழுந்து விழுந்து சிரிக்க வைக்கிறார்கள். கொஞ்சம் லாஜிக் கூட உண்டு. அடல்ட்ஸ் ஒன்லி ரகமான காட்சிகள் எதுவும் இல்லை.

சீரியஸ் நாசரும், சிஐஏ சத்யராஜூம் இணைந்தால் நடக்கும் களேபரம், அங்க சேஷ்டைகள், கிரேசி டைமிங் காமெடிகள் நிறைந்த கதை. தமிழில் ஒழுங்குபட எடுத்தால் பிய்த்துக்கொண்டு ஓடும்.

மேலும் அறிய: ஐ.எம்.டி.பி.

கேடி – டிவித்திரை விமர்சனம்

Ilianaஇந்தப் படத்தை சமீபத்தில் சன் டிவியில் போட்டிருந்தார்கள். பார்த்த பலரும், வேண்டிய அளவு பயமுறுத்தியிருந்ததால், மிகக் குறைந்த எதிர்பார்ப்புடனே பார்க்க ஆரம்பித்தேன்.

கேர்ஃப்ரீ வாங்குவதகு கூச்சப்படும் கல்லூரி மாணவி எண்பதுகளுக்கு முந்தைய எஃபெக்டை கொடுத்தது. மற்றபடிக்கு முதல் பாதி தேவலாம். இரண்டாம் பாதி போகப் போக நெளிய வைத்து, இறுதிக்காட்சியில் இது வரை பார்த்தவர்கள் படித்து படித்து சொல்லியிருந்த எச்சரிக்கைகளை உறுதியாக்கியது.

தமண்ணாவை மொத்தமாக வில்லியாகவே நடமாட விட்டிருக்கலாம். கடைசியில் தியாகி ஆக்குவது ஹீரோ மேல் பரிதாபம் வரவைக்காமல், இலியானாவையும் கோமாளியாக சித்தரித்தது.

‘ஆதிவாசி’ பாடலில் பூச்சிகளை எல்லாம் தொப்புளில் ஊறவிடுவது தமிழகத்தில் காவேரி போன்ற கற்பனை.

சராசரி மாணவனை சாதனை மாணவனாக்குவதை ‘காதலன்‘ சொல்லியது. ரவியின் முந்தைய படம் செவன் ஜி, பத்ரி போன்ற வெற்றி பெறக்கூடிய ஃபார்முலாதான். காதலுக்காக போட்டியில் கலந்து கொள்வது; வீழ்ந்து கொண்டிருப்பவன் உந்தப்படுவது என்று ரொம்ப சுவையான, நிச்சயம் வென்றிருக்கக் கூடிய சமாச்சாரங்கள்.

கூடவே இலியானா, தமண்ணா.

கதையே இல்லாமல் ‘எனக்கு 20; உனக்கு 18’ கொடுத்த இயக்குநர் ஜோதி கிருஷ்ணா இனிமேல் இந்த மாதிரி திரைக்கதைகளை சொதப்பாமல் சொல்லத் தெரிந்து கொண்டால், அப்பா ஏ ஏம் ரதனத்திற்கு ‘பீமா’ கடனை மீட்கலாம்.

தொடர்புடைய தமிழோவியம் விமர்சனம்: KD / கேடி

Bheema – Audio Lyrics

Host unlimited photos at slide.com for FREE!
Host unlimited photos at slide.com for FREE!
Host unlimited photos at slide.com for FREE!
Host unlimited photos at slide.com for FREE!
Host unlimited photos at slide.com for FREE!
Host unlimited photos at slide.com for FREE!

ஓரம் போ – ஆடல், பாடல், தாளம்

நந்தவனத்தில் ஓரு ஆண்டி

ஜிகு ஜிக்கா ஜிகு ஜிக்கா ஜிக்கான்

முயலுக்கும் ஆமைக்கும் ரேசு
இதுல ஜெயிக்கிற ஆள்தாண்டா எப்போதும் பாஸு

ஃபயரில்லா ஆள் எல்லாம் க்ளோசு
மொக்கை பல்பாக இருந்தாக்க உன் கதை ஃப்யூஸு

ஜிகு ஜிக்கா ஜிகு ஜிக்கா ஜிக்கான்

குண்டாக சுட்டாக்க இட்லி ..
அதையே ரவுண்டா சுட்டாக்கா உத்தப்பம் தோசை

எல்லாமே ஒரு கரண்டீ மாவு
அதிகம் பேராச பட்டாக்க மனசுக்குள்ள நோவு

ஜிகு ஜிக்கா ஜிகு ஜிக்கா ஜிக்கான்

உலகத்தில் எங்கேயும் போட்டீ
நீ கண்மூடித் தூங்கினா கழண்டுடும் வேட்டீ

ரொம்பத்தான் அடிக்காத லூட்டி


கன் கணபதிதான் காலேஜ் படிக்க போனானாம்
அரியர்ஸே வேணாம் ஆட்டோவே மேலுன்னு வந்தானாம்

எட்டு எட்டா
பதினாறு போட்டு ரெண்டு லைசென்சு வாங்கினானாம்


கோழி காலு ரெண்டு என்னும் கவிதையை வரி வடிவில் கொண்டு வந்து தருபவர்களுக்கு ‘இல்லிக்காது சுருதிப்பேட்டையர்’ விருது வழங்கலாம்.

2007 – பேசப்பட்ட தமிழ் திரைப்படங்கள்

மசாலா பத்து

  1. போக்கிரி – தூள். மகேஷ் பாபு மலை என்றாலும், மடுவாகாத விஜய்.
  2. அழகிய தமிழ்மகன் – ரஜினிக்குப் பிறகு மசாலை ஊச வைக்காத நம்பிக்கை நட்சத்திரம் விஜய் முதல் முறையாக இரு வேடத்தில் தோன்றினார்.
  3. தாமிரபரணி – கடகட காட்சி நகர்த்தல். நேர்த்தியான விஷால். சன் டிவி சீரியலின் சாமுத்ரிகா நாயகி. சந்திரமுகி அல்லாத பிரபு.
  4. கண்ணாமூச்சி ஏனடா – பெண்களுக்கு பிடித்த மாதிரி படம் எடுக்க இன்னும் முன்வருகிறார்களே! பார்க்கலாம்… பாராட்டலாம்.
  5. பருத்திவீரன் – ஜாலியான கதையில் கடைசி அரை மணி ரணகளம்.
  6. நான் அவனில்லை – ஸ்னேகா திருஷ்டிப் பொட்டாக இருந்தாலும் ஜீவன் பிழைக்கவைக்கிறார்.
  7. அம்முவாகிய நான் – பார்த்திபனுக்கு என்றும் பாயசம், செக்ஸ் அன்றும் விற்றது; இன்றும் சதை சக்கை போடுகிறது.
  8. கிரீடம் – இளைய தளபதிக்கு மட்டும்தானா ரீமேக்?
  9. பில்லா – மீண்டும் வறட்சி; இன்னொரு ரீமேக்.
  10. பச்சைக்கிளி முத்துச்சரம் – மொழிமாற்றம் என்ற முறையில் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

வித்தியாச பத்து

  1. உன்னாலே உன்னாலே – வசனத்தில் பன்ச்; துள்ளலில் தங்கச்சி கஜோலுக்கு அக்கா; ‘ஜெய’த்திற்கு பின் மீண்டும் சதா நடிப்பு.
  2. எவனோ ஒருவன – சாது மிரண்டால்; கல்கி புருஷன்.
  3. ஒன்பது ரூபாய் நோட்டு – சிவாஜி கணேசனுக்கு போட்டியாக நடிப்பும் சோகமும்.
  4. ஓரம்போ – சென்னை ஆட்டோக்களும் ஆட்டோ சார்ந்த பிரதேசங்களும்.
  5. கற்றது தமிழ் – ஆசைப்படுவதை படிப்பதை விட ஆசைப்பட்டது கிடைக்குமாறு படிக்க சொன்ன படம்
  6. கல்லூரி விஸ்வாமித்திரர் வாயால் பிரும்மரிஷி பட்டம்
  7. லீ – படம் நல்லா இருக்காமே?
  8. சென்னை 600028 – படம் நன்றாக இருக்கிறது
  9. சத்தம் போடாதே – வசந்த்
  10. பொல்லாதவன் – பார்க்கவேண்டும்

விட்டுப்போனவை

பயமுறுத்தியவை

  1. மிருகம் – சலனம் செய்யவேண்டுமென்றால் ஆவணப்படமாவது எடுக்கத் தெரிந்திருக்கவேண்டும்
  2. வீராசாமி – உடலுக்கும் உருவத்துக்கும் ஏற்ற பாத்திரம் எடுக்கத் தெரியவேண்டும்
  3. ஆழ்வார் – இயக்குநரை தேர்தெடுக்கத் தெரியவேண்டும்
  4. குற்றப்பத்திரிகை – தணிக்கை அரசியல் தெரிந்திருக்கவேண்டும்
  5. தீ நகர் – கரண் பொருத்தமாக செய்கிறாரே என்னும்போது கொம்புசீவுபவர்களை அடக்கத் தெரியவேண்டும்
  6. தீபாவளி – ஜெயம் ரவிக்கு தெரிந்ததெல்லாம் மறுசுழற்சி; எதற்கு சொந்த முயற்சி?
  7. மாயக்கண்ணாடி – சேரன், எஸ்,ஜே. சூர்யாவுக்கு எல்லாம் இயக்குநர் சரக்கு தீர்ந்தாச்சா?

உதவிய பதிவுகள்:
சண்டே சினிமா :: ஃப்ளாஷ் பேக் 2007 – மனோஜ்கிருஷ்ணா

Tamil Cinema 2007 – Top Films, Movies, Flashback, Stars: Dinamalar

பார்த்த படங்கள்

1. அழகிய தமிழ்மகன்: கடைசி அரை மணி நேரம் பார்க்க முடியாதபடிக்கு சில நிர்ப்பந்தங்கள். மற்றபடி, பார்த்தவரைக்கும், விஜய் ரசிகர்களுக்கு தேவையான அம்சங்கள் என்று கோவி கண்ணன் சொல்வது போல் பலவும் இருப்பதால், ரசிக்கவைத்து ஈர்த்தது.

2. சக் தே இந்தியா: ரொம்ப ரொம்ப நல்ல படம். இந்த மாதிரி ஷாரூக் முயற்சிகள் மிகப் பெரிய வெற்றி அடைய வேண்டும். விறுவிறுப்பான ஹாக்கி ஆட்டங்கள். உணர்ச்சி பொங்கும் திரைக்கதை, வசனம். ஹீரோயிஸம் இல்லாத நாயகன்.

3. ஈ.டி.: எத்தனையோ முறை பார்த்திருந்தாலும், ஸ்டீவன் ஸ்பீல்பெர்குக்காகவும் அந்த அன்னியருக்காகவும் மீண்டும் குடும்பத்துடன் மகிழவைத்த படம்.

Muthu – Movie Screenplay bits & pieces

மீனா: வேதனை. அவமானம், வெட்கம்!

பாண்டிய மன்னனாக வடிவேலு: ஆமா… இது என் டயலாக் இல்ல?

மன்னனுடன் கூட வந்திருக்கும் மந்திரிகள்: டயலாக்க ரிப்பீட் பண்ணாத்தான் ஜெயிக்க முடியும்.

மீனா: அழகு ராணி; அதிரூப சுந்தரி; ஆடவர் மயங்கும் அற்புத மேனி கொண்ட இந்த அரசிளங்குமரிக்கு, சுடுகாட்டில் எரியும் கொள்ளியில் இருந்து சூடு தாங்க முடியாமல் எழுந்தோடி வந்த பிணம் போல் இருக்கும் இவனா எனக்கு மணமகன்?

பார்வையாளன் ரஜினி: ஆ…ஆச்சு (தும்மல் போடுகிறார்

மீனா கடுப்பாகிறார்

மீனா:  என் கடைக்கண் பார்வை பட்டால் படைபலம் கொண்ட மன்னர் கூட்டம் அனைத்தும் நாடு மறந்து நகரம் மறந்து என் பின்னால் வர தயாராக இருக்கும்போது… என்னை நாடி வந்த பேடியே!

ரஜினி மீன்டும் பெருந்தும்மல்.

மீனா:  என்னை நாடி வந்த பேடியே! இந்த பூலோகத்தில் மட்டுமல்ல. ஏழேழு லோகம் சுற்றிவந்தாலும் உன்னை ஒரு பைத்தியக்காரி கூட மணந்து கொள்ள மாட்டாள். ஹ்ம்ம்ம்… அமாவாசைக்கு பௌர்ணமி மேல் ஆசையா?

Rajni continues his lengthy preludes to and the sneezing process itself.

மீனா:  யோவ்! என்னா? விளயாட்டா இருக்கா? வந்ததில் இருந்து பார்க்கிறேன்… சும்மா தும்மிக்கினே இருக்கே!

ரஜினி அப்பாவியாய் சுற்றுமுற்றும் பார்க்கிறார்.

மீனா:  யோவ்… உன்னத்தான் சொல்றேன்.

காந்திமதி: ரெங்கநாயகி… வேண்டாம்! பேசாமல் இரு.

மீனா: நீங்க சும்மா இருங்க அக்கா! அப்பத்திலிருந்து நானும் பார்த்துட்டே இருக்கேன். தும்மிக்கிட்டே இருக்கியே!? என்ன நெனச்சுட்டு இருக்கே உன் மனசில்?

ரஜினி: ஏம்ப்பா… நாட்டில மனுசன் தும்மினாக் கூடவா தப்பு?

மக்கள்: கோரஸாக அதானே?!

மீனா: தும்மினா ஒண்ணும் தப்பில்லைய்யா…ஆனா! இங்க ஒருத்தி அழகா நடிச்சுட்டு இருக்கும்போது டிஸ்டர்ப் பண்ற மாதிரி தும்முறியே… அதான் தப்பு!

ரஜினி: ஏம்மா… இந்தத் தும்மலு, இருமலு, விக்கலு, கொட்டாவி, நல்லது, கெட்டது, பசி, தூக்கம், பொறப்பு, இறப்பு, பணம், பட்டம், பதவி… இதெல்லாம் கேட்டு வராது. தானா வரும். வந்தாலும் ஏன்னு கேக்க முடியாது. போனாலும் தடுக்க முடியாது.

எச்ச எச்ச எச்ச எச்சா… கச்சச்ச கச்சகச்சா

(ரஜினியின் தோழர்) ரமேஷ்கன்னா: இது வசனம்… முத்து… தூள் கிளப்புமா! ஆ… அக்காங்… நீயும் பேசறியே!?

மீனா:  யோவ்… வசனம் எல்லாம் கிழேயிருந்து என்ன வேணா பேசலாம்யா. இத்தன பேருக்கு முன்னால மேசையேறி பேசிப்பாரு. ஒதறும்!

ர.கன்னா: யாருக்கு உதறும்? என்னா நெனச்சுக்கிட்ட எங்க முத்துவப் பத்தி!? அவர் வண்டியோட்ற ஸ்டைல்ல பார்த்தே இந்த ஊர் மயங்கிக் கிடக்குது.

மீனா: வண்டி ஓட்டிடலாம்யா.. மேடையேற முடியுமா?

ர.கன்னா:  யாரப் பாத்து என்னா கேள்வி கேக்கறே? இது என்னா மேடை? அவர் எந்த மேடையா இருந்தாலும் ஏறுவாரு! தைரியமாப் பேசுவாரு! ஆடுவாரு! பாடுவாரு… பார்க்கிறீயா!?

ரஜினி:  என்ன கண்ணா… இப்படி மாட்டி விடுறீயே!

ர.கன்னா:  சும்மா இரு முத்து! உன் வெயிட்டு உனக்கேத் தெரியாது!

மீனா:  யோவ்… தைரியமான ஆம்பிளையா இருந்தா.. மெடையில வந்து ஆடிப்பாடி நடிக்க சொல்லுய்யா பார்ப்பம்…

கூட்டத்திலொருவர்: என்னா முத்தூ… அந்தப் பொண்ணு அது பாட்டுக்கு பேசிகிட்டிருக்கு. நீ பேசாம ஒக்காந்திட்டிருக்கியே.. மேடையில போய் கொஞ்சம் வெளையாண்டுட்டு வாம்மா…

ரஜினி:   ஐய்யய்யோ… அண்ணே… நமக்கெதுக்கண்ணே இந்த வேண்டாத விளையாட்டெல்லாம்?

கூட்டத்தில் இன்னொருவர்: உன் வேலைய நீ காட்ட வேண்டாமா? போ வாத்யாரே

ரஜினி:  அட சும்மா இருப்பா… ஏதோ சின்னப் பொண்ணு… தெரியாமப் பேசிடுச்சு…

ர.கன்னா:  ஐய்யய்யே… இப்படி சொன்னா கேட்க மாட்டாருப்பா… நாமதான் அவரை மேடையேத்தி வுடணும்

ரஜினி மிரள மிரள மக்கள் குண்டு கட்டாக தூக்குகிறார்கள்.

மேடையில் ஏற்றப்பட்ட ரஜினி: ஏம்ப்பா சுடுது!!

ரஜினி: உங்க பாட்டுக்கு ஏத்திவிட்டீங்க… இவங்களையெல்லாம் எப்படிம்மா மேய்க்கிறது?

மக்கள்: சும்மா பூந்து விளையாடும்மா… இத்தினி பேரு உன் பின்னாடி இருக்கம்ல…

ரஜினி:  எசமான்…??

சரத்பாபு மையமாக உம் கொட்டி தலையாட்டுகிறார்.

ஒருவன் ஒருவன் முதலாளி பேக்கிரவுண்ட் ம்யூசிக்குடன் துண்டு ஸ்டைல் விசிறுகிறார் சூப்பர் ஸ்டார்.

ரஜினி: பெண் பார்க்க வந்த மன்னவனின் மனதைப் புண்படுத்திய மருத நாட்டின் மகளே! ஆண் அழகை முகத்தில் பார்க்காதே… அகத்தில் பார்! மற்றவர்களின் மனதைப் புண்படுத்துவதற்கு பதிலாக, நீ கூறிய அதே… அதே பதிலை, கொஞ்சம் புன்னகையுடன் கூறிப்பார்!

அப்பொழுது நீ அறிவாய்… அதில் இருக்கும் இனிமை! அவைதான் நீ பொறந்த நாட்டிற்கும் புகுந்த வீட்டுக்கும் பெருமை!! பார்த்தாயா… தமிழ் மொழியின் அருமை!!!

மீனா:  எல்லாரும் கை தட்டினா… நீ என்ன பெரிய ஆளா?

ரஜினி:  அவங்க கை தட்டிதாம்மா எல்லாரும் பெரிய ஆளாயிருக்காங்க…

மீனா:  டிராமா பார்க்க வந்தாயா? இல்ல… வம்பிழுக்க வந்தாயா?

ரஜினி:  வம்புக்கு நான் இழுக்கல

மீனா:  என்ன… திமிரா?

ரஜினி:  அது எனக்கில்ல

மீனா:  பின்ன எனக்கா?

ரஜினி:  அப்படீன்னு நான் சொல்லல

மீனா:  யோவ்… நீ உன் மனசுல என்னதான் நெனச்சுட்டிருக்கே?

பொதுவாக என் மனசுத் தங்கம்… ஒலிக்கிறது.

கண்டு ரசிக்க:

மீனா:ரஜினி:

Netflix Queues

  1. No Country for Old Men (2007)
  2. Juno (2007)
  3. The Kite Runner (2007)
  4. Atonement (2007)
  5. Outsourced (2006)
  6. Before the Devil Knows You’re Dead (2007)
  7. American Gangster (2007)
  8. Starting Out in the Evening (2007)
  9. Lars and the Real Girl (2007)

Bhoomikku Velichamellaam: Dishum – Songs

தேன் கிண்ணம்:

பூமிக்கு வெளிச்சமெல்லாம் நீ கண் திறப்பதனால்
பூவுக்கு பனித்துளிகள் நீ முகம் கழுவுவதால்
கடலுக்கு நுரைகளெல்லாம் நீ பல் துலக்குவதால்
காலையில் அடித்தமழை நீ என்னை தழுவியதால்

நீ விழியால் விழியை பறித்தாய்
உன் உயிரினை எனக்குள்ளே விதைத்தாய்
உன் அழகால் எனை நீ அடித்தாய்
அய்யோ அதிசய உலகத்தில் அடைத்தாய்

நீ இதமாய் இதயம் கடித்தாய்
என் இதழ் சொட்டும் அருவியில் குளித்தாய்
நீ மதுவாய் எனையே குடித்தாய்
இந்த உலகத்தை உடைத்திட துடித்தாய்

நீ மெதுவாய் நடந்தால் கடந்தால்
என் உணர்ச்சிகள் தீப்பிடித்து எரியும்
ஏய் நீ துளியாய் எனக்குள் விழுந்தால்
என் உயிர் பனிக்கட்டியாக உறையும்

நீ இயல்பாய் அழைத்தால் சிரித்தால்
என் உள்ளம் வந்து மண்டியிட்டு தவளும்
நீ நெருப்பாய் முறைத்தால் தகித்தால்
என் நெஞ்சிக்குள்ளே கப்பல் ஒன்று கவிழும்

கண்களில் மின்மினி புன்னகை தீப்பொறி
மின்னலில் சங்கதி புரிகின்றதே
தொட்டவுடன் உருகும் ஒட்டிக்கொண்டு பழகும்
புத்தம் புது மிருகம் தெரிகின்றதே

படம்: டிஷ்யூம்
இசை: விஜய் அந்தோனி