Category Archives: பொது

யாரைப் பார்த்தால் அரசர் போல் இருக்கிறது?

ரேகன் போன்ற சினிமா நடிகர்களின் கவர்ச்சியும் உயரமும் கென்னடியின் ஹீரோ அடையாளமும் க்ளின்டனின் காந்த உருவமும் அவர்களின் வெற்றியில் முக்கிய பங்கு வகிக்கும்.

பெரும்பாலான அமெரிக்கர்கள் ஆஜானுபாகுவானவர்கள். அவர்களுடன் இரயிலில் பயணம் செய்யும்போது என்னைப் போன்ற போஷாக்கான இந்தியர்களே ஸ்னோ வைட்டின் சித்திரக்குள்ளர் போல் காட்சியளிப்போம்.

இப்படிப்பட்டவர்கள் பராக் ஒபாமாவின் ஒடிசலான தோற்றத்தோடு அடையாளம் காணமுடியுமா?

அந்தப் பக்கம் சங்கர்தயாள் சர்மா போல் படிகளில் ஏறி இறங்க சிரம்ப்படும் போர்க்காயங்களோடு வாழும் ஜான் மெகயின். அவரை இளைய தலைமுறை எவ்வாறு பார்க்கும்?

சதா சர்வகாலமும் தொலைக்காட்சியும் யூ-ட்யுபும் இருக்கும் இன்றைய காலகட்டத்தில் நடை, உடை, பாவனை, ஆகிருதியின் பங்கு என்ன?

எப்படி உயரம் தலைமையை அடைய உதவுகிறதோ அதே அளவு பருமனும் உதவுகிறது என்று தோன்றுகிறது. பாருங்களேன் கடந்த காலத்தை.

நன்றி: Op-Chart – Op-Chart – The Measure of a President – Interactive Graphic – NYTimes.com

Jimmy Carter’s height. He is 5 feet 9 ½ inches tall, not 6-foot-1. In addition, the measurements for Thomas E. Dewey and John Davis were reversed: Dewey was 5-foot-8 and 160 pounds, while Davis was 6 feet and 190 pounds.

Thekkikattan: Carbon credits, Obama & Republicans

பதில்களை இந்த வாரம் வழங்குபவர் தெக்கிகாட்டான். (முந்தைய பகுதி)

2. ‘இந்தியா போன்ற நாடுகள் தொடர்ந்து சுற்றுச்சூழலை மாசுபடுத்துகின்றன. அவற்றைத் தடுக்க ஆவன செய்யவேண்டும்’ என்றிருக்கிறார் ஒபாமா. கமல்நாத், மறைந்த மாறன் போன்றோர்கள் இப்படி செய்வது இந்தியா போன்ற வளரும் பொருளாதாரங்களுக்கு எத்தகைய சேதத்தை இத்தகைய கிடுக்கிப்பிடிகள் கொடுக்கும் என்பதை விவரித்துள்ளனர். ஒபாமா வலியுறுத்தும் carbon credits என்பது சாத்தியமானாலும் ஆப்பிரிக்காவிற்கு சல்லிசான விலையில் குப்பையை ஏற்றுமதி செய்யும் வித்தைக்கு இட்டுச்செல்லாதா? ஏழை நாடுகளிடம் இருந்து குறைந்த பேரத்தில் கரியமிலக் கழிவுகளை (தற்போதைய நிதிபேரம் போல்) வாங்கிவிட்டு, அமெரிக்கா தன்பாட்டுக்கு நச்சை உண்டாக்கும் திட்டத்திற்கு ஒபாமா ஆதரவுக்கரம் நீட்டுகிறாரா?

குடியரசு கட்சி அன்பர்கள் இந்த உலகச் சூடேற்றம் என்ற ஒன்றே புணைவுக் கதை என்ற ரேஞ்சில்தான் வைத்து உலக வர்த்தகத்தை வளர்த்து வருகிறார்கள்.

இயற்கையா அது பாட்டுக்கு தன் நிகழ்வுகளை நடத்திக் கொண்டிருக்கும் ஏற்கெனவே படமாக்கப்பட்ட ஒரு படச் சுருள் என்பதனைப் போன்றுதான் அவர்களின் இயற்கைசார் அறிவு என்பது எனது கருத்து. அது கண் கூடு எது போன்ற வாகனங்களுக்கு அவர்களின் வரி விலக்கு வழங்கும் மண்டை என்பதனைக் கொண்டு (ஒரு சமயத்தில் ஹம்வீ வாங்குபவர்களுக்கு வரி விலக்கு விதிக்கப்பட்டது…) காணலாம்.

இந்த நிலைமையில் உலகச் சூடேற்றம், க்ரீன் ஹவுஸ் வாயுக்களின் வெளிப்பாட்டைய் கட்டுப்படுத்தல் போன்றவைகளிளெல்லாம் அவர்களின் நிலைப்பாடு எதுவாக இருக்கும் என்பதும் யாவரும் அறிந்து கொள்ளும் வண்ணமாகத்தான் இருக்கும்.

வர்த்தகம் என்பது இருவழிச் சாலை என்று இங்கு மாசுக்களை உருவாக்கும் அத்தனை தொழிற்சாலைகளையும் சைனா, இந்தியா, வியாட்நாம், மொக்சிகோ போன்ற வளரும் நாடுகளுக்கு தள்ளிவிட்டுவிட்டு அங்கு காற்று, நீர் மற்றும் நிலம் போன்றவைகளை கட்டற்ற மாசுக்களின் மூலமாக நிகழ்த்த விட்டு வேடிக்கை பார்க்கும் ஒரு கட்சியாகத்தன் இருக்கிறது இந்தக் குடியரசுக் கட்சி. ஏனெனில் அவ் நாடுகளில் அப்படி ஒரு மாசுக் கட்டுப்பாடு வாரியமே விலை கொடுத்து வாங்கப்படும் நிலையிலிருப்பதனால்தான், அங்கே அவ்வாறு அத்தனை மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகளும் தள்ளி விடப்படுகின்றன.

இதற்கு முத்தாய்ப்பாக கியோட்டோ ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமல் ஒதுங்கிக் கொண்டதும், மற்றுமொரு குடியரசுக் கட்சிக்காரர்களின் இயற்கைசார் அறிவின் பின்னடவை காட்டும் காட்டுத் தனமன்றி வேறென்னவாக இருக்க முடியும்.

இந்நிலையில், ஓபாமாவின் இந்த கார்பன் க்ரீடிட் திட்டம் சற்றே ஆறுதல் அளிக்கும் வகையிலேயே உள்ளது. இரும்புக்கரம் கொண்டு ஏதோ ஒரு வகையில் தொழிற்சாலைகள் வெளியேற்றும் கரியமிலா வாயுவை ஒரு குறிப்பிட்ட அளவிற்கு கட்டுப்படுத்துவதின் மூலம் உலகச் சூடேற்றத்தின் தாக்கத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரக் கூடிய சாத்தியக் கூறுகள் அதிகம்தானே.

இதன் மூலமாக சில குளறுபடிகள் கார்பன் க்ரீடிட்களை வாங்குவது, கொடுப்பதின் மூலம் நடந்தாலும், அந்த ப்ரக்ஞையுணர்வே மேற்கொண்டு நடவாமல் இருக்க கட்டுபடுத்தப்படலாமென்று தோன்றுகிறது. அவ்வாறு க்ரீடிட் பேரத்தின் மூலம் வாங்கும் கம்பெனிகள் பெரும் அளவில் நஷ்டமடைய நேரும் பட்சத்தில் மேற்கொண்டு கழிவுகளை கட்டுப்படுத்தத்தான் விளையுமே தவிர மேற்கொண்டு பேரத்தின் அடிப்படையில் நஷ்டமடைய முன் வர மாட்டார்கள் என்றே கருதுகிறேன்.

…Under a cap-and-trade plan, companies that produce carbon dioxide and other greenhouse gases receive or buy credits that give them the right to emit a certain amount. Companies that emit less carbon than their credits allow can profit by selling any excess credits on the open market, while those that exceed their emission allowance have to make up the difference or face heavy fines…

3. எத்தனால்: உணவுப்பண்டங்களின் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக இது சுட்டப்படுகிறது. இது கோளாறான கோட்பாடுதானா? இதன் பின்னும் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஒபாமாவிற்குத்தான் உங்கள் ஆதரவா?

நாளை…

இந்த வார அலசல் – சுற்றுச்சூழல், தூய்மைக் கேடு, புவி வெப்பமடைதல்

எல்லா கேள்விகளுமே ரொம்ப நுண்னோக்கி மூலமா பார்த்து அலசி ஆராய்ஞ்சாத்தான் பதிலை வழங்க முடிய்ங்கிற மாதிரி அமைஞ்சு போச்சு எனக்கு மட்டும்.

அமெரிக்கா அப்படின்னாலே உலக வல்லரசா தன்னைத் தக்க வைத்துக்கொள்ள சில பல வித்தைகளை அது குடியரசுக் கட்சியாக இருந்தாலும் சரி அல்லது ஜனநாயகக் கட்சியாக இருந்தாலும் தன் நாட்டினுடைய சுய லாபத்திற்காக செய்துதான் ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது அப்படிங்கிற மறுப்பதற்கில்லை.

தன் நாட்டின் எல்லையைத் தாண்டி வந்துவிட்டால் அவர்களின் உலக அரசியல் அணுகுமுறை எது போன்ற ஆயுதத்தை எடுத்து எந்த நாட்டுடன் போரிடுகிறார்கள் என்பதனைப் பொருட்டே வெளிப்பார்வைக்கு எல்லோராலும் அறியப்படுவதாகவும், கண்ணுக்குகிட்டாமல் தன் நாட்டிற்கு லாபத்தை ஈட்டித் தருவதாகவும் அமைத்துக் கொள்கிறது – வெளியுறவுத் துறையில் இரு கட்சிகளுமே.

அதன் அடிப்படையில் இப்பொழுது இரு பாலருமே உலக அரசியல் மேடையில் எது போன்ற இரட்சகர்களா மற்ற நாடுகளுக்கு இருப்பார்கள் என்பதனைக் கொண்டு எனக்குக் கொடுக்கப் பட்டிருக்கும் கேள்விகளை பார்க்கலாம்.

1. சுற்றுச்சூழலுக்கு எதிரியான, நிலச்சுவாந்தார்களுக்கும் பண்ணையார்களுக்கும் நேசக்கரம் நீட்டும் மசோதாக்களை ஆதரிப்பவர் ஒபாமா. (வாசிப்பிற்கு: Bloomberg.com: Politics – Obama May Get Rural Votes on Farm-Subsidy Support) மகயின் இதை வெளிப்படையாக எதிர்த்திருக்கிறார். உணவுப்பண்டங்களின் உலகளாவிய விலை உயர்வுக்கு இந்த மசோதாவும் ஒரு காரணம். வளர்ந்த நாடுகள் தங்கள் விவசாயிகளைத் தேவைக்கு மீறி பாதுகாக்கிறது என்பது புஷ் மற்றும் மெகயினின் கருத்து. உங்க கருத்து என்ன?

சில வளர்ந்த நாடுகள் குறிப்பாக அமெரிக்கா அதிலும் ஜனநாயகக் கட்சி அதீதமாக பண்ணையார்களுக்கு மானியம் கொடுத்து விவசாயப் பண்டங்களை அதிக உற்பத்திக்கக் காரணம் வேறு மாதிரியான ஓர் போர் உத்தியாகத்தான் என்னால் பார்க்க முடிகிறது.

குடியரசுக் கட்சி நேரடியாக எண்ணெய்க்கெனவும், போர் கருவிகளை விற்பதிலும் சிறப்புக் கவனம் செலுத்தி அதன் மூலம் பொருளீட்டி நாட்டிற்குள் எடுத்து வருகிறதெனில், ஜனநாயகக் கட்சி அதனையே வேறு உருவத்தில் நிகழ்த்திக் கொள்கிறது. ஆக, இரு பாலரின் சுய-ஆர்வம் தனது நாட்டின் பொருளாதாரத்தை பெருக்குவது ஒன்றே குறி.

ஏன் குடியரசுக் கட்சி இதனை எதிர்க்கிறார்கள்? இந்த விசயத்தில் நல்ல பிள்ளையாக உலகிற்கு காட்சியளிக்கிறார்கள் என்றால் எல்லாம் அரசியல் சித்து விளையாட்டுத்தான்.

ஒரு பக்கம் ஈராக்கிலும், ஆஃப்கானிஸ்தானிலும் ஒன்றுமறியா குடிமக்களை நேரடியாக கொன்று குவிப்பது, மறு முனையில் இது போன்ற நல்ல விதத்தில்தான் அரசியல் உலகரங்கில் நடத்துவதாக பறைசாற்றிக் கொள்ளவும் உதவலாமென்ற அக்கறையிலாக இருக்கலாமென்று என்னால் எண்ண முடிகிறது. மற்றபடி உலகம் சுபிட்சமுற்று இருக்க வேண்டின் அந்த மசோதாவை செனட்டில் கொன்றதாக தெரியவில்லை.

இந் நிலையில் அது இந்தியாவிலருந்து ஏற்றுமதியாகும் உணவுப் பண்டங்களாகட்டும் அல்லது சிறு தீவான ஜமாய்க்கவாகட்டும் எங்களுடைய உற்பத்தி விலைக்கு உங்களால் ஈடுகட்டி ஏற்றுமதி நடத்த முடியவில்லையெனில், ட்டூ பேட். இதற்காக இன்னொரு போரா நிகழ்த்த முடியும் பணத்தை உற்பத்திக்க என்றொதொரு சித்தாந்தமாக ஜனநாயகக் கட்சியின் அணுகுமுறை இருக்குமோ.

இந் நிலையில் தீணிப் போட்டு அடி பட்டு சாவதை விட (குடியரசுக் கட்சியின் நீண்ட கால திட்டம் – வர்த்தகத்தை பிற நாடுகளும் செய்து பின்னாளில் அதனை தட்டிப் பறிக்க போரிடுவது இவர்கள் பாணியெனில்), இது போன்று அதீதமாக உணவு பொருட்களை உலக சந்தையில் நுழைத்து அதன் பெயரில் பொருளீட்டுவது என்னவோ சரியாகப் படுகிறது. இந்தக் கரையோரம் இப்ப ஒதுங்கிப் போயி கிடப்பதால்.

இதன் மூலமாக வளரும் நாடுகள் போராடி உணவு உற்பத்தியின் தரத்தையும், விளைச்சலையும் தொழிற் நுட்பத்தில் பெருக்கி இவர்களைப் போலவே போராடி உலக சந்தையில் ஜெயிக்க வேண்டி நிர்பந்திக்கப்படுகிறது.

2. ‘இந்தியா போன்ற நாடுகள் தொடர்ந்து சுற்றுச்சூழலை மாசுபடுத்துகின்றன. அவற்றைத் தடுக்க ஆவன செய்யவேண்டும்’ என்றிருக்கிறார் ஒபாமா. கமல்நாத், மறைந்த மாறன் போன்றோர்கள் இப்படி செய்வது இந்தியா போன்ற வளரும் பொருளாதாரங்களுக்கு எத்தகைய சேதத்தை இத்தகைய கிடுக்கிப்பிடிகள் கொடுக்கும் என்பதை விவரித்துள்ளனர். ஒபாமா வலியுறுத்தும் carbon credits என்பது சாத்தியமானாலும் ஆப்பிரிக்காவிற்கு சல்லிசான விலையில் குப்பையை ஏற்றுமதி செய்யும் வித்தைக்கு இட்டுச்செல்லாதா? ஏழை நாடுகளிடம் இருந்து குறைந்த பேரத்தில் கரியமிலக் கழிவுகளை (தற்போதைய நிதிபேரம் போல்) வாங்கிவிட்டு, அமெரிக்கா தன்பாட்டுக்கு நச்சை உண்டாக்கும் திட்டத்திற்கு ஒபாமா ஆதரவுக்கரம் நீட்டுகிறாரா?

நாளை…

பதில்களை இந்த வாரம் வழங்குபவர் தெக்கிகாட்டான்

அடுத்த அதிபருக்கு Action Plan – பத்மா அர்விந்த்

பத்மா அர்விந்த் கருத்துகளின் தொடர்ச்சி…

5. அடுத்த அதிபருக்கு நீங்கதான் தொழில்நுட்ப ஆலோசகர். என்ன அட்வைஸ் கொடுப்பீங்க?

சில துறைகள் பற்றி மட்டும் இங்கே:

இமிக்ரேஷன்:

வேண்டும் என்கிறபோது இம்க்ரேஷன் துறை கண்டும் காணாமல் இருக்கிறது. சட்டவிரோதமாக வரும் நிறைய ஹிஸ்பானியர்கள், ஆசியர்கள் கட்டிட தொழில், சுற்றுப்புற சுத்தம் செய்யும் தொழிலில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். இதில் சட்டத்திற்கு விரோதமாக வரும் மக்களின் தேவை மட்டும் இல்லாமல் மிக குறைந்த ஊதியம் கொடுத்து எந்த வித பாதுகாப்பும் தர வேண்டாமல் இலாபம் ஈட்டும் அமெரிக்கர்களின் பேராசையும் அடங்கும்.

அட்லாண்டாவில் ஒலிம்பிக்ஸ் போது கட்டிடடம் கட்ட வந்த பல மெக்சிகோகாரர்களின் குழந்தைகள் பள்ளியில் படிக்கும் போதே ஆளான கேலியும் கிண்டலும் துன்பங்களும் நிறைய குழுக்களை ஆரம்பிக்க காரணமாகின. இவற்றல் உயிரிழந்த குழந்தைகள் நிறைய பேர். இப்போது திடீரென சட்டவிரோதமாக வந்த மக்கள் வெளியேற வேண்டும் என்று சொல்வது எப்படி நியாயமாகும்?

அதற்கு மாறாக தேவைப்பட்டு மக்களை சட்டவிரோதமாக்க கடத்தப்படுவை கண்டும் காணாமல் இருக்காமல், சட்ட பூர்வமாக தற்காலிக விசா தந்து, அவர்களுக்கும் நியாய ஊதியம் கிடைக்க வழி செய்ய வேண்டும். இவர்கள் சட்ட விரோதமாக வந்தாலும் அவர்களுக்கு குழந்தை பிறந்தால் அதன் முழு பாதுகாப்பையும் ஏற்றுக்கொள்ளும் அரசு, அதற்காக ஆகும் செலவு பற்றி யோசிப்பதற்கு முன், இவர்கள் சட்டவிரோதமாக இங்கே கடத்தப்பட்டு வருவதே தங்கள் பேராசைதான் காரணம் என்பதை உணர வேண்டும். அவர்களை பணிக்கு அமர்த்தும் நிறுவனங்கள் இதற்கு பொறுப்பேற்க வேண்டும். இதனால் பல சட்ட விரோத நடவடிக்கைகள் குறையும். அது வருங்காலத்தில் சேமிப்பிற்கு வழி வகுக்கும்.

போக்குவரத்துத் துறை:

மத நிறுவனங்களின் தலையீடு அமெரிக்க தலைவர்களின் கொள்கை சார்பினை நியாயப்படுத்துவதால், 1990களின் ஆரம்பத்தில் இருந்தது போல் அல்லாமல் இப்போதெல்லாம் ஆராய்ச்சிகள் சார்புடையதாகிக்கொண்டு வருவதாக எனக்கு தோன்றுகிரது. அறிவியலாகட்டும், தொழில் நுட்பமாகட்டும் தனித்து சுதந்திரமாக இயங்க வேண்டியது கட்டாயமாகும்.

புதிய போர் தளவாடங்களை வடிவமைக்க ஆகும் செலவில், சில அடிப்படை பிரச்சினைகளை தீர்வாக நிதி ஒதுக்கலாம்.

இன்னும் கொஞ்ச நாளில் அமெரிக்கா முதியவர்கள் அதிகமாக இருக்கும் நாடாக போகிறது. இதில் பலருக்கு வருமானம் என்பது பென்ஷன், சோசிஷியல் செக்யூரிட்டி ஆகியவை மட்டுமே என்னும் போது காரும், பெட்ரோலும், அதற்கான காப்பீடும் ஒரு பாரமாகிப்போகும். உடல்நலம் தொய்வடையும் தருணம், கார் ஓட்டுவதுகூட முடியாததாகும். இதற்கெல்லாம் பொது போக்குவரத்தை வடிவமைக்க வேண்டியது மிக அவசியமாகும். மக்களின் டோல் வரியை உபயோகித்து இன்னும் அதிக சாலைகள் வடிவமைப்பதை போலவே, பேருந்துகள் போன்றவற்றில் கவனம் செலுத்த ஆ ரம்பிக்கலாம்.

Foster Care:

மருத்துவக் காரணங்கள், இல்லை பதின்ம வயது பெண்கள், போதைப் பழக்கம், அல்லது மதுவிற்கு அடிமையானவர்கள் நிரந்த குடும்பசூழலை கொடுக்க முடியாதவர்கள் கருவைக் கலைக்க விரும்பினால் அது சரியே. இதில் அரசு தலையிட்டு குழந்தை வளர்ப்பை தான் எடுத்துக் கொண்டு கோடிக்கணக்கில் செலவு செய்வது அனாவசியம்.

சின்ன குற்றங்களுக்காக dyfs தலையிட்டு குழந்தைகள் பொருப்பை எடுத்துக் கொண்டு பிறகு foster care இல் ஒப்படைக்கிறது. இதற்காக ஒரு குழந்தைக்கு மாதம் $800 தருவதால் சில பெற்றோர்கள் அந்த பொறுப்பை ஒரு வேலையாக எடுத்துச் செய்கிறார்கள்.

அதன் பிறகு அவர்கள் தனியே வாழவோ அல்லது தத்து எடுத்துக் கொள்லவோ தயார் செய்யப்படுகிறார்கள். குழந்தைகள் மீண்டும் பெற்ரோரிடம் செல்ல வேண்டுமானால், மன நல மருத்துவர்கள், 6 பேர் கொண்ட ஒரு குழு ஒருமனதாக முடிவெடுக்க வேண்டும். இதைப் பயன் படுத்தி மன நல ஆலோசனையை நேரம் இல்லாமை போன்ற காரணங்களுக்காக தட்டிக் கழிப்பது அது மீண்டும் நீதி மன்றத்தீற்கு வருவது போன்ற செயல்பாடுகள் அதிகம் செல்வாவதோடு, குழந்தைகள் நலத்தையும் பாதிக்கிறது. இதை தடுக்கவும் சீக்கிரமே அவர்கள் ரெச்பைட் (respite) பாதுகாக்கப்படவும் கிளிண்டன் அரசு தீர்மானங்கள் எடுத்தது.

அபார்ஷன் சட்டரீதியாக இல்லாத மாநிலங்களில் இந்த ஆதரவற்ற குழந்தைகள் காக்கும் பொறுப்பு ஒரு சோஷியல் பணியாளருக்கு 200 வரை போக, நிறைய கவனக்குறைவுகள் உண்டாகின்றன. அரசாங்கம் பொறுப்பேற்காமல், பெற்றோர் அதிக பொறுப்புடன் இருக்கவும், குறைந்த பட்சம் 6 மாத காலத்துள் அந்த குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பையும் அல்லது அதற்கான செலவை தண்டனையாக கட்டவும் செய்ய வேண்டும்.

உள்நாட்டு பாதுகாப்பு:

பறவைக்காய்ச்சல் மற்றும் உயிரியல் தீவிரவாதம், வேதியியல் ரேடிய கதிர் தீவிர வாதம் என்று எல்லாத்துறைகளிலும் அனாவசியமாக செலவழிக்கப்படும் நிதியை அங்கிருந்து பொது நலத்திட்டத்திற்கு மாற்ற செய்வேன். FEMA போன்ற நிறுவனங்கள் அவசரக்காலம் மட்டும் அல்லாமல் பொதுவாகவே மக்களின் விழிப்புணர்ச்சியை தூண்டு வண்ணம் செயல் படலாம்.இது குறித்து

உடல்நலத்துறை:

காப்பீடுகள், அதன் காரணமாக மிக அதிகமான மருத்துவ செலவுகள் என்ற சுழற்சி இங்கே மருத்துவ கவனிப்பை சாதாரண மக்களுக்கும், நடுத்தர மக்களுக்கும் மிகவும்கடினமாக மாற்றி இருக்கின்றன. ஒவ்வொருவரும் சிகிச்சை முடிந்து தேர்ச்சிபெறஆகும் காலத்தை காப்பீடுகள் தீர்மானிப்பதை நிறுத்த வேண்டும். இப்போது மன நலத்திற்கும், வன்புணர்ச்சிக்கான கவுன்சிலிங்கிற்கும் 10 sitting , 15 sitting என்பதையெல்லாம் காப்பீடுகளே தீர்மானிக்கின்றன. இதுவும் தீவிரம், நோயாளியின் தனித்துவம் பொறுத்து மாறும்.

மருத்துவ சிகிச்சைக்காக வரும் போது விசா பற்றிய கேள்விகள் கூடாது என்றாலும், அதிகரித்துவரும் மருத்துவ செலவுகள் மற்றவர்களின் காப்பீடு கட்டணத்தை உயர்த்துகின்றன. இதை தீர்க்க முறைக்கப்பட்ட charity care நிதியை உடனடியாக அதிகரிக்க செய்வேன். மேலும் நோய் வந்தபின் அதை சரிபார்ப்பதைவிட interventionஇல் அதிக கவனம் செலுத்த சொல்வேன்.

முதுமை இல்லங்களில் ஆள்பற்றாக்குறையை சரி செய்ய வேண்டியதும் அதற்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிப்பதும் முக்கியம். பரிந்துரை செய்யப்பட்ட மருந்துகள், உணவு துறையின் கட்டுப்பாட்டில் வரும் சில மருந்துகள் பற்றி இன்னமும் யோசனைகள் எழுத ஆரம்பித்தால் இப்போதைக்கு முடியாது என்பதால் இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன்.

போரில் இருந்து வரும் வீரர்கள், வியட்னாம் வீரார்கள் இவர்களின் மன அழுத்தம் அதிகரித்து மன நோய் பெருகிவரும் இந்நேரம், மன நலனில் அதிக கவனம் செலுத்த வேண்டியதும் முக்கியம்.

முக்கியமாக, மது அருந்தும் சட்ட வயது வரம்பை 18 ஆக குறைக்க வரும் மசோதாவை இப்போதைக்கு எதிர்க்கிறேன்.

ஒரு சில எண்கள்: அமெரிக்க அதிபர் தேர்தல்

  • ஜனநாயகக் கட்சி மாநாட்டிற்கு ஆதரவு அளிக்கும் தனியார் நிறுவனங்கள்: 75
  • குடியரசுக் கட்சி மாநாட்டிற்கு ஆதரவு அளிக்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை: 50
  • அமெரிக்காவின் தலை 0.1% அதிக சம்பாத்தியக்காரர்களுக்கு ஒபாமாவின் வரித்திட்டத்தினால் கிட்டும் இழப்பு: 5 %
  • அதே பெரும்பணக்காரர்களுக்கும் ஜான் மகயின் அதிபரானால் மாறும் வருமான வரி சதவீதம்: +12%
  • தற்போதைய புஷ் அரசினால் தலை ஒரு சதவிகித செல்வந்தர்களுக்கு கிடைத்திருக்கும் வருமான உயர்வு: 75%
  • அமெரிக்காவின் ஆர்க்டிக் நிலப்பரப்பில் எண்ணெய் எடுப்பதால் கச்சா எண்ணெய் விலை எவ்வளவு தூரம் குறையும்: நான்கு சென்ட்கள் (ஒரு காலனுக்கு)

State of Women Leaders in USA – Padma Arvind

சென்ற பதிவின் தொடர்ச்சி

2. (கேள்வி கேட்டவர் ஸ்ரீதர் நாராயண்) சாரா பேலின் ஹிலாரியை விட வேகமாக இருக்கின்றாரே. பாட்டியாகும் விஷயத்தில்தான். 2012-ல் ஆல்-வுமன் அதிபர் தேர்தலாக ஆகக் கூடிய சாத்தியக் கூறுகள் எப்படி

நிச்சயம் இல்லை.

ஏதேனும் ஒரு பெண் வேட்பாளர் இருக்க கூடிய சாத்தியம் மட்டுமே இருக்க முடியும். சாராவிற்கு கிடைத்தது எதிர்பார்க்காத பரிசு, ஹிலரியின் ஆதரவு வாங்குகளை பெற மெக்கெயின் போட்ட ஒரு கணக்கு.

இங்கே அரசுத்துறையில் பெண் அதிபர்கள் வருவது இன்னமும் பரவல் ஆகவில்லை. அப்படி ஆகும் என்றும் எனக்கு தோன்றவில்லை. என்னை பொருத்தவரை அதிபராக நிர்வாக திறமைக்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டும் அல்லாது genderக்கு அல்ல.

எனக்கு சாராபேலின் பல கொள்கைகள் உடன்பாடில்லை, பெண் என்ற ஒரே காரணத்திற்காக அவரை ஆதரிக்க முடியாது.

3. மெகயினின் பிரச்சாரத்தில் எந்த நிலைப்பாடு உங்களுக்கு உவப்பானதாக அமைந்திருக்கிறது?

தற்போதைய ஆட்சியை அதிகம் குறை சொல்லாமல் அதிலும் சமீபத்திய பொருளாதார சரிவுக்கிடையில் சமாளிக்கும் முதிர்ச்சி. முட்டை ஓட்டின் மேல் நடப்பது போன்ற கவனத்துடன் கையாளும் நகைச்சுவை கூடிய பிரச்சாரம்.

4. உதட்டுச்சாயம், பன்றி மொழியைப் பரவலாக இரு ஆண் ஜனாதிபதி வேட்பாளரும் பயன்படுத்துகிறார்களே. சாரா பேலினையும் ஹில்லரி க்ளின்டனையும் இவர்கள் குறிப்பிடவில்லை என்றாலும் லிப்ஸ்டிக் தவிர வேறு பொருத்தமான அடைமொழி பயன்படுத்தி இருக்கலாமோ? முகஞ்சுளிக்க வைக்கிறதா? வேறு பேச்சுகள் ஏதாவது அதிர்ச்சி அடைய வைத்ததா?

அரசியல் என்றில்லை, பொதுவாகவே அலுவலகங்களில் கூட சில சமயங்களில் (குறிப்பாக பெண்கள் தலை பொறுப்பேற்கும்) இது போன்ற பிரயோகங்கள் சகஜமாக பயன்படுத்தப்படுகின்றன. முன்போல அல்லாமல், பெண்களும் பேசக்கேட்பது சகஜம், இங்கே (நியுஜெர்சி) நகரசபை கூட்டங்களில் சில சமயங்களில் இன்னமும் கேவலமாக பேசுவது மட்டும் இல்லாமல்,கைகலப்பில் எல்லாம் முடிந்திருக்கிறது.

ஆகக்கூடி பொதுவாழ்க்கை வருபவர்கள் ஆணானாலும் பெண்னானாலும் தடித்த தோலுடனான வாழ்க்கைக்கு பழகிக்கொள்ளத்தான் வேண்டும். இதில் முகம் சுளிக்க வைக்கவோ சினம் கொள்லவோ எதுவும் இல்லை. When you know it’s a pissing match, be ready with an umbrella is a common phrase!!

5. அடுத்த அதிபருக்கு நீங்கதான் ஆலோசகர். என்ன அட்வைஸ் கொடுப்பீங்க?

தொடரும்…

இலவசக்கொத்தனாரின் US Election Cookies

தமிழகத்தில் அன்னமிட்டு வாக்கு கேட்பார்கள்; அமெரிக்காவில் இனிப்பு விற்று பணம் பண்ணுகிறார்கள்.

நியு யார்க் நகரத்தின் இருவுள் நிலையத்தில் அமெரிக்க அதிபர்களின் பிஸ்கட்களை விற்பதை புகைப்படம் எடுத்து அனுப்புகிறார் இலவசக்கொத்தனார்.

எடுத்த இடம்: கிராண்ட் சென்ட்ரல் ட்ரெயின் ஸ்டேசன்

ஃப்ளிக்கரிலும் குக்கி கடை பரப்பியிருக்கிறது.

இந்த வார விருந்தினர்: பத்மா அர்விந்த்

பத்மா அர்விந்த்திடம் ஐந்து கேள்விகள்: (மாற்று தேர்ந்தெடுப்புகள் | தமிழோவியம் தொடர்கள் | வலைப்பதிவு)

1. ஒபாமா & மக்கயின் ஆகிய இருவரின் உடல்நலம்/சேமநிதி காப்பீடு (Health care/Insurance) திட்டங்களை ஒப்பிட முடியுமா? அடிப்படை நல்வாழ்வுப் பராமரிப்பு தருவதில் எவர் தொலைநோக்கு உடையவர்? ஏன்?

உடல் நலம் என்பது பல கூறுகளை கொண்டது.

  • காப்பீடு மட்டும் அல்லாமல்,
  • மருத்துவர்களின் ஆரம்பகால அறிவுரைகள் (early intervention),
  • மருத்துவரை சென்று பார்க்க வாகன வசதி (transportation),
  • புரிகிற மொழியில் மருத்துவர்கள் சொல்வதை, மருந்துகளை எடுத்துக்கொள்வதை கிரகிக்க கூடிய எளிமை (health literacy)
  • மருத்துவர்கள் அறையில் காத்திருக்க கூடிய நேர அளவும்(waiting time),
  • மருத்துவரை சந்திக்க கிடைக்கும் முறை (appointment)

இவையாவுமே இன்றைய அமெரிக்காவில் மிகவும் மோசமான நிலையில் உள்ளது.

பல்வேறு மொழி பேசக்கூடிய பல்வேறு கலச்சாரங்களை கொண்ட மக்களிடம் அவர்களுக்கு தோதான முறையில் (comfort zone) மருத்துவர்கள் பழகக்கூடிய முறை (cultural competency) ஆகியவற்றில் இன்னமும் கவனம் தேவை. இவையாவும் சேர்ந்த access to care பற்றிய பற்றாக்குறையை இரு தலைவர்களின் திட்டமும் நேர்த்தியாக அணுகவில்லை.

குழந்தைகளுக்காக காப்பீடில் பிரச்சினை அதிகம் இல்லை. பெற்றோர்களின் காப்பிடு அல்லது அப்படி பெற்றோர்கள் ஏழ்மையில் இருந்தால் மெடிகெய்ட் என்று பரவாயில்லாத உடல்நலக்காப்பீடு இருக்கிறது. அதுவும் சென்ற ஆண்டு நிதிக்குறைப்புக்காளானது.

எத்தனை பேர் ஒருவரின் வருமானத்தை நம்பி இருக்கிறார்கள் என்ற அடிப்படையில் வறுமைக்கோட்டின் கீழ் வருவோருக்கு அரசு பல இலவச மருத்துவ உதவிகள், FQHC போன்றவை நடத்துகிறது. அதிகம் பாதிக்கபடுபவர்கள், காப்பீடு இல்லத மக்களின் குறிப்பிடக்கூடிய சதவிகிதம் தொழில்துறையில் consultants, சிறிய வியாபாரிகள், நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே.

18 வயதான பிறகு கல்லூரி செல்லும் வயதில் உள்ளவர்கள் 19 முதல் 24 வரை இருப்பவர்கள் பெரும்பாலான மாநிலங்களில் கல்லூரியில் படித்தால் அதுவும் முழுநேர மாணவர்களாக இருந்தால் மட்டுமே குறைந்த கூடுதல் கட்டணத்தில் (additional amount) பெற்றோரின் காப்பீடில் இருக்க முடியும். கல்லூரிக்கு செல்லமாட்டாமல் வேலைக்கு செல்பவர்கள் கிடைக்கும் குறைந்த வருமானத்தில் எப்படி காப்பீடு பெற்றுக்கொள்ள முடியும்?

இந்த இளைஞர்கள் திடீரென அரசு ஆவணங்களில் இருந்து காணாமல் போய், மீண்டும் தங்களுக்கான குடும்பம் அமைத்துக்கொள்ளும் போது வருகிறார்கள். இப்போது நிறைய மாணவர்கள் நிறைய உடல்நலக் கோளாறுகள், மன அழுத்தம் ஆகியவற்றால் துன்புறுகிறார்கள். குழந்தைப்பருவம் முதல் மருத்துவமனைக்கு செல்லும் விவரங்கள் Medical information Bureau வில் சேர்க்கப்படுகின்றன.

ஆயுள் காப்பீட்டுக்கு ஒருவர் விண்னப்பிக்கும் போது இங்கே இருந்து அவரது உடல் நலம் பற்றிய அறிக்கை பெறப்படுகிறது. அதேபோல காப்பீடும் விவரங்களை பார்த்தே காப்பீட்டு விலையை (கட்டணத்தை) நிர்ணயிக்கும. இந்த விலையை காப்பீடு நிறுவனங்கள் கட்டுருத்துமே தவிர அரசாங்கம் நிர்ணயிக்க முடியாது. அப்படி செய்தால் ஆயுள் காப்பீடு, வாகன காப்பீடு போன்ற எல்லாவற்றையும் அரசு கட்டுப்படுத்துமா என்ற கேள்வியும் வரும்.

இவர்களுக்கு மெக்கெயின் சொல்லும் திட்டததாலோ ஓபாமா சொல்லும் திட்டத்தாலோ குறைந்த co-payயுடன் கூடிய காப்பீடு கிடைக்காது என்பதே நடைமுறை.அதிலும் இப்போது நியுஜெர்சி போன்ற மாநிலங்களில் பல மருத்துவ மனைகள் மூடப்பட்டுக்கொண்டிருக்கின்றன.

சமீபத்தில் மிஷல் திட்டம் என்ற ஒன்றை சட்டமாக்க முயற்சி நடந்தது. மிஷல் என்பவர் குடல் புற்றுநோயால் அவதிப்பட்டவர். முழுநேர மாணவியாக தொடரமுடியாமல் காப்பீட்டை இழந்ததால், சரியான சிக்கிசைக்கு வழியில்லாமல் இறந்து போனார். அதற்காக புற்றுநோய் அல்லது தீவிரமான நோய் உள்ளவர்கள் முழுநேர மாணவர்களாக இல்லாமலே மெகெயின் சொல்வது போல மக்கள் தங்களுக்கு தேவையான காப்பீடு தாங்களே வாங்கிக்கொள்லலாம் அரசு வரி சலுகை அளிக்கும் என்கிறார். சலுகை தேவையில்லை, நாங்களே வாங்கிக்கொள்கொறோம் என்றாலும் சில புற்றுநோயாளிகளுக்கு காப்பீடுதர இப்போதைக்கு யாரும் இல்லை.

தீவிரமான நோய் உள்ளவர்கள் தங்கள் செலவிலேயே காப்பீடு வைத்திருந்தால் பணிபோனாலும் அது தொடரக்கூடிய வாய்ப்பு ஊண்டு. ஆனால் சலுகைவிட அதிகமாக இருக்கும் கட்டணத்தை எப்படிக்கட்ட முடியும்? இது பற்றியும் ஓபாமோவோ மெக்கெயினோ strategy வைத்திருக்கவில்லை.

நான் ஒரு காப்பீடு வைத்திருக்கிறேன் என்று வைத்துக்கொள்வோம், எனக்கு புற்று நோய் வருகிறது, பணியைவிட்டு போதிய performance இல்லாமல் நீக்கப்படுகிறேன்.பணியில் இருந்து நோயைத்தான் காரணம் காட்டி நீக்க முடியாதே தவிர, பணிக்கு அதிகம் வராதது, என் பங்களிப்பை காரணம் காட்டி நீக்க முடியும். என்னுடைய காப்பீடுக்கு என்னால் கட்டணம் செலுத்த முடியாது, நிறுவனம் காப்பீடு தந்தாலும் அதுவும் நின்று போகும், என் சிகிச்சையை எப்படி தொடர முடியும்?

இது ஒரு hypothetical situation இல்லை. காரனுக்கு நடந்தது, வரிஜீனியாவில். இது போன்ற பிரச்சினைகளை நாங்கள் நாள் தோறும் பார்க்கிறோம். இரண்டு தலைவைர்களும் பொதுப்படையாக சில கோரிக்கைகளை வைத்திருக்கிரார்களே தவிர இது போன்ற மசோதாக்கள் தோல்வியைடய் செய்பவர்களும் இவர்கள்தான்.

இலவச மருத்துவ சிகிச்சை என்றாலும் கூட அதற்கு எப்படி வருவார்கள்? பதவி ஏற்ற ஆரம்பத்தில் கிளிண்டன் public transportation திட்டம் ஒன்ரை கொண்டுவர முயன்றபோது பல கார் நிறுவனங்கள் அவற்றை எதிர்க்க, அதுவும் கிடப்பில் போனது. உடல்நல காப்பீடு தருவது இருக்கட்டும், உடல் நலம் இல்லாதவர்கள் கார் ஓட்ட முடியாதவர்கள் எப்படி மருத்துவ சிக்கிச்சைக்கு வருவார்கள் என்பது பற்றி ஏதேனும் ஒரு கருத்து? நான் படித்ததாக நினைவில் இல்லை.

நிறைய திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு கடந்த சில வருடங்களில் குறைக்கப்பட்டது (cancer early detection, Prevention oriented child health program, victim assistance program, stop violence to women,early intervention for special child, sexual assault prevention program). அதனால் பாதிக்கப்பட்ட காப்பீடு இல்லாதவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.

சரியான விசா இல்லாமல் இங்கே வேலைக்கு அமர்த்தப்படும் மக்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு மெடிக்கெய்ட் தரும் அரசு, பெற்றோருக்காக எந்த உதவியும் செய்வதில்லை. அவர்களுக்கு ஒரு பரவக்கூடிய நோய் வந்தால், அது ஒரு சமுதாயத்தை பாதிக்கும் என்கிறபோது அதற்கான நடவடிக்கைகள், தீவிர சிகிச்சை செலவு எல்லாம் யார் கட்டுவது என்பது பற்றியெல்லாம் எந்த விளக்கமும் இல்லை.

Community health பற்றிய திட்டமும் சிறப்பாக அல்லது தெளிவாக இல்லை.மனநல சிகிச்சைக்கும் காப்பீடு வழங்கப்படும் என்று அறிவித்திருந்தாலும் இப்போது செனட்டுக்கு போகும் மசோதாக்கள் (mental health for substance abuse, sexual assault and to decrese health disparity) தோல்வியைத்தழுவி இருக்கின்றன.

மருத்துவரை சந்திக்க சென்றால் கிட்டதட்ட குறைந்தது ஒருமணியாவது காத்திருக்க நேரிடுகிரது, அதிலும் சிறப்பு பயிற்சியாளர்களை காணச்சென்றால் இன்னமும் அதிக காலம் ஆகிறது. இதனால் மருத்துவர்களும் interventionஇல் அதிக கவனம் எடுத்துக்கொள்வதில்லை.

அறிகுறிகள் அவ்வப்போதே கவனிக்கப்படாமல் நோய் முற்றியநிலையில் கவனிக்கப்படுவதும் ஒரு குறையாக இருக்கிறது. இதற்கும் காப்பீடு ஒருவகையில் காரணம். நிறைய காப்பீடுகள் இதை ஆதரிப்பதில்லை என்பது பரவலாக மருத்துவர்கள் சொல்லும் காரணம்.

இது குறித்தும் இருதலைவர்களும் கருத்து ஏதும் சொன்னதாக தெரியவில்லை.இருவருமே பொதுவாக கருத்துக்கள் சொல்லி இருக்கிறார்களே தவிர விளக்கமாக ஏதும் சொல்லவில்லை.

Any insurance become affordable if you increase co pay, hospital charge etc. so details are more important even to address issues like prevention. But the truth is one insurance covered costs for a surgery but did not approve anesthetists bill as it required a separate precertification!!

2. (கேள்வி கேட்டவர் ஸ்ரீதர் நாராயண்) சாரா பேலின் ஹிலாரியை விட வேகமாக இருக்கின்றாரே. பாட்டியாகும் விஷயத்தில்தான். 2012-ல் ஆல்-வுமன் அதிபர் தேர்தலாக ஆகக் கூடிய சாத்தியக் கூறுகள் எப்படி

தொடரும்…

திருமணத்திற்கப்பால் உறவும் தனிமனித ஒழுக்கமும்

5. ஜான் எட்வர்ட்ஸிடம் உங்களுக்கு மதிப்பு இருந்தது. திருமணத்திற்கு அப்பால் உறவு கொண்டதால் அது சரிந்துள்ளதா? அவரின் கொள்கைகள் அப்படியே இருக்கும் பட்சத்தில், பில் க்ளின்டன் பாதம் பணியும் ஒட்டுமொத்த ஜனநாயகக் கட்சியும் — அவரை நிராகரித்து ஒதுக்குவது எப்படி சரியாகும்?

ஆம்.

பொதுவில் தனிநபர் வாழ்க்கையையும் அரசியலையும் இணைப்பது எனக்கு ஒவ்வாத விஷயம். ஆனால் தனிநபர் நேர்மையையும் நம்பத்தன்மையையும் மாத்திரமே முன்னிருத்தி அரசியல் நடத்திய ஒருவர் நடைமுறையில் அதற்கு எதிராக நடந்து கொண்டால் அவரது நம்பகத் தன்மை முற்றாக இழந்துபோகிறது.

அந்த வகையில் ஜான் எட்வர்ட் மீதான என் மதிப்பு பெருமளவிற்குச் சரிந்திருக்கிறது. ஆனால் இதற்காக அவரை முற்றாக குழிதோண்டி புதைக்க வேண்டும் என்று நான் கூச்சலிடமாட்டேன்.

அந்தத் தவறில் சிக்கியிருக்காவிட்டால் அமெரிக்காவின் உன்னதமான அதிபர்களில் ஒருவராக கிளிண்டன் நிச்சயமாக கோபுரமேறியிருப்பார். தவறுக்கு வெளியேயாக அவருடைய சாதனைகள் அபாரமானவை. எனவேதான் ஜனநாயகக் கட்சியினர் அவருக்குக் கட்டுப்பட்டிருக்கிறார்கள். தவறிலிருந்து மீண்டெழும் உரிமையை கிளிண்டன் வேண்டிப் பெற்றார்; அதை அவர் மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டார். எனவேதான் அது அவருடைய ஒட்டு மொத்த பிம்பத்தில் விழுந்த ஒரு புள்ளியாக மாத்திரமே நின்று போயிருக்கிறது.

மீண்டெழும் வாய்ப்பைத் தேடிப்பெறுவதிலும் அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி உயிர்த்தெழுந்து வருவதிலும் ஜான் எட்வர்ட்ஸ் எப்படி நடந்து கொள்கிறார் என்று பார்க்க வேண்டும். தவறை நேராக எதிர்கொண்டு அதற்கான சுமையைச் சுமந்துகொண்டு மேலெழுந்து வருவது முற்றாக அவர் கையில்தான் இருக்கிறது. அமெரிக்கர்கள் பொதுவில் எப்படியோ, நான் அவருக்கு அந்த உரிமையைக் கட்டாயம் மறுக்க மாட்டேன்.

வெங்கட் மற்றும் மற்றவர்களின் பார்வைகள், கேள்வி-பதில்கள்

அமெரிக்கா எங்கு பின்தங்கி இருக்கிறது? – வெங்கட்

4. வெற்றிபெற்ற அடுத்த அமெரிக்க ஜனாதிபதி உங்களை ஆலோசகராக நியமிக்கிறார். என்ன அட்வைஸ் கொடுப்பீர்கள்?

அமெரிக்காவின் உள்விவகாரங்களிலெல்லாம் என்னை ஆலோசனை கேட்கமாட்டார்கள் என்பது சர்வநிச்சயம். எனவே பொதுவில் அமெரிக்காவின் நடப்பு குறித்தும் உலகில் அமெரிக்காவின் பங்கு குறித்துக் கொஞ்சம் சொல்லலாம். இறுதியாக அறிவியல் தொழில் நுட்ப ஆலோசனை கொஞ்சம்.

அரசியல், மதம், ராணுவம், அறிவியலில் பொதுவாக அரை நூற்றாண்டுக்கு முந்தைய சிந்தனையில் தேங்கிப் போகிறார்கள் அமெரிக்கர்கள் என்ற வருத்தம் கலந்த மதிப்பீடு இருக்கிறது எனக்கு.

யுத்தங்கள்

இரண்டாம் உலகப்போருக்குப் பிறகான உலகில் பரவலாக அமெரிக்காவிற்கு உன்னத பிம்பம் இருக்கிறது. அமெரிக்காவின் வெற்றிகளை (போர் வெற்றிகளையல்ல, ஈடுபட்ட போர்கள் எதிலுமே அமெரிக்கா தீர்மானமான வெற்றியடையவில்லை, இதில் வியட்நாம், குவைத், ஈராக், ஆப்கானிஸ்தான் இன்னும் ராணுவத் தலையீடுகளைக் கொண்ட க்யூபா, சிலி, நிகராகுவா, போன்ற பல விஷயங்களிலும் அமெரிக்கா பெரிதாகச் சாதிக்கவில்லை. ஆனால் சோகமான உண்மை, சரியாகப் பாதி அமெரிக்கர்கள் இந்தத் தோல்விகளையே வெற்றியாகக் கொண்டாடும் மயக்கத்திலிருக்கிறார்கள்).

போர்வீரர்களை முன்னிருத்தும் நிலை அமெரிக்காவில் ஒழிந்தாலேயொழிய அமெரிக்காவிற்கு உலகில் மதிப்பு கூடப்போவதில்லை, உலகிற்கும் அமெரிக்காவின் தொல்லை குறையப்போவதில்லை. எல்லாவற்றையுமே இராணுவத்தால் தீர்த்துவிட முடியும் என்ற அசட்டுத்தனத்தை அமெரிக்கா கைவிட்டாக வேண்டும். ஆனால் ஜார்ஜியாவை நேட்டோவில் கொண்டுவர ரஷ்யாவின் மீது போர் தொடுக்கலாம், அதன் மூலம் ரஷ்யாவிற்குப் பாடம் கற்பிக்க வேண்டும் என்று உளறும் ரிவால்வார் ரீட்டா ஸேரா பேலின் போன்றவர் துனை ஜனாதிபதியாக வந்தால் இதற்கெல்லாம் சந்தப்பம் குறைவுதான்.

புவி சூடேற்றம்

எண்ணைய்க்குத் துளையிடுவதன் மூலம் அமெரிக்கப் பொருளாதாரத்தை வளர்த்துவிட முடியும் என்பது அபத்தமானது. அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டிருக்கும் உலகளாவியச் சூடேற்றத்திற்குச் செவிமடுப்பதன் மூலம் ஒரு புதிய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முடியும். சூடேற்றத்தின் அச்சுறுத்தலையே ஒரு புதிய துவக்கத்திற்கான வாய்ப்பாக மாற்றும் தீர்க்கம் வரவிருக்கும் அமெரிக்க அதிபருக்கு வரவேண்டும் என்று விரும்புகிறேன்.

மாசுகட்டுப்பாடுகளுக்குத் தடை விதிப்பதன் மூலம் பொருளாதாரம் சரியும் என்பது பொய்க்கூற்று. (குறிப்பிடத்தக் அமெரிக்க முதலாளிகளின் பொருளாதராம அச்சுறுத்தப்படும் என்பதே உண்மை). கடந்த இருபது வருடங்களாகத் தொடர்ச்சியாக மாசுக்கட்டுப்பாட்டை ஸ்வீடன், பின்லாந்து, டென்மார்க், போன்ற நார்டிக் நாடுகள் அதிகரித்து வருகின்றன. ஆனால் அவர்களின் பொருளாதாரமும் வாழ்க்கைத் தரமும் பிரமிக்கத்தக்க அளவிற்கு முன்னேறியிருக்கிறது.

ஜெர்மனி, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் புதுப் பொருளாதாரத்திற்குத் தங்களைத் தயார் செய்துவருகின்றன. ஆனால் அமெரிக்கா தேக்கநிலையை அடைந்திருக்கிறது. ஹைட் ரோ கார்பன் பொருளாதாரத்தில் விடிவில்லை என்பதை அமெரிக்க அதிபர் உணரவேண்டும். தவிர்க்க முடியாத பொருளாதாரச் சரிவிலிருக்கும் ஜப்பான் கூட இன்றைய பொருளாதார இறக்கத்தை மறுக்காமல் அதேசமயத்தில் வரவிருக்கும் புதுப் பொருளாதாரத்திற்குத் தன்னைத் தயார் செய்துகொள்கிறது.

வளர்நிலையிலிருக்கும் சீனா சில வியக்கத்தக்க முடிவுகளை எடுத்து வருகிறது. இவற்றுடன் ஒப்பிட அமெரிக்கா தேக்கச் சிந்தனையில் இருக்கிறது.

பொருளாதாரம்

வலதுசாரி பொருளாதாரக் கொள்கைகளில் எனக்கு ஓரளவுக்கு நம்பிக்கை உண்டு. ஆனால், இலக்கற்ற வலதுசாரித்தனம் அழிவிற்குக் கொண்டுசெல்லும் என்பதற்கு சமீபத்தில் சரிந்துகொண்டிருக்கும் வீட்டுச் சந்தை உதாரணம். ஃபானி மே, ஃப்ரெட்டி மாக் போன்ற ‘மொதலாளிகள்’ நேர்மையாக இருப்பார் என்று கருதி அவர்களுக்கு முழுச்சுதந்திரம் கொடுத்ததால் வந்த வினை இது. சந்தை தன்னைத்தானே சரி செய்துகொள்ளும் என்பது பெருமளவுக்கு உண்மை என்றாலும் அதற்கான காலத் தேவை மிக அதிகம், அந்த இடைவெளிகளில் பெரும்பாலும் அழிந்துபோகிறவர்கள் ஏழைகளாகத்தான் இருக்கிறார்கள்.

இடது சாய்வுள்ள சந்தைப் பொருளாதாரம் எப்படி சிறப்பாக நடக்க முடியும் என்பதற்கு , ஸ்விட்ஸர்லாந்து, ஃபின்லாந்து, ஸ்வீடனிலிருந்து உதாரணங்களைப் பெறமுடியும். உலகிலேயே இந்த நாடுகளில்தான் வரிகள் மிக அதிகம்; பொருளாதார வளர்ச்சியில் முதல் ஐந்து இடங்களில் இந்த நாடுகள் இருக்கின்றன.

அப்படியான அரசுகள் இரும்புக்கரத்துடன் உலக வல்லரசாக இருப்பது இயலாததுதான், ஆனால் உலக நண்பனாக, ஆதர்சமாக இருப்பது சாத்தியம். குறைகள் இல்லாத மனிதர்களே கிடையாது, எனவே தீர்மானமான வலது/இடது சாரி சிந்தனைகள் ஒருக்காலத்திலும் வெல்லமுடியாது. எப்படி தீர்மானமான கம்யூனிசம் படிப்பதற்குக் கவர்ச்சியாக, நடைமுறையில் சாத்தியமில்லாமல் இருக்கின்றதோ அதே போல முற்றான மூலதனவாதமும் வறட்டுக் கற்பனைதான்.

நெகிழ்ச்சியற்ற பொருளாதாரக் கொள்கைகளால் எந்தப் பயனுமில்லை என்பதை உணர்ந்து அமெரிக்க அதிபர் வறட்டுச் சித்தாந்தங்களுக்கு அப்பாற்பட்டவராக இருப்பது அமெரிக்காவுக்கும், பொதுவில் உலகிற்கும் நல்லது.

அறிவியல்

ஊனமுற்றோர், வறியோர், முதியோர், வேலையிழந்தோர், போன்றவர்களைக் காலில் போட்டு நசுக்குவது வலதுசாரிகளின் பொழுதுபோக்கு. ஆனால், தமக்கென்று வரும்பொழுது தற்பால் நாட்டம் கொண்ட மகளை நெருக்கி அணைத்துக் கொள்வார்கள் (டிக் செய்னி), கரு ஆதாரச் செல்களில் (Embryonic Stem Cell) ஆராய்ச்சி நடத்தியாவது அல்ஸைமருக்கு மருந்து காணலாம் (நான்ஸி ரேகன்) என்பார்கள்.

தலைவலியும் திருகுவலியும் தனக்கென வரும்பொழுது தங்கள் குடும்பத்திற்கு மாத்திரம் இடதுசாரிகளாக மாறுவது இவர்கள் வழக்கம். தனிநபர் செல்வத்தாலும், ராணுவ பலத்தாலும் பணக்கார நாடாகவும், வல்லரசாகவும் இருக்கலாம், ஆனால் முழுக்க ஏழ்மையற்ற, அவலங்களற்ற, பயங்களற்ற நல்லரசாக இருப்பது சாத்தியமில்லை. வரப்போகும் அமெரிக்க அதிபர் உன்னதத்தை நாடுபவராக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

அயல்நாட்டுக் கொள்கை

இராக்கில் அமெரிக்கப் படைகளின் இருப்பை எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாது. எனவே அதைவிட்டு விரைவில் வெளிவருவது அமெரிக்காவிற்கும் உலகிற்கும் நல்லது. ஆப்கானிஸ்தானில் படிப்படியாக வெளியேவர முயற்சிக்க வேண்டும்.

சீனாவைப் பற்றிய மயக்கங்கள் நிறைந்த தோற்றம்தான் அமெரிக்காவிலும் உலகிலும் இருக்கிறது; இது பொதுவில் யாருக்குமே நல்லதில்லை. தோழமைகாட்டி சீனாவை வெளியே அழைத்துவர முயற்சிக்க வேண்டும்.

வெனிசூலா, ஈரான் போன்ற நாடுகளிடம் மீசையை முறுக்குவதில் எந்த வீரமும் இல்லை. ஒன்றும் பேசாமலிருந்தாலே போதுமானது. இப்பொழுது இருக்கும் அரசாங்கம் மாறாக அவர்களை உசுப்பேற்றிவிடுவதிலேயே குறியாக இருக்கிறது.

பாரம்பரியம் (பழமைவாதம்)

சிறுவயது முதலிருந்தே அமெரிக்காவில் எனக்கு ஆர்வம் இருந்தது அறிவியல், நுட்பத்தில் அவர்களின் அபார சாதனைகள் வாயிலாகத்தான். தடைகளற்ற ஆர்வம் பெருகும் சிந்தனைகளினால் அமெரிக்கா அறிவியல் உலகிற்கு அளப்பரிய பங்காற்றியிருக்கிறது. கடந்த பத்து/பதினைந்து வருடங்களில் தொடர்ச்சியாக அமெரிக்காவில் அறிவியலுக்கு எதிரான அணுகுமுறை வளர்ந்து வருகிறது (இது ரீகன் காலத்தில் தொடங்கியது; புஷ் இளையர் காலத்தில் உச்சத்தை எட்டியிருக்கிறது).

மதத்தீவிரவாதம் கொஞ்சம் கொஞ்சமாக கட்டற்ற சிந்தனை என்ற அமெரிக்க வாழ்முறையை பாறையிடை வேராகப் பிளந்து வருகிறது. வலதுசாரி அரசியல் முழுக்க முழுக்க இதையே நம்பியிருக்கிறது. முன்னெப்போதுமில்லாத அளவிற்கு அறிவியல் சிந்தனைகள் மீது, கற்பித்தல் மீது, அறிவியல் நிர்வாகத்தின் மீது என்று பல முனைகளிலும் அறிவியல் தொடர்ச்சியாகத் தாக்கப்பட்டு வருகிறது.

நானோநுட்பம், உயிர்நுட்பம், மரபியல் தொடங்கி சூடேற்றம், மருத்துவ ஆய்வு என்று பல துறைகளில் இன்றைய ஆட்சியாளர் கேட்க விரும்புவதை மாத்திரமே அறிஞர்கள் சொல்ல வேண்டும் என்று வற்புத்தப்படுகிறார்கள். இந்தப் புற்று நோய் முற்றுமுன் இதிலிருந்து அமெரிக்கச் சிந்தனையை மீட்டெடுக்க வேண்டிய கட்டாயம் வரவிருக்கும் அதிபருக்கு இருக்கின்றது. அடிப்படை அறிவியலுக்கான ஆதரவு அமெரிக்காவில் வெகுவாகக் குறைந்து வருகிறது (மறுபுறத்தில் ஜப்பான், சீனா, ஜெர்மனி போன்ற நாடுகளில் இது அதிகரித்து வருகிறது).

அறிவியலுக்கு எதிராகத் திரும்பிவரும் அமெரிக்க சமூகத்தை ஒழுங்கமைக்க வேண்டியது வளமையான அமெரிக்க எதிர்காலத்திற்கு முக்கியம்.

5. ஜான் எட்வர்ட்ஸிடம் உங்களுக்கு மதிப்பு இருந்தது. திருமணத்திற்கு அப்பால் உறவு கொண்டதால் அது சரிந்துள்ளதா? அவரின் கொள்கைகள் அப்படியே இருக்கும் பட்சத்தில், பில் க்ளின்டன் பாதம் பணியும் ஒட்டுமொத்த ஜனநாயகக் கட்சியும் — அவரை நிராகரித்து ஒதுக்குவது எப்படி சரியாகும்?

நாளையுடன் முடியும்