உண்மையில் நான் ஒரு கடிகாரம்
ஏன் சுற்றுகிறேன் என்று தெரியாமல்
சுற்றுதம்மா என் வாழ்க்கை
உண்மையில் என் மனம் மெழுகாகும்
சில இருட்டிற்குதான் அது ஒளி வீசும்
கடைசி வரை தனிமையில்தான் உருகும்
பிறரின் முகம் காட்டும் கண்ணாடி
அதற்கு முகம் ஒன்றும் இல்லை
அந்த கண்ணாடி நான்தானே
முகமே என்னிடம் இல்லை
காகிதத்தில் செய்த பூவுக்கும்
என மனதிற்கும் ஒற்றுமை உண்டோ
இரண்டுமே பூஜைக்கு போகாதோ
பூமிக்குள் இருக்கின்ற நெருப்புக்கும்
என் ஆசைக்கும் சம்பந்தம் இருக்கிறதோ?
இரண்டுமே வெளி வர முடியாதோ
செடியை பூ பூக்க வைத்தாலும்
வேர்கள் மண்ணுக்குள் மறையும்
உதட்டில் புன்முறுவல் பூத்தாலும்
உள்ளே சறுகாய் கிடக்கிறேதே.
Raji’sView: மனதைத் தொட்ட ஒரு நிகழ்வு:
அனைவரும், எதோ ஒரு வகையில் சம்பாதித்து, அவர்கள் பிள்ளைகளை வாழ வைத்து விட்டு வாழ்க்கயின் விடுமுறையை அனுபவிக்கத் தொடங்குகிறார்கள்। ஆனால், விடுமுறையை சுகமாக அனுபவிக்க இயலாமல், நோய் வாய் பட்டு, நடக்க இயலாமல், கோல் ஊன்றி கஷ்டப்பட்டு கழிக்கிறார்கள்.










